இஸ்லாம் அமைதி மார்கமா? இஸ்லாம் இனிய மார்கமா? இஸ்லாம் உண்மையான மார்கமா?

ஆன்சரிங் இஸ்லாம்

பல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்

சத்தியவான் தளம் செல்ல

Tuesday, March 4, 2014

Fwd: [ஈஸா குர்-ஆன் - Isa Koran] 2013 ரமளான் நாள் 2 - முஹம்மதுவும் வழிப்பறி கொள்ளைகளும்


 
அன்புள்ள தம்பிக்கு உமர் எழுதும் கடிதம். நீ என்னுடைய முந்தைய கடிதத்தை படித்து இருந்திருப்பாய் என்று நம்புகிறேன். உன்னுடைய  விருப்பத்தின் படியே, இஸ்லாமிம் பற்றிய சில விவரங்களை உன்முன் வைக்கிறேன்.  இதன் மூலம் நீ இஸ்லாம் பற்றி விவரமாக விளக்கலாம்.

மக்காவும் மதினாவும்:

முஹம்மது மக்காவில் இருக்கும் வரைக்கும் ஒரு அமைதியான, சகிப்புத்தன்மையுள்ள வாழ்க்கையை வாழ்ந்தார், மற்றவர்களும் அந்தப்படியே வாழும் படி கேட்டுக்கொண்டார்.  அல்லாஹ்வின் வசனங்களும் பெரும்பான்மையாக சகிப்புத்தன்மையுள்ள வசனங்களாகவே வந்து இறங்கின. ஆனால், அவர் மதினாவிற்கு வந்த பிறகு, ஆட்களின் பலம் அவருக்கு அதிகரித்த போது, அமைதி மார்க்கமாக இருந்த இஸ்லாம், சிறிது சிறிதாக வன்முறையில் ஈடுபட ஆரம்பித்தது.  முஹம்மது மதினாவில் வாழ்ந்த  அந்த 10 ஆண்டுகளில்  இஸ்லாமுடைய ஆரம்பத்தை அப்படியே தலைகீழாக மாற்றிவிட்டார். 

இந்த கடிதத்தில்,  இஸ்லாமின் முதல் மூன்று வழிப்பறி கொள்ளைகள் பற்றி உனக்கு சுருக்கமாக விவரிக்கிறேன்.  இவைகளை ஆங்கிலத்தில் "Raid" என்பார்கள். 

என்னது? வழிப்பறி கொள்ளையா? இப்படியெல்லாம் இஸ்லாமில் நடைப்பெறவில்லை என்று நீ நினைக்கிறாயா? தம்பி தொடர்ந்து படி.  மக்காவிலிருந்து மதினாவிற்கு ஹிஜ்ரி வந்த முதல் ஆண்டே முஹம்மது தம் கைவரிசயை காட்ட ஆரம்பித்துவிட்டார். மார்ச், ஏப்ரல் மற்று மே மாதங்களில் தொடர்ந்து வழிப்பறிக்காக ஆட்களை முஹம்மது அனுப்பினார்.   கீழ்கண்ட மூன்று வழிப்பறி கொள்ளைகள் மூலமாக, முஹம்மதுவிற்கு எந்த பொருளும் கிட்டவில்லை. மேலும் எந்த ஒரு உயிர்ச்சேதமும் நடைப்பெறவில்லை.   சரி, வழிப்பறி கொள்ளைகள் பற்றி இப்போது படித்து அறிந்துக்கொள். அதன் பிறகு என் கேள்விகளை முன்வைக்கிறேன்.


முதல் வழிப்பறிக் கொள்ளை (First Raid): ஸய்ஃபுல் பஹர்

ஹிஜ்ரி 1, ரமழான் (கி.பி. 623 மார்ச்) மாதம் ஒரு படைப் பிரிவை நபி (ஸல்) அவர்கள் அனுப்பினார்கள். 30 முஹாஜிர்கள் இந்தப் பிரிவில் இடம்பெற்றனர். அவர்களுக்கு ஹம்ஜா(ரழி) அவர்களைத் தலைவராக ஆக்கினார்கள். ஷாமிலிருந்து மக்காவை நோக்கி வந்து கொண்டிருந்த குறைஷிகளின் வியாபாரக் குழுவை வழி மறிப்பதற்காக இவர்கள் சென்றார்கள். இந்த வியாபாரக் கூட்டத்தில் முந்நூறு நபர்களும் அவர்களுக்குத்  தலைமையேற்று அபூஜஹ்லும் வந்து  கொண்டிருந்தான். 'ஈஸ்' என்ற நகரத்தின் ஓரத்தில்  உள்ள 'ஸய்ஃபுல் பஹ்ர்' எனும் இடத்தை இரு கூட்டத்தினரும் அடைந்த போது  சண்டையிடுவதற்காக அணிவகுத்தனர். ஆனால், இரு கூட்டதினருக்கும் நண்பராக இருந்த மஜ்தி இப்னு அம்ர் அல்ஜுஹனி என்பவர் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தி போரைத் தவிர்க்கச் செய்தார்.

இப்போல் நபி (ஸல்) ஹம்ஜாவுக்கு வெள்ளை நிறக் கொடியைக் கொடுத்தார்கள். இதுதான் நபி (ஸல்) அவர்கள் நிறுவிய முதல் கொடியாகும். இக்கொடியை அபூ மர்ஸத் கன்னாஸ் இப்னு ஹுஸைன் அல்கனவி (ரழி) ஏந்தியிருந்தார்கள்.

இரண்டாம் வழிப்பறிக் கொள்ளை (Second Raid):  'ராபிக்'

ஹிஜ்ரி 1, ஷவ்வால் (கி.பி. 623 ஏப்ரல்) மாதம் நபி (ஸல்) அவர்கள் 'ராபிக்' என்ற இடத்தை நோக்கி ஒரு படைப் பிரிவை அனுப்பினார்கள். இதற்குத் தலைவராக உபைதா இப்னுல் ஹாரிஸ் இப்னுல் முத்தலிப் (ரழி) இருந்தார். இப்படையில் 60 முஹாஜிர்கள் கலந்து கொண்டார்கள். இவர்கள் 'பத்தன் ராபிக்' என்ற இடத்தில் அபூஸுஃப்யானைச் சந்தித்தார்கள். இரு கூட்டத்தார்களும் ஒருவரை நோக்கி ஒருவர் அம்பெய்து கொண்டனர். மற்றபடி, உக்கிரமான சண்டை ஏதும் நடைபெறவில்லை.

காஃபிர்களின் படையிலிருந்த அல்மிக்தாத் இப்னு அம்ர் அல்பஹ்ரானி, உத்பான் இப்னு கஸ்வான் அல்மாஜினி ஆகிய இருவர் முஸ்லிம்களுடன் இணைந்து கொண்டனர். இவர்கள் முஸ்லிமாகத்தான் இருந்தனர். என்றாலும், ஹிஜ்ராவிற்காக மக்காவிலிருந்து வெளியேற முடியாத காரணத்தால், காஃபிர்களுடன் சேர்ந்திருந்தனர். எப்பொழுதாவது சந்தர்ப்பம் கிடைத்தால் தப்பித்து முஸ்லிம்களிடம் சேர்ந்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் இந்த வியாபாரக் கூட்டத்துடன் வந்திருந்தனர். 

இந்தப் படையின் கொடி வெள்ளை நிறமாக இருந்தது. இதை மிஸ்தஹ் இப்னு உஸாஸா இப்னு அல் முத்தலிப் இப்னு அப்து மனாஃப் ஏந்தியிருந்தார்கள்.

மூன்றாம்  வழிப்பறிக் கொள்ளை (Third Raid):  'கர்ரார்'

ஹிஜ்ரி 1, துல்கஅதா (கி.பி. 623 மே) மாதம் 'கர்ரார்' என்ற இடத்திற்கு ஸஅது இப்னு அபீ வக்காஸ் (ரழி) தலைமையில் படைப் பிரிவு ஒன்றை நபி (ஸல்) அனுப்பினார்கள். 

குறைஷிகளின் வியாபாரக் கூட்டத்தை இடைமறிப்பதற்காகப் புறப்பட்ட இவர்களிடம் 'கர்ரார்' என்ற இடத்தை தாண்டிச் செல்லக் கூடாது என நபி (ஸல்) அவர்கள  வலியுறுத்தினார்கள். இந்தப் படை கால்நடையாகவே சென்றது. பகலில் பதுங்குவதும் இரவில் நடப்பதுமாக வியாழன் காலை கர்ராரை அடைந்தது. ஆனால், அந்த வியாபாரக் கூட்டமோ இவர்கள் சென்றடைவதற்கு ஒரு நாள் முன்னதாகவே அந்த இடத்தைக் கடந்து சென்று விட்டிருந்ததால், இவர்கள் சண்டையின்றித் திரும்பினர். இந்தப் படையின் கொடி வெள்ளை நிறமாக இருந்தது. இதை மிக்தாத் இப்னு அம்ர் (ரழி) ஏந்தியிருந்தார்கள்.

இவைகள் போர்களா? வழிப்பறி கொள்ளைகளா?

தம்பி, மேற்கண்ட மூன்று நிகழ்ச்சிகளை நீ படித்துள்ளாய்.  நீ நன்றாக நிதானமாக ஒவ்வொரு வார்த்தையையும் படி,  அந்தந்த நிகழ்ச்சியில் சொல்லப்பட்ட சில வரிகளை கீழே தருகிறேன். இவைகளை படித்து இவைகள் வழிப்பறி கொள்ளைகளா அல்லது போர்களா என்று நீயே முடிவு செய்.

முதலாவது கொள்ளை – " ஷாமிலிருந்து மக்காவை நோக்கி வந்து கொண்டிருந்த குறைஷிகளின் வியாபாரக் குழுவை வழி மறிப்பதற்காக இவர்கள் சென்றார்கள்."

இரண்டாவது கொள்ளை - இவர்கள் 'பத்தன் ராபிக்' என்ற இடத்தில் அபூஸுஃப்யானைச் சந்தித்தார்கள். இரு கூட்டத்தார்களும் ஒருவரை நோக்கி ஒருவர் அம்பெய்து கொண்டனர்.

மூன்றாவது கொள்ளை - குறைஷிகளின் வியாபாரக் கூட்டத்தை இடைமறிப்பதற்காகப் புறப்பட்ட இவர்களிடம் 'கர்ரார்' என்ற இடத்தை தாண்டிச் செல்லக் கூடாது என நபி (ஸல்) அவர்கள  வலியுறுத்தினார்கள்.

கேள்விகள்: 
  1. வியாபாரிகள் தங்கள் வழியே சென்றுக்கொண்டு இருக்கும் போது, அவர்களைத் தாக்கி, பொருட்களை அபகரிக்க ஆட்களை அனுப்பினார் முஹம்மது.  இந்த செயலுக்கு என்ன பெயர் வைப்பது?
  2. ஆயுதங்கள் இல்லாமல், போருக்கு ஆயத்தமில்லாமல் சென்றுக்கொண்டு இருக்கும் வியாபாரிகளை திடீரென்று தாக்குவதற்கு என்ன பெயர்?
  3. இந்த வகையான வழிப்பறி கொள்ளைகளை செய்ய முஹம்மதுவை தூண்டியது எது?
  4. மதினாவிற்கு இடம்பெயர்ந்த பிறகு, முஹம்மதுவும் அவரது சகாக்களும் என்ன வியாபரம் புரிந்து சம்பாதித்தார்கள்? அவர்களின் அனுதின உணவிற்கு என்ன செய்தார்கள்? உழவுத்தொழில் செய்தார்களா? ஆடுகளை, ஒட்டகங்களை மேய்த்து சம்பாதித்தார்களா? வெளியூர்களுக்குச் சென்று வியாபாரம் புரிந்தார்களா? முஹம்மது நபியாக மாறுவதற்கு முன்பு நன்றாக வியாபாரம் செய்யக்கூடியவர் இப்போது ஏன் பணத்திற்காக, தங்களுடைய ஏழ்மையை போக்கிக்கொள்வதற்காக கீழ்தரமான வழிப்பறி கொள்ளையில் ஈடுபடவேண்டும்?
  5. இந்த வகையான வழிப்பறி கொள்ளைகளை செய்யும் படி, அல்லாஹ் கட்டளையிடாமல், முஹம்மது தானாக செய்து இருக்கமாட்டார்.  இப்படியிருக்க, ஒரு இறைவன் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட அனுமதி கொடுப்பானா?

தம்பி, இன்னும் நான் சொல்லிக்கொண்டே செல்வேன், ஆனால் இதோடு நிறுத்திக்கொள்கிறேன். நீ இவைகள் படித்து, உனக்குத் தெரிந்த பதில்களை கொடுக்கும் படி கேட்டுக்கொள்கிறேன். (என் தம்பி மட்டுமல்ல, எந்த ஒரு முஸ்லிமாக இருந்தாலும் இவைகளுக்கு பதில்களை எழுதி அனுப்பலாம்.)

திருடுவதை நிறுத்தும் படி பைபிள் கட்டளையிடுகிறது:

ஒருவன் திருடுகின்றவனாக இருந்தால் தன் திருட்டை நிறுத்துவானாக. அவன் வேலை செய்யத் தொடங்கட்டும். அவன் தனது கைகளை நல்ல செயல்களைச் செய்வதற்குப் பயன்படுத்தட்டும். பிறகு ஏழைகளோடு பகிர்ந்துகொள்ள அவனுக்கென்று சில இருக்கும். (எபேசியர் 4:28)

10 "ஒரு மனிதன் வேலை செய்யாவிடில் அவன் உண்ணக்கூடாது" என்று உங்களோடு இருந்தபோது நாங்கள் இந்த விதியைத் தந்தோம். (தெச 3:10)

இப்படிக்கு, 
உன் பதிலுக்காக காத்திருக்கும் உன் அண்ணன் 
உமர்.
------------------------------------

மேற்கண்ட கடிதத்தை கண்டவுடன் என் தம்பி கீழ்கண்ட பதிலை அனுப்பினான்.

அன்புள்ள அண்ணாவிற்கு,

உங்களின் கடிதம் கண்டேன், உங்களைப் பற்றி வேதனை அடைந்தேன். 

பொதுவாக நீங்கள் எவைகளை எழுதினாலும், ஆதாரங்களோடு எழுதுவீர்கள் என்று நான் அறிவேன். ஆனால், இந்த முறையோ, மற்றவர்களைப் போல ஆதாரங்களை கொடுக்காமல் எழுதியுள்ளீர்கள்.

உங்களுக்கு ஒரு சவால்
உங்களுடைய கடிதத்தில் நீங்கள் குறிப்பிட்ட அந்த மூன்று வழிப்பறி கொள்ளைகள் பற்றி நான் இதுவரை எந்த புத்தகத்திலும் படிக்கவில்லை. மேலும், உங்களால் அதற்கான ஆதாரங்களை காட்டமுடியாது.  நீங்கள் உலகம் முழுவதும்  சுற்றினாலும், எங்கும் இந்த நிகழ்ச்சிகள் நடந்ததாக ஒரு ஆதாரத்தையும் உங்களால் கொண்டுவரமுடியாது என்று நான் சவால் விட்டுச் சொல்கிறேன்.

ஒரே ஒரு இஸ்லாமிய புத்தகத்திலாவது உங்களால் மேற்கண்ட நிகழ்ச்சிகளை எடுத்துக்காட்டமுடியுமா?

முதலாவது நீங்கள் எனக்கு ஆதாரங்களை காட்டுங்கள், அதன் பிறகு நான் உங்கள் கேள்விகளுக்கு பதில்களைச் சொல்வேன்.

இப்படிக்கு,
உங்கள் தம்பி
--------------------------------

என் தம்பியின் மெயில் கிடைத்தவுடன் நான் கீழ்கண்ட பதிலை எழுதினேன்:

அன்பான தம்பிக்கு,

நீ என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்துவாய் என்று நம்பினேன், ஆனால், நீ ஏமாற்றிவிட்டாய். 

நான் வேண்டுமென்றே, என் முந்தைய கடிதத்தில்  ஆதாரங்களை தரவில்லை, ஏனென்றால் நான் மேற்கொள் காட்டப்போகும் புத்தகம் இஸ்லாமிய உலகில் புகழ்பெற்ற புத்தகமாகும்.  நீ ஏற்கனவே இந்த புத்தகத்தை படித்து இருந்திருக்கவேண்டும், ஆனால் நீ தவறிவிட்டாய். சரி இப்போது அந்த முதல் மூன்று வழிப்பறி கொள்ளைப் பற்றி ஆதாரத்தைத் தருகிறேன். அந்த தலைப்புக்களை மட்டும் கொடுத்தேன், மீதமுள்ள நிகழ்ச்சி விவரங்களை கீழ்கண்ட புத்தகத்தின் 200 மற்றும் 201ம் பக்கங்களிலிருந்து எடுத்தேன்.

புத்தகத்தின் பெயர்: ரஹீக் 

ஆசிரியர்:இஸ்லாமிய பேரறிஞர் ஸஃபிய்யூர்  ரஹ்மான்.

தமிழாக்கம்: மௌலவி முஃப்தி உமர் ஷரீஃப் காசிமி

பக்கம்:  200 மற்றும் 201ம் பக்கங்கள்.

புத்தகத்தின் தனிச்சிறப்பு: உலகளாகிய போட்டியில் முதல் பரிசு பெற்ற நூல். இந்த புத்தகம் இதர 170 புத்தகங்களோடு போட்டியிட்டு, முதல் பரிசை தட்டிச் சென்றது (
ஆங்கிலத்தில்: Ar-Raheeq Al-Makhtum - http://en.wikipedia.org/wiki/Ar-Raheeq_Al-Makhtum)

ஆங்கிலத்தில் இந்த புத்தகத்தை படிக்க: http://www.islamhouse.com/51776/en/en/books/The_Sealed_Nectar

தமிழில் இப்புத்தகத்தை படிக்க: http://www.islamkalvi.com/portal/?p=4989

தம்பி இந்த புத்தகத்தை முழுவதுமாக ஒரு முறை நீ படிக்கவேண்டும். 

உன் கேள்விக்கு நான் பதில் அளித்துவிட்டேன், என் கேள்விகளுக்கு நீ பதில்களைத் தருவாய் என்று எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறேன்.

உன்னை அடுத்த கடிதத்தில் சந்திக்கிறேன்.

இப்படிக்கு
உன் அண்ணன்,
உமர்


--
7/11/2013 10:10:00 PM அன்று ஈஸா குர்-ஆன் - Isa Koran இல் Isa Koran ஆல் இடுகையிடப்பட்டது


Fwd: [ஈஸா குர்-ஆன் - Isa Koran] 2013 ரமளான் நாள் 1 - அன்புள்ள அண்ணாவிற்கு . . . போர் புரிவது அமைதியை நிலைநாட்டுவதற்கு அல்லவா?


 
 2013 ரமளான் நாள் 1 - அன்புள்ள அண்ணாவிற்கு . . . போர் புரிவது அமைதியை நிலைநாட்டுவதற்கு அல்லவா?

அன்புள்ள அண்ணா,

உங்களுக்கு என் வணக்கங்கள்.  

எப்படி இருக்கிறீர்கள்? உங்கள் வேலை எப்படி இருக்கிறது? 


நான் இந்தியாவில் இருக்கும் போது, உங்களோடு அனேக விஷயங்கள் பற்றி உரையாடினேன். இப்படி உரையாடும் போது, நீங்கள் அடிக்கடி வைத்த ஒரு குற்றச்சாட்டு என்னை அதிகமாக பாதித்தது. நீங்கள் வன்முறைகள் பற்றியும், இஸ்லாமிய போர்கள் பற்றியும் அதிகமாக பேசினீர்கள். முக்கியமாக, எங்கள் இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் மீது அனேக குற்றச்சாட்டுகளை வைத்தீர்கள்.


எனவே, இந்த ரமளான் மாதத்தில், உங்களோடு அனேக விஷயங்களை நான் பகிர்ந்துக்கொள்ளலாம் என்று விரும்புகிறேன். முக்கியமாக, எங்கள் இறைத்தூதர் புரிந்த போர்களில் உள்ள நீதியையும், நியாயத்தையும் உங்களுக்கு விளக்கப்போகிறேன். அதன் பிறகு நீங்கள் குற்றச்சாட்டுகளை முன்வைக்கமாட்டீர்கள். நீங்கள் எந்த கேள்வியை கேட்டாலும் சரி, என்னால் உங்களுக்கு பதில் அளிக்கமுடியும்.


பத்ருப் போர் முதற்கொண்டு, உஹூத் போர், கைபர் போர் என்று எந்த போரைப் பற்றிக் கேட்டாலும், என்னால் பதில் சொல்லமுடியும். ஆனால், ஒரு முக்கியமான விவரம் என்னவென்றால், நீங்கள் திறந்த மனதுடன் நான் சொல்லும் விவரங்களை ஆராயவேண்டும். இப்படி நீங்கள் செய்தால், நிச்சயமாக இஸ்லாம் பற்றிய சத்தியத்தை அறிந்துக்கொள்வீர்கள்.


இதோ, இன்று ரமளான் முதல் நாள், நான் நோன்பு இருக்கிறேன். இது என்னுடைய  இரண்டாவது ரமளான் ஆகும். இந்த முறை, நான் இஸ்லாம் விஷயத்தில் உங்கள் மீது வெற்றி கொள்வேன் என்று முழுவதுவாக நம்புகிறேன்.  உங்கள் கேள்விகளை நீங்கள்  கேட்கலாம்.


இப்படிக்கு, 

உமரின் தம்பி

------------------------

அன்புள்ள தம்பிக்கு, உன் அண்ணன் உமர் எழுதும் கடிதம்.

உன் கடிதம் கண்டு மகிழ்ச்சி அடைந்தேன்.

உன் உடல் நலம் எப்படி இருக்கிறது? 

விசாவில்  உள்ள குளறுபடியினால் சௌதியிலிருந்து 75 ஆயிரம் பேர் இந்தியா திரும்புவதாக கேள்விப்பட்டு நாங்கள் திடுக்கிட்டோம். அப்பா உன்னிடம் தொலைபேசியில் பேசிய பிறகு தான் எங்களுக்கு நிம்மதியாக இருந்தது. உன்னுடைய விசாவில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை என்று நீ சொன்ன பிறகு மிக்க மகிழ்ச்சி அடைந்தோம்.

இஸ்லாம் பற்றிய ஒரு முக்கியமான காலகட்டத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம். கடந்த காலத்தில் இஸ்லாம் பற்றி உலக மக்களுக்கு இருந்த அறிவைவிட, இன்று இஸ்லாமிய அறிவு அதிகமாக உள்ளது. இணையம் வந்ததினால், உலகம் சுருங்கிவிட்டது, அறிவும் பெருகிவிட்டது. அறிய புத்தகங்களை படிக்க வெளிநாடுகளுக்குச் செல்லத்தேவையில்லை, பெரிய  நூலகங்களைத் தேடிக்கொண்டு பட்டணங்களுக்குச் செல்லத் தேவையில்லை, நம் கைபேசியிலேயே உலக நூலகங்கள் அடங்கிவிடுகின்றது. என்னே முன்னேற்றம்! இதையெல்லாம் நான் ஏன் இப்போது உன்னிடம் சொல்லிக்கொண்டு இருக்கிறேன் என்று நீ ஆச்சரியப்படலாம். காரணம் இல்லாமல், நான் இவைகளை உனக்கு எழுதவில்லை. முஸ்லிம் அறிஞர்கள் சொல்வது தான் உண்மை, அவர்கள் சொல்வதை இதர மக்கள் சரிபார்க்க முடியாது என்ற நம்பிக்கை ஒரு காலகட்டத்தில் இருந்தது. ஆனால், இன்றோ, அந்த எண்ணங்கள் மாறிவிட்டன.  எனவே, நீ எவைகளை எழுதினாலும், அவைகளை சரி பார்க்க என்னால் முடியும் என்பதை கவனத்தில் வைத்துக்கொள்.


தமிழ் நாட்டு இஸ்லாமிய அறிஞர்களே, எழுத்து விவாதத்திற்கு வர பயப்படும் இந்த காலத்தில், நீ தைரியமாக முன்வந்து, நாம் இஸ்லாமிய போர்கள் பற்றி பேசுவோம் என்றுச் சொன்னது எனக்கு அதிக மகிழ்ச்சியைத் தருகின்றது.  மேலும், நீ தெரிந்தெடுத்த தலைப்பு இருக்கின்றதே, இது மிகவும் ஆபத்தான தலைப்பு, எனக்கல்ல, உனக்கு! இந்த வருட ரமளான் மாதத்தில் உன் விருப்பத்தின்படியே நாம் இஸ்லாமிய போர்கள் பற்றி அலசுவோம்.


உன் ஆய்விற்கு உதவியாக இருக்கும்படியாக, சில விவரங்களை உனக்கு நான் இப்போதே தெரிவித்து விடுகிறேன்.


நீ உன் கடிதத்தில், பத்ருப் போர், கைபர் போர், உஹுத் போர் என்று குறிப்பிட்டு இருந்தாய். இந்த போர்கள் பற்றி நீ பதில் சொல்லத் தயார் என்றும் எழுதியிருந்தாய். ஆனால், முஹம்மதுவின் வன்முறைகள் (உன் கண்ணோட்டத்தில் போர்கள்), கீழ்கண்ட வகைகளைச் சார்ந்ததாக இருக்கிறது, எனவே, இவைகளைப் பற்றி நீ ஆராய்ந்து, விவரங்களை தயாராக வைத்துக்கொள் என்று உனக்கு அறிவுரை கூறுகிறேன்.


அ) தற்காப்புக்காக செய்த போர்கள் (Defense)

ஆ) வலியச் சென்று புரிந்த போர்கள் (Offence)

இ) தம்மை விமர்சித்தார்கள் என்ற காரணத்திற்காக தனிமனிதர்களை கொன்ற நிகழ்ச்சிகள்

ஈ) வியாபாரிகள் மீது தீடீர் தாக்குதல் புரிந்து பொருட்களை கொள்ளையிட்டு, வியாபாரிகளைக் கொன்ற வழிப்பறி கொள்ளைகள் (Raids)


மதினாவில் வாழ்ந்த அந்த 10 ஆண்டுகளில் அவர் புரிந்த போர்கள், வழிப்பறி கொள்ளைகள், தனிமனிதர்களை கொல்லும் செயல்களின் எண்ணிக்கை எத்தனை என்று உனக்குத் தெரியுமா? தெரிந்துவைத்துக்கொள், உனக்கு அவைகள் பிரயோஜனமாக இருக்கும். 


உன்னை அடுத்த கடிதத்தில் நாளை சில கேள்விகளோடு சந்திக்கிறேன்.


இப்படிக்கு,

உன் அண்ணன் 

உமர்




--
7/09/2013 09:01:00 PM அன்று ஈஸா குர்-ஆன் - Isa Koran இல் Isa Koran ஆல் இடுகையிடப்பட்டது


Fwd: ரமளான் நாள் 30 - ஆயிரம் நீதிமான்களை பார்க்கிலும் …

 

[அன்புள்ள தம்பிக்கு உமர் எழுதும் கடிதங்கள்: கடிதம் 1, கடிதம் 2கடிதம் 3கடிதம் 4கடிதம் 5கடிதம் 6கடிதம் 7கடிதம் 8 , கடிதம் 9, கடிதம் 10, கடிதம் 11, கடிதம் 12கடிதம் 13கடிதம் 14கடிதம் 15கடிதம் 16, கடிதம் 17கடிதம் 18, கடிதம் 19கடிதம் 20, கடிதம் 21கடிதம் 22கடிதம் 23, கடிதம் 24, கடிதம் 25கடிதம் 26கடிதம் 27கடிதம் 28கடிதம் 29 ]

அன்புள்ள தம்பிக்கு,

 

சாந்தியும் சமாதானமும் உனக்கு உண்டாவதாக.

 
தம்பி, உன் பதில் கடிதங்களை பார்க்கும் பொழுது, உனக்குள் ஒரு மாற்றம் ஏற்பட்டு வருவதை காணமுடிகிறது. நீ மீண்டும் இறைவனிடம் வந்தால் அவர் உன்னை மன்னிப்பாரா என்று யோசிக்கிறாய். அல்லாஹ் இணைவைப்பை ஒருநாளும் மன்னிக்கமாட்டான் என்று உன்னை பயமுறுத்திவைத்திருப்பதை உணர்கிறேன். நீ என்னோடுகூட ஓய்வுநாள் பாடசாலைகளில் படித்த வேதாகம நிகழ்ச்சிகளை மறந்திருப்பாய் என்று நான் நினைக்கவில்லை. குறிப்பாக நீ மிகவும் விரும்பும் 'கெட்ட குமாரன் கதையை' நீ மறந்திருக்கமாட்டாய். நீ இருக்கும் நாட்டில் இறைவேதம் வாசிக்க தடையிருப்பதால் நான் அந்த கதையை உனக்கு மீண்டும் சொல்லுகிறேன். கவனமாக கேள்.
ஒரு மனிதனுக்கு இரண்டு குமாரர் இருந்தார்கள். அவர்களில் இளையவன் தகப்பனை நோக்கி: தகப்பனே, சொத்தில் என் பங்கை எனக்குத் பிரித்து தரவேண்டும் என்றான். எனவே தகப்பன் அவர்களுக்குத் தன் சொத்தை பங்கிட்டுக் கொடுத்தார். சில நாட்களுக்குப் பின்பு, இளையமகன் எல்லாவற்றையும் சேர்த்துக்கொண்டு, தூரநாட்டுக்குப் புறப்பட்டுப்போய், அங்கே துன்மார்க்கமாய் வாழ்ந்து, தன் சொத்தை எல்லாம் அழித்துப்போட்டான். எல்லாவற்றையும் அவன் செலவழித்தபின்பு, அந்தத் நாட்டில் கொடிய பஞ்சமுண்டாயிற்று. அப்பொழுது அவன் குறைவுபடத் தொடங்கி, அந்த நாட்டின் குடிகளில் ஒருவனிடத்தில் போய் சேர்ந்துக்கொண்டான். அந்தக் குடியானவன் அவனைத் தன் வயல்களில் பன்றிகளை மேய்க்கும்படி அனுப்பினான். அப்பொழுது பன்றிகள் தின்னும் தவிட்டினாலே தன் வயிற்றை நிரப்ப ஆசையாயிருந்தான், ஆனாலும் ஒருவனும் அதை அவனுக்குக் கொடுக்கவில்லை.

மனமாற்றம்:
அவனுக்குப் புத்தி தெளிந்தபோது, அவன்: என் தகப்பனுடைய கூலிக்காரர் எத்தனையோ பேருக்குப் போதுமான சாப்பாடு இருக்கிறது, நானோ பசியினால் சாகிறேன். நான் எழுந்து, என் தகப்பனிடத்திற்குப் போய்: தகப்பனே, பரத்துக்கு விரோதமாகவும் உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன். இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரனல்ல, உம்முடைய கூலிக்காரரில் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும் என்பேன் என்று சொல்லி எழுந்து புறப்பட்டு, தன் தகப்பனிடத்தில் வந்தான்.

கெட்ட குமாரன்அவன் தூரத்தில் வரும்போதே, அவனுடைய தகப்பன் அவனைக் கண்டு, மனதுருகி, ஓடி அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்தார். குமாரன் தகப்பனை நோக்கி: தகப்பனே, பரத்துக்கு விரோதமாகவும், உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன், இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரன் அல்ல என்று சொன்னான். அப்பொழுது தகப்பன் தன் ஊழியக்காரரை நோக்கி: நீங்கள் உயர்ந்த வஸ்திரத்தைக் கொண்டுவந்து, இவனுக்கு உடுத்தி, இவன் கைக்கு மோதிரத்தையும் கால்களுக்குப் பாதரட்சைகளையும் போடுங்கள். கொழுத்த கன்றைக் கொண்டுவந்து அடியுங்கள். நாம் விருந்துண்டு, சந்தோசமாயிருப்போம். என் குமாரனாகிய இவன் மரித்தான், திரும்பவும் உயிர்த்தான் காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான் என்றான். அப்படியே அவர்கள் சந்தோப்படத் தொடங்கினார்கள்.

இந்த உவமை கதைக் கூடாக ஈஸா அல் மஸீஹ் (இயேசு கிறிஸ்து) பிதாவின் அன்பை போதித்தார்கள். பிதாவின் அன்பை நான் உனக்கு புதிதாக கூறத்தேவையில்லை. என் அன்பு தம்பியே, நீயும் இந்த மகனை போலதான் இப்பொழுது இருக்கிறாய். இறைவனின் வீடாகிய கிறிஸ்தவ குடும்பத்திலிருந்து வெளியேறி,  உலக ஆசைகளுக்கு அடிமையாகி, முன்பு உன்னிடமிருந்த நிம்மதி, சந்தோஷத்தை இழந்து தவித்து கொண்டிருக்கிறாய். இஸ்லாம் எனும் வரட்சியில் சிக்கி, ஆவிக்குரிய பஞ்சம் உன்னை ஆக்கிரமித்துள்ளது.

உன் தகப்பனாகிய பரம பிதா, நீ எப்பொழுது திருப்பி வருவாய் என்று வாசலில் நின்று காத்துக்கொண்டிருக்கிறார் என்பதை புரிந்துகொள். புலியின் மேல் சவாரி செய்பவன் திரும்பி வருவது கூடாத காரியம் என்பது உண்மை! ஆனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவால் எல்லாம் கூடும். நீ அவரிடம் கையேந்தினால் போதும் உனக்காக எல்லா காரியங்களையும் அவர் செய்வார்.

அல்லாஹ் ணைவைக்கும் பாவத்தை மன்னிக்கவே மாட்டான் என்று உன்னை இஸ்லாத்துக்கு மாற்றியவர்கள் சொல்லியிருப்பார்கள். அது உண்மைதான். அது மட்டுமல்ல அவனால் ஒரு பாவத்தையும் மன்னிக்க முடியாது என்பதற்கு சிறந்த ஆதாரம் தான் இஸ்லாம் மதத்தை தோற்றுவித்த முஹம்மது தனது மரணதருவாயில், தனது அன்பு மகளிடம் சொல்கிறார் "நான் போகும் இடத்தை அறியேன்" !

 

இப்பொழுது உனக்கு புரிந்திருக்கும் என்று நம்புகிறேன். இதுதான் இஸ்லாமிய ஸ்தாபகரின் நிலையென்றால் மற்றவர்களின் நிலையை எண்ணிப்பார்க்க வேண்டுமா?

 

இயேசுவின் சிலுவை மரணத்தை நினைத்துப்பார். அவர் பட்ட வேதனைகள் யாருக்காக? அவர் பட்ட காயங்கள் யாருக்காக? யாருக்கு அடிக்க வேண்டிய கசையடிகளை அவர் ஏற்றுக்கொண்டார். அவர் கரங்களில் ஆணியடிக்கப்பட்டது யாருக்காக? சிந்தித்து பார் என் அன்பு தம்பியே!

 

இப்பொழுது மனந்திருப்பி நீ ஜெபிக்க வேண்டிய முறையை நான் உனக்கு சொல்லித்தர தேவையில்லை. உனக்கு நன்கு தெரியும். தாமதிக்காதே உடனடியாக செயற்படு! உனக்கு ஒத்தாசை வரும் இறைவனிடத்திற்கு உன் கரங்களை உயர்த்து!

 

ஜெபித்துவிட்டு உன் பதில் கடிதத்தை எனக்கு எழுது.

 

தம்பி, இது இந்த ரமளான் மாதத்தில் நான் எழுதும் 30வது கடிதமாகும்.

 

இனி உன்னை தினமும் தொந்திரவு செய்யாமல், வாரம் ஒரு கடிதம் எழுத முயற்சி எடுப்பேன். மேலும் நீ கேட்ட அனேக கேள்விகளுக்கு நான் பதில் அளிக்கவேண்டியுள்ளது.

 

உன்னை அடுத்த கடிதத்தில் சந்திக்கிறேன்.

 

இப்படிக்கு உன் சகோதரன்

தமிழ் கிறிஸ்தவன்



--
8/19/2012 11:30:00 pm அன்று ஈஸா குர்-ஆன் - Isa Koran இல் Isa Koran ஆல் இடுகையிடப்பட்டது


இஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்

முன் பக்கம் செல்ல

HOME PAGE

தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்

1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1

2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2

3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3

4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4

பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்

1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1

2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2

பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்

1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்

2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்