இஸ்லாம் அமைதி மார்கமா? இஸ்லாம் இனிய மார்கமா? இஸ்லாம் உண்மையான மார்கமா?

ஆன்சரிங் இஸ்லாம்

பல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்

சத்தியவான் தளம் செல்ல

Thursday, February 26, 2009

வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?

 

இஸ்லாமும் நோவாவும்

முன்னுரை: நோவாவின் வெள்ளம் உலகம் முழுவதும் வியாபித்தது என்று பைபிள் கூறுகிறது, இதையே குர்‍ஆனும், ஆரம்ப கால இஸ்லாமியர்களும் கூறினார்கள். ஆனால், தற்கால இஸ்லாமிய அறிஞர்கள் வெள்ளம் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே அதாவது நோவாவின் சமூகத்தார்களை மட்டுமே அழித்தது, பைபிள் சொல்வது தவறு என்றுச் சொல்கிறார்கள்.

குர்‍ஆன் சொல்வதும் "உலகம் முழுவதும் ஏற்பட்ட வெள்ளமே" என்று விளக்கும் கட்டுரையை இங்கு படிக்கவும்:

குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா? (DOES THE QURAN TEACH A LOCAL FLOOD?)

இந்த கட்டுரையில் நாம் தற்கால இஸ்லாமியர்கள் சொல்வது போல, வெள்ளமானது ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே ஏற்பட்டது என்பதை ஒரு விவாதத்திற்கு ஏற்றுக்கொண்டு, இதனால், விளையும் பிரச்சனைகள் என்ன? அவைகளை எப்படி இஸ்லாமியர்கள் சரி செய்வார்கள் என்பதை காண்போம்.

1) அல்லாஹ்வின் கட்டளை: ஒவ்வொரு வகையிலும் ஆண் பெண் கொண்ட ஒரு ஜோடியை கப்பலில் ஏற்றிக்கொள்

ஒவ்வொரு வகையான மிருகங்களில் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் என்று ஒரு ஜோடியை தன்னிடம் கப்பலில் ஏற்றிக்கொள் என்று அல்லாஹ் நோவாவிற்கு கட்டளையிடுகிறார். அதனை குர்‍ஆன் 11:40 என்ற வசனத்தில் படிக்கலாம்.

முஹம்மது ஜான் மொழிபெயர்ப்பு:

இறுதியாக, நம் உத்தரவு வந்து, அடுப்புப் பொங்கவே, (நாம் நூஹை நோக்கி;) "உயிர்ப் பிராணிகள் ஒவ்வொரு வகையிலிருந்தும் (ஆண் பெண் கொண்ட) ஒவ்வொரு ஜோடியை (அக்கப்பலில்) ஏற்றிக் கொள்ளும்; (மூழ்கடிக்கப்படுவார்கள் என்று எவர்களைக் குறித்து முன்பே நம்) வாக்கு ஏற்பட்டுவிட்டதோ அவர்களைத் தவிர் உம் குடும்பத்தாரையும், ஈமான் கொண்டவர்களையும் ஏற்றிக்கொள்ளும்" என்று நாம் கூறினோம்; வெகு சொற்ப மக்களைத் தவிர மற்றவர்கள் அவருடன் ஈமான் கொள்ளவில்லை. (குர்‍ஆன் 11:40)

பி.ஜைனுல் ஆபிதீன் மொழிபெயர்ப்பு:

நமது கட்டளை வந்து, தண்ணீர் பொங்கிய போது "ஒவ்வொன்றிலும் ஒரு ஜோடியையும், உமது குடும்பத்தாரில் நமது விதி முந்தி விட்டவர்களைத் தவிர மற்றவர்களையும், நம்பிக்கை கொண்டோரையும் ஏற்றிக் கொள்வீராக!" என்று கூறினோம். அவருடன் மிகச் சிலரே நம்பிக்கை கொண்டனர். (குர்‍ஆன் 11:40)

குர்‍ஆனும், இஸ்லாமியர்கள் நபி என்று கருதும் முஹம்மதுவும், மற்றும் ஆரம்பகால இஸ்லாமிய அறிஞர்களாகிய இபின் அப்பாஸ், போன்றோர்களும், மற்றும் இபின் கதீர் போன்ற குர்‍ஆன் விரிவுரையாளர்களும், நோவாவின் காலத்தில் ஏற்பட்ட வெள்ளம் பூமி அனைத்தும் வியாபித்தது என்றுச் சொல்வதை ஏற்றுக்கொள்ளாமல், பைபிளை குற்றம் பிடிப்பதற்காகவே "வெள்ளம் ஒரு பகுதியில் மட்டும் ஏற்பட்டது" என்றுச் சொல்லும் இஸ்லாமியர்களுக்கு கீழ் கண்ட கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன.

ஒரு குறிப்பிட்ட இடம் மட்டுமே அழிக்கபோவதாக இருந்தால், ஏன் மிருகங்களில் ஆண் பெண் என்று ஒரு கோடி பாதுகாக்கப்படவேண்டும் என்று அல்லாஹ் விரும்பினார்/செயல்படுத்தினார்?

• அல்லாஹ் அழிக்க நினைத்தது, நோவாவின் சமூகத்தினரை மட்டுமே என்று சொன்னால், ஏன் அவர் மிருகங்களை பாதுகாக்க அதுவும் இனவிருத்தி அடைவதற்கு தேவையான ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் மிருகங்களை தன் கப்பலில் சேகரித்துக் கொள் என்று நோவாவிற்கு கட்டளையிடவேண்டும்?

• நோவாவும் அவரது சமூகத்தார்களும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் வசித்து இருப்பார்கள், அவர்கள் சில கிலோ மீட்டர் தூரம் வியாபித்து இருக்கலாம், உதாரணத்திற்கு எடுத்துக்கொண்டால், ஒரு சின்ன ஊராக இருக்கலாம், அல்லது ஒரு சிறிய பட்டணமாக இருக்கலாம். ஒரு பேச்சுக்காக சென்னை பட்டணம் அளவிற்கு பெரிய இடத்தில் அவர்கள் வசித்ததாகவே கணக்கெடுத்துக் கொண்டாலும், அந்த இடத்தில் இருக்கும் மிருகங்களில் ஒரு ஆண் பெண் ஜோடியை பாதுகாக்கவேண்டிய அவசியம் என்ன?

• ஒரு இடத்தில் இருக்கும் மிருகங்கள் அடுத்த இடத்தில் இருக்காதோ? நோவாவின் சமூகத்தார்கள் வாழ்ந்த இடத்தில் இருந்த மிருகங்கள் வேறு இடத்தில் இல்லாமல் போகுமா? இஸ்லாமியர்கள் சிந்திக்கவேண்டும்.

• நோவாவின் காலத்தில் அவரது இருப்பிடமுள்ள இடத்தில் மட்டுமே மிருகங்கள் இருந்தனவா? இவ்வளவு பெரிய பூமியில் வேறு எங்குமே மிருகங்கள் இல்லையா?

• நோவாவின் வசிப்பிடத்திலுள்ள மிருகங்களை அப்படியே மனிதர்களோடு சேர்த்து அழித்துவிட்டால், உலகத்தில் அந்த மிருக இனமே இல்லாமல் போகும் என்று அல்லாஹ் சிந்தித்து, ஒரு ஜோடியை பாதுகாக்கவேண்டிய அவசியமென்ன? உதாரணத்திற்கு, நோவா சென்னை பட்டணத்தில் வசித்திருந்தால், அல்லாஹ் சென்னையை மட்டும் அழிக்க திட்டமிட்டிருந்தால், சென்னையில் வசிக்கும் ஒரு ஜோடி ஆடுகளை(ஆண் பெண்) பாதுகாக்க வேண்டிய அவசியமென்ன? சென்னையில் இருக்கும் ஆடுகள், மதுரையில் இருக்காதா? மும்பையில் இருக்காதா? கொல்கத்தாவில் இருக்காதா? அதிகபட்சமாக மற்ற கண்டங்களில், நாடுகளில் இருக்காதா?

• சிலர், ஆஸ்திரேலியாவில் மட்டும் காணப்படும் கங்காரு போன்ற மிருகங்களை பாதுகாக்கும் வண்ணம் அல்லாஹ் இப்படி சொல்லியிருக்கலாம் அல்லவா? என்று சொல்லக்கூடும். நீங்கள் சொல்வது உண்மை தான், ஆனால், நாம் மேலே படித்த குர்‍ஆன் வசனத்தின் படி, அசாதாரணமாக காணப்படும் மிருகங்களை மட்டுமே பாதுகாக்கும் படி அல்லாஹ் சொல்லவில்லை, "ஒவ்வொரு இனத்திலும் ஒரு ஜோடி" என்று பொதுவாகச் சொல்லியுள்ளார். ஆகவே, உங்களின் இந்த வாதம் சரியானது அல்ல.

மேற்கண்ட விவரங்களிலிருந்து நாம் காண்பது என்னவென்றால், குர்‍ஆன் சொல்லும் பெரு வெள்ளம், ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே ஏற்பட்ட வெள்ளமல்ல, அது உலகம் முழுவதும் பரவிய வெள்ளமே, அப்போது மட்டுமே, ஒவ்வொரு இனத்தையும் பாதுகாக்க ஒரு ஜோடி ஆண் பெண் மிருகங்கள் தேவைப்படும். ஆக, நோவாவின் வெள்ளம் சம்மந்தப்பட்டு நவீன கால இஸ்லாமியர்களின் நவீன எண்ணங்கள் தவறானவைகளாகும்.

2) பூமி முழுவதும் வெள்ளத்தால் சூழாத போது தப்பிக்க கப்பல் எதற்கு?

முதலாவதாக நாம் மேலே கண்டோம், மிருகங்களை பாதுகாக்க அல்லாஹ் செய்த ஏற்பாடு, அந்த பெரு வெள்ளம் பூமியனைத்திற்கும் பரவியது என்பதை காட்டுகிறது.

இரண்டாவதாக, ஒரு குடும்பத்தை காப்பாற்ற அதுவும் ஒரு குறிப்பிட்ட இடம் மட்டுமே வெள்ளத்தில் மூழ்கடிக்க, அந்த குடும்பம் மற்றும் மிருகங்கள் தப்பிக்க கப்பல் எதற்கு? வெள்ளம் சூழாத இடத்திற்கு இடம் பெயர்ந்து இருக்கலாமே?

ஒரு குறிப்பிட்ட இடத்தை வெள்ளத்தால் அழிக்கும் போது, ஒரு கப்பலைக் கொண்டு சமாளித்தது அறிவுடமையாக இருக்குமா சிந்தியுங்கள்.

ஒருவேளை நான் கடவுளாக இருப்பேனானாள், ஒரு இடத்தை மட்டுமே அழிக்க திட்டமிட்டால், நோவா தன் மக்களை எச்சரிக்கை செய்யும் படி சில ஆண்டுகள் அவகாசம் கொடுப்பேன், பிறகு, அவரை இருக்கும் இடத்தை விட்டு, எங்கு வெள்ளம் வராதோ அவ்வளவு தூரம் அவரை கொண்டுச் சென்று அல்லது அவரை பிரயாணம் செய்யச் சொல்லி, பிறகு அழித்து இருப்பேன். ஒரு தனி குடும்பத்திற்கு ஒரு பெரிய கப்பல் கட்ட தேவைப்படும் ஆண்டுகள் அவர்கள் இடம் பெயர்ந்து இருந்தால், அதிக தூரம் சென்று இருப்பார்கள்

சென்னையில் வெள்ளம் கொண்டுவர விரும்பினால், வேறு தூரமான மாவட்டமுள்ள இடத்திற்கு சென்று விடு என்று சொல்லிவிட்டால் முடிந்துவிட்டது கதை, அதே போல மிருகங்களையும் இடம் பெயர்ந்து செல்லச் சொல்லிவிட்டால் முடிந்துவிட்டது கதை. இதை செய்வதை விட்டுவிட்டு, ஒரு இடத்தை வெள்ளத்தால் அழிக்க, ஒரு பெரிய கப்பலை தயார் செய்யச் சொல்லி, அதுவும் எந்த தொழில் நுட்பமும், இல்லாத அந்த காலத்தில் அவ்வளவு பெரிய கப்பலை இந்த சின்ன விஷயத்திற்கு தயார் செய்யச் சொல்வது, அறிவுடமையா?

சிலர் கேட்கலாம், மிருகங்கள் எப்படி இடம்பெயரும் என்று? இதுமிகவும் சுலபம், மிருகங்கள் இயற்கையாகவே வரும் ஆபத்தை கண்டு தானாகவே இடம் பெயரும், ஒரு வேளை அவைகள் இடம் பெயரவில்லையானாலும், இந்த வெள்ளத்தை கொண்டு வருபவர் அல்லாஹ் அதாவது இறைவன் தானே, அவனால் எல்லாம் கூடும், ஒன்றுமில்லாத போது மிருகங்களை உருவாக்கியவர் மிருகங்களை இடம் பெயர வைப்பது அவருக்கு கடினமான வேலையா?

ஒரு பகுதியை வெள்ளத்தால் அழிக்க,

• ஒரு பெரிய கப்பலை தயார் படுத்தச் சொல்லி,

• மிருகங்களை ஜோடியாக அதனுள் அனுப்பி,

• வெள்ளத்தை கொண்டு வந்து, பிறகு

• தண்ணீரை பூமியிலிருந்து வடியும் படி செய்து, அதுவரை கப்பலில் பிரயாணம் செய்து

• பிறகு அந்த ஒரு குடும்பத்தையும், மிருகங்களையும் அந்த இடத்தில் வைப்பது என்பது

எல்லாம் அறிந்த இறைவன் செய்தார் என்றுச் சொல்வது அறிவுடமையா?

இதற்கு பதிலாக,

• பல ஆண்டுகள் தன் மக்களை எச்சரிக்கை செய்யச் சொல்லி,

• நோவாவை வேறு பாதுகாப்பான இடத்திற்கு செல்ல உதவி செய்து, (ஆபிரகாமை எப்படி தூரமாக இடத்திலிருந்து கொண்டு வந்தார் அது போல)

• அந்த அழியும் பகுதியில் இருக்கும் விசேஷித்த மிருகங்களை (அதாவது கங்காரு போன்ற வேறு எங்கும் இல்லாத மிருகங்களை) மட்டுமே இடம் பெயரச் செய்து

• வெள்ளம் கொண்டு அழித்துவிட்டால், முடிந்தது வேலை.

சென்னையில் வெள்ளமும், அரசாங்கத்தின் டைடானிக் கப்பல் அறிவுரையும்:

வெள்ளமானது ஒரு குறிபிட்ட இடத்தில் மட்டுமே வந்தது என்றுச் சொல்பவர்களின் கருத்து எப்படி இருக்கிறது தெரியுமா?

சென்னையில் வெள்ளம் வரும் என்று தெரிந்தவுடன், அரசாங்கம், எல்லா மக்களையும் வேறு இடத்திற்கு அனுப்பாமல், ஒரு டைடானிக் போன்ற ஒரு கப்பலை தயார் செய்து, "சென்னை வாசிகளே, நீங்கள் எல்லாரும் இந்த கப்பலுக்குள் ஏறிக்கொள்ளுங்கள், அதில் எல்லா உணவு, தங்கும் வசதிகள் உண்டு, எத்தனை மாதங்கள் ஆனாலும் சரி, நாம் வெள்ளத்தில் மூழ்காமல், கப்பலிலேயே சுற்றிக்கொண்டு இருப்போம், பல‌ (ஆறு) மாதம் கழித்து தண்ணீர் வழிந்த பிறகு, நாம் மறுபடியும் சென்னையில் வசிக்கலாம்" என்றுச் சொல்வது போல உள்ளது.

அடுத்த மாநிலம, அல்லது மாவட்டம் நன்றாக இருக்கிறதே, அங்கு வெள்ளம் இல்லையே, அங்கே பாதுகாப்பாக நாம் இருப்போம், வெள்ளம் வடிந்த பிறகு சென்னைக்கு வரலாம் என்றுச் சொல்வதை விட்டுவிட்டு, ஒரு கப்பலில் ஆறுமாதம் சென்னையைச் சுற்றியே வலம் வர அறிவுரை கூறுவது அறிவுடமையாக இருக்குமா?

இப்படி இருக்கிறது, நோவாவின் வெள்ளம் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே என்றுச் சொல்வது. வெள்ளம் ஒரு குறிப்பிட்ட இடத்தில் வந்தது என்றுச் சொல்வதில் தவறில்லை, ஆனால், குர்‍ஆனின் விவரங்கள் அனைத்தும் இதற்கு எதிராக இருக்கிறதே! இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறார்கள்?

சென்னையில் வெள்ளம் வந்தால், உலகத்தில் கணக்கிலடங்கா ஆடுகள் பாதுகாப்பாக இருக்கும் போது, சென்னையிலிருந்து ஒரு ஜோடி ஆண் பெண் ஆடுகளை பாதுகாக்க வேண்டிய அவசியமென்ன?

சென்னையில் வெள்ளம் வந்தால், மதுரைக்கு செல்லவேண்டியது தானே? கேரளாவிற்கு செல்லவேண்டியது தானே! அவ்வளவு ஏன் வட இந்தியாவிற்கு செல்லவேண்டியது தானே?

லோத்து வாழ்ந்த இடம் அழிக்கப்படும் போது, அவரை அவ்வூர் விட்டு வெளியேற்றவில்லையா இறைவன்?

சோதோம் கோமோரா அக்கியால் அழியும் என்பதால், லோத்துவிற்கும் அவரது குடும்பத்தார்களுக்கும் ஃபையர் புரூப் (Fire Proof Dress) உடைகளை கொடுத்து, இந்த பட்டணத்திலேயே இருங்கள் என்றுச் சொன்னாரா இறைவன்?

முடிவுரை: முடிவாகச் சொல்லிக்கொள்கிறேன், நோவாவின் வெள்ளம் பூமியனைத்திலும் ஆக்கிரமித்த ஒன்றாகும், இதனை குர்‍ஆனும், முஹம்மதுவும் இதர இஸ்லாமிய அறிஞர்களும் அங்கீகரித்துள்ளார்கள் (இக்கட்டுரையை படிக்கவும்: குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா? (DOES THE QURAN TEACH A LOCAL FLOOD?). இல்லை இல்லை, நாங்கள் ஒப்புக்கொள்ளமுடியாது என்றுச் சொன்னால், இந்த கட்டுரையில் நாம் கண்ட பிரச்சனைகளுக்கு பதில் என்ன என்று நீங்கள் தேடிப்பார்க்க வேண்டியவர்களாக இருப்பீர்கள்.

ஒரு சின்ன இடத்தில் வெள்ளம்கொண்டுவர இவ்வளவு பெரிய வேலையை அதுவும் சம்மந்தமில்லாத வேலையை செய்வதற்கு இறைவன் நம்மைப் போல அறிவில் குறைந்தவன் அல்ல என்பதை மட்டும் நான் சொல்லிக்கொள்கிறேன்.



Isa Koran Home Page Back - Koran Index
1

நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?

 

இன்னும்; நூஹின் சமூத்தவர் அவர்கள் (நம்) தூதர்களைப் பொய்யாக்கிய போது,

நாம் அவர்களை மூழ்கடித்தோம்;

அவர்களை மனிதர்களுக்கு ஓர் அத்தாட்சியாகவும் ஆக்கிவைத்தோம்; ...  (25:37)

நோவாவின் சமுகத்தார்கள் நிராகரித்த இந்த இதர தூதர்கள் யார்?

பைபிள் நோவாவைத் தவிர வேறு யாரைப் பற்றியும் பேசுவதில்லை. குர்‍ஆனும் கூட நோவாவின் காலம் பற்றியும் வெள்ள நிகழ்ச்சிப் பற்றியும் பேசும் போதும், எல்லா வசனங்களிலும் ஒருமையிலேயே குறிப்பிடுகிறது, நோவாவின் சொந்த குடும்பம் மட்டுமே காக்கப்பட்டது என்று குறிப்பிட்டுச் சொல்கிறது.

இன்னும், நூஹ் - அவர் முன்னே பிரார்த்தித்தபோது,

அவருக்கு (அவருடைய பிரார்த்தனையை ஏற்று)) பதில் கூறினோம்;

அவரையும், அவருடைய குடும்பத்தாரையும்

மிகப் பெரிய துன்பத்திலிருந்தும் நாம் ஈடேற்றினோம்.  (குர்‍ஆன் 21:76)

மேலும், அவர்களுடைய சந்ததியரை (பிரளயத்திலிருந்து காப்பாற்றி பிற்காலம்) நிலைத்திருக்கும்படி செய்தோம்.  (குர்‍ஆன் 37:77)

இந்த இதர தூதர்கள் கூட வெள்ளத்தில் மூழ்கி மரித்திவிட்டார்களா?

நோவாவின் நிகழ்ச்சியில் உள்ள இன்னுமுள்ள பிரச்சனைகள்

Source: http://answering-islam.org/Quran/Contra/qb010.html


Isa Koran Home Page Back - Koran Index
1

குர்‍ஆன் முரண்பாடுகள் :நோவாவின் வயது (Noah’s Age)

குர்‍ஆன் முரண்பாடுகள்

நோவாவின் வயது (Noah's Age)

பைபிளிலும் ம‌ற்றும் குர்‍ஆனிலும் சொல்ல‌ப்ப‌ட்ட‌ நோவாவின் க‌தையை ஒருவர் ப‌டித்தால், கீழ் க‌ண்ட‌ விவ‌ர‌ங்க‌ளை அவ‌ர் காண வேண்டி வரும்.

ஜலப்பிரளத்துக்குப் பின்பு நோவா முந்நூற்று ஐம்பது (350) வருஷம் உயிரோடிருந்தான்.நோவாவின் நாட்களெல்லாம் தொளாயிரத்து ஐம்பது (950) வருஷம்; அவன் மரித்தான். (ஆதியாகமம் 9:28-29)

மேலும்; திடனாக நாம் நூஹை அவருடைய சமூகத்தாரிடம் அனுப்பினோம்; ஆக, அவர்கள் மத்தியில் அவர் ஐம்பது குறைய ஆயிரம் ஆண்டுகள் தங்கியிருந்தார்; ஆனால் அவர்கள் அநியாயக்காரர்களாக இருந்தமையால் அவர்களைப் பிரளயம் பிடித்துக் கொண்டது. (குர்‍ஆன் 29:14 - முஹம்மது ஜான் தமிழாக்கம்)

நூஹை அவரது சமுதாயத்திடம் அனுப்பினோம். அவர்களுடன் ஆயிரம் ஆண்டுகளுக்கு ஐம்பது ஆண்டுகள் குறைவாக வசித்தார். அவர்கள் அநீதி இழைத்த நிலையில் அவர்களைப் பெரு வெள்ளம் பிடித்துக்கொண்டது. (குர்‍ஆன் 29:14 - பிஜே தமிழாக்கம்)

நோவாவின் வயது 950 என்று முஹம்மது கேள்விப்பட்டு இருக்கிறார், ஆனால், அதை அவர் சரியாக புரிந்துக்கொள்ளாமல் இருக்கவேண்டும் அல்லது இந்த விவரத்தை குர்‍ஆனில் சேர்க்கும் போது அவரது நியாபக சக்தி குறைந்துவிட்டு இருக்கவேண்டும். வெள்ளம் ஏற்பட்டபோது தான் நோவாவிற்கு இந்த வயது (950) இருந்தது என்று முஹம்மது கருதிவிட்டார்.

சூரா 29:14ம் வசனம் கீழ் கண்ட விதமாக நிகழ்ச்சிகளை சொல்கிறது

  1. நாம் நூஹை அவருடைய சமூகத்தாரிடம் அனுப்பினோம்
  2. அவர்கள் மத்தியில் அவர் ஐம்பது குறைய ஆயிரம் ஆண்டுகள் தங்கியிருந்தார்;
  3. அவர்கள் அநியாயக்காரர்களாக இருந்தமையால் அவர்களைப் பிரளயம் பிடித்துக் கொண்டது

வசனத்தின் இரண்டாம் பாகத்தில் உள்ள "அவர்கள் மத்தியில்" என்ற விவரமானது, வசனத்தின் முதல் பாகத்தில் உள்ள "அவருடைய சமூகத்தாரிடம்" என்பவர்களை குறிக்கிறது. பெரு வெள்ளமானது அம்மக்களை அழித்துவிட்டபின்பு, நோவா அவர்களுடம் வாழவில்லை என்பது திண்ணம். ஆக, 950 வருடங்கள் என்பது பெரு வெள்ளம் வரும்வரையுள்ள காலத்தைக் குறிக்கிறது. இந்த முறையில் தான் அனேக குர்‍ஆன் மொழிபெயர்ப்பாளர்கள் இந்த வசனத்தை புரிந்துக்கோண்டு இருக்கிறார்கள்.

ஷேர் அலி அவர்களின் குர்‍ஆன் மொழியாக்கம்:

And WE, certainly, sent Noah to his people, and he remained among them a thousand years, short of fifty years. Then the deluge overtook them, while they were wrongdoers. Sher Ali

முஹம்மது சர்வார் அவர்களின் மொழியாக்கம்:

We sent Noah to his people and he lived with them for nine hundred and fifty years, then the flood engulfed them for their injustice. Muhammad Sarwar

ரஷித் கலிபா அவர்களின் மொழியாக்கம்:

We sent Noah to his people, and he stayed with them one thousand years, less fifty. Subsequently, they incurred the flood because of their transgressions. Rashad Khalifa

மாலிக் அவர்களின் குர்‍ஆன் மொழியாக்கம்:

We sent Noah to his people and he lived among them a thousand years less fifty. Then because of their wrongdoings the flood overtook them. Malik

பிரீ மைன்ட்ஸ் குர்‍ஆன் மொழியாக்கம்:

And We had sent Noah to his people, so he stayed with them one thousand years less fifty calendar years. Then the flood took them while they were wicked. Free Minds

கரிபுல்லா அவர்களின் குர்‍ஆன் மொழியாக்கம்:

Indeed, We sent Noah to his nation, and he lived amongst them for a thousand years, less fifty (but they belied him), then the Flood seized them while they were harmdoers. Qaribullah

முஹம்மத் அஸத் அவர்களின் குர்‍ஆன் மொழியாக்கம்:

And, indeed, [in times long past] We sent forth Noah unto his people, and he dwelt among them a thousand years bar fifty; and then the floods overwhelmed them while they were still lost in evildoing: Muhammad Asad

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், குர்‍ஆனின் இந்த தவறு, பெரு வெள்ளத்திற்குப் பிறகு நோவாவைப் பற்றி குர்‍ஆன் ஒன்றுமே சொல்லவில்லை என்பதிலிருந்து, இன்னும் நிரூபனமாகிறது. கப்பலை விட்டு வெளியேறிவிடுங்கள் என்று அல்லாஹ் கட்டளையிடும் இடத்திலிருந்து நோவாவின் கதை குர்‍ஆனில் முடிந்துவிடுகிறது. ஆதியாகமத்தின் 9ம் அதிகாரத்தின் நிகழ்ச்சியாகிய‌ "நோவாவோடும் மற்றும் மனித வர்க்கத்தோடும் தேவன் செய்த உடன்படிக்கையைப் பற்றி" குர்‍ஆனில் ஒன்றுமே சொல்வதில்லை. குர்‍ஆனை பொருந்த மட்டில், ஆங்காங்கே நோவாவின் சந்ததிகள் என்று சொல்கிறது அதை விடுத்து, குர்‍ஆனில் நோவாவின் கதை பெரு வெள்ளத்தோடு முடிந்துவிடுகிறது.

இந்த குர்‍ஆன் 29:14ம் வசனத்தை இன்னும் கவனித்துப்பார்த்தால், இன்னொரு விவரமும் தெரியவரும். இவ்வசனத்தின்படி 950 வருடங்கள் என்பது நோவாவின் வயதை குறிப்பதாகத் தெரியவில்லை, அதற்கு பதிலாக, அவர் தன் சமுதாய மக்களுக்கு எச்சரித்த கால அளவை குறிப்பதாக உள்ளது, அதாவது இறைவன் அம்மக்களை எச்சரிக்க அவரை அழைத்த கால முதல், பெரு வெள்ளம் வரையுள்ள கால அளவாகும்.

ஆக, குர்‍ஆனின் காலவரிசை கீழ் கண்ட விதமாக உள்ளது.

            ?ஆண்டுகள்?                950 ஆண்டுகள்                  ?ஆண்டுகள்?
பி-----------------------------அ-------------------------------------வெ----------------------------ம

விளக்கம்:

பி: நோவாவின் பிறப்பு
அ: நோவாவை நபியாக அல்லாஹ்வின் ழைப்பு
வெ: வெள்ளம்
ம: நோவாவின் ரணம்

எது எப்படியாயினும், ஒன்று மட்டும் தெளிவு: முஹம்மது தவறுதலாக நோவாவின் முழு வயதை அவரது ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு மட்டுமே சம்மந்தப்படுத்தியுள்ளார்.


Source: http://answering-islam.org/Quran/Contra/noahs_age.html

Isa Koran Home Page Back - Koran Index
1

குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?

 

DOES THE QURAN TEACH A LOCAL FLOOD?

சாம் ஷமான்

பரிசுத்த பைபிளுக்கு எதிராகவும், குர்‍ஆனுக்கு ஆதரவாகவும் வாதம் புரியும் இஸ்லாமியர்கள் முன்வைக்கும் ஒரு விமர்சனம் "நோவாவின் வெள்ளம்" பற்றியதாகும். டாக்டர் மௌரஸ் புகைலி அவர்களின் புத்தகமாகிய "The Bible, the Qur'an & Science" என்ற புத்தகத்தில் அவர் எழுதிய பிறகு, அனேக இஸ்லாமியர்கள், "உலகம் முழுவதும் வெள்ளம் சூழ்ந்தது என்று பைபிள் தவறாக கூறுகிறது" என்று சொல்கிறார்கள். ஆனால், அந்த வெள்ளம் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே ஏற்பட்டது, இதனை குர்‍ஆன் சொல்கிறது, இது நவீன விஞ்ஞானத்திற்கும், தொல்பொருள் ஆராய்ச்சிக்கும் பொருந்துகிறது என்று இஸ்லாமியர்கள் கூறுகிறார்கள். நோவா காலத்தின் வெள்ளப்பிரளயம் அந்த மக்களை மட்டுமே பாதித்தது, அது முழு பூமியையும் பாதிக்கவில்லை என்று குர்‍ஆன் தெளிவாகச் சொல்கிறது என்று இஸ்லாமியர்கள் வாதம் புரிகிறார்கள்.

துரதிஷ்டவசமாக, குர்‍ஆன் பற்றி அதிகம் தெரியாதவர்களும், இஸ்லாமிய ஆரம்பகால நூல்களை, தொகுப்புக்களை அறியாதவர்களும் சந்தேகத்திற்கு இடமின்றி, நோவாவின் கால வெள்ளமானது ஒரு சிறிய பகுதியில் மட்டுமே ஏற்பட்டது என்று குர்‍ஆன் சொல்கிறது என்று தவறாக நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். இஸ்லாமிய வாதம் புரிபவர்களிடம் உள்ள ஒரு பிரச்சனை என்னவென்றால், குர்‍ஆன் வசனம் சொல்லாத ஒன்றை சொன்னதாக இவர்கள் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள், அல்லது இஸ்லாமிய ஆரம்ப கால நூல்கள் சொல்வதையும், குர்‍ஆன் விரிவுரையாளர்கள் சொல்வதையும் இவர்கள் கவனிக்காமல் விட்டுவிடுகிறார்கள்.

உதாரணத்திற்குச் சொல்லவேண்டுமானால், வெள்ளமானது நோவாவோடும் அவர் குடும்பத்தோடு நெருங்கி வாழ்ந்த மக்களை மட்டுமே குறிப்பிட்டு பாதித்தது என்று எங்கும் சொல்வதில்லை. ஆனால், குர்‍ஆன் ஏன் "நோவா சமூகத்தார்" என்றுச் சொல்கிறது என்பதற்கான காரணம், அவர் தன் சமகால மக்களுக்கு மட்டுமே தன் செய்தியைச் சொன்னார் என்பதற்காகவேயாகும். நோவாவின் எச்சரிக்கைச் செய்தியை மற்ற (நாட்டு) மக்கள் கேட்காததால், மற்ற எல்லா மக்களையும் குறிப்பிட்டு குர்‍ஆன் சொல்லவில்லை.

இதுமட்டுமல்லாமல், முழு உலகமும் வெள்ளத்தால் மூழுகியது என்பதை வெளிப்படையாக அல்லாமல் மறைமுகமாகச் சொல்லும் குர்‍ஆன் வசனங்கள் அனேகம் உண்டு. இப்படிப்பட்ட வசனங்களைத் தான் இஸ்லாமிய எழுத்தாளர்களாகிய அல்-டபரி போன்றவர்கள் "வெள்ளம் முழு உலகத்தையும் சூழ்ந்தது" என்பதை விளக்க பயன்படுத்துகிறார்கள். இஸ்லாமிய எழுத்தாளர்களின் கூற்றுக்களை காண்பதற்கு முன்பாக, நோவாவின் கால வெள்ளம் முழு உலகத்தையும் சூழ்ந்தது என்பதைச் சொல்லும் குர்‍ஆனின் வசன சாட்சிகளைக் காண்போம்.

முஹம்மது ஜான் மொழிபெயர்ப்பு:

இறுதியாக, நம் உத்தரவு வந்து, அடுப்புப் பொங்கவே, (நாம் நூஹை நோக்கி;) "உயிர்ப் பிராணிகள் ஒவ்வொரு வகையிலிருந்தும் (ஆண் பெண் கொண்ட) ஒவ்வொரு ஜோடியை (அக்கப்பலில்) ஏற்றிக் கொள்ளும்; (மூழ்கடிக்கப்படுவார்கள் என்று எவர்களைக் குறித்து முன்பே நம்) வாக்கு ஏற்பட்டுவிட்டதோ அவர்களைத் தவிர் உம் குடும்பத்தாரையும், ஈமான் கொண்டவர்களையும் ஏற்றிக்கொள்ளும்" என்று நாம் கூறினோம்; வெகு சொற்ப மக்களைத் தவிர மற்றவர்கள் அவருடன் ஈமான் கொள்ளவில்லை. (குர்‍ஆன் 11:40)

பி.ஜைனுல் ஆபிதீன் மொழிபெயர்ப்பு:

நமது கட்டளை வந்து, தண்ணீர் பொங்கிய போது "ஒவ்வொன்றிலும் ஒரு ஜோடியையும், உமது குடும்பத்தாரில் நமது விதி முந்தி விட்டவர்களைத் தவிர மற்றவர்களையும், நம்பிக்கை கொண்டோரையும் ஏற்றிக் கொள்வீராக!" என்று கூறினோம். அவருடன் மிகச் சிலரே நம்பிக்கை கொண்டனர். (குர்‍ஆன் 11:40)

"At length, behold! There came Our Command, and the fountains of the earth gushed forth! We said: `Embark therein, of each two, male and female, and your family- except those against whom the Word has already gone forth,- and the believers.' But only a few believed with him." S. 11:40

பின்னர்; "பூமியே! நீ உன் நீரை விழுங்கி விடு! வானமே! (மழையை) நிறுத்திக்கொள்" என்று சொல்லப்பட்டது; நீரும் குறைக்கப்பட்டது; (இதற்குள் நிராகரித்தோர் நீரில் மூழ்கி அவர்கள்) காரியமும் முடிந்து விட்டது; (கப்பல்) ஜூதி மலைமீது தங்கியது - அநியாயம் செய்த மக்களுக்கு (இத்தகைய) அழிவுதான் என்று கூறப்பட்டது. (குர்‍ஆன் 11:44)

"Then the word went forth: `O earth! Swallow up thy water, and O sky! withhold (thy rain)! And the water abated, and the matter was ended. The Ark rested on Mount Judi, and the word went forth: `Away with those who do wrong!'" S. 11:44

இவ்வசனங்கள் தண்ணீர் பொங்கினது(earth gushed forth with water) என்றுச் சொல்கிறது, இதனால், நாம் இந்த வெள்ளம் பூமி முழுவதும் ஆக்கிரமித்தது எனலாம். நோவா இருந்த இடத்திலுள்ள நீரூக்கள் மட்டுமே இப்படி பொங்கின என்று இவ்வசனங்கள் சொல்லவில்லை.

அதற்கு, "நீர் நம் கண் முன் நம்முடைய வஹீயறிவிப்பின்படியும் கப்பலைச் செய்வீராக! பிறகு நம்முடைய கட்டளை வந்து, அடுப்புக் கொதிக்கும் போது, ஒவ்வொன்றிலும் ஆண், பெண் இரண்டிரண்டு சேர்ந்த ஜதையையும், உம்முடைய குடம்பத்தினரில் எவர் மீது நம் (தண்டனை பற்றிய) வாக்கு ஏற்பட்டுவிட்டதோ அவரைத் தவிர, (மற்றவர்களையும்) அதில் ஏற்றிக் கொள்ளும்; இன்னும் அநியாயம் செய்தார்களே அவர்களைப் பற்றி நீர் என்னிடம் பரிந்து பேச வேண்டாம் - நிச்சயமாக அவர்கள் மூழ்கடிக்கப்படுவார்கள்" என்று அவருக்கு நாம் அறிவித்தோம். (குர்‍ஆன் 23:27)

இப்போது ஒருவர் இப்படி கேட்கமுடியும், அதாவது "வெள்ளம் ஏற்பட்டது ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே என்றுச் சொன்னால், ஏன் மிருகங்களில் ஒவ்வொரு இனத்திற்கு ஆண் பெண் என்று இரண்டு ஜோடிகள் மிருகங்கள் பாதுகாக்கப்படவேண்டும்?". வெள்ளம் ஒரு பகுதியில் மட்டுமே ஏற்பட்டால், பூமியில் இதர பாகங்களில் உள்ள மிருகங்கள் அழியப்போவதில்லையே! இந்த விவரம் கூட நோவாவின் வெள்ளம் பூமியனைத்தையும் சூழ்ந்தது என்பதைக் காட்டுகிறது.

ஆகவே, நாம் கொட்டும் மழையைக் கொண்டு வானங்களின் வாயில்களைத் திறந்து விட்டோம். மேலும், பூமியின் ஊற்றுகளை பொங்க வைத்தோம், இவ்வாறாக, குறிப்பிட்ட ஓர் அளவின் படி (இரு வகை) நீரும் கலந்(து பெருக் கெடுத்)தது. அப்போது, பலகைகளினாலும் ஆணிகளினாலும் செய்யப்பட்ட மரக்கலத்தின் மீது அவரை ஏற்றிக் கொண்டோம். எனவே, எவர் (அவர்களால்) நிராகரிக்கப்பட்டுக் கொண்டிருந்தாரோ, அவருக்கு (நற்) கூலி கொடுப்பதற்காக, (அம்மரக்கலம்) நம் கண் முன்னிலையில் மிதந்து சென்று கொண்டிருந்தது. (குர்‍ஆன் 54:11-14)

"So We opened the gates of heaven, with water pouring forth. And we caused the earth to gush forth with springs. So the waters met (and rose) to the extent decreed. But We bore him on an (Ark) made of broad planks and caulked with palm-fibre: She floats under Our eyes (and care): a recompense to one who had been rejected (with scorn)!" S. 54:11-14

மறுபடியும், மேற்கண்ட வசனங்கள் "வானங்களின் வாயில்கள் திறந்து, பூமியில் ஊற்றுக்கள் பொங்கின" என்றுச் சொல்கின்றன. இவைகள் நமக்கு இந்த வெள்ளம் பூமி அனைத்திலும் ஏற்பட்டது என்பதைக் காட்டுகிறது.

அப்பால் நூஹ் கூறினார்: "என் இறைவா! பூமியின் மீது இக்காஃபிர்களில் எவரையும் நீ வசித்திருக்க விட்டு விடாதே. "நிச்சயமாக நீ அவர்களை விட்டு வைப்பாயானால். உன் அடியார்களை அவர்கள் வழி கெடுத்துவிடுவார்கள்; அன்றியும், பாவிகளையும், காஃபிர்களையும் அன்றி அவர்கள் பெற்றெடுக்கமாட்டார்கள். (குர்‍ஆன் 71: 26-27)

"And Noah said: `O my Lord! Leave not of the Unbelievers, a single one on earth! For if Thou dost leave (any of them), they will but mislead Thy devotees, and they will breed none but wicked ungrateful ones.'" S. 71:26-27

மேற்கண்ட வசனங்களில் உள்ள நோவாவின் விண்ணப்பம் "வெள்ளம் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே ஏற்பட்டது" என்ற வாதத்திற்கு எதிராக உள்ளது அதாவது பொருந்துவதாக இல்லை. ஏனென்றால், அவர் "என் இறைவா! பூமியின் மீது இக்காஃபிர்களில் எவரையும் நீ வசித்திருக்க விட்டு விடாதே" என்று கூறுகிறார். இது தன் ஊர் மக்களை மட்டுமே குறிப்பதாக இல்லை. ஒருவேளை இஸ்லாமியர்கள் கூறுவது போல, இது ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே ஏற்பட்ட வெள்ளமாக இருந்தால், "வெள்ளம் ஏற்படாத இடங்களில்(நாடுகளில்) உள்ள மக்கள் நிச்சயமாக காஃபிர்களாக இருப்பார்கள் மற்றும் அவர்கள் "பாவிகளையும், காஃபிர்களையும் பெற்றெடுப்பார்கள்". இது நோவாவின் வேண்டுகோளுக்கு எதிரடையாக உள்ளது. எனவே, இந்த வசனங்கள் வெள்ளம் பூமியனைத்திலும் ஏற்பட்டது என்பதை சொல்லும் வண்ணமாக‌ உள்ளது.

இந்த குர்‍ஆன் வசனங்கள் அனைத்தும் நேரடியாக அல்லது வெளிப்படையாக வெள்ளம் பூமியனைத்திலும் ஏற்பட்டது என்றுக் கூறவில்லை, இவ்வசனங்களை நாம் நம் விருப்பப்படி பொருள் கூற வாய்ப்பு உண்டாகும் விதமாக இவைகள் உள்ளன என்று சில இஸ்லாமியர்கள் வாதம் புரியக்கூடும். இப்படி இஸ்லாமியர்கள் கூறுவார்களானால்? இதே போல இவ்வசனங்கள் "வெள்ளமானது ஒரு இடத்தில் மட்டுமே ஏற்பட்டது என்று வெளிப்படையாக கூறவில்லை" என்று விளங்குகிறது அல்லவா? மேலே நாம் கண்ட விவரங்களைக் கண்டு, "வெள்ளமானது ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே ஏற்பட்டது" என்றுச் சொல்வதை முஸ்லீம்கள் நிறுத்தப் போவதில்லை.

இன்னும் மேலதிக விவரங்களாக, சரித்திர ஆசிரியர்களான அல்-டபரி போன்றவர்களின் ஆதாரங்களும் "வெள்ளம் பூமி அனைத்திலும் ஏற்பட்டு, அந்த கப்பலில் இருந்தவர்கள் தவிர, மற்ற அனைத்து உலக மக்களும் அழிக்கப்பட்டார்கள்" என்பதையே சொல்கிறது. கீழ் கண்ட மேற்கோள்கள் "
The History of al-Tabari, vol. 1, General Introduction and From the Creation to the Flood, as translated by Franz Rosenthal " என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டவைகளாகும்.

According to Ibn Humayd- Salamah- Ibn Isahq- al-Hassan b. Dinar- Ali b. Zayd- Yusuf b. Mihran- Ibn Abbas: நாம் [யூசுப் பி. மிஹ்ரனாகிய நான்] இபின் அப்பாஸ் கூற கேட்டது: ... தண்ணீர் மிகவும் அதிகமாக பெருகியது. தோராவின் மக்கள் அந்த தண்ணீர் உயர்ந்த மலை உச்சிக்கு மேலாக 15 அடி உயர்ந்ததாக கருதுகிறார்கள். பூமியிலுள்ள எல்ல உயிரினமும் , உயிர் வாழும் அனைத்தும் அல்லது மரங்களும் தண்ணீரில் மூழுகிப்போயின. நோவாவைத் தவிர மற்றும் அந்த கப்பலில் இருந்தவர்கள் தவிர வேறு யாரும் மிஞ்சவில்லை ( No creature remained except Noah and those with him in the boat, as well as Og b. Anak, as is assumed by the people of the Book.) இறைவன் வெள்ளம் அனுப்பிய காலமுதல், வெள்ளம் பூமியிலிருந்து காயும் வரையுள்ள காலம் ஆறு மாதங்களும் பத்து இரவுகளுமாம். (History of al-Tabari [State University of New York Press; Albany, NY 1989], pp. 360-361)

According to al-Harith- Ibn Sa'd- Hisham- his father- Abu Salih- Ibn Abbas: "இறைவன் நாற்பது பகல்கள் நாற்பது இரவுகள் மழையை அனுப்பினார். காட்டு மிருகங்களும் நாட்டு மிருகங்களும் பறவைகளும் மழையைக் கண்டவுடன் நோவாவிடம் தஞ்சம் புகுந்தன. இறைவனின் கட்டளையின்படியே நோவா ஒவ்வொரு இனத்திலும் ஒரு ஜோடியை கொண்டுவந்தார். இவைகளோடு சேர்த்து, ஆண்களுக்கும் பெண்களுக்கு தடை உண்டாகும் வண்ணமாக நோவா ஆதாமின் சடலத்தில் மீந்திருந்ததை கொண்டு வந்தார். அவர்கள் ரஜ்ஜப் மாதத்தின் 10ம் நாள் அந்த கப்பளுக்குள் நிழைந்தார்கள் மற்றும் முஹர்ரம் மாதம் அஷூரா அன்று(10ம் நாள்) கப்பளிலிருந்து வெளியேறினார்கள். ஆகையால் அவர்கள் அனைவரும் அஷூரா அன்று நோம்பு இருந்தார்கள். தண்ணீர் இரண்டு வகைகளில் வெளிப்பட்டது, இது இறைவனின் கட்டளைப்படி இப்படியாயிற்று: (`And We opened for water munhamirin'- that is, musabbin pouring- `and We fajjarna'- that is, shaqqaqna split- `the earth for springs (to gush forth). The water (from above and below) met for a matter (pre)determined.') தண்ணீர் இரண்டு பிரிவுகளாக வந்தது. ஒரு பங்கு வானத்திலிருந்து வந்தது, ஒரு பங்கு பூமியிலிருந்து வந்தது. பூமியின் மிகப் பெரிய மலையின் உச்சிக்கு மேலாக 15 அடிகள் தண்ணீர் உயர்ந்திருந்தது.

அவர்களோடு கூட அந்தக் கப்பல் பூமிமுழுவதும் ஆறுமாதங்கள் சுற்றியது. பரிசுத்த பூமி (மக்கா மதினா) வரும் வரை அந்த கப்பல் எங்கும் தங்கவில்லை. எனினும், பரிசுத்த பூமிக்குள் (மக்கா மதினாவிற்குள்) நிழையாமல் ஒரு வாரம் அதை சுற்றி சுற்றி வந்தது. ஆதாம் கட்டிய வீடு(காபா) மூழ்காதபடிக்கு மேலே மேலே உயர்த்தப்பட்டது. அந்த வீடு கருங்கல் உள்ள காபாவாகும். பரிசுத்த பூமியை சுற்ற வந்த பிறகு, கப்பலில் இருந்த மக்களோடு, அல் ஜீதி வரும் வரை பூமியின் மீது பிரயாணித்தது. ... அந்த கப்பல் அல் ஜூதியை அடைந்த போது, இப்படியாக கூறப்பட்டது: "பூமியே! நீ உன் நீரை விழுங்கி விடு!" இதன் பொருள் என்னவென்றால், "உன்னிடமிருந்து வந்த தண்ணீரை பூமியே நீ உறிஞ்சிக்கொள்" என்பதாகும். இதே போல "வானமே! (மழையை) நிறுத்திக்கொள் (Heaven, hold back!)" என்று கூறப்பட்டது, இதன் பொருள் என்னவென்றால்,"வானங்களே உங்களிடமிருந்து வந்த தண்ணீரை எடுத்துக்கொள்" என்பதாகும். பூமியிலிருந்த தண்ணீர் மறைந்துவிட்டது, அதாவது தண்ணீரை பூமி உறிஞ்சிக்கொண்டது. வானத்திலிருந்து வந்த தண்ணீர் நாம் காணும் கடலாக மாறியது... (Ibid., pp. 362-363)

மேலே நாம் கண்ட பாரம்பரியமானது, "வெள்ளம் உலகம் முழுவதும் பியாபித்து இருந்தது" என்பதை விளக்குகிறது. அதோடு நின்றுவிடாமல், வெள்ளம் உலகம் முழுவதும் பரவியது என்பதை விளக்க நாம் மேற்கோள் காட்டிய வசனத்தை இந்த பாரம்பரியம் குறிப்பிடுகிறது.

அபூ ஜபர் (அல்-டபரி) கூறுகிறார்: நோவாவும் அவர் குடும்பத்தார்களும் முஸ்லீம்களாக இருந்தார்கள். மற்றும் நோவாவிற்கு "இனி இப்படிப்பட்ட ஒரு வெள்ளத்தை பூமியில் வரவழைப்பதில்லை" என்று இறைவன் வெளிப்படுத்தினான்.

இங்கு குறிப்பிட்ட விவரங்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஏற்பட்ட மட்டுமே ஏற்பட்ட வெள்ளமல்ல, ஏனென்றால், ஒரு குறிப்பிட்ட இடத்தில்/நாடுகளில் ஏற்படும் வெள்ளங்கள் இன்றும் ஏற்படுகின்றன. ஆனால், இன்று வரை உலகம் முழுவதும் வியாபித்து இருக்கிற வெள்ளம் நோவாவின் காலத்திற்கு பின்பு ஏற்படவில்லை.

Ibn Ishaq, in turn, as we are told by Ibn Humayd- Salamah (- Ibn Ishaq), said... "அவர்கள் கூறினார்கள்: அவரோடு கூட கப்பலில் இருந்தவர்கள் அவரை நம்புகிறவர்களாக இருந்தார்கள், மற்றும் அவரை பின்பற்றுகிறவர்களாக இருக்கிறார்கள். எனினும், மற்றவர்கள் அழிந்து ஒழிந்துப்போனார்கள். அவர்களின் சந்ததியும் அழிந்துவிட்டது. இன்று உலகில் வாழும் மக்கள் அனைவரும் நேரடியாக ஆதாமின் வழியில், நோவாவின் வழியாக வந்த சந்ததிகளாவார்கள். ஆதாமின் இதர சந்ததிகள் அழிந்துப்போனார்கள். இறைவன் கூறினான்: "அவரது சந்ததிகளை நம உயிருள்ளவர்களாக வைத்தோம்" (In this world today, the children of Adam are the direct offspring of Noah and of no other descendants of Adam, as God says: `And We made his offspring the survivors.'). (Ibid., p. 368)

வெள்ளம் வெறும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே ஏற்பட்டது என்று நாம் நினைத்துக்கொண்டால், நாம் அனைவரும் நோவாவின் சந்ததிகளாக இருக்கிறோம் என்ற விவரமானது பொய்யாக இருக்கும். உண்மையில் "வெள்ளமானது ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் ஏற்பட்டது என்ற வாதமானது பெர்சிய மேஜியன்களின் (Persian Magians) நம்பிக்கையாகும். இதனையே இஸ்லாமியர்கள் இப்போது கூறிக்கொண்டு இருக்கிறார்கள்.

"வெள்ளம் பற்றி மேஜியன்களுக்கு (Magians) எந்த அறிவும் இல்லை. அவர்கள் கூறுகிறார்கள், "ஆதாமைப் போல ஜாயுமத் (Jayumart) என்பவரின் கால முதல் நம் ஆட்சி தடையில்லாமல் நடந்துக்கொண்டு இருக்கிறது. பிரோஜ் பி யஜ்ஜர்த் பி ஷஹ்ரியார் வரை ஆட்சியானது ஒருவர் கையிலிருந்து மற்றோருவர் கைக்கு மாறிக்கொண்டு இருக்கிறது". அவர்கள் இதையும் கூறுகிறார்கள், "வெள்ளம் சம்மந்தப்பட்ட கதையானது உண்மையானதாக இருந்தால், மக்களின் வம்ச வளர்ச்சி தடை செய்யப்பட்டு ஆட்சி கலைக்கப்பட்டு இருக்கும். அவர்களில் சிலர் வெள்ளமானது பாபில் என்ற இடத்தின் சுற்றுப்புறங்களில் மட்டுமே ஏற்பட்டது என்று நினைக்கிறார்கள். மற்றும் ஜாயுமத்தின் வம்சத்தினர் கிழக்கு பகுதியில் வாழ்ந்ததால், வெள்ளம் அவர்கள் வரையில் வரவில்லை" என்று நம்புகிறார்கள்.

அபூ ஜபர் (அல்-டபரி) கூறுகிறார்: மேலே சொன்ன அவர்களின் கூற்று இறைவன் சொன்னதற்கு முரண்பட்டதாக உள்ளது. இறைவன் சொன்னது தான் உண்மையாது: "அன்றியும் நூஹ் நம்மைப் பிரார்த்தித்தார்; பிரார்த்தனைக்கு பதிலளிப்பதில் நாமே சிறந்தோர் ஆவோம். ஆகவே, நாம் அவரையும் அவருடைய குடும்பத்தாரையும் மிகப்பெருங் கஷ்டத்திலிருந்து பாதுகாத்தோம். மேலும், அவர்களுடைய சந்ததியரை (பிரளயத்திலிருந்து காப்பாற்றி பிற்காலம்) நிலைத்திருக்கும்படி செய்தோம்." இதன் படி, இறைவன் சொல்வதிலிருந்து, பூமியில் இருப்பவர்கள் அனைவரும் நோவாவின் சந்ததிகளே தவிர மற்றவர்கள் அல்ல என்பது புரியும். (Ibid., p. 369)

மேலும் சில வரிகளை கடந்து படிக்கும் போது:

According to Ibn Bashshar- Ibn `Athmah- Sa'id b. Bashir- Qatadah- al-Hasan- Samurah b. Jundub- the Prophet, in connection with commenting on God's word: `And We made his offspring the survivors': Shem, Ham, and Japheth. (Ibid, p. 369)

According to Ibn Bashshar- Ibn `Athmah- Sa'id b. Bashir- Qatadah- al-Hasan- Samurah b. Jundub: இறைவனின் வார்த்தைகள் பற்றி நபி அவர்கள் கூறும் போது: "அவர்களுடைய சந்ததியாரை (பிரயளத்திலிருந்து காப்பாற்றி பிற்காலம்) நிலைத்திருக்கும் படிச் செய்தோம்"- அவரின் சந்ததிகள் "சேம் காம் யாப்பேத்" என்பவர்கள் ஆவார்கள் (Ibid, p. 369).

நோவாவும் அவரது குடும்பம் மட்டுமே பிரளயத்திலிருந்து காப்பாற்றப்பட்டு பிழைத்ததாக முஹம்மது நம்புகிறார். முஹம்மதுவின் இப்படிப்பட்ட நம்பிக்கை எப்போது உண்மையானதாக இருக்குமென்றால், "வெள்ளமானது உலகளாவியதாக இருக்கவேண்டும் மற்றும் எல்லா மனிதர்களும் மரித்து இருக்கவேண்டும்" (Muhammad believed that only Noah and his immediate family survived the flood. This could only be so if the flood were indeed universal, wiping out all flesh.)

பிஷர் (பி முஅத்) - யாஜித் (பி. ஜுரெ) - சயித் (பி. அபி அருபா) கதாதா இறைவனின் வார்த்தையாகிய "அவர்களுடைய சந்ததியாரை (பிரயளத்திலிருந்து காப்பாற்றி பிற்காலம்) நிலைத்திருக்கும் படிச் செய்தோம்" என்ற வரிகளைப் பற்றி கூறும் போது "எல்லா மனித இன மக்களும் நோவாவின் சந்ததிகள் ஆவார்கள் என்றார்" (Ibid, pp. 369-370)

இந்த கடைசி விவரத்தை இஸ்லாமிய விரிவுரையாளர்களில் முக்கியமானவராக கருதப்படும் இபின் அப்பாஸ் கூறியதாகும்:

According to Ali b. Dawud- Abu Salih (`Abdallah b. Salih)- Mu'awiyah (b. Salih)- `Ali (b. Abi Talhah) - இறைவனின் வார்த்தையாகிய "அவர்களுடைய சந்ததியாரை (பிரயளத்திலிருந்து காப்பாற்றி பிற்காலம்) நிலைத்திருக்கும் படிச் செய்தோம்" என்ற வரிகளைப் பற்றி இபின் அப்பாஸ் கூறும் போது "நோவாவின் சந்ததியினர் மட்டுமே நிலைத்திருக்கிறார்கள்" என்றார். (Ibid, p. 370 all bold emphasis ours)

இபின் கதீர் கீழ்கண்ட விதமாக அங்கீகரிக்கிறார்:

நோவாவின் மீது நம்பிக்கைக் கொண்டு அவரோடு கப்பலில் இருந்தவர்களைத் தவிர மற்ற உலக மக்களை அல்லாஹ் வெள்ளத்தில் மூழ்கச் செய்த போது, நோவாவின் சந்ததிகளை மட்டுமே அதன் பிறகு உலகத்தில் வாழ்கிறவர்களாக மாற்றினார். இந்த நிகழ்ச்சி நடந்த பிறகு, இப்போது பூமியில் வாழும் அனைத்து மக்களும் நோவாவின் சந்ததிகளே ஆவார்கள். (Tafsir Ibn Kathir, Abridged Volume 3, Parts 6, 7 & 8, Surat An-Nisa, Verse 148 to the end of Surat Al-An'am, Abridged by a group of scholars under the supervision of Shaykh Safiur-Rahman Al-Mubarakpuri [Darussalam Publishers & Distributors; Riyadh, Houston, New York, Lahore, first edition January 2000], p. 399; bold and capital emphasis ours)

கீழ் கண்ட குர்‍ஆன் வசனங்களுக்கு விரிவுரை எழுதும் போது:

அன்றியும் நூஹ் நம்மைப் பிரார்த்தித்தார்; பிரார்த்தனைக்கு பதிலளிப்பதில் நாமே சிறந்தோர் ஆவோம். ஆகவே, நாம் அவரையும் அவருடைய குடும்பத்தாரையும் மிகப்பெருங் கஷ்டத்திலிருந்து பாதுகாத்தோம். மேலும், அவர்களுடைய சந்ததியரை (பிரளயத்திலிருந்து காப்பாற்றி பிற்காலம்) நிலைத்திருக்கும்படி செய்தோம். (குர்‍ஆன் 37:75-77)

இபின் கதீர் எழுதுகிறார்:

<அவர்களுடைய சந்ததியரை நிலைத்திருக்கும்படி செய்தோம்> 'Ali bin Abi Talhah reported that Ibn 'Abbas, may Allah be pleased with him, "There was no one left apart from the offspring of Nuh, peace be upon him." Sa'id bin Abi 'Arubah said, narrating from Qatadah ...

"All people descended from the offspring of Nuh, peace be upon him." At-Tirmidhi, Ibn Jarir and Ibn Abi Hatim narrated from Samurah, may Allah be pleased with him, that the Prophet ... said concerning the Ayah ...

...

((சேம், காம், யாப்பேத்.))

சமுரா(அவர் மீது சாந்தி உண்டாகட்டும்) அவர்கள் மூலமாக கேட்டு, இமாம் அஹமத் பதிவு செய்தது என்னவென்றால்,

அல்லாஹ்வின் தூதர் சொன்னது என்னவென்றால், சேம் என்பவர் அரேபியர்களின் தந்தையாவார், காம் என்பவர் எத்தியோப்பியர்களின் தந்தையாவார் மற்றும் யாப்பேத் என்பவர் ரோமர்களின் தந்தையாக இருக்கிறார். (Tafsir Ibn Kathir Abridged, Volume 8, Surat Al-Ahzab, Verse 51 to the end of Surat Ad-Dukhan, First edition: September 2000, pp. 262-263; bold emphasis ours)

மேலே கண்ட அனைத்து விவரங்களும் இபின் கதீர், இபின் அப்பாஸ் மற்றும் முஹம்மது போன்றவர்கள் சொன்ன விவரங்களிலிருந்து எடுத்தவையாகும். இவர்களின் இந்த விவரங்கள் "குர்‍ஆன் சொல்லும் வெள்ளம் ஒரு குறிப்பிட்ட இடம் சம்மந்தப்பட்டது" என்றுச் சொல்லும் தற்கால இஸ்லாமியர்களின் வாதத்திற்கு எதிராக மறுப்பதாக உள்ளது.

இந்த ஆய்வை முடிப்பதற்கு முன்பாக இஸ்லாமியர்களின் கடைசி வாதம் பற்றி சிறிது சிந்திப்போம். அதாவது, "பேழையானது (கப்பல்) இன்று துருக்கி என்று அழைக்கும் நாட்டிலுள்ள அராரத் (Mt. Ararat) என்ற மலையில் தங்கியது என்று பரிசுத்த பைபிள் சொல்வது(ஆதி 8:4) தவறானது, ஆனால், அந்த பேழை ஜூதி (Mt. Judi) என்ற மலையில் தங்கியது(குர்‍ஆன் 11:44) என்று குர்‍ஆன் சரியாகச் சொல்கிறது" என்று இஸ்லாமியர்கள் கூறுகிறார்கள்.

முதலாவது, பேழை "அராரத் மலையில் (Mt. Ararat)" தங்கியது என்று பைபிள் சொல்லவில்லை, அதற்கு பதிலாக, பேழை "அராரத் மலைகளில் (the mountains of Ararat)" தங்கியது என்று கூறுகிறது. பைபிளில் குறிப்பிட்ட அராரத் என்பது பழமையான " Urartu" மலைப் பகுதிகளை குறிக்கிறது. இரண்டாவதாக, பேழை "ஜூதி" மலையில் தங்கியது என்ற விவரம் இஸ்லாமுக்கு முன்பே எல்லா மக்களுக்கும் தெரிந்திருந்த ஒரு விவரமாகும். இந்த இரண்டு விவரங்களை கிறிஸ்த மற்றும் இஸ்லாமிய அறிஞர்கள் அங்கீகரித்துள்ளனர்.

என் ஐ வி ஸ்டடி பைபிள் ஆதியாகம் 8:4க்கு கீழ்கண்ட பின்குறிப்பை தருகிறது:
(The NIV Study Bible's note on Genesis 8:4 states,)

"mountains. The word is plural and refers to a range of mountains. Ararat. The name is related to Assyrian Urartu, which became an extensive and mountainous kingdom (see Jer 51:27; see also Isa 37:38), including much of the territory north of Mesopotamia and east of modern Turkey. The ark's landfall was probably in southern Urartu." (bold emphasis ours)

"ஜூதி" மலையைப் பற்றி முஹம்மது அஸத் தன் புத்தகமாகிய "The Message of the Qur'an" என்ற புத்தகத்தில் கீழ்கண்ட விதமாக விவரிக்கிறார்.

"This mountain, known in ancient Syriac as Qardu, is situated in the region of Lake Van, almost twenty-five miles north-east of the town Jazirat Ibn Umar, capital of the modern Syrian district of Al-Jazirah. It `owes its fame to the Mesopotamian tradition which identifies it, and not Mt. Ararat, with the mountains on which Noah's ark rested... This localization of the ark's resting place... is certainly based on Babylonian tradition' (Encyclopedia of Islam I, 1059). We should, however, remember that the designation Ararat (the Assyrian Urartu) at one time included the whole area to the south of Lake Van, in which Jabal Judi is situated: this might explain the Biblical statement that `the ark rested... upon the mountains of Ararat' (Genesis viii, 4)." (Asad, The Message of the Qur'an [Dar al-Andalus Limited; 3 Library Ramp, Gibraltar, 1984], p.320, f. 66 bold emphasis ours)

கு‍ர்‍ஆன் சொல்லும் விவரமான "பேழையானது ஜூதி மலையில் தங்கியது" என்ற விவரம், முஹம்மதுவின் காலத்தில் எல்லாருக்கும் தெரிந்திருந்த விவரமேயாகும். அது ஒன்றும் புதிதான விஷயமல்ல. இதனை அங்கீகரித்து, எ. யூசுப் அலி கீழ்கண்ட விதமாக எழுதுகிறார்:

"Let us get a little idea of the geography of the place. The letters J, B and K are philologically interchangeable, and Judi, Gudi, Kudi are sounds that can pass into each other. There is no doubt that the name is connected with the name `Kurd', in which the letter r is a later interpolation, for the oldest Sumerian records name a people called Kuti or Gutu as holding the middle Tigris region not later than 2000 B.C. (see E. B., Kurdistan). That region comprises the modern Turkish district of Bohtan, in which Jabal Judi is situated (near the frontiers of modern Turkey, modern Iraq, and modern Syria), and the town of Jazirat ibn `Umar, (on the present Turco-Syrian frontier), and it extends into Iraq and Persia. The great mountain mass of the Ararat plateau dominates this district. The mountain system `is unique in the Old World in containing great sheets of water that are bitter lakes without outlets, Lake Van and Lake Urumiya being chief' (E. B., Asia). Such would be the very region of a stupendous Deluge if the usual scanty rainfall were to be changed into a very heavy downpour. A glacier damming of Lake Van in the Ice Age would produce the same result. The region has many local traditions connected with Noah and the Flood. The Biblical legend of Mount Ararat being the resting place of Noah's Ark is hardly plausible, seeing that the highest peak of Ararat is over 16,000 feet high. If it means one of the lower peaks of the Ararat system, it agrees with Muslim tradition about Mount Judi (or Gudi), and this is in accordance with the oldest and best local traditions. These traditions are accepted by Josephus, by the Nestorian Christians, and indeed by all the Eastern Christians and Jews, and they are the best in touch with local traditions. See (Viscount) J. Bryce, `Transcaucasia and Ararat,' 4th ed., 1896, p. 216." (Ali, The Holy Qur'an, f. 1539, p. 525)

பரிசுத்த பைபிள் "அராரத் மலைகளில்" பேழை தங்கியது என்றுச் சொன்னதை தவறாக புரிந்துக்கொண்டு, அராரத் மலையில் தங்கியது என்று நினைத்துக்கொண்டு யூசுப் அலி அவர்கள் பைபிளை குற்றம் பிடித்தாலும், ஜூதி மலைப் பற்றி அவர் கூறிய விவரம் குறிப்பிடத்தக்கது. யூசுப் அலி அவர்கள் இந்த ஜூதி மலையில் பேழை தங்கியது என்ற விவரமானது முஹம்மது பிறப்பதற்கு முன்பாக பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக, இன்னும் சொல்லப்போனால் இயேசுவின் காலத்திலேயே எல்லாருக்கும் தெரிந்திருந்த விஷயம் என்றுச் சொல்கிறார். ஆக, குர்‍ஆன் ஒன்றும் புதியதாக ஒன்றும் சொல்லிவிடவில்லை, குர்‍ஆனின் அனேக கதைகள் எப்படி எல்லா அரபியருக்கு தெரிந்திருக்கும் கதைகளாக இருந்தனவோ, அதுபோல, இந்த ஜூதி மலைப் பற்றிய விவரமும் எல்லாருக்கும் தெரிந்திருக்கின்ற விவரமேயாகும்.

முடிவுரை


நம்முடைய இந்த ஆய்வில், நோவாவின் கால வெள்ளம் முழு உலகத்தையும் வியாபித்தது என்பதை விளக்க சில குர்‍ஆன் வசனங்களை நாம் மேற்கோள் காட்டினோம். இதே போல, இஸ்லாமிய அறிஞர்களாகிய இபின் அப்பாஸ் போன்றவர்களும் மற்றும் முஹம்மதுவும் "வெள்ளமானது உலகமயமானது" என்பதை அங்கீகரித்துள்ளார்கள் என்பதை கவனித்தோம். இந்த விவரங்களை எல்லாம் நாம் கவனத்தில் கொண்டால், இன்றைய இஸ்லாமிய வாதம் புரிபவர்கள் சொல்லும் விவரமானது அதாவது, குர்‍ஆன் ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஏற்பட்ட வெள்ளத்தைச் சொல்கிறது என்ற வாதமானது, எல்லா ஆதாரங்களுக்கும் எதிரானது என்பது விளங்கும். இவர்களின் வாதம் குர்‍ஆனில் சொல்லப்பட்ட மற்றும் ஆரம்ப இஸ்லாமிய சரித்திர விவரங்களுக்கு முரண்பட்டதாக இருப்பதை காணலாம்.

Source: DOES THE QURAN TEACH A LOCAL FLOOD?




Isa Koran Home Page Back - Koran Index
1

Monday, February 23, 2009

வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?

வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்?

ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?

இஸ்லாமும் நோவாவும்

முன்னுரை: நோவாவின் வெள்ளம் உலகம் முழுவதும் வியாபித்தது என்று பைபிள் கூறுகிறது, இதையே குர்‍ஆனும், ஆரம்ப கால இஸ்லாமியர்களும் கூறினார்கள். ஆனால், தற்கால இஸ்லாமிய அறிஞர்கள் வெள்ளம் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே அதாவது நோவாவின் சமூகத்தார்களை மட்டுமே அழித்தது, பைபிள் சொல்வது தவறு என்றுச் சொல்கிறார்கள்.

குர்‍ஆன் சொல்வதும் "உலகம் முழுவதும் ஏற்பட்ட வெள்ளமே" என்று விளக்கும் கட்டுரையை இங்கு படிக்கவும்:

குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா? (DOES THE QURAN TEACH A LOCAL FLOOD?)

இந்த கட்டுரையில் நாம் தற்கால இஸ்லாமியர்கள் சொல்வது போல, வெள்ளமானது ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே ஏற்பட்டது என்பதை ஒரு விவாதத்திற்கு ஏற்றுக்கொண்டு, இதனால், விளையும் பிரச்சனைகள் என்ன? அவைகளை எப்படி இஸ்லாமியர்கள் சரி செய்வார்கள் என்பதை காண்போம்.

1) அல்லாஹ்வின் கட்டளை: ஒவ்வொரு வகையிலும் ஆண் பெண் கொண்ட ஒரு ஜோடியை கப்பலில் ஏற்றிக்கொள்

ஒவ்வொரு வகையான மிருகங்களில் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் என்று ஒரு ஜோடியை தன்னிடம் கப்பலில் ஏற்றிக்கொள் என்று அல்லாஹ் நோவாவிற்கு கட்டளையிடுகிறார். அதனை குர்‍ஆன் 11:40 என்ற வசனத்தில் படிக்கலாம்.

முஹம்மது ஜான் மொழிபெயர்ப்பு:

இறுதியாக, நம் உத்தரவு வந்து, அடுப்புப் பொங்கவே, (நாம் நூஹை நோக்கி;) "உயிர்ப் பிராணிகள் ஒவ்வொரு வகையிலிருந்தும் (ஆண் பெண் கொண்ட) ஒவ்வொரு ஜோடியை (அக்கப்பலில்) ஏற்றிக் கொள்ளும்; (மூழ்கடிக்கப்படுவார்கள் என்று எவர்களைக் குறித்து முன்பே நம்) வாக்கு ஏற்பட்டுவிட்டதோ அவர்களைத் தவிர் உம் குடும்பத்தாரையும், ஈமான் கொண்டவர்களையும் ஏற்றிக்கொள்ளும்" என்று நாம் கூறினோம்; வெகு சொற்ப மக்களைத் தவிர மற்றவர்கள் அவருடன் ஈமான் கொள்ளவில்லை. (குர்‍ஆன் 11:40)

பி.ஜைனுல் ஆபிதீன் மொழிபெயர்ப்பு:

நமது கட்டளை வந்து, தண்ணீர் பொங்கிய போது "ஒவ்வொன்றிலும் ஒரு ஜோடியையும், உமது குடும்பத்தாரில் நமது விதி முந்தி விட்டவர்களைத் தவிர மற்றவர்களையும், நம்பிக்கை கொண்டோரையும் ஏற்றிக் கொள்வீராக!" என்று கூறினோம். அவருடன் மிகச் சிலரே நம்பிக்கை கொண்டனர். (குர்‍ஆன் 11:40)

குர்‍ஆனும், இஸ்லாமியர்கள் நபி என்று கருதும் முஹம்மதுவும், மற்றும் ஆரம்பகால இஸ்லாமிய அறிஞர்களாகிய இபின் அப்பாஸ், போன்றோர்களும், மற்றும் இபின் கதீர் போன்ற குர்‍ஆன் விரிவுரையாளர்களும், நோவாவின் காலத்தில் ஏற்பட்ட வெள்ளம் பூமி அனைத்தும் வியாபித்தது என்றுச் சொல்வதை ஏற்றுக்கொள்ளாமல், பைபிளை குற்றம் பிடிப்பதற்காகவே "வெள்ளம் ஒரு பகுதியில் மட்டும் ஏற்பட்டது" என்றுச் சொல்லும் இஸ்லாமியர்களுக்கு கீழ் கண்ட கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன.

ஒரு குறிப்பிட்ட இடம் மட்டுமே அழிக்கபோவதாக இருந்தால், ஏன் மிருகங்களில் ஆண் பெண் என்று ஒரு கோடி பாதுகாக்கப்படவேண்டும் என்று அல்லாஹ் விரும்பினார்/செயல்படுத்தினார்?

• அல்லாஹ் அழிக்க நினைத்தது, நோவாவின் சமூகத்தினரை மட்டுமே என்று சொன்னால், ஏன் அவர் மிருகங்களை பாதுகாக்க அதுவும் இனவிருத்தி அடைவதற்கு தேவையான ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் மிருகங்களை தன் கப்பலில் சேகரித்துக் கொள் என்று நோவாவிற்கு கட்டளையிடவேண்டும்?

• நோவாவும் அவரது சமூகத்தார்களும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் வசித்து இருப்பார்கள், அவர்கள் சில கிலோ மீட்டர் தூரம் வியாபித்து இருக்கலாம், உதாரணத்திற்கு எடுத்துக்கொண்டால், ஒரு சின்ன ஊராக இருக்கலாம், அல்லது ஒரு சிறிய பட்டணமாக இருக்கலாம். ஒரு பேச்சுக்காக சென்னை பட்டணம் அளவிற்கு பெரிய இடத்தில் அவர்கள் வசித்ததாகவே கணக்கெடுத்துக் கொண்டாலும், அந்த இடத்தில் இருக்கும் மிருகங்களில் ஒரு ஆண் பெண் ஜோடியை பாதுகாக்கவேண்டிய அவசியம் என்ன?

• ஒரு இடத்தில் இருக்கும் மிருகங்கள் அடுத்த இடத்தில் இருக்காதோ? நோவாவின் சமூகத்தார்கள் வாழ்ந்த இடத்தில் இருந்த மிருகங்கள் வேறு இடத்தில் இல்லாமல் போகுமா? இஸ்லாமியர்கள் சிந்திக்கவேண்டும்.

• நோவாவின் காலத்தில் அவரது இருப்பிடமுள்ள இடத்தில் மட்டுமே மிருகங்கள் இருந்தனவா? இவ்வளவு பெரிய பூமியில் வேறு எங்குமே மிருகங்கள் இல்லையா?

• நோவாவின் வசிப்பிடத்திலுள்ள மிருகங்களை அப்படியே மனிதர்களோடு சேர்த்து அழித்துவிட்டால், உலகத்தில் அந்த மிருக இனமே இல்லாமல் போகும் என்று அல்லாஹ் சிந்தித்து, ஒரு ஜோடியை பாதுகாக்கவேண்டிய அவசியமென்ன? உதாரணத்திற்கு, நோவா சென்னை பட்டணத்தில் வசித்திருந்தால், அல்லாஹ் சென்னையை மட்டும் அழிக்க திட்டமிட்டிருந்தால், சென்னையில் வசிக்கும் ஒரு ஜோடி ஆடுகளை(ஆண் பெண்) பாதுகாக்க வேண்டிய அவசியமென்ன? சென்னையில் இருக்கும் ஆடுகள், மதுரையில் இருக்காதா? மும்பையில் இருக்காதா? கொல்கத்தாவில் இருக்காதா? அதிகபட்சமாக மற்ற கண்டங்களில், நாடுகளில் இருக்காதா?

• சிலர், ஆஸ்திரேலியாவில் மட்டும் காணப்படும் கங்காரு போன்ற மிருகங்களை பாதுகாக்கும் வண்ணம் அல்லாஹ் இப்படி சொல்லியிருக்கலாம் அல்லவா? என்று சொல்லக்கூடும். நீங்கள் சொல்வது உண்மை தான், ஆனால், நாம் மேலே படித்த குர்‍ஆன் வசனத்தின் படி, அசாதாரணமாக காணப்படும் மிருகங்களை மட்டுமே பாதுகாக்கும் படி அல்லாஹ் சொல்லவில்லை, "ஒவ்வொரு இனத்திலும் ஒரு ஜோடி" என்று பொதுவாகச் சொல்லியுள்ளார். ஆகவே, உங்களின் இந்த வாதம் சரியானது அல்ல.

மேற்கண்ட விவரங்களிலிருந்து நாம் காண்பது என்னவென்றால், குர்‍ஆன் சொல்லும் பெரு வெள்ளம், ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே ஏற்பட்ட வெள்ளமல்ல, அது உலகம் முழுவதும் பரவிய வெள்ளமே, அப்போது மட்டுமே, ஒவ்வொரு இனத்தையும் பாதுகாக்க ஒரு ஜோடி ஆண் பெண் மிருகங்கள் தேவைப்படும். ஆக, நோவாவின் வெள்ளம் சம்மந்தப்பட்டு நவீன கால இஸ்லாமியர்களின் நவீன எண்ணங்கள் தவறானவைகளாகும்.

2) பூமி முழுவதும் வெள்ளத்தால் சூழாத போது தப்பிக்க கப்பல் எதற்கு?

முதலாவதாக நாம் மேலே கண்டோம், மிருகங்களை பாதுகாக்க அல்லாஹ் செய்த ஏற்பாடு, அந்த பெரு வெள்ளம் பூமியனைத்திற்கும் பரவியது என்பதை காட்டுகிறது.

இரண்டாவதாக, ஒரு குடும்பத்தை காப்பாற்ற அதுவும் ஒரு குறிப்பிட்ட இடம் மட்டுமே வெள்ளத்தில் மூழ்கடிக்க, அந்த குடும்பம் மற்றும் மிருகங்கள் தப்பிக்க கப்பல் எதற்கு? வெள்ளம் சூழாத இடத்திற்கு இடம் பெயர்ந்து இருக்கலாமே?

ஒரு குறிப்பிட்ட இடத்தை வெள்ளத்தால் அழிக்கும் போது, ஒரு கப்பலைக் கொண்டு சமாளித்தது அறிவுடமையாக இருக்குமா சிந்தியுங்கள்.

ஒருவேளை நான் கடவுளாக இருப்பேனானாள், ஒரு இடத்தை மட்டுமே அழிக்க திட்டமிட்டால், நோவா தன் மக்களை எச்சரிக்கை செய்யும் படி சில ஆண்டுகள் அவகாசம் கொடுப்பேன், பிறகு, அவரை இருக்கும் இடத்தை விட்டு, எங்கு வெள்ளம் வராதோ அவ்வளவு தூரம் அவரை கொண்டுச் சென்று அல்லது அவரை பிரயாணம் செய்யச் சொல்லி, பிறகு அழித்து இருப்பேன். ஒரு தனி குடும்பத்திற்கு ஒரு பெரிய கப்பல் கட்ட தேவைப்படும் ஆண்டுகள் அவர்கள் இடம் பெயர்ந்து இருந்தால், அதிக தூரம் சென்று இருப்பார்கள்

சென்னையில் வெள்ளம் கொண்டுவர விரும்பினால், வேறு தூரமான மாவட்டமுள்ள இடத்திற்கு சென்று விடு என்று சொல்லிவிட்டால் முடிந்துவிட்டது கதை, அதே போல மிருகங்களையும் இடம் பெயர்ந்து செல்லச் சொல்லிவிட்டால் முடிந்துவிட்டது கதை. இதை செய்வதை விட்டுவிட்டு, ஒரு இடத்தை வெள்ளத்தால் அழிக்க, ஒரு பெரிய கப்பலை தயார் செய்யச் சொல்லி, அதுவும் எந்த தொழில் நுட்பமும், இல்லாத அந்த காலத்தில் அவ்வளவு பெரிய கப்பலை இந்த சின்ன விஷயத்திற்கு தயார் செய்யச் சொல்வது, அறிவுடமையா?

சிலர் கேட்கலாம், மிருகங்கள் எப்படி இடம்பெயரும் என்று? இதுமிகவும் சுலபம், மிருகங்கள் இயற்கையாகவே வரும் ஆபத்தை கண்டு தானாகவே இடம் பெயரும், ஒரு வேளை அவைகள் இடம் பெயரவில்லையானாலும், இந்த வெள்ளத்தை கொண்டு வருபவர் அல்லாஹ் அதாவது இறைவன் தானே, அவனால் எல்லாம் கூடும், ஒன்றுமில்லாத போது மிருகங்களை உருவாக்கியவர் மிருகங்களை இடம் பெயர வைப்பது அவருக்கு கடினமான வேலையா?

ஒரு பகுதியை வெள்ளத்தால் அழிக்க,

• ஒரு பெரிய கப்பலை தயார் படுத்தச் சொல்லி,

• மிருகங்களை ஜோடியாக அதனுள் அனுப்பி,

• வெள்ளத்தை கொண்டு வந்து, பிறகு

• தண்ணீரை பூமியிலிருந்து வடியும் படி செய்து, அதுவரை கப்பலில் பிரயாணம் செய்து

• பிறகு அந்த ஒரு குடும்பத்தையும், மிருகங்களையும் அந்த இடத்தில் வைப்பது என்பது

எல்லாம் அறிந்த இறைவன் செய்தார் என்றுச் சொல்வது அறிவுடமையா?

இதற்கு பதிலாக,

• பல ஆண்டுகள் தன் மக்களை எச்சரிக்கை செய்யச் சொல்லி,

• நோவாவை வேறு பாதுகாப்பான இடத்திற்கு செல்ல உதவி செய்து, (ஆபிரகாமை எப்படி தூரமாக இடத்திலிருந்து கொண்டு வந்தார் அது போல)

• அந்த அழியும் பகுதியில் இருக்கும் விசேஷித்த மிருகங்களை (அதாவது கங்காரு போன்ற வேறு எங்கும் இல்லாத மிருகங்களை) மட்டுமே இடம் பெயரச் செய்து

• வெள்ளம் கொண்டு அழித்துவிட்டால், முடிந்தது வேலை.

சென்னையில் வெள்ளமும், அரசாங்கத்தின் டைடானிக் கப்பல் அறிவுரையும்:

வெள்ளமானது ஒரு குறிபிட்ட இடத்தில் மட்டுமே வந்தது என்றுச் சொல்பவர்களின் கருத்து எப்படி இருக்கிறது தெரியுமா?

சென்னையில் வெள்ளம் வரும் என்று தெரிந்தவுடன், அரசாங்கம், எல்லா மக்களையும் வேறு இடத்திற்கு அனுப்பாமல், ஒரு டைடானிக் போன்ற ஒரு கப்பலை தயார் செய்து, "சென்னை வாசிகளே, நீங்கள் எல்லாரும் இந்த கப்பலுக்குள் ஏறிக்கொள்ளுங்கள், அதில் எல்லா உணவு, தங்கும் வசதிகள் உண்டு, எத்தனை மாதங்கள் ஆனாலும் சரி, நாம் வெள்ளத்தில் மூழ்காமல், கப்பலிலேயே சுற்றிக்கொண்டு இருப்போம், பல‌ (ஆறு) மாதம் கழித்து தண்ணீர் வழிந்த பிறகு, நாம் மறுபடியும் சென்னையில் வசிக்கலாம்" என்றுச் சொல்வது போல உள்ளது.

அடுத்த மாநிலம, அல்லது மாவட்டம் நன்றாக இருக்கிறதே, அங்கு வெள்ளம் இல்லையே, அங்கே பாதுகாப்பாக நாம் இருப்போம், வெள்ளம் வடிந்த பிறகு சென்னைக்கு வரலாம் என்றுச் சொல்வதை விட்டுவிட்டு, ஒரு கப்பலில் ஆறுமாதம் சென்னையைச் சுற்றியே வலம் வர அறிவுரை கூறுவது அறிவுடமையாக இருக்குமா?

இப்படி இருக்கிறது, நோவாவின் வெள்ளம் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே என்றுச் சொல்வது. வெள்ளம் ஒரு குறிப்பிட்ட இடத்தில் வந்தது என்றுச் சொல்வதில் தவறில்லை, ஆனால், குர்‍ஆனின் விவரங்கள் அனைத்தும் இதற்கு எதிராக இருக்கிறதே! இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறார்கள்?

சென்னையில் வெள்ளம் வந்தால், உலகத்தில் கணக்கிலடங்கா ஆடுகள் பாதுகாப்பாக இருக்கும் போது, சென்னையிலிருந்து ஒரு ஜோடி ஆண் பெண் ஆடுகளை பாதுகாக்க வேண்டிய அவசியமென்ன?

சென்னையில் வெள்ளம் வந்தால், மதுரைக்கு செல்லவேண்டியது தானே? கேரளாவிற்கு செல்லவேண்டியது தானே! அவ்வளவு ஏன் வட இந்தியாவிற்கு செல்லவேண்டியது தானே?

லோத்து வாழ்ந்த இடம் அழிக்கப்படும் போது, அவரை அவ்வூர் விட்டு வெளியேற்றவில்லையா இறைவன்?

சோதோம் கோமோரா அக்கியால் அழியும் என்பதால், லோத்துவிற்கும் அவரது குடும்பத்தார்களுக்கும் ஃபையர் புரூப் (Fire Proof Dress) உடைகளை கொடுத்து, இந்த பட்டணத்திலேயே இருங்கள் என்றுச் சொன்னாரா இறைவன்?

முடிவுரை: முடிவாகச் சொல்லிக்கொள்கிறேன், நோவாவின் வெள்ளம் பூமியனைத்திலும் ஆக்கிரமித்த ஒன்றாகும், இதனை குர்‍ஆனும், முஹம்மதுவும் இதர இஸ்லாமிய அறிஞர்களும் அங்கீகரித்துள்ளார்கள் (இக்கட்டுரையை படிக்கவும்: குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா? (DOES THE QURAN TEACH A LOCAL FLOOD?). இல்லை இல்லை, நாங்கள் ஒப்புக்கொள்ளமுடியாது என்றுச் சொன்னால், இந்த கட்டுரையில் நாம் கண்ட பிரச்சனைகளுக்கு பதில் என்ன என்று நீங்கள் தேடிப்பார்க்க வேண்டியவர்களாக இருப்பீர்கள்.

ஒரு சின்ன இடத்தில் வெள்ளம்கொண்டுவர இவ்வளவு பெரிய வேலையை அதுவும் சம்மந்தமில்லாத வேலையை செய்வதற்கு இறைவன் நம்மைப் போல அறிவில் குறைந்தவன் அல்ல என்பதை மட்டும் நான் சொல்லிக்கொள்கிறேன்.



Isa Koran Home Page Back - Koran Index

 

Friday, February 13, 2009

அபூநூறா தளத்திற்கு பதில் -1 : போலி உமரும் உளறல்களும்

 

முன்னுரை:

கடந்த இரண்டாண்டுகளாக தமிழ் இணைய தளங்கள் முக்கியமாக இஸ்லாமிய கிறிஸ்தவ இணைய தளங்கள் அதிகமாக பெருகிக்கொண்டே இருக்கிறது. இதற்கு அனேக காரணங்கள் இருந்தாலும், அவைகளில் மிகவும் முக்கியமான காரணம், "இஸ்லாமை கேள்வி கேட்க" கிறிஸ்தவர்கள் ஆரம்பித்தது தான்.

தன் வழக்கிலே முதல்பேசுகிறவன் நீதிமான்போல் காணப்படுவான்; அவன் அயலானோ வந்து அவனைப் பரிசோதிக்கிறான் (நீதிமொழிகள் 18:17)

இஸ்லாமியர்கள் சொல்லும் அனைத்திற்கும், எழுதும் எல்லாவற்றிற்கும் தஞ்சாவூர் பொம்மைகள் போல தலையாட்டாமல் கிறிஸ்தவர்கள் கேள்விகள் கேட்டு, பதில்கள் சொல்வதினால், தளங்கள் அதிகமாகிக் கொண்டே வருகிறது.

நேர்மையானவர்களின் நேர்மையின்மை:

இஸ்லாமியர்களோ, கிறிஸ்தவர்களோ தளங்கள் ஆரம்பிப்பது தவறில்லை, அவைகளில் தங்கள் கருத்தை, விமர்சனத்தை எழுதுவதும் தவறில்லை(இந்த நாடு, இஸ்லாமிய ஆட்சி நடக்கும் நாடுகள் போல் இல்லாமல், ஜனநாயக நாடாக இருப்பதால், எல்லாருக்கும் சுதந்திரம் உண்டு). ஆனால், நேர்மையான முறையில் செய்கிறார்களா என்று கேட்டால் இல்லை என்று தான் சொல்லவேண்டும்.

கிறிஸ்த தளங்கள் தாங்கள் பதிக்கும் கட்டுரைகளின் தொடுப்புக்களை தருகிறார்கள். எந்த தள கட்டுரைக்கு பதில் தருகிறோம் என்பதை தொடுப்புக்களோடு பதிக்கிறார்கள்.

ஆனால், இஸ்லாமியர்கள்...? இஸ்லாமிய அறிஞர்கள்....? உலகத்திலேயே தங்கள் மதம் தான் உண்மையானது, நாங்கள் தான் நேர்மையானவர்கள் என மார்தட்டி ஆவேசமாக எழுதும் அறிஞர்கள் இப்படி நியாயமான முறையில் நடந்துக் கொள்கிறார்களா? என்று கேட்டால், இல்லை என்பது தான் பதில்.

இஸ்லாமிய தளங்களுக்கு வேண்டுகோள்:

ஈஸா குர்‍ஆன் தளத்தில் இரண்டு வகையான கட்டுரைகள் வெளியாகின்றன.

1) நான்(உமர்) எழுதும் கட்டுரைகள்

2) ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தளத்தின் கட்டுரைகள்

இவைகளில், நான் எழுதும் கட்டுரைகளை நீங்கள் உங்கள் தளங்களில் பதிக்கும் போது, அல்லது சில வரிகளை மேற்கோள் காட்டும் போது என் தளத்தின் தொடுப்பை தரவேண்டியது அவசியம். ஆனால் நீங்கள் தருவதில்லை ஏனென்றால், நீங்கள் உங்கள் முஹம்மது நடந்த வழியில் நடப்பவர்கள் என்று சொல்லிக்கொள்கிறீர்கள், அல்லாஹ் காட்டிய வழியில் நடப்பவர்கள் என்றுச் சொல்லிக்கொள்கிறீர்கள், உங்களுக்கு வழிகாட்டியவர்கள் இப்படித் தான் உங்களுக்குச் சொல்லிக்கொடுத்தார்களா என்று எல்லாரும் சந்தேகம் கொள்ளும் அளவிற்கு அநாகரீகமாக தளத்தின் மூல தொடுப்புக்களை தருவதில்லை.

இப்படி நீங்கள் என் தளத்தின் தொடுப்பை பதிப்பதில்லை என்று பல முறை சொல்லியாகிவிட்டது. நீங்கள் திருந்துவதாக தெரியவில்லை. ஆகையால் விட்டுவிட்டேன்.

ஆனால், ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தளத்தின் கட்டுரைகள் பதிப்பு காப்புரிமை(Copy Right) பெற்ற கட்டுரைகள், ஆகையால், அவைகளை பதிக்கும் போது கட்டாயமாக நீங்கள் தொடுப்பை கொடுத்தே ஆகவேண்டும். அப்படி தரவில்லையானால், அது சட்டவிரோத செயலாகும். இஸ்லாமியர்கள் சட்டவிரோத செயல்களில் ஈடுபடாதவர்கள் என்ற உணர்வை மக்களின் மனதில் உண்டாக்கவேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு இருந்தால், ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தள கட்டுரைகளை அல்லது அதன் ஒரு சில வரிகளை பதிக்கும்போது மூல தொடுப்பை தாருங்கள். இதனை செய்ய மறுத்தால், சட்டப்படி என்ன செய்ய வேண்டியதோ அதனை நான் செய்யவேண்டி வரும்.

உங்களுக்கு ஒரு மாதம் அவகாசம் தருகிறேன்(இன்று தேதி 13 பிப்ரவரி). அதற்குள் ஆன்சரிங் இஸ்லாம் தள கட்டுரைகளுக்கு தொடுப்பை கொடுங்கள், இல்லையானால், நான் ஆன்சரிங் இஸ்லாம் தள நிர்வாகத்திற்கு இதனை தெரிவிக்க வேண்டி வரும். இந்த எச்சரிக்கையை ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தளத்தின் கட்டுரையை பதிக்கும் அனைத்து இஸ்லாமிய தளங்களுக்கும் முன்வைக்கிறேன்.

இதனை நீங்கள் வேண்டுகோளாக எடுத்துக்கொள்ளலாம் அல்லது எச்சரிக்கையாகவும் எடுத்துக்கொள்ளலாம். உங்கள் மொழியில் சொல்லவேண்டுமென்றால், ஒரு காபிர் ஒரு இஸ்லாமியரை எச்சரிக்கை செய்யும் அளவிற்கு நீங்கள் தாழ்ந்துப் போக வேண்டாமென்றுச் சொல்கிறேன்.

முக்கியமாக அபூநூறா தள நிர்வாகிகளே,

உங்களுக்குச் சொல்லிக்கொள்கிறேன், "உளறல்பேஜ் (http://ularalpage.blogspot.com/2009/02/blog-post.html)" என்ற பிளாக்கரில் பதித்த கட்டுரை ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் கட்டுரையாகும், அது காப்புரிமை பெற்ற கட்டுரை, எனவே அக்கட்டுரையின் கடைசியில் மூல தொடுப்பாகிய‌ ஆன்சரிங் இஸ்லாம் தள தொடுப்பை தாருங்கள், அல்லது கட்டுரையை எடுத்துவிடுங்கள்.

என் இஸ்லாமிய பதில்/மறுப்பு கட்டுரைகளில் உங்கள் கட்டுரைகளை நான் பயன்படுத்தும் போது, பின்பற்ற வேண்டிய காப்புரிமை விவரங்களை எனக்குச் சொல்லவேண்டுமானாலும் சொல்லுங்கள், நானும் அதற்கு கட்டுப்படுவேன். காப்புரிமை சம்மந்தப்பட்ட விவரங்களுக்கு மட்டுமே கட்டுப்படுவேன். என் கட்டுரைகளில் உங்கள் கட்டுரைகளை மேற்கோள் காட்டி, அதன் தொடுப்பை தராமல் மறந்து இருந்தாலும் தெரிவித்தால், நான் திருத்திக்கொள்வேன்.

இனி, அபூநூறா தளத்தில் பதித்த கட்டுரைப் பற்றி கவனிப்போம்

(http://abu-noora.blogspot.com/2009/02/blog-post.html)

என்னை திட்டி தங்கள் கோபத்தை தீர்த்துக்கொள்ளும் அமைதி மார்க்கத்தார்கள்:

மரியாதை கொடுத்து மரியாதை வாங்கிக்கொள்ளுங்கள் என்று பல முறைச் சொல்லியும், இஸ்லாமியர்கள் திருந்துவதாகத் தெரியவில்லை. நான் அனேக முறை சொல்லி சொல்லி சோர்ந்துவிட்டேன். அபூநூறா தளம் எழுதுவதை கவனியுங்கள்.

அதில் ஒருவகையான மனோவியாதிக்கு அடிமையாகிவிட்ட உமர் என்பவரின் சமீபத்திய உளறல் ஒன்றை படிக்க நேர்ந்தது. (அதைப் படிக்க இதைச் சொடுக்கவும்.)



"உலகின் பல பாகங்களில் இஸ்லாம் வேகமாக பரவுவதை" முஸ்லிம்கள், "இஸ்லாம் தான் சிறந்த மார்க்கம் என்பதற்கான ஆதாரமாகக் காட்டுகிறார்களாம். அது தவறாம்".

ஒரே கேள்வி:

அவ்வாறு முஸ்லிம்கள் எங்கே கூறுகின்றனர்? என்று கேட்டு விட்டாலே கோயபல்ஸ் உமரின் அயோக்கியத்தனம் கழண்டு விழுந்து விடும்.

மனோவியாதி என்றும், அயோக்கியத்தனம் என்றும் இந்த அபூநூறா தளக்காரர் சொல்லியுள்ளார்.

இப்போது இவர்களுக்கு ஒரு கதையைச் சொல்வது தான் சரியானது:

அதாவது ஒரு ஊரில் ஒரு சாது இருந்தாராம், சிலர் அவரை தொடர்ந்து திட்டிக்கொண்டே இருந்தார்களாம். அப்போது அவரது சீடர்கள் "அவர்கள் அப்படி திட்டிக்கொண்டு இருக்கும்போது ஏன் சும்மா இருக்கிறீர்கள்?" என்று கேட்டார்களாம். அதற்கு அந்த சாது, "உங்களுக்கு பிடிக்காத ஒரு பொருளை யாராவது உங்களுக்கு கொடுத்தால் என்ன செய்வீர்கள்?" என்று கேட்டாராம். அதற்கு அவர்கள், "கொடுத்த நபரிடமே திருப்பி கொடுத்துவிடுவோம்" என்றார்களாம். அப்போது, அந்த சாது அதைத் தான் நாம் இப்போது செய்துக்கொண்டு இருக்கிறேன், எனக்கு தேவையில்லாத பொருளை எனக்கு வேண்டாம் என்றுச் சொல்லி அவர்களிடமே கொடுத்துவிடுகிறேன் என்றாராம்.

இந்த கதையில் வருவது போல, நான் செய்யமாட்டேன். நான் இவர்கள் தருபவற்றை அப்படியே இவர்களின் நபியிடம் கொடுத்துவிட விரும்புகிறேன். அவரிடம் கொடுத்து, இதோ பாருங்க இஸ்லாமிய நபி அவர்களே, உங்கள் சீடர்கள் இவைகளை என்னிடம் கொடுத்தார்கள், அவைகள் எனக்கு தேவையில்லாதது, எனவே, உங்களிடம் தருகிறேன், நீங்களாவது வைத்துக்கொள்ளுங்கள், அல்லது வேறு என்ன செய்யமுடியுமோ அதை செய்யுங்கள் என்று சொல்லி கொடுத்துவிடுகிறேன்.

ஆகையால், இனி எந்த இஸ்லாமியராவது என்னை "மனோவியாதிக்காரன்" என்றுச் சொன்னால், அது அவர்களின் நபிக்கு அவர்கள் சொல்வதாக ஆகிவிடும், எனவே எச்சரிக்கையாக இருங்கள் இஸ்லாமியர்களே! என்னை அயோக்கியன் என்றுச் சொன்னால், அது அவர்களது நபிக்கு அவர்களே தருவதாக அர்த்தமாகி விடும், எனவே எச்சரிக்கையாக இருங்கள்
.

இஸ்லாமியர்கள் அடிக்கடி சொல்லும் வாதங்கள்:

இஸ்லாமியர்கள் ஒரு சில வாதங்களை திரும்ப திரும்ப கிளிப்பிள்ளையைப் போல சொல்லிக்கொண்டே இருப்பவர்கள். அவைகளில் சில வாதங்கள் கீழ் கண்டவிதமாக இருக்கும்.

1) இஸ்லாம் தான் உயர்ந்தது, சிறந்தது, இதனை விமர்சிப்பவர்கள் எப்போதும் வெற்றியடைய மாட்டார்கள்.

2) உலகத்தின் பல நாடுகளில் இஸ்லாம் தான் வேகமாக வளரும் மதமாக உள்ளது, இதற்கு இஸ்லாமின் கோட்பாடுகள் தான் காரணம், இஸ்லாம் சத்தியமார்க்கம் என்பதை இதனால் அறியலாம்..

3) இஸ்லாமுக்கு மக்கள் அலையலையாக வருகிறார்கள். இஸ்லாம் தான் பெண்களுக்கு உரிமைகளை அதிகமாக தருகிறது.

4) தலைசிறந்த தலைவர்கள் 100 பேர்களில் முஹம்மது தான் முதலில் இருக்கிறார் (The 100: A Ranking of the Most Influential Persons in History- http://en.wikipedia.org/wiki/The_100)

இப்படி சொல்லிக்கொண்டு போகலாம். இவைகளை கண்டிப்பாக நாம் அடிக்கடி நம்முடைய இஸ்லாமிய நண்பர்கள் மூலமாக கேட்டிருப்போம்.

ஆனால், அபூநூறா தளத்தின் கட்டுரையில் இப்படியாக எழுதப்பட்டுள்ளது.

வேகமாக வளர்ந்தால் அது உண்மையானதாக இருப்பதாக பொருள் என்று முஸ்லிம்கள் கூறாத ஒன்றை தானே உருவாக்கி, அதற்குத் தானே பதில் கூறி திருப்திபட்டுக் கொள்ளும் இவரைக் கண்டுகொள்ளாமல் விடுவது தான் சிறந்தது என்றாலும் இல்லாத ஒரு குற்றச்சாட்டை "பொய்களின் கூடாரமான" கிறிஸ்தவத்தின் தூதர்கள் பரப்பும் பொழுது "அவ்வாறு இல்லை" என்று கூற வேண்டிய கடமை முஸ்லிம்களுக்கு உருவாகிறது.

இஸ்லாம் வேகமாக வளருகிறது, இது எதை காட்டுகிறது, இஸ்லாம் தான் உண்மையான மார்க்கம் என்பதைக் காட்டுகிறது என்று எந்த இஸ்லாமியரும் சொல்வதில்லையாம்.

ஒரு வேளை இந்த கட்டுரையை படிப்பவர்கள் இஸ்லாமியரல்லாதவராக இருப்பீர்களானால், நீங்கள் உங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது, உங்கள் இஸ்லாமிய நண்பரிமிருந்து கேட்பீர்கள், அல்லது கேள்விப்பட்டு இருப்பீர்கள்.

ஒரு வேளை இதை படிப்பவர்கள் இஸ்லாமியராக இருப்பீர்களானால், நீங்கள் சாதாரணமாக இணையத்தை பயன்படுத்துபவராக இருப்பீர்களானால், இப்படி சொல்லியிருப்பீர்கள் அல்லது உங்களிடம் மற்ற இஸ்லாமியர்கள் சொல்வதை கேட்டிருப்பீர்கள்.

ஆனால், அபூநூறா தளம் சொல்கிறது, இப்படி இஸ்லாமியர்கள் சொல்வதில்லையாம்.

உளறல்களிலெல்லாம் மிகப்பெரிய உளறல்:

மேலே உள்ளது போல, "இஸ்லாமியர்கள் சொல்லமாட்டார்கள் என்று" மறுத்துவிட்டு, தன் கட்டுரையிலேயே இன்னொரு இடத்தில் அருமை சகோதரர் அபூநூறா அவர்கள் கீழ் கண்டவாறு எழுதுகிறார்கள்:

ஆக உலகில் யாரேனும் ஒருவர் அல்லது ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் ஒரே குரலில் 'இஸ்லாம் வேகமாக வளருகின்றது' என்று சொல்வார்களாயின் அது தங்களுக்குக் கிடைத்த மகிழ்ச்சியான செய்தியை உணர்ச்சி பூர்வமாக வெளிப்படுத்துவதேயன்றி வேறில்லை.

அருமையான சகோதரரே, அந்த மகிழ்ச்சி பெருவெள்ளத்தில் மூழ்கிவிட்டு, இஸ்லாமியர்கள் சொல்லும் விவரங்கள் தான் என் கட்டுரையில் தரப்பட்டு இருந்தது.

கட்டுரையின் ஆரம்பத்தில், இப்படி எந்த இஸ்லாமியரும் சொல்வதில்லை என்று சொல்லிவிட்டு, பிறகு உலக இஸ்லாமியர்கள் இப்படி சொல்வார்களானால், அது உணர்ச்சிப் பெருக்கு என்கிறார்.

இதனை எங்கே சென்று முறையிடுவது?

இதை என்னவென்றுச் சொல்வது?

உளறல் என்பதா அல்லது "உளறல்களின் சிகரம்" என்றுச் சொல்வதா?


இதை வாசிக்கும் வாசகர்களே சிந்திக்கட்டும்.

ஆக, இப்போது எல்லாருக்கும் புரிந்திருக்கும் யார் உளறுகிறார்கள் அல்லது யார் உளறுகிறோம் என்பதை அறியாமலேயே உளறுகிறார்கள் என்று?

வேகமாக வளருகிறது என்பதைப் பற்றி இஸ்லாமிய தளத்திலிருந்து சில வரிகள்:

இஸ்லாம் இணைய பேரவையின் கட்டுரை:

....உண்மையில் இன்று உலகத்தில் வேகமாக வளரும் மார்க்கம் இஸ்லாம் என்பதை நிதர்சனாமாக நிருபித்துவருகிறது.

சர்வதேச அளவில் இஸ்லாம் மக்கள் உள்ளத்தில் எந்தளவு ஆன்மீக மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதற்கு உலகின் முதன்மை நாடாகத் திகழும் அமெரிக்காவில் இருந்து கிடைக்கும் இஸ்லாம் பற்றிய செய்திகளே, இஸ்லாம் ஒரு சத்தியமார்க்கம் என்பதற்கு சரியான எடுத்துகாட்டாகும். உலக மக்களிடையே ஏற்பட்டிருக்கும் ஆன்மீக வெற்றிடத்தை நிரப்பி இன்று அமெரிக்காவில் மிக வேகமாகப் பரவும் மதமாக இஸ்லாம் திகழ்ந்து கொண்டிருக்கின்றது எனலாம்....

Source: http://www.tmpolitics.net/iip/Articles/sathiyam.htm
Formats mine

மேலே அடிக் கோடிட்ட வரிகளைப் பாருங்கள்.

"இஸ்லாம் ஒரு சத்தியமார்க்கம் என்பதற்கு சரியான எடுத்துகாட்டாகும்."

எது சரியான எடுத்துக்காட்டு என்று இஸ்லாம் இணைய பேரவைச் சொல்கிறது?

அமெரிக்காவில் இஸ்லாம் வேகமாக வளருவது தான் இஸ்லாம் உண்மையான மார்க்கம் என்பதை எடுத்துக்காட்டுகிறதாம். இப்படி இஸ்லாமியர்கள் சொல்கிறார்கள் என்று தானே நான் எழுதினேன்( http://www.geocities.com/isa_koran/tamilpages/Authors/abumiriam/moreisbetter.html ).

என்ன அபூநூறா அவர்களே, இஸ்லாம் இணைய பேரவைத் தள அறிஞர்களும் என்னைப் போல "மனோ வியாதியால்" பாதிக்கப்பட்டவர்கள் என்று சொல்ல வருகிறீர்களா?

அவர்களே உங்களை நியாயம் தீர்க்கட்டும்.

உளறல் தள நிர்வாகி அவர்களுக்கு உமரின் வேண்டுகோள்கள்:

நான் எழுதியது உளறல் என்றுச் சொல்லி, ஒரு தளத்தை ஆரம்பித்து, அதில் என் கட்டுரையை பதித்துள்ளீர்கள், மிக்க நன்றி. ஆனால் மூல தொடுப்பு கொடுக்கும் படி நான் இக்கட்டுரையின் ஆரம்பத்தில் உங்களை கேட்டுள்ளேன்(அல்லது) எச்சரிக்கை செய்துள்ளேன். நீங்கள் கட்டுரையின் மூலத்தை(ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தொடுப்பை) தருவீர்கள் என்று நம்புகிறேன்.

முன்னுரையாக‌ ஒரு வரியும் சொந்தமாக கொடுக்காமல் நான் எழுதிய கட்டுரையை அப்படியே பதித்துள்ளீர்கள், அதே போல என் மற்ற கட்டுரைகளையும் (மன்னிக்கவும், உளறல்களையும்) பதிக்கும் தைரியம் உங்களுக்கு இருக்கின்றதா?

அதாவது, குர்‍ஆன் சம்மந்தப்பட்டு, உங்கள் நபி சம்மந்தப்பட்டு அனேக கட்டுரைகள் என் ஈஸா குர்‍ஆன்(http://www.geocities.com/isa_koran) தளத்திலும், ஆன்சரிங் இஸ்லாம் தமிழ்(http://www.answering-islam.org/tamil)தளத்திலும் இருக்கின்றனவே, அவைகளை பதிப்பீர்களா?

அப்படி பதிக்கமாட்டேன் என்று நீங்கள் அடம் பிடித்தால், இந்த ஒரு கட்டுரைத் தவிர மற்ற அனைத்து கட்டுரைகளும் "உமரின் உளறல்கள் அல்ல, அவைகள் இஸ்லாமின் உண்மை முகங்கள்" என்று எல்லாரும் முடிவு செய்துக்கொள்ளலாமா?

அதாவது, "உளறல் பக்கம்" என்றுச் சொல்லி, ஒரு கட்டுரையை மட்டுமே பதித்துள்ளீர்கள், இதுவரை இந்த ஒரு கட்டுரையை மட்டுமே "உளறல்" என்று நீங்கள் கருதுகிறீர்களா?

அல்லது எங்களுடைய அனைத்து கட்டுரைகளும்(முஹம்மதுவின் கொலைகள், குர்‍ஆனில் உள்ள எழுத்துபிழைகள், முரண்பாடுகள், etc…) உளறல்கள் என்று கருதுகிறீர்களா?

அப்படி என் எல்லா கட்டுரையும் உளறல் என்று நீங்கள் சொன்னால், அவைகளை உங்கள் (மன்னிக்கவும் என் உளறல் பக்கம்) தளத்தில் எப்போது பதிக்கப்போகிறீர்கள்?

ஈஸா குர்‍ஆனின் அனைத்து கட்டுரைகளை நீங்கள் அந்த தளத்தில் பதிக்க நான் அனுமதி அளிக்கிறேன். அவைகளுக்கு நீங்கள் உங்கள் வழக்கப்படி பயந்துப்போய் தொடுப்புக்களை கொடுக்காமல் இருந்தாலும் பரவாயில்லை. ஆனால், ஆன்சரிங் இஸ்லாம் கட்டுரைகளுக்கு மட்டும் மூல தொடுப்பை கொடுத்துவிடுங்கள்.

எப்படி வசதி?

எனக்கு ஒரு விவரம் தெரிந்தாக வேண்டும், நீங்கள் என் இந்த ஒரு கட்டுரையை மட்டும் உளறல் என்று கருதுகிறீர்களா அல்லது என் எல்லா கட்டுரைகளையும் உளறல்கள் என்று கருதுகிறீர்களா?

நான் எழுதுவது எல்லாம் உளறல் என்றுச் சொன்னால், அந்த எல்லா உளறல்களை எப்போது பதிப்பீர்கள்?

ஒரு நகைச்சுவை நியாபகத்திற்கு வருகிறது

நான் ஒரு முறை படித்த ஒரு நகைச்சுவை நியாபகத்திற்கு வருகிறது, அதனை கீழே தருகிறேன், படிக்கவும்:

There was a Christian lady who lived next door to an atheist. Every day, when the lady prayed, the atheist guy could hear her. He thought to himself, "She sure is crazy, praying all the time like that. Doesn't she know there isn't a God?"

Many times while she was praying, he would go to her house and harass her, saying "Lady, why do you pray all the time? Don't you know there is no God?" But she kept on praying.

One day, she ran out of groceries. As usual, she was praying to the Lord explaining her situation and thanking Him for what He was gonna do. As usual, the atheist heard her praying and thought to himself, "Humph! I'll fix her."

He went to the grocery store, bought a whole bunch of groceries, took them to her house, dropped them off on the front porch, rang the door bell and then hid in the bushes to see what she would do. When she opened the door and saw the groceries, she began to praise the Lord with all her heart, jumping, singing and shouting everywhere! The atheist then jumped out of the bushes and told her, "You ol' crazy lady, God didn't buy you those groceries, I bought those groceries!" At hearing this, she broke out and started running down the street, shouting and praising the Lord.

When he finally caught her, he asked what her problem was. She said, "
I knew the Lord would provide me with some groceries, but I didn't know he was gonna make the devil pay for them!" Source: http://www.basicjokes.com/djoke.php?id=2446

முடிவுரை:

அன்பான சகோதரரே (நீங்கள் கிறிஸ்தவம் பார்வை தள அறிஞர் அபூ அப்திர்ரஹ்மான் என்று நான் கருதுகிறேன்)

உங்களுக்கு உங்கள் இஸ்லாம் தான் உண்மையான மார்க்கம் என்ற நம்பிக்கை இருந்தால்,

நான் எழுதுகின்ற கட்டுரைகள் உளறல்கள் என்று கருதினால்,

என் அனைத்து கட்டுரைகளையும் பதியுங்கள். இப்போது பதித்தீர்களே, அது போல, அதாவது கட்டுரையை அப்படியே காபி பேஸ்ட் செய்துவிடுங்கள். நான் பதிக்கமாட்டேன் என்றுச் சொன்னால், மற்ற கட்டுரைகளை நீங்கள் உளறல்கள் அல்ல என்று ஒப்புக்கொண்டீர்கள் என்று பொருளாகிவிடும்.

References:

1) http://www.geocities.com/isa_koran/tamilpages/Authors/abumiriam/moreisbetter.html
2) http://ularalpage.blogspot.com/2009/02/blog-post.html
3) http://abunoora.com/




Isa Koran Home Page
 
 
1 http://www.geocities.com/isa_koran/tamilpages/Rebuttals/AbuNoora/AbuNoora-Umar1.html

காஸா(Gaza): நீதியில்லை, அமைதியில்லை! நீதியை அறிந்துக்கொள், அமைதியை அறிந்துக்கொள்!

 

 
Gaza: No Justice - No peace!

Know Justice – Know Peace!

ஆசிரியர்: ஆஸ்கார்(Oskar)

அறிமுகம்:

ஊடகத் துறைகளாகிய வானொலி, தொலைக்காட்சி மற்றும் இணையம் போன்றவைகளின் வருகை மற்றும் முன்னேற்றத்தினால், உலகில் ஒரு நிகழ்ச்சி எங்கு நடந்தாலும் அதைப் பற்றிய செய்திகள், உடனே மனிதனின் காதுகளுக்கு எட்டிவிடுகின்றன. அநீதியும் அதனால் விளையும் பயங்கரமான காயங்களும் நம்முடைய நீதியான சிந்தனைகளை எரித்துவிடுகின்றன. தனிமனிதனோ, குழுக்களோ, அரசாங்கங்களோ அல்லது நாடுகளோ "தவறு" என்று தெரிந்தும் தவறுகள் செய்யும் போது அனேகர் அதிகமாக துக்கப்படுகிறார்கள். ம‌னித‌ர்க‌ள் மாத்திர‌ம் அல்ல‌, உல‌கில் இருக்கும் எல்லா பெரிய ம‌த‌ங்க‌ளும் "அநீதி நடக்கும் போது அத‌ற்கு த‌ண்ட‌னை வ‌ழ‌ங்க‌ப்ப‌டவேண்டும்" என்ப‌தை ஏற்றுக்கொள்கின்ற‌ன‌. இருந்தபோதிலும், மனிதர்கள் அமைதியை நிலை நாட்ட‌ இப்படிப்பட்ட "அநீதி செய்பவர்களுக்கு தண்டனை கொடுத்த பின்னரும்" அமைதி தொடர்ந்து நிலைத்திருந்ததா என்று கேட்டால், "இல்லை" என்று சரித்திரம் நமக்கு பதில் சொல்கிறது. இந்த கட்டுரையில், இறைவன் இப்படிப்பட்ட அநீதி நடந்த போது "எப்படி அதை சமாளித்தார்?" மற்றும் "எந்த விதமான அமைதியை அவர் கொடுத்தார்?" என்பதை பைபிளின் அடிப்படையில் காணப்போகிறோம்.

நீதி மற்றும் அமைதியின் இறைவன்

God of Justice and Peace

சமாதானத்தின் தேவன் நீதியுள்ளவர்(பிலிப்பியர் 4:9; உபாகமம் 32:4). உண்மையில் அவரை அறிந்தவர்களின் வாழ்க்கை நன்மையான காரியங்களாலும், சமாதான காரியங்களாலும் அடையாளமிடப்பட்டு இருக்கும். ஆதாமும் ஏவாளும் தங்களை உருவாக்கிய தேவனுக்கு கீழ்படியாமல் போன அந்த காலத்திலிருந்து இந்த இணைபிரியாத "நீதியும் சமாதானமும்" உலகத்தில் அதிகமாக மறைந்துக் கொண்டே வருகிறது. எப்படி ஒரு பனிப்பந்து மலை உச்சியிலிருந்து உருண்டு கீழே வர வர பெரியதாக மாறிவிடுகிறதோ அது போல, அநீதியானது தாங்கமுடியாத அளவிற்கு பெருகிவிட்டது. இந்த அநீதியை தடுத்து நிறுத்துவதற்கும் அல்லது அதிக தீங்கு இன்னும் நடைபெறாமல் அநீதிக்கு தடை விதிப்பதற்கும், அதே போல நீதியை நிலை நாட்டுவதற்கும் யாரால் முடியும்? போர் அதிக சூடாக நடந்துக்கொண்டு இருக்கும் போது, யார் செய்தது தவறு, யார் செய்தது சரி என்று பிரித்துக்காட்ட யாரால் முடியும்? ஒருவர் பக்கம் சாய்ந்து அவர் சொல்லும் விவரங்களை நாம் கேட்போமானால், எதிராளியின் பார்வையில் இது அநியாயம் என்று அவருக்கு படுவதை நாம் காண தவறிவிடுவோம்.

தற்போது காஸாவில் நிலவும் சூழ்நிலையை இதற்கு ஒரு எடுத்துக்காட்டாக நாம் கொள்ளலாம். இஸ்ரேலிய இராணுவத்தின் தாக்குதலினால் பாதிக்கப்படும் சின்னங்சிறு குழந்தைகள் அனுபவிக்கும் வேதனையை ஊடகங்கள் விவரிக்கின்றன, மற்றும் பாலஸ்தீனா மீது இரக்கம் கொள்ளும் மக்கள் இந்த செய்திகளைக் கண்டு, கோபங்கொள்கின்றனர். அதே நேர‌த்தில், யூத‌ நாட்டின் ப‌க்க‌ம் உள்ள‌ ம‌க்க‌ள், இர‌த்த‌ம் சொட்டும் எரிந்த‌ முக‌ங்க‌ளோடு காண‌ப்ப‌டும் குழ‌ந்தைக‌ளைக் க‌ண்டு ம‌ன‌ம் வ‌ருந்தினாலும், த‌ங்க‌ள் மீது தாக்குத‌ல்(collateral damage) ந‌ட‌த்துப‌வர்க‌ளை எப்ப‌டி ச‌மாளிக்க‌ முடியும்? என்று கேட்டு, இஸ்ரேலின் செயலை நியாயப்படுத்துகிறார்கள். இஸ்ரேல் என்ற நாட்டை அழிக்கவேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு உருவாக்கப்பட்ட ஹமாஸ்(Hamas) என்ற இயக்கம் தொடர்ந்து ஏவுகனைகளோடு தாக்கும் போது, அதனிடமிருந்து தப்பிப்பதற்காக நடத்தப்படும் "ஒரு தற்காப்பு போர் இல்லையா இது?". அதே நேர‌த்தில் த‌ங்க‌ள் நாட்டிலேயே த‌ங்க‌ளை சிறைக் கைதிகளாக‌ வைத்திருக்கும் நாட்டிற்கு எதிராக‌ போர் புரியும் "சுத‌ந்திர‌ போர் வீர‌ர்க‌ள்" என ஹமாஸ் இயக்கத்தார்கள் கருதுகிறார்கள். சரி, உண்மையில் அந்த இடம் யாருடையது? குர்‍ஆனும் பைபிளும் அந்த இடத்தை யூதர்களுக்கு இறைவன் தான் கொடுத்தார் என்றுச் சொல்லவில்லையா(குர்‍ஆன் சூரா அல்-அரப் 7:133-138, யோசுவா 1:1-5)? இந்த சிக்கலான சூழ்நிலையில் இன்னொரு முக்கிய‌மான‌ விவ‌ர‌த்தைச் சொல்கிறேன், ஹ‌மாஸ் இய‌க்க‌த்தை ஸ்தாபித்த‌ ஷேக் ஹ‌சேன் யூசுப்(Sheikh Hassan Yousef) என்ப‌வ‌ரின் ம‌க‌னான‌ முச‌ப் ஹ‌சேன்(Mousab Hassan) என்ப‌வ‌ர் ச‌மீப‌ கால‌த்தில் பைபிளின் இயேசுக் கிறிஸ்துவை பின்பற்றப் போவதாக தன் முடிவை தெரிவித்துள்ளார்.

ஹ‌மாஸ் இய‌க்க‌ம் ஆட்சி செய்துக்கொண்டு இருக்கும் போது, ஹ‌மாஸ் த‌ன் சொந்த‌ ம‌க்க‌ளை கொடுமைப்ப‌டுத்துவ‌தையும், கொல்வ‌தையும் க‌ண்டு முச‌ப் அதிகமாக ப‌ய‌ந்துள்ளார். இவர்கள் எப்படிப்பட்ட சுதந்திரத்தை பிரகடனப்படுத்துகிறார்கள்? தன்னை பின்பற்றுகிறவர்களிடம் "உன் சத்துருக்களை நேசியுங்கள்" என்றுச் சொன்ன இயேசுவின் வார்த்தைகள், காஸாவில் இளைஞர் இயக்கத்திற்கு தலைவராக இருந்த முசப்பை, இந்த வித்தியாசமான மற்றும் வினோதமான போதனையை செய்த இயேசுவைப் பற்றி இன்னும் அதிகம் அறிய கட்டாயப்படுத்தியது(1, 2).

உன் எதிரியை நேசி! இதில் நீதி எங்கேயுள்ளது?

Love your enemy! Where is the justice in that?

நமக்கு எதிராக தீமை செய்பவர்களை மன்னித்து, அவர்கள் மீது அன்பு கூறுங்கள் என்று இயேசு எப்படி தன்னை பின்பற்றுகிறவர்களுக்கு கட்டளை கொடுக்கமுடிந்தது? இப்படி நமக்கு தீமை புரிந்தவர்களை மன்னித்தால், இது முழுவதும் அநீதி இல்லையா? ஆனால், உண்மையில் தௌராத்தில் தேவன் சொல்கிறார்:

பழிவாங்குவதும் பதிலளிப்பதும் எனக்கு உரியது; ஏற்றகாலத்தில் அவர்களுடைய கால் தள்ளாடும்; அவர்களுடைய ஆபத்துநாள் சமீபமாயிருக்கிறது; அவர்களுக்கு நேரிடும் காரியங்கள் தீவிரித்து வரும் (உபாகமம் 32:35).

'Punishment is mine and reward, at the time of the slipping of their feet: for the day of their downfall is near, sudden will be their fate.'(Deuteronomy 32:35)

நீதியை செய்வதற்காக தண்டனை கொடுக்கப்பட வேண்டும். இதை தேவன் தாமே தன் வழியிலே இந்த தண்டனையை நிறைவேற்றுவார். உண்மையில் சொல்லவேண்டுமானால், தேவன் ஏற்கனவே, அதிகமாகவே தண்டனை அளித்துவிட்டார், எனவே நாம் இப்போது நம் எதிரிகளை நேசிக்கவேண்டும், இனியும் நேசிக்கவேண்டும், தீமை புரிந்தவர்களுக்கு தண்டனை தருவது மஸீஹாவாகிய இயேசு பார்த்துக் கொள்வார்.

மஸீஹா(மேசியா) என்பதின் அர்த்தம்

Meaning of Messiah

குர்‍ஆன் கூட இயேசுவை "அல்-மஸீஹா"(சூரா அல்-இம்ரான் 3:45) என்று அழைக்கிறது. ஆனால், குர்‍ஆன் இந்த வார்த்தையின் பொருள் என்ன என்று விளக்குவதில்லை. இது மட்டுமல்ல, இந்த குறிப்பிட்ட பட்டம்/பெயர் ஏன் இயேசுவிற்கு மட்டும் தனிப்பட்ட விதத்தில் கொடுக்கப்பட்டது என்று கூட குர்‍ஆன் விவரிப்பதில்லை. குர்‍ஆனின் இந்த தெளிவற்ற விவரத்தின் மத்தியில், "மஸீஹா" என்னும் இயேசுக் கிறிஸ்து பைபிள் வெளிப்பாட்டின் முழுமுதல் நோக்கத்தை நிறைவேற்றியிருக்கிறார். மேசியா/மஸீஹா என்ற எபிரேய வார்த்தையின் அர்த்தம், "அபிஷேகம் செய்யப்பட்டவர்", இதனை ஆங்கிலத்தில் "கிறிஸ்து" என்று மொழி பெயர்த்து இருக்கிறார்கள். இந்த வார்த்தை பல விதங்களில் பயன்படுத்தப்பட்டது, கடைசியாக வருகிறவரான மேசியாவின் செயல்களை குறிப்பிட இவ்வார்த்தை பயன்படுத்தப்பட்டது. அவர் தேவனால் தெரிந்தெடுக்கப்பட்டவர், அவர் தன் மக்களை இரட்சிப்பார், அவர் தேவனின் எதிரிகளை நியாயந்தீர்த்து தண்டிப்பார் மற்றும் அவர் இந்த முழு உலகத்தின் எல்லா நாடுகளையும் நீதியோடும் நியாயத்தோடும் நித்திய நித்தியமாக ஆட்சி புரிவார். அவர் தேவனாக‌ உள்ளவர், அவர் பரலோகத்தில் இருக்கிறார், மனிதனாக வந்து நாம் பெறவேண்டிய தண்டனையை அவர் தன் மேல் ஏற்றுக்கொண்டார் என்று பைபிளில் விவரிக்கப்படுகிறார்(ஏசாயா 9:6-7, 53:1-12, தானியேல் 7:13-14).

நடைமுறைப் படுத்துதல்

Practical implications

ஒரு நல்ல செய்தி என்னவென்றால், "சமாதானம்-Peace" என்பது காஸாவிலும் இன்னும் சண்டைகள் சச்சரவுகள் உள்ள இடங்களிலும் சாத்தியம் தான், ஏனென்றால், நீதியை தேவனே நிலை நாட்டியிருக்கிறார். ஆனால், தேவனின் இந்த "சமாதான திட்டத்தை" நிராகரித்தால் என்ன நடக்கும்? இஞ்ஜில் என்றுச் சொல்லும் நற்செய்தி சொல்கிறது:

"கூடுமானால் உங்களாலான மட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள்" (ரோமர் 12:18)

'As far as it is possible for you be at peace with all men.'(Romans 12:18)

தேவனுடைய இந்த விலை மதிக்க முடியாத பரிசை எல்லாருக்கும் தருகிறார். ஆனால், இந்த பரிசை யார் யாரெல்லாம் அங்கீகரித்து ஏற்றுக் கொள்கிறார்களோ அவர்களே இப்பரிசு மூலம் கிடைக்கும் நன்மைகளை அனுபவிக்க முடியும். தேவனுடைய உதவியுடன் மன்னிப்பையும் அன்பையும் பெற்று யார் யாரெல்லாம் அவைகளை அனுபவிக்கிறார்களோ, அவர்களால் மட்டுமே மன்னிப்பையும் அன்பையும் மற்றவர்களுக்கு தரமுடியும். இப்படிப்பட்டவன் தன் நாட்டின் அரசாங்க சட்டங்களை மக்கள் பின் பற்றும்படி செய்கிறான், சில நேரங்களில் கட்டாயப்படுத்தியாவது செய்யச் செய்கிறான்(ரோமர் 13:1-8). ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பதிலாக அதிகாரிகள் செயல்படுகிறார்கள். ஒரு வேளை அரசாங்க அதிகாரிகள் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பாடுபடவில்லையானால், சட்டத்தை நிலை நிறுத்தவில்லையானால், நியாயந்தீர்ப்பு நாளிலே தேவன் அவர்களை நித்திய நரகத்திலே தள்ளி தண்டிப்பார். இதே த‌ண்ட‌னை தேவனது நீதியான‌ வ‌ழியை ம‌றுக்கும் ஒவ்வொருவ‌ருக்கும் கிடைக்கும்.

தேவனுடைய நீதியையும் அவரது சமாதானத்தையும் ஏற்றுக்கொண்டு, அதை சந்தோஷமாக அனுபவிக்கும் மக்கள், இந்த கடினமான காலங்களில் என்ன செய்யவேண்டும்? நாம் முழுமையான மனநிறைவோடு மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்பது நம்மை சுற்றியுள்ள சூழ்நிலைகளின் மீது ஆதாரப்பட்டு இருக்கவில்லை, அதற்கு பதிலாக நம்முடைய இரட்சகரோடு நாம் கொண்டுள்ள நல்லுறவின் மீது ஆதாரப்பட்டு இருக்கிறது. தனி மனிதனோ, குழுக்களோ அல்லது நாடுகளோ தங்கள் சுயநல வெறுப்பிலிருந்து விடுதலை அடைய விருப்பமில்லாமல் மறுப்பவர்களிடம் நாம் நல்ல சமாதான மற்றும் வெறுப்பில்லா வழிமுறைகளை பயன்படுத்தி சந்திக்கவேண்டும் (உதாரணம்: மார்டின் லூத்தர் கிங்). இது மிகவும் வலியுண்டாக்கும் நீண்ட வழிமுறையாக இருந்தாலும், இதற்கு அதிக காலமானாலும் இயேசுக் கிறிஸ்து அவர்களுக்காக உண்டாக்கியுள்ள பரலோகத்தில் அவர்களை கொண்டுச் செல்லும் வழி இதுவே. இயேசு அவர்களுக்காக உண்டாக்கிய இடம் தான், அவர்களின் நித்திய தாய் நாடு ஆகும். தேவனின் நீதியை அறியும் உங்கள் மீது தேவனின் சாந்தி உண்டாகட்டும்.

கேள்விகள் விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன, இக்கட்டுரையின் ஆசிரியரோடு தொடர்பு கொள்ள இங்கு சொடுக்கவும்.

Source: http://www.answering-islam.org/authors/oskar/justice_peace.html


ஆசிரியர் ஆஸ்கார் அவர்களின் கட்டுரைகள்
முகப்புப் பக்கம் ஆன்சரிங் இஸ்லாம் தமிழ்

Tuesday, February 10, 2009

சௌதி அரேபியாவில் கொண்டாடிய கிறிஸ்துமஸ்

 

Christmas in Saudi Arabia

பெறுநர் - To:

கிறிஸ்துவில் ஒரு விசுவாசிக்கு,

சௌதி அரேபியா.

உங்களுக்கு என் வாழ்த்துக்கள்,

நீங்கள் என்னை ஒருவேளை மறந்துப்போய் இருக்கலாம், ஆனால் நான் உங்களை நித்தியத்திலும் நியாபகத்தில் வைத்திருப்பேன்.

நவம்பர் மாதம் 1992ம் ஆண்டு, நான் அமெரிக்காவின் விமானப்படை(US Air Force) பிரிவின் சார்பாக‌ 60 நாட்கள் சௌதி அரேபியாவில் பணிபுரியும் படி அனுப்பப்பட்டேன். இதனால் கிறிஸ்துமஸ் விடுமுறையிலும் நாம் சௌதியில் இருக்கவேண்டிய நிலையில் இருந்தேன், நான் மிகவும் வேதனை அடைந்தேன். ஏனென்றால், என்னுடைய மனைவி எங்கள் முதல் குழந்தையை தன் கருவில் சுமந்துக்கொண்டு இருந்தாள், இந்த கிறிஸ்துமஸ் கால விடுமுறையில் நான் அவளோடு செலவிட வேண்டும் என்று அதிகமாக விரும்பினேன்.

சௌதி அரேபியாவில் வந்து இறங்கியதும், என் மன‌வேதனை இன்னும் அதிகமானது, ஏனென்றால், இங்கு கிறிஸ்துமஸ் விடுமுறை கொண்டாட்டத்திற்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் மிகவும் அதிகமாக இருந்தது. அதாவது, எந்த தோரணங்களும் இருக்கக்கூடாது, கிறிஸ்தவ கூடுகைப் பற்றிய எந்த ஒரு போதுக் கூட்டமும் நடத்தலாகாது, கிறிஸ்தவ பாடல்களும் பாடப்படக்கூடாது போன்ற கட்டுப்பாடுகள் எங்கள் முகாம்களில் கூட இல்லை என்பதை கேட்டதும், இன்னும் வேதனை அதிகமாகியது. அனேக ஆண்டுகள் தேவனுக்கு சேவை செய்யாமல் உலக வேலைகளில் மட்டுமே கவனம் செலுத்திய எனக்கு, இந்த சூழ்நிலை என் கிறிஸ்தவ நம்பிக்கையை மறுபடியும் புதுப்பித்துக் கொள்ள, கிறிஸ்துவின் பிறப்பை உண்மையாக கொண்டாட‌ விடுமுறை கிடைக்குமா என்று ஏங்கினேன்.

கிறிஸ்துமஸ் நெருங்க நெருங்க, எனக்கு கோபம் கலந்த வருத்தம் அதிகமானது, இந்த கிறிஸ்துமஸ் காலங்களில் இருக்கவேண்டிய சந்தோஷ மனப்பான்மை மறைந்து என் வாழ்வே இருட்டாக தோன்றியது. கிறிஸ்துமஸ்ஸுக்கு முன்பாக சில பரிசுகளை வாங்கி என் மனைவிக்கு அனுப்பலாம் என்ற எண்ணத்தில், டிசம்பர் மாதம் நடுவில் கடைத்தெருவிற்குச் சென்றேன். இந்த நேரத்தில் தான் நான் உங்களை சந்தித்தேன். நான் உங்கள் கடையில் நுழைந்தேன். அனேக பொருட்களை தெரிந்தெடுத்தேன் மற்றும் அவைகளின் விலைகளுக்காக உங்களோடு பேரம் பேசினேன். நான் இப்படி விலை பேசிக்கொண்டு இருக்கும் போது, என் கோபக் கணலை அப்படியே உங்கள் மீது காட்டினேன். நீங்கள் ஒரு "முஸ்லீமாக இருப்பீர்கள்" என்று நினைத்து, உங்களுக்கு என் கோபம் பற்றி தெரியவரும் என்பதை நினைத்து உங்களோடு பேசிக்கொண்டு இருந்தேன். நான் உங்களோடு பேசும் போது, "இந்த பொருட்கள் கிறிஸ்துமஸ்ஸுக்காக வாங்குகிறேன்" என்றும், "இவைகளை கிறிஸ்துமஸ் பரிசுகளாக அனுப்பயுள்ளேன்" என்றும் அடிக்கடிச் சொன்னேன். உங்களுக்கு முன்பாக கிறிஸ்துவின் பெயரை அடிக்கடிச் சொல்லி, உங்களுக்கு இயேசுவின் பிறப்பில் உள்ள சந்தோஷத்தை உங்களுக்கு காட்டவேண்டும் என்று விரும்பி, இப்படி பேசினேன்.

பிறகு நடந்தது தான் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது! நான் இன்னும் என்ன பொருட்கள் வாங்க உள்ளீர்கள் என்று நீங்கள் என்னை கேட்டீர்கள். நான் வாங்க வேண்டிய மீதி பொருட்களை உங்களுக்குச் சொன்னேன். நீங்கள் என் எல்லா பொருட்களையும் பணம் செலுத்துமிடத்தில் அனுப்பிவிட்டு, மெல்லிய குரளில் என்னிடம் "இந்த பொருட்களை என் சார்பாக கிறிஸ்துமஸ் பரிசாக பெற்றுக்கொள்ளுங்கள், நானும் ஒரு கிறிஸ்தவன் தான்" என்றுச் சொல்லி, எனக்கு பரிசுகளை கொடுத்தீர்கள். பிறகு, இன்னும் மெல்லிய குரலில், "தயவு செய்து, இப்படி நான் கிறிஸ்துமஸ் பரிசுகள் உங்களுக்கு கொடுத்ததாக வெளியே யாரிடமும் சொல்லவேண்டாம், அப்படி சொல்வீர்களானால், நான் என் கடையை முழுவதுமாக இழக்கவேண்டி வரும்" என்றுச் சொன்னீர்கள்.

உங்களின் இந்த வார்த்தைகளை கேட்டவுடன், நான் எவ்வளவு பாக்கியவான் என்பதை உணர்ந்தேன். என் வாழ்வின் முதல் 30 ஆண்டுகள் நான் தேவனை தொழுதுக்கொண்டேன், ஜெபித்தேன், நான் விரும்பியபடி கிறிஸ்துமஸ்ஸை கொண்டாடினேன். உங்களைப்போல அல்லாமல், எந்த ஒரு நாடும், எந்த ஒரு குழுவும் அல்லது குடும்ப நபர்களும் என்னை கொடுமைப்படுத்தியதை நான் கண்டதே இல்லை. நீங்கள் வாழும் உலகின் ஒரு சிறிய பகுதியை இன்று நான் கண்டேன். ஒரு சௌதி கிறிஸ்தவராக நிங்கள் இருப்பதினால் உங்களுக்கு காத்திருக்கும் ஆபத்தைக் கண்டேன். நீங்கள் என்னிடம் பகிர்ந்துக் கொண்ட விஷயம் வெளியே தெரிந்தால் உங்களுக்கு நடக்கும் விபரீதங்களைக் கண்டேன். உங்களுடைய தைரியத்தையும் அதே நேரத்தில் அன்பையும் கண்டு வியப்பில் ஆழ்ந்துள்ளேன்.

நீங்கள் அன்று இரவு எனக்கு மூன்று பரிசுகளைக் கொடுத்தீர்கள்.முதலாவதாக, உங்களிடம் நான் விலைக்கு வாங்கிய பொருட்கள் மிகவும் அழகானவைகள், மற்றும் எனக்கு பரிசுகளாக நீங்கள் கொடுத்த பொருட்கள் இன்னும் அருமையானவைகள், ஏனென்றால், அவைகளில் கொடுப்பவரின் இருதயத்தைக் கண்டேன். இரண்டாவதாக, உங்களின் வார்த்தைகள் என்னை தொட்டது, என் விடுமுறை நாட்களை எனக்கு மறுபடியும் கொடுக்கப்பட்டது போல இருந்தது, மற்றும் கிறிஸ்து என் உள்ளத்தில் வாழும் ஒவ்வொரு நாளும் கிறிஸ்துமஸ் என்பதை நான் உணரச் செய்தது. கடைசியாக, நீங்கள் உங்கள் சாட்சியை என்னிடம் பகிர்ந்துக்கொண்டீர்கள், பணம் செலுத்துகின்ற அந்த இடத்தில்(Cash Counter) மெல்லிய குரலில் சொன்ன அந்த சாட்சியே, இதுவரை நான் கெட்ட சாட்சிகளிலெல்லாம் மிகவும் சத்தம் உயர்த்தி சொல்லப்பட்ட சாட்சியாகவும், உயிருள்ள சாட்சியாகவும் நான் உணருகிறேன். உங்களின் அந்த சாட்சி தான் என்னை உற்சாகப்படுத்தியது, மற்றும் தேவனை துதிக்கும் படி எனக்கு கிடைத்திருக்கின்ற சுதந்திரத்திற்காக தேவனை தொடர்ந்து துதிக்கும்படிச் செய்தது. மற்றும் உலகில் உள்ள அவரது பிள்ளைகள் அனைவரோடும் அவர் இருந்து, அவர்கள் இரகசியமாக தேவனை துதிக்கும் போது, இப்படி மெல்லிய குரலில் தங்கள் சாட்சிகளைச் சொல்லி மற்றவர்களை உற்சாகப்படுத்தும்போது, அவர்களை பாதுகாக்கும் படி ஜெபிக்கவும் என்னை உற்சாகப்படுத்தியது.

இந்த கிறிஸ்துமஸ் நாளன்று, யார் யாரெல்லாம் கிறிஸ்துவின் பிறப்பை இரகசியமாக கொண்டாடுகிறார்களோ, அப்படிப்பட்ட சகோதர சகோதரிகளோடு என் இருதயம் இருக்கிறது. ஒரு நாள் நாம் அனைவரும் தேவனின் இராஜ்ஜியத்தில் அவருக்கு முன்பாக நின்று சுதந்திரமாக நின்று தொழுதுக்கொள்ளும் நாளுக்காக எதிர்ப்பார்த்துக் கொண்டு இருக்கும், உங்கள் கிறிஸ்த சகோதரன்.

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.


இப்படிக்கு
கிறிஸ்துவிற்குள் உங்களுக்கு நன்றியுள்ள ஒரு சகோதரன்.

Source: http://www.answering-islam.org/Misc/saudi_christmas.html

சகோதரர் சாரியாஹ் அவர்களின் சாட்சி

 

Brother Chariah's Testimony

நான் மலேசியாவில் உள்ள ஒரு முஸ்லிம் குடும்பத்தில் ஆண் மகனாகப் பிறந்தேன். என் குடும்பத்தார் சமயத் துறையிலும் அரசியல் துறையிலும் மலேசியாவில் பிரபலம் வாய்ந்தவர்கள். இஸ்லாமிய நாட்டின் பிரபலமானவர்களாக இருந்ததால், இஸ்லாமிய மதம் மட்டுமே எங்களுக்கு முக்கியமானதாகும், எங்கள் வாழ்வின் முக்கிய நோக்கமாகவும் இருந்தது.

இஸ்லாமிய பாரம்ரியத்தில் நான் வளர்க்கப்பட்டதோடு மட்டுமல்லாமல், அரபி மொழி, குர்ஆன் கல்வி, சுத்திகரிக்கும் சடங்குகள்(cleansing rituals), தொழுகை, நோம்பு(உபவாசம்) போன்றவைகள் கற்பிக்கப்பட்டு வளர்க்கப்ப்டடேன். அதே வேளையில் பல அயல் நாடுகளைச் சுற்றிப் பார்க்கவும், இதர கலாச்சாரங்களையும் சமயங்களையும் அறியவும் வாய்ப்பு கிட்டியது. புத்த, இந்துத்துவ, யூத, கிறிஸ்தவ பக்தர்களோடு பழகும் வாய்ப்பு கிடைத்தது மற்றும், உண்மையான மார்க்கம் எது என்று அறிய வேட்கையும் ஏற்பட்டது. இறைவன் ஒருவராக இருக்கும்போது ஒன்றுக்கு ஒன்று முரண்பட்ட போதனைகளையுடைய வெவ்வேறு மார்க்கங்கள் இருக்க முடியாது. எனவே, ஒரே இறைவன் வெவ்வேறான சமயக் கல்வியை மனிதனுக்குக் கொடுக்க வாய்ப்பில்லை. அவர் படைத்த உலகைப் பாருங்கள். இயற்பியல்களைக் கற்றுக் கொள்ளுங்கள். நாம் அனுதினமும் இவ்வுலக படைப்பாளியின் இப்படைப்பைக் கண்டு, கற்பனைக்கு எட்டாத அவரின் ஞானத்தையும், அறிவையும் அனுபவிக்கமுடியும். இவ்வுலக மார்க்கங்களில் உள்ள குழப்பங்களைப் போல, படைப்பாளியாகிய இறைவன் குழம்பிப்போய இவ்வுலகை படைக்கவில்லை.

நான் ஆறு வயதாய் இருந்த போது எனக்கு ஏற்பட்ட ஓர் அனுபவம் நினைவுக்கு வருகிறது. அலுவல் காரணமாக என் தந்தை வெளியூருக்குச் சென்று விடுவதால், மாதக் கணக்கில் நான் அவரைச் சந்திக்க முடியாமல் போவதுண்டு. ஒரு நாள் அவர் மேல் எனக்கு அளவு கடந்த ஏக்கம் உண்டாகி, அவரைச் சந்திக்க வேண்டும் என்று விரும்பினேன். அல்லாஹ்விடம் என் தந்தையை வீட்டுக்கு அழைத்து வரவேண்டும் என்று ஜெபிக்க என் சிந்தனையில் தோன்றியது. ஆனால், அப்போது எனக்கு ஒரு பெரிய பிரச்சினை ஏற்பட்டது. அரபி மொழியில் தொழுதுக் கொள்ளும் முறையையும், சுத்தம் செய்துக்கொள்ளும் சடங்குகளையும் அறிந்திருந்த நான், ஒரு குறிப்பிட்ட தேவைக்காக எப்படி வேண்டிக்கொள்ள வேண்டும் என்று அறிந்திருக்கவில்லை. அந்த விருப்பத்தை அல்லாஹ்விடம் தெரிவிக்க முறையாக ஜெபிப்பது எப்படி என்பதையும் வரிசைக்கிரமமாக வாக்கியங்களைக் கூறவும் எனக்குத் தெரியவில்லை. பரிசுத்தம் நிறைந்த அல்லாஹ் வெகு தொலைவில் இருக்கிறார் என்றுதான் நான் அறிந்திருக்கிறேன். அல்குர்ஆனையும் அதன் கட்டளைகளையும் அறிவுப்பூர்வமாக ஆராய்ந்து, நம்மை சடங்குகளால் சுத்திகரித்துக் கொண்டு, சரியாக அரபி மொழியைக் கற்றிருந்தால் மட்டுமே அந்த பரிசுத்த அல்லாஹ்வை அடைய முடியும். மாறாக, கிறிஸ்தவம் அன்பையும் மன்னிப்பையும் அடிப்படையாகக் கொண்ட எளிய மதம் என்றும் பலவீனமான மற்றும் தகுதியில்லாதவர்களையும் ஏற்றுக்கொள்ளும் மதம் என்பதையும் அறிந்து வைத்திருந்தேன். இளம் வயதில் கிறிஸ்தவத் திரைப்படங்களைப் பார்த்து எப்போதும் வியப்பதுண்டு. குவோ வாடிஸ்(Quo Vadis) என்ற படத்தில், ரோமாபுரியர்களால் துன்புறுத்தப்பட்ட கிறிஸ்தவர்கள் அந்தக் கேவலமான செயலை எப்படி முன் வந்து மன்னித்தார்கள் என்பது இந்த உதாரணங்களில் ஒன்று. பிறகு இந்தக் கிறிஸ்தவர்கள் பசியாக வாடும் சிங்கக் கெபியுக்குள் தூக்கி எறியப்பட்டு வேட்டையாடப்பட்டார்கள். உயிர் துறக்கும் நிலையிலும்கூட அவர்கள் தங்கள் தேவனைத் துதித்து வணங்கினார்கள். இப்படிப்பட்ட கிறிஸ்தவர்களினால் நான் விவரிக்க முடியாத பலத்தை பெற்றதாக உணர்ந்தேன். பலவீனத்திலும் அவர்கள் பெலன் கொண்டார்கள். அவர்கள் மரித்துக்கொண்டு இருந்தார்கள், ஆனால், நித்தியத்தில் வாழ்வோம் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருந்தது. எனக்கு இது வியப்பாகவும் குழப்பமாகவும் இருந்தது. இறுதியில் எந்த மதமும் சாராமல், என் தந்தை தாமதமின்றி மறுநாள் வீட்டுக்குத் திரும்ப வேண்டும் என்று வேண்டினேன்.

மறுநாள் காலையில் யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்டது. கதவைத் திறந்து பார்த்த போது புன்முறுவலுடன் நின்ற என் தந்தையின் முகம் தெரிந்தது. எதிர்பாராத வருகை தந்து எங்களை இன்பக் கடலில் அழ்த்த வேண்டும் என்பதற்காகவே, இப்படிச் செய்ததாக அவர் தெரிவித்தார். அல்லாஹ் எங்கள் ஜெபத்தைக் கேட்டார் என்றுணர்ந்து நான் பேரானந்தம் கொண்டேன். அப்போது அல்லாஹ் இருக்கிறார் என்று நம்பத் தொடங்கினாலும், அந்த அல்லாஹ் உண்மையில் யார் என்று அறியும் வேட்கை அதிகரித்தது.

மலேசியாவில் வாழும்போது, இஸ்லாமிய சாங்கியங்களும்(சடங்குகளும்) சட்டதிட்டங்களும் பின்பற்றுவதற்கு மிகவும் சிறமமாக இருந்தது. நோன்பு மாதமாகிய ரமலானில்(ரம்ஜான்) நான் உமிழ் நீரை விழுங்குவதற்கும் தடை விதிக்கப்பட்டது. தொழுகுகைக்கு முன்பு ஆசனவாயில் இருந்து துர்காற்று வெளியேறி விட்டால், மீண்டும் ஒருமுறை என்னைச் சுத்தப் படுத்திக் கொள்ள வேண்டும். கொட்டாவி விட்டு விட்டால், வாய் வழியாக தீய ஆவிகள் நுழைந்து விடாமல் இருக்க, குர்ஆனிய வசனங்களை வாசிக்க வேண்டும். உயிருள்ள நாயைத் தொடுவதற்கும் குறைந்தபட்சம் பொம்மை நாயோடு விளையாடுவதற்கும் தடை விதிக்கப்பட்டது. குர்‍ஆன் வசனங்களைக் கொண்ட தாயத்தை நான் அணிந்திருந்தேன். கழிவறைக்குச் செல்வதற்கு முன்பு குர்ஆனிய வசனங்கள் கொண்ட சங்கிலியை(தாயத்தை) கட்டாயம் கழற்றி விட வேண்டும். அணுசரிக்க வேண்டிய ஆயிரக் கணக்கான சட்ட விதிகள் இருந்தன. அவற்றை மீறினால், என்ன விபரீதம் ஆகிவிடுமோ என்ற பயம் என்னைச் சூழ்ந்திருந்தது. இதனால் எனக்கு மன அமைதி கிட்டவில்லை.

ஒரு காலக் கட்டத்தில் நான் வாசிப்பதற்கு பைபிள்(வேதாகமப் புத்தகம்) கிடைத்தது. நான் அதை வாசிக்க தொடங்கினேன். புதிய ஏற்பாட்டில் உள்ள மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் ஆகிய நான்கு சுவிசேஷங்களையும் வாசித்தேன். வாசித்த ஒவ்வொரு வசனமும் என் உள்ளத்தை தொட்டது. இறைவனுக்கு முன்பாக நாம் அனைவரும் பாவிகளாக இருக்கிறோம் என்று உணர்ந்தேன். எவ்வளவு தீவிரமாக சட்டதிட்டங்களைப் பின்பற்றினாலும், நம்மால் வெல்ல முடியாது. நாம் நினைத்துப் பார்த்ததை விட இறைவன் மிகவும் பரிசுத்தமானவர். ஒரே ஒரு சிறிய பாவம் கூட நாம் பரலோகம் செல்லும் பாக்கியத்தை இழக்கச் செய்கிறது. மேலும் என் வாழ்வில் ஒரு முறையாவது நான் பாவம் செய்திருக்கிறேன் என்று உணர்ந்திருக்கிறேன். ஆனால், எபேசியல் 2.8இல் கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல (நீங்கள் கட்டளைகளை பின்பற்றுவதினால் அல்ல), இது தேவனுடைய ஈவு; என்று சொல்லியிருக்கிறார்.

****

ஒரு நாள் நானும் என் தந்தையும் கடும் நோய்க்கு ஆளானோம். பல வைத்தியர்களைச் சந்தித்தும் அவர்களால் நோயைக் கண்டறிய முடியவில்லை. வழங்கப்பட்ட எல்லா மருந்துகளையும் சாப்பிட்டப் பிறகும் நாளுக்கு நாள் எனது நோய் அதிகரித்துக் கொண்டே போனது. எனது உடல் எடை 12 கிலோ குறைந்ததோடு மரணம் என்னை நெறுங்கி விட்டது என்றும் உணர்ந்தேன். நான் தேவனிடம் ஜெபிக்க தொடங்கினேன். என் பாவங்கள் அனைத்தையும் அவரிடம் அறிக்கையிட்டேன். என்னை மன்னிக்கும் படி அவரிடம் வேண்டினேன். என் பாவங்களுக்காக தன் குமாரனாகிய இயேசு கிறிஸ்து மூலமாக கொடுத்த தியாக பலியை நான் அங்கீகரித்தேன். உண்ணவோ நிற்கவோ மற்ற எந்த சரீரப்பிரகாரமான காரியங்களைச் செய்ய முடியாவிட்டாலும் கூட ஜெபித்து எனது பாவங்களுக்காக நியாயந்தீர்க்கப்படும் நாளைச் சந்திக்கத் தயாரானேன். பரலோகத்திற்குச் செல்வதுதானே எனது குறிக்கோள்!

நான்கு ஐந்து வாரங்களாக சிகிச்சையின்றி படுக்கையில் இருந்த நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். அநே நேரத்தில் என் தந்தை சிறப்புக் கவனிப்புப் பிரிவில் (ICU – Incentive Care Unit) அனுமதிக்கப்பட்டார். ஒரு காலைப் பொழுதில் உறக்கத்தில் இருந்த என்னை உறவினர்கள் எழுப்பி, தந்தை மரித்தத் துயரச் செய்தியை அறிவித்தனர்.

இருதயம் செயலிழந்ததால் என் தந்தை மரித்தார் என்றுச் சொன்னார்கள். ஆனால், மருத்துவர்கள் எங்கள் இருவரின் நோயின் காரணத்தை அறியகூடாமற் போனது. நாங்கள் இருவரும் விஷமிடப்பட்டோம் அல்லது பில்லி சூனியத்திற்கு ஆளானோம் என்ற வதந்தியும் பரவியது. மாற்கு 16.17-18ல் வாக்கு அளித்தபடி

விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள். நவமான பாஷைகளைப் பேசுவார்கள்; சர்ப்பங்களை எடுப்பார்கள்; சாவுக்கேதுவான யாதொன்றைக்குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது; வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள் என்றார்.

நான் இன்னும் உயிரோடு வாழ்கிறேன் என்று விசுவாசித்தேன். சில வருடங்களுக்குப் பிறகு நான் நரம்பு தளர்ச்சி(Nervous breakdown) நோய்க்கு ஆளானேன். மனவியல் மருத்துவர்கள் (Psychologists) கூட எனக்கு உதவ முடியவில்லை. மிக நெறுக்கமான சூழ்நிலையிலும் கூட உதவக் கூடிய தேவனை என் மனதில் நினைத்துக் கொண்டேன். தங்களை துன்பப்படுத்தி கொல்லப்பார்க்கும் எதிரிகளையும் மன்னித்து, மரிக்கும் நேரத்திலும் தேவனை துதிக்கும் படி, தன் விசுவாசிகளை தேவன் தயார்படுத்துகிறார். விஷம் அருந்தி ஒருவன் உயிருக்குப் போராடும் நிலையிலும் கூட தேவன் இரட்சிக்க வல்லவராயிருக்கிறார். தற்செயலாக என் மனைவி ரே ஜென்னிங்ஸ்(Ray Jennings) என்ற ஓர் அமெரிக்க சுவிசேஷகரின் ஜெபக் கூட்டத்திற்கு அழைத்துச் சென்றார். அங்குதான் நாங்கள் குடும்பமாக கிறிஸ்தவத்தை விசுவாசிக்கத் தொடங்கினோம். அந்த சுவிசேஷகர் என் மீது கரம் வைத்து சுகத்திற்காக ஜெபித்தார். தேவனின் வாக்குப்படியே, "விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: ...வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள்" உடனடியாக எனக்குச் சுகம் கிடைத்தது.

நான் இன்று தேவனோடு வாழ்ந்துக்கொண்டு இருக்கிறேன். அவர் என்னோடு இருக்கிறார். இஸ்லாமியர்களே, பைபிளில் கூறப்பட்டுள்ள இயேசுவை விசுவாசிக்கத் தீர்மானித்தால், அவர் உங்களையும் வழிநடத்துவார் என்பதை நீங்கள் அறிய வேண்டுமென்று நான் விரும்புகிறேன்.

Source: http://www.answering-islam.org/Testimonies/chariah.html 

இஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்

முன் பக்கம் செல்ல

HOME PAGE

தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்

1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1

2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2

3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3

4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4

பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்

1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1

2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2

பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்

1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்

2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்