இஸ்லாம் அமைதி மார்கமா? இஸ்லாம் இனிய மார்கமா? இஸ்லாம் உண்மையான மார்கமா?

ஆன்சரிங் இஸ்லாம்

பல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்

சத்தியவான் தளம் செல்ல

Saturday, December 29, 2007

ஏக இறைவனின் தொடரும் தோல்விகள்

பல மதங்கள் புனித நூல்களை கொண்டுள்ளன. அந்த மதங்களைப்பொறுத்தவரை, அவர்களுடைய புனித நூல்கள் இறைவனின் அருளால் விளைந்தவை என்றும் சில இறைவனின் வார்த்தைகளாகவே கருதப்படுகின்றன. இறைவனின் நேர்மொழியாகிய வேத-நூல் என்பது ஆப்கராமிய மதங்களுக்கே உறிய தனித்தன்மை என்று பொதுவாக நம்பப்படுகிறது. ஆனால், வேறு பல மதங்களுக்கும் இந்த புனிதநூல் நம்பிக்கை இருக்கிறது. உதாரணமாக, பல கடவுள்களை கொண்டுள்ள இந்து மதத்தின் புனித நூலான வேத-நூல்கள் மனித அறிவுக்கு விஞ்சிய முனிவர்களின் தெய்வீக பார்வையில் விளைந்த ஆன்மீக உண்மைகள் என்று இந்துக்கள் நம்புகிறார்கள். இந்த வேதங்கள் ஆயிரக்கணக்கான பாடல்கள் கொண்டவை.

இப்படி புனித நூல்கள் தொடர்ந்து பல வடிவங்களில் மனிதனுக்கு கிடைத்துக்கொண்டே இருந்திருக்கின்றன. ஆனால், 14ஆம் நூற்றாண்டில் ஒரு அரபியன் நானே இறுதித்தூதன் என்று சொல்லி இறைவனின் இறுதியான வார்த்தைகளை வெளிப்படுத்தியதாக சொல்லிக்கொண்டான். அது மட்டும் அல்ல! மற்ற இறைதூதர்களைப்போல இல்லாமல், அவன் நடவடிக்கை புதுமையாக இருந்தது. தன் செய்தி மட்டுமே உண்மையானது, அதுவும் இறுதி உண்மையானது என்று அவன் அறிவித்தான். தன்னையோ, தன் புனித செய்தியையோ நம்பாதவர்களை கறைபட்டவர்கள் (நஜஸ்) என்று பிரகடணம் செய்தான். தன்னை நம்பாதவர்களை 'இறைவனால் சபிக்கப்பட்டவர்கள்" என்று சொல்லி அவர்களை கொல்லவோ அல்லது இரண்டாம் தர மக்களாக (திம்மிகளாக) அடிமைப்படுத்தவும் செய்தான். இந்த புரட்சி செய்தியின் அடாவடித்தனத்தை பார்த்தால், இதை கேட்ட மற்ற அரேபியர்கள் முதலில் எதிர்த்ததில் ஒரு ஆச்சரியமுமில்லை.

இந்த பிரகடணத்தில் சிந்தனையாளர்களுக்கு சில கேள்விகள் எழுகின்றன. எல்லாம் வல்ல அந்த இறைவன் இவ்வளவு தீவிரமான இறுதி உண்மையை மனிதகுலத்துக்கு தெரியப்படுத்தும்போது அதற்கு ஏன் ஒரு மதிப்பும், மரியாதையும் இல்லாது போனது? எல்லாம் அறிந்த அல்லாஹ்வின் இந்த செய்தி ஒரு சிறப்பான கருத்தும், சிற்ப்பான மொழிநடையும் இல்லாது போனது ஏன்? இது இறைவனின் இறுதி செய்தி என்றால், இந்த செய்தியை முதலில் தெரிவித்த முஹம்மது (ஸல்) ஏன் மக்களின் எதிர்ப்பை பெற்று ஊரை விட்டு ஓடவேண்டியதாகியது?

மேலும், 1400 ஆண்டுகள் ஆகியும், இந்த இறைவனின் இறுதி உண்மைச்செய்தி இவ்வுலகில் இன்னும் மூன்றில் இரண்டு பங்கு மக்களால் நிராகரிக்கப்பட்டிருக்கிறது ஏன்?

இதற்கு விடை காண, நாம் இறைச்செய்தியின் சில இயல்புகளை ஆராய வேண்டும். இறைவனின் செய்தி என்று ஒன்று வருமானால், அதை இவ்வுலகில் மனிதர்களால் புரிந்து அதை பின்பற்ற சில தேவைகள் இருக்கின்றன. செய்தி சொல்ல சரியான சமயம், செய்தியை தெளிவுபடுத்த சரியான மொழி, வழங்க சரியான இடம், அதை அறிவிக்க சரியான தூதர் எல்லாம் தேவை. எல்லாவற்றிற்கும் மேலாக, அந்த செய்தி மானுடத்தை இன்னும் மேம்படுத்தி இறைவழிப்படுத்தக்கூடிய தகவலை கொண்டதாக இருக்க வேண்டும்.

முஹம்மது (ஸல்) வழங்கிய இறை செய்தியை இந்த கோணங்களில் ஆராய்வோம்!!

1. ஏழாம் நூற்றாண்டு சரியான தருணமா?

முதல் நூற்றாண்டுக்கு முன் பல தூதர்களை (மூசா, ஏசு மற்றும் பலர்) அனுப்பி தோல்வியுற்ற அல்லாஹ் காலம், நேரத்தை மறந்துபோயிருக்கலாம் என்று தோன்றுகிறது. ஏசு நபி தோன்றிய 700 ஆண்டுக்கு பின், திடீரென, 7ஆம் நூற்றாண்டில் அல்லாஹ் தன் இறுதி தூதரை அனுப்ப தயாராகிறார். அல்லாஹ் மட்டுமே ஏக இறைவனாகவும், முஹம்மதுவின் செய்தியே அல்லாஹ்வின் நேர்வழியாகவும் இருக்குமானால், ஏழாம் நூற்றாண்டுக்கு முன்னம் தோன்றிய மனிதர்களுக்கு உய்வதற்கு வழி என்ன? அவர்கள் மிகவும் துரதிருஷ்டவாதிகள் இல்லையா? இந்த இறுதி செய்தி அப்போது இல்லாமல் போவதற்கு அவர்கள் என்ன தவறு செய்தார்கள்.

இறைவனின் உண்மை செய்தி புவியில் தோன்றிய எல்லா மானுடர்களையும் உய்விக்க செய்யவேண்டும். அதனால், அது மானுட தோற்றத்தை முந்திய அல்லது அந்த தோற்றத்தோடு சமகாலத்தில் இணைந்த ஒரு செய்தியாக இருக்க வேண்டாமா? மனிதனை படைக்கும்போதே அந்த இறுதி செய்தியை வழங்கி எல்லா மனிதர்களையும் நல்வழிப்படுத்த எல்லாம் வல்ல இறைவன் ஏன் தவறிவிட்டான் என்று சந்தேகம் தோன்றுகிறது.

2. அரபி சரியான மொழியா?

அல்லாஹ்வின் முந்தைய செய்திகள் அரமிய மொழிகளில் அமைந்தவை. அவற்றில் தன் செய்தி சரியாக நிலைக்காமல் தோல்வி கண்டு, பின்னர் இறுதிசெய்தியாக அரபி மொழியை இறைவன் தேர்ந்தெடுத்தது ஏன்? அரபி மொழி உலகில் மிகவும் குறைந்த நபர்கள் மொழிகளில் ஒன்றாக இருந்தது, இருக்கிறது. மேலும், அரபி மொழி உலக தொடர்பில்லாத பாலைவன குடியாட்கள் பேசும் மொழியாக இருந்தது. இறைவனின் இறுதி மொழியாக அல்லாஹ் இதை ஏன் தேர்ந்தெடுத்தான்?

இஸ்லாமியர்கள் அரபி மொழி மிகவும் அழகான கவிதைநயமான மொழி என்கிறார்கள். மேலும், குர்ஆனை மற்ற மொழிகளில் மாற்றினால் அந்த அழகு சிதைந்துவிடும் என்கிறார்கள். அல்லாஹ்வின் நோக்கம் மனித குலத்தின் ஈமானும், அழியாத அமைதி இறுதி வாழ்வுமாக இருக்க வேண்டும். அதனால், அல்லாஹ்வின் செய்தி தெளிவாகவும், யாராலும் குழப்பிக்கொள்ள முடியாததாகவும் இருப்பது முக்கியமே தவிர மொழி அழகும், கவிதை நயமும் அல்ல. உலக மொழி வல்லுனர்கள் அரபி மொழி ஒரு தெளிவான, எளிதான மொழி அல்ல என்கிறார்கள். அதனால் இறைவனின் இறுதி செய்திக்கு இது ஒரு சிறந்த மொழி இல்லை.

3. அரேபிய பாலைவனம் சரியான இடமா?

யேசுவுக்கு முன்னமே, முஹம்மதுவுக்கு பல நூற்றாண்டுக்கு முன்னமே, பல நாகரீகங்கள் (கிரேக்க, இந்திய, பாரசீக, சீன நாகரீகங்கள் முதலியவை) இன்னும் பெரிதாகவும் இன்னும் வளரச்சி பெற்றும் இருந்தன. இந்த நாகரீகங்கள் அரேபிய குடியிருப்பை விட பண்மடங்கு மக்கள்தொகை கொண்டும், அறிவுத்திறனில் பல தளங்கள் முன்னேறியும் வாழ்ந்து வந்தனர். கிரேக்க, ரோமாயின நாகரீகத்தின் தாக்கம் உலகம் முழுதும் விளைந்திருந்தது. இந்திய, சீன நாகரீகங்கள் பாரசீகத்திலிருந்து ஜப்பான் வரை பரவியிருந்தன.

இதை விடுத்து, அல்லாஹ்வின் இறுதிச்செய்தியோ அரேபியா என்ற ஒரு சிறிய உலகத்துண்டை பற்றிய அறிவையே கொண்டிருக்கிறது. கிரேக்க இந்திய மனோதத்துவங்களோடு போட்டிபோட்டால் தன் செய்தி எடுபடாது என்று அல்லாஹ் பயந்து அவர் அரேபிய பாலைவன நாகரீகத்தை தேர்ந்தெடுத்தார் என்று தோன்றுகிறது. உலகத்தில் ஒதுங்கிக்கிடந்த ஒரு சிறிய மனித குடியிருப்பான அரேபியாவையும், அரேபியர்களுக்கே பெரும்பாலும் தெரியாமல் பொதுவாக குழம்பிக்கொள்ளும் ஒரு அரேபிய மொழியும் இறைவன் தன் இறுதி உண்மைச்செய்தி வெளிப்பட தேர்ந்தெடுத்தது ஏன்?

குர்ஆன் அமைந்த அரபி மொழி தவறான தேர்வு என்று பார்க்கும்போது, இன்று திருக்குர்ஆனுக்கு ஆயிரக்கணக்கான மாறுபட்ட விளக்கங்கள், புரிதல்கள், வழக்கங்கள் இஸ்லாத்தில் நிலவுவது ஆச்சரியமில்லை. ஒரே செய்திக்கு அமைதியாகவும், அபாயகரமாகவும் புரிதல்கள் நிலவுவது இந்த குழப்பத்தை காட்டுகிறது.

4. முஹம்மது சரியான தூதரா?

முஹம்மது (ஸல்) மற்ற நபிகளின் செய்திகளை திறுத்தி புனிதப்படுத்த தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று முஸ்லிம்கள் சொல்கிறார்கள். ஆதாம், மூசா, ஏசு போன்ற பல நபிகள் அல்லாஹ்வால் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். ஆனால், அந்த நபிகள் தங்கள் நோக்கத்தில் வெற்றி பெறவில்லை. அப்படியானால், அல்லாஹ் தன் தேர்வில் தொடர்ந்து தவறு இழைத்துக்கொண்டே இருந்திருக்கிறார். அல்லாஹ் அனுப்பிய தூதர்கள் இறைவனின் செய்தியை சரியாக வழங்க தொடர்ந்து தவறிவிட்டார்கள் என்றும் அல்லாஹ் மீண்டும் மீண்டும் புதிய நபிகளை தேர்ந்தெடுக்க வேண்டி இருந்திருக்கிறது என்றும் அறியும்போது அல்லாஹ்வின் அறிவில, திறமையில் நமக்கு சந்தேகம் வருகிறது. இந்த நபிமார்கள் தோல்வி அடைவார்கள் என்று அல்லாஹ்விற்கு முன்னமே தெரியாதா?

இறுதி தூதராக வந்த முஹம்மது (ஸல்) அவர்கள் கூட தன் நோக்கத்தில் தோற்றுவிட்டார் என்றே தோன்றுகிறது. 1400 ஆண்டுகள் ஆகியும் இஸ்லாம் இன்னும் முழுதுமாக ஏற்கப்படாமல் இருக்கிறது. ஏற்கப்படாதது மட்டும் அல்ல, உலகில் மிகவும் பயந்து வெறுக்கப்பட்ட ஒரு மதமாக இருக்கிறது.

பொதுவாக, நபிமார்களிடம் நாம் விரும்பும் இனிய குணங்கள் கொண்டவராக முஹம்மது இல்லை. முஹம்மதுவின் பல குணங்கள், அவரின் பல செயல்கள் பல இடங்களில் எடுத்துச்சொல்லப்பட்டு விட்டன. அதை இங்கு நான் மேலும் சுட்ட விரும்பவில்லை.

ஆனால், இந்த இறைச்செய்திகளின் ஒரு முக்கிய பிழையாக ஒரு ஆச்சரியத்தை காண்கிறேன். அல்லாஹ்வின் அனைத்து நபிமார்களுமே படிப்பறிவு இல்லாதவர்களாக இருக்கிறார்கள். முஹம்மதுவும் இப்படியே இருந்தார்.

நபிகளுக்கு படிப்பறிவு முக்கியமா? ஆம், நிச்சயமாக. அதுவும் இதுவே மாற்ற இயலாத இறுதிச்செய்தி என்று சொல்லப்படும் செய்தியை கொண்டுவரும் நபிக்கு படிப்பறிவு இன்றியமையாததாக ஆகிறது.

ஒரு இறைச்செய்தி சுவனத்தில் புத்தகத்தில் எழுதப்பட்டு, அங்கேயே பிரசுரிக்கப்பட்டு, அழகான நூல்களில் கோர்க்கப்பட்டு இங்கு இவ்வுலகில் அந்த புத்தகம் நபிமார்களால் வினியோகம் மட்டுமே செய்யப்படுமானால், நபிகளுக்கு படிப்பறிவு முக்கியம் இல்லைதான். ஆனால், நடந்தது என்ன? முஹம்மது குர்ஆனை எழுத சில நபர்களை நியமித்திருந்தார். ஆனால், அவர்கள் எழுதியதை சரிபார்க்க அவருக்கு படிப்பறிவு இல்லை. இதனால் இன்று இஸ்லாத்தில் நம்பும் ஈமான்களின் விதி அந்த எழுத்தாளர்களின் நினைவாற்றலில் விளைந்து அவர்கள் கிறுக்கிக்கொண்டு பின்னர் வடிவமைத்த சில வரிகளில் இருக்கிறது.

இன்று உலகம் முழுதும் 120 கோடி முஸ்லிம்கள் பின்பற்றுவது இறைவனின் நேர் வார்த்தைகள் அல்ல. முஹம்மதுவுக்கு அல்லாஹ் சொன்னவை கூட அல்ல. முஹம்மது அல்லாஹ் தனக்கு சொன்னதாக சொன்ன செய்தி கூட இல்லை. மாறாக, தவறிழைக்கும் குணமுள்ள சில சாதாரண மனிதர்களால் தங்கள் நினைவாற்றலிருந்து எழுதப்பட்ட, அதை யாராலும் சரி பார்க்க முடியாத ஒரு செய்தி. அல்லாஹ் திரும்பத்திரும்ப ஒரு படிப்பறிவு பெற்றவரை ஏன் தேர்ந்தெடுக்க மாட்டேன் என்கிறார் என்று எனக்கு வியப்பாக இருக்கிறது. இதனால், அல்லாஹ் சரியான நபியை தேர்ந்தெடுப்பதில் தோற்றார் என்றுதான் தோன்றுகிறது.

5. திருக்குர்ஆன் சரியான செய்தியா?

திருக்குர்ஆன் ஒரு தெளிவான, எளிமையான முழுமையான செய்தி என்று சொல்லிக்கொள்கிறது. ஆனால், குர்ஆனை பின்பற்றுவர்களின் செயல்கள் இதை நிரூபிக்கவில்லை. பல தெய்வங்களை வணங்கும் காபிர் மதங்களை விட இஸ்லாத்தில் இன்று அதிக பிரிவுகள் இருக்கின்றன. அந்த பிரிவுகள் இடையே வெறுப்பும், கொலைவெறியும் காண கிடைக்கின்றன. இவை 7ஆம் நூற்றாண்டு அரேபியர்களின் நாடோடி, காட்டுமிராண்டி மன நிலையை எதிரொலிக்கின்றன. ஈரான்-ஈராக் யுத்தமும், பாகிஸ்தானில் தொடரும் உள்நாட்டு வன்முறைகளும் தொடரும் இந்த வெறுப்பு, கொலைவெறியை நமக்கு காட்டுகின்றன. "அமைதி மார்க்கம்" என்று முஸ்லிம்களால் கருதப்படும் ஒரு மதம், தன் இறைவனால் வழங்கப்பட்ட இறுதி தெளிவான செய்தியின் இன்றைய நிலை இதுதான். இதைத்தவிர, இஸ்லாத்துக்கு பிற மதங்களுடான பிணக்குகளைப்பற்றி நான் நினைவுபடுத்த தேவையில்லை. மத-நல்லிணக்கம் என்பது குர்ஆனில் நாம் காணவில்லை. சகிப்புத்தன்மை அற்ற, சுய சிந்தனைக்கு வழியில்லாத ஒரு அடிமை வாழ்க்கையே இஸ்லாத்தின் மார்க்கமாக நமக்கு ஆப்கானிஸ்தான், சவுதி முதலிய நாடுகளில் காண கிடைக்கிறது. இஸ்லாமிய நாடுகளில் நிகழும் அடிமட்ட வறுமை குர்ஆனை முழுதும் கடைபிடிப்போரின் நிலையை காட்டுகிறது.

அல்லாஹ் எல்லாவிதத்திலும் தோல்வியுற்றதாகவே கருதப்படவேண்டும். இப்படி தொடர்ந்து தோல்வியுறும் ஒருவன் இறைவனாக இருக்க முடியாது.

source;http://sathiyaislam.wordpress.com/2007/12/19/quran/

Friday, December 28, 2007

TNTJ தலைவரும்,இஸ்லாம் அறிஞருமான பி.ஜெய்னூல்ஆபிதீன்(பிஜே) அவர்களுக்கு ஈஸா குர்‍ஆன் பதில்: அற்புதம் நிகழ்த்தியது எப்படி? பாகம் – 2

முன்னுரை: பிஜே அவர்கள் எழுதிய "இயேசு இறைமகனா?" என்ற புத்தகத்தில் உள்ள "அற்புதம் நிகழ்த்தியது எப்படி? " என்ற தலைப்பில் பிஜே அவர்கள் எழுப்பிய பொதுவான கேள்விக்கு, பாகம் 1ல் பதில் அளித்துள்ளேன்.

படிக்கவும் பாகம் -1: பிஜேவிற்கு ஈஸா குர்‍ஆன் பதில்: இயேசு சில நேரங்களில் ஏன் அற்புதம் செய்யவில்லை? பாகம் - 1

இந்த இரண்டாம் பாகத்தில், "அற்புதம் நிகழ்த்தியது எப்படி ?" என்ற தலைப்பில் பிஜே அவர்கள் எழுதிய மற்ற விவரங்களுக்கு பதிலை பார்க்கலாம்.

அற்புதம் நிகழ்த்தியது எப்படி? பாகம் – 2


பிஜே அவர்கள் எழுதியது:

அற்புதம் நிகழ்த்தியது எப்படி?


அப்படியானால் மனிதர்கள் எப்படி அற்புதம் நிகழ்த்த முடியும்? என்ற நியாயமான கேள்விக்குரிய விடையை பைபிளிலிருதே நாம் அளிப்போம்.

நான் சுயமாய் ஒன்றுஞ் செய்கிறதில்லை. நான் கேட்கிறபடியே நியாயம் தீர்க்கிறேன். எனக்குச் சித்தமானதை நான் தேடாமல் என்னை அனுப்பின பிதாவுக்குச் சித்தமானதையே நான் தேடுகிறபடியால் என் தீர்ப்பு நீதியாயிருக்கிறது. (யோவான் 5:30)
Source : Source: http://www.onlinepj.com/book/mahana8.htm



ஈஸா குர்‍ஆன் பதில்:

பிஜே அவர்கள் பைபிள் வசனங்களை தவறாக புரிந்துக்கொண்டு இருக்கிறார்கள். "நான் என் சுயமாய் ஒன்றும் செய்வதில்லை " என்று இயேசு சொன்ன வார்த்தைகள், அவரது தெய்வீகத் தன்மையை அவரே மறுப்பதாக அர்த்தமில்லை. பிதாவிற்கும் குமாரனுக்கும் இடையே உள்ள ஒற்றுமையை அது பறைசாற்றுகிறதாக இருக்கிறது. அதாவது பிதாவிற்கு எது சித்தமோ அதை குமாரன் செய்வார்.

இதை இன்னும் விவரமாக புரிந்துக்கொள்ளவேண்டுமானால், பிஜே அவர்கள் குறிப்பிட்ட யோவான் 5:30ம் வசனம் சொல்லப்பட்ட சந்தர்பத்தில் இயேசு வேறு என்ன என்ன சொல்லியுள்ளார் என்று கவனித்தால் புரியும். பிதாவிற்கும் குமாரனுக்கும் தனித்தனி சித்தங்கள் இல்லை, இருவரின் சித்தங்களும் ஒன்று தான், அதாவது மனிதனுக்கு இரட்சிப்பை கொடுத்து தன்னோடு சேர்த்துக்கொள்வது.



யோவான் 5:16-29 வரை உள்ள வசனங்கள்:


1) பிதா கிரியை செய்வது போல இயேசுவும் கிரியை செய்கிறார்:

பிதா எப்படி கிரியை செய்கிறாரோ அப்படியே தானும் கிரியை செய்கிறார் என்று இயேசு சொல்கிறார். இஸ்லாமியர்களே சிறிது சிந்தியுங்கள், அல்லா எப்படி கிரியை செய்வாரோ அப்படியே நானும் செய்கிறேன் என்று யாராவது சொன்னதுண்டா? சாதாரண மனிதனோ, அல்லது நபியோ சொல்லமுடியுமா?

இயேசு சொன்ன வார்த்தைகளின் அர்த்தம் இஸ்லாமிய அறிஞர்களுக்கு புரிந்ததோ இல்லையோ எனக்குத் தெரியாது, ஆனால், பழைய ஏற்பாட்டை கரைத்து குடித்த யூத ஆசாரியர்களுக்கு தெளிவாக‌ புரிந்துவிட்டது, இவன் ஏன் தன்னை பிதாவிற்கு சமமாக பாவிக்கிறான் என்றுச் சொல்லி, இயேசுவை கொலை செய்ய வாய்ப்பை தேடிக்கொண்டு இருந்தார்கள் இந்த யூத குருமார்கள்.

யோவான் 5:16. இயேசு இவைகளை ஓய்வுநாளில் செய்தபடியால், யூதர்கள் அவரைத் துன்பப்படுத்தி, அவரைக்கொலைசெய்ய வகைதேடினார்கள்.17. இயேசு அவர்களை நோக்கி, என்பிதா இதுவரைக்கும் கிரியைசெய்துவருகிறார். நானும் கிரியைசெய்து வருகிறேன் என்றார்.18. அவர் ஓய்வுநாள் கட்டளையை மீறினதுமல்லாமல், தேவனைத் தம்முடைய சொந்தப் பிதாஎன்றுஞ்சொல்லித் தம்மை தேவனுக்குச் சமமாக்கினபடியினாலே , யூதர்கள் அவரைக்கொலைசெய்யும்படி அதிகமாய் வகைதேடினார்கள்.



2) பிதா எவைகளை செய்வாரோ, அவைகளை அப்படியே குமாரனும் செய்வார்:

இயேசு ஒரு நபியாக மட்டும் இருந்தால், இது எப்படி சாத்தியமாகும்? அதாவது பிதா எவைகளை செய்வாரோ அவைகளைப் பார்த்து, அதே போல குமாரனும் செய்வார் என்று இயேசு எப்படி சொல்கிறார்?

இறைவன்(அல்லா) எவைகளை செய்வாரோ அவைகளை எல்லாம் இயேசு "அப்படியே" செய்வேன் என்றுச் சொல்கிறார். இறைவனுக்கு சமமாக யார் இப்படி சொல்லமுடியும்?

யோவான் 5:19. அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி, மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச்சொல்லுகிறேன் பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அதையேயன்றி,வேறொன்றையும் தாமாய்ச் செய்யமாட்டார்; அவர் எவைகளைச் செய்கிறாரோ, அவைகளைக் குமாரனும் அந்தப்படியே செய்கிறார்

John 5: 19 Jesus gave them this answer: "I tell you the truth, the Son can do nothing by himself; he can do only what he sees his Father doing, because whatever the Father does the Son also does. (NIV)

John 5:19 Then Jesus answered and said to them, "Most assuredly, I say to you, the Son can do nothing of Himself, but what He sees the Father do; for whatever He does, the Son also does in like manner. (NKJV)



ஆங்கில மொழிபெயர்ப்பில் பாருங்கள், whatever the Father does the Son also does. (NIV) என்று மிகவும் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. இது எப்படி சாத்தியமாகும்? "அல்லா செய்யும் எல்லா வேலையும் என்னால் செய்யமுடியும் என்று ஒருவர் சொன்னால் " அவரைப் பற்றி நீங்கள் என்ன நினைப்பீர்கள்?

ஒன்று, இயேசு இறைவனுக்கு (அல்லாவிற்கு) சமமானவராக இருக்கவேண்டும்

அல்லது

இவர் (இயேசு) ஒரு "மனநிலை சரியில்லாதவராக" இருக்கவேண்டுமே தவிர , இவர் ஒரு தீர்க்கதரிசியாக இருக்கமுடியாது. எந்த தீர்க்கதரிசியும் தன்னை இறைவனுக்கு சமமாக பேசமாட்டார்.

கிறிஸ்தவர்கள் இயேசுவை இறைவன் என்று நம்புவது இதனால் தான்.

3) பிதா மரித்தோரை எழுப்புகிறது போல, இயேசுவும் தமக்கு சித்தமானவர்களை எழுப்புவாராம்:

எப்படி பிதா மரித்தவர்களுக்கு உயிர் கொடுக்கிறாரோ அதே போல இயேசுவும் தனக்கு விருப்பமானவர்களுக்கு அவர்கள் மரித்து இருந்தாலும் உயிர் தருவாராம்.

இப்படி சொல்ல ஒரு நபிக்கு எங்கேயிருந்து தைரியம் வரும்?

ஒருவர் நபி மட்டும் இருந்தால் இப்படி இறைவனுக்கு சமமாக சொல்லமுடியுமா?


இறைவனுக்கு சமமாக இருந்தால் தான் இப்படியெல்லாம் சொல்லமுடியும்.


யோவான் 5:20. பிதாவானவர் குமாரனிடத்தில் அன்பாயிருந்து, தாம் செய்கிறவைகளையெல்லாம் அவருக்குக்காண்பிக்கிறார்; நீங்கள் ஆச்சரியப்படத்தக்கதாக இவைகளைப் பார்க்கிலும் பெரிதானகிரியைகளையும் அவருக்குக் காண்பிப்பார்.21. பிதாவானவர் மரித்தோரை எழுப்பி உயிர்ப்பிக்கிறதுபோல, குமாரனும் தமக்குச் சித்தமானவர்களைஉயிர்ப்பிக்கிறார்.



பிஜே அவர்களின் கவனத்திற்கு: ஒன்றை மட்டும் நான் இஸ்லாமிய அறிஞர்களுக்கு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். அது என்னவென்றால், இயேசு நபி மட்டும் தான் என்று நிருபிக்க, நீங்கள் வேண்டுமானால் குர்‍ஆனை பயன்படுத்திக்கொள்ளுங்கள், உங்களுக்கு ஏற்ற வசனங்கள் கிடைக்கலாம். ஆனால், பைபிளின் உதவியோடு அதை நிருபிக்கவேண்டுமானால், அது முடவன் எந்த உதவியும் இல்லாமல் இயமமலை உச்சியை அடையவேண்டும் என்று ஆசைப்படுவது எப்படி இயலாத ஒன்றோ அதே போலத்தான் இதுவும். நான் சொல்ல விரும்புவது இது தான், நம்பினால் பைபிளின் எல்லா வசனங்களையும் நம்பவேண்டும், நம்பவில்லையானால், எல்லா வசனங்களையும் விட்டுவிடுங்கள், ஒரு சில வசனங்களை மட்டும் பைபிளிலிருந்து எடுத்து பொருள் கூறினால், அது உங்கள் விருப்பத்தை நிறைவேற்ற உதவாது.

4) இறைவனை எப்படி கனப்படுத்துகிறோமோ அதே போல இயேசுவையும் கனம் செய்யவேண்டுமாம்: அதனால் தான் உலகத்தை, முஸ்லீம்களையும் சேர்த்து நியாயத்தீர்ப்பு கொடுக்கும் அதிகாரம் அனைத்தும் இயேசுவிடம் தேவன் கொடுத்துள்ளார்.

அல்லாவிற்கு கொடுக்கும் மதிப்பு, கனம் முகமதுவிற்கு கொடுக்கமுடியுமா? கொடுக்கமுடியாது என்பது தானே உங்கள் பதில். ஆனால், இங்கு இயேசு சொல்கிறார், எனக்கு அப்படிப்பட்ட கனம் கொடுக்கவேண்டும் என்பதற்காக, உலகத்தை (முஸ்லீம்களையும் சேர்த்து தான்) நியாயத்தீர்ப்பு கொடுக்கும் அதிகாரம் அனைத்தும் இயேசுவிடம் தேவன் கொடுத்துள்ளாராம். எனவே, அல்லா நியாயம் தீர்ப்பார் என்று பயப்படும் முஸ்லீம்கள், இயேசுவின் முன்பு தான், நியாயத்தீர்ப்பு நாளன்று நிற்கவேண்டும். இதை நான் என் சொந்தமாகச் சொல்லவில்லை, வசனம் அப்படி சொல்கிறது.

யோவான் 5:22. அன்றியும் பிதாவைக் கனம்பண்ணுகிறதுபோல எல்லாரும் குமாரனையும் கனம்பண்ணும்படிக்கு,பிதாவானவர்தாமே ஒருவருக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமல், நியாயத்தீர்ப்புச் செய்யும் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்.



5) இறைவன் தானே உயிருள்ளவராக இருப்பது போல, இயேசும் தானே உயிருள்ளவர்:

கீழே உள்ள வசனங்களில் 26ம் வசனத்தை பாருங்கள், இறைவன் எப்படி தானே உயிருள்ளவராக இருக்கிறாரோ, அதே போல இயேசும் தனக்கு தானே உயிருள்ளவராக இருக்கிறாராம்.

யோவான் 5:23. குமாரனைக் கனம்பண்ணாதவன் அவரை அனுப்பின பிதாவையும் கனம்பண்ணாதவனாயிருக்கிறான்.24. என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு;அவன் ஆக்கினைத்தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டுநீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் என்றுமெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.25. மரித்தோர் தேவகுமாரனுடைய சத்தத்தைக் கேட்குங்காலம் வரும், அது இப்பொழுதேவந்திருக்கிறது; அதைக் கேட்கிறவர்கள் பிழைப்பார்கள் என்று மெய்யாகவே மெய்யாகவேஉங்களுக்குச் சொல்லுகிறேன். 26. ஏனெனில், பிதாவானவர் தம்மில் தாமே ஜீவனுடையவராயிருக்கிறதுபோல, குமாரனும்தம்மில்தாமே ஜீவனுடையவராயிருக்கும்படி அருள் செய்திருக்கிறார். 27. அவர் மனுஷகுமாரனாயிருக்கிறபடியால், நியாயத்தீர்ப்புச் செய்யும்படிக்கு அதிகாரத்தையும்அவருக்குக் கொடுத்திருக்கிறார்.28. இதைக்குறித்து நீங்கள் ஆச்சரியப்படவேண்டாம்; ஏனென்றால் பிரேதக்குழிகளிலுள்ள அனைவரும்அவருடைய சத்தத்தைக் கேட்குங் காலம் வரும்;29. அப்பொழுது, நன்மைசெய்தவர்கள் ஜீவனை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும், தீமைசெய்தவர்கள் ஆக்கினையை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும் புறப்படுவார்கள்.



இப்படி இறைவன் இருப்பதால் தான் "அனாதி தேவன்" என்றும், "ஆதியும் அந்தமும் " என்றும் கூறுவார்கள். இப்படி இயேசு அனாதியாய் இருக்கிறார் என்று சொல்கிறார்.

இதைத் தான் "ஆதியில் வார்த்தையிருந்தது" என்று யோவான் 1:1 சொல்கிறது.

இயேசு கூட "ஆபிரகாம் பிறப்பதற்கு முன்னால் நான் இருக்கிறேன் " என்றார்.


யோவான்: 8:56. உங்கள் பிதாவாகிய ஆபிரகாம் என்னுடைய நாளைக் காண ஆசையாயிருந்தான்; கண்டுகளிகூர்ந்தான் என்றார்.57. அப்பொழுது அவர்கள் அவரை நோக்கி, உனக்கு இன்னும் ஐம்பது வயதாகவில்லையே, நீ ஆபிரகாமைக் கண்டாயோ என்றார்கள்.58. அதற்கு இயேசு, ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுறேன் என்றார் .



இப்படியெல்லாம் தனக்கு உள்ள அதிகாரத்தைப் பற்றியும், தீர்ப்பு நாளில் தான் நியாயம் தீர்க்கப்போவதையும் சொல்லிவிட்ட பின்பு தான், பிஜே அவர்கள் மேற்கோள் காட்டிய வசனம் யோவான் 5:30 வருகிறது . இப்போது அவ்வசனத்தை படித்துப்பார்த்தால் தான் சரியான பொருள் கிடைக்கும்.

பிஜே அவர்கள் எழுதியது:

நான் தேவனுடைய விரலினாலே பிசாசுகளைத் துரத்துகிறபடியால் தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்தில் வந்திருக்கிறதே. (லூக்கா 11:20)



ஈஸா குர்‍ஆன் பதில்:

இயேசு பிசாசுக்களை துரத்துவதை சகிக்க முடியாத சில ஆசாரியர்கள், இவர் பிசாசின் தலைவனாலே துரத்துகிறான் என்று குற்றம் சாட்டுகின்றனர். அதற்கு பதில் அளிக்கும் போது இயேசு இவ்வார்த்தைகளைச் சொல்கிறார்.

யூத ஆசாரியர்களிலும் சிலர் "தேவனின் பெயரிலே" பிசாசுக்களை துரத்துகிறார்கள், யூதர்கள் அப்படி பிசாசுக்களை துரத்தும் போது, இந்த ஆசாரியர்கள் " பிசாசின் தலைவனால் துரத்துகிறார்கள்" என்றுச் சொல்லவில்லை. ஆனால், இயேசு துரத்தும் போது மட்டும், இப்படி அவர் மீது குற்றம் சாட்டுகிறார்கள். எனவே தான், இயேசு கீழ் கண்டவாறு கேள்வி எழுப்புகிறார், அதன் பிறகு, " தான் " எப்படி பிசாசுக்களை துரத்துகிறேன் என்று விவரிக்கிறார். இந்த பகுதியைத் தான் பிஜே அவர்கள் குறிப்பிட்ட வசனம்.

லூக்கா 11:19. நான் பெயெல்செபூலினாலே பிசாசுகளைத் துரத்தினால், உங்கள் பிள்ளைகள் அவைகளை யாராலே துரத்துகிறார்கள் ? ஆகையால், அவர்களே உங்களை நியாயந்தீர்க்கிறவர்களாயிருப்பார்கள்.20. நான் தேவனுடைய விரலினாலே பிசாசுகளைத் துரத்துகிறபடியால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்தில் வந்திருக்கிறதே.



நீங்களும்(யூதர்களும்) பிசாசுவின் தலைவனாலே துரத்துகிறீர்களா? என்று இயேசு கேட்டபோது அவர்கள் வாய் அடைத்துபோனார்கள்.



பிஜே அவர்கள் எழுதியது:

அந்நாளில் அனேகர் என்னை நோக்கி, "கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினால் தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். அப்போழுது நான், "ஒருக்காலும் உங்களை நான் அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே என்னை விட்டு அகன்று போங்கள்" என்று அவர்களுக்குச் சொல்லுவேன். (மத்தேயு 7:22,23)

பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின் படி செய்கிறவனே பரலோக ராஜ்ஜியத்தில் பிரவேசிப்பானேயல்லாமல் என்னை நோக்கி கர்த்தாவே கர்த்தாவே என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பது இல்லை. (மத்தேயு 7:21)

இவை யாவும் இயேசுவின் எச்சரிக்கைகள்! அற்புதங்கள் நிகழ்த்தியதாலோ இன்ன பிற காரணங்களாலோ நான் கடவுளாகி விடவில்லை. அவ்வாறு கூறுவோரை நான் கைவிட்டு விடுவேன். அவர்களுக்குப் பரலோக ராஜ்ஜியத்தில்(சொர்க்கத்தில்) இடம் கிடையாது என்று இயேசு தெளிவாக அறிவிக்கிறார்.

மேலும் தாம் செய்த அற்புதங்கள் தமது சுய ஆற்றலினால் செய்யப்பட்டதல்ல. கர்த்தரின் விருப்பப் படி அவர் விரும்பிய போது செய்து காட்டையவை தான் எனவும் இயேசு விளக்கம் தருகிறார்.

இயேசுவின் விளக்கத்தை விட யாருடைய விளக்கத்துக்காகக் கிறிஸ்தவர்கள் காத்திருக்கிறார்கள்? இதிலிருந்து உண்மையை அவர்கள் விளங்க வேண்டாமா?



ஈஸா குர்ஆன் பதில்:

பிஜே அவர்களே, தெரிந்தோ தெரியாமலோ மத்தேயு 7:21-23 வசனங்களை மேற்கோள் காட்டி மிகப்பெரிய பிழையை செய்துள்ளீர்கள்.

மத்தேயு 7:21-23 வசனங்கள் நீங்கள் நம்புகிறபடியால் (அ) குறிப்பிட்ட படியால், இயேசுவைப் பற்றி கீழ் கண்ட விவரங்களை நீங்கள் அங்கீகரிக்கிறீர்கள் என்று பொருள்.

1. முஸ்லீம்களையும் மற்ற உலக மக்களையும் இயேசு நியாயம் தீர்க்க நியாயாதிபதியாக உள்ளார்.

2. மக்களை இயேசு நியாயம் தீர்த்து பரலோகத்தில் அவர்களை அனுமதிக்கும் அதிகாரம் உடையவராக இருக்கிறார்.




நீங்கள் ஒரு வேளை, "இல்லை, இல்லை அல்லா தான் எல்லா மக்களையும் தீர்ப்பு நாளில் நியாயம் தீர்ப்பார், இயேசு அல்ல" என்று சொல்லலாம். அப்படியானால், ஏன் இந்த வசனங்களை நீங்கள் குறிப்பிட்டீர்கள். குறைந்தபட்சம் இவ்வசனங்களை முழுவதுமாக புரிந்துக்கொண்டு அவைகளை பயன்படுத்தியிருக்கலாம். இயேசுவை நியாயாதிபதியாக காட்டும் வசனங்களை குறிப்பிட்டு இருக்கக்கூடாது.

சரி, இந்த வசனங்களின் உண்மைப் பொருள் என்ன? இவைகளில் தீர்ப்பு நாளின் நீதிபதியாக இயேசு இருப்பார் என்று சொல்லியுள்ளாரா? இல்லையா? என்பதை இப்போது காணலாம்.


1. இயேசு தீர்ப்பு நாளில் நியாயம் தீர்க்கபோகிறவர், அல்லா அல்ல.

அல்லா எல்லா மக்களையும் தீர்ப்பு செய்வார் என்று முஸ்லீம்கள் நம்புகிறார்கள். ஆனால், பிஜே அவர்கள் குறிப்பிட்ட வசனம் "இயேசு தான் தீர்ப்பு செய்வார்" என்றுச் சொல்கிறது.

இந்த கட்டுரையின் முன் பகுதியில் நான் குறிபிட்ட வசனம் யோவான் 5:22ன் படி, எல்லா மக்களையும் நியாயத்தீர்ப்பு செய்யும் அதிகாரம் அனைத்தும் தேவன் இயேசுவிடம் ஒப்படைத்து இருப்பதாக இயேசு சொல்கிறார். அதே விவரங்களைத் தான் இயேசு இந்த மத்தேயு 7:21,23 வசனங்களில் சொல்கிறார்.

யோவான் 5:22. அன்றியும் பிதாவைக் கனம்பண்ணுகிறதுபோல எல்லாரும் குமாரனையும் கனம்பண்ணும்படிக்கு,பிதாவானவர்தாமே ஒருவருக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமல், நியாயத்தீர்ப்புச் செய்யும் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார் .



2. மத்தேயு 7:22 வசனம் குறிப்பிடும் "அந்நாளில்" என்பது எதை குறிக்கும்?

மத்தேயு வசனம் 7:22ல் குறிப்பிடும் "அந்நாளில்" என்பது, உலக "நியாயத்தீர்ப்பு நாளைக் குறிக்கும் ". இதை ஏன் பிஜே அவர்கள் கவனிக்கவில்லை.

Many will say to me on that day , "Lord Lord, did we not prophesy in your name, and in your name drive out demons and perform many miralces?" (Matthew 7:22 NIV Study Bible)

அந்நாளில் அனேகர் என்னை நோக்கி, "கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினால் தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். அப்போழுது நான், "ஒருக்காலும் உங்களை நான் அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே என்னை விட்டு அகன்று போங்கள்" என்று அவர்களுக்குச் சொல்லுவேன். (மத்தேயு 7:22-23)



பிஜே அவர்கள் மேற்கோள் காட்டிய மத்தேயு 7:22-23 வசனங்களில் சொல்லப்பட்ட உரையாடல் இயேசு வாழ்ந்த காலத்தில் நடக்கும் என்று இயேசு சொல்லவில்லை, அதற்கு பதிலாக இந்த உரையாடல் எதிர்காலத்தில் அதுவும் இயேசு ஒரு நியாயாதிபதியாக மக்களுக்கு தீர்ப்பு வழங்கிக்கொண்டு இருக்கும் போது நடக்கும் உரையாடல் இது என்று இயேசு சொல்கிறார்.

இயேசு எப்போதும் பாவிகளோடு உணவு சாப்பிடுகிறார் என்று ஆசாரியர்கள் குற்றம்பிடித்தார்கள், இயேசுவும், நான் பாவிகளுக்காகவே வந்தேன் என்றுச் சொல்லி, எல்லாரையும் மன்னித்தார், ஆனால், இந்த வசனத்தில் மட்டும் ஏன் அவர் துன்மார்க்கமாய் வாழ்ந்தவர்களை தள்ளிவிடுகிறார்? இதற்கு காரணம், அவரது முதல் வருகை உலகை நியாயம் தீர்ப்பதற்காக அல்ல, ஆனால், அவர் இரண்டாம் முறை வரும் போது, நீயாயம் தீர்க்க நீதிபதியாக வருவார், அதனால் தான், என்னை விட்டு அகன்று போங்கள் என்று அவர்களை அனுப்பிவிடுகிறார்.

3.இயேசுவின் பெயரை பயன்படுத்தி "தீர்க்கதரிசனம், அற்புதங்கள் நடக்கும்" :

தீர்க்கதரிசனம் என்பது, இறைவன் மக்களுக்கு சொல்லும்படி தன் பிரதிநிதிக்கு அறிவிக்கும் செய்தி. அதை மக்களுக்கு அவர் அறிவிப்பார். அவரை நாம் தீர்க்கதரிசி என்றுச் சொல்கிறோம்.

இப்போது பிஜே அவர்களுக்காக‌ ஒரு கேள்வியை முன்வைக்கிறேன்:

எந்த ஒரு "நபிவுடைய" பெயரை பயன்படுத்தி "யாராவது தீர்க்கதரிசனம்" சொல்லமுடியுமா?

அதாவது, "அல்லா உரைப்பது என்னவென்றால்..." என்று முகமது தீர்க்கதரிசனம் சொன்னார் என்று நம்புகிறீர்கள் அல்லவா? அது போல, ஒரு நபியுடைய பெயரை பயன்படுத்தி, யாராவது தீர்க்கதரிசனம் உரைக்கமுடியுமா?

உதாரணத்திற்கு: "கர்த்தர் உரைப்பதாவது என்னவென்றால்" என்று பைபிளிலும், "அல்லா உரைப்பது என்னவென்றால்" என்று குர்‍ஆனிலும் வருவது போல, " மோசே உரைப்பது என்னவென்றால் ", என்று சொல்லி யாராவது தீர்க்கதரிசனம் உரைக்க முடியுமா? ஆனால், இயேசுவின் பெயரை பயன்படுத்தி தீர்க்கதரிசனம் உரைத்தோம் என்று மக்கள் அவ்வசனத்தில் சொல்கின்றனர். இதே போலத்தான் யோவானும் தனக்கு இயேசுவின் மூலமாக வெளியாக்கப்பட்ட தீர்க்கதரிசன வசனங்களை பதிவுசெய்துள்ளார்.

நீங்கள் குறிப்பிட்ட வசனம் மத்தேயு 7:21-23 சொல்கிறது, அனேகர், இயேசுவின் பெயரில் தீர்க்கதரிசனம் உரைத்தார்களாம், அற்புதங்கள் செய்தார்களாம். இயேசு ஒரு நபி மட்டும் என்று நீங்கள் சொல்வது உண்மையானால், இது எப்படி சாத்தியமாகும்?



இயேசுவின் பெயரை பயன்படுத்தி அற்புதங்கள் செய்யப்பட்டதா? என்று தெரிந்துக்கொள்ள, பைபிளிலிருந்து சில உதாரணங்கள்:

இயேசுவின் பெயர் படுத்தி அற்புதம்: இயேசுவின் நாமத்தினாலே எழுந்து நட என்று யோவானும், பேதுருவும் ஒரு முடவனுக்குச் சொல்லி அற்புதத்தை செய்தார்கள், அப்போஸ்தலர் நடபடிகள் 3:1-8 வசனங்கள் .

அப் 3:1 ஜெபவேளையாகிய ஒன்பதாம் மணி நேரத்திலே பேதுருவும் யோவானும் தேவாலயத்துக்குப் போனார்கள். 2 அப்பொழுது தன் தாயின் வயிற்றிலிருந்து சப்பாணியாய்ப் பிறந்த ஒரு மனுஷனைச் சுமந்துகொண்டுவந்தார்கள்; தேவாலயத்திலே பிரவேசிக்கிறவர்களித்தில் பிச்சைகேட்கும்படி, நாடோறும் அலங்கார வாசல் என்னப்பட்ட தேவாலய வாசலண்டையிலே வைப்பார்கள். 3 தேவாலயத்திலே பிரவேசிக்கப்போகிற பேதுருவையும யோவானையும் அவன் கண்டு பிச்சைகேட்டான். 4 பேதுருவும் யோவானும் அவனை உற்றுப்பார்த்து: எங்களை நோக்கிப்பார் என்றார்கள். 5 அவன் அவர்களிடத்தில் ஏதாகிலும் கிடைக்குமென்று எண்ணி, அவர்களை நோக்கிப்பார்த்தான். 6 அப்பொழுது பேதுரு: வெள்ளியும் பொன்னும் என்னிடத்திலில்லை; என்னிடத்திலுள்ளதை உனக்குத் தருகிறேன்; நசரேயனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே நீ எழுந்து நட என்று சொல்லி; 7 வலதுகையினால் அவனைப் பிடித்துத் தூக்கிவிட்டான், உடனே அவனுடைய கால்களும் கரடுகளும் பெலனடைந்தது. 8 அவன் குதித்தெழுந்து நின்று நடந்தான்; நடந்து, குதித்து, தேவனைத் துதித்துக்கொண்டு, அவர்களுடனேகூட தோலயத்திற்குள் பிரவேசித்தான்.



இயேசுவின் மூலம் தீர்க்கதரிசனம்: யோவானுக்கு இயேசு தரிசனம் கொடுத்து கடைசி காலங்களில் நடக்கும் விவரங்களை தீர்க்கதரிசனமாக சொன்னார், அது இப்போது புதிய ஏற்பாட்டில் உள்ள கடைசி புத்தகமாகிய " வெளிப்படுத்தின விசேஷம் " என்ற புத்தகம்.

இயேசுவின் பெயர் மூலம் பிசாசுக்களை துரத்துதல்:

இயேசு தன் பெயர் மூலமாக பிசாசுகளை துரத்த தன் சீடர்களுக்கு அதிகாரம் கொடுத்தார், அவர்கள் சென்று அப்படியே செய்து மறுபடியும் வந்து ஆமாம், அசுத்த ஆவிகள் கூட எங்களுக்கு கீழ்படிகிறது என்று சொன்னார்கள்.

மத்தேயு 10:1 அப்பொழுது, அவர் தம்முடைய பன்னிரண்டு சீஷர்களையும் தம்மிடத்தில் வரவழைத்து, அசுத்த ஆவிகளைத் துரத்தவும், சகல வியாதிகளையும், சகல நோய்களையும் நீக்கவும் அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார்.

மத்தேயு 10:8 வியாதியுள்ளவர்களைச் சொஸ்தமாக்குங்கள், குஷ்டரோகிகளைச் சுத்தம்பண்ணுங்கள், மரித்தோரை எழுப்புங்கள், பிசாசுகளைத் துரத்துங்கள்; இலவசமாய்ப் பெற்றீர்கள் இலவசமாய்க் கொடுங்கள்.

லூக்கா 10:17. பின்பு அந்த எழுபதுபேரும் சந்தோஷத்தோடே திரும்பிவநது, ஆண்டவரே, உம்முடைய நாமத்தினாலே பிசாசுகளும் எங்களுக்குக் கீழ்ப்படிகிறது என்றார்கள்.18. அவர்களை அவர் நோக்கி, சாத்தான் மின்னலைப்போல வானத்திலிருந்து விழுகிறதைக் கண்டேன்.19. இதோ, சர்ப்பங்களையும் தேள்களையும் மிதிக்கவும், சத்துருவினுடைய சகல வல்லமையையும் மேற்கொள்ளவும் உங்களுக்கு அதிகாரங் கொடுக்கிறேன்; ஒன்றும் உங்களைச் சேதப்படுத்தமாட்டாது.20. ஆகிலும், ஆவிகள் உங்களுக்குக் கீழ்ப்படிகிறதற்காக நீங்கள் சந்தோஷப்படாமல், உங்கள் நாமங்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறதற்காகச் சந்தோஷப்படுங்கள் என்றார்.



இந்த அற்புதங்கள் இயேசுவின் பெயரினாலே செய்யப்பட்டவைகள், இது போல பல அற்புதங்களை அப்போஸ்தலர் நடபடிகள் புத்தகத்தில் காணலாம்.

நான் ஏன் இந்த விவரங்கள் இங்கு குறிப்பிட்டேன் என்றால், பிஜே அவர்கள் மேற்கோள் காட்டிய வசனத்தில் பலர் இப்படி இயேசுவிடம் தங்கள் மூலம் நடைபெற்ற அற்புதங்களை முன்வைத்து பரலோகத்தின் உள்ளே செல்லலாம் என்று நினைத்து அனுமதி கேட்கிறார்கள். இயேசு ஏன் அவர்களை பரலோகத்தில் அனுமதிக்கவில்லை என்பதை கீழே விளக்குகிறேன். இங்கு முக்கியமாக சொல்லவந்த செய்தி, "இயேசுவின் பெயரில் அற்புதங்கள், தீர்க்கதரிசனம், பிசாசுக்களை துரத்தப்படுதல்" நடந்துள்ளது என்பதே . இந்த வசனத்தை பிஜே அவர்கள் இதை தெரிந்துக்கொள்ளாமல் குறிப்பிட்டது, தான் இன்னும் ஆச்சரியம்.

இயேசுவின் பெயரில் தீர்க்கதரிசனம் உரைப்பதை பிஜே அவர்கள் அங்கீகரிக்கிறாரா?

இயேசுவின் பெயரில் அற்புதங்கள் நடைபெற முடியும் என்பதை பிஜே அவர்கள் ஒப்புக்கொள்கிறாரா?

இயேசுவின் பெயரில் பிசாசுக்களை துரத்தமுடியும் என்பதை பிஜே அவர்கள் ஏற்றுக்கொள்கிறாரா?

"இல்லை, நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன் என்று சொல்வாரானால், பின் ஏன் இந்த வசனத்தை மேற்கோள் காட்டினீர்கள்?" என்பது தான் என் கேள்வி.



4. இயேசுவின் பெயர் மூலம் அற்புதங்கள், தீர்க்கதரிசனங்கள் சொன்னவர்களை இயேசு ஏன் பரலோகத்தில் அனுமதிக்கவில்லை?

இப்போது ஒரு நியாயமான கேள்வி எழும்பும், அதாவது "இயேசு " என்ற பெயர் மூலமாக பல அற்புதங்கள் செய்தவர்களை, தீர்க்கதரிசனம் சொன்னவர்களை, பிசாசுக்களை துரத்தியர்வர்களை இயேசு ஏன் பரலோகத்தில் அனுமதிக்கவில்லை. அவர்களை "அறியேன்" என்று ஏன் சொன்னார்?

இதற்கு பதில் மிகவும் சுலபமானது, அதாவது இயேசுவை உண்மையாய் பின்பற்றுகின்ற ஒரு நபரின் ஜெபத்தை கேட்டு, இயேசு பல அற்புதங்களை செய்கிறார். மக்களை சுகமாக்க, அவர்களில் உள்ள அசுத்த ஆவிகளை துரத்த இயேசு தன் ஊழியர்களை(போதகர்களை, சுவிசேஷகர்களை...) பயன்படுத்திக்கொள்கிறார். இன்று கூட தன் ஊழியர்கள் மூலம் இயேசு அற்புதங்கள் செய்துக்கொண்டு வருகிறார்.

இன்று நாம் சில ஊழியர்களைப் பற்றி செய்தித்தாள்களில் படிக்கலாம். ஒரு காலத்தில் நல்ல ஊழியர்களாக இருந்தவர்கள், இயேசுவிற்காக அதிகமாக கடினமாக உழைத்தவர்கள், திடீரென்று பண ஆசை பிடித்து, அரசாங்கத்தை ஏமாற்றி, பிடிபட்டு சிறைச்சாலைகளில் அடைக்கப்படுகிறார்கள். இன்னும் சிலர், சில பெண்கள் விவகாரங்களில் மாட்டிக்கொண்டு, சிறைச்சாலை செல்கிறார்கள். இவர்கள் எல்லாம் ஒரு காலத்தில் உண்மையாய் இருந்தவர்கள், ஆனால், சிலர் உலகம் தான் முக்கியம் என்று ஆசை வைத்து குற்றம் செய்து இயேசுவின் வழியை விட்டு விலகிவிடுகிறார்கள். அப்படிப்பட்டவர்களைத் தான் "அக்கிரம செய்கைக்காரர்களே, என்னைவிட்டு போய் விடுங்கள்" என்று இயேசு சொல்கிறார்.

இயேசுவை காட்டிக்கொடுத்த யூதாஸ்காரியோத்து கூட‌ , இயேசுவிடமிருந்து அதிகாரத்தை பெற்றவன் தான், பிசாசுக்களை துரத்தியவன் தான், ஆனால், எப்போது தவறு செய்தானோ, அந்த நேரத்திலிருந்து அவன் தன் இரட்சிப்பை இழந்துவிட்டான்.

எனவே, ஒரு மனிதன் கிறிஸ்தவத்தில் ஒரு நாள், ஒரு மாதம், ஒரு வருடம் அல்ல, தன் கடைசி மூச்சு வரையில் இயேசுவின் கட்டளைப் படி பரிசுத்தமாக வாழவேண்டும். முதல் பல ஆண்டுகள் பரிசுத்தமாக வாழ்ந்து பிறகு துன்மார்க்கமான‌ வாழ்வு வாழ்ந்தால், அவனுக்கு இயேசு சொல்லும் வார்த்தைகள் " நான் உன்னை அறியவில்லை " என்பது தான்.

நாம் இயேசுவின் வார்த்தகள் கேட்கிறவர்களாக மட்டுமல்ல, அதன் படி செய்கிறவர்களாகவும் இருக்கவேண்டும் என்று இயேசு நீங்கள் குறிப்பிட்ட அதே அதிகாரத்தில் சொல்கிறார்.

இயேசுவின் கட்டளைகளை பின்பற்றுகிறவர்களை கல்லின் மீது வீடுகட்டுகிறவனுக்கு இயேசு ஒப்பிடுகிறார். அப்படி அவரது கட்டளைகளை பின்பற்றாதவர்கள் மணலின் மீது வீடு கட்டுகிறவர்களுக்கு ஒப்பிடுகிறார். இந்த மணலின் மீது வீடு கட்டுகிறவர்கள் போலத்தான், அந்நாளில் வந்து நாங்கள் அற்புதங்கள் செய்தோம் என்று காரணங்கள் காட்டி இயேசுவிடம் அனுமதி கேட்கிறார்கள்.

மத்தேயு 7:24-27 ஆகையால், நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுவேன். பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதியும் அது விழவில்லை; ஏனென்றால் அது கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது . நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்யாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டை மணலின்மேல் கட்டின புத்தியில்லாத மனுஷனுக்கு ஒப்பிடப்படுவான். பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதினபோது அது விழுந்தது; விழுந்து முழுவதும் அழிந்தது என்றார்.



எனவே, நீங்கள் குறிப்பிட்ட வசனங்களில் (மத்தேயு 7:22 முதல் 23 வரை ) இயேசு தன் இரண்டாம் வருகையில் நடக்கும் நியாயத்தீர்ப்புப் பற்றி பேசுகிறார். அவர் ஒரு நீதிபதியாக வருவார் என்று தன்னை அறிமுகம் செய்கிறார், எல்லாரும் தன்னிடமே கடைசியில் நியாயத்தீர்ப்புக்காக நிற்கவேண்டும் என்றுச் சொல்கிறார். நான் சொல்வதை மட்டும் கேட்டால் போதாது அதன் படி செய்பவர்களை மட்டுமே நான் சொர்க்கத்தில் அனுமதிப்பேன் என்று இயேசு சொல்கிறார். அப்படிப்பட்டவர்களின் நம்பிக்கை எவ்வளவு கடுமையான புயல் வந்தாலும், மழை பெய்தாலும் அசைக்கமுடியாதது என்று அப்படிப்பட்டவர்களை இயேசு உட்சாகப்படுத்துகிறார்.



பிஜே அவர்கள் எழுதியது:

அங்கே அவர் சில நோயாளிகளின்மேல் கைகளை வைத்து, அவர்களைக் குணமாக்கினதேயன்றி, வேறொரு அற்புதமும் செய்யக்கூடாமல், அவர்களுடைய அவிசுவாசத்தைக் குறித்து ஆச்சரியப்பட்டு; கிராமங்களிலேசுற்றித்திரிந்து, உபதேசம்பண்ணினார். (மாற்கு: 6:5,6)

இதிலிருந்து தெரிய வருவதென்ன? மக்கள் இதை விடவும் அநேக அற்புதங்களை இயேசுவிடம் எதிர்பார்த்துள்ளனர். அவருக்கோ சில நோயாளிகளைக் குணப்படுத்தியது தவிர வேறோன்றும் செய்ய இயலவில்லை. இதன் காரணமாகவே அவர்கள் அவிசுவாசம் (நம்பிக்கையின்மை) கொண்டனர்.

அவர்கள் எதிர்பார்த்தது இது மட்டும் தான் என்றால் அவர்கள் அவிசுவாசம் கொள்ள மாட்டார்கள். அதிக விசுவாசம் கொள்வார்கள்.

ஆக அவர்கள் கேட்ட பல அற்புதங்களில் ஒன்றே ஒன்றை மட்டும் இயேசு செய்துள்ளதால் அற்புதம் நிகழ்த்துவது அவரது சுய அதிகாரத்தில் இல்லை என்பது தெளிவு.

அப்பொழுது வேதபாரகரிலும் பரிசேயரிலும் சிலர் அவரை நோக்கி, போதகரே, உம்மால் ஒரு அடையாளத்தைக் காண விரும்புகிறோம் என்றார்கள். அவர்களுக்குப் பிரதியுத்தரமாக, இந்தப் பொல்லாத விபசாரச் சந்ததியார் அடையாளத்தைத் தேடுகிறார்கள்; ஆனாலும் யோனா தீர்க்கத்தரிசியின் அடையாளமேயன்றி வேறே அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை. (மத்தேயு: 12:38,39)

மரியாதையுடன் போதகரே என அழைத்து அவரிடம் அற்புதத்தை வேண்டியும் அவர் கடும் கோபத்துடன் அதை மறுக்கிறார் என்றால் அற்புதம் நிகழ்த்தும் வேலை அவரது அதிகாரத்தில் இல்லை என்பது தானே அதன் பொருள்.



ஈஸா குர்‍ஆன் பதில்:

இந்த பகுதிக்கு நான் "இயேசு ஏன் சில நேரங்களில் அற்புதங்கள் செய்யவில்லை – பாகம் 1 " என்ற கட்டுரையில் பதில் அளித்துள்ளேன். இக்கட்டுரையை இந்த தொடுப்பில் படிக்கலாம் : http://www.geocities.com/isa_koran/tamilpages/Rebuttals/pjonline/PjJesusMiracle-1.htm .


பிஜே அவர்கள் எழுதியது:

மேலும், இயேசு சில அற்புதங்கள் நிகழ்த்திக் காட்டிய போது அவரது காலத்து மக்கள் அவரைக் கடவுள் என நம்பவில்லை.

ஜனங்கள் அதைக் கண்டு ஆச்சரியப்பட்டு மனுஷருக்கு இப்படிப்பட்ட அதிகாரத்தைக் கொடுத்தவராகிய தேவனை மகிமைப்படுத்தினார்கள். (மத்தேயு 9:8)

அற்புதங்கள் நிகழ்த்திக் காட்டிய இயேசு அதன் மூலம் தம்மைக் கடவுள் என்று வாதம் செய்திருந்தால் மக்களும் அவரைக் கடவுள் என்று நம்பியிருப்பார்கள். இயேசு அவ்வாறு வாதம் செய்யாததால் அவரை மனிதர் என்றே நம்பினார்கள். மனிதருக்கு இத்தகைய அதிகாரத்தை வழங்கிய கர்த்தரையே அவர்கள் மகிமைப்படுத்தினார்கள் என்பதை இவ்வசனம் தெளிவாக எடுத்துரைக்கின்றது.



ஈஸா குர்‍ஆன் பதில்:

பிஜே அவர்களே, ஏதோ ஒரு நிகழ்ச்சியை எடுத்துக்கொண்டு அல்லது சில மனிதர்கள் சொன்னதை ஆதாரமாக் காட்டி, மற்ற இடங்களில் மக்கள் இயேசுவைப் பற்றி என்ன என்று சொல்கிறார்கள் என்பதை குறிப்பிடாமல், நீங்கள் எழுதுகிறீர்கள்.

இயேசு வாழ்ந்த அதே காலத்து மக்கள் அவரைப் பற்றி வேறு என்ன சொல்லியிருக்கிறார்கள் என்பதை கீழே தருகிறேன். இந்த வசனங்கள் எல்லாம் பிஜே அவர்களுக்கு தெரியவில்லையா? ஏன் இவ்வசனங்களை அவர் குறிப்பிடாமல் விட்டுவிட்டார்?

1. காபிரியேல் தூதன் கூட, இயேசு தேவகுமாரன் என்றுச் சொன்னார் (லூக்கா 1:32,35)

2. யோவான் ஸ்நானகன் கூட "இயேசு தேவகுமாரன்" என்றுச் சொல்லியுள்ளார் (யோவான் 1:34)

3. யூத மூப்பர்கள், ஆசாரியர்கள் இயேசுவிடம் "நீ தேவகுமாரனா?" என்று கேட்டபோது, "இயேசு ஆம், நான் அவர் தான் என்றார்" (லூக்கா 22:70)

4. நாத்தன்வேல் என்ற யூதனும் "இயேசுவை தேவகுமாரன்" என்றுச் சொல்கிறார் (யோவான் 1:49)

5. இயேசுவை சிலுவையில் அறைந்த ஒரு இராணுவ சேவகர்களின் தலைவனும் , இயேசுவை "தேவகுமாரன்" என்றுச் சொன்னான் (மத்தேயு 27:54, மாற்கு 15:39)

6. பேதுரு இயேசுவை தேவகுமாரன் என்றுச் சொன்னார் (மத்தேயு 16:16)

7. ஒரு முறை படகில் இருந்த சீடர்கள் , கடல் கொந்தலிப்பதை இயேசு அமர்த்தியதால், இயேசு தேவ குமாரன் என்று அறிக்கையிட்டார்கள், பணிந்துக்கொண்டார்கள். (மத்தேயு 14:33)

8. அசுத்த ஆவிகள் மனிதர்களை விட்டு போகும் போது, அவைகளும் இயேசு தேவகுமாரன் என்று அறிக்கையிட்டு வெளியேறியது (மத்தேயு 8:29, மாற்கு 3:11)

9. சாத்தான் இயேசுவை தேவகுமாரன் என்றுச் சொல்கிறான் , தேவகுமாரனாகிய மேசியாவைப் பற்றி பழைய ஏற்பாட்டில் உள்ள வசனங்களும் அவனுக்கு தெரிந்திருக்கிறது (மத்தேயு 4:3, 4:6)

இந்த வசனங்கள் "இயேசு தேவகுமாரன் " என்று சொன்ன "வார்த்தைகள் " வரும் வசனங்கள் தான். இன்னும் பல விதங்களில் பலர் இயேசுவைப்பற்றி சொல்லியுள்ளார்கள், அவைகளை நான் இங்கு குறிப்பிடவில்லை. (தாவீதின் குமாரனே, கிறிஸ்து, etc.. என்றும் சொல்லியுள்ளார்கள், அவைகளை நான் குறிப்பிடவில்லை).

பிஜே அவர்களே, நீங்கள் மக்கள் ஒரு முறை சொன்ன வசனத்தை ஆதாரமாக வைத்து எழுதுகிறீர்கள். இப்போது என்ன சொல்கிறீர்கள். எத்த்னைப் பேர் "இயேசு தேவகுமாரன் என்று" சொல்லியுள்ளார்கள் பார்த்தீர்களா?

காபிரியேல் தேவதூதன், யோவான் ஸ்நானகன், யூத ஆசாரியன் நாத்தன்வேல், இயேசுவின் சீடர்கள், சாத்தான் என்ற இப்லீஷ், அசுத்த ஆவிகள், என்று எல்லாரும் சொல்லியுள்ளார்கள். அவ்வளவு ஏன், இயேசுவை மூப்பர்கள், ஆசாரியர்கள் கேட்டபோது மௌனமாக இல்லாமல், தான் "ஒரு தேவகுமாரன்" என்று இயேசுவே சொல்லியுள்ளார்.

அதாவது, காபிரியேல் தூதன் மூலம் அல்லா குர்‍ஆனை சிறிது சிறிதாக முகமதுவிற்கு இறக்கினார் என்று நம்புகின்ற நீங்கள், அதே காபிரியேல் தூதன் முதல், இப்லீஸ் என்ற சாத்தான் வரை, இயேசுவை "தேவகுமாரன்" என்று அறிக்கையிட்டுள்ளார்கள், இதற்கு உங்கள் பதில் என்ன? மனிதர்கள் சிலர் சில நேரங்களில் சொன்ன வார்த்தைகளை நம்பும் நீங்கள், தேவ தூதன் சொல்வதை நம்பமாட்டீர்களா? தீர்க்கதரிசியான யோவான் ஸ்நானகன் சொல்வதை நம்பமாட்டீர்களா? அப்படியானால், இதே காபிரியேல் மூலம் உங்கள் குர்‍ஆன் இறக்கப்பட்டது என்று "கிறிஸ்தவர்கள்" எப்படி நம்புவது?

எனவே, இயேவை தேவகுமாரன் இல்லை என்று நிருபிக்க பைபிளை பயன்படுத்துகிறவர்கள் தோல்வி அடைவார்கள் என்று நான் எல்லாருக்கும் சொல்லிக்கொள்ளுகிறேன்.

கர்த்தருக்கு சித்தமானால், பிஜே அவர்களது புத்தகமாகிய "இயேசு இறைமகனா?" என்ற புத்தகத்தில் உள்ள மற்ற விவரங்களுக்கு பதில் அளிக்கும் போது சந்திக்கலாம்.

http://www.geocities.com/isa_koran/tamilpages/Rebuttals/pjonline/PjJesusMiracle-2.htm

பாக் முன்னால் பிரதமர் பெனசீர் புட்டோ, இஸ்லாமிய பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்

பெனசீர் புட்டோ, இஸ்லாமிய பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டார்.










பெனசீர் புட்டோ அவர்களது பொதுக்கூட்டத்தில் தற்கொலை வெடிகுண்டு வெடித்து 20 பேர்கள் பலியானார்கள். பெனசீர் புட்டோ நேரடியாக துப்பாக்கியாலும் வெடிகுண்டுகளாலும் தாக்கப்பட்டு, கழுத்து நெஞ்சு ஆகியவற்றில் துளைக்கப்பட்டு மரணமடைந்தார்.

பாகிஸ்தானில் ஜனநாயகம் கொண்டுவந்துவிடமுடியும் என்றவீண் நம்பிக்கை காரணமாக உயிர் கொடுத்த அன்னாருக்கு அஞ்சலிகள்.


Bhutto Assassinated by Suicide Attacker
Pakistan Rocked by Latest Killing


Benazir Bhutto was among at least 20 killed in a coordinated suicide attack. A party security adviser said Bhutto was shot in the neck and chest as she got into her vehicle to leave the rally in Rawalpindid, near the capital city of Islamabad. Dec. 27, 2007
Font Size

E-mail
Print
Share Pakistan opposition leader Benazir Bhutto was killed today by an assassin who shot her and then blew himself up as she was leaving a campaign rally, ABC News has confirmed.

Bhutto was among at least 20 killed in the blast. A security adviser to Bhutto's party said she was shot in the neck and chest as she got into her vehicle to leave the rally in Rawalpindi, near the capital city of Islamabad.

Top International stories
Benazir Bhutto Killed in Pakistan ExplosionBenazir Bhutto Dies at the Age of 54Benazir Bhutto's Influential LifeRelated Topics
Pakistan Pervez Musharraf Benazir Bhutto
The gunman then blew himself up.

"At 6:16 p.m. she expired," Wasif Ali Khan, a member of Bhutto's party who was at Rawalpindi General Hospital, told The Associated Press.

At the hospital, her supporters began chanting "dog, Musharraf, dog," a reference to Pakistan's president, Pervez Musharraf.

The attack took place as Bhutto was leaving a political rally where she addressed thousands before the country's Jan. 8 parliamentary elections.

Bhutto twice served as prime minister of the Islamic nation between 1988 and 1996.

Oct. 18, she returned to Pakistan from an eight-year exile. During her triumphant arrival in Karachi, Pakistan, a suicide attacker blew himself up, killing more than 140 people. Bhutto escaped injury in that attack.

Bhutto has been the target of nine previous assassination attempts.

Information from The Associated Press contributed to this report.

http://ezhila.blogspot.com/2007/12/blog-post_3916.html

Thursday, December 27, 2007

இரத்தசாட்சியான பாலஸ்தீனக் கிறிஸ்தவர்கள்(படம் சொல்லும் செய்தி)

இரத்தசாட்சியான

பாலஸ்தீனக் கிறிஸ்தவரின் அடக்க ஆராதனையில் இயேசு மகிமைப்பட்டார் .

காஜா

நகரத்திலுள்ள உரிமையாளர் 32 வயதான ரமி அய்யத் அக்டோபர் 6ம் தேதி கடத்தப்பட்டு ,மறுநாள் கொலை செய்யப்பட்டு கிடந்தார் .அவருக்கு 2 பிள்ளைகள் இருப்பதுடன் அவர் மனைவி இப்பொழுது கர்பிணியாக இருக்கிறார்.ரமியின் பாலஸ்தீன பைபிள் சொசைட்டி புத்தக சாலையில் குண்டு வீசப்பட்டு சேதமடைந்ததுடன் ,தொடர்ந்து அவருக்குக் கொலை மிரட்டல்கள் வந்துகொண்டிருந்த 6 மாதங்கள் கழித்து இக்கொலை நடந்துள்ளது.

அய்யதின்

மரண ஊர்வலம் துப்பாக்கி ஏந்திய ஹமாஸ் படை வீரர்களின் அணிவகுப்பின் நடுவே காஜா நகரில் நடத்தப்பட்ட அரிய காரியமாகும்.அவரது சடலம் வைக்கப்பட்டிருந்த வாகனத்தின் முன் பகுதியில் கிறிஸ்தவர் ஒருவர் பெரிய சிலுவையைப் பிடித்துக்கொண்டு நகரத்தின் தெருக்களனைத்தும் சுற்றிவந்தனர்.தெருக்களின் இரு பக்கங்களிலுமிருந்தவர்கள் என்றுமே கண்டிராத அந்த அரியக்காட்சியைக் கண்டுள்ளனர்.

தேவனுடைய

மகிமை அந்த அடக்க ஆராதனை ஊர்வலத்தில் வெளிப்பட்டதுடன் ,அய்யதை அறிந்திருந்த அநேக இஸ்லாமிஅயரும் அடக்க ஆராதனையில் கலந்துகொண்டதாகவும் அஹமத் என்பவர் தெரிவித்திருக்கிறார் .

ஹமாஸ்

அதிகாரிகள் கொலை செய்தவர்களைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டதகவும், இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யாரென்பதை அவர்கள் அறிந்திருந்தும் காரியத்தை திசைதிருப்புகின்றனர் என்றும் சகோதரர் அஹமத் கருதுகிறார்.முன்பு அராபத் தற்கொலைப்படைத் தாக்குதல்காரர்களை இவ்விதமாகவே கண்டுகொள்ளாமல் வளர விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில்

,ஜனங்கள் மத்தியில் பதற்றமான நிலை ஏற்பட்டு உள்ளது .காஜா நகரக் கிறிஸ்தவர்கள் மிக மோசமான நிலையில் இருப்பதாக அஹமத் கூறுகிறார்.இங்குள்ள சகோதர ,சகோதரிகள் கடும் உபத்திரவங்களில் அகப்பட்டிருப்பதினால் அவர்கள் ஜெபத்தில் தாங்கப்படவேண்டியது அவசியமாக இருக்கிறது.யாராவது ஹமாஸ் குழுவினர் அல்லது போலிசாருக்கு எதிராகவோ அல்லது சமதானம் மற்றும் ஜானநாயகத்தைக் குறித்தோ பேசினால் அவர்கள் காணாமற்போய்விடுவார்கள்.

அப்பகுதிகளில் சுமார்

2500 பாலஸ்தீனக் கிறிஸ்தவர்கள் இருக்கிறபோதிலும் ,பாதகமான சூழ்நிலகள் நிமித்தம் பலர் அவ்விடத்தைவிட்டு வெளிஏற விரும்புகின்றனர்.இஸ்லாமிலிருந்து கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட அநேகர் இரகசியக் கிறிஸ்தவர்களாக இருப்பதாக அஹமத் தெரிவிக்கிறார் .அது போன்றவர்களில் ஒருவர் தனது கனவில் இயேசுவைப் பார்த்து இரட்சிக்கப்பட்டுள்ளார்.இஸ்லாமியரிடையே வசிக்கும் இச்சகோதர ,சகோதரிகளுக்காகக் கிறிஸ்தவ விசுவாசிகள் இடைவிடாமல் ஜெபிப்பீர்களென்று நம்புகிறேன்.




Wednesday, December 26, 2007

இரத்தசாட்சியான பாலஸ்தீனக் கிறிஸ்தவர்கள்


source;Tortured for christ-Dec-2008

138 இஸ்லாமிய அறிஞர்களின் மிகப் பெரிய மோசடி (ஆசிரியர்: பிஷப் தீமோத்தேயுஸ் நசீர் , பாகிஸ்தான் )

(The Great Deception: Author Bishop T Nasir)


தமிழாக்க முன்னுரை: நான் பாகிஸ்தான் கிறிஸ்தவ போஸ்ட்(Pakistan Christian Post ) என்ற தளத்தில் பல மாதங்களாக கட்டுரைகளை படித்துவருகிறேன். இந்த கட்டுரையை தமிழில் மொழிபெயர்த்து நம் தளங்களில் பதிக்க அனுமதி கொடுக்கிறீர்களா? என்று, பாகிஸ்தான் கிறிஸ்தவ போஸ்ட் பத்திரிக்கையின் ஆசிரியருக்கு கடிதம் எழுதிய போது, இந்த ஒரு கட்டுரைக்கு மட்டுமல்ல, மற்ற எல்லா கட்டுரைகளையும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட எனக்கு அனுமதி அளித்தார். அதற்காக முதலாவது நான் தேவனுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். பத்திரிக்கையின் ஆசிரியர், Dr. Nazir S Bhatti அவர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.


தமிழாக்கம் தொடர்கிறது...

அக்டோபர் 2007ல் உலகம் அனைத்திலும் உள்ள இஸ்லாமிய அறிஞர்களில் 138 பேர் ஒரு குழுவாக சேர்ந்து பாகிஸ்தான் உட்பட, "உங்களுக்கும் எங்களுக்கும் இடையே ஒரு பொதுப்படை வார்த்தை (A Common Word between You and Us) " என்ற கடிதத்தை வெளியிட்டார்கள்.

இந்த கடிதம், கிறிஸ்தவ உலகத்தில் ஒரு சராசரி கிறிஸ்தவன் முதல், போப் பெனடிக்ட் XVI (Pope Banedict XVI) வரை உள்ள எல்லாருக்காகவும் எழுதப்பட்டது. இக்கடிதத்தில் அழுத்திச் செல்லப்பட்ட கருப்பொருள் என்னவென்றால், இயேசு கிறிஸ்து போதித்த " ஒருவரை ஒருவர் நேசித்தல் - Neighborly Love " என்பதே. இவர்கள் (இந்த இஸ்லாமிய அறிஞர்கள்) "ஒருவரை ஒருவர் நேசித்தல்" என்பது கிறிஸ்தவத்திலும், இஸ்லாமிலும் இருக்கும் ஒரு பொதுவான "கோட்பாடு" தான் என்று சொந்தம் கொண்டாடுகிறார்கள்.

இந்த கடிதத்தை இங்கு படிக்கலாம் : A Commom Word

நான் ஒரு கிறிஸ்தவ தீவிரவாதி(Radical Christian) கிடையாது, இருந்தாலும் என் அனுபவத்தையும், எனக்கு தெரிந்த விவரங்களையும் முன்வைத்து, கீழ் கண்ட கேள்வியை கேட்க விரும்புகிறேன்:

இஸ்லாமிய கோட்பாடுகளில், "ஒருவரை ஒருவர் நேசித்தல்" என்ற வார்த்தைகள் "இஸ்லாமியர்-அல்லாத" மக்களைப் பற்றி சொல்லப்பட்டுள்ளதா?


(The word "Neighborly Love" for a Non-Muslim, does exist in Islamic ideology?)

இக்கடிதம், உலமனைத்திலும் உள்ள எல்லா முஸ்லீம்களுக்கு, அவர்கள் புரிந்துக்கொள்ளும் எல்லா மொழிகளிலும் மொழிபெயர்த்து அனுப்பப்பட்டுள்ளது. இக்கடிதத்தை அனுப்புவதினால் யாருக்கும் எந்த நன்மையும் இல்லை. அதாவது முஸ்லீம் அறிஞர்களுக்கும், பெரியவர்களுக்கும் சிறியவர்களுக்கும், வெள்ளைக்காரருக்கும், கருப்பருக்கும், வேறு யாருக்கும் இக்கடிதம் மூலமாக எந்த நன்மையும் விளையப்போவதில்லை. இவர்களுக்கு தெரிந்ததெல்லாம் " இஸ்லாம்‍-அல்லாதவர்களை" வெறுக்கவேண்டும் மற்றும் கொல்லவேண்டும், அவ்வளவு தான். இந்த 138 இஸ்லாமிய அறிஞர்கள் உலகம் அனைத்திலும் உள்ள கிறிஸ்தவ தலைவர்களுக்கு அனுப்பிய இந்த கடித அழைப்பைப் பற்றி மிகவும் அக்கறை உள்ளவர்களாக இருந்தால், முதலாவது அவர்கள் தங்கள் சொந்த இஸ்லாமிய சகோதரர்களுக்கும் சகோதரிகளுக்கும் அவர்கள் இப்போது கடிதத்தில் எழுதின "அன்பு (Love‍)" என்பதைப் பற்றி கற்றுக்கொடுக்கட்டும். பாகிஸ்தான், தன் நாட்டில் உள்ள கிறிஸ்தவர்களையும், மற்றும் உள்ள இஸ்லாம் அல்லாதவர்களையும் நேர்மையாகவே நடத்துகிறது. இப்படி இருந்தும், பாகிஸ்தானில் கிறிஸ்தவர்களுக்கு எதிராகவும், மற்ற இஸ்லாம் அல்லாத சிறும்பான்மை இனத்திற்கு எதிராகவும் ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு கொடுமை நடந்தவண்ணமாகவே உள்ளது. கிறிஸ்தவர்களாகிய நாங்கள், "அயலகத்தாரிடத்தில் அன்பு கூறுதல்" என்ற வார்த்தைகளின் பொருளை, முஸ்லீம்களை விட அதிகமாகவும், தெளிவாகவும் புரிந்துவைத்துள்ளோம்.

இந்த இஸ்லாமிய அறிஞர்கள் முதலாவது உலகமனைத்திலுமுள்ள இஸ்லாமியர்களிடத்தில் செல்லட்டும், இஸ்லாமியர்களின் அடிபாக மக்கள் வரை செல்லட்டும், அதாவது எல்லா மதரசாக்களுக்கும், எல்லா மசூதிகளுக்கும் செல்லட்டும் . அவர்கள் "ஒருவரில் ஒருவர் அன்பு கூறுவது" என்றால் என்ன என்று மசூதிகளில் கற்றுக்கொடுக்கட்டும். தங்கள் மதரசாக்களிலிருந்து "அன்பு கூறுதல்" என்றால் என்ன என்று சாதாரண சராசரி முஸ்லீம்களுக்கு கற்றுக்கொடுக்கட்டும். இஸ்லாமியர்கள் "ஒருவரில் ஒருவர் அன்பு கூறுவது" என்றால் என்ன என்று தெரிந்துக்கொண்ட பிறகு வேண்டுமானால், இஸ்லாமிய அறிஞர்கள் கிறிஸ்தவர்களுக்கும், மற்ற மதங்களைச் சார்ந்தவர்களாகிய யூதர்களுக்கும், இந்துக்களுக்கும், காதியானியர்களுக்கும், இன்னும் உள்ள பெரிய சிறிய முஸ்லீம் அல்லாத மக்களுக்கும் அழைப்பு விடுக்கட்டும். அப்போது இரு பிரிவினருக்கும் இடையே " ஒரு பொதுவான வார்த்தைகளைப் A Common Word " பற்றி நாம் உட்கார்ந்து பேசுவோம்.

இஸ்லாமிய அறிஞர்கள் எழுதிய "உங்களுக்கும் எங்களுக்கும் இடையே ஒரு பொதுப்படை வார்த்தை (A Common Word between You and Us)" என்ற ஏமாற்று கடிதத்தை படித்த பிறகு நான் கீழ் கண்ட முடிவுக்கு வந்தேன். அதாவது, சர்க்கரையில் தோய்த்து எடுக்கப்பட்ட இனிய‌வார்த்தைகளை பயன்படுத்தி "கிறிஸ்தவ உலகை" ஏமாற்ற எடுக்கப்பட்ட ஒரு முயற்சி தான் இது. இஸ்லாமிய ஆரம்ப காலத்தில் மற்ற நாடுகளை ஆக்கிரமிக்க போகும் முன்பு அனுப்பப்பட்ட "மூன்று அம்ச செய்தி (Three Point Message) " போல, முஸ்லீம்கள் இப்போது கிறிஸ்தவர்களுக்கு செய்தி அனுப்புவதற்கு இது ஏற்ற‌ நேரம் இல்லை.

அந்த மூன்று அம்ச செய்தி கீழே கொடுக்கப்பட்டது போல் அல்லவா இருந்தது:

1. இஸ்லாமை ஏற்றுக்கொள் (அ) இஸ்லாமுக்கு மாறு

2. அப்படி மாறவில்லையானால், முஸ்லீம்களுக்கு " அடங்கி இருந்து", பாதுகாப்பு வரி என்னும் ஜிஸ்யா வரி கட்டு.

3. இவை இரண்டையும் ஏற்றுக் கொள்ளவில்லையானால், அப்போது "எங்கள் வாள்கள் முடிவெடுக்கட்டும் ".


( 1. Accept Islam or convert to Islam .

2. If not, then become "Humble Subject" of Muslims and pay "Jazia" (Protection Tax )

3. If the first two offers are not acceptable, then "Let the Sword Decide ". )

இன்றைய காலகட்டத்தில் முஸ்லீம்கள் மேலே சொல்லப்பட்டது போல செய்திகளை அனுப்பமுடியாது, எனவே, தான் அன்பு என்ற வார்த்தைய முஸ்லீம்கள் நம்பவில்லையானாலும் அவர்கள் "அன்பின் " செய்தியை அனுப்பியிருக்கிறார்கள். உலகமனைத்திலும் உள்ள கிறிஸ்தவ தலைவர்களுக்கும், பிரதிநிதிகளுக்கும் நான் சொல்லிக்கொள்ள விரும்புவது இது தான், அதாவது இந்த கடிதத்திற்கு பதில் கொடுக்க நீங்கள் முடிவு செய்தீர்களானால் அல்லது இந்த 138 இஸ்லாமிய அறிஞர்களிடம் இதைப் பற்றி பேசலாம் என்று முடிவு செய்தீர்களானால் அப்போது இவர்களைப் பற்றி மிகவும் எச்சரிக்கையாக இருக்கும் படி வேண்டுகிறேன்.

இந்த அறிஞர்களின் இதயத்திலும், உள்ளத்திலும் கிறிஸ்தவர்களின் மீது திடீரென்று எரிமலை குழம்பு போல "அன்பு" பெருக்கெடுத்து ஓடியது என்ற காரணத்தால் இவர்கள் இந்த கடிதத்தை தயாரிக்கவில்லை.

"உங்களுக்கும் எங்களுக்கும் இடையே ஒரு பொதுப்படை வார்த்தை (A Common Word between You and Us)" என்ற போர்வையின் கீழ் இருந்துக்கொண்டு, கிறிஸ்தவ நம்பிக்கையை தாக்குவதற்கு மேற்கொண்ட முயற்சி தான் இது. நிச்சயமாக நமக்கும்(கிறிஸ்தவர்களுக்கும்) அவர்களுக்கும்(முஸ்லீம்களுக்கும்) இடையே பொதுவாக எதுவும் இல்லை (There is absolutely nothing common Us (the Christians) and Them (the Muslims).

அந்த கடிதத்தில் கையெழுத்து இட்ட இஸ்லாமிய அறிஞர்களில், இரண்டு பேரைப் பற்றி எனக்கு மிகவும் நன்றாகத் தெரியும். அவர்கள் :

1. Amb. ஆரிஃப் கமல், முஸ்லீம் இன்டலெக்சுவல், பாகிஸ்தான். (Amb. Aref Kamal, Muslim Intellectual, Pakistan )

2. நீதிபதி முஃப்டி முஹம்மத் டகி உஸ்மானி (Allamah Justice Mufti Muhammad Taqi Usmani Vice President, Darul Uloom Karachi, Pakistan)


நீதிபதி முஃப்டி முஹம்மத் டகி உஸ்மானி அவர்கள் தீவிரமாக கிறிஸ்தவத்தை எதிர்ப்பவர். இவர் கிறிஸ்தவ நம்பிக்கைக்கு எதிராக பல புத்தகங்களை எழுதியுள்ளார். இவருடைய புத்தகங்களுக்கு நான் மறுப்பு(பதில்) உருது மொழியில் எழுதியுள்ளேன், அவைகள், "கலாம்-ஈ-ஹக்(Kalam-e-Haq) " என்ற, மாதம் ஒரு முறை பாகிஸ்தானில் வெளியாகும் கிறிஸ்தவ உருது பத்திரிக்கையில் வெளியானது.

கடைசியாக, நான் கிறிஸ்தவ தலைவர்களை பிரதிநிதிகளை வேண்டிக்கொள்வது என்னவென்றால், இந்த 138 இஸ்லாமிய அறிஞர்களை நம்பவேண்டாம். இவர்களுடைய இந்த கடிதத்திற்கு நான் ஏற்கனவே அளித்த பதிலில், இந்த 138 இஸ்லாமிய அறிஞர்களிடம் நான் கேட்டது இது தான், "முதலாவது சௌதி அரேபியாவில் ஒரு கிறிஸ்தவ சபை( Christian Church) கட்ட அனுமதி கொடுங்கள், பிறகு சௌதி அரேபியாவில் கட்டப்படும் கிறிஸ்தவ சர்சில் நாம் அனைவரும் உட்கார்ந்துக்கொண்டு, உங்களுக்கும் எங்களுக்கும் இடையே உள்ள பொதுவான செய்திகளைப் பற்றி விவரமாக பேசலாம்".

( In my very early response to this "Document", I requested these 138 Muslim scholars to "Let Christians build a Church in Saudi Arabia. We can sit in Saudi Arabian Church and sort all the "Common Words". )

ஆசிரியர்: பிஷப் தீமோத்தேயுஸ் நசீர் ( Bishop Timotheus Nasir )

மூலம்: http://www.pakistanchristianpost.com/newsdetails.php?newsid=1055


தமிழாக்கம் முற்றிற்று

http://www.geocities.com/isa_koran/tamilpages/Authors/bishoptnasir/greatdeception.htm

இயேசுவை அறிந்து கொண்ட அலி(துருக்கி)

அலி
(துருக்கி);குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி இருந்த இந்த துருக்கி மனிதர் இயேசுவை ஒரு கனவில் பார்த்தார் .அவருடைய வாழ்க்கை மாறியது.குடிபழக்கத்திலிருந்து விடுபட, நம்பிக்கையற்ற இவர் ஆல்கஹால் தடைசெய்யப்பட்ட சவுதி அரேபியாவுக்கு சென்றார்.ஆனால் அங்கு வேறு பானங்கள் அவரைத் தொற்றிக்கொண்டது. அங்கேயிருந்து நம்பிக்கையோடு இந்தக்குடியில் இருந்து விடுபட்டு உண்மை முஸ்லீம் ஆக வாழ வேண்டும் என்பதற்காக மெக்காவிற்கு புனிதப் பயணம்(ஹஜ் ) எல்லாம் மேற்கொணடார்.பயனேதும் இல்லை.ஆனால் ஆச்சரியமான விதத்தில் அவர் இயேசுகிறிஸ்துவை சந்தித்தார் .அவர் வாழ்க்கை முற்றும் மாறிற்று.
Ali
(Turkey)

Ali is the oldest of nine children but he doesn't have many warm memories of being part of such a large family. They teased him and said that he looked different than everyone else in the family. His mother said she hated him and that he was the child who resembled her the least. He always felt rejected by his family and cried a lot as a child.

For four months every year, Ali worked as a shepherd. This began when he was eight years old and continued until he was 18. He took the sheep to the mountains and since he spent a lot of time alone he wanted someone to talk to so he "created a god" in his heart. This god was like a friend to Ali. Ali would have lengthy conversations with him saying things like, "How beautiful are your creations," as he looked at the flowers, the sun, the rocks and the grass. He would also ask this god questions like, "Where does an apple's sweetness come from?" because he believed that there was a God who made everything good.

When he was 20, he started drinking alcohol. By the time he was 25, he was an alcoholic. Sometimes he started drinking before nine in the morning. When he arrived home, his wife often asked him if he had been drinking. This made him angry so he began beating her daily. His children witnessed this abuse and were afraid to come home after school so they would often go to a friend's house until they knew their father was asleep. Ali wanted to stop drinking and he felt bad that he was abusing his wife. He decided to move to Saudi Arabia to work in construction because he'd heard that alcohol was forbidden there. However, the first night he was in Saudi Arabia he found alcohol and drank it.

Although Ali wasn't a religious man—his family said they were Muslims but they didn't really know much about the religion—he decided to go to Mecca, hoping that this would free him from alcoholism. He says, "I made a decision in my heart. I am going to be a true pilgrim. I am going to be a true Muslim and I will quit drinking." The first night he was at Mecca, Ali had a dream. In the dream, Jesus took Ali's hand and said, "You belong to me." He also put His finger on Ali's forehead and said, "You need to leave this place and go right now." When Ali woke up, he felt like he was floating so he touched the carpet to make sure that he was still on the ground. He continued to hear Jesus' voice saying, "You need to come with me. You belong to me." Ali's friends saw a shiny spot on his forehead where Jesus had touched him, but when Ali looked in the mirror, he couldn't see it. (This spot on his forehead looked like "sim," a glittery type of makeup that Turkish brides wear.)

Ali decided to continue his pilgrimage. However, his one-month old car would not start. He kept hearing Jesus' voice saying, "You need to go from here." Once he changed his mind and decided to leave Mecca, his car started. He went home to his apartment and heard the same voice again. This time Jesus told him that he should go back to Turkey. Within three days, he was at a "welcome home" party in Turkey. Again, he heard the voice. This time, Jesus told him to tell everyone at the party that he was now a Christian. He did this, but the people didn't really take him seriously.

It wasn't until several years after the dream that Ali began to understand what it really meant to be a Christian. He was listening to the radio when he heard a voice say, "Jesus died, rose from the dead after three days and is seated at the right hand of the Father." He called for his wife and told her that he had found the voice of Jesus—inside the radio. Through this radio program, he received Bible study material and a New Testament. He was 38 years old at the time and says the day he received the New Testament in the mail was "maybe the happiest moment of my life." After completing various correspondence courses, Ali and his family moved to Istanbul so he could attend Bible school.

He continues to share his Christian faith openly and unashamedly. Alcohol no longer has dominion over him, and he cherishes the wife he once treated so badly. Truly, he has become a "new creation in Christ."

http://morethandreams.org/ali.html

Monday, December 24, 2007

islam-இஸ்லாம்;உமரின் சிறு கதை: பக்ரீத் பண்டிகை 2007



"பாத்திமா, இங்கே வந்து பாரு யார் வந்திருக்காங்கன்னு" அம்மா மகளை கூப்பிட்டாள்.

பாத்திமா சமையல் அறையிலிருந்து ஹாலுக்கு வந்து பார்க்கிறாள்.

"வாங்க வாங்க அக்கா, மாமா. சலாம் வாலைக்கும்" பாத்திமா சந்தோஷத்தில் தன் அக்காவையும், மாமாவையும் வரவேற்றாள்.

"வாலைக்கும் சலாம்" என்று அக்காவும், மாமாவும் திரும்பவும் சொன்னார்கள்.

பாத்திமாவுடைய அக்கா மும்தாஜுக்கு கல்யாணமாகி ஒரு மாதம் தான் ஆகிறது. தன் கணவரோடு இஸ்லாமாபாதில் வசிக்கிறாள். தனக்கு கல்யாணமாகி தன் கணவரோடு தன் பெற்றோர் வீட்டில், பக்ரீத் பண்டிகை கொண்டாட, பக்ரீத் பெருநாளின் முந்தைய நாள் வந்திருக்கிறாள்.

பாத்திமா இந்த ஆண்டு தான் மருத்துவ படிப்பில் சேர்ந்து முதலாமாண்டு படித்துக்கொண்டு இருக்கிறாள். அம்மா கதிஜா, தன் பெரிய மகளையும், மருமகனையும் வரவேற்று, மகள் வந்த சந்தோஷத்தில் பூரித்துபோனார்கள்.

"அப்பாவும், தம்பி உஸ்மானும் எங்கே, ஆளைக்காணோம்" என்றாள் அக்கா.

"அவங்க இரண்டு பேரும், பக்ரீத் பெருநாளுக்கு தேவையான சாமான்கள் வாங்க போயிருக்கிறாங்க, இப்போ வந்திடுவாங்க" என்றாள் பாத்திமா.

அதற்குள் அம்மா எல்லாருக்கும் காபி தயார் செய்துக்கொண்டு வந்தார்கள். எல்லாரும் குடித்தார்கள்.

"அக்கா, நீ இல்லாமே ஒரு மாசமா, அம்மா வேதனைப்பட்டு கரைந்தே போயிட்டாங்க, தெரியுமா? ஒவ்வொரு நாளும், தூக்கரத்துக்கு முன்னாடி, மும்தாஜ் இருந்தால், இது செய்து கொடுப்பாள், அது செய்து கொடுப்பாள் எனக்கு நிம்மதியா இருந்தது என்று அம்மா ஓயாமல் சொல்லிக்கிட்டே இருந்தாங்க" என்று மூச்சு விடாமல் சொன்னாள் பாத்திமா.

அம்மா தன் மூத்த மகளின் முகத்தை அப்படியே பார்த்துக்கொண்டே இருந்தாள், அவள் முகத்தில் காணப்படும் சந்தோஷத்தையும், கண்களில் தெரியும் ஒளியையும் பார்க்க அம்மா தவறவில்லை.

"இப்போ தான் நீ இருக்கேயில்லே, உன் அம்மாவுக்கு உதவி செய்யரது தானே" என்று மறுமொழி கொடுத்தார் அக்காளில் கணவர் செல்லமாக.

"இவளா! எனக்கு அதிக தொந்தரவு செய்யாமல் இருந்தால் சரி, அதுவே எனக்கு போதும்" என்று சிரித்தார் அம்மா.

"மாமா, இதை விடுங்க, இஸ்லாமாபத்திலிருந்து எனக்கு என்ன கொண்டுவந்தீங்க, முதல்ல அதைச்சொல்லுங்க"

"பாத்திமா உன் மொபைள் கொண்டுவா?" என்றாள் அக்கா.

"ஏன், என் ஓட்ட மொபைளை நீ எடுத்துக்கப்போறியா" என்றாள் பாத்திமா.

"உன் மாமா உனக்கு கெமரா உள்ள கலர் மொபைளை பக்ரீத் பண்டிகைக்கு பரிசாக கொண்டுவந்திருக்கிறார் தெரியுமா" என்றாள் அக்கா.

"என்னது கலர் மொபைளா அதுவும் கெமராவா, வாவ் எங்கே சீக்கிரமா காட்டுங்களேன். புது மொபைள் வாங்கித்தரச்சொல்லி எத்தனைமுறையோ சொல்லிட்டேன், அப்பா தான் இப்போ வேண்டாம்மா அப்படின்னு சொன்னாரு" என்றாள் பாத்திமா.

அக்காள் மும்தாஜ், கருப்பு கலரில் வாங்கிக்கொண்டு வந்த மொபைளை எடுத்து காட்டினாள், "பல நாள் பட்டினியாக இருந்தவன் முதல்முறையில் நல்ல சாப்பாடு பார்த்தால் எப்படி பார்ப்பானோ, அது போல பாத்திமா அதை வாங்கி பார்க்கிறாள்.

" Thank You அக்கா, Thank You மாமா என்றுச் சொல்லி, மொபைளை வாங்கிக்கொண்டு தன் பெட் ரூமுக்குள் ஓடினாள்".


"ஏம்மா இப்படி பணத்தை செலவு செய்யரீங்க, அவ அண்ணே, சௌதிக்கு சென்று முதல் சம்பளத்தில் கலர் மொபைள் வாங்கி தருவதாக சொல்லியிருந்தான்" என்றுச் சொன்னார்கள் அம்மா.

"அதுல என்னம்மா இருக்கு, சின்ன பொண்ணு, இதுல வேற மருத்துவ படிப்பு படிக்கிறாள், அவளுடைய பழைய மொபைள் அடிக்கடி பேட்டரி வீக் ஆகுது என்று ரொம்ப கஷ்டப்பட்டா" என்று சமாளித்தாள் அக்கா.

அக்காவும் மாமாவும் பயணகலைப்பு நீங்க சிறிது ஓய்வு எடுத்துக்கொண்டார்கள். தம்பி உஸ்மானும், அப்பாவும் சாமானோடு வருகிறார்கள்.

"அக்கா, அப்பாவும் அண்ணாவும் வந்திருக்காங்க" என்று கூப்பிட்டாள் பாத்திமா.

அக்காவும், மாமாவும் ஹாலுக்கு வருகிறார்கள்.

ஒருவருக்கு ஒருவர் "சலாம்" சொல்லிக்கொண்டார்கள்.

"எப்படி இருக்கேம்மா நல்லாயிருக்கியா?"மகளை விசாரிக்கிறார் தந்தை.

"ரொம்ப நல்லா இருக்கே அப்பா" மகள் பேசினாள்.

"எப்படி இருக்கீங்க, உங்க வியாபாரம் எப்படி நடக்குது" என்று மருமகனை விசாரித்தார் மாமனார்.

"நல்லாயிருக்கேன் மாமா, வியாபாரமும் நல்லா நடக்குது, எங்க வீட்டிலே எல்லாரும் உங்களுக்கு சலாம் சொன்னார்கள்" என்றார் மருமகன்.

"வாலைக்கும் சலாம்" என்றார் மாமனார்.

"அப்பா என்னப்பா ரொம்ப எளச்சிட்டீங்க, சரியா சாப்பிடுவதில்லையா?" என்று கேட்டாள் மும்தாஜ்.

"அப்படி ஒன்னுமில்லேம்மா, நான் நல்லாத்தான் இருக்கேன், இதோ, உஸ்மானுக்கு சௌதியிலே நல்ல வேலை கிடைச்சிருக்கு இல்லையா, அதுக்கு தேவையான பணத்தையும், மற்ற காரியங்களையும் பார்ப்பதற்கு ரொம்ப அதிகமாக அலையவேண்டி இருந்தது, கொங்சம் ரெஸ்டு எடுத்துக்கிட்டா எல்லாமே சரியாகிவிடும்" என்றார் அப்பா.

"ஆமா, என்ன உஸ்மான், நீ போனவாரமே போகனும், ரொம்ப அர்ஜண்டு அப்படியுன்னு போன்லெ சொன்னெ இல்லியா, பின்னே ஏன் பிளானை மாத்திட்டே" என்று அக்கா கேட்டாள்.

"இல்லேக்கா, நீயும், மாமாவும் இந்த பக்ரீத்துக்கு இங்கு வர்ரதா அப்பா சொன்னாங்க, எனவே, நான் தான் ஏஜண்டிடம் பேசி, ஒரு வாரம் கழித்து, பக்ரீத்தை உங்களோடு கொண்டாடிவிட்டு போகலாம், பிறகு 2, 3 வருஷம் ஆகுமில்லையா உங்களை எல்லாம் மறுபடியும் பார்ப்பதற்கு" அப்படியின்னு சொல்லி, நான் தான் லேட் செய்தேன்.

"அப்படியா, ரொம்ப சந்தோஷம்" என்றாள் மும்தாஜ்.

மதியம் மிகவும் சந்தோஷமாக எல்லாரும் சாப்பிட்டார்கள். மாமா தூங்க சென்றுவிட்டார். உஸ்மான், அக்கா மும்தாஜும், அப்பா அம்மாவும் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். பாத்திமா இன்னும் தன் புது மொபைளை ஆராய்ச்சி செய்துக்கொண்டு இருப்பதை நிறுத்தவில்லை.

"பார் உஸ்மான், நீ சௌதிக்கு போய் நல்லா வேலை செய்யனும், நல்லா சாப்பிடனும், அப்பாவிற்கும் உடல் நிலை அடிக்கடி சரியில்லாமல் ஆகிறது, பாத்திமா வேறு நான் மருத்துவபடிப்பை படிப்பேன் என்று பிடிவாதமாக இருந்ததால், அப்பா இந்த வருஷம் ஃபீஸை கஷ்டப்பட்டு கட்டியிருக்கிறார், நீ தான் குடும்ப பாரத்தை சுமக்கனும், நானும் மாமாவும் தினமும் உனக்காக துவா செய்வோம்" என்றாள் மும்தாஜ்.

"அல்லா எனக்கு ரொம்ப நல்ல வேலையா கொடுத்திருக்கிறார், அக்கா, நீ ஒன்றும் கவலைப்படாதேக்கா, நான் போய் சம்பாதித்து ஒவ்வொரு மாசமும் தவறாமல் பணம் அனுப்புவேன், ஓவர் டைம் ஏதாவது இருக்கிறதா என்று பார்த்து, அதுவும் செய்து, நிறைய சம்பாதிப்பேன்." என்றான் உஸ்மான்.

"டேய், ஓவர் டைம் என்றுச் சொல்லி, ஒடம்ப கெடுத்துக்காதே, எப்படி வேலை செய்யரிய்யோ அதே போல நல்லா ஓய்வு எடுத்துக்கனும்" என்றாள் அம்மா அன்பாக.

"இல்லேம்மா நான் ரெஸ்டு எடுத்துக்குவேன், நல்லா சாப்பிடுவேன்மா, நீங்க கவலைப்படாதீங்க"

"என்னப்பா, இந்த வருஷம் மூனு ஆடு குர்பானி கொடுக்கிறீங்களா? வீட்டு வாசல்ல மூனு ஆடு இருக்கு?" என்றாள் மும்தாஜ்.

"ஆமாம்மா, பாரு, உனக்கு நல்ல இடத்திலே கல்யாணம் நடந்தது, தங்கம் போல மாப்பிள்ளை கிடைச்சாரு, பாத்திமாவுக்கு மருத்துவ படிப்புக்கு அல்லா உதவினாறு, இன்னும் உஸ்மான் சௌதி போகிறான் என்றுச் சொல்லி, மூன்று ஆடுகள் குர்‍பானி கொடுப்பதாக நானும், அம்மாவும் முடிவு செய்தோம்மா" என்றார் அப்பா.

"நல்லதுப்பா" என்றாள் மும்தாஜ்.

மறுநாள் காலை பக்ரீத் பண்டிகை, எல்லாரும் எழுந்து குளித்துவிட்டு,
புது துணிகளை அணிந்துக்கொண்டு, நமாஜுக்கு ஈத்கா போக தயாராகி விட்டார்கள். நாமாஜுக்கு போய் வந்து, ஆடுகளை குர்பானி கொடுக்கவேண்டும். அப்பாவும், உஸ்மானும், மாமாவும் நமாஜ் ஓதுவதற்கு ஈத்காவிற்கு போகின்றனர்.

"அம்மா போய் வரேம்மா" என்றான் உஸ்மான்.

"அண்ணா, வரும் போது, கடைத்தெருவிலே உள்ள ஸ்வீட் கடையிலே எனக்கு "பால் கோவா" வாங்கி வரணும்" - என்றாள் பாத்திமா.

"கண்டிப்பா கொண்டுவரேம்மா" என்றான் உஸ்மான்.

முன்று பேரும் ஈத்காவிற்கு செல்கின்றனர்.

குடும்பத்தின் சந்தோஷத்தைப் பார்த்து, "யா அல்லாஹ், உனக்கு நான் நன்றியை சொல்கிறேன்" என்று தன் உள்ளத்தில் சொல்லிக்கொண்டார் அம்மா.

நமாஜ் முடிந்தது, எல்லாரும் கடைசியாக துவா செய்துக்கொண்டு இருக்கிறார்கள்.


"அல்லாஹ் என் குடும்பத்தில் இப்போதுள்ள சந்தோஷம் நிலைத்து இருக்க உதவி செய். என் மகளுக்கு நல்ல மாப்பிள்ளையை கொடுத்தாய், என் மகன் சவுதிக்கு சென்று நல்ல முறையில் வேலை செய்ய உதவி செய், என் இளைய மகள் நல்ல முறையில் தன் மருத்துவ படிப்பை முடிக்க உதவி செய்" என்று வேண்டிக்கொண்டார் அப்பா.

"இறைவனே, எனக்கு கொடுத்த நல்ல மனைவிக்காக உனக்கு நன்றி, எல்லாரையும் ஆசீர்வதியும், என் மச்சான் நாளை சௌதிக்கு செல்கிறான், அவனுக்கு எல்லா உதவியையும் நீ தான் செய்யனும்" என்றான் மாமா.

"அல்லாஹ், உனக்கு நான் எப்படி நன்றி சொல்லுவேன், எங்கள் குடும்பத்தில் உன் கிருபை நிறம்ப இருக்கட்டும். என் அக்கா மாமாவிற்காக உனக்கு நன்றி." என்று வேண்டிக்கொண்டான். வீட்டுக்கு போன உடனே, நான் வாங்கிய மோதிரத்தை மாமாவின் விரலிலே நான் போடுவேன் அடுத்த முறை வரும் போது, அவருக்கு இன்னும் பெரிய பரிசு தருவேன் என்று தன் மனதில் நினைத்துக்கொண்டான்.

வீட்டிலே எல்லாரும் நமாஜ் செய்துவிட்டு, இந்த மூன்று பேருக்காக வழி மீது விழி வைத்து பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.

சிறு காயங்களுடன் இரத்த கறைகளோடு மூச்சு வாங்க‌ ஒருவன் ஓடி வருகிறான்.

"பெரியம்மா, மஜீத்லே நமாஜ் செய்துக்கொண்டு இருக்கும் போது, ஒரு குண்டு வெடித்து, அதுலெ, அதுலெ பெரியப்பாவும், உஸ்மான் அண்ணனும், மாமாவும், ....... ம..ரி....த்....து போனாங்கம்மா..." என்றுச் சொல்லி, ஓவென்று அழுகிறான்.....

அம்மா....?!@
அக்கா மும்தாஜ்....?!@
தங்கச்சி பாத்திமா.....?!@

இவர்களின் எதிர்கால வாழ்க்கை இனி இருட்டு தான்....

செய்தித்தாளில் செய்தி: பாகிஸ்தானில் குண்டு வெடித்து, 54 பேர் மரித்துப்போனார்கள். பல பேர் காயப்பட்டார்கள்.

54 killed in suicide attack on Pak mosque

காட்டில் வாழும் புலி சிங்கம் கூட தன் இனத்தை அழிக்காது, ஆனால், மனிதன்.....

இயேசுவே, "நீ உன்னை நேசிப்பது போல பிறனையும் நேசிப்பாயாக" என்ற உம்முடைய‌ கட்டளையை மனிதன் என்று கடைபிடிக்கப்போகிறானோ...

ISLAM-இஸ்லாம்;பிறையில் இருந்து சிலுவைக்கு(சகோ.முகமது ரிச்சர்ட்)

என்னுடைய பெயர் முகமது பாஷா.நான் பர்மாவில் 1960 ஆம் ஆண்டு தீவிர சடங்காச்சாரங்களைப் பின்பற்றும் இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்தேன்.நா 5 ஆம் வகுப்பு வரை படித்தேன் .ஒரு சமயம் என் சரீரத்தில் ஆஸ்துமா வியாதி கொண்டது.சிறு வயதிலே என் தாயார் இறந்துவிட்டார்கள் .எனது 20ஆம் வயதில் தந்தையும் இறந்து விட்டார்கள்.அந்நாளிள் இருந்து எண் அண்ணான் வீட்டில் தங்கியிருந்தேன் .என்னிடம் சொத்து இருக்கும் வரையில் நன்றாக கவனித்தார்கள்.சொத்தை கையெழுத்து வாங்கிக்கொண்டு வியாதிக்காரன் என்று என்னை விரட்டி விட்டார்கள்.பள்ளிவாசலிலும் என்னை யாரும் கவனிக்கவில்லை. எங்கள் சமுதாயமும்,உற்றார் உறவினர்களும் என்னை கைவிட்டுவிட்டார்கள்.இந்த நிலையில் நான் மரணபடுக்கையில் விழுந்தேன் .பிறகு சிறிது நாட்களில் ஓர் அளவுக்கு உடம்பு தேறி வந்தது.திருமணமாகி முதல் மனைவியும் கைவிட்டாள் .இதன் காரணமாக போதை பொருளுக்கு கஞ்சா,கள்ளசாராயம்,பிராந்தி மற்றும் எல்லா தீயபழக்கங்களும் உண்டாகி பாவத்தில் வாழ்ந்து கொண்டிருந்தேன் .இந்நிலையில் வியாதியஸ்தனாவும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டேன்.டாக்டர்களும் என்னை கைவிட்டார்கள் .எல்லாரும் கைவிட்டாலும் என் தாயின் கர்பத்திலிருந்து என்னை தெரிந்து கொண்ட தேவன் கைவிடவில்லை.

1993

ஆம் ஆண்டு மெரினா கடற்கரையில் கொரியா தேசத்திலிருந்து வந்த ஊழியக்காரர் பால்யாங்கிசோ இயேசுவைப் பற்றியும் ,இரட்சிப்பைப்பற்றியும் சொன்னார்.அப்பொழுது என்னை இயேசுவுக்கு ஒப்புக்கொடுத்து இயேசுவை என் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொணேடேன் .உடனே என்னுடைய சரீரத்திலிருந்த வியாதி நீங்கியது.பலமும் சுகமும் கிடைத்தது .இதையறிந்த என் மதத்தினர்,நண்பர்கள் ,உறவினர்களிடமிருந்து அநேக துன்பங்கள் வசைமொழிகள் வந்தது.அவையெல்லாவற்றிலும் தேவன் என்னை காத்து வழி நடத்தி வந்தார் .இனிமேலும் என் தேவன் என்னை நடத்துவார்.எனது வாஞ்சையெல்லாம் நான் இரட்சிப்பைப் பெற்றது போல் எனது ஜனங்களும் இரட்சிக்கப்பட வேண்டும் என்பதே .

ஆதார நூல்

;TRINITY FRAGRANCE,APRIL1998,நிறுவனர் ;மைதீன் கிரீன் ரோஸ்,BANGALORE 560005

இஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்

முன் பக்கம் செல்ல

HOME PAGE

தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்

1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1

2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2

3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3

4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4

பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்

1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1

2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2

பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்

1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்

2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்