இஸ்லாம் அமைதி மார்கமா? இஸ்லாம் இனிய மார்கமா? இஸ்லாம் உண்மையான மார்கமா?

ஆன்சரிங் இஸ்லாம்

பல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்

சத்தியவான் தளம் செல்ல

Tuesday, February 26, 2008

ஏகத்துவம் என்ற இஸ்லாமிய இணையத்துக்கு ஈசாகுரான் உமர் பதில்

உமருக்கு ஏகத்துவம் பதில்: இயேசு தாயை அவமதித்தார்

முன்னுரை: கேரள இஸ்லாமிய அறிஞர் எம். எம். அக்பர் அவர்கள், சுருக்கமாக "இயேசு தன் தாயை அவமதித்தவராக" இருக்கிறார் என்று பைபிள் சொல்கின்றது என்று சாட்டும் குற்றத்திற்கு, நாம் "இயேசு தன் தாயை அவமதித்தாரா?" என்ற கட்டுரையை பதிலாக கொடுத்தோம். இந்த கட்டுரைக்கு, ஏகத்துவம் என்ற தளம் கொடுத்துள்ள பதில், அதற்கு உமரின் மறுமொழியை இங்கு காணலாம்:


------------------------------

Quote:
தாயை (மரியாளை) இயேசு அவமதித்தாரா?
பைபளின்படி - தனது தாய் மரியாளை மட்டுமல்ல மற்றவர்களின் பெற்றோர்களையும் அவமதித்த இயேசு :

(கிறிஸ்தவம் பற்றிய உன்மை நிலையை மக்களுக்கு விளக்க வேண்டும் என்பதற்காகவும், வேண்டும் என்றே உள்நோக்கத்துடன் இஸ்லாத்தைப் பற்றியும் நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் பற்றியும்; தரக்குறைவாக விமர்சனம் செய்யும் சில வக்கிர புத்தி கொண்ட கிறிஸ்தவர்களின் பொய்ப் பிரச்சாரதின் உன்மைநிலையை பொதுமக்களுக்கு விளக்கியாக வேண்டும் என்ற கட்டாயத்தாலும், நாம் பைபிள் பற்றியும், இயேசுவின் உன்மைநிலைப் பற்றியும், இன்னும் சொல்லப்போனால் உன்மையிலேயே இயேசுவைப் பின்பற்ற வேண்டும் என்று நினைப்பவர்கள் - இஸ்லாத்தையே தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்கான காரணகாரியங்களையும் மிக ஆறிவுப்பூர்வமாகவும், ஆதாரப்பூர்வமாகவும், வரலாற்றுத் தகவல்களுடனும் விளக்க இருக்கின்றோம் இன்ஷா அல்லாஹ்.



அன்பு இஸ்லாமிய நண்பர்களே,

எங்களுக்கு வக்கிர புத்தி இல்லை. உங்கள் முகமதுவை நாங்கள் ஒன்றும் தரக்குறைவாக எங்கள் சொந்த புத்தத்திலிருந்து எடுத்து எழுதுவதில்லை, உங்கள் குர்‍ஆனும், உங்கள் ஹதீஸ்களும், உங்கள் இஸ்லாமிய சரித்திர ஆசிரியர்களும் எழுதிய புத்தகத்திலிருந்து தான் நாங்கள் மேற்கோள் காட்டுகின்றோம்.

முகமது எத்தனை போர்கள் புரிந்தார் என்று கிறிஸ்தவ புத்தகங்களா சொல்கின்றன, உங்கள் ஹதீஸ்கள் தானே, உங்கள் குர்‍ஆன் தானே.

1. முகமது தன் வளர்ப்பு மகனின் மனைவியை திருமணம் செய்துக்கொண்டார் என்று கிறிஸ்தவ புத்தகங்களா சொல்கின்றன? இல்லையே அல்லா தானே குர்‍ஆனில் சொல்கின்றார்.

2. முகமது எப்படி தன்னை எதிர்த்தவர்களை கொன்றார் என்று கிறிஸ்த புத்தகங்களா சொல்கின்றன? இஸ்லாமிய சரித்திர ஆசிரியர்களும், சீராக்களும், ஹதீஸ்களும் தானே சொல்கின்றன.

3. முகமது செய்த எல்லா குற்றங்களுக்கு புது அர்த்தத்தை கொடுத்து, மக்களை குழப்புகிறவர்கள் யார்? நாங்களா? இல்லையே நீங்கள் தானே, அவர் செய்தது எல்லாம் சரி என்றுச் சொல்கின்றீர்கள்.

உங்கள் புத்தகங்களில்(குர்‍ஆன், ஹதீஸ்கள், சீராக்கள்) உள்ள விவரங்களுக்கு உண்மை விளக்கத்தை நாங்கள் கொடுக்கிறோம், அவ்வளவு தான். நாங்கள் சொல்வது சரியான விளக்கம் இல்லை என்று நீங்கள் கருதினால்:

1)எந்த குர்‍ஆன் வசனத்திற்கு நாங்கள் தவறான பொருள் கூறுகிறோம் என்று அதை "சுட்டிக்காட்டி", அதற்கு நாங்கள் என்ன பதில் சொன்னோம் என்று அதன் கீழே எழுதி, விளக்குங்கள். உங்கள் பதிலை படிப்பவர்கள் புரிந்துக்கொள்வார்கள், யார் சொல்வது உண்மை என்று?

2)ஒரு கர்ப்பிணிப் பெண்ணை அவள் கணவன் "முகமதுவை அப்பெண் ஓயாமல் திட்டிக்கொண்டு இருக்கிறாள்" என்பதற்காக் கொலை செய்து வந்து முகமது கேட்கும் போது, அவர் எதிரே நின்றால், எல்லாருக்கும் சாட்சியாக, "இந்த கொலைக்கு பலி எடுக்கப்படாது" என்றுச் சொல்லி, அந்த மனிதனுக்கு முகமது தண்டனை அளிக்கவில்லை என்று ஹதீஸ் சொல்வதாக நீங்களே ஒப்புக்கொள்கிறீர்கள் அல்லவா?

அப்படியானால், இந்த நிகழ்ச்சி மூலமாக மக்களுக்கு

"முகமது ஒரு அமைதிப்புறா",

"இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம்",

"இஸ்லாம் என்றால் அமைதி என்றுப் பொருள்"


என்று விளக்கப்போகிறீர்கள்?

இந்த எல்லா விவரங்களும் எங்கள் புத்தகங்களில் இல்லை, உங்கள் புத்தகங்களில் தான் இன்றும் உள்ளது, இனியும் உலகம் இருக்கும் வரை இருக்கும்.



Quote:
அதை தொடராக வரிசைபடுத்தி எழுத இருந்த நேரத்தில் சகோதரார் உன்மையடியான் என்பவர் 'இஸ்லாம் கல்விக்கு பதில் : இயேசு தாயை (மரியாளை) அவமதித்தாரா?' என்ற தலைப்பில் இஸ்லாம் கல்வியில் வெளிவந்த சகோதரர் எம்;. எம். அக்பர் அவர்கள் எழுதிய கட்டுரையான 'திருக்குர்ஆன் மற்றும் பைபிளில் காணப்படும் வரலாற்றுத் தகவல்கள் ஓர் ஒப்பீடு (பகுதி - 2)' க்கு மறுப்பு எழுதியிருந்தார். இதற்கு மறுப்பளிக்கும் விதமாகவும், 'பைபளின் படி இயேசு தனது தாயை (மரியாளை) மட்டுமல்ல - அடுத்தவர்களின் பெற்றோர்களையும் மதிக்காதவர்'
என்பதை விளக்கும் முகமாகவும் இந்தக்கட்டுரையை வெளியிடுகிறோம். )



ஈஸா குர்‍ஆன் எழுதிய கட்டுரையை எப்படி "உண்மையடியான்" எழுதினார் என்று சொல்கிறீர்கள். கட்டுரைக்கு கீழே "http://www.geocities.com/isa_koran/tamilpages/Rebuttals/islamkalvi/Jesusandmary1.htm" என்று எழுதி என் தளத்தின் தொடுப்பு கொடுத்திருக்கிறாரே அது தெரியவில்லையா உங்களுக்கு? நான் எழுதிய கட்டுரைக்கு, பதிலுக்கு என்னிடம் பதில் கேட்டால் கொடுக்கிறேன், அதை விடுத்து, ஏன் வீணாக அவர் பெயரை இழுக்கிறீர்கள்.


Quote:
இறைவனுடைய வழிகாட்டுதல்களை மக்களுக்கு எடுத்துச்சொல்லி அவர்களை நல்வழிப்படுத்துவதற்காக அனுப்பப்பட்ட தீர்க்கதரிசிகள் பலரை ஏற்றுக்கொள்ளாதது மட்டுமல்லாமல்லாமல், அவர்களை துன்புறுத்தியும், அவர்களில் பலரை கொலை செய்ததும், அதுமட்டுமல்லாமல் தாங்கள் செய்த அந்த அநியாய - அநாகரீகச் செயல்களை பிற்கால மக்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதற்காக அந்த தீர்க்கதரிசிகள் மீதே கலங்கம் கற்பிக்கும் வகையில் அனைத்து தீர்க்கதரிசிகளையும் ஏதாவது ஒரு வகையில் அசிங்கமாகவும் ஆபாசமாகவும் இன்னும் சொல்லப்போனால் ஒரு சாமானியன் கூட செய்யத்துணியாத செயல்களை எல்லாம் அந்த தீர்க்கதரிசிகள் செய்தார்கள் என்று வரலாற்றைத் திரித்து எழுதியவர்கள் தான் யூதர்கள்.


நீங்கள் யாருக்காக இப்படி மற்ற நபிகளுக்காக பரிந்து பேசுகிறீர்கள் என்று எல்லாருக்கும் தெரியும். உங்கள் முகமதுவை காப்பாற்ற இப்படிப்பட்ட பரிந்து பேசுதலை செய்கின்றீர்கள். அல்லாவே முகமதுவிற்காக பரிந்து பேசும் போது, நீங்கள் பேசுவதில் என்ன தவறு இருக்கிறது. முகமது என்ன ஆசைப்பட்டாலும் உடனே அதை தீர்த்து வைப்பதில் அல்லா மிகவும் சந்தோஷப்பட்டாரே.

வளர்ப்பு மகனின் மனைவியை திருமணம் செய்துக்கொள், அதற்கு அனுமதி நான் தருகிறேன், வயது ஒரு கணக்கா, கவலைப்படவேண்டாம், சிறுமிக்கு 6 வயது இருக்கும் போது திருமணம் செய்துக்கொள், 9 வயது ஆனபிறகு (ருதுவு எய்திய பிறகு) உன்னுடன் சேர்த்துக்கொள். எல்லாரும் 4 திருமணம் தான் செய்யவேண்டும், உனக்கு மட்டும் கணக்கில்லை, தன்னை உனக்கு யார் யார் தரவிரும்புவார்களோ அவர்கள் அனைவரையும் நீ திருமணம் செய்துக்கொள்ளலாம். இப்படி அல்லவா அல்லா முகமதுவின் ஆசையை தீர்த்துவைத்தார்.



Quote:
அந்த யூதர்களால் சிதைக்கப்பட்டு தங்களுக்கு சாதகமாக கூட்டியும், குறைத்தும், திரித்தும் எழுதப்பட்ட புத்தகங்களின் தொகுப்புகளைத்தான் 'பைபிள்' என்றப் பெயரில், இறைவனிடம் இருந்து வந்த புனித வேதமாக இன்றும் போற்றிவருகின்றனர் யூதர்களும், கறிஸ்தவர்களும்.

இந்த வரலாற்றுத் திரிபுகளின் தொடர்ச்சி தான் புதிய ஏற்பாட்டில் வரும் இயேசுவின் வரலாறும் அதன் பின் நடந்ததாக சொல்லப்படும் சம்பவங்களும்.



ஆமாம், யூதர்கள் திருத்தும் போது, ஒன்றுக்கும் கையாளாகதவராக அந்த வேதத்தை கொடுத்தவர் சும்மா பார்த்துக்கொண்டு இருந்தார்.

அவருக்கு மக்கள் திருத்தும் போது, அதை தடுக்க சக்தி இல்லாமல் போய்விட்டது.

என்ன செய்வது. உலகத்திலே, எந்த சக்தியும் வலிமையும் இல்லாத சாதாரண மனிதனே, அவன் வீட்டை ஒருவன் வீணாக இடித்துக்கொண்டு இருந்தால், சில கேள்விகளாவது கேட்பான், கதறுவான், தன்னால் முடிந்தால் அதை தடுக்க முயற்சி எடுப்பான், ஆனால், அந்த வேதத்தை கொடுத்த சர்வ வல்லவர் வலிமை மிக்கவர் அல்லா இருக்காரே, ஒன்றுமே செய்யாமல், அப்படியே வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தார், அதனால், தான் யூதர்கள் அதை மாற்றினார்கள்.

உன் வேதம் என்றால், அதை பாதுகாப்பது உன் பொறுப்பா இல்லையா?
ஒரு வேளை , மாற்றினால் மாற்றட்டும் என்று சும்மா இருந்து விட்டாரா அல்லா?

எதை ஏற்றுக்கொள்கிறீர்கள் சகோதரர்களே, நான் தான் அந்த வேதத்தை இறக்கினேன் என்று 1000 முறை சொல்லி மார்தட்டுவது அல்ல அழகு, அதை பாதுகாக்கவேண்டும், அப்படி பாதுகாக்கவில்லையானால், யாருடைய தப்பு, அதை கொடுத்தவனுடையது தானே!


Quote:
இயேசுவைக் கொலைசெய்ய முயற்சித்ததற்கான காரணங்களை பிற்கால மக்கள், யூதர்களை குற்றம் பிடித்து விடக்கூடாது என்பதற்காக அவரைப்பற்றி தரக்குரைவாகவும், இன்னும் சொல்லப்போனால் அவர் தன்னை கடவுளின் குமாரனாக காட்ட முயற்சித்தார் என்றும் அவர் யூதர்களை கடுமையாக திட்டித்தீர்த்தார் என்றும் இன்னும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறி வரலாற்றைத்திரித்ததோடு, அந்த இயேசுவை உயர்வாக மதிக்கக்கூடிய மக்களை, 'இது தான் உன்மையான இயேசுவின வரலாறு' என்று அவர்களை நம்பவைத்து அதையே பின்பற்றவும் வைத்த சூழ்சிக்காரர்கள் தான் இந்த யூதர்கள். (இது சம்பந்தமாக விரைவில் பல ஆதாராங்களுடன் கூடிய ஆக்கங்கள் நமது தளத்தில் இடம் பெறும் இன்ஷா அல்லாஹ்)




பாவம் நீங்கள், உங்களுக்கு பைபிள் பற்றி ஒன்றுமே தெரியவில்லை. யூதர்கள் "புதிய ஏற்பாட்டை" எழுதினார்கள் அப்படித்தானே? என்ன அருமையாக எழுதுகிறீர்கள்.

இயேசு தேவன் என்று "யூதர்கள் எழுதுவார்களா?"
இயேசு தனக்கு தேவன் சமம் என்று சொன்னார் என்று யூதர்கள் எழுதுவார்களா?
இயேசு மரித்தவர்களை எழுப்பினார் என்று யூதர்கள் எழுதுவார்களா?
இயேசு அற்புதங்கள் செய்தார் என்று யூதர்கள் எழுதுவார்களா?
இயேசு மூன்றாம் நாள் உயிரோடு எழுந்தார் என்று யூத‌ர்க‌ள் எழுதுவார்க‌ளா?
இயேசு மறுபடியும் வந்து உலகத்தை நியாயம் தீர்ப்பார் என்று யூதர்கள் எழுதுவார்களா?

என்ன‌ ந‌ண்ப‌ர்க‌ளே! இப்ப‌டி இருக்கிறீர்க‌ள்.

நீங்கள் சொல்வது எப்படி உள்ளது என்றால், "பின் லாடன் தன்னை பிடிக்க தானே அமெரிக்க உளவுத்துறையில் சேர்ந்து திட்டம் தீட்டி, அதை மிகவும் வெற்றிகரமாக முடித்து கொடுத்தார்" என்று சொல்வது போல் உள்ளது
.


Quote:
இவர்களின் இந்த அபாண்டமான குற்றச்சாட்டுகளை மறுத்தும் - இவர்கள் தங்கள் வேதங்களில் செய்த தில்லுமுள்ளுகளையும், வரலாற்றுத் திரிபுகளையும் மக்களுக்கு வெளிக்காட்டி, சத்தியத்தை எடுத்துச்சொல்ல வந்தது தான் திருக்குர்ஆன் என்னும் இறுதி இறைவேதம்.



இவர்கள் தில்லுமுல்லு செய்யும் போது, அதை கொடுத்த இறைவன் எங்கு சென்று இருந்தான்?

இவர்கள் வரலாற்று திரிபுகள் செய்யும் போது, அதை கொடுத்த இறைவன் என்ன செய்துக்கொண்டு இருந்தான்?
இது வரையில், இயேசுவின் வரலாறு என்று தொடர் கட்டுரைகள் எழுதி, அதற்கு நான் பதில் கொடுத்தால், இதுவரை ஒரு இஸ்லாமிய தளங்களிலும் அதற்கு பதில் இல்லை. வரலாறு பற்றி உங்களுக்கு பேச என்ன இருக்கிறது சொல்லுங்கள்.

1.இயேசுவிற்கு நேர்ந்தது என்ன? என்ற கட்டுரை எழுதியவருக்கு என்ன நேர்ந்தது? என்று கேள்விகள் கேட்கும் அளவிற்கு, அவர் "இயேசு பக்கம் தலை காட்டுவதே இல்லை".

2.கி.பி. 7ம் நூற்றாண்டில், முகமது உறுவாக்கிய ஜகாத் என்பதை, முதல் நூற்றாண்டில் இயேசு தருவதாக சொன்னார் என்று சொல்லும் குர்‍ஆன், வரலாற்று தவறில்லையா?

3.மரியாளை யாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று "வில் எரிந்து" பார்த்தார்கள் என்று குர்‍ஆன் சொல்கின்றதே, இது வரலாற்று தவறில்லையா? யூதர்கள் வில் எரிந்து முடிவு செய்யமாட்டார்கள் என்பதையும் அல்லாவிற்கு தெரியாமல் போய் இருக்கிறது
.


Quote:
இதையே அல்லாஹ் தன் திருமறையில் :

உலகத்தார் யாவரையும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக (சத்தியத்தையும், அசத்தியத்தையும் தெளிவாகப்) பிரித்தறிவிக்கும் இவ்வேதத்தைத் தன் அடியார் மீது இறக்கியவன் மிக்க பாக்கியமுடையவன். (அல்குர்ஆன் 25 : 1)

இது மனிதர்களுக்கு (சத்தியத்தின்) தெளிவான விளக்கமாகவும், பயபக்தியுடையோருக்கு நேர் வழிகாட்டியாகவும், நற்போதனையாகவும் இருக்கின்றது. (அல்குர்ஆன் - 3:138)


இஸ்லாமிய‌ உலகம் நேர்வழியில் சென்றுக்கொண்டு இருக்கிறதை பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம்.

Quote:
தன் தாயை (மரியாளை) மதிக்காத இயேசு :

இயேசு என்னும் ஈஸா (அலை) அவர்களின் 'நற்குணங்களில் ஒன்றை' திருக்குர்ஆன் பின்வருமாறு பறைசாற்றுகிறது :

'என் தாயாருக்கு நன்றி செய்பவனாக (என்னை ஏவியிருக்கின்றான்). நற்பேறு கெட்டபெருமைக்காரனாக என்னை அவன் ஆக்கவில்லை. (குர்ஆன் - 19:32)

குர்ஆன் இந்த ஒரே வசனத்தில் இயேசுவின் இரு நற்குணங்களை பறைசாட்டுகிறது.

1. தாயாருக்கு நன்றி செய்வார்.
2. கெட்ட பெருமைக்காரனாக இருக்கமாட்டார்

இவ்வாறு தனது தாயை மற்றவர்களைக் காட்டிலும் அதிகம் மதிக்கக்கூடியவராகத்தான் இயேசு இருந்துள்ளார் என்பதை திருக்குர்ஆன் உலகுக்கு எடுத்துரைக்கின்றது.


இயேசு கெட்டவர் என்று குர்‍ஆன் எப்படி சொல்லும், எங்கு பார்த்தாலும், அவர் பாவம் செய்யவில்லை, சாத்தான் இயேசுவை தொடவில்லை, என்று முகமதுவை விட அதிகமாகத்தானே இஸ்லாம் சொல்கின்றது. இப்போது முகம்துவைப் பற்றித் தானே பிரச்சனை.

பிறந்த எல்லாரையும் சாத்தான் தொட்டானாம், முகமதுவையும் சேர்த்துத் தான் , ஆனால், இயேசுவையும், மரியாளையும் தொடவில்லையாம்.

இயேசு முகமதுவை விட ஆயிரமாயிர மடங்கு நல்லவர் என்பதை உலகம் அறியுமே. ஒன்று செய்வோம், ஒரு சராசரி மனிதனில் கையில் குர்‍ஆனையும், முகமதுவின் சரித்திரத்தையும் கொடுப்போம். அதே மனிதனில் கையில் பைபிள் கொடுப்போம். அவன் நடுநிலையோடு படிக்கட்டும், பிறகு அவர் யார் மிகவும் நல்லவர் என்று சொல்வான் என்பதை கவனிப்போம். சரியா?


Quote:
ஆனால் நான்கு நபர்களால் இயேசுவின் வரலாற்றை எழுதியதாக சொல்லப்படும் பைபிலோ அவர் தாயை மதிக்காதவர் மட்டுமல்லாமல் திருக்குர்ஆன் எந்த இரண்டு குணங்கள் அவரிடம் இருந்ததாக சொன்னதோ அந்த இரு குணங்களும் அறவே இல்லாதவர் என்றே நிரூபிக்க முற்படுகின்றது. இதை சகோதரார் எம். எம். அக்பர் அவர்கள் சுருக்கமாக எழுதியதற்கு மறுப்பாக, இயேசுவை மதிக்கிறோம்(?) என்று தன்னைத் தானே சொல்லிக்கொள்கிற 'உன்மையடியான்' என்பவர் யூதர்களுக்கு ஆதராவாக எகிரி குதிக்கின்றார்.


அருமை நண்பர்களே யார் யூதர்களுக்காக பரிந்துப்பேசுவது? சுருக்கமாக எம். எம். அக்பர் அவர்கள் எழுதினால், அதற்கு நாங்கள் பதில் அளிக்கக்கூடாதா? தப்பு செய்தால் இது இப்படி அல்ல, இதற்கு பொருள் வேறு விதமாக உள்ளது என்று ஆதாரத்தோடு எழுதுகிறோம். நீங்களும் எழுதுங்கள், ஆதாரத்தோடு, யார் வேண்டாமென்று சொல்கின்றார்கள்.


ஆமாம், இயேசு பற்றி சுருக்கமாக இரண்டே வார்த்தைகளை எம். எம். அக்பர் அவர்கள் எழுதினார்கள், "இயேசு தாயைமதிக்காதவராக" என்று, அதற்கு நாங்கள் விவரமாக பதில் கொடுத்தோம். நாங்கள் இவ்வளவு விவரமாக பக்கம் பக்கமாக ஆதாரங்களை தொகுத்து கேள்விகள் கேட்டால், நீங்கள் சுருக்கமாக இரண்டு வரிகளில் "கிறிஸ்தவர்கள் அவதூறு தூற்றுகிறார்கள்" என்றுச் சொல்லி, நழுவி விடுகிறீர்கள்.


Quote:
இயேசு நாதர் தன் தாயை மதித்தார் என்று நிரூபிப்பதற்காக படாது பாடு படுகிறார்.


நீங்கள் முகமதுவை காப்பாற்ற படும் பாடுகளைவிட இது ஒன்றும் அதிகம் இல்லை நண்பர்களே.

குர்‍ஆனையும், முகமதுவின் சரிதையையும் (நீங்கள் சென்சார் கட் செய்த‌ சரிதை அல்ல, உண்மை சரிதையை அப்படியே) ஒரு மனிதனிடம் கொடுத்துப்பாருங்கள், அவைகளை அவன் படித்துவிட்டு கேட்கும் கேள்விகளுக்கு, நீங்கள் பதில் சொல்ல எவ்வளவு பாடுபடுவீர்கள் என்று எல்லாருக்கும் தெரியும்.


Quote:
இயேசு நாதர் அவர் தாயை அவமதித்த சம்பவம் அந்த யோவான் 2:1-8ம் வசனம் மட்டும் தான் வந்துள்ளது என்றால் கூட நாம் இதை பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டோம். ஆனால் இயேசுவையும் அவர் தாயையும் பற்றி பைபிளில் வரும் பல வசனங்களில் அவர் ஒரு இடத்திலும் அவரை மதித்ததாக தெரியவில்லை. இயேசுநாதர், தன் தாயை மதிக்காதது மட்டுமல்லாமல் அவரை பார்க்கும் நேரமெல்லாம் உதாசீனப்படுத்தியும் - அந்தப்பரிசுத்தமான தன் தாயை 'ஸ்திரியே' அதாவது 'பெண்ணே' என்று ஒரு மாற்றார் வீட்டு பெண்மனியை அழைப்பது போல் தான்; அழைத்தார் என்று கூறுகிறது. அவர் ஒரு இடத்தில் கூட மரியாளை 'தன் தாய்' என்று கூறியதாக பைபிளில் கிடையாது.

பைபிளின் மத்தேயு 12 : 50 - 56 வரை வரும் வசனங்களில் :

இப்படி அவர் ஜனங்களோடே பேசுகையில், அவருடைய தாயாரும் சகோதரரும் அவரிடத்தில் பேசவேண்டுமென்று வெளியே நின்றார்கள். அப்பொழுது, ஒருவன் அவரை நோக்கி: உம்முடைய தாயாரும் உம்முடைய சகோதரரும் உம்மோடே பேசவேண்டுமென்று வெளியே நிற்கிறார்கள் என்றான். தம்மிடத்தில் இப்படிச் சொன்னவனுக்கு அவர் பிரதியுத்தரமாக: என் தாயார் யார்? என் சகோதரர் யார்? என்று சொல்லி, தம்முடைய கையைத் தமது சீஷர்களுக்கு நேரே நீட்டி: இதோ, என் தாயும் என் சகோதரரும் இவர்களே! பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவன் எவனோ, அவனே எனக்குச் சகோதரனும் சகோதரியும் தாயுமாய் இருக்கிறான் என்றார். - மத்தேயு 12 : 56 - 50

மேற்குறிப்பிட்டுள்ள வசனங்களில் இயேசுவை அவரைப் பெற்றெடுத்த தாய் மரியால் பார்க்க வேண்டும் என்று வேண்டுகோள்வைக்கின்றார். அதற்கு அவர் அளித்த பதிலுக்கும், தாயை மதித்தலுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கின்றதா? பொதுவாகவே ஒருவனுடைய தாய் எப்படிப்பட்ட கெட்டகுணம் உடையவராக இருக்கட்டும். எவ்வளவு மோசமானவராக கூட இருக்கட்டும். அதற்காக தன்னை பல கஷ்டங்களை அனுபவித்து பெற்றெடுத்த தாயுக்கு செய்யும் நன்றி உபகாரம் இப்படித்தான் இருக்குமா? இது தான் தாயை மதிக்கும் லட்சனமா? வெளியே நின்றுக்கொண்டு பார்க்க வேண்டும் என்று அனுமதிகேட்ட தாய்க்கு, இயேசு எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும் இப்படி பதில் அளிப்பது தான் மரியாதையா?

அதுவும் மரியாள் என்ற அந்த பரிசுத்த பெண்மணி, ஏதோ உங்கள் தாய் என் தாய் போன்ற சாதாரன பெண்மணியா? அவருடைய தியாகம் என்ன சாதாரண தியாகமா? புரோகிதமும், மூடநம்பிக்கைகளும் புரையோடிப்போயிருந்த அன்றைய காலத்தில் திருமணமே முடிக்காத ஒரு கண்ணிப்பெண், இறைவனின் கட்டளைப்படி ஒரு குழந்தையை பெற்றெடுத்து அதை சமூகம் அங்கீகரிக்க என்ன பாடு பட்டிருப்பார்கள்? எவ்வளவு துன்பங்களை அனுபவித்திருப்பார்கள்? என்று யோசித்து பாருங்கள். இந்த மரியாள் என்ற மரியம் (அலை) அவர்களின் தியாகத்தைப் பெருமைப்படுத்தும் விதமாக நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்: 'உலகிலேயே மிகச் சிறந்த இரண்டு பெண்மணிகளில் ஒருவர் மரியம் (அலை) என்று புகழ்ந்துரைத்தார்கள் (நூல் : புஹாரி) அப்படிப்பட்ட அற்புதமான தாயை -தியாகத்தின் மறுஉருவத்தை இயேசு இப்படித்தான மதித்திருப்பாரோ?





இதற்கு தனியாக ஒரு பதிலை நான் கூடிய சீக்கிரத்தில் தருகிறேன்.

இரண்டு வார்த்தைகளில் எங்களுக்கு கேள்விகள் கேட்டாலும், நாங்கள் விவரமாக பதில் சொல்லதயாராக இருக்கிறோம். இத்தனை வரிகள் கேள்விகள் கேட்டால் பதில் தராமலா இருக்கப்போகிறோம், எனவே, இதற்காக தனி கட்டுரையில் பதில் தருகிறேன்.



Quote:
அடுத்து பைபிளின் யோவான் 2 : 1-8 ல்:

மூன்றாம் நாளிலே கலிலேயாவிலுள்ள கானா ஊரிலே ஒரு கலியாணம் நடந்தது. இயேசுவின் தாயும் அங்கேயிருந்தாள். இயேசுவும் அவருடைய சீஷரும் அந்தக் கலியாணத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். திராட்சரசங்குறைவுபட்டபோது, இயேசுவின் தாய் அவரை நோக்கி: அவர்களுக்குத் திராட்சரசம் இல்லை என்றாள். அதற்கு இயேசு 'ஸ்திரீயே, எனக்கும் உனக்கும் என்ன, என் வேளை இன்னும் வரவில்லை' என்றார். அவருடைய தாய் வேலைக்காரரை நோக்கி: அவர் உங்களுக்கு என்ன சொல்லுகிறாரோ, அதன்படி செய்யுங்கள் என்றாள். யூதர்கள் தங்களைச் சுத்திகரிக்கும் முறைமையின்படியே, ஒவ்வொன்று இரண்டு மூன்று குடம் தண்ணீர் கொள்ளத்தக்க ஆறு கற்சாடிகள் அங்கே வைத்திருந்தது. இயேசு வேலைக்காரரை நோக்கி: ஜாடிகளிலே தண்ணீர் நிரப்புங்கள் என்றார். அவர்கள் அவைகளை நிறைய நிரப்பினார்கள். அவர் அவர்களை நோக்கி: நீங்கள் இப்பொழுது மொண்டு, பந்திவிசாரிப்புக்காரனிடத்தில் கொண்டு போங்கள் என்றார். அவர்கள் கொண்டுபோனார்கள்.

இந்த வசனத்திலும் இயேசுவிடம் அவரது தாய் ஒரு வேண்டுகோள் வைக்கின்றார். அதற்கு அவர் பதிலாக 'செய்கிறேன்' என்று சொல்லியிருந்தால் மரியாதை எணலாம். ஆனால் அதற்கு அவர் கொடுக்கும் பதிலென்ன? 'ஸ்த்ரியே' அதாவது பெண்னே - 'உனக்கும் எனக்கும் என்ன?' என்கிறார் என்றால் இதில் எங்கே மரியாதை இருக்கின்றது? சகோதரர் உன்மையடியான் 'ஸ்தியே' என்ற வார்த்தைக்கு பக்கம் பக்கமாக விளக்க அளித்தவர் அதற்கு அடுத்து வரக்கூடிய வாசகத்தில் தியாகத்தின் மறுஉருவமான பரிசுத்த மரியளை அதட்டும் விதமாக - முகத்தில் அறைந்தார்போல் 'உனக்கும் எனக்கும் என்ன' என்று பதில் அளித்துள்ளாரே, அது உங்கள் கண்களுக்குத் தெரியவில்லையோ? அந்த வார்த்தையை மட்டும் உங்கள் எழுத்துக்களில் அப்படியே மறைத்துக்காட்டுவதன் நோக்கம் என்ன?


மரியாளை நீங்கள் அதிகம் மதிப்பதாக இருந்தால், அவர்கள் "இயேசுவை" ஆராதித்தது போல, ஆராதியுங்கள், அவர்கள் இயேசுவின் ஊழியம் செய்தது போல, நீங்களும் செய்யுங்கள். அது தான் உண்மை மரியாதை.

உங்கள் முகமதுவிற்கு, இயேசுவின் தாய் மரியாளை அல்லா சொர்க்கத்தில் மனைவியாக கொடுப்பார் என்று சில இஸ்லாமிய அறிஞர்கள் சொல்கின்றார்களே, அதை விட ஒரு கேவளமான மதிப்பு, மரியாளுக்கு தேவையா?


முகமதுவிற்கு 10க்கும் அதிகமான மனைவிகள் இந்த உலகத்தில் போதவில்லையா? சொர்க்கத்திலும் மனைவிகள் தேவையா? அதுவும் இயேசுவின் தாய் (இஸ்லாம் படி ஒரு நபியின் தாய்) தேவையா இவருக்கு? இதை அல்லா அவருக்கு கொடுப்பாரா? அல்லாவிற்கு சொர்க்கத்தில் என்ன வேலை? வருபவர்களுக்கு பெண்களை தயார்படுத்தி கொடுப்பது தான் இவருக்கு வேலையா?



Answering-Islam.org wrote:


The late Iranian Islamic scholar, Ali Dashti, wrote:

... According to the Cambridge Tafsir, the word thayyebat (widows or divorcees) refers to Pharaoh's wife Asiya, and the word virgins (abkar) refers to Jesus' mother Mary, both of whom are waiting to be married to the Prophet Mohammad in heaven. (Dashti, 23 Years: A Study of the Prophetic Career of Mohammad [Mazda Publishers, Costa Mesa, CA 1994], p. 138)
And:


... It has already been mentioned that one Qor'an-commentary takes "widowed" to mean Pharaoh's wife Asiya and "virgin" to man Jesus' mother Mary, and states that both will be married to the Prophet in heaven; since the Qor'an says nothing to this effect, the only significance of the statement is that it illustrates the mentality of the commentator. (Ibid., p. 144)

There is a note indicating what the Cambridge Tafsir is:

43 The Library of the University of Cambridge possesses the unique manuscript of the third part of a Persian Tafsir (Qor'an commentary and translation) written by an unknown author probably ca. 1000 A.D. and copied in 628/1231. It covers suras 19-114 and is the only surviving part. It is thought to be the oldest work of its kind in the Persian language. The text was printed by the Bonyad-e Farhang-e Iran, Tehran , 1349/1970 (2 vols, ed. and introd. by Jalal Matini)


This means that Muhammad believed that he would be married to our blessed Lord's mother and have sexual intercourse with her in Paradise! Such an idea not only shocks Christians, but actually exposes the sick perversions of this religion. We are thankful to God that Islam is not true and Muhammad is not God's prophet. Mary will never be married to Muhammad, nor will she be married to anyone else in Paradise, since the Holy Bible, God's true and pure word, teaches:


"Jesus replied, 'The people of this age marry and are given in marriage. But those who are considered worthy of taking part in that age and in the resurrection from the dead will neither marry nor be given in marriage, and they can no longer die; for they are like the angels. They are God's children, since they are children of the resurrection.'" Luke 20:34-36
"For the kingdom of God is not a matter of eating and drinking, but of righteousness, peace and joy in the Holy Spirit." Romans 14:17

In the service of the true God and eternal life, our risen Lord and Savior Jesus Christ, forever and ever. Amen. Come Lord Jesus. We love you Lord of eternal glory.

Source: http://answering-islam.org.uk/Shamoun/mary.htm (Mary the Mother of Jesus: A Houri in Paradise?)






சொர்க்கத்தில் மரியாளை முகமதுவிற்கு கொடுப்பதற்கு பதிலாக மரியாளை நரகத்தில் அனுப்பிவிடுவது மரியாளுக்கு நலமாக இருக்கும். இது தான் நீங்கள் பரிசுத்த தாய்க்கு கொடுக்கும் மதிப்பா?

நான் மேலே காட்டிய விவரங்கள் தவறாக இருக்குமானால்? முதலில், இப்படி பொருள் கூறியுள்ள,

1)ஈரான் இஸ்லாமிய அறிஞர் அலி தஸ்தியின் வார்த்தைகள் பொய் என்று நிருபியுங்கள். (The late Iranian Islamic scholar, Ali Dashti,)

2)பெர்சியன் தஃப்சீர் (காம்பிரிட்ஜில் உள்ள தஃப்சீர் - Cambridge Tafsir) தவறு என்று ஆதாரத்தோடு நிருபியுங்கள்.


இப்படி பொருள் கூறுகின்ற இவர்கள் இஸ்லாமிய ஊழியர்களே கிடையாது, இஸ்லாமுக்கு கெட்ட பெயர் உண்டாக்கும்படி பொருள் கூறுகிறார்கள் என்று ஆதாரத்தோடு நிருபியுங்கள்.

அதை விடுத்துவிட்டு, அவதூறு அவதூறு என்று ஓயாமல் சொல்லிக்கொண்டு இருக்காதீர்கள், முதலாவது உங்கள் நிலையை நிருபியுங்கள். இப்படிப்பட்ட இஸ்லாமிய அற்ஞர்கள் எழுதியது தவறு என்று நிருபியுங்கள்.

"எனக்கும் உனக்கும் என்ன?" என்பதின் பொருள், "இந்த கலியாண வீட்டில் ஒரு குறை உண்டானால், அது இந்த கல்யாணம் நடத்தும் நபர்களின் பாடு, எனக்கும் சரி, உங்களுக்கும் சரி சம்மந்தமில்லை, இதற்காக தேவனுடைய வல்லமையை காட்டமுடியாது, எப்போது அற்புதம் செய்யவேண்டும் என்று எனக்கு தெரியும், ....." என்று இயேசு சொன்னார். இதை எவ்வளவு விளக்கியும் என்ன லாபம், அதை விட்டுவிட்டு, கிளிப்பிள்ளைப் போல சொன்னதேயே சொல்லிக் கொண்டு இருக்கிறீர்கள்?
Quote:
//அதற்கு பதிலாக இயேசு ஸ்திரியே என் வேளை இன்னும் வரவில்லை என்று சொல்கிறார்கள். இதை பைபிள் வசனங்கள் கொண்டு படியுங்கள், இதில் இயேசு மரியாளை எங்கு அவமதித்துள்ளார் என்பதை நீங்களே கண்டுபிடியுங்கள்.//

//பெண்ணே என் வேளை இன்னும்வரவில்லை, நான் எப்போது அற்புதங்கள் செய்யவேண்டும், எப்போது செய்யக்கூடாது என்று எனக்கு தெரியும். இறைவன் சம்மந்தப்பட்ட விவகாரங்களில் இப்படி மனிதர்களின் இடையூறு தேவையில்லை என்ற தோரணையில் இயேசு பதில் அளிக்கிறார். இதில் எந்த தவறும் இல்லை. இதே போல பல சந்தர்பங்களில், இயேசு என் வேளை இன்னும் வரவில்லை என்று சொல்லியுள்ளார் (யோவான் 7:6, 8, 30, 8:20) //



உன்மையடியான் தனது கட்டுரையில் இடையிலே வரவேண்டிய அந்த 'உனக்கும் எனக்கும் என்ன?' என்று இயேசு திமிர்தனமாக பேசியதாக சொல்லப்படும் அந்த வாத்தைகளை அழகாக நழுவிட்டுள்ளதற்கான காரணம் என்ன? இவருடைய மனசாட்சிக்கே உறுத்தியதால் தானே இந்த தந்திர வேலை இவர் செய்துள்ளார்?


அருமையான இஸ்லாமிய அண்ணன்மார்களே, மறைத்தது நானா? அல்லது நீங்களா? நான் தான் முழு வசனத்தையும் குறிப்பிட்டு இருந்தேனே அதை நீங்கள் இந்த கட்டுரையில் ஏன் குறிப்பிட மறந்துவிட்டீர்கள்?
நான் என்ன எழுதினேன் என்று மறுபடியும் கீழே தருகிறேன், நான் வசனத்தில் கைவைத்து இருந்தால், நீங்கள் குற்றம் பிடிப்பது சரியானதாக இருக்கும். உங்களைப்போல வசனத்தில் கைவைக்கும் பழக்கம் எங்களுக்கு இல்லை அண்ணன்களே. நான் எழுதியதை அப்படியே தருகிறேன், பாருங்கள்.


Quote:
அதற்கு பதிலாக இயேசு ஸ்திரியே என் வேளை இன்னும் வரவில்லை என்று சொல்கிறார்கள். இதை பைபிள் வசனங்கள் கொண்டு படியுங்கள், இதில் இயேசு மரியாளை எங்கு அவமதித்துள்ளார் என்பதை நீங்களே கண்டுபிடியுங்கள்.

Quote:
யோவான் 2:1-5 மூன்றாம்நாளிலே கலிலேயாவிலுள்ள கானா ஊரிலே ஒரு கலியாணம் நடந்தது; இயேசுவின் தாயும் அங்கேயிருந்தாள். இயேசுவும் அவருடைய சீஷரும் அந்தக் கலியாணத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். திராட்சரசம் குறைவுபட்டபோது, இயேசுவின் தாய் அவரை நோக்கி: அவர்களுக்குத் திராட்சரசம் இல்லை எனறாள். அதற்கு இயேசு: ஸ்திரீயே, எனக்கும் உனக்கும் என்ன, என் வேளை இன்னும் வரவில்லை என்றார். அவருடைய தாய் வேலைக்காரரை நோக்கி: அவர் உங்களுக்கு என்ன சொல்லுகிறாரோ, அதின்படிசெய்யுங்கள் என்றாள்.

பெண்ணே என் வேளை இன்னும்வரவில்லை, நான் எப்போது அற்புதங்கள் செய்யவேண்டும், எப்போது செய்யக்கூடாது என்று எனக்கு தெரியும். இறைவன் சம்மந்தப்பட்ட விவகாரங்களில் இப்படி மனிதர்களின் இடையூறு தேவையில்லை என்ற தோரணையில் இயேசு பதில் அளிக்கிறார். இதில் எந்த தவறும் இல்லை. இதே போல பல சந்தர்பங்களில், இயேசு என் வேளை இன்னும் வரவில்லை என்று சொல்லியுள்ளார் (யோவான் 7:6, 8, 30, 8:20).


மேலே நான் எழுதியதை படித்துப்பாருங்கள், "எனக்கு உனக்கும் என்ன?" என்று இருக்கும் வார்த்தையை இன்னும் கடினமாக்கி நான் விளக்கமளித்துள்ளேன், அது அது உங்களுக்கு தெரியவில்லையா?

நான் எழுதிய வரிகளை படித்து சில கிறிஸ்தவர்களே என் மீது கோபம் கொண்டாலும் கொண்டு இருக்கலாம், ஆனால், அதற்காக நான் கவலைப்படப்போவதில்லை, உண்மையைச் சொன்னேன்.

உங்களைப் போல, பொய்யான சாட்சிகளை பதிப்பது, அடிக்கடி வார்த்தைகளை மாற்றிக்கொள்வது, இல்லாததை இருப்பதாக சொல்வது, இதிலெல்லாம் சில இஸ்லாமியர்கள் கைதேர்ந்தவர்கள்.



Quote:
இப்படி 'உனக்கும் எனக்கும் என்ன' என்று கூறி தன் தாயை ஊர் மக்கள் கூடிஇருக்கின்ற திருமன சபையில், அங்கே வந்துள்ள அத்தனைப் பேருக்கும் முன்பாக - இப்படி எதிர்த்து பேசி மரியாளை அவமரியாதை செய்தவர்தான் இயேசு என்கின்றனர் பைபிள் எழுத்தாளர்கள். இது தான் தாயை மதித்தவர் என்பதற்கான அடையாளமா? இப்படித்தான் ஒவ்வொருவரும் தனது பெற்றோரை எல்லோருக்கும் முன்பாகவும் அசிங்கப்படுத்தி மதிக்க வேண்டும் (?) என்று இயேசு கற்றுத்தருகிறாரா?



அப்படியா! ஊர் மக்கள் முன்பு இயேசு இப்படி சொன்னாரா? அப்படியானால், இந்த திராட்சை ரசம் அற்புதம் வேலைக்காரர்களுக்கும், இயேசுவின் சீடர்களுக்கும், மரியாளுக்கும் மட்டும் தான் தெரியும் என்று பைபிள் சொல்கின்றதே அதை நீங்கள் படிக்கவில்லையோ? அய்யோ பாவம் நீங்கள். கீழே உள்ள வசனத்தை படித்துப்பாருங்கள், அந்த கலியாண விருந்தை நிர்வாகிக்கும் நிர்வாகிக்கு கூட தெரியவில்லையாம், அதாவது யாருக்கும் தெரியாமல், அமைதியாக அற்புதம் நடந்தேரியது. சமையல் அறையில் அல்லது தனியான அறையில் நடந்தது என்பது தெளிவாக புரிகிறது.

Joh 2:9 அந்தத் திராட்சரசம் எங்கேயிருந்து வந்ததென்று தண்ணீரை மொண்ட வேலைக்காரருக்குத் தெரிந்ததேயன்றி பந்திவிசாரிப்புக்காரனுக்குத் தெரியாததினால், அவன் திராட்சரசமாய் மாறின தண்ணீரை ருசிபார்த்தபோது, மணவாளனை அழைத்து:
Joh 2:10 எந்த மனுஷனும் முன்பு நல்ல திராட்சரசத்தைக் கொடுத்து, ஜனங்கள் திருப்தியடைந்தபின்பு, ருசிகுறைந்ததைக் கொடுப்பான், நீரோ நல்ல ரசத்தை இதுவரைக்கும் வைத்திருந்தீரே என்றான்
.



Quote:
அது மட்டுமல்ல உண்மைஅடியான் 'ஸ்திரி' என்பது ஒன்றும் மரியாதைக்குறைவான வார்த்தை இல்லை என்று கூற முயற்ச்சிக்கின்றார். ஆனால் இதே இயேசு அதே 'ஸ்த்ரி' என்ற வார்த்தையை பலருக்கும் பயன்படுத்தியது போல் 'விபச்சாரி' ஒருவருக்கும் பயன்படுத்துகிறார். (பார்க்க யோவான் - 8 : 10) அந்த விபச்சாரிக்கு என்ன வார்த்தையை பயன் படுத்தினாரே அதே 'ஸ்த்ரி' என்ற வார்த்தையைத் தான் தனது பரிசுத்த தாயுக்கும் பயன் படுத்தினார் என்பதையும் இதன் மூலம் 'ஸ்த்ரி' என்றுக்கூறி மற்ற பெண்களையள்ள தன் பரிசுத்த தாயை அவமதித்ததாகத்தான் பைபிள் கூறுகின்றது.

இப்படி தன் தாயை எந்தவிதத்திலும் மதிக்காதவராகவே பைபிளில் இயேசு காட்டப்படுகிறார். யூதஎழுத்தாளர்கள் இப்படித்தான் அவரைக் காட்ட முயற்ச்சிக்கின்றனர். தன் தாயை மட்டுமல்ல ஒட்டு மொத்த தாய் வர்க்கத்தையே மதிக்கதவராகவும், கோபக்காரராகவும், பெருமைக்காரராகவும் தான் யூதர்களால் எழுதப்பட்டு பைபிளில் இயேசுவைப் பற்றி காட்டப்படுகிறது.



நீங்கள் யூதர்கள் மீது எவ்வளவு அதிகமாக கோபமாக இருக்கிறீர்கள் என்பது தெளிவாக புரிகிறது. அதிகமாக கல்ஃப் செய்திகளை(Gulf News, Middle East News, Israel Palastine news), இஸ்ரவேல், பாலஸ்தீன செய்திகளை கேட்பீர்கள் போல் இருக்கிறது, இத்தனை நாட்களாக கிறிஸ்தவர்கள் மாற்றி எழுதினார்கள் என்று சொல்லிக்கொண்டு இருந்தார்கள் இஸ்லாமியர்கள், இப்போது யுதர்கள் வரை வந்துள்ளது, இன்னும் சில நாட்கள் கடந்து "இந்துக்கள்" தான் பைபிளை திருத்தினார்கள் என்று சொன்னாலும் யாரும் ஆச்சரியப்படவேண்டியதில்லை. இது எல்லாம் இஸ்லாமில் சகஜமப்பா?


Quote:
அடுத்தவன் பெற்றோர்களையும் மதிக்காதவரா இயேசு?

பைபிளில் இயேசுவிடம் பரிசேயர்கள் ஒரு அடையாளத்தை கேட்கின்றார்கள். அதை மத்தேயு பின்வருமாறு சொல்கிறார் :

'இந்தப் பொல்லாத 'விபசார சந்ததியார்' அடையாளம் தேடுகிறார்கள் யோனா தீர்க்கதரிசியின் அடையாளமேயன்றி வேறே அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை என்று சொல்லி, அவர்களை விட்டுப் புறப்பட்டுப்போனார். மத்தேயு 16 : 3-4



இந்த தலைப்பில் அவர்கள் எழுதிய வரிகளை நான் இங்கு கொடுக்கவில்லை, இயேசு "விபச்சார சந்ததியார்.." என்று குறிப்பிட்டதை நம் தமிழ் நாடு மொழியில் அழகான வார்த்தைகளை அவர்கள் பயன்படுத்தி எழுதியுள்ளார்கள்.

ஏன் இயேசு அவரிடம் அற்புதம் கேட்ட யூத ஆசாரியர்களைப் பார்த்து, "விபச்சார சந்ததியார்" என்று கூப்பிட்டார், என்ற தலைப்பில் வேறு ஒரு கட்டுரையாக நான் பதில் அளிக்கிறேன்.

இவர்கள் இந்த தலைப்பில் வேறு என்ன எழுதினார்கள் என்பதை காண அவர்களின் தொடுப்பில் சென்று படிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

இதோ அவர்களின் தொடுப்பு:
http://egathuvam.blogspot.com/2008/02/blog-post_25.html





இந்த தொடுப்பில் சென்று படித்து, தமிழ் கிறிஸ்டியன்ஸ் தள நிர்வாகிகள் அதை பதிக்கலாம் என்று விரும்பினால், நானோ அல்லது மற்றவர்களோ அதை இங்கு பதிக்கின்றோம், அதுவரை இந்த தளத்தில் அதை பதிக்கவேண்டாம் என்று TamilChristians தள வாசகர்களை கேட்டுக்கொள்கிறேன்.



நான் வேறு ஒருகட்டுரையில் பதில் தருகிறேன் என்று சொன்னதால் நான் பயந்துவிட்டேன் என்று எண்ணவேண்டாம், கண்டிப்பாக பதில் தருவேன். நான் ஏன் தாமதிக்கிறேன் என்றால், என் பதில்களில் 80% கிறிஸ்தவத்திற்கு எதிராக வைத்த குற்றச்சாட்டிற்கு பதில் இருக்குமானால், 20% இஸ்லாமியர்களுக்கு என் கேள்விகள் இருக்கும். எனவே, இன்னும் பல விவரங்கள் இந்த தலைப்பு சம்மந்தப்பட்டதை நான் சேகரிக்கவேண்டாமா? அதற்காகத்தான் அவகாசம்.


Quote:
தந்தையின் மரணத்திற்கு செல்லக்கூடாது என்று தடுத்த இயேசு:

அவருடைய சீஷர்களில் வேறொருவன் அவரை நோக்கி: ஆண்டவரே! முன்பு நான் போய், என் தகப்பனை அடக்கம்பண்ண எனக்கு உத்தரவு கொடுக்கவேண்டும் என்றான். அதற்கு இயேசு: மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம்பண்ணட்டும், நீ என்னைப் பின்பற்றி வா என்றார். - மத்தேயு - 8 :21 - 22

ஒருவனுடைய தகப்பன் இறந்திருக்க, அவன் தன் தகப்பனை இறுதியாகப் பார்த்து விட்டு அவரை அடக்கம் பண்ணிவிட்டு வரவா? என்று கேட்டதற்கு, அதை தடுக்கின்றார் என்றால் இவர் எப்படிப்பட்ட அப்பட்டமான மனித உரிமை மீறலை செய்திருக்கின்றார் என்று புரிந்துக்கொள்ளுங்கள். சாதாரனமாகவே ஒருவர் இறந்து விட்டால் மற்றவர் அதற்கு உரிய அனைத்து உதவிகளும் செய்யவேண்டும் என்பது சாதாரண சாமானியனும் ஒத்துக்கொள்ளக்கூடிய ஒரு நியதி. ஆனால் இந்த உலகத்திற்கே நல்வழிக்காட்ட வந்தவர் தன் தகப்பனுடைய மரனத்திற்கு கூட செல்லாதே என்று தடுக்கின்றார் என்றால், இயேசு அவர்களை பைபிள் எவ்வளவு கீழ்தரமானவராக சித்தரிக்கின்றது என்பதை தெரிந்துக்கொள்ளலாம்.

இயேசு அவர்களை தாயை மதிக்கக்கூடியவராக, தற்பெருமையற்றவராக, மிகுந்த ஒழுக்கசீலராக காட்டுகிறது திருக்குர்ஆன். ஆனால் பைபிளோ இவை அனைத்திற்கும் மாற்றமாக நடந்தவர்தான் என்று கூறுகிறது. இதை கிறிஸ்தவ சகோதரார்களும், மாற்று மத அன்பர்களும் சற்று சிந்திக்க வேண்டும்.

இது போண்று இன்னும் பலவகையில் இயேசுவைத் திருக்குர்ஆன் உயர்த்துவதையும், பைபிள் அவரைத் தரக்குறைவானவராக காட்ட முயற்சிப்பதையும் அடுத்தடுத்த ஆக்கங்களில் விளக்குவோம். இன்ஷா அல்லாஹ்! இறைவனே அனைத்தையும் நன்கறிந்தவன்.

பெற்றோரைப் பேணுவது பற்றி இஸ்லாம் எவ்வாறு வலியுறுத்துகின்றது என்பதையும் இது போண்று தான் தனது தாயையும் இயேசு அவர்கள் மதித்து நடந்திருப்பார் என்பதையும் கான இங்கே அழுத்தவும்.

(குறிப்பு : நாம் சில வார்த்தைகளை அநாகரீகமாக எழுதிஇருப்பது போல் தோன்றலாம். ஆனால் அது நம்முடைய வார்த்தை இல்லை என்பதையும் அது பைபிளில் உள்ள ஒரு புனித (?) வார்த்தை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அந்த புனித(?) வார்த்தையைத் தான் நாம் மேற்கோள் காட்டிஇருக்கின்றோமே யொழிய நாமாக எதையும் எழுதவில்லை என்பதையும் கவனிக்வும்.)

http://egathuvam.blogspot.com/2008/02/blog-post_25.html



இதற்கு தனி "பைபிள் கேள்வி பதில் " என்ற முறையில் பதில் தருகிறேன், அதற்கு முன்பாக சில கேள்விகள்:

ஒரு நாட்டோடு சண்டை போட்டு, சகோதர்களை, தந்தைகளை கொன்றுப் போட்டு, அவர்களின் பெண்களை அடிமையாக கொண்டு, ஒரு பெண்ணின் குடும்பத்தின் இரத்தத்தை குடித்துவிட்டு, அந்த பெண்ணோடு அன்றே உடலுறவு கொண்டாரே ஒரு மஹான், அவரைப் பற்றி சிறிது சொல்லுங்களேன்.

நான் கொடுத்த பதிலில் இயேசு பற்றி சொல்லியுள்ளவற்றைப் பற்றி எழுதினீர்களே, அதே கட்டுரையில், முகமது பற்றி எழுதிய வரிகளைப் பற்றி ஒன்றுமே எழுதவில்லையே, ஏன்? "முகமது மீது அவதூறு" சொல்கிறார் என்று நான்கு வார்த்தைகளில் எழுதி முடித்துவிட்டீர்கள். அவதூறு சொல்வது உண்மையானால், மறுபடியும் நான் எழுதியதை கீழே தருகிறேன், எந்த வரி அவதூறு என்று விளக்குங்கள்?


Quote:

9. தன்னை எதிர்த்த பெண்ணை கொலை செய்ய துடித்த முகமது:

இயேசு தன் தாயை "ஸ்திரியே" என்று அழைத்தார், இது ஒரு நபிக்கு இருக்கக்கூடிய தகுதி அல்ல. நபி என்பவர்கள் இப்படி சொல்லமாட்டார்கள் என்றுச் சொல்லும் இஸ்லாமியர்கள், முகமது தன்னை ஒரு பெண் எதிர்த்தாள் (அதுவும் பல பிள்ளைகளுக்கு தாய்) என்பதற்காக "எனக்காக அவளை கொல்பவர் யார்?" என்று கேட்டு, அந்தப் பெண்ணை கொலை செய்யவைத்தவர் முகமது. இது ஒரு நபிக்கு இருக்கக்கூடிய தகுதியா? (படிக்க "முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல் ")

தன் அனுமதி இல்லாமல், ஒரு மனிதன், தன் மனைவி "முகமதுவை" தொடர்ந்து திட்டிக்கொண்டு இருக்கிறாள் என்பதற்காக கொலை செய்துவிட்டு, முகமது கேட்கும் போது, நான் தான் செய்தேன் என்று சொல்லும் போது:


என்னை திட்டினால் எப்படி உன் மனைவியை நீ கொலை செய்வாய்?

அதுவும் ஒரு கர்ப்பிணிப் பெண் என்றுச் சொல்கிறாய்! எப்படி உன்னால் இது முடிந்தது?

என் அனுமதி இல்லாமல் இப்படி கொலை செய்ததால், இஸ்லாமுக்கு கெட்டப்பெயர் நீ கொண்டு வந்தாய்?

சட்டத்தை ஏன் கையில் எடுத்துக்கொண்டாய்? அரசு எடுக்கவேண்டிய முடிவை எப்படி நீ எடுத்தாய்?



என்று கேள்விகள் கேட்டு, முகமது அந்த மனிதனுக்கு தகுந்த தண்டனை அளிக்காமல், எல்லாருக்கும் முன்பாக, " சாட்சியாளர்களாக அமர்ந்திருப்போரே ! அவளின் இரத்தத்திற்கு பலி எடுக்கப்படாது." என்றுச் சொன்னதாக ஹதீஸ் சொல்கிறதே. இப்படிப்பட்டவரையா நீங்கள் நபி என்றும், இப்படிப்பட்ட மார்க்கத்தையா அமைதியின் மார்க்கம் என்றுச் சொல்கிறீர்கள்?

இயேசு தன் தாயை "ஸ்திரியே" என்று அழைத்தது பைபிளில் சொல்லப்பட்டதால், அது வேதமல்ல என்று சொல்லும் நீங்கள், உங்கள் முகமது, வயிற்றில் இருக்கும் பிள்ளையோடு கொன்ற ஒரு மனிதனுக்கு மன்னிப்பு அளித்தாரே, இந்த பெண்ணுக்காக பலி கொடுக்கப்படாது என்று சொன்னாரே, இவர் நபியா? இதை படிப்பவர்கள் சிந்திக்கட்டும்.( படிக்க : கர்ப்பிணி பெண்ணை கொன்ற மனிதனை தண்டிக்காத முகமது http://unmaiadiyann.blogspot.com/2008/01/blog-post_16.html )


முடிவாக, ஏகத்துவம் சகோதரர்களே, வாருங்கள் நாம் இயேசுவின் வாழ்க்கை வரலாறையும், நடத்தையையும், அவரின் வார்த்தைகளையும் ஆராய்ச்சி செய்வோம், அலசுவோம். அதே போல, முகமதுவின் வாழ்க்கை வரலாறையும், நடத்தையையும் , அவரின் வார்த்தைகளையும் ஆராய்ச்சி செய்வோம், அலசுவோம்.


நீங்கள் சொலவது தான் சத்தியம் என்று நீங்கள் சொல்கின்றீர்கள், அதே போல நாங்களும் சொல்கின்றோம். நாங்கள் இயேசுவைப்பற்றி எதையும் மறைக்கவிரும்பவில்லை, இரண்டு வார்த்தைகள் இயேசுவைப்பற்றி தவறான கருத்தை இஸ்லாமியர்கள் சொன்னால், அதற்கு 200 வரிகளில் பதில் தருகிறோம்.

எம். எம். அக்பர் அவர்கள் எழுதிய இரண்டு வார்த்தைகளை(இயேசு தாயைமதிக்காதவராக) நாங்கள் கண்டுக்கொள்ளாமல் விட்டு இருந்தால், அது உலகிற்கு தெரிந்து இருக்கப்போவதில்லை, ஆனால், அதையும் நாங்கள் அம்பளப்படுத்தினோம், காரணம் சத்தியம் எங்களிடம் உள்ளது. அதே போல, வெளிப்படையாக முகமதுவின் வாழ்க்கையை அலச முன்வாருங்கள். அப்போது, உலகிற்கு சத்தியம் என்ன என்பது தெரியவரும்.

இயேசுவே, நாங்கள் உம்மை நேசிக்கிறோம், தொழுகின்றோம், உமக்காக சில வரிகளை எழுதுகிறோம், நாங்கள் இந்த காலத்தில் சும்மா இருந்தால், உமக்காக கல்லுகளை பேசவைப்பீர் நீர், என‌வே, நாங்க‌ளே பேசுகின்றோம். எங்கள் வாயில் உம் வார்த்தைகளை போடும், எங்கள் எழுத்துக்கள் உப்பால் சாரமேற்றப்படுவதாக என்று வேண்டிக்கொள்கின்றோம். சீக்கிர‌மாக வாரும். ஆமென்.

இஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்

முன் பக்கம் செல்ல

HOME PAGE

தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்

1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1

2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2

3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3

4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4

பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்

1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1

2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2

பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்

1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்

2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்