இஸ்லாம் அமைதி மார்கமா? இஸ்லாம் இனிய மார்கமா? இஸ்லாம் உண்மையான மார்கமா?

ஆன்சரிங் இஸ்லாம்

பல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்

சத்தியவான் தளம் செல்ல

Saturday, March 1, 2008

சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை:உமர் பதில்

சுவர்னதென்றலுக்கு பதில்: பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை


"சுவர்ன தென்றல்" என்ற தளம் "சத்தியத் தொடர் -‍ 1" என்ற கட்டுரையில் "பைபிளில் முகமது பற்றிய தீர்க்கதரிசன வசனங்கள்" உள்ளன, அவைகளை கிறிஸ்தவ சகோதர சகோதரிகள் பார்க்க தவறுகின்றனர் என்று சொல்லப்பட்டுள்ளது. பைபிளிலிருந்து சில வசனங்களை குறிப்பிட்டு இந்த வசனங்களில் குறிப்பிட்டு இருப்பது "முகமதுவைத் தான்" என்று சுவர்ன தென்றல் தளம் சொல்கிறது. ஏற்கனவே, ஈஸா குர்‍ஆன் தளத்தில் இதைப் பற்றி நான் சில பதில்களை கொடுத்துள்ளேன், அவைகளை "சுவர்ன தென்றலுக்கு" என் பதிலாக முன்வைக்கின்றேன்.

முகமது பற்றி பைபிள் வசனங்கள் என்று சுவர்ன தென்றல் தளம் சுட்டிக்காட்டும் வாதங்கள்:

1. "வேறு ஒரு தேற்றரவாளன்" வருவார் என்று இயேசு சொன்னது முகமதுவைத் தான் (யோவான் 14:16, யோவான் 15:26, யோவான் 16:7-11, யோவான் 16:3)

2. மோசே வருவார் என்று சொன்ன தீர்க்கதரிசி முகமது தான் (உபாகமம் 18:17-19)

3. உன்னதப்பாட்டு என்ற புத்தகத்தில் 5:16ம் வசனத்தில் "முகமது" என்ற வார்த்தை வருகிறது, எபிரேய மொழியிலிருந்து மொழி பெயர்க்கும் போது, திட்டமிட்டு கிறிஸ்தவர்கள் அதை மறைத்துவிட்டார்கள்.


மேலே சொல்லப்பட்ட கேள்விகளுக்கு பதிலை தருவதோடு கூட, இன்னும் சில இஸ்லாமியர்கள்(இது தான் இஸ்லாம் தளம்) வேறு பல வசனங்களையும் குறிப்பிட்டு "இந்த வசனங்களில் சொல்லப்பட்டவர் முகமது தான்" என்ற வாதத்தை முன்வைக்கின்றனர், அவைகளையும் குறிப்பிட்டு என் பதிலை தருகிறேன். கீழ் கண்ட இரண்டு பதில்கள் "இது தான் இஸ்லாம்" தளத்தின் "இயேசுவிற்கு நேர்ந்ததென்ன?" என்ற கட்டுரை தொடர்களுக்கு கொடுக்கப்பட்ட பதில்களாகும். இவைகளை படிக்க இந்த தொடுப்பை க்ளிக் செய்யவும்.

4. இது தான் இஸ்லாம் தள வாதம்: உபாகமம் 33:1-3 வசனங்களில் முகமது பற்றி சொல்லப்பட்டுள்ளது

5. இது தான் இஸ்லாம் தள வாதம்: ஆபகூக் 3:3 குறிப்பிடுவது முகமதுவைத் தான


சுவர்ன தென்றலுக்கு ஈஸா குர்‍ஆன் மறுப்பு:

முதலாவது, உங்கள் அணுகுமுறைக்காக தமிழ் கிறிஸ்தவர்கள் சார்ப்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். மென்மையான முறையில் நீங்கள் உங்கள் வாதங்களை முன்வைத்ததற்காக எங்கள் நன்றி. கருத்துக்களில் வித்தியாசம் வரலாம், அதற்காக கோபப்படாமல், அமைதியான முறையில் நீங்கள் கிறிஸ்தவ சகோதர சகோதரிகளுக்காக கட்டுரையை எழுதியிருக்கிறீர்கள்.

நான் மேலே சொன்னது போல, மொத்தம் 5 வாதங்களுக்காக என் பதிலை தருகிறேன். உண்மையில் முகமது பற்றி எந்த ஒரு குறிப்பும் பைபிளில் இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். சரியான அணுகுமுறையில் பைபிள் வசனங்களை படித்தால் இதனை புரிந்துக்கொள்ளமுடியும்.

இந்த ஐந்து வாதங்களில் மூன்று வாதங்களுக்கு எங்களிடம் தமிழில் கட்டுரை உள்ளது. மீதி இரண்டு வாதங்களுக்கு ஆங்கில தொடுப்புகளை நான் தருகிறேன். உண்மையில் உங்களுக்கு உங்கள் கணிப்பு மீது(முகமது பற்றி பைபிளில் சொல்லப்பட்டுள்ளது என்ற ) நம்பிக்கை இருந்தால், கொடுக்கப்படும் ஆங்கில தொடுப்புகளில் சென்று படிக்கவும், ஏதாவது சந்தேகம் வந்தால், மறுப்பு எழுத நினைத்தால், ஆங்கில கட்டுரைக்கும் செர்த்து எங்களிடம் கேட்கலாம், அதற்கு பதில் தர ஈஸா குர்‍ஆன் தளம் கடமைப் பட்டுள்ளது.


சுவர்ன தென்றலின் வாதம் 1: "வேறு ஒரு தேற்றரவாளன்" வருவார் என்று இயேசு சொன்னது முகமதுவைத் தான் (யோவான் 14:16, யோவான் 15:26, யோவான் 16:7-11, யோவான் 16:3)

எங்கள் பதில்: இயேசு வேறு ஒரு தேற்றரவாளன் என்றுச் சொன்னது முகமதுவை அல்ல, அவர் குறிப்பிட்டது, "பரிசுத்த ஆவியானவரை" என்பதை இந்த கட்டுரை பல வசன ஆதாரங்கள் வைத்து விவரிக்கிறது. இதை படிக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.
யோவான் 14:16 வேறொரு தேற்றரவாளன் என்று இயேசு குறிப்பிடுவது முகமதுவையா?


சுவர்ன தென்றலின் வாதம் 2: மோசே வருவார் என்று சொன்ன தீர்க்கதரிசி முகமது தான் (உபாகமம் 18:17-19)

எங்கள் பதில்:
Is Muhammad Foretold in the Bible? by John Gilchrist
இக்கட்டுரையில் ஆசிரியர், கீழ்கண்ட தலைப்புகளில் பதில் மிகவும் தெளிவாக அளிக்கிறார்.
Contents:
MUHAMMAD IN THE BIBLE?
MOSES AND THE PROPHET
1. The Word of God in the Prophet's mouth
2. A prophet from among their Brethren
3. A Prophet like unto Moses
4. Jesus - the Prophet like unto Moses
JESUS AND THE COMFORTER
BIBLIOGRAPHY

சுவர்ன தென்றலின் வாதம் 3: உன்னதப்பாட்டு என்ற புத்தகத்தில் 5:16ம் வசனத்தில் "முகமது" என்ற வார்த்தை வருகிறது, எபிரேய மொழியிலிருந்து மொழி பெயர்க்கும் போது, திட்டமிட்டு கிறிஸ்தவர்கள் அதை மறைத்துவிட்டார்கள்.

எங்கள் பதில்: சுவர்ன தென்றலுக்கு ஈஸா குர்‍ஆன் தளத்தின் அடுத்த பதில் இந்த வசனத்தைப் பற்றியதாக இருக்கும்.
1)
Does Song of Songs mention Muhammad's name?
2) Is Mohammed Mentioned in Song of Songs?


இது தான் இஸ்லாம் தள வாதம் 4: : உபாகமம் 33:1-3 வசனங்களில் முகமது பற்றி சொல்லப்பட்டுள்ளது

எங்கள் பதில்: உபாகமம் 33:1-2 வசனங்கள் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல?


இது தான் இஸ்லாம் தள வாதம் 5: ஆபகூக் 3:3 குறிப்பிடுவது முகமதுவைத் தான்

எங்கள் பதில்: ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல


இந்த ஐந்து வாதங்கள் பற்றி இதர கட்டுரைகளை கீழே உள்ள தொடுப்புகளில் படிக்கவும்:

1.
THE DEUTERONOMY DEDUCTIONS: Two Short, Sound, Simple Proofs that Muhammad Was a False Prophet By David Wood (முகமது ஒரு கள்ள தீர்க்கதரிசி என்பதற்கு சுலபமான மற்றும் வலுவான இரண்டு ஆதாரங்கள், மோசே வருவார் என்று சொன்னது முகமதுவைத் தான் என்று இஸ்லாமியர்கள் கூறும் வசனங்களிலிருந்தே )

2.
Muhammad in the Bible? An Analysis of the Muslim Appeal to Biblical Prophecy By David Wood

3.
Is Muhammad Foretold in the Bible? by John Gilchrist

4.
Are there Prophecies about Muhammad in the Bible?

5.
Miscellaneous Muslim Objections to the Gospel B. PROPHECIES TO MUHAMMAD IN THE BIBLE.

6. ALLEGED PROPHECIES IN THE BIBLE POINTING TO MOHAMMED

7. The 'Goose and Gander' Issue Shibli Zaman's Inconsistencies

மேலே உள்ள கட்டுரைகளை படித்து, உங்கள் கருத்தை தருவீர்களானால், மறுபடியும் இந்த தலைப்புக்கள் அனைத்தையும் குறித்தும் என் பதிலை உங்கள் மறுப்பிற்கு ஏற்றாற் போல தருகிறேன். மேலே உள்ள பல ஆங்கில கட்டுரைகளை மொழி பெயர்க்க அனுமதி ஆன்சரிங் இஸ்லாம் ( http://www.answering-islam.org/ ) ஈஸா குர்‍ஆனுக்கு கொடுத்துள்ளது, கர்த்தருக்கு சித்தமானால் நேரம் கிடைக்கும் போது அதை மொழிபெயர்க்கிறேன். அதுவரை ஆங்கிலத்தில் உள்ளதை படித்துக்கொள்ளவும். அதிலிருந்து கேள்விகள் கேட்டாலும் நான் பதில் தர முயற்சிப்பேன்.

சுவர்னதென்றல் தளம் எழுதியது:
Source: http://suvanathendral.blogspot.com/2008/02/1_25.html

தலைப்பு: இயேசு நாதர்
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பற்றி பைபிள் : சத்தியத் தொடர்-1
அபூ அரீஜ், அல்-கப்ஜி

'நான் பிதாவை வேண்டிக்கொள்ளுவேன். அப்போது என்றைக்கும் உங்களுடனே கூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாக வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருள்வார்.' (யோவான் 14:16)

'பிதாவிடத்திலிருந்து நான் உங்களுக்கு அனுப்பப்போகிறவரும், பிதாவிடத்திலிருந்து புறப்படுகிறவருமாகிய சத்திய ஆவியான தேற்றரவாளன் வரும்போது, அவர் என்னைக் குறித்துச் சாட்சி கொடுப்பார்' (யோவான் 15:26)

'நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன். நான் போகிறது உங்களுக்குப் பிரயேஜனமாயிருக்கும். நான் போகாதிருந்தால் தேற்றரவாளன் உங்களிடத்தில் வரார். நான் போவேனாகில் அவரை உங்களிடத்தில் அனுப்புவேன்' (யோவான் 16:7-11)

'சத்திய ஆவியாகிய அவர் வரும்போது சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார். அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல் தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ் சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்' (யோவான் 16:3)

'ஆகையால் தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்திலிருந்து நீக்கப்பட்டு, அதற்கேற்ற கணிகளைத் தருகிற ஜனங்களுக்குக் கொடுக்கப்படும்' (மத்தேயு 21:43)

'அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி, அவர்கள் சொன்னது சரியே. உன்னைப் போல ஒரு தீர்க்க தரிசியை நான் அவர்களுக்கூக அவர்கள் சகோதரர்களிடமிருந்து எழும்பப்பண்ணி, என் வார்த்தைகளை அவர் வாயில் அருளுவேன். நான் அவருக்குக் கற்பிப்பதையெல்லாம் அவர்களுக்குச் சொல்லுவார். என் நாமத்திலே அவர் சொல்லும் என் வார்த்தைகளுக்குச் செவிகேடாதவன் எவனோ அவனை நான் விசாரிப்பேன்' (உபாகமம் 18:17-19)

அன்பார்ந்த கிறிஸ்தவ சகோதர, சகோதரிகளே!
சற்று சிந்தித்து, பின் வரும் வினாக்களுக்கு விடை காண முன்வாருங்கள்: -

1) மேலேயுள்ள வாக்கியங்களில் கூறப்பட்டுள்ள, வரப்போகிற சத்திய ஆவியான தேற்றரவாளன் யார்?
2) அவர் சொல்லப் போகிற விடயங்கள் யாவை?
3) கர்த்தரின் நாமத்திலே அவர் சொல்லும் வார்த்தைகளுக்குச் செவிகேளாதவனின் நிலை என்ன?

கிறிஸ்தவ சகோதர, சகோதரிகளே, அந்த தேற்றரவாளர் வேறு யாருமில்லை. இந்த அகில உலக மக்களுக்கும் கர்த்தரின் சத்திய வாக்கினை எடுத்துக் கூறி மக்களை நல்வழி கூறி கர்த்தருடைய நேர்வழியை காட்டிய முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஆவார்கள்.

ஹீப்ரு மொழியிலிருந்து ஏனைய பாஷைகளுக்கு பைபிளை மொழி பெயர்க்கப்பட்ட போது, 'முஹம்மது' என்ற பெயர் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தும் அதனை திட்டமிட்டு மறைத்து விட்டனர். உண்மை தானாகவே வெளிச்சத்திற்கு வந்து விட்டது. (பைபிளின் மூல நூலில் சாலமன் பாடல்கள் 5:16 ல் 'முஹம்மதிம்' என்று இருந்த பெயரை மொழி பெயர்க்கும் போது மாற்றி விட்டனர். ஹீப்ரு மொழியில் 'திம்' என்ற அடைமொழி மரியாதையைக் குறிக்கும் சொல்லாகும்)

முஹம்மது என்ற பெயரை திரித்து தேற்றரவாளர் எனக் கூறப்பட்ட என்ற அந்த தீர்க்கதரிசி கூறிய விடயங்கள் தான் சத்திய மார்க்கமான இஸ்லாம்.

கர்த்தரின் நாமத்திலே அவர் (முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறிய வார்த்ததைகளுக்கு கட்டுப்படாதவர்களை மறுமையில் கர்த்தர் தண்டிப்பார். (உபாகமம் 18:17-19)

எனவே என தருமை கிறிஸ்தவ சகோதர சகோதரிகளே, முஹம்மது (ஸல்) அவர்கள் குறித்தும் மற்றும் இஸ்லாம் குறித்தும் பைபிள் கூறும் கருத்துக்களை நீங்கள் சற்று நடுநிலையோடு சிந்தித்து தெளிவு பெற வேண்டுகிறோம்.



Isa Koran Home Page

இஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்

முன் பக்கம் செல்ல

HOME PAGE

தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்

1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1

2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2

3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3

4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4

பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்

1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1

2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2

பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்

1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்

2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்