இஸ்லாம் அமைதி மார்கமா? இஸ்லாம் இனிய மார்கமா? இஸ்லாம் உண்மையான மார்கமா?

ஆன்சரிங் இஸ்லாம்

பல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்

சத்தியவான் தளம் செல்ல

Thursday, April 17, 2008

ஏகத்துவத்திற்கு பதில்: குற்றமுள்ள நெஞ்சம் குறுகுறுக்கும்




ஏகத்துவத்திற்கு பதில்: குற்றமுள்ள நெஞ்சம் குறுகுறுக்கும்

முன்னுரை: ஏகத்துவ இப்ராஹிம் அவர்கள் நான் "சொல்லாத விவரத்தை" சொன்னதாக கற்பனை செய்துக்கொண்டு என் மீது குற்றம் சாட்டியுள்ளார்.

அவர் என் மீது சாற்றும் குற்றம்:

கட்டுரை: 'கிறிஸ்தவர்கள் ஏன் இஸ்லாமியர்கள் போல் கேள்வி பதில் நிகழ்ச்சி நடத்துவதில்லை'

குற்றச்சாட்டு: இக்கட்டுரையில் "இஸ்லாமியர்கள் நடத்தும் கேள்வி பதில் நிகழ்ச்சிகளில் வெறும் தீவிரவாதத்தைப் பற்றி மட்டும் தான் கேள்விகள் கேட்கப்படுகின்றது என்ற தோரணையில் " நான் எழுதியதாக அவர் குற்றம் சாட்டுகிறார்.

இப்படி நான் எழுதினேனா? அல்லது இவர் வேண்டுமென்றே மாற்றிச் சொல்கிறாரா? என்பதை அறிவதற்கு முன்பாக, அவர் எழுதியதை படிக்கவும்:

ஏகத்துவ இப்ராஹிம் அவர்கள் எழுதியது:

அது போக இதற்கு முன் நீங்கள் எழுதின வேறு சில மறுப்பக்கட்டுரைகளின் லட்சனம் என்ன?

சமீபத்தில் நீங்கள் எழுதின 'கிறிஸ்தவர்கள் ஏன் இஸ்லாமியர்கள் போல் கேள்வி பதில் நிகழ்ச்சி நடத்துவதில்லை' என்ற கட்டுரையில் நீங்கள் எழுதியதைப் பார்த்தால் பரிதாபப்படுவதைத் தவிர வேறொன்றும் கிடையாது.

உலகம் முழுவதும் பலமொழகளிலும் இஸ்லாமியர்கள் நடத்தும் மாற்றுமதத்தவர்களின் கேள்விபதில் நிகழ்ச்சிகள் பிரசித்திப்பெற்றவை. அந்நிகழ்ச்சிகளில் இஸ்லாமியர்களைப் பற்றிய சந்தேகங்களை மட்டுமே நாங்கள் கலைவது போலவும் - மற்ற கேள்விகளான குர்ஆன், ஹதீஸ்கள் பற்றிய சந்தேகங்களோ அல்லது எங்களின் நம்பிக்கைகள், வணக்கவழிபாடுகள், கொள்கைகள் பற்றிய சந்தேகங்களோ கேட்கப்படுவதில்லை என்பது போல் நீங்கள் எழுதி இருப்பது உங்களின் அறியாமையின் உச்சக்கட்டம்.

'மாற்றுமத்தவர்களின் நேரடி கேள்வி பதில் நிகழ்சிகளில்' குர்ஆன் பற்றி கேட்கப்படுகின்றது. இஸ்லாத்தின் நம்பிக்கைகள் பற்றி கேட்கப்படுகின்றது. குர்ஆனில் முரண்பாடு இருக்கின்றதா? என்று கேட்கப்படுகின்றது. குர்ஆன் அறிவியலுக்கு ஒத்துபோவில்லையே? என்று கேட்கப்படுகின்றது. ஏன் உங்களைப்போண்றோர் பரப்பும் அவதூறுப் பிரச்சராங்களுக்கான விளக்கங்கள் கேட்கப்படுகின்றது. இப்படி எல்லாவிதமான கேள்விளும்; கேட்கப்படுகின்றன. ஆனால் இந்த உண்மைகளை மறைக்க வேண்டும் என்பதற்காக, வேண்டும் என்றே நீங்கள் 'வெறும் தீவிரவாதத்தைப் பற்றி மட்டும்தான் கேட்கப்படடுகின்றது என்பது போல் எழுதி இருக்கின்றீர்கள். காரணம் அப்பொழுது தான் கிறிஸ்தவத்தில் தீவிரவாதம் பற்றிய பிரச்சனையோ அல்லது மற்றபிரச்சனையோ இல்லை என்று எழுதி, எங்களுக்கு அது போண்ற நிகழ்ச்சிகள் நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்று மறுக்கலாம் என்பதற்காக.


Source: http://egathuvam.blogspot.com/2008/03/blog-post_19.html
( formats are mine)

1. வெறும் தீவிரவாதம் பற்றிய கேள்விகள் மட்டும் தான் கேட்கப்படுகின்றது என்று நான் எழுதினேனா?

கிறிஸ்தவர்கள் ஏன் இஸ்லாமியர்கள் போல கேள்வி பதில் நிகழ்ச்சிகளை நடத்துவதில்லை என்ற கட்டுரையில் நான் ஆறு தலைப்புக்களில் என் கருத்தை சொல்லியுள்ளேன்.

காரணம் 6: தீவிரவாதிகள் தங்கள் செயலுக்கு இஸ்லாமின் பெயரை பயன்படுத்துவதினால், "இஸ்லாம் அமைதி மதம்" என்பதை காட்ட பல நிகழ்ச்சிகள் தேவைப்படுகிறது:

காரணம் 5. இஸ்லாமிய நாடுகளின் செயல்கள், தண்டனைகள் (ஷரியா சட்டம்):

காரணம் 4. இஸ்லாமிய அறிஞர்களின், இமாம்களின் "அறிக்கைகள்" சொற்பொழிவுகள்:

காரணம் 3. ஹதீஸ்கள்:

காரணம் 2. முகமது:

காரணம் 1. குர் ஆன்:

இந்த ஆறு தலைப்புக்களில் நான் இரண்டு தலைப்புகளில்(காரணம் 6 மற்றும் காரணம் 4) மட்டுமே தீவிரவாதம் பற்றி எழுதியுள்ளேன். அதுவும், இஸ்லாம் தீவிரவாதத்தை பரப்புகிறது என்று எழுதவில்லை. அதற்கு பதிலாக, இஸ்லாமுக்கு ஆதரவாக நான் எழுதியுள்ளேன். மற்ற நான்கு தலைப்புக்களில் "தீவிரவாதம்" என்ற வார்த்தையையும் நீங்கள் காணமுடியாது. இப்ராஹிம் அவர்களே உங்களால் முடிந்தால் கண்டுபிடியுங்கள்.

காரணம் 6: தீவிரவாதிகள் தங்கள் செயலுக்கு இஸ்லாமின் பெயரை பயன்படுத்துவதினால், "இஸ்லாம் அமைதி மதம்" என்பதை காட்ட பல நிகழ்ச்சிகள் தேவைப்படுகிறது:

காரணம் 4. இஸ்லாமிய அறிஞர்களின், இமாம்களின் "அறிக்கைகள்" சொற்பொழிவுகள்:

ஆனால், இப்ராஹிம் அவர்களுக்கோ எல்லா தலைப்புக்களிலும் "தீவிரவாதம்" என்ற வார்த்தை தென்பட்டு உள்ளது. இன்னொரு முறை என் கட்டுரையை அவர் படித்தால் நன்றாக இருக்கும்.

2. இந்த இரண்டு தலைப்புக்களில் நான் எழுதியது என்ன? (நான் எதைச் சொல்ல முயன்றுள்ளேன்)

குறைந்த பட்சமாக இந்த இரண்டு தலைப்புகளிலாவது, "தீவிரவாதம்" பற்றி தான் எல்லா கேள்விகளும் கேட்கப்படுகிறது என்றாவது நான் எழுதி இருக்கிறேனா? என்று பார்க்கலாம்.

காரணம் 6ல் நான் சொன்ன செய்தி: "தீவிரவாதிகள் தங்கள் ஒரு கையில் குர்‍ஆனை வைத்துக்கொண்டு, மற்றொரு கையில் துப்பாகியுடன் உலக மக்களுக்கு தங்களை காட்டிக்கொள்வதால், இஸ்லாமுக்கு அவதூறு(கெட்ட) பெயர் என்று எழுதினேன்.

நான் எழுதியது:

காரணம் 6: தீவிரவாதிகள் தங்கள் செயலுக்கு இஸ்லாமின் பெயரை பயன்படுத்துவதினால், "இஸ்லாம் அமைதி மதம்" என்பதை காட்ட பல நிகழ்ச்சிகள் தேவைப்படுகிறது:

ஏன் இஸ்லாமியர்கள் கேள்வி பதில் நிகழ்ச்சிகளை அதிகமாக நடத்துகிறார்கள் என்று சிந்திப்பீர்களானால், இதற்குள்ள பல காரணங்களில் இந்த ஆறாவது காரணமும் ஒன்று என்று நான் சொல்வேன்.

இஸ்லாம் அமைதி மார்கமா இல்லையா என்பதைப்பற்றி இங்கு நான் சொல்லவரவில்லை, தீவிரவாதிகள் தங்கள் ஒரு கையில் துப்பாக்கியுடனும், மறுகையில் குர்‍ஆனையும் ஏந்திக்கொண்டு நிற்பதைத் தான் சொல்கிறேன். "தீவிரவாதிகள் இஸ்லாமியர்கள்" இல்லை என்று இஸ்லாமியர்கள் கூட்டங்களில், நிகழ்ச்சிகளில் பேசுவார்கள். ஆனால், தீவிரவாதிகள் தங்களை "இஸ்லாமியர்கள்" என்று தான் உலகத்திற்கு அடையாளம் காட்டிக்கொள்கிறார்கள். அல்லாவின் வழியில் தாங்கள் இந்த (தீவிரவாத) செயல்களை செய்கின்றனர் என்று சொல்லிக்கொள்கிறார்கள்.

இப்படி தீவிரவாதிகள் தங்களை ஒரு இஸ்லாமியர்களாக காட்டிக்கொள்வதால், இஸ்லாமிய அறிஞர்கள் "இஸ்லாமை பரப்புவதற்கு" இது ஒரு தடையாக இருப்பதால், பல நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள். மக்கள் இஸ்லாமை ஒரு அமைதி மார்க்கம் என்று 'அங்கீகரிக்கவேண்டும்' என்பதற்காக மக்களை கேள்விகள் கேட்கச்சொல்லி அதற்கு பதில் அளித்து வருகின்றனர்.

எந்த ஒரு இஸ்லாமிய கேள்வி பதில் நிகழ்ச்சியை பாருங்கள், குறைந்த பட்சம் ஒரு கேள்வியாவது மாற்று மத நண்பர்கள் "இஸ்லாமிய தீவிரவாதிகள் பற்றி, ஜிஹாத் பற்றி" கேட்பார்கள். அதாவது, மாற்று மத அன்பர்களின் மனதில் "இஸ்லாம் ஒரு தீவிரவாத மார்க்கம்" என்பதை தீவிரவாதிகள் விதைத்துவருகின்றனர்.இஸ்லாமை ஒரு தீவிரவாத மார்க்கமாக இஸ்லாமியர்கள் காட்டினாலும், வலியவந்து மாற்று மதத்தவர்கள் "இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கமாக" கருதவேண்டும் என்று இஸ்லாமிய அறிஞர்கள் எதிர்பார்க்கிறார்கள். இதற்காக ஊடகங்கள் தவறான செய்தியை பரப்புகிறார்கள் என்று கூறுகிறார்கள். ஆக, இஸ்லாமுக்கு தீவிரவாதிகள் கொண்டுவரும் கெட்டபெயரை மாற்றவேண்டும் என்பதற்காக இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் மூலமாக இஸ்லாமிய அறிஞர்கள் நடத்திவருகின்றனர். இப்படிப்பட்ட தீவிரவாதிகள் "இஸ்லாமியர்கள் இல்லை, இது தவறு, இஸ்லாம் இதை அனுமதிப்பதில்லை" என்று சொல்லிவருகின்றனர்.

கிறிஸ்தவத்தை எடுத்துக்கொண்டால், இப்படிப்பட்ட பிரச்சனை இல்லை. கிறிஸ்தவ பெயரை பயன்படுத்தி யாரும் தீவிரவாத செயலில் ஈடுபடுவதில்லை, ஒரு கையில் துப்பாக்கியுடம், மறு கையில் பைபிளை ஏந்திக்கொண்டு யாரும் போஸ் கொடுப்பதில்லை….. …..

…..

எனவே, கிறிஸ்தவத்திற்கு அதிகமாக கேள்வி பதில் நிகழ்ச்சிகளை நடத்தி மக்களின் மனதில் விதைக்கப்பட்ட விதையை எடுக்கவேண்டிய அவசியமில்லை, ஆனால், இஸ்லாமுக்கு அவசியமுண்டு, இன்னமும் இருக்கும்.

இந்த கட்டுரையை படிக்கும் நீங்கள் யாராக இருந்தாலும் சரி, நான் சொல்லவந்த செய்தி என்ன என்பதை சிந்தித்துப்பாருங்கள்.

a) இஸ்லாமிய நிகழ்ச்சிகளில் "தீவிரவாதம்" பற்றிய கேள்விகள் தான் அதிகமாக கேட்கிறார்கள் என்று நான் எழுதியுள்ளேனா?

b) தீவிரவாதத்திற்கு காரணம் இஸ்லாம் என்று மேலே உள்ள வரிகளில் சொல்லியுள்ளேனா?


இதற்கு பதிலாக, இஸ்லாமுக்கு ஆதரவாக நான் எழுதியுள்ளேன். தீவிரவாதிகளின் செயல்களால்(தங்கள் கைகளில் குர்‍ஆனை வைத்து நிற்பதால்) இஸ்லாமுக்கு அவதூறு என்று எழுதினேன்.

உண்மையைச் சொன்னால், இந்த வரிகளை நீங்கள் சொல்லவேண்டும், இஸ்லாமிய அறிஞர்கள் சொல்லவேண்டும், "அமைதி இஸ்லாமுக்கு சில தீவிரவாதிகளால் அவதூறு என்று நீங்கள் சொல்லவேண்டுமே" ஒழிய நான் சொல்லாதவற்றை என்மேல் குற்றம் சுமத்தக்கூடாது.

நான் எழுதிய கீழ் கண்டவரிகளுக்கு என்ன பொருள் என்று இதை படிப்பவர்கள் தெரிந்துக்கொள்ளுங்கள்.

எந்த ஒரு இஸ்லாமிய கேள்வி பதில் நிகழ்ச்சியை பாருங்கள், குறைந்த பட்சம் ஒரு கேள்வியாவது மாற்று மத நண்பர்கள் "இஸ்லாமிய தீவிரவாதிகள் பற்றி, ஜிஹாத் பற்றி" கேட்பார்கள். அதாவது, மாற்று மத அன்பர்களின் மனதில் "இஸ்லாம் ஒரு தீவிரவாத மார்க்கம்" என்பதை தீவிரவாதிகள் விதைத்துவருகின்றனர்

மாற்று மதத்தவர்களின் "சந்தேகத்திற்கு காரணம் தீவிரவாதிகள்" என்று எழுதினேன், இது உண்மையில்லையா?

சரி போகட்டும், இப்போது நேரடியாக ஏகத்துவ இப்ராஹிம் அவர்களுக்கும், தமிழ் முஸ்லீம்களுக்கும் சில நேரடிக் கேள்விகள், இதற்கு பதில் தாருங்கள்:

1."இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம், தீவிரவாத செயல்களை இஸ்லாம் ஆதரிப்பதில்லை" என்றுச் சொல்கிறீர்கள். அப்படியானால், தீவிரவாதிகள் தங்கள் கைகளில் துப்பாக்கியும், குர்‍‍ஆனையும் ஏந்திக்கொண்டு மக்களுக்கு தங்களை காட்டிக்கொள்வது: சரியா? தவறா?

2. ஒரு நல்ல முஸ்லீமின் வாயினால் சொல்லப்படும் குர்‍ஆன் வசனங்கள் மற்றும் அல்லாஹு அக்பர் போன்ற வார்த்தைகளை, தீவிரவாதிகள் சொல்வதினால், மாற்று மதத்தவர்கள் இஸ்லாம் பற்றி தவறாக நினைக்க வாய்ப்பு உள்ளது என்று நான் சொல்கிறேன், இது சரியா? தவறா?

3. "இது தவறு, தீவிரவாதிகள் இப்படி செய்யக்கூடாது" என்று சொல்வீர்களானால், இதை நான் சொன்னால் மட்டும் தவறாக மாறிவிடுமா?

4. தீவிரவாதிகள் இப்படி செய்வது சரியானது என்றுச் சொல்வீர்களானால், மாற்று மதத்தவர்களின் சந்தேகம் இன்னும் வலுவடையும்.


இந்த கேள்விகளுக்கு உங்கள் (முஸ்லீம்களின்) பதில் என்ன? நான் அடுத்த தலைப்பிற்குச் செல்கிறேன்.

காரணம் 4ல் நான் சொன்ன செய்தி: இந்த காரணத்தில் நான் சொன்ன செய்தி, சில இஸ்லமிய அறிஞர்களின் "அறிக்கைகள், சொற்பொழிவுகள்", மாற்று மத நண்பர்களின் மனதில் இஸ்லாம் பற்றிய தவறான எண்ணங்கள் வருவதற்கு காரணமாக உள்ளது என்றேன், இது சரியா அல்லது தவறா?

இதற்கு நான் இரண்டு உதாரணங்களை கொடுத்தேன், முதலாவது, ஜாகிர் நாயக் அவர்கள் பின்லாடனைப் பற்றிச் சொன்ன தனது கருத்தையும், இரண்டாவது, ஒரு இஸ்லாமிய அறிஞர், ஒரு ஆணும் பெண்ணும் தங்கள் அலுவல்களை செய்யும் போது தனி அறையில் இருக்கக்கூடாது, அப்படி இருக்கவேண்டுமானால், அந்தப் பெண் இந்த ஆணுக்கு தன் தாய்ப்பாலை குடிக்க கொடுக்கவேண்டும் என்றுச் சொன்ன செய்தியைச் சொன்னேன். இப்படி இஸ்லாமியர்கள் தங்கள் கருத்துக்களால் விளையும் விளைவுகளை சிந்திக்காமல், பேசுவதால் இஸ்லாம் பற்றி மற்றவர்கள் குழம்புகிறார்கள் என்றேன். இது தவறா?

காரணம் 4. இஸ்லாமிய அறிஞர்களின், இமாம்களின் "அறிக்கைகள்" சொற்பொழிவுகள்:

ஒரு மார்கத்தின் ஊழியர்களின் பேச்சுக்கள் எப்போதும் பெரும்பான்மையாக அம்மார்க்கத்திற்கு நல்ல பெயரை கொண்டுவரும். இஸ்லாமிய ஊழியர்களின் பேச்சுக்கள் இஸ்லாமியர்களுக்கு வேண்டுமானால் அது "சரி" என்று படலாம், ஆனால், மாற்று மதமக்களுக்கு அது "இஸ்லாம் பற்றி" தவறான கருத்தை கொடுக்கிறது.

சில உதாரணங்கள்:

டாக்டர் ஜாகிர் நாயக்கிடம் "ஒசாமா பின் லாடன் செய்வது சரியா? இல்லையா? உங்கள் கருத்தை சொல்லுங்கள்?" என்று கேள்வி கேட்கப்பட்டது.

இதற்கு டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள் கீழ் கண்ட பதிலை அளிக்கிறார்கள்: "ஒசாமா பின் லாடன் இஸ்லாமின் எதிரியுடன் போர் புரிந்தால், நான் அவரோடு இருக்கிறேன். எனக்கும் அவருக்கும் தனிப்பட்ட முறையில் நட்பு இல்லை... இருந்தாலும் நான் அவருக்காக இருக்கிறேன். ஒசாமா அமெரிக்கா என்ற மிகப்பெரிய தீவிரவாதியோடு தீவிரவாதம் புரிந்தால், நான் அவரோடு இருக்கிறேன். ஒவ்வொரு முஸ்லீமும் தீவிரவாதியாக இருக்கவேண்டும்....."

If he is on the truth and if he fighting the enimies of the Islam. I am for him. ..... If he is terrorizing (the America) the terrorist, I am with him.... every muslim should be terrorist.....

http://www.youtube.com/watch?v=Bxk5AAA5FbI

……..

……..

இஸ்லாமிய உலகம் தவிர மற்ற உலக நாடுகளில் வாழும் மக்களில் பெரும்பான்மையாக "ஒசாமா பின் லாடன்" செய்வது தவறான செயல், என்று நம்புகின்றனர். இஸ்லாமிய அறிஞர்களில் சிலர் (வேண்டா வெறுப்போடு) "அவர் செய்வது தவறு தான்" என்று சொல்லிக்கொண்டு வருகின்றனர். இந்த சூழ்நிலையில், இஸ்லாமுக்கு நல்லபெயர் கொண்டுவரவேண்டிய ஒரு அறிஞர், "நான் ஒசாமா பின் லாடன் கட்சி தான்" ஏனென்றால், அவர் இஸ்லாமின் எதிரியோடு போராடுகிறார் என்று சொன்னால்.இஸ்லாமியர்கள் அல்லாத மக்கள், அதாவது இந்துக்கள், கிறிஸ்தவர்கள் இன்னுமுள்ளவர்க‌ள் என்ன நினைப்பார்கள், இஸ்லாமையும், பின் லாடனையும் ஒன்று சேர்த்து நினைத்துக்கொள்வார்கள். அதாவது, பின் லாடனின் இந்த தீவிரவாத செயல்களுக்கு இஸ்லாம் தான் காரணம் என்று நினைப்பார்களா இல்லையா?

ஆனால், பல இஸ்லாமிய அறிஞர்கள் கூட்டங்கள் போட்டு, மேடைகளில் "இஸ்லாம் எப்போதும் வன்முறையை, தீவிரவாத செயல்களை ஆதரிப்பதில்லை" என்று சொல்கிறார்கள். இதனால், மக்கள் குழம்பிப்போய், "இஸ்லாமும் தீவிரவாதமும் ஒன்று தான் போல் இருக்கிறது" என்று நினைத்துக்கொண்டு, இப்படி இஸ்லாமியர்கள் நடத்தும் எந்த ஒரு கேள்வி பதில் நிகழ்ச்சியானாலும் சரி, முக்கியமாக "தீவிரவாதம் பற்றி" ஒரு கேள்வியை கேட்கிறார்கள்.

இந்த தலைப்பிலும், "இஸ்லாமும் தீவிரவாதமும் ஒன்று" என்று நான் சொல்லவில்லை. ஆனால், சில இஸ்லாமிய அறிஞர்கள் மாற்று மத மக்களின் இதயங்களில் இப்படிப்பட்ட எண்ணங்களை விதைக்கிறார்கள் என்றேன். அதனால், மக்கள் இப்படிப்பட்ட கூட்டங்களில் தங்கள் சந்தேகங்களை கேட்கிறார்கள் என்றேன். இது தவறா? நீங்கள் சொல்லவேண்டியவைகளை நான் இந்த கட்டுரையில் சொல்லியுள்ளேன்.

3. இஸ்லாம் பற்றிய இதர கேள்விகளை கேட்கிறார்கள் என்று நான் சொல்லவில்லையா?

இப்ராஹிம் அவர்கள் சொல்கிறார்கள், கேள்விபதில் நிகழ்ச்சிகளில் பலவகையான கேள்விகள் கேட்கப்படுகின்றன என்றார். நானும் தான் இதைச் சொன்னென்.

இப்ராஹிம் அவர்கள் எழுதியது:

உலகம் முழுவதும் பலமொழகளிலும் இஸ்லாமியர்கள் நடத்தும் மாற்றுமதத்தவர்களின் கேள்விபதில் நிகழ்ச்சிகள் பிரசித்திப்பெற்றவை. அந்நிகழ்ச்சிகளில் இஸ்லாமியர்களைப் பற்றிய சந்தேகங்களை மட்டுமே நாங்கள் கலைவது போலவும் - மற்ற கேள்விகளான குர்ஆன், ஹதீஸ்கள் பற்றிய சந்தேகங்களோ அல்லது எங்களின் நம்பிக்கைகள், வணக்கவழிபாடுகள், கொள்கைகள் பற்றிய சந்தேகங்களோ கேட்கப்படுவதில்லை என்பது போல் நீங்கள் எழுதி இருப்பது உங்களின் அறியாமையின் உச்சக்கட்டம்.

'மாற்றுமத்தவர்களின் நேரடி கேள்வி பதில் நிகழ்சிகளில்' குர்ஆன் பற்றி கேட்கப்படுகின்றது. இஸ்லாத்தின் நம்பிக்கைகள் பற்றி கேட்கப்படுகின்றது. குர்ஆனில் முரண்பாடு இருக்கின்றதா? என்று கேட்கப்படுகின்றது. குர்ஆன் அறிவியலுக்கு ஒத்துபோவில்லையே? என்று கேட்கப்படுகின்றது. ஏன் உங்களைப்போண்றோர் பரப்பும் அவதூறுப் பிரச்சராங்களுக்கான விளக்கங்கள் கேட்கப்படுகின்றது. இப்படி எல்லாவிதமான கேள்விளும்; கேட்கப்படுகின்றன. ஆனால் இந்த உண்மைகளை மறைக்க வேண்டும் என்பதற்காக, வேண்டும் என்றே நீங்கள் 'வெறும் தீவிரவாதத்தைப் பற்றி மட்டும்தான் கேட்கப்படடுகின்றது என்பது போல் எழுதி இருக்கின்றீர்கள்.

நான் எழுதியது:

………இன்றும் இஸ்லாமிய கேள்வி பதில் நிகழ்ச்சிகளை கவனித்துப்பாருங்கள், பெரும்பான்மையாக இஸ்லாமியர்கள் கேட்கும் கேள்விகள் அனைத்தும் "இந்த ஹதீஸில் இப்படி உள்ளதே, வேறு ஹதீஸ் இப்படி சொல்கிறாரே நாங்கள் எதை பின்பற்றுவது?" போன்ற கேள்விகளாகவே இருக்கும். .....

……..

கேள்வி பதில் நிகழ்ச்சிகளில் இஸ்லாமியர்கள் கேட்கும் கேள்விகளை கவனித்தீர்களானால், அவைகள் பெரும்பான்மையாக "இஸ்லாமிய அடிப்படை கோட்பாடுகளைப் பற்றியதாகவே" இருக்கும். நமாஜ் பற்றி, உடல் சுத்தம் பற்றி, எத்தனை முறை குளிக்கவேண்டும், எப்போது குளிக்கவேண்டும், குறிப்பிட்ட சூழ்நிலையை சொல்லி இதன் பிறகு குளித்தபிறகு தான் நமாஜ் செய்யவேண்டுமா? போன்ற கேள்விகளாகவே இருக்கும்…….


மேலே நான் சொன்னதை கவனித்துப்பாருங்கள், நான் சொன்னதும், இப்ராஹிம் அவர்கள் சொன்னதும் ஒன்றாக இல்லையா?. தீவிரவாதம் பற்றிய கேள்விகள் தான் கேட்கிறார்கள் என்று நான் எழுதியுள்ளேனா?

பெரும்பான்மையாக இஸ்லாமிய அடிப்படை கோட்பாடுகள் பற்றிய கேள்விகள் தான் இருக்கும் என்று நான் சொன்னதை விட்டுவிட்டு,

கேட்கப்படும் கேள்விகளில் குறைந்த பட்சம் ஒரு கேள்வி "தீவிரவாதம்" பற்றி இருக்கும் என்று சொன்னதை மட்டும் எடுத்துக்கொண்டு


எப்படி என் மீது குற்றம் சுமத்துகிறீர்கள் நீங்கள்? "பெரும்பான்மையாக" என்ற வார்த்தைக்கும், "குறைந்தபட்சம் ஒரு கேள்வி" என்ற வார்த்தைகளுக்கும் இடையே உள்ள வித்தியாசம், இப்ராஹிம் அவர்களுக்கு தெரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன்.

அதாவது 6 தலைப்புக்களில்(100%), 2 தலைப்புக்களில்(34%) மட்டும் தான் நான் தீவிரவாதம் என்ற வார்த்தையையே பயன்படுத்தியுள்ளேன். இதிலும் இஸ்லாமுக்கோ, குர்‍ஆனுக்கோ தீவிரவாதத்தை சம்மந்தப்படுத்தவில்லை. தீவிரவாதிகளின் செயல்கள், சில அறிஞர்களின் அறிக்கைகள், இஸ்லாமை மக்கள் புரிந்துக்கொள்ள தடையாக உள்ளது என்றேன். இது உண்மையில்லையா?

முடிவுரை:

முடிவாக இப்ராஹிம் அவர்களே, நான் என்ன எழுதினேனோ அதைப் பற்றி நீங்கள் விமர்சித்தால் போதும், அதற்கு மேலே போகவேண்டாம். உங்கள் இஸ்லாமியர்கள் எங்கள் கட்டுரைகளை படிக்கக்கூடாது என்று உங்களுக்கு விருப்பமிருந்தால், வெளிப்படையாக உங்கள் இஸ்லாம் சகோதரர்களுக்குச் சொல்லுங்கள், உங்கள் தளங்களில் கட்டுரைகளை எழுதுங்கள், அதை விட்டுவிட்டு, "இஸ்லாம் ஒரு தீவிரவாத மதம்" என்று இவர்கள் சொல்கிறார்கள் என்று எங்கள் மீது குற்றம் சாட்டினால், யாரும் என் கட்டுரைகளை படிக்கமாட்டார்கள் என்ற உங்கள் யுக்தி செல்லுபடியாகாது. முக்கியமான தலைப்புகளைப் பற்றி நான் எழுதும் போது, குர்‍ஆன், மற்றும் ஹதீஸ்கள் ஆதாரம் இல்லாமல் எழுதமாட்டேன். எனவே, இன்னொரு முறை என் கட்டுரையை படிக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.

இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்கிறதா இல்லையா என்பதைப் பற்றி வேண்டுமானால், வேறு ஒரு கட்டுரையில் விளக்குகிறேன். இந்த கட்டுரையை பொருத்தமட்டில், நான் அதை சொல்லவில்லை, நடுநிலையோடு தான் "தீவிரவாதம்" என்ற வார்த்தையை பயன்படுத்தியுள்ளேன். நான் சொல்லாத விவரத்தை சொன்னதாக எழுதுகிறீர்கள், "இதைத்தான் குற்றமுள்ள நெஞ்சம் குறுகுறுக்கும்" என்று சொல்வார்களோ!

ஏகத்துவத்தின் தற்போதைய கட்டுரைக்கு ஈஸா குர்‍ஆனின் இதர பதில்கள்:

1. உவமைக்கு உண்மைக்கும் வித்தியாசம் அறியா அறிஞர்கள் : பாகம் - 2 எசேக்கியேல் 23 மறுவிசாரணை

2. ஏகத்துவத்திற்கு பதில்: யாகாவா ராயினும் "நா" காக்க‌ (இஸ்லாம் சகிப்புத்தன்மையற்ற மார்க்கம் என்று அடையாளம் காட்டும் இஸ்லாமியர்கள்)



Isa Koran Home Page Back - Egaththuvam Rebuttal Index page

இஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்

முன் பக்கம் செல்ல

HOME PAGE

தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்

1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1

2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2

3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3

4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4

பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்

1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1

2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2

பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்

1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்

2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்