இஸ்லாம் அமைதி மார்கமா? இஸ்லாம் இனிய மார்கமா? இஸ்லாம் உண்மையான மார்கமா?

ஆன்சரிங் இஸ்லாம்

பல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்

சத்தியவான் தளம் செல்ல

Friday, February 1, 2008

முகமதுவின் கொலைகள் இஸ்லாமின் பயமுறுத்தல்கள்-உமரின் மொழிபெயர்புக் கட்டுரை

                 


முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்

திய வான் கோவின் கொலை

ஆசிரியர்: சாமுவேல் கிரீன்

MUHAMMAD'S ASSASSINS AND INTIMIDATION IN ISLAM
The Murder of Theo Van Gogh
By Samuel Green


2004ம் ஆண்டு நவம்பர் 2ம் தேதி, "திய வான் கோ " ஒரு முஸ்லீமால் கத்தியால் குத்தப்பட்டு மற்றும் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்தார். இவர் இஸ்லாமை வெளிப்படையாக எதிர்த்தார், இஸ்லாமைப் பற்றி விமர்சித்தார் மற்றும் இஸ்லாமில் பெண்களின் நிலை என்ன ? என்பதை சித்தரிக்கும் விதத்தில் ஒரு படத்தை தயாரித்தார். இந்த காரணங்களுக்காக இவர் கொலை செய்யப்பட்டார். சில நடுநிலை முஸ்லீம்கள் இக்கொலையை கண்டித்தார்கள், மற்றும் சிலர் இக்கொலை நியாயமானது தான் என்று நம்புகின்றனர். இந்த இரண்டு விதமான கருத்துக்களை உடைய குழுக்களை இஸ்லாம் சமுதாயத்தில் நாம் காணமுடியும். இதனால், இந்த இரண்டு குழு மக்களின் கருத்துக்களில் எது "உண்மையான சரியான இஸ்லாம்" என்பதை புரிந்துக்கொள்வதில் குழப்பம் நிலவுகிறது.

ஆதாரபூர்வமான இஸ்லாம் எது? இந்த ஒரு கேள்வியில் தான் முஸ்லீம்கள் ஒருவரில் ஒருவர் வெவ்வேறு கருத்துடையவர்களாக உள்ளார்கள். அதனால், இஸ்லாமை தோற்றுவித்தவராகிய முகமதுவின் வாழ்க்கையை சிறிது அலசிப்பார்ப்பது நியாயமானதாக உள்ளது. உண்மையில் முகமதை சேர்த்துக்கொள்ளாத எந்த இஸ்லாமிய கோட்பாடும் தவறு தான் (In fact, any definition of Islam that excludes Muhammad is false). முகமதுவின் வாழ்க்கை சரிதையை(சீரா ) முதன் முதலில் எழுதியவர் மதினாவில் பிறந்த இபின் இஷாக் (85 - 151 ஹிஜரி) என்பவர் ஆவார். இக்கட்டுரையில் முகமது தன்னை எதிர்த்தவர்களிடம் எப்படி நடந்துக்கொண்டார் என்பதை கற்றுக்கொள்ளப்போகிறோம். இதற்காக இரண்டு எடுத்துக்காட்டை காண்போம்.

அபு அபக்கை கொல்லச் சென்ற சலிம் பி உமர்:

அபு அபக் என்பவர் அபயா (Abu `Afak was one of B. (tribe) `Amr b. `Auf of the B. `Ubayda clan) இனத்தை சார்ந்தவர். நபி "அல்-ஹரித் பி. சமித் " என்பவரை கொன்றதினால், இவர் முகமதுவின் மீதுள்ள தன் வெறுப்பை இவ்வாறு வெளிப்படுத்தினார்.


பல ஆண்டுகள் வாழ்ந்து விட்டேன், ஆனால் இப்படிப்பட்டதை இது வரை நான் காணவில்லை,
ஒரு குழு அல்லது மக்கள் கூட்டம்,
தங்கள் கூட்டாளிகளை காரியமாக அழைக்கும் போது
தாங்கள் கைவைத்த வேலையில் அதிக அக்கரை காட்டுபவர்கள்,
மலைகளை கவிழ்த்துவிட்டவர்கள், எப்போதும் தோற்காதவர்கள்
கய்லாவின் பிள்ளைகள் ஒரு குழுவாக கூடினார்கள்,
ஒரு பயணி இவர்களிடம் வந்தான், இவர்களை இரண்டாக பிரித்துவிட்டான்,
எல்லா காரியங்களிலும் "அனுமதிக்கப்பட்டது", "தடுக்கப்பட்டது" என்றான்,
துப்பாவை நம்பினவனையா நீங்கள் இராஜாவாக அங்கீகரிக்கப்போகிறீர்கள்.



இக்கவிதையை ஆங்கிலத்தில் (மூலத்தில்) படித்தால் தான் உண்மையான பொருள் புரியும்.

Long have I lived but never have I seen
An assembly or collection of people
More faithful to their undertaking
And their allies when called upon
Than the sons of Qayla when they assembled,
Men who overthrew mountains and never submitted.
A rider who came to them split them in two (saying)
"Permitted", "Forbidden" of all sorts of things.
Had you believed in glory or kingship
You would have followed Tubba`.


"எனக்காக இந்த முட்டாளை யார் ஒரு கைபார்க்கப்போகிறீர்கள்?" என்று நபி கேட்டார். இதைக்கேட்டு, சலிம் பி. உமர் சென்று அபு அபக்கை கொன்றுவிட்டு வந்தான். இந்த நிகழ்ச்சியைக் குறித்து உமாம பி. முஜைரியா கீழ் கண்டவாறு சொன்னார்.

இறைவனின் மதத்திற்கு, மாமனிதர் அஹமதிற்கு எதிராக நீ பொய் சொன்னாய்!
உன் தந்தை உன்னை கெட்ட மகனாக பெற்றார்
நீ மேலே செல்ல ஒரு நம்பிக்கையாளர் உனக்காக‌ இரவிலே கட்டளையிட்டார்
"வயதை பாராதே, அபு அபக்கின் கணக்கை முடித்துவிடு" என்றார்.
மரண இரவில் உன்னை கொன்றவன் மனிதனோ அல்லது ஜின்னோ எனக்கு தெரிந்தாலும், நான் சொல்லேன்.


(Ibn Ishaq, Sirat Rasul Allah, translated as, The Life of Muhammad, (tr. A. Guillaume), Karachi: Oxford University Press, 1998, p. 675.)

ஆங்கிலத்தில்:
You gave the lie to God's religion and the man Ahmad!
By him who was your father, evil is the son he produced!
A hanif gave you a thrust in the night saying
"Take that Abu `Afak in spite of your age!"
Though I knew whether it was man or jinn
Who slew you in the dead of night (I would say naught)

(Ibn Ishaq, Sirat Rasul Allah, translated as, The Life of Muhammad, (tr. A. Guillaume), Karachi: Oxford University Press, 1998, p. 675.)

இங்கு நாம் முகமதுவிற்கு வெளிப்படையான எதிர்ப்பு இருப்பதை காணமுடிகிறது. ஒரு குறிப்பிட்ட இனமக்களில் ஒரு முக்கியமான தலைவரை முகமது கொன்றுவிட்டார். அந்த இன மக்களைச் சேர்ந்தவர் தான் இந்த அபு அபக் என்பவர். இவர் அதிக வயது சென்ற முதியவர். இவர் முகமதுவிற்கு எதிர்த்து நிற்கும் படி தன் இன மக்களை உட்சாகப்படுத்துகிறார். இவர் செய்கின்ற செயல்கள் எப்போது முகமதுவின் முன்னிலையில் கொண்டுவரப்படுகிறதோ, அப்போது முகமதுவின் பதில் மிகவும் சுலபமாக இருந்தது. முகமது சொன்னார் " எனக்காக இந்த முட்டாளை யார் ஒரு கை பார்க்கப்போகிறார்கள்?". சலிம் பி. உமர் முகமதுவின் விருப்பத்தை அபு அபக்கை கொன்றதின் மூலமாக நிறைவேற்றினார்.

இன்னொரு எடுத்துக்காட்டோடு இபின் இஷாக்கின் விவரங்கள் தொடர்கிறது:

"மர்வானின் மகள் அஸ்மா" வை கொலை செய்ய உமர் பி. அடிய்யாவின் பயணம்:


இந்தப்பெண் உமய்யா பி. ஜையத்தை சார்ந்தவள். அபு அபக் கொல்லப்பட்டதை குறித்து இந்தப்பெண் தன் வெறுப்பை வெளிப்படுத்தினாள். இந்தப் பெண் கதமா(யாஜித்) இனைத்தைச் சார்ந்த ஒரு மனிதனின் மனைவியாவார். (`Abdullah b. al-Harith b. al-Fudayl from his father said that she was married to a man of B. Khatma called Yazid b. Zayd). இஸ்லாமையும் அதை பின் பற்றுபவர்களையும் குறித்து இந்த பெண் அவதூறாக கீழ்கண்டவாறு சொன்னாள்:

நான் மாலிக், நபித் மற்றும் அல்‍ கஜ்ரஜை நிந்திக்கிறேன்.
முரத் அல்லது மதஜ்க்கு சம்மந்தப்படாத,
உங்களில் ஒருவராக இல்லாத அந்நியருக்கா நீங்கள் கீழ்படிகிறீர்கள்
நீர்த்த ஆகாரத்திற்காக பசியோடு காத்திருக்கிறவன் போல
உங்கள் தலைவரை கொன்றுவிட்ட பிறகு அவரிடமிருந்து நன்மையை நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா?
அவரிடமிருந்து ஏதாவது சிறிது கிடைக்கும் என்று எதிர்பார்ப்பவர்களின் நம்பிக்கை அற்றுப்போக்கும் படியாக,
திடீரென்று அவரை தாக்கத்தக்க சுயமரியாதையுள்ள ஒரு மனிதனும் இல்லையா?


ஹசன் பி. தபித் அவளுக்கு பதில் அளித்தார்:

வெயில் மற்றும் வகிஃப் மற்றும் கத்மா இன மக்களே
கஜ்ரஜ் இனத்தைவிட தாழ்ந்து போனீர்களோ
அவள் மடத்தனமாக கவலையுற்று தனக்குள் அழுதுக்கொண்டு இருக்கும் போது,
மரணம் வந்துக்கொண்டே இருக்கிறது.
புகழ்பெற்ற ஆரம்பம் கொண்ட மனிதரை அவள் கலக்கிவிட்டாள்,
அவர் வரும்போதும் போகும் போதும் உயர் குணம் உடையவர்.
இரவின் நடுஜாமத்திற்கு முன்பே, தன் இரத்தம் சொட்ட மரித்தாள்
இதனால், எந்த குற்ற உணர்வும் இல்லை.


ஆங்கிலத்தில்:

I despise B. Malik and al-Nabit
And `Auf and B. al-Khazraj.
You obey a stranger who is none of yours,
One not of Murad or Madhhij.
Do you expect good from him after the killing of your chiefs
Like a hungry man waiting for a cook's broth?
Is there no man of pride who would attack him by surprise
And cut off the hopes of those who expect aught from him?


Hassan b. Thabit answered her:

Banu Wa'il and B. Waqif and Khatma
Are inferior to B. al-Khazraj.
When she called for folly woe to her in her weeping,
For death is coming.
She stirred up a man of glorious origin,
Noble in his going out and his coming in.
Before midnight he dyed her in her blood
And incurred no guilt thereby.


அந்த பெண் சொன்னதை நபி கேள்விப்பட்டவுடனே, "எனக்காக இந்த மர்வானின் மகளை யார் பூமியிலிருந்து நீக்கப்போகிறார்கள்?" என்று கேட்டார். அப்போது "உமர் பி. அதிய அல்கத்மி" என்பவர் நபியோடு இருந்ததால், நபி சொன்னதை கேட்டுக்கொண்டு இருந்தார், மற்றும் அன்று இரவே, அந்த பெண்ணின் வீட்டிற்குச் சொன்று, அவளை கொன்றுவிட்டார். மறுநாள் காலை அவர் நபியிடம் வந்து, அவர் என்ன செய்தார் என்றுச் சொன்னார். அதற்கு நபி "ஓ உமர், நீ இறைவனுக்கும் அவரது நபிக்கும் உதவி புரிந்தாய்!" என்றார். நான் அப்பெண்ணை கொன்றதால் ஏதாவது தீய விளைவுகளை நான் சந்திக்க வேண்டிவருமா? என்று உமர் நபியவர்களிடம் கேட்டார். அதற்கு நபி அவர்கள் "அவளைப் பற்றி யாரும் கவலைப்படமாட்டார்கள் " (Two goats won't butt their heads about her) என்றார். பிறகு உமர் தன் மக்களிடம் சென்றுவிட்டார்.

மர்வான் மகளின் இந்த கொலை நிகழ்ச்சிக்கு பிறகு "கத்மா" இன மக்களின் இடையில் மிகப்பெரிய கிளர்ச்சி உண்டானது. இந்த பெண்ணிற்கு 5 மகன்கள் இருந்தார்கள். நபி அவர்களிடமிருந்து உமர் சென்று "நான் மர்வான் மகளை கொன்றுவிட்டேன், ஓ கத்மா இன மக்களே, உங்களால் முடிந்தால் என் முன் நில்லுங்கள், என்னை கத்திருக்க வைக்காதீர்கள்" என்று சொன்னார். இது தான் "கத்மா" இன மக்களிடையே இஸ்லாம் மிகவும் வலுவானதாக காணப்பட்ட முதல் நாள். இதற்கு முன்பாக முஸ்லீமானவர்கள் அது வரை தங்கள் நம்பிக்கையை மறைத்துவைத்திருந்தார்கள். இஸ்லாமை ஏற்றுக்கொண்டவர்களில் முதல்மையானவர்கள் "உமர் பி. தபித்" என்பவர் ஆவார் மற்றும் இவர் "The Reader" என்று அழைக்கப்பட்டார். அப்துல்லா பி. அஸ் மற்றும் குஜைமா பி தபித்" என்பவர்களும் முஸ்லீமானவர்களில் முதன்மையானவர்கள் ஆவார்கள். மர்வான் மகளின் கொலை நடந்த அடுத்த நாளிலிருந்து, "கத்மா" இன மக்கள் இஸ்லாமின் சக்தியை கண்டதால், இஸ்லாமியர்களாக மாறினார்கள். (இபின் இஷாக் பக்கங்கள் 675 - 676.)

"அபு அஃபக்" என்பவரின் கொலைக்கு பிறகு, இன்னொரு பெண் மிகவும் தைரியமாக முகமதுவிற்கு எதிராக வெளிப்படையாக‌ பேசினாள். அப்பெண்ணின் பெயர் "மர்வானின் மகள் அஸ்மா" என்பதாகும். மறுபடியும் முகமது எப்படி தன்னை எதிர்த்தவர்களை சமாளித்தார் என்று நாம் பார்க்கலாம். முகமது " எனக்காக இந்த மர்வானின் மகளை யார் பூமியிலிருந்து நீக்கப்போகிறார்கள்?" என்று கேட்டார். "உமர் பி. அதிய அல்-கத்மி" என்பவர் அப்பெண்ணை அன்று இரவு கொன்று முகமதுவின் விருப்பத்தை நிறைவேற்றினார்.

இந்த நிகழ்ச்சிகளில் பல முக்கியமான விவரங்கள் அடங்கியிருக்கின்றன. இதில் முதன்மையானது முகமதுவின் குணத்தைப்(Character) பற்றியது. தன்னை எதிர்ப்பவர்களை தன் வழியிலிருந்து நீக்கிவிட, "கொலை" என்னும் ஆயுதத்தை பயன்படுத்தும் நபர்களைப் போல குணம் படைத்தவர் தான் முகமது. தன்னை எதிர்ப்பவர்கள் "அபு அஃபக்" போன்ற ஒரு வயதான முதியவராக இருந்தாலும் சரி, அல்லது "மர்வானின் மகள் அஸ்மாவாகிய" பெண்ணாக இருந்தாலும் சரி, அவர்கள் இவரை எதிர்த்தால், முகமது அவர்களோடு இப்படித்தான் நடந்துக்கொள்வார். இப்படி முகமது செய்த பல எடுத்துக்காட்டுகளை சொல்லிக்கொண்டுப் போகலாம்[1], மற்றும் முகமது சில நேரங்களில் "கொடுமைப்படுத்துதல் - Torture" என்ற ஆயுதத்தையும் பயன்படுத்தியுள்ளார்[2]. இவைகளை கருத்தில் கொண்டு பார்ப்போமானால், மற்ற அரசர்கள் போல, தன் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள "கொலையையும், கொடுமைப்படுத்தி பயப்படுத்துவதையும்" முகமது பயன்படுத்தியுள்ளார் என்பது தெளிவாக புரியும். முகமது நாடுகளை வெற்றிக்கொண்டார் என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை, மற்றும் அவர் சொல்கிறார்:

நீங்கள் இஸ்லாமை ஏற்றுக்கொள்ளும் படி நான் உங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன். இஸ்லாமை தழுவுங்கள் அப்போது நீங்கள் பாதுகாப்பாக‌ இருப்பீர்கள். (Sahih Muslim, book 19, number 4380) [3]

(I extend to you the invitation to accept Islam. Embrace Islam and you will be safe. (Sahih Muslim, book 19, number 4380) [3] )


முகமது இப்படியாக தான் ஆட்சியை அமைத்தும், மற்றவர்களுக்கு இப்படிப்பட்ட எடுத்துக்காட்டை கொடுத்து சென்று இருக்கும்போது, "முகமது ஒரு அமைதியின் சொரூபம் " என்று எப்படி முஸ்லீம்கள் சொல்கிறார்கள்?

இரண்டாவதாக, இந்த நிகழ்ச்சிகள் இஸ்லாம் அரேபிய இன மக்களின் இடையில் எப்படி பரவியது என்பதை படம் பிடித்து காட்டுகிறது. இந்த நிகழ்ச்சிகள் மிகவும் தெளிவாகச் சொல்கிறது, இந்த இரண்டு கொலைகளுக்குப் பிறகு, "கத்மா இன மக்களின் இடையில் இஸ்லாம் மிகவும் சக்தி மிகுந்ததாக மாறியது". உணமையில், "மர்வான் மகளின் கொலை நடந்த அடுத்த நாளிலிருந்து, "கத்மா" இன மக்கள் இஸ்லாமின் சக்தியை கண்டதால், இஸ்லாமியர்களாக மாறினார்கள் ". "இஸ்லாமின் சக்தியாக (Power of Islam)" அவர்கள் கண்டது என்ன? அது தான் தன்னை எதிர்ப்பவர்களை "கொலை செய்யும் சக்தி". இந்த நிகழ்ச்சியைப் பொருத்தவரையில், இஸ்லாம் மற்றவர்களை பயப்படவைத்தும், கொடுமைப்படுத்தியும் பரவியது என்பது மிகவும் தெளிவாக புரிகிறது, இதற்கு முகமது தன் அங்கீகாரத்தையும் கொடுத்துள்ளார்.

"திய வான் கோ" இஸ்லாமுக்கு எதிராக வெளிப்படையாக பேசினார், அபு அஃபக் மற்றும் மர்வானின் மகள் அஸ்மா எப்படி கொலை செய்யப்பட்டார்களோ அதே போல இவரும் கொலை செய்யப்பட்டார். பெரும்பான்மையான முஸ்லீம்கள் "திய வான் கோவின்" கொலையை அங்கீகரிக்கமாட்டீர்கள் என்று நம்புகிறேன். ஆனால், இஸ்லாமை தோற்றுவித்தவரை நாம் காணும் போது, இப்படித்தான் அவர் தன்னை எதிர்த்தவர்களை தீர்த்துக்கட்டியிருக்கிறார் என்பதை கவனிக்கமுடியும். நாம் பின்பற்ற வேண்டிய "மாதிரி" இது அல்ல. யார் யாரெல்லாம் அவரை எதிர்க்கிறார்களோ அவர்களை எல்லாம் கொலை செய்வது, என்பது ஒரு பலவீனமான மனிதனின் அடையாளமாகும். எதிர்த்தவர்களை கொலை செய்யாமல், அவர்களை எப்படி சமாளிப்பது என்பதைப் பற்றிய "அமைதியின் ஞானத்தை" பற்றி அறிந்துக்கொள்ள விரும்புவீர்களானால், நீங்கள் இயேசுவின் வாழ்க்கையை படிக்கும் படி நான் கேட்டுக்கொள்கிறேன் . If you really want to know about the wisdom of peace that can deal with opposition without killing them, then may I suggest you read the life of Jesus.)

பின் குறிப்புகள்:

[1] Other examples of Muhammad having his opponents assassinated or approving of their murder:
Sunan Abu-Dawud, book 38, number 4348
Sunan Abu-Dawud, book 38, number 4349
Sahih al-Bukhari, volume 5, book 59, number 369
Sahih al-Bukhari, volume 5, book 59, numbers 370-372

[2] Read about Muhahammad's use of torture.
[3] For otther examples see Sahih al-Bukhari, Volume 4, Book 53, Number 392


Christian-Muslim Discussion Papers © 2005

மூலம்: MUHAMMAD'S ASSASSINS AND INTIMIDATION IN ISLAM, The Murder of Theo Van Gogh, By Samuel Green



ஆசிரியர் சாமுவேல் கிரீன் அவர்களின் கட்டுரைகள் தமிழில்:

1. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும் (MUHAMMAD'S USE OF TORTURE)

2. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?(COMPARING THE BIBLE AND THE QUR'AN(How to do it Accurately)

ஆசிரியர் சாமுவேல் கிரீன் அவர்களோடு தொடர்பு கொள்ள: மெயில் விலாசம்
ஆசிரியருடைய இதர கட்டுரைகள் ஆங்கிலத்தில் படிக்க : இங்கே சொடுக்கவும்.


தமிழாக்க குறிப்பு: இக்கட்டுரையில் அதிக அளவில் கவிதை வரிகள் வருவதினால், எந்த கருத்து விவாதத்திற்கும், பொருளுக்கும் ஆங்கில(மூல) கட்டுரையை அடிப்படையாக கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். கவிதைவரிகள் தமிழாக்கத்தில் பொருள் மாறுபட வாய்ப்புக்கள் உள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
 
 

இஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்

முன் பக்கம் செல்ல

HOME PAGE

தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்

1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1

2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2

3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3

4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4

பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்

1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1

2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2

பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்

1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்

2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்