இஸ்லாம் அமைதி மார்கமா? இஸ்லாம் இனிய மார்கமா? இஸ்லாம் உண்மையான மார்கமா?

ஆன்சரிங் இஸ்லாம்

பல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்

சத்தியவான் தளம் செல்ல

Monday, August 25, 2008

குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள்

 

Scribal errors in the Qur'an

கீழ் கண்டவற்றில் (1) என்று உள்ள பத்தியில்(Column) இருக்கும் வார்த்தைகள் இப்போது உள்ள குர்‍ஆனில் உள்ளவைகள் ஆகும். அதே போல (2) என்று உள்ள பத்தியில் இருக்கும் வார்த்தைகள் உண்மையில் அவ்வார்த்தைகள் எப்படி இருக்க வேண்டும் என்றும் மற்றும் அரபியில் அதனை எப்படி சரிபடுத்தினார்கள் எனபதையும் குறிக்கும்.

(2)

(1)

(2)

(1)

மேலே குறிப்பிடப்பட்ட சில எழுத்து பிழைகள் பற்றி கீழ் கண்ட கட்டுரைகளில் விவாதிக்கப்படுகிறது.

மேலே உள்ள படத்தில் இடது பக்கத்தில் இருக்கும் வரிசை எண் 11ல் உள்ள குர்‍ஆன் வசனம் 21:88 பற்றிய விவரங்கள் அறிய படிக்கவும்: page 141, section 3 (a).

மேலே உள்ள படத்தில் இடது பக்கத்தில் இருக்கும் வரிசை எண் 15ல் உள்ள குர்‍ஆன் வசனம் 27:21 பற்றிய விவரங்கள் அறிய படிக்கவும்: page 96f, second last paragraph.

மேலே உள்ள படத்தில் இடது பக்கத்தில் இருக்கும் வரிசை எண் 17ல் உள்ள குர்‍ஆன் வசனம் 5:29 ஐ பற்றிய விவரங்கள் அறிய படிக்கவும்: page 18f and page 133, section (d).

மேலே உள்ள படத்தில் இடது பக்கத்தில் இருக்கும் வரிசை எண் 19ல் உள்ள குர்‍ஆன் வசனம் 51:47 பற்றிய விவரங்கள் அறிய படிக்கவும்: the middle of page 19 and the last half of page 125.

மேலே உள்ள வார்த்தைகளில் எழுத்துபிழைகள்(Scribal Errors) உள்ளது என்று இபின் கல்தன்(Ibm Khaldun – Classical Scholar) என்பவர் அங்கீகரித்துள்ளார் மற்றும் இவைகள் பிரச்சனைகள்(Problems) என்று ஹமிதுல்லா(Hamidullah – Modern Scholar) என்ற அறிஞரும் அங்கீகரித்துள்ளார்.
 

ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!




ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?!
 

Quran or Qurans?!



இக்கட்டுரையை அரபியில் படிக்க: النسخة العربية
 
 
இந்த கட்டுரைக்கான விவரங்கள் கீழ் கண்ட புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது:


The reading ways of Quran dictionary: (moa'agim alqera'at alqura'nia):


இது ஒரு அரபி மொழியில் எழுதப்பட்ட புத்தகம் மற்றும் இதனை இஸ்லாமிய அறிஞர்கள் எழுதினார்கள். குவைத் பல்கலைக்கழகம்(Kuwait University) இதனை 8 பாகங்களாக வெளியிட்டது. இதன் முதல் பதிப்பு 1982ம் ஆண்டு (அரபியில்) வெளியிடப்பட்டது, இதன் ஆசிரியர்கள்:

 
 
டாக்டர். அப்துல் அல் சலாம் மக்ரெம் (Dr. Abdal'al Salem Makrem)
டாக்டர். அஹமத் மொக்தார் ஒமர் (Dr. Ahmed Mokhtar Omar)

இவர்கள் இருவரும் குவைத் பல்கலைக் கழகத்தில் அரபி மொழி பேராசிரியர்களாக இருக்கிறார்கள்.
புத்தக பதிப்பாளர்: ஜத் அல்சலாசல்-குவைத் (Zat Alsalasel – Kuwait)
 
முன்னுரை:

உத்மான் இபின் அஃபான் காலம் வரைக்கும் பல குர்‍ஆன்கள் [massahif] எழுதப்பட்டது. இவர் இதர குர்‍ஆன்களை எரித்துவிட்டார் மற்றும் ஒரு குர்‍ஆனை ஆதிகாரபூர்வமான பிரதி என்று வைத்துக்கொண்டார்.

உதாரணத்திற்கு, கீழ்கண்ட குர்‍ஆன் வகைகள்:

 
 
1. அலி பின் அபி தலிப் என்பவரின் படி குர்‍ஆன் (Quran according to Ali bin abi talib)

2. இபின் மஸூத் என்பவரின் படி குர்‍ஆன் (According to Ibn Mass'oud)

3. அபி பின் கப் என்பவரின் படி குர்‍ஆன் (According to Aobi bin ka'ab)

 
 
இதன் பொருள் இவர்கள் குர்‍ஆனை எழுதினார்கள் என்று பொருளில்லை; இதன் பொருள் அவர்கள் குர்‍ஆனை எப்படி படிக்கவேண்டும் என்ற விவரங்களை கொண்டு இருந்தனர்.

குர்‍ஆனை 7 வகையில் படிக்கலாம்(ஏழு எழுத்துக்கள் கொண்ட குர்‍ஆன் வசனத்தின் படி [alssib' ailmithani]) + 3 இதர வழிகள் (mokimila) + 4 கூடுதலான வழிகள், இதை இயல்புக்கு மாறான முறை[shaza] என்பார்கள்.

ஏழு வகையாக படிப்பவர்கள் மற்றும் அவர்களின் மாணவர்கள்:
1. நஃபா: கலன் + வர்ஷ் (Nafaa': Qalon + Warsh)
2. இபின் கதிர்: அல்பிஜி + கோன்பில் (Ibn Kathir: Albizi + Qonbil)
3. அபி அம்ரொ: அல்தோரி + அல்சோசி (Abi amro: Aldori + Alsosi)
4. இபின் அமிர்: இபின் அபன் + இபின் த்வான் (Ibn Amer: Ibn Aban + Ibn Thkwan)
5. அச்செம்: அபோ பைகர் + ஹஃபஸ் (Assemm: Abo Biker + Hafas)
6. அல் கெஸ்ஸய்: அலித் + அல்தோரி (Alkessa'i: Allith + Aldori)
7. ஹம்ஜா: அல்பிஜாஜ் + அபோ ஈஸா அல்சிர்பி (Hamza: Albizaz + Abo Isa Alsirfi)
 
 
 
மூன்று வகையாக படிப்பவர்கள் மற்றும் அவர்களின் மாணவர்கள்:
 
1. அபோ ஜிபார்: இபின் வர்தன் + இபின் ஜ்மஜ் (Abo Ji'faar: Ibn Wardan + Ibn Jmaz)
2. யாக்கோப்: ரோயிஸ் + ரோஹ் (Yaccob: Rois + Roh)
3. கலிஃப்: அலம்ரோஜி + இத்ரஸ் (Khalif: Almrozi + Iddres)
 
 
 
நான்கு வகையாக படிப்பவர்கள் மற்றும் அவர்களின் மாணவர்கள்:
 
 
1. இபின் மொஹிச‌ம்: அல்பிஜி + இபின் ஷின்போஜ் (Ibn Mohisn: Albizi + Ibn Shinboz)

2. அல்யாஜிதி: சொலைமான் இபின் அல்ஹ‌க‌ம் + அஹ்ம‌த் பின் ஃப‌ரா (Alyazidi: Soliman Ibn Alhakam + Ahmed Bin Farah)

3. அல்ஹ‌ஸ‌ன் அல்ப‌ஸ்ஸ‌ரி: அபோ ந‌யிம் அல்ப‌ல்கி + அல்தொரி (Alhassan Albassry: Abo Na'im Albalkhi + Aldori)

4. அலாம‌ஷ்: அமோடோடி + அல்ஷின்ப்ஜி அல்ஷ‌ட்டாய் (Ala'mash: Amotodi + Alshinbzi Alshttaoi)
 
 
 
வித்தியாசம் இப்படியாக உள்ளது:
 
 
1. எழுத்துக்களில் வித்தியாசம் (spelling)

2. தொனியில் வித்தியாசம் (tone - harkat)

3. அரபிக் இலக்கணத்தில் வித்தியாசம் (A'rab - Arabic grammar)

4. ஒரே பொருள் வரும் வெவ்வேறு வார்த்தைகளை பயன்படுத்துதல் (உதாரணத்திற்கு, சண்டை, கொல்) - using a similar word but different (like FIGHT, KILL)

5. வார்த்தைகளின் இடங்களை மாற்றுதல் (changing place of words)

6. வார்த்தைக‌ளை சேர்த்தல் அல்லது எடுத்துவிடுத‌ல்(adding or removing words)
 
 
நான் இங்கு என்ன சொல்ல வருகிறேன் என்பது மிகவும் தெளிவாக உள்ளது; அதாவது ஒரே ஒரு குர்‍ஆன் உள்ளது என்று ஒருவரும் சொல்லமுடியாது.

 
முஸ்லீம்களின் கவனத்திற்கு நான் கொண்டுவர விரும்பும் ஒரு விஷயம் என்னவென்றால், "filohen mahfouz" or "in saved plates" என்றுச் சொல்லக்கூடிய "தாய் குர்‍ஆன்" என்று ஒன்று இல்லை என்பது தான் உண்மை.

 
"தாய் குர்‍ஆன் ஒன்று உண்டு" என்று சொன்னால், ஏன் இப்படி பல வித்தியாசங்கள் அவைகளில் உள்ளன‌? அதிகாரபூர்வமான இயேசுவின் நற்செய்தி நூல்கள் நான்கு இருப்பதினால், முஸ்லீம்கள் அவைகளை ஏற்றுக்கொள்வதில்லை. அவர்களுக்கு ஒரே ஒரு நற்செய்தி நூல் வேண்டும் என்றுச் சொல்கிறார்கள்.

 
முஸ்லீம்கள் "மத்தேயு/மாற்கு/லூக்கா என்பவரின் படி..." என்று எழுதப்பட்டுள்ளதை அங்கீகரிக்கமாட்டார்கள், ஆனால், தங்களிடம் அப்படி உள்ளதை அங்கீகரிக்கிறார்கள். இன்று நம்மிடம் உள்ள குர்‍ஆன் அனைத்தும் ஒபி இபின் கனப் என்பவரின் படி உள்ள குர்‍ஆன் தான் (They not accept the word "according to ..." but they have it. Today's Quran which all we use is according to Obi IBM Kanab.)
 
 
நான் என்ன சொல்லவருகிறேன்?

 
சூரா மர்யம் என்ற குர்‍ஆன் சூராவிலிருந்து மூன்று எடுத்துக் காட்டுக்களைக் காணலாம் வாருங்கள்.
 
 
1. எடுத்துக்காட்டு ஒன்று: சூரா மர்யம் 19:19
[English translation based on the one done by Rashad Khalifa]

 
* ஹஃப்ச் இவ்விதமாக படிக்கிறார்:
 
He said, "I am the messenger of your Lord, to GRANT (who does grant?: the angel) you a pure son."

இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: li'ahiba
 
 
* நஃபா, அபோம்ரோ, கலன், வர்ஷ்... படிக்கிறார்கள்:
 
 
He said, "I am the messenger of your Lord, to GRANT (who does grant?: Lord) you a pure son."

இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: liyihiba
 
 
* அல்பஹர் அல்மொஹித், "Alkishaf" a book for Alzimikhshiry:
 
 
He said, "I am the messenger of your Lord, HE ORDERED ME TO GRANT YOU a pure son."

இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: amarani 'n 'hiba
 
 
2. எடுத்துக்காட்டு இரண்டு: சூரா மர்யம் 19:25
[English translation based on the one done by Yusuf Ali.]

 

* ஹஃப் வார்த்தைகளை இப்படியாக படிக்கிறார்:

 

And shake towards thyself the trunk of the palm-tree: IT WILL LET FALL fresh ripe dates upon thee

இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: toosaqit

 

* ஹம்ஜா, அல்மிஷ்:

 

And shake towards thyself the trunk of the palm-tree: FALL fresh ripe dates upon thee

இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: tasaaqat

 

* அஸ்ஸெம், அல்கிஸய், அல்மிஷ்:

 

And shake towards thyself the trunk of the palm-tree: IT WILL FALL fresh ripe dates upon thee.

இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: yassaqat

 

* அபோ அம்ரொ, அஸ்ஸெம், நஃபி:

 

And shake towards thyself the trunk of the palm-tree: WILL FALL fresh ripe dates upon thee

இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: tassaqat

 

* அபோ நஹிக், அபோ ஹை:

 

And shake towards thyself the trunk of the palm-tree: IT FALL fresh ripe dates upon thee

இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: tosqt

 

* அலேரப் a book for Alnahas:

 

And shake towards thyself the trunk of the palm-tree: WE WILL FALL fresh ripe dates upon thee.

இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: nosaqit

 

* மஸ்ரோக்

 

And shake towards thyself the trunk of the palm-tree: IT WILL FALL [someone unknown will let fall] fresh ripe dates upon thee.

இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: yosaqit

 

* அபோ ஹையா:

 

And shake towards thyself the trunk of the palm-tree: IT FALL fresh ripe dates upon thee

இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: tasqwt

 

* அபோ ஹையா

 

And shake towards thyself the trunk of the palm-tree: FALL fresh ripe dates upon thee

இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: yasqwt

 

* அபோ ஹையா

 

And shake towards thyself the trunk of the palm-tree: IT WILL FALL one by one] fresh ripe dates upon thee

இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: tatasaqat

 

* அபோ அல்ஸ்மல்:

 

And shake towards thyself the trunk of the palm-tree: FALLING fresh ripe dates upon thee

இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: yosqt

 

3. எடுத்துக்காட்டு மூன்று: சூரா மர்யம்: 19:26
[English translation based on the one done by Yusuf Ali.]

 

* ஜித் பின் அலி:

 

So eat and drink and cool (thine) eye. And if thou dost see any man, say, 'I have vowed a FAST to (Allah) Most Gracious, and this day will I enter into no talk with any human being'

இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: syaman

 

* அபெத் அல்லா பின் மஸூத், அனிஸ் பின் மலேக்:

 

So eat and drink and cool (thine) eye. And if thou dost see any man, say, "I have vowed a SILENCE to (Allah) Most Gracious, and this day will I enter into not talk with any human being."

இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: samten

 

* அபோ பின் கப், அனிஸ் பின் மலேக்:

 

So eat and drink and cool (thine) eye. And if thou dost see any man, say, "I have vowed a SILENT FAST to (Allah) Most Gracious, and this day will I enter into not talk with any human being."

இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: swmen samten

 

* அனிஸ் பின் மலேக்:

 

So eat and drink and cool (thine) eye. And if thou dost see any man, say, "I have vowed a FAST AND SILENCE to (Allah) Most Gracious, and this day will I enter into not talk with any human being."

இதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: swmen wa samten

 

எனக்கு மெயில் அனுப்பி என்னோடு தொடர்பு கொள்ள தயங்க வேண்டாம்: khaled@exmuslim.com

 

ஆங்கில‌ மூலம்: http://www.answering-islam.org/Quran/Text/var1.html

 


குர்‍ஆன் வசனங்கள் பற்றிய கட்டுரைகள்
முகப்புப் பக்கம் ஆன்சரிங் இஸ்லாம் தமிழ்

தமிழ் மூலம்: http://www.answering-islam.org/tamil/authors/khaled/ver1.html


மேலும் அறிய படிக்கவும்: குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

ஆசிரியர் கேல்வி அவர்களின் கட்டுரைகள்:


 

Source: http://www.geocities.com/isa_koran/tamilpages/Authors/khaled/ver1.html

Wednesday, August 20, 2008

இஸ்லாமிய நண்பருக்கு விவாதம் செய்ய உதவியாக உமரின் Isa Koran site Map

Site Map of Isa Koran site:

நம் அருமை நண்பர் முஜாஹித் அவர்களின் வாதத்திற்கு உதவியாக இருக்கும் படி, என் ஈஸா குர்‍ஆன் தளத்தின் முழு தொடுப்புக்களை தலைப்பு வாரியாக தருகிறேன்.

இந்த‌ த‌லைப்பு வாரியாக‌த்தான் என் த‌ள‌த்தையும் அமைத்துள்ளேன். எந்த இடத்தில் என்ன கட்டுரை இருக்கிறது என்று தேடுவதற்கு சுலபமாக இது இருக்கும் என்று நம்புகிறேன்.

இதுவரை நான் எழுதிய/மொழிபெயர்ப்பிய கட்டுரைகளின் பட்டியல். ஒரு சில கட்டுரைகள் நம் தள நண்பர்கள் மொழிபெயர்த்துக் கொடுத்துள்ளார்கள்.

Dr. ஜாகிர் நாயக் அவர்களுக்கு பதில்


1. Dr. ஜாகிர் நாயக் - முகமதுவின் பேரனை கொன்றவனுக்கு அல்லா அருள் புரிவானாக‌ (கர்பலா போர் - ஜாகிர் நாயக் - முஸ்லீம்களின் கண்டனம்)
2. Dr. ஜாகிர் நாயக் அவர்களுக்கு கேள்வி: யார் தேசத் துரோகி?
3. டாக்டர் ஜாகிர் நாயக் மற்றும் யோவான் 1:1 (டாக்டர் ஜாகீர் நாயக் அவர்களும் கிரேக்க மொழியும்Smile
4. ஆதரவிற்கு ஏமாற்றுதல் ஒரு ஆயுதம்: டாக்டர் ஜாகிர் நாயக்கின் சாயம் வெளுத்தது

Source: http://www.geocities.com/isa_koran/tamilpages/Rebuttals/zakirnaik/RebutNaikindex.html

பி.ஜே அவர்களுக்கு பதில்

1. Answering PJ: இயேசு நியமித்த நேர்த்திமிகு தலைவர் "பேதுரு"- Part 2
2. Answering PJ: "பின்னாகப் போ சாத்தானே" என்றார் - Part 1
3. Answering - PJ: இயேசு நறுமணம் பூசிக்கொள்ள ஆசைப்படுவாரோ?
4. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்ஆன் பதில்
5. பி.ஜைனுல் ஆபிதீனும், திரித்துவமும் & பவுலும்: பதில்

Source: http://www.geocities.com/isa_koran/tamilpages/Rebuttals/pjonline/PJRebutIndex.html



தமிழ் முஸ்லீம் தளத்திற்கு பதில்

1. இயேசுவுக்கு நேர்ந்ததென்ன கட்டுரை- தொடர் - 1 எங்கள் மறுப்பு கட்டுரை(தொடர் - 1)
2. இயேசுவுக்கு நேர்ந்ததென்ன கட்டுரை- தொடர் - 2 எங்கள் மறுப்பு கட்டுரை(தொடர் - 2 )
3. இயேசுவுக்கு நேர்ந்ததென்ன கட்டுரை- தொடர் - 3 எங்கள் மறுப்பு கட்டுரை(தொடர் - 3 )
4. இயேசுவுக்கு நேர்ந்ததென்ன கட்டுரை- தொடர் - 4 எங்கள் மறுப்பு கட்டுரை(தொடர் - 4 )
5. இயேசுவுக்கு நேர்ந்ததென்ன கட்டுரை- தொடர் - 5 எங்கள் மறுப்பு கட்டுரை(தொடர் - 5 )
6. இயேசுவுக்கு நேர்ந்ததென்ன கட்டுரை- தொடர் - 6 எங்கள் மறுப்பு கட்டுரை(தொடர் - 6 ) - New
7. ஜி.நிஜாமுத்தீன் அவர்கள் கட்டுரையும் எங்கள் பதிலும் - New
8. பைபிள் புகழும் இஸ்மவேல் - இஸ்மவேலை எதிர்க்கும் மதகுருக்கள் எங்கள் மறுப்பு கட்டுரை : பைபிள் புகழும் இஸ்மவேல்
9. "இஸ்மவேல் முகமது பைபிள் கட்டுரைக்கு மறுப்பு" Updated on 14-08-2007 New Article
10. பாரான் மலையின் அக்னி பிரமாணம் - இது தான் இஸ்லாம் எங்கள் பதில்
11. சகோ. மைகோவை அவர்களின் பதில்
12. ஈஸா குர்-ஆன் மறுப்பு (அ) பதில் Part 4/4
13. பைபிளின் "பாரான் வனாந்திரம்", அரேபியாவின் "மக்கா" அல்ல - Part 1/4
14. உபாகமம் 33:1-2 வசனங்கள் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல? Part - 2/4
15. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல Part - 3/4
16. கிறித்துவம் கேள்வி பதில் எங்கள் மறுப்பு - 1 : Fake e-mail Id க்கள் பயன்படுத்திய இது தா(ன்)னா இஸ்லாம் தளம்
17. கிறித்துவம் கேள்வி பதில்-2 கிறித்துவம் கேள்வி பதில்-2 : எங்கள் மறுப்பு - 2 Fake Gmail e-mail ஆதாரமாக கொடுத்த இது தான் இஸ்லாம் தளம் விவரம்
18. இது தான் இஸ்லாம் கேள்வி: யூதா, தாமார் நிகழ்ச்சியும், பைபிளும் என் பதில்: யூதா மற்றும் முகமது என்னும் மாமனார்கள்.
19. ஏன் கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்கள் போல கேள்வி‍ பதில் நிகழ்ச்சியை நடத்துவதில்லை? "
20. தமிழ் முஸ்லீம் தளமும், " அல்லேலூயா " வார்த்தையும்

Source: http://www.geocities.com/isa_koran/tamilpages/Rebuttals/Rebuttalsindex.html

இஸ்லாம் கல்வி தளத்திற்கு பதில்

1.அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
2.குர்‍ஆனில் கிறிஸ்துமஸ்: பாகம் 1 - இஸ்லாம் கல்விக்கு பதில்: பைபிளில் இல்லாத குழந்தை அற்புதம் முகமது "காப்பி" அடித்தது தான்
3.Answering Islamkalvi : இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
4.Answering Islamkalvi : காபாவிற்குள் கள்ள(அநியாய) வியாபாரம் செய்ய அனுமதியுண்டா?
5.இஸ்லாம் கல்விக்கு பதில்: இயேசு த‌ன் தாயை (மரியாளை) அவமதித்தாரா?
6.எம். எம் அக்பருக்கு (இஸ்லாம் கல்விக்கு) பதில்: குர்ஆனில் குலறுபடிகள்
7.இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில் (குப்பை சடங்குகளை குப்பையில் போடச்சொன்ன இயேசு)
8.இஸ்லாம் கல்வி தள கட்டுரையும் 1 தீமோத்தேயு 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்

Source: http://www.geocities.com/isa_koran/tamilpages/Rebuttals/islamkalvi/islamkalvi.html

நேசமுடன் தளத்திற்கு பதில்

1. இஸ்லாத்திற்கு எதிராக கிறிஸ்தவ அமைப்புகள் கட்டுரை இக்கட்டுரையில் சொல்லப்பட்ட விவரங்கள் உண்மையா? சந்தேகத்தை தீர்த்துவிடுங்கள், பிளீஸ்
2. கிறிஸ்தவ பாதிரியார்கள் ஹஜ் செய்தார்கள்: கிறிஸ்தவ பாதிரியார்கள் ஹஜ் செய்தார்கள்: உண்மையா பொய்யா?

Source: http://www.geocities.com/isa_koran/tamilpages/Rebuttals/Rebuttalsindex.html

குர்-ஆன்

கிறிஸ்துவின் பிறப்பு பற்றி குர்‍ஆன் சொல்லும் விவரங்களில் உள்ள முரண்பாடுகள், பிழைகள் பற்றிய கட்டுரைகள்


1. குர்‍ஆனின் சரித்திர தவறு: "எஸ்றா அல்லாவின் குமாரனா?" யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
2. சாத்தானின் வசனங்களும் குர்-ஆனும்
3. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா? - ஆசிரியர்: Khaled

4. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ்: பாகம் 1 - இஸ்லாம் கல்விக்கு பதில்: பைபிளில் இல்லாத குழந்தை அற்புதம் முகமது "காப்பி" அடித்தது தான்
5. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
6. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2க்கு இஸ்லாம் கல்வியின் மறுப்பு மற்றும் ஈசா குர்‍ஆனின் பதில்


Source: http://www.geocities.com/isa_koran/tamilpages/Koran/tkoran.html

முகமது ( Muhammad )

1. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்? (How Muhammad's Contemporaries Really Viewed Him – An Analysis of the witness of the Quran concerning The opinions of the Disbelievers regarding the prophet of Islam)
2. உபாகமத்தின் உண்மை: முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள் ( THE DEUTERONOMY DEDUCTIONS: Two Short, Sound, Simple Proofs that Muhammad Was a False Prophet By David Wood )
3. யோவான் 14:16 வேறொரு தேற்றரவாளன் என்று இயேசு குறிப்பிடுவது முகமதுவையா?
4. உபாகமம் 33:1-2 வசனங்கள் குறிப்பிடுவது "முகமதுவை" அல்ல
5. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது முகமதுவை அல்ல
6. முகமது மற்றும் யோவான் 1:19
7. ஓமன் நாட்டு அரசருக்கு முகமது அனுப்பிய கடிதம்.
8. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)

Source: http://www.geocities.com/isa_koran/tamilpages/Mohammad/mohammad.html

பெண்கள்

1. கடிதம்-1 ( குர்-ஆன் 2:282)

Source: http://www.geocities.com/isa_koran/tamilpages/Women/womenindex.html


கிறிஸ்தவம் - Christianity


1. அடிப்படை கிறிஸ்தவ ந‌ம்பிக்கை (Outline of the Basic Christian Beliefs)
2. கிறிஸ்தவம் ஏன் மேற்கத்திய மார்க்கமாக உள்ளது? (அமெரிக்கர்=கிறிஸ்தவர்?)
3. நற்பண்பு உங்களில் வாழ்கிறதா?
4. கிறிஸ்தவர்கள் எதை நம்புகிறார்கள்?

Source: http://www.geocities.com/isa_koran/tamilpages/Christianity/index.html


பைபிள்


பைபிள் சம்மந்தப்பட்ட கேள்விகளுக்கு பதில்கள்:
1. BIBLE Q/A: பைபிள் முன்னறிவிக்கப்பட்ட எலியா... யோவான் தான் (ஏகத்துவத்திற்கு பதில்)

Source: http://www.geocities.com/isa_koran/tamilpages/Bible/index.html

இயேசுக் கிறிஸ்து

1) குர்-ஆன் படி யார் அதிக கனத்திற்குரியவர்: இயேசுவா அல்லது முகமதுவா?
2) இயேசு ஒரு இஸ்லாமிய தீர்க்கதரிசி?

Source: http://www.geocities.com/isa_koran/tamilpages/Jesus/tJesus.html

ஆசிரியர்கள்

Charles Koenig
David Wood
Khaled
வெங்கடேசன்
Bishop T Nasir
Samuel Green (சாமுவேல் கிரீன்)
Sam Shamoun(சாம் ஷமான்)

Source: http://www.geocities.com/isa_koran/tamilpages/Authors/Authors.htm


இஸ்லாமியர்கள் கேள்விகளும் பதில்களும்

1. முஸ்லீம்கள் இயேசுவின் பெயரை, முகமதுவின் பெயரை மற்ற தீர்க்கதரிசிகளின் பெயரைச் சொல்லும்போது, "அவர் மீது சாந்தி உண்டாகட்டும்" என்றுச் சொல்கிறார்கள் , ஆனால் ஏன் கிறிஸ்தவர்கள் இப்படிச் சொல்லாமல் தீர்க்கதரிசிகளை அவமானப்படுத்துகின்றார்கள்?

Source: http://www.geocities.com/isa_koran/tamilpages/QandA/QandAindex.htm


கட்டுரைகள்

1.நரி(ஆட்டு)த்தோல் போர்த்திய ஆடு(நரி)
2.சௌதி மன்னர் சவ அடக்கம் கண்டு, இத்தாலி பாதிரியார் இஸ்லாமை தழுவியது உண்மையா? பொய்யா? தயவு செய்து சந்தேகம் தீர்த்து வையுங்கள், முஸ்லீம்களே!!!
3. 19 காரணங்கள்: ஏன் கௌரவமான மனிதர்களில் பலர் முஸ்லீம்களாக மாற விரும்புவதில்லை (19 Reasons why many Honorable People Don't Want to Be Muslims)
4. உபாகமத்தின் உண்மை: முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள் (THE DEUTERONOMY DEDUCTIONS: Two Short, Sound, Simple Proofs that Muhammad Was a False Prophet By David Wood )
5. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல் (திய வான் கோவின் கொலை)MUHAMMAD'S ASSASSINS AND INTIMIDATION IN ISLAM (The Murder of Theo Van Gogh)
6. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும் - ஆசிரியர்: சாமுவேல் கிரீன் (MUHAMMAD'S USE OF TORTURE - Samuel Green)
7. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி? - ஆசிரியர்: சாமுவேல் கிரீன் (Samuel Green)
8. 138 இஸ்லாமிய அறிஞர்களின் மிகப் பெரிய மோசடி
9. நாடகம்: முஸ்லீம் அரச சபையில் இயேசுவின் சீடர்கள் பேதுரு, யோவான், லூக்கா மற்றும் பவுல் - பாகம் 1
10. ஏன் கிப்லாவை எருசலேமிலிருந்து மக்காவிற்கு முகமது மாற்றினார். இதன் பின்னனி என்ன?
11. பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் யூசுப் யுஹானா ஏன் இஸ்லாமை தழுவினார்?
12. முஸ்லீம் VS முஸ்லீம் (முஸ்லீம்களை கொன்று குவித்துக்கொண்டு இருக்கும் முஸ்லீமகள்)

Source: http://www.geocities.com/isa_koran/tamilpages/Articles/Articlesmain.html

Site: http://www.geocities.com/isa_koran

Notes: மற்றபடி, நான் தமிழ் கிறிஸ்டியன்ஸ் தள சகோதர சகோதரிகளுக்கென்று தனியாக பல இஸ்லாமிய செய்திகள் அடங்கிய கட்டுரைகளையும், சிறு கதையை எழுதியுள்ளேன், மற்றும் சில தளங்களிலிருந்து ஒரு சில பொதுவான கட்டுரைகளை மொழிபெயர்த்துள்ளேன், உதாரணத்திற்கு, முஸ்லீமல்லாதவர்களோடு எப்படி வாதம் புரியவேண்டும் என்ற கட்டுரை, இத்தளத்தில் காணலாம். இது என் ஈஸா குர்‍ஆன் த‌ள‌த்தில் ப‌திப்ப‌தில்லை. அதாவது இஸ்லாமிய நாடுகளின் செய்திகள் போன்றவற்றில் , குர்‍ஆன், ஹதீஸ் ஆதாரங்கள் இருப்பதில்லை, எனவே, அவைகளை ஈஸா குர்‍ஆன் தளத்தில் பதிப்பதில்லை.
 

Tuesday, August 19, 2008

BIBLE Q/A: பைபிள் முன்னறிவிக்கப்பட்ட எலியா... யோவான் தான் (ஏகத்துவத்திற்கு பதில்)




BIBLE Q/A: பைபிள் முன்னறிவிக்கப்பட்ட எலியா... யோவான் தான்


ஏகத்துவத்திற்கு பதில்
 
முன்னுரை: குர்‍ஆனில் அல்லா செய்த ஒரு சரித்திர தவறை சுட்டிக்காட்டி ஒரு கட்டுரையை வெளியிட்டு இருந்தேன், அதற்கு இஸ்லாம் கல்வி தளம் இஸ்லாமிக் அவார்னஸ் என்ற தளத்தின் கட்டுரையை மறுப்பு என்றுச் சொல்லி நான் கொடுத்த தொடுப்பை மேலோட்டமாக மொழிபெயர்த்து வெளியிட்டு இருந்தது, அதற்கு ஆன்சரிங் இஸ்லாம் தளம் கொடுத்த மறுப்பையே நான் என் பதிலாக முன்வைத்தேன்.


 
படிக்கவும்:

குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 : குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)

இஸ்லாம் கல்விக்கு பதில்: குர்ஆனின் யஹ்யாவும் பைபிளின் யோவானும்


 
இதன் பிறகு ஏகத்துவம் தளம் ஒரு கட்டுரையை வெளியிட்டு இருந்தது, அதாவது, பைபிளில் முன்னறிவிக்கப்பட்ட எலியா யார்? (http://egathuvam.blogspot.com/2008/08/blog-post_15.html) என்ற கேள்வியோடு பைபிளில் முரண்பாடு உள்ளது என்று குறிப்பிட்டு இருந்தது. அவர்கள் முன்வைக்கும் வாதம் இது தான், "யோவான் ஸ்நானகன் தான் எலியா என்று இயேசு அறிவிக்கிறார், ஆனால், அந்த யோவான் ஸ்நானகன் நான் எலியா இல்லை என்றுச் சொல்கிறார், இது முரண்பாடு இல்லையா?" என்று கேட்டு இருந்தார்கள். இந்த கேள்விக்கு பதிலாக இக்கட்டுரை வெளியிடப்படுகிறது. ஆன்சரிங் இஸ்லாம் தளத்திற்கு ஒருவர் தன்னை ஒரு முன்னாள் கிறிஸ்தவர் என்றுச் சொல்லி, இந்த கேள்வியை கேட்டு இருந்தார், அவருக்கு பதிலாக ஆன்சரிங் இஸ்லாம் கொடுத்த பதிலை இங்கு தருகிறேன்.
 

 


 
ஆன்சரிங் இஸ்லாமுக்கு வந்த மெயில்:
 

த‌லைப்பு(Subject): விளையாட்டு முடிந்துவிட்ட‌து கிறிஸ்த‌வ‌மே!!!


ஹாய்,


நான் ஒரு முன்னாள் கிறிஸ்த‌வ‌ன், ம‌ற்றும் இந்த விவரங்களினால் தான் நான் கிறிஸ்த‌வ‌னாக‌ இல்லை.


மத்தேயு 17:12-13 ஆனாலும், எலியா வந்தாயிற்று என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; அவனை அறியாமல் தங்கள் இஷ்டப்படி அவனுக்குச் செய்தார்கள்; இவ்விதமாய் மனுஷகுமாரனும் அவர்களால் பாடுபடுவார் என்றார். அவர் யோவான் ஸ்நானனைக் குறித்துத் தங்களுக்குச் சொன்னார் என்று சீஷர்கள் அப்பொழுது அறிந்துகொண்டார்கள்.


யோவான் 1:19-21 எருசலேமிலிருந்து யூதர்கள் ஆசாரியரையும் லேவியரையும் யோவானிடத்தில் அனுப்பி: நீர் யார் என்று கேட்டபொழுது, அவன் மறுதலியாமல் அறிக்கையிட்டதுமன்றி, நான் கிறிஸ்து அல்ல என்றும் அறிக்கையிட்டான். அப்பொழுது அவர்கள்: பின்னை யார்? நீர் எலியாவா என்று கேட்டார்கள். அதற்கு: நான் அவன் அல்ல என்றான். நீர் தீர்க்கதரிசியானவரா என்று கேட்டார்கள், அதற்கும்: அல்ல என்றான்.


எலியா ஏற்கனவே வந்துவிட்டார் என்று இயேசு சொன்னார், மற்றும் யோவான் ஸ்நானகன் தான் எலியா என்று இயேசு சொன்னார்.


ஆனால், யோவான் தான் எலியா இல்லை என்றுச் சொல்லி, இயேசு சொன்னதற்கு முரண்பாடாகச் சொல்லியுள்ளார். இயேசு மற்றும் யோவான் இவர்களில் ஒருவர் உண்மையை சொல்லவில்லை. இதில் எது உண்மை என்று எனக்கு ஆச்சரியமாக உள்ளது.
 
எங்கள் பதில்,

ஹல்லோ ----------,

உங்கள் மெயிலுக்காக நன்றி. நீங்கள் கொடுத்த தலைப்பு(Subject) மிகவும் உற்சாகத்தை கொடுக்கும் தலைப்பு என்று நான் நிச்சயமாகச் சொல்வேன்.

நீங்கள் ஒரு கிறிஸ்தவராக இருந்தவர் என்றுச் சொல்லியுள்ளீர்கள். நீங்கள் முதலாவது எப்படி கிறிஸ்தவராக மாறினீர்கள் என்று நான் கேட்டால், ஒன்றும் நினைத்துக்கொள்ள மாட்டீர்களே? நான் திறந்த மனதுடன் உங்கள் சாட்சியை கேட்க விரும்புகிறேன்.

உங்கள் மெயிலின் நோக்கத்தை அறிவதற்காக: நீங்கள் மிகவும் முக்கியமான முரண்பாட்டை பைபிளில் கண்டுபிடித்து விட்டதாக நினைத்துக்கொண்டு, இதன் காரணமாக எல்லா கிறிஸ்தவர்களும் கிறிஸ்தவத்தை விட்டுவெளியேற வேண்டும் என்று எண்ணிக்கொண்டு இருக்கிறீர்களா? உண்மையில் உங்கள் நோக்கம் அதுவல்ல என்று தெரியும்?

உங்கள் மெயிலின் நோக்கம் எதுவாக இருந்தாலும் இருக்கட்டும், உங்கள் தவறான புரிந்துக் கொள்ளுதல் பற்றி உங்களுக்கு தெளிவை உண்டாக்க எனக்கு அனுமதி அளியுங்கள். நீங்கள் குறிப்பிட்ட இரண்டு வசன மேற்கோள்கள் கீழே தரப்பட்டுள்ளது.
 
 
மத்தேயு 17:12-13 ஆனாலும், எலியா வந்தாயிற்று என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; அவனை அறியாமல் தங்கள் இஷ்டப்படி அவனுக்குச் செய்தார்கள்; இவ்விதமாய் மனுஷகுமாரனும் அவர்களால் பாடுபடுவார் என்றார். அவர் யோவான் ஸ்நானனைக் குறித்துத் தங்களுக்குச் சொன்னார் என்று சீஷர்கள் அப்பொழுது அறிந்துகொண்டார்கள்.

யோவான் 1:19-23 எருசலேமிலிருந்து யூதர்கள் ஆசாரியரையும் லேவியரையும் யோவானிடத்தில் அனுப்பி: நீர் யார் என்று கேட்டபொழுது, அவன் மறுதலியாமல் அறிக்கையிட்டதுமன்றி, நான் கிறிஸ்து அல்ல என்றும் அறிக்கையிட்டான். அப்பொழுது அவர்கள்: பின்னை யார்? நீர் எலியாவா என்று கேட்டார்கள். அதற்கு: நான் அவன் அல்ல என்றான். நீர் தீர்க்கதரிசியானவரா என்று கேட்டார்கள், அதற்கும்: அல்ல என்றான். அவர்கள் பின்னும் அவனை நோக்கி: நீர் யார்? எங்களை அனுப்பினவர்களுக்கு நாங்கள் உத்தரவு சொல்லும்படிக்கு, உம்மைக் குறித்து என்ன சொல்லுகிறீர் என்று கேட்டார்கள். அதற்கு அவன்: கர்த்தருக்கு வழியைச் செவ்வைபண்ணுங்கள் என்று ஏசாயா தீர்க்கதரிசி சொன்னபடியே, நான் வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தமாயிருக்கிறேன் என்றான்.
 
இயேசு சொன்னார் யோவான் தான் எலியா என்று, ஆனால், யோவான் அதை ஏற்றுக் கொள்ளவில்லை, அதனால் பைபிள் முரண்படுகிறது என்றுச் சொல்கிறீர்கள், அதனால், "விளையாட்டு முடிந்துவிட்டது கிறிஸ்தவமே!!!" என்று வாதம் புரிகிறீர்கள். ஆனால், இது விளக்குவதற்கு மிகவும் சுலபமான விவரம் ஆகும். அதாவது யோவான் ஸ்நானகன் தான் எலியாவா அல்லது இல்லையா? இதற்கு பதில் இல்லை... மற்றும் ஆம் என்பதாகும். அதாவது, நாம் மூன்றாவது சுவிசேஷத்தின் வசனத்தை பார்த்தோமானால், இந்த பிரச்சனை பனியாய் மாயமாய் மறைந்துவிடும்.
 
தூதன் அவனை நோக்கி: சகரியாவே, பயப்படாதே, உன் வேண்டுதல் கேட்கப்பட்டது; உன் மனைவியாகிய எலிசபெத்து உனக்கு ஒரு குமாரனைப் பெறுவாள், அவனுக்கு யோவான் என்று பேரிடுவாயாக. உனக்குச் சந்தோஷமும் மகிழ்ச்சியும் உண்டாகும், அவன் பிறப்பினிமித்தம் அநேகர் சந்தோஷப்படுவார்கள். அவன் கர்த்தருக்கு முன்பாகப் பெரியவனாயிருப்பான், திராட்சரசமும் மதுவும் குடியான், தன் தாயின் வயிற்றிலிருக்கும்போதே பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருப்பான். அவன் இஸ்ரவேல் சந்ததியாரில் அநேகரை அவர்கள் தேவனாகிய கர்த்தரிடத்திற்குத் திருப்புவான். பிதாக்களுடைய இருதயங்களைப் பிள்ளைகளிடத்திற்கும், கீழ்ப்படியாதவர்களை நீதிமான்களுடைய ஞானத்திற்கும் திருப்பி, உத்தமமான ஜனத்தைக் கர்த்தருக்கு ஆயத்தப்படுத்தும் படியாக, அவன் எலியாவின் ஆவியும் பலமும் உடையவனாய் அவருக்கு முன்னே நடப்பான் என்றான் (லூக்கா 1:13-17)
 
மேலே உள்ள வசனங்களிலிருந்து நாம் சில விவரங்களைக் காணலாம்.

முதலாவதாக, இயேசுவின் தாய் மரியாளின் உறவினரான எலிசபெத் என்ற பெண்மணிக்கு யோவான் பிறந்தார். மறுஜென்மம் என்ற கோட்பாட்டை நீங்கள் நம்பாதவராக இருப்பீர்களானால், கண்டிப்பாக யோவான் எலியாவாக பிறந்திருக்க முடியாது (Thus, unless you believe in the concept of reincarnation, John could not have literally been Elijah). எலியா என்பவர் பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக பிறந்தவர். மற்றும் அவர் இன்னும் உயிரோடு இருக்கிறார், எப்படியென்றால் 2 இராஜாக்கள் 2ம் அதிகாரத்தின் படி,அவர் அக்கினி ரதம் மூலமாக் உயிரோடு எடுத்துக்கொள்ளப்பட்டார். இவர் இயேசுவின் இரண்டாம் வருகையில் மறுபடியும் வருவார் (மல்கியா அதிகாரம் 4).

இரண்டாவதாக, தேவதூதன் சொன்ன தீர்க்கதரிசனத்திலிருந்து இன்னொரு விவரத்தையும் நாம் காணலாம்: "அவன் எலியாவின் ஆவியும் பலமும் உடையவனாய் அவருக்கு முன்னே நடப்பான் என்றான் - He will go on before the Lord, in the spirit and power of Elijah". எலியாவிற்கு இருந்த ஆவியின் பலத்திற்கு ஏற்ற ஒரு ஆவியின் பலத்தோடு செய்யவேண்டிய ஊழியத்தை யோவான் செய்வார் என்று இயேசுவிற்குத் (யோவானுக்கு உறவினர்) தெரியும். ஆனால், யோவான் ஒரு எழுத்தின் படியாக, சரீரத்தின் படியாக எலியா இல்லை (But John was not literally Elijah). பழைய ஏற்பாட்டுக் காலத்தில் வாழ்ந்த எலியா செய்த அந்த மகிமையான ஊழியத்திற்கு ஏற்ற ஒரு ஊழியம் மேசியாவாகிய இயேசுவின் வருகைக்கு முன்பாக நடைபெறவேண்டும் என்பதை இது குறிக்கிறது, மற்றும் இந்த ஊழியத்தின் மூலமாக, இஸ்ரவேல் மக்கள் மேசியாவை ஏற்றுக்கொள்ளத் தேவையான ஆயத்தங்கள் செய்யப்படும். யோவான் ஸ்நானகனின் ஊழியம், எலியா செய்த ஊழியத்திற்க் ஏற்றதாக அல்லது நிழலாட்டமாக உள்ளது, இதன் மூலமாக, இஸ்ரவேல் மக்கள் மேசியாவின் முதல் வருகைக்கு ஆயத்தப்படவும், ஏற்றுக்கொள்ளவும் வகை செய்தது. இப்போழுது உங்களுக்கு புரிந்ததா? இயேசு தன் சீடர்களிடம் எலியா ஏற்கனவே வந்துவிட்டார் என்றுச் சொன்னது, எலியா மறுபடியும் சரீர பிரகாரமாக வந்தார் என்பதைக் குறிக்காது,அதற்கு பதிலாக எலியாவின் பலத்துடன், ஆவியுடன் ஒரு ஊழியத்தை யோவான் செய்துள்ளார் என்பதையே குறிக்கும். இதில் இன்னொரு விவரம் என்னவென்றால், எலிசெபெத்திற்கு பிறந்த யோவான் தன் உறவினன் என்று இயேசுவிற்கு அந்த நேரத்தில் தெரியும். மற்றும் பழைய ஏற்பாடு சொல்வது போல, அதன் மீது நம்பிக்கைக்கொண்டு ஒரு யூதனாக‌ இயேசுவும், "மறுஜென்மத்தை நம்புகிறவர் அல்ல அதே நேரத்தில் அவர் அதை போதிப்பதும் இல்லை. இது எல்லாருக்கும் தெரிந்த ஒரு விஷயமாகும். (And as a Jew who believed the Old Testament, obviously Jesus did not believe in, nor teach reincarnation. This is simple common sense).

இந்த இடத்தில் இயேசு சொல்லவந்த இன்னொரு முக்கியமான விவரத்தை நாம் கவனிக்காமல் விட்டுவிடக்கூடாது! "எலியாப் போலத் தான் யோவான்" என்று இயேசு குறிப்பிடும் போது, அவர் யோவான் யார் என்பதை மட்டும் இங்கு குறிப்பிடவில்லை, அதோகூட, தான் (இயேசு) யார் என்பதையும் அவர் தெள்ளத் தெளிவாக சொல்லியுள்ளார் (When Jesus referred to John as Elijah, He was not simply making a point about who John was, but rather Jesus was pointing to who HE was!)

எலியாவைப் பற்றியுள்ள தீர்க்கதரிசன வசனம் பற்றி தெரிந்தவர்களுக்கு சரியாக புரியும், அதாவது, இயேசு மிகவும் தெளிவாகச் சொல்கிறார், "தானே யேகோவா, வல்லமையுள்ள தேவன் - Yahweh - God Almighty" என்று. நாம் இந்த தீர்கக்தரிசனத்தை கவனிக்கும் போது, இந்த விவரம் மிகவும் தெளிவாக புரியும்.
 
இதோ, நான் என் தூதனை அனுப்புகிறேன், அவன் எனக்கு முன்பாகப் போய், வழியை ஆயத்தம்பண்ணுவான்; அப்பொழுது நீங்கள் தேடுகிற ஆண்டவரும் நீங்கள் விரும்புகிற உடன்படிக்கையின் தூதனுமானவர் தம்முடைய ஆலயத்துக்குத் தீவிரமாய் வருவார்; இதோ, வருகிறார் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்…..இதோ, கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருகிறதற்கு முன்னே நான் உங்களிடத்திற்கு எலியா தீர்க்கதரிசியை அனுப்புகிறேன். நான் வந்து பூமியைச் சங்காரத்தால் அடிக்காதபடிக்கு, அவன் பிதாக்களுடைய இருதயத்தைப் பிள்ளைகளிடத்திற்கும், பிள்ளைகளுடைய இருதயத்தை அவர்கள் பிதாக்களிடத்திற்கும் திருப்புவான்….ஆனாலும் அவர் வரும் நாளைச் சகிப்பவன் யார்? அவர் வெளிப்படுகையில் நிலைநிற்பவன் யார்? அவர் புடமிடுகிறவனுடைய அக்கினியைப்போலவும், வண்ணாருடைய சவுக்காரத்தைப் போலவும் இருப்பார்….அவர் உட்கார்ந்து வெள்ளியைப் புடமிட்டுச் சுத்திகரித்துக் கொண்டிருப்பார்;…நான் நியாயத்தீர்ப்புச் செய்யும்படி உங்களிடத்தில் வந்து,…(மல்கியா 3:1, 4:5-6, 3:2, 3:3, 3:5)
 
ஆக, எலியா "கர்த்தரின் நாளுக்கு-யேகோவாவின் நாளுக்கு(the Day of the LORD - The Day of Yahweh)" முன்பாக வரவேண்டும். மற்றும் இந்த நாளில், தேவான் தாமே தன் தேவாலயத்திற்கு வருவார். இது யாருடைய தேவாலயம் என்று இவ்வசனம் சொல்கிறது? அது தேவனின் தேவாலயம். இயேசு தன் முதல் வருகையில் அந்த தேவாலயத்திற்குச் சென்று, அதை சுத்தம் செய்தார். அவர் இரண்டாம் முறை வரும்போது, மறுபடியும் அப்படியேச் செய்வார், ஆனால், மிகவும் முழுமையான விதத்தில் செய்வார். இந்த இரண்டாம் முறை, அவர் தேவன் தானா என்று யாரும் சந்தேகம் கொள்ள முடியாது, மற்றும் அவர் மக்களை நியாயம் தீர்ப்பார்.

இதே போல யோவான் ஸ்நானகனும் மேலே சொன்ன விவரத்தை உறுதிப்படுத்தினார். யோவானிடம் "நீ யார் ?" என்ற கேள்வி கேட்கப்பட்டப்போது, ஏசாயா தீர்க்கதரிசி சொன்ன வார்த்தைகளை பயன்படுத்தி யோவான் பதில் அளிக்கிறார், "கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவாந்தரவெளியிலே நம்முடைய தேவனுக்குப் பாதையைச் செவ்வைபண்ணுங்கள்". கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவாந்தரவெளியிலே நம்முடைய தேவனுக்குப் பாதையைச் செவ்வைபண்ணுங்கள் என்றும்,… சீயோன் என்னும் சுவிசேஷகியே, நீ உயர்ந்த பர்வதத்தில் ஏறு; எருசலேம் என்னும் சுவிசேஷகியே, நீ உரத்த சத்தமிட்டுக் கூப்பிடு, பயப்படாமல் சத்தமிட்டு, யூதா பட்டணங்களை நோக்கி: இதோ, உங்கள் தேவன் என்று கூறு (ஏசாயா 40:3, 9)

மறுபடியும் ஒரு முறை தெளிவாக விவரிக்குகிறேன், மேலே உள்ள வசனங்கள் சொல்கின்றன, "பாதைகளை செவ்வைப்படுத்துங்கள், தயார்படுத்துங்கள்" என்று "ஒரு மனிதனை தயார்படுத்துங்கள்" என்று அல்ல. மற்றும் இந்த பாதை யாருக்காக செவ்வைப்படுத்தப்படவேண்டும், தேவனுக்காக செவ்வைப்படுத்தப்படவேண்டும்.

இப்போது சில கேள்விகள் கேட்கவேண்டும் ..... அவர்களே, நீங்கள் தனிப்பட்ட முறையில் தேவனுக்கு எப்படி பதில் சொல்லப்போகிறீர்கள்? நீங்கள் சர்வ வல்லவருக்கும் அவரது சத்தியத்திற்கும் உங்களை சமர்பித்துக் கொண்டீர்களா? அல்லது உங்களை நியாயம் தீர்க்க வருகிறவரான தேவனையும் அவரது போதனையையும் தள்ளிவிடப் போகிறீர்களா?

நீங்கள் இந்த விவரங்களை அப்படியே ஒதுக்கிவிடப் போகிறீர்களா? அல்லது நீங்கள் உண்மையான தேவனிடம் வேண்டிக் கொள்ளப் போகிறீர்களா? அவரை தேடப்போகிறீர்களா? நான் உங்களை உட்சாகப்படுத்துகிறேன், அதாவது என் மூலமாக தேவன் உங்களை உட்சாகப்படுத்துவதாக நினைத்து, தேவனோடு, உண்மையான இறைவனோடு ஒப்புற‌வாகுங்கள் என்று உங்களை கேட்டுக்கொள்கிறேன்.

தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.

இப்படிக்கு,
லாசரஸ்

 
 

Sunday, August 17, 2008

முகமது நம்பத்தகுந்தவரா? ( Al-Amin - Trustworthy?) - Part 1

முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்)

உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர் 

சாம் ஷமான் 

Muhammad as Al-Amin (the Trustworthy)

How His Enemies Really Viewed Him

 Sam Shamoun

இஸ்லாமுக்காக‌ வாதம் புரிப‌வ‌ர்க‌ள், த‌ங்க‌ள் தீர்க்க‌த‌ரிசியின் நேர்மையைப் ப‌ற்றி விவ‌ரிக்கும் போது அடிக்க‌டி மேற்கோள் காட்டுவ‌து, முக‌ம‌துவிற்கு அல்-அமின்(Al-Amin or Al-Ameen) என்ற‌ பெய‌ர் கொடுக்கப்பட்டு இருந்தது என்பதைப் பற்றியதாகும். அல்-அமின் என்றால், "நம்பத்தகுந்தவர்" என்று பொருளாகும், மற்றும் இந்த பட்டப்பெயர் முகமதுவிற்கு அவரின் உறவினர்கள் அவர் இறைவனின் ஊழியத்திற்கு வருவதற்கு முன்பாக கொடுத்து இருந்தார்கள் என்று இஸ்லாமியர்கள் கூறுவார்கள். முகமதுவின் கால மக்களில் இவர் மிகவும் நம்பத்தகுந்த நபராக இருந்தார் என்றும், மற்றும் இவர் ஒரு பொய்யையும் சொல்லாதவராக இருந்தார் என்பதால் இவருக்கு அல்-அமின் என்ற பட்டப்பெயரை அம்மக்கள் இவருக்கு கொடுத்தார்கள் என்று இஸ்லாமியர்கள் வாதம் புரிவார்கள். இந்த வாதத்திற்கு கீழ் கண்ட ஹதீஸ் ஆதாரமாக தரப்பட்டுள்ளது:

'...அவர் இவ்வாறு வாதிப்பதற்கு முன் அவர் பொய் சொல்லக் கூடியவர் என்று எப்போதாவது நீங்கள் சந்தேகித்ததுண்டா?' என்றார் [ஹெர்குலிஸ்]. நான் இல்லை என்றேன். 'அவர் வாக்கு மீறியது உண்டா?' என்றார். (இதுவரை) இல்லை என்று சொல்லிவிட்டு, நாங்கள் இப்போது அவருடன் ஓர் உடன் படிக்கை செய்துள்ளோம். அதில் அவர் எப்படி நடந்து கொள்ளப் போகிறார் என்பது எங்களுக்குத் தெரியாது என்றேன். ………. இவ்வாதத்தைச் செய்வதற்கு முன் அவர் பொய் சொல்வதாக நீங்கள் அவரைச் சந்தேகித்ததுண்டா? என்று உம்மிடம் கேட்டேன். அதற்கு நீர் இல்லை என்று குறிப்பிட்டீர். மக்களிடம் பொய் சொல்லத் துணியாத ஒருவர் இறைவன் மீது பொய்யுரைக்கத் துணியமாட்டார் என்றே உறுதியாக நம்புகிறேன். …. அவர் (எப்போதேனும்) வாக்கு மீறியதுண்டா? என உம்மிடம் நான் கேட்டபோது, இல்லை என்றீர். (இறைவனின்) திருத்தூதர்கள் அப்படித்தான் வாக்கு மீற மாட்டார்கள். ( பாகம் 1, அத்தியாயம் 1, எண் 7 )

ஆங்கிலத்தில்:

"… He [Heraclius] said, 'Had you ever blamed him for telling lies before he claimed what he claimed?' I replied, 'No.' … He said, 'Does he break his promises?' I replied, 'No, but we are now at truce with him and we are afraid that he may betray us.' … . 'When I asked you whether he was ever blamed for telling lies, your reply was in the negative, so I took it for granted that a person who did not tell a lie about (others) the people could never tell a lie about Allah. I asked you whether he had ever broken his promise. You replied in the negative. And such are the apostles; they never break their promises…'" (Sahih al-Bukhari, Volume 4, Book 52,
Number 191)

இங்கே, முகமதுவின் எதிரியாக இருந்த அபு சுஃப்யான் என்பவர், பைஜான்டியம் ஆளுநரான ஹெர்குலிஸ் என்பவரை சந்தித்து பேசும் போது, முகமது ஒரு முறையும் பொய் சொல்லவில்லை மற்றும் அவர் தன் வாக்குறுதியை எப்போதும் காப்பவராக இருக்கிறார் என்று ஒத்துக் கொண்டதாக, மேலே உள்ள ஹதீஸ் கூறுகிறது.

முஸ்லீம்கள் மேற்கோள் காட்டும் இன்னொரு விவ‌ரமும் உண்டு, அதாவது, இஸ்லாமில் நம்பிக்கையில்லாதவர்களும்(unbelievers) முகமது ஒரு முறையும் யாரிடமும் பொய் சொல்லவில்லை என்பதை ஒத்துக்கொண்டதாக உள்ள ஹதீஸாகும்.

இபின் அப்பாஸின் அதிகார பூர்வமான ஹதீஸாக அறிவிக்கப் பட்டது என்னவென்றால், "உன் உறவினர்களை எச்சரிப்பாயாக(மற்றும் அவர்களிடம் உள்ள ஒருசில குழுவினருக்கு எச்சரிப்பாயாக)" என்ற வசனம் இறங்கியப் போது, அல்லாவின் நபி(அவர் மீது சாந்தி உண்டாகட்டும்) அவர்கள், சபா(Safa)வின் மிது ஏறி, உரத்த சத்தமாக கூப்பிட்டார்கள்: உங்களை நீங்களே பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்றார். இப்படி சத்தமாக கூப்பிடுவது யார் என்று அவர்கள் கேட்டார்கள். முகமது என்று அவர்கள் சொன்னார்கள். அவர்கள் அவரிடம் வந்தார்கள், மற்றும் அவர்: ஓ இன்னாருடைய மகன்களே, இன்னார் இன்னாருடையை மகன்களே, ஓ அப்த் மனஃபு உடைய மகன்களே, ஓ அப்த் அல் முத்தாலிஃப் உடைய மகன்களே, என்று அழைத்தார், அவர்கள் அனைவரும் அவரைச் சுற்றி வந்தார்கள். அவர்(நபி):ஒருவேளை இந்த மலையின் அடிவாரத்தில் குதிரை வீரர்கள் நம்மை நோக்கி வந்துக்கொண்டு இருக்கிறார்கள் என்று நான் சொன்னால், என்னை நீங்கள் நம்புவீர்களா? என்று கேட்டார். அதற்கு அவர்கள் மறுமொழியாக: உங்களிடம் நாங்கள் எப்போதும் ஒரு பொய்யையும் காணவில்லை என்றுச் சொன்னார்கள். அவர் சொன்னார்: நல்லது, வரப்போகும் மிகக்கொடுமையான ஆபத்தைக் குறித்து நான் உங்களை எச்சரிக்கிறேன். இந்த ஹதீஸை சொன்னவர் கூறினார், இதற்கு அபு லஹாப் கூறினார்: உனக்கு அழிவு உண்டாகட்டும்! இதற்காகவா எங்களை இங்கு கூட்டிச் சேர்த்தாய்? அவர்(பரிசுத்த நபி) எழுந்து நின்றார், அப்போது இந்த வசனம் இறங்கியது, "அபூலஹபின் இரண்டு கைகளும் நாசமடைக, அவனும் நாசமாகட்டும் (111:1)". அமாஸ் இந்த வசனத்தை சூராவின் கடைசியில் வாசித்தார். (Sahih Muslim, Book 001, Number 0406 In English)

மேலே கண்ட உரையாடல் அல்லது நிகழ்ச்சி முகமது ஒரு நேர்மையானவர் என்பதற்கு ஆதாரம் என்று முஸ்லீம்கள் நம்புகிறார்கள்(*). இறைவன் தன் நபியாக அல்லது தூதுவராக அனுப்பினார் என்று ஒரு பொய்யான வாதத்தை முகமது முன்வைக்க மாட்டார் என்று நம்புவதற்கு மேற்கண்ட ஹதீஸ் ஆதாரம் என்று முஸ்லீம்கள் நம்புகிறார்கள்.

முஸ்லீம்களின் இந்த வாதத்தில் அனேக பிரச்சனைகள் உள்ளன. குறைந்த பட்சமாக முகமதுவின் காலத்தவர்கள் தங்கள் கைப்பட எழுதி வைத்த(No Written Records) ஒரு ஆதாரமும் இப்போது நம்மிடம் இல்லை. இந்த ஹதீஸ்கள் அனைத்தும் முஸ்லீம்களால் எழுதப்பட்டது, இன்னும் சொல்லப் போனால், முகமதுவின் மரணத்திற்கு பிறகு பல ஆண்டுகளுக்கு பிறகு எழுதப்பட்டது.

மேலும், இந்த இஸ்லாமிய விவரங்கள் சந்தேகத்திற்கு உரியவைகள் ஏனென்றால், முஸ்லீம்கள் க‌தைகளை இட்டுக் கட்டி தங்கள் நபி மிகவும் நல்லவராக காட்டுவதற்கு இப்படி செய்கிறார்கள். குர்‍ஆன் முகமதுவை எப்படி காட்டுகிறதோ அதை விட நல்லவராக காட்டுவதற்கு முஸ்லீம்கள் முயற்சி செய்கிறார்கள்! ஆகையால், முகமதுவின் எதிரிகள் அவருடைய நடத்தையைப் பற்றி மிகவும் புகழ்ந்தும், அவருடைய நேர்மையைப் ப‌ற்றி புகழ்ந்தும் பேசுவதாக இருக்கும் இந்த விவரங்கள் பற்றி நாம் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

இதற்கும் மேலாக, ஓயாமல் முஸ்லீம்கள் சொல்லிக்கொண்டு இருக்கும் இப்படிப்பட்ட கதைகளுக்கு எதிர்மறையாக குர்‍ஆன் சாட்சி சொல்கிறது. அதாவது, குர்‍ஆன் முஸ்லீம் அல்லாதவர்களின் வார்த்தைகளை பதிவு செய்து தன்னிடம் வைத்துள்ளது.

(நபியே!) அவர்கள் (உம்மைப் பொய்யரெனக்) கூறுவது நிச்சயமாக உம்மைக் கவலையில் ஆழ்த்துகிறது என்பதை நாம் அறிவோம்; அவர்கள் உம்மைப் பொய்யாக்கவில்லை ஆனால் இந்த அநியாயக்காரர்கள் அல்லாஹ்வின் வசனங்களையல்லலவா மறுத்துக் கொண்டிருக்கிறார்கள். குர்‍ஆன் 6:33

உம்மை அவர்கள் பொய்ப்படுத்தினால் எனது செயல் எனக்கு; உங்கள் செயல் உங்களுக்கு. நான் செய்வதை விட்டும் நீங்கள் விலகியவர்கள்; நீங்கள் செய்வதை விட்டும் நான் விலகியவன் என்று கூறுவீராக. குர்‍ஆன் 10:41

(நினைவூட்டும்) வேதம் அருளப் பட்ட(தாகக் கூறுப)வரே! நிச்சயமாக நீர் பைத்தியக்காரர்தான் என்றும் கூறுகின்றனர். குர்‍ஆன் 15:6

(நபியே!) நாம் ஒரு வசனத்தை மற்றொரு வசனத்தின் இடத்தில் மாற்றினால், (உம்மிடம்) "நிச்சயமாக நீர் இட்டுக்கட்டுபவராக இருக்கின்றீர்" என்று அவர்கள் கூறுகிறார்கள்; எ(ந்த நேரத்தில், எ)தை இறக்க வேண்டுமென்பதை அல்லாஹ்வே நன்கறிந்தவன், எனினும் அவர்களில் பெரும்பாலோர் (இவ்வுண்மையை) அறிய மாட்டார்கள். குர்‍ஆன் 16:101

"இன்னும்; இது (அல் குர்ஆன்) பொய்யேயன்றி வேறு இல்லை இதை இவரே இட்டுக்கட்டிக் கொண்டார் இன்னும் மற்ற மக்கள் கூட்டத்தாரும் இதில் அவருக்கு உதவிபுரிந்துள்ளார்கள்" என்றும் நிராகரிப்பவர்கள் கூறுகின்றனர் ஆனால் (இப்படிக் கூறுவதன் மூலம்) திடனாக அவர்களே ஓர் அநியாயத்தையும், பொய்யையும் கொண்டு வந்துள்ளார்கள். இன்னும் அவர்கள் கூறுகிறார்கள்; "இன்னும் அவை முன்னோர்களின் கட்டுக் கதைகளே அவற்றை இவரே எழுதுவித்துக் கொண்டிருக்கிறார் - ஆகவே அவை அவர் முன்னே காலையிலும் மாலையிலும் ஓதிக் காண்பிக்கப்படுகின்றன." (நபியே!) "வானங்களிலும், பூமியிலுமுள்ள இரகசியங்களை அறிந்தவன் எவனோ அவனே அதை இறக்கி வைத்தான்; நிச்சயமாக அவன் மிக மன்னிப்பவனாகவும், மிக்க கிருபை செய்வோனாகவும் இருக்கின்றான்" என்று கூறுவீராக! குர்‍ஆன் 25:4-6

இன்னும், (நபியே!) அவர்கள் உங்களைப் பொய்ப்பிப்பார்களானால் (வருந்தாதீர்), இவ்வாறே உமக்கு முன் வந்த தூதர்களையும் திட்டமாக பொய்ப்பித்தனர் - அல்லாஹ்விடமே எல்லாக் காரியங்களும் மீட்டப்படும். குர்‍ஆன் 35:4

ஆனால், இவைகள் அனைத்தும் முஸ்லீமல்லாதவர்களால சொல்லப்பட்ட பொய்யான கூற்றுக்கள் என்று முஸ்லீம்கள் இந்த வசனங்களை ஒதுக்கிவிடுவார்கள். இப்படி முஸ்லீம்கள் சொல்வதினால், அவர்கள் வாதங்களில் உள்ள முரண்பாட்டை(inconsistency) இது காட்டுகிறது. ஆனால், உண்மையில் இதே முஸ்லீம்கள் தான் "முகமதுவின் நேர்மையை நிருபிப்பதற்கு முஸ்லீம்களல்லாதவர்களின் கூற்றுகளை ஆதாரங்களாக காட்டி முயற்சி எடுத்துக்கொண்டு இருப்பது" (After all, they are the ones appealing to the statements of the disbelievers to prove that Muhammad was a trustworthy person).

ஒரு வேளை, முஸ்லீம் அல்லாதவர்களின்(Unbelievers) சாட்சி/கூற்று முகமது ஒரு நேர்மையானவர் என்பதை நிருபிக்க போதுமானதாக‌ இருக்கிறது என்று முஸ்லீம்கள் சொல்லும் போது, அதே முஸ்லீம் அல்லாதவர்களின் சாட்சி/கூற்று முகமதுவின் நடத்தையை கேள்விக்குரியதாக்க போதுமானதாக இருக்கிறது என்று நம்பலாம் அல்லவா? இது எப்படி உள்ளதென்றால், கூழும் குடிக்கனும், மீசையிலும் ஒட்டக்கூடாது என்றுச் சொல்வது போல முஸ்லீம்களின் கூற்று இருப்பது மிகவும் தெள்ளத்தெளிவாக தெரிகிறது (But if their testimony is reliable enough to support Muhammad's integrity then the unbelievers are also a good enough source to call his character into question. It is apparent that the Muslims want to have their cake and eat it too).

சில நேரங்களின் முஸ்லீம்கள் கீழ் கண்டவாறுச் சொல்லி திருப்தி அடைவார்கள், அதாவது, "முகமதுவைப் பற்றி நம்பிக்கை இல்லாதவர்கள் என்ன சொன்னார்களோ அதே போலத் தான் மற்ற நபிகள் மற்றும் தூதர்கள் பற்றியும் நம்பிக்கை இல்லாதவர்கள் சொன்னார்கள் என்று குர்‍ஆன் சொல்கிறது என்பார்கள் முஸ்லீம்கள். ஆனால், இதனை மட்டும் யூதர்களும் கிறிஸ்தவர்களும் நம்ப மாட்டார்கள் என்று முஸ்லீம்கள் சொல்வார்கள். முஸ்லீம்களின் இந்த கருத்து மிகவும் தவறானது, இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன:

முதலாவதாக, பைபிளின் நபிகளுக்கும், தூதர்களுக்கும் தேவன் இயற்கைக்கு அப்பாற்பட்ட அற்புதங்களைச் செய்யும்படிச் செய்து, அவர்கள் தனக்கு பதிலாக பேச அனுப்பப்பட்ட நபிகள் என்று வலுவான ஆதாரங்களோடு நிருபித்தார். இதன் காரணத்தினால், நம்பிக்கயில்லாதவர்களின் கூற்றுக்கள் பொய் என்று நிருபனமாகிறது. இதற்கு எதிர்மறையாக, முகமது, தான் இறைவனால் அனுப்பப்பட்டவர் தான் என்பதை நிருபிக்கும் படி ஒரு அற்புதமும் செய்துக்காட்ட முடியாமல், தன் நபித்துவத்தை நிருபித்துக்கொள்வதில் தோல்வி அடைந்துவிட்டார் (Muhammad, on the other hand, failed to provide any supernatural confirmation that he was speaking on behalf of God).

இரண்டாவதாக, இப்போது பிரச்சனை என்னவென்றால், "நம்பிக்கை இல்லாதவர்கள் சொன்னது சரியானதா என்பதல்ல, அதற்கு மாறாக, நம்பிக்கை இல்லாதவர்கள் முகமதுவின் நேர்மையைப் புகழ்ந்தார்கள் என்று சொல்லும் முஸ்லீம்களின் வாதம் உண்மையானதா என்பதாகும்". குர்‍ஆன் சாட்சி சொல்வது போல, நம்பிக்கை இல்லாதவர்களின் கூற்று உண்மையாகவே, முகமதுவை மட்டுப்படுத்தவதாகவே இருந்தது. (Secondly, the issue here is not whether what the unbelievers said was correct, but whether the Muslim assertion that even the disbelievers praised Muhammad's honesty is true. As the Quran testifies, their comments were anything but flattering to Muhammad.)


மிகவும் முக்கியமாக, முகமது ஒரு நம்பத்தகுந்தவர் அல்ல என்றும் மற்றும் நேர்மையற்றவர் என்றும் தெரிந்துக்கொள்வதற்கு இஸ்லாமிய விவரங்கள்/ஹதீஸ்கள் போதுமான நம்பத்தகுந்த‌ ஆதாரங்களாக உள்ளன. முஸ்லீம்கள் நினைப்பது போல‌ முகமது ஒன்றும் நேர்மையின் நன்னடத்தையின் கலங்கரை விளக்கு அல்ல (He wasn't the beacon of virtue and honesty that Muslims make him out to be).

ஒரு எடுத்துக் காட்டுக்காகச் சொல்ல வேண்டுமானால், முகமது பொய் கூட சொல்வார், மற்றும் ஒரு குறிப்பிட்ட இலக்கை அடைவதற்காக தன்னை பின் பற்றுபவர்கள் பொய் சொல்லவும் அவர் அனுமதி அளித்துள்ளார்.

பாகம் 4, அத்தியாயம் 64, எண் 4037

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'கஅப் இப்னு அஷ்ரஃபைக் கொல்வதற்கு (தயாரயிருப்பவர்) யார்? ஏனெனில், அவன் அல்லாஹ்வுக்கும், அல்லாஹ்வின் தூதருக்கும் தொல்லை கொடுத்துவிட்டான்" என்று கூறினார்கள். உடனே முஹம்மது இப்னு மஸ்லமா(ரலி) எழுந்து, 'நான் அவனைக் கொல்ல வேண்டுமென்று தாங்கள் விரும்புகிறீர்களா? இறைத்தூதர் அவர்களே!" என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள், 'ஆம்" என்று பதிலளித்தார்கள். உடனே, முஹம்மத் இப்னு மஸ்லமா(ரலி), 'நான் (அவனைக் குதூகலப்படுத்தி நம்ப வைப்பதற்காக உங்களைக் குறைகூறி) ஏதேனும் சொல்ல எனக்கு அனுமதி தாருங்கள்" என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், '(சரி) சொல்" என்றார்கள்.(Muhammad bin Maslama said, "Then allow me to say a (false) thing (i.e. to deceive Kab)." The Prophet said, "You may say it.") …… ….
….

அப்போது முஹம்மத் இப்னு மஸ்லமா(ரலி) (தம் சகாக்களிடம்), 'கஅப் இப்னு அஷ்ரஃப் வந்தால் நான் அவனுடைய (தலை) முடியை பற்றியிழுத்து அதை நுகருவேன். அவனுடைய தலையை என்னுடைய பிடியில் கொண்டு வந்துவிட்டேன் என்று நீங்கள் கண்டால் (அதை சைகையாக எடுத்துக் கொண்டு) அவனைப் பிடித்து (வாளால்) வெட்டி விடுங்கள்" என்று (உபாயம்) கூறினார்கள்.

பிறகு கஅப் இப்னு அஷ்ரஃப் (தன்னுடைய ஆடை அணிகலன்களை) அணிந்து கொண்டு நறுமணம் கமழ இறங்கி வந்தான். அப்போது முஹம்மத் இப்னு மஸ்லமா(ரலி), 'இன்று போல் நான் எந்த உயர்ந்த நறுமணத்தையும் (நுகர்ந்து) பார்த்ததில்லை" என்று கூறினார்கள்"

மேலும், முஹம்மது இப்னு மஸ்லமா(ரலி), '(கஅபை நோக்கி) உன் தலையை நுகர்ந்து பார்க்க என்னை அனுமதிக்கிறாயா?' என்று கேட்டார்கள். அவன், 'சரி (நுகர்ந்து பார்)" என்று கூறினான். அப்போது முஹம்மத் இப்னு மஸ்லமா அவர்கள் அவனுடைய தலையை நுகர்ந்தார்கள். பிறகு தம் சகாக்களையும் நுகரக் கூறினார்கள். '(மீண்டுமொருமுறை நுகர) என்னை அனுமதிக்கிறாயா? என்று கேட்டார்கள். அவன் 'சரி (அனுமதிக்கிறேன்)" என்று கூறினான். முஹம்மத் இப்னு மஸ்லமா அவர்கள் அவனைத் தம் வசம் கொண்டு வந்தபோது, 'பிடியுங்கள்" என்று கூறினார்கள். உடனே (அவர்களின் சகாக்கள்) அவனைக் கொன்றுவிட்டனர். பிறகு அவர்கள் (அனைவரும்) நபி(ஸல்) அவர்களிடம் வந்து நடந்ததைத் தெரிவித்தனர். (Sahih al-Bukhari, Volume 5, Book 59,
Number 369 in English)

மற்றும்

கெய்பர் கைப்பற்றப்பட்டபிறகு, 'அல் ஹஜ்ஜஜ் பி. இலத் அல் சலாமி' என்ற அல் பஹ்ஜ் என்ற இனத்தைச் சார்ந்தவர், நபியவர்களிடம் வந்து, 'என் மனைவியிடம்(உம் ஷய்பா டி அபூ தல்ஹா) என் பணம் உள்ளது, (இவர்கள் இருவருக்கு முரத் என்ற மகனுண்டு). மக்காவிலுள்ள வியாபாரிகளிடம் எங்கள் பணம் உள்ளது, எனவே மக்காவிற்குச் சென்று அப்பணத்தை பெற்றுக்கொண்டு திரும்ப அனுமதி கொடுங்கள் என்று கேட்டார். அனுமதி பெற்றுக்கொண்டு, மறுபடியும் இவர் நபியவர்களிடம் "நான் பொய் சொல்லியாக வேண்டும்" என்று கேட்டார். அதற்கு நபியவர்கள் 'அவர்களிடம் சொல்" என்றுச் சொன்னார். அல் ஹஜ்ஜஜ் கூறினார், 'நான் மக்காவிற்குச் சென்றேன், அல்பைதா என்ற இடத்தில் சில குவாரிஸ் மக்கள் கெய்பருக்கு நபி சென்றாரே, அவர் எப்படி உள்ளார் என்று என்னிடம் கேட்க ஆரம்பித்தார்கள். ஹிரஜ் என்ற பட்டணம் மிகவும் முக்கியமான பட்டணம் என்றும், அதிக ஜனத்தொகையுள்ள மற்றும் அதிக பாதுகாப்புள்ள பட்டணம் என்றும் அவர்களுக்குத் தெரியும், எனவே, அவ்வழியே செல்லும் வழிப்போக்கர்களிடம் ஏதாவது செய்தி கிடைக்குமா என்று கேட்டுக்கொண்டு இருந்தார்கள். நான் ஒரு முஸ்லீம் என்று அவர்களுக்குத் தெரியாது, எனவே என்னை அவர்கள் கண்ட போது, என்னிடம், "இவர் அல் ஹஜ்ஜஜ் பி.இலத் தானே, கண்டிப்பாக இவரிடம் ஏதாவது ஒரு செய்தி இருக்கும். எங்களிடம் சொல்லவும், ஓ அபூ முஹம்மதே, அந்த வழிப்பறி கொள்ளைக்காரன்(highwayman) யூதர்களின் மற்றும் தோட்டங்களுள்ள ஹிரஜ் என்ற பட்டணத்திற்கு சென்றான் என்று கேள்விப்பட்டோம்". நான் "நீங்கள் சந்தோஷப்படும் ஒரு செய்தியை நான் கேள்விப்பட்டுள்ளேன்" என்றேன். என் ஒட்டகத்தின் இருபுறங்களிலும் அவர்கள் ஆர்வத்துடன் வந்து, "சொல் ஹஜ்ஜஜ்" என்றார்கள். நான் கூறினேன், "இதுவரை நீங்கள் கேள்விப்படாத அளவிற்கு அவர் தோல்வியை சந்தித்தார் மற்றும் அவருடைய சக தோழர்கள் வெட்டப்பட்டு மரித்தார்கள்; அவர் எப்படி பிடிக்கப்பட்டாரோ அதை நீங்கள் இதுவரை கேள்விப்பட்டு இருக்கமாட்டீர்கள்". கெய்பரின் மக்கள், "நாம் இவரை கொல்லகூடாது, இவரை மக்கா மக்களிடம் அனுப்புவோம், இவர் கொன்ற மக்கா மக்களுக்கு பழிக்கு பழியாக அவர்களே இவரை கொல்ல‌ட்டும்" என்று கூறினார்கள். அவர்கள் எழுந்து மக்கா மக்களுக்கு சத்தமாக சொன்னதாவது, "இதோ ஒரு செய்தி உங்களுக்கு, முகமது இங்கு அனுப்பும் வரைக்கும் நீங்கள் காத்திருங்கள், பிறகு உங்கள் மத்தியில் அவரை கொல்லலாம்". நான் "என் பணத்தையும், எனக்கு வரவேண்டிய தொகையையும் நான் வசூல் செய்துக்கொள்ள எனக்கு உதவி செய்யுங்கள், வியாபாரிகள் அங்கு செல்வதற்கு முன்பு நான் மறுபடியும் கெய்பருக்குச் சென்று, முகமது மற்றும் அவரது தொழர்களிடமிருந்து தப்பித்தவர்களை பற்றிக்கொண்டு இருக்க எனக்கு உதவி செய்யுங்கள் என்றேன்". அவ‌ர்க‌ள் எழுந்திருந்து என்னுடைய‌ ப‌ண‌ம் அனைத்தையும் வ‌சூல் செய்தார்க‌ள், நான் வ‌சூல் செய்து இருந்தாலும் இவ்வ‌ள‌வு சீக்கிர‌த்தில் என் வேலை முடிந்திருக்காது. நான் என் ம‌னைவியிட‌ன் சென்று அவ‌ளிட‌ம் உள்ள‌ ப‌ண‌த்தையும் பெற்றுக்கொண்டு, நான் கெய்ப‌ருக்குச் சென்று வியாரிக‌ளுக்கு முன்பாக‌ நான் வாங்க‌ வேண்டும் என்றேன். அப்பாஸ் இந்த‌ செய்தியையும், என்னைப் ப‌ற்றியும் கேள்விப்ப‌ட்டு, நான் த‌ங்கியிருந்த‌ வியாபாரிக‌ளின் கூடார‌த்தின் ப‌க்க‌த்தில் வ‌ந்து நின்று என்னிட‌ம் செய்தி என்ன‌ என்று கேட்டார். நான் அவ‌ரிட‌ம் "நீ இர‌க‌சிய‌மாக‌ வைத்திருப்பேன் என்று சொன்னால், ஒரு விஷ‌ய‌த்தை உன்னை ந‌ம்பிச் சொல்கிறேன்" என்றேன். நான் அப்படியே இரகசியமாக வைப்பேன் என்று சொன்னார். நான் இப்போது நீ பார்க்கின்ற படி பணத்தை நான் வசூல் செய்துக்கொண்டு இருக்கிறேன், நான் உன்னை தனிமையில் சந்திக்கும் வரை காத்திரு என்றேன், அவரும் சென்றுவிட்டார். எனக்கு மக்காவில் வரவேண்டிய பணம் அனைத்தையும் நான் வசூல் செய்துவிட்டபிறகு, நான் கெய்பருக்குச் செல்ல முடிவு செய்தபோது, அப்பாஸை சந்தித்து சொன்னதாவது, "நான் சொல்லும் செய்தியை மூன்று நாட்கள் இரகசியமாக வைத்திருந்து, பிறகு நீங்கள் சொல்லலாம், ஏனென்றால் அவர்கள் என்னை பிடித்துவிடுவார்கள் என்று அஞ்சுகிறேன்". அப்பாஸ் அப்படியே நான் செய்கிறேன் என்றுச் சொன்னபோது, நான் சொன்னதாவது, நான் "உன் சகோதரனின் மகன் அந்த அரசனின் மகள் ஷபியாவை திருமணம் செய்துக்கொண்டார், கெய்பர் கைப்பற்றப்பட்டது, அதனுள் இருப்பதெல்லாம் நீக்கப்பட்டது, இப்போது கெய்பர் முகமது மற்றும் அவரது தோழர்களின் சொத்தாக மாறிவிட்டது" என்றுச் சொன்னேன். அவர் கேட்டார் "ஹஜ்ஜஜ் நீ என்ன சொல்கிறாய்?". நான் "ஆமாம், அல்லாவின் உதவியால் நடந்தது. என் இரகசியத்தை காத்துக்கொள்". நானும் ஒரு முஸ்லீம் தான், என்னுடைய பணத்தை வசூல் செய்யவே நான் வந்தேன், என் பணத்தை இவர்கள் எடுத்துக்கொள்வார்கள் என்று பயந்துவந்தேன். மூன்று இரவுகள் கடந்த பின்பு, இந்த செய்தியை மற்றவர்களுக்கு உங்கள் விருப்பப்படி சொல்லலாம் என்றேன். மூன்றாம் நாள் வந்தபோது, அப்பாஸ் தன் மேல் ஷால்வையை போட்டுக்கொண்டு, நறுமனம் பூசிக்கொண்டு மற்றும் தன் தடியை எடுத்துக்கொண்டு, காபாவிடம் சென்று அதை சுற்றினார். மக்கள் அவரைக் கண்டு, அவரிடம், "ஓ அபூ அல்-பதல், இது மிகவும் துரதிஷ்டமானது என்றனர்". அதற்கு அவர், "இல்லை இல்லை, நீங்கள் சத்தியமிடும் அல்லாவின் உதவியோடு, முகமது கெய்பரை கைப்பற்றியுள்ளார், மற்றும் அந்த நாட்டு மன்னரின் மகளையே திருமணம் செய்துள்ளார்" என்றுச் சொன்னார். முகமது அவர்களின் எல்லா சொத்துக்களையும் முடக்கிவிட்டார், இப்போது கெய்பர் முகமது மற்றும் அவரது தோழர்களின் சொத்தாகி விட்டது என்றார். அவர்கள் கேட்டனர், "யார் உனக்கு இந்தச் செய்தியைச் சொன்னது?". அதற்கு அவர் "யார் உங்களுக்கு உங்கள் செய்தியை கொண்டுவந்தார்களோ, அவரே தான் சொன்னார், அவர் ஒரு முஸ்லீமாக இங்கு வந்தார், தன் பணத்தை வசூல் செய்துக்கொண்டார், மற்றும் முகமதுவிடம் அவரது தோழர்களிடம் சேர்ந்துக்கொள்ள மறுபடியும் சென்றுவிட்டார், இனி அவரோடு இருப்பார்" என்றார். அதற்கு அவர்கள், "ஓ அல்லாவின் மக்களே, அல்லாவின் எதிரி தப்பித்துக்கொண்டான். அவன் அப்படிப்பட்டவன் என்று தெரிந்து இருந்தால், வேறு விதமாய் அவரை கவனித்து இருந்திருப்போமே" என்றனர். கடைசியாக ஒரு உண்மைச் செய்தி அவர்களை அடைந்துவிட்டது. (The Life of Muhammad: A Translation of Ibn Ishaq's Sirat Rasul Allah, with introduction and notes by Alfred Guillaume [Oxford University Press, Karachi, Tenth impression 1995], pp. 519-520; capital and underline emphasis ours).

முகமதுவிற்கு தான் செய்த சத்தியத்தை முறித்துக் கொள்ளவும் பிரச்சனை இருந்தது இல்லை:

பாகம் 6, அத்தியாயம் 72, எண் 5518

ஸஹ்தம் இப்னு முளர்ரிப் அல்ஜர்மீ(ரஹ்) கூறினார்

நாங்கள் அபூ மூஸா அல்அஷ்அரீ(ரலி) அவர்களிடம் இருந்து கொண்டிருந்தோம். 'ஜாம்' கூட்டத்தைச் சேர்ந்த எங்களக்கும் இந்த (அல்அரீ) கூட்டத்தாருக்குமிடையே சகோதரத்துவ உறவு (நட்பு) இருந்தது. அப்போது கோழி இறைச்சியுடன் உணவு கொண்டு வரப்பட்டது. மக்களிடையே சிவப்பான மனிதர் ஒருவர் அமர்ந்திருந்தார். (அவரை உணவு உண்ண அபூ மூஸா(ரலி) அழைத்தார்கள்.) ஆனால், அவர் உணவை நெருங்கவில்லை. அப்போது அபூ மூஸா(ரலி), 'அருகில் வாருங்கள் (வந்து சாப்பிடுங்கள்). இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இதைச் சாப்பிட நான் கண்டுள்ளேன்' என்று கூறினார்கள்.

அதற்கு அம்மனிதர், 'இந்தக் கோழி (இனம், அசுத்தம்) எதையோ தின்பதை பார்த்தேன். அது எனக்கு அருவருப்பை உண்டாக்கவே 'இதை இனிமேல் உண்ணமாட்டேன்' என்று சத்தியம் செய்து விட்டேன்' என்று கூறினார்.

அதற்கு அபூ மூஸா(ரலி) 'அருகில் வாருங்கள்; உங்களுக்கு (விவரமாக)த் தெரிவிக்கிறேன்' என்று கூறி(விட்டுப் பின் வருமாறு சொன்)னார்கள்: நான் நபி(ஸல்) அவர்களிடம் (என்) அஷ்அரீ குலத்தார் சிலருடன் சென்றேன். அப்போது அவர்கள் சினத்துடன் இருந்தார்கள். தர்ம ஒட்டகங்களை அவர்கள் பங்கிட்டுக்கொண்டிருந்தார்கள். அப்போது எங்களை(யும் எங்கள் பயணச் சுமைகளையும்) சுமந்து செல்ல (ஒட்டகங்கள் ஏற்பாடு) செய்யும்படி அவர்களிடம் நாங்கள் வேண்டினோம். அப்போது அவர்கள் 'உங்களைச் சுமந்து செல்ல ஒட்டகங்கள் தர மாட்டேன்' என்று சத்தியம் செய்தார்கள். மேலும், 'உங்களை ஏற்றியனுப்பத் தேவையான (வாகன) ஒட்டகங்கள் என்னிடம் (தற்போது கைவசம்) இல்லை' என்று கூறினார்கள்.

(சிறிது நேரத்திற்குப்) பிறகு இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் போரில் கிடைத்த சில ஒட்டகங்கள் கொண்டு வரப்பட்டன. உடனே (எங்களைக் குறித்து) 'அஷ்அரீ குலத்தைச் சேர்ந்தவர்கள் எங்கே? அஷ்அரீ குலத்தைச் சேர்ந்தவர்கள் எங்கே?' என்று (இரண்டு முறை) கேட்டுவிட்டு, (நாங்கள் வந்தபோது) எங்களுக்கு வெள்ளைத் திமில்கள் கொண்ட ஐந்து ஒட்டக மந்தைகளை வழங்கினார்கள்.

நாங்கள் சிறிது நேரமே (அங்கு) இருந்திப்போம். அப்போது நான் என் தோழர்களிடம், 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (நாம் ஏறிச் செல்ல ஒட்டகம் தர மாட்டேன் என்று செய்த) தம் சத்தியத்தை மறந்து விட்டார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! நாம் இறைத்தூதர்(ஸல்) அவர்களை, அவர்கள் செய்த சத்தியத்திலிருந்து கவனத்தைத் திருப்பியிருந்தால் நாம் ஒருபோதும் வெற்றியடைய மாட்டோம்' என்று கூறிவிட்டு, நபி(ஸல்) அவர்களிடம் நாங்கள் திரும்பி வந்தோம். அப்போது நாங்கள் திரும்பி வந்தோம். அப்போது நாங்கள், 'இறைத்தூதர் அவர்களே! நாங்கள் ஏறிச் செல்வதற்காகத் தங்களிடம் ஒட்டகம் கேட்டோம். அப்போது தாங்கள், எங்களை ஏற்றிச் செல்லும் ஒட்டகம் தரமாட்டேன் என்று சத்தியம் செய்தீர்கள். (ஆனால், பிறகு போரில் கிடைத்த ஒட்டகங்களை எங்களுக்குத் தந்தீர்கள்.) எனவே, நீங்கள் உங்களின் சத்தியத்தை மறந்துவிட்டீர்கள் என்று நாங்கள் எண்ணினோம்' என்று சொன்னோம்.

அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வே உங்களை ஒட்டகத்தில் ஏற்றி அனுப்பிடச் செய்தான். அல்லாஹ்வின் மீதாணையாக! அவன் நாடினால், நான் இனி எந்த ஒன்றுக்காகவும் சத்தியம் செய்து, பிறகு அது அல்லாததை அதைவிடச் சிறந்ததாகக் கருதும்பட்சத்தில் சிறந்ததையே செய்வேன்; சத்தியத்தை முறித்து அதற்காகப் பரிகாரமும் செய்துவிடுவேன்' என்று கூறினார்கள்.37 (Sahih al-Bukhari, Volume 7, Book 67,
Number 427 in English)

முகமது, தன்னை பின் பற்றுகிறவர்கள் தாங்கள் செய்த சத்தியத்தையும் முறித்துக் கொள்ளவும் அனுமதி அளித்தார்:

பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6722

அப்துர் ரஹ்மான் இப்னு சமுரா(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (என்னிடம்) 'ஆட்சிப் பொறுப்பை நீயாக (விரும்பிக்) கேட்காதே! ஏனெனில், நீ கேட்காமல் அது உனக்கு வழங்கப்பட்டால், அது தொடர்பாக உனக்கு (இறைவனது) உதவி அளிக்கப்படும். (நீ) கேட்டதால் அது உனக்கு வழங்கப்பட்டால் அதோடு நீ (தனிமையில்) விடப்படுவாய். (இறைவனது உதவி கிட்டாது.) நீ ஒரு சத்தியம் செய்து, அதுவல்லாத வேறொன்றை அதைவிடச் செய்துவிட்டு, உன்னுடைய சத்தியத்(தை முறித்த)துக்கான பரிகாரத்தைச் செய்து விடு' என்று கூறினார்கள்.22

இதே ஹதீஸ் வேறு சில அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது... (Sahih al-Bukhari, Volume 9, Book 89,
Number 260 in English)

ஒரு நபர்(ஆணோ/பெண்ணோ) மற்றவர்களை ஏமாற்றுவதை அனுமதித்து, மற்றும் முன்பு இருந்ததை விட மிகவும் மேலானது தனக்கு கிடைத்தவுடன் முன்பு செய்த சத்தியத்தை முறித்து விடும் நபர் ஒரு நேர்மையானவரா அல்லது நம்பத் தகுந்தவரா சொல்லுங்கள்? இப்படிப்பட்ட நபர்(ஆணோ/பெண்ணோ) மீது நம்பிக்கை கொள்ளமுடியாது. ஏனென்றால், இவர் உண்மையைத் தான் சொல்கிறாரா அல்லது நேரத்திற்கு ஏற்றது போல தன் சத்தியத்தை மாற்றிக் கொள்வாரா என்று தெரியாத போது எப்படி அவர் மீது நம்பிக்கை கொள்ள முடியும்?

முடிவாக, அடுத்து நாம் பார்க்கப்போவது, முகமது ஒரு நம்பத் தகுந்தவர் அல்ல என்பதை நிருபிக்கும் விவரங்களாகும்.

முஸ்லீம்கள் முகமதுவை மிகவும் நல்லவராக காட்டுவதற்கு பல கவர்ச்சிகரமான மற்றும் இட்டுக்கட்டப்பட்ட கதைகளை தயாரிக்கிறார்கள். முகமதுவை மிகவும் எதிர்மறையாக காட்டும் கதைகளை அவர்கள் தயாரிப்பதில்லை. ஆனால், உண்மையில், முகமதுவின் நடத்தைப் பற்றி மிகவும் தரம்குறைவாக உள்ள விவரங்கள், அவரது நடத்தையை சரியாகக் காட்டும் விவரங்களாக அவர்களுக்கு காணப்படுகிறது, எப்போது? அவ்விவரங்களில் உள்ள சில எதிர்மறையான வாக்கியங்களை ஒதுக்கிவிடும் போது(In fact, the reports which reflect poorly on Muhammad's character have a greater chance of being true precisely because the Muslim tendency was/is to portray him in a more favorable manner while omitting any negative statements).

இதில் மிகவும் தர்மசங்கடமான விவரம் என்னவென்றால், "முகமது நபியாக மாறுவதற்கு முன்பாக நேர்மையானவர் என்று பெயர் பெற்று இருந்தார் என்று முஸ்லீம்கள் சொல்வது உண்மையானால், அவர் நபியாக மாறிய பிறகு அவரிடம் இருந்த நேர்மையை விட, அதற்கு முன்பாக அவரிடம் அதிகமாக நேர்மை இருந்ததாக அர்த்தமாகிறது".

What makes this rather ironic is that if this Muslim assertion is true, that Muhammad was known for being trustworthy prior to his prophethood, this means that he was more honest before he became a "prophet" than afterwards!


நாம் இக்கட்டுரையின் ஆரம்பத்தில் மேற்கோள் காட்டிய ஹதீஸை நம் நினைவிற்கு கொண்டு வருவோம். இந்த ஹதீஸில் ஹெர்குலிஸ் அரசர் அபூ சுஃப்யானிடம் முகமது பொய் சொல்லியுள்ளாரா? அல்லது தன் உறுதிமொழியை முறித்துக் கொண்டுள்ளாரா? என்று கேள்விகள் கேட்டுள்ளார். இந்த ஹதீஸின் இன்னொரு தொகுப்பைக்(another version) காண்போம்:

பாகம் 1, அத்தியாயம் 1, எண் 7

….. 'அவர் இவ்வாறு வாதிப்பதற்கு முன் அவர் பொய் சொல்லக் கூடியவர் என்று எப்போதாவது நீங்கள் சந்தேகித்ததுண்டா?' என்றார். நான் இல்லை என்றேன்.

'அவர் வாக்கு மீறியது உண்டா?' என்றார். (இதுவரை) இல்லை என்று சொல்லிவிட்டு, நாங்கள் இப்போது அவருடன் ஓர் உடன் படிக்கை செய்துள்ளோம். அதில் அவர் எப்படி நடந்து கொள்ளப் போகிறார் என்பது எங்களுக்குத் தெரியாது என்றேன். அப்போதைக்கு (நபி(ஸல்) மீது குறை கற்பிக்க) அந்த வார்த்தையைவிட்டால் வேறு எந்த வார்த்தையையும் என்னுடைய பதிலில் நுழைத்திட எனக்கு வாய்ப்பில்லை! ..... இவ்வாதத்தைச் செய்வதற்கு முன் அவர் பொய் சொல்வதாக நீங்கள் அவரைச் சந்தேகித்ததுண்டா? என்று உம்மிடம் கேட்டேன். அதற்கு நீர் இல்லை என்று குறிப்பிட்டீர். மக்களிடம் பொய் சொல்லத் துணியாத ஒருவர் இறைவன் முது பொய்யுரைக்கத் துணிய மாட்டார் என்றே உறுதியாக நம்புகிறேன்.

"… Heraclius said, 'Have you ever accused him of telling lies before his claim (to be a Prophet)?' I replied, 'No.'
Heraclius said, 'Does he break his promises?'
I replied, 'No. We are at truce with him but we do not know what he will do in it.' I could not find opportunity to say anything against him except that… 'I further asked whether he was ever accused of telling lies before he said what he said, and your reply was in the negative. So I wondered how a person who does not tell a lie about others could ever tell a lie about Allah.'" (Sahih al-Bukhari, Volume 1, Book 1,
Number 6)

நாம் மேலே பதித்த இந்த ஹதீஸ் முகமது பொய்யும் சொல்ல வில்லை மற்றும் தன் உறுதி மொழியையும் மீறவில்லை என்று பார்க்கிறோம். மட்டுமல்ல, அபூ சுஃப்யான் என்பவர் கூட, முகமது பொய் சொல்லவில்லை, வாக்கு மாறவில்லை என்றுச் சொல்கிறார்! ஆக, முகமதுவை இன்னும் நேர்மையாவராகவும் நம்பத் தகுந்தவராகவும் மாற்றுவதற்கு பதிலாக, அல்லா அவரை தீயவராகவும் மற்றும் நம்பத் தகாதவராகவும் மாற்றியுள்ளார். குர்‍ஆன் அல்லாவின் வார்த்தை என்று முஸ்லீம்கள் நம்புகிறார்கள், ஆனால், உண்மையில் சொல்ல வேண்டுமானால், முகமது பொய் சொல்லவும் தன் வாக்குறுதியை மீறவும் செய்தவர் அல்லா தான்.

நபியே! உம் மனைவியரின் திருப்தியை நாடி, அல்லாஹ் உமக்கு அனுமதித்துள்ளதை ஏன் விலக்கிக் கொண்டீர்? மேலும் அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன், மிக்க கிருபையுடையவன். அல்லாஹ் உங்களுடைய சத்தியங்களை (சில போது தக்க பரிகாரங்களுடன்) முறித்து விடுவதை உங்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறான், மேலும் அல்லாஹ் உங்கள் எஜமானன். மேலும், அவன் நன்கறிந்தவன்; ஞானம் மிக்கவன். குர்‍ஆன் 66:1-2

மற்றும்:

முஃமின்கள் (தங்களைப் போன்ற) முஃமின்களையன்றி காஃபிர்களைத் தம் உற்ற துணைவர்களாக எடுத்துக்கொள்ள வேண்டாம்;. அவர்களிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அன்றி (உங்களில்) எவரேனும் அப்படிச் செய்தால், (அவருக்கு) அல்லாஹ்விடத்தில் எவ்விஷயத்திலும் சம்பந்தம் இல்லை. இன்னும், அல்லாஹ் தன்னைப் பற்றி உங்களை எச்சரிக்கின்றான்; மேலும், அல்லாஹ்விடமே (நீங்கள்) மீள வேண்டியதிருக்கிறது. குர்‍ஆன் 3:28

இவ்வசனத்திற்கு புகழ்பெற்ற சுன்னி உரையாளர் இபின் கதிர் கீழ் கண்டவாறு பொருள் கூறுகிறார்:

நம்பிக்கையில்லாதவர்களோடு நட்புறவு கொள்ளக்கூடாது என்ற தடை:

இஸ்லாமின் மீது நம்பிக்கைக் கொள்ளாதவர்களோடு, முஸ்லீம்கள் நண்பர்களாக்கிக் கொள்ளக் கூடாது என்று அல்லா தடை செய்துள்ளார், அல்லது முஸ்லீம்களோடு அல்லாமல் நம்பிக்கையில்லாதவர்களோடு நெருங்கிய நட்பை கொள்ளக்கூடாது என்று அல்லா தடை செய்துள்ளார். இப்படிப்பட்ட செயல்களுக்கு எதிராக அல்லா தன் எச்சரிப்பை கீழ்கண்ட வசனம் மூலமாக தெரிவிக்கிறார்.

<And whoever does that, will never be helped by Allah in any way> இதன் பொருள், அல்லா தடை செய்ததை யார் மீறுகிறார்களோ அவர்களை அல்லாவும் தள்ளிவிடுவார். இதே போல அல்லா சொல்கிறார்...

<ஈமான் கொண்டவர்களே! எனக்கு விரோதியாகவும், உங்களுக்கு விரோதியாகவும் இருப்பவர்களைப் பிரியத்தின் காரணத்தால் இரகசியச் செய்திகளை எடுத்துக் காட்டும் உற்ற நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள்;> மற்றும்…

<உங்களிலிருந்தும் எவர் இதைச் செய்கிறாரோ அவர் நேர் வழியை திட்டமாக தவற விட்டு விட்டார>[60:1]. அல்லா சொல்கிறார் ….

<முஃமின்களே ! நீங்கள் முஃமின்களை விடுத்து காஃபிர்களை (உங்களுக்கு உற்ற) நண்பர்களாய் ஆக்கிக் கொள்ளாதீர்கள்;. உங்களுக்கே எதிராக நீங்கள் ஒரு தெளிவான ஆதாரத்தை அல்லாஹ்வுக்கு ஆக்கிக் தரவிரும்புகிறீர்களா?>[4:144],

மற்றும் …

<முஃமின்களே ! யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் உங்களுடைய பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். (உங்களுக்கு விரோதம் செய்வதில்) அவர்கள் தம்மில் சிலர் சிலருக்குப் பாதுகாவலர்களாக இருக்கின்றனர். உங்களில் எவரேனும் அவர்களைப் பாதுகாவலர்களாக ஆக்கினால் நிச்சயமாக அவரும் அவர்களைச் சேர்ந்தவர்தான். நிச்சயமாக அல்லாஹ் அநியாயக்கார மக்களுக்கு நேர்வழி காட்ட மாட்டான்.>[5:51].

நம்பிக்கையாளர்கள் மற்ற நம்பிக்கையாளர்களாகிய முஹாஜிரின், அன்சார் மற்றும் பெடோயின் போன்றவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்ததை குறிப்பிட்டு, அல்லா சொல்கிறார்...

<நிராகரிப்பவர்களில் சிலருக்குச் சிலர் பாதுகாவலர்களாக இருக்கின்றனர். நீங்கள் இதைச் செய்யாவிட்டால் அதாவது ஒருவருக்கொருவர் பாதுகாவலராக இருக்காவிட்டால் பூமியில் குழப்பமும், பெருங்கலகமும் ஏற்பட்டு இருக்கும்.>[8:73]

மறுபடியும் அல்லா சொல்கிறார்...

<அவர்கள் மூலமாக ஆபத்து வரும் என்று கருதினால் தவிர> ஒருவேளை நம்பிக்கையாளர்கள் நம்பிக்கை இல்லாதவர்களினால்(Unbelievers) தீமை ஏற்படும் என்று பயப்பட்டால், இந்த சமயங்களில் இப்படி செய்ய வேண்டிய தில்லை. அதாவது, இந்த நேரங்களில் நம்பிக்கையாளர்கள், நம்பிக்கை இல்லாதவர்களோடு நட்பு கொள்ளலாம், அதுவும் வெளிப் புறத்திற்கு நட்பு மாதரி காண்பித்துக் கொள்ள வேண்டும், ஆனால், மனதளவில் அவர்களோடு நட்பு கொள்ளக் கூடாது. அல்புகாரியில் அபூ அத்தர்தா சொன்னதாக பதிவு செய்யப்ப‌ட்டுள்ளது, "நாம் சில மக்களிடம் பேசும் போது, முகத்தைப் பார்த்து சிரிக்கிறோம், ஆனால், நம்முடைய இதயம் அவர்களை சபித்துக் கொண்டு இருக்கும்". அல்புகாரி சொல்கிறார், ஒரு எடுத்துக்காட்டிற்கு சொல்லவேண்டுமானால், அல்புகாரியில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்னவென்றால், அல் ஹஸன் கூறினார், "உயிர்த்தெழுதலின் நாள் வரை தக்கியா அனுமதிக்கப் பட்டுள்ளது"... (Source; underline emphasis ours)

இதுவரையில் நாம் பார்த்த விவரங்களிலிருந்து நாம் அறிவது என்னவென்றால், முகமது ஒரு நேர்மையற்ற மனிதராக மாறுவதற்கு பொறுப்பு அல்லா தான். இப்படிப்பட்டவர் மீது யார் நம்பிக்கை கொள்ளமுடியும்!

இது மட்டுமல்ல, யேகோவா தேவனின் கோபம் மற்றும் சாபம் முகமதுவின் மீது விழும்படியாக செய்ததும் அல்லா தான். அதாவது "செய்த உறுதிமொழியை" எவ‌ன் முறிக்கின்றானோ அவன் யேகோவாவிற்கு அருவருப்பானவன் ஆவான்:

மோசே இஸ்ரவேல் புத்திரருடைய கோத்திரங்களின் தலைவரை நோக்கி: "கர்த்தர் கட்டளையிடுவது என்னவென்றால்: ஒருவன் கர்த்தருக்கு யாதொரு பொருத்தனை பண்ணினாலும், அல்லது யாதொரு காரியத்தைச் செய்யும்படி ஆணையிட்டுத் தன் ஆத்துமாவை நிபந்தனைக் குட்படுத்திக் கொண்டாலும், அவன் சொல் தவறாமல் தன் வாயிலிருந்து புறப்பட்ட வாக்கின் படியெல்லாம் செய்யக் கடவன்." எண் 30:1-2

"தேவ சமுகத்தில் நீ துணிகரமாய் உன் வாயினால் பேசாமலும், மனம்பதறி ஒரு வார்த்தையையும் சொல்லாமலும் இரு; தேவன் வானத்திலிருக்கிறார்; நீ பூமியிலிருக்கிறாய், ஆதலால் உன் வார்த்தைகள் சுருக்கமாயிருப்பதாக. தொல்லையின் திரட்சியினால் சொப்பனம் பிறக்கிறதுபோல, வார்த்தைகளின் திரட்சியினால் மூடனுடைய சத்தம் பிறக்கும். நீ தேவனுக்கு ஒரு பொருத்தனை பண்ணிக் கொண்டால், அதைச் செலுத்தத் தாமதியாதே; அவர் மூடரில் பிரியப்படுகிறதில்லை; நீ நேர்ந்து கொண்டதைச் செய். நீ நேர்ந்து கொண்டதைச் செய்யாமற் போவதைப் பார்க்கிலும், நேர்ந்து கொள்ளாதிருப்பதே நலம். உன் மாம்சத்தைப் பாவத்துக்குள்ளாக்க உன் வாய்க்கு இடங்கொடாதே; அது புத்திபிசகினால் செய்தது என்று தூதனுக்கு முன் சொல்லாதே; தேவன் உன் வார்த்தைகளினாலே கோபங் கொண்டு, உன் கைகளின் கிரியையை அழிப்பானேன்?" பிரசங்கி 5:2-6

ஆக, இதுவரை மேலே நாம் கண்ட இஸ்லாமிய விவரங்களின் படி, குர்‍ஆனில் வசனங்களாக உள்ள, நம்பிக்கயில்லாதவர்கள் முகமது பற்றி சொன்ன விவரங்கள் அனைத்தும் உண்மை என்பது மிகவும் தெளிவாக விளங்குகிறது, அதாவது அவர் பொய் சொல்லியுள்ளார் மற்றும் தான் செய்த சத்தியத்தை / வாக்கை முறித்துள்ளார். இதனால், முகமதுவை தன் காலத்தவர்கள்/உறவினர்கள் "அல் அமின்" என்று கண்டார்கள் என்பது நிருபிக்கப்படாத விவரமாகும். முஸ்லீம்கள் இப்படிப்பட்ட கதைகளை இட்டுக்கட்டியுள்ளார்கள்; அல்லது ஒரு வேளை இந்த புகழாரம் உண்மையாகவே அவருக்கு கொடுத்து இருந்திருந்தாலும், தனக்கு சூட்டிய அந்த புகழாரத்திற்கு ஏற்ப அவர் தன் வாழ்நாளின் மீதியான காலத்தில் வாழவில்லை, முக்கியமாக தன் கடைசி காலங்களில் வாழவில்லை.

ஆனால், இந்த புகழாரத்திற்கு தகுதியுடையவர் ஒருவர் இருக்கிறார், ஏனென்றால், உண்மையின் விலாசமாக வாழ்ந்திருக்கிறார் அவர். அவர் தான் கர்த்தராகிய இயேசுக் கிறிஸ்து, பிதாவின் பிழையற்ற ஆட்டுக்குட்டி.

"அவன்: ஐயோ! நசரேயனாகிய இயேசுவே, எங்களுக்கும் உமக்கும் என்ன? எங்களைக் கெடுக்கவா வந்தீர்? உம்மை இன்னார் என்று அறிவேன், நீர் தேவனுடைய பரிசுத்தர் என்று சத்தமிட்டான்!" மாற்கு 1:24

"சீமோன் பேதுரு அவருக்குப் பிரதியுத்தரமாக: ஆண்டவரே, யாரிடத்தில் போவோம், நித்திய ஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே. நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நாங்கள் விசுவாசித்தும் அறிந்தும் இருக்கிறோம் என்றான்." யோவான் 6:68-69

"சுயமாய்ப் பேசுகிறவன் தன் சுய மகிமையைத் தேடுகிறான், தன்னை அனுப்பினவரின் மகிமையைத் தேடுகிறவனோ உண்மையுள்ள வனாயிருக்கிறான், அவனிடத்தில் அநீதியில்லை." யோவான் 7:18

"என்னை அனுப்பினவர் என்னுடனே கூட இருக்கிறார், பிதாவுக்குப் பிரியமானவைகளை நான் எப்பொழுதும் செய்கிறபடியால் அவர் என்னைத் தனியேயிருக்க விடவில்லை என்றார்." யோவான் 8:29

"அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்." யோவான் 14:6

"ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களுடைய தேவனாகிய நம்முடைய பிதாக்களின் தேவன் தம்முடைய பிள்ளையாகிய இயேசுவை மகிமைப் படுத்தினார்; அவரை நீங்கள் ஒப்புக் கொடுத்தீர்கள்; பிலாத்து அவரை விடுதலையாக்க தீர்மானித்தபோது, அவனுக்கு முன்பாக அவரை மறுதலித்தீர்கள். பரிசுத்தமும் நீதியுமுள்ளவரை நீங்கள் மறுதலித்து, கொலை பாதகனை உங்களுக்காக விடுதலை பண்ண வேண்டுமென்று கேட்டு, ஜீவாதிபதியைக் கொலைசெய்தீர்கள்; அவரைத் தேவன் மரித்தோரிலிருந் தெழுப்பினார்; அதற்கு நாங்கள் சாட்சிகளாயிருக்கிறோம்." அப் 3:13-15

"இயேசுவினிடத்திலுள்ள சத்தியத்தின் படியே, நீங்கள் அவரிடத்தில் கேட்டறிந்து, அவரால் போதிக் கப்பட்டீர்களே." எபேசியர் 4:21

"நம்முடைய பலவீனங்களைக் குறித்துப் பரிதபிக்கக் கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லா விதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாத வராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார்." எபிரேயர் 4:15

"பரிசுத்தரும், குற்றமற்றவரும், மாசில்லாதவரும், பாவிகளுக்கு விலகினவரும், வானங்களிலும் உயர்ந்த வருமாயிருக்கிற இவ்விதமான பிரதான ஆசாரியரே நமக்கு ஏற்றவராயிருக்கிறார்." எபிரேயர் 7:26

"நித்திய ஆவியினாலே தம்மைத் தாமே பழுதற்ற பலியாகத் தேவனுக்கு ஒப்புக் கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு உங்கள் மனச்சாட்சியைச் செத்த கிரியைகளறச் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம்!" எபிரேயர் 9:14

"நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப் படுவதினாலே பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள்; உலகம் அவரை அறியாத படியினாலே நம்மையும் அறியவில்லை. பிரியமானவர்களே, இப்பொழுது தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோம், இனி எவ்விதமாயிருப்போ மென்று இன்னும் வெளிப்படவில்லை; ஆகிலும் அவர் வெளிப்படும்போது அவர் இருக்கிற வண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்பதினால், அவருக்கு ஒப்பாயிருப்போமென்று அறிந்திருக்கிறோம். அவர்மேல் இப்படிப்பட்ட நம்பிக்கை வைத்திருக்கிறவனெவனும், அவர் சுத்தமுள்ளவராயிருக்கிறது போல தன்னையும் சுத்திகரித்துக் கொள்ளுகிறான்….அவர் நம்முடைய பாவங்களைச் சுமந்து தீர்க்க வெளிப்பட்டாரென்று அறிவீர்கள்; அவரிடத்தில் பாவமில்லை….. பிள்ளைகளே, நீங்கள் ஒருவராலும் வஞ்சிக்கப்படாதிருங்கள்; நீதியைச் செய்கிறவன் அவர் நீதியுள்ளவராயிருக்கிறது போலத் தானும் நீதியுள்ளவனாயிருக்கிறான்." 1 யோவான் 3:1-3, 5, 7

மேலும் அறிய படிக்கவும்:

http://answering-islam.org/Books/Gairdner/camouflage.htm
http://answering-islam.org/Authors/Arlandson/sinless.htm
http://answering-islam.org/Responses/Abualrub/sinful_mo.htm
http://answering-islam.org/Responses/Abualrub/sinless_jesus.htm
http://answering-islam.org/Silas/mo-sinner.htm
http://answering-islam.org/Muhammad/treaties.html
http://answering-islam.org/Shamoun/compromise_doubt.htm
http://answering-islam.org/Responses/Osama/zawadi_s10_94.htm
http://answering-islam.org/Authors/Arlandson/insult_responses.htm

மூலம்:
http://www.answering-islam.org/Shamoun/mhd_amin.htm

இக்கட்டுரையின் பாகம் இரண்டை படிக்கவும்: முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்
 

Wednesday, August 13, 2008

ஜீமெயில் படத்தில் தில்லுமுல்லு செய்து, பிராடு செய்தது யார் ?

அன்பான சகோதரர் சிட்டு அவர்களுக்கு,

உங்களைப் போன்ற சகோதரர்களின் ஊழியம் அதிகமாக தேவை. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.

உங்களின் இந்த பதிவைப் பற்றி ஒரு சில விவரங்களைத் தரலாம் என்று நான் விரும்புகிறேன்.

1. முதலாவதாக, நாம் அதாவது தமிழ் கிறிஸ்தவர்கள் செய்யும் ஊழியம் மூலமாக எப்போதும் மகிமையும், கனமும் கர்த்தர் ஒருவருக்கே நாம் செலுத்தவேண்டும். ஆகையால், நாம் (முக்கியமாக நான்) செய்வது ஒன்றும் பெரிய வேலை இல்லை. அதாவது வீட்டில் அசுத்தம் இருந்தால், ஒரு துடப்பம் எடுத்து சுத்தம் செய்கிறோம் அல்லவா அது போலத்தான், பைபிளுக்கு எதிராக வீசப்படும் அசுத்தங்களை நம் கைகளால் சுத்தம் செய்கின்றோம். இதில் தேவனின் மகிமையை நாம் எடுத்துக்கொள்ளக்கூடாது, அவருக்கே நன்றியைச் செலுத்தவேண்டும்.

2. இரண்டாவதாக, நீங்கள் பதித்த பகுதியில் ஒரு சிறிய திருத்தம் இருக்கின்றது, அதாவது, நீங்கள் பதித்த விவரத்தைச் முதலில் அவர்கள் சொல்லிவிட்டு, அதன் அடுத்தவரியாக கீழ் கண்டவரியையும் எழுதியுள்ளார்கள்.

--------------
Ithuthaan islam wrote: 'இயேசுவுக்கு நேர்ந்ததென்ன..!' வரலாற்று தொடர் வரும் இன்ஷா அல்லாஹ்.
--------------


அதாவது, அவர்கள் இதற்கு முன்பு எழுதிய அக்கட்டுரைகளின் தொடர்ச்சியை தொடரப்போவதாக சொல்லியுள்ளார்கள்.

ஆனால், நீங்கள் அவர்கள் கட்டுரையிலிருந்து ஒரு பகுதியை இங்கு பதித்துள்ளீர்கள்.

இதை ஏன் நான் இங்கு குறிப்பிடுகிறேன் என்றால், நாளைக்கு இஸ்லாமியர்கள் நீங்கள் இங்கு பதித்த பகுதியை /விவரத்தை படித்துவிட்டு,

யார் சொன்னது, நாங்கள் எழுதமாட்டோம், ஓடிவிட்டோம் என்று?
அந்த கட்டுரையின் கீழே "அக்கட்டுரையின் தொடர்ச்சி வரும்" என்று நாங்கள் எழுதியதை ஏன், அந்த சிட்டு என்ற கிறிஸ்தவர் மறைத்தார்? என்று உங்கள் மீது குற்றம் சுமத்துவார்கள்.


இதனால் நமக்கு கெட்டப் பெயர் வரும். உங்களுக்கும் கெட்டப்பெயர் வரும். எனவே, இனி ஏதாவது மற்ற தளங்களின் விவரத்தை பதிப்பதாக இருந்தால், முக்கியமான விவரங்களை தவறாமல் பதிக்கவேண்டும், அல்லது அதைப் பற்றி சில வரிகளையாவது எழுதவேண்டும். [இந்த கட்டுரையில் பைபிளுக்கு மூல மொழி இல்லை என்று அவர்கள் எழுதியுள்ளார்கள், இதற்கும் முடிந்தால் பதில் தருகிறேன். ]

வீணாக நாம் நமக்கு அவதூறுப்பெயரை நம் அறியாமையினால் சம்பாதித்துக்கொள்ளக்கூடாது என்பது என் கருத்து. அவர்கள் வேண்டுமானால், ஏமாற்றி, பொய்களையும் சொல்லட்டும், ஆனால் நாம் நமக்கு தெரியாமலும் அப்படி செய்யக்கூடாது.

3. மூன்றாவதாக, யார் உண்மைக்கு புறம்பாக எழுதுகிறவர்கள், ஜீமெயில் படத்தில் தில்லுமுல்லு செய்து, பிராடு செய்தது யார் ?

என்னைப் பற்றி கீழ்கண்டவாறு அவர்கள் எழுதியுள்ளார்கள்.

----------------
இது தான் இஸ்லாம் எழுதிய வரிகள்:

உமர் என்ற பெயரில் எழுதும் கிறிஸ்த்தவரின் ஆரம்ப நடுநிலை மேலும் நம்மை அவர்களுக்கு பதிலெழுத வைத்தாலும் அடுத்தடுத்த அவரின் எழுத்துக்கள் உண்மைக்கு புறம்பான வேறு நோக்கத்தை பிரதிபளிக்கத் துவங்கியது. இஸ்மவேல் குறித்த அவர்களின் பதிவுகளில் இதைக் காணலாம். உண்மைக்கு புறம்பாக எழுத துணிந்தவர்களுடன் உரையாடி பலனில்லை என்பதால் நாம் பதிலெழுதுவதை நிறுத்தினோம்.
----------------

தங்களுக்கு மெயில் மூலமாக கிறிஸ்தவம் பற்றிய கேள்விகள் வந்தது என்றுச் சொல்லி, மாட்டிக்கொண்டு பொய் சொல்லி, அதை மறைக்க ஒரு ஜீமெயில் படத்தை சொந்தமாக தயாரித்து வெளியிட்டது, இந்த "உண்மையாளர்கள்" தான். எனவே, யார் உண்மையாளர்கள், யார் பொய்யர்கள் என்று கடந்த வருடமே இணைய உலகிற்கு தெளிவாகி விட்டது.

கீழ் கண்ட கட்டுரைகளை படித்துவிட்டு, யார் உண்மைக்கு புறம்பாக செயல்படுகிறவர்கள் என்று வாசகர்கள் தெரிந்துக்கொள்ளட்டும்.

எங்கள் மறுப்பு - 1 : Fake e-mail Id க்கள் பயன்படுத்திய இது தா(ன்)னா இஸ்லாம் தளம் - http://isakoran.blogspot.com/2007/07/fake-e-mail-id.html

கிறித்துவம் கேள்வி பதில்-2 : எங்கள் மறுப்பு - 2 Fake Gmail e-mail ஆதாரமாக கொடுத்த இது தான் இஸ்லாம் தளம் விவரம் - http://www.geocities.com/isa_koran/tamilpages/Rebuttals/FakeEmailRebuttal2.htm

நான் கேட்கிறேன், ஐந்து வேளை தொழும் இவர்களுக்கு அந்த தில்லுமுல்லு படத்தை தயார்படுத்தும் போது:

நாம் இப்படி பிராடு செய்கிறோமே,
பிறகு அதே கையினால் குர்‍ஆனை தொட்டு படிக்கின்றோமே,
மட்டுமல்ல, எங்களை நம்பி இஸ்லாம் பற்றி கேள்வி கேட்டு பதில் பெரும் பெரும்கூட்ட முஸ்லீம்கள் உள்ளார்களே,
நாம் செய்வது சரியா? பிராடு செய்து தான் இஸ்லாமை பரப்பனுமா?
இஸ்லாமுக்கு நல்லபெயர் கொண்டுவர முயற்சி செய்யனுமா ?

போன்ற கேள்விகள் எழும்பவில்லை?


யார் யாரை பொய்யர்கள் என்றுச் சொல்வது? தெரிந்தே பிராடு செய்யும் இவர்களோடு விவாதம் செய்ததற்கு வெட்கப்படவேண்டியது கிறிஸ்தவர்களே தவிர நீங்கள் ஒன்றும் உத்தமர்கள் போல நடிக்கவேண்டாம்? என்றுச் சொல்லிகொள்கிறேன்.

அருமை சகோதரர் உங்கள் பதிவிற்காக மிக்க நன்றி. மற்றும் இனி எச்சரிக்கையாக பதிக்கும்படி உங்களை வேண்டிக்கொள்கிறேன்.

God Bless You All.
 
 

இஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்

முன் பக்கம் செல்ல

HOME PAGE

தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்

1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1

2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2

3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3

4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4

பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்

1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1

2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2

பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்

1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்

2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்