இஸ்லாம் அமைதி மார்கமா? இஸ்லாம் இனிய மார்கமா? இஸ்லாம் உண்மையான மார்கமா?

ஆன்சரிங் இஸ்லாம்

பல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்

சத்தியவான் தளம் செல்ல

Wednesday, May 26, 2010

"முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2

 

"முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2

"LIFE OF MUHAMMAD" SEMINAR - PART 2

முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு பாகம் 1ஐ இங்கு படிக்கவும்.

இந்த கட்டுரையில் அதன் தொடர்ச்சியாக இரண்டாம் பாகத்தை காண்போம்.

முஹம்மதுவின் வாழ்க்கை - THE LIFE OF MUHAMMAD

"Power tends to corrupt, and absolute power corrupts absolutely." Lord Acton

"சக்தி கெடுக்கும், அதிக சக்தி முழுவதுமாக கெடுக்கும்"

"The measure of a man is what he does with power." Pittacus

"ஒரு மனிதனின் உண்மை முகம், ஆற்றல் அதிகாரம் அவன் கையில் கிடைக்கும் போது எதை செய்தான் என்பதைக் கண்டு தெரிந்துக் கொள்ளலாம்"

கட்டுரையின் பொருளடக்கம் (OVERVIEW):

1. முஹம்மதுவின் 23 ஆண்டுகால நபித்துவ வாழ்க்கை

2. மக்காவில் ஒரு அஹிம்சாவாதியாக மற்றும் "எச்சரிக்கை" செய்பவராக 13 ஆண்டுகள் (Warner)

3. மதினாவில் ஒரு போர் செய்கின்றவராக 10 ஆண்டுகள் (Warrior)

4. கி.பி. 622/623ம் ஆண்டில் நடைப்பெற்ற "ஹிஜ்ரா" மக்காவிலிருந்து மதினாவிற்கு இடம் பெயர்தல். இஸ்லாமிய நாட்காட்டி இந்த ஆண்டிலிருந்து தொடங்குகிறது.

மக்கா vs மதினா காலக்கட்டம் = எச்சரிப்பவர் vs சண்டையிடுபவர்

MECCAN VS MEDINAN PERIODS = WARNER VS WARRIOR


முஹம்மது பற்றி நீங்கள் அறியவேண்டிய ஒரு முக்கியமான விவரம் என்னவென்றால், அவர் மக்காவிலிருந்து மதினாவிற்கு சென்றவுடன் அவரது "கொள்கைகள்" மாறிவிட்டன. மக்காவில் அவர் அமைதியாக எச்சரிப்பவராக இருந்தார். மதினாவில் அவர் கொடுமையாக சண்டையிடும் போர்வீரராக மாறிவிட்டார்.

முஹம்மதுவின் சூழ்நிலைகள் மாறும் போது, அவரின் வாழ்க்கை மாறியது, அவரது கொள்கைகள் மாறியது, அவரது இஸ்லாம் மாறியது. சூழ்நிலைகளுக்கு ஏற்ப இதுவரை அனுமதிக்கப்படாதது, இனி அனுமதிக்கப்பட்டது உதாரணத்திற்குச் சொல்லவேண்டுமானால், மக்காவிலிருந்து மதினாவிற்கு இடம்பெயர்ந்த பிறகு முஹம்மதுவின் கட்டளைகள் கீழ்கண்ட விதமாக மாறின.

"இறைத்தூதர் இரண்டாம் அகபாவிற்கு முன்பாக சண்டையிட அல்லது இரத்தம் சிந்த அனுமதிக்கவில்லை. அவர் மனிதர்களை இறைவனிடம் வாருங்கள் என்றும், அவமானங்களை சகித்துக் கொள்ளுங்கள், மற்றவர்களின் அறியாமையை மன்னியுங்கள் என்றும் கட்டளையிட்டார்." Life of Muhammad (LoM), by A. Guillaume, p212

முஹம்மது எச்சரிக்கை செய்பவராக சொன்ன வசனம்:

மேலும், உம் இறைவன் நாடியிருந்தால், பூமியிலுள்ள யாவருமே ஈமான் கொண்டிருப்பார்கள்; எனவே, மனிதர்கள் யாவரும் முஃமின்களாக (நம்பிக்கை கொண்டோராக) ஆகிவிட வேண்டுமென்று அவர்களை நீர் கட்டாயப்படுத்த முடியுமா? (குர்ஆன் 10:99)

முஹம்மது போரிடுபவராக சொன்ன வசனம்:

(போர் விலக்கப்பட்ட துல்கஃதா, துல்ஹஜ்ஜு, முஹர்ரம், ரஜபு ஆகிய நான்கு) சங்ககைமிக்க மாதங்கள் கழிந்து விட்டால் முஷ்ரிக்குகளைக் கண்ட இடங்களில் வெட்டுங்கள், அவர்களைப் பிடியுங்கள்; அவர்களை முற்றுகையிடுங்கள், ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் அவர்களைக் குறிவைத்து உட்கார்ந்திருங்கள் - ஆனால் அவர்கள் (மனத்திருந்தி தம் பாவங்களிலிருந்து) தவ்பா செய்து மீண்டு, தொழுகையையும் கடைப்பிடித்து (ஏழைவரியாகிய) ஜகாத்தும் (முறைப்படிக்) கொடுத்து வருவார்களானால் (அவர்களை) அவர்கள் வழியில் விட்டுவிடுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கின்றான். (குர்ஆன் 9:5)

நபித்துவத்திற்கு முன்பு வரை இருந்த‌ முஹம்மதுவின் வாழ்க்கைப் பின்னணி:

[நபியாக அழைப்பு பெறுவதற்கு முன்பாக முஹம்மது: Tabari vol 6 p44 - 56, LoM p69 - 87]

• முஹம்மது வாழ்ந்த காலம் கி.பி. 570 லிருந்து 633 வரை. அரேபிய தீபகற்ப நிலப்பரப்பில் (ஹிஜஜ் - Hijaz) அவர் வாழ்ந்தார். ஹிஜஜ் இடத்தில் வாழ்ந்த மக்கள் பேகன் என்றுச் சொல்லும் பல தெய்வங்களை வணங்குபவர்களாகவும், சிலர் யூதர்களாகவும் மற்றும் கிறிஸ்தவர்களாகவும் இருந்தனர். எழுத்தாளர்களில் சிலர் அரேபிய தீபகற்பத்தில் உள்ளவர்கள் எல்லாரும் பல தெய்வங்களை வணங்குபவர்களாக மட்டுமே இருந்தனர் என்று தவறுதலாக சொல்கிறார்கள், ஆனால் உண்மையில் அங்கு யூதர்களும் கிறிஸ்தவர்களும் இருந்தனர்.

• அவரது தந்தை அவர் பிறப்பதற்கு முன்பாக மரித்துவிட்டார், அவரது தாயார் 6 ஆண்டுகளுக்கு பின்பு மரித்தார்கள். அவரது சித்தப்பா அபூ தலிப் அவரை வளர்த்தார்.

• அவர் இப்படி வளர்ந்துக்கொண்டு இருக்கும் போது, சிரியாவிற்கு வியாபாரத்திற்காக சென்றார், அங்கு கிறிஸ்தவ சந்நியாசிகளை சந்தித்து, மதம் சம்மந்தப்பட்ட அனேக விஷயங்களை அவர்களுடன் விவாதித்தார்.

• அவர் ஒரு சிறந்த வியாபாரியாக இருந்தார். வியாபாரம் செய்து நல்ல செல்வ செழிப்புடன் இருந்த கதீஜாவை திருமணம் செய்துக்கொண்டார். அவரது வாழ்க்கை அமைதியாக நன்றாக சென்றுக்கொண்டு இருந்தது, மற்றும் அவர் ஒரு நாகரீகமுள்ள மனிதனாக வாழ்ந்து வந்தார். அவருக்கு மகள்களும் மகன்களும் இருந்தார்கள், ஆனால் அவரது எல்லா ஆண் பிள்ளைகளும் குழந்தை பருவத்திலேயே மரித்துவிட்டனர்.

முக்கிய அம்சம்: முஹம்மதுவின் பண்புகள் (VISTA: MUHAMMAD'S QUALITIES)

"There are depths in man that go to the lowest hell, and heights that reach the highest heaven ..." Carlyle.

"மனிதனில் உள்ள குணங்கள், சில நேரங்களில் நரகத்தைப் போன்ற ஆழத்திற்கும் செல்லும் சில நேரங்களில் வானத்தைப் போன்ற அதிக உயரத்திற்கும் செல்லும்"

"The test of every religious, political, or educational system is the man which it forms." Amiel.

"மதம், அரசியல் மற்றும் கல்வி அமைப்புக்களின் தரத்தை பரிசோதிக்கவேண்டுமானால், அதை உருவாக்கியவர்களின் குணத்தை பரிசோதித்துப் பாருங்கள், தெரிந்துக் கொள்வீர்கள்."

ஒரு மனிதனில் எந்த பண்புகளை நீங்கள் பாராட்ட விரும்புவீர்கள்?

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -

முஹம்மது நல்ல மற்றும் தீய பண்புகள் கொண்ட மனிதராக இருந்தார். அவர் முழுவதுமாக தீயவராக இல்லை அதே போல அவர் முழுவதும் நல்ல மனிதராக இல்லை. அவர் ஒரு சராசரி மனிதர் மற்றும் மனிதர்கள் செய்யும் தவறுகளை தானும் செய்பவர். அவரை பிசாசு என்று தீர்த்துவிடாதீர்கள். அவர் எப்போதும் தீயவராகவே வாழ்ந்தார் என்றுச் சொல்லாதீர்கள். அவரைப் பற்றிய நம்முடைய மதீப்பீடுகளில் நாம் நேர்மையானவர்களாக இருப்போம்.

முஹம்மதுவின் நற்பண்புகள்:

• அவர் வலிமை மிக்கவராகவும், உறுதிகொண்டவராகவும் இருந்தார்.

• அவர் தன் செய்தியை பொறுமையோடும், தொடர்ச்சியாகவும் அறிவித்தார்.

• த‌ன‌னை பின்ப‌ற்றுப‌வ‌ர்க‌ளின் சுக‌ துக்க‌ங்க‌ளில், ப‌சியில் ப‌ங்கு கொண்டார்.

• அவ‌ர் கொடுமையான‌ துன்புறுத்த‌ல்க‌ளை ச‌கித்தார்.

• சிறிய‌ வெற்றி கிடைத்தாலும் அத‌ற்காக‌ அதிக‌மாக‌ உழைத்தார்.

• ம‌ர‌ண‌ம் வ‌ரும் நேர‌த்திலும் பின் வாங்காம‌ல் போராடினார்.

• த‌ன்னை பின் ப‌ற்றுப‌வ‌ர்க‌ளின் ம‌த்தியில் தாழ்மையான‌வ‌ராக‌வும், நீதியுள்ள‌வ‌ராக‌வும் ந‌ட‌ந்துக்கொண்டார்.

• அவ‌ர‌து ச‌காக்க‌ள் அவ‌ர் மீது அதிக‌ அன்பு கொண்டு, அவ‌ருக்கு அதிகமாக கீழ்ப‌டிந்தார்க‌ள். • அவரது சில சகாக்கள் கொடுமைபடுத்தப்பட்டார்கள், சிலர் மரித்தும் போனார்கள்.

• அவரது சகாக்கள் அவருக்காக உயிரையும் கொடுத்தார்கள்.

இந்த பண்புகள் ஒரு பலவீனமாக மனிதனின் பண்புகள் அல்லவே!

குர்‍ஆனின் அழகான வசனங்கள்:

குர்‍ஆனில் அனேக நல்ல கட்டளைகள் உள்ளன, அதாவது பசியுள்ளவர்களுக்கு உணவளியுங்கள், உன் சக முஸ்லீமுக்கு உதவி செய்யுங்கள் மற்றும் நீங்கள் ஒற்றுமையாக இருங்கள் போன்றவைகளாகும்.

குர்‍ஆன் 2:177

புண்ணியம் என்பது உங்கள் முகங்களைக் கிழக்கிலோ, மேற்கிலோ திருப்பிக்கொள்வதில் இல்லை. ஆனால் புண்ணியம் என்பது அல்லாஹ்வின் மீதும், இறுதி(த் தீர்ப்பு) நாளின் மீதும், மலக்குகளின் மீதும், வேதத்தின் மீதும், நபிமார்கள் மீதும் ஈமான் கொள்ளுதல், (தன்) பொருளை இறைவன் மேலுள்ள நேசத்தின் காரணமாக, பந்துக்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(ஏழை)களுக்கும், வழிப் போக்கர்களுக்கும், யாசிப்பவர்களுக்கும், (அடிமைகள், கடனாளிகள்) போன்றோரின் மீட்புக்காகவும் செலவு செய்தல்;. இன்னும் தொழுகையை ஒழுங்காகக் கடைப்பிடித்து, முறையாக ஜகாத் கொடுத்து வருதல்(இவையே புண்ணியமாகும்) இன்னும் தாம் வாக்களித்தால் தம் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோரும்; (வறுமை, இழப்பு போன்ற) துன்பத்திலும், (நோய் நொடிகள் போன்றவற்றின்) கஷ்டத்திலும், யுத்த சமயத்திலும், உறுதியுடனும், பொறுமையுடனும் இருப்போரும்தான் நன்னெறியாளர்கள்; இன்னும் அவர்கள் தாம் முத்தகீன்கள்(பயபக்தியுடையவர்கள்)

குர்‍ஆன் 91:1-10

சூரியன் மீதும், அதன் பிரகாசத்தின் மீதும் சத்தியமாக
(பின்) அதனைத் தொடர்ந்து வரும் சந்திரன் மீதும் சத்தியமாக-
(சூரியனால்) பகல் வெளியாகும்போது, அதன் மீதும் சத்தியமாக-
(அப்பகலை) மூடிக்கொள்ளும் இரவின் மீதும் சத்தியமாக-
வானத்தின் மீதும், அதை(ஒழுங்குற) அமைந்திருப்பதின் மீதும் சத்தியமாக-
பூமியின் மீதும், இன்னும் அதை விரித்ததின் மீதும் சத்தியமாக-
ஆத்மாவின் மீதும், அதை ஒழுங்குபடுத்தியவன் மீதும் சத்தியமாக-
அப்பால், அவன் (அல்லாஹ்) அதற்கு அதன் தீமையையும், அதன் நன்மையையும் உணர்த்தினான்.
அதை (ஆத்மாவை)ப் பரிசுத்தமாக்கியவர் திடமாக வெற்றியடைந்தார்.
ஆனால் எவன் அதை(ப் பாவத்தில்) புகுத்தினானோ அவன் திட்டமாகத் தோல்வி அடைந்தான்.

முடிவுரை: முஹம்மது பற்றி நீங்கள் மதிப்பீடு செய்யும் போது, அவரில் நல்ல மற்றும் தீய குணங்கள் இரண்டும் இருந்தது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

நபித்துவ அழைப்பு "முஹம்மதுவின் குகை அனுபவம்" கி.பி. 610

[முஹம்மதுவிற்கு அழைப்பு: Tabari vol6 p60 - 80, various Hadith, LoM p109 - 114]

In morals, what begins in fear usually ends in wickedness; in religion, what begins in fear usually ends in fanaticism. Fear, either as a principle or a motive is the beginning of all evil. Mrs. Jameson.

நற்பண்புகள் பயத்தோடு ஆரம்பிக்கப்பட்டால் அது முடிவில் தீய பண்பாக மாறிவிடும். ஒரு மதம் பயத்தோடு ஆரம்பித்தால், அது வன்முறையிலும் வெறுப்பிலும் முடிவடையும். "பயம்" என்பது ஒரு கோட்பாடாக இருந்தாலும் சரி, அல்லது நோக்கமாக இருந்தாலும் சரி, அது தான் எல்லா தீமைக்கும் ஆரம்பமாக இருக்கின்றது.

முஹம்மது அருகாமையில் இருந்த மலை குகையில் அடிக்கடி சென்று தியானம் செய்தார். ஒரு "ஆவி" அவருக்கு முன் தோன்றியது, அது அவரை அலைகழித்து பிழிந்துவிட்டது, மற்றும் "வாசிக்கும் படி" அவருக்கு கட்டளையிட்டது! இது அவரை பயத்திற்குள்ளாக்கியது. பின்பு இதே ஆவி அவரிடம் "தான் காபிரியேல் தூதன்" என்றுச் சொன்னது.

அவர் கூறினார் "படி!", நான் கூறினேன் "நான் படிக்கமுடியாது." அவர் என்னை வலுவாக பிடித்து அழுத்தினார், நான் மரித்துவிடுவேன் என்று எனக்கு தோன்றியது. பிறகு என்னை விட்டுவிட்டார், மறுபடியும் என்னை நோக்கி "படி!" என்றார். நான் "எதை படிக்கவேண்டும்?" என்று நான் கூறினேன். இப்படி சொல்லி, நான் அவரிடமிருந்து மீண்டேன், மறுபடியும் அவர் என்னை அப்படியே அழுத்துவாரோ என்று பயந்தேன்.

குர்‍ஆன் சூரா 96:1 லிருந்து 5 வரையுள்ள வசனங்கள் தான் குர்‍ஆனில் முதலாவது சொல்லப்பட்ட வசனங்களாகும்.

(யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திருநாமத்தைக் கொண்டு ஓதுவீராக. 'அலக்' என்ற நிலையிலிருந்து மனிதனை படைத்தான். ஓதுவீராக: உம் இறைவன் மாபெரும் கொடையாளி. அவனே எழுது கோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான். மனிதனுக்கு அவன் அறியாதவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான். (குர்‍ஆன் 96:5)

முஹம்மது பயத்துடன் அவ்விடத்தை விட்டு ஓடினார். வீட்டிற்கு விரைவாகச் சென்று தனனை மறைத்துக்கொண்டார், தனக்கு பேய் பிடித்துவிட்டதென்றும் அல்லது தான் பையித்தியமாக மாறிவிடுவார் என்றும் நினைத்து பயந்துவிட்டார். அடுத்த மூன்று ஆண்டுகளில் அனேக முறை தற்கொலை செய்துக் கொள்ள முயற்சி எடுத்தார்.

"எனக்கு வேதனையாக இருந்தது, எனக்கு பிசாசு பிடித்துவிட்டது என்று குவாரிஷ்கள் [மக்கா மக்கள்] ஒரு போதும் எனக்கு இப்படி சொல்லக்கூடாது, ஆகையால், நான் ஒரு உயர்ந்த மலையில் ஏறி அங்கிருந்து குதித்து மரித்துவிடுகிறேன் அப்போது தான் எனக்கு நிம்மதி என்று நான் நினைத்தேன்". Muhammad, LoM p106.

இறைத்தூதருக்கு சில காலம் வெளிப்பாடு வருவது நின்று போனது, அவர் மிகவும் வேதனையுற்றார். அவர் மலைகளின் உச்சிக்கு செல்ல ஆரம்பித்தார், அங்கிருந்து விழுந்து மரித்துவிட முடிவு செய்தார்; ஆனால், ஒவ்வொரு முறையும் அவர் அப்படி மலையின் உச்சிக்கு செல்லும் போதெல்லாம், காபிரியேல் தூதன் அவருக்கு காணப்பட்டு, அவரிடம் "நீ இறைவனின் நபியாக இருக்கிறாய்" என்றுச் சொல்வார். அதன் பிறகு இறைத்தூதர் தற்கொலை எண்ணத்தை மாற்றிக்கொண்டு சாந்தமடைந்து திரும்பி வந்துவிடுவார். Tabari's History, Vol 6, p76

அனேக மக்கள் முஹம்மதுவிற்கு பிசாசு பிடித்துவிட்டது அல்லது பைத்தியம் பிடித்துவிட்டது என்று எண்ணினார்கள் (LoM, p121, 130). முஹம்மதுவிற்கு இப்படி பிசாசு பிடித்துவிட்டது அல்லது அவர் பைத்தியமாகி விட்டார் என்று மக்கள் சொன்னார்கள் என்று குர்‍ஆன் சொல்கிறது.

மேலும் உங்கள் தோழர் பைத்தியக்காரர் அல்லர். அவர் திட்டமாக அவரை (ஜிப்ரயீலை) தெளிவான அடிவானத்தில் கண்டார். மேலும், அவர் மறைவான செய்திகளை கூறுவதில் உலோபித்தனம் செய்பவரல்லர். அன்றியும், இது விரட்டப்பட்ட ஷைத்தானின் வாக்கல்ல. (குர்‍ஆன் 81:22-25)

இஸ்லாமை தோற்றுவித்தவரைப் பற்றி அறிந்துக்கொள்ள இது தான் முதலாவது துப்பு ஆகும். அது முஹம்மதுவின் மனச்சொற்விற்கும் தற்கொலை மனப்பான்மைக்கும் காரணமாக இருந்தது. இந்த மனச்சொற்வு அவருக்கு மூன்று ஆண்டுகள் தொடர்ந்து இருந்தது. இப்படிப்பட்ட ஒரு நிலையைத் தான் "மன நோய்" என்றுச் சொல்வார்கள்.

உண்மையான தேவன் தன் மக்களை சந்திக்கும் போது, இப்படி தற்கொலை மனப்பான்மை இருக்காது, அதற்கு எதிரான நிலையை உண்டாக்கும். ஆனால், சாத்தான்/பிசாசு ஒருவரை சந்திக்கும் போது முஹம்மது சந்தித்த அனுபவத்தை தரும். உதாரணத்திற்கு இந்த நிகழ்ச்சிகளை கவனிக்கவும்:

1) பன்றிக் கூட்டம் மலை மிது எறி, அங்கிருந்து குதித்து மாண்டது.

2) பிசாசு பிடித்திருந்த ஒரு வாலிபன் வெருப்பில் தன்னை தள்ளி தற்கொலை செய்துக்கொள்ள‌ முயற்சி எடுத்தான்.


இவைகளை குறித்து அறிய படிக்கவும்: மத்தேயு 8:30-33, 17:14-18

மேலும் நாம் முஹம்மதுவின் இஸ்லாமிய அனுபத்திற்கு முன்பு அவருக்கு இருந்த மத நம்பிக்கையைப் பற்றி சில விவரங்களை தெரிந்துக்கொள்ளலாம். அவருக்கு இறைவன் யார் என்றுத் தெரியாது. அவருக்கு இருந்த இறை நம்பிக்கை மிகவும் பலவீனமாக இருந்தது. உண்மையான இறைவனோடு ஒரு நல்ல உறவுமுறை அவருக்கு இருந்ததா? அல்லது ஒரு உண்மையான இறைவனை அவர் நம்பினாரா? அப்படி இருக்கும் பட்சத்தில் அவர் இறைவனிடம் உதவிக்காக வேண்டியிருப்பார். ஆனால், அதற்கு பதிலாக முஹம்மது தற்கொலை மனப்பான்மையால் பாதிக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் வேதனையடைந்தார்.

முஹம்மதுவின் இந்த ஆரம்பகால அனுபவம் இவ்வளவு தான் என்று நினைத்துவிடாதீர்கள், அவரை அலைகழித்த அந்த சக்தி அவருக்கு துன்பத்தை வருவித்து, அவருக்கு அதிக வலியை உண்டாக்கியது.

சிந்திக்க ஆய்வு செய்ய சில கேள்விகள் (QUESTIONS FOR THOUGHT AND STUDY)

1) பைபிள் சொல்லப்பட்ட எந்த நபராவது, அதாவது தேவனை சந்தித்த எந்த நபராவது, இப்படி மன உலைச்சலுக்கு ஆலாகி, தற்கொலை செய்துக்கொள்ள முயற்சி எடுத்துள்ளாரா?

2) ஒரு நபரை பிசாசு பிடித்து இருந்தால், அந்த நபர் தனக்கு என்ன நடக்கிறது என்று தெரியாத‌ பட்சத்தில், அந்த நபர் எப்படி நடந்துக்கொள்வார் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?

3) தொட‌ர்ச்சியான‌ ம‌ன‌ உலைச்ச‌லுக்கும், த‌ற்கொலை முய‌ற்சிக்கும் உண்மையான‌ இறைவ‌ன் கார‌ணமாக‌ இருக்க‌முடியுமா?

4) இயேசு பிசாசினால் சோதிக்க‌ப்ப‌ட்டார் ம‌ற்றும் அவ‌னை வென்றார். பிசாசை சந்தித்த‌ ம‌னித‌ன் எப்ப‌டி ந‌ட‌ந்துக்கொள்வான்?

பாகம் 2 முற்றிற்று

ஆங்கில மூலம்: "LIFE OF MUHAMMAD" SEMINAR

மூன்றாம் பாகம் அடுத்த கட்டுரையில்....


 



--
5/23/2010 06:46:00 AM அன்று ஈஸா குர்-ஆன் - Isa Koran இல் Isa Koran ஆல் இடுகையிடப்பட்டது


"முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1

 

"முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1

"LIFE OF MUHAMMAD" SEMINAR - PART 1

முஹம்மதுவின் வாழ்க்கைப் பற்றிய கருத்தரங்கிற்கு அடிப்படையாக கீழ் கண்ட கட்டுரை தரப்படுகிறது. முஹம்மதுவின் வாழ்க்கையில் நடைப்பெற்ற முக்கியமான நிகழ்வுகளை சொல்வதோடு மட்டுமல்லாமல், முஹம்மதுவின் அதிகமாக விவாதிக்கப்படாத நிகழ்வுகள், அனுபவங்கள் மற்றும் அவரது மனப்பான்மைகளை (Attitude) இக்கட்டுரை அலசுகிறது. இந்த கட்டுரையை கருத்தரங்கிற்காக பயன்படுத்தினால், அந்த கருத்தரங்ககை நடத்துபவர், இஸ்லாம் பற்றிய இதர விவரங்களை தெரிந்தவராக இருப்பது நல்லது, இதனால் அவர் அங்காங்கே வரும் சில முக்கிய நிகழ்வுகள் பற்றி ஆழமாக விவரிக்க வாய்ப்பு உண்டாகும். இந்த கட்டுரை, இஸ்லாம் பற்றி ஆராய்ச்சி செய்பவருக்கு ஒரு "துணையேடாக" இருக்கும், மற்றும் இக்கட்டுரை ஒரு ஆழமான விளக்க புத்தகமல்ல என்பதை அறியவும். இதனால், இஸ்லாம் பற்றி இன்னும் ஆழமாக அறிய விரும்புகிறவர்களுக்காக அனேக விளக்க பின் குறிப்புகளையும், இதர உதவி புத்தகங்களின் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளது.

முன்னுரை:

எங்களுடைய போராயுதங்கள் மாம்சத்துக்கேற்றவைகளாயிராமல், அரண்களை நிர்மூலமாக்குகிறதற்குத் தேவ பலமுள்ளவைகளாயிருக்கிறது. அவைகளால் நாங்கள் தர்க்கங்களையும், தேவனை அறிகிற அறிவுக்கு விரோதமாய் எழும்புகிற எல்லா மேட்டிமையையும் நிர்மூலமாக்கி, எந்த எண்ணத்தையும் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியச் சிறைப்படுத்துகிறவர்களாயிருக்கிறோம். 2 கொரிந்தியர் 10:4,5

"வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறில்லை என்றும் (முஹம்மத் ஆகிய) நான் அல்லாஹ்வின் தூதர் ஆவேன் என்றும் உறுதிமொழி கூறி, தொழுகையை(முறையாக)க் கடைப்பிடித்து, ஜகாத்தும் செலுத்தும்வரை இந்த மக்களுடன் போரிடுமாறு நான் கட்டளை இடப்பட்டுள்ளேன். இவ்வாறு அவர்கள் செய்துவிட்டால், (கடன் போன்ற) தனிமனித உரிமைகள் நீங்கலாக அவர்களது உதிரத்தையும் செல்வத்தையும் என்னிடமிருந்து காத்துக் கொள்வார்கள். அவர்களது கணக்கு (விசாரணை) அல்லாஹ்வின் பொறுப்பில் உள்ளது" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி).

ஏனெனில் கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாக அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள். நீங்களோ எச்சரிக்கையாயிருங்கள்; இதோ, எல்லாவற்றையும் முன்னதாக உங்களுக்கு அறிவித்திருக்கிறேன். மாற்கு 13:21,22

நீங்கள் விரும்பினாலும் சரி விரும்பாவிட்டாலும் சரி, நாம் இப்போது போர்க்களத்தில் இருக்கிறோம், நாம் சரியான பயிற்சி எடுத்துக் கொள்ளாவிட்டாலோ அல்லது தயாராக இல்லாமல் இருந்தாலோ, நாம் தோற்றுவிடுவோம்.

முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறை படித்து கற்றுக்கொள்வது அதிக முக்கியத்துவம் வாய்ந்தது - ஏன்?

நீங்கள் இஸ்லாமியர்களின் மத்தியில் ஊழியம் செய்யப் போவீர்களானால், உங்களுக்கு இஸ்லாம் பற்றி ஓரளவிற்காவது தெரிந்திருக்க வேண்டியது அவசியம். இஸ்லாம் பற்றி நீங்கள் தெரிந்துக் கொள்ளவேண்டுமானால், நீங்கள் முஹம்மதுவைப் பற்றி தெரிந்துக் கொள்ளவேண்டும். குர்‍ஆன் பேசுவது அவரைப் பற்றியும் மற்றும் அவரைப் பற்றி மட்டுமே குர்‍ஆன் பேசுகிறது. முஹம்மது வாழ்ந்த வாழ்க்கைமுறை (Life Style) தான் இஸ்லாமாகும். இவரது வாழ்க்கை முறையை மட்டுமே பிரதிபலிக்கவேண்டும் அல்லது பின் பற்றவேண்டும் என்று இஸ்லாமியர்கள் கட்டளையிடப்பட்டுள்ளனர். உண்மையான ஹதீதுகளில் 95% சதவிகிதம், முஹம்மது கூறியதாக உள்ள ஹதீதுகளே உள்ளன. இஸ்லாமைப் பற்றி அறிந்துக்கொள்ள நீங்கள் விரும்பினால், நீங்கள் முதலாவது முஹம்மதுவை அறிந்துக் கொள்ளவேண்டும். முஹம்மது தான் இஸ்லாம் (Muhammad is Islam).

இஸ்லாமிய‌ர்க‌ளின் ம‌த்தியில் ஊழிய‌ம் செய்வ‌தில் அனேக‌ வ‌கைக‌ள் உள்ள‌ன‌. இவ‌ற்றில் சில ஊழியங்கள் செய்ய இஸ்லாம் பற்றி குறைவாக அறிந்திருந்தாலே போதுமானது. ஆனால், வேறு வகையான ஊழியங்களுக்கு இஸ்லாம் பற்றி அதிகமாக தெரிந்திருக்க வேண்டியது அவசியமாக உள்ளது. நாம் அனைவரும் ஒரே வகையாக ஊழியம் செய்ய தேவன் நம்மை அழைக்கவில்லை. தேவனிடம் ஜெபித்து, அவர் நம்மை எப்படிப்பட்ட ஊழியம் செய்ய அழைத்துள்ளார் என்று, அவரது விருப்பத்தை அறிந்துக்கொள்ளுங்கள். இந்த இக்கட்டுரையை முடித்ததும், நீங்கள் இஸ்லாம் பற்றியும், முஹம்மது பற்றியும் மிகவும் ஞானமிக்கவர்களாக பேச தெரிந்துக் கொள்வீர்கள் என்று நான் நம்புகிறேன். இப்படிப்பட்ட ஞானம் உங்களுக்குத் தேவையானால், நீங்கள் சுயமாக ஒவ்வொரு நிகழ்ச்சி பற்றியும் ஆராய்ந்து படித்துப்பாருங்கள், ஒவ்வொரு தலைப்பாக படித்து ஆராய்ந்து கற்றுக்கொள்ளுங்கள்.

கருத்தரங்கின் நோக்கங்கள்:

1) முதலாவதாக, நம்முடைய ஆய்விற்காக நாம் இஸ்லாமிய புத்தகங்களை அலசுவோம். நான் சொல்வதில் பெரும்பான்மையான விவரங்களை ஒரு வருடத்தில் நீங்கள் மறந்துவிடுவீர்கள். எனவே, நான் இஸ்லாமிய புத்தகங்களை உங்களுக்கு அறிமுகம் செய்வேனேயாகில் அவைகளை படித்து உங்கள் அறிவை நீங்கள் பெருக்கிக்கொள்ளமுடியும்.

2) முஹம்மதுவின் வாழ்க்கையை சுருக்கமாக‌ தெரிந்துக்கொள்வதுடன், அது எப்படி தற்கால இஸ்லாமோடு தொடர்புக் கொள்கிறது என்பதையும் நாம் காணப்போகிறோம். ஒரு ம‌னித‌னின் 23 ஆண்டுகால‌ வாழ்க்கையின் எல்லா நிகழ்ச்சிகளையும் விவரமாக சில நாட்க‌ளுக்குள் யாராலும் விவ‌ரிக்க‌ முடியாது என்ப‌தை க‌வ‌னத்தில் கொள்ள‌வும்.

3) நாம் முஹம்மதுவின் செயல்களைப் பற்றி தெரிந்துக் கொள்ளப்போகிறோம், அவரது செயல்களின் கனிகளை நாம் சுவைக்கப் போகிறோம் மற்றும் முக்கியமாக அவர் எப்படிப்பட்டவர் என்பதை படிக்கப்போகிறோம். இந்த பகுதியில் அவரது செயல்களை அலசுவோம், இந்த ஆய்வு அவரது "நடத்தையை" நமக்குக்காட்டும், மற்றும் அதிகமாக விவாதிக்கப்படாத அவரது ஆன்மீக அனுபவங்களைப் பற்றியும் அலசுவோம்.


முஹம்மது பற்றி நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டுமானால், அவரது பலம் என்ன, பலவீனம் என்ன என்பதை தெரிந்துக் கொள்ளவேண்டும். முஹம்மதுவை எவ்வளவு அதிகமாக தெரிந்துக் கொள்வீர்களோ, அவ்வளவு அதிகமாக நீங்கள் இஸ்லாமை புரிந்துக்கொள்வீர்கள். முஹம்மதுவோடு சில மாலைப் பொழுதுகளை செலவிடுங்கள். அவரோடு விருந்தை உண்ணுங்கள். அவரது கண்களோடு சூரிய உதயத்தைக் காணுங்கள், மதிய வேலை வெயிலின் உஷ்ணத்தையும் உணருங்கள். அவர் தன் மக்களுக்காக எவ்வளவு வேதனைப்பட்டார் என்பதை மற்ற மக்களிடம் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

இக்கட்டுரை முஹம்மது பற்றிய முக்கியமான விமர்சனத்தை முன்வைக்கிறது. நீங்கள் ஞானமாக இந்த விவரத்தை மற்றவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள். ஆனால், கிறிஸ்தவர்களே, ஒன்றை கவனத்தில் கொள்ளுங்கள், பொதுவாக மக்களுக்கு, இஸ்லாமியர்களுக்கும் சரி, முஹம்மதுவின் வாழ்க்கையில் உள்ள இருண்ட பக்கத்தைப் பற்றிய அறிவை புகட்டவேண்டியது மிக மிக அவசியம்.

என்னுடைய‌ இந்த‌ க‌ட்டுரையான‌து முழுக்க‌ முழுக்க‌ இஸ்லாமிய‌ ஆதார‌ நூல்க‌ள் மீதே ஆதார‌ப்ப‌ட்டு த‌யாரிக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.

அனேக‌ மேற்கோள்க‌ள், குறிப்புக்க‌ள் கொடுக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.

என‌வே ப‌டியுங்க‌ள், புரிந்துக்கொள்ளுங்க‌ள் ம‌ற்றும் உங்கள் மனதில் வைத்து சிந்தித்துப் பாருங்கள்! நீங்கள் செய்யவேண்டிய "சிந்திக்கும் வேலையை" எனக்கோ அல்லது மற்றவர்களுக்கோ கொடுக்காதீர்கள்.

குறிப்புக்கள்:

1. சுருக்க குறியீடு: "LoM" என்றால் "A. Guillaume" என்பவர் எழுதிய புத்தகமாகிய "Life of Muhammad" என்பதைக் குறிக்கும்.

2. தலைப்புக்கள் என்ற பகுதியில் மேற்கோள்களுக்காக புத்தகங்களின் பகுதிகளை/வசன எண்களை கொடுத்துள்ளேன். ஒரே நிகழ்ச்சி பற்றி அனேக இஸ்லாமிய ஹதீஸ்கள்/விவரங்கள் உள்ளன. முக்கியமான நிகழ்ச்சிகளுக்கு நான் இப்படிப்பட்ட ஹதீஸ்களை/விவரங்களை தருவேன்.

3. முஹம்மதுவின் வாழ்க்கையில் உள்ள அனேக "இருண்ட அல்லது தீய நடத்தையுள்ள‌" நிகழ்ச்சிகளை நான் குறிப்பிட்டுள்ளேன். அதே போல, முஹம்மதுவின் நல்ல செயல்களை மட்டும் சொல்லும் அனேக புத்தகங்கள் கடைகளில் கிடைக்கின்றன. பொதுவாக மக்களுக்கு அதிகமாக தெரியாமல் இருக்கும் முஹம்மது வாழ்க்கையின் "இருண்ட பாகுதியை" உங்களுக்கு முன்பாக கொண்டு வரலாம் என்று நான் விரும்புகிறேன்.

முஹம்மது பற்றி:

அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது. குர்‍ஆன் 33:21

"நான் அவரைப் பற்றி படித்தேன் - அவ‌ர் அற்புதமான மனிதர் - என்னுடைய கருத்தைச் சொல்லவேண்டுமானால், ஒரு புறம் அவர் அந்திக்கிறிஸ்துவாக இருந்தாலும், அவர் மனிதவர்க்கத்தின் இரட்சகர் என்றுச் சொல்லலாம்" - ஜியார்ஜ் பெர்னாட் ஷா எழுதிய "The Genuine Islam"என்ற புத்தகத்திலிருந்து.

"I have studied him - the wonderful man - and in my opinion far from being an anti-Christ he must be called the saviour of humanity." George Bernard Shaw in The Genuine Islam)

• முஹம்மது தான் இஸ்லாம்

• சரித்திரத்தில் மிகவும் முக்கியமான ம‌னித‌ர்

• இன்றுள்ள‌ இர‌ண்டாம் மிக‌ப்பெரிய‌ ம‌த‌த்தை தோற்றுவித்த‌வ‌ர்

• முஹ‌ம்ம‌துவின் ம‌ர‌ண‌த்திற்கு பின்பு 100 ஆண்டுகளுக்குள் இஸ்லாமிய‌ இராணுவ‌ம் மிக‌ப்பெரிய‌ இராஜ்ஜிய‌ங்க‌ளை ஜெயித்த‌து. இஸ்லாமிய‌ ஆக்கிர‌மிப்பு ஸ்பெயின் தொட‌ங்கி தென் கிழ‌க்கு ஐரோப்பா, இந்தியா, சைனா மற்றும் மத்திய ஆப்ரிக்கா வரை பரவியது.

நீங்கள் தெரிந்துக் கொள்ளவேண்டும் என்று நான் விரும்பும் முக்கியமான விஷயம்:

சூழ்நிலைகள் மாறும் போது முஹம்மது மாறினார், இதை தத்துவரீதியாக சொல்ல வேண்டுமென்றால், "இஸ்லாம் மாறியது" என்றுச் சொல்ல வேண்டும். மக்காவின் முஹம்மது மதினாவின் முஹம்மது அல்ல. மக்காவின் இஸ்லாம் மதினாவின் இஸ்லாம் அல்ல, அதாவது மக்காவின் இஸ்லாம் வேறு மதினாவின் இஸ்லாம் வேறு.

இதனால் தான் இன்று இஸ்லாம் மக்களின் கேலிக்கும் வேடிக்கைக்கும் பாத்திரமாக உள்ளது. சில இஸ்லாமியர்கள் மக்காவின் இஸ்லாமை பின்பற்றுகிறார்கள், வேறு சிலர் மதினாவின் இஸ்லாமை பின் பற்றுகின்றனர். இன்னும் சிலரோ, சூழ்நிலைகளுக்கு ஏற்றார் போல், இவ்விரண்டிற்கும் இடையே அடிக்கடி தாவிக்கொண்டு வாழ்ந்துக் கொண்டு இருக்கிறார்கள்.

இஸ்லாமிய மூல ஆதார நூல்கள் - ISLAMIC SOURCE MATERIAL

"அறிவே ஆற்றல் - Knowledge is power." Francis Bacon

பின்குறிப்பு ஆதாரங்கள்: இவைகள் தான் இந்த கருத்தரங்கின் முக்கிய பகுதியாகும். ஒரு நல்ல பேச்சாளருக்கு அழகு எதுவென்றால், அவர் கொடுத்த விவரங்கள் பற்றி மேலும் ஆய்வு செய்வதற்கு எவைகளை படிக்கவேண்டும் என்று மக்களுக்குச் சொல்வது தான்.

ஆரம்பகால இஸ்லாமிய ஆதார நூல்களை முக்கியத்துவத்தின் அடிப்படையில் வகைபடுத்தினால், நமக்கு கிடைப்பவைகள்: குர்‍ஆன், ஹதீஸ்கள் மற்றும் சீராக்கள் (வாழ்க்கை வரலாறு) ஆகும்.

குர்‍ஆன் ‍ - இது தான் இஸ்லாமிய நூல்களில் பிரதானமானது, ஆனால், நடைமுறையில் கவனித்தால், முஹம்மதுவின் வாழ்க்கைப் பற்றிய விவரங்களுக்கு இது பிரயோஜனமற்றது.

ஹதீஸ்கள் (பாரம்பரியங்கள்) ‍ - முஹம்மதுவின் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகளைப் பற்றி, அவரது கட்டளைகள் பற்றிய குறிப்புகளையும் நிகழ்ச்சிகளையும் சொல்வது தான் ஹதீஸ்களாகும். ஹ‌தீஸ்க‌ளின் தொகுப்புக்கள், கால‌ வ‌ரிசைப் பிர‌கார‌மாக‌வோ அல்ல‌து ஒரு வ‌ரிசைக் கிர‌ம‌மாக‌வோ த‌ர‌ப்ப‌ட‌வில்லை, அத‌ற்கு ப‌திலாக‌ அவைக‌ள் த‌லைப்பு வாரியாக‌ தொகுக்க‌ப்ப‌ட்டுள்ள‌து. இந்த ஹதீஸ் கதைகள் அனைத்தும், முஹம்மதுவின் வாழ்க்கையைப் பற்றிய விவரங்களை தொகுக்கவேண்டும் என்ற ஆர்வமுள்ள‌ அர்பணமுள்ள இஸ்லாமியர்களால் சேகரிக்கப்பட்டு, தொகுக்கப்பட்டது. சுன்னி இஸ்லாமில் ஆறு பெரிய ஹதீஸ் தொகுப்புக்களும், சில சிறிய தொகுப்புக்களும் உள்ளன. இந்த ஆறு பெரிய பாரம்பரிய தொகுப்புக்களை "உண்மையான - சஹீஹ்" அதாவது ஆதிகாரபூர்வமானது என்றுக் கூறுவார்கள். இதன் பொருள் என்னவென்றால், இந்த தொகுப்புக்கள் உண்மையானது, நம்பகத்தன்மையுடையது மற்றும் பிழையில்லாதது என்று பொருளாகும். இந்த ஆறு ஹதீஸ்களில் இரண்டு தொகுப்புக்களை "உண்மையானவைகளில் எல்லாம் உண்மையானது" அல்லது சிறப்பானது என்றுக் கூறுவார்கள். இந்த இரண்டு சிறப்பான ஹதீஸ்கள், புகாரி மற்றும் முஸ்லீம் என்ற ஹதீஸ் தொகுப்புக்களாகும்.

• பெரிய தொகுப்புக்களாகிய ஹதீஸ்களை, பல இஸ்லாமிய அறிஞர்கள் முஹம்மதுவின் காலத்திற்கு பிறகு 200 - 300 ஆண்டுகளில் தொகுத்தார்கள்.

• ஒரு சில ஹதீஸ் தொகுப்புக்கள் மற்ற தொகுப்புக்களை விட நம்பகத்தன்மை அதிகமுள்ளது என்று கருதப்படுகிறது. சுன்னி மற்றும் ஷியா இஸ்லாமிய பிரிவுகள் தனித்தனி ஹதீஸ் தொகுப்புக்களை கொண்டுள்ளார்கள்.

புகாரி: இவரது தொகுப்புக்களை "சஹீஹ் புகாரி" என்பார்கள், அதாவது இது தான் சுன்னி இஸ்லாமிய பிரிவில் முதன்மையான மற்றும் அதிக நம்பகமான ஹதீஸ் தொகுப்பாகும்.

முஸ்லீம்: இவரது தொகுப்புக்களை "சஹீஹ் முஸ்லீம்" என்பார்கள், இது புகாரிக்கு அடுத்ததாக நம்பகத்தன்மையுள்ள இரண்டாவது அதிகாரபூர்வமாக தொகுப்பாகும்.

அபூ தாவுத், திர்மிதி, இபின் மஜா மற்றும் அன் நிசா போன்ற இந்த நான்கு ஹதீஸ் தொகுப்புக்கள் மேலே கண்ட தொகுப்புக்களுக்கு (புகாரி, முஸ்லீம்) அடுத்த நம்பகத்தன்மையான ஹதீஸ்களாக கருதப்படுகிறது. எனக்குத் தெரிந்தவரை, அன் நிசா தவிர்த்து மற்ற அனைத்து ஹதீஸ் தொகுப்புக்களும் ஆங்கிலத்தில் கிடைக்கிறது. இணையத்தில் கீழ் கண்ட தொடுப்புக்களில் நீங்கள் சில தொகுப்புக்களை காணலாம்.

English:

Sahih Al-Bukhari

Sahih Muslim

Sunan Abu Dawud

Tamil:

சஹீஹ் அல் புகாரி

சஹீஹ் அல் முஸ்லீம்

சீரா (SIRA) - ‍ சீரா என்பது வாழ்க்கை வரலாறு கூறும் நூல் ஆகும். இதில் முஹம்மதுவின் வாழ்க்கையை காலவரிசையாக விவரிக்கிறது. அதிகாரபூர்வமான மற்றும் இன்று நம்மிடம் உள்ள சீரா இபின் இஷாக்கின் "சீரத் ரசூலல்லாஹ் - Sirat Rasulalla" ஆகும். இந்த வாழ்க்கை வரலாறு இப்போது "A. Guillaume" அவர்களின் புத்தகமாக "The Life of Muhammad" என்ற பெயரில் உள்ளது.

இதில் அனேக இஸ்லாமிய அறிஞர்கள் சந்தேகிக்கும் சில விவரங்களும் உள்ளன. ஆரம்பகால இஸ்லாமிய அறிஞர்கள் பல காரணங்களுக்காக விவரங்களுக்கு மெருகூட்டி எழுதியுள்ளனர்.

இபின் சாத்தின் "கிதாப் அல் தபாகத் அல் கபிர் (The Book of the Major Classes)" என்ற புத்தகத்தின் முதல் நாங்கு தொகுப்புக்களும் ஆங்கிலத்தில் கிடைக்கிறது. மூர் அவர்களின் "The Life of Muhammad" என்ற புத்தகம் ஆன்சரிங் இஸ்லாம் தளத்தில் ஆங்கிலத்தில் கிடைக்கிறது: www.answering-islam.org/Books/Muir/Life1/section5.htm

நம்மிடம் தபரியின் சரித்திரம் (Tabari's History) 39 தொகுப்புக்களாக உள்ளது. இது ஒரு வாழ்க்கை வரலாறாக தொகுக்கப்படவில்லை, ஆனால், முஹம்மது பற்றிய அனேக வாழ்க்கை நிகழ்ச்சிகள் அதில் சொல்லப்பட்டுள்ளது (தொகுப்புக்கள் 6 லிருந்து 9 வரை முஹம்மது பற்றிச் சொல்கிறது)

இஸ்லாமிய வட்டாரங்களில் சீராவின் நம்பகத்தன்மைப் பற்றி தீவிரமாக விவாதம் நடந்துக்கொண்டு இருக்கிறது. மேற்கத்திய நாடுகளில் வாழும் அனேக இஸ்லாமிய அடிப்படைவாதிகள் இந்த சீரா பற்றி மிகவும் வெட்கமடைகிறார்கள். ஏனென்றால், இந்நிகழ்ச்சிகள் மேற்கத்திய மக்களின் கண்களுக்கு முன்பாக இஸ்லாமியர்கள் வெட்கப்படக்கூடிய விதத்தில் அமைந்திருப்பதினால் தான்.

ஆரம்பகால வாழ்க்கை வரலாறாக‌ (Sira) கீழ்கண்ட புத்தகங்கள் ஆங்கிலத்தில் கிடைக்கின்றன.

1) Ibn Ishaq, "Sirat Rasulallah" The most authentic biography of Muhammad extant today. Translated as, "The Life of Muhammad" by A. Guillaume.

2) Ibn Sa'd, "Kitab al-Tabaqat al-Kabir", "Book of the Major Classes". Another lesser-esteemed source of biographical material.

3) Wakidi - book on Muhammad's military campaigns, found in Muir's work, "The Life of Muhammad."

4) Tabari's History, 39 volumes. Tabari used information from many early Islamic writings to compile his history.

மேற்படி ஆய்விற்கு பரிந்துரைக்கப்பட்ட புத்தகங்கள்:

பிறகால அறிஞர்களால் முஹம்மது பற்றி அனேக சிறந்த புத்தகங்கள் எழுதப்பட்டுள்ளது.

1. ஜான் கில்கிறைஸ்ட் அவர்கள் "Muhammad and the Religion of Islam" என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். என் கருத்தைச் சொல்லவேண்டுமானால், எல்லா கிறிஸ்தவ ஊழியர்களும் இப்புத்தகத்தின் முதல் 3/4 பாகத்தை கட்டாயமாக படிக்கவேண்டும் என்றுச் சொல்வேன். "அறியாமை அல்லது எனக்கு தெரியாது என்றுச் சொல்வது எப்பொதும் மதிக்கப்படுவதில்லை மற்றும் அதற்கு எந்த மதிப்பும் இல்லை. சுவிசேஷ ஊழியம் செய்யும் கிறிஸ்தவருக்கு இந்த புத்தகம் அடிப்படை என்றுச் சொல்வேன். இந்த புத்தகம் இப்போது காகிதப்பதிப்பாக வருவதில்லை, ஆனால், இணையத்தில் இதனை இலவசமாக நீங்கள் படிக்கலாம்: Muhammad and the Religion of Islam

நீங்கள் கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய தலைப்புக்கள் பற்றி உங்கள் அறிவை பெருக்கிக் கொள்ளவேண்டும் என்று விரும்பினால், உங்களுக்கு கீழ்கண்ட புத்தகங்களை பரிந்துரைக்கின்றேன்.

2. "The Quran and the Bible in the Light of Science and History" by Dr. William Campbell.

3. "Answering Islam" by Norman Geisler and Abdul Saleeb.

4. "23 Years: A Study of the Prophetic Career of Mohammad", by Ali Dashti

5. "The Christian Witness to the Muslim", John Gilchrist

நான் மேலே குறிப்பிட்ட புத்தகங்கள் அனைத்தும் நம் காலத்தில் வாழ்ந்துக்கொண்டு/வாழ்ந்த இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ அறிஞர்களால் எழுதப்பட்டவைகளாகும். இப்புத்தகங்களில் உள்ள விவரங்கள் கோர்வையாக, சுலபமாக புரியும் வகையில் உள்ளது, ஒரே விஷயத்தை பல முறை சொல்லாமல் அழகாக விவரிக்கப்பட்டுள்ளது.

இன்னும் முஹம்மதுவின் வாழ்க்கையைப் பற்றி சிறந்த அனேக புத்தகங்களை பல சிறந்த அறிஞர்கள் எழுதியுள்ளார்கள், இவர்களில் வாட், கிப்ஸ் மற்றும் லூயிஸ் (Watt, Gibb, and Lewis) போன்றவர்கள் அடங்குவர்.

இஸ்லாமை அறிய இணைய உதவிகள்:

1. AnsweringIslam.info - great site on Islamic topics
2. AnsweringIslam.info/L_c-on-i.html - Links to various Christian sites on Islam
3. www.muhammadanism.com/
4. www.light-of-life.com - great site on Islamic topics
5. christian-thinktank.com - great apologetic site; see http://www.christian-thinktank.com/qamorite.html
6. danielpipes.org - good info on Mideast issues (not Christian)
7. www.godandscience.org - apologetics on science
8. www.tektonics.org - another apologetic site

இஸ்லாமிய மூல நூல்கள் பற்றி ஏதாவது கேள்விகள் உள்ளனவா?

பாகம் 1 முற்றிற்று.

ஆங்கில மூலம்: "LIFE OF MUHAMMAD" SEMINAR




--
5/23/2010 06:41:00 AM அன்று ஈஸா குர்-ஆன் - Isa Koran இல் Isa Koran ஆல் இடுகையிடப்பட்டது


இஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்

முன் பக்கம் செல்ல

HOME PAGE

தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்

1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1

2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2

3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3

4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4

பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்

1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1

2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2

பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்

1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்

2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்