இஸ்லாம் அமைதி மார்கமா? இஸ்லாம் இனிய மார்கமா? இஸ்லாம் உண்மையான மார்கமா?

ஆன்சரிங் இஸ்லாம்

பல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்

சத்தியவான் தளம் செல்ல

Wednesday, January 23, 2008

TNTJ தலைவரும்,பிரபல இஸ்லாமிய அறிஞருமான பிஜே அவர்களின் புத்தகத்துக்கு ஈசாகுரான் மறுப்பு-6

        

Answering - PJ: இயேசு நறுமணம் பூசிக்கொள்ள ஆசைப்படுவாரோ?

(பி.ஜைனுல் ஆபீதீன் அவர்களுக்கு ஈஸா குர்ஆன் பதில்)


இயேசு கடவுள் என்றால் ஏன் அவர் நறுமணம் பூசிக்கொள்ள ஆசைப்பட்டார் ? என்பது தான் பிஜே அவர்கள் கேட்கும் கேள்வி. பிஜே அவர்கள் "இயேசு இறைமகனா?" என்ற புத்தகத்தை பைபிளின் வசனங்களை சரியாக ஆராயாமல் மேலோட்டமாக படித்து எழுதியுள்ளார். இந்த புத்தகத்தில் அவர் முன்வைக்கின்ற கேள்விகளுக்கு தொடர் கட்டுரைகளாக நான் பதில் எழுதிக்கொண்டு வருகிறேன்.

இந்த வரிசையில் இயேசு ஏன் நறுமணம் பூசிக்கொள்ள ஆசைப்பட்டார்? என்று பிஜே அவர்கள் கேட்கும் கேள்விக்கு பதிலை இக்கட்டுரையில் பார்க்கலாம்.



பிஜே அவர்கள் எழுதியது:

27. கடவுள் நறுமணம் பூசிக்கொள்ள ஆசைப்படுவாரா?


ஒரு ஸ்திரீ விலையேறப்பெற்ற பரிமள தைலமுள்ள வெள்ளைக்கல்பரணியைக் கொண்டுவந்து, அவர் போஜனபந்தியிலிருக்கும்போது, அந்தத் தைலத்தை அவர் சிரசின்மேல் ஊற்றினாள். அவருடைய சீஷர்கள் அதைக்கண்டு விசனமடைந்து: இந்த வீண் செலவு என்னத்திற்கு? இந்தத் தைலத்தை உயர்ந்த விலைக்கு விற்று, தரித்திரருக்குக் கொடுக்கலாமே என்றார்கள்.

இயேசு அதை அறிந்து, அவர்களை நோக்கி: நீங்கள் இந்த ஸ்திரீயை ஏன் தொந்தரவு படுத்துகிறீர்கள்? என்னிடத்தில் நற்கிரியையைச் செய்திருக்கிறாள். (மத்தேயு 26:7-10 )   மூலம் :  இயேசு இறைமகனா?



1. சில விவரங்களை வேண்டுமென்றே குறிப்பிடாமல் விட்டுவிடும் இஸ்லாமிய அறிஞர்கள்

சாதாரணமாக பைபிளிலிருந்து ஒரு நிகழ்ச்சியை குறிப்பிடும் போது அந்த நிகழ்ச்சி சம்மந்தப்பட்ட எல்லா விவரங்களையும் பைபிள்  அதே இடத்தில் சொல்லிவிடும். ஆனால் குர்ஆன் அப்படி அல்ல, அல்லா சொன்ன வசனங்களை குர்ஆனில் பார்க்கவேண்டும், இவ்வசனங்கள் எந்த சூழ்நிலையில் சொல்லப்பட்டது என்று அறிய ஹதீஸ்களின் உதவியை நாடவேண்டும். ஹதீஸ்கள் இல்லாமல் குர்ஆனின் வசனங்களை புரிந்துக்கொள்வது மிகவும் கடினம்.

குர்ஆனை படிப்பது போல, புரிந்துக்கொள்வது போல பிஜே அவர்கள் பைபிளை புரிந்துக்கொண்டுள்ளார். அதாவது, ஒரு நிகழ்ச்சியை குறிப்பிடும் போது, அவருக்கு (பிஜே) தேவையான வசனங்களை மட்டுமே எடுத்துக்கொண்டு அந்நிகழ்ச்சியின் அடுத்தடுத்துள்ள வசனங்களை வேண்டுமென்றே, பைபிளுக்கு, இயேசுவிற்கும் விரோதமாக வித்தியாசமான பொருள் கொண்டுவரவேண்டும் என்று விட்டுவிட்டார் நம்முடைய இஸ்லாமிய அறிஞர், பல ஆண்டுகள் இஸ்லாமிய ஊழியம் செய்துகொண்டு வந்துக்கொண்டு இருக்கும் மதிப்பிற்குரிய பிஜே அவர்கள்.

பிஜே அவர்கள் எந்த வசனங்களை வேண்டுமென்றே குறிப்பிடாமல் விட்டுவிட்டார் என்பதை அறிய மேலும் படியுங்கள்.

2. பிஜே அவர்கள் சொல்வது உண்மையா? 

பிஜே அவர்கள் குறிப்பிட்ட வசனங்களை இன்னொரு முறை படியுங்கள். அவர் குறிப்பிட்ட வசன எண்கள்: மத்தேயு 26:7-10 இவைகள் ஆகும்.


27. கடவுள் நறுமணம் பூசிக்கொள்ள ஆசைப்படுவாரா?


ஒரு ஸ்திரீ விலையேறப்பெற்ற பரிமள தைலமுள்ள வெள்ளைக்கல்பரணியைக் கொண்டுவந்து, அவர் போஜனபந்தியிலிருக்கும்போது, அந்தத் தைலத்தை அவர் சிரசின்மேல் ஊற்றினாள். அவருடைய சீஷர்கள் அதைக்கண்டு விசனமடைந்து: இந்த வீண் செலவு என்னத்திற்கு? இந்தத் தைலத்தை உயர்ந்த விலைக்கு விற்று, தரித்திரருக்குக் கொடுக்கலாமே என்றார்கள்.

இயேசு அதை அறிந்து, அவர்களை நோக்கி: நீங்கள் இந்த ஸ்திரீயை ஏன் தொந்தரவு படுத்துகிறீர்கள்? என்னிடத்தில் நற்கிரியையைச் செய்திருக்கிறாள். (மத்தேயு 26:7-10)



1. இயேசு சீமோன் என்பவனுடைய வீட்டில் இருந்தார்.

2. அந்த சமயத்தில் ஒரு பெண் மிகவும் விலை உயர்ந்த தைலத்தை(நறுமணத்தை)  கொண்டு வந்து இயேசுவின் தலையிலே ஊற்றுகிறாள்.

3. இதைக்கண்டு இயேசுவின் சீடர்கள் இந்த வீண் செலவு எதற்கு, அந்த பணத்தை ஏழைகளுக்கு கொடுக்கலாம் அல்லவா? என்று கேட்கிறார்கள்.

4. இயேசு அப்போது அவர்களுக்கு பதில் தருகிறார்.



3. இயேசு பேசிய வசனங்களில் பாதியை மட்டும் குறிப்பிட்ட பிஜே அவர்கள்

பிஜே அவர்கள் உண்மையில் நேர்மையாக பைபிள் வசனங்களுக்கு பொருள் கூறுவதாக இருந்தால், இந்த நிகழ்ச்சி நடக்கும் போது தன் சீடர்களுக்கு இயேசு என்ன பதில் சொன்னாரோ அதை முழுவதுமாக குறிப்பிட்டு இருக்கவேண்டும். ஆனால், பிஜே அவர்கள் இயேசு பேசிய நான்கு வசனங்களில் ஒரு வசனத்தை மட்டும் குறிப்பிட்டுள்ளார். இப்படி செய்வது ஏமாற்றுவேலை ஆகுமா? அல்லது நேர்மையாக நடந்துக்கொண்டு செயல்படுவது ஆகுமா? என்பதை இக்கட்டுரையை படிக்கும் நீங்களே முடிவு செய்யுங்கள். இப்படிப்பட்ட செயல்கள் ஒரு மிகப்பெரிய புகழ்பெற்ற இஸ்லாமிய ஊழியரிடம் மக்கள் எதிர்பார்க்கமாட்டார்கள்.

சரி பிஜே அவர்கள் குறிப்பிடாமல் விட்ட அந்த வசனங்கள் என்னவென்று பாருங்கள்.



மத்தேயு 26:10 இயேசு அதை அறிந்து, அவர்களை நோக்கி: நீங்கள் இந்த ஸ்திரீயை ஏன் தொந்தரவு படுத்துகிறீர்கள்? என்னிடத்தில் நற்கிரியையைச் செய்திருக்கிறாள்.

மத்தேயு 26:11 தரித்திரர் எப்போதும் உங்களிடத்திலிருக்கிறார்கள். நானோ எப்போதும் உங்களிடத்தில் இரேன்.

மத்தேயு 26:12 இவள் இந்தத் தைலத்தை என் சரீரத்தின் மேல் ஊற்றினது என்னை அடக்கம் பண்ணுவதற்கு எத்தனமான செய்கையாயிருக்கிறது.

மத்தேயு 26:13 இந்தச் சுவிசேஷம் உலகத்தில் எங்கெங்கே பிரசங்கிக்கப்படுமோ அங்கங்கே இவளை நினைப்பதற்காக இவள் செய்ததும் சொல்லப்படும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.



இயேசு பேசிய நான்கு வசனங்களில் (மத்தேயு 26:10, 11, 12,13) ஒரு வசனத்தை (மத்தேயு 26:10) மட்டும் பிஜே குறிப்பிட்டார்கள். அதாவது, இயேசு பேசிய 100% ல், 25% மட்டும் குறிப்பிட்டு, மீதி 75% வேண்டுமென்றே மறைத்துள்ளார் பிஜே அவர்கள்.

4. சரி, பிஜே அவர்கள் மறைத்த வசனங்களில் இயேசு என்ன சொல்கின்றார்?

முதலாவது நறுமணத்தைப் பற்றிய சில விவரங்களை அறிந்துக்கொள்ளலாம்.

அ) நறுமணத்தை எப்போது பயன்படுத்துவார்கள்?

முக்கியமாக இயேசு வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த மக்கள் நறுமணத்தை கீழ் கண்ட காரணங்களுக்காக பயன்படுத்தினார்கள்:
1) தேவனுடைய வேலைக்காக ஒரு ஆசாரியனை அல்லது அரசனை பிரதிஷ்டை செய்ய பயன்படுத்துவார்கள் ( 1 சாமுவேல் 16:1 , 2 இராஜாக்கள் 9:6 சங்கீதம் 89:20)

2) மகிழ்ச்சியான நேரங்களில் பயன்படுத்துவார்கள் (நீதிமொழிகள் 27:9, ஏசாயா 61:3)

3) அரசர்களை, பெரியவர்களை சந்திக்கப்போகும் பொது மரியாதைக்காக விலை உயர்ந்த தைலத்தை நறுமணங்களைக் கொண்டுச்செல்வார்கள் (ஆதியாகமம் 43:11, மத்தேயு 2:11)

4) இறைவனுடைய ஆலய வேலைகளில் நறுமணமுள்ள தைலத்தை பயன்படுத்துவார்கள் (யாத்திராகமம் 30:25-32).

5) ஒருவர் மரித்துவிட்டால், அவரை அடக்கம் செய்யும் போது நறுமண தைலத்தை பூசி துணிகளால் சுற்றி அடக்கம் செய்வார்கள் (மத்தேயு 26:12, லூக்கா 23:55, 56, லூக்கா 24:1).



ஆ) தன் மரண அடக்க சடங்கிற்காக இயேசு இந்த நறுமணம் பூசப்பட்டது என்றார்

ஏன் பிஜே அவர்கள் இயேசு சொன்ன மற்ற வசனங்களை குறிப்பிடவில்லை? என்பது இப்போது புரிந்திருக்கும். அதாவது, அந்தப்பெண் தன் பாவங்களை இயேசு மன்னிக்கவேண்டும் என்பதற்காகவும், மதிப்பின் அடிப்படையிலும் அந்த தைலத்தை அவர் மீது ஊற்றினாலும், இயேசு அதை தன் மரணத்தின் பின்பு அடக்கத்தின் போது பயன்படுத்தும் நறுமணமாகவே எடுத்துக்கொண்டார் , அதையே அவர்கள் எல்லாருக்கும் முன்பாக அறிக்கையும் செய்தார். அதாவது இயேசு, தன் மீது ஊற்றப்பட்ட நறுமணத்தை கல்யாண வீட்டு சந்தோஷ நறுமணமாகக் கருதாமல், சாவு வீட்டில் வரும் நறுமணமாகவே அவர் கருதினார். ஆனால், பிஜே அவர்களுக்கு மட்டும், இயேசு அழகாக மேக் அப் (Make Up) செய்துக்கொண்டு, பணம் கொடுத்து நறுமணம் வாங்கி உடலெல்லாம் பூசிக்கொண்டது போல் இந்நிகழ்ச்சி தெரிந்து இருக்கிறது. எப்படி மற்றவர்களின் வேதங்களை இஸ்லாமிய அறிஞர்கள் வியாக்கீனம் செய்கிறார்கள் பார்த்தீர்களா?

சாவு வீட்டில் கூட வாசனைக்கு சில நறுமணங்களை தெளிப்பார்கள், அது ஏன் என்று எல்லாருக்கும் தெரியும் என்று நினைக்கிறேன். அதாவது இந்தியாவில் ஒரு பிணத்தின் மீது தெளிக்கும் ரோஸ் வாடர் (Rose Water) என்று சொல்லக்கூடிய நறுமணத்திற்கு நிகராக இயேசு பேசியுள்ளார். ஆனால், அதை மறைப்பதற்காக பிஜே அவர்கள் வசனத்தை மறைத்தார்கள்.

மத்தேயு 26:11-13 வசனங்களை தன் புத்தகத்தில் குறிப்பிட்டால், தான் சொன்னவந்த செய்திக்கு அது எதிராக இருக்கும் என்பதற்க்காகவே, பிஜே அவர்கள் அதை குறிப்பிடவில்லை என்பது இப்போது புரிந்திருக்கும். இப்படித்தான் இஸ்லாமிய அறிஞர்கள் தவறான விவரங்களை சொல்லிக்கொண்டு முஸ்லீம்களையும், மற்றவர்களையும் முட்டாள்களாக்கிக் கொண்டு வருகிறார்கள் .

தன் மரணத்தைப் பற்றித் தான் இயேசு பேசினார் என்பதற்கு பிஜே அவர்கள் குறிப்பிட்ட அதே அதிகாரத்திலிருந்து(26) இன்னும் சில விவரங்கள்:

1. மத்தேயு 26ம் அதிகாரம் 1-2ம் வசனங்களில், தன்னை சிலுவையில் யூதர்கள் அறைவார்கள் என்று இயேசு முன்னுரைக்கிறார்.

2. அப்படியே ஆசாரியர்களும் இயேசுவை பிடித்துகொலை செய்ய திட்டம் தீட்டுகிறார்கள் (மத்தேயு 26:3-5).

3. பிறகு தான் இந்த நறுமணம் பற்றிய நிகழ்ச்சி நடக்கிறது (மத்தேயு 26:7-13) இதில் வசனங்கள் 11லிருந்து 13 வரை பிஜே அவர்கள் வேண்டுமென்றே குறிப்பிடாமல் மறைத்தார்.

4. இந்த வாய்ப்பை பயன்படுத்தி இயேசு மறுபடியும் தன் மரணத்தைப்பற்றி முன்னுரைக்கிறார். ஏழைகள் உங்களிடத்தில் எப்போதும் இருப்பார்கள், ஆனால், நான் இருக்கமாட்டேன் என்று இயேசு சொல்கிறார்.

5. பிற்கு யூதாஸ் காரியோத்து என்ற சீடன் இயேசுவை காட்டிக்கொடுக்க யூதர்களிடம் பேசுகிறான் (மத்தேயு 26:14-16)

இப்படி ஆதாரங்களை அடுக்கிக்கொண்டுப் போகலாம்.

பிஜே அவர்களுக்கும் மற்ற அறிஞர்களுக்கும் சிந்திக்க சில கேள்விகள்:

1. எந்த சூழ்நிலையிலாவது இயேசு சீடர்களை அனுப்பி நறுமணங்களை கொண்டுவரும்படிச் சொல்லி, தினமும் பூசிக்கொண்டார் என்று உங்களால் ஆதாரம் காட்டமுடியுமா?

2. இயேசுவின் சீடர்கள் இந்த குறிப்பிட்ட நிகழ்ச்சியில் "ஏன் இந்த வீண் செலவு ?" என்று விசனப்பட காரணமென்ன? காரணத்தை நான் சொல்கிறேன், இயேசு ஒரு முறை கூட இப்படி அதிக விலை உயர்ந்த தைலத்தை பணம் செலவு செய்து வாங்கிக்கொண்டு வரும்படி தன் சீடர்களுக்கு சொல்லவில்லை என்பதும், இயேசு இப்படி வீணான செலவுகள் அனைத்திற்கும் அப்பாற்பட்டவர் என்பதையும் சீடர்கள் அறிந்திருந்தனர்.

3. மட்டுமல்ல, இந்த சீடர்கள் அந்த பெண்ணின் மீது கோபப்பட்டார்களே தவிர இயேசுவின் மீதல்ல? காரணம் இயேசு அவராகவே ஏற்பாடு செய்துக்கொண்டு தைலத்தை தன் உடலில் பூசிக்கொள்ளவில்லை என்பதும், அந்தப்பெண் தானாகவே வந்து இப்படி செய்தாள் என்பதும் சீடர்கள் அறிந்திருந்தார்கள். எனவே தான் இயேசு அந்தப் பெண்ணின் மீது கோபப்படாதீர்கள், இது என் மரண சடலத்தின் மிது பூசப்படப்போகும் நறுமணம் என்று சீடர்களுக்குச் சொன்னார்.

4. எல்லாரும் இயேசுவோடு சாப்பிட உட்கார்ந்து இருக்கும் போது, மரணத்தைப் பற்றியும், அடக்க ஆராதனைப் பற்றியும் யாராவது பேசுவார்களா? பேசமாட்டார்கள். ஆனால், இயேசு பேசினார். காரணம் பிஜே அவர்கள் சொல்வது போல, இயேசு விரும்பி நறுமணங்களை பூசிக்கொள்ள ஆசைப்படவில்லை. எல்லா சூழ்நிலைகளையும் தன் மரணத்தைப்பற்றிப் பேச இயேசு பயன்படுத்திக்கொண்டார் என்பது தான் உணமை.

5. அரசாங்கத்திற்கு வரி கட்ட, தூண்டில் போட்டு அதில் முதலாவது பிடிக்கும் மீனின் வயிற்றில் இருக்கும் நாணயத்தை எடுத்து கட்டும் படி இயேசு பேதுருவிடம் சொன்னார்(மத்தேயு 17:24-27). ஒருவேளை இயேசு அதிக விலையுள்ள நறுமணங்களை பூசிக்கொண்டு, பணத்தை வீண் செலவு செய்துக்கொண்டு இருந்து, ஆனால், அரசாங்கத்திற்கு வரிகட்ட மட்டும் பேதுருவிற்கு மீன்பிடித்து கட்டுங்கள் என்று சொல்லியிருந்தால், சீடர்கள் என்ன சொல்லியிருப்பார்கள் என்பதை நீங்களே சிந்தித்துக்கொள்ளுங்கள். "இவர் மட்டும் வீண்செலவு செய்துக்கொண்டு விலை உயர்ந்த நறுமணத்தை பூசிக்கொள்வார், ஆனால், வரி கட்ட மட்டும், நாங்கள் உழைத்து கட்டவேண்டுமா?" என்று கேட்டு இருப்பார்கள். அவரை யாரும் பின்பற்றி இருக்கமாட்டார்கள்.

முடிவுரை:

முடிவாக பிஜே அவர்களே, முதலாவது நேர்மையான முறையில் எல்லா வசனங்களையும் படித்து கேள்வி கேளுங்கள். உண்மை பாதி பொய் பாதி என்பது உம்மைப்போன்ற மக்கள் மத்தியில் ஊழியம் செய்பவர்களுக்கு அழகல்ல என்பது என் கருத்து.

நீங்கள் கேட்ட கேள்வி தவறானது, அதற்கு நீங்கள் காட்டிய வசனங்களும் முழுமையாக காட்டப்படவில்லை. உங்கள் அல்லா போல, பாதி விவரங்கள் குர்ஆனில் சொல்லிவிட்டு, மீதி விவரங்கள் ஹதீஸ்களில் சொல்வது போல பைபிள் இல்லை. எல்லா விவரங்களும் ஒரே இடத்தில் சொல்லப்பட்டிருக்கும், இந்த வசனத்திற்கு ஏற்ற ஹதீஸ் எது என்று மற்ற புத்தகங்களில் தேடி கண்டுபிடிக்க வேண்டிய கஷ்டம் இல்லை. எனவே, முழுவதுமாக படித்து கேள்விகள் கேளுங்கள்.

ஒரு வேளை இயேசு நறுமணம் விருப்பமாக பூசிக்கொண்டாலும் சரி, அது உங்கள் "அல்லா" உண்மையான இறைவன் என்பதையும், "குர்ஆன் " என்பது இறைவேதம் என்பதையும் நிருபிக்க உதவாது என்பதை சொல்லிக்கொள்கிறேன்.

எங்களுக்கு அல்லாவைப்பற்றியும், முகமதுவைப்பற்றியும் சொல்வதற்கு முன்பாக உங்களிடம் நாங்கள் எதிர்ப்பார்ப்பது நேர்மையும், உண்மையையும் தான் என்பதை முதலாவது புரிந்துக்கொள்ளுங்கள்.

உங்கள் மார்கத்திற்காக மற்றவர்களின் வேதங்களில் (நாங்கள் தினமும் படிக்கும், தியானிக்கும் வேதத்தில்) இல்லாததை கற்பனை செய்துக்கொண்டுச் சொல்லும் நீங்கள், உங்கள் வேதத்தைப் பற்றி(நாங்கள் தினமும் படிக்காத, தியானிக்காத குர்ஆன் பற்றி) எங்களுக்கு விவரிக்கும் போது எவ்வளவு பொய்யான தகவல்களை சொல்லுவீர்கள் என்பதை கற்பனை கூட செய்துப்பார்க்க முடியாது.

பிஜே அவர்களுக்கு ஈஸா குர்ஆனின் இதர பதில்கள்:

1. பி.ஜைனுல் ஆபிதீனும், திரித்துவமும் & பவுலும்: பதில்

2. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்ஆன் பதில்

3. பி.ஜைனுல் ஆபிதீனும் பரிசுத்த ஆவியும் : ஈஸா குர்‍ஆன் பதில்

4. பிஜேவிற்கு ஈஸா குர்‍ஆன் பதில்: இயேசு சில நேரங்களில் ஏன் அற்புதம் செய்யவில்லை? பாகம் - 1

5. பிஜேவிற்கு ஈஸா குர்‍ஆன் பதில்: இயேசு சில நேரங்களில் ஏன் அற்புதம் செய்யவில்லை? பாகம் - 2

http://www.geocities.com/isa_koran/tamilpages/Rebuttals/pjonline/PjPerfume.htm

இஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்

முன் பக்கம் செல்ல

HOME PAGE

தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்

1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1

2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2

3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3

4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4

பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்

1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1

2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2

பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்

1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்

2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்