இஸ்லாம் அமைதி மார்கமா? இஸ்லாம் இனிய மார்கமா? இஸ்லாம் உண்மையான மார்கமா?

ஆன்சரிங் இஸ்லாம்

பல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்

சத்தியவான் தளம் செல்ல

Monday, October 29, 2007

சத்திய மாக்கம் சவாலுக்கு உமரின் பதில்:

 
ஈஸா குர்‍ஆன் தளம் மூலமாக‌, இது தான் தள கட்டுரைகளுக்கு பதில் எழுதிக்கொண்டு வருவது எல்லாருக்கும் தெரியும்.

"பாரான் அக்னி பிராமாணம்" என்ற இது தான் இஸ்லாம் தள கட்டுரைக்கு நான் மறுப்பு எழுதியிருந்தேன். அதற்கு "சத்திய மாக்கம்" என்ற பெயரில் ஒரு காமண்ட் வந்தது. அதில் இஸ்லாம் சகோதரர் ஜி. நிஜாமுத்தீன் அவர்கள் பற்றி கீழ் கண்டவாறு கூறப்பட்டது.

கீழ் கண்ட கேள்விக்கு, ஜி. நிஜாமுத்தீன் அவர்கள் தவறான‌ பதில் சொல்லியிருந்தார்கள் என்று "சத்திய மாக்கம்" சொன்னார்கள்.

 
Quote:
===========================
கேள்வி: முஸ்லிம்கள் புளு பலிம் பார்க்கலாமா?

பதில் : புளு பிலிம் பார்க்கலாம் ஏன் என்றால் அடுத்தமுறை மனைவியுடன் உடலுரவில் ஈடுபடும்போது பொசிசனை சரி செய்து கொள்ள உதவும் - ஜி.என்
===========================


நான் அதற்கு ஆதாரத்தோடு காமண்ட் வையுங்கள் என்று எழுதியிருந்தேன்.

Quote:
===========================
நீங்கள் சொல்வது போல எந்த தளத்தில் அவர் பதில் அப்படி அளித்தார் என்று ஒரு தொடுப்பை கொடுத்தால், படிக்கும் வாசகர்களுக்கு உதவியாக இருக்கும்.
===========================


இதற்கு சத்திய மார்க்கம்(www.satyamargam.com) என்ற தளம் கீழ்கண்டவாறு கட்டுரை எழுதினார்கள்.

Source : http://velicham2006.blogspot.com/2007/10/blog-post_5676.html

1. சத்திய மார்க்கம், அல்லது சத்திய மாக்கம் என்ற பெயரில் யாரோ ஒரு போலி நபர் இப்படி தவறாக எழுதுகிறார்.
2. இந்த காமண்ட்க்கும்(Comment), சத்திய மார்க்கம் தளத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை.
3. தங்கள் தளத்தின் பெயரை கெடுப்பதற்கு இப்படி பல போலிகள் பொய்யான தகவல்களை தருகிறார்கள்


என்று எழுதியிருந்தார்கள்.

இந்த சத்திய மார்க்கம் தள கட்டுரைக்கு ஜி. நிஜாமுத்தீன் அவர்களும் காமண்ட் கீழ் கண்டவாறு எழுதியிருந்தார்கள்.
Quote:
=========================
சத்தியமாக்கம் என்ற (தவறான பெயருடன்) கிறிஸ்த்தவ இணையத்தளத்தில் எனக்கு எதிராகவே ( சற்றும் அல்லாஹ்வுக்கு அஞ்சாமல்) மிகக் கேவலமான கருத்துப்பதிக்கப்பட்டது. இதுதான் இஸ்லாம் இணையத்தில் கிறிஸ்த்தவ இணையத்தின் பின்னூடலுக்கு பதிலளித்தோம். விமர்சிப்பவர்கள் அந்நிய முகமூடி அணிந்துக் கொள்வதன் அவசியம் என்னவென்று புரியவில்லை. சிறப்பாக செயல்படும் இணையங்களில் பெயரைக் கெடுக்க எடுக்கப்படும் சதிவேலையாக இது இருக்குமோ...

கருத்து எழுதியவர் ஜி.நிஜாமுத்தீன் , பதிந்தது: October 3, 2007 நேரம்: 8:35
=========================


மறுபடியும் "சத்திய மாக்கம்" என்றவர் என் கட்டுரையில் கிழ்கண்ட பதிவை இட்டுள்ளார். இதற்கு என் பதிலை கீழே கொடுத்துள்ளேன்.

Quote:
========================================
சத்திய மாக்கம் said...
தோழரே நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் தளத்திற்கு வருவதால் என்ன நடந்தது என்று தெறியவில்லை.

நீங்கள் கேட்டது போல் நிறைய ஆதாரங்கள் இந்த கு.நி என்பவரின் பொய்முகத்தை கிழிப்பதற்கு உள்ளன.

அவற்றை எப்படி ஏற்றுவது என்று எனக்கு தெறியவில்லை இங்கு சற்று விளக்கவும்.

சத்தியமார்க்க்ம் என்பவர்கள் என்னை போலி என்று கட்டுரை போட்டுள்ளார்கள். சத்தியமார்க்கம் எனும் தளமே போலி என்பது தான் எனது கருத்து. சத்தியமார்க்கமும் அதில் எழுதக்கூடிய அனைவருமே போலிகள்.

இவர்கள் எப்படி அடுத்தவனை போலி என கூற முடியும்?

சத்திய மார்க்கம் உண்மை என்றால் சத்தியமார்க்கம் தளமும் அதில் எழுதக்கூடியவர்களும், பின்னூட்டக் கூடியவர்களும் தங்கள் சொந்தப் பெயரில் முகவரியும் போன் நம்பரும் போட்டு பதிவு செய்யட்டும் பின்னர் மற்றவர்களை போலி என்று சொல்லட்டும்.

பொய்யர்களும் போலியுமான சத்தியமார்க்கத்தை பிறகு பார்க்லாம், முதலில் இந்த கு.நி உங்களிடம் செய்தது போலவே தற்போது அடைக்களமாகியிருக்கும் ததஜ வினரிடம் கள்ள மெயில் மூலம் கேள்வி பதில் வெளியட்டு மாட்டி செருப்படி வாங்கினார் அதற்குறிய ஆதாரங்கள் நிறைய பி.டி.எப் பைல்களாக உள்ளன அவற்றை எப்படி ஏற்றுவது என்று கூறுங்கள் அல்லது உங்கள் முகவரி தாருங்கள் மெயிலில் அனுப்புகின்றேன்.

இதை தனிப்பதிவாக போடவும்.

நான் போலி இல்லை. போலி என்று கூறுபவர்கள் தாங்கள் உண்மை என்று நிறுபித்து விட்டு மற்றவர்களை போலி என கூறட்டும்.

இதையெல்லாம் எழுதுவதால் நான் உங்கள் கருத்துக்களோடு ஒத்துப்போகின்றேன் என்று அர்த்தமல்ல மாறாக நான் உங்களுக்கு பதில் அளிக்க மற்றவர்கள் தேர்ந்தெடுத்த வழிமுறைகளோடும் அவர்கள் செய்யும் திருகுதாளங்கள் ஓடும் திருட்டுத் தனங்கள் ஓடுமு் ஒத்துப்போகவில்லை என்றுதான் அர்த்தம் செய்ய வேண்டும்.

உங்களை வேறு ஒரு சமயத்தில் பார்த்து கொள்ளுகின்றேன். தற்சமயம் இஸ்லாத்தில் போலி வேடம் போடும் சத்தியமார்க்கம் என்ற திருட்டுத் தளம் மற்றும் அதில் எழுதும் பல போலிகளின் முகமூடியை கழற்றுவோம்.

உங்களைப்போன்ற இஸ்லாத்தின் மீது அவதுர்று அளிப்பவர்களுக்கு கு.நி போன்று திருட்டுத்தனங்களும் பித்தளாட்டங்களும் செய்து பதில் அளிக்குமாறு எங்கும் இஸ்லாம் போதிக்கவில்லை.


ஆதாரங்களை அனுப்பித் தருகின்றேன் தனிப்பதிவாக போடவும்.

சத்திய மார்க்கம் (உண்மையானது - போலி அல்ல)

October 27, 2007 3:22 PM

Source: இஸ்லாம் - பாரான் பிரமாணம் கட்டுரைக்கு ஈஸா குர்-ஆன் மறுப்பு
http://isakoran.blogspot.com/2007/09/blog-post.html
========================================


சத்திய மாக்கத்திற்கு ஈஸா குர்‍ஆன் பதில்:

உங்கள் பதிவில் என்னை தொட்டது இரண்டு விஷயங்கள்:

1. இஸ்லாமுக்கு விரோதமாக அவதூறு சொல்கிறவர்களுக்கு நீங்கள் பதில் தர யாராக இருப்பது.

2. இஸ்லாமில் உள்ள சில போலிகளை உலகத்திற்கு வெளிச்சம் காட்டுவது.


Quote:
================
இதையெல்லாம் எழுதுவதால் நான் உங்கள் கருத்துக்களோடு ஒத்துப்போகின்றேன் என்று அர்த்தமல்ல மாறாக நான் உங்களுக்கு பதில் அளிக்க மற்றவர்கள் தேர்ந்தெடுத்த வழிமுறைகளோடும் அவர்கள் செய்யும் திருகுதாளங்கள் ஓடும் திருட்டுத் தனங்கள் ஓடுமு் ஒத்துப்போகவில்லை என்றுதான் அர்த்தம் செய்ய வேண்டும்.

உங்களை வேறு ஒரு சமயத்தில் பார்த்து கொள்ளுகின்றேன். தற்சமயம் இஸ்லாத்தில் போலி வேடம் போடும் சத்தியமார்க்கம் என்ற திருட்டுத் தளம் மற்றும் அதில் எழுதும் பல போலிகளின் முகமூடியை கழற்றுவோம்.

உங்களைப்போன்ற இஸ்லாத்தின் மீது அவதுர்று அளிப்பவர்களுக்கு கு.நி போன்று திருட்டுத்தனங்களும் பித்தளாட்டங்களும் செய்து பதில் அளிக்குமாறு எங்கும் இஸ்லாம் போதிக்கவில்லை.
================




1. இஸ்லாமில் உள்ள போலிகளை உலகத்திற்கு வெளிச்சம் காட்டுவது பற்றி நான் ஒன்றும் சொல்லமாட்டேன். அது உங்கள் விருப்பம்.

2. ஆனால், அதை நீங்கள் முதலாவதாக செய்வதாக சொல்கிறீர்கள், அது தான் என் மனதிற்கு விசனமாக உள்ளது.

3. எனவே, நான் சொல்வது என்னவென்றால், "போலிகளை" கண்டுப்பிடிப்பதை இரண்டாவதாகச் செய்யுங்கள். முதலாவது, இஸ்லாமுக்கு அவதூறு கொண்டுவரும் கட்டுரைகளுக்கு பதில் சொல்லுங்கள்.

4. இனிமேல் நீங்கள் எது எழுதினாலும், அவர்கள் (சத்திய மார்க்கம் தளம், மற்றும் ஜி.நிஜமுத்தீன் அவர்கள்) பதில் தரமாட்டோம் என்று சொல்லிவிட்டார்கள். எனவே, என் கட்டுரைகளுக்கு பதில் சொல்வீர்களானால், நன்மை செய்கிறவர்களாக எண்ணப்படுவீர்கள்.


5. அவர்களை விட்டுவிடுங்கள், நம் விஷயத்திற்கு வருவோம்.

1. நான் இயேசுவின் வரலாறு என்ற 6 தொடர்களுக்கு பதில் அளித்துள்ளேன். நீங்கள் அக்கட்டுரையில் ஜி.நிஜாமுத்தீன் சொல்வதை பார்க்கவேண்டாம். அதற்கு பதிலாக, இயேசுவின் பிறப்பு பற்றி குர்‍ஆன் வசனங்களை எடுத்துக்கொள்ளுங்கள், அதற்கு என் பதிலை படியுங்கள். உங்கள் மறுப்பை அளியுங்கள். இன்னும் பல கட்டுரைகளை என் தளத்தில் பார்க்கலாம். அதற்கு பதில் அளிக்க முற்படுங்கள். அல்லா உங்களுக்கு நற்கூலி கொடுப்பான்.

நான் மொழி பெயர்த்த இரண்டு கட்டுரைகளை கீழ் கண்ட தொடுப்பில் படிக்கலாம், இந்த கட்டுரைகளுக்கு பதில் கொடுப்பதோடு "எனக்கு" உங்கள் மறுப்பை எழுத ஆரம்பிப்பீர்களானால், நன்றாக இருக்கும்.

2. ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா (Allah Starts Christianity...by Accident)
http://www.geocities.com/isa_koran/tamilpages/Authors/davidwood/allahstartschristianity.htm

3. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?
http://www.geocities.com/isa_koran/tamilpages/Koran/IsQuranPreserved.htm

[இந்த மூன்று கட்டுரைகள் மிகவும் முக்கியமானவையாக நான் கருதுவதால், இவைகளை மட்டும் குறிப்பிட்டேன்.]

நான் எழுதிய மீதமுள்ள கட்டுரைகளை கிழ் கண்ட தளங்களில் பார்க்கலாம்.

1. http://www.tamilchristians.com
2. http://www.geocities.com/isa_koran
3. http://isakoran.blogspot.com

உமக்கு நான் உதவமுடியும்

1. உங்கள் பதில்களை எப்படி எனக்கு தெரிவிக்கவேண்டும் என்று குழம்பவேண்டாம். நீங்கள் விரும்பினால், உங்கள் பதில்களுக்காக நான் ஒரு தளத்தை ஆரம்பிக்கவும் தயாராக உள்ளேன்(தளங்களை நாம் இலவசமாக ஆரம்பிக்கலாமே, காசா பணமா).

2. அல்லது உங்கள் பதில்களை எனக்கு மெயில் அனுப்பினாலும் சரி, நான் அதில் ஒரு எழுத்தும் மாற்றாமல் என் தளத்தில் பதித்து பதில் எழுதுவேன்.
என் மெயில் ஐடிக்கள்: isa.koran@gmail.com and isa_koran@yahoo.co.in

3. இன்னுமொறு சுலபமான வழி என்னவென்றால், தமிழ் கிறிஸ்டியன்ஸ்(http://www.tamilchristians.com) தளத்தில் இலவசமாக ஒரு ஐடியை உருவாக்கிவிட்டு, அதன் மூலம் நீங்கள் உங்கள் கட்டுரைகளை, பதில்களை பதிக்கலாம். இதில் இன்னொரு வசதி என்னவென்றால், பல கிறிஸ்தவர்கள் உங்கள் பதில்களை படிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

http://www.tamilchristians.com

உங்கள் பதிலுக்காக காத்துக்கொண்டு இருக்கும், உங்கள் நண்பன்.




இதைப்பற்றி முந்தைய தமிழ் கிறிஸ்டியன்ச் தள பதிவை இங்கு பார்க்கலாம்.

நிஜாமுத்தீன் அவர்கள் பற்றிய ஒரு செய்தி - (True or False)
http://www.tamilchristians.com/modules.php?name=Forums&file=viewtopic&t=362

தமிழ் முஸ்லீம் தளமும், " அல்லேலூயா " வார்த்தையும் ===உமரின் கேள்வி

 
 
தமிழ் மூஸ்லீம் தளத்தின் இஸ்லாமிய அறிஞர்கள் மாற்று மதங்களோடு இஸ்லாமை சம்மந்தப்படுத்தி கட்டுரைகளை எழுதிவருகிறார்கள். மாற்று மதங்களில் உள்ள சில வார்த்தைகளை எடுத்துக்கொண்டு அதற்கு "இஸ்லாமிய முறையில்" பொருள் கூறுகிறார்கள். அந்த வார்த்தைகளுக்கு உண்மை பொருள் என்ன என்று பார்க்காமல், இஸ்லாமிய வார்த்தைகளுக்கு ஏற்றார் போல் பொருள் கூறிவருகிறார்கள்.

என்னுடைய இந்த கட்டுரை, கிறிஸ்தவ மக்கள் அடிக்கடி பயன்படுத்தும் "அல்லேலூயா" என்ற வார்த்தைக்கு இவர்கள் புது அர்த்தத்தை கொடுத்துள்ளதைப் பற்றி அலசுகிறது.
இந்த வார்த்தையின் அடிப்படையில் கிறிஸ்தவர்களுக்கு ஒரு பட்டப்பெயர் உள்ளது. கிறிஸ்தவர்களை மாற்றுமத நண்பர்கள் "அல்லேலூயா கூட்டம்" என்று கூடச் சொல்வார்கள்.

இக்கட்டுரையில் "அல்லேலூயா" என்ற வார்த்தைக்கு "தமிழ் முஸ்லீம்" தளம் என்ன பொருள் சொல்கிறது என்றும், உண்மையில் இவ்வார்த்தைக்கு சரியான பொருள் என்னவென்றும், இப்படி இஸ்லாமியர்கள் மாற்றுமத வார்த்தைகளுக்கு புது அர்த்தம் கற்பிப்பதினால் அவர்களுக்கு என்ன லாபம் என்றும் பார்க்கப்போகிறோம்.


1. தமிழ் முஸ்லீம் தளத்தின் "பிற மத வேதங்களில் இஸ்லாம்" என்ற கட்டுரை:

கீழ் கண்ட தொடுப்பில், தமிழ் முஸ்லீம் தளத்தின் "பிற மத வேதங்களில் இஸ்லாம்" என்ற கட்டுரையை படிக்கலாம்.

பிற மத வேதங்களில் இஸ்லாம் தொடர் 3
http://www.tamilmuslim.com/piramathangak/piramatangal3-4.htm

இக்கட்டுரையில் பல செய்திகள் சொல்லப்பட்டுள்ளது. ஆனால், நான் இக்கட்டுரையில் "கிறிஸ்தவ வேதத்தில் காணப்படும் அல்லேலூயா" என்ற வார்த்தையைப் பற்றி இவர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதை பற்றி மட்டும் சொல்லப்போகிறேன். மற்ற விவரங்களைப் பற்றி கர்த்தருக்கு சித்தமானால், தனி கட்டுரையாக பார்க்கலாம்.



அல்லேலூயா என்ற வார்த்தையைப் பற்றி தமிழ் முஸ்லீம் தளம் கூறியது:

இனி பைபிளை எடுத்துக் கொள்வோம்.

அல்லேலுயா!

இது ஒரு ஹிப்ரு சொல்லாகும். இதன் இறுதியில் இடம் பெறக்கூடிய 'யா' என்பது ஒரு விளி வேற்றுமை சொல்லாகும். ஆச்சரியத்திற்கு பயன் படுத்தக்கூடியதாக சொல்லப்படுகிறது.

அல்லேலுயா! என்பதை 'யா அல்லேலு' என்று சொன்னாலும் அதன் பொருளானது மாறுவதில்லை.

கிறிஸ்துவர்கள் 'யா அல்லேலு' என்கிறார்கள்
முஸ்லிம்கள் 'யா அல்லாஹ்' என்கிறார்கள்
அவ்வளவுதான் வித்தியாசம்!



இனி இவ்வார்த்தைக்கு உள்ள உண்மை பொருளைப்பற்றி பார்க்கலாம்.

2. Hallelujah, Halleluyah, or Alleluia (அல்லேலூயா) வார்த்தையின் பொருள் என்ன?

அல்லேலுயா(Halleluyah) என்ற வார்த்தை இரண்டு வார்த்தைகளை உள்ளடக்கியது:

1. Halelu

2. Yah


"Halelu" என்றால் துதி அல்லது போற்றுதல் (Praise) என்று பொருளாகும்.

"Yah" or "Jah" என்றால் "யேகோவா" தேவனின் பெயரைக்குறிக்கும். "Yahweh" என்பதின் சுருக்கமே "Yah" என்பது.

இந்த இரண்டு வார்த்தைகளின் பொருள் "யேகோவா தேவனை துதித்தல் – Praise the LORD or Praise Yahweh" என்பதாகும்.

[இயேசுவின் (Yeh oshua) பெயரிலும் "Yah" இருப்பதை கவனிக்கலாம். இயேசு என்றால், "யேகோவா என் இரட்சிப்பு" என்று பொருள். Source: http://en.wikipedia.org/wiki/Jesus ]

இந்த விவரங்களோடும் இன்னும் மேலதிக விவரங்களுக்கு "விகிபீடியா" என்ன சொல்கிறது என்றுப் பாருங்கள். Source: http://en.wikipedia.org/wiki/Hallelujah



 
Quote:
Hallelujah, Halleluyah, or Alleluia, is a transliteration of the Hebrew word הַלְלוּיָהּ (Standard Halləluya, Tiberian Halləlûyāh) meaning "[Let us] praise (הַלְּלוּ)." It is found mainly in the book of Psalms. The word is used in Judaism as part of the Hallel prayers, and in Christian praise. It has been accepted into the English language, but its Latin form Alleluia is used by many English-speaking Christians in preference to Hallelujah.

The word hallelujah mentioned in Psalms is the Hebrew word for requesting a congregation to join in praise. "Hallel" means to recite praise, "hallelu" is the plural form. The grammatical extension "yah" is a way of expressing magnanimity[1], hence halleluyah means "a great praise."

There are other ways of interpreting this word, as the Hebrew language does include the possibility for many meanings in the same word; thus it can also be understood to mean "Praise (הַלְּלוּ) the LORD (יָהּ) or God." This interpretation comes from the idea that the suffix "-yah" could be a shortened form of the name "Yahweh/Jehovah," although this would make it an exception, and not typical of standard Hebrew.[2]

For most Christians, "Hallelujah" is considered the most joyful word of praise to God, rather than an injunction to praise Him. In many denominations, the Alleluia, along with the Gloria in Excelsis Deo, is not spoken or sung in liturgy during the season of Lent, instead being replaced by a Lenten acclamation.

The term is used 24 times in the Hebrew Bible (mainly in the book of Psalms (e.g. 111-117, 145-150, where it starts and concludes a number of Psalms) and four times in Greek transliteration in Revelation.


எபிரேய மொழியில் ஒரு வார்த்தைக்கு பல பொருள்கள் கூறமுடியும், அதன்படி பார்த்தால், "Yah" என்ற வார்த்தைக்கு "Great" என்ற பொருளும் உள்ளது. அதன் படி இவ்வார்த்தையை "A Great Praise": என்று கூடச் சொல்லலாம் என்று விகிபீடியா சொல்கிறது.

3. தமிழ் முஸ்லீம் தள பொருளில் உள்ள குறைபாடு:

தமிழ் முஸ்லீம் தளம் எழுதியது:

இனி பைபிளை எடுத்துக் கொள்வோம்.

அல்லேலுயா!

இது ஒரு ஹிப்ரு சொல்லாகும். இதன் இறுதியில் இடம் பெறக்கூடிய 'யா' என்பது ஒரு விளி வேற்றுமை சொல்லாகும். ஆச்சரியத்திற்கு பயன் படுத்தக்கூடியதாக சொல்லப்படுகிறது.


இவர்களின் கருத்துப்படி, "அல்லேலூ யா – Hallelu yah " என்ற வார்த்தையில் உள்ள "யா - Yah" என்பது ஒரு விளி வேற்றுமைச் சொல்லாகும் . இது இவர்களின் சொந்தக்கருத்து, இதற்கு எந்த ஆதாரமும் இல்லை..

ஆனால், உண்மையில், "யா" "Yah" என்பது ஒரு பெயர்ச் சொல். அதாவது, இது "யேகோவா – Yehweh" தேவனைக் குறிக்கிறது. எப்படி "அல்லா" என்பது ஒரு பெயரோ அது போல "யா" என்பது "யேகோவா" என்ற பெயர்ச் சொல்லின் சுருக்கமாகும்.

இவ்வார்த்தை ஒரு எபிரேய(ஹிப்ரு) மொழி வார்த்தை என்று தெரிந்த உங்களுக்கு, இதன் பொருள் என்ன என்று தெரியாமல் போனதென்ன? அல்லது பொருள் தெரிந்துக்கொண்டே "யார் நம்மை" கேள்வி கேட்பது என்று நினைத்தீர்களா?



தமிழ் முஸ்லீம் தளம் எழுதியது:

அல்லேலுயா! என்பதை 'யா அல்லேலு' என்று சொன்னாலும் அதன் பொருளானது மாறுவதில்லை.


உண்மை தான் இவ்வார்த்தைக்கு எபிரேய மொழியின் பொருள் "யோகோவாவை துதி - Praise Yahweh" என்று இருக்கும் வரை, இதை திருப்பிப்போட்டாலும் பொருள் மாறுவதில்லை. ஆனால், பிரச்சனை "யா" என்ற வார்த்தை ஒரு நபரை(Yahweh) குறிக்கும் போது, அதை ஒரு "விளி வேற்றுமை" என்று சொல்கிறீரே அது தான்.

தமிழ் முஸ்லீம் தளம் எழுதியது:

கிறிஸ்துவர்கள் 'யா அல்லேலு' என்கிறார்கள்
முஸ்லிம்கள் 'யா அல்லாஹ்' என்கிறார்கள்
அவ்வளவுதான் வித்தியாசம்!


உண்மையில் இந்த இரண்டு வரிகளை படிக்கும் பாமர கிறிஸ்தவன் "அடடா என்ன அருமையாக சொல்லியிருக்கிறார்கள் முஸ்லீம் சகோதரர்கள், இது அல்(ல)வா ஒற்றுமை என்பது" என்று மெய் மறந்துப்போவான்.

இவ்வளவு அருமையான ஒற்றுமை அல்லது சின்ன வேற்றுமையை இஸ்லாமிய நாடுகளில் வாழும் கிறிஸ்தவர்கள் மீது அந்நாட்டு அரசாங்கம், அல்லது மக்கள் காட்டுவார்களானால், நான் 1008 "சலாம்" சொல்வேன்.

சரி விஷயத்திற்கு வருகிறேன்:

"யா அல்லாஹ்" என்ற சொற்றொடரில்:

யா = விளி வேற்றுமை (உங்கள் கருத்துப்படி, எனக்கு அவ்வளவு இலக்கணம் தெரியாது)
அல்லாஹ் = பெயர்ச் சொல்

உண்மையில் "யா அல்லேலு" என்ற சொற்றொடரில்:

யா = பெயர்ச் சொல் (Yah, or Yahweh)
அல்லேலு = துதித்தல், Praise (வினைச்சொல்)


எவ்வளவு அழகாக "அல்லாஹ்" மற்றும் "அல்லேலு" என்ற வார்த்தைகளில் சில எழுத்துக்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக வருவதால், இவைகளை ஒன்றாக இணைத்து "இஸ்லாமிய முறையில்" தவறான ஒரு பொருளை கொடுத்து, மக்களை(உங்கள் தளத்தில் படிக்கும் வாசகர்களை, என்னோடும் சேர்த்து) முட்டாளாக்கியுள்ளீர்கள். யாருக்கு வரும் இந்த கலை .



4. சில கேள்விகள்:

உங்கள் வழிக்கே வருகிறேன். அல்லேலூயா என்றால், "யா அல்லாஹ்" என்பதற்கு சமம் அல்லது அதற்கு இணையானது(கடைசி சில எழுத்துக்கள் தான் வித்தியாசம்) என்று சொல்கிறீர்களே, அப்படி நீங்கள் சொல்வதை "நடைமுறையில்" கொண்டுவரமுடியுமா?


அதாவது,

1. உங்கள் மசூதிகளில், அல்லது நீங்கள் எங்கேயெல்லாம் "யா அல்லாஹ்" என்றுச் சொல்கிறீர்களோ, அங்கேயெல்லாம் "அல்லேலு யா" என்றோ அல்லது "யா அல்லேலூ" என்றோ சொல்லவேண்டும் என்று உங்கள் இஸ்லாமிய மக்களுக்கு கட்டளையிட முடியுமா?


2. "அல்லேலுயா – Praise to God " என்ற வார்த்தைக்கு இணையான அரபி வார்த்தை "அல்ஹம்துலில்லாஹ் - Alhamdulillah " என்று விகிபீடியா சொல்கிறது. முஸ்லீம்கள் பல செயல்களின் போதும், இன்ன பிற நேரங்களிலும் "அல் ஹம்து லில் லாஹ்" என்றுச் சொல்கிறார்கள், குறைந்த பட்சம் "அல் ஹம்து லில் லாஹ்" என்று சொல்வதற்கு பதிலாகவாவது, "அல்லேலூயா" என்று சொல்லமுடியுமா ?



Source http://en.wikipedia.org/wiki/Alhamdulillah

Quote:
Alhamdulillah (الحمد لله) is an Arabic phrase meaning "Praise to God" or "All praise belongs to God," similar to the Hebrew phrase Halelu Yah. In everyday speech it simply means "Thank God!" It is used by Muslims as well as Arabic-speaking Jews and Christians, but primarily by Muslims due to centrality of this specific phrase within the texts of the Quran and the speech/sayings of Muhammad.


3. அரபி பேசும் யூதர்களும், கிறிஸ்தவர்களும் "அல்(the) ஹம்து(Praise) லில்(Preposition for, to etc..) லாஹ்(God)" என்று சொல்கிறார்களாம், ஏனென்றால், அரபி பைபிளில் "தேவன்" என்ற இடத்திலே "அல்லாஹ்" என்று மொழிபெயர்த்து விட்டார்கள். எனவே, அரபி பேசும் கிறிஸ்தவர்கள் சொல்கிறார்கள். இதற்கு இணையாக இந்தியாவில் உள்ள முஸ்லீமகள் (குறைந்தது உங்கள் தளத்தை படிக்கும் முஸ்லீம்களாவது) "அல்லேலூயா" என்று சொல்லுங்கள் என்று உங்களால் உங்கள் தளத்தில் எழுதமுடியுமா?

5. கிறிஸ்தவர்களுக்கும் மற்றவர்களுக்கும் என் வேண்டுகோள்:

அன்பு சகோதரர், சகோதரிகளே. நீங்கள் உங்கள் மார்க்கம் சம்மந்தப்பட்ட கட்டுரைகளை ஒரு வேளை இஸ்லாமிய தளங்களில் படிக்க நேரிட்டால், (கிறிஸ்தவ தளங்களில் படிக்க நேரிட்டாலும் சரி) உடனே அதில் சொல்லப்பட்டது " உண்மை" என்று நம்பிவிடாதீர்கள். அந்த தளம் எவ்வளவு பெரிய இஸ்லாமிய அறிஞருடையதாக இருந்தாலும் சரி, முதலில் அதை படித்து, ஆதாரங்கள் உண்டா என்று சரி பார்த்து, உங்கள் மார்க்க அறிஞர்கள் அதற்கு என்ன பொருள் கூறுகிறார்கள் என்று தெரிந்த பிறகே எந்த முடிவிற்கும் வாருங்கள்.


முடிவுரை: இனியாவது மாற்றுமத கட்டுரைகளை எழுதும் போது, சிறிது எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். இந்துக்கள் வேதங்கள் பற்றியும் எழுதியுள்ளீர்கள், அதில் இன்னும் என்னன்ன குழப்படிகள் செய்துள்ளீர்களோ? இறைவனுக்குத் தான் வெளிச்சம் "யா அல்லேலு".

இஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்

முன் பக்கம் செல்ல

HOME PAGE

தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்

1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1

2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2

3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3

4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4

பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்

1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1

2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2

பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்

1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்

2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்