இஸ்லாம் அமைதி மார்கமா? இஸ்லாம் இனிய மார்கமா? இஸ்லாம் உண்மையான மார்கமா?

ஆன்சரிங் இஸ்லாம்

பல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்

சத்தியவான் தளம் செல்ல

Wednesday, March 5, 2014

Fwd: [ஈஸா குர்-ஆன் - Isa Koran] பாகம் 8 - 101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

 பாகம் 8

பாகம் 1பாகம் 2பாகம் 3பாகம் 4பாகம் 5பாகம் 6பாகம் 7ஐ படிக்க சொடுக்கவும். இந்த எட்டாம் பாகத்தில் 71வது காரணத்திலிருந்து 80வது காரணம் வரை காண்போம்.

71.  இசைக் கருவிகள் இசைப்பது, ஆண்கள் பட்டுத்துணி அணிவது தடுக்கப்பட்டதாகும்.

ஒரு மத ஸ்தாபகர் எதைச் சொன்னாலும் மக்கள் கேள்வி கேட்காமல் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்வார்கள் என்ற குருட்டு நம்பிக்கையில் முஹம்மது தன் மனதில் தோன்றியவைகள் அனைத்தையும் சொல்லியுள்ளார். ஆண்கள் பட்டுத் துணிகளை அணிவது தடுக்கப்பட்டதாகும் என்றும் மேலும் மக்கள் இசைக்கருவிகள் இசைப்பது  தவறாகும் என்றும் முஹம்மது கூறினார். எதன் அடிப்படையில் ஆண்கள் பட்டுத்துணிகளை அணிவது பாவமாகும்? இப்படியெல்லம் போதனைச் செய்ய இவருக்கு அதிகாரம் கொடுத்தவர் யார்? பழைய ஏற்பாட்டில் சங்கீதம் என்ற ஒரு புத்தகமே பாடல்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அனேக இசைக் கருவிகள் கொண்டு கர்த்தரை துதித்துப் பாடுவது ஒரு இன்பமான அனுபவமாகும். எகிப்திலிருந்து இஸ்ரவேலர்கள் விடுதலையாகி வரும் போது, ஆடல் பாடலோடு வந்தார்கள், ஆண்களும் பெண்களும் இசைக்கருவிகளை இசைத்து மகிழ்ந்து கர்த்தரை கொண்டாடினார்கள்.  இது பாவம் என்று முஹம்மது கூறுவதிலிருந்து,  பைபிளின் தேவனுக்கும், இவருக்கும் எந்த ஒரு சம்மந்தமும் இல்லை என்பது புரிகின்றது. இவர் ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்பது கிறிஸ்தவர்கள் கூறுவதில் தவறில்லை. [71]

72. பூமியில் பட்டாடைகள் அணிவது பாவம், சொர்க்கத்தில் அணிவது மேன்மை

ஆண்கள் பூமியில் பட்டாடைகள் அணியக்கூடாது என்றுச் சொல்லும் முஹம்மது, தன் குர்-ஆனில் மட்டும் அவைகளை அணிந்து முஸ்லிம்கள் சொர்க்கத்தில் ஜொலிப்பார்கள் என்றுச் சொல்கிறார்.  சொர்க்கத்தில் மேன்மையை குறிக்கும்  பட்டாடைகள் எப்படி பூமியில் ஒரு பாவமான காரியமாக இருக்கும்? சொர்க்கத்தில் பட்டாடை அணிய வேண்டுமென்றால், பூமியில் அதனை அணியக்கூடாதாம். மேலும் ஆண்கள் மோதிரம் அணியக்கூடாது,  வெள்ளிப்பாத்திரத்தில் பருகுவது போன்றவை கூடாது என்று சொல்லியுள்ளார்.  ஆன்மீக விஷயங்களை விட்டுவிட்டு, பிரயோஜனமற்ற உடல் சம்மந்தப்பட்ட வெளிப்புற விஷயங்களுக்கு  அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளார் முஹம்மது. ஆவிக்குரிய விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் தரவேண்டும் என்று நம்பும் கிறிஸ்தவர்கள்  முஹம்மது ஒரு உண்மையான தீர்க்கதரிசி இல்லை என்று நம்புவதில் ஆச்சரியமில்லையே! [72]

73. தொழுகையில் இமாமை முந்தித் தம் தலையை உயர்த்துபவரின் தலையை கழுதையைப் போல் அல்லாஹ் மற்றிவிடுகின்றார்

சிறுபிள்ளைகள் பேசிக்கொள்ளும் போது, ஏதாவது தவறு செய்தால் சாமி கண்ணை குத்திவிடும் என்று பேசிக்கொள்வதை நாம் காணமுடியும். நம்மில் சிலரும் இப்படி பேசி இருப்போம். ஆனால்,  உலகத்திற்கே வழிகாட்டியாக வந்தவர் என்று முஸ்லிம்கள் போற்றும் முஹம்மது இப்படி பிள்ளைகளைப் போல போதனை செய்வது ஏற்புடையதாக இருக்குமா? " உங்களில் ஒருவர் தொழுகையில் இமாமை முந்தித் தம் தலையை உயர்த்துவதால் அவரின் தலையைக் கழுதையுடை தலையாகவோ அல்லது அவரின் உருவத்தைக் கழுதையுடைய உருவமாகவோ அல்லாஹ் ஆக்கி விடுவதை அஞ்ச வேண்டாமா?" என்று முஹம்மது கூறியுள்ளார்.  தொழுகையில் ஒருவர் தலையை இமாம் உயர்த்துவதற்கு முன்பாக சீக்கிரமாக உயர்த்திவிடுவதினால், அல்லாஹ் இப்படிப்பட்ட கீழ்தரமான தண்டனையை கொடுப்பாரா? உண்மையிலேயே முஹம்மதுவை தீர்க்கதரிசி என்றுச் சொல்பவர்கள் இன்னும் அறியாமையிலேயே இருக்கிறார்கள் என்று அர்த்தம். சிறு பிள்ளைகளைப் போல்  போதனை செய்பவரை எப்படி ஒரு நபி என்று கிறிஸ்தவர்கள் நம்புவார்கள்? [73]

74. சொர்க்கவாசியான பெண் உலகத்தாரை எட்டிப்பார்த்தால், வானத்திற்கும் பூமிக்குமிடையே உள்ள அனைத்தையும் பிரகாசமாக்கி விடுவாள்

அல்லாஹ்விற்காக ஜிஹாத் போர் புரிந்து அதில் மரித்தால், அவர்களுக்கு அனேக பெண்கள் (72) தருவதாக முஸ்லிம்கள் நம்புகிறார்கள். இது தவிர சாதாரண நல்ல முஸ்லிம்களுக்கும் சொர்க்கத்தில் ஹூருல் ஈன்கள் என்ற பெண்கள் கிடைப்பார்கள் என்று குர்-ஆனும் சொல்கிறது.  இந்தப் பெண்களில் ஒருத்தி, உலகத்தாரை எட்டிப்பார்த்தால், வானத்திற்கும் பூமிக்கும் இடையே பிரகாசம் வந்துவிடுமாம். இவ்வளவு மேன்மை அந்த பெண்களின் கண்களில் இருக்கிறது என்று முஹம்மது கூறியுள்ளார். அதாவது சூரியனுக்கு சமமாக அவளின் கண்களில் வெளிச்சம் இருக்கும்.  இந்த போதனை எப்படிப்பட்டது? ஆண்களுக்கு பெண்களின் மீது ஆசையை உண்டாக்கும் விதமாக பேசுவது சரியா? மேலும், உண்மையிலேயே சொர்க்கத்தில் பெண்களோடு உடலுறவு கொள்ளமுடியும் என்றுச் சொல்லும் ஒரு இறையியல் சரியானதா? பரலோகத்தில் ஆண் பெண் உடலுறவு இருக்காது என்று பைபிள் கூறுகிறது. ஆனால், இப்படிப்பட்ட பெண்களோடு உடலுறவு கொள்ளவே சொர்க்கம் செல்லவேண்டும் என்று முஸ்லிம்கள் போதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இப்படியெல்லம் தன் தவறான கோட்பாடுகளினால் மக்களை ஏமாற்றிய இவர் ஒரு தீர்க்கதரிசியா ? இவரை கிறிஸ்தவர்கள் தீர்க்கதரிசி என்று ஒரு காலத்திலும் நம்பமாட்டார்கள். [74]

75. 'ஹூருல் ஈன்' எனப்படும் பெண்களின் கால்களின் எலும்பு மஜ்ஜைகள் (காலின்) எலும்புக்கும் சதைக்கும் அப்பாலிருந்து வெளியே தெரியும்

மனிதர்கள் அதிக சிவப்பாக/வெள்ளையாக இருந்தால், அவர்களின் கைகளில், கால்களில் இருக்கும் நரம்புகளை நாம் ஓரளவிற்கு காணமுடியும். இது இயற்கை. ஒரு பெண்ணின் காலில் உள்ள  எலுப்புக்குள் இருக்கும் மஜ்ஜை கூட வெளியே தெரியும் அளவிற்கு அவள் வெள்ளை வெளேரென்று இருந்தால் எப்படி இருக்கும்?  கிறிஸ்தவ சகோதர சகோதரிகளே, இப்படி எழுதுகிறேன் என்று கோபம் கொள்ளவேண்டாம். இப்படிப்பட்ட பெண்களை அல்லாஹ் முஸ்லிம்களுக்கு சொர்க்கத்தில் தருவதாக, இஸ்லாமிய தீர்க்கதரிசி ஆசை வார்த்தைகள் சொல்லி முஸ்லிம்களை மயக்கியுள்ளார். இப்படிப்பட்ட வர்ணனையை சிறிய வயதிலிருந்து கேட்டுக் கேட்டு முஸ்லிம் ஆண்கள் தற்கொலைத் தாக்குதலில் ஈடுபட்டு, சாகத்துணிந்து, செத்து, மற்றவர்களை சாகடித்து, இஸ்லாமிய சொர்க்கத்தில் நுழைய பயணச்சீட்டு வாங்க முயற்சி எடுக்கிறார்கள். இந்த போதனையைச் செய்யும் வேதமும், தீர்க்கதரிசியும் உண்மையான மார்க்கத்தை பின்பற்றுபவர்களாக இருக்கமுடியுமா? நிச்சயமாக இல்லை. [75]

76.  கணவன் உடலுறவு கொள்ள அழைக்கும் போது ஒரு பெண் மறுத்தால், தேவதூதர்கள் காலைவரை அவளை சபித்துக்கொண்டே இருப்பார்கள்.

இஸ்லாம் ஆண்களின் மார்க்கம் என்றுச் சொன்னால் மிகையாகாது. ஆண்களுக்காக, ஆண்களால் உருவாக்கப்பட்ட மதம் இஸ்லாம் என்பது எவ்வளவு உண்மையாக இருக்கிறது. ஒரு பெண்ணிடம் அவளின்  கணவன் உடலுறவு கொள்ள அழைக்கும்போது அவள் சம்மதிக்கவில்லையானால், வானத்திலிருந்து தேவதூதன் வந்து அவளை சபித்துக்கொண்டே இருப்பானாம். காடுகளில் வாழும் காட்டுமிராண்டி சமுதாயத்தில் கூட இப்படிப்பட்ட போதனைகள் இருக்காது என்று நம்பலாம். தேவத்தூதர்களுக்கு வேறு வேலையே இல்லையா? உலகில் உள்ள முஸ்லிம் வீடுகளில் இரவில் என்ன நடக்கும் என்று பார்த்துக்கொண்டே இருப்பது தான் அவர்களின் வேலையா? பொதுவாகவே ஆண்கள் தங்கள் மனைவிகள் மீது ஆதிக்கம் செலுத்துபவர்கள், இந்த இலட்சணத்தில், இப்படி மதத்தை சம்மந்தப்படுத்தி தீய போதனைகள் செய்தால், ஆண்களுக்கு சொல்லவா வேண்டும்? இதனால் தான் இஸ்லாமிய சமுதாயம் இன்னும் உருப்படாமல் பிந்தங்கியே இருக்கிறது. ஆண்களில் சரி பாதியாக இருக்கும் பெண்களை இழிவுப்படுத்தினால், நம்மை நாமே அழித்துக் கொள்வதற்கு  சமம் ஆகும். மேலும், பலதார திருமணம், அடிமைகளுடன் விபச்சாரம் புரிவது, அல்லாஹ் சொர்க்கத்தில் பெண்களை தயார் படுத்தி வைப்பது என்று முஹம்மது அனேக தீய விஷயங்களை சட்டங்களாக மாற்றி போதனைகள் செய்துள்ளார். இப்படி  பெண்களுக்கு எதிராக போதனை செய்த முஹம்மது ஒரு கள்ள நபி என்று கிறிஸ்தவர்கள் நம்புவது சரியே! [76]

77. இரட்சிப்பின் நிச்சயம் இல்லாத இறைத்தூதரை இரட்சிக்கப்பட்டவர்கள் நம்புவது எப்படி?

ஒரு மனிதன் இயேசுவை தன் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டால் அவனுக்கு கிடைக்கும் முதல் நம்பிக்கை, தன்னை தேவன் தம் பிள்ளையாக ஏற்றுக்கொண்டார் என்பதாகும். மேலும் தாம் மரித்தால் நிச்சயமாக தேவனுடைய பிரசன்னம் இருக்கும் பரலோகத்தில் செல்வோம் என்ற நிச்சயமாகும். இது ஒவ்வொரு கிறிஸ்தவ விசுவாசிக்கும் இருக்கும் நம்பிக்கையாகும். ஆனால், இந்த நம்பிக்கை முஹம்மதுவிற்கு இல்லை. தன்னை அல்லாஹ் நரகத்தில் இருக்கச் செய்துவிடுவாரோ என்று முஹம்மது பயந்து நடுங்கியுள்ளார். முஹம்மது "என்னை நரகம் நெருங்கி வந்தது. (எந்த அளவுக்கென்றால்) நான், 'இறைவா! நானும் அவர்களுடன் (நரகவாசிகளுடன்) இருக்கப் போகிறேனோ?" என்றுச் சொல்லி பயந்துள்ளார்.  மேலும் கல்லறைகளில் கிடைக்கும் தண்டனையைப் பற்றி பயந்துவிட்டு, அல்லாஹ்விடம் தம்மை அந்த தண்டனையிலிருந்து காக்கும் படி இவர் தொடர்ச்சியாக வேண்டிக்கொண்டுள்ளார். தனக்கு அல்லாஹ்விடம் இரட்சிப்பு இல்லை என்று நடுங்கும் ஒரு நபரை எப்படி கிறிஸ்தவர்கள் தீர்க்கதரிசி என்று நம்புவார்கள்? [77]

78. இரட்டை தண்டனையை அனுபவிக்கும் பூனை

மக்களுக்கு நல்ல விஷயங்களைச் சொல்லி, அவர்களை இறைவனின் பாதையில் பயபக்தியோடு நடக்கச் செய்வது ஒரு நல்ல தீர்க்கதரிசியின் கடமையாகும். முஹம்மதுவும் நரகம் பற்றி அனேக விஷயங்களைச் சொல்லியுள்ளார். ஆனால், தன் மனதில் தோன்றிய அனைத்தையும் சொல்லியுள்ளார், அதாவது மக்கள் திருப்பி கேள்வி கேட்கமாட்டார்கள் என்ற எண்ணத்தில் தனக்கு நரகம் காட்டப்பட்டது, அதில் நான் ஒரு பெண்ணைப் பார்த்தேன். அந்தப் பெண்ணை ஒரு பூனை பிறாண்டிக்கொண்டு இருந்தது. ஏன் இப்படி அந்த பெண் பூனையால் தண்டிக்கப்படுகிறாள் என்று இவர் கேட்டபோது, தேவதூதர்கள் இவரிடம் "இந்தப் பெண் பூமியில் இருக்கும் போது, அந்த பூனையை கட்டிவைத்து, பட்டினிப்போட்டு, சாகடித்தாளாம், அதனால் அதே பூனை பிறாண்டிக்கொண்டு இருக்கிறது" என்று கூறினார்களாம். மக்களுக்கு நல்லவைகளை அறிவுரைகளாகச் சொல்வதில் தவறில்லை, ஆனால், இப்படி பொய்களைச் சொல்லக்கூடாது. முஹம்மது கூறிய சம்பவத்தில், அந்த பூனைக்கு இரண்டு தண்டனைகள் கிடைத்தது, முதலாவது அந்தப்பெண் பூனையை பட்டினிப்போட்டு சாகடித்தாள், இரண்டாவது தண்டனையாக அல்லாஹ் அந்தப்பெண்ணை தண்டிக்க, அதே பூனையை நரகத்திற்கு அனுப்பினார். அந்தப் பெண்ணுக்கு ஒரு தண்டனை, ஆனால், பூனைக்கோ இரட்டை தண்டனை.  இது அறிவுடமையாக தெரிகின்றதா? ஒருவேளை இது அந்த பூனையல்ல, வேறு ஒரு பூனை என்று யாராவது சொன்னால், இதுவும் தவறு தான். ஒரு பாவமும் அறியாத வேறு ஒரு பூனை ஏன் நரகத்தில் அப்பெண்ணை தண்டிக்கச் செய்யவேண்டும்? ஒரு தீர்க்கதரிசி இப்படி கட்டுக்கதைகளைச் சொல்வாரா? இவரையா கிறிஸ்தவர்கள் ஒரு நபி என்று நம்பவேண்டும்? இதற்கு பதிலாக  கிறிஸ்தவர்கள் முஹம்மதுவின் செயல்களைக் கண்டு சிரிப்பார்கள். [78]

79. கணுக்கால்களுக்குக் கீழே தொங்கும் வகையில் கீழங்கியை அணிகிறவர் நரகத்தில் புகுவார்.

மக்கள் பாவங்கள் செய்தால், இறைவன் அவர்களை நரகத்தில் தள்ளுவான் என்று எல்லா மதங்களிலும் போதனைகள் உண்டு. ஆனால்,  நாம் போடும் பேண்ட் அல்லது லுங்கியை கணுக்கால்களுக்கு கீழே தொங்கும் படி அணிந்தால் கூட நரகத்தில் தள்ளப்படுவோம் என்று முஹம்மது கூறியுள்ளார். அதனால் தான் இஸ்லாமியர்கள் லுங்கியையும், பேண்டையும் கணுக்காலுக்கு மேலே அணிகிறார்கள். உடையை அணியும் விதத்தைப் பொறுத்து நரகத்தில் மனிதர்கள் தள்ளப்படுவார்கள் என்றுச் சொல்வது, கொஞ்சம் அதிகப்பிரசங்கித்தனம் தான். கணுக்காலை மூடி உடையை அணித்தால், சமுதாயத்தில் என்ன கேடு விளைந்துவிடப் போகிறது?  எவைகளை போதிக்கவேண்டும் என்ற ஒரு கட்டுப்பாடு இல்லாமல் முஹம்மது போதனை செய்துள்ளார்? பைபிள் என்ன சொல்கிறது? அநியாயக்காரர்கள், பொய்யர்கள் என்று பெரிய பட்டியலிட்டு, இந்த தீய செயல்கள் செய்பவர்கள் நரகத்தில் தள்ளப்படுவார்கள் என்று கூறுகிறது. ஆனால், கணுக்காலை மூடுவது ஒரு பெரிய பாவமா? ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த, படிப்பறிவில்லாத மனிதனின் மூளையிலிருந்து இப்படிப்பட்ட இறைச்செய்தி தான் வெளிப்படும். கிறிஸ்தவர்கள் இவரை நபி என்றுச் சொல்லமாட்டார்கள், அதற்கு பதிலாக "முஸ்லிம்கள் பாவம்" என்று முஸ்லிம்கள் மீது பரிதாபப்படுவார்கள். [79]

80. இறைமறுப்பாளனின் இரண்டு தோள் புஜங்களுக்கிடையே உள்ள தூரம் அனேக கிலோமீட்டர்கள் இருக்கும்

முஹம்மது நரகம், சொர்கம் பற்றிச் சொல்வதை யாரும் உடனே சரி பார்க்கமுடியாது. இந்த தைரியத்தில் நம்பமுடியாத விஷயங்களை சரளமாக முஹம்மது கூறியுள்ளார்.  முஹம்மது "(நரகத்தில்) இறைமறுப்பாளனின் இரண்டு தோள் புஜங்களுக்கிடையே உள்ள தூரம், துரிதமாகப் பயணிப்பவர் மூன்று நாள்கள் கடக்கும் தூரமாகும்" என்று கூறியுள்ளார். ஒரு மனிதனின் இரண்டு தோள் புஜங்களுக்கு இடையே இருக்கும் தூரம் அனேக கிலோ மீட்டர்கள் இருக்கும் என்று இவர் கூறுகிறார். கடந்த 14 நூற்றாண்டுகளாக இதையும் நம்பிக்கொண்டு இருக்கிறார்கள் முஸ்லிம்கள். ஒரு ஆரோக்கியமுள்ள மனிதன் துரிதமாக நடந்தால், ஒரு மணிக்கு குறைந்த பட்ச வேகமாகிய 5 கிலோமீட்டர் என்று கணக்கிட்டால், 8 மணி நேரம் நடந்தால் அவன் 40 கிலோ மீட்டர் தொலைவை கடக்கமுடியும். மூன்று நாட்களை கணக்கில் கொண்டால், 40 x 3 = 120 கிலோ மீட்டர். ஒரு மனிதனின் ஒரு புஜத்திற்கும், அடுத்த புஜத்திற்கும் இடையே இருக்கும் தூரம் 120 கிலோ  மீட்டர் இருக்குமா? அறிவுள்ளவர்கள் சிந்திக்கட்டும். முஹம்மது குதிரையில் அல்லது ஒட்டகத்தில் பயணிப்பவர் பற்றி சொல்லியிருக்கக்கூடும். இப்படி  ஒரு குதிரையில் செல்பவன் கடக்கும் தூரத்தை கணக்கிட்டால், என்னவாகும் இந்த கணக்கு?  எங்கேயோ போகும். இப்படியெல்லாம் புதுமையான பொய்களைச் சொல்லி முஹம்மது தன் மார்க்க மக்களை குஷி படுத்தியுள்ளார். இவரை கிறிஸ்தவர்கள் நபி என்றுச் சொல்லமாட்டார்கள். [80]

அடிக்குறிப்புக்கள்:

அனைத்து குர்-ஆன் வசனங்கள் "முஹம்மது ஜான்" குர்-ஆன் தமிழாக்கத்திலிருந்து எடுக்கப்பட்டதாகும்.

[71] ஸஹீஹ் புகாரி எண் 5590 & 5863

5590. அப்துர் ரஹ்மான் இப்னு ஃகன்கி அல்அஷ்அரீ(ரஹ்) கூறினார் 

'அபூ ஆமிர்(ரலி)' அல்லது 'அபூ மாலிக் அல்அஷ்அரீ(ரலி)' என்னிடம் கூறினார்கள் - அல்லாஹ்வின் மீதாணையாக அவர்கள் என்னிடம் பொய் சொல்லவில்லை. (அவர்கள் கூறினார்) 

நான் நபி(ஸல்) அவர்கள் சொல்லக் கேட்டேன்: 

என் சமுதாயத்தாரில் சில கூட்டத்தார் தோன்றுவார்கள். அவர்கள் விபசாரம் (புரிவது), (ஆண்கள்) பட்டுத் துணி (அணிவது), மது (அருந்துவது), இசைக் கருவிகள் (இசைப்பது) ஆகியவற்றை அனுமதிக்கப்பட்டவையாகக் கருதுவார்கள். இன்னும் சில கூட்டத்தார் மலை உச்சியில் தங்குவார்கள். அவர்களின் ஆடுகளை இடையன் (காலையில் மேய்த்துவிட்டு) மாலையில் அவர்களிடம் ஓட்டிச் செல்வான். அவர்களிடம் தன் தேவைக்காக ஏழை (உதவி கேட்டுச்) செல்வான். அப்போது அவர்கள், 'நாளை எங்களிடம் வா' என்று சொல்வார்கள். (ஆனால்) அல்லாஹ் இரவோடு இரவாக அவர்களின் மீது மலையைக் கவிழ்த்து அவர்க(ளில் அதிகமானவர்க)ளை அழித்துவிடுவான். (எஞ்சிய) மற்றவர்களைக் குரங்குகளாகவும் பன்றிகளாகவும் மறுமை நாள் வரை உருமாற்றிவிடுவான். Volume :6 Book :74

5863. பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார். 

'தங்க மோதிரம்' அல்லது 'தங்க வளையம்', சாதாரணப் பட்டு, தடித்தப்பட்டு அலங்காரப்பட்டு, சிவப்பு மென்பட்டுத் திண்டு (மீஸரா), பட்டு கலந்த (எம்ப்திய) பஞ்சாடை, வெள்ளிப் பாத்திரம் ஆகிய ஏழு பொருட்களைப் பயன்படுத்தக்கூடாது என்று நபி(ஸல்) அவர்கள் எங்களுக்குத் தடை விதித்தார்கள். மேலும், நோயாளிகளை நலம் விசாரிப்பது, 'ஜனாஸா'வைப் பின்தொடர்ந்து செல்வது, தும்மியவ(ர் அல்ஹம்துலில்லாஹ் எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே என்று கூறுகையில் அவ)ருக்கு (யர்ஹமுகல்லாஹ் அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரிவானாக என்று) பதில் சொல்வது, சலாமுக்கு பதிலுரைப்பது, விருந்து அழைப்பை ஏற்பது, சத்தியம் செய்தவர் (அதை) நிறைவேற்ற உதவிடுவது மற்றும் அநீதியிழைக்கப்பட்டவருக்கு உதவிபுரிவது ஆகிய ஏழு (நற்)செயல்களைக் கடைப்பிடிக்கும்படி எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். Volume :6 Book :77

[72] குர்-ஆன்  18:31, 22:23, 35:33, 44:51-53, 76:12, 21

ஸஹீஹ் புகாரி எண்: 5863, 886, 5838 & 5590

ஸஹீஹ் முஸ்லிம் என் 4202 & 4194

5863. பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார். 

'தங்க மோதிரம்' அல்லது 'தங்க வளையம்', சாதாரணப் பட்டு, தடித்தப்பட்டு அலங்காரப்பட்டு, சிவப்பு மென்பட்டுத் திண்டு (மீஸரா), பட்டு கலந்த (எம்ப்திய) பஞ்சாடை, வெள்ளிப் பாத்திரம் ஆகிய ஏழு பொருட்களைப் பயன்படுத்தக்கூடாது என்று நபி(ஸல்) அவர்கள் எங்களுக்குத் தடை விதித்தார்கள். மேலும், நோயாளிகளை நலம் விசாரிப்பது, 'ஜனாஸா'வைப் பின்தொடர்ந்து செல்வது, தும்மியவ(ர் அல்ஹம்துலில்லாஹ் எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே என்று கூறுகையில் அவ)ருக்கு (யர்ஹமுகல்லாஹ் அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரிவானாக என்று) பதில் சொல்வது, சலாமுக்கு பதிலுரைப்பது, விருந்து அழைப்பை ஏற்பது, சத்தியம் செய்தவர் (அதை) நிறைவேற்ற உதவிடுவது மற்றும் அநீதியிழைக்கப்பட்டவருக்கு உதவிபுரிவது ஆகிய ஏழு (நற்)செயல்களைக் கடைப்பிடிக்கும்படி எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். Volume :6 Book :77

886. இப்னு உமர்(ரலி) அறிவித்தார். 

பள்ளியின் நுழைவாயிலில் பட்டாடை ஒன்றை (விற்பனை செய்வதை) உமர்(ரலி) பார்த்தார்கள். அப்போது 'இறைத்தூதர் அவர்களே! இதை நீங்கள் விலைக்கு வாங்கி ஜும்ஆ நாளிலும் தூதுக் குழுவைச் சந்திக்கும் போதும் அணிந்து கொள்ளலாமே' என்று நபி(ஸல்) அவர்களிடம் உமர்(ரலி) கேட்டார்கள். "மறுமையில் இந்தப் பாக்கியம் அற்றவர்களின் ஆடையே இது" என்று நபி(ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள். பின்னர் நபி(ஸல்) அவர்களுக்குச் சில பட்டாடைகள் வந்தன. அதில் ஓர் ஆடையை உமர்(ரலி)க்குக் கொடுத்தனர். அதற்கு உமர்(ரலி) 'பட்டாடை பற்றி வேறு விதமாக நீங்கள் கூறிவிட்டு அதை எனக்குக் கொடுக்கின்றீர்களே' என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'நீர் அணிவதற்காக இதை உமக்கு நான் தரவில்லை' என்று கூறினார்கள். அந்த ஆடையை மக்காவில் இருந்த முஷ்ரிக்கான தம் சகோதரருக்கு உமர்(ரலி) வழங்கினார்கள்.

5838. பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார். 

நபி(ஸல்) அவர்கள் சிவப்பு மென்பட்டு விரிப்புகளையு ('மீஸரா), 'கஸ்' வகைப்பட்டுத் துணியையும் எங்களுக்குத் தடை செய்தார்கள்.  Volume :6 Book :77

5590. அப்துர் ரஹ்மான் இப்னு ஃகன்கி அல்அஷ்அரீ(ரஹ்) கூறினார் 

'அபூ ஆமிர்(ரலி)' அல்லது 'அபூ மாலிக் அல்அஷ்அரீ(ரலி)' என்னிடம் கூறினார்கள் - அல்லாஹ்வின் மீதாணையாக அவர்கள் என்னிடம் பொய் சொல்லவில்லை. (அவர்கள் கூறினார்) 

நான் நபி(ஸல்) அவர்கள் சொல்லக் கேட்டேன்: 

என் சமுதாயத்தாரில் சில கூட்டத்தார் தோன்றுவார்கள். அவர்கள் விபசாரம் (புரிவது), (ஆண்கள்) பட்டுத் துணி (அணிவது), மது (அருந்துவது), இசைக் கருவிகள் (இசைப்பது) ஆகியவற்றை அனுமதிக்கப்பட்டவையாகக் கருதுவார்கள். இன்னும் சில கூட்டத்தார் மலை உச்சியில் தங்குவார்கள். அவர்களின் ஆடுகளை இடையன் (காலையில் மேய்த்துவிட்டு) மாலையில் அவர்களிடம் ஓட்டிச் செல்வான். அவர்களிடம் தன் தேவைக்காக ஏழை (உதவி கேட்டுச்) செல்வான். அப்போது அவர்கள், 'நாளை எங்களிடம் வா' என்று சொல்வார்கள். (ஆனால்) அல்லாஹ் இரவோடு இரவாக அவர்களின் மீது மலையைக் கவிழ்த்து அவர்க(ளில் அதிகமானவர்க)ளை அழித்துவிடுவான். (எஞ்சிய) மற்றவர்களைக் குரங்குகளாகவும் பன்றிகளாகவும் மறுமை நாள் வரை உருமாற்றிவிடுவான்.  Volume :6 Book :74

ஸஹீஹ் முஸ்லிம் என் 4202 & 4194

4202. கலீஃபா பின் கஅப் அபீதிப்யான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(ஒருமுறை) அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் உரை நிகழ்த்துகையில் "நீங்கள் உங்கள் (வீட்டுப்) பெண்களுக்குப் பட்டாடைகள் அணிவிக்காதீர்கள். ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "பட்டாடை அணியாதீர்கள். யார் இம்மையில் அதை அணிகிறாரோ, அவர் மறுமையில் அதை அணியமாட்டார்" என்று கூறியதாக உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் சொல்ல நான் கேட்டுள்ளேன்" என்றார்கள்.  Book :37

ஸஹீஹ் முஸ்லிம் எண் 4194

4194. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஏழு விஷயங்களைக் கடைப்பிடிக்கும்படி எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். ஏழு செயல்களைச் செய்ய வேண்டாமென எங்களுக்குத் தடை விதித்தார்கள்.

எங்களுக்கு அவர்கள் கட்டளையிட்ட ஏழு விஷயங்களாவன:

1. நோயாளிகளை நலம் விசாரிப்பது. 2. ஜனாஸாவைப் பின்தொடர்ந்து செல்வது. 3. தும்மிய(வர் "அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்" என்று கூறினால் அ)வருக்கு ("அல்லாஹ், உங்களுக்குக் கருணை புரிவானாக!" என்று) மறுமொழி கூறுவது. 4. சத்தியத்தை நிறைவேற்றுவது அல்லது (உன்னோடு தொடர்புடைய ஒரு விஷயத்தில்) சத்தியம் செய்தவருக்கு அதை நிறைவேற்ற உதவுவது. 5. அநீதியிழைக்கப்பட்டவருக்கு உதவுவது. 6. விருந்தழைப்பை ஏற்றுக்கொள்வது. 7. (மக்களிடையே) சலாமைப் பரப்புவது.

எங்களுக்கு அவர்கள் தடை விதித்த ஏழு விஷயங்களாவன:

1. (ஆண்கள்) "பொன் மோதிரம் அணிவது" அல்லது "மோதிரங்கள் அணிவது" 2. வெள்ளிப் பாத்திரத்தில் பருகுவது. 3.மென்பட்டுத் திண்டு பயன்படுத்துவது. 4. (ஆண்கள் எகிப்தியப்) பட்டு கலந்த பஞ்சாடை அணிவது. 5. (ஆண்கள்) சாதாரணப் பட்டு அணிவது. 6. (ஆண்கள்) கெட்டிப் பட்டு அணிவது. 7. (ஆண்கள்) அலங்காரப் பட்டு அணிவது.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

- மேற்கண்ட ஹதீஸ் பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

அதில் "சத்தியத்தை நிறைவேற்றுவது, அல்லது சத்தியம் செய்தவருக்கு அதை நிறைவேற்ற உதவுவது" என்பது இடம்பெறவில்லை. அதற்குப் பகரமாக "கண்டெடுக்கப்பட்ட பொருள் பற்றி அறிவிப்புச் செய்வது" என இடம்பெற்றுள்ளது.

- மேற்கண்ட ஹதீஸ் பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

அவற்றில், "சத்தியத்தை நிறைவேற்றுவது" என ஐயப்பாடின்றி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவற்றில் "வெள்ளிப் பாத்திரத்தில் பருகுவது; ஏனெனில், இம்மையில் அதில் பருகியவர் மறுமையில் அதில் பருகமாட்டார்" என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.

- மேற்கண்ட ஹதீஸ் மேலும் ஏழு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

இவற்றிலும் மேற்கண்ட ஹதீஸ்களில் உள்ள தகவல்களே இடம்பெற்றுள்ளன. ஆனால், "(மக்களிடையே) சலாமைப் பரப்புவது" என்பதற்குப் பகரமாக "சலாமுக்குப் பதிலுரைப்பது" என இடம்பெற்றுள்ளது. மேலும் "(ஆண்கள்) தங்க மோதிரம் அணிவது அல்லது "தங்க வளையம் அணிவது" என்று (ஐயத்துடன்) காணப்படுகிறது.

- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

அவற்றில் "சலாமைப் பரப்புவது" என்றும் "தங்க மோதிரம் அணிவது" என்றும் சந்தேகமின்றி இடம்பெற்றுள்ளது.  Book :37

[73] ஸஹீஹ் புகாரி எண்: 691

691. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

"உங்களில் ஒருவர் தொழுகையில் இமாமை முந்தித் தம் தலையை உயர்த்துவதால் அவரின் தலையைக் கழுதையுடை தலையாகவோ அல்லது அவரின் உருவத்தைக் கழுதையுடைய உருவமாகவோ அல்லாஹ் ஆக்கி விடுவதை அஞ்ச வேண்டாமா?." என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். Volume :1 Book :10

[74] குர்-ஆன் 44:54, 55:70, 72, 52:20 & ஸஹீஹ் புகாரி எண் 2799

44:54. இவ்வாறே (அங்கு நடைபெறும்); மேலும் அவர்களுக்கு ஹூருல் ஈன்களை நாம் மண முடித்து வைப்போம்.

55:70. அவற்றில், அழகு மிக்க நற் குணமுள்ள கன்னியர் இருக்கின்றனர்.

55:72. ஹூர் (என்னும் அக்கன்னியர் அழகிய) கூடாரங்களில் மறைக்கப்பட்டிருப்பர்.

52:20. அணி அணியாகப் போடப்பட்ட மஞ்சங்களின் மீது சாய்ந்தவர்களாக அவர்கள் இருப்பார்கள்; மேலும், நாம் அவர்களுக்கு, நீண்ட கண்களையுடைய (ஹூருல் ஈன்களை) மணம் முடித்து வைப்போம்.

ஸஹீஹ் புகாரி எண் 2799

2796. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

இறைவழியில் காலையில் சிறிது நேரம் அல்லது, மாலையில் சிறிது நேரம் (போர் புரியச்) செல்வது உலகத்தையும் அதிலுள்ள பொருட்களையும் விடச் சிறந்தது. உங்களில் ஒருவரின் வில்லின் அளவுக்குச் சமமான, அல்லது ஒரு சாட்டையளவுக்குச் சமமான (ஒரு முழம்) இடம் கிடைப்பது உலகத்தையும் அதிலுள்ளவற்றையும் விடச் சிறந்தது. சொர்க்கவாசிகளில் (ஹூருல் ஈன்களில்) ஒரு பெண், உலகத்தாரை எட்டிப் பார்த்தால் வானத்திற்கும் பூமிக்குமிடையே உள்ள அனைத்தையும் பிரகாசமாக்கி விடுவாள்; பூமியை நறுமணத்தால் நிரப்பி விடுவாள். அவளுடைய தலையிலுள்ள முக்காடோ உலகத்தையும் அதிலுள்ளவற்றையும் விடச் சிறந்ததாகும்.  என அனஸ்(ரலி) அறிவித்தார். Volume :3 Book :56

[75] குர்-ஆன் 44:54, 55:70, 72, 52:20 & ஸஹீஹ் புகாரி எண் 3254

44:54. இவ்வாறே (அங்கு நடைபெறும்); மேலும் அவர்களுக்கு ஹூருல் ஈன்களை நாம் மண முடித்து வைப்போம்.

55:70. அவற்றில், அழகு மிக்க நற் குணமுள்ள கன்னியர் இருக்கின்றனர்.

55:72. ஹூர் (என்னும் அக்கன்னியர் அழகிய) கூடாரங்களில் மறைக்கப்பட்டிருப்பர்.

52:20. அணி அணியாகப் போடப்பட்ட மஞ்சங்களின் மீது சாய்ந்தவர்களாக அவர்கள் இருப்பார்கள்; மேலும், நாம் அவர்களுக்கு, நீண்ட கண்களையுடைய (ஹூருல் ஈன்களை) மணம் முடித்து வைப்போம்.

3254. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

சொர்க்கத்தில் முதலாவதாக நுழையும் அணியினர் பெளர்ணமி இரவின் சந்திரனைப் போன்று தோற்றமளிப்பார்கள். (அடுத்து) அவர்களின் சுவடுகளைப் பின்தொடர்ந்து சொர்க்கத்தினுள் நுழைபவர்கள், வானத்தில் நன்கு ஒளி வீசிப் பிரகாசிக்கும் நட்சத்திரத்தைப் போன்று (பிரகாசமாகவும் அழகாகவும்) இருப்பார்கள். அவர்களின் உள்ளங்கள் ஒரே மனிதரின் உள்ளத்தைப் போன்றிருக்கும். அவர்களுக்கிடையே பரஸ்பர வெறுப்போ, பொறாமையோ இருக்காது. ஒவ்வொரு மனிதருக்கும் 'ஹூருல் ஈன்' எனப்படும் அகன்ற (மான் போன்ற) விழிகளையுடைய மங்கையரிலிருந்து இரண்டு மனைவிமார்கள் இருப்பார்கள். அவர்களின் கால்களின் எலும்பு மஜ்ஜைகள் (காலின்) எலும்புக்கும் சதைக்கும் அப்பாலிருந்து வெளியே தெரியும்.  Volume :3 Book :59

[76] ஸஹீஹ் முஸ்லிம் எண்கள்: 2829 & 2830 

2829. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு பெண் (தாம்பத்தியத்தைப் பகிர்ந்து கொள்ள மறுத்து) தன் கணவனின் படுக்கையை வெறுத்து (தனியாக) இரவைக் கழித்தால், பொழுது விடியும்வரை அவளை வானவர்கள் சபித்துக்கொண்டிருக்கின்றனர்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

அதில், "அவள்(கணவனின் படுக்கைக்குத்) திரும்பும்வரை (சபிக்கின்றனர்)" என இடம் பெற்றுள்ளது. Book : 16

2830. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! ஒருவர் தம் மனைவியை அவளது படுக்கைக்கு அழைத்து, அவள் அவருக்கு (உடன்பட) மறுத்தால் வானிலுள்ளவன் அவள் மீது கோபம் கொண்டவனாகவே இருக்கிறான்; அவள்மீது கணவன் திருப்தி கொள்ளும்வரை. Book : 16

[77] ஸஹீஹ் புகாரி எண் 2364 & 1372, 1373, 1376 & 4707 (பார்க்க காரணம் [39])

2364. அஸ்மா பின்த்து அபீ பக்ர்(ரலி) அறிவித்தார். 

நபி(ஸல்) அவர்கள் சூரிய கிரகணத் தொழுகை தொழுதார்கள்; பிறகு சொன்னார்கள்: என்னை நரகம் நெருங்கி வந்தது. (எந்த அளவுக்கென்றால்) நான், 'இறைவா! நானும் அவர்களுடன் (நரகவாசிகளுடன்) இருக்கப் போகிறேனோ?' என்று (மருண்டு போய்க்) கேட்டேன். அப்போது (நரகத்தில்) ஒரு பெண் இருந்தாள். அந்தப் பெண்ணைப் பூனை ஒன்று (தன் நகங்களால்) பிறாண்டிக் கொண்டிருந்தது. 'இவளுக்கு என்ன ஆயிற்று? (இவள் ஏன் இப்படி வேதனைப்படுத்தப்படுகிறாள்?)" என்று கேட்டேன். அதற்கு (அங்கிருந்த வானவர்கள்), 'இந்தப் பூனையை, அது பசியால் வாடிச் செத்துவிடும் வரை இந்தப் பெண் கட்டி வைத்திருந்தாள்" என்று பதிலளித்தனர். 

இந்த அறிவிப்பின் இடையே, 'அந்தப் பெண்ணைப் பூனை ஒன்று பிறாண்டிக் கொண்டிருந்தது' என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள் என்று நான் நினைக்கிறன்" என அஸ்மா பின்த்து அபீ பக்ர்(ரலி) கூறினார்.  Volume :2 Book :42

ஸஹீஹ் புகாரி எண்கள் 1372, 1373, 1376 & 4707

1372. மஸ்ரூக் அறிவித்தார்.

ஒரு யூதப் பெண் ஆயிஷா(ரலி) அவர்களிடம் வந்து மண்ணறை வேதனை பற்றிக் கூறிவிட்டு, 'அல்லாஹ் உங்களை மண்ணறை வேதனையைவிட்டும் பாதுகாப்பாளனாக' என்றும் கூறினாள். பிறகு மண்ணறை வேதனை பற்றி ஆயிஷா(ரலி) நபி(ஸல்) அவர்களிடம் கேட்டபோது நபி(ஸல்) அவர்கள், 'ஆம் மண்ணறை வேதனை உள்ளது" எனக் கூறினார்கள்.

ஆயிஷா(ரலி) அறிவித்தார். 'அதற்குப் பிறகு நபி(ஸல்) அவர்கள் தாம் தொழுகிற தொழுகைகளில் மண்ணறை வேதனையிலிருந்து (அல்லாஹ்விடம்) பாதுகாப்புத் தேடாமல் இருந்தேயில்லை'. Volume :2 Book :23

1373. அஸ்மா பின்த் அபீ பக்ர்(ரலி) அறிவித்தார்.

ஒரு முறை நபி(ஸல்) அவர்கள் உரையாற்றும்போது, மண்ணறையில் மனிதன் அனுபவிக்கும் சோதனையைப் பற்றிக் கூறினார்கள். அவ்வாறு கூறிக்கொண்டிருக்கும்போது முஸ்லிம்கள் (அச்சத்தால்) கதறிவிட்டார்கள். Volume :2 Book :23

1376. மூஸா இப்னு உக்பா அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் மண்ணறை வேதனையைவிட்டுப் பாதுகாப்புத் தேடியதைத் தாம் செவியுற்றதாக காலித் இப்னு ஸயீத்(ரலி) உடைய மகள் கூறுகிறார். Volume :2 Book :23

[78] ஸஹீஹ் புகாரி எண் 2364, 745, 2365 & 3842

2364. அஸ்மா பின்த்து அபீ பக்ர்(ரலி) அறிவித்தார். 

நபி(ஸல்) அவர்கள் சூரிய கிரகணத் தொழுகை தொழுதார்கள்; பிறகு சொன்னார்கள்: என்னை நரகம் நெருங்கி வந்தது. (எந்த அளவுக்கென்றால்) நான், 'இறைவா! நானும் அவர்களுடன் (நரகவாசிகளுடன்) இருக்கப் போகிறேனோ?' என்று (மருண்டு போய்க்) கேட்டேன். அப்போது (நரகத்தில்) ஒரு பெண் இருந்தாள். அந்தப் பெண்ணைப் பூனை ஒன்று (தன் நகங்களால்) பிறாண்டிக் கொண்டிருந்தது. 'இவளுக்கு என்ன ஆயிற்று? (இவள் ஏன் இப்படி வேதனைப்படுத்தப்படுகிறாள்?)" என்று கேட்டேன். அதற்கு (அங்கிருந்த வானவர்கள்), 'இந்தப் பூனையை, அது பசியால் வாடிச் செத்துவிடும் வரை இந்தப் பெண் கட்டி வைத்திருந்தாள்" என்று பதிலளித்தனர். 

இந்த அறிவிப்பின் இடையே, 'அந்தப் பெண்ணைப் பூனை ஒன்று பிறாண்டிக் கொண்டிருந்தது' என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள் என்று நான் நினைக்கிறன்" என அஸ்மா பின்த்து அபீ பக்ர்(ரலி) கூறினார். Volume :2 Book :42

[79] ஸஹீஹ் புகாரி எண் 5787

5787. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' 

கணுக்கால்களுக்குக் கீழே தொங்கும் (வகையில்) கீழங்கி(யை அணிகிறவர்) நரகத்தில் (புகுவார்). என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.  Volume :6 Book :77

[80] ஸஹீஹ் புகாரி எண் 6551

6551. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' 

(நரகத்தில்) இறைமறுப்பாளனின் இரண்டு தோள் புஜங்களுக்கிடையே உள்ள தூரம், துரிதமாகப் பயணிப்பவர் மூன்று நாள்கள் கடக்கும் தூரமாகும். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.  Volume :7 Book :83

பாகம் 9ஐ படிக்க சொடுக்கவும்

உமரின் இதர கட்டுரைகள்


© Answering Islam, 1999 - 2013. All rights reserved.


--
2/08/2014 07:23:00 பிற்பகல் அன்று ஈஸா குர்-ஆன் - Isa Koran இல் Isa Koran ஆல் இடுகையிடப்பட்டது


Fwd: [ஈஸா குர்-ஆன் - Isa Koran] பாகம் 7 - 101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

 

பாகம் 7

பாகம் 1பாகம் 2பாகம் 3பாகம் 4பாகம் 5பாகம் 6ஐ படிக்க சொடுக்கவும்..  இந்த ஏழாம் பாகத்தில் 61வது காரணத்திலிருந்து 70வது காரணம் வரை காண்போம்.

61. மூன்றாம் கட்டளை - உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக

முஹம்மது மோசேயின் இந்த மூன்றாம் கட்டளையையும் முறித்துள்ளார். அதாவது, இறைவனின் பெயரில் சத்தியம் செய்துவிட்டு, அந்த சத்தியத்தை நிறைவேற்றாமல் முறித்துவிடுவது இந்த மூன்றாம் கட்டளையை மீறுவதாகும்.  சத்தியம் செய்பவர் அல்லாஹ்வின் பெயரில் மட்டுமே சத்தியம் செய்யவேண்டுமென்று முஹம்மது கூறியுள்ளார். ஒருமுறை ஒரு விஷயத்திற்காக முஹம்மது தம் மனைவியிடம் சத்தியம் செய்தார். ஆனால், அதனை மீறும்படி மறுபடியும் குர்-ஆன் வசனங்களை சொந்தமாக உருவாக்கி, தன் சத்தியத்தை முறித்தார் (குர்-ஆன் 66:1-2). முஹம்மது தன் சத்தியத்தை முறிக்க அவருக்கு ஒரு வழி தேவைப்பட்டது, அதனை அவர் குர்-ஆன் வசனங்களின் மூலமாக நிறைவேற்றினார். இங்கு ஒரு விஷயத்தை குறிப்பிடவேண்டும், அதாவது அல்லாஹ்வின் பெயரில் முஹம்மது சத்தியம் செய்தார், அதனை முறித்தார், இது எப்படி யெகோவா தேவனின் மீது சத்தியம் செய்வதாக கருதப்படும்? அல்லாஹ்வும் யெகோவா தேவனும் ஒருவரே என்று முஹம்மது சொன்னார். எனவே அவரைப் பொருத்தவரையில் அவர் யெகோவா தேவனின் பெயரில் தான் சத்தியம் செய்துள்ளார். ஆனால் கிறிஸ்தவர்கள் அல்லாஹ்வும் யெகோவா தேவனும் வெவ்வெறானவர்கள் என்று நம்புகிறார்கள். சத்தியம் செய்து முறித்த முஹம்மது ஒரு உண்மையான தீர்க்கதரிசியில்லை.[61]

62. நான்காவது கட்டளை - ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக

தோராவை நான் நம்புகிறேன் என்றுச் சொல்லும் முஹம்மது, அந்த தோராவில் தரப்பட்ட சட்டங்களை பின்பற்றவில்லை. 10 கட்டளைகளில் நான்காவது கட்டளை "சனிக்கிழமையை பரிசுத்தமாக அனுசரிக்கவேண்டும்" என்பதாகும். ஆனால், முஹம்மதுவோ சனிக்கிழமைக்கு பதிலாக வெள்ளிக்கிழமையை மக்கள் கூடும் நாளாக கூட்டுத்தொழுகை நாளாக மாற்றினார். இவர் எப்படி பைபிளின் படி வந்த தீர்க்கதரிசியாக இருக்கமுடியும்? மேலும் ஓய்வு நாள் முழுவதும் வேலை செய்யாமல் இருக்கவேண்டும் என்றும் மோசேயின் சட்டம் சொல்கிறது. இதனையும் முஹம்மது முறித்துள்ளார். சப்பாத் நாள் மிகவும் முக்கியம் என்றும் அதனை மீறியவர்களுக்கு தண்டனை கொடுக்கப்பட்டது என்று குர்-ஆனில் முஹம்மது கூறியுள்ளார், அதே நேரத்தில் அதனை மீறியுள்ளார். [62].

63. ஐந்தாவது கட்டளை – உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக

ஒரு கிறிஸ்தவனின் பெற்றோர்கள் அவிசுவாசிகளாக இருந்தாலும், அவர்களை அவன் நேசிக்கவேண்டும். ஆனால், முஹம்மதுவையும், அல்லாஹ்வையும் நம்பாத பெற்றோர்களை முஸ்லிம்கள் நேசிக்கமாட்டார்கள் என்று முஹம்மது குர்-ஆனில் கூறியுள்ளார். இதுமாத்திரமல்ல, ஒரு உண்மையான முஸ்லிமின் அறிகுறியே தன் நபியை பகைப்பவர்களை நேசிக்காமல் இருப்பது தான் என்று குர்-ஆனில் முஹம்மது கூறியுள்ளார். முஹம்மதுவின் இந்த செயலை பின்பற்றி ஒரு முஸ்லிம் தன் தந்தையின் மரணத்திற்கு காரணமாக இருந்திருக்கிறார்.  முஹம்மதுவின் இந்த போதனையினால், உலக முஸ்லிம்கள் ஒட்டுமொத்தமாக தங்கள் இஸ்லாமியரல்லாத பெற்றோர்களை பகைக்கிறார்கள், யெகோவா தேவனின் ஐந்தாவது கட்டளையை மீறி நடக்கிறார்கள். இப்படிப்பட்ட வெறுப்புணர்வை உண்டாகும் போதனையைச் செய்த முஹம்மதுவை கிறிஸ்தவர்கள் எப்படி ஒரு நல்ல தீர்க்கதரிசி என்று அங்கீகரித்துக் கொள்வார்கள்? இவர் ஒரு கள்ளத்தீர்க்கதரிசியே! [63]

64. ஆறாவது கட்டளை - கொலை செய்யாதிருப்பாயாக

மதினாவிற்கு இடம்பெயர்ந்த பின்னர் தன்னை விமர்சித்தவர்களை முஹம்மது கொன்றார். அபூ அஃபக் என்பவரையும், மர்வானின் மகள் அஸ்மாவையும் முஹம்மது தன் அடியார்களை அனுப்பி கொன்றார். தனிப்பட்ட முறையில் இவரது தீய செயல்களை விமர்சித்தார்கள் என்ற காரணத்தினால் இவர் அவர்களைக் கொன்றார், மட்டுமல்ல, புனிதப்போர் (ஜிஹாத்) என்ற பெயரில் உலகமனைத்திலும் பல்லாயிரகணக்கான மக்கள் அனுதினமும் மரிக்கிறார்கள். இவர்களின் ஆணிவேர் முஹம்மதுவும், அவரது போதனைகளும் தான். முக்கியமாக இஸ்லாமிய நாடுகளில் கிறிஸ்தவ சமுதாயம் அனேக கொடுமைகளை சந்தித்து வருகிறது. இந்த கொடுமைகளுக்கெல்லாம் காரணமான இவர் எப்படி ஒரு உண்மையான தீர்க்கதரிசியாக இருக்கமுடியும்? தேவனின் ஆறாவது கட்டளையையும் மீறியவர் எப்படி யெகோவா தேவன் அனுப்பிய தீர்க்கதரிசியாக இருக்கமுடியும்? [64]

65. ஏழாவது கட்டளை - விபசாரம் செய்யாதிருப்பாயாக

முஹம்மது விபச்சாரத்தை நியாயமான செயலாக மாற்றி முஸ்லிம்கள் திருமணம் செய்துக்கொள்ளாமலேயே அடிமைப்பெண்களிடம் உடலுறவு கொள்ளலாம் என்று சொல்லியுள்ளார். திருமணத்திற்கு வெளியே ஒரு பெண் மற்றும் ஆண் உடலுறவு கொள்வது என்பது இஸ்லாமியரல்லாதவர்களை பொருத்தமட்டில் விபச்சாரமாகும். முஸ்லிம்கள் இதனை எப்படி அழைத்துக்கொண்டாலும் இது விபச்சாரமே ஆகும். இப்படிப்பட்ட சட்டங்களை கொண்டுவந்தவர் நிச்சயமாக ஒரு தீர்க்கதரிசியாக இருக்கமுடியாது. இது ஒரு புறமிருக்க கைபர் என்ற ஊர் மீது தாக்குதல் செய்து, யூதர்களை கொன்றுவிட்டு, ஸபிய்யா என்ற பெண்ணின் கணவனையும் கொன்றுவிட்டு, அப்பெண்ணோடு விபச்சாரம் புரிந்தவர் முஹம்மது ஆவார். வேறுவகையில் சொல்லவேண்டுமென்றால், இது ஒரு கற்பழிப்பு ஆகும். ஒரு பெண்ணின் கணவரையும், பெற்றோர்களையும், இதர ஊர் மக்களையும் கொன்றுவிட்டு, அவர்களைக் கொன்ற நபரே அப்பெண்ணோடு மூன்று நாட்களுக்குப்பின் உடலுறவில் ஈடுபட்டால், அது கற்பழிப்பு தானே. உலகில் எந்த பெண்ணாவது தன் கணவனை, தந்தையைக் கொன்ற நபரோடு மூன்று நாளிலேயே கட்டிலில் மனைவியாக வாழ அனுமதிப்பாளா? முஹம்மது அப்பெண்ணை திருமணம் புரிந்து தான் உடலுறவு கொண்டார் என்றுச் சொல்வார்கள். ஆனால், அந்தப் பெண் இதனை எப்படி பார்ப்பாள், விபச்சாரமாகவும், கற்பழிப்பாகவுமே பார்ப்பாள். இந்த செயலில் ஈடுபட்டவர் எப்படி ஒரு தீர்க்கதரிசியாக இருக்கமுடியும்?  இவர் ஒரு கள்ளத்தீர்க்கதரிசி ஆவார். [65] 

66. எட்டாவது கட்டளை - களவு செய்யாதிருப்பாயாக

முஹம்மது அனேக வழிப்பறி கொள்ளைகளில் ஈடுபட்டார், வியாபாரிகளிடமிருந்த பொருட்களை அபகரித்துக்கொண்டார். வழிப்பறி கொள்ளையின் போது, பல உயிர்களையும் கொன்று குவித்தார். மேலும், தன்னை எதிர்த்தவர்கள் மீது போர் தொடுத்தார், பெண்களையும், பிள்ளைகளையும் அடிமைகளாக எடுத்துக்கொண்டார், போரில் பிடிபட்ட பெண்களை முஸ்லிம்கள் கற்பழிக்க அனுமதி அளித்தார், தற்காலிக திருமணம் என்ற ஒன்றை உருவாக்கி விபச்சாரத்தை நியாயப்படுத்தினார். இப்படி போரில் பிடிபட்ட கொள்ளையில் ஐந்தில் ஒரு பாகத்தை தான் எடுத்துக்கொண்டார். இப்படியெல்லாம் களவு செய்தவரை எப்படி கிறிஸ்தவர்கள் ஒரு தீர்க்கதரிசியாக கருதமுடியும்? இவர் கள்ள நபி என்று இந்நிகழ்ச்சிகள் நிருபிக்கின்றன. [66]

67. ஒன்பதாவது கட்டளை - பிறனுக்கு விரோதமாகப் பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக

முஹம்மதுவை எதிர்த்து பேசியதற்காக ஒரு யூதனை கொலை செய்ய முஹம்மது கட்டளையிட்டார். ஒருமுஸ்லிம் கொலை செய்ய சம்மதித்தார். அந்த யூதனை ஏமாற்றி கொலை செய்வதற்கு பொய் சொல்லட்டுமா என்று முஹம்மதுவிடம் கேட்டபோது, முஹம்மது அனுமதி அளித்தார்.  இதர மக்கள் இவரிடம் பொய் சொல்லக்கூடாது, ஆனால், இவர் தன் கொலை வெறியை தீர்த்துக்கொள்ள தன் சகாக்கள் பொய் சொல்ல அனுமதி அளித்துள்ளார். தேவன் பொய் சொல்வதை வெறுக்கிறார். ஆனால், முஹம்மதுவோ பொய் சொல்ல அனுமதி அளித்தார். இவர் எப்படி நபியாக இருக்கமுடியும்?  [67] 

68. பத்தாவது கட்டளை - பிறனுடைய மனைவியை இச்சியாதிருப்பாயாக

மற்றவர்களின் பொருட்களை, மனைவியை, வேலைக்காரனை இச்சியாதிருப்பாயாக என்று மோசேயின் 10வது கட்டளை சொல்கிறது. ஆனால், முஹம்மதுவோ, அனேக வழிப்பறி கொள்ளைகளை நடத்தி, வியாபாரிகளின் பொருட்கள், பெண்கள் என்று எல்லாவற்றையும் இச்சித்து எடுத்துக்கொண்டார். இது மாத்திரமல்ல, தன் வளர்ப்பு மகனின் மனைவியை அதாவது தன் மருமகளை திருமணம் செய்துக்கொண்டார். முஹம்மதுவின் வளர்ப்பு மகன் உயிரோடு இருக்கும் போதே, அவரது மனைவியை முஹம்மதுவிற்கு மனைவியாக கொடுத்தேன் என்று அல்லாஹ் கூறுகின்றார். கணவன்  உயிரோடு இருக்கும் போதே, அவன் மனைவியை அடுத்தவனுக்கு மனைவியாக்குவது இறைவனுக்கு தகுமா? மேலும், முஹம்மது தன் மருமகளை பார்க்கக்கூடாத நிலையில் பார்த்துவிட்டு  இச்சித்ததாக  இஸ்லாமிய சரித்திர ஆசிரியர் தபரி கூறுகின்றார், இதனையே குர்-ஆன் 33:37 ம் வசனம் "மனிதர்களுக்குப் பயந்து நீர் உம்முடைய மனத்தில் மறைத்து வைத்திருந்தீர்" என்று கூறுகின்றது. எது எப்படியோ இன்னொருவரின் மனைவியை முக்கியமாக மருமகளை திருமணம் செய்பவர் நிச்சயமாக உண்மை நபியாக இருக்கமுடியாது? மோசேயின் அனைத்து கட்டளைகளையும் மீறியவர் எப்படி நல்ல தீர்க்கதரிசியாக இருக்கமுடியும், கிறிஸ்தவர்கள் எப்படி இவரை நபி என்று நம்பமுடியும்? [68]

69. தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன்

இயேசு தேவக்குமாரனாக இருக்கிறார், உலக முறையின்படி அல்லாமல், நித்திய தேவக்குமாரனாக இயேசு இருக்கிறார். இதனை முஹம்மது மறுதலித்தார். கிறிஸ்தவத்தின் அடிப்படையை மறுதலிக்கும் முஹம்மது ஒரு கள்ளத் தீர்க்கதரிசியாவார். குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன். ஆகையால், இயேசு கொடுக்கும் ஜீவனை பெறாதவர் "முஹம்மது"  ஆவார், அதாவது ஒரு இரட்சிக்கப்படாத நபர் ஆவார், இயேசுவிடம் தன் பாவங்களை அறிக்கையிட்டு, பாவ மன்னிப்பை முஹம்மது பெறவில்லை. எனவே, இவரை ஒரு உண்மையான தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் ஒப்புக்கொள்ளமுடியாது. வேறு வகையில் சொல்லவேண்டுமென்றால், பரலோகத்திற்குள் நுழைந்து, தேவனோடு நித்திய நித்தியமாக வாழும் தகுதியை முஹம்மது இழந்துவிட்டார்.[69]

70. வேறொரு சுவிசேஷத்தை ஒருவன் உங்களுக்குப் பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்

நம் வேதம் எப்படி முன்னறிவித்துள்ளதோ, அதே போல முஹம்மது வேறு ஒரு சுவிசேஷத்தை பிரசங்கித்தார்.  கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தைப் புரட்ட சிலர் எழும்புவார்கள், அவர்கள் சபிக்கப்பட்டவர்கள் என்றும், ஒருவேளை ஒரு தூதன் வானத்திலிருந்து வந்து வேறொரு சுவிசேஷத்தைச் சொன்னால், அவனும் சபிக்கப்பட்டவன் என்றும் பைபிள் கூறுகிறது. இதே போல, முஹம்மது தனக்கு வானத்திலிருந்து ஒரு தூதன் வந்து குர்-ஆனை வெளிப்படுத்தினார் என்று கூறினார். பைபிளின் அடிப்படையில் முஹம்மது ஒரு கள்ளத் தீர்க்கதரிசி ஆவார், மேலும் அவர் சபிக்கப்பட்டவராவார். இப்படிப்பட்ட முஹம்மது எப்படி ஒரு உண்மையான தீர்க்கதரிசி என்று பைபிளைப் படிக்கும் கிறிஸ்தவர்கள் நம்புவார்கள்? [70]

அடிக்குறிப்புக்கள்:

அனைத்து குர்-ஆன் வசனங்கள் "முஹம்மது ஜான்" குர்-ஆன் தமிழாக்கத்திலிருந்து எடுக்கப்பட்டதாகும்.

[61] குர்-ஆன் 66:1, 2 & ஸஹீஹ் புகாரி  எண்கள் 2679, 3836, 5201, 5202, 6108 & 6648

66:1. நபியே! உம் மனைவியரின் திருப்தியை நாடி, அல்லாஹ் உமக்கு அனுமதித்துள்ளதை ஏன் விலக்கிக் கொண்டீர்? மேலும் அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன், மிக்க கிருபையுடையவன்.

66:2. அல்லாஹ் உங்களுடைய சத்தியங்களை (சில போது தக்க பரிகாரங்களுடன்) முறித்து விடுவதை உங்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறான்; மேலும் அல்லாஹ் உங்கள் எஜமானன். மேலும், அவன் நன்கறிந்தவன்; ஞானம் மிக்கவன்.

2679. 'சத்தியம் செய்கிறவர் அல்லாஹ்வின் மீதே சத்தியம் செய்யட்டும்; அல்லது வாய்மூடி இருக்கட்டும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். Volume :3 Book :52

3836. இப்னு உமர்(ரலி) அறிவித்தார். 

"சத்தியம் செய்ய விரும்புகிறவர் அல்லாஹ்வின் மீதே தவிர (வேறெவர் மீதும்) சத்தியம் செய்ய வேண்டாம்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஏனெனில், குறைஷிகள் தம் முன்னோர்களின் மீது சத்தியம் செய்து வந்தார்கள். எனவே, நபி(ஸல்) அவர்கள், 'உங்கள் முன்னோர்களின் மீது சத்தியம் செய்யாதீர்கள்" என்று கூறினார்கள். Volume :4 Book :63 

5201. அனஸ்(ரலி) அறிவித்தார் 

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , தம் துணைவியரிடம் செல்லமாட்டேன் எனச் சத்தியம் செய்துவிட்டுத் தம் மாடி அறைக்குச் சென்று அமர்ந்துகொண்டார்கள். இருபத்தொன்பதாம் நாள் (அங்கிருந்து) இறங்கி வந்தார்கள். அப்போது, 'ஒரு மாதம் (துணைவியரை) நெருங்கமாட்டேன் எனச் சத்தியம் செய்தீர்களே, இறைத்தூதர் அவர்களே! (இன்னும் ஒரு நாள் மீதி இருக்கிறதே அதற்குள் வந்துவிட்டீர்களே?)'' என்று வினவப்பட்டது. அதற்கு, 'இந்த மாதம் இருபத்தொன்பது நாள்கள் தாம்'' என்று நபியவர்கள் பதிலளித்தார்கள். Volume :5 Book :67

5202. உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார் 

நபி(ஸல்) அவர்கள் தம் துணைவியரில் சிலரிடம் ஒருமாதம் செல்லமாட்டேன் எனச் சத்தியம் செய்தார்கள். இருபத்தொன்பதாம் நாள் 'காலையில்' அல்லது 'மாலையில்' துணைவியரிடம் சென்றார்கள். அப்போது அவர்களிடம், 'இறைத்தூதர் அவர்களே! அவர்களிடம் ஒரு மாதம் செல்ல மாட்டேன் எனச் சத்தியம் செய்(திருந்)தீர்களே?' என்று கேட்கப்பட்டது. நபி(ஸல்) அவர்கள், 'மாதம் என்பது இருபத்தொன்பது நாள்களாகவும் இருக்கலாம்'' என்று பதிலளித்தார்கள். Volume :5 Book :67

6108. இப்னு உமர்(ரலி) அறிவித்தார். 

(என் தந்தை) உமர் இப்னு கத்தாப்(ரலி) அவர்கள் பயணிகள் சிலரிடையே இருந்து கொண்டிருந்தபோது அவர்களை அடைந்தேன். அப்போது உமர்(ரலி) அவர்கள் தம் தந்தையின் மீது சத்தியம்செய்தார்கள். உடனே இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மக்களை அழைத்து, 'அறிந்து கொள்ளுங்கள்! உங்கள் தந்தையர் மீது சத்தியம் செய்வதை அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்துவிட்டான். சத்தியம்செய்யமுற்படுபவர் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்யட்டும். அல்லது மெளனமாக இருந்துவிடட்டும்' என்று கூறினார்கள். Volume :6 Book :78

6648. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' 

உங்கள் தந்தையர் பெயரால் சத்தியம் செய்யாதீர்கள். என இப்னு உமர்(ரலி) அறிவித்தார். Volume :7 Book :85     

[62] ஸஹீஹ் புகாரி எண்: 3486 & ஸஹீஹ் முஸ்லிம் எண்கள் 1549, 1550, 1551, 1552, 1553 &  குர்-ஆன் 2:65, 4:154 & 16:124

3486. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(உலகில்) இறுதிச் சமுதாயமான நாம் தாம் மறுமையில் (தகுதியிலும், சிறப்பிலும்) முந்தியவர்கள் ஆவோம். ஆயினும், சமுதாயங்கள் அனைத்தும் நமக்கு முன்பே வேதம் வழங்கப்பட்டுவிட்டன. நாம் அவர்களுக்குப் பிறகு வேதம் வழங்கப்பட்டோம். இது (வெள்ளிக்கிழமை, அவர்கள்) கருத்து வேறுபட்ட நாளாகும். எனவே, நாளை (சனிக்கிழமை) யூதர்களுக்குரியதும் நாளைக்கும் அடுத்த நாள் (ஞாயிற்றுக்கிழமை) கிறிஸ்தவர்களுக்குரியதும் ஆகும். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.  Volume :4 Book :60

3211. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

ஜும்ஆ நாள் (வெள்ளிக்கிழமை) வந்துவிட்டால் வானவர்கள் (ஜும்ஆ தொழுகை நடக்கும்) பள்ளிவாசலின் நுழைவாயில்களில் ஒவ்வொரு வசாலிலும் (இருந்த வண்ணம்) முதன் முதலாக உள்ளே நுழைபவரையும் அடுத்தடுத்து உள்ளே நுழைபவரையும் (அவர்களின் பெயர்களை) எழுதிப் பதிவு செய்து கொண்டிருப்பார்கள். இமாம், உரை மேடையில் (உரையாற்றுவதற்காக) அமர்ந்துவிட்டால் (பதிவு செய்யும்) ஏடுகளைச் சுருட்டி வைத்துவிட்டு (அவரின் உபதேச) உரையைச் செவிமடுத்து வண்ணம் (உள்ளே) வருவார்கள். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். Volume :3 Book :59

ஸஹீஹ் முஸ்லிம் எண்கள் 1549 & 1550, 1551, 1552, 1553 

1549. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நாம்தாம் (காலத்தால்) பிந்தியவர்களாகவும் மறுமை நாளில் (தகுதியால்) முந்தியவர்களாகவும் இருப்போம். எனினும், (நமக்கு முன்வந்த) ஒவ்வொரு சமுதாயத்தாரும் (யூத மற்றும் கிறித்தவர்) நமக்கு முன்பே வேதம் வழங்கப்பெற்றனர். அவர்களுக்குப் பின்புதான் நாம் வேதம் வழங்கப்பெற்றோம். அல்லாஹ் நம்மீது விதியாக்கியுள்ள இந்த (வெள்ளிக்கிழமை) நாளை அல்லாஹ் நமக்காக(த் தேர்ந்தெடுத்து) அறிவித்தான். (வார வழிபாட்டு நாள் தொடர்பாக) மக்கள் நம்மைப் பின்தொடர்பவர்களாகவே உள்ளனர். (வெள்ளிக்கிழமை நமது வழிபாட்டு நாள் எனில்) அடுத்த நாள் (சனிக்கிழமை) யூதர்களின் (வழிபாட்டு) நாளாகும். அதற்கடுத்த நாள் (ஞாயிற்றுக் கிழமை) கிறித்தவர்களின் (வழிபாட்டு) நாளாகும்.  இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். - மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றிலும் "நாம் (காலத்தால்) பிந்தியவர்களாவோம்; மறுமை நாளில் (தகுதியால்) முந்தியவர்களாவோம்" என்றே ஹதீஸ் தொடங்குகிறது.  Book :7

1550. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நாமே (காலத்தால்) பிந்தியவர்களாகவும் மறுமை நாளில் (தகுதியால்) முந்தியவர்களாகவும் இருப்போம். நாமே சொர்க்கத்தில் முதலில் நுழைவோம். எனினும், (யூதர் மற்றும் கிறித்தவரான) அவர்கள் நமக்கு முன்பே வேதம் வழங்கப்பெற்றனர். அவர்களுக்குப் பின்புதான் நாம் வேதம் வழங்கப்பெற்றோம். அவர்கள் கருத்து வேறுபாடு கொண்ட விஷயத்தில் அல்லாஹ் நமக்குச் சத்தியத்திற்கு வழிகாட்டினான். இந்த (ஜுமுஆ) நாள் விஷயத்திலும் (அதை வார வழிபாட்டு நாளாக ஏற்பது தொடர்பாக) அவர்கள் கருத்து வேறுபாடு கொண்டனர். அல்லாஹ் நமக்கு அந்த நாளை அறிவித்துத் தந்தான். (இதில் மக்கள் அனைவரும் நம்மைப் பின்தொடரக்கூடியவர்களே ஆவர்.) இன்று (வெள்ளிக்கிழமை) நமக்குரிய (வழிபாட்டு) நாளாகும். நாளை (சனிக்கிழமை) யூதர்களுக்குரிய நாளாகும். மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) கிறித்தவர்களுக்குரிய நாளாகும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. Book :7

2:65. உங்க(ள் முன்னோர்க)ளிலிருந்து சனிக் கிழமையன்று (மீன் பிடிக்கக் கூடாது என்ற) வரம்பை மீறியவர்களைப்பற்றி நீங்கள் உறுதியாக அறிவீர்கள். அதனால் அவர்களை நோக்கி "சிறுமையடைந்த குரங்குகளாகி விடுங்கள்" என்று கூறினோம்.

4:154. மேலும், அவர்களிடம் வாக்குறுதி வாங்கும் பொருட்டு, அவர்கள் மேல் தூர் (ஸினாய் மலையை) உயர்த்தினோம்; இன்னும் "இந்த வாசலில் தலை குனிந்து (தாழ்மையாக) நுழையுங்கள்" என்று சொன்னோம்; மேலும் "(மீன் வேட்டையாடி) சனிக்கிழமையில் வரம்பு மீறாதீர்கள்" என்றும் அவர்களுக்கு கூறினோம்; இன்னும் அவர்களிடமிருந்து மிக உறுதியான வாக்குறுதியும் வாங்கினோம்.

16:124. "சனிக்கிழமை (ஓய்வு நாள்)" என்று ஏற்படுத்திய தெல்லாம், அதைப்பற்றி எவர்கள் மாறுபட்டு(த் தர்க்கித்து)க் கொண்டிருந்தார்களோ, அவர்களுக்குத்தான் - நிச்சயமாக உம் இறைவன் கியாம நாளில் அவர்கள் மாறுபட்டு(த் தர்க்கித்து)க் கொண்டிருந்தவை பற்றி அவர்களுக்கிடையே தீர்ப்புச் செய்வான்.

[63] குர்-ஆன் 58:22, 9:23, 24 & Ibn Sa'ad's Kitab Al-Tabaqat Al-Kabir, Volume II, p. 201

குர்-ஆன் 58:22

அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பும் சமூகத்தினர், அல்லாஹ்வையும் அவனது தூதரையும் பகைத்துக் கொண்டவர்களை நேசிப்பவர்களாக (நபியே!) நீர் காணமாட்டீர். அவர்கள் தங்கள் பெற்றோராயினும் தங்கள் புதல்வர்களாயினும் தங்கள் சகோதரர்களாயினும் தங்கள் குடும்பத்தினராயினும் சரியே, (ஏனெனில்) அத்தகையவர்களின் இதயங்களில், (அல்லாஹ்) ஈமானை எழுதி(ப் பதித்து) விட்டான், மேலும் அவன் தன்னிடமிருந்து (அருள் என்னும்) ஆன்மாவைக் கொண்டு பலப்டுத்தியிருக்கிறான். சுவர்க்கச் சோலைகளில் என்றென்றும் இருக்கும்படி அவர்களைப் பிரவேசிக்கச் செய்வான், அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டு இருக்கும். அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொண்டான், அவர்களும் அவனைப் பொருந்திக் கொண்டார்கள். அவர்கள்தாம் அல்லாஹ்வின் கூட்டத்தினர், அறிந்துகொள்க: நிச்சயமாக அல்லாஹ்வின் கூட்டத்தினர்தாம் வெற்றி பெறுவார்கள்.  (58:22)

குர்-ஆன் 9:23, 24

ஈமான் கொண்டவர்களே! உங்கள் தந்தைமார்களும் உங்கள் சகோதரர்களும், ஈமானை விட்டு குஃப்ரை நேசிப்பார்களானால், அவர்களை நீங்கள் பாதுகாப்பளர்களாக எடுத்துக் கொள்ளாதீர்கள். உங்களில் யாரேனும் அவர்களை பாதுகாப்பாளர்களாக எடுத்துக் கொண்டால், அவர்கள் தான் அநியாயக்காரர்கள் ஆவார்கள்.  (9:23)

(நபியே!) நீர் கூறும்; உங்களுடைய தந்தைமார்களும், உங்களுடைய பிள்ளைகளும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய மனைவிமார்களும், உங்களுடைய குடும்பத்தார்களும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டம் (எங்கே) ஏற்பட்டு விடுமோ என்று நீங்கள் அஞ்சுகின்ற (உங்கள்) வியாபாரமும், நீங்கள் விருப்பத்துடன் வசிக்கும் வீடுகளும், அல்லாஹ்வையும் அவன் தூதரையும், அவனுடைய வழியில் அறப்போர் புரிவதையும் விட உங்களுக்கு பிரியமானவையாக இருக்குமானால், அல்லாஹ் அவனுடைய கட்டளையை (வேதனையை)க் கொண்டுவருவதை எதிர்பார்த்து இருங்கள் - அல்லாஹ் பாவிகளை நேர்வழியில் செலுத்துவதில்லை.  (9:24)

They (the narrators) said: The Apostle of Allah sent a force under al-Dahhak Ibn Sufyan Ibn 'Awf Ibn Abu Bakr al-Kilabi, against al-Qurara. Al-Asyad Ibn Salamah Ibn Qart was with him. They encountered them at al-Zujj, the Zujj of Lawah and invited them to embrace Islam. They refused, so they attacked them and forced them to flee. Then al-Asyad met his father Salamah who was on his own horse, in a pond of al-Zujj. He invited his father to embrace Islam promising him amnesty. He (father) abused him and his creed. Consequently al-Asyad hamstrung the horse of his father. When the horse fell on his hoofs Salamah reclined on his spear in water. He (al-Asyad) held him till one of them (Muslims) came there and killed him. His son did not kill him. (Ibn Sa'ad's Kitab Al-Tabaqat Al-Kabir, English translation by S. Moinul Haq, M.A., PH.D assisted by H.K. Ghazanfar M.A. [Kitab Bhavan Exporters & Importers, 1784 Kalan Mahal, Daryaganj, New Delhi - 110 002 India], Volume II, p. 201)

[64] இப்னு இஷாக்கின், சீரத் ரஸுல்லல்லாஹ்  பக்கம் 675  மற்றும் ஸஹீஹ் புகாரி எண் 392

Ibn Ishaq, Sirat Rasul Allah, translated as, The Life of Muhammad, (tr. A. Guillaume), Karachi: Oxford University Press, 1998, p. 675 (பார்க்க: http://www.answering-islam.org/tamil/authors/green/assassins.html)

ஸஹீஹ் புகாரி எண் 392

'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாருமில்லை' என்று மக்கள் (சான்று) கூறும் வரை அவர்களோடு போராட வேண்டுமென்று நான் ஏவப்பட்டுள்ளேன். அந்த (லாயிலாஹ இல்லல்லாஹ் என்ற) கலிமாவை அவர்கள் கூறி, நம்முடைய தொழுகையைத் தொழுது, நம்முடைய கிப்லாவை முன்னோக்கி, நாம் அறுப்பது போல் அறுத்து வருவார்களானால், தக்க காரணமின்றி அவர்களின் உயிர், பொருளுக்குச் சேதம் ஏற்படுத்துவது நமக்கு விலக்கப்பட்டுள்ளது. அவர்களின் விசாரணை அல்லாஹ்வின் நாட்டத்தைப் பொறுத்தாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார். Volume :1 Book :8

[65] குர்ஆன் 4:24 & ஸஹீஹ் புகாரி எண் 371, 4200, 4201 & 4212

371. நபி(ஸல்) அவர்கள் கைபர் போருக்கு ஆயத்தமானார்கள். அங்கே நாங்கள் அதிகாலைத் தொழுகையை அதிகாலையின் வெண்மை தெரியும் முன்னர் தொழுதோம். பின்னர் நபி(ஸல்) அவர்கள் தங்களின் வாகனத்தில் ஏறினார்கள். அபூ தல்ஹா(ரலி) அவர்களும் ஏறினார். அவர்களுக்குப் பின்னால் நான் ஏறி அமர்ந்தேன். நபி(ஸல்) அவர்கள் கைபர் கணவாயினுள் சென்றார்கள். என்னுடைய மூட்டு நபி(ஸல்) அவர்களின் தொடையைத் தொட்டது. பின்னர் நபி(ஸல்) அவர்கள் தங்களின் தொடையிலிருந்த வேஷ்டியை நீக்கினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்களின் தொடையின் வெண்மையை பார்த்தேன். நபி(ஸல்) அவர்கள் ஊருக்குள்ளே நுழைந்தபோது 'அல்லாஹ் பெரியவன்! கைபர் வீழ்ந்துவிட்டது! நிச்சயமாக நாம் ஒரு (எதிரிக்) கூட்டத்திடம் பகைமையுடன் இறங்கினால் எச்சரிக்கப்பட்ட அம்மக்களின் காலை நேரம் மோசமானதாம்விடும்' என்று மும்முறை கூறினார்கள். அவ்வூர் மக்கள் தங்களின் வேலைகளுக்காக வெளியே வந்தபோது நபி(ஸல்) அவர்களைப் பார்த்ததும், 'முஹம்மதும் அவரின் பட்டாளமும் வந்துள்ளார்கள்' என்று (பதட்டமாகக்) கூறினார்கள். 

நாங்கள் கைபரைப் பலவந்தமாகக் கைப்பற்றினோம். போர்க் கைதிகளெல்லாம் ஒன்று சேர்க்கப்பட்டபோது 'திஹ்யா' என்ற நபித்தோழர் வந்து 'இறைத்தூதா அவர்களே! கைதிகளிலுள்ள ஒரு பெண்ணை எனக்குக் கொடுங்கள்' என்று கேட்டார். 'நீர் போய் ஒரு பெண்ணை தேர்ந்தெடுத்துக் கொள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அவர் சென்று ஸஃபிய்யா பின்த் ஹுயய் என்ற பெண்ணைத் தேர்ந்தெடுத்தார். அப்போது ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! 'குறைளா' மற்றும் 'நளீர்' என்ற குலத்தின் தலைவி ஸஃபிய்யா பின்த் ஹுயய் என்ற பெண்ணையா திஹ்யாவிற்குக் கொடுத்துள்ளீர்கள். அந்தப் பெண் தங்களுக்கே தகுதியானவள்' என்றார். அப்போது 'அப்பெண்ணையும் திஹ்யாவையும் அழைத்து வாரும்' என்று நபி(ஸல்) அவர்கள் அவரிடம் கூறினார்கள். அப்பெண் அழைத்து வரப்பட்டார். அப்பெண் வந்ததும் 'நீ கைதிகளிலிருந்து வேறொரு பெண்ணைத் தேர்ந்தெடுத்துக் கொள்' என்ற திஹ்யாவிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நபி(ஸல்) அப்பெண்ணை விடுதலை செய்து பின்னர் அவரைத் திருமணம் செய்தார்கள். 

இந்த ஹதீஸை அறிவிக்கிற அனஸ்(ரலி) அவர்களிடம் ஸாபித் என்ற தோழர், 'அபூ ஹம்சாவே நபி(ஸல்) அப்பெண்ணுக்கு எவ்வளவு மஹர் கொடுத்தார்கள்?' என்று கேட்டதற்கு 'அவரையே மஹராகக் கொடுத்தார்கள்; அதாவது அவரை விடுதலை செய்து பின்னர் மணந்தார்கள்' எனக் கூறினார். 

நாங்கள் (கைபரிலிருந்து) திரும்பி வரும் வழியில் 'ஸஃபிய்யா' அவர்களை உம்மு ஸுலைம்(ரலி) மணப்பெண்ணாக ஆயத்தப்படுத்தி நபி(ஸல்) அவர்களிடம் இரவில் ஒப்படைத்தார். மறுநாள் காலை நபி(ஸல்) அவர்கள் புது மாப்பிள்ளையாகத் தோன்றினார்கள். அப்போது நபி(ஸல்) ஒரு விரிப்பை விரித்து 'உங்களில் யாரிடமாவது ஏதாவது (சாப்பிடுகிற) பொருள்கள் இருந்தால் கொண்டு வந்து இதில் போடுங்கள்' என்று கூறினார்கள். உடனே ஒருவர் பேரீச்சம் பழத்தைக் கொண்டு வந்தார். வேறு ஒருவர் நெய்யைக் கொண்டு வந்தார். ஒருவர் மாவைக் கொண்டு வந்தார். (இப்படி எல்லோரும் கொண்டுவந்த) அவற்றையெல்லாம் சேர்த்து ஒன்றாகக் கலந்தார்கள். அது நபி(ஸல்) அவர்களின் 'வலீமா' எனும் மணவிருந்தாக அமைந்தது" என அனஸ்(ரலி) அறிவித்தார். 

"அவளுடைய உடல் முழுவதையும் மறைக்கும் விதத்தில் ஒரே ஆடையை அணிந்தாலும் அது அவளுக்குப் போதுமானதாகும்" என இக்ரிமா கூறினார். Volume :1 Book :8

4200. அனஸ்(ரலி) அறிவித்தார். 

கைபருக்கு அருகே (ஓரிடத்தில்) நபி(ஸல்) அவர்கள் இருட்டிலேயே சுப்ஹுத் தொழுதுவிட்டு பிறகு, 'அல்லாஹ் மிகப் பெரியவன். கைபர் பாழாகிவிட்டது. நாம் ஒரு சமுதாயத்தின் களத்தில் (அவர்களுடன் போரிட) இறங்குவோமாயின் எச்சரிக்கப்பட்ட அவர்களுக்கு அது மிகக் கெட்ட காலையாக அமையும்" என்று கூறினார்கள். 

கைபர்வாசிகள் (முஸ்லிம் படைகளைக் கண்டதும்) வீதிகளில் ஓடினர். அப்போது நபி(ஸல்) அவர்கள் (தம்முடன்) போரிட்டவர்களைத் தாக்கினார்கள். அவர்களின் குடும்பத்தின(ரான பெண்கள், சிறுவர்கள் ஆகியோ)ரைத் கைது செய்தார்கள். கைதியாகப் பிடிக்கப்பட்டவர்களில் ஸஃபிய்யா பின்த் ஹுயை அவர்களும் ஒருவர். அவர்கள் (முதலில்) திஹ்யா அல் கல்பீ(ரஹ்) அவர்களிடம் (அன்னாரின் போர்ச் செல்வத்தின் பங்காகப்) போய்ச் சேர்ந்தார்கள். பிறகு ஸஃபிய்யா அவர்கள் நபி(ஸல்) அவர்களுக்கு சொந்தமானார்கள். அவரின் விடுதலையையே மஹ்ராக ஆக்கி(அவரை நபி -ஸல் - அவர்கள் மணமுடித்துக்) கொண்டார்கள். 

அப்துல் அஸீஸ் இப்னு சுஹைப்(ரஹ்) கூறினார்: 

இந்த ஹதீஸை ஸாபித்(ரஹ்) அறிவிக்கும்போது அவர்களிடம், 'அபூ முஹம்மதே! நபி(ஸல்) அவர்கள் என்ன மஹ்ர் கொடுத்தார்கள் என்று அனஸ்(ரலி) அவர்களிடம் நீங்கள் தான் கேட்டீர்களா?' என்று கேட்டேன். அதற்கு ஸாபித் அவர்கள் தங்களின் கருத்தை உறுதிப்படுத்தும் விதமாக ("ஆம்" என்று கூறுவது போன்று) தம் தலையை அசைத்தார்கள். Volume :4 Book :64

4201. அனஸ்(ரலி) அறிவித்தார். 

(கைபர் போரில்) ஸஃபிய்யா பின்த்ஹுயை அவர்களை நபி(ஸல்) அவர்கள் கைது செய்து, பின்னர் அவர்களை விடுதலை செய்து, தாமே அவர்களை மணமுடித்தும் கொண்டார்கள். அறிவிப்பாளர்களில் ஒருவரான ஸாபித்(ரஹ்) கூறினார்: 

இச்செய்தியைக் கூறுகையில் அனஸ்(ரலி) அவர்களிடம் 'நபி(ஸல்) அவர்கள் என்ன மஹ்ர் கொடுத்தார்கள்" என்று கேட்டேன். '(ஸஃபிய்யா (ரலி) அவர்களின் விடுதலையையே அவர்களின் மஹ்ராக ஆக்கினார்கள்" என்று அனஸ்(ரலி) பதிலளித்தார்கள். Volume :4 Book :64

4212. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். 

நபி(ஸல்) அவர்கள் ஸஃபிய்யா பின்த் ஹுயை அவர்களுடன் கைபர் வழியில் ('சத்துஸ் ஸஹ்பா' என்னும் இடத்தில்) மூன்று நாள்கள் தங்கி வீடு கூடினார்கள். ஸஃபிய்யா(ரலி) 'பர்தா' முறை விதியாக்கப்பட்டவர்களில் (-நபியவர்களின் துணைவியரில்-) ஒருவராக இருந்தார்கள். Volume :4 Book :64

[66] புத்தகத்தின் பெயர்: ரஹீக் 

ஆசிரியர்:இஸ்லாமிய பேரறிஞர் ஸஃபிய்யூர்  ரஹ்மான்.

தமிழாக்கம்: மௌலவி முஃப்தி உமர் ஷரீஃப் காசிமி

பக்கம்:  200 மற்றும் 201ம் பக்கங்கள்.

புத்தகத்தின் தனிச்சிறப்பு: உலகளாகிய போட்டியில் முதல் பரிசு பெற்ற நூல். இந்த புத்தகம் இதர 170 புத்தகங்களோடு போட்டியிட்டு, முதல் பரிசை தட்டிச் சென்றது (ஆங்கிலத்தில்: Ar-Raheeq Al-Makhtum - en.wikipedia.org/wiki/Ar-Raheeq_Al-Makhtum)

ஆங்கிலத்தில் இந்த புத்தகத்தை படிக்க:http://www.islamhouse.com/51776/en/en/books/The_Sealed_Nectar

தமிழில் இப்புத்தகத்தை படிக்க: http://www.islamkalvi.com/portal/?p=4989

மூன்று வழிப்பறி கொள்ளைகள் பற்றிய சுருக்கம்:

முதல் வழிப்பறிக் கொள்ளை (First Raid): ஸய்ஃபுல் பஹர்

ஹிஜ்ரி 1, ரமழான் (கி.பி. 623 மார்ச்) மாதம் ஒரு படைப் பிரிவை நபி (ஸல்) அவர்கள் அனுப்பினார்கள். 30 முஹாஜிர்கள் இந்தப் பிரிவில் இடம்பெற்றனர். அவர்களுக்கு ஹம்ஜா(ரழி) அவர்களைத் தலைவராக ஆக்கினார்கள். ஷாமிலிருந்து மக்காவை நோக்கி வந்து கொண்டிருந்த குறைஷிகளின் வியாபாரக் குழுவை வழி மறிப்பதற்காக இவர்கள் சென்றார்கள். இந்த வியாபாரக் கூட்டத்தில் முந்நூறு நபர்களும் அவர்களுக்குத்  தலைமையேற்று அபூஜஹ்லும் வந்து  கொண்டிருந்தான். 'ஈஸ்' என்ற நகரத்தின் ஓரத்தில்  உள்ள 'ஸய்ஃபுல் பஹ்ர்' எனும் இடத்தை இரு கூட்டத்தினரும் அடைந்த போது  சண்டையிடுவதற்காக அணிவகுத்தனர். ஆனால், இரு கூட்டதினருக்கும் நண்பராக இருந்த மஜ்தி இப்னு அம்ர் அல்ஜுஹனி என்பவர் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தி போரைத் தவிர்க்கச் செய்தார்.

இப்போல் நபி (ஸல்) ஹம்ஜாவுக்கு வெள்ளை நிறக் கொடியைக் கொடுத்தார்கள். இதுதான் நபி (ஸல்) அவர்கள் நிறுவிய முதல் கொடியாகும். இக்கொடியை அபூ மர்ஸத் கன்னாஸ் இப்னு ஹுஸைன் அல்கனவி (ரழி) ஏந்தியிருந்தார்கள்.

இரண்டாம் வழிப்பறிக் கொள்ளை (Second Raid):  'ராபிக்'

ஹிஜ்ரி 1, ஷவ்வால் (கி.பி. 623 ஏப்ரல்) மாதம் நபி (ஸல்) அவர்கள் 'ராபிக்' என்ற இடத்தை நோக்கி ஒரு படைப் பிரிவை அனுப்பினார்கள். இதற்குத் தலைவராக உபைதா இப்னுல் ஹாரிஸ் இப்னுல் முத்தலிப் (ரழி) இருந்தார். இப்படையில் 60 முஹாஜிர்கள் கலந்து கொண்டார்கள். இவர்கள் 'பத்தன் ராபிக்' என்ற இடத்தில் அபூஸுஃப்யானைச் சந்தித்தார்கள். இரு கூட்டத்தார்களும் ஒருவரை நோக்கி ஒருவர் அம்பெய்து கொண்டனர். மற்றபடி, உக்கிரமான சண்டை ஏதும் நடைபெறவில்லை.

காஃபிர்களின் படையிலிருந்த அல்மிக்தாத் இப்னு அம்ர் அல்பஹ்ரானி, உத்பான் இப்னு கஸ்வான் அல்மாஜினி ஆகிய இருவர் முஸ்லிம்களுடன் இணைந்து கொண்டனர். இவர்கள் முஸ்லிமாகத்தான் இருந்தனர். என்றாலும், ஹிஜ்ராவிற்காக மக்காவிலிருந்து வெளியேற முடியாத காரணத்தால், காஃபிர்களுடன் சேர்ந்திருந்தனர். எப்பொழுதாவது சந்தர்ப்பம் கிடைத்தால் தப்பித்து முஸ்லிம்களிடம் சேர்ந்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் இந்த வியாபாரக் கூட்டத்துடன் வந்திருந்தனர். 

இந்தப் படையின் கொடி வெள்ளை நிறமாக இருந்தது. இதை மிஸ்தஹ் இப்னு உஸாஸா இப்னு அல் முத்தலிப் இப்னு அப்து மனாஃப் ஏந்தியிருந்தார்கள்.

மூன்றாம்  வழிப்பறிக் கொள்ளை (Third Raid):  'கர்ரார்'

ஹிஜ்ரி 1, துல்கஅதா (கி.பி. 623 மே) மாதம் 'கர்ரார்' என்ற இடத்திற்கு ஸஅது இப்னு அபீ வக்காஸ் (ரழி) தலைமையில் படைப் பிரிவு ஒன்றை நபி (ஸல்) அனுப்பினார்கள். 

குறைஷிகளின் வியாபாரக் கூட்டத்தை இடைமறிப்பதற்காகப் புறப்பட்ட இவர்களிடம் 'கர்ரார்' என்ற இடத்தை தாண்டிச் செல்லக் கூடாது என நபி (ஸல்) அவர்கள  வலியுறுத்தினார்கள். இந்தப் படை கால்நடையாகவே சென்றது. பகலில் பதுங்குவதும் இரவில் நடப்பதுமாக வியாழன் காலை கர்ராரை அடைந்தது. ஆனால், அந்த வியாபாரக் கூட்டமோ இவர்கள் சென்றடைவதற்கு ஒரு நாள் முன்னதாகவே அந்த இடத்தைக் கடந்து சென்று விட்டிருந்ததால், இவர்கள் சண்டையின்றித் திரும்பினர். இந்தப் படையின் கொடி வெள்ளை நிறமாக இருந்தது. இதை மிக்தாத் இப்னு அம்ர் (ரழி) ஏந்தியிருந்தார்கள்.

மேலும் இந்த கட்டுரையை படிக்கவும்: http://www.answering-islam.org/Shamoun/antagonizing.htm

[67]  ஸஹீஹ் முஸ்லிம் எண்: 3682

பாடம் : 42 யூதர்களின் தலைவன் கஅப் பின் அல்அஷ்ரஃப் கொல்லப்படுதல்.

3682. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "கஅப் பின் அல்அஷ்ரஃபை வீழ்த்துவதற்கு (தயாராயிருப்பவர்) யார்? அவன் அல்லாஹ்வுக்கும் அல்லாஹ்வின் தூதருக்கும் தொல்லை கொடுத்துவிட்டான்" என்று சொன்னார்கள்.

உடனே முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! நான் அவனைக் கொல்வதை தாங்கள் விரும்புகிறீர்களா?" என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "ஆம்" என்று விடையளித்தார்கள்.

முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், "நான் (அவனைக் குதூகலப்படுத்தி நம்பவைப்பதற்காக உங்களைக் குறை கூறிப்) பேச என்னை அனுமதியுங்கள்" என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "பேசு" என அனுமதியளித்தார்கள்.

முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள் கஅப் பின் அல்அஷ்ரஃபிடம் சென்று, "இந்த மனிதர் (முஹம்மத் -ஸல்), எங்களிடம் (மக்களுக்குத் தருவதற்காக) தான தர்மத்தை விரும்புகிறார். எங்களுக்குக் கடும் சிரமம் தந்துவிட்டார்" என்று (நபி (ஸல்) அவர்களைக் குறை கூறி சலித்துக்கொள்ளும் விதத்தில்) கூறினார்கள். இதைக் கேட்ட கஅப் பின் அல்அஷ்ரஃப், "அல்லாஹ்வின் மீதாணையாக! இன்னும் அதிகமாக நீங்கள் அவரிடம் சலிப்படைவீர்கள்" என்று கூறினான்.

அதற்கு முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், "நாங்கள் (தெரிந்தோ தெரியாமலோ) அவரை இப்போது பின்பற்றிவிட்டோம். அவரது விவகாரம் எதில் முடிவடைகிறது என்பதைப் பார்க்காமல் அவரைவிட்டு (விலகி)விட நாங்கள் விரும்பவில்லை. (அதனால்தான் அவருடன் இருந்துகொண்டிருக்கிறோம்)" என்று (சலிப்பாகப் பேசுவதைப் போன்று) கூறிவிட்டு, நீர் எனக்குச் சிறிதளவு கடன் தர வேண்டும் என நான் விரும்புகிறேன்" என்று கூறினார்கள்.

அதற்கு கஅப், "இதற்காக நீ எதை அடைமானம் வைக்கப்போகிறாய்?" என்று கேட்டான். அதற்கு முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், "நீ என்ன விரும்புகிறாய்?" என்று கேட்டார்கள். அதற்கு கஅப், "உங்கள் பெண்களை என்னிடம் அடைமானம் வையுங்கள்" என்று சொன்னான். முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், "நீர் அரபுகளிலேயே மிகவும் அழகானவர். எங்கள் பெண்களை அடைமானம் வைக்க வேண்டுமா? (அடைமானம் மூலம்தான் பெண்களை அடைய வேண்டிய அவசியம் உமக்கு இல்லை)" என்று சொன்னார்கள்.

"(அப்படியானால்) உங்கள் குழந்தைகளை என்னிடம் அடைமானம் வையுங்கள்" என்று கஅப் கேட்டான். அதற்கு முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், "(எங்கள் குழந்தைகளை எப்படி அடைமானம் வைப்பது?) எங்கள் புதல்வர்களில் ஒருவர் ஏசப்பட்டால், அப்போது "இவன் இரண்டு "வஸ்க்" பேரீச்சம் பழங்களுக்காக அடைமானம் வைக்கப்பட்டவன்" என்றல்லவா ஏசப்படுவான்? (இது எங்களுக்கு அவமானமாயிற்றே?) எனவே, உன்னிடம் (எங்கள்) ஆயுதங்களை அடைமானம் வைக்கிறோம்" என்று கூறினார்கள். "அப்படியானால் சரி" என கஅப் (சம்மதம்) தெரிவித்தான்.

பிறகு முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், ஹாரிஸ் பின் அவ்ஸ், அபூஅப்ஸ் பின் ஜப்ர், அப்பாத் பின் பிஷ்ர் (ரலி) ஆகியோருடன் பிறகு வருவதாக வாக்களித்துவிட்டுச் சென்றார்கள்.

அவ்வாறே அவர்கள் ஓரிரவில் வந்து அவனை அழைத்தார்கள். கஅப் (தனது கோட்டையிலிருந்து) அவர்களிடம் இறங்கிவந்தான்.

-(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: எனக்கு இதை அறிவித்த அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள் அல்லாத மற்றொருவரது அறிவிப்பில் "கஅபின் மனைவி அவனிடம், "நான் ஒரு சப்தத்தைக் கேட்கிறேன். அது இரத்தப் பலி கோருபவனின் குரலைப் போன்றுள்ளது" என்று கூறினாள்.

அதற்கு கஅப் "அவர் (வேறு யாருமல்லர்) முஹம்மத் பின் மஸ்லமாவும் அவருடைய பால்குடிச் சகோதரர் அபூநாயிலாவும் தாம். மேன்மக்களில் ஒருவன் ஈட்டி எறிய இரவு நேரத்தில் அழைக்கப்பட்டாலும் அவன் அந்த அழைப்பை ஏற்றுக்கொள்ளவே செய்வான்" என்று கூறினான் என இடம்பெற்றுள்ளது.

அப்போது முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள் (தம் சகாக்களிடம்), "கஅப் பின் அல் அஷ்ரஃப் வந்தால் நான் அவனது தலையை நோக்கி (அவனது தலையிலுள்ள நறுமணத்தை நுகருவதற்காக) எனது கையை நீட்டுவேன். அவனது தலையை எனது பிடிக்குள் நான் கொண்டு வந்துவிட்டதும் அவனைப் பிடித்து (வாளால் வெட்டி)விடுங்கள்" என்று கூறினார்கள்.

கஅப் பின் அல்அஷ்ரஃப் (தனது ஆடை அணிகலன்களை) அணிந்துகொண்டு நறுமணம் கமழ இறங்கிவந்தான். அப்போது முஹம்மத் பின் மஸ்லமாவும் சகாக்களும், "உம்மிடமிருந்து நல்ல நறுமணத்தை நாங்கள் நுகருகிறோம்" என்று கூறினர். அதற்கு கஅப் "ஆம்; என்னிடம் இன்ன பெண் (மனைவியாக) இருக்கிறாள். அவள் அரபுப் பெண்களிலேயே மிகவும் வாசனையுடைய நறுமணத்தைப் பாவிக்கக்கூடியவள்" என்று கூறினான்.

முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், "உமது தலையிலுள்ள நறுமணத்தை நுகர எனக்கு அனுமதியளிப்பீரா?" என்று கேட்டார்கள். அதற்கு கஅப் "ஆம்; நுகர்ந்து கொள்" என அனுமதியளித்தான்.

அவ்வாறே முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள் அவனது தலையைப் பிடித்துக் கொண்டு நுகர்ந்தார்கள். பிறகு, "மீண்டும் ஒருமுறை நுகர என்னை அனுமதிப்பீரா?" என்று கேட்டார்கள். இவ்வாறு முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள் அவனைத் தம் வசம் கொண்டு வந்தபோது "பிடியுங்கள்" என்று கூறினார்கள். உடனே அவர்கள் அனைவரும் (சேர்ந்து) அவனைக் கொன்றுவிட்டனர்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. 

[68] குர்-ஆன் 33:37

(நபியே!) எவருக்கு அல்லாஹ்வும் அருள் புரிந்து, நீரும் அவர் மீது அருள் புரிந்தீரோ, அவரிடத்தில் நீர்; "அல்லாஹ்வுக்குப் பயந்து நீர் உம் மனைவியை (விவாக விலக்குச் செய்து விடாமல்) உம்மிடமே நிறுத்தி வைத்துக் கொள்ளும்" என்று சொன்ன போது அல்லாஹ் வெளியாக்க இருந்ததை, மனிதர்களுக்குப் பயந்து நீர் உம்முடைய மனத்தில் மறைத்து வைத்திருந்தீர்; ஆனால் அல்லாஹ் அவன் தான், நீர் பயப்படுவதற்குத் தகுதியுடையவன்; ஆகவே ஜைது அவளை விவாக விலக்கு செய்துவிட்ட பின்னர் நாம் அவளை உமக்கு மணம் செய்வித்தோம்; ஏனென்றால் முஃமின்களால் (சுவீகரித்து) வளர்க்கப்பட்டவர்கள், தம் மனைவிமார்களை விவாகரத்துச் செய்து விட்டால், அ(வர்களை வளர்த்த)வர்கள் அப்பெண்களை மணந்து கொள்வதில் யாதொரு தடையுமிருக்கக் கூடாது என்பதற்காக (இது) நடைபெற்றே தீர வேண்டிய அல்லாஹ்வின் கட்டளையாகும். 

மேலதிக விவரங்களுக்கு: www.answering-islam.org/Responses/Menj/zaynab.htm

From Tabari - The History of Al-Tabari: The Victory of Islam, translated by Michael Fishbein [State University of New York Press, Albany, 1997], Volume VIII, pp. 2-3

The Messenger of God came to the house of Zayd b. Harithah. (Zayd was always called Zayd b. Muhammad.) Perhaps the Messenger of God missed him at that moment, so as to ask, "Where is Zayd?" He came to his residence to look for him but did not find him. Zaynab bt. Jash, Zayd's wife, rose to meet him. Because she was dressed only in a shift, the Messenger of God turned away from her. She said: "He is not here, Messenger of God. Come in, you who are as dear to me as my father and mother!" The Messenger of God refused to enter. Zaynab had dressed in haste when she was told "the Messenger of God is at the door." She jumped up in haste and excited the admiration of the Messenger of God, so that he turned away murmuring something that could scarcely be understood. However, he did say overtly: "Glory be to God the Almighty! Glory be to God, who causes the hearts to turn!"

When Zayd came home, his wife told him that the Messenger of God had come to his house. Zayd said, "Why didn't you ask him to come in?" He replied, "I asked him, but he refused." "Did you hear him say anything?" he asked. She replied, "As he turned away, I heard him say: 'Glory be to God the Almighty! Glory be to God, who causes hearts to turn!'"

So Zayd left, and having come to the Messenger of God, he said: "Messenger of God, I have heard that you came to my house. Why didn't you go in, you who are as dear to me as my father and mother?Messenger of God, perhaps Zaynab has excited your admiration, and so I will separate myself from her." Zayd could find no possible way to [approach] her after that day. He would come to the Messenger of God and tell him so, but the Messenger of God would say to him, "Keep your wife." Zayd separated from her and left her, and she became free.

While the Messenger of God was talking with 'A'isha, a fainting overcame him. When he was released from it, he smiled and said, "Who will go to Zaynab to tell her the good news, saying that God has married her to me?" Then the Messenger of God recited: "And when you said unto him on whom God has conferred favor and you have conferred favor, 'Keep your wife to yourself .'"- and the entire passage.

According to 'A'isha, who said: "I became very uneasy because of what we heard about her beauty and another thing, the greatest and loftiest of matters - what God had done for her by giving her in marriage. I said she would boast of it over us." (The History of Al-Tabari: The Victory of Islam, translated by Michael Fishbein [State University of New York Press, Albany, 1997], Volume VIII, pp. 2-3)

[69] குர்-ஆன் 6:101 &  1 யோவான் 5:11, 12

6:101. அவன் வானங்களையும், பூமியையும் முன் மாதிரியின்றிப் படைத்தவன். அவனுக்கு மனைவி, எவரும் இல்லாதிருக்க, அவனுக்கு எவ்வாறு பிள்ளை இருக்க முடியும்? அவனே எல்லாப் பொருட்களையும் படைத்தான். இன்னும் அவன் எல்லாப் பொருட்களையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான்.

1 யோவான் 5:11 தேவன் நமக்கு நித்தியஜீவனைத் தந்திருக்கிறார், அந்த ஜீவன் அவருடைய குமாரனில் இருக்கிறதென்பதே அந்தச் சாட்சியாம். 

1 யோவான் 5:12 குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன்.

[70] கலாத்தியர் 1:7-9

கலாத்தியர் 1:7 வேறொரு சுவிசேஷம் இல்லையே; சிலர் உங்களைக் கலகப்படுத்தி, கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தைப் புரட்ட மனதாயிருக்கிறார்களேயல்லாமல் வேறல்ல. 

கலாத்தியர் 1:8  நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன். 

கலாத்தியர் 1:9  முன் சொன்னதுபோல மறுபடியும் சொல்லுகிறேன்; நீங்கள் ஏற்றுக்கொண்ட சுவிசேஷத்தையல்லாமல் வேறொரு சுவிசேஷத்தை ஒருவன் உங்களுக்குப் பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்.

பாகம் 8ஐ படிக்க சொடுக்கவும்

உமரின் இதர கட்டுரைகள்


© Answering Islam, 1999 - 2013. All rights reserved.


--
2/08/2014 07:20:00 பிற்பகல் அன்று ஈஸா குர்-ஆன் - Isa Koran இல் Isa Koran ஆல் இடுகையிடப்பட்டது


Fwd: [ஈஸா குர்-ஆன் - Isa Koran] பாகம் 6 - 101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

 

பாகம் 6

பாகம் 1பாகம் 2பாகம் 3பாகம் 4பாகம் 5ஐ படிக்க சொடுக்கவும்.  இந்த ஆறாம் பாகத்தில் 51வது காரணத்திலிருந்து 60வது காரணம் வரை காண்போம்.

51. நெய்யில் விழுந்த எலி - அல்லாஹ் கொடுத்த வஹி, இறைத்தூதர் கொடுத்த வழி

அக்காலத்து முஸ்லிம்களுக்கு எது ஆரோக்கியம், எது சுகாதாரம் என்ற அடிப்படை அறிவு இல்லை என்றுச் சொல்லத்தோன்றுகிறது.  தேவையில்லாத விஷயத்துக்கெல்லாம் முஹம்மதுவிடம் கேள்வி கேட்டு இருக்கிறார்கள். சரி மக்கள் கேட்கிறார்களே! அவர்களை வெறுமனே அனுப்பக்கூடாது என்பதற்காக எதையாவது சொல்லிவிடுவது முஹம்மதுவின் வழக்கமாக இருந்துள்ளது. நெய்யில் எலி விழுந்துவிட்டால் என்ன செய்வது என்று மக்கள் கேட்க, இதற்கு முஹம்மது "அந்த எலியையும் அதைச் சுற்றியுள்ள நெய்யையும் எடுத்து எறிந்துவிட்டு உங்கள் நெய்யை நீங்கள் சாப்பிடுங்கள்" என்று பதில் சொல்லியுள்ளார். செத்த எலியினால் உண்டாகும் வியாதிகள் என்னவென்று முஹம்மதுவிற்கும் தெரியவில்லை, அவரது இறைவன் அல்லாஹ்விற்கும் தெரியவில்லை. இந்த விஷயம் முஸ்லிம்களுக்கும் தெரியவில்லை. ஒருவேளை எலி உயிரோடு இருந்திருந்தாலும் அது எங்கேயெல்லாம் சுற்றி வந்ததோ! முஹம்மது சாதாரணமாகச் சொன்ன விஷயத்தையும் இறைவாக்கு என்று நம்பி முஸ்லிம்கள் வாழுகிறார்கள். இப்படிப்பட்ட மக்களை உருவாக்கியவர் முஹம்மது ஆவார். அவர் சொல்வதெல்லாம் செய்வதெல்லாம் இறைவன் கொடுத்த செயல் என்று நம்பி முஸ்லிம்கள் வாழுகிறார்கள். இவரை பின்பற்றினால், கிறிஸ்தவர்களும் எலியை எறிந்துவிட்டு, மீதமுள்ள நெய்யை சாப்பிடவேண்டியது தான். தீர்க்கதரிசிகள் என்றால் அவர்களின் ஒவ்வொரு செயலையும், சொல்லையும் நாம் பின்பற்றவேண்டும் என்ற கோட்பாடு மிகவும் தவறானதாகும். பைபிளில் காணப்படும் எந்த ஒரு தீர்க்கதரிசியையும் கிறிஸ்தவர்கள் இப்படி முட்டாள் தனமாக பின்பற்றுவதில்லை. [51]

52. காகம், பருந்து, தேள், எலி மற்றும் வெறி நாய் இவைகளை கொல்லலாம்.

காகம், பருந்து, தேள், எலி மற்றும் வெறிநாய் தீங்கு இழைக்கக்கூடியவைகள், இவைகளை இஹ்ராம் அணிந்தவர் கொல்லலாம் என்று முஹம்மது கூறுகிறார். காகம் மற்றும் பருந்து எப்படி தீங்கு இழைக்கும்? சரி போகட்டும், இந்த ஐந்து மட்டும் தான் தீங்கு இழைக்கக்கூடியவைகளா? இவைகளைக் காட்டிலும் விஷயமுள்ள பாம்பு என்ன ஆனது, இதனால் தீங்கு இல்லையா? தீர்க்கதரிசி என்றால் எவைகளைச் சொன்னாலும், அந்த காலத்து முஸ்லிம்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று இவர் முழு நிச்சயமாய் நம்பியுள்ளார், ஆகையால், வாய்க்கு வந்தபடி சொல்லியுள்ளார். பாம்பு மட்டுமல்ல, இன்னும் விஷயமுள்ள ஊரும் பிராணிகள் உண்டு, அவைகளினால் எந்த ஒரு தீங்கும் இல்லையா? முஹம்மது தனக்கு தோன்றியபடி பேசட்டும் இதில் தவறு இல்லை, ஆனால், முஸ்லிம்கள் அவர் சொல்வதை அப்படியே பின்பற்றவேண்டும் என்று கட்டாயப்படுத்தபடுகிறார்களே! முஹம்மதுவை ஒரு விக்கிரமாக தொழுகிறார்களே (பின்பற்றுகிறார்களே) இது தான் தவறானது. இப்படிப்பட்ட ஏழாம் நூற்றாண்டு கிராமத்து மனிதரின் அறிவுடமை மீது கிறிஸ்தவர்களுக்கு நம்பிக்கையில்லை, அவர் மதத்தின் பேரில் மக்களை ஏமாற்றும் கள்ளத் தீர்க்கதரிசி என்பது திண்ணம்[52].

53. எலிகளாக மாறிய யூதர்கள், ஆதாரம் என்ன? அவைகள் ஒட்டக பாலை குடிப்பதில்லை

முஹம்மதுவின் ஆன்மீக ஞானத்தைப் பற்றி புகழ்ந்து பேசாமல் இருக்கமுடியாது. ஒரு முறை ஒரு இஸ்ரவேல் குழுவினர் காணாமல் போய்விட்டார்களாம், அவர்கள் எலிகளாக மாற்றப்பட்டு இருப்பார்கள் என்று முஹம்மது நம்புகிறார். இதற்கு ஆதாரம் என்னவென்று கேட்டால், அந்த எலிகளுக்கு முன்னால் ஒட்டக பாலை வைத்தால் அவைகள் அதனை குடிக்காதாம் (யூதர்கள் ஒட்டக மாமிசம், பால் சாப்பிடமாட்டார்கள்). ஆனால், ஆட்டுப்பால் வைத்தால், அவைகள் குடித்துவிடுமாம். இதனால், அந்த எலிகள் நிச்சயமாக காணாமல்போன இஸ்ரவேல் மக்கள் தானாம்.  என்னே ஞானம், என்னே விளக்கம். யாருடைய காதில் பூவைக்கிறார் முஹம்மது? இப்படியும் ஒரு தீர்க்க்தரிசியா? இப்படியும் கட்டுக்கதைகளா? முஸ்லிம் மதரஸாக்களில் சின்ன பையன்களுக்கு இந்த கதைகளைச் சொல்லி அவர்களை குதூகலமாக்குவார்கள் முஸ்லிம் அறிஞர்கள். அறிவுள்ளவன் இவைகளை நம்பமாட்டான். இப்படி கதைகளை சொந்தமாக அள்ளிவீசிய முஹம்மது எப்படி உண்மை தீர்க்கதரிசியாக இருக்கமுடியும்?[53]

54. வெளியில் பிள்ளைகளை பிடித்துச் செல்லும் ஜின்கள், வீட்டிற்குள் பிடிக்காதோ?

மாலை வேளையில் வீட்டுக் கதவுகளைத் தாழிட்டு விடுங்கள், உங்கள் குழந்தைகளை வெளியே செல்லவிடாமல் பிடித்து வைத்துக்கொள்ளுங்கள், ஏனென்னில் அந்நேரத்தில் ஜின்கள் பூமியில் பரவி பொருட்களையும், குழந்தைகளையும் பறித்துச் சென்றுவிடும். இப்படி முஹம்மது தம் மக்களுக்கு அறிவுரை கூறியுள்ளார். இது எவ்வளவு அறியாமை பாருங்கள்? இந்த பயத்தை இன்றும் முஸ்லிம்கள் மத்தியில் காணமுடியும். ஒரு தீய சக்தி பூமியில் பரவி வீட்டிற்கு வெளியே பிள்ளைகளை பிடிக்க சக்தி பெறுமானால், பூட்டப்பட்ட வீட்டிலிருந்து பிடித்துச் செல்லமுடியாதா?  மாலை வேளையில் கிரியைச் செய்யும் இந்த ஜின்கள் பகல் வேளையில் கிரியைச் செய்யாதா? கிறிஸ்தவர்களுக்கு தேவனே பாதுகாப்பு, இப்படிப்பட்ட மூட பழக்கங்களுக்கு கிறிஸ்தவர்கள் அடிமையாக மாட்டார்கள்.  உண்மை மார்க்கத்தை போதித்த இயேசுவை விட்டுவிட்டு, இப்படி போலி மார்க்கத்தையும், போலி தீர்க்கதரிசியையும் கிறிஸ்தவர்கள் நம்புவார்களா?[54]

55. வீட்டிற்கு வெளியே வசிப்பது பாம்பு, வீட்டிற்குள் வசிப்பது பாம்பல்ல அது ஜின் ஆகும்

இஸ்லாமிலே ஜின்கள் என்பது ஒரு வகையான ஆவிகள், இவைகளில் நல்லவைகளும், தீயவைகளும் இருக்கின்றன என்று முஹம்மது கூறியுள்ளார். பாம்புகளை வெளியே கண்டால் கொல்லவேண்டுமாம்.  வீட்டிற்குள் பாம்புகளைக் கண்டால், அவைகளை கொல்லக்கூடாதாம், ஏனென்றால் அவைகள் வீட்டில் வசிக்கும் ஜின்கள் ஆகுமாம். விஷமுள்ள பாம்பை வீட்டில் கண்டால் அவைகளை கொல்லாமல் எப்படி இருக்கமுடியும்? அவைகள் மனிதர்களை கடித்து கொன்றுவிடுமே!  முஹம்மது சொல்வதெல்லாம் ஒரு பாமர மனிதனின் ஞானமாகும். இவர் இறைவனின் உண்மை தீர்க்கதரிசியே அல்ல. விஷமுள்ள பாம்பை வீட்டில் கண்டால் இன்றுள்ள முஸ்லிம்கள் என்ன செய்வார்கள்? அதனை அப்படியே வீட்டில் உலாவ விட்டுவிடுவார்களா? இப்படி தாறுமாறான போதனைகளைச் செய்தவர் உண்மை தீர்க்கதரிசி ஆகமுடியாது. [55] 

56. ஆவியான ஜின்னை பிடித்து, தூணில் கட்ட விரும்பிய நபி

ஒரு முறை முஹம்மது இரவுத் தொழுகை செய்யும் போது ஒரு பலம் பொருந்திய முரட்டு ஜின் இவரது தொழுகையை தடை செய்ய வந்ததாம். அல்லாஹ் முஹம்மதுவிற்கு சக்தியை கொடுத்ததால், அதனை முஹம்மது பிடித்துவிட்டாராம். அதனை காலைவரை தூணில் கட்டிவிட்டு, மக்களுக்கு காட்டலாம் என்று விரும்பினாராம். ஆனால், குர்-ஆன் 38:35ம் வசனத்தை நினைவு கூர்ந்து அந்த ஜின்னை அடித்து விரட்டிவிட்டாராம். அந்த குர்-ஆன் வசனம் 38:35ல் சாலொமோன் இராஜா அல்லாஹ்விடம் வேண்டிய வேண்டுதல் இருக்கின்றது. அதாவது யாருக்கும் கிடைக்காத அற்புதம் அல்லது வல்லமையை தமக்கு கொடுக்கும் படி அவர் வேண்டிக்கொண்டாராம். ஆகையால் சாலொமோனுக்கு கிடைத்த வல்லமையை தாம் தட்டிச் செல்லக்கூடாது என்ற நல்ல எண்ணத்தினால், அந்த ஜின்னை விரட்டி அடித்துவிட்டாராம் முஹம்மது. கதை எப்படி இருக்கிறது பார்த்தீர்களா? இப்போது கேள்வி என்னவென்றால், சாலொமோனின் வேண்டுதலை அல்லாஹ் நிறைவேற்றினாரா இல்லையா? நிறைவேற்றி இருந்தால், மறுபடியும் முஹம்மதுவிற்கு ஏன் அந்த வல்லமையை கொடுத்தார்? இது ஒரு புறமிருக்க, ஜின்கள் ஆவியானவைகள் என்று இஸ்லாம் சொல்லும் போது அதனை கட்டிவைக்க எப்படி முடியும்? இந்த கதை முஹம்மதுவின் கட்டுக்கதை ஆகும். எதைச் சொன்னாலும் மக்கள் நம்புவார்கள், தன்னை ஒரு பெரிய நபி என்று நம்புவார்கள் என்ற எண்ணத்தில் அனேக பொய்யான கதைகளைச் சொல்லியுள்ளார். கிறிஸ்தவர்கள் இவரை தீர்க்கதரிசி என்றுச் சொல்வதை விட, இவர் ஏதோ ஒரு தீய சக்திகளால் பீடிக்கப்பட்டு இருக்கிறார் என்றுச் சொல்வது சரியானதாக இருக்கும்.[56]

57. எலும்பும் சாணமும் ஜின்களின் உணவு ஆகுமா?

ஜின்களின் உணவாக எலும்பும், சாணமும் இருக்கிறது என்று முஹம்மது கூறியுள்ளார். ஜின்கள் என்பது மனிதர்களைப்போல சரீரமுள்ள ஒரு இனமா, அல்லது ஆவியாக இருக்கும் இனமா? சரீரமுள்ள இனமாக இருந்தால் அவைகளுக்கு உணவு தேவையாக இருக்கும், மேலும் அவைகள் மறைந்துக்கொள்ள இடம் தேவையாக இருக்கும். மனிதர்கள் அவர்களை எப்பொதும் காணமுடியும். அவைகள் ஆவியாக இருக்கும் இனமென்றால், அவைகளுக்கு உணவு தேவையில்லை. இஸ்லாமிய ஜின்கள் பற்றி அனேக முரண்பாடுகள், பிரச்சனைகள் உள்ளன. முஹம்மது இப்படி கட்டுக்கதைகளை அதிகமாகச் சொல்லியுள்ளார். இறைவன் பற்றி அதிகம் சொல்லவேண்டிய தீர்க்கதரிசி, ஜின்கள் பற்றியும், தேவையில்லாத மூடபழக்கங்கள் பற்றியும் அதிகம் சொல்லியுள்ளார். இவர் ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.[57]

58. ஒற்றைப்படையில் காரியங்களைச் செய்யச்சொன்ன இறைத்தூதர்

முஹம்மதுவிற்கு ஒற்றைப்படையென்றால் மிகவும் விருப்பம் என்று தோன்றுகிறது. இது ஒரு மூட பழக்கமாகும், இது அறிவுடமையாகாது. நாம் எத்தனைமுறை இறைவனுடைய செயலைச் செய்கிறோம் என்பதில் எந்த ஒரு உபயோகமும் இல்லை. முழு மனதுடன் செய்வதைத் தான் தேவன் விரும்புகிறார். 

1) மலஜலம் கழித்துவிட்டுக் கல்லால் சுத்தம் செய்பவர் ஒற்றைப் படையாகச் செய்யவேண்டுமாம். முஹம்மது தொழும் போது ஒற்றைப்படையில் ரக்அத்களை சொல்லி தொழுவாராம்.

2) ரமளான் மாதத்தில் நோன்பை முடிக்கும் போது ஒற்றைப்பட எண்ணில் பேரீச்ச பழங்களை சாப்பிடுவாராம்.

3) மரித்தவர்களை குளிப்பாட்டும் போது, 1, 3, 5 அல்லது 7 என்ற ஒற்றைப்பட எண்களில் குளிப்பாட்ட வேண்டுமாம்.

4) இதுமாத்திரமல்ல, அல்லாஹ் ஒற்றையானவன். ஒற்றைப்படையையே அவன் விரும்புகிறான்.

இப்படியெல்லாம் சொல்பவர் ஒரு கிராமவாசியாவார், மூடபழக்கமுள்ளவராவார் அறியாமையில் உள்ளவர் ஆவார், உண்மை இறைவனை அறியாதவர் ஆவார், இவர் நிச்சயமாக ஒரு உண்மை தீர்க்கதரிசி ஆகமாட்டார். [58]

59. முதலாம் கட்டளை - உன் தேவனாகிய கர்த்தர் நானே

மோசேயின் வழியில் வந்தவன் நான், தோராவை இறக்கிய தேவனை நான் நம்புகிறேன் என்று முஹம்மது கூறியுள்ளார். ஆனால், மோசேயின் மூலமாக தேவன் கொடுத்த 10 கட்டளைகள் அனைத்தையும் முறித்தவர் முஹம்மது ஆவார். தேவன் கொடுத்த முதலாவது கட்டளை, யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் விசுவாசப் பிரமானம் என்றுச் சொல்லலாம். "உன் தேவனாகிய கர்த்தர் (யெகோவா எலோஹிம்) நானே" (யாத்திராகமம் 20:2) என்பது தான் அது. ஆனால், முஹம்மது இந்த அடிப்படை அறிக்கையையே முறித்தார். முஸ்லிம்களின் விசுவாச அறிக்கை என்ன? "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்று நான் உறுதிமொழிகிறேன்; முஹம்மத்  அவர்கள் இறைவனின் தூதர் ஆவார்கள் என்று நான் உறுதிமொழிகிறேன்" என்பதாகும்.  யெகோவா மீது விசுவாசம் வைப்பதை விட்டுவிட்டு, "அல்லாஹ்" என்ற பெயரில் உள்ள ஒரு போலியான தெய்வத்தின் மீது நம்பிக்கை வைத்து விசுவாச அறிக்கையிடும் நபர் எப்படி மோசேயின்  வழியில் வந்த தீர்க்கதரிசியாகமுடியும்? முஹம்மது தேவனின்  முதல் கட்டளையிலேயே தவறியுள்ளார். இவரை எப்படி கிறிஸ்தவர்கள் தீர்க்கதரிசி என்று நம்புவார்கள்? இவர் ஒரு கள்ளத்தீர்க்கதரிசியாவார். [59]

60. இரண்டாம் கட்டளை - என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம்.

முஹம்மது பத்து கட்டளைகளில் இரண்டாவது கட்டளையையும் முறித்துள்ளார். வானத்திலும் பூமியிலும் உள்ள உருவங்களை உருவாக்கவேண்டாம், தேவர்களின் உருவத்தையும், விக்கிரகத்தையும் உண்டாக்கவேண்டாம், அவைகளை வணங்கவும் வேண்டாம் என்று தேவன் கட்டளையிட்டு இருக்கிறார் (யாத் 20:3,4). முஹம்மது யெகோவா தேவனை விட்டுவிட்டு, அல்லாஹ் என்ற இன்னொரு தெய்வத்தை வணங்கினார், மேலும் மக்காவின் காபாவில் உள்ள ஒரு கருப்புக்கல்லை அவர் முத்தமிட்டு, அதனை மதித்துவந்தார். முஹமம்து இப்படி செய்தபடியால், இன்று உலக முஸ்லிம்கள் அனைவரும் அந்த கருப்புக்கல்லை முத்தமிட்டு வருகிறார்கள். இவைகள் எல்லாம் தேவன் தடுத்த செயல்களாகும். இரண்டாவது கட்டளையை முழுவதுமாக முஹம்மது மீறியுள்ளார். இவர் நிச்சயமாக யெகோவா தேவன் அனுப்பிய தீர்க்கதரிசியாக இருக்கவே முடியாது. [60]

அடிக்குறிப்புக்கள்:

அனைத்து குர்-ஆன் வசனங்கள் "முஹம்மது ஜான்" குர்-ஆன் தமிழாக்கத்திலிருந்து எடுக்கப்பட்டதாகும்.

[51] ஸஹீஹ் புகாரி எண்கள் 235 & 236

235. 'நெய்யில் விழுந்துவிட்ட எலியைப் பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டதற்கு, 'அந்த எலியையும் அதைச் சுற்றியுள்ள நெய்யையும் எடுத்து எறிந்துவிட்டு உங்கள் நெய்யை நீங்கள் சாப்பிடுங்கள்'  என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என மைமூனா(ரலி) அறிவித்தார். 

Volume :1 Book :4

236. 'நெய்யில் விழுந்துவிட்ட எலியைப் பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டதற்கு 'அந்த எலியையும் அதைச் சுற்றியுள்ள நெய்யையும் எடுத்தெறிந்துவிட்டு உங்கள் நெய்யை நீங்கள் சாப்பிடுங்கள்'  என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என மைமூனா(ரலி) அறிவித்தார். 

Volume :1 Book :4

[52] ஸஹீஹ் புகாரி  எண்கள் 1826, 1827, 1828 & 1829

1826. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

"ஐந்து உயிரினங்கள் தீங்கு இழைக்கக் கூடியவையாகும்! அவற்றை இஹ்ராம் அணிந்தவர் கொன்றால் அவரின் மீது குற்றமில்லை! அவை காகம், பருந்து, தேள், எலி, வெறிநாய் ஆகியனவாகும்!"  இதை இப்னு உமர்(ரலி) ஹஃப்ஸா(ரலி), ஆயிஷா(ரலி) ஆகியோர் அறிவித்தார்கள். 

Volume :2 Book :28

1827. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஐந்து உயிரினஙகள் தீஙகு இழைக்கக் கூடியவையாகும்! அவற்றை இஹ்ராம் கட்டியவர் கொன்றால் அவர் மீது குற்றமில்லை! அவை காகம்,  பருந்து, தேள், எலி, வெறிநாய் ஆகியனவாகும். இதை இப்னு உமர் (ரலி), ஹஃப்ஸா (ரலி), ஆயிஷா (ரலி) ஆகியோர் அறிவிக்கிறார்கள். 

Volume :2 Book :28

1828. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஐந்து உயிரினஙகள் தீஙகு இழைக்கக் கூடியவையாகும்! அவற்றை இஹ்ராம் கட்டியவர் கொன்றால் அவர் மீது குற்றமில்லை! அவை காகம்,  பருந்து, தேள், எலி, வெறிநாய் ஆகியனவாகும். இதை இப்னு உமர் (ரலி), ஹஃப்ஸா (ரலி), ஆயிஷா (ரலி) ஆகியோர் அறிவிக்கிறார்கள். 

Volume :2 Book :28

1829. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஐந்து உயிரினஙகள் தீஙகு இழைக்கக் கூடியவையாகும்! அவற்றை இஹ்ராம் கட்டியவர் கொன்றால் அவர் மீது குற்றமில்லை! அவை காகம், பருந்து, தேள், எலி, வெறிநாய் ஆகியனவாகும். இதை இப்னு உமர் (ரலி), ஹஃப்ஸா (ரலி), ஆயிஷா (ரலி) ஆகியோர் அறிவிக்கிறார்கள். 

Volume :2 Book :28

[53] ஸஹீஹ் புகாரி எண் 3305

3305. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 

பனூஇஸ்ராயீல்களில் ஒரு குழுவினர் காணாமல் போய்விட்டார்கள். அவர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. நான் அவர்களை எலிகளாக (உருமாற்றப்பட்டுவிட்டதாக)வே கருதுகிறேன். 

அவற்றுக்கு (முன்னால்) ஒட்டகத்தின் பால் வைக்கப்பட்டால் அவை (அதைக்) குடிப்பதில்லை. அவற்றுக்கு (முன்பாக) ஆடுகளின் பால் வைக்கப்பட்டால் அவை (அதைக் குடித்து விடும்" என்று நபி(ஸல்) 

அவர்கள் அவர்கள் சொன்னார்கள். இதை நான் கஅபுல் அஹ்பார்(ரலி) அவர்களுக்கு அறிவித்தேன். உடனே அவர்கள், 'நபி(ஸல்) அவர்கள் இதைச் சொல்ல நீங்கள் கேட்டீர்களா?' என்று வினவினார்கள். நான், 'ஆம் (கேட்டேன்)" என்றேன்.  அவர்கள் (திரும்பத் திரும்பப்) பலமுறை அதே போன்று கேட்டார்கள். 'நான் தவ்ராத்தையா ஓதுகிறேன்? (அதிலிருந்து சொல்வதற்கு?)" என்று கேட்டேன். 

Volume :3 Book :59

[54] ஸஹீஹ் புகாரி 3316  

3316. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

மாலை வேளையில் (இரவு தொடங்கும்போது) பாத்திரங்களை மூடி வையுங்கள். தண்ணீர்ப் பைகளை (சுருக்குப் போட்டு) முடிந்து வையுங்கள். கதவுகளைத் தாழிட்டு விடுங்கள். உங்கள் குழந்தைகளை (வெளியே செல்லவிடாமல் அணைத்துப்) பிடித்து வைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில், (அந்நேரத்தில்) ஜின்கள் பூமியில் பரவி (பொருள்களையும், குழந்தைகளையும்) பறித்துச் சென்று விடும். மேலும், தூங்கும்போது விளக்குகளை அணைத்து விடுங்கள். ஏனெனில், தீங்கிழைக்கக் கூடிய (எலியான)து (விளக்கின்) திரியை (வாயால் கவ்வி) இழுத்துச் சென்று வீட்டிலிருப்பவர்களை எரித்து விடக் கூடும். 

என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். 

Volume :3 Book :59

[55] ஸஹீஹ் புகாரி 3298 & 4017

3298. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார் 

நான் (ஒரு முறை) ஒரு பாம்பைக் கொல்வதற்காக விரட்டிச் சென்று கொண்டிருந்தபோது அபூ லுபாபா(ரலி) என்னைக் கூப்பிட்டு 'அதைக் கொல்லாதீர்கள்" என்றார்கள். நான், 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பாம்புகளைக் கொல்லும்படி உத்திரவிட்டுள்ளார்கள்" என்று சொன்னேன். அதற்கு அவர்கள், '(ஆமாம், உண்மை தான்.) ஆனால், அதன் பிறகு வீடுகளில் வசிக்கும் பாம்புகளை (பார்த்த உடனே)  

கொல்லவேண்டாமென்று அவர்கள் தடுத்தார்கள். அவை வீட்டில் வசிக்கும் ஜின்களாகும்" என்று பதிலளித்தார்கள்.  Volume :3 Book :59

4017. 'வீடுகளில் வசிக்கும் ஜின்(களான) பாம்புகளைக் கொல்ல வேண்டாம்' என்று நபி(ஸல்) அவர்கள் தடை விதித்துள்ளார்கள்" என்று பத்ருப் போரில் பங்கெடுத்தவரான அபூ லுபாபா (என்ற ரிஃபாஆ இப்னு அப்தில் முன்திர் (ரலி) அவர்கள் கூறியபோது அதனைக் கொல்வதை நிறுத்திக் கொண்டார்கள்.  என நாஃபிஉ(ரஹ்) அறிவித்தார். Volume :4 Book :64

[56] ஸஹீஹ் புகாரி எண்கள் 4323 & 4808

3423. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

பலம் பொருந்திய ஜின் ஒன்று நேற்றிரவு என் தொழுகையை (இடையில்) துண்டிப்பதற்காக திடீரென்று வந்து நின்றது. அல்லாஹ் எனக்கு அதை வசப்படுத்தித் தந்தான். நான் அதைப் பிடித்துக் 

கொண்டேன். நீங்கள் ஒவ்வொருவரும் அதைப் பார்ப்பதற்காக அதைப் பள்ளிவாசலின் தூண்களில் ஒன்றில் கட்டி வைக்க விரும்பினேன். அப்போது, என் சகோதரர் சுலைமான்(அலை) அவர்கள் செய்த, 'என் இறைவா! எனக்குப் பின் வேறெவருக்கும் கிடைக்காத ஓர் அதிகாரத்தை எனக்கு வழங்குவாயாக!" (திருக்குர்ஆன் 38:35) என்னும் பிரார்த்தனையை நினைவு கூர்ந்தேன். உடனே, அதைச் சபித்து  எறியப்பட்டதாகத் திருப்பியனுப்பி விட்டேன்.  என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 

Volume :4 Book :60

4808. நபி(ஸல்) அவர்கள் (ஒரு நாள்) கூறினார்கள்: 

முரட்டு ஜின் ஒன்று நேற்றிரவு என் தொழுகையை (இடையில்) துண்டிப்பதற்காக திடீரென்று வந்து நின்றது - என்றோ, இதைப் போன்ற வார்த்தையையோ கூறினார்கள் - அதன் மீது அல்லாஹ் எனக்கு  

சக்தியை வழங்கினான். நீங்கள் அனைவரும் காலையில் வந்து அதைக் காணும்வரை இந்தப் பள்ளிவாசலின் தூண்களில் ஒன்றில் அதைக் கட்டிவைக்க விரும்பினேன். அப்போது 'இறைவா! எனக்குப் பின்வேறு எவருக்கும் கிடைக்கமுடியாத ஓர் ஆட்சியதிகாரத்தை எனக்கு நீ வழங்குவாயாக' (திருக்குர்ஆன் 38:35) என்று என் சகோதரர் சுலைமான் (அலை) அவர்கள் செய்த வேண்டுதல் என் நினைவுக்கு வந்தது.  ரவ்ஹ் இப்னு உபாதா(ரஹ்) அவர்களின் அறிவிப்பில் 'எனவே, அதை நான் விரட்டி அடித்துவிட்டேன்' என்றும் இடம் பெற்றுள்ளது.  என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். Volume :5 Book :65

[57] ஸஹீஹ் புகாரி எண்: 3860

3860. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 

உளூச் செய்யும் தண்ணீரும் (இயற்கைத்) தேவைக்கான தண்ணீரும் வைத்திருக்கும் குவளையை நபி(ஸல்) அவர்களுடன் நான் சுமந்து செல்வேன். (ஒரு நாள்) அவற்றைச் சுமந்து கொண்டு நான் நபி(ஸல்),  அவர்களைப் பின்தொடர்ந்து சென்று கொண்டிருந்தபோது, 'யார் அது?' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். 'நான் அபூ ஹுரைரா(ரலி) தான் (வருகிறேன்)" என்று நான் சொன்னேன். நபி(ஸல்) அவர்கள்,  'நான் (இயற்கைக் கடன் முடித்தபின்) துப்புரவு செய்வதற்காக எனக்குச் சில கற்களைத் தேடி (எடுத்து)க் கொண்டு வா. நீ என்னிடம் எலும்பையோ கெட்டிச் சாணத்தையோ கொண்டு வந்து விடாதே" என்று  கூறினார்கள். நான் என் ஆடையின் ஓரத்தில் கற்களை வைத்துச் சுமந்து கொண்டு வந்து அவர்களுக்குப் பக்கத்தில் வைத்துவிட்டுத் திரும்பி விட்டேன். அவர்கள் (இயற்கைக் கடனை) முடித்ததும் அவர்களுடன் நடந்து சென்றேன். அப்போது, 'எலும்பும் கெட்டிச் சாணமும் வேண்டாம். என்று ஏன் சொன்னீர்கள்?' என்று வேண்டாம். அதற்கு அவர்கள், 'அவ்விரண்டும் ஜின்களின் உணவாகும். என்னிடம்  'நஸீபீன்' என்னுமிடத்தைச் சேர்ந்த ஜின்களின் குழு ஒன்று வந்தது. அவை நல்ல ஜினகளாயிருந்தன. அவை என்னிடம் உணவு தரும்படி கேட்டன. நான், 'அவை எந்த எலும்பையும் எந்த கெட்டிச் சாணத்தையும் கடந்து சென்றாலும் அதில் உணவைப் பெற வேண்டும்" என்று அல்லாஹ்விடம் அவற்றுக்காகப் பிரார்த்தித்தேன்" என்று பதிலளித்தார்கள். 

[58] ஸஹீஹ் புகாரி எண்கள்: 161, 162, 823, 953, 1254, 1263.& 6410

161. 'உளூச் செய்பவர் மூக்கிற்குத் தண்ணீர் செலுத்தி வெளியாக்கட்டும்; மலஜலம் கழித்துவிட்டுக் கல்லால் சுத்தம் செய்பவர் ஒற்றைப் படையாகச் செய்யவும்' இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். Volume :1 Book :4

162. 'உங்களில் ஒருவர் உளூச் செய்தால் தம் மூக்கிற்குத் தண்ணீர்ச் செலுத்திப் பின்னர் அதை வெளியாக்கட்டும். மலஜலம் கழித்துவிட்டுக் கல்லால் சுத்தம் செய்பவர் ஒற்றைப் படையாகச் செய்யட்டும். உங்களில் ஒருவர் விழித்தெழுந்தாhல் அவர், தாம் உளூச் செய்யும் தண்ணீரில் தம் கையை நுழைப்பதற்கு முன்னர் கழுவிக் கொள்ளட்டும். ஏனென்றால், (தூங்கத்தில்) தம் கை எங்கே இருந்தது என்பதை உங்களில் எவரும் அறியமாட்டார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். Volume :1 Book :4

823. மாலிக் இப்னு அல்ஹுவைரிஸ்(ரலி) அறிவித்தார். 

நபி(ஸல்) அவர்கள் தொழுததை பார்த்திருக்கிறேன். அவர்கள் தொழுகையின் ஒற்றைப் படையிலான ரக்அத்களின்போது உட்காராமல் (அடுத்த ரக்அத்துக்காக) ஏழமாட்டார்கள். Volume :1 Book :10

953. அனஸ்(ரலி) அறிவித்தார். 

சில பேரீச்சம் பழங்களை உண்ணாமல் நோன்புப் பெருநாளில் (தொழுகைக்கு) நபி(ஸல்) அவர்கள் புறப்பட மாட்டார்கள். மற்றோர் அறிவிப்பில் அவற்றை ஒற்றைப்படை எண்ணிக்கையில் உண்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது. Volume :1 Book :13

1254. உம்மு அதிய்யா(ரலி) அறிவித்தார். 

நபி(ஸல்)அவர்களின் மகளை நாங்கள் குளிப்பாட்டிக் கொண்டிருந்தோம். அப்போது அங்கு வந்த நபி(ஸல்) அவர்கள், 'அவரை இலந்தை இலை கலந்த நீரால் மூன்று அல்லது ஐந்து அல்லது அதற்கும் அதிகமான முறை குளிப்பாட்டுங்கள்; கடைசியில் கற்பூரத்தைச் சேர்த்துக் கொள்ளுங்கள். குளிப்பாட்டி முடித்ததும் எனக்கு அறிவியுங்கள்' எனக் கூறினார்கள். முடிந்ததும் நாங்கள் அவர்களுக்கு அறிவித்தோம். அப்போது அவர்கள் தங்களின் கீழாடையைத் தந்து, 'இதை அவரின் உடலில் சுற்றுங்கள்' எனக் கூறினார்கள். 

அறிவிப்பில், 'ஒற்றைப் படையாக (த் தண்ணீர் ஊற்றி)க் குறிப்பாட்டுங்கள்; மூன்று அல்லது ஐந்து அல்லது ஏழு முறை (தண்ணீர் ஊற்றுங்கள்); அவரின் வலப்புறத்திலிருந்தும் உளூச் செய்ய வேண்டிய பகுதிகளிலிருந்தும் துவங்குங்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என்றும் 'நாங்கள் அவர்களுக்கு தலைவாரி மூன்று சடைகள் பின்னினோம்" என உம்மு அதிய்யா(ரலி) கூறினார் என்றும் உள்ளது என அய்யூப் குறிப்பிடுகிறார். 

Volume :2 Book :23

1263. உம்மு அதிய்யா(ரலி) அறிவித்தார். 

நபி(ஸல்)அவர்களின் மகள்களில் ஒருவர் மரணமாகிவிட்டதும் நபி(ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து, 'மய்யித்தை இலந்தை இலை கலந்த நீரால் மூன்ற அல்லது ஐந்து அல்லது நீங்கள் தேவையெனக் கருதினால் அதற்கும் அதிகமாக ஒற்றைப் படையாகக் குளிப்பாட்டுங்கள். கடைசியில் சிறிது கற்பூரத்தைச் சேர்த்துக் கொள்ளுங்கள். குளிப்பாட்டி முடிந்ததும் எனக்குத் தெரிவியுங்கள்' எனக் கூறினார்கள். குளிப்பாடடி முடிந்து தெரிவித்ததும் தம் கீழாடையை (மய்யித்தில் சுற்றுவதற்கு)த் தந்தார்கள். மேலும், நாங்கள் மய்யித்தின் முடியை மூன்று சடைகளாகப் பின்னி அதை மய்யித்தின் முதுகுப்புறமாகப் போட்டு வைத்தோம். 

Volume :2 Book :23

6410. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 

அல்லாஹ்விற்கு தொண்ணூற்று ஒன்பது நூற்றுக்கு ஒன்று குறைவான - பெயர்கள் உண்டு. அவற்றை (நம்பிக்கை கொண்டு) மனனமிட்டவர் யாரும் சொர்க்கம் நுழையாமல் இருப்பதில்லை. அல்லாஹ் ஒற்றையானவன். ஒற்றைப்படையையே அவன் விரும்புகிறான்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். Volume :6 Book :80

[59] ஸஹீஹ் முஸ்லிம் எண் 623

623. அபூமஹ்தூரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் எனக்கு இந்தத் தொழுகை அறிவிப்பு(பாங்கு) முறையைக் கற்றுத் தந்தார்கள்:

அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப் பெரியவன், அல்லாஹ் மிகப் பெரியவன்).

(பின்னர் மெதுவாக) அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ், அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்று நான் உறுதிமொழிகிறேன்; அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்று நான் உறுதிமொழிகிறேன்).

அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ், அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ் (முஹம்மத் (ஸல்) அவர்கள் இறைவனின் தூதர் ஆவார்கள் என்று நான் உறுதிமொழிகிறேன்; முஹம்மத் (ஸல்) அவர்கள் இறைவனின் தூதர் ஆவார்கள் என்று நான் உறுதிமொழிகிறேன்).

பின்னர் மீண்டும் (சப்தமாக) அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ், அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ். அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ், அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ். பின்னர் ஹய்ய அலஸ் ஸலாஹ் (தொழ வாருங்கள்) என்று இரு முறையும், ஹய்ய அலல் ஃபலாஹ் (வெற்றியின் பக்கம் வாருங்கள்) என்று இரு முறையும் கூறினார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில், இஸ்ஹாக் பின் இப்ராஹீம் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், (ஹய்ய அலல் ஃபலாஹ் என்பதற்குப் பிறகு) அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர், லாயிலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ் மிகப் பெரியவன், அல்லாஹ் மிகப் பெரியவன், அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை) என்று நபி (ஸல்) அவர்கள் பாங்கு சொல்லக் கற்றுக்கொடுத்தார்கள் என அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது. 

Book :4

[60] ஸஹீஹ் புகாரி எண்: 1610, 1611, 1603, 1605 & 1609

1610. அஸ்லம் அறிவித்தார். 

ஹஜருல் அஸ்வத் (எனும் கருப்பு நிறக்) கல்லை உமர்(ரலி) முத்தமிடுவதை பார்த்தேன். அப்பொழுது அவர்கள், 'நபி(ஸல்) அவர்கள் உன்னை முத்தமிடுவதை நான் கண்டிராவிட்டால், நான் உன்னை முத்தமிட்டிருக்க மாட்டேன்!" என்று கூறினார்கள். Volume :2 Book :25

1611. ஸுபைர் இப்னு அரபி அறிவித்தார். 

ஒருவர் இப்னு உமர்(ரலி) அவர்களிடம் வந்து ஹஜருல் அஸ்வத் (எனும் கருப்பு நிறக்) கல்லை முத்தமிடுவதைப் பற்றிக் கேட்டதற்கு இப்னு உமர்(ரலி), 'நான், நபி(ஸல்) அவர்கள் அதைத் தொட்டு முத்தமிடக் கண்டேன்!' எனக் கூறினார்கள். அப்போது நான், 'கூட்டம் அதிகமாக இருந்தாலும், நாம் அதனை நெருங்க முடியாது என்றாலும் முத்தமிட வேண்டும் என நீங்கள் கருதுகிறீர்களா?' எனக் கேட்டேன். அதற்கவர்கள், 'கருதுகிறீர்களா, நினைக்கிறீர்களா என்பதையெல்லாம் (உன்னுடைய ஊராகிய) யமனில் வைத்துக் கொள்! நான் நபி(ஸல்) அவர்கள் அதைத் தொட்டு முத்தமிடக் கண்டேன்!" என (மீண்டும்) கூறினார்கள். Volume :2 Book :25

1603. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். 

நபி(ஸல்) அவர்கள் மக்காவிற்கு வந்து, முதலாவது தவாஃபில் ஹஜருல் அஸ்வதை முத்தமிடுவார்கள். ஏழு சுற்றுக்களில் முதல் மூன்று சுற்றில் (தோள்களைக் குலுக்கி) வேகமாக ஓடுவார்கள். Volume :2 Book :25

1605. அஸ்லம் அறிவித்தார். 

உமர்(ரலி) ஹஜருல் அஸ்வதை நோக்கி, 'அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீ கல்தான்; உன்னால் எந்த நன்மையோ தீமையோ செய்ய முடியாது என்பதை நானறிவேன்; நபி(ஸல்) அவர்கள் உன்னை முத்தமிடுவதை நான் பார்க்கவில்லை என்றால் நிச்சயமாக நான் முத்தமிட்டிருக்க மாட்டேன்' எனக் கூறிவிட்டு அதை முத்தமிட்டார். பிறகு 'நாம் ஏன் இப்போது தோள்களைக் குலுக்கியவாறு ஓட வேண்டும்? நாம் அன்று செய்தது நம்முடைய பலத்தை முஷ்ரிகீன்களுக்குக் காட்டுவதற்காகத்தானே. ஆனால் இன்று அல்லாஹ் அவர்களை அழித்துவிட்டான். பிறகு ஏன் செய்ய வேண்டும்?' எனக் கூறிவிட்டு, 'எனினும், இதை நபி(ஸல்) அவர்கள் செய்தார்கள். அதனைவிட்டுவிட நாம் விரும்பவில்லை' எனக் கூறினார்கள். Volume :2 Book :25

1609. இப்னு உமர்(ரலி) அறிவித்தார். 

"ஹஜருல் அஸ்வத், ருக்னுல் யமானீ ஆகிய இரண்டு மூலைகளைத் தவிர இந்த ஆலயத்தில் எந்த இடத்தையும் நபி(ஸல்) அவர்கள் முத்தமிட்டதை நான் பார்த்ததில்லை." Volume :2 Book :25

பாகம் 7ஐ படிக்க சொடுக்கவும்

உமரின் இதர கட்டுரைகள்


© Answering Islam, 1999 - 2013. All rights reserved.


--
2/08/2014 07:17:00 பிற்பகல் அன்று ஈஸா குர்-ஆன் - Isa Koran இல் Isa Koran ஆல் இடுகையிடப்பட்டது


இஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்

முன் பக்கம் செல்ல

HOME PAGE

தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்

1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1

2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2

3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3

4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4

பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்

1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1

2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2

பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்

1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்

2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்