இஸ்லாம் அமைதி மார்கமா? இஸ்லாம் இனிய மார்கமா? இஸ்லாம் உண்மையான மார்கமா?

ஆன்சரிங் இஸ்லாம்

பல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்

சத்தியவான் தளம் செல்ல

Saturday, October 25, 2014

Fwd: [ஈஸா குர்-ஆன் - Isa Koran] மஹாத்மா காந்தி - காஃபிர்களால் முஹம்மதுவிற்கும் இஸ்லாமுக்கும் நன்மையுண்டாகுமா?

 

மஹாத்மா காந்தி - காஃபிர்களால் முஹம்மதுவிற்கும் இஸ்லாமுக்கும் நன்மையுண்டாகுமா?

முன்னுரை: ஒரு சகோதரர் என்னிடம் "இஸ்லாமிய இறைத்தூதர் முஹம்மது பற்றி நம் தேசப்பிதா மஹாத்மா காந்தி அவர்கள் நல்லவிதமாக கூறியிருக்கிறார்கள். இதனை மேற்கொள் காட்டி ஒரு இஸ்லாமியர் என்னிடம் ஒரு துண்டு பிரசுரத்தைக் கொடுத்தார்.  மேலும் இதர மேற்கத்திய அறிஞர்கள், சரித்திர ஆசிரியர்கள் சொன்ன விவரங்களும் அந்த துண்டு பிரசுரத்தில் உள்ளது, இணையத்திலும் இதற்கான தொடுப்பு உள்ளது. இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன என்று கேட்டார்".  நானும் இணையத்தில் தேடிப்பார்த்த போது, என் நண்பர் சொன்ன அனைத்து விவரங்களும் கிடைத்தது. 

அவர் சொன்ன அந்த துண்டு பிரசுரத்தில் 'முஹம்மதுவைப் பற்றி' கீழ்கண்ட நபர்கள்  சொன்ன மேற்க்கோள்கள் காட்டப்பட்டு இருந்தது:

  1. மஹாத்மா காந்தி (Mahatma Gandhi)
  2. சர் ஜார்ஜ் பெர்னார்ட் ஷா (Sir George Bernard Shaw)
  3. தாமஸ் கர்லைல் (Thomas Carlyle)
  4. W. மாண்ட்கொமெர்ய் வாட் (W. Montgomery Watt)
  5. டாக்டர் வில்லியம் ட்ராபெர் (Dr. William Draper)
  6. அல்போன்ஸ் டீ லமர்டைன் (Alphonse de Lamartaine)
  7. லியோ டால்ஸ்டாய் (Leo Tolstoy)
  8. D.G. ஹோகர்த் (D.G. Hogarth)

காஃபிர் என்பவன் யார்?

அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும், முஹம்மதுவை இறைத்தூதர் என்றும் நம்புபவன் முஸ்லிம் ஆவான்.  ஆனால், அல்லாஹ்வையும், முஹம்மதுவையும் நம்பாமல் இருப்பவன் காஃபிர் ஆவான். இன்னும் தெளிவாக சொல்லவேண்டுமென்றால், முஸ்லிம் அல்லாதவர்கள் அனைவரும் காஃபிர்கள் (unbelievers) ஆவார்கள். 

காஃபிர்கள் பற்றி குர்-ஆன் அனேக காரியங்களைச் சொல்கிறது.  நரகம் காஃபிர்களுக்காகவே உண்டாக்கப்பட்டது என்றும், அவர்கள் மீது அல்லாஹ்வின் கோபம் உண்டாகும் என்றும், சாபம் உண்டாகும் என்றும்,அவர்களுக்கு வேதனை உண்டாகும் என்றும் அனேக வகைகளில் காஃபிர்களை குர்-ஆனும் அல்லாஹ்வும் முஹம்மதுவும் கேவலப்படுத்துகிறார்கள். இதனை விளக்கும் சில குர்-ஆன் வசனங்களை இக்கட்டுரையின் கடைசியில் அடிக்குறிப்பில் காணலாம்[1]. 

ஒரு பக்கம் காஃபிர்களுக்கு நரகம் தான் கிடைக்கும் என்றுச் சொல்லும் முஸ்லிம்கள், இன்னொரு பக்கம் அவர்கள் சொன்ன முஹம்மது பற்றிய நல்ல கருத்துக்கள் எதற்கு? முஸ்லிம்கள் ஏன் இப்படி நயவஞ்சகமாக நடந்துக்கொள்கிறார்கள்? மேற்கொண்டு படியுங்கள். 

மஹாத்மா காந்தியும் முஹம்மதுவும்

மஹாத்மா காந்தி அவர்கள் முஹம்மது பற்றி "யங் இந்தியா (Young India)" என்ற பத்திரிக்கையில் 1924ம் ஆண்டு சொன்னதாக ஒரு மேற்கோள் முஸ்லிம்களால் காட்டப்படுகின்றது.  நம் தேசப்பிதா காந்தி அவர்கள் இப்படி எழுதியது உண்மை தானா என்று நான் சரி பார்க்கவில்லை. எந்த நூலகத்திலாவது, இணைய தொடுப்பிலாவது அந்த பத்திரிக்கை இருந்தால், இதனை சரி பார்த்துக்கொள்ளலாம். இந்த கட்டுரையைப் பொறுத்தமட்டில்,   காந்தி அவர்கள் சொன்னது உண்மை என்று கருதி நாம் தொடர்ந்து விவரங்களைப் பார்ப்போம்.
 


அ) இப்படிப்பட்ட கேற்கோள்களைக் காட்டுவதின் மூலம் முஸ்லிம்கள் சொல்ல வருவது என்ன?

இந்தியர்கள் காந்தி அவர்களை தேசப்பிதா என்றும், மஹாத்மா என்றும் அழைத்து கௌரப்படுத்துகிறோம். அவர் சுதந்திர போராட்ட வீரர் என்றும், இந்திய சுதந்திரத்திற்கு பாடுபட்டவர் என்றும் எல்லாருக்கும் தெரியும். முஸ்லிம்களின் படி, இப்படிப்பட்டவர் சொல்வதை நாம் காது கொடுத்து கேட்கவேண்டும், அவரை மதிப்பதுபோல, அவரது சொற்களையும் அல்லது கருத்துக்களையும் மதிக்கவேண்டும். நம் இந்தியாவில் வாழும் மக்களில், எழுதப்படிக்க தெரியாத பாமர மனிதனுக்கும் காந்தி அவர்கள் யார் என்று குறைந்தபட்சம் தெரிந்து இருக்கும். இந்திய ரூபாய் நோட்டுகளிலும் நாம் அவரைக் காணலாம். 

இப்படிப்பட்டவர் சொல்வதை காஃபிர்களாகிய இந்துக்களும், கிறிஸ்தவர்களும், நாத்திகர்களும் ஏன் கேட்கக்கூடாது? என்பது தான் இஸ்லாமியர்களின் கேள்வி. மேலோட்டமாக நாம் இதனை படித்தால், முஸ்லிம்கள் சொல்வதில் நியாயம் இருப்பது போலத்தெரியும். ஆனால், சிறிது ஆய்வு செய்து சிந்தித்துப் பார்த்தால், முஸ்லிம்களுக்கே இது தலைவலியாக மாறும்.

ஆ) மஹாத்மாவின் கருத்தை நாம் (காஃபிர்கள்) சீரியஸாக எடுத்துக் கொள்ளலாமா?

நாம் மஹாத்மா காந்தியை மதிக்கிறோம், ஆனால், அவர் சொல்வதையெல்லாம் தலையில் வைத்துக்கொண்டு ஆடமுடியாது. உதாரணத்திற்கு, முஹம்மது பற்றி காந்தி அவர்கள் சொன்ன கருத்துக்களைச் சொல்லலாம்.  

1. மஹாத்மா காந்தி அவர்கள் குர்-ஆனை முழுவதுமாக படித்து, அதனை புரிந்துக்கொண்டாரா? ஒவ்வொரு வசனத்தின் பின்னணி என்னவென்று மஹாத்மா காந்திக்குத் தெரியுமா? அவர் குர்-ஆன் விரிவுரைகளை படித்து இருந்திருப்பாரா? என்ற கேள்விகள் எழுகின்றன. இவைகளுக்கு பதில் சொல்ல அவர் இன்று நம்மிடம் இல்லை.

2. மஹாத்மா காந்தி அவர்கள் முஹம்மதுவின் வாழ்க்கை சரித்திரத்தை படித்ததாக மேற்கண்ட மேற்கோளில் சொல்லியுள்ளார். அந்த சரித்திரத்தை எழுதியது  யார்? முஸ்லிம்கள் எழுதும் சரித்திரத்தில் முஹம்மதுவின் நல்ல காரியங்களை மட்டுமே சொல்வார்கள், அவரின் உண்மை முகத்தை மறைப்பார்கள்.  முஸ்லிம்கள் எழுதும் புத்தகங்களை மட்டுமே படிக்கும் ஒரு நபர், மஹாத்மா எழுதுவது போலத்தான் எழுதுவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 

3. இப்னு இஷாக் போன்ற ஆரம்ப கால இஸ்லாமிய சரித்திர நூல்களை காந்தி அவர்கள் படித்து இருந்திருந்தால், முஹம்மது பற்றி இப்படியெல்லாம் எழுதி இருப்பார் என்று நிச்சயமாக எதிர்ப்பார்க்க முடியாது.

4. புகாரி, முஸ்லிம் என்றுச் சொல்லக்கூடிய ஹதீஸ் தொகுப்புக்களை முழுவதுமாக காந்தி படித்து இருந்திருந்தால், அவரை 1924ம் ஆண்டே முஸ்லிம்கள் கொல்லும் அளவிற்கு காந்தி எழுதியிருந்திருபபர் என்பதில் சந்தேகமில்லை. முஹம்மதுவிற்கு 10க்கும் மேல் மனைவிகள் இருந்தார்கள் என்று மஹாத்மாவிற்கு தெரியுமா? அடிமைகளை கற்பழிக்கலாம் என்ற கோட்பாட்டை முஹம்மது போதித்தார் என்பதை காந்தி அவர்கள் அறிவாரா?

5. 1924ம் ஆண்டில், மேற்கண்ட விதமாக காந்தி அவர்கள் எழுதும் போது, அவருக்கும் முஸ்லிம் சமுதாயத்திற்கும் இடையே இருக்கும் உறவுமுறை எப்படி இருந்தது? சுதந்திர போராட்டத்தில் மும்முறமாக ஈடுபட்டு இருந்த  காந்தி அவர்கள், இந்த சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்களும்  தம்மோடு ஒத்துழைக்கவேண்டும் என்பதற்காக அவர்களோடு ஒரு நல்ல உறவை வைத்திருந்தார் என்று அறிய முடிகின்றது.  முஸ்லிம்களுக்கு ஆதரவாக அனேக செயல்களை காந்தி அவர்கள் செய்தார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.  (இந்த தகவல்கள் உண்மையா இல்லையா என்பதில் எனக்கு சந்தேகம் உண்டு, ஏனென்றால், இதைப் பற்றி அதிகமாக நான் ஆய்வு செய்யவில்லை. சமயம் வாய்த்தால், இதைப் பற்றி மேலதிக விவரங்களை சேகரிக்கலாம்). இப்படிப்பட்ட சமயத்தில் மஹாத்மா போன்றவர்கள் முஸ்லிம்களின் மனம் நோகும் படி எப்படி எழுதுவார்?
ஆக, மேற்கண்ட காரணங்களினால் முஹம்மது பற்றி காந்தி அவர்கள் சொன்னதை இதர மக்கள் "சீரியஸாக" எடுத்துக்கொள்ளத் தேவையில்லை என்பது என் கருத்து.

இ) மஹாத்மாவின் கருத்துக்களை, முஸ்லிம்கள் சீரியஸாக எடுத்துக்கொள்கிறார்களா?

முஸ்லிம்களாவது மஹாத்மாவின் வார்த்தைகளை முக்கியமானவைகளாக  ஏற்றுக்கொள்கிறார்களா? என்று கேள்வி கேட்டால், "இல்லை" என்பது தான் பதிலாக அமையும். அதாவது,

1. மஹாத்மா "அஹிம்சை" என்ற ஒரு கோட்பாட்டை தீவிரமாக பின்பற்றினார். உயிரை விட மேலானதாக கருதினார். எந்த ஒரு தீமை நமக்கு எதிராக நடந்தாலும்,  வன்முறையில் இறங்கக்கூடாது என்பது மஹாத்மாவின் கோட்பாடு. முஸ்லிம்கள் மஹாத்மாவின் இந்த கருத்தை ஏற்றுக்கொள்வார்களா?  நிச்சயமாக இல்லை.
2. மஹாத்மாவின் அஹிம்சை கோட்பாட்டின் படி, தற்காப்பிற்காக கூட நாம் கத்தியை ஏந்தக்கூடாது, இரத்தம் சிந்தக்கூடாது. இதனை முஹம்மது  பின் பற்றியிருந்திருந்தால்,  உலகத்தின் அகராதிகளில் "இஸ்லாம்" என்ற வார்த்தை சேர்க்கப்படாமல் இருந்திருக்கும். 
3. மஹாத்மாவை முஹம்மது பின்பற்றுவாரா? முஹம்மதுவை மஹாத்மா பின்பற்றுவாரா? இதற்கு முஸ்லிம்களின் கருத்து என்ன?
4. மஹாத்மா இந்துக்கள் வேதம் என்று கருதும் "பகவத் கீதையை" அதிகமாக விரும்பிப்படித்தார். முஹம்மதுவும் முஸ்லிம்களும் பகவத் கீதையை வேதம் என்று நம்பி படிப்பார்களா? மஹாத்மாவின் கருத்துக்களை காஃபிர்கள் செவிமடுக்கவேண்டுமென்று எதிர்ப்பார்க்கும் முஸ்லிம்கள், அதே மஹாத்மாவின் பகவத் கீதைப் பற்றிய கருத்துக்களை ஏற்றுக்கொண்டு, குர்-ஆனோடு கூட இனி பகவத் கீதையையும் படிப்பார்களா?
5. காந்தி அவர்கள் 'முஹம்மது' பற்றிச் சொன்னதை மட்டுமே எல்லாரும் கவனிக்கவெண்டும், அவர் சொன்ன இதர விவரங்கள் நமக்குத் தேவையில்லை என்று முஸ்லிம்கள் சொன்னால், இது தான் நயவஞ்சகம் எனப்படும், ஏமாற்றுவேலை எனப்படும்.
6. முஸ்லிம்கள் 'முக்கியம்' என்று கருதுவதை காஃபிர்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும், முஸ்லிம்கள் விட்டுவிடுவதை காஃபிர்களும் விட்டுவிடவேண்டும், இது தான் முஸ்லிம்கள் எதிர்ப்பார்ப்பது. ஆனால், இது அநியாயமாகும், காஃபிர்கள் எல்லாரும் முட்டாள் என்று முஸ்லிம்கள் கருதுவதை நிறுத்திக்கொண்டால் நல்லது.

ஈ) சொல்பவர் மஹாத்மாவாக இருந்தாலும் சரி…

முஹம்மது பற்றி முழுவதுமாக தெரிந்துக்கொள்ளாமல், சொல்லப்படும் கருத்தை எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும்? சொல்பவர் மஹாத்மாவாக இருந்தாலும் சரி, அதனை புறக்கணிக்கவேண்டும்.

கிரிக்கெட் பற்றி ஆலோசனையோ அல்லது இதர கருத்துக்களையோ கேட்கவேண்டுமென்றால் சச்சின் போன்ற கிரிக்கெட் விளையாட்டு வீரர்களிடம் கேட்கவேண்டும், அதை விட்டுவிட்டு, சதுரங்க ஆட்ட விளையாட்டு வீரர் விஸ்வநாத் ஆனந்த் அவர்களிடம் கேட்டால், கேட்பவர்களை மக்கள் ஒருவகையாக பார்ப்பார்கள். ஒருவேளை விஸ்வநாத் ஆனந்த் அவர்கள் கிரிக்கெட் பற்றி தன் கருத்தைச் சொன்னாலும் அதனை மக்கள் சீரியஸாக எடுத்துக்கொள்ளமாட்டார்கள், ஏனென்றால், அவர் சதுரங்க ஆட்ட வீரர், கிரிக்கெட் வீரர் இல்லை. இதுபோல, இஸ்லாமை முழுவதுமாக அறிந்தவரிடம் முஹம்மது பற்றி கேட்கவேண்டுமே ஒழிய, அவர் மஹாத்மாக இருக்கிறார், தேசப்பிதாவாக இருக்கிறார் என்ற காரணத்தினால் அவர் சொல்வதை உண்மை என்று ஏற்றுக்கொள்பவர், இருதய அறுவை சிகிச்சைக்காக, கண் அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவரிடம் சென்று மருத்துவம் பார்த்துக்கொள்வதற்கு சமமாகும்.

ஒருவர் எந்த துறையில் தேர்ச்சிப் பெற்று இருக்கிறாரோ,  அந்த துறை சம்மந்தப்பட்ட விஷயங்களை மட்டுமே அவரிடம் கேட்கவேண்டும். இதுமட்டுமல்ல, அவர் சொல்லும் விவரங்களில் உண்மை இருக்கின்றனவா? உள்ளொன்று வைத்து வெளியே வேறொன்று  சொல்கிறாரா? என்பதையும் கவனிக்கவேண்டும்.

உ) முஸ்லிம்களிடம் கேட்கவேண்டிய கேள்விகள்

மஹாத்மாவின் முஹம்மது சம்மந்தப்பட்ட கருத்தை இதர மக்கள் ஏற்கவேண்டும் என்று விரும்பும் நீங்கள், அதே மஹாத்மாவின் இதர கருத்துக்களை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா?
அஹிம்சை என்பது மஹாத்மாவின் மூச்சு, ஹிம்சை என்பது முஹம்மதுவின் மூச்சு, ஒருவேளை மஹாத்மா முஹம்மதுவை சந்தித்து இருந்திருந்தால் – முஹம்மது மஹாத்மாவை என்னவென்று அழைப்பார்? 'காஃபிர்' என்பாரா? அல்லது 'நல்லடியார்' என்பாரா?  மஹாத்மா முஹம்மதுவிடம் தன் அஹிம்சை பற்றி போதனை செய்தால், அதனை முஹம்மது ஏற்பாரா? முஸ்லிம்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்யவேண்டும் என்ற குர்-ஆன் வசனத்தை காந்தி அவர்கள் ஏற்றுக்கொண்டு, தன் அஹிம்சை கொள்கையை  விட்டுவிடுவாரா?

முஸ்லிம்கள் மஹாத்மாவின் இதர கருத்துக்களை பின் பற்ற வாக்குறுதி கொடுத்தால்,  காஃபிர்களாகிய நாங்கள் மஹாத்மாவின் முஹம்மது பற்றிய கருத்து பற்றி சிந்திப்போம்.  
முஹம்மது தன் போதனையின் மூலம் உலக மக்களின் உள்ளங்களை தொட முடியாவில்லை என்பதற்காக, காஃபிர்களின் கருத்துக்கள் மூலம் முஹம்மதுவின் மேன்மையை உயர்த்த முயலுவது வெட்கத்துக்கு உரியது, இதனால்,  அல்லாஹ்விற்கோ முஹம்மதுவிற்கோ எந்த மேன்மையும் இல்லை, இதற்கு பதிலாக அவர்களுக்கு அவமானம் தான் மிஞ்சும் என்பதில் சந்தேகமில்லை.

முடிவுரை:

மஹாத்மாவை மக்கள் மதிக்கிறார்கள், ஆனால், அதற்காக அவருக்கு சம்மந்தமில்லாத விஷயத்தில், இஸ்லாம் பற்றி முழுவதுமாக அறிந்துக்கொள்ளாமல்  அவர் சொன்ன கருத்துக்களை உண்மையென்று நம்ப மக்கள் தயாராக இல்லை.

முஸ்லிம்களே, உங்கள் முஹம்மதுவை உயர்த்த, காஃபிர்களின் கருத்துக்களினால் எந்த ஒரு பயனும் இல்லை.   இதே மஹாத்மா முஹம்மது பற்றி வேறு வகையாக விமர்சனம் செய்து இருந்திருந்தால், அதனை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா? இவர் மஹாத்மா ஆயிற்றே, நம் தேசப்பிதா ஆயிற்றே,  இவர் சொல்வதில் உண்மை இருக்குமே என்றுச் சொல்லி, முஹம்மதுவை புறக்கணித்து விடுவீர்களா? சிந்திப்பீர் செயல்படுவீர்.  முஹம்மதுவை  ஆதரித்து சொல்லப்பட்ட ஒரு கருத்தை நீங்கள் மேற்கோள் காட்டினால், உலகில் முஹம்மதுவிற்கு எதிராக உண்மையைச் சொல்லும் அனேக கருத்துக்களை உலக மக்கள் கேற்கொள் காட்டமுடியும். குர்-ஆனைத் தொட்டு முத்தம் கொடுத்த ஒரு போப்பை நீங்கள் மேற்கோள் காட்டினால், அதே குர்-ஆனை கொண்டு வந்த முஹம்மதுவின் உண்மை நிலையை உலகிற்கு காட்டிய இன்னொரு போப்பை உலகம் உங்களுக்கு அடையாளம் காட்டிவிட்டது என்பதை கவனத்தில் வைக்கவும். 

அடுத்த கட்டுரையில் இதர அறிஞர்களின் கருத்துக்களை ஒவ்வொன்றாக எடுத்து அலசுவோம்.

அடிக்குறிப்புக்கள்:

[1] காஃபிர்கள் பற்றி குர்-ஆன் சொல்லும் சில விவரங்கள்

3:149. நம்பிக்கை கொண்டோரே! காஃபிர்களுக்கு நீங்கள் வழிபட்டு நடந்தால், அவர்கள் உங்களை உங்கள் குதி கால்களின் மீது திருப்பி விடுவார்கள்; அப்போது, நீங்கள் நஷ்டமடைந்தவர்களாக (நம்பிக்கையினின்றும்) திரும்பி விடுவீர்கள்.

2:24. (அப்படி) நீங்கள் செய்யாவிட்டால்-அப்படி செய்ய உங்களால் திண்ணமாக முடியாது- மனிதர்களையும் கற்களையும் எரிபொருளாகக் கொண்ட நரக நெருப்பை அஞ்சிக் கொள்ளுங்கள். (அந்த நெருப்பு, இறைவனையும் அவன் வேதத்தையும் ஏற்க மறுக்கும்) காஃபிர்களுக்காகவே அது சித்தப்படுத்தப்பட்டுள்ளது.

2:98. எவன் அல்லாஹ்வுக்கும், அவனுடைய மலக்குகளுக்கும், அவனுடைய தூதர்களுக்கும், ஜிப்ரீலுக்கும், மீக்காயிலுக்கும் பகைவனாக இருக்கிறானோ, நிச்சயமாக (அவ்வாறு நிராகரிக்கும்) காஃபிர்களுக்கு அல்லாஹ் பகைவனாகவே இருக்கிறான்.

2:104. ஈமான் கொண்டோரே! நீங்கள் (நம் ரஸூலைப் பார்த்து இரண்டு அர்த்தம் கொடுக்கும் சொல்லாகிய) "ராயினா" என்று சொல்லாதீர்கள். (இதற்குப் பதிலாக அன்புடன் நோக்குவீர்களாக என்னும் பொருளைத் தரும் சொல்லாகிய) "உன்ளுர்னா" என்று கூறுங்கள். இன்னும், அவர் சொல்வதைக் கேளுங்கள். மேலும் காஃபிர்களுக்குத் துன்பம் தரும் வேதனையும் உண்டு.

2:161. யார் (இவ்வேத உண்மைகளை) நிராகரிக்கிறார்களோ, இன்னும் (நிராகரிக்கும்) காஃபிர்களாகவே மரித்தும் விடுகிறார்களோ, நிச்சயமாக அவர்கள் மீது, அல்லாஹ்வுடையவும், மலக்குகளுடையவும், மனிதர்கள் அனைவருடையவும் சாபம் உண்டாகும்.

2:254. நம்பிக்கை கொண்டோரே! பேரங்களும், நட்புறவுகளும், பரிந்துரைகளும் இல்லாத அந்த(இறுதித் தீர்ப்பு) நாள் வருவதற்கு முன்னர், நாம் உங்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழிகளில்) செலவு செய்யுங்கள்; இன்னும், காஃபிர்களாக இருக்கின்றார்களே அவர்கள் தாம் அநியாயக்காரர்கள்.

3:32. (நபியே! இன்னும்) நீர் கூறும்: "அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்துநடங்கள்." ஆனால் அவர்கள் புறக்கணித்துத் திரும்பி விடுவார்களானால் - நிச்சயமாக அல்லாஹ் காஃபிர்களை நேசிப்பதில்லை.

3:131. தவிர (நரக) நெருப்பிற்கு அஞ்சுங்கள், அது காஃபிர்களுக்காக சித்தம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
(தமிழாக்கம்: டாக்டர். முஹம்மது ஜான்)



--
5/31/2014 10:46:00 பிற்பகல் அன்று ஈஸா குர்-ஆன் - Isa Koran இல் Isa Koran ஆல் இடுகையிடப்பட்டது


கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர,சகோதரிகளுக்கு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்ளுகிறேன்.
இஸ்லாமிய அறிஞர்கள் பைபிள் திருத்தப்பட்டது என்றும் அதை மாற்றிவிட்டார்கள் என்று ஒரு பக்கம் பிரசங்கம் செய்துகொண்டே இன்னொரு பக்கத்தில் ”பைபிளில் முஹம்மது” என்று புத்தகமும்,டிவிடிகளும் வெளியிடுகிறார்கள்.இது இவர்களின் இரட்டை முகத்தை காட்டிவிடுகிறது.
பைபிளை பொருத்தவரையில் முஹம்மது அவர்களை பற்றி அவர் வேதாகம தேவனால் அனுப்பப்பட்டவர் என்பதற்கான எந்த ஒரு முன்னறிவிப்பு இல்லை என்பதை நாம் தெளிவாக அறிந்துள்ளோம்.ஆனால் கிறிஸ்தவர்களை எப்படியும் ஏமாற்றிவிடலாம் என்ற பகல் கனவில் இதுபோன்ற வேலைகளை இவர்கள் செய்துவருகிறார்கள்.அனால் இவர்களின் இந்த வஞ்சகமான திட்டங்களை ஆண்டவர் தவிடுபொடியாகிவிடுவார் என்பதில் எந்த சதேகமும் இல்லை.
இங்கு கீழே இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் டாக்டர் ஜாகிர் நாயக் என்னும் இஸ்லாமிய அறிஞர் பைபிளில் யோவான் 14 அதிகாரத்தில் சொல்லப்படும் தேற்றரவாளன் என்பது முஹம்மது அவர்களை குறிக்கும் என்று வாதிடுகிறார்.ஆனால் அவர்கள் வாதம் தவறானது என்பதையும் அது பரிசுத்த ஆவியாகிய திரியேகதேவனை குறிக்கும் என்பதையும் நாம் அறிவோம்.அதை வேத வசன ஆதாரத்துடம் நாம் அவர்களுக்கு பதிலளித்துள்ளோம்.இது போன்ற அவர்களின் பல வாதங்களுக்கு நாம் அளித்துள்ள பதில் டிவிடிகளாக வெளிவந்துள்ளது.தேவைப்படுகிறவர்கள் அதனை பெற்றுக்கொள்ளலாம்.ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையும் சமாதானமும் உங்களுக்கு உண்டாவதாக.





source:http://iemtindia.com/?p=1151

எல்லா தீர்க்கதரிசிகளும் சத்தியம் ஆக முடியுமா?

source:http://iemtindia.com/?p=1214

Fwd: [ஈஸா குர்-ஆன் - Isa Koran] முஹம்மதுவும் எலியும்: செத்த எலி நெய்யில் விழ்ந்ததா? (அ) நெய்யில் விழுந்துவிட்டு எலி செத்ததா?


முஹம்மதுவும் எலியும்: செத்த எலி நெய்யில் விழ்ந்ததா? (அ) நெய்யில் விழுந்துவிட்டு எலி செத்ததா?
(ஒரு மனிதரை கண்மூடித்தனமாக பின்பற்றுவதினால் ஏற்படும் விளைவுகள்)

முன்னுரை: 

நான் "முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள்  கருதுவது ஏன்? - 101 காரணங்கள்" என்ற பெயரில் ஒரு கட்டுரையை எழுதியிருந்தேன். இஸ்லாமிய நபி முஹம்மதுவின் ஆரோக்கியமற்ற போதனையை ஆதரித்து ஒரு இஸ்லாமியர் பதில் எழுதியிருந்தார். இந்த கட்டுரையில் முஹம்மதுவின் போதனை எவ்விதத்தில் ஆரோக்கியமற்றது என்பது பற்றியும், அந்த இஸ்லாமியருக்கான பதிலையும் காண்போம். இஸ்லாமின் உண்மை நிலையை அறிந்துக்கொள்ள முஸ்லிம்களுக்கு இந்த விவரங்கள் உதவியாக இருக்கும் என நம்புகிறேன்.

கீழ்கண்ட தலைப்புகளில் நாம் இந்தக் கட்டுரையை பிரித்துப் படிப்போம்:

  1. "முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள்  கருதுவது ஏன்? 101 காரணங்கள்" ஒரு சுருக்கம்.
  2. மிஸ்பா உல் ஹக் என்ற இஸ்லாமிய சகோதரரின் ஆரோக்கியமற்ற பதில்
  3. எலிகள் ஆரோக்கியமானவைகளா? எலிகளினால் உண்டாகும் நோய்கள் எவைகள்? இந்த வியாதிகள் பற்றி அல்லாஹ் முஹம்மதுவிற்கு வஹி அறிவிக்கவில்லையா?
  4. முஹம்மதுவும், நெய்யில் விழுந்த எலியும் – மிஸ்பா உல் ஹக் அவர்களுக்கு உமரின் பதில்
  5. முஹம்மது ஒரு கள்ள நபி என்பதை இன்னொரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது.

--------------------------

1. "முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள்  கருதுவது ஏன்? 101 காரணங்கள்" ஒரு சுருக்கம்.

இஸ்லாமிய நபியாகிய முஹம்மதுவை கிறிஸ்தவர்கள் ஏன் ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று நம்புகிறார்கள் என்பதைப் பற்றி 101 காரணங்களை முன்வைத்து ஒரு கட்டுரையை எழுதியிருந்தேன். ஒவ்வொரு காரணத்திற்கும் குர்-ஆன் வசனங்கள், ஹதீஸ்கள், இஸ்லாமிய சரித்திர நிரூபனங்கள், பைபிள் வசனங்கள் என்று அனேக ஆதாரங்களை முன்வைத்து எழுதியிருந்தேன். இக்கட்டுரையை பத்து பாகங்களாக பதித்தேன். 


இந்த தொடர் கட்டுரைகளின் ஆறாவது பாகத்தில் "நெய்யில் எலி விழுந்துவிட்டால், என்ன செய்வது என்ற கேள்விக்கு முஹம்மது அளித்த பதில்" பற்றி ஒரு கருத்தைச் சொல்லியிருந்தேன்.  நான் முன் வைத்த "கருத்தை"  இங்கு ஒரு முறை படிப்பது இந்த கட்டுரையை சரியாக புரிந்துக்கொள்ள உதவியாக இருக்கும். 

உமர் எழுதியது:

51. நெய்யில் விழுந்த எலி - அல்லாஹ் கொடுத்த வஹி, இறைத்தூதர் கொடுத்த வழி

அக்காலத்து முஸ்லிம்களுக்கு எது ஆரோக்கியம், எது சுகாதாரம் என்ற அடிப்படை அறிவு இல்லை என்றுச் சொல்லத்தோன்றுகிறது.  தேவையில்லாத விஷயத்துக்கெல்லாம் முஹம்மதுவிடம் கேள்வி கேட்டு இருக்கிறார்கள். சரி மக்கள் கேட்கிறார்களே! அவர்களை வெறுமனே அனுப்பக்கூடாது என்பதற்காக எதையாவது சொல்லிவிடுவது முஹம்மதுவின் வழக்கமாக இருந்துள்ளது. நெய்யில் எலி விழுந்துவிட்டால் என்ன செய்வது என்று மக்கள் கேட்க, இதற்கு முஹம்மது "அந்த எலியையும் அதைச் சுற்றியுள்ள நெய்யையும் எடுத்து எறிந்துவிட்டு உங்கள் நெய்யை நீங்கள் சாப்பிடுங்கள்" என்று பதில் சொல்லியுள்ளார். செத்த எலியினால் உண்டாகும் வியாதிகள் என்னவென்று முஹம்மதுவிற்கும் தெரியவில்லை, அவரது இறைவன் அல்லாஹ்விற்கும் தெரியவில்லை. இந்த விஷயம் முஸ்லிம்களுக்கும் தெரியவில்லை. ஒருவேளை எலி உயிரோடு இருந்திருந்தாலும் அது எங்கேயெல்லாம் சுற்றி வந்ததோ! முஹம்மது சாதாரணமாகச் சொன்ன விஷயத்தையும் இறைவாக்கு என்று நம்பி முஸ்லிம்கள் வாழுகிறார்கள். இப்படிப்பட்ட மக்களை உருவாக்கியவர் முஹம்மது ஆவார். அவர் சொல்வதெல்லாம் செய்வதெல்லாம் இறைவன் கொடுத்த செயல் என்று நம்பி முஸ்லிம்கள் வாழுகிறார்கள். இவரை பின்பற்றினால், கிறிஸ்தவர்களும் எலியை எறிந்துவிட்டு, மீதமுள்ள நெய்யை சாப்பிடவேண்டியது தான். தீர்க்கதரிசிகள் என்றால் அவர்களின் ஒவ்வொரு செயலையும், சொல்லையும் நாம் பின்பற்றவேண்டும் என்ற கோட்பாடு மிகவும் தவறானதாகும். பைபிளில் காணப்படும் எந்த ஒரு தீர்க்கதரிசியையும் கிறிஸ்தவர்கள் இப்படி முட்டாள் தனமாக பின்பற்றுவதில்லை. [51]

மேற்கண்ட விவரத்திற்கான ஹதீஸ் ஆதாரங்கள்:

[51] ஸஹீஹ் புகாரி எண்கள் 235 & 236

235. 'நெய்யில் விழுந்துவிட்ட எலியைப் பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டதற்கு, 'அந்த எலியையும் அதைச் சுற்றியுள்ள நெய்யையும் எடுத்து எறிந்துவிட்டு உங்கள் நெய்யை நீங்கள் சாப்பிடுங்கள்'  என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என மைமூனா(ரலி) அறிவித்தார்.  Volume :1 Book :4

236. 'நெய்யில் விழுந்துவிட்ட எலியைப் பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டதற்கு 'அந்த எலியையும் அதைச் சுற்றியுள்ள நெய்யையும் எடுத்தெறிந்துவிட்டு உங்கள் நெய்யை நீங்கள் சாப்பிடுங்கள்'  என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என மைமூனா(ரலி) அறிவித்தார்.  Volume :1 Book :4

2. மிஸ்பா உல் ஹக் என்ற இஸ்லாமிய சகோதரரின் ஆரோக்கியமற்ற பதில்

என் கட்டுரையில் 101 காரணங்களை நான் முன்வைத்து இருந்தேன், அவைகளில் ஒரு காரணத்தை எடுத்துக்கொண்டு, முஹம்மது சொன்ன பதில் சரியானதுதான், அது ஆரோக்கியமானது தான் என்ற முறையில் மிஸ்பா உல் ஹக் என்ற இஸ்லாமியர் பதில் அளித்துள்ளார். முஸ்லிம்கள் எப்படியெல்லாம் முஹம்மதுவை கண்மூடித்தனமாக நம்புகிறார்கள் என்பதற்கு இவரின் இந்த பதில் ஒரு நிரூபனமாகும். இப்போது மிஸ்பா உல் ஹக் அவர்கள் எழுதிய பதிலை படிப்போம். அதன் பிறகு நாம் அவரின் வரிகளில் உள்ள ஆரோக்கியத்தை சிறிது தொட்டுப்பார்ப்போம்.  வாசகர்கள் கவனமாக அவரது வரிகளை படிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

//நெய்யில் விழுந்த எலியும் நபியும்...!!

இஸ்லாமிய அவதூறு இணையங்களில் இன்று இஸ்லாத்தை இழிவு படுத்தும் விதமாக பல செய்திகள் பரப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் இஸ்லாத்தை பிழையென நிரூபிக்க பரப்பப்பட்டிருக்கொண்டிருக்கு ஒரு நபி மொழிதான் "நெய்யில் விழுந்த எலி பற்றி நபி ஸல் அவர்களிடம் கேட்க,அந்த எலியையும் அதைச் சுற்றியுள்ள நெய்யையும் எடுத்தெறிந்து விட்டு உங்கள் நெய்யை நீங்கள் சாப்பிடுங்கள்-ஸஹீஹ் புகாரி 235&236"

உண்மையில் இந்த ஹதீஸ் இஸ்லாத்தை கிஞ்சித்தும் இழிவுபடுத்தவில்லை மாறாய் இஸ்லாம் உண்மையான மார்க்கம் என மேலும் மேலும் ஆணித்தரமாக நிரூபிக்கிறது.

ஏனெனில் எலி ஓர் திண்மம் மேலும் நெய்யும் ஒரு திண்மம் திண்மத்திற்கும் திண்மத்திற்கும் இடையே பரவுகை நிகழாது என்பது சிறு பிள்ளைக்கும் தெரியும்.அந்த வகையில் எலியின் எந்த விளைவும் நெய்யில் தாக்க வாய்ப்பில்லை. எனினும் எலி பட்ட இடத்திலும் அதனைச் சுற்றியுள்ள இடங்களிலும் அதன் கிருமி தாக்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அதனைச் சுற்றியுள்ள பகுதியும் அகற்றப்படுவதன் வாயிலாக எது வித பிரச்சினையும் ஏற்படப்போவதில்லை. எனவே கிஞ்சும் மனித ஆரோக்கியம் கெட்டு விட வாய்பில்லை.

வசதி படைத்தோருக்கு எலி விழுந்தவுடன் அதை கொட்டி விடு வது பெரிய காரியமல்ல.
அன்றாடம் சாப்பிட வசதி இல்லாதோரையும் கவனித் கொண்டே நபியவர்கள் தீர்வு வழங்க வேண்டும். அந்த வகையில் நபியவர்கள் ஏழைகளையும் கருத்திற்கொண்டு விஞ்ஞான ரீதியாக எதுவித பாதிப்பும் ஏற்படாத வகையிலே இந்த ஹதீதில் கூறியுள்ளார் என்பதை அறிய முடியும்.

எனவே, இஸ்லாமே சத்திய மார்க்கம் 
பிழைபிடிக்க விளைபவர் மூக்குடைந்து வெளியேறுவார் என்பதே உண்மை.


3. எலிகள் ஆரோக்கியமானவைகளா? எலிகளினால் உண்டாகும் நோய்கள் எவைகள்? இந்த வியாதிகள் பற்றி அல்லாஹ் முஹம்மதுவிற்கு வஹி அறிவிக்கவில்லையா?

சகோதரர் மிஸ்பா உல் ஹக் அவர்களுக்கு பதிலை தருவதற்கு முன்பாக, எலிகளில் ஆரோக்கியமானவைகளா? அவைகளினால் உண்டாகும் நோய்கள் எவைகள்? அவைகளுக்கு மருந்துகள் உண்டா? போன்ற விவரங்களை சுருக்கமாக காண்போம். அப்போது தன் சகோதரர் மிஸ்பா உல் ஹக் கொடுத்த பதில் எவ்வளவு ஆரோக்கியமற்றதாக இருக்கிறது என்பதையும், முஹம்மதுவின் ஏழாம் நூற்றாண்டு மருத்துவம் அல்லது அல்லாஹ் கொடுத்த வஹி எப்படி அறிவியலுக்கு எதிரானது என்பதையும் அறியமுடியும்.

அ) கொசுக்களுக்கு அடுத்தபடியாக அதிகமாக வியாதிகளை பரப்புவது 'எலிகள்' தான்

கொசுக்களுக்கு அடுத்தபடியாக, மனிதர்களுக்கு வியாதிகளை பரப்புவதில் எலிகள் இரண்டாம் இடத்தில் உள்ளது.  இதனை ஹுமன் சொசைட்டி என்ற தளம் அறிவிக்கிறது. இந்த நிறுவனம் மிருகங்களின் பாதுகாப்பிற்கு முக்கியத்தும் கொடுத்து செயல்படும் தொண்டு நிறுவனமாகும் (இக்கட்டுரையின் அடிக்குறிப்பில் இந்த தளம் பற்றிய தொடுப்பு கொடுக்கப்பட்டுள்ளது, வாசகர்கள் மேலதிக விவரங்களுக்கு  இந்த தளத்தை பார்வையிடவும்[1]).

ஆகையால், கொசுக்களினால் உண்டாகும் நோய்களைப்போல எலிகளினாலும் மனிதர்களுக்கு நோய்கள் வருகின்றது. இது மிகவும் ஆபத்தானதாகும். எலிகள் பற்றிய இப்படிப்பட்ட விஷயம் ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு சாதாரண மனிதருக்கு (முஹம்மதுவிற்கு) தெரிய வாய்ப்பு இல்லையென்பது உண்மை தான், ஆனால் அவருக்கு இறைவனாக இருந்த அல்லாஹ்விற்கு தெரிந்திருக்கவேண்டுமே! அற்பமான காரியங்களுக்கெல்லாம் காபிரியேல் தூதனை அனுப்பி முஹம்மதுவிற்கு வெளிப்பாடுகளை அள்ளிவீசிய அல்லாஹ், இந்த ஆரோக்கியமற்ற கருத்தை முஹம்மது சொல்லும்போது, ஏன் அவருக்கு உண்மையைச் சொல்லவில்லை? முஸ்லிம்களே சிந்தியுங்கள்.

ஆ) கடைகளில் வாங்கி வீட்டில் வளர்க்கப்படும் எலிகள் மற்றும் சாதாரண எலிகள்

சிலர் எலிகளை கடைகளில் வாங்கி, வீட்டில் செல்லப்பிராணிகளாக வளர்க்கிறார்கள்.  நம் நாட்டில் எலிகளை செல்லப்பிராணிகளாக வீட்டில் வளர்ப்பது என்பது குறைவு என்றேச் சொல்லவேண்டும், ஆனால் வெளிநாடுகளில் அனேகர் இப்படி செய்கிறார்கள். இப்படி கடைகளில் வாங்கி வளர்க்கும் எலிகளினாலும் ஆபத்து உண்டு, எனவே, அவைகளுக்கு அவ்வப்போது ஊசிகள் போட்டு, ஆரோக்கியமான சூழலில் வளர்த்தால்,  ஆபத்து குறையலாம், ஆனால் முழுவதுமாக ஆபத்து இல்லை என்றுச் சொல்லமுடியாது [2].  

ஆனால், நம் வீடுகளில் தானாக வசிக்கும் எலிகளுக்கு இப்படிப்பட்ட தடுப்பு ஊசிகள் போடுவதில்லை, அவைகள் காட்டு எலிகளாக இருக்கின்றன. அவைகள் சாக்கடைகளிலும், இதர ஆரோக்கியமற்ற இடங்களில் சுற்றிக்கொண்டும் இருக்கும். இப்படிப்பட்ட எலிகளினால் மனிதர்களுக்கு அதிக ஆபத்து உண்டு [2]. முஹம்மதுவின் போதனையில் காணப்படும் எலி இப்படிப்பட்ட எலியாகும், கடைகளில் விற்கப்படும் எலிகள் அல்ல.  ஆரோக்கியமற்ற இடங்களில் வாழும் இந்த எலிகளினால், அதிக ஆபத்து வரும், இதனை முஹம்மது அறியவில்லை என்பதில் ஆச்சரியமில்லை, ஆனால், சர்வத்தையும் அறிந்த அல்லாஹ்விற்குமா இது தெரியவில்லை? என்பதைத் தான் முஸ்லிம்கள் சிந்திக்கவேண்டும்.

இ) எலிகளினால் உண்டாகும் நோய்கள்

எலிகளின் சிறுநீர், மலம் மற்றும் எலிக்கடியினால் அனேக ஆபத்தான நோய்கள் பரவுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் இவைகளினால் பல்லாயிரக்கணக்கான மக்கள் உலக முழுவதும் அவதிப்படுகின்றார்கள். இவைகளில் சில வியாதிகள் மனிதர்களின் உயிரை குடித்துவிடும்.

கீழ்கண்ட பட்டியல் எலிகளினால் உண்டாக்கும் வியாதிகளின் பெயர்களாகும்:
Leptospirosis
Salmonellosis
Rat-Bite Fever
Plague 
Hantavirus
Bubonic Plague
Salmonellosis 

மேற்கண்ட நோய்களில் "ஹண்டா வைரஸ்" என்ற நோய் மிகவும் ஆபத்தாது. எலிகளின் சிறுநீர் மற்றும் மலம் போன்றவற்றினால் இது உண்டாகிறது. எலிகள் நம்முடைய உணவுகளை சாப்பிடும்போது, அங்கேயே சிறுநீர், மலம் கழித்துவிடுகின்றது. எலிகளின் உடலில் காணப்படும் ரோமங்களூம் ஆபத்தானவையாகும்.  ஐரோப்பிய நாடுகளில் மத்திய காலக்கட்டத்தில் மூன்றில் ஒரு பாக ஜனத்தொகை மக்கள் கருப்பு மரணம் (Black Death) என்ற நோயினால் மரணித்தார்களாம் (பார்க்க விக்கிபீடியா லின்க்). இதைப் பற்றிய மூன்று நிமிட (2.49) யூடியூப் வீடியோவை பாருங்கள்.  


சில வியாதிகளுக்கு மருந்துகளே இல்லை.  
மூலம்: அடிக்குறிப்பில் தரப்பட்ட தொடுப்புக்களை பார்க்கவும் ([3] லிருந்து [13] வரை)

இதுவரை எலிகளினால் வரும் நோய்கள் பற்றி சுருக்கமாக கண்டோம். மேலதிக விரங்களுக்கு கொடுக்கப்பட்ட தொடுப்புக்களை சொடுக்கி படிக்கவும்.
இப்படிப்பட்ட வியாதிகள் எலிகளினால் உண்டாகும் என்று பாவம் முஹம்மதுவிற்கு தெரியாது. அதனால், ஏதோ தனக்கு தெரிந்த பதிலைக்  கொடுத்தார். ஆனால், முஹம்மதுவின் ஒவ்வொரு சொல்லையும் வேதவாக்காக கருதும் முஸ்லிம்கள், ஏமாற்றப்பட்டவர்களாக இருக்கின்றபடியால், அவர்கள் மீது பரிதாபம் கொள்வதைத் தவிர வேறு என்னத் தான் செய்யமுடியும்? ஒன்று செய்யலாம், அவர்கள் மத்தியிலே ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வை கொண்டுவரலாம்.

4. முஹம்மதுவும், நெய்யில் விழுந்த எலியும் – மிஸ்பா உல் ஹக் அவர்களுக்கு உமரின் பதில்

இதுவரை படித்த விவரங்களின்படி பார்த்தால், மிஸ்பா உல் ஹக் போன்ற முஸ்லிம்கள் எப்படி மூளைச் சலவை செய்யப்பட்டுள்ளார்கள் என்பதை அறியமுடியும். 21ம் நூற்றாண்டில் வாழ்ந்துக்கொண்டு இருக்கும் நாம், 7ம் நூற்றாண்டில் போதிக்கப்பட்ட அறிவியலுக்கு முரணான விவரங்களை அப்படியே நம்புவது என்பது வெட்கத்துக்கு உரியது. மேலும், ஒரு படி மேலே சென்று,  இப்படிப்பட்ட போதனைகளைச் செய்த முஹம்மதுவிற்கு வக்காளத்து வாங்குவதும்,  அவரது எலியும் நெய்யும் என்ற போதனையினால் ஆபத்து வராது என்றுச் சொல்வதும் மனித சமுதாயத்தை முட்டாள்களாக்கும் செயல்களாகும். 

இப்போது மிஸ்பா உல் ஹக் என்பரின் வரிகளுக்கு பதிலைக்காண்போம்.

மிஸ்பா உல் ஹக் எழுதியது:

//உண்மையில் இந்த ஹதீஸ் இஸ்லாத்தை கிஞ்சித்தும் இழிவுபடுத்தவில்லை மாறாய் இஸ்லாம் உண்மையான மார்க்கம் என மேலும் மேலும் ஆணித்தரமாக நிரூபிக்கிறது.//

உமரின் பதில்:

தற்காலத்தில் முஸ்லிம்களுக்கே உரித்தான பஞ்ச் டையலாக் ஒன்று இருக்கிறது. அது என்னவென்றால்,  "இஸ்லாமிலே அல்லது குர்-ஆனிலே ஏதாவது ஒரு பிழையை / குறையை மக்கள் முன்வைத்தால், அந்தக் குற்றச்சாட்டு தான் இஸ்லாமை உண்மையான மார்க்கம் என்று ஆணித்தரமாக நிரூபிக்கிறது" என்றுச் சொல்வதாகும். 

இப்படி சொல்லிவிட்டு, ஒரு சப்பைக் கட்டு  பதிலை வாய்கூசாமல் முஸ்லிம்கள் சொல்வார்கள். இதனைத் தான் இந்த சகோதரரும் செய்துள்ளார். பீ ஜைனுல் ஆபீதீன்  போன்ற அறிஞர்கள் முதற்கொண்டு சாதாரண முஸ்லிம்கள் வரை இதே மந்திரத்தை சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்.

மிஸ்பா உல் ஹக் எழுதியது:

//ஏனெனில் எலி ஓர் திண்மம் மேலும் நெய்யும் ஒரு திண்மம் திண்மத்திற்கும் திண்மத்திற்கும் இடையே பரவுகை நிகழாது என்பது சிறு பிள்ளைக்கும் தெரியும்.அந்த வகையில் எலியின் எந்த விளைவும் நெய்யில் தாக்க வாய்ப்பில்லை. எனினும் எலி பட்ட இடத்திலும் அதனைச் சுற்றியுள்ள இடங்களிலும் அதன் கிருமி தாக்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அதனைச் சுற்றியுள்ள பகுதியும் அகற்றப்படுவதன் வாயிலாக எது வித பிரச்சினையும் ஏற்படப்போவதில்லை. எனவே கிஞ்சும் மனித ஆரோக்கியம் கெட்டு விட வாய்பில்லை.//


உமரின் பதில்:

முதலாவது நான் மிஸ்பா அவர்களிடம் கேட்க விரும்பும் கேள்வி என்னவென்றால், இவர் ஒரு முறையாவது "நெய்யை பார்த்து இருக்கிறாரா?" என்பதாகும்.  முஸ்லிம்களின் எழுத்துக்களையும், பேச்சுக்களையும் நாம் கேட்கும்போது, ஒரு அரசியல் கட்சியின் விளக்க கூட்டங்களில் கலந்துக்கொள்வது போல ஒரு எண்ணம் தோன்றும். அதாவது, கட்சித்தலைவர்கள் பேசும் போது, அவைகளை கேட்கும் நாம் "உண்மையாகவே இந்த கட்சிக்குத் தான் ஓட்டு போடவேண்டும்" என்று எண்ணத்தோன்றும். அதன் பிறகு "வேறு ஒரு கட்சியின் கூட்டத்தில் பங்குபெற்று அவர்களின் பேச்சுக்களைக் கேட்கும் போது" அவர்கள் சொல்வதும் உண்மை என்று எண்ணத்தோன்றும். அது போல, மிஸ்பா உல் ஹக் அவர்களின் மேற்கண்ட ஒரு பத்தியை முதன் முறையில் படிப்பவர்கள், "ஆம் இவர் சொல்வது உண்மைத்தான்" என்று எண்ணுவார்கள். ஆனால், பல முறை படிக்கும்போது, உண்மை எது? பொய் எது? என்பதையும், ஒரே பத்தியில் அவர் சொன்ன முரண்பாட்டையும் காணமுடியும். மேற்கண்ட அவரது வரிகளை இன்னொரு முறை படித்துக்கொள்ளுங்கள்.
மிஸ்பா நெய்யை பார்த்திருக்கிறாரா?

முதலாவதாக, நெய் ஒரு திண்மம் என்று இவர் சொல்கிறார். இவர் நெய்யை கண்டதுண்டா? என்ற கேள்வி எழுகின்றது. நெய்யை தயாரித்த பிறகு அது ஒரு திரவப்பொருளாக இருக்கும். சமையல் எண்ணையைபோல அது காணப்படும். அதனை நாம் ஒரு பாத்திரத்தில் அல்லது பாட்டில்களில் பாதுகாப்பாக வைத்தால், அறையின் உஷ்ண நிலையைப் பொறுத்து அது மாற்றமடையும்.  உஷ்ண நிலை குறையும் போது, அல்லது குளிர் காலங்களில் அது திடப்பொருளாக (100% திடப்போருளாக அல்ல) மாற்றமடையும். மேலும், இந்த நிலையிலும் அதனை நாம் 100% திடப்பொருள் என்றுச் சொல்லமுடியாது.  நெய் திரவ நிலையில் இருப்பதை மிஸ்பா உல் ஹக் அவர்கள் இதுவரை பார்க்கவில்லையோ என்ற சந்தேகம் எழுகின்றது. 

இரண்டாவதாக,  எலியும் ஒரு திண்மம் (திடப்பொருள்) என்று இவர் சொல்கிறார். முஸ்லிம்கள் எப்படியெல்லாம் நம் காதில் பூ சுத்துகிறார்கள் என்பதைப் பாருங்கள்! இன்னொரு கேள்வியை நான் மிஸ்பா அவர்களிடம் கேட்கவேண்டும் "மிஸ்பா அவர்களே, நீங்கள் ஒரு திடப்பொருளா? அல்லது "திரவமும், திடமும்" உள்ள ஒரு நபரா"?  
எலி என்பது கல் போன்ற ஒரு திடப்பொருள் அல்ல, மேலும் மேலே நாம் கண்டதுப் போல, எலியின் சிறுநீரினால் அனேக வியாதிகள் வருகின்றன.  மிஸ்பா போன்ற இஸ்லாமியர்கள் "இப்படியெல்லாம் எப்படி சிந்திக்கிறார்கள்?" என்று எண்ணத்தோன்றுகிறது.  இவர்களின் இந்த சிந்தனைகளை ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபடுத்தினால்,  உலகத்திற்கு அனேக பில்கேட்ஸ்கள், டாட்டா பிர்ளாக்கள்,  அப்துல் கலாம்கள் கிடைப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.  

"திண்மத்திற்கும் திண்மத்திற்கும் இடையே பரவுகை நிகழாது என்பது சிறு பிள்ளைக்கும் தெரியும்" இது இவரின் இன்னொரு பஞ்ச் டையலாக். ஆனால், உண்மையென்னவென்றால், (செத்த) எலி ஒரு திடப்பொருளா? நெய் என்பது ஒரு திடப்பொருளா? என்பதாகும். முஸ்லிம்கள் தங்கள் வீடுகளில் உள்ள சமையல் அறைகளுக்குச் சென்று, நெய்யை ஒருமுறை பார்த்து வரும்படி கேட்டுக்கொள்கிறேன். குளிர் சாதப்பெட்டியில் வைத்திருக்கும் நெய்யைக் கண்டு "பார்த்தீர்களா? இது ஒரு திடப்பொருள் என்று யாராவது சொல்ல முயன்றால்", முஹம்மதுவின் காலத்தில் மக்கள் எந்த கம்பனி பிரிட்ஜை (குளிர் சாதனப்பெட்டியை) பயன்படுத்தினார்கள் என்று நமக்குச் சொல்லட்டும். ஒருவேளை, குளிர் சாதனப்பெட்டியிலிருந்து எடுத்த நெய்யாக இருந்தாலும், அல்லது குளிர் காலங்களில் சமையல் அறைகளில் உள்ள நெய் திடமாக இருந்தாலும், செத்த எலியிலிருந்து வெளிப்படும் கிருமிகள் அதில் பரவாது என்று அவர்கள் நிரூபிக்கவேண்டும். 

மிஸ்பாவின் முன்னுக்குப் பின் முரண்பாட்டான விஷயங்கள்:

இஸ்லாமிய அறிஞர்களின் பேச்சுக்கள், எழுத்துக்கள் இதர முஸ்லிம்களுக்கு வேத வாக்காக காணப்பட்டாலும், இஸ்லாமியரல்லாதவர்களுக்கு அவைகள் நகைப்பிற்கு உரியதாக காணப்படுகின்றது.  முதல் சில வரிகளில் மிஸ்பா அவர்கள் "திண்மத்திற்கும் திண்மத்திற்கும் இடையே பரவுகை நிகழாது என்பது சிறு பிள்ளைக்கும் தெரியும்" என்றுச் சொன்னார். ஆனால்,அடுத்த வரியில் அவர் எப்படி முரண்படுகின்றார் என்பதைப் பாருங்கள்: 

"எனினும் எலி பட்ட இடத்திலும் அதனைச் சுற்றியுள்ள இடங்களிலும் அதன் கிருமி தாக்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது"

"எனினும்" என்ற வார்த்தையோடு ஆரம்பித்து, "எலி பட்ட இடத்திலும்,அதைச் சுற்றியுள்ள இடங்களிலும் கிருமி தாக்கங்கள் ஏற்படவாய்ப்பு உள்ளது" என்கிறார். ஒரே பத்தியில் எப்படி முரண்படுகிறார் என்பதைக் கவனிக்கவும்.  இவரின் இந்த வரிகளினால்,  இவருக்கு சின்ன பிள்ளைகளுக்கு   இருக்கும் பொதுஅறிவு கூட இல்லை என்று நாம் சொல்லலாமா? முதல் வரியில் "தாக்கம் உண்டாகாது" என்றுச் சொல்லிவிட்டு, இரண்டாவது வரியில் "ஆம் கிருமி தாக்கங்கள் உண்டாக வாய்ப்பு உள்ளது" என்றுச் சொல்வது எவ்வளவு பெரிய ஏமாற்றுவேலை என்று பார்த்தீர்களா?  

மிஸ்பா அவர்களுக்கு அடுத்த கேள்வி: "எலிக்கும் நெய்க்கும் இடையே கிருமி தாக்கம் ஏற்படுமா? அல்லது ஏற்படாதா?" நீங்கள் சொல்வது எப்படி உள்ளதென்றால், "கிருமி தாக்கம் ஏற்படும், ஆனால்… ஏற்படாது" என்றுச் சொல்வது போல இருக்கிறது. முஸ்லிம்களே, நீங்கள் எழுதும் வரிகளுக்கிடையில் காணப்படும் முரண்பாடுகளை காணமுடியாத அளவிற்கு, இதர மக்கள் ஒன்றும் அறியாமையில் உள்ளவர்கள் அல்ல.

கிருமி தாக்கம் எவ்வளவு தூரம்வரை  இருக்கும்?

மிஸ்பா அவர்கள் மேலும் சில வரிகளை இப்படியாக கூறுகிறார்:
//"எனவே அதனைச் சுற்றியுள்ள பகுதியும் அகற்றப்படுவதன் வாயிலாக எது வித பிரச்சினையும் ஏற்படப்போவதில்லை. எனவே கிஞ்சும் மனித ஆரோக்கியம் கெட்டு விட வாய்பில்லை"//

கிருமி தாக்கம் இருந்தால், அது எவ்வளவு தூரம் இருக்கும்? எலியைச் சுற்றி ஒரு சென்டிமீட்டர் தூரம் வரை கிருமி தாக்கம் இருக்குமா? அல்லது இரண்டு சென்டிமீட்டர்? மூன்று சென்டிமீட்டர் வரை கிருமி தாக்கம் இருக்குமா? ஏன் அந்த கிருமி தாக்கம் முழு பாத்திரத்தில் உள்ள நெய் முழுவதையும் தாக்கமுடியாது? இதற்கு முஹம்மதுவும் பதில் தரவில்லை, மிஸ்பா அவர்களும் பதில் தரவில்லை.  இதுமட்டுமல்ல, இன்னும் முஹம்மதுவின் போதனை என்ன பாடு படப்போகிறது என்பதை இப்போது காண்போம்.

நெய்யில் செத்த எலி விழ்ந்ததா? (அ) நெய்யில் விழுந்துவிட்டு எலி செத்ததா?

மிஸ்பா அவர்கள் சொல்கிறார்: "எலியைச் சுற்றியுள்ள நெய்யை எடுத்துவிட்டு, மீதமுள்ள நெய்யை சாப்பிட்டால் எந்த ஒரு ஆரோக்கிய குறைபாடும் ஏற்படாதாம்". எவ்வளவு தூரம் கிருமியின் தாக்கம் இருக்கும் என்ற கேள்விக்கு இவர்களிடம் பதில் இல்லை. அடுத்தபடியாக முக்கியமான கேள்வி என்னவென்றால், 

நெய்யில் எலி விழும் போது உயிரோடு இருந்ததா? அல்லது 
ஏற்கனவே செத்துபோய் இருந்த எலி நெய்யில் விழுந்ததா?

இதில் எதனை நாம் தெரிந்தெடுத்தாலும், முஹம்மது ஒரு கள்ள நபி என்பது, அதன் மூலம் நிரூபனமாகிவிடும். 

அ) நெய்யில் எலி விழும்போது உயிரோடு இருந்தது: 

ஒருவேளை முஸ்லிம்கள் இந்த பதிலைக்கொடுத்தால், உயிரோடு இருக்கும் எலி எப்படி நெய்யில் விழுந்து மரிக்கமுடியும்? சகோதரர் மிஸ்பா அவர்களின் விளக்கத்தின் படி , நெய் ஒரு திண்மமாயிற்றே, இதில் உயிரோடு இருக்கும் எலி விழுந்தால் எப்படி மரிக்கும்? திடப்பொருளாக இருக்கும் நெய்யிலிருந்து சிறிய முயற்சியின் மூலம் எலி தப்பித்துச் செல்லுமே! ஒருவேளை நெய் சூடாக பாத்திரத்தில் இருக்கும் போது, எலி விழுந்தால், அது மரித்துவிடும், மட்டுமல்ல, நன்றாக பொறிக்கப்பட்ட சிக்கன் போல, (கபாப் போல) மாறிவிடும். இதுமட்டுமல்ல பாத்திரம் முழுவதிலும் இருக்கும் நெய்யில் எலியானது விழுந்த சில வினாடிகள் துள்ளும், தப்பிக்க முயலும், கடைசியாக மரித்துவிடும். இந்த நிலையில், பாத்திரம் முழுவதிலும் உள்ள நெய் கெட்டுவிடும், அதாவது ஆரோக்கியமற்றதாகிவிடும். எலியின் ரோமங்கள் நெய் முழுவதிலும் தெரித்துவிடும். இதில் இன்னொரு சிக்கல் என்னவென்றால், எலியின் சிறுநீர், மலம் என்றுச்சொல்லி,  வயிற்றிலிருக்கும் அனேக விஷயங்கள் நெய்யில் பரவ ஆரம்பித்துவிடும். இந்த நிலையில், பாத்திரம் முழுவதிலும் இருக்கும் நெய் ஆபத்தானதாகி விடும். எலியைச் சுற்றியுள்ள நெய்யை எடுத்துவிட்டாலும், மீதமுள்ள நெய் கூட ஆரோக்கியமற்றதே.  இதுமட்டுமா, நெய்யில் எலி விழுந்து செத்ததை உடனே பார்க்காமல், பல மணி நேரத்திற்கு பிறகு பார்த்தால், முழு நெய்யும் எலியின் விஷக் கிருமிகளினால் கெட்டுவிடும். இப்போது அந்த பாத்திரத்தில் உள்ள செத்த எலியையும், அதைச் சுற்றியுள்ள நெய்யையும் எடுப்பதினால் ஒரு பிரயோஜனமும் இல்லை.  முஸ்லிம்களே உங்களுக்கு புரிகின்றதா? 

ஆக, முஸ்லிம்களின் முதல் தெரிவு, முஹம்மதுவைக் காப்பாற்றவில்லை, அவர் ஒரு கள்ளத் தீர்க்கதரிசி என்று அடித்துச் சொல்கிறது. 

ஆ) செத்த எலி தான் நெய்யில் விழுந்தது:

ஒருவேளை செத்த எலி தான் நெய்யில் விழுந்தது என்று முஸ்லிம்கள் கூறினால், அதிலும் பிரச்சனை உள்ளது. அது என்னவென்றால், செத்த எலியிலிருந்து தீய நச்சு வாயுக்கள் வெளிப்படும். எலி செத்து எத்தனை நாட்கள் அல்லது எத்தனை மணி ஆனதோ தெரியாது, எனவே, அந்த எலியிலிருந்து வெளியே வரும் துர்நாற்றம், செத்துப்போன செல்கள் என்று அனேக நச்சு வாயுங்கள் நெய்யை கெடுத்துவிடும், அதை ஆரோக்கியமற்றதாக்கி விடும். 

எலி செத்துவிட்டபிறகு நெய்யில் விழுந்திருந்தாலும் ஆபத்து, நெய்யில் விழுந்து செத்தாலும் ஆபத்து தான். ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு மனிதன், தனக்கு தெரிந்த "பொதுஅறிவைப்" பயன்படுத்திச் சொன்ன விஷயத்தை ஒரு மார்க்கத்தின் வழிகாட்டியாக நினைப்பது, மடமையாகும். முஹம்மது சொன்னார் என்பதற்காக அனைத்தையும் கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்வது அறிவுடமையாகாது. 

முஹம்மது கூறிய அந்த ஹதீஸினால் அனேக பிரச்சனைகள் எழுகின்றன. அவர் மேலதிக விவரங்களைச் சொல்லாமல், மொட்டையாகச் சொன்னதை, இந்த 21ம் நூற்றாண்டிலும் நாங்கள் கண்மூடித்தனமாக பின்பற்றுவோம் என்றுச் சொல்லும் மார்க்கம் எப்படி உலக மார்க்கமாக இருக்கமுடியும்? அதனைக் கொண்டுவந்தவர் எப்படி ஒரு தீர்க்கதரிசியாக இருக்கமுடியும்?

இ) ஒரு பானை நெய்யிற்காக, ஒரு பரம்பரையை அழிக்கமுடியுமா?

திரு மிஸ்பா அவர்கள், ஏழைகளைக் கருத்தில் கொண்டு முஹம்மது இப்படிச் சொன்னார் என்ற கருத்தை முன்வைக்கிறார். அதனை படியுங்கள்:

//வசதி படைத்தோருக்கு எலி விழுந்தவுடன் அதை கொட்டி விடு வது பெரிய காரியமல்ல.
அன்றாடம் சாப்பிட வசதி இல்லாதோரையும் கவனித் கொண்டே நபியவர்கள் தீர்வு வழங்க வேண்டும். அந்த வகையில் நபியவர்கள் ஏழைகளையும் கருத்திற்கொண்டு விஞ்ஞான ரீதியாக எதுவித பாதிப்பும் ஏற்படாத வகையிலே இந்த ஹதீதில் கூறியுள்ளார் என்பதை அறிய முடியும்.//

ஒரு பானை நெய்யிற்காக, பல உயிர்களை பலியிடமுடியுமா? இது விஞ்ஞானமா? வாசகர்களே சிந்தியுங்கள். 

பத்து ரூபாய் வீணாகிவிடுமே என்பதற்காக, ஆரோக்கியமற்ற நெய்யை சாப்பிடச்சொல்வது சரியானதா? ஒருவேளை சோறு சாப்பிடவில்லையானால் பரவாயில்லை, அடுத்தவேளை உழைத்துச் சாப்பிடுவான். அதை விட்டுவிட்டு, அவனை ஒரே அடியாக சாகும்படி அறிவுரை கூறுவது வஹியா? இது தான் தீர்ப்பா? ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு இதுவரை அனேக கேள்விகளை நான் வைத்துள்ளேன், இப்படிபட்ட கேள்விகள் பாமர மக்களுக்கு வராது, நாகரீகமற்ற சமுதாயத்தில் வாழும் மக்களுக்கும், படிப்பறிவற்ற மக்களுக்கும் அறிவுரைச் சொல்லும் போது, எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்ற அடிப்படை ஞானம் கூடவா முஹம்மதுவிற்கு இல்லாமல் போனது? மிஸ்பா அவர்களே, மக்களை முட்டாள்களாக்கியது போதும், இனியும் உங்கள் பொய்கள் செல்லுபடியாகாது. 

5. முஹம்மது ஒரு கள்ள நபி என்பதை இன்னொரு முறை நிருபிக்கப்பட்டுள்ளது.

தவளை தன் வாயால் கெடும் என்றுச் சொல்வார்கள், அதுபோல முஸ்லிம்கள் தங்கள் வாயினால் இஸ்லாமின் உண்மை நிலையை மக்கள் அறியும்படி செய்கிறார்கள். முஹம்மது ஒரு கள்ள நபி என்று ஏன் கிறிஸ்தவர்கள் கருதுகிறார்கள் என்ற தலைப்பில் முன்வைத்த 101 தலைப்புகளில் ஒரு தலைப்பை தொட்டதாலேயே இவ்வளவு பெரிய விளக்கம் அளிக்கவேண்டி வந்தது. இஸ்லாமின் அஸ்திபாரம் ஆட்டம் காண்கிறது.  இந்த கட்டுரையில் கேட்கப்பட்ட கேள்விகளை மக்கள் முஸ்லிம்களிடம் கேட்டால், அவர்கள் என்ன பதில் சொல்வார்கள்? 

பீஜே அவர்களும் பொய்யென்று அவர் கருதும்  ஹதீஸ்களும்:

ஒரு வேளை இந்த கட்டுரையை படித்துவிட்டு, பீஜே அவர்கள், மேற்கண்ட ஹதீஸ் என்பது ஒரு பொய்யான ஹதீஸ் ஆகும். இது விஞ்ஞானத்தோடு மோதுகிறது என்ற காரணம் காட்டி, அதனை வருங்காலங்களில் மறுத்தாலும் ஆச்சரியப்படத்தேவையில்லை.  இப்படி அவர் செய்வாரானால், அவரிடம் நாம் சொல்வது என்னவென்றால், இன்னும் அனேக ஹதீஸ்களை மறுக்க நீங்கள் உங்களை தயாராக்கிக்கொள்ளுங்கள் என்பதாகும். 

ஆட்டுத்தோலை போர்த்துக்கொண்ட ஓநாய்கள்:

ஓ கிறிஸ்தவர்களே! எச்சரிக்கையாக இருங்கள், ஆட்டுத்தோலை போர்த்துக்கொண்ட ஓநாய்கள் வரும் என்று இயேசு எச்சரித்த கள்ளத் தீர்க்கதரிசி முஹம்மது ஆவார். பிதாவையும் குமாரனையும் சிலுவையையும், உயிர்த்தெழுதலையும் மறுதலிப்பவனே பொய்யன், அவனே கள்ள உபதேசக்காரன் ஆவான். முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்பதற்கு இதைவிட வேறு ஒரு காரணம் நமக்குத் தேவையில்லை. 

முஸ்லிம்களே, சத்தியத்தை அறிந்துக்கொள்ளுங்கள்:

ஓ முஸ்லிம்களே, சிந்தியுங்கள். இது சின்ன விஷயம் தானே, வெறும் எலி பற்றிய விஷயம் தானே என்று நினைக்கவேண்டாம். முஹம்மதுவின் மீது வைக்கும் நம்பிக்கை, உங்கள் நித்திய வாழ்வை நிர்ணயிக்கும் என்பதை மறவாதீர்கள். முஹம்மது உண்மை நபியாக இருந்தால், பிரச்சனை இல்லை.  அவர் கள்ள நபியாக இருந்தால், உங்கள் நித்தியத்தை எங்கே கழிக்கவேண்டி வரும் என்பது உங்களுக்கு இப்போதே புரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன்.

உங்கள் வீட்டில் தயாரிக்கப்பட்ட நெய்யிலிருந்து ஒரு செத்த எலியை வெளியே எடுத்துப்போட்டு இருக்கிறேன். அது எப்போது செத்தது? அது எப்படி நெய்யில் விழுந்தது? செத்த எலியினால் உண்டாகும் நோய்கள் என்ன? துர்நாற்றங்கள் ஆரோக்கியமானதா? போன்ற கேள்விகளைக் கேட்டு, பதில்களைத் தெரிந்துகொள்ளுங்கள். இந்த பத்தியில் நான் எதனை நெய் என்றுச் சொல்கிறேன், எதனை எலி என்றுச் சொல்கிறேன், எதனை உங்கள் வீடு என்றுச் சொல்கிறேன் என்பதை இப்போதே நீங்கள் புரிந்துக்கொண்டு இருப்பீர்கள் என்றும், அறிவுடமையாக சிந்தித்து செயல்படுவீர்கள் என்றும் நம்புகிறேன். 

எந்த ஒரு இஸ்லாமியராவது, இதற்கு பதிலைக் கொடுத்தால், இன்னும் அதிக விவரங்களை ஆழமாக எழுத தயாராக இருக்கிறேன். 

இப்படிக்கு, 
உங்கள் சகோதரன் உமர்


அடிக்குறிப்புக்கள்


The Humane Society of the United States is the nation's largest and most effective animal protection organization. We help animals by advocating for better laws to protect animals; conducting campaigns to reform industries; providing animal rescue and emergency response; investigating cases of animal cruelty; and caring for animals through oursanctuaries and wildlife rehabilitation centers, emergency shelters and clinics


Wild Rats vs. Domestic Rats
Although they both can carry many types of diseases that are transmitted to humans, wild rats present a greater danger since their environment is not controlled. Domestic rats purchased from a responsible source, who monitors their rats closely and tests for diseases, pose less of a threat than those from an unknown source or in the wild. Either way, it's important to be aware of the potential risk of diseases carried by rats, since the the Humane Society of the United States notes that, aside from mosquitoes, rats carry more diseases that can be transmitted to humans than almost any other living thing.




One of the most historically dangerous rat-borne diseases is the bubonic plague, also called "Black Plague," and its variants. Transfer occurs when fleas from the rats bite human beings. Fleas transported on rats are considered responsible for this plague during the Middle Ages, which killed millions. From the transmission of bubonic plague to typhus and hantavirus, rat infestations can prove harmful to human health.
Rats also are a potential source of allergens. Their droppings, dander and shed hair can cause people to sneeze and experience other allergic reactions.












--
4/13/2014 10:32:00 பிற்பகல் அன்று ஈஸா குர்-ஆன் - Isa Koran இல் Isa Koran ஆல் இடுகையிடப்பட்டது


இஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்

முன் பக்கம் செல்ல

HOME PAGE

தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்

1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1

2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2

3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3

4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4

பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்

1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1

2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2

பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்

1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்

2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்