இஸ்லாம் அமைதி மார்கமா? இஸ்லாம் இனிய மார்கமா? இஸ்லாம் உண்மையான மார்கமா?

ஆன்சரிங் இஸ்லாம்

பல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்

சத்தியவான் தளம் செல்ல

Thursday, April 30, 2009

யூதாஸ் இயேசுவைக் காட்டிக்கொடுக்க முன்விதிக்கப்பட்டிருந்தாரா?


யூதாஸ் இயேசுவைக் காட்டிக்கொடுக்க முன்விதிக்கப்பட்டிருந்தாரா?

 


கேள்வி:

இதோ இங்கு என் கேள்வியை முன்வைக்கிறேன், இதற்கு சரியான பதில் கிடைக்கும் என்று நம்புகிறேன். யூதாஸும் அவருடைய‌ செயல்களும் என்னதான் தீயதாகக் காணப்பட்டாலும், கிறிஸ்தவம் தோன்ற தவிற்கமுடியாத காரணி இல்லையா? யூதாஸ் இல்லை என்றால், அதிகாரிகளிடம் இயேசுவைக் காட்டிக் கொடுக்கும் கேவலமான‌ செயலை யார் செய்திருப்பார்? என்னைப் பொருத்தவரை கிறிஸ்தவம் முழுமையடைய யாராவது இதனைச் செய்திறுக்க வேண்டும். யூதாஸ் இந்த 'கடமையை' செய்ய முன்விதிக்கப்பட்டிருந்தாரா? அவர் காட்டிக் கொடுக்காதிருந்தால் எப்படி கிறிஸ்தவம் உருபெற்றிருக்கும்? நீங்கள் சொல்கிறபடி இயேசு சிலுவையில் அறையப்பட்டிருப்பாரா?
 
 
பதில்:

இயேசுவை ஒழித்துக்கட்ட திட்டமிட்டது யூத மத அமைப்பே ஆகும். இயேசுவின் ஒரு சீடரே காட்டிக்கொடுக்க முன்வரும் போது அவர்கள் அதை சந்தோஷத்தோடு வரவேற்றனர். ஆனால் யூதாஸ் முன்வராதிருந்திருந்தால் அவர்கள் வேறு வகையில் இயேசுவை ஒழிக்கத் திட்டமிட்டிருப்பார்கள் என நான் நம்புகிறேன். சுவிஷேத்தில் பல இடங்களில் யூதாஸ் காட்டிக் கொடுக்கும் முன்பே அவர்கள் இயேசுவைக் கொல்லத் திட்டமிடுவதைக் காணலாம்.


நீங்கள், ஒரு முஸ்லிமாக இதே போல இருக்கும் மற்றும் இதை விட‌ இன்னும் சிக்கலான விஷயமான "குர்‍ஆன் சூரா அபூ லஹப்" பற்றிய பிரச்சனையை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? குர்‍ஆன் படைக்கப்படாத நித்தியமான ஒன்று என்றும், அது முஹம்மதுவிற்கு இறக்கப்பட்டது என்றும் நீங்கள் நம்புகிறீர்கள்? அபூ லஹப் பிறக்கும் முன்பே அவரை நித்திய கண்டனத்திற்கு/தண்டனைக்கு உள்ளாவதாக இந்த சூரா குறிப்பிடுகிறதே! அபூ லஹப் இதில் மாறுபட்டு நடக்க வாய்ப்பிருந்ததா? அவர் நித்திய கண்டனத்திற்கு முன்விதிக்கப்பட்டிருந்தாரா?

 
இது விளையாட்டல்ல. என்னைத் தவறாகப் புரிந்துகொள்ள வேண்டாம். முன்விதிக்கப்படுதல் (Predestination) ஒரு கடினமான இறையியல் பிரச்சனையாகும். அது கிறிஸ்தவர்களுக்கு மட்டுமல்ல, இதர ஒரிறைக்கொள்கை உள்ள மதங்களுக்கும் பொருந்தும். எவ்வாறு இறைவன் அனைத்தையும் கட்டுப்படுதுபவராக இருந்தும், அதே சமயம் தவறு செய்பவர்களை தண்டிப்பவராகவும் இருக்க முடியும்? மிகவும் உயரிய தேவன் இதைச் செய்வாரா? இறைவனின் விருப்பத்திற்கு எதிராக மனிதர்கள் தவறுகள் செய்யும் போது, இறைவன் எப்படி சர்வ வல்லவராக (எல்லாவற்றையும் கட்டுப்படுத்துபவராக) இருக்கமுடியும்? அல்லது மனிதர்கள் தவறுகள் செய்வது இறைவனின் சித்தமானால், பின் ஏன் அவர் மனிதர்களை தண்டிக்கிறார்?

 
இதைக்குறித்து நல்ல ஆழமான இறையியல் புத்தகங்கள் உள்ளன. இந்த கேள்விக்கு சில வரிகளில் பதிலளிக்க முடியாது. நான் இதை முழுமையாகப் புரிந்து கொண்டதாக‌ காட்டிக்கொள்ள விரும்பவில்லை.

 
இந்த பதில் ஒரு முழுமையான பதிலாக இல்லாமலிருக்கலாம், ஆனால் குறைந்தபட்சம் இது ஒரு நேர்மையான பதிலாகும். மற்றும் இது கிறிஸ்தவத்தின் பிரச்சனை அல்ல, இது ஒரு பொதுவான இறையியல் தத்துவரீதியான பிரச்சனையாகும்.

 
ஆங்கில மூலம்: Was Judas predestined to do evil?

 

Monday, April 20, 2009

ஜாகிர் நாயக் அவர்களுக்கு பதில் - பல தார மணம் (Polygamy)

 

ஜாகிர் நாயக் அவர்களுக்கு பதில்கள்

 

 
இஸ்லாமியரல்லாதவர்கள் கேட்கும் பொதுவாக கேள்விகளுக்கு பதில்கள்
 
 
பல தார மணம் (Polygamy)


இக்கட்டுரையில் டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களின் வரிகள் பச்சை வண்ணத்தில் தரப்படுகிறது.
 
கேள்வி: ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்களை ஒரு மனிதன் திருமணம் செய்துகொள்ள இஸ்லாம் ஏன் அனுமதிக்கிறது? அல்லது பலதார மணத்தை இஸ்லாம் ஏன் அனுமதிக்கிறது?

பதில்:

1. பலதார மணம் என்றால் என்ன?

பலதார மணம் என்ற திருமண அமைப்பில் ஒரு நபர் ஒன்றுக்கும் மேற்பட்டவர்களை திருமணம் செய்து கொள்ளலாம். பல தார மணம் என்பது இரண்டு வகைப்படும். முதலாவது Polygyny என்பதாகும் இதில் ஒரு மனிதன் ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்களை திருமணம் செய்யலாம். இரண்டாவது Polyandry என்பதாகும், இம்முறைப்படி ஒரு பெண் பல ஆண்களை திருமணம் செய்யலாம். இஸ்லாமில் முதலாம் வகையான polygyny ஒரு வரையறையோடு அனுமதிக்கப்பட்டுள்ளது ஆனால் இரண்டாம் வகையான polyandry முழுவதுமாக‌ தடை செய்யப்பட்டுள்ளது. இப்போது நமது பழைய கேள்விக்கு வருவோம் ஒரு மனிதன் ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்களை திருமணம் செய்துக்கொள்ள‌ ஏன் அனுமதியளிக்கப்பட்டுள்ளது?
 
டாக்டர் ஜாகீர் நாயக்கின் வரையறையை (விளக்கத்தை) நான் ஏற்றுக்கொள்கிறேன்.
 
2. உலகத்தில் உள்ள மதம் சார்ந்த மத நூல்களிலேயே திருக் குரானில் தான் ஒருவரை மட்டும் திருமணம் செய்துக்கொள் என்ற வார்த்தைகள் அல்லது கருத்து உள்ளது. மற்ற மறை நூல்களில் அவ்வாறு ஒரு மனிதனுக்கு ஒருத்தி என்ற கொள்கை இல்லவே இல்லை எனலாம். ஏனைய மறை நூல்களான வேதங்கள், இராமாயணம், மகாபாரதம், பகவத் கீதை, பரிசுத்த வேதாகமம் ஆகியனவற்றில் ஒரு ஆண் எத்தனை பெண்களை திருமணம் செய்யலாம் என்ற வரையறை காணப்படவில்லை. அந்நூல்களில் உள்ளபடி ஒரு மனிதன் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் திருமணம் செய்துகொள்ளலாம்.
 
இது ஒரு பொருந்தாத வாதமாகும். பைபிளுக்கு ஒவ்வாத வாதத்தை ஜாகிர் நாயக் முன்வைத்திருக்கிறார். ஆனால், இவர் சொல்வதற்கு எதிர்மறையாக‌, தேவன் ஒருவனுக்கு ஒருத்தி என்ற திட்டத்தைத் தான் உருவாக்கி வைத்து இருந்தார். இதைத்தான் வேதாகமத்தின் முதல் புத்தகமான ஆதியாகமத்தில் காண்கிறோம்.
 
"இதினிமித்தம் புருஷன் தன் தகப்பனையும் தாயையும் விட்டு தன் மனைவியோடே இசைந்திருப்பான், அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள்" (ஆதியாகமம் 2:24)

"அவர் ஒருவனையல்லவா படைத்தார்? ஆவி அவரிடத்தில் பரிபூரணமாயிருந்ததே, பின்னை ஏன் ஒருவனை படைத்தார்? தேவபக்தியுள்ள சந்ததியை பெறும்படிதானே. ஆகையால் ஒருவனும் தன் இளவயதின் மனைவிக்கு துரோகம் பண்ணாதபடிக்கு, உங்கள் ஆவியை குறித்து எச்சரிக்கையாடிருங்கள்" (மல்கியா 2:15)
 
இயேசுவும் இவ்விதம் சொல்லியுள்ளார்...

"இப்படி இருக்கிறபடியினால் அவர்கள் இருவராயிராமல், ஒரே மாம்சமாயிருக்கிறார்கள்; ஆகையால் தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன் எனறார். அதற்கு அவர்கள்; அப்படியானால் தள்ளுதற்சீட்டைக் கொடுத்து, அவனை தள்ளிவிடலாமென்று மோசே ஏன் கட்டளையிட்டார் என்றார்கள். அதற்கு அவர்: உங்கள் மனைவிகளை தள்ளிவிடலாமென்று உங்கள் இருதய கடினத்தினிமித்தம் மோசே உங்களுக்கு இடங்கொடுத்தார்; ஆதிமுதலாய் அப்படியிருக்கவில்லை". (மத்தேயு 19:6-8)
 
பின்னர் தான் கிறிஸ்தவ பாதிரிகளும் இந்து பூசாரிகளும் மனைவிகளின் எண்ணிக்கையை ஒன்று என குறைத்துவிட்டனர்.
 
வேதாகமத்திலேயே தேவனுடைய திட்டம் ஒருவனுக்கு ஒருத்தி என தெளிவாக கூறப்பட்டுள்ள போது, திருச்சபையானது எப்படி ஒரு மனிதனுக்கு ஒரு மனைவி தான் இருக்க வேண்டும் என்பதை வரையறுத்திருக்க முடியும்? இந்து திருமண சடங்குகளை எப்படி இந்த விவாதத்தில் வரமுடியும்? என்று நான் வியப்படைகிறேன். டாக்டர் நாயக் தான் உண்மையானது என கருதும் இஸ்லாமிய பழக்க வழக்கங்களை உறுதிப்படுத்த, தான் தவறானது என கருதும் மற்றொரு மதத்தின் திருமண சடங்குகளை எப்படி இந்த விவாதத்தில் நுழைக்க முடியும்?
 
இந்து மதத்தில் உள்ள பிரபலமான அனேகர் பல மனைவிகளை கொண்டிருந்தனர். எடுத்துக்காட்டாக ராமரின் தந்தையான தசரதன் ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவியரை மணமுடித்து இருந்தார். கிருஷ்ணருக்கும் பல மனைவிகள் இருந்தனர்.
 
டாக்டர் நாயக் தனது மூதாதையரின் மதத்தை பற்றி தவறாக புரிந்துகொண்டிருக்கிறார். ஒரு ஆண் வாரிசை பெறுவதற்காக தசரதன் மூன்று பெண்களை திருமணம் செய்தார். தசரதனுக்கு மகள் இருந்தாள் ஆனால் தனது அரியணையை அலங்கரிக்க ஆண் வாரிசு வேண்டும் என விரும்பினார். கௌசல்யை மகனை பெறாததால் சுமித்திரையை திருமணம் செய்தார், அவரும் ஆண் வாரிசை பெற தவறியதால் கைகேயியை திருமணம் செய்தார். இவ்வாறு இருந்த சூழ் நிலையிலும் இந்து மதத்தில் ஒரு மனிதன் பல பெண்களை திருமணம் செய்வது ஏற்றுக்கொள்ளப்பட்ட பழக்கமாக இருந்ததில்லை. ராமன், லஷ்மணன், பரதன், சத்ருகன் ஆகியோர்கள் ஒரு மனைவியை மாத்திரம் திருமணம் செய்திருந்தனர். கிருஷ்ணரும் பல பெண்கள் அவரை திருமணம் செய்ய விரும்பியதால் அவர்களை திருமணம் செய்தார். இந்து மதத்தில் ஒரு பெண் பல ஆண்களை திருமணம் செய்யும் பழக்கத்தையும் திரௌபதியின் வாயிலாக சுட்டிக்காட்டப்படுகிறது.

நான் மறுபடியும் டாக்டர் நாயக்கை வினவுகிறேன், ஏன் தனது மத நம்பிக்கைகளை வலுப்படுத்த இந்து புராணங்களை இழுக்கிறார். இந்து மத பாத்திரங்கள் எங்ஙனம் இஸ்லாமிய முறைமைகளை உறுதிப்படுத்த முடியும். நம்பிக்கையற்றவர்களின் பழக்கவழக்கங்களைக்கொண்டு தனது மதத்தை ஏன் அவர் நியாயப்படுத்த முயல்கிறார்.
 
பண்டைய காலத்தில் கிறிஸ்தவ ஆண்கள் பல பெண்களை திருமணம் செய்து கொள்ள அனுமதி பெற்றிருந்தனர், பைபிள் எத்தனை பெண்களை திருமணம் செய்யலாம் என்று ஒரு வரையறையை கொடுக்கவில்லை. இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு தான் கிறிஸ்தவ திருச்சபை ஒரு மனிதனுக்கு ஒருத்தி என நெறிப்படுத்தியது.
 
இல்லை, பவுல் அப்போஸ்தலன் ஒருவனுக்கு ஒருத்தி என்பதை கிறிஸ்தவ சபையின் தொடக்க காலத்திலேயே பிரசங்கித்து வந்தார்.
 
"ஆகையால் கண்காணியானவன் குற்றஞ்சாட்டப்படாதவனும், ஒரே மனைவியை உடைய புருஷனும், ஜாக்கிரதையுள்ளவனும், தெளிந்த புத்தியுள்ளவனும், யோக்கியதையுள்ளவனும், அந்நியரை உபசரிக்கிறவனும், போதகசமர்த்தனுமாய் இருக்கவேண்டும்" 1 தீமோத்தேயு 3:2

"மேலும், உதவிக்காரரானவர்கள் ஒரே மனைவியையுடைய புருஷருமாய், தங்கள் பிள்ளைகளையும் சொந்தக் குடும்பங்களையும் நன்றாய் நடத்துகிறவர்களுமாயிருக்கவேண்டும்" 1 தீமோத்தேயு 3:12

"குற்றஞ்சாட்டப்படாதவனும், ஒரே மனைவியையுடைய புருஷனும், துன்மார்க்கரென்றும் அடங்காதவர்களென்றும் பேரெடுக்காத விசுவாசமுள்ள பிள்ளைகளை உடையவனுமாகிய ஒருவனிருந்தால் அவனையே ஏற்படுத்தலாம்" தீத்து 1:6

"இதினிமித்தம் மனுஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியுடன் இசைந்து, இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள்" எபேசியர் 5 :31
 
டாக்டர் நாயக்:

ஒரு மனிதன் பல பெண்களை திருமணம் செய்ய யூத மதத்தில் அனுமதியுள்ளது, தல்மூத் சட்டத்தின் படி ஆபிரகாமுக்கு 2 மனைவிகள் இருந்தனர், சாலொமொனுக்கோ நுற்றுக்கணக்கான மனைவியர் இருந்தனர்.
 
டாக்டர் நாயக் சாலொமோனின் வரலாறை கூறியுள்ளார். சாலொமோனின் வாழ்க்கை வரலாறு நமக்கு போதிக்கும் பாடம், நம் சொந்த விருப்பத்தின் படி நடந்து, தேவனுடைய திட்டத்தின் படி நடக்கவில்லை என்றால் என்ன நடக்கும் என்பதின் மிகச்சிறந்த உதாரணமாகும்.
 
அவனுக்குப் பிரபுக்கள் குலமான எழுநூறு மனையாட்டிகளும், முந்நூறு மறுமனையாட்டிகளும் இருந்தார்கள், அவனுடைய ஸ்திரீகள் அவன் இருதயத்தை வழுவிப்போகப் பண்ணினார்கள். சாலொமோன் வயதுசென்றபோது, அவனுடைய மனைவிகள் அவன் இருதயத்தை அந்நியதேவர்களைப் பின்பற்றும்படி சாயப்பண்ணினார்கள்; அதினால் அவனுடைய இருதயம் அவன் தகப்பனாகிய தாவீதின் இருதயத்தைப்போல, தன் தேவனாகிய கர்த்தரோடே உத்தமமாயிருக்கவில்லை. (1 இராஜாக்கள் 11:3-4)
 
தனது தெய்வீக திட்டத்திற்கு முரண்பட்ட சமுதாய அமைப்பை தேவன் அங்கீகரிக்கவேண்டுமென்று அவரை கட்டாயப்படுத்தமுடியாது. முகமதுவின் பலதாரமண கொள்கை அமைதியான குடும்ப வாழ்விற்கான அமைப்பாக இருந்ததில்லை. அவரது மனைவிகளுக்கும் மறுமனையாட்டிகளுக்கும் மனக்கசப்புகள், போராட்டங்கள் நிறைந்து காணப்பட்டன. ஒருமுறை தனது வீட்டில் சமாதானத்தை நிறுவச்செய்ய இறைவனிடமிருந்து வெளிப்பாடுகள் அவருக்கு தேவைப்பட்டது. மேலும் விபரங்களுக்கு "தன் பாலியல் காரணங்களுக்காக தான் செய்த சத்தியத்தை உடைத்த நபி - Sex, Oaths, and the Prophet (சூரா 66)" என்ற கட்டுரையை படிக்கவும்.

 
தேவன் ஆதாமை படைத்து அவனது துணையாக ஏவாளையும் படைத்தார், இதுவே மனுக்குலத்திற்கு தேவன் அமைத்த சரியான குடும்ப முறையாகும். ஒரு மனுஷனும் மனுஷியும் இணையும் திருமணம் என்ற அமைப்பை தேவன் மதித்து அதை ஏற்றுக்கொள்ளவும் செய்கிறார். தேவனுடைய இத்திட்டத்தை விட்டு வழிவிலகினால் (அஃதாவது ஒருவன் பல பெண்களை திருமணம் செய்தல், ஒரு பெண் பல ஆண்களை திருமணம் செய்தல், விபச்சாரம், திருமணத்திற்கு முந்தைய தொடர்புகள், ஓரினச்சேர்க்கை.. போன்றவைகளை நாம் செய்தால்) வாழ்க்கையிலும் தேவனின் நியாயத்தீர்ப்பு நாளிலும் எதிர்மறையான விளைகளை நாம் சந்திக்கவேண்டி வரும்.
 
ஒருவன் பல பெண்களை திருமணம் செய்யும் வழக்கம் ரபி கெர்சோம் பென் யெகுதா (கிபி 960 முதல் கிபி 1030) (Rabbi Gershom ben Yehudah) எதிர்ப்பு சட்டம் கொண்டு வரும் வரை நீடித்து இருந்தது. இஸ்லாமிய நாடுகளில் வாழ்ந்து வந்த யூதர்கள் கிபி 1950 வரை இப்பழக்கத்தை கடைப்பிடித்து வந்தனர். இஸ்ரேலில் இருந்த தலைமை மதகுரு ஒரு பெண்ணுக்கு மேல் திருமணம் செய்வதை தடை செய்யும் வரை இப்பழக்கம் நீடித்தது.
 
ரபி கெர்சோம் பென் யெகுதா தேவனுடைய திட்டத்தை ஏற்றுக்கொண்டார் என்பதையே இது காட்டுகிறது
 
3. இந்துக்களே இஸ்லாமியரை விட பலதார மணம் புரிபவராக இருந்துள்ளனர். 1975ல் வெளியிடப்பட்ட" இஸ்லாமில் பெண்களின் நிலை - Committee of The Status of Woman in Islam" என்ற அறிக்கையில் பக்கங்கள் 66,67 ல் இவ்வாறு கூறப்பட்டுள்ளது, அஃதாவது 1951 முதல் 61 வரை நடைபெற்ற பலதார மணங்களின் படி இந்துக்கள் 5.06 விழுக்காடாகவும் இஸ்லாமியர் 4.31 விழுக்காடாகவும் பலதார மணம் புரிபவராக இருந்துவந்துள்ளனர். அதுவும் இந்தியாவில் இஸ்லாமியர் அல்லாதோர் பலதார மணம் புரிவது சட்டவிரோதம் என இருக்கும் போதே இந்த நிலை. ஒருவேளை இந்து ஆண்களுக்கு பலதார மணம் சட்டரீதியாக அனுமதிக்கப்பட்டிருந்தால் இந்துக்களின் பலதாரமண விழுக்காடு எந்த அளவுக்கு அதிகமாக இருந்திருக்கும். 1954 ம் ஆண்டு இந்து திருமண சட்டம் வந்த பின் தான் இந்து ஆண்கள் ஒரு பெண்ணுக்கும் மேல் திருமணம் செய்தால் குற்றம் என்ற நிலை வந்தது. இப்போதும் கூட இந்திய சட்டம் தான் இந்துக்களின் பலதார மணத்தை தடை செய்து வைத்துள்ளதேயன்றி இந்து வேதங்கள் அல்ல.
 
மறுபடியுமாக ஒரு விஷயம் எனக்கு புரியவில்லை, அது என்னவெனில் டாக்டர் நாயக் அவர்கள் தனது மத பழக்கவழக்கங்களை நியாயப்படுத்த ஏன் தான் போலி சமயமாக கருதும் இந்து மதத்தை குறிப்பிடுகிறார்? ஏன் 19ம் நூற்றாண்டு மோர்மொன்கள், பல்வேறு நாடுகளில் இருந்த மதங்கள் பலதார மணம் என்ற பழக்கத்தை கொண்டிருந்தது தெரியவில்லையா? அவைகள் பற்றி ஏன் அவர் குறிப்பிடவில்லை? டாக்டர் நாயக் அவர்கள் "பொய்யான" மார்க்கம் எனக்கருதும் ஒரு மதத்தின் பழக்கங்கள் எப்படி அவர் "சரியான மார்க்கம்" எனக் கருதும் இஸ்லாம் சரியானது என நிருபிக்க உதவும்? வட இந்தியாவிற்கு எனது வாழ் நாளில் இரண்டு முறை சுற்றுப்பயணம் செய்திருக்கிறேன், நான் பார்த்த வரை எந்த ஒரு இந்து மனிதனும் பலதார மணம் புரிந்தவராக இருந்ததில்லை.
 
சரி இப்போது நாம் இஸ்லாமில் ஏன் ஒரு மனிதன் பலதார மணம் புரிய அனுமதியளிக்கப்பட்டுள்ளது என்பதை பற்றி காண்போம்.

4. அளவான பலதார முறையை இஸ்லாம் அனுமதித்துள்ளது. இந்த உலகத்தில் உள்ள மறை நூல்களிலேயே இஸ்லாமிய மறை நூலான குர்ஆனில் தான் ஒருவனுக்கு ஒருத்தி என கூறப்பட்டுள்ளது. இதை சூரா நிஸா என்ற அத்தியாயத்தில் காணலாம், "உங்களுக்குப் பிடித்தமான பெண்களை மணந்து கொள்ளுங்கள் - இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நன்னான்காவோ. ஆனால், நீங்கள் (இவர்களிடையே) நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தால், ஒரு பெண்ணையே (மணந்து கொள்ளுங்கள்)..(குர்ஆன்4:3). குர்ஆன் இறக்கப்படும் முன்னர் வரை ஆண்கள் வகைதொகையற்ற அளவு மணம் புரிபவர்களாக இருந்தனர். ஒருவர் நூற்றுக்கணக்காக கூட திருமணம் செய்து இருந்தனர். இஸ்லாம் மாத்திரமே நான்கு மனைவியர் என்ற அதிகபட்ச அனுமதியளித்துள்ளது. இஸ்லாமில் மாத்திரமே ஒரு மனிதன் அவர்களிடம் நியாயமான முறையில் நடந்துக்கொள்ளும் பட்சத்தில் 2, 3 அல்லது 4 பேரை திருமணம் செய்யலாம் என்ற வரைமுறை உள்ளது. சூரா நிஸாவின் 129 ல் "(முஃமின்களே!) நீங்கள் எவ்வளவுதான் விரும்பினாலும், மனைவியரிடையே நீங்கள் நீதம் செலுத்த சாத்தியமாகாது" (குர்ஆன் 4:129). எனவே பலதார மணம் என்பது சட்டம் அல்ல அது ஒரு விதிவிலக்கு மாத்திரமே. ஒரு இஸ்லாமியர் கண்டிப்பாக 4 பெண்களை திருமணம் செய்ய வேண்டும் என பலர் தவறாக எண்ணுகின்றனர். இஸ்லாமில் செய்ய வேண்டியது, செய்யக்கூடாதது என 5 காரியங்கள் உண்டு.

1) "ஃபார்ஸ் - Farz" அதாவது கட்டாயமாக செய்யவேண்டியவைகள்
2) "மஸ்தஹப் - Mustahab" அதாவது பரிந்துரைக்கப்பட்டது
3) "மஃபா - Mubah" அதாவது அனுமதியளிக்கப்பட்டது
4) "மாக்ரூஹ் - Makruh" அதாவது பரிந்துரைக்கப்படாதது
5) "ஹராம் - Haram" அதாவது கண்டிப்பாக தடை செய்யப்பட்டது

பலதார மணம் இதில் நடுவில் வரும் அனுமதிக்கப்பட்ட பிரிவில் வருபவர். இதை 2, 3 அல்லது 4 மனைவிகள் உள்ள இஸ்லாமியர் ஒரு மனைவி உள்ள இஸ்லாமியரை விட சிறந்தவர் என நாம் எடுத்துக்கொள்ளக்கூடாது.
 
முகமது ஏன் 4 மனைவியருக்கு மேல் வைத்திருக்க அனுமதி பெற்றிருந்தார்?
 
5. பெண்களின் சராசரி ஆயுட்காலம் ஆண்களின் ஆயுட்காலத்தை விட அதிகமாகும். இயற்கையாகவே ஆண்களும் பெண்களும் ஒரே விகிதாச்சாரப்படியே பிறக்கின்றனர்.

சிறுவயதில் இருந்தே பெண் பிள்ளைகளுக்கு ஆண் பிள்ளைகளை விட அதிக நோய் எதிர்ப்பு சக்தி உண்டு. அதனாலேயே சிறு வயதில் ஆண் பிள்ளைகள் அதிகம் பேர் நோய்வாய்ப்பட்டு இறக்கின்றனர். போர்க்காலங்களில் ஆண்களே பெண்களைவிட அதிகம் கொல்லப்படுகின்றனர். பல ஆண்கள் விபத்துகளிலும் நோய்களிலும் பெண்களைவிட அதிகமாக இறக்கின்றனர். பெண்களின் சராசரி ஆயுட்காலம் ஆண்களை விட அதிகமாகும். எந்த ஒரு காலகட்டத்திலும் துணையை இழந்து வாழுபவர்களில் ஆண்களை விட பெண்களே அதிகமாக இருப்பர்.
 
இவ்வாறு இருப்பினும் பால் விகிதாச்சாரம் உலக அளவில் 1.01 ஆண்கள்/ பெண்கள் என்றே உள்ளது, மூலம் (2000 est.).

இதை பகுத்து பார்த்தால்

 
பிறப்பின் போது : 1.05 ஆண்கள்/ பெண்கள்

 
15 வயதுக்கு கீழ் : 1.05 ஆண்கள்/ பெண்கள்

 
15 முதல் 64 வயது வரை : 1.02 ஆண்கள்/பெண்கள்

65 வயதுக்கு மேல் : 0.78 ஆண்கள்/ பெண்கள்

 
எனவே பலதார மணம் என்பது இளம் ஆண்கள் வயதான பெண்களை திருமணம் செய்ய சம்மதித்தாலே சாத்தியமாகும்.
 
6. இந்தியாவில் பெண்களைவிட ஆண்களே அதிகமாக இருக்கின்றனர்.

பெண்களைவிட ஆண்கள் அதிகம் இருக்கும் நாடுகளில் இந்தியாவும் அதை சுற்றியுள்ள நாடுகளும் அடங்கும். இதற்கு காரணம் இந்தியாவில் அதிகம் காணப்படும் பெண் சிசுக்கொலை எனும் பழக்கமாகும். இந்தியாவில் 10 லட்சத்திற்கும் அதிகமான பெண் சிசுக்கள் கருவிலேயே அழிக்கப்படுகின்றனர். இத்தீய பழக்கம் ஒழிக்கப்பட்டால் இந்தியாவிலும் ஆண்களை விட பெண்களே அதிகமாக இருப்பார்கள்
 
சரி இப்போது புள்ளிவிவரத்திற்கு வருவோம்.

 
2000 ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி இந்தியாவில் 1.07 ஆண்கள்/பெண்கள் என்ற விகிதாச்சாரம் உள்ளது.

 
கருக்கலைப்பு, பெண் சிசுக்கொலை மிகவும் தீய பழக்கவழக்கமாகும், இந்திய சமுதாயம் அதற்காக கண்டிக்கப்பட வேண்டியது தான், அமெரிக்காவும் அதன் கருக்கலைப்பு பழக்கத்திற்காக கண்டிக்கப்படவேண்டியதே. ஆனால் இந்தியாவில் உள்ள ஆண்/பெண் விகிதாச்சாரம் மற்ற இஸ்லாமிய நாடுகளை விட குறைவாகவே உள்ளது.

 
2000 ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி,

 
பஹ்ரைன் 1.03 ஆண்கள்/பெண்கள்

 
ட்ஜிபௌடி 1.07 ஆண்கள்/பெண்கள்

 
ஜோர்டான் 1.1 ஆண்கள்/பெண்கள்

 
குவைத் 1.5 ஆண்கள்/பெண்கள்

 
ஓமன் 1.31 ஆண்கள்/பெண்கள்

 
கத்தார் 1.93 ஆண்கள்/பெண்கள்

 
சவுதி அரேபியா 1.24 ஆண்கள்/பெண்கள்

 
ஐக்கிய எமிரேட் 1.51 ஆண்கள்/பெண்கள்

 
டாக்டர் நாயக் அவர்களே இஸ்லாமிய நாடுகளிலும் ஏன் இதே நிலை உள்ளது.
 
7. உலகத்திலேயே ஆண்களை விட பெண்களே அதிகம் உள்ளனர்.
 
உலக பெண்களின் எண்ணிக்கை ஆண்களை விட குறைவே. உலகத்தில் 3,059,307,647 ஆண்களும் 3,019,466,887 பெண்களும் உள்ளனர் (மூலம்). அதாவது உலகத்தில் பெண்களை விட 40 மில்லியன் ஆண்கள் அதிகமாக உள்ளனர்.
 
அமெரிக்க ஐக்கிய நாடுகளில் ஆண்களை விட 7.8 மில்லியன் பெண்கள் அதிகமாக‌ உள்ளனர்.
 
இல்லை, அமெரிக்காவில் 134,774,894 ஆண்களும் 140,787,779 பெண்களும் உள்ளனர், அஃதாவது 6 மில்லியன் பெண்கள் அதிகம். ஆனாலும் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் இதில் 5.9 மில்லியன் பெண்கள் 65 அதற்கு மேற்பட்ட வயது உள்ளவர்களாவார்கள். (மூலம்)
 
நியூ யார்க்கில் மட்டும் ஆண்களை விட 1 மில்லியன் பெண்கள் அதிகமாக உள்ளனர். நியூ யார்ர்கின் ஜனத்தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் ஓரினச்சேர்க்கை பழக்கம் (gays i.e sodomites) உள்ளவர்கள்.
 
நியூ யார்க் நகரத்தில் 3,437,687 ஆண்கள் மற்றும் 3,884,887 பெண்களும் உள்ளனர். அஃதாவது 447,000 பேர் பெண்கள் அதிகம் ( மூலம்). ஆனாலும் இதில் அதிக பட்சம் 65 வயதிற்கு மேற்பட்ட பெண்களே உள்ளனர். நியூ யார்க் நகரத்தில் மூன்றில் ஒரு பங்கினர் ஓரினச்சேர்க்கை பழக்கமுடையவர்கள் என டாக்டர் நாயக் எப்படி முடிவு கட்டினார் என எனக்கு புரியவில்லை. 3,437,687 ஆண்கள் நியூயார்க்கில் உள்ளனர், இதில் 1,113,888 ஆண்களில் (32% ) திருமணமே ஆகாதவர்கள், மற்ற்வர்கள் திருமணமானோர்,விவாகரத்து பெற்றவர்கள், மனைவியை இழந்தோர். டாக்டர் நாயக்கின் கணக்கை அடைய வேண்டுமானால் நியூயார்க்கில் திருமணமாகாத ஆண்கள் அனைவருமே ஓரினச்சேர்க்கை பழக்கம் உடையவரே என்று சொல்லவேண்டும்d, இந்த கணக்கில் ஏனைய திருமணமானோர், விவாகரத்து பெற்றவர்கள், மனைவியை இழந்தோரும் அடங்குவர். டாக்டர் நாயக் இதை யோசித்து இருக்க மாட்டார், அதாவது பெண்களில் கூட ஓரினச்செர்க்கை உள்ளவர்கள் இருக்கிறார்கள். நியூயார்க்கில் 1,080,026 திருமணமாகாத பெண்கள் உள்ளனர். இதில் சிலர் ஓரினச்சேர்க்கை பழக்கமுடியவர்களாகவும் இருக்கலாம்!
 
அமெரிக்காவில் மட்டும் 25 மில்லியன் ஆண்களுக்கும் மேல் ஓரினச்சேர்க்கை பழக்கமுடையவர்களாக இருக்கின்றனர். இதன் பொருள் இந்த ஆண்கள் பெண்களை திருமணம் செய்துக்கொள்வதில்லை.
 
இந்த புள்ளி விவரத்திற்கு என்ன ஆதாரம்? ஓரினச்சேர்க்கை ஆண்களை பற்றி பேசும் டாக்டர் நாயக் ஓரினச்சேர்க்கை பெண்களை பற்றி கவனிக்க மறுக்கிறார்.
 
பிரிட்டனில் மட்டும் ஆண்களை விட 4 மில்லியன் பெண்கள் அதிகமாக உள்ளனர்.
 
பிரிட்டனில் 29,303,077 ஆண்களும் 30,208,387 பெண்களும் உள்ளனர், அதாவது 1.6 மில்லியன் பெண்கள் ஆண்களை விட அதிகமாக உள்ளனர், இவர்கள் 65 வயதிற்கும் மேற்பட்டவர்கள்.
 
ஜெர்மனியிலும் ஆண்களை விட 5 மில்லியன் பெண்கள் அதிகமாக உள்ளனர்.
 
ஜெர்மனியில் 40,451,865 ஆண்களும் 42,345,543 பெண்களும் உள்ளனர். அஃதாவது 1,893,678 பெண்கள் ஆண்களை விட அதிகமாக உள்ளனர். இருப்பினும் ஆண்களைவிட அதிகமாக உள்ள 3 மில்லியன் பெண்கள் 65 வயதிற்கு மேற்பட்டவர்களாக உள்ளனர்! (மூலம்).
 
ரஷ்யாவில் ஆண்களை விட 9 மில்லியன் பெண்கள் அதிகமாக‌ உள்ளனர். உலகம் முழுவதிலும் எவ்வளவு பெண்கள் ஆண்களை விட அதிகமாக உள்ளனர் என்பதை இறைவன் அறிவார்.
 
இதிலும் பெரும்பாலானோர் 65 வயதிற்கு மேற்பட்டவரே.
 
8. ஆகவே ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரே ஒரு மனைவி என்ற சித்தாந்தம் நடைமுறையில் ஒத்துவராத ஒன்றாகும்.

ஒவ்வொரு மனிதனும் ஒரேயொரு மனைவியை திருமணம் செய்கிறார்கள் என வைத்துக்கொள்வோம் அப்படிப்பட்ட சூழ் நிலையில் அமெரிக்காவில் மட்டும் 30 மில்லியன் பெண்களுக்கு கணவர்கள் கிடைக்கமாட்டார்கள் (அமெரிக்காவில் 25 மில்லியன் ஓரினச்சேர்க்கை பழக்கமுடைய ஆண்கள் இருப்பதாக வைத்துக்கொண்டால்). அதேபோல் பிரிட்டனில் 4 மில்லியன் பெண்களுக்கும், ஜெர்மனியில் 5 மில்லியன் பெண்களும் ரஷ்யாவில் 9 மில்லியன் பெண்களுக்கும் கணவர்கள் கிடைக்கமாட்டார்கள்.
 
அமெரிக்காவில் 28,200,083 ஆண்களும் 23,434,118 பெண்களும் திருமணமே ஆகாதவர்களாக உள்ளனர்! (மூலம்). இந்த வேறுபாட்டைக்கொண்டு எப்படி பலதார மணத்தை அங்கீகரிக்க முடியும்? டாக்டர் நாயக் அவர்களின் இந்த ஓரினச் சேர்க்கை பற்றிய அவரது புள்ளிவிவரத்திற்கு ஆதாரத்தை கொடுக்கும் படி அவரிடம் கேட்டுக்கொள்கிறேன். ஓரினச்சேர்க்கை பழக்கமுடையவர்களை குறித்து டாக்டர் நாயக் அவர்களின் புள்ளிவிபரம் உண்மையாக இருக்கும் பட்சத்தில் அமெரிக்காவில் வெறும் 3 மில்லியன் பேரே ஓரினச்சேர்க்கை பழக்கம் இல்லாத வாலிபர்களாக இருப்பார்கள்.
 
ஒருவேளை உங்களுடைய அல்லது என்னுடைய தங்கை அமெரிக்காவில் வசிக்கிறார் என வைத்துக்கொள்வோம், அவருக்கு திருமணம் ஆகியிராத பட்சத்தில் அவர் ஏற்கனவே திருமணமான ஆணைத்தான் திருமணம் செய்யமுடியும் அல்லது பொதுவான உடமையாக (Public property) இருக்க வேண்டும். இஸ்லாமியர் அல்லாதோர் பலரிடம் இதை குறித்து கேட்டபோது நூற்றுக்கணக்கானோர் முதலாவது வழிமுறையே சிறந்தது என ஒத்துக்கொண்டனர். சில புத்திசாலிகள் மாத்திரம் தங்கள் தங்கையர் திருமணம் செய்யாமல் கன்னியாகவே வாழ அனுமதிப்போம் என்றனர்.
 
என்னது பொது உடைமையா??!! (Public property!??!), டாக்டர் நாயக் அவர்களின் தங்கையோ அல்லது வேறு எவரின் தங்கையோ யாருக்கும் பொது உடமையாக இருப்பார்கள் என எனக்கு நம்பிக்கையில்லை. வேதம் நமக்கு இப்படி கூறுகிறது.
 
"மனைவியானவள் தன் சுயசரீரத்திற்கு அதிகாரியல்ல, புருஷனே அதற்கு அதிகாரி; அப்படியே புருஷனும்தன் சுயசரீரத்திற்கு அதிகாரியல்ல மனைவியே அதற்கு அதிகாரி 1 கொரி 7:4
 
உயிரியல் பூர்வமாக எந்த ஒரு மனிதனோ மனுஷியோ வாழ் நாள் முழுவதும் துறவற வாழ்க்கையை மேற்கொள்ள முடியாது, ஒருவேளை சில விதிவிலக்குகள் அதுவும் பத்தாயிரத்தில் ஒன்று என இருக்கலாம். பெரும்பாலான மக்கள் திருமணம் செய்கின்றனர் அல்லது முறைகேடான பால் உறவு பழக்கங்களை கொண்டுள்ளனர். மனிதனுடைய உடலில் பால் உணர்வை தூண்டும் ஹார்மோன்கள் சுரப்பிகள் வாயிலாக கலக்கின்றன. அதனால் தான் இஸ்லாமில் துறவற பழக்கமுறை தடைசெய்யப்பட்டுள்ளது.
 
மனிதனின் பால் உறவு வேட்கையை காரணம் காட்டி, பல தாரமணத்தையோ அல்லது தவறான பால் உறவின் தீய செயல்கள் செய்வதையோ நாம் நியாயப்படுத்த முடியாது. தேவன் நமக்கு பால் உறவு வேட்கையையும் கொடுத்திருக்கிறார் அதேபோல் இந்த பால் உறவு வேட்கையை தணித்துக்கொள்ள திருமணம் என்ற அருமையான எடுத்துக்காட்டை உருவாக்கியுள்ளார். எப்போதெல்லாம் நாம் தேவனுடைய இத்திட்டத்தை விட்டு வழிவிலகி பலதாரமணம் என்ற வகையிலோ அல்லது வேறு தவறான இச்சைகளை தீர்த்துக்கொள்ள முயற்சி செய்தாலோ நாம் அதன் பலனை அனுபவிக்கவேண்டும். இதைத்தான் வேதம் இவ்வாறு சொல்கிறது.
 
விவாகமில்லாதவர்களையும், கைம்பெண்களையும் குறித்து நான் சொல்லுகிறது என்னவென்றால், அவர்கள் என்னைப்போல இருந்துவிட்டால் அவர்களுக்கு நலமாயிருக்கும். ஆகிலும் அவர்கள் விரத்தராயிருக்கக் கூடாதிருந்தால் விவாகம்பண்ணக்கடவர்கள்; வேகிறதைப்பார்க்கிலும் விவாகம் பண்ணுகிறது நலம். விவாகம்பண்ணிக்கொண்டவர்களுக்கு நானல்ல, கர்த்தரே கட்டளையிடுகிறதாவது: மனைவியானவள் தன் புருஷனை விட்டு பிரிந்துபோகக்கூடாது. பிரிந்துபோனால் அவன் விவாகமில்லாதிருக்கக்கடவள், அல்லது புருஷனோடே ஒப்புரவாகக்கடவள்; புருஷனும் தன் மனைவியை தள்ளிவிடக்கூடாது. (1 கொரி 7:8-11)
 
மேற்கத்திய சமுதாயத்தில் ஒரு மனிதன் திருமணத்திற்கு வெளியே ஒரு பெண்ணோடு உறவு வைத்துக்கொள்வதோ அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்களை வைத்துக்கொள்வதோ சகஜமான ஒன்று, இதனால் பெண் பாதுகாப்பில்லாத மற்றும் அவமானகரமான வாழ்க்கை வாழ நேரிடுகிறது. அதே மேற்கத்திய சமுதாயம் ஒரு மனிதன் ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்களை திருமணம் செய்துகொள்ளவோ அல்லது ஒரு பாதுகாப்பான வாழ்க்கை வாழ அனுமதியளிப்பதில்லை. இதனால் கணவர் கிடைக்காத பெண் ஒன்று திருமணமான் ஆணை திருமணம் செய்யவேண்டும் அல்லது பொது உடமையாக வேண்டும். இஸ்லாம் மாத்திரமே முதலாவது வழிமுறையை ஆதரித்து இரண்டாவது வழிமுறையை எதிர்த்து தடை செய்கிறது. பலதார மணத்தை ஆதரிக்க பல காரணங்கள் இருப்பினும் பெண்களின் கற்பையும் ஒழுக்கத்தையும் பாதுக்காகவே என்பதை எடுத்துக்கொள்ளவேண்டும்.
 
ஆண்கள் திருமணத்திற்கு வெளியே உறவு வைத்துக்கொள்வது சகஜமான ஒன்று என்பதை டாக்டர் நாயக் எப்படி, எந்த ஆதாரங்களின் அடிப்படையில் கூறுகிறார்? பெண்களும் திருமணத்திற்கு வெளியே உறவு வைத்துள்ளார்கள் என்பதை டாக்டர் நாயக் புறந்தள்ளிவிடுகிறார். ஒரு மனிதன் தானாகவும் திருமணத்திற்கு வெளியே உறவு வைத்துக்கொள்ளமுடியாது. பல மனைவிகள் வைத்துள்ள மனிதன் ஒருவன் முறைதவறிய உறவு வைத்துக்கொள்ள வாய்ப்பு உள்ளது என்பதையும் டாக்டர் நாயக் மறந்துவிடுகிறார். மறுபடியும், பெண்கள் "பொது உடமைகள்" என்ற ஏற்றுக்கொள்ளமுடியாத விவரத்தை நாயக் சொல்லியுள்ளார்.

 
குர்ஆனிலும் பெண்கள் எவ்வாறு "மதிப்பாக வைக்கப்படுகின்றனர்" என்பதை கீழ்க்கண்ட வாசகத்தில் காணலாம்.
 
உங்கள் மனைவியர் உங்கள் விளைநிலங்கள். ஆவார்கள்; எனவே உங்கள் விருப்பப்படி உங்கள் விளை நிலங்களுக்குச் செல்லுங்கள்;. உங்கள் ஆத்மாக்களுக்காக முற்கூட்டியே (நற்கருமங்களின் பலனை) அனுப்புங்கள்;. அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; (மறுமையில்) அவனைச் சந்திக்க வேண்டும் என்பதை உறுதியாக அறிந்து கொள்ளுங்கள். நம்பிக்கை கொண்டவர்களுக்கு நற்செய்தி கூறுவீராக!  (2:223)
 
Polyandry

கேள்வி: ஒரு மனிதன் ஒரு மனைவிக்கும் மேல் வைத்துக்கொள்ள அனுமதி இருக்கும் போது ஏன் ஒரு பெண் ஒன்றுக்கும் மேற்பட்ட கணவர்களை வைத்துக்கொள்ள முடியாது?

பதில்: முஸ்லீம்கள் உட்பட பலர் இக்கேள்வியை கேட்கின்றனர். முதலில் ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன் அதாவது இஸ்லாமின் அஸ்திபாரம் நீதி, நியாயம் என்ற கொள்கைகளின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது, அல்லாஹ் ஆண்களையும் பெண்களையும் சரிசமமாகவே படைத்துள்ளார், ஆனால் வெவ்வேறு தகுதிகளின் அடிப்படையிலேயே, ஆண்களும் பெண்களும் உடல் மற்றும் மனோரீதியாகவும் வெவ்வேறு வகையினர், அவர்களது கடமைகளும் வெவ்வேறானதே.
 
மேற்கண்ட குர்‍ஆன் வசனமானது, இக்கேள்விக்கான பதிலை தருகிறது: குர்‍ஆனின் படி பெண்கள் ஆண்களை திருப்தி செய்யவே படைக்கப்பட்டுள்ளனர்.
 
ஒரு பெண் ஒன்றுக்கும் மேற்பட்ட ஆண்களை திருமணம் செய்ய இஸ்லாம் ஏன் தடை செய்துள்ளது என்பதை காண்போம்.

1. ஒரு மனிதன் ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்களை திருமணம் செய்தால் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளின் பெற்றோரை எளிதில் அடையாளம் காணப்படும். ஆனால் பல ஆண்களை திருமணம் செய்தால் அவர்களுக்கு பிறக்கும் குழந்தை தாயை வைத்தே அடையாளம் காணப்படுமேயன்றி தந்தையை வைத்து அல்ல. இஸ்லாம் பெற்றோர் இருவருக்குமே அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. உளவியல் நிபுணரும் நமக்கு கூறுவது என்னவெனில் பெற்றோரை அறியாத குழந்தைகள் அதிலும் குறிப்பாக தகப்பனை அடையாளம் தெரியாத குழந்தைகள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாவார்கள். அவர்களது குழந்தைப்பருவம் சந்தோஷமாக இருக்காது. இதனாலேயே விலை மாதரின் பிள்ளைகள் சந்தோஷமாக இருப்பதில்லை. இப்படி திருமண உறவுக்கு வெளியே பிறக்கும் குழந்தைகள் பள்ளிகளில் சேர்க்கப்படும் போது ஒன்றுக்கும் மேற்பட்ட ஆண்களை தகப்பன் என சொல்ல நேரிடும். சமீப காலங்களில் ஒரு குழந்தையின் தாய் தகப்பனை மரபணு சோதனையின் மூலம் கண்டுபிடிக்க இயலும். இந்த ஒரு வாதம் கடந்த காலத்திற்கு ஏற்றதாக இருக்கும்.
 
சரி அப்போது ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவிகளை வைத்துள்ளவர் வீடுகளில் பிறக்கும் பிள்ளைகளுக்கு மன உளைச்சல் இல்லாமல் இருக்குமா? முக்கியமாக வாலிப பெண் பிள்ளைகளுக்கு?
 
2. இயற்கையாகவே பெண்ணைவிட ஆண் பலதார மண எண்ணம் உள்ளவராக இருக்கின்றனர்.
 
மனிதன் இயல்பாகவே பாவ சுபாவ உணர்ச்சிகள் உள்ளவன். ஆனால் அதற்காக நம் பாவமான சுபாவங்களை நியாயப்படுத்த‌ பலதார மனம் போன்ற பாவமான அமைப்பை நாம் உருவாக்க வேண்டுமா? தேவன் ஒரு பாவத்தை மற்றொரு பாவத்தை விட லேசானது என ஏற்றுக்கொள்வாரா?
 
3. உயிரியல் ரீதியாக பல மனைவிகளை உடையவன் தனது கடமைகளை தவறாமல் செய்யமுடியும், ஆனால் பல கணவரை உடைய பெண்ணுக்கு மனைவி என்ற ஸ்தானத்தில் இருந்து தனது கடமைகளை செய்ய முடியாது.
 
டாக்டர் நாயக் இந்த விஷயத்தை மேலும் தெளிவு படுத்தியிருக்கலாம், உண்மையாகவே, இதில் எந்த தெளிவும் இல்லை.
 
4. ஒரு பெண் பல ஆண்களை திருமணம் செய்திருந்தால் பலரோடு பால் உறவு கொள்ள நேரிடும். அப்போது பால்வினை நோய்கள் அவர்கள் மூலமாக அவர்களது கணவர்களுக்கு பரவ நேரிடும். அவர்களது கணவர்கள் வேறு தொடர்புகள் வைத்திருக்குக்காதபோதே இந்த நிலை தான். ஆனால் ஒரு மனிதன் பல மனைவிகள் வைத்திருக்கும் போது நோய் பரவும் வாய்ப்புகள் குறைவே. இது போன்ற காரணங்கள் நாம் எளிதில் அறிந்து கொள்ளக்கூடியவையே. இது போன்ற பல காரணங்களுக்காகவே அல்லாஹ் தனது திவ்ய ஞானத்தால் ஒரு பெண் பல ஆண்களை திருமணம் செய்யும் வழக்கத்தை தடைசெய்திருக்கிறார்.
 
இவ்வாதம் ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல. ஒரு வேளை இவ்வித அமைப்பில் உள்ள மக்கள் வேறு எந்த தொடர்புகளும் இல்லாமல் இருந்தாலும் எங்ஙனம் பால் ரீதியான நோய்கள் பரவுகின்றன?

 
ஆக மொத்தத்தில் ஒரு தார மணம் என்ற வழக்கமே மனுக்குலத்திற்கு கடவுள் காட்டியுள்ள வழியாகும். இதிலிருந்து நாம் மாறுபட்டால் பாடுபடவேண்டியதுதான். மற்ற மத வழக்கங்களில் உள்ள பலதார மணத்தை சுட்டிக்காட்டி இஸ்லாமில் உள்ள பலதார வழக்கத்தை நாம் நியாயப்படுத்த முடியாது. விபச்சாரம், ஓரினச்சேர்க்கை, இச்சை போன்ற பாவங்களை மேற்கொள்ள ஒரு ஆண் பல பெண்களை திருமணம் செய்துகொள்ளலாம் என்ற வாதம் தேவனுடைய பரிசுத்தத்தையும் ஞானத்தையும் கேள்விக்குரியதாக ஆக்கிவிடும்.


ஆங்கில மூலம்: Response to Zakir Naik - Polygamy

ஜாகிர் நாயக் அவர்களுக்கு அளித்த இதர பதில்கள்




 

 

 
 

Saturday, April 18, 2009

சகோதரர் இப்ராஹிம் அவர்களின் சாட்சி


 

சகோதரர் இப்ராஹிம் அவர்களின் சாட்சி
 
சமாதானம்
 

இந்தியாவில் பிறந்த "இப்ராஹிம் யூசுஃப் ஜேம்ஸ்" தனக்கு ஆறு வயதிருக்கும் போது குடும்பத்துடன் குவைத் தேசத்துக்கு குடிபெயர்ந்தவ‌ர். தனது சிறுவயது முதலே அவரது மூத்த சகோதரனுடன் வியாபாரத்தில் ஈடுபட்டதுடன் சுமார் 20 வயதிலேயே பல சொத்துக்களுக்கு அதிபதியானார். குவைத் தேசத்திலேயே அதிகமாக தொலைக்காட்சி பெட்டிகளை தயாரிக்கும் நிறுவனம் அவருக்கு சொந்தமானதாக இருந்தது.

 
கட்டுக்கோப்பான இஸ்லாமிய பின்னணியில் வளர்ந்த "இப்ராஹிம் யூசுஃப் ஜேம்ஸ்" முறைப்படி "குர்‍ஆனை" பயின்றதுடன் பாரம்பரிய இஸ்லாமியக் கடமைகள் அனைத்தையும் கடைபிடித்து வந்தார். ஏழைகளுக்கு தான தருமங்கள் செய்ததுடன் "மெக்கா" புனித யாத்திரைக்கும் பலமுறை சென்று வருவார்.

 
அனைத்திலும் வெற்றியாளராக விளங்கியபோதிலும் ஒரு விஷயத்தில் தோற்றுப்போனார், அதாவது தற்கொலை செய்துகொள்ள முயன்றார், அதிலும் நான்குமுறை தோல்வி ஏற்பட சமாதான‌மும் கிடைக்காமல் தவித்தவர். தனது புனித வேதமான "குர்‍ஆனில்" தனது பிரச்சினைகளுக்கான பதிலைத் தேடினார்; ஆனால் "குர்‍ஆன்" மூலம் அவரால் சரியான பதிலைப் பெறமுடியவில்லை.

 
இந்த நிலையில் 'எலக்ட்ரானிக் இஞ்சினியரிங்' (மின்னணு தொழில் நுட்ப) கல்வி கற்க இங்கிலாந்து தேசத்துக்குச் சென்றார். ரமலான் நோன்பு காலத்தின் கடைசி வாரத்தில் "இன்ஸோம்னியா" எனும் உறக்கம் வராத வியாதியினால் பீடிக்கப்பட்டார். தூங்குவதற்கு அவர் எடுத்துக் கொண்ட எந்த முயற்சியும் பலனளிக்காத நிலையில் தனது ஓட்டல் அறையில் இங்குமங்குமாக நடந்து கொண்டிருந்தார். அப்போது தனது கண்களில் பட்ட "பைபிளை" எடுத்து வெறுமனே புரட்டிக் கொண்டிருந்த போது "தேவையின் போது தேடி வாசிக்க" எனும் வரிசைக் குறிப்பிலிருந்து "உறக்கம் தேவை" எனும் தலைப்பின் கீழிருந்த "சங்கீதம் நான்காம் அதிகாரத்தினை" எடுத்து வாசித்தார்.
 
 

பின்னர் இவ்வாறாக பிரார்த்தனை செய்தார்,"இது (பைபிள்) தான் உண்மையான தெய்வத்தின் வேதமானால் அதற்கு அடையாளமாக என்னை தூங்கச் செய்யும்". இப்படியாக பிரார்த்தனை செய்தபின் தனது கட்டிலின் குறுக்காக அப்படியே சாய்ந்தவர் தன்னையுமறியாமல் தூங்கிப்போனார். அது கனவுகள் கூட இல்லாத ஆழ்ந்த உறக்கம்! அடுத்த நாள் காலையில் பைபிளையும் ஆண்டவரையும் மற‌ந்து போனார்.
 

பின்னர் அதே வாரத்தில் ஒருவர் "இயேசு ஒருவரே இறைவனை அடையும் வழி" என தெருவில் பிரசங்கம் செய்துகொண்டிருந்தார். அதைக் கண்ட இப்ராஹிம் தனது மனதில், "இதெல்லாம் வெறும் குப்பை, இயேசு தேவனுக்கு குமாரனாக இருக்க‌முடியாது, தேவனுக்கு குமாரனும் கிடையாது" என சொல்லிக் கொண்டார். ஏற்கனவே ஒரு அமெரிக்க தம்பதி இப்ராஹிமிடம் "உனது கேள்விகளுக்கான பதில்களை தேவனிடம் கேள், அவர் உன்னை மிகவும் நேசிக்கிறார், உன்னுடன் பேசுவார்" என‌க் கூறியிருந்தனர். 'தேவன் நம்முடன் பேசுவார்' என்பதை இதுவரை ஒருவரும் இப்ராஹிமுக்கு சொன்னதில்லை. ஐந்து இரவுகளுக்குப் பிறகு ஓர் இரவில் இப்ராஹிமின் கனவில் பேரொளி ஒன்று சிலுவை வடிவில் தோன்றி அதிலிருந்து ஒரு சத்தம் புறப்பட்டு, "இதுவே என் வழி, இயேசுவானவர் என்னுடைய குமாரன், நான் என்னுடைய சமாதான‌த்தையே உனக்குக் கொடுக்கிறேன், எனது சந்தோஷத்தினால் உன்னை நிரப்புகிறேன்" என உரைத்தது.
 

இப்ராஹிம் தேவனால் கேட்கப்பட்டு, இயேசுவானவரைப் பின்பற்றுவதன் விளைவுக‌ளைக் குறித்து ஒரு நாள் முழுவ‌தும் யோசித்தார். தான் குடும்பத்தாரால் முற்றிலும் புற‌க் க‌ணிக்க‌ப்ப‌டுவோம் என்ப‌த‌னை அறிந்திருந்தும் இயேசுவைக் குறித்து அறியும் ஆவல் அவருக்குள் இன்னும் இன்னும் அதிக‌ரித்துக்கொண்டே இருந்த‌து. ஒரு நாளில் கிறிஸ்த‌வ‌ பெண்ம‌ணி ஒருவ‌ரை ச‌ந்தித்து இயேசுவான‌ரைக் குறித்து முழுவ‌தும் கேட்ட‌றிந்தார். அன்று ம‌ன‌ம் விட்டுக் க‌த‌றி அழுது த‌ன் வாழ்க்கையினை க‌ர்த்த‌ராகிய‌ இயேசு கிறிஸ்துவுக்கு ஒப்புக்கொடுத்தார். உட‌னே அவ‌ர் செய்த‌ முத‌ற் காரிய‌ம் த‌ன‌து ந‌ம்பிக்கையினை - ம‌ன‌மாற்ற‌த்தினை த‌னது குடும்ப‌த்தாருக்கு தெரிவித்த‌து தான். எதிர்பார்த்த‌ப‌டியே அவர்கள் க‌டுங்கோப‌த்துட‌ன் எச்ச‌ரித்த‌துட‌ன் இனி அவ‌ரிட‌மிருந்து இது போன்ற‌ காரிய‌ங்க‌ளை ஒருபோதும் கேட்க‌ விரும்பவில்லை என‌க் கூறிவிட்ட‌ன‌ர்.
 

இப்ராஹிமோ பைபிளைத் தீவிர‌மாக‌க் க‌ற்க‌த் துவ‌ங்கிய‌துட‌ன் ஒரு கிறிஸ்த‌வ‌ப் பெண்ணையும் திரும‌ண‌ம் செய்துகொண்டு புதிய‌ வாழ்க்கையை துவ‌ங்கினார்; அவருடைய குடும்பத்தாரோ அவரை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் இல்லை. இந்த‌ நிலையில் அவருடைய சகோதரியின் திருமணத்தில் கலந்துகொள்ள அழைத்து ஒரு த‌ந்தி வ‌ந்த‌து, "உன்னை ம‌ன்னித்து விட்டேன், அவ‌சிய‌ம் வ‌ர‌வும்" என‌ அவ‌ர‌து த‌ந்தை அழைத்திருந்தார்.
 

இந்த எதிர்பாராத அழைப்பைக் குறித்து ஆண்டவ‌ரிடம் கேட்டபோது இப்ராஹிம் தனது மனைவியை அழைத்துச் செல்லவேண்டாம் என ஆண்டவரால் எச்சரிக்கப்பட்டதால் தனியாகவே தன‌து குடும்பத்தார் தற்சமயம் வசிக்கும் இந்தியாவின் மும்பை நகருக்குச் சென்றார். அவரது நண்பர்களும் உறவினர்களும் அன்போடு வரவேற்றனர். ஆனால் இது அவரது தகப்பனாரின் கண்மூடித்தனமான தாக்குதல் துவங்கும் வரையில்தான். ஆம், இப்ராஹிமின் தகப்பனார் தனது கோபமெல்லாம் தீரும் வண்ணம் அடித்தும் உதைத்தும் மிதித்தும் வெறித்தனமாக - இரத்தக்களறியாகும்வரை தனது மகனைத் தாக்கினார். குடும்பத்தார் அனைவரும் அவ‌ருடைய செயலுக்குத் துணை நின்றன‌ர். ஆனாலும் இத்தனை உடல் - ‍மன வேதனையிலும் இப்ராஹிம் மன உறுதியுடனிருந்து "நான் கிறிஸ்துவை மறுதலிக்க மாட்டேன்" எனக் கூறிக் கொண்டே இருந்தார்.
 

அவ‌ருடைய தகப்பனார் கடுங்கோபத்துடன் துப்பாக்கியினால் அவரை சுட்டுத் தள்ள ஆவேசத்துடன் எழும்பி விசையினைத் தட்டும் வேளையில் இப்ராஹிமின் மாமா அதைத் தடுத்து அந்த துப்பாக்கியினை தகப்பனாரின் கரத்திலிருந்து பிடுங்கி எறிந்தார். இப்ராஹிம் தொடர்ந்து வீட்டிலேயே கைதியைப் போல் அடைபட்டிருந்தார். அவரது திருமண புகைப்படங்களையும் வேதாகமத்தையும் கிறிஸ்தவ புத்தகங்கள் மற்றும் அவ‌ருக்குப் பிரியமான ஒலிநாடாக்களையும் அழித்தன‌ர். இப்படியே நாட்கள் செல்ல செல்ல அவருடைய தகப்பனாருக்கு இப்ராஹிம் மனம் மாறிவிட்டது போல‌த் தோன்றிய‌து. ஆனாலும் அவ‌ரை கைதி போல‌வே வைத்திருந்து அவ‌ர் த‌ப்பியோட‌ முய‌ற்சித்தால் அவரை சுட்டுத் த‌ள்ள‌ பாதுகாவ‌ல‌ர்க‌ளுக்கு உத்த‌ர‌விட்டிருந்தார். இன்னும் கொஞ்ச ‌நாள் சென்ற‌தும் பாதுகாவ‌ல‌ர்க‌ளுடனே அவர‌து ந‌ண்ப‌ர்க‌ளைப் பார்த்துவ‌ர‌ அனும‌திக்க‌ப்ப‌ட்டார்.
 

ஒரு நாள் த‌ன‌து பள்ளித் தோழ‌னைப் பார்த்துவர ‌வேண்டுமென‌ கேட்க‌வும் அவ‌ர‌து த‌க‌ப்பனார் அவ‌ரை வெளியே அழைத்துச் சென்றார். ஆண்ட‌வ‌ர் இப்ராஹிமிட‌ம்,"நீ உன் குடும்ப‌த்தை விட்டு வெளியேறும் நாள் இதுவே" என்று சொன்னார். அவ‌ர‌து தகப்பனாரும் போகும்வ‌ழியில் ஏதோ வேலையிலிருந்ததால் இப்ராஹிமை த‌னியே சென்றுவ‌ர‌ அனும‌தித்தார். இந்த‌ அருமையான‌ வாய்ப்பினை இழ‌க்க‌ விரும்பாத‌ இப்ராஹிம் நேராக‌ ஒரு கிறிஸ்த‌வ‌ப் போத‌க‌ரிட‌ம் சென்று அவ‌ருடைய‌ உத‌வியுட‌ன் ப‌த்திர‌மாக‌ வெளியேறி த‌ன‌து தேச‌த்துக்குச் சென்று ம‌னைவியுட‌ன் சேர்ந்தார்.
 

ச‌மீப‌த்தில் இப்ராஹிம் தொலைபேசி மூல‌ம் த‌ன‌து த‌க‌ப்ப‌னாருட‌ன் பேசிய‌போது அவ‌ர் சொன்ன‌து, "நீ வ‌ண‌ங்கும் தெய்வ‌மே உண்மையான‌ தெய்வ‌ம், கார‌ண‌ம்.உன்னைத் துன்புறுத்த க‌ட‌ந்த‌ ப‌த்து வ‌ருட‌ங்க‌ளாக‌ எடுத்த‌ முய‌ற்சிக‌ள் தோற்றுப் போய்விட்டது".


ஆங்கில மூலம்: http://net-burst.net/hot/muslim.htm#ibrahim


The Price of Peace, an article published in The Believer's Voice of Victory' Magazine, April 1998, published by Kenneth Copland and Gloria Copland from the UK. Ibrahim's story took place around the year 1986-87.

 

 


 

 

 


 
 

Thursday, April 16, 2009

முஸ்லீம்களோடு பகிர்ந்து கொள்ள சில வசனங்கள் - Some ...


 


முஸ்லீம்களோடு பகிர்ந்து கொள்ள சில வசனங்கள்

 
September 2003 version
 
 
தேவனின் வார்த்தையை பாதுகாக்க அவரின் வாக்குத்தத்தங்கள்

 
நீதிமொழிகள் 30:5-6 'தேவனுடைய வசனமெல்லாம் புடமிடப்பட்டவைகள்; தம்மை அண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு அவர் கேடகமானவர். அவருடைய வசனங்களோடு ஒன்றையும் கூட்டாதே, கூட்டினால் அவர் உன்னைக் கடிந்துகொள்ளுவார், நீ பொய்யனாவாய்."

ஏசாயா 59:21 'உன் மேலிருக்கிற என் ஆவியும், நான் உன் வாயில் அருளிய என் வார்த்தைகளும், இது முதல் என்றென்றைக்கும் உன் வாயிலிருந்தும், உன் சந்ததியின் வாயிலிருந்தும், உன் சந்ததியினுடைய சந்ததியின் வாயிலிருந்தும் நீங்குவதில்லையென்று கர்த்தர் சொல்லுகிறார் இது எனக்கு அவர்களோடிருக்கும் என் உடன்படிக்கையென்று கர்த்தர் சொல்லுகிறார்."
 
 
குர்‍ஆன் 5:46 - குர்‍ஆனில் ஒரு குறிப்பிடத்தக்க வசனம்

இன்னும் (முன்னிருந்த) நபிமார்களுடைய அடிச்சுவடுகளிலேயே மர்யமின் குமாரராகிய ஈஸாவை , அவருக்கு முன் இருந்த தவ்ராத்தை உண்மைப்படுத்துபவராக நாம் தொடரச் செய்தோம்; அவருக்கு நாம் இன்ஜீலையும் கொடுத்தோம்;. அதில் நேர்வழியும் ஒளியும் இருந்தன. அது தனக்கு முன்னிருக்கும் தவ்ராத்தை உண்மைப்படுத்துவதாக இருந்தது. அது பயபக்தியுடையவர்களுக்கு நேர் வழிகாட்டியாகவும் நல்லுபதேசமாகவும் உள்ளது. (சூரா 5:46)

குர்‍ஆனின் இந்த வசனம் விசேஷமானது. இறைவன் தோரவை (பழைய ஏற்பாட்டு வேதபுத்தகத்தின் முதல் ஐந்து புத்தகங்கள்) உறுதிபடுத்துவதற்காக இயேசுவை அனுப்பியிருப்பாரென்றால் இயேசுவின் காலத்தில் மக்கள் வாசித்த மற்றும் இயேசுவால் உண்மைபடுத்தப்பட்ட தோரா தான் இறைவன் அனுப்பித்தந்த தோராவாக இருக்க முடியும்.

மேலும் சூரா 5: 47 '(ஆதலால்) இன்ஜீலையுடையவர்கள், அதில் அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு தீர்ப்பு வழங்கட்டும்; …." (5:47) என்று கூறுகிறது. இன்ஜீலையுடையவர்கள் அதில் அல்லாஹ் இறக்கிவைத்ததைக் கொண்டு தீர்ப்பளிக்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கும் போது, இன்ஜீலை உடையவர்களிடத்தில் உள்ள இன்ஜில், அல்லாஹ் அவர்களிடம் வைத்து தீர்ப்புக் கூறச் சொன்ன இன்ஜீல் இல்லை என்று எப்படி கூற முடியும்?

சூரா 5:48 ல் "மேலும் (நபியே! முற்றிலும்) உண்மையைக் கொண்டுள்ள இவ்வேதத்தை நாம் உம்மீது இறக்கியுள்ளோம், இது தனக்கு முன்னிருந்த (ஒவ்வொரு) வேதத்தையும் மெய்ப்படுத்தக் கூடியதாகவும் அதைப் பாதுகாப்பதாகவும் இருக்கின்றது. எனவே அல்லாஹ் அருள் செய்த(சட்ட திட்டத்)தைக் கொண்டு அவர்களிடையே நீர் தீர்ப்புச் செய்வீராக. உமக்கு வந்த உண்மையை விட்டும் (விலகி,) அவர்களுடைய மன இச்சைகளை நீர் பின்பற்ற வேண்டாம்…..".

வசனங்களை கொடுக்க இறைவனுக்கு வல்லமையிருக்கும் போது, அதை பத்திரமாக பாதுகாக்கவும் அவருக்கு வல்லமை இருக்கிறது. இதை நீங்கள் ஏற்றுக் கொள்ளுகிறீர்களா?
 
 
இயேசுவின் உன்னத நிலை

அப்போஸ்தலர் 4:12 'அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை, நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை...."

பிலிப்பியர் 2:5-12 'கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது, அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார்.அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார். ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி, இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும், பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார். ஆதலால், எனக்குப் பிரியமானவர்களே, நீங்கள் எப்பொழுதும் கீழ்ப்படிகிறபடியே, நான் உங்களுக்குச் சமீபமாயிருக்கும்பொழுது மாத்திரமல்ல, நான் தூரமாயிருக்கிற இப்பொழுதும், அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் உங்கள் இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுங்கள்".

1 பேதுரு 3:15-16 'கர்த்தராகிய தேவனை உங்கள் இருதயங்களில் பரிசுத்தம்பண்ணுங்கள்; உங்களிலிருக்கிற நம்பிக்கையைக்குறித்து உங்களிடத்தில் விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் சாந்தத்தோடும் வணக்கத்தோடும் உத்தரவுசொல்ல எப்பொழுதும் ஆயத்தமாயிருங்கள். கிறிஸ்துவுக்கேற்ற உங்கள் நல்ல நடக்கையைத் தூஷிக்கிறவர்கள் உங்களை அக்கிரமக்காரரென்று உங்களுக்கு விரோதமாய்ச் சொல்லுகிற விஷயத்தில் வெட்கப்படும்படிக்கு நல் மனச்சாட்சியுடையவர்களாயிருங்கள். (18) ஏனெனில், கிறிஸ்துவும் நம்மைத் தேவனிடத்தில் சேர்க்கும்படி அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய்ப் பாவங்களினிமித்தம் ஒருதரம் பாடுபட்டார், அவர் மாம்சத்திலே கொலையுண்டு, ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார்.

1 யோவான் 5:12-13 'குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன்.உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று நீங்கள் அறியவும், தேவகுமாரனுடைய நாமத்தின்மேல் நீங்கள் விசுவாசமாயிருக்கவும், தேவகுமாரனுடைய நாமத்தின்மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்கு இவைகளை எழுதியிருக்கிறேன்."

யோவான் 14:6 'அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்".

1 யோவான் 2:22-23 'இயேசுவைக் கிறிஸ்து அல்ல என்று மறுதலிக்கிறவனேயல்லாமல் வேறே யார் பொய்யன்? பிதாவையும் குமாரனையும் மறுதலிக்கிறவனே அந்திக்கிறிஸ்து. குமாரனை மறுதலிக்கிறவன் பிதாவையுடையவனல்ல, குமாரனை அறிக்கையிடுகிறவன் பிதாவையும் உடையவனாயிருக்கிறான்."

யோவான் 8:24 'ஆகையால் நீங்கள் உங்கள் பாவங்களில் சாவீர்கள் என்று உங்களுக்குச் சொன்னேன்; நானே அவர் என்று நீங்கள் விசுவாசியாவிட்டால் உங்கள் பாவங்களிலே சாவீர்கள் என்றார்".
 
 
சமாதானமும் யுத்தமும்

யோவான் 16:2-3 '.......மேலும் உங்களைக் கொலைசெய்கிறவன் தான் தேவனுக்குத் தொண்டு செய்கிறவனென்று நினைக்குங் காலம் வரும். அவர்கள் பிதாவையும் என்னையும் அறியாதபடியினால் இவைகளை உங்களுக்குச் செய்வார்கள் (இயேசு கூறியது)

எரேமியா 8:11-12 'சமாதானமில்லாதிருந்தும், சமாதானம் சமாதானம் என்று சொல்லி, என் ஜனமாகிய குமாரத்தியின் காயங்களை மேற்பூச்சாய்க் குணமாக்குகிறார்கள். தாங்கள் அருவருப்பானதைச் செய்ததினிமித்தம் வெட்கப்படுகிறார்களா? பரிச்சேதம் வெட்கப்படார்கள் நாணவும் அறியார்கள்;,......"

வெளி 17:5-6 மேலும், இரகசியம், மகா பாபிலோன், வேசிகளுக்கும் பூமியிலுள்ள அருவருப்புகளுக்கும் தாய் என்னும் நாமம் அவள் நெற்றியில் எழுதியிருந்தது. அந்த ஸ்திரீ பரிசுத்தவான்களின் இரத்தத்தினாலும் இயேசுவினுடைய சாட்சிகளின் இரத்தத்தினாலும் வெறிகொண்டிருக்கிறதைக் கண்டேன் , அவளைக் கண்டு நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன்.
 
 
செய்தியிலும் தொனியிலும் உள்ள வித்தியாசம்

லூக்கா 6:27-28 'எனக்குச் செவிகொடுக்கிற உங்களுக்கு நான் சொல்லுகிறேன்: உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள் , உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மைசெய்யுங்கள். உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள், உங்களை நிந்திக்கிறவர்களுக்காக ஜெபம்பண்ணுங்கள்.

சமாதான பிரபுவாகிய இயேசுவின் இந்த வார்த்தைகளை கடைபிடிக்கிறீர்களா?

1 கொரிந்தியர் 13:1-7 'நான் மனுஷர் பாஷைகளையும் தூதர் பாஷைகளையும் பேசினாலும், அன்பு எனக்கிராவிட்டால், சத்தமிடுகிற வெண்கலம் போலவும், ஓசையிடுகிற கைத்தாளம் போலவும் இருப்பேன். நான் தீர்க்கதரிசன வரத்தை உடையவனாயிருந்து, சகல இரகசியங்களையும், சகல அறிவையும் அறிந்தாலும், மலைகளைப் பேர்க்கத்தக்கதாகச் சகல விசுவாசமுள்ளவனாயிருந்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் நான் ஒன்றுமில்லை. எனக்கு உண்டான யாவற்றையும் நான் அன்னதானம்பண்ணினாலும், என் சரீரத்தைச் சுட்டெரிக்கப்படுவதற்குக் கொடுத்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் எனக்குப் பிரயோஜனம் ஒன்றுமில்லை. அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது , அன்புக்குப் பொறாமையில்லை, அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது, அயோக்கியமானதைச் செய்யாது, தற்பொழிவை நாடாது, சினமடையாது, தீங்கு நினையாது, அநியாயத்தில் சந்தோஷப்படாமல், சத்தியத்தில் சந்தோஷப்படும். சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் விசுவாசிக்கும், சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும்";




 

 

 
 

Wednesday, April 8, 2009

கிறிஸ்தவன் பார்வையின் "பைபிள் கூறும் பயங்கரவாதம் (...


 

கிறிஸ்தவன் பார்வையின்


"பைபிள் கூறும் பயங்கரவாதம் (2)" கட்டுரைக்கு பதில்: 2

 
முன்னுரை:


பைபிள் கூறும் பயங்கரவாதம் என்ற பெயரில் "கிறிஸ்தவம் பார்வை" தளம் தொடர் கட்டுரைகளை எழுதிக்கொண்டு இருக்கிறது. இவர்களின் முதல் கட்டுரைக்கு நாம் அளித்துள்ள பதிலை இங்கு படிக்கலாம்:

 
இந்த தற்போதைய கட்டுரையில் அவர்களின் இரண்டாம் பாகத்திற்கு நாம் பதிலை காண்போம்.
 
அபூ அப்திர்ரஹ்மான்

பைபிள் கூறும் பயங்கரவாதம் (2)

பயங்கரவாதம் - வன்முறை மற்றும் பைபிள்!

தாங்கள் செய்த/செய்யும் அக்கிரமச் செயல்களை நியாயப்படுத்த, அன்றைய காலத்தில் தாங்கள் செய்த ஆபாச, அக்கிரமங்கள் அனைத்தும் இறைவனால் அங்கீகரிக்கப்பட்டன என்று சாயம் பூசியது புரோகித வர்க்கம். இதற்காக இவர்கள் இறைவனால் தூதர்களாக தேர்வு செய்யப்பட்ட தீர்க்கதரிசிகளின் பெயரிலும் கையாடல்கள் செய்வதற்கும்த் தயங்கவில்லை. இதனால் தான் வேதம் என்று கிறிஸ்தவர்களால் நம்பப்படும் பைபிள், ஆபாசம் மற்றும் வன்முறைச் சம்பவங்களால் அசிங்கப்பட்டுக் கிடக்கிறது.

 
ஈஸா குர்‍ஆன்

"முஹம்மது செய்த அக்கிரமச் செயல்களை நியாயப்படுத்த, அன்றைய காலத்தில் அவ‌ர் செய்த ஆபாச, அக்கிரமங்கள் அனைத்தும் இறைவனால் அங்கீகரிக்கப்பட்டன என்று சாயம் பூசியது இஸ்லாமிய புரோகித வர்க்கம். இதனால் தான் வேதம் என்று இஸ்லாமியர்களால் நம்பப்படும் குர்‍ஆன், ஆபாசம் மற்றும் வன்முறைச் சம்பவங்களால் அசிங்கப்பட்டுக் கிடக்கிறது."

மேலே உள்ள வரிகளில் அடிக்கோடிட்ட வரிகளை மட்டுமே நான் எழுதினேன், மற்றவைகள் எல்லாம், அபூ அப்திர்ரஹ்மான் அவர்களின் வரிகளே. இப்போது அந்த வரிகளை படித்தால் எப்படி பொருத்தமாக உள்ளது பாருங்கள். அதற்காகத் தான் சொல்கிறேன், இஸ்லாமியர்களே, கொஞ்சம் அடக்கி வாசியுங்கள். விவாதம் என்றால் வசனங்களை முன்வைக்கவேண்டும், அதற்கு பொருள் கூறவேண்டும், அதை விட்டுவிட்டு, சொந்தமாக வரிகளை அள்ளிவீசினால், இப்படித்தான் பொருள் விபரீதமாக மாறும்.

நீங்கள் பைபிள் பற்றி என்ன எழுதினாலும், கிறிஸ்தவர்கள் பார்த்துக்கொண்டு சும்மா இருப்பார்கள் என்ற காலம் சென்றுவிட்டது, இனி எல்லாருக்கும் இஸ்லாம் பற்றியும், உங்கள் யுக்திகள் பற்றியும் தெரிந்துவிட்டது, எனவே சிறிது சிந்தித்து எழுதுங்கள்.
 
அபூ அப்திர்ரஹ்மான்

ஒருபுறம் தங்களை அமைதிப் புறாக்களாகக் காட்டும் கிறிஸ்தவர்கள், திரைமறைவில் செய்து வரும் வேலைகளைக் குறித்து பலரும் அலட்சியமாகவே இருக்கின்றனர்.
 
ஈஸா குர்‍ஆன்

ஆனால், உங்கள் மதம் "அமைதி மதம்" என்ற மிகப்பெரிய பொய்யை அதிக‌ சத்தத்தோடு சொல்லும் இஸ்லாமியர்களின் வேலைகளைக் குறித்து உலக மக்கள் அலட்சியமாக இல்லை என்பதை மட்டும் கவனத்தில் கொள்ளவும்.

மற்ற நாடுகளில் தீவிரவாதிகள் வெடிகுண்டு வைத்தார்கள் என்ற செய்தியை இந்திய மக்கள் தொலைக்காட்சியில் காணும் போது, ஏதோ ஓரளவிற்கு வேதனை அடைந்தனர், ஆனால், நம் நாட்டிலேயே, மும்பையில் நடைப்பெற்ற தீவிரவாத செயல்களை, ஹாலிவுட் பிரமாண்ட தயாரிப்பில் கூட பார்க்காத அளவிற்கு நேரடி ஒளிபரப்பில் கண்டு, மக்கள் பிரத்துவிட்டார்கள்.

எனவே, திரைமறைவில் யார் என்ன செய்கிறார்கள் என்பதை எல்லாரும் நன்றாக அறிவோம்.
 
அபூ அப்திர்ரஹ்மான்

மிஷினரிகளுக்கு இன்னொரு முகமும் இருக்கிறது என்பதை அவர்களின் செயல்களை உன்னிப்பாகக் கவனிப்பவர்கள் அறிந்து கொள்வர்.
 
ஈஸா குர்‍ஆன்

இன்றைக்கு இஸ்லாமின் உண்மை முகம் கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சத்திற்கு தெரிந்துவிடுகிறது என்பதால் தானே அதிக ஆவேசத்தோடும், கோபத்தோடும் திட்டுகிறீர்கள்.

இஸ்லாமுக்கு இரண்டு முகங்கள் உண்டு.

முதலாவது முகம் இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் காட்டப்படும் முகம், இஸ்லாம் அனைவரையும் ஒரே விதத்தில் பார்க்கிறது, பேதங்கள் பார்ப்பதில்லை என்று நமக்கு இஸ்லாமியர்கள் கூட்டங்கள் போட்டு, பல நிகழ்ச்சிகள் நடத்தி விவரிப்பார்கள்.

இரண்டாவது முகம், இஸ்லாமிய நாடுகளில் காட்டப்படும் முகம் ஆகும். சரியாகச் சொல்லவேண்டுமானால், நம் நாட்டில் காட்டப்படும் முகத்தை "உண்மை இஸ்லாம்" என்றுச் சொல்லமுடியாது. இஸ்லாமிய நாடுகளாகிய சௌதி அரேபியா, பாகிஸ்தான், ஈரான் போன்ற நாடுகளில், ஷரியா சட்டம் அமுலில் இருக்கும் நாடுகளில் வெளிப்படும் இஸ்லாமே உண்மையான இஸ்லாமாகும். அதிகாரம், ஆட்சி கையில் இல்லாத போது ஒரு வகையான இஸ்லாம், ஆட்சி அதிகாரம் கையில் வந்தவுடன் வேறுவகையான இஸ்லாம். இதனை தினசரி செய்தித்தாள்களை வாசிப்பவர்கள் கண்டுக்கொள்வர்.
 
அபூ அப்திர்ரஹ்மான்

ஆபாசம், வன்முறை, முன்னுக்குப் பின் முரணான தகவல்கள், பொய்கள் என அசிங்கக் குப்பைகள் நிறைந்துக் கிடக்கும் பைபிளில், புரோகிதர்களின் கைகளிலிருந்துத் தப்பி இன்னமும் கையாடல் செய்யப்படாமல் ஆங்காங்கே வெளிப்படும் இறைவனின் கட்டளைகளைக் கூட அதனை வேதமாகக் கருதும் கிறிஸ்தவர்களே பின்பற்றுவதில்லை என்பது முரண்பாட்டின் உச்சகட்டம்!
 
ஈஸா குர்‍ஆன்

பாவம் உங்கள் அல்லாஹ், மனிதர்கள் தன் வேதங்களில் கையாடல்கள் செய்யும் போது என்ன செய்துக்கொண்டு இருந்தார்?

ஏதாவ‌து விடுமுறைக்கு சென்று இருந்தாரோ?

அல்ல‌து

உல‌க‌த்திலிருந்து த‌ன்னிட‌ம் வ‌ரும் ஆண்க‌ளுக்கு பெண்க‌ளை த‌யார் ப‌டுத்தும் வேலையில் அன்றிலிருந்தே ரொம்ப‌ பிஸீயாக‌ இருந்தாரோ?

அல்லாஹ் இற‌க்கிய‌ வேத‌த்தை ம‌னித‌ர்க‌ள் மாற்றிவிட்டார்க‌ள் என்றுச் சொல்ல‌ உங்க‌ளுக்கு நெருட‌லாக‌ தெரிய‌வில்லை? அப்ப‌டிச் சொல்வ‌து அல்லாஹ்விற்கு அவ‌மான‌த்தை கொண்டு வ‌ரும் என்ப‌தை நீங்க‌ள் சிந்திப்ப‌தில்லையா?

என் வேதத்தை யாரும் மாற்ற முடியாது என்று சொல்லிவிட்டு, இப்போது மாற்றிவிட்டார்கள் என்றுச் சொல்வது கேவலமாக தெரியவில்லையா? இதைக்குறித்த அப்துல்லாவும் அப்ரஹாமும் - உரையாடல் கட்டுரையை இங்கு படிக்கலாம்:

இஸ்லாமியர்களின் லாஜிக்:


இஸ்லாமியர்களுக்கென்று ஒரு தனி லாஜிக் உள்ளது. கீழ் கண்ட விவரங்களை பாருங்கள். இன்னும் பைபிளில் சில வசனங்கள் "கலப்படம் செய்யப்படாமல்" அப்படியே சுத்தமாக இருக்கிறது என்று ஒப்புக்கொள்கிறார்கள்.

//புரோகிதர்களின் கைகளிலிருந்துத் தப்பி இன்னமும் கையாடல் செய்யப்படாமல் ஆங்காங்கே வெளிப்படும் இறைவனின் கட்டளைகளைக் கூட//

ஏன் இஸ்லாமியர்கள் இப்படி சொல்கிறார்கள்? பைபிள் கலப்படம் செய்யப்பட்டது என்றுச் சொல்லும் அதே இஸ்லாமியர்கள், ஒரு சில வசனங்கள் மட்டும் ஏன் மாற்றமடையாமல் இருக்கிறது என்றுச் சொல்கிறார்கள்? இதற்கு பதில் சொல்வது மிகவும் சுலபம்.

இது இஸ்லாமியர்களின் வஞ்சகத்தன்மையை மாய்மால குணத்தைக் காட்டுகிறது. அதாவது, இஸ்லாமியர்களை பொருத்த வரை, அவர்களின் லாஜிக் கீழ்கண்ட விதமாக உள்ளது.

1) பைபிளில் இருக்கும் விவரங்கள் (நிகழ்ச்சிகள்) குர்‍ஆனிலும் அதே போல இருந்தால், அந்த வசனங்களை மனிதர்கள் திருத்தவில்லை, காரணம் என்ன? அதே நிகழ்ச்சி அப்படியே மாற்றமில்லாமல் குர்‍ஆனில் இருக்கிறதே, அதனால், அவ்வசனங்கள் கலப்படம் செய்யப்படாதவைகள்.

2) பைபிளில் இருக்கும் விவரங்கள், குர்‍ஆனில், ஹதீஸ்களில் இல்லாமல் இருந்தால், பைபிளில் இருக்கும் அந்நிகழ்ச்சி சம்மந்தப்பட்ட வசனங்கள் மனிதர்களால் திருத்தப்பட்டவைகளாகும். ஏன் இப்படி என்று கேட்டால், அந்நிகழ்ச்சி குர்‍ஆனில் இல்லை அதனால் தான்.

3) பைபிளில் ஒரு நிகழ்ச்சி பற்றி ஒன்றுமே குறிப்பிடாமல் இருக்கும் பட்சத்தில், ஒரு புதிய நிகழ்ச்சி பற்றி குர்‍ஆன் சொல்லியிருந்தால், அந்நிகழ்ச்சி பற்றிய விவரங்களை மனிதர்கள் பைபிளிலிருந்து நீக்கிவிட்டார்கள். ஏன் இப்படி என்று கேட்டால், குர்‍ஆனில் இருக்கிறதல்லவா? அதனால் தான்.

எது எப்படியானாலும் சரி, குர்‍ஆன் சொல்வது தான் சரியானது, அதற்கு எதிராக ஒரு நிகழ்ச்சி பைபிளில் சொல்லப்பட்டு இருந்தால், அது முக்கியமாக குர்‍ஆனின் நம்பகத்தன்மையை பாதிப்பதாக இருந்தால், முஹம்மது பற்றி இவர்கள் சொல்லிவரும் பொய்களை தோல் உரிப்பதாக இருந்தால், உடனே, கிறிஸ்தவர்கள், யூதர்கள் அதனை மாற்றிவிட்டார்கள், அது முரண்பாடு என்றுச் சொல்லிவிடுவார்கள்.

இப்போது அப்திர் ரஹ்மான் அவர்கள் எழுதியதை இன்னொரு முறை படியுங்கள், அவர்களின் மாய்மால லாஜிக் புரியும்

//புரோகிதர்களின் கைகளிலிருந்துத் தப்பி இன்னமும் கையாடல் செய்யப்படாமல் ஆங்காங்கே வெளிப்படும் இறைவனின் கட்டளைகளைக் கூட//

ஏன் புரோகிதர்களின் கையிலிருந்து தப்பியது?
இன்னும் ஏன் கையாடல் செய்யப்படாத வசனங்கள் பைபிளில் இருக்கின்றன?

போன்ற கேள்விகளை நாம் கேட்டால், மேலே உள்ள இஸ்லாமிய லாஜிக்கில் நமக்கு பதில் கிடைக்கும். அதாவது பைபிளில் உள்ள அதே கட்டளைகள் குர்‍ஆனிலும் இருப்பதால், அவ்வசனங்கள் கையாடல் செய்யப்படவில்லை. என்னே லாஜிக் பார்த்தீர்களா?

 
 
அபூ அப்திர்ரஹ்மான்

"பன்றி மாமிசம் உண்ணக் கூடாது" என்று பைபிள் தடை விதித்தாலும் இறைவன் மனிதனுக்காகத் தான் எல்லாவற்றையும் படைத்தான் என்றும் பூமியில் படைக்கப் பட்டவையெல்லாம் அனுபவிக்கலாம் என்ற புரோகிதர்களின் சித்தாந்தத்தாலும் குழப்பம் ஏற்பட்டு இது குறித்து சரியான வழிகாட்டுதலைக் கொடுக்க பைபிள் தவறிய காரணத்தால் தீமை விளைவிக்கக் கூடியது என்பது தெரிந்த போதிலும் இன்று பன்றியை உண்பதில் கிறிஸ்தவர்களே முன்னணியில் நிற்கின்றனர்!
 
ஈஸா குர்‍ஆன்

வன்முறைக்கு ஆரம்பமாக பன்றியை முதலீடாக வைக்கிறார் அபூ அப்திர்ரஹ்மான் அவர்கள்:


 
பயங்கரவாதம் பற்றி எழுதுகிறேன் என்றுச் சொல்லிவிட்டு, பன்றி என்றும், மதுபானம் என்றும் ஆரம்பித்து, கடைசியாக ஜார்ஜ் புஷ்வரை எழுதியுள்ளார் சகோதரர் அப்திர் ரஹ்மான் அவர்கள்.

பழைய ஏற்பாட்டில் தேவன் மோசேயின் மூலமாக பன்றி மாமிசம் உண்ணவேண்டாம் என்றுச் சொல்லியுள்ளார், ஆனால், தேவன் கொடுத்த கட்டளையை கிறிஸ்தவர்கள் கடைபிடிப்பதில்லை என்று அதிகமாக இஸ்லாமியர்கள் வேதனைப்படுகிறார்கள். மோசேயின் கட்டளையை கிறிஸ்தவர்கள் மீறக்கூடாது என்றுச் சொல்கிறார்கள். நியாயமான கேள்வி தான், ஆனால், முதலில் கீழ் கண்ட விவரங்களை படித்து ஒரு முடிவிற்கு வாருங்கள்.

 
• மோசே கொடுத்த கட்டளையை கிறிஸ்தவர்கள் மீறுவது சரியில்லை என்றுச் சொல்லும் இஸ்லாமியர்கள், அதே மோசே மூலமாக அதே தேவன் கொடுத்த கட்டளையை முஹம்மது ஏன் மீறினார் என்று கேட்பார்களா?

 
• இஸ்லாமியர்கள் கடந்த 14 நூற்றாண்டுகளாக மோசேயின் கட்டளையை மீறி நடக்க‌ முஹம்மது காரணமாக இருக்கிறார் என்பதை இஸ்லாமியர்கள் அறிவார்களா?

 
• மோசேயின் கட்டளையை பவுல் மீறினார் என்று அவர் மீது குற்றம் சுமத்தும் இஸ்லாமியர்கள் இனி, அதே குற்றச்சாட்டை முஹம்மது மீதும் சுமத்தவேண்டும், செய்வார்களா?
 
மோசேயின் மூலமாக தேவன் கொடுத்த எந்தெந்த கட்டளைகளை முஹம்மது மீறியிருக்கிறார், அந்த கட்டளைகளுக்கு எதிராக‌ என்ன கட்டளைகளை சொல்லியுள்ளார் என்பதை கீழே படிக்கவும்.

 

1) பன்றியின் மாமிசம் மட்டுமல்ல, ஒட்டகத்தின் மாமிசத்தையும் உண்ணக்கூடாது என்று தேவன் கட்டளையிட்டுள்ளார், ஆனால், முஹம்மது மோசேயின் மூலமாக தேவன் கொடுத்த கட்டளைக்கு எதிராக ஒட்டக மாமிசம் உண்பதற்கு அனுமதி கொடுத்ததோடு மட்டுமில்லாமல், ஒட்டகங்களை அல்லாஹ்விற்கு பலியிடவும் அனுமதி கொடுத்துள்ளார். கிறிஸ்தவம் மீது சுமத்தும் அதே குற்றம் இப்போது இஸ்லாம் மீதும் உள்ளது, முஹம்மது செய்தது மோசேயின் கட்டளைக்கு எதிரானது இல்லையா? இஸ்லாமியர்கள் சிந்திப்பார்களா?

2) ஒரு பெண்ணை விவாகரத்து செய்த பின்னர், அப்பெண் வேறு கணவனை திருமணம் செய்துக்கொண்டு, பிறகு அந்த கணவனும் விவாகரத்து செய்துவிட்டால், முதல் கணவன் அப்பெண்ணை மறுபடியும் திருமணம் செய்யக்கூடாது, இது அருவருப்பானது என்று தேவன் சொல்லியிருக்கும் போது, அதற்கு நேர் மாறாக, முஹம்மது, அப்பெண்ணை திருமணம் செய்துக்கொள்ளலாம் என்றுச் சொல்லியுள்ளாரே, இது மோசேயின் கட்டளைக்கு எதிராக இல்லையா?

3) மோசேயின் மூலமாக சப்பாத் (Sabbath) என்றுச் சொல்லும் ஓய்வு நாளை (சனிக்கிழமை) கடைபிடிக்கவேண்டும் என்று தேவன் கட்டளையிட்டு இருக்கும் போது, அதை மீறிவிட்டு, அந்த நாளை வெள்ளிக் கிழமையாக மாற்றிவிட்டு, நான் மோசேயைப் போல வந்த நபி என்று உங்கள் முஹம்மது சொல்லியிருக்கிறாரே? இது மீறுதல் இல்லையா? 14 நூற்றாண்டுகளாக ஓய்வு நாளைப்பற்றிய மோசேயின் கட்டளை மீறப்பட்டுக்கொண்டு இருக்கிறதே, இது தான் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, தாவீது, இயேசு வழியில் வந்த ஒரு நபியின் நல்வழிக்காட்டுதலா?

4) மோசேயின் தேவன், போரில் பிடிப்பட்ட பெண்களை திருமணம் செய்துக் கொள்ளாமல், அவளோடு உடலுறவு கொள்ளக்கூடாது என்றுச் சொல்லியிருக்கும் போது, முஹம்மது போரில் பிடிப்பட்ட பெண்களை அடிமைகளை கற்பழிக்கவும், மறுபடியும் விற்கவும் கட்டளையிட்டுள்ளாரே, இது மீறுதல் இல்லையா? திருமணத்திற்கு வெளியே உடலுறவு கொள்ள அதாவது விபச்சாரம் செய்ய அனுமதி அளித்துள்ளாரே, இது மீறுதல் இல்லையா? இஸ்லாமியர்களா மோசேயின் கட்டளைகளைப் பற்றி அதிகம் கவலைப்படுவது?

 

இப்படி அனேக கட்டளைகளை முஹம்மது மீறியிருக்கிறார், மாற்றியிருக்கிறார் என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

மேலே கண்ட அனைத்து விவரங்கள் குறித்த தமிழ் கட்டுரைகளை வசன ஆதாரங்களோடு இங்கு படிக்கவும்:

1) இஸ்லாமியர்களின் கேள்விக்கு பதில்: பன்றி மாமிசம் சாப்பிடுவதைப் பற்றிய விவாதம் (The Issue of Eating Pork)

2) பன்றி மீது ஷப்பீர் அலி அவர்களின் அதீத விருப்பம் பற்றிய ஆய்வு -"ப‌ன்றி மாமிசம் உண்ணுத‌ல்" க‌ட்டுரைக்கு கிறிஸ்த‌வ‌ ப‌தில் (An Examination of Shabir Ally's Fascination with Pigs -Being a Christian Response to his "Eating Pork" Article) பாகம் 1

3) இஸ்லாத்திற்கு மாறும் யூத மற்றும் கிறிஸ்தவர்கள்‌ - இஸ்லாமியர்களை சிந்திக்கத்தூண்டும் சில கேள்விகள் (Jewish and Christian Converts to Islam - Some Questions for Muslims to Ponder)

இதே தலைப்பைப் பற்றிய இதர ஆங்கில கட்டுரைகள்:

1) Muhammad and the Mosaic Law

2) Who Broke the Covenant: Paul or Muhammad?

3) An Examination of Shabir Ally's Fascination with Pigs (Being a Christian Response to his "Eating Pork" Article) Part 1, Part 2, Part 3

4) Do Muslims Truly Obey God's Everlasting Command, Or is Meherally Simply Trying to Pull A Fast One? - Circumcision

5) What is the day of congregation?

6) Sam Shamoun's answer to Bassam Zawadi's response

 

அபூ அப்திர்ரஹ்மான்

"மதுபானம் அருந்தாதீர்கள்" என்று பைபிள் உபதேசம் செய்தாலும் அந்தத் தீமையை தீர்க்கதரிசிகளே செய்து வந்தார்கள் என்றும் இயேசு கிறிஸ்து கூட கல்யாண விருந்தில் அதை பரிமாறியிருக்கிறார் என்று புரோகிதர்கள் எழுதி வைத்துள்ளதால் இது குறித்தும் தார்மீக வழிகாட்டுதல் இல்லாமல் பாஸ்டர் கூட மதுப்பழக்கத்துக்கு அடிமையாவதும் கிறிஸ்தவத்திலேயே நடக்கின்றன.

 

ஈஸா குர்‍ஆன்

இயேசு தண்ணீரை திராட்சை இரசமாக மாற்றிய அற்புதம் பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு கீழ் கண்ட பதிலை நாம் ஏற்கனவே கொடுத்துள்ளோம்.

Answering Islamkalvi : இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்

அல்லாஹ் கொஞ்சம் கொஞ்சமாக மதுபானத்தை தடை செய்தார், அதுவரையில் இஸ்லாமியர்கள் குடித்தார்கள் என்று இஸ்லாமியர்கள் சொல்வார்கள். திடீரென்று குடிப்பழக்கத்தை நிறுத்தமுடியாது, அதற்காக மனிதனின் மனநிலையை புரிந்துக்கொண்டு தான் அல்லாஹ் இப்படி அழகாக செய்தார் என்றுச் சொல்வார்கள். இஸ்லாமியர்களின் இப்படிப்பட்ட பலவீனமான வாதங்கள் அனைத்தும் ஒன்றுக்கும் உதவாத வாதங்களாக மாறிவிடுகின்றன, எப்படி என்பதை கீழ் கண்ட கட்டுரைகளை படித்துப்பார்க்கவும்.

Islam And Wine Consumption - Examining Muslim Arguments against The Bible in light of Islam's Gradual Prohibition of Wine Consumption

Muhammad, the Quran, and Prohibition: Islam's punishments for drinking and gambling

WINE IN ISLAM

குடித்தபோதையில் ஒட்டக எலும்பால் அடித்துக்கொண்டு காயப்பட்ட இஸ்லாமிய ஆரம்பகால மாமனிதர்கள்:

இஸ்லாமிய அறிஞரான இபின் கதிர், ஏன், எப்போது அல்லாஹ் வசனங்களை இறக்கினார் என்பதை குறிப்பிடுகிறார். குடித்த போதையில் ஒருவர் ஒரு ஒட்டகத்தின் எலும்பை எடுத்து, போட்டார் ஒரு போடு, மூக்கில் காயம், இறங்கியது வசனம்.

 

Causes of Its Revelation

Ibn Abi Hatim has recorded some reports about the incident of its revelation: Sa`d said, "Four Ayat were revealed concerning me. A man from the Ansar once made some food and invited some Muhajirin and Ansar men to it, and we ate and drank until we became intoxicated. We then boasted about our status.'' Then a man held a camel's bone and injured Sa`d's nose, which was scarred ever since. This occurred before Al-Khamr was prohibited, and Allah later revealed,

(O you who believe! Approach not As-Salat (the prayer) when you are in a drunken state). Muslim recorded this Hadith, and the collectors of the Sunan recorded it, with the exception of Ibn Majah.

Source: http://tafsir.com/default.asp?sid=4&tid=11257 - Tafsir Ibn Kathir

 

குடித்துவிட்டு, போதையில் தொழுகை செய்யும் போது வாய் குழம்பிய பே(போ)தையர்:

ஒரு இஸ்லாமியர் குடித்தார், போதை ஏறியது (சென்னைத் தமிழில் அழகாக மப்பு என்பார்கள்), குடித்த மயக்கத்திலேயே தொழுகை செய்ய ஆரம்பித்தார். மற்றவர்களை தொழுகையில் நடத்தும்படி, முன்னின்று தொழுகை செய்ய ஆரம்பித்தார்.

அவர் கீழ் கண்டவாறு குர்‍ஆன் சூராவை ஓதினார்:

"காஃபிர்களே! நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்கமாட்டேன்,

ஆனால், நீங்கள் வணங்குபவற்றை நாங்கள் வணங்குவோம்"

இதற்காகவே இற‌ங்கிய‌து இன்னொரு வ‌ச‌ன‌ம்,

 

Another Reason Ibn Abi Hatim narrated that `Ali bin Abi Talib said, "Abdur-Rahman bin `Awf made some food to which he invited us and served some alcohol to drink. When we became intoxicated, and the time for prayer came, they asked someone to lead us in prayer. He recited `Say, `O disbelievers! I do not worship that which you worship, but we worship that which you worship [refer to the correct wording of the Surah: 109].''' Allah then revealed,

(O you who believe! Do not approach Salah when you are in a drunken state until you know what you are saying). '' This is the narration collected by Ibn Abi Hatim and At-Tirmidhi, who said "Hasan [Gharib] Sahih.'' Allah's statement,

Source: http://tafsir.com/default.asp?sid=4&tid=11257 - Tafsir Ibn Kathir

 

மேலே உள்ள விவரங்கள் இஸ்லாமிய ஆதாரங்களாகும், அதாவது குர்‍ஆன் விரிவுரைகளாகும், எனவே, எங்கள் மீது யாரும் கோபம் கொள்ளவேண்டாம்.

ஆக, இந்த வேலையை அந்த இஸ்லாமிய குடிமகன்கள் பல ஆண்டுகளுக்கு பின்பாக செய்ததால், தடை சிறிது சிறிதாக வந்தது என்று பெருமையாக இஸ்லாமியர்கள் இப்போது சொல்லிக்கொள்கிறார்கள், ஆனால், அவர்கள் அந்த வேலையை ஆரம்பத்திலேயே செய்திருந்தால், தடை ஆரம்பத்திலேயே வந்திருக்கும். மேலும் விவரங்களுக்கு மேலே தரப்பட்ட கட்டுரைகளை படிக்கவும்.

அபூ அப்திர் ரஹ்மான் அவர்களிடம் கேட்க விரும்பும் கேள்விகள்:

• பைபிளில் மதுபானம் தடைசெய்யப்பட்டு இருந்தால், ஏன் கிறிஸ்தவத்திற்கு பிறகு 600 ஆண்டுகளுக்கு பின்பு வந்த இஸ்லாமில் அந்த தடை ஆரம்பத்திலிருந்தே இல்லாமல் இருந்தது?

• பழைய ஏற்பாட்டில் பன்றி மாமிசம் கூடாது என்று மோசேயின் மூலமாக தேவன் (அல்லாஹ் - உங்கள் நம்பிக்கைப்படி) தடை செய்திருக்கும் போது, 2000 ஆண்டுகளுக்கு பின்பும் அது இஸ்லாமில் அமுலில் இருக்குமானால், அதே தேவன் கொடுத்த மதுபான தடை ஏன் இஸ்லாமில் ஆரம்பத்திலிருந்தே சொல்லுபடியாகாது?

• இன்னும் பல நூற்றாண்டுகள் பின்னுக்குச் சென்று, ஆபிரகாமுக்கு தேவன் கட்டளையிட்ட விருத்தசேதனம் என்பது, கி.பி. 600க்கு அடுத்து செல்லுபடியாகுமானால், அதே தேவன் விதித்த மதுபான தடை ஏன் செல்லுபடியாகாது?

 

அபூ அப்திர்ரஹ்மான்

"நீ திருமணம் முடிக்காதவனாக இருந்தால் (திருமணம் முடிக்க) பெண்ணைத் தேடாதே! திருமணம் முடித்திருந்தால் உன் மனைவியை விட்டுவிடாதே" என்று திருமணம் முடித்தல் பாவமா? நன்மையா? என்ற தெளிவான வழிகாட்டுதலை வழங்க பைபிள் தவறியதால் திருமணம் செய்யாமல் உணர்வுகளையும் அடக்க இயலாமல் சன்னியாசம் சென்று பாதி வழியில் வழிதவறி வருபவர்களும் கிறிஸ்தவர்களே!

 

ஈஸா குர்‍ஆன்

அந்த சன்னியாசம் எடுத்துக்கொண்டு, மறுபடியும் வழி தவறியவரிடம் சென்று:

 

• அய்யா கிறிஸ்தவ சன்னியாசியே, உங்கள் பைபிள் திருமணம் பற்றி, சரியாகச் சொல்லவில்லை, ஆனால், எங்கள் குர்‍ஆன் திருமணம் பற்றி மிகவும் சரியாகச் சொல்கிறது,

• எனவே, இஸ்லாமுக்கு மாறிவிடுங்கள், மட்டுமல்ல, நான்கு மனைவிகளை திருமணம் செய்துக்கொள்ளும் வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும்,

• போதாக்குறைக்கு அடிமைப்பெண்கள் இருந்தால், அவர்களை திருமணம் செய்துக்கொள்ளாமலேயே அவர்களிடம் உடலுறவு கொள்ளலாம் (திருமணமில்லாமல் உடலுறவு கொள்வதை பொதுவாக எல்லாரும் விபச்சாரம்/வேசித்தனம்/கற்பழிப்பு என்றுச் சொல்வார்கள்),

• நீங்கள் உங்கள் உணர்வுகளை அடக்கவேண்டிய அவசியம் இஸ்லாமில் இல்லை, பணம், வசதி இருந்தால், எந்த வயதிலும் திருமணம் செய்துக்கொள்ளலாம்.

• நான்கு மனைவிகள் என்றால், நான்கு மட்டுமல்ல, நான்கில் ஒரு மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, இன்னொரு புதிய பெண்ணை திருமணம் செய்துக்கொள்ளலாம். அதாவது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒருவருக்கு நான்கு மனைவிகள் இருக்கலாம், இது தான் கணக்கு.

• கடைசியாக, மரித்துவிட்டாலும் சரி, அங்கேயும் எப்போதும் கன்னித்தன்மையாக இருக்கும் அழகான பெண்கள் கிடைப்பார்கள்" என்றுச் சொல்லி இஸ்லாமியராக மாற்றிக்கொள்ளுங்கள்.

 

திருமணம் கூடாது என்று தேவன் நினைத்து இருந்தால், ஏன் ஆதாமுக்காக ஏவாளை படைக்கப்போகிறார்? மனிதன் தனிமையாக இருப்பது நல்லது இல்லை என்றுச் சொல்லி, மனிதனின் தனிமையை போக்க, ஏன் ஒரு ஆணை படைக்கவில்லை?

ஆக, யார் யாரேல்லாம் திருமணம் பற்றி தெளிவான வழிகாட்டுதல் பைபிள் கொடுக்கவில்லை என்றுச் சொல்கிறார்களோ, அப்படிப்பட்ட கிறிஸ்தவர்கள் தாராளமாக "திருமணம் பற்றி!" சரியான வழிகாட்டுதல் கொடுக்கும் இஸ்லாமுக்கு மாறிவிடலாம். (இக்கட்டுரையை படிக்கவும்: திருமண உறவிற்கு முன்பு உடலுறவா (விபச்சாரமா) செய்யுங்கள், செய்யுங்கள், செய்யுங்கள் என்றுச் சொல்கிறார் ஒரு மஹான்: Adultery: Do it! Do it! Do it!)

அருமை அப்திர் ரஹ்மான் அவர்களே, ஏதோ ஒரு வசனத்தை எடுத்துக்கொண்டு மற்ற வசனங்களோடு ஒப்பிட்டுப்பார்க்காமல், ஏதோ நாமும் எழுதினோம் என்றுச் சொல்லி எழுதுவது எப்படி சரியாகும்?

 

அபூ அப்திர்ரஹ்மான்

தலைகுனிந்து ஆசீர்வதித்து அமைதிப்புறாவாக மக்களிடம் காட்சியளித்த அன்றைய போப்பும் கிறிஸ்தவ புரோகிதர்களும் தான் சிலுவை யுத்தம் இறையாட்சியை பூமியில் உருவாக்கும் புனிதப் போர் என்று சிலுவை யுத்தங்களுக்கு அழைப்பு விடுத்து இலட்சகணக்கில் மனிதர்களைக் கொன்றொழித்த மாபாதச்செயலைச் செய்தன.

 

ஈஸா குர்‍ஆன்

சபாஷ், கொலைப் பற்றி, மக்களை கொல்வதைப் பற்றி ஒரு இஸ்லாமியர் வேதனை அடைவதைக் கண்டால், மிகவும் மனதிற்கு இதமாக உள்ளது. (ஆனால், அப்படி மரித்தவர்கள் இஸ்லாமியர்கள் என்பது வேறு விஷயம்)

இஸ்லாமியர்கள் இறையரசை பூமியில் நிறுவ எடுத்துக்கொண்டு வரும் நல்ல செயல்களை உலகம் பார்த்துக்கொண்டு, படித்துக்கொண்டு, அனுபவித்துக்கொன்டு, வேதனை அடைந்துக்கொண்டு, பல்லை கடித்துக்கொண்டு இருக்கிறது நண்பரே.

கடந்த 14 நூற்றாண்டுகளாக மக்களை கொன்றுக்கொண்டு இருப்பது, அந்த போப்பை தலைவராக கொண்டுள்ள கிறிஸ்தவர்களா? இல்லையே! முஹம்மதுவை தலைவராக கருதும் இஸ்லாமியர்கள் தானே!


இஸ்லாமிய நாடுகளில் மற்ற மார்க்கத்தவர்களை கொடுமைப்படுத்துவது யார்?

பள்ளிக்கூடங்களிலும், சாலைகளிலும், உணவுவிடுதிகளிலும், ஏன் விளையாட்டு வீரர்கள் மிதும் குண்டு மழை பொழிந்துக்கொண்டு இருப்பவர்கள் யார்? போப்பை தலைவராக கருதிக்கொண்டு இருப்பவர்களோ!

போதும் சகோதரரே போதும், அந்த சிலுவைப் போர்கள் இன்றும் தொடர்ந்து நடக்குமானால், நீங்களும் நாங்களும், ஏன் உலக மக்களும் ஒருவரை ஒருவர் கொன்றுக்கொண்டு மாண்டுப்போய் இருப்போம். அவர்கள் நிறுத்திவிட்டார்கள். ஆனால், சிலுவைப் போருக்கு முன்பே மக்களை கொல்லும் அமைதி மார்க்கமாக வந்தவர்கள் தொடர்ந்துக்கொண்டு இருக்கிறார்கள், இவர்கள் எப்போது நிறுத்துவார்கள்?

 

அபூ அப்திர்ரஹ்மான்

பைபிளின் மீது கைவைத்து சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்ட ஜார்ஜ் புஷ் என்ற கிறிஸ்தவர் தான், ஈராக்குக்கு எதிராக யுத்தம் செய்யுமாறு கடவுள் தன்னிடம் கூறியதாக அறிக்கை விட்டார். ஈராக்கில் நசுக்கப்பட்ட இலட்சகணக்கான பிஞ்சுக் குழுந்தைகளும் பலவீனமான பெண்களும் முதியவர்களும் புஷ்ஷின் பார்வையில் இறைவனுக்காக பலியிடப்பட்டவர்கள்!

 

ஈஸா குர்‍ஆன்

என்னடா இது, அமெரிக்காவை இழுக்காமல், ஜார்ஜ் புஷ்ஷை இழுக்காமல் ஒரு இஸ்லாமியர் வன்முறையைப் பற்றி எழுதிக்கொண்டு இருக்கிறாரே என்று நினைத்தேன். எழுத்திட்டாரே எழுதிட்டாரே!

புஷ்ஷைப் போலவே ஒரு நபி கடந்த காலத்தில் வந்தார், என்னன்னவோ சொன்னார், செய்தார், இதோ இன்று ஈராக் அனுபவிக்கும் வேதனையை, இன்று அந்த நபியால் உலகம் அனுபவித்துக் கொண்டு இருக்கிறது.

கடவுள் என்னிடம் கூறினார் என்று ஒரு அரசியல் வாதி சொன்னால் கூடவா நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என்பதை நினைக்கும் போது வேதனையாக உள்ளது. ஏனென்றால், அப்படி புஷ் சொன்னபோது, கடவுளே அதிர்ந்துபோய் இருப்பார், "அட, எனக்கே தெரியாமல் நான் எப்படி சொல்லியிருப்பேன்?" என்று கடவுள் தன்னையே கேள்வி கேட்டிருப்பார், பாவம் கடவுள்.

ஜார்ஜ் புஷ் தவறு செய்துவிட்டார், அவர் செய்த காரியத்திற்கு அவர் குர்‍ஆன் மீது தானே பிரமாணம் எடுத்துயிருக்கவேண்டும்?

 

அபூ அப்திர்ரஹ்மான்

பைபிள் உண்மையில் அகிம்சையையும் அன்பையும் தான் போதிக்கிறதா என்று ஆராய்ந்தால் அதிர்ச்சியும் ஆச்சர்யமும் நிறைந்த தகவல்கள் கிடைக்கின்றன. எதை கிறிஸ்தவர்கள் பயங்கரவாதம் என்று சொல்கிறார்களோ அதை விட பயங்கரமான செயல்களையெல்லாம் செய்யவேண்டியது இறைகட்டளையாகவே பைபிளில் உள்ளன என்று கூறினால் பலருக்கும் ஆச்சர்யம் ஏற்படுவது இயல்புதான். எனினும் அதுவே உண்மை.

பயங்கரவாதத்தின் ஆணிவேர்கள் தோண்டப்படும்!

 

ஈஸா குர்‍ஆன்

கடைசியாக நீங்கள் எழுதிய வரிகள் தான் எனக்கு மிகவும் பிடித்தமான வரிகள், அது என்னவென்றால்:

//"எதை கிறிஸ்தவர்கள் பயங்கரவாதம் என்று சொல்கிறார்களோ அதை விட"//

அப்படியானால், இஸ்லாம் ஒரு பயங்கரவாத மார்க்கம் என்பதை நீங்களே அங்கீகரிப்பதாக உள்ளது?

நீங்கள் சொல்லவந்த செய்தியை மூன்றாம் பாகம் வரைக்கும் தள்ளிப்போட்டு, இரண்டு பாகத்தை முன்னுரையாகவே நிரப்பியுள்ளீர்களே? ரொம்ப நல்லாயிருக்கு!

பயங்கரவாதத்தை பன்றியாக மாற்றி, அதற்கு மதுவை குடிக்கக்கொடுத்து, பிறகு சன்னியாசத்தை தொட்டு, திருமணம் வரை வந்து, உடனே சிலுவைப் போருக்குச் சென்று, பிறகு அமெரிக்காவிற்கு வந்து ஜார்ஜ் புஷ்வரை வந்துள்ளீர்கள்.

பயங்கரவாதத்தின் ஆணிவேரை நீங்க தோண்டனும், ஆனால், இஸ்லாமின் ஆணிவேர் கிளைகளாக பூமிக்கு மேலே தெரிந்துக்கொண்டிருக்கிறது....

உங்களை மூன்றாம் பாகத்தில் சந்திக்கும் வரை...




 

 

 

Saturday, April 4, 2009

இஸ்லாத்திற்கு மாறும் யூத மற்றும் கிறிஸ்தவர்கள்‌ : ...

 

இஸ்லாத்திற்கு மாறும் யூத மற்றும் கிறிஸ்தவர்கள்‌

 
இஸ்லாமியர்களை சிந்திக்கத்தூண்டும் சில கேள்விகள்

 

Jewish and Christian Converts to Islam



Some Questions for Muslims to Ponder

 
சாம் ஷமான்


 
இயேசுக் கிறிஸ்து மோசேயின் நியாயப்பிரமான சட்டத்தையும் தீர்க்கதரிசனங்களையும் அழிக்க அல்ல‌ நிறைவேற்றுவதற்கு வந்தேன் (மத்தேயு 5: 17-20) என்றுச் சொல்லியிருக்கும் போது, கிறிஸ்தவர்கள் ஏன் குறிப்பிட்ட சில பழைய ஏற்பாட்டு கட்டளைகளை பின்பற்றுவதில்லை? என்று அடிக்கடி கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன. உதாரணத்திற்குச் சொல்லவேண்டுமானால், பழைய ஏற்பாட்டு சட்டம், பன்றிகளின் கறியை சாப்பிடக்கூடாது என்றும், எல்லா ஆண் குழந்தைகளும் எட்டாம் நாளில் விருத்தசேதனம் செய்யப்படவேண்டும் என்றும் சொல்கிறது. ஆனால், இந்த கட்டளையை மற்ற மார்க்கத்திலிருந்து வரும் (யூதரல்லாத‌) விசுவாசிகள் கடைபிடிக்கவேண்டியதில்லை என்று பவுல் அப்போஸ்தலர் சொல்லியுள்ளார். இதனை ஆதாரமாக வைத்துக்கொண்டு இஸ்லாமியர்கள், "அப்போஸ்தலர் பவுல் ஒரு பொய் அப்போஸ்தலராவார்" என்றுச் சொல்கிறார்கள். இவரது போதனைகளை கிறிஸ்தவர்கள் நிராகரிக்கவேண்டும் ஏனென்றால், இவரின் இந்த போதனை பழைய ஏற்பாட்டு கட்டளைகளையும், இயேசுவின் வார்த்தைகளையும் மீறுவதாக உள்ளது என்று இஸ்லாமியர்கள் சொல்கிறார்கள்.
 
 
இப்படிப்பட்ட வாதம் புரிபவர்களில் ஒருவர் தான் ஷப்பீர் அலி என்பவராவார்:
 
பைபிளும் குர்‍ஆனும் பன்றியின் கறி சாப்பிடுவதை தடை செய்துள்ளன. இந்த தடையை இஸ்லாமியர்கள் அறிந்துவைத்துள்ளனர், மற்றும் அதனை தீவிரமாக கடைபிடுத்தும் வருகின்றனர். ஆனால், பைபிளை ப‌டிக்கும் அனேகர், இந்த‌ விவ‌ர‌ம் எங்கே உள்ள‌து என்று கூட‌ தெரிவ‌தில்லை என்றுச் சொல்கிறார்கள்...


இதில் கவனிக்கவேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், இயேசு (அவர் மீது சாந்தி உண்டாகட்டும்) இந்த பன்றியின் கறியை சாப்பிடக்கூடாது என்ற கட்டளையை கடைபிடித்துள்ளார். அவரது சீடர்களும் கடைபிடித்துள்ளார்கள், அது போல அவரை பின் பற்றும் அனைவரும் கடைபிடிக்கவேண்டும். யார் யாரெல்லாம் இதனை கடைபிடிக்கவில்லையோ அவர்களுக்கு இறைவனின் கட்டளை இப்படி உள்ளது என்று நியாபகப்படுத்தவேண்டும். கடைசி நபியாகிய ரசூல் அவர்களை இறைவன் அனுப்பியதின் அனேக காரணங்களில் இதுவும் ஒன்றாகும், அல்லாஹ் சொல்கிறான்:

வேதமுடையவர்களே! மெய்யாகவே உஙகளிடம் நம்முடைய தூதர் வந்திருக்கின்றார். வேதத்திலிருந்து நீங்கள் மறைத்துக் கொண்டிருப்பவற்றில் பல விஷயங்களை அவர் உங்களுக்கு விளக்கிக் காட்டுவார். இன்னும், (இப்பொழுது தேவையில்லாத) அநேகத்தை விட்டுவிடுவார். நிச்சயமாக அல்லாஹ்விடமிருந்து பேரொளியும், தெளிவுமுள்ள (திருக் குர்ஆன் என்னும்) வேதமும் உங்களிடம் வந்திருக்கின்றது. (5:15) (The Meaning of the Glorious Qur'an 5:15). (Eating Pork; source)
 
 
கிறிஸ்தவர்கள் விருத்தசேதனம் செய்யக்கூடாது என்றுச் சொல்லி, பவுல் ஆதியாகமம் 17:14லில் சொல்லப்பட்ட தேவனின் உடன்படிக்கையை மீறியிருக்கிறார் என்று இன்னொரு இஸ்லாமியர் எழுதுகிறார்:
 
விருத்தசேதனத்தை கடைபிடிப்பது என்பது இறைவனின் சட்டத்தை கடைபிடிப்பது என்பதை பவுல் உணராமல், இறைவனின் சட்டத்தை அவர் உடைத்து (மீறி) விட்டார். (Bassam Zawadi, Paul Broke the Covenant of God; source)

 

 

மேலே கண்ட விவரங்கள் அனைத்தும், குறைந்தபட்சம் இஸ்லாமுக்கு மாறும் யூதர்கள் கட்டாயமாக பழைய ஏற்பாட்டு சட்டத்தைக் கைக்கொள்ளவேண்டும் என்றுச் சொல்வதாக உள்ளது, அதாவது பழைய ஏற்பாட்டு கட்டளைகளாகிய‌ "ஓய்வு நாளை" ஆசரிப்பதும், உணவு சம்மந்தப்பட்ட சட்டங்களை பின்பற்றுவதையும் கூறலாம். இஸ்ரவேல் மக்கள் ஓய்வு நாளை பரிசுத்தமாக ஆசரிக்கவேண்டும் என்று பல இடங்களில் தேவன் கட்டளையிட்டுள்ளார்.

 

மேலும், கர்த்தர் மோசேயினிடத்தில்: நீ இஸ்ரவேல் புத்திரரை நோக்கி, நீங்கள் என் ஓய்வுநாட்களை ஆசரிக்கவேண்டும்; உங்களைப் பரிசுத்தப்படுத்துகிற கர்த்தர் நான் என்பதை நீங்கள் அறியும்படி, இது உங்கள் தலைமுறைதோறும் எனக்கும் உங்களுக்கும் அடையாளமாயிருக்கும். ஆகையால், ஓய்வுநாளை ஆசரிப்பீர்களாக; அது உங்களுக்குப் பரிசுத்தமானது; அதைப் பரிசுத்தக் குலைச்சலாக்குகிறவன் கொலையுண்கக்கடவன்; அதிலே வேலைசெய்கிற எந்த ஆத்துமாவும் தன் ஜனத்தின் நடுவில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான். ஆறுநாளும் வேலைசெய்யலாம்; ஏழாம் நாளோ வேலை ஒழிந்திருக்கும் ஓய்வுநாள்; அது கர்த்தருக்குப் பரிசுத்தமானது; ஓய்வுநாளில் வேலைசெய்கிறவன் எவனும் கொலைசெய்யப்படவேண்டும். ஆகையால், இஸ்ரவேல் புத்திரர் தங்கள் தலைமுறைதோறும் ஓய்வுநாளை நித்திய உடன்படிக்கையாக ஆசரிக்கும்படி, அதைக் கைக்கொள்ளக்கடவர்கள். அது என்றைக்கும் எனக்கும் இஸ்ரவேல் புத்திரருக்கும் அடையாளமாயிருக்கும்; ஆறுநாளைக்குள்ளே கர்த்தர் வானத்தையும் பூமியையும் உண்டாக்கி, ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்து பூரித்தார் என்றார். (யாத்திராகமம் 31:12-17; இதனையும் படிக்கவும்: யாத்திராகமம் 20:8-11)

 

யூதர்கள் ஓய்வு நாளை கடைபிடிக்க கடமைப்பட்டவர்கள் என்று குர்‍ஆன் ஒப்புக்கொள்கிறது, அதே நேரத்தில் அப்படி கடைபிடிக்காத யூதர்கள் தண்டிக்கப்பட்டார்கள் என்றும் குர்‍ஆன் சொல்கிறது.

 

வேதம் வழங்கப்பட்டவர்களே! நாம் உங்கள் முகங்களை மாற்றி, அவற்றைப் பின்புறமாகத் திருப்பிவிடுவதற்கு முன்னே அல்லது (சனிக்கிழமையில் வரம்பு மீறிய) "அஸ்ஹாபுஸ் ஸப்து" என்றோரை நாம் சபித்த பிரகாரம் சபிக்கும் முன்னே, உங்களிடமுள்ள (வேதத்)தை உண்மையாக்கி அருளப் பெற்ற இ(வ்வேதத்)தை (குர்ஆனை) நம்புங்கள்;. அல்லாஹ்வின் கட்டளை, நிறைவேற்றப்பட்டே தீரும். (4:47)

(நபியே!) கடற்கரையிலிருந்த (ஓர்) ஊர் மக்களைப்பற்றி நீர் அவர்களைக் கேளும் - அவர்கள் (தடுக்கப்பட்ட ஸப்து) சனிக்கிழமையன்று வரம்பை மீறி (மீன் வேட்டையாடி)க் கொண்டிருந்தார்கள்; ஏனென்றால் அவர்களுடைய சனிக்கிழமையன்று (கடல்) மீன்கள், அவர்களுக்கு(த் தண்ணீருக்கு மேலே தலைகளை வெளியாக்கி)க் கொண்டு வந்தன - ஆனால் சனிக்கிழமையல்லாத நாட்களில் அவர்களிடம் (அவ்வாறு வெளியாக்கி) வருவதில்லை - அவர்கள் செய்து கொண்டிருந்த பாவத்தின் காரணமாக அவர்களை நாம் இவ்வாறு சோதனைக் குள்ளாக்கினோம். (அவ்வூரிலிருந்த நல்லடியார் சிலர் அறிவுரை சொன்ன போது) அவர்களில் சிலர், "அல்லாஹ் எவர்களை அழிக்கவோ, அல்லது கடினமான வேதனைக்குள்ளாக்கவோ நாடியிருக்கிறானோ, அந்த கூட்டத்தார்களுக்கு நீங்கள் ஏன் உபதேசம் செய்கிறீர்கள்?" என்று கேட்டார்கள்; அதற்கு (அந்த நல்லடியார்கள்); "எங்கள் இறைவனிடம் (நம்) பொறுப்பிலிருந்து நீங்கி விடுவதற்காகவும் இன்னும் அவர்கள் (ஒருவேளை தாங்கள் செய்து வருவதிலிருந்து) விலகிவிடலாம் என்பதற்காகவும் (நாங்கள் உபதேசம் செய்கிறோம்) என்று கூறினார்கள்." அவர்கள் எது குறித்து உபதேசிக்கப் பட்டார்களோ, அதனை அவர்கள் மறந்து விட்டபோது, அவர்களைத் தீமையைவிட்டு விலக்கிக் கொண்டிருந்தவர்களை நாம் காப்பாற்றினோம்; வரம்பு மீறி அக்கிரமம் செய்து கொண்டிருந்தவர்களுக்கு, அவர்கள் செய்து வந்த பாவத்தின் காரணமாக கடுமையான வேதனையைக் கொடுத்தோம். தடுக்கப்பட்டிருந்த வரம்பை அவர்கள் மீறிவிடவே, "நீங்கள் இழிவடைந்த குரங்குகளாகி விடுங்கள்" என்று அவர்களுக்கு நாம் கூறினோம். (கு‍ர்‍ஆன் 7:163-166, இவ்வசனத்தையும் படிக்கவும் 2:65)


மேலும், அவர்களிடம் வாக்குறுதி வாங்கும் பொருட்டு, அவர்கள் மேல் தூர் (ஸினாய் மலையை) உயர்த்தினோம்;. இன்னும் 'இந்த வாசலில் தலை குனிந்து (தாழ்மையாக) நுழையுங்கள்' என்று சொன்னோம்;. மேலும் "(மீன் வேட்டையாடி) சனிக்கிழமையில் வரம்பு மீறாதீர்கள்" என்றும் அவர்களுக்கு கூறினோம்;. இன்னும் அவர்களிடமிருந்து மிக உறுதியான வாக்குறுதியும் வாங்கினோம். (கு‍ர்‍ஆன் 4:154; இவ்வசனத்தையும் படிக்கவும் 16:124)

 

ஆனால், யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் அவமதிப்பதற்காக முஹம்மது வேண்டுமென்றே வெள்ளிக்கிழமையை இஸ்லாமியர்கள் ஒன்று கூடும் நாளாக மாற்றினார். இது மேலே கண்ட வசனத்திற்கு முரண்பட்டதாக தென்படுகிறது.

 

பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3486

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்

உலகில் இறுதிச் சமுதாயமான நாம் தாம் மறுமையில் (தகுதியிலும், சிறப்பிலும்) முந்தியவர்கள் ஆவோம். ஆயினும், சமுதாயங்கள் அனைத்தும் நமக்கு முன்பே வேதம் வழங்கப்பட்டுவிட்டன. நாம் அவர்களுக்குப் பிறகு வேதம் வழங்கப்பட்டோம். இது (வெள்ளிக்கிழமை, அவர்கள்) கருத்து வேறுபட்ட நாளாகும். எனவே, நாளை (சனிக்கிழமை) யூதர்களுக்குரியதும் நாளைக்கும் அடுத்த நாள் (ஞாயிற்றுக்கிழமை) கிறிஸ்தவர்களுக்குரியதும் ஆகும்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

 

இதுமட்டுமல்ல, முஹம்மது திருமணம் செய்துக்கொண்ட போரில் பிடிப்பட்ட ஒரு யூதப்பெண், முஹம்மதுவின் மரணத்திற்கு பிறகு, சனிக்கிழமை ஓய்வு நாளை கடைபிடித்ததாக குற்றம் சாட்டப்பட்டார், அதற்கு அப்பெண் "இல்லை நான் சனிக்கிழமை ஓய்வு நாளை ஆசரிக்கவில்லை" என்று மறுத்துவிட்டார்.

 

இறைத்தூதரின் (ஸல் அல்லாஹு அலைஹிம் வஸல்லம்) மரணத்திற்கு பிறகு அந்த ஸ்திரி அனேக கஷ்டங்களை அனுபவித்தார்கள். அந்த பெண்ணுக்கு சொந்தமான ஒரு அடிமை சிறுமி அமிர் அல் மூமினீன் உமர் அவர்களிடம் சென்று, "அமிர் அல் மூமினீன் அவர்களே! ஷபியா அவர்கள் ஓய்வு நாளை விரும்புகிறார் மற்றும் யூதர்களுடன் நல்லுறவை வைத்துள்ளார்" என்றுச் சொன்னாள். உமர் அவர்கள் ஷபியா அவர்களிடம் வினவியபோது, "நான் ஓய்வு நாளை விரும்பவில்லை, ஏனென்றால் அல்லாஹ் அதற்கு பதிலாக நமக்கு வெள்ளிக்கிழமையை கொடுத்துள்ளார். என் சொந்த பந்தங்களாக‌ இருக்கும் யூதர்களிடம் மட்டுமே நான் நல்லுறவை பேணுகிறேன்" என்று பதில் கூறினார் ஷபியா. பிறகு தன் அடிமை பணிப்பெண்ணிடம், என்னைப் பற்றி இப்படிப்பட்ட பொய்யை உமரிடம் சொல்வதற்கு உன்னை தூண்டியது யார் என்று கேட்டபோது, அந்த பணிப்பெண் "ஷைத்தான்" என்றுச் சொன்னாள். அதற்கு ஷபியா "இப்போது நீ விடுதலை ஆக்கப்பட்டாய், போகலாம்" என்றுச் சொன்னார்கள். (Safiyya bint Huyay [based on a book by Ahmad Thompson]; source; see also here)

 
ப‌ழைய‌ ஏற்பாட்டின் சில‌ க‌ட்ட‌ளைக‌ளை ப‌வுலும் ம‌ற்றும் இத‌ர‌ புதிய‌ ஏற்பாட்டு எழுத்தாள‌ர்க‌ளும் ஒதுக்கிவிட்ட‌து ச‌ரி இல்லை என்று பல இஸ்லாமிய அறிஞர்கள் குற்றம் சாட்டுகிறார்க‌ள். அவ‌ர்க‌ளின் கூற்றுப்ப‌டி இறைத்தூத‌ர்க‌ள், அல்ல‌து ந‌பியாக‌ இருப்ப‌வ‌ர்க‌ள் இப்ப‌டிப்ப‌ட்ட‌ காரிய‌ங்க‌ளை ஒரு போதும் செய்ய‌மாட்ட‌ர்க‌ள் என்று அடித்துச் சொல்கிறார்கள். இவைகளை ஒருவர் கவனித்தால், யூதர்களின் ஓய்வு நாளை அவர்கள் கடைபிடிக்கவேண்டுமென்று அவர்களை முஹம்மதுவும், குர்‍ஆனும் கட்டாயப்படுத்தியிருக்க வேண்டும் என்று சொல்லத்தோன்றும்.

பழைய ஏற்பாட்டின் உணவு சம்மந்தப்பட்ட சட்டங்களைப் பற்றி என்ன சொல்லலாம்? பழைய ஏற்பாடு, வெறும் பன்றியின் மாமிசத்தையும் மட்டுமல்ல, அதோடு கூட "ஒட்டகத்தின் மாமிசத்தையும்" இன்னும் பல வகையான கடல் வாழ் உயிரிணங்களையும் உண்ணவேண்டாம் என்றுச் சொல்கிறது. ஆனால், இதற்கு நேர் எதிராக, இவைகளை உண்ண குர்‍ஆன் அனுமதி அளித்துவிட்டது. (படிக்கவும், லேவி 11ம் அதிகாரம்; உபாகமம் 14ம் அதிகாரம்; குர்‍‍ஆன் சூரா 5:96; சூரா 6:142-146; சூரா 16:14; சூரா 22:36)

கதை முடியவில்லை, இன்னும் இருக்கின்றது. விவாகரத்து செய்யப்பட்ட தன் முந்தையை மனைவியை ஒருவன் மறுபடியும் திருமணம் செய்துக் கொள்ளவேண்டுமென்றால், அந்தப் பெண் இன்னொரு ஆணை திருமணம் செய்துவிட்டு, அந்த புதிய கணவன் மறுபடியும் அவளை விவாகரத்து செய்துவிட்டால் தான் முதல் கணவன் அவளை திருமணம் செய்துக்கொள்ளவேண்டும் என்று குர்‍ஆன் சொல்கிறது. இந்த செயலைத் தான் யேகோவா தேவன் "அருவருப்பானது" என்கிறார் மற்றும் இப்படி செய்யக்கூடாது என்று கட்டளையிட்டுள்ளார். (படிக்க உபாகமம் 24:1-4; குர்‍ஆன் சூரா 2:230)

மேற்கண்ட விவரங்களை மனதில் நிறுத்திக் கொண்டவர்களாக, பழைய ஏற்பாட்டின் ஒரு சில கட்டளைகளை பின்பற்றவில்லை என்று புதிய ஏற்பாட்டின் மீது குற்றம் சுமத்தும் இஸ்லாமியர்களிடம் கீழ் கண்ட கேள்விகளை கேட்கவிரும்புகிறோம்:
 
  • இஸ்லாமியர்களின் கருத்துப்படி, யூதர்களும், கிறிஸ்தவர்களும் பழைய ஏற்பாட்டின் கட்டளைகளை கீழ்படியவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறார்கள். இப்படி இருக்கும் போது, ஒரு யூதனோ அல்லது கிறிஸ்தவனோ இஸ்லாமுக்கு மாறும் போது, மோசேயின் கட்டளைகளை முழுவதுமாக எப்படி பின்பற்றமுடியும்? ஏனென்றால், குர்‍ஆன் அதே மோசேயின் பல கட்டளைகளை மீறச் சொல்கிறதே? இது எப்படி சாத்தியமாகும்?
  • இஸ்லாமுக்கு மாறும் யூதர்களோ (அ) கிறிஸ்தவர்களோ இன்னும் பழைய ஏற்பாட்டின் கட்டளைகளை கடைபிடிப்பதற்காக‌, முஹம்மதுவின் சில கட்டளைகளை மீறினாலோ அல்லது பின் பற்றாமல் விட்டுவிட்டாலோ ஒன்றும் பிரச்சனையில்லையா? முஹம்மதுவின் ஒருசில கட்டளைகளை பின்பற்றாமல் இருக்கலாமா?
  • அல்லது, முஹம்மதுவின் கட்டளைகளை பின்பற்றுவதற்காக, இஸ்லாமுக்கு மாறிய யூதர்கள்/கிறிஸ்தவர்கள் பழைய ஏற்பாட்டின் கட்டளைகளை பின்பற்றாமல் இருந்தாலும் பரவாயில்லையா? வேதம் அருளப்பெற்றவர்கள், முக்கியமாக கிறிஸ்தவர்கள் இன்னும் பழைய ஏற்பாட்டு கட்டளைகளை விடாமல் கடைபிடிக்கவேண்டும் என்று முஸ்லீம்கள் சொல்வது எப்படி சரியானதாக இருக்கும்?
  • உண்மையில், எபிரேய பைபிளில் உள்ள தேவனின் கட்டளைகளை ஒருவன் பின்பற்றிக்கொண்டு, அதே நேரத்தில் அவன் இஸ்லாமியனாக மாறினால், அவனை "முஸ்லீம்" என்று இஸ்லாமியர்கள் ஏற்றுக்கொள்வார்களா?
  • க‌டைசியாக‌, சில‌ குறிப்பிட்ட‌ ப‌ழைய‌ ஏற்பாட்டு க‌ட்ட‌ளைக‌ளை ப‌க்க‌த்தில் வைத்துவிட்டார் என்றுச் சொல்லி, ப‌வுல் மீது குற்றம் சும‌த்தும் அதே இஸ்லாமிய‌ர்க‌ள் இப்போது என்ன‌ செய்ய‌வேண்டுமென்றால், அதே குற்றம் புரிந்த‌ முஹ‌ம்ம‌து மீது குற்ற‌ம் சும‌த்த‌ வேண்டும்? அப்படி இஸ்லாமிய‌ர்க‌ள் செய்வார்க‌ளா?
 
இந்த தலைப்பு பற்றிய இதர கட்டுரைகள்:

 

1) Muhammad and the Mosaic Law

2) Who Broke the Covenant: Paul or Muhammad?

3) An Examination of Shabir Ally's Fascination with Pigs (Being a Christian Response to his "Eating Pork" Article)

4) Do Muslims Truly Obey God's Everlasting Command, Or is Meherally Simply Trying to Pull A Fast One? - Circumcision

5) What is the day of congregation?

6) Sam Shamoun's answer to Bassam Zawadi's response


 

Source: Jewish and Christian Converts to Islam - Some Questions for Muslims to Ponder

 

 

 


இஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்

முன் பக்கம் செல்ல

HOME PAGE

தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்

1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1

2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2

3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3

4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4

பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்

1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1

2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2

பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்

1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்

2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்