இஸ்லாம் அமைதி மார்கமா? இஸ்லாம் இனிய மார்கமா? இஸ்லாம் உண்மையான மார்கமா?

ஆன்சரிங் இஸ்லாம்

பல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்

சத்தியவான் தளம் செல்ல

Sunday, December 30, 2012

"மோசேயைப் போல ஒரு தீர்க்கதரிசி முஹம்மது ஆவார்" என்ற இஸ்லாமியர்களின் வாதம்

 


"மோசேயைப் போல ஒரு தீர்க்கதரிசி முஹம்மது ஆவார்"  என்ற இஸ்லாமியர்களின் வாதம்

உன்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை நான் அவர்களுக்காக அவர்கள் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணி, என் வார்த்தைகளை அவர் வாயில் அருளுவேன்; நான் அவருக்குக் கற்பிப்பதையெல்லாம் அவர்களுக்குச் சொல்லுவார்.  (உபாகமம் 18:18)

மேற்கண்ட வசனம் பற்றி அனேக இஸ்லாமியர்கள் இவ்விதமாக வாதிக்கிறார்கள், அதாவது தேவன் ஈசாக்கின் சந்ததிகளாகிய இஸ்ரவேல் மக்களிடம் பேசுகிறார், அவர்களிடம் "அவர்கள் சகோதரரிலிருந்து" என்று கூறுகிறார். இதன் அர்த்தம் இஸ்மவேல் சந்ததியிலிருந்து என்பதாகும், இஸ்மவேல் ஈசாக்கின் சகோதரராக  இருக்கிறார். எனவே, மோசேயைப் போல ஒரு நபியை எழுப்புவேன் என்று தேவன் சொன்னது முஹம்மதுவை குறிக்கும். மேலும் முஹம்மதுவே இஸ்மவேல் சந்ததியில் எழும்பிய மிகப்பெரிய நபியாவார். இவர் அற்புதங்கள் செய்து, இறைவனின் சட்டத்தை நிலை நிறுத்தினார்.  இப்படியாக முஸ்லிம்களில் அனேகர் வாதிக்கின்றனர்.

முதலாவது நாம், "அவர்கள் சகோதரரிலிருந்து" என்ற சொற்றொடரைப் பற்றி ஆராய்வோம். இந்த சொற்றொடரை சரியாக புரிந்துக்கொள்ள, இதே போல வேறு இடத்தில் தேவன் சொன்ன வார்த்தைகளை கவனிக்கவேண்டும். அதாவது இதே இஸ்ரவேல் மக்களை நோக்கி "ஒரு ராஜாவை எப்படி நியமிக்கலாம்" என்பதைப் பற்றி தேவன் கட்டளை கொடுக்கிறார். இதனை நாம் அதே உபாகமம் 17:14-15ம் வசனங்களை கவனித்தால் புரியும்:

உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்தில் நீ போய்ச் சேர்ந்து, அதைச் சுதந்தரித்துக்கொண்டு, அதில் குடியேறினபின், நீ; என்னைச் சுற்றிலும் இருக்கிற சகல ஜாதிகளையும் போல, நானும் எனக்கு ஒரு ராஜாவை ஏற்படுத்தவேண்டும் என்பாயானால்; உன் தேவனாகிய கர்த்தர் தெரிந்து கொள்பவனையே உனக்கு ராஜாவாக வைக்கக்கடவாய்; உன் சகோதரருக்குள்ளிருக்கிற ஒருவனையே உன்மேல் ராஜாவாக ஏற்படுத்தக்கடவாய்; உன் சகோதரன் அல்லாத அந்நியனை ராஜாவாக ஏற்படுத்தக் கூடாது. (உபாகமம் 17:14-15)

நிச்சயமாக, பழங்கால மத்திய கிழக்கு நாட்டு பழக்கத்தின்படி, இஸ்ரவேலர்கள் தங்களுக்கு ஒரு ராஜாவை இஸ்மவேல் வம்சத்திலிருந்து ஏற்படுத்தமாட்டார்கள் என்று முஸ்லிம்களுக்கு சரியாக தெரிந்திருக்காது.  மேலும் "உன் சகோதரருக்குள்ளிருக்கிற ஒருவனையே" என்ற சொற்றொடரானது தெளிவாக சொல்வது போல, அவன் ஒரு இஸ்ரவேல் வம்சத்தானாகவே இருக்கவேண்டும்.

இரண்டாவதாக, முஹம்மதுவை மோசேவோடு ஒப்பிடுவதற்கு முன்பாக உபாகமம் 34:10-12ம் வசனங்களை நாம் படிக்கவேண்டும். இவ்வசனங்கள் மோசேயைப் பற்றிய ஒரு சுருக்க குணங்களை தெரிவிக்கிறது, அதே போல, இவரைப்போல வருபவரின் எதிர்ப்பார்ப்பு எப்படிப்பட்ட்து என்றும் இது தெளிவாக்குகிறது.

மோசே எகிப்துதேசத்திலே பார்வோனுக்கும், அவனுடைய எல்லா ஊழியக்காரருக்கும், அவனுடைய தேசமனைத்திற்கும் செய்யும்படி கர்த்தர் அவனை அனுப்பிச் செய்வித்த சகல அடையாளங்களையும் அற்புதங்களையும், அவன் இஸ்ரவேலர் எல்லாருக்கும் பிரத்தியட்சமாய்ச் செய்த சகல வல்லமையான கிரியைகளையும், மகா பயங்கரமான செய்கைகளையும் பார்த்தால், கர்த்தரை முகமுகமாய் அறிந்த மோசேயைப்போல, ஒரு தீர்க்கதரிசியும் இஸ்ரவேலில் அப்புறம் எழும்பினதில்லை என்று விளங்கும். (உபாகமம் 34:10-12)

பரிசுத்த வேத எழுத்துக்களின் மூலம் நாம் அறிவதாவது,

1) மோசே ஒரு இஸ்ரவேலராக இருந்தார்

2) தேவனால் அவர் அறியப்பட்டு இருந்தார் அதாவது, தேவனை முகமுகமாய் அறிந்தவர், இதன் அர்த்தம் என்னவென்றால், மறைமுகமாக அல்லது இன்னொரு இடைத்தரகர் மூலமாக அல்லாமல் தேவன் நேரடியாக இவரோடு  பேசுபவராக இருந்தார்.

3) மோசே மிகப்பெரிய அற்புதங்களைச் செய்தார்.

ஆனால், உபாகமத்தில் சொல்லப்பட்ட முன்னறிவிப்பு முஹம்மதுவில் நிறைவேறியது என்று முஸ்லிம்கள் கூறுகிறார்கள்.  கிறிஸ்தவர்களோ, மோசேயைப்போல ஒரு தீர்க்கதரிசி என்பவர் மேசியாவாகிய இயேசு என்று நம்புகிறார்கள், மேலும் கீழ்கண்ட ஒப்பிட்டு பட்டியலின் படி, கிறிஸ்தவர்களின் நம்பிக்கை சரியானதேயாகும்.

மோசே

இயேசு

முஹம்மது

இஸ்ரவேலர்களின் மத்தியில் தோன்றிய தீர்க்கதரிசியாவார்

இஸ்ரவேலர்களின் மத்தியில் தோன்றிய தீர்க்கதரிசியாவார். (யூதாவின் வம்சத்தில் வந்தவர் – மத்தேயு 1:3, லூக்கா 3:33)

அரபியர்களின் மத்தியில் தோன்றிய தீர்க்கதரிசி (இவர் ஒரு நபி என்று முஸ்லிம்கள் நம்புகிறார்கள்)

(ஸூரா 32:3, 36:6, 34:43-44)

தேவனிடமிருந்து நேரடியான வெளிப்பாட்டை பெற்றவர் (ஸூரா 4:164, யாத்திராகம்ம் 33:11)

தேவனிடமிருந்து நேரடியான வெளிப்பாட்டை பெற்றவர் (யோவான் 12:49-50, 4:10)

நேரடியாக அல்லாமல் மறைமுகமாக வெளிப்பாடுகளை காபிரியேல் தூதன் மூலம் பெற்றவர் (ஸூரா 2:97)

அனேக அற்புதங்களைச் செய்தார் (ஸூரா 2:50 – கடல், ஸூரா 2:57 – மன்னா)

 

அனேக அற்புதங்களைச் செய்தார் (ஸூரா 3:49, மத்தேயு 8:27 – கடல், யோவான் 6:11-14 - மன்னா)

எந்த ஒரு அற்புதமும் செய்யாதவர் (ஸூரா 6:37, ஸூரா 28:48)

மேற்கண்ட விவரங்கள் போக, புதிய ஏற்பாடு, உபாகமத்தில் 18:18ன் தீர்க்கதரிசனம் மேசியாவாகிய இயேசுவில் நிறைவேறியது என்று கூறுகிறது. படிக்க அப்போஸ்தலர் நடபடிகள் 3:17-26. மேலும் 22ம் வசனத்தை கவனிக்கவும் : 

 "மோசே பிதாக்களை நோக்கி: நீங்கள் தேவனாகிய கர்த்தர் என்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை உங்களுக்காக உங்கள் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணுவார்; அவர் உங்களுக்குச்சொல்லும் எல்லாவற்றிலும் அவருக்குச் செவிகொடுப்பீர்களாக"

முடிவுரையாக, குர்-ஆன் 28:48 சொல்வதை சிறிது கூர்ந்து கவனிக்கவும்:

எனினும் (இப்பொழுது) நம்மிடமிருந்து சத்திய(மார்க்க)ம் அவர்களிடம் வந்த போது, "மூஸாவுக்குக் கொடுக்கப்பட்டது போன்று இவருக்கு ஏன் கொடுக்கப்படவில்லை" என்று கேட்கிறார்கள்;.  (குர்-ஆன் 28:48)

மேற்கண்ட குர்-ஆன் வசனத்தின் படியும், முஹம்மது மோசேக்கு சமமான தீர்க்கதரிசி அல்ல என்பது தெளிவாக புரியும்.

ஆங்கில மூலம்: The Claim that Muhammad was the Prophet like Moses 

முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் தொடர் கட்டுரைகள்


© Answering Islam, 1999 - 2012. All rights reserved.




--
12/22/2012 03:12:00 pm அன்று ஈஸா குர்-ஆன் - Isa Koran இல் Isa Koran ஆல் இடுகையிடப்பட்டது


"பைபிளிலிருந்து முஹம்மதுவின் பெயர் நீக்கப்பட்டுவிட்டது” என்ற இஸ்லாமியர்களின் வாதம்

 

"பைபிளிலிருந்து முஹம்மதுவின் பெயர் நீக்கப்பட்டுவிட்டது" என்ற இஸ்லாமியர்களின் வாதம்

முஹம்மதுவின் பெயர் ஒரு முறை கூட பைபிளில் காணப்படவில்லை என்பதால் அனேக இஸ்லாமியர்கள் பைபிளை குற்றப்படுத்துகிறார்கள். யூத மற்ற கிறிஸ்தவர்களின் வேதங்களில் முஹம்மதுவின் பெயர் காணப்படவேண்டும் என்று முஸ்லிம்கள் எதிர்ப்பார்க்கின்றனர். இப்படி இவர்கள் எதிர்ப்பார்ப்பதற்கு காரணம்  குர்-ஆனில் காணப்படும் இரண்டு வசனங்களாகும்.

மேலும், மர்யமின் குமாரர் ஈஸா, "இஸ்ராயீல் மக்களே! எனக்கு முன்னுள்ள தவ்ராத்தை மெய்ப்பிப்பவனாகவும்; எனக்குப் பின்னர் வரவிருக்கும் 'அஹமது' என்னும் பெயருடைய தூதரைப் பற்றி நன்மாராயம் கூறுபவனாகவும் இருக்கும் நிலையில் அல்லாஹ்வின் தூதனாக உங்களிடம் வந்துள்ளேன்" என்று கூறிய வேளையை (நபியே! நீர் நினைவு கூர்வீராக!) எனினும், அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளை அவர் கொண்டு வந்த போது, அவர்கள் "இது தெளிவான சூனியமாகும்" என்று கூறினார்கள். (குர்-ஆன் 61:6)

எவர்கள் எழுதப்படிக்கத் தெரியாத நபியாகிய நம் தூதரைப் பின்பற்றுகிறார்களோ - அவர்கள் தங்களிடமுள்ள தவ்ராத்திலும் இன்ஜீலிலும் இவரைப் பற்றி எழுதப் பட்டிருப்பதைக் காண்பார்கள்; அவர், அவர்களை நன்மையான காரியங்கள் செய்யுமாறு ஏவுவார்; பாவமான காரியங்களிலிருந்து விலக்குவார்; ….(குர்-ஆன் 7:157)

இஸ்லாமியர்களில் நன்கு கற்றுத் தேர்ந்த அறிஞர்கள், ஆய்வு மூலமாக, முஹம்மதுவிற்கு பின்பு உள்ள பைபிளின் கையெழுத்துப் பிரதிகளும், முஹம்மதுவிற்கு முன்பு இருந்த பைபிளின் கையெழுத்துப் பிரதிகளும் ஒரே மாதிரியாகத் தான் இருக்கின்றன என்பதை அறிவார்கள்.  ஆகையால், முஹம்மதுவின் பெயரை பைபிளிலிருந்து நீக்கிவிட்டார்கள் என்ற குற்றச்சாட்டு அடிப்படையற்ற ஒன்றாகும்.  எனினும், முஹம்மதுவின் பெயர் பைபிளில் காணப்படவில்லையானாலும்,  பைபிளில் காணப்படும் சில வசன்ங்கள் முஹம்மதுவை குறிக்கின்றன என்று முஸ்லிம்கள் கூறுகிறார்கள். ஆகவே, யூத கிறிஸ்தவர்களையும் சேர்த்து, உலகமனைத்திற்கும் முஹம்மது நபியாக வந்தார் மற்றும் ஊழியம் செய்தார் என்பது இதன் மூலம் நிருபிக்கப்படுகிறது என்று வாதிக்கிறார்கள். இப்படிப்பட்ட வாதங்களினால், முடிந்தவரை முஹம்மதுவை கிறிஸ்தவர்கள் பின்பற்றும்படி செய்யலாம் என்றும் மேலும் முஹம்மது உருவாக்கிய மார்க்கமாகிய் இஸ்லாம் ஒருமுழுமை அடைந்த மதம் என்று கிறிஸ்தவர்கள் கருதுவார்கள் என்று முஸ்லிம்கள் நினைக்கிறார்கள்.

மேற்கண்ட குர்-ஆன் வசனம் இயேசு  கூறியதாக இப்படி சொல்கிறது: "எனக்குப் பின்னர் வரவிருக்கும் 'அஹமது' என்னும் பெயருடைய தூதரைப் பற்றி நன்மாராயம் கூறுபவனாகவும்". இதனை படித்த அனேக இஸ்லாமியர்கள் பைபிளை முழுவதுமாக தேடிப்பார்த்தார்கள், ஆனால் அவர்களுக்கு எந்த வசனமும் தென்படவில்லை. ஆகையால், பரிசுத்த ஆவியானவர் பற்றி புதிய ஏற்பாட்டில் யோவான் சுவிசேஷத்தின்  சில வசனங்களை எடுத்துக்கொண்டு, இவைகள் தான் முஹம்மது பற்றிய முன்னறிவிப்பு வசனங்கள் என்று இஸ்லாமியர்கள் வாதிக்கிறார்கள். உதாரணத்திற்கு கூறவேண்டுமென்றால், யோஆவன் 14:16, 15:26 மற்றும் 16:7 வசனங்களை கூறலாம். மூல கிரேக்க மொழியில் "பராக்லெடோஸ் (paracletos)" என்ற வார்த்தைக்கு ஆங்கில மொழியாக்கங்களில் "தேற்றரவாளன்", "அறிவுறுத்துகிறவர்" (அ) நமக்கு பதிலாக பேசுகிறவர் (வழக்கறிஞர்) என்று மொழியாக்கம் செய்துள்ளார்கள். தமிழில் "தேற்றரவாளன்" என்று தமிழாக்கம் செய்துள்ளார்கள். சில இஸ்லாமிய அறிஞர்கள், "கிரேக்க வார்த்தை ஆரம்பத்திலிருந்து தவறாக எழுதப்பட்டுள்ளது, அதாவது சரியான வார்த்தை "பெரிக்லோடஸ்" ஆகும், இவ்வார்த்தையின் நெருங்கிய அர்த்தம் "அஹமத்" என்பதாகும், அதாவது "போற்றுதலுக்கு உரியவர்"  என்பதாகும். 

ஒரு முக்கியமான விஷயத்தை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும், அதாவது "அஹமத்" மற்றும் "முஹம்மத்" என்ற வார்த்தைகள் இரண்டும் வித்தியாசமானவைகள்.  முஹம்மத் என்பது ஒரு தனிப்பெயராகும் இதன் அர்த்தம் "போற்றுதலுக்குரிய ஒருவர் (the one who is praiseworthy)" என்பதாகும். ஆனால், "அஹமத்" என்பது ஒரு உரிச்சொல் ஆகும், இதன் அர்த்தம் "போற்றுதலுக்கு தகுதியானவர் – (worthy of praise)" என்பதாகும்.  மேலும் அஹமத் என்ற பெயர் முஹம்மதுவின் காலத்திற்கு முன்பு வேறு யாருக்கும் சூட்டப்படவில்லை என்று தெரிகின்றது. இதனால் தான் முழு குர்-ஆனிலும் இஸ்லாமிய நபியை குறிப்பிடும் போது, "அஹமத்" என்று குறிப்பிடவில்லை. இதற்கு பதிலாக "முஹம்மது" என்ற தனிப்பெயரையே  நாம் குர்-ஆனில் குறிப்பிட்டு இருப்பதைக் காணலாம்.

புதிய ஏற்பாட்டின் யோவான் சுவிசேஷத்தின் வசனத்தைக் குறித்து கவனித்தால், இந்த வசனத்திற்கு அடுத்து வரும் வசனங்களில் அந்த "பராக்லேடோஸ் (தேற்றரவாளர், பரிந்து பேசுபவர், அறிவுறுத்துபவர்)" என்பவர், "சத்தியத்தின் ஆவியானவர்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சத்திய ஆவியானவரை உலகம் காணமுடியாது, ஏனென்றால் அவர் விசுவாசிகளின் உள்ளங்களில் வாழுபவர் மேலும் அவர் இயேசுக் குறித்து சாட்சி சொல்லுவார் என்று சொல்லப்பட்டுள்ளது.  தம்முடைய சீடர்களுக்கு அறிவுரை கூறும் போது குறிப்பிட்டதும் இந்த சத்திய ஆவியானவரைப் பற்றித் தான், முஹம்மதுவைப் பற்றி அல்ல.

பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்.  (அப்போஸ்தலர் நடபடிகள் 1:8)

இயேசுவின் மரணத்திற்கு 50 நாட்களுக்கு பின்பு, இந்த பரிசுத்த ஆவியானவர் பற்றிய வாக்குறுதி சீடர்களின் வாழ்வில் நிறைவேறியது. மேலும் பெந்தேகோஸ்தே என்ற நாளில் மிகவும் அற்புதமான ஒரு நிகழ்வாக அது நடைப்பெற்றது. இந்த மிகப்பெரிய நிகழ்ச்சிப் பற்றி, பேதுரு என்று இயேசுவால் பெயர் சூட்டப்பட்ட சீடர் கீழ்கண்டவாறு கூறுகிறார்:

இந்த இயேசுவைத் தேவன் எழுப்பினார்; இதற்கு நாங்களெல்லாரும் சாட்சிகளாயிருக்கிறோம்.  அவர் தேவனுடைய வலதுகரத்தினாலே உயர்த்தப்பட்டு, பிதா அருளிய வாக்குத்தத்தத்தின்படி பரிசுத்த ஆவியைப் பெற்று, நீங்கள் இப்பொழுது காண்கிறதும் கேட்கிறதுமாகிய இதைப் பொழிந்தருளினார். (அப்போஸ்தலர் நடபடிகள் 2:32-33)

மேற்கண்ட விவரங்கள் மூலமாக அறிவது என்னவென்றால், "பராக்லெடோஸ்" என்ற வார்த்தையானது தேவனின் ஆவியானவரை குறிப்பிடுகின்றதே தவிர, ஒரு மனிதனை அது குறிப்பிடவில்லை. மேலும், இந்த "பாரக்லேடோஸ்" என்பவர், பிதாவிடமிருந்து சீடர்களுக்கு கொடுக்கப்படுகிறார். எனவே, சீடர்களின் வாழ்நாளிலேயே அவர் வந்தாகவேண்டும். இயேசுவின் சீடர்கள் மரித்து 500 ஆண்டுகளுக்கு பிறகு தான் முஹம்மது வருகிறார், இப்படி இருக்கும் போது, "பாரக்லேடோஸ்" என்பவர் எப்படி முஹம்மதுவாக இருக்கமுடியும்?

முஸ்லிம்கள் பழைய ஏற்பாட்டையும் தேடிப்பார்த்துள்ளனர், முக்கியமாக தோராவில் முஹம்மது பற்றி ஏதாவது வசனம் கிடைக்குமா என்று தேடிப்பார்த்துள்ளனர். இதன் பயனாக அவர்கள் இரண்டு பழைய ஏற்பாட்டு வசனங்களை பொதுவாக மேற்கோள் காட்டுவார்கள், அவைகள் உபாகமம் 18:15 மற்றும் 18ம் வசனங்கள் ஆகும்.

உன் தேவனாகிய கர்த்தர் என்னைப் போல ஒரு தீர்க்கதரிசியை உனக்காக உன் நடுவே உன் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணுவார்; அவருக்குச் செவிகொடுப்பீர்களாக.  உன்னைப் போல ஒரு தீர்க்கதரிசியை நான் அவர்களுக்காக அவர்கள் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணி, என் வார்த்தைகளை அவர் வாயில் அருளுவேன்; நான் அவருக்குக் கற்பிப்பதையெல்லாம் அவர்களுக்குச் சொல்லுவார்.  (உபாகமம் 18:15,18)

மோசேயைப் போல வெளிப்பட அந்த தீர்க்கதரிசி, முஹம்மது தான் என்று அனேக இஸ்லாமியர்கள் வாதம் புரிவார்கள். இந்த தலைப்பு பற்றி அடுத்த கட்டுரையில் நான் விவரிக்கிறேன்.

ஆங்கில மூலம்: The Claim that Muhammad's Name has been Removed from the Bible

முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் தொடர் கட்டுரைகள்


© Answering Islam, 1999 - 2012. All rights reserved.




--
12/22/2012 03:10:00 pm அன்று ஈஸா குர்-ஆன் - Isa Koran இல் Isa Koran ஆல் இடுகையிடப்பட்டது


”பைபிள் மாற்றப்பட்டுவிட்டது” என்ற இஸ்லாமியர்களின் வாதம்

  "பைபிள் மாற்றப்பட்டுவிட்டது" என்ற இஸ்லாமியர்களின் வாதம்

கிறிஸ்தவர்கள் தங்கள் பரிசுத்த எழுத்துக்களாகிய யூத மற்றும் கிறிஸ்தவ வேதத்தை மாற்றிவிட்டார்கள் என்று எந்த ஒரு இடத்திலும் குர்-ஆன் கிறிஸ்தவர்களை குற்றப்படுத்தவில்லை. குர்-ஆன் வேதங்களுடையவர்களை குற்றப்படுத்துவதெல்லாம் "தஹரிஃப் (taharif)" என்பது பற்றியதாகும். அதாவது தங்கள் நாவுகளால் வேத எழுத்துக்களின் பொருளை மாற்றி அல்லது மறைத்து கூறுவதாகும். 

நிச்சயமாக அவர்களில் ஒரு பிரிவார் இருக்கின்றார்கள் - அவர்கள் வேதத்தை ஓதும்போதுத் தங்கள் நாவுகளைச் சாய்த்து ஓதுகிறார்கள் -. . . . ஸூரதுல் ஆலஇம்ரான் (3):78

வேத எழுத்துக்கள் மாற்றப்பட்டுவிட்டது என்று வாதிக்கும் இஸ்லாமியர்களுக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கிறது, அது என்னவென்றால், வேதம் மாற்றப்படுவதற்கு முன்பாக எப்படி இருந்தது? என்ற ஆதாரத்தை அவர்கள் கொண்டு வரவேண்டும், அப்போது தான் எந்த வசனங்கள் மாற்றப்பட்டது என்பதை நாம் ஒப்பிடமுடியும். இந்த கேள்விக்கு இஸ்லாமியர்களின் பொதுவான பதில் என்னவென்றால், "பர்னபாஸ் சுவிசேஷம்" ஆகும்.  எனினும் "பர்னபாஸ் சுவிசேஷம்" இஸ்லாமியர்களை தர்மசங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது, ஏனென்றால், குர்-ஆனுக்கு  முரண்படும் அனேக விஷயங்கள் இந்த பர்னபாஸ் சுவிசேஷ நூலில் இருப்பது தான். பைபிளின் பழைய மூல பிரதிகளில் சில எழுத்து வித்தியாசங்கள் இருந்தாலும், அவைகள் வேண்டுமென்றே செய்யப்பட்ட மாற்றங்கள் அல்ல, மேலும் அவைகள் பைபிளின் அடிப்படை கோட்பாடுகளை மாற்றவில்லை.  மூல கைப்பிரதிகளில் காணப்படும் வித்தியாசங்கள் குர்-ஆனுக்கும் உண்டு. இதைப் பற்றி யூசுப் அலி அவர்கள் "குர்-ஆனின் அறிமுகம்" என்ற தலைப்பில் தன் புத்தகத்தின் இரண்டாவது பதிப்பில் (1977), 36வது பக்கத்தில், கீழ்கண்டவாறு கூறுகிறார்:

மேற்கண்ட சரித்திர விவரங்களின் படி, குர்-ஆன் பல வகைகளில் (வித்தியாசமான வார்த்தைகளைக் கொண்டு – variations) ஓதப்பட்டு இருப்பது மிகத் தெளிவாக தெரியவருகிறது.  இந்த விதமாகத் தான் நம் பரிசுத்த இறைத்தூதரும் ஓதினார் மற்றும் கற்றுக் கொடுத்துள்ளார். மேலும் குர்-ஆனை ஓதும் குர்ரா(Qurra) என்ற இஸ்லாமிய அறிஞர்களும், கீழ்கண்ட வகையில் ஒத்துப்போகிற "ஓதும் முறை" தான் சரியானது என்று ஒட்டுமொத்தமாக சந்தேகத்திற்கு இடமின்றி அங்கீகரித்துள்ளனர். அதாவது a) குர்-ஆன் ஹஜ்ரத் உஸ்மான் அவர்கள் வெளியிட்ட குர்-ஆன் பிரதியில் உள்ளது போல ஓதப்படவேண்டும் b) அரபி மொழியின் இலக்கணம் மற்றும் அகராதியின்படி ஓதப்படவேண்டும் c) மூன்றாவதாக எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த ஓதும் முறையானது சரியான சங்கிலித்தொடருடன், பரிசுத்த இறைத்தூதர் வரை செல்லக்கூடிய ஆதாரப் பூர்வமானதாக இருக்கவேண்டும்.  இதனால் சில வழிமுறைகளில்(Few Variations) குர்-ஆன் ஓதும் முறை உள்ளது, மேலும் முரண்பாடு இல்லாமல், குர்-ஆன் வசனங்களின் பொருள் இன்னும் மேருகேரும் வகையில் இருக்கிறது. இன்று நம்மத்தியில் நிலவும் பல வகையான குர்-ஆன் ஓதும் முறையில் தான் இறைத்தூதர் அவர்களும் ஓதினார்கள் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. இப்படி ஓதுவதினால் வசனங்களின் பொருள் சொறிவும் அதிகமாக இருக்கிறது.

உதாரணத்திற்கு: இரண்டு அதிகார பூர்வமான ஓதும் முறை எடுத்துக்காட்டுகளை இப்போது காண்போம். அ) அல்பாத்திஹா அத்தியாயத்தின் மூன்றாம் வசனம். ஆ) அல்மாயிதா அத்தியாயத்தின் ஆறாம் வசனம். 

முதலாவது வகை குர்-ஆன் ஓதும் முறையில், குர்-ஆன் 1:3ம் வசனத்தில் வரும் அரபி வார்த்தையின் அர்த்தம் "நியாயத்தீர்ப்பு நாளின் எஜமானன்" என்று உள்ளது, இன்னொரு வகை குர்-ஆன் ஓதும் முறையில், அந்த வார்த்தையின் அர்த்தம் "நியாயத்தீர்ப்பு நாளின் அதிபதி" என்று உள்ளது.  இந்த இரண்டு வகையான ஓதும் முறையில் இவ்வசனத்தை படிக்கும் போது, அர்த்தம் இன்னும் தெளிவாக புரிகிறது. 

மேலும், குர்-ஆன் 5:6ம் வசனத்தில் வரும் அரபி வார்த்தையின் பொருள் "உங்கள் முகத்தையும்… உங்கள் கால்களையும் கழுவுங்கள்" என்பதாகும். அதாவது வெறுங்கால்களுடன் உலூ செய்வதாகும். இதே வசனத்தை வேறு ஒரு வகையான குர்-ஆன் ஓதும் முறையில் கவனித்தால், "உங்கள் முகங்களை கழுவுங்கள், ஈரமாக கரங்களால் உங்கள் தலையை துடையுங்கள் மற்றும் கால்களையும் துடையுங்கள்" என்ற பொருள் வருகிறது.

Reproduction from Yusuf Ali's "The Holy Qur'an Translation and Commentary," 2nd Edition, 1977

மேலே குர்-ஆனில் காண்பது போலவே, பைபிளிலும் மாற்றங்கள் உண்டு என்று இஸ்லாமியர்கள் சொல்வார்களானால், அவர்களிடம் கீழ்கண்ட கேள்விகள் கேட்கப்படுகின்றன.

கேள்வி 1 . . . யார் பரிசுத்த எழுத்துக்களை மாற்றியது?

இஸ்லாம் பரவுவதை தடுக்க யூதர்களும், கிறிஸ்தவர்களும் ஒன்றாக சேர்ந்து தங்கள் பரிசுத்த வேதங்களை மாற்றிவிட்டார்கள் என்று இஸ்லாமியர்கள் அடிக்கடி குற்றம்சாட்டுகிறார்கள்.  ஆனால், உண்மையில் இது சாத்தியமில்லாத ஒன்றாகும். ஏனென்றால், யூதர்களும் கிறிஸ்தவர்களும் அவர்களுக்குள் அனேக வித்தியாச கண்ணோட்டங்கள் கொண்ட மக்களாக இருக்கிறார்கள்.

யூதர்கள் கூறுகிறார்கள்; 'கிறிஸ்தவர்கள் எந்த நல்வழியிலும் இல்லை' என்று. கிறிஸ்தவர்கள் கூறுகிறார்கள்; 'யூதர்கள் எந்த நல்வழியிலும் இல்லை' என்று. ஆனால், இவர்கள் (தங்களுக்குரிய) வேதத்தை ஓதிக்கொண்டே (இப்படிக் கூறுகிறார்கள்) . . ..  (ஸூரதுல் பகரா 2:113)

அடிப்படை சத்தியங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டு இருந்திருக்குமானால், இதற்கு கடும் எதிர்ப்பு உண்டாகி இருந்திருக்கும், ஏனென்றால் யூத மற்றும் கிறிஸ்தவ மார்க்கத்தில் அனேக பிரிவுகள் இருக்கிறது, ஆகையால் இவர்கள் மாற்றங்களை அங்கீகரித்து இருக்கமாட்டார்கள். சபை சரித்திரத்தில் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் நடந்ததாக எந்த ஒரு ஆதாரமும் இல்லை. வேத வார்த்தைகளை மாற்றப்பட்டதாக எந்த ஒரு குற்றச்சாட்டும் எழும்பினதில்லை. ஆனால், வசனங்களுக்கு பல வகையாக வியாக்கீனம் கொடுக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு உண்டு.

இயேசு கூட யூதர்கள் தங்கள் வேதங்களை மாற்றிவிட்டார்கள் என்று குற்றம் சாட்டவில்லை, அதற்கு பதிலாக வேத வசனங்களின் உண்மை அர்த்தத்திற்கு திரும்புங்கள் என்று அவர்களை உற்சாகப்படுத்தினார். யூதர்கள் வேத எழுத்துக்களை மாற்றி இருந்திருந்தால், அவர்களின் அந்த குற்றத்தை அவர் வெளிச்சத்திற்கு கொண்டு வந்து இருந்திருப்பார்.

முஹம்மதுவின் காலத்தில் வாழ்ந்த மற்றும் முஸ்லிம்களோடு நல்ல நட்புறவுடன் இருந்த உண்மையான கிறிஸ்தவர்கள் (அபிசீனியாவில் வாழ்ந்த கிறிஸ்தவர்கள்), இப்படிப்பட்ட ஏதாவது மாற்றங்கள் யூதர்களால் வேதத்தில் செய்யப்பட்டு இருந்திருந்தால் அதனை இவர்கள் வெளிச்சத்திற்கு கொண்டு வந்து இருப்பார்கள்.

 . . .. "நிச்சயமாக நாங்கள் கிறிஸ்தவர்களாக இருக்கின்றோம்" என்று சொல்பவர்களை, முஃமின்களுக்கு நேசத்தால் மிகவும் நெருங்கியவர்களாக (நபியே!) நீர் காண்பீர். ஏனென்றால் அவர்களில் கற்றறிந்த குருமார்களும், துறவிகளும் இருக்கின்றனர். மேலும் அவர்கள் இறுமாப்புக் கொள்வதுமில்லை.  (ஸூரதுல் மாயிதா 5:82)

 கேள்வி 2: எப்போது வேதம் மாற்றப்பட்டு இருக்கலாம்?

ஒருவேளை யூதர்களும், கிறிஸ்தவர்களும் ஒன்றாக சேர்ந்து முஹம்மதுவின் மரணத்திற்கு முன்பு தங்கள் வேதங்களை மாற்றியிருந்திருந்தால், நிச்சயமாக கீழ்கண்ட வசனங்களை இறக்கி,  இறைவன் முஹம்மதுவிற்கு அறிவுரை கூறியிருக்கமாட்டான்.

. . . ; இன்னும், "அல்லாஹ் இறக்கி வைத்த வேதங்களை நான் நம்புகிறேன்; …" என்றும் கூறுவீராக.  ( ஸூரதுல் அஷ்ஷூரா (42):15)

 (முஃமின்களே!)"நாங்கள் அல்லாஹ்வையும், எங்களுக்கு இறக்கப்பட்ட(வேதத்)தையும்; இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் இன்னும் அவர் சந்ததியினருக்கு இறக்கப்பட்டதையும்; மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் கொடுக்கப்பட்டதையும் இன்னும் மற்ற நபிமார்களுக்கும் அவர்களின் இறைவனிடமிருந்து கொடுக்கப்பட்டதையும் நம்புகிறோம், அவர்களில் நின்றும் ஒருவருக்கிடையேயும் நாங்கள் வேறுபாடு காட்ட மாட்டோம்; இன்னும் நாங்கள் அவனுக்கே முற்றிலும் வழிபடுகிறோம்" என்று கூறுவீர்களாக.   ( ஸூரதுல் பகரா 2:136)

"வேதமுடையவர்களே! நீங்கள் தவ்ராத்தையும், இன்;ஜீலையும், இன்னும் உங்கள் இறைவனிடமிருந்து உங்கள் மீது இறக்கப்பட்டவற்றையும் நீங்கள் கடைப்பிடித்து நடக்கும் வரையிலும் நீங்கள் எதிலும் சேர்ந்தவர்களாக இல்லை" என்று கூறும்;. ….  (ஸூரதுல் அல் மாயிதா (5):68)

 (ஆதலால்) இன்ஜீலையுடையவர்கள், அதில் அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு தீர்ப்பு வழங்கட்டும்;. ....  (ஸூரதுல் அல் மாயிதா (5):47)

இன்னும் (முன்னிருந்த) நபிமார்களுடைய அடிச்சுவடுகளிலேயே மர்யமின் குமாரராகிய ஈஸாவை, அவருக்கு முன் இருந்த தவ்ராத்தை உண்மைப்படுத்துபவராக நாம் தொடரச் செய்தோம்; அவருக்கு நாம் இன்ஜீலையும் கொடுத்தோம்;. அதில் நேர்வழியும் ஒளியும் இருந்தன. அது தனக்கு முன்னிருக்கும் தவ்ராத்தை உண்மைப்படுத்துவதாக இருந்தது. அது பயபக்தியுடையவர்களுக்கு நேர் வழிகாட்டியாகவும் நல்லுபதேசமாகவும் உள்ளது.  (ஸூரதுல் அல் மாயிதா (5):46)

(நபியே!) நாம் உம் மீது இறக்கியுள்ள இ(வ்வேதத்)தில் சந்தேகம் கொளிவீராயின், உமக்கு முன்னர் உள்ள வேதத்தை ஓதுகிறார்களே அவர்களிடம் கேட்டுப் பார்ப்பீராக நிச்சயமாக …..  (ஸூரா யூனுஸ் (10):94)

அவர்களிடம் இருக்கக்கூடிய வேதத்தை மெய்ப்படுத்தக்கூடிய (இந்த குர்ஆன் என்ற) வேதம் அவர்களிடம் வந்தது. …  …, "எங்கள் மீது இறக்கப்பட்டதன் மீதுதான் நம்பிக்கை கொள்வோம்" என்று கூறுகிறார்கள்; அதற்கு பின்னால் உள்ளவற்றை நிராகரிக்கிறார்கள். ஆனால் இதுவோ(குர்ஆன்) அவர்களிடம் இருப்பதை உண்மைப் படுத்துகிறது. ….  அவர்களிடம் உள்ள(வேதத்)தை மெய்ப்பிக்கும் ஒரு தூதர் அல்லாஹ்விடமிருந்து அவர்களிடம் வந்த போது, ….  (2:89, 91, 101)

மெய்ப்பிக்கும்படியாக" என்ற சொற்றொடரை கவனிக்கவும்.  இந்த வசனங்கள் அனைத்தும் சொல்லும் குர்-ஆனின் தெளிவான போதனை என்னவென்றால், "முந்தைய வேதங்களைக் மெய்ப்பிக்க குர்-ஆன் இறக்கப்பட்டதாகும்". அதாவது முஸ்லிம்கள் கருதுவதுபோல, முந்தைய வேதங்களை சரிப்படுத்தவோ, அல்லது தள்ளுபடி செய்யவோ குர்-ஆன் வரவில்லை என்பதாகும். குர்-ஆனில் எந்த ஒரு இடத்திலும், "திருத்தப்பட்ட முந்தைய வேதங்களிலிருந்து, தொலைந்துவிட்ட முந்தைய வேதங்களிலிருந்து மக்களை காக்கவே குர்-ஆன் இறக்கப்பட்டது" என்று கூறவில்லை. அதாவது தௌராத் மற்றும் இஞ்சில் திருத்தப்பட்டது அவைகளிலிருந்து காக்க குர்-ஆன் வந்தது என்று எந்த ஒரு வசனத்தையும் குர்-ஆனில் காட்டமுடியாது.

பரிசுத்த வேதமானவது, முஹம்மதுவின் மரணத்திற்கு பின்பு மாற்றப்பட்டது என்று குற்றம் சாட்டுவதும் சாத்தியமில்லாதது என்பதை கீழ்கண்ட விவரங்கள் மூலம் அறியலாம்.

கி.பி. 600 காலகட்ட வரையிலும், கிறிஸ்தவமானது ஆசியா, ஆப்ரிக்கா மற்றும் ஐரோப்பா கண்டங்களில் பரவிவிட்டது. உலக அளவில், இந்த மூன்று கட்டங்களில் உள்ள கிறிஸ்தவர்கள் அனைவரும், பரிசுத்த வேதத்தை மாற்றுவதற்கு ஒரு குழுவாக ஒரு இடத்தில் சேர்ந்தார்கள் என்பதற்கு எந்த ஒரு ஆதாரமும் உலகில் இல்லை.

முஸ்லிம்கள் பரிசுத்த வேதங்களை மதிக்கிறார்கள். யூத மற்றும் கிறிஸ்தவத்திலிருந்து முஸ்லிம்களாக மாறியவர்களும் தங்களிடம் இருந்த முந்தைய வேதங்களை அப்படியே பாதுகாத்து தங்களிடம் வைத்திருந்திருப்பார்கள். எனினும், இந்த இஸ்லாமியர்கள் பாதுகாத்த வேதங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. 

கி.பி. நான்காம் மற்றும் ஐந்தாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட கையெழுத்துப் பிரதிகள் இன்னும் நம்மிடம் பாதுகாக்கப்பட்டுள்ளது (முஹம்மது ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்தார்). இந்த கையெழுத்துப் பிரதிகள் தற்கால மொழியாக்கங்களோடு ஒப்பிடப்பட்டுள்ளது, மேலும் அவைகள் தற்கால வேதத்தோடு ஒத்து இருப்பதை காணமுடிகிறது.

கேள்வி 3: வேதங்கள் எப்படி மாற்றப்பட்டது?

யூத மார்க்கவும், கிறிஸ்தவ மார்க்கவும் உலகம் முழுவதும் பரவியிருப்பதினால்,  இவ்விரு பிரிவினரிடம் உள்ள அனைத்து வேதங்களையும், கையெழுத்துப் பிரதிகளையும், இதர எழுத்துக்களையும், வேத மேற்கோள்கள் காட்டப்பட்ட மூல ஆவணங்களையும் சேகரிப்பது என்பது முடியாத காரியமாகும். மேலும், உலகில் உள்ள அனைத்து கிறிஸ்தவ திருச்சபைகளில், யூத சினகாக் ஆலயங்களில், நூலகங்களில் பள்ளிகளில் மேலும் வீடுகளில் உள்ள அனைத்து வேதங்களையும், ஆவணங்களையும் சேகரித்து அவைகளில் மாற்றம் செய்துவிட்டு, உலகில் யாருக்குமே தெரியாமல் அவைகள் இருந்த இடங்களிலேயே மறுபடியும் அவைகளை  திருப்பி வைப்பது என்பது நிச்சயமாக செய்ய முடியாத ஒரு செயலாகும். 

குர்-ஆன் கூட இறைவனின் வார்த்தையை மாற்றமுடியாது என்று கூறுகிறது:

மேலும் உம்முடைய இறைவனின் வார்த்தை உண்மையாலும் நியாயத்தாலும் முழுமையாகிவிட்டது - அவனுடைய வார்த்தைகளை மாற்றுவோர் எவரும் இல்லை - . . . .  (ஸூரதுல் அன்ஆம் (6):115)

. . .; அல்லாஹ்வின் வாக்கு(றுதி)களில் எவ்வித மாற்றமுமில்லை - . . .  (ஸூரதுல் யூனுஸ் (10):64)

ஒரு வேளை மேற்கண்ட வசனங்களை கண்டு, 'அல்லாஹ் எங்கள் குர்-ஆனை திருத்தப்படுதலிலிருந்து காக்க வல்லவர்" என்று முஸ்லிம்கள் கூறுவார்களானால், அதே சர்வ வல்ல இறைவன் தன்னுடைய முந்தைய வேதங்களையும் காக்க வல்லவர் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

ஆங்கில மூலம்:  The Claim that the Scriptures of the Bible have been Changed

முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் தொடர் கட்டுரைகள்


© Answering Islam, 1999 - 2012. All rights reserved.




--
12/22/2012 03:07:00 pm அன்று ஈஸா குர்-ஆன் - Isa Koran இல் Isa Koran ஆல் இடுகையிடப்பட்டது


"பைபிளை தள்ளுபடி செய்யவே குர்‍ஆன் வந்தது" என்ற இஸ்லாமியர்களின் வாதம்

 "பைபிளை தள்ளுபடி செய்யவே குர்‍ஆன் வந்தது" என்ற இஸ்லாமியர்களின் வாதம்

"இஸ்லாமின் பரிசுத்த வேதமாகிய குர்‍ஆன் வந்ததின் முக்கிய நோக்கம், யூத மற்றும் கிறிஸ்தவர்களின் பரிசுத்த வேதத்தை தள்ளுபடி செய்யவே தான்" என்றுச் சொல்லிக்கொண்டு அனேக இஸ்லாமியர்கள் திருப்தி அடைகின்றனர். இவர்கள் இப்படி எண்ணுவதற்கு காரணம், "பைபிள் திருத்தப்பட்டு விட்டது அல்லது பைபிளின் போதனை காலம் கடந்துவிட்டது அல்லது உண்மையான பைபிள் தொலைந்துவிட்டது" என்று இஸ்லாமியர்கள் நம்புவதாகும். ஆனால், இஸ்லாமியர்கள் கருதுவது போல் குர்‍ஆன் சொல்வதில்லை. இதற்கு பதிலாக, முந்தைய வெளிப்பாடுகளை உறுதிப்படுத்தவே குர்‍ஆன் இறக்கப்பட்டது என்று குர்‍ஆன் கூறுகிறது. இங்கு ஒரு விஷ‌ய‌த்தை புரிந்துக்கொள்ள‌வேண்டும், அதாவ‌து குர்-ஆன் ஒரு காரியத்தை உறுதிப்படுத்த வருமானால், அந்த காரியம் அதி முக்கியமானதாகத் தானே இருக்கவேண்டும். அதாவது இறைவனே உறுதிப்படுத்துகின்றான் என்றுச் சொன்னால், அது முக்கியமில்லாத ஒன்றாக இருக்குமா? நிச்சயமாக இல்லை.

இப்போது கீழ்கண்ட வசனங்களை பாருங்கள். இந்த வசனங்களின் படி, பைபிளை மாற்றவோ, தள்ளுபடி செய்யவோ அல்லாமல், பைபிளை உறுதிப்படுத்தவே குர்‍ஆன் இறங்கியது என்றுச் சொல்கிறது.

இன்னும் நான் இறக்கிய(வேதத்)தை நம்புங்கள்; இது உங்களிடம் உள்ள (வேதத்)தை மெய்ப்பிக்கின்றது ..... ஸூரத்துல் பகரா(2):41

அவர்களிடம் இருக்கக்கூடிய வேதத்தை மெய்ப்படுத்தக்கூடிய (இந்த குர்ஆன் என்ற) வேதம் அவர்களிடம் வந்தது; இ(ந்த குர்ஆன் வருவ)தற்கு முன் காஃபிர்களை வெற்றி கொள்வதற்காக (இந்த குர்ஆன் மூலமே அல்லாஹ்விடம்) வேண்டிக்கொண்டிருந்தார்கள்.... ஸூரத்துல் பகரா(2):89

......அதற்கு பின்னால் உள்ளவற்றை நிராகரிக்கிறார்கள். ஆனால் இதுவோ(குர்ஆன்) அவர்களிடம் இருப்பதை உண்மைப் படுத்துகிறது. ஸூரத்துல் பகரா(2):91

அவர்களிடம் உள்ள(வேதத்)தை மெய்ப்பிக்கும் ஒரு தூதர் அல்லாஹ்விடமிருந்து அவர்களிடம் வந்த போது.... ஸூரத்துல் பகரா(2):101

இதற்கு முன்னர் மூஸாவின் வேதம் ஒரு இமாமாகவும் (நேர்வழி காட்டியாகவும்) ரஹ்மத்தாகவும் இருந்தது; (குர்ஆனாகிய) இவ்வேதம் (முந்தைய வேதங்களை) மெய்யாக்குகிற அரபி மொழியிலுள்ளதாகும்; இது அநியாயம் செய்வோரை அச்சமூட்டி எச்சரிப்பதற்காகவும், நன்மை செய்பவர்களுக்கு நன்மாராயமாகவும் இருக்கிறது. ஸூரத்துல் அஹ்காஃப்(46):12

இந்த வேதத்தை - அபிவிருத்தி நிறைந்ததாகவும், இதற்குமுன் வந்த (வேதங்களை) மெய்ப்படுத்துவதாகவும் நாம் இறக்கி வைத்துள்ளோம் ; (இதைக்கொண்டு) நீர் (நகரங்களின் தாயாகிய) மக்காவில் உள்ளவர்களையும், அதனைச் சுற்றியுள்ளவர்களையும் எச்சரிக்கை செய்வதற்காகவும், (நாம் இதனை அருளினோம்.) எவர்கள் மறுமையை நம்புகிறார்களோ அவர்கள் இதை நம்புவார்கள். இன்னும் அவர்கள் தொழுகையைப் பேணுவார்கள். ஸூரத்துல் அன்ஆம்(6):92

மேலும் (நபியே! முற்றிலும்) உண்மையைக் கொண்டுள்ள இவ்வேதத்தை நாம் உம்மீது இறக்கியுள்ளோம், இது தனக்கு முன்னிருந்த (ஒவ்வொரு) வேதத்தையும் மெய்ப்படுத்தக் கூடியதாகவும் அதைப் பாதுகாப்பதாகவும் இருக்கின்றது . ஸூரத்துல் மாயிதா(5):48

முந்தைய வேதங்களில் அப்படி என்ன முக்கியமான விஷயங்கள் சொல்லப்பட்டுள்ளது? முந்தைய வேதங்களை உறுதிப்படுத்தவும், பாதுகாக்கவும் தாம் வந்துள்ளதாக ஏன் குர்‍ஆன் சொல்லவேண்டும்? இந்த கேள்விகளுக்கு குர்‍ஆனே பதில் சொல்கிறது. குர்‍ஆன் சொல்கிறது, "மனித குலத்திற்கு வழிகாட்டவும், சீர்திருத்தவும், ஞானம் புகட்டவும், அருளாகவும் முந்தைய வேதங்கள் அனுப்பப்பட்டது". மேலும், மனித குலத்திற்கு ஒளியாக வேதங்கள் அனுப்பப்பட்டது என்று கூறுகிறது, இந்த ஒளி மட்டும் தான் மக்களை இருளிலிருந்து வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறது, தண்டனையிலிருந்து தப்பவைத்து மனிதனுக்கு இரட்சிப்பை தந்து நித்திய வாழ்வை அளிக்கிறது. இதோ குர்‍ஆன் சொல்லும் சாட்சியத்தை நீங்களே படியுங்கள்.

(நபியே! முற்றிலும்) உண்மையைக் கொண்டுள்ள இந்த வேதத்தைப் (படிப்படியாக) அவன் தான் உம் மீது இறக்கி வைத்தான்; இது-இதற்கு முன்னாலுள்ள (வேதங்களை) உறுதிப்படுத்தும் தவ்ராத்தையும் இன்ஜீலையும் அவனே இறக்கி வைத்தான் . ஸூரத்துல்ஆல இம்ரான்(3):3

நிச்சயமாக நாம் தாம் "தவ்ராத்"தை யும் இறக்கி வைத்தோம்; அதில் நேர்வழியும் பேரொளியும் இருந்தன . ஸூரத்துல் மாயிதா(5):44

இன்னும் (முன்னிருந்த) நபிமார்களுடைய அடிச்சுவடுகளிலேயே மர்யமின் குமாரராகிய ஈஸாவை, அவருக்கு முன் இருந்த தவ்ராத்தை உண்மைப்படுத்துபவராக நாம் தொடரச் செய்தோம்; அவருக்கு நாம் இன்ஜீலையும் கொடுத்தோம்; அதில் நேர்வழியும் ஒளியும் இருந்தன . ஸூரத்துல் மாயிதா(5):46

இன்னும், முந்தைய தலைமுறையார்களை நாம் அழித்தபின் திடனாக மூஸாவுக்கு(த் தவ்ராத்) வேதத்தைக் கொடுத்தோம் - மனிதர் (சிந்தித்து) உபதேசம் பெறும் பொருட்டு அவர்களுக்கு ஞானப்பிரகாசங்களாகவும், நேர்வழி காட்டியாகவும் அருட் கொடையாகவும் (அது இருந்தது).ஸூரத்துல் கஸஸ்(28):43

மேலே முந்தைய வெளிப்பாடுகள் என்று சொல்லப்பட்டவைகள் பைபிளைக் குறிக்கும் என்பதை இஸ்லாமியர்கள் அறிய வேண்டும். அவைகள் இறைவனிடமிருந்து வந்த ஆயத்துக்கள் (அடையாளங்கள்), அவைகளை நம்பவேண்டும். இந்த விஷயத்தைப் பொருத்தமட்டில், குர்‍ஆன் தெளிவாக கீழ்கண்ட வசனங்களை சொல்லியுள்ளது, என்பதை இஸ்லாமியர்கள் கவனிக்கவேண்டும்.

ஆகவே, எவர் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரிக்கின்றார்களோ; அவர்களுக்கு நிச்சயமாகக் கடும் தண்டனையுண்டு; அல்லாஹ் யாவரையும் மிகைத்தோனாகவும், (தீயோரைப்) பழி வாங்குபவனாகவும் இருக்கின்றான். ஸூரத்துல்ஆல இம்ரான்(3):4

எவர் இவ்வேதத்தையும், நம்முடைய (மற்ற) தூதர்கள் கொண்டு வந்ததையும் பொய்ப்பிக்கிறார்களோ அவர்கள் விரைவிலேயே (உண்மையை) அறிவார்கள்.அவர்களுடைய கழுத்துகளில் மோவாய்க்கட்டைகள் வரை அரிகண்டங்களுடன் விலங்குகளுடனும் இழுத்துக் கொண்டு வரப்பட்டு;கொதிக்கும் நீரிலும், பிறகு (நரக)த் தீயிலும் கரிக்கப்படுவார்கள் ஸூரத்துல் முஃமின்(40):70-72

ஆங்கில மூலம்: The Claim that the Qur'an Came to Replace the Bible 

முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் தொடர் கட்டுரைகள் 


© Answering Islam, 1999 - 2012. All rights reserved.

Source: http://www.answering-islam.org/tamil/authors/morin/replace.html
--
12/20/2012 06:00:00 pm அன்று ஈஸா குர்-ஆன் - Isa Koran இல் Isa Koran ஆல் இடுகையிடப்பட்டது


ஏன் ’முஹம்மதுவின் வாழ்க்கை’ படமாக அடிக்கடி இஸ்லாமியரல்லாதவர்களால் எடுக்கப்படுகின்றது?

 


ஏன் 'முஹம்மதுவின் வாழ்க்கை' படமாக அடிக்கடி இஸ்லாமியரல்லாதவர்களால் எடுக்கப்படுகின்றது?

முன்னுரை:
இஸ்லாமியர்கள் "முஹம்மதுவை" நபியாக கருதுகின்றனர். இஸ்லாமின் ஆணிவேர் முஹம்மது ஆவார். சமீப காலங்களில் இந்த முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு பற்றிய படங்கள் இஸ்லாமியரல்லாதவர்களால் அதிகமாக படமாக்கப்பட்டு வருகின்றது. உதாரணத்திற்கு, கீழ்கண்ட இரண்டு வீடியோ படங்களைக் கூறலாம்:

1) முஸ்லிம்களின் அறியாமை (The Innocence of the Muslims) [1]
2) அறியாமையுள்ள நபி (The Innocent Prophet) [2]

மேலும், முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதையாகவும்  (காமிக்ஸ்) வெளிவந்துள்ளது, இதன் தொடுப்பை கீழே காணலாம்.


Biography of Prophet Muhammad - Illustrated - Vol. 1  
(இந்த படக்கதை புத்தகம், ஆங்கிலம், ஹிந்தி மற்றும் இந்தோனேஷியன் மொழிகளில் கிடைக்கிறது).[3]

மேற்கண்ட வீடியோக்களில் "அறியாமையுள்ள நபி" என்ற வீடியோவை இந்த வாரம் நான் பார்த்தேன். இந்த வீடியோவை பார்த்தவுடன் இந்த சிறிய கட்டுரையை எழுதலாம் என்று முடிவு செய்தேன்.

இஸ்லாமியரல்லாதவர்கள், ஏன் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறை சொல்ல முற்படுகிறார்கள்? இவர்களுக்கு இதைப் பற்றிய ஆர்வம் எங்கே இருந்து வந்தது? ஏன் தங்கள் நேரத்தையும், பணத்தையும் செலவழித்து இந்த வீடியோ படங்களை எடுக்கிறார்கள்? என்று சில கேள்விகள் எனக்குள் எழுந்தன. அதற்கான பதிலை தேடிப்பார்த்ததில் (உண்மையில் சொல்லவேண்டுமென்றால் சிந்தித்து பார்த்ததில்) உதித்தது தான் இந்த சிறிய கட்டுரை.

ஏன் இஸ்லாமியரல்லாதவர்கள் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறை படமாக எடுக்கிறார்கள்?


1) ஏனென்றால், இஸ்லாமியர்களின் சொல்லுக்கும் செயலுக்கும் இடையே இமாலய அளவிற்கு வேறுபாடு "இஸ்லாமியரல்லாதவர்களுக்குத்" தெரிகின்றது.


பொதுவாக தற்கால இஸ்லாமியர்களின் பேச்சுக்களையும், புத்தகங்களையும் நாம் படித்தால், அவர்களின் இஸ்லாமிய மார்க்கம்  ஒரு அழகான மார்க்கமென்றும், அமைதியை விரும்பும் மார்க்கமென்றும் எழுதியிருப்பார்கள். இவைகளை படிக்கும், வேற்று மார்க்கத்தார்களுக்கும், நாத்தீகர்களுக்கும் இஸ்லாம் பற்றிய ஒரு நல்ல அபிப்பிராயம் உண்டாகிவிடும்.


அதன் பிறகு இஸ்லாமியர்களின் செயல்களையும், இஸ்லாமிய நாடுகளில் நடக்கும் நிகழ்வுகளையும் மக்கள் பார்க்கும் போது, இஸ்லாமிலிருந்து வெளியேறியவர்களை கொல்ல இஸ்லாம் துடிப்பதை மக்கள் பார்க்கும் போது, இஸ்லாமியர்களின் சொல்லுக்கும் செயலுக்கும் இடையே இருக்கும் வித்தியாசம் மாற்று மார்க்கத்தார்களுக்கு புரிந்துவிடுகிறது. இது இஸ்லாமியர்களின் நம்பிக்கைத் துரோகம் என்றும், ஏமாற்று வேலை என்றும் மக்கள் புரிந்துக்கொள்கின்றனர்.


இஸ்லாமியர்களின் சொல்லுக்கும் செயலுக்கும் இடையே ஏன் இவ்வளவு பெரிய வித்தியாசம் என்று கேள்வி கேட்டால், அதற்கும் ஒரு சப்பைக் கட்டு வைத்திருப்பார்கள் இஸ்லாமியர்கள். இஸ்லாமியர்களின் இந்த பதிலை கேட்கும் போது, "நம்மை அவர்கள் முட்டாள்கள் என்று நினைத்து பேசுகின்றார்கள்" என்பதை தெளிவாக புரிந்துவிடும். 


ஆகையால், இஸ்லாமியர்களிடம் சென்று 'எங்களுக்கு இஸ்லாமை விவரியுங்கள்' என்றுக் கேட்பது ஒரு மிகப்பெரிய முட்டாள்தனம் என்பதை அறிந்துக்கொள்ளும் இஸ்லாமியரல்லாதவர்கள் தாங்களாக இஸ்லாமிய மூல நூல்களாகிய குர்-ஆன், ஹதீஸ்கள் மற்றும் முஹம்மதுவின் வாழ்க்கை சரித்திரத்தை படிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். இஸ்லாமை முழுவதுமாக அறிந்துக்கொள்ளும் இஸ்லாமியரல்லாதவர்கள், தங்களுக்கு ஏற்றபடி வீடியோ படங்களை வெளியிட, படக்கதைகள் வெளியிட ஆரம்பித்துவிடுகின்றனர். இப்படி வெளியிடும் போது, சிலர் நேர்மையற்ற முறையில் சில சொந்த கருத்துக்களையும் சேர்த்து வெளியிடுகின்றனர்.


இந்த நிலைக்கு யார் காரணம்? சிந்தியுங்கள். இஸ்லாம் பற்றிய உண்மைகளை மறைக்கும் இஸ்லாமியர்கள் தான்.


2) முஹம்மதுவின் இருண்ட பக்கங்களை மறைத்து, இஸ்லாமியர்கள் பேசுகிறார்கள், எழுதுகிறார்கள். அந்த இருண்ட பக்கங்களை வெளிச்சத்திற்கு கொண்டுவர மற்றவர்கள் முயற்சிக்கிறார்கள்.


முஸ்லிம்கள் 'இஸ்லாமிய உண்மைகளை' மட்டும் மறைப்பதில்லை, முஹம்மது பற்றிய சில உண்மைகளை அப்படியே மறைக்க முயற்சிக்கிறார்கள். அதாவது இஸ்லாமிய மூல நூல்கள் சொல்லும் விவரங்களில் உள்ள சில தர்மசங்கடமான நிகழ்வுகளை வெளியே சொல்லாமல் மறைக்கின்றனர். இதனை அறிந்துக்கொள்ளும் இஸ்லாமியரல்லாத மக்கள், இஸ்லாமிய மூல நூல்களை படித்து, ஆராய்ந்துப்பார்த்து முஸ்லிம்களின் மறைக்கப்பட்ட முழுபூசணிக்காயை வெளியே காட்டிவிடுகின்றனர். 


எந்த ஒரு மார்க்கமாக இருந்தாலும், அந்த மார்க்கத்தின்: 


அ) இறைவன், 

ஆ) தூதுவன் (ஸ்தாபகர்), 

இ) மார்க்க கட்டளைகள் அடங்கிய வேத புத்தகம் 


ஆகிய மூன்றும் அந்த மார்க்கத்தின் உண்மை நிலையை அறிந்துக்கொள்ள உதவும் முக்கியமான ஆதாரங்களாகும்.  இஸ்லாமியர்கள் இந்த மூன்று விஷயங்களிலும் பொய்களை கலந்து இதர மக்களுக்கு போதிக்கிறார்கள். இவைகளை யாராலும் ஜீரணித்துக்கொள்ள முடியாது. முக்கியமாக இஸ்லாமிய நபியாகிய முஹம்மது என்பவர் ஒரு நல்ல வழிகாட்டி என்று பொய்களை அள்ளிவீசுகிறார்கள். ஆனால், அவரின் வாழ்க்கை சரிதையை படிக்கும் இதர மக்கள் முஹம்மதுவின் வாழ்வை நெருப்பில் புடமிட்டு சோதித்துப் பார்க்கும் போது, அவர் சுத்த தங்கமல்ல, அவர் ஒரு கலப்படமுள்ள தங்கம் என்பதை உணர்ந்து அதனை இதர மக்களுக்கு அறிவிக்க முயற்சி எடுக்கிறார்கள். இதன் பயனாக அனேக வீடியோ படங்கள் வெளியாகின்றன. 


இதற்கு காரணம் யார்? உண்மையை மறைத்து பொய்களை பேசும் முஸ்லிம்கள் தானே!


முஸ்லிம்கள் மடியில் நெருப்பை வைத்துக்கொண்டு அதனை மறைக்க முயன்றால் அது பயனளிக்காது என்பதை உணரமாட்டார்களா?


3) முஸ்லிம்களே, நீங்கள் ஏன் உங்கள் முஹம்மது பற்றிய 'அனைத்து' உண்மைகளையும் மக்களுக்கு  விளக்கக்கூடாது?


சில முஸ்லிம்கள் இப்போது கீழ்கண்டவிதமாக கேள்விகளை என்னிடம் கேட்கலாம்:

அ) நாங்கள் இஸ்லாம் பற்றிய விளக்க புத்தகங்களை எழுதவில்லையா?

ஆ) முஹம்மதுவின் வாழ்க்கை பற்றிய புத்தகங்களை எழுதவில்லையா?

இ) "த மெசேஜ் (The Message)" என்ற படம் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு பற்றி எடுக்கப்பட்டுள்ளதே?


அருமையான முஸ்லிகளே, நீங்கள் சொன்ன மேற்கண்ட விஷயங்கள் அனைத்தும் உண்மை தான். ஆனால், மேற்கண்ட அனைத்து விஷயங்களிலும் நீங்கள் 100% உண்மையை சொல்லியுள்ளீர்களா என்பது தான் கேள்வி?  இஸ்லாமியரல்லாதவர்களுக்கு படிக்க நீங்கள் கொடுக்கும் புத்தகங்களில் முஹம்மது பற்றிய அனைத்து விவரங்களும் சொல்லப்பட்டுள்ளதா? நிச்சயமாக இல்லை. அனேக இருண்ட பக்கங்களை நீங்கள் மறைத்து இருக்கிறீர்கள். முஹம்மதுவைப் பற்றி இஸ்லாமிய மூல நூல்கள் சொல்லும் நல்ல விஷயங்களை மட்டுமே சொல்கிறீர்கள், அதே மூல நூல்கள் சொல்லும்  முஹம்மது பற்றிய தர்மசங்கடமான விஷயங்கள் பற்றி மூச்சு விடுவதில்லையே, அது ஏன்?


ஆகையால், தான் இஸ்லாமியரல்லாதவர்கள் உங்கள் இஸ்லாமை விளக்க முன்வந்துவிட்டனர், உங்கள் நபியைப் பற்றி அனைத்து விவரங்களையும் படித்து ஆராய முன்வந்துவிட்டனர். 


முஸ்லிம்களே, இது 19ம் நூற்றாண்டு காலக்கட்டம் அல்ல, இது 21ம் நூற்றாண்டு ஆகும். இணையம் வந்துவிட்டது, மக்களின் அறிவு பசிக்கு, ஆர்வ பசிக்கு, ஆய்வு பசிக்கு சரியான தீணி கிடைக்க எந்த தடையும் இப்போது இல்லை. ஒரு விஷயத்தை மட்டும் நீங்கள் மனதில் ஆழமாக பதித்துவைத்துக் கொள்ளுங்கள், அதாவது நீங்கள் சொல்லும் அனைத்தையும் மக்கள் கேள்வி கேட்காமல் நம்பவேண்டும் என்று நீங்கள் எதிர்ப்பார்க்காதீர்கள். ஒருவேளை இஸ்லாமியர்கள் இப்படி வாழக்கூடும், ஆனால், இஸ்லாமியரல்லாதவர்கள் இனி உங்களின் அனைத்து விஷயங்களையும் கேட்டுவிட்டு, தலை ஆட்டமுடியாது. 


எனவே, நீங்கள் இஸ்லாமை சரியாக விளக்கப்போகிறீர்களா? அல்லது மற்றவர்கள் அதனை விளக்க இடம் கொடுக்கப்போகிறீர்களா? 


என்னைப்பொறுத்தமட்டில், நீங்கள் இஸ்லாமை விளக்கும் போது எப்படி சிலவற்றை மறைக்கிறீர்களோ அதே போல, இந்த கட்டுரையில் நான் குறிப்பிட்ட அந்த வீடியோ படங்களை எடுத்த மற்றவர்களும், சிலவற்றை சுயமாக சேர்த்து வெளியிட்டுள்ளனர். நீங்கள் இருவரும் தவறு செய்கிறீர்கள். ஆனால், இதனால் யாருக்கு அதிக நஷ்டம் என்பது உங்களுக்கு புரிந்து இருக்கும் என்று நம்புகிறேன்.


இஸ்லாமிய அறிஞர்களாகிய உங்கள் செயல்களினாலும், இஸ்லாமிய தீவிரவாதிகளினாலும், சாதாரண நல்ல முஸ்லிம்கள் அனேக இன்னல்களுக்கு ஆளாகிறார்கள். ஹைதராபாத் போன்ற பட்டணங்களில் இஸ்லாமியர்களுக்கு வீடுகளை வாடகைக்கு விட மற்ற மக்கள் பயப்படுகிறார்கள். முக்கியமாக, ஒரு நல்ல வேலையில் இருக்கும் ஒரு நல்ல முஸ்லிம், தாடி வைத்து தொப்பி வைத்துக்கொண்டும்  வீட்டை வாடகைக்கு கேட்டால், வீடு காலியாக இருந்தாலும் மக்கள் அவருக்கு வாடகைக்கு கொடுக்க பயப்படுகிறார்கள். இப்படிப்பட்ட நபர் தெருவில் நடந்துச் செல்லும் போது, மற்ற மக்கள் ஒரு மாதிரியாக (இவர் ஒரு தீவிரவாதியாக இருப்பாரோ என்ற எண்ணத்தில்) பார்க்கிறார்கள். 


இஸ்லாம் பற்றி உள்ளதை உள்ளதென்று எழுதவும், பேசவும் உங்களுக்கு ஏன் தயக்கம்? மற்றவர்கள் அந்த வேலையை தங்கள் கையில் எடுத்துக்கொள்ள ஏன் நீங்கள் அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கிறீர்கள்?


4) இஸ்லாமியரல்லாதவர்களுக்கு ஒரு வேண்டுகோள்


இந்த கட்டுரையை படிக்கும் நீங்கள் யாராக இருந்தாலும் சரி, ஒரு இந்துவாகவோ, கிறிஸ்தவராகவோ அல்லது நாத்தீகராகவோ இருந்தாலும் சரி, இஸ்லாம் பற்றி உண்மையை நீங்கள் அறிந்துக்கொண்டால், அதனை அப்படியே சமுதாயத்திற்குச் சொல்ல முற்படுங்கள். அதனோடு எவைகளையும் சேர்க்கவேண்டாம். இஸ்லாமிய மூல நூல்களில் சொல்லப்பட்ட 'இஸ்லாமை' அப்படியே நீங்கள் சமுதாயத்திற்குச் சொன்னால் போதும், சமுதாயம் விழிப்புணர்ச்சி அடைந்துவிடும்.  உண்மையை மனிதன் அறியும் போது, அந்த உண்மை அவனை விடுதலையாக்கிவிடும், அந்த சக்தி உண்மைக்கு உண்டு, அதனை கிரகித்துக்கொள்ளும் தன்மையும் மனித மனதுக்கு உண்டு.


எனவே, இஸ்லாமிய படக்கதைகள், வீடியோ படங்கள் எடுக்கும் பொது, உள்ளதை உள்ளது போலவே சொல்லப்பாருங்கள், அதனால் அதிக பயன் உண்டாகும்.


நான் தனிப்பட்ட முறையில் மேலே சுட்டிக்காட்டப்பட்ட இரண்டு வீடியோக்களை பார்த்தேன், அவைகளில் இஸ்லாம் பற்றிய அனேக மறைக்கப்பட்ட உண்மைகள் வெளியே கொண்டுவரப்பட்டது, அதே நேரத்தில், சில பொய்யான கற்பனையான விவரங்கள் ஆங்காங்கே இருப்பதை என்னால் காணமுடிகிறது.   எனவே, இஸ்லாம் பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு வரவேண்டும் என்ற நல்ல எண்ணம் யாருக்கு இருந்தாலும் சரி, அவர்கள் இஸ்லாம் பற்றிய மூல நூல்களில் சொல்லப்பட்ட உண்மைகளை மட்டுமே சொல்லவேண்டும்.


முடிவுரை:

முஸ்லிம்களே, இப்போது முடிவு உங்கள் கையில் உள்ளது. உண்மை இஸ்லாமை சமுதாயத்திற்கு நீங்கள் சொல்லப்போகிறீர்களா? அல்லது இஸ்லாமியரல்லாதவர்கள் உங்கள் இஸ்லாமை விளக்க இடம் கொடுக்கப்போகிறீர்களா?  இது ஏழாம் நூற்றாண்டு அல்ல. நீங்கள் சொல்வதையெல்லாம் அப்படியே நம்பும் மக்கள், மிகக்குறைவு என்பதை மனதில் வையுங்கள். 


ஒவ்வொரு ஆண்டும், ஏதோ ஒரு விதத்தில் இஸ்லாம் மற்ற மக்களால் தாக்குதலுக்கு உள்ளாகிறது. அது ஒரு படமாகவோ, புத்தகமாகவோ வெளிவருகிறது. இனி காலம் செல்லாது, உண்மை மட்டுமே நிலைத்து நிற்கும், பொய் தானாக அழிந்துவிடும்.


ஒரு வேளை நீங்கள் சொல்லலாம், கடந்த 14 நூற்றாண்டுகளாக இஸ்லாம் இந்த சவால்களை சந்தித்துக்கொண்டு வருகிறது, இருந்தும் நிலைத்து நிற்கிறது என்று நீங்கள் சொல்லக்கூடும், ஆனால், ஒரு விஷயம் மனதில் வையுங்கள், இது அந்த காலமல்ல, இது 21ம் நூற்றாண்டு, இன்று மனிதனுக்கு அரபி மொழியில் உள்ள ஒரு விவரம் தேவைப்பட்டால், உங்களிடம் விளக்கத்திற்கு வருவதில்லை, இணையத்தில் ஒரு சொடுக்கில் தெரிந்துக்கொள்கிறான். எனவே, இஸ்லாமியரல்லாதவர்களை மிகவும் தரங்குறைவாக நினைக்காதீர்கள்.


பின்குறிப்புகள்

[1] The Innocence of the Muslims – யூடியூபில் தேடிப்பாருங்கள்.

[2] The Innocent Prophet - யூடியூபில் தேடிப்பாருங்கள்

[3] முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - http://www.prophetmuhammadillustrated.com/

ஹிந்தி - http://www.prophetmuhammadillustrated.com/hindi.html

இந்தோனேசியன் - http://www.prophetmuhammadillustrated.com/buku-riwayat-hidup-nabi-muhammad.html

ஆங்கிலம் - http://www.prophetmuhammadillustrated.com/the-book.html







--
12/20/2012 03:07:00 pm அன்று ஈஸா குர்-ஆன் - Isa Koran இல் Isa Koran ஆல் இடுகையிடப்பட்டது


அன்று சத்தாம், நேற்று லாடன் இன்று அஜ்மல் கசாப் - நீதி தூங்குவதில்லை

 


அன்று சத்தாம், நேற்று லாடன் இன்று அஜ்மல் கசாப் - நீதி தூங்குவதில்லை

2008ம் ஆண்டு, மும்பை மாநகரத்தில் நடந்த தீவிரவாத தாக்குதலில் பிடிபட்ட அஜ்மல் கசாப் இன்று அதாவது நான்கு ஆண்டுகளுக்கு பின்பு காலை 7:30 மணிக்கு தூக்கிலிடப்பட்டார்.

அன்று நடந்த தீவிரவாத தாக்குதலில் 150க்கும் மேலானோர் கொல்லப்பட்டனர், அனேகர் காயப்பட்டனர். அனேகர் பெற்றோர்களை இழந்த அனாதைகள் ஆனார்கள், சிலர் விதவைகள் ஆனார்கள், வேறு சிலர் பிள்ளைகளை இழந்த பெற்றோர்களானார்கள். இவர்களின் எதிர் கால கனவுகள் மண்ணோடு மண்ணாக மறைந்துவிட்டது. இந்த செயல்களை புரிந்தவர்களில் ஒருவன் உயிரோடு இருந்தான் (அஜ்மல் கசாப்), இவனால் துன்பத்துக்கு ஆளானவர்கள் இவனுக்கு எப்போது தண்டனை கிடைக்கும்? தங்களுக்கு எப்போது நியாயம் கிடைக்கும்? என்று காத்திருந்தனர். நீதி தூங்கிவிட்டதா? அல்லது செத்துவிட்டதா? ஏன் நீதிமன்றங்கள் தாமதிக்கின்றன என்று புலம்பினார்கள்.

அஜ்மல் கசாப்புக்காக கருணை மனு ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டது. ஜனாதிபதி இந்த மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது, இவனுக்கு கருணை காட்டக்கூடாது என்று மக்கள் விரும்பினர்.

நீதி தூங்குவதில்லை:

பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கும் வண்ணமாக, இந்திய மண்ணில் நீதி இன்னும் உயிரோடு தான் இருக்கிறது என்பதை நிருபிக்கும் வண்ணமாக, நம் ஜனாதிபதி இந்த கருணை மனுவை ஏற்றுக்கொள்ளவில்லை, கசாப்பிற்கு கருணை மன்னிப்பு அளிக்கவில்லை. இதன் பயனாக இன்று காலை 7:30 மணிக்கு கசாப் தூக்கில் இடப்பட்டார். இவரது உடலை தரும்படி இதுவரை யாரும் கேட்கவில்லை, முக்கியமாக பாகிஸ்தானும் கேட்கவில்லை என்று இன்று காலைச் செய்தி தெரிவிக்கிறது.

கடைசியில் அசத்தியம் அழிந்தது, சத்தியம் ஜெயித்தது.

நீதி தாமதித்தாலும், சரியான தண்டனையை கசாப்பிற்கு கொடுத்தது என்று மக்கள் நிம்மதி பெருமூச்சு விட ஆரம்பித்தனர்.

சிறப்புத் தொழுகை:

உலக மகா தீவிரவாதியாம் பின்லாடனின் மரணத்திற்கு பிறகு, இஸ்லாமியர்கள் அவனுக்காக சிறப்பு தொழுகை நடத்தினர். இந்தியாவில் நடந்த கோர தீவிரவாத செயலில் ஈடுபட்ட இந்த கசாப்பிற்காக முஸ்லிம்கள் (முக்கியமாக தமிழ் முஸ்லிம்கள்) சிறப்பு தொழுகை நடத்துவார்களா? அல்லது இந்திய மண்ணில் தீவிரவாத செயலை அரங்கேற்றியவன் யாராக இருந்தாலும் சரி அவன் ஒரு முஸ்லிமல்ல என்றுச் சொல்லி, கசாப்பின் செயலை கண்டித்து, அவனுக்கு கிடைத்த தண்டனையை ஆதரித்து தமிழ் முஸ்லிம்கள் செயல்படுவார்களா? தமிழ் முஸ்லிம்கள் தங்கள் இணைய தளங்களிலும், வார, மாத பத்திரிக்கைகளிலும் கசாப்பிற்கு கிடைத்த தண்டனை சரியானது தான் என்றுச் சொல்லி அறிக்கைவிடுவார்களா? இப்படி செய்து தாங்கள் எக்காலத்திலும் தீவிரவாத செயலுக்கு உடந்தையாக இருந்ததில்லை, இனியும் இருக்கமாட்டோம் என்பதை நிருபிப்பார்களா?

கசாப்கள் பிறந்துக்கொண்டே இருப்பார்கள்:

ஏதோ பின் லாடன் மரித்துவிட்டார், சத்தாம் உசேன் மரித்துவிட்டார், கசாப்பை நாம் தொலைத்துவிட்டோம் என்று யாரும் அதிக மகிழ்ச்சி அடையமுடியாது. தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகள் உலகில் இருக்கும் வரை (எந்த நாடுகள் என்று நான் சொல்லத்தேவையில்லை), இன்னும் அனேக லாடன்கள், சத்தாம் உசேன்கள், அஜ்மல் கசாப்கள் பிறந்துக்கொண்டே இருப்பார்கள், அவர்களை அந்நாடுகள் மற்ற நாடுகள் மீது ஏவிக்கொண்டே இருக்கும். ஆனால், நமக்கு இருக்கும் ஒரு நம்பிக்கை என்னவென்றால், இறைவன் இன்னும் இறந்துவிடவில்லை, இந்தியாவில் நீதி இன்னும் நிர்மூலமாகவில்லை என்பதாகும். தாமதித்தலும், நீதி தன் கடமையைச் செய்யும், இறைவன் பொறுமையாக இருந்து மக்களுக்கு நீதி செய்வான் என்பதாகும்.

எனவே, இந்தியாவில் நீதி தன் கடமையை செய்தமைக்காக, இந்த தண்டனை கசாப்பிற்கு கிடைக்க உழைத்த அனைத்து அரசாங்க ஊழியர்களுக்காக நமது நன்றிகளை தெரிவித்துக்கொள்ளவேண்டும்.

துன்மார்க்கனின் மரணத்தை தேவன் விரும்பாமல்…

ஒரு சராசரி இந்தியன் என்ற முறையில் நான் மேற்கண்ட விவரங்களை எழுதினேன். ஆனால், ஒரு கிறிஸ்தவனாக இருந்து பார்க்கும் போது, இந்த கசாப் மனந்திருந்தி இறைவனிடம் தான் செய்த பாவ செயலுக்கு மன்னிப்பை பெற்று இருந்திருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்குமே என்று எண்ணத்தோன்றுகிறது. அனேகரின் மரணத்திற்கு காரணமான ஒரு மனிதன் மரித்தான், அவனுக்கு சரியான தண்டனை கிடைத்தது என்ற மகிழ்ச்சி ஒரு புறமிருக்க, உண்மையான இறைவனை அறியாது ஒரு உயிர் மரித்துவிட்டதே என்ற வேதனை உள்ளத்தை அதிகமாக வாதிக்கிறது.
துன்மார்க்கனின் மரணத்தை தேவன் விரும்பாமல், அவனின் மனந்திரும்புதலையே அவர் விரும்புகிறார்.

இன்று அதிகாலை நிறைவேற்றப்பட்ட தண்டனையின் மூலமாக, இந்திய மண்ணில் தன் கைவரிசையை யார் காட்டினாலும் சரி, அதை அரசு சகித்துக்கொள்ளமுடியாது என்பது நிருபணமாகியுள்ளது. தீவிரவாத செயல்களில் ஈடுபடுபவர்களும், அதனை ஆதரிப்பவர்களையும் இந்திய அரசு இரும்பு கரம் கொண்டு அடக்கும் என்பதற்கு இது ஒரு சரியான எடுத்துக்காட்டாகும்.

இப்படிக்கு
உமர்

--
11/21/2012 10:39:00 pm அன்று ஈஸா குர்-ஆன் - Isa Koran இல் Isa Koran ஆல் இடுகையிடப்பட்டது


[ஈஸா குர்-ஆன் - Isa Koran] குர்-ஆனின் கட்டுக்கதைகளும், பழங்கதைகளும் - சாலொமோனின் பறக்கும் பாய்!

 குர்-ஆனின் கட்டுக்கதைகளும், பழங்கதைகளும்

சாலொமோனின் பறக்கும் பாய்!

குர்-ஆன் சிறிது கூட சிந்திக்காமல், அல்லாஹ் சாலொமோனுக்கு காற்றின் மீது அதிகாரம் கொடுத்து இருந்தார், ஆகையால் அவர் இரண்டு மாத பிரயாண தூரத்தை ஒரு நாளுக்குள் கடந்துவிடுகிறார் என்று கூறுகிறது.

இன்னும் ஸுலைமானுக்குக் கடுமையாக வீசும் காற்றையும் (நாம் வசப்படுத்திக் கொடுத்தோம்) அது, அவருடைய ஏவலின் படி, நாம் எந்த பூமியை பாக்கியமுடையதாக்கினோமோ (அந்த பூமிக்கும் அவரை எடுத்துச்) சென்றது இவ்வாறு, ஒவ்வொரு பொருளையும் பற்றி நாம் அறிந்தோராகவே இருக்கின்றோம். (குர்-ஆன் 21:81) (முஹம்மது ஜான் டிரஸ்ட் தமிழாக்கம்)

வேகமாக வீசும் காற்றை ஸுலைமானுக்கு வசப்படுத்திக் கொடுத்தோம் . அது நாம் பாக்கியம் செய்த பூமிக்கு அவரது கட்டளைப்படி சென்றது. நாம் ஒவ்வொரு பொருளையும் அறிவோராக இருக்கிறோம்.(குர்-ஆன் 21:81) (பீஜே தமிழாக்கம்)

(அவருக்குப் பின்னர்) ஸுலைமானுக்குக் காற்றை (வசப்படுத்திக் கொடுத்தோம்), அதனுடைய காலைப் பயணம் ஒரு மாத தூரமாகவும் மாலைப் பயணம் ஒரு மாத தூரமாகவும் இருந்தது மேலும் நாம் அவருக்காக செம்பை ஊற்றுப் போல் உருகியோடச் செய்தோம்; தம் இறைவனுடைய அனுமதிப்படி அவருக்கு முன் உழைப்பவற்றில் ஜின்களிலிருந்தும் (வசப்படுத்திக் கொடுத்தோம்.) அவர்களில் எவர் (அவருக்கு ஊழியம்செய்வதில்) நம்முடைய கட்டளையைப் புறக்கணிக்கின்றாரோ, அவரைக் கொழுந்து விட்டெரியும் (நரக) வேதனையைச் சுவைக்கும் படி நாம் செய்வோம் (என்று எச்சரித்தோம்). (குர்-ஆன் 34:12)  (முஹம்மது ஜான் டிரஸ்ட் தமிழாக்கம்)

ஸுலைமானுக்குக் காற்றை வசப்படுத்தினோம். அதன் புறப்பாடு ஒரு மாதமாகும். அதன் திரும்புதல் ஒரு மாதமாகும். அவருக்காக செம்பு ஊற்றை ஓடச் செய்தோம். தனது இறைவனின் விருப்பப்படி அவரிடம் பணியாற்றும் ஜின்களும் இருந்தனர். அவர்களில் நமது கட்டளையை யாரேனும் புறக்கணித்தால் நரகின் வேதனையை அவருக்குச் சுவைக்கச் செய்வோம்.(குர்-ஆன் 34:12)(பீஜே தமிழாக்கம்)

சாலொமோனுக்கு ஒரு பறக்கும் பாய் இருந்ததாகவும், அதன் மூலம் அவர் பிரயாணம் செய்ததாகவும் இஸ்லாமிய பாரம்பரியம் கூறுகிறது. இஸ்லாமிய விரிவுரையாளர்களில் சுன்னி பிரிவைச் சேர்ந்த இப்னு கதீர் ஸூரா 21:81 பற்றி கீழ்கண்ட விதமாக விளக்குகிறார்:

கட்டைகளால் செய்யப்பட்ட ஒரு பாய் போன்ற ஒன்று சாலொமோனுக்கு இருந்தது. அதன் மீது அவர் தன் எல்லா வஸ்துக்கள், குதிரைகள், ஒட்டகங்கள், கூடார பொருட்கள், படைவீரர்கள் அனைத்தையும் வைத்துவிட்டு, இந்த பாயை அப்படியே கொண்டுச் செல்லும் படி காற்றுக்கு கட்டளையிடுவார். இந்த பறக்கும் பாய் மேலே எழும்பும் போது, அதன் கீழே இவரையும் அக்காற்று அப்படியே கொண்டுச் செல்லும். வெயிலிலிருந்து இவர் பாதுகாப்பாக அப்படியே நிழலில் பிரயாணம் செய்வார். அவர் எங்கு செல்லவேண்டும் என்று கட்டளையிடுவாரோ அந்த இடத்திற்கு காற்று இவைகள் அனைத்தையும் கொண்டுச் செல்லும். தாம் செல்லவேண்டிய இடம் வந்த உடன், அந்த மரத்தால் செய்யப்பட்ட பாய் கீழே இறங்கும், அதன் பிறகு எல்லாவற்றையும் அதிலிருந்து கீழே இறக்கிக்கொள்வார்கள். . . (Tafsir Ibn Kathir (Abridged) (Surat Al-Isra', Verse 39 To the end of Surat Al-Mu'minun), by a group of scholars under the supervision of Shaykh Safiur Rahman Al-Mubarakpuri [Darussalam Publishers & Distributors, Riyadh, Houston, New York, London, Lahore; First Edition: July 2000], Volume 6, pp. 476-477)

மேலும் ஸூரா 34:21ம் வசனம் பற்றி இப்னு கதீர் கீழ்கண்டவாறு விளக்கம் அளிக்கிறார்:

தாவூத் மீது அல்லாஹ் குவித்த ஆசீர்வாதங்களை குறிப்பிட்டுவிட்டு, அல்லாஹ் தாவூத்தின் மகனாகிய சுலைமானுக்கு (சாலொமோனுக்கு) கொடுத்த ஆசீர்கள் பற்றி பேசுகிறார் (இவ்விருவர் மீதும் சாந்தி உண்டாகட்டும்). அல்லாஹ் சுலைமானுக்கு காற்றின் மீது அதிகாரத்தை கொடுத்தார். இந்த காற்றானது சுலைமானை ஒரு பறக்கும் பாய் மீது கொண்டுச் செல்லும், செல்வதற்கு ஒரு மாதமும், திரும்பி வருவதற்கு ஒரு மாதமும் ஆகும் . அல் ஹசன் அல் பஸ்ரி இவ்விதமாக கூறுகிறார்: "காலையிலே தமாஸ்கஸ்ஸிலிருந்து சுலைமான் புறப்படுவார், இஸ்தகாரில் சேர்ந்துவிடுவார், அங்கே தன் மதிய உணவை உண்பார். திரும்பவும் இஸ்தகாரிலிருந்து புறப்படுவார் ஒரு மாதம் காற்றிலே வேகமாக பயணம் செய்வார், அதன் பிறகு காபுலை வந்து அடைவார். இஸ்தகாருக்கும் காபுலுக்கும் இடையே ஒரு மாத பிரயாணம் ஆகும். (Tafsir Ibn Kathir (Abridged) (Surat Al-Ahzab, Verse 51 to the end of Surat Ad-Dukhan), Shaykh Safiur Rahman Al-Mubarakpuri [Darussalam Publishers & Distributors, Riyadh, Houston, New York, London, Lahore; First Edition: September 2000], Volume 8, p. 70; capital emphasis ours)

காலஞ்சென்ற இஸ்லாமிய அறிஞர் முஹம்மது அஸத் என்பவர் ஸூரா 34:21ம் வசனம் பற்றி கீழ்கண்டவாறு பின்குறிப்பினை எழுதுகிறார்.

"மேலும் ஸூரா 21:81ஐயும் மற்றும் அதன் பின்குறிப்பையும் படிக்கவும். சுலைமானுக்கு சம்மந்தப்பட்ட புராண கட்டுக் கதைகள் பற்றி மேலும் அறிய ஸூரா 21:82ம் வசனத்தை பார்க்கவும். (மூலம்)

இஸ்லாமிய அறிஞர் முஹம்மது அஸத் அவர்கள் சாலொமோன் பற்றிய குர்-ஆனின் கதைகளை கட்டுக்கதைகளாகவும், புராணக்கதைகளாகவும் கருதுகிறார் என்பதை படிக்கும் வாசகர்களாகிய உங்களுக்கு ஆச்சரியமாக இல்லையா?

ஆங்கில மூலம்: Fables and Legends of the Quran - Solomon's Flying Carpet

குர்-ஆனின் புராணங்கள் மற்றும் கட்டுக்கதைகள் பற்றிய இதர கட்டுரைகள் 


© Answering Islam, 1999 - 2012. All rights reserved.




--
9/30/2012 09:48:00 pm அன்று ஈஸா குர்-ஆன் - Isa Koran இல் Isa Koran ஆல் இடுகையிடப்பட்டது


[ஈஸா குர்-ஆன் - Isa Koran] சாலொமோன் மீது குர்-ஆனின் அவதூறு: பிசாசுக்களோடு ஐக்கியம்

 

சாலொமோன் மீது குர்-ஆனின் அவதூறு: பிசாசுக்களோடு ஐக்கியம்

பைபிள் தீர்க்கதரிசிகளை, இறைத்தூதர்களை பாவிகளாக சித்தரிக்கிறது என்று இஸ்லாமியர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். தீர்க்கதரிசிகள் கூட பாவம் செய்துள்ளார்கள் என்று பைபிள் சித்தரிப்பதினால், இதுவே பைபிள் திருத்தப்பட்டுள்ளது என்பதற்கு சான்று என்று இஸ்லாமியர்கள் கூறுகிறார்கள். இந்த தலைப்புப் பற்றி நம் தளத்தில் வேறு கட்டுரைகளில் பதில்களை எழுதியுள்ளோம். எனவே, ஏன் பைபிள் தீர்க்கதரிசிகளின் எதிர்மறைவான நடத்தைகளையும் சொல்கிறது என்பதற்கு விளக்கம் அல்லது மறுப்பு இந்த கட்டுரையில் சொல்லப்போவதில்லை.

அதற்கு பதிலாக, இதே நிபந்தனையை நாம் குர்-ஆனோடு உரசப்போகிறோம், அதாவது எப்படி முஸ்லிம்களின் வேதம் அல்லாஹ்வின் தூதர்கள் மீது அவதூறுகளை கூறுகிறது என்பதை காணப்போகிறோம். இந்த தலைப்பு பற்றிய நம்முடைய இதர கட்டுரைகளின் தொடர்ச்சி தான் இந்த தற்போதைய கட்டுரையாகும், முந்தைய அக்கட்டுரைகளை கீழே தரப்பட்ட தொடுப்புக்களில் படிக்கவும்:

1) தீர்க்கதரிசிகளும், பாவங்களும்

2) ஆதாம், ஏவாள் மற்றும் ஷிர்க் என்ற பாவமும்.`

இந்த கட்டுரையில், சலொமோனுக்கு எப்படி ஜின்கள்(பிசாசுக்கள்) வேலை செய்தன என்பதைப் பற்றிய குர்-ஆனின் வசனங்களில் காணப்படும் அவதூறை காணப்போகிறோம். "தேவன் ஒருவரே" என்று பிசாசுக்கள் அறிந்திருந்தன என்று பரிசுத்த பைபிள் கூறுகிறது:

தேவன் ஒருவர் உண்டென்று விசுவாசிக்கிறாய், அப்படிச் செய்கிறது நல்லதுதான்; பிசாசுகளும் விசுவாசித்து, நடுங்குகின்றன . (யாக்கோபு 2:19)

மேலும் இயேசு உன்னத தேவனின் பரிசுத்த குமாரன் என்றும், அவர் தங்களை அழித்துவிடுவார் என்றும் அவைகள் அறிந்திருந்தன:

ஜனங்கள் திரளாயிருந்தபடியால் அவர்கள் தம்மை நெருக்காதபடிக்கு, தமக்காக ஒரு படவை ஆயத்தம்பண்ணவேண்டுமென்று, தம்முடைய சீஷர்களுக்குச் சொன்னார். அசுத்த ஆவிகளும் அவரைக் கண்டபோது, அவர் முன்பாக விழுந்து: நீர் தேவனுடைய குமாரன் என்று சத்தமிட்டன. (மாற்கு 3:10,11)

அவன் இயேசுவைக் கண்டபோது கூக்குரலிட்டு, அவருக்கு முன்பாக விழுந்து: இயேசுவே, உன்னதமான தேவனுடைய குமாரனே, எனக்கும் உமக்கும் என்ன? என்னை வேதனைப்படுத்தாதபடிக்கு உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன் என்று மகா சத்தத்தோடே சொன்னான். அந்த அசுத்த ஆவி அவனை விட்டுப் போகும்படி இயேசு கட்டளையிட்டபடியினாலே அப்படிச் சொன்னான். அந்த அசுத்த ஆவி வெகுகாலமாய் அவனைப் பிடித்திருந்தது; அவன் சங்கிலிகளினாலும் விலங்குகளினாலும் கட்டுண்டு காவல்பண்ணப்பட்டிருந்தும் கட்டுகளை முறித்துப்போட்டுப் பிசாசினால் வனாந்தரங்களுக்குத் துரத்தப்பட்டிருந்தான். இயேசு அவனை நோக்கி: உன் பேர் என்னவென்று கேட்டார்; அதற்கு அவன்: லேகியோன் என்றான்; அநேகம் பிசாசுகள் அவனுக்குள் புகுந்திருந்தபடியால் அந்தப் பேரைச் சொன்னான். தங்களைப் பாதாளத்திலே போகக் கட்டளையிடாதபடிக்கு அவைகள் அவரை வேண்டிக்கொண்டன. (லூக்கா 8:28-31)

ஆகையால், கிறிஸ்தவ விசுவாசிகள் சாத்தானோடும், அவனோடுள்ள இதர பிசாசுக்களோடும் ஐக்கியம் கொள்ளக்கூடாது:

இப்படியிருக்க, விக்கிரகம் ஒரு பொருளென்றும், விக்கிரகத்துக்குப் படைக்கப்பட்டது ஒரு பொருளென்றும் நான் சொல்லுகிறேனோ? அஞ்ஞானிகள் பலியிடுகிறவைகளை தேவனுக்கு அல்ல, பேய்களுக்கே பலியிடுகிறார்களென்று சொல்லுகிறேன்; நீங்கள் பேய்களோடே ஐக்கியமாயிருக்க எனக்கு மனதில்லை. நீங்கள் கர்த்தருடைய பாத்திரத்திலும் பேய்களுடைய பாத்திரத்திலும் பானம் பண்ணக்கூடாதே; நீங்கள் கர்த்தருடைய போஜனபந்திக்கும் பேய்களுடைய போஜனபந்திக்கும் பங்குள்ளவர்களாயிருக்கக்கூடாதே . நாம் கர்த்தருக்கு எரிச்சலை மூட்டலாமா? அவரிலும் நாம் பலவான்களா? (1 கொரிந்தியர் 10:19-22)

அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக; நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது? கிறிஸ்துவுக்கும் பேலியாளுக்கும் இசைவேது? அவிசுவாசியுடனே விசுவாசிக்குப் பங்கேது? தேவனுடைய ஆலயத்துக்கும் விக்கிரகங்களுக்கும் சம்பந்தமேது? நான் அவர்களுக்குள்ளே வாசம்பண்ணி, அவர்களுக்குள்ளே உலாவி, அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனங்களாயிருப்பார்கள் என்று, தேவன் சொன்னபடி, நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களே. (2 கொரிந்தியர் 6:14-16)

பரிசுத்த பைபிளின் எச்சரிப்பின் படி, ஒரு உண்மையான விசுவாசி சாத்தானோடும், அவனோடுள்ள இதர சகாக்களோடும் ஐக்கியம் கொள்ளக்கூடாது. ஏதாவது ஒரு தீர்க்கதரிசி சாத்தானோடு ஐக்கியம் கொள்ளவோ, அல்லது அவனை கூட்டாளியாக கொண்டு இருக்கவோ செய்தால், அந்த நபி தேவனுக்கு விரோதமான பாவம் செய்கிறார் என்று பொருள்.

மேலும் உண்மையான விசுவாசிகள், சாத்தான்களோடு ஐக்கியம் கொள்ளமாட்டார்கள் என்று அந்த சாத்தான்களுக்கே தெரியும்.

அவர் அக்கரையிலே கெர்கெசேனர் நாட்டில் வந்தபோது, பிசாசு பிடித்திருந்த இரண்டுபேர் பிரேதக்கல்லறைகளிலிருந்து புறப்பட்டு, அவருக்கு எதிராக வந்தார்கள்; அவர்கள் மிகவும் கொடியராயிருந்தபடியால், அந்த வழியாக ஒருவனும் நடக்கக்கூடாதிருந்தது. அவர்கள் அவரை நோக்கி: இயேசுவே, தேவனுடைய குமாரனே, எங்களுக்கும் உமக்கும் என்ன? காலம் வருமுன்னே எங்களை வேதனைப்படுத்த இங்கே வந்தீரோ என்று கூப்பிட்டார்கள். (மத்தேயு 8:28,29)

பிசாசுக்கள் இயேசுவிடம் "உங்களுக்கு எங்களிடம் என்னவேலை இருக்கிறது" என்று கேட்டனர், அதாவது மனிதர்களுக்கும், பிசாசுக்களுக்கும் இடையே எந்த ஒரு ஒற்றுமையும், வேலையும் இல்லை என்று அவைகள் மறைமுகமாக கூறின. விசுவாசிகளுக்கும் பிசாசுக்களுக்கும் இடையே எந்த ஒரு காரணத்தைக் கொண்டும் ஒற்றுமையான வேலை இருக்காது, அவர்கள் ஒன்றாக சேர்ந்து எதையும் செய்யவேண்டிய அவசியமில்லை.

ஆனால், சாலொமோன் சாத்தான்கள் அல்லது ஜின்களை வைத்து இருந்தார், அவைகள் அவருக்காக வேலை செய்தார்கள் மற்றும் அவர் அவர்களோடு ஐக்கியம் கொண்டு இருந்தார் என்று குர்-ஆன் கூறுகிறது:

இன்னும் ஸுலைமானுக்குக் கடுமையாக வீசும் காற்றையும் (நாம் வசப்படுத்திக் கொடுத்தோம்) அது, அவருடைய ஏவலின் படி, நாம் எந்த பூமியை பாக்கியமுடையதாக்கினோமோ (அந்த பூமிக்கும் அவரை எடுத்துச்) சென்றது இவ்வாறு, ஒவ்வொரு பொருளையும் பற்றி நாம் அறிந்தோராகவே இருக்கின்றோம்.

இன்னும், ஷைத்தான்களிலிருந்தும் அவருக்காகக் (கடலில்) மூழ்கி வரக் கூடியவர்களை (நாம் வசப்படுத்திக் கொடுத்தோம்; இது தவிர) மற்றி வேலைகளையும் (அந்த ஷைத்தான்கள்) செய்யும்; அன்றியும் நாமே அவற்றைக் கண்காணித்து வந்தோம். (குர்-ஆன் 21:81,82)

"பிரமுகர்களே! அவர்கள் என்னிடம் வழிபட்டவர்களாக வருமுன், உங்களில் யார் அவளுடைய அரியாசனத்தை என்னிடம் கொண்டுவருபவர்?" என்று (ஸுலைமான் அவர்களிடம்) கேட்டார். ஜின்களில் (பலம் பொருந்திய ஓர்) இஃப்ரீத் கூறிற்று: நீங்கள் உங்கள் இடத்திலிருந்து எழுந்திருப்பதற்கு முன் அதை நான் உங்களிடம் கொண்டு வந்து விடுவேன்; நிச்சயமாக நான் அதற்கு சக்தியுள்ளவனாகவும், நம்பிக்கைக்கு உரியவனாகவும் இருக்கிறேன்." (27:39)

இறைவேதத்தின் ஞானத்தைப் பெற்றிருந்த ஒருவர்: "உங்களுடைய கண்ணை மூடித்திறப்பதற்குள், அதை உங்களிடம் கொண்டு வந்து விடுகிறேன்" என்று கூறினார்; (அவர் சொன்னவாறே) அது தம்மிடம் வைக்கப்பட்டிருப்பதைக் கண்டதும்; "இது என்னுடைய இறைவனின் அருட் கொடையாகும் நான் நன்றியறிதலுடன் இருக்கின்றேனா, அல்லது மாறு செய்கிறேனா என்று (இறைவன்) என்னைச் சோதிப்பதற்காகவும்; எவன் ஒருவன் (இறைவனுக்கு) நன்றி செலுத்துகின்றானோ அவன் நன்றி செலுத்துவது அவனுக்கே (நன்மை)யாவும்; மேலும், எவன் (நன்றி மறந்து) மாறு செய்கிறானோ (அது அவனுக்கே இழப்பாகும்; ஏனெனில்) என் இறைவன், (எவரிடத்தும்) தேவைப் படாதவனாகவும், மிகவும் கண்ணியம் மிக்கவனாகவும் இருக்கின்றான்" என்று (ஸுலைமான்) கூறினார். (குர்-ஆன் 27:39,40)

மேற்கண்ட வசனங்கள் பற்றி இபின் கதீர் விரிவுரை கீழ்கண்ட விதமாக தருகிறார்:

["பிரமுகர்களே! அவர்கள் என்னிடம் வழிபட்டவர்களாக வருமுன், உங்களில் யார் அவளுடைய அரியாசனத்தை என்னிடம் கொண்டுவருபவர்?" என்று (ஸுலைமான் அவர்களிடம்) கேட்டார் . . . ]

[ஜின்களில் (பலம் பொருந்திய ஓர்) இஃப்ரீத் கூறிற்று:. . .] - முஜாஹித் இது ஒரு "பலம் பொருந்திய ஜின்" என்று விளக்கம் அளிக்கிறார், அபூ ஸாலிஹ் "இந்த ஜின் ஒரு மிகப்பெரிய மலையைப்போன்ற பெரிய ஜின்" என்று விளக்கம் அளிக்கிறார்...

[நீங்கள் உங்கள் இடத்திலிருந்து எழுந்திருப்பதற்கு முன் அதை நான் உங்களிடம் கொண்டு வந்து விடுவேன்] - இதைப் பற்றி இப்னு அப்பாஸ் (ரலி) "நீங்கள் உட்கார்ந்து இருக்கும் இடத்திலிருந்து எழுந்திருப்பதற்கு முன்பாக" என்று விளக்கம் அளிக்கிறார். அஸ்ஸுத்தி மற்றும் இதர அறிஞர்கள் இவ்விதமாக கூறுகிறார்கள்: "அவர் நீதி செலுத்துவதற்கும் மக்களை ஆளுவதற்கும் ஒரு சிம்மாசனத்தில் உட்கார்ந்து இருப்பார், மற்றும் அங்கே இருந்துக்கொண்டு மக்களை ஆளுவார், உணவு அருந்துவார், அந்த இருக்கையில் அவர் காலை முதற்கொண்டு மதியம் வரைக்கும் உட்கார்ந்து இருப்பார்". . .

[நிச்சயமாக நான் அதற்கு சக்தியுள்ளவனாகவும், நம்பிக்கைக்கு உரியவனாகவும் இருக்கிறேன்] - இப்னு அப்பாஸ் இவ்வரிகளுக்கு கீழ்கண்ட விளக்கம் அளிக்கிறார்: "நிச்சயமான நான் அதற்கு சக்தியுள்ளவனாகவும், நம்பிக்கைக்கு உரியவனாகவும் இருக்கிறேன்" என்று ஜின் கூறும்போது, அதற்கு சுலைமான் (அவர் மீது சாந்தி உண்டாகட்டும்) : "இதைவிட மிகவும் வேகமாக எனக்கு வேண்டும்" என்று மறுமொழியாக அளித்தார். சுலைமானின் வார்த்தைகளினால் அறியப்படுவது என்னவென்றால், அந்த அரசியின் சிம்மாசனத்தை சீக்கிரமாக கொண்டு வந்து, தனக்கு அல்லாஹ் கொடுத்து இருக்கின்ற அதிகாரத்தையும், வல்லமையையும், வேலைக்காரர்களின் (ஜின்கள், ஷைத்தான்கள்) திறமையையும் காண்பிக்க வேண்டும் என்று விரும்பினார். தனக்கு அல்லாஹ் கொடுத்து இருக்கும் அதற்கு முன்பும், பின்பும் யாருக்கும் கொடுக்கப்படவில்லை, இதன் மூலமாக "பில்கிஸ்" என்ற அரசிக்கு முன்பாகவும், அவ்வரசியின் மக்களுக்கு முன்பாகவும் தன் நபித்துவத்திற்கு சரியான சான்றாக அமையும். அதாவது அந்த அரசி தன் நாட்டிலே இருக்கும் போதே, இங்கு வருவதற்கு முன்பாகவே, பூட்டப்பட்ட பல அறைகளுக்கு அப்பால் இருக்கும் அவளின் சிம்மாசனத்தை கொண்டு வந்துவிட்டால், இந்த வல்லமை வெளிப்படும் என்று சுலைமான் கருதினார். சுலைமான் "இதைவிட மிகவும் வேகமாக எனக்கு வேண்டும்"… என்று கூறுகிறார்….

[இறைவேதத்தின் ஞானத்தைப் பெற்றிருந்த ஒருவர்] - இந்த வரிகளுக்கு இப்னு அப்பாஸ் இவ்விதமாக விளக்கமளிக்கிறார்: "இதில் கூறப்படுபவர், சுலைமானின் 'ஆஸிப்' என்ற பெயர் கொண்ட எழுத்தாளர் ஆவார். இதே விவரம் முஹம்மத் பின் இஷாக் என்பவரும் அறிவித்துள்ளார், அவர் யாஜித் பின் ருமன் என்பவரிடம் கேட்டறிந்துள்ளார், அதாவது இவ்வசனத்தில் கூறப்படுபவர் ஆஸிப் பின் பர்கியா ஆவார், மேலும் இவர் அல்லாஹ்வின் சிறப்புமிக்க பெயர்களை அறிந்தவர், உண்மையான நம்பிக்கையாளர் ஆவார். கதாதா கூறும் போது: "இவர் மனிதர்களிலேயே நல்ல நம்பிக்கையாளர், இவர் பெயர் ஆஸிப் என்பதாகும்".

["உங்களுடைய கண்ணை மூடித்திறப்பதற்குள், அதை உங்களிடம் கொண்டு வந்து விடுகிறேன்" என்று கூறினார்;] இதன் பொருள் என்னவென்றால், உங்கள் கண்களை உயர்த்தி எதுவரை பார்க்கமுடியுமோ அதுவரை நீங்கள் பாருங்கள், பிறகு எப்போது நீங்கள் கண்களை சிமிட்டுவீர்களோ அந்த நேரத்திற்குள் அந்த சிம்மாசனம் உங்கள் முன் இருக்கும்" என்பதாகும். அதன் பிறகு அவர் எழுந்து உளு செய்துவிட்டு அல்லாஹை (அவனே உயர்த்தப்படுவானாக) தொழுதுக்கொண்டார். முஜாஹித் கூறும் போது: "அவர் கூறினார், ஓ உயர்ந்த கணம்பொருந்தியவரே" (இந்த விரிவுரையின் மூல இணைய தொடுப்பு - Source)

மேலும், கடைசியாக இந்த விவரம் பற்றிய குர்-ஆனின் வசனம் :

(அவருக்குப் பின்னர்) ஸுலைமானுக்குக் காற்றை (வசப்படுத்திக் கொடுத்தோம்), அதனுடைய காலைப் பயணம் ஒரு மாத தூரமாகவும் மாலைப் பயணம் ஒரு மாத தூரமாகவும் இருந்தது மேலும் நாம் அவருக்காக செம்பை ஊற்றுப் போல் உருகியோடச் செய்தோம்; தம் இறைவனுடைய அனுமதிப்படி அவருக்கு முன் உழைப்பவற்றில் ஜின்களிலிருந்தும் (வசப்படுத்திக் கொடுத்தோம்.) அவர்களில் எவர் (அவருக்கு ஊழியம்செய்வதில்) நம்முடைய கட்டளையைப் புறக்கணிக்கின்றாரோ, அவரைக் கொழுந்து விட்டெரியும் (நரக) வேதனையைச் சுவைக்கும் படி நாம் செய்வோம் (என்று எச்சரித்தோம்). (34:12)

அவை ஸுலைமான் விரும்பிய, மிஹ்ராபுகளையும், சிற்பங்களையும், (தடாகங்கள் போன்ற) பெருங் கொப்பரைகளையும், நகர்த்த முடியா பெரும் பாத்திரங்களையும் செய்து கொண்டிருந்தன. "தாவூதின் சந்ததியினரே! நன்றி செய்யுங்கள். மேலும் என் அடியார்களில் நின்றும் நன்றி செலுத்துவோர் சொற்பமானவர்களே" (என்று கூறினோம்). (34:13)

அவர் (ஸுலைமான்) மீது நாம் மரணத்தை விதித்த போது அவர் இறந்து விட்டார் என்பதை, அவர் (சாய்ந்திருந்த) தடியை அரித்து விட்ட நிலத்தின் பூச்சி (கரையானைத்) தவிர வேறெதுவும் அந்த ஜின்களுக்கு அறிவிக்கவில்லை அவர் கீழே விழவே "தாங்கள் மறைவான விஷயங்களை அறிந்திருக்கக் கூடுமானால் (கடின உழைப்பாகிய) இழிவுதரும் வேதனையில் தாங்கள் தரி பட்டிந்திருக்க வேண்டியதில்லை" என்று ஜின்களுக்கு தெளிவாக தெரிந்தது. (34:14)

இறைவனின் உண்மையான வார்த்தையாகிய பைபிள் தேவனுடைய ஆலயத்தை கட்டும் பணியில் ஈடுபட்டு இருந்தது, ஷைத்தான்களோ, இதர பிசாசுக்களோ அல்ல அவர்கள் மனிதர்கள் என்றும், அவர்களை மேற்பார்வையிட்டது சாலொமோன் என்றும் கூறுகிறது (பார்க்க 1 இராஜாக்கள் 3-8, 1 நாளாகமம் 22, 28-29, 2 நாளாகமம் 2-7ம் அதிகாரங்கள்)

மேலும், மேற்கண்ட குர்-ஆன் வசனம் சாலொமோன் ஷைத்தான்களோடு ஐக்கியம் கொண்டு அவர்களிடம் வேலை செய்வித்தார் என்றுச் சொல்லி அவதூறு உண்டாக்கியது மட்டுமல்லாமல், இறைவனுடைய பரிசுத்த இலக்கணத்திற்கும் அவதூறு விளைவித்துள்ளது. அதாவது இறைவனது பரிசுத்த ஆலயத்தை ஷைத்தான்களும், பிசாசுக்களும் கட்டினார்கள் என்றுச் சொல்லி கேவலப்படுத்தியுள்ளது.

சில மனிதர்கள் சாலொமோன் பற்றி ஷாத்தான்கள் சொன்ன அவதூறுகளை நம்பி அவைகளை பின்பற்றியதாக குர்-ஆன் கூறுகிறது.

அவர்கள் ஸுலைமானின் ஆட்சிக்கு எதிராக ஷைத்தான்கள் ஓதியவற்றையே பின்பற்றினார்கள்;. ஆனால் ஸுலைமான் ஒருபோதும் நிராகரித்தவர் அல்லர். ஷைத்தான்கள் தாம் நிராகரிப்பவர்கள். அவர்கள்தாம் மனிதர்களுக்குச் சூனியத்தைக் கற்றுக்கொடுத்தார்கள்; இன்னும், பாபில் (பாபிலோன் என்னும் ஊரில்) ஹாருத், மாருத் என்ற இரண்டு மலக்குகளுக்கு இறக்கப்பட்டதையும் (தவறான வழியில் பிரயோகிக்கக் கற்றுக்கொடுத்தார்கள்). ஆனால் அவர்கள் (மலக்குகள்) இருவரும்; "நிச்சயமாக நாங்கள் சோதனையாக இருக்கிறோம்; (இதைக் கற்று) நீங்கள் நிராகரிக்கும் காஃபிர்கள் ஆகிவிடாதீர்கள்" என்று சொல்லி எச்சரிக்காத வரையில், எவருக்கும் இ(ந்த சூனியத்)தைக் கற்றுக் கொடுக்கவில்லை, அப்படியிருந்தும் கணவன் - மனைவியிடையே பிரிவை உண்டாக்கும் செயலை அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டார்கள். எனினும் அல்லாஹ்வின் கட்டளையின்றி அவர்கள் எவருக்கும் எத்தகைய தீங்கும் இதன் மூலம் இழைக்க முடியாது. தங்களுக்குத் தீங்கிழைப்பதையும், எந்த வித நன்மையும் தராததையுமே - கற்றுக் கொண்டார்கள். (சூனியத்தை) விலை கொடுத்து வாங்கிக் கொண்டவர்களுக்கு, மறுமையில் யாதொரு பாக்கியமும் இல்லை என்பதை அவர்கள் நன்கறிந்துள்ளார்கள். அவர்கள் தங்கள் ஆத்மாக்களை விற்றுப்பெற்றுக்கொண்டது கெட்டதாகும். இதை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டாமா? (குர்-ஆன் 2:106)

தாவீதின் குமாரனாகிய சாலொமோனுக்கு குர்-ஆன் அவதூறை உண்டாக்கியுள்ளது. அதாவது ஆலய கட்டுமானப் பணியில் அவர் சாத்தான்களோடு இணைந்து செயல்பட்டார். நிச்சயமாக இந்த கதைகள் எல்லாம் அதே ஷைத்தான்கள் மூலமாகத் தான் வந்திருக்கும். முஹம்மது கொண்டு வந்த செய்தியில் இப்படிப்பட்ட பொய்யான கதைகளை ஷைத்தான் தான் சேர்த்து இருக்கவேண்டும்.

(நபியே!) உமக்கு முன்னர் நாம் அனுப்பி வைத்த ஒவ்வொரு தூதரும், நபியும், (ஓதவோ, நன்மையையோ) நாடும்போது, அவர்களுடைய அந்த நாட்டத்தில் ஷைத்தான் குழப்பத்தை எறியாதிருந்ததில்லை எனினும் ஷைத்தான் எறிந்த குழப்பத்தை அல்லாஹ் நீக்கியப் பின்னர் அவன் தன்னுடைய வசனங்களை உறுதிப்படுத்துகிறான் மேலும், அல்லாஹ் யாவற்றையும் அறிந்தவனாகவும், ஞானம் மிக்கோனாகவும் இருக்கின்றான்.(குர்-ஆன் 22:52)

ஆங்கில மூலம்: Quran Contradiction - The Quran's Slander of Solomon: The Communion of Demons  

இதர குர்-ஆன் முரண்பாடுகள்


© Answering Islam, 1999 - 2012. All rights reserved.




--
9/30/2012 09:53:00 pm அன்று ஈஸா குர்-ஆன் - Isa Koran இல் Isa Koran ஆல் இடுகையிடப்பட்டது


இஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்

முன் பக்கம் செல்ல

HOME PAGE

தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்

1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1

2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2

3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3

4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4

பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்

1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1

2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2

பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்

1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்

2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்