இஸ்லாம் அமைதி மார்கமா? இஸ்லாம் இனிய மார்கமா? இஸ்லாம் உண்மையான மார்கமா?

ஆன்சரிங் இஸ்லாம்

பல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்

சத்தியவான் தளம் செல்ல

Saturday, May 31, 2008

அந்தப்பெண்ணின் வீட்டுக்கு அடிக்கடி செல்லும் பழக்கம் உடையவர்

Saturday, May 24, 2008

அபூமுஹை அவர்களுக்கு உமர் பதில்: பாதை மாறிய பயணங்கள்





அபூமுஹை அவர்களுக்கு பதில்: பாதை மாறிய பயணங்கள்

மருத்துவர் ஜாகிர் நாயக் அவர்கள் ஒரு நேர்க்காணலில் "இஸ்லாமை விட்டு வெளியேறி, வேறு மதத்தை பரப்புகிறவனை, இஸ்லாம் சட்டப்படி  கொல்லவேண்டும்" என்று அவர் சொன்ன கருத்து சரியானதா என்று கேட்டு ஒரு கட்டுரை எழுதியிருந்தேன் ( Dr. ஜாகிர் நாயக் அவர்களுக்கு கேள்வி:யார் தேசத் துரோகி?)  இதற்கு அபூ முஹை அவர்கள், ஜாகிர் நாயக் அவர்கள் சொல்வது சரியானது தான் இஸ்லாமில் இப்படித்தான் சட்டம் என்று ஒரு கட்டுரையை எழுதினார் ( மதம் மாறினால் மரண தண்டனை-1) . இதற்கு நான் மறுபடியும் ஒரு மறு உத்தரவு எழுதினேன். அபூ முஹை அவர்களுக்கு உமர் பதில்: * Conditions Apply (* நிபந்தனைகளுக்கு உட்பட்டது) .

நான் சொல்லாத விவரத்தைச் சொன்னதாக, அபூமுஹை அவர்கள் கற்பனை செய்துக்கொண்டு சில விவரத்தைச் சொல்லியுள்ளார்.

இந்த கட்டுரையில் அவர் சொல்லும் குற்றச்சாட்டு:

அரசியல், ஆட்சி, இராணுவம் போன்ற நாட்டை ஆளும் சட்டம் எல்லாம் காபிர்(Non-Islam) நாடுகள் தான் உருவாக்கின, இஸ்லாம் அதை சொல்லவில்லை என்று நான் சொன்னதாக அவர் சொல்கிறார். இதை அவர் எங்கேயிருந்து எடுத்தார் என்பதை அவரிடம் தான் கேட்கவேண்டும்.

இனி அவர் என்ன எழுதினார் என்பதை கவனிப்போம்.

 

அபூமுஹை அவர்கள் எழுதியது:

மதம் மாறினால் மரண தண்டனை-3
Source:
http://abumuhai.blogspot.com/2008/05/3_12.html 

முஸ்லிம்கள் இஸ்லாம் மார்க்கத்தின் சட்டங்களைக் கூறும் போது, அது இஸ்லாத்தின் சட்டமில்லை காஃபிர்களின் சட்டம் என்று சில பிற மத நண்பர்கள் கூறுகின்றனர். இவர்களைப் பொறுத்தவரை அரசியல், ஆட்சி, இராணும் இன்னும் இவை போன்ற நாட்டைக் கட்டுப்பாட்டில் வைப்பதற்கான சட்டங்கள் அனைத்தும் இஸ்லாத்தில் சொல்லப்படவில்லை. காஃபிர்களே இச்சட்டங்களை வகுத்திருக்கின்றனர், இவையெல்லாம் காஃபிர் சட்டங்கள் என்பதால் இவற்றிலிருந்து முஸ்லிம்கள் உதாரணம் சொல்லக்கூடாது என்பது இஸ்லாத்தை விமர்சிக்கும் சிலரின் கூற்று.


அருமையான நண்பர் அபூ முஹை அவர்களே, நீங்கள் சொன்ன விவரங்கள் என் கட்டுரையில் எந்த இடத்தில் உள்ளது சிறிது விளக்குங்கள்.

காபிர் நாடுகள் தான் முதல் முதலில் அரசியல், ஆட்சி, இராணுவம்  போன்ற சட்டத்தை உருவாக்கின என்று நான் சொல்லியுள்ளேனா?

இஸ்லாம் இப்படிப்பட்ட சட்டத்தை உருவாக்கவில்லை அல்லது சொல்லவில்லை என்று நான் எங்கு சொல்லியுள்ளேன்?

ஏன் உங்கள் கட்டுரைகளை படிக்கும் அப்பாவி மக்களை (முஸ்லீம்களை) திசைத்திருப்புகிறீர்கள்.


 
அபூமுஹை அவர்கள் எழுதியது:

இவர்கள் எங்கிருந்து இவ்வாறு புரிந்து கொண்டார்கள்! அதனால் கீழ்கண்டவாறு விமர்சனத்தை எழுப்புகிறார்கள்.


11. காபிர்களின் (Non-Islam) சட்டத்தோடு, இஸ்லாம் சட்டம் சம்மந்தம் கலந்தது எப்படி?

பொதுவாக, இஸ்லாமியர்களின் ஒரு அசைக்கமுடியாத நம்பிக்கை என்னவென்றால், உலகத்தில் உள்ள அனைத்து அரசியல் சாசன மற்றும் இதர சட்டங்களை விட இஸ்லாமிய சட்டமே மேலானது, இதில் மட்டுமே மனிதர்களை நல்வழிப்படுத்தும் சட்டங்கள் உண்டு.

ஆனால், எப்போதெல்லாம், இஸ்லாமின் ஒரு சில கொடுமையான சட்டத்தை நியாயப்படுத்த இஸ்லாமிய அறிஞர்கள் விரும்புவார்களோ, அப்போதெல்லாம், தயக்கமே இல்லாமல் "காபிர்களின்" சட்டத்தை மேற்கோள் காட்டவோ அதைப்பற்றி பேசவோ தயங்க மாட்டார்கள். அது மட்டுமல்ல, இஸ்லாமிய சட்டத்தோடு சம்மந்தம் இல்லாத காபிர் சட்டத்தை ஒப்பிடுவார்கள். அப்படிப்பட்ட ஒரு ஒப்பிடுதலைத் தான் --- அவர்கள் செய்துள்ளார்கள்.

நான் மேலே சொன்ன தலைப்பே மிகவும் தெளிவாகச் சொல்கிறது. அதாவது, காபிர்களின் சட்டத்தோடு இஸ்லாமிய சட்டம் எப்படி சம்மந்தம் கலந்தது என்றேன்.காபிர்களின் சட்டம் தான் முதல், இஸ்லாமிய சட்டம் தான் அடுத்தது என்று நான் சொன்னேனா? மறுபடியும் ஒருமுறை படித்துப்பாருங்கள்.

அதாவது, காபிர்களின் சட்டம் குறைபாடுள்ளது, இஸ்லாமிய சட்டம் தான் உயர்ந்தது என்று ஓயாமல் சொல்லிக்கொள்ளும் நீங்கள், எப்படி இப்போது மட்டும் அவசியம் ஏற்படும்போது திடீரென்று இஸ்லாமிய சட்டத்தோடு, காபிர்களின் சட்டத்தை சம்மந்தப்படுத்தி பேசுகிறீர்கள் என்ற பொருளில் சொன்னேனே தவிர, நீங்கள் நினைப்பது போல் அல்ல.

 


அபூமுஹை அவர்கள் எழுதியது:

தேசத் துரோகம்

அதாவது, இராணுவ இரகசியங்களை வெளிப்படுத்துவதும், இராணுவ இரகசியங்களை எதிரி நாட்டுக்கு விற்பதும் தேசத் துரோகம். என்ற சட்டம் காஃபிர்களால் இயற்றப்பட்டது. அதனால் முஸ்லிம்கள் இதை உதாரணம் காட்டிப் பேசுவது சந்தர்ப்பவாதம் என்று இஸ்லாத்தை விமர்சிக்கும் பிற மத நண்பர்கள் சொல்கின்றனர். இவர்களின் வாதம் தவறானது. இராணுவ இரகசியங்களை அம்பலப்படுத்தக்கூடாது, இராணுவ இரகசியங்களை எதிரிகளுக்குத் தெரிவிக்கக்கூடாது என மறைமுகமாக அல்ல, நேரடியாகவே இஸ்லாமும் கண்டிக்கிறது.

இஸ்லாம் இராணுவ சட்டத்தை இயற்றவில்லை என்று நான் சொல்லவே இல்லையே, உங்களுக்கு மட்டும் இப்படி புதுமையாக தெரிகின்றது.

என் கட்டுரையை சரியாக படித்துப்பாருங்கள், எதை நான் சந்தர்ப்பவாதம் என்று சொல்கிறேன் என்று புரியும். அதாவது, மதத்தை மாறுபவனுக்கு மரண தண்டனை இஸ்லாமில் உள்ளதால், காபிர்களின் சட்டத்தை உதாரணம் காட்டும் நீங்கள், மற்ற இஸ்லாமிய சட்டத்தோடு காபிர்களின் கட்டத்தை ஒப்பிட்டுப்பேச தயாரா? என்று கேட்டேன் அவ்வளவு தான்.

 

அபூமுஹை அவர்கள் எழுதியது:

இதைப் பார்ப்பதற்கு முன்,

உலகில் எல்லா நாடுகளும் தன் நாட்டின் தகுதிக்கேற்றவாறு இராணுவம் வைத்திருக்கும். இதற்கு முஸ்லிம் நாடுகள், காஃபிர் நாடுகள் என்ற விதிவிலக்கு எதுவுமில்லை. எதிரி நாட்டுடன் சண்டையிட நேர்ந்தால் நட்பு நாட்டின் இராணுவ உதவியை நாடுவதுண்டு. இதற்கும் காஃபிர் நாடுகள், முஸ்லிம் நாடுகள் என்ற வேற்றுமை இல்லை!

இராணுவத்தில் பணியாற்றும் ஒரு சாதாரண போராளியும், வெளிப்படுத்தக்கூடாத இராணுவ இரகசியங்களை வெளிப்படுத்தினால் அது தேசத்துக்கே ஊறு விளைவிக்கும் தேசத் துரோகம் என்பதில் எந்த நாட்டின் இராணுவச் சட்டத்திலும் மாற்றுக் கருத்து இல்லை. அது காஃபிர் நாடாகவோ, முஸ்லிம் நாடாகவோ இருந்தாலும் சரியே, இராணுவ இரகசியங்களை வெளிப்படுத்துவது தேசத் துரோகம் என்றே இஸ்லாமும் கூறுகிறது.
.....
.....
.....


தேசத்துரோகத்திற்கு மரண தண்டனை கொடுப்பது தவறு என்று நான் எழுதவில்லை, தேசத்துரோகத்திற்கு இஸ்லாமிய சட்டமோ, அல்லது காபிர் நாடுகளின் சட்டமோ, மரண தண்டனை விதிப்பது தவறானது என்று கூட‌ நான் எழுதவில்லை.

ஒரு மனிதன் மதத்தை மாற்றிக்கொள்ளும்போது, அவனுக்கு மரண தண்டனை சரியா? என்பது தான் என் கேள்வி. மற்றும் மதத்தை மாற்றுபவனுக்கும், தேசத்துரோகம் செய்பனையும் ஏன் சம்மந்தப்படுத்துகிறார், ஜாகிர் நாயக் அவர்கள் என்பது தான் என் கேள்வி, அவ்வளவே.

 

அபூமுஹை அவர்கள் எழுதியது:

மேலும், இராணுவச் சட்டங்கள் காஃபிர்கள் இயற்றியது என்று தவறாக வாதமெழுப்பும் பிற மத நண்பர்களின் கவனத்திற்கு,


இராணுவம் மற்றும் தேசத்துரோகம் சம்மந்தப்பட்ட சட்டங்கள் காபிர் நாடுகள் தான் இயற்றினார்கள் என்று எங்கே நான் சொல்லியுள்ளேன்? ஏன் நான் எழுதிய கட்டுரையின் "பாதையை மாற்றி பயணத்தை" திசை திருப்ப பார்க்கிறீர்கள்?


அபூமுஹை அவர்கள் எழுதியது:

இராணுவ இரகசியங்களை எதிரிகளுக்குத் தெரியப்படுத்துவது தேசத் துரோகம் மட்டுமல்ல, இஸ்லாமிய ஆட்சியின் இராணுவப் போர் நடவடிக்கைகளை எதிரிகளுக்குத் தெரியப்படுத்துபவர் இஸ்லாத்திலிருந்து வெளியேறி வேறு மதத்தைத் தழுவி விட்டாரோ என்ற எண்ணத்தையும் ஏற்படுத்திவிடும் என்பதை ஹாத்திப் (ரலி) அவர்களின் வாக்கு மூலத்திலிருந்து அறிந்து கொள்ளலாம்.

எனவே, இஸ்லாமிய ஆட்சி என்று அறிவித்துக்கொண்ட முஸ்லிம் நாடுகளிலும் இராணுவம் உண்டு. அந்த இராணுவத்திற்கும் இஸ்லாமிய சட்டத் திட்டங்களைக் கடைபிடிக்கும் விதிகள் உண்டு. அதனால் காஃபிர்களின் சட்டத்தோடு இஸ்லாமிய சட்டம் கலந்ததாகச் சொல்வது வெறும் கற்பனை.

(தேசத் துரோகம் என்பதற்கு வேறு சில அளவுகோலையும் வைத்துள்ளனர் அவற்றையும் அடுத்துப் பார்ப்போம்)

நன்றி!

அன்புடன்,
அபூ முஹை
 

இஸ்லாமிய நாடுகளுக்கு தனியான இராணுவம் இருக்காது என்று நான் சொல்லவில்லை, அப்படி இருக்கும் இராணுவத்திற்கு தனியான இஸ்லாமிய சட்டங்கள் இருக்காது என்று கூட நான் சொல்லவில்லை.

நான் எழுதிய கட்டுரையின் பயணமெல்லாம், ஒரு மார்க்கத்தில் ஒரு குற்றத்திற்கு கொடுக்கும் தண்டனையை மற்ற மார்கத்தோடு அல்லது நாடுகளின் சட்டத்தோடு சம்மந்தப்படுத்திப் பேசும் போது, அதே குற்றத்தை ஒப்பிடவேண்டுமே ஒழிய, தலைக்கும் காலுக்கும் முடி போடக்கூடாது.

இஸ்லாமில் திருட்டிற்கு உள்ள தண்டனையை நியாயப்படுத்த நாம் முயற்சி எடுக்கும் போது, நாம் என்ன செய்யவேண்டும்? மற்ற காபிர்களின் சட்டத்தில் திருட்டிற்கு என்ன தண்டனை உண்டு என்று பார்த்து அதோடு ஒப்பிட்டால், மக்களுக்கு நன்றாக புரியும். ஒரே குற்றத்திற்கு இரண்டு மார்க்கங்களில் உள்ள தண்டனைகளை ஒப்பிட்டு பார்த்தால், நியாயமானதாக இருக்கும்.

அது போல, இஸ்லாமில் "மத மாற்றத்திற்கு" கொடுக்கும் தண்டனையை நியாயப்படுத்த விரும்பினால், மற்ற நாடுகளில் "மத மாற்றத்திற்கு" என்ன தண்டனை உண்டு என்பதை கண்டுபிடித்து ஒப்பிடவேண்டும். அதை விட்டுவிட்டு, காபிர் நாடுகளில் "எந்த குற்றத்திற்கு மரண தண்டனை" உண்டு என்று கண்டுபிடித்து அதோடு ஒப்பிட்டால் அது எப்படி சரியாக இருக்கும் என்று தான் நான் கேட்டேன்.

உடன்கட்டை ஏறுதலும், இஸ்லாமிய மத மாற்ற தண்டனையும்:

ஒரு உதாரணத்தைச் சொல்கிறேன், இந்தியாவில் பல ஆண்டுகளுக்கு முன்பு இருந்த "உடன்கட்டை ஏறுதல்" என்ற பழக்கம் ஒரு சட்டமாக இந்தியாவில் இன்று அமுலில் உள்ளது என்று கற்பனை செய்துக்கொள்ளுங்கள்.

உடன் கட்டை ஏறுதல் என்ற சட்டம் சரியானதா? கணவன் மரித்துவிட்டால் அப்பெண்ணுக்கு மறுமனத்திற்கு வாய்ப்பு அளிக்கவேண்டுமே ஒழிய, இப்படி சாகடிக்கலாமா? என்று நீங்கள் கேட்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.

இதற்கு ஒரு இந்து அறிஞர் கீழ்கண்டவாறு பதில் சொல்கிறார் என்று கற்பனை செய்துக்கொள்ளுங்கள்:

பெரும்பான்மையான இஸ்லாமிய நாடுகளில் "ஒரு மனிதன் இஸ்லாமைவிட்டு வெளியேறினால், அவனுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது, அதுபோல, ஒரு பெண்ணுக்கு தன் கணவன் மறித்துவிட்டால், அவளுக்கு இந்து தர்மப்படி மரண தண்டனை தரவேண்டும், அதாவது கணவனோடு அவளையும் எரித்து கொன்றுவிடவேண்டும். தன் கணவன் மரித்துவிட்டால் அப்பெண் வேறு ஒரு ஆணை மறு திருமணம் செய்துக்கொண்டால் அது மரித்த கணவனுக்கு செய்யும் துரோகம் ஆகும், எனவே, இது நியாயமான தண்டனைத் தான்."

இதை படித்தவுடன் உங்களுக்கு சிரிப்பு வந்து இருக்கும், உடன் கட்டை ஏறுதலுக்கும், மதமாற்றத்திற்கும் என்ன சம்மந்தம் என்று கேட்கத்தோன்றும். இந்த உதாரணத்தில் குற்றம் ஒப்பிடப்படவில்லை, ஆனால், தண்டனை ஒப்பிடப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால், கணவன் மரித்துவிடுவது என்பது குற்றமே இல்லை. அது போல, மதத்தை மாற்றிக்கொள்வது குற்றமே இல்லை.  இந்த உதாரணம் போலத்தான் ஜாகிர் நாயக் அவர்களும் உதாரணத்தைச் சொன்னார் என்று நான் குறிப்பிட்டேன்.
 
எனவே, அருமை நண்பர் அபூமுஹை அவர்களே, முதலில் நான் சொன்னதை முழுவதும் படித்து  புரிந்துக்கொண்டு எழுதுங்கள்.

யாருக்கு பதில் அல்லது யாருடைய கட்டுரைக்கு பதில் எழுதுகிறீர்கள், அபூ முஹை அவர்களே:

என் கட்டுரையைப் பற்றி பதிலோ விமர்சனமோ எழுதினால், அதன் தொடுப்பு தரவேண்டுமென்று, நான் ஏற்கனவே என் முதல் கட்டுரையில் சொல்லியுள்ளேன்.

நீங்கள் ஒன்றும் என்னைப்போல நேற்று பொழிந்த மழையில் முளைத்த காலான் அல்ல. உங்களுக்கு இணையத்தில் எப்படி கட்டுரையை எழுதவேண்டும் என்ற எல்லா விவரங்களும் தெரியும், இப்படி தெரிந்து இருந்தும், ஏன் என் வரிகளுக்கு பதில் அளிக்கும் போது, என் கட்டுரையின் தொடுப்பை தருவதில்லை.

எங்கள் கட்டுரைகளை படித்தால், இஸ்லாமியர்கள் இஸ்லாமை விட்டு வெளியேறிவிடுவார்கள் என்ற பயமா? அப்படி பயம் இல்லையானால் ஏன் தொடுப்புக்களை தருவதில்லை? எனக்கு பதில் அளிக்கும் போது, என் வரிகளை விமர்சிக்கும் போது, என் கட்டுரை வெளியாகும் ஒரு தளத்தின் தொடுப்பையும் கொடுக்காமல் பதில் எழுதுவது என்ன நாகரீகம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

இனி என் எல்லா பதில்களில் இந்த வரிகள் தொடரும் என்று சொல்லிக்கொள்கிறேன்.

முடிவுரை: நான் எந்த இடத்தில் "காபிர்கள் தான் அரசியல், ஆட்சி, இராணுவம் பற்றிய சட்டங்களை இயற்றினார்கள், இஸ்லாமில் இப்படிப்பட்ட சட்டமில்லை, அல்லது இஸ்லாமோடு இப்படி ஒப்பிடக்கூடாது என்றுச் சொன்னேன்" என்பதை தயவு செய்து தெரிவியுங்கள்.

ஒரே குற்றத்தை(தண்டனைகளை அல்ல) இரண்டு மார்க்கங்களிலும் ஒப்பிட நீங்கள் தயாரா? உங்கள் ஷரியா சட்டம் மற்ற காபிர்கள் சட்டத்தைவிட எவ்விதத்தில் உயர்ந்தது, சமுதாயத்திற்கு ஏற்றது என்று ஒப்பிட்டு கட்டுரை எழுதுவீர்களானால், மக்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

Tuesday, May 20, 2008

இந்த சவால்/கேள்வி Dr. நாயக் மற்றும் அபூ முஹை அவர்களுக்கும் தான்

இந்த சவால்/கேள்வி Dr. நாயக் மற்றும் அபூ முஹை அவர்களுக்கும் தான்
 

 

மருத்துவர் ஜாகிர் நாயக் அவர்கள் ஒரு நேர்க்காணலில் "இஸ்லாமை விட்டு வெளியேறி, வேறு மதத்தை பரப்புகிறவனை, இஸ்லாம் சட்டப்படி  கொல்லவேண்டும்" என்று அவர் சொன்ன கருத்து சரியானதா என்று கேட்டு ஒரு கட்டுரை எழுதியிருந்தேன்.
 

 

 

 

இதற்கு அபூ முஹை அவர்கள், ஜாகிர் நாயக் அவர்கள் சொல்வது சரியானது தான் இஸ்லாமில் இப்படித்தான் சட்டம் என்று ஒரு கட்டுரையை எழுதினார்.
 

 

 

 

இதற்கு நான் மறுபடியும் ஒரு மறு உத்தரவு எழுதினேன்.
 

 

 

 

இந்த என் கட்டுரைக்கு ஒரு இஸ்லாமிய சகோதரர் எனக்கு இரண்டு கேள்விகளை கேட்டு பின்னூட்டம் இட்டுள்ளார், அதற்கு பதில் அளிக்கும் வண்ணமாக இக்கட்டுரை எழுதப்படுகிறது.
 

 

என் கட்டுரைக்கு வந்த பின்னூட்டம்
 

 

Dear Umar,

 

 

Good Morning!

 

Do you know in Quran - Chapter al-bakara 2:256 saying that, there is 'NO' compulsion in Islam that everyone must adopt Islam as our religion. Yes. It is your right to accept about if you will! Please let me know where in Quran or Hadith stating if a muslim left from Islam, he/she must kill? I waiting for your reply. My ID : aljabbar@gmail.com

 

Source:  http://unmaiadiyann.blogspot.com/2008/05/conditions-apply.html

 

ஈஸா குர்‍ஆன் பதில்
 

 

 

அன்புள்ள அல்ஜப்பார் அவர்களே, உங்கள் பின்னூட்டத்திற்காக நன்றி.
 

 

உங்கள் பின்னூட்டத்தில் இரண்டு விவரங்களை கொடுத்தீர்கள். அதாவது,
 

 

1) குர்-ஆன் 2:256ம் வசனம் "இஸ்லாமில் கட்டாயமில்லை" என்றுச் சொல்கிறது, இது எனக்கு தெரியுமா? என்று கேட்டீர்கள்.
 

 

2) இரண்டாவதாக, குர்-ஆனிலோ, ஹதீஸ்களிலோ "இஸ்லாமை விட்டு வேறு மதத்திற்கு மாறுபவர்களைக் கொல்லூங்கள்" என்ற வசனம் எங்கே உள்ளது எனக்கு தெரிவியுங்கள் என்று கேள்வி கேட்டுள்ளீர்கள்.
 

 

உங்களின் இந்த இரண்டு விவரங்கள் பற்றிய என் விளக்கத்தை இங்கு தருகிறேன்.
 

 

1) குர்-ஆன் 2:256ம் வசனம் (இஸ்லாமில் கட்டாயமில்லை), இரத்து செய்யப்பட்ட(து)தா?
 

 

இந்த வசனம்(2:256)  குர்-ஆனில் இருப்பது எனக்குத் தெரியும், அதே நேரத்தில், இந்த வசனம் இரத்துசெய்யப்பட்டது என்று சில இஸ்லாமிய அறிஞர்கள் சொல்கிறார்கள்.
 

 

எப்போதெல்லாம், இஸ்லாமியர்கள் "இஸ்லாம் ஒரு அமைதி மதம் என்று" காட்ட விரும்புவீர்களோ அப்போது நீங்கள் மேற்கோள் காட்டும் வசனம் இதுவாகத்தான் பெரும்பான்மையாக இருக்கும்.
 

 

இவ்வசனம் இரத்துசெய்யப்பட்டதா? இதோ சில விவரங்கள்:
 

 

1) பொதுவாக இரத்துசெய்வது பற்றிய குர்‍ஆன் வசனம்:
 

 

குர்-ஆன் 2:106

ஏதேனும் ஒரு வசனத்தை நாம் மாற்றினால் அல்லது அதனை மறக்கச் செய்தால் அதைவிட சிறந்ததையோ அல்லது அது போன்றதையோ நாம் கொண்டுவருவோம். நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப்பொருட்களின் மீதும் சக்தியுள்ளவன் என்பதை நீர் அறியவில்லையா?

 

 
அல்லா தன் வசனத்தை சில நேரங்களில் மாற்றுவார், அதற்கு பதிலாக வேறு வசனத்தை இறக்குவார் என்றுச் சொல்கிறார்.[1]
 

 

2) குர்-ஆன் வசனங்கள் 9:73, 9:123, 48:16 போன்றவைகள், குர்-ஆன் 2:256ஐ இரத்து செய்கின்றன:

 

 
சில இஸ்லாமிய அறிஞர்கள், கீழ்கண்ட வசனங்கள், 2:256ம் வசனத்தை இரத்து செய்துவிட்டது என்றுச் சொல்கிறார்கள்.

 

 
(9:73) நபியே! காஃபிர்களுடனும், முனாஃபிக்குகளுடனும் நீர் அறப்போர் செய்வீராக மேலும் அவர்களை கண்டிப்பாக நடத்துவீராக (மறுமையில்) .............

 

(9:123) நம்பிக்கை கொண்டவர்களே! உங்களை அடுத்திருக்கும் (தொல்லை விளைவிக்கும்) காஃபிர்களுடன் போர் புரியுங்கள்; உங்களிடம் கடுமையை அவர்கள் காணட்டும் .............

 

(48:16) பின் தங்கிவிட்ட நாட்டுப்புறத்து அரபிகளிடம்; "நீங்கள் சீக்கரத்தில் மிக்க பலசாலிகளான ஒரு சமூகத்தாரிடம் (அவர்களை எதிர்த்துப் போரிட) அழைக்கப்படுவீர்கள், அவர்களுடன் நீங்கள் போரிட வேண்டும்; அல்லது அவர்கள் முற்றிலும் பணிய வேண்டும், ...........

[2]

 

Source:  http://www.answering-islam.org/Hahn/mappe.html

 

 
3) குர்-ஆனில் உள்ள மன்னிப்பு சம்மந்தப்பட்ட எல்லா வசனங்களையும், குர்-ஆன் 9:5 இரத்து செய்துவிடுகிறது.[3]

 

 

Suyuti in his book استنباط التنزيل   (Istenbat al tanzeel) says: "Every thing in the Qur'an about forgiveness is abrogated by verse 9:5."

 

Al-Shawkani in his book السيل الجرار (Alsaylu Jarar 4:518-519) says: "Islam is unanimous about fighting the unbelievers and forcing them to Islam or submitting and paying Jiziah (special tax paid only by Christians or Jews) or being killed.   [The verses] about forgiving them are abrogated unanimously by the obligation of fighting in any case."

 

Source: http://www.answering-islam.org/Terrorism/peace-loving.html

 

 
4) islamqa.com அளித்த பதில்(பத்வா): குர்-ஆன் 2:256ம் வசனம் இரத்து செய்யப்பட்டது:

 

ஆயிரக்கணக்கான இஸ்லாமிய கேள்விகளுக்கு  பதில்கள் அளிக்கும் தளமாகிய "Islam QA" என்றத் தளம், இவ்வசனம் இரத்து செய்யப்பட்டுவிட்டது என்று "பத்வா (Fatwa No: 34770)" கொடுத்துள்ளது. அந்த பதிலை இங்கு படிக்கவும்: http://islamqa.com/en/ref/34770

 

 
கேள்வி:

 

 
There is no compulsion to accept Islam

 

Some friends say that whoever does not enter Islam, that is his choice and he should not be forced to become Muslim, quoting as evidence the verses in which Allaah says (interpretation of the meaning): 

"And had your Lord willed, those on earth would have believed, all of them together. So, will you (O Muhammad) then compel mankind, until they become believers"

[Yoonus 10:99] 

"There is no compulsion in religion"

[al-Baqarah 2:256] 

What is your opinion concerning that?.

 

 
பதில்:

 

Praise be to Allaah.  

 

The scholars explained that these two verses, and other similar verses, have to do with those from whom the jizyah may be taken, such as Jews, Christians and Magians (Zoroastrians). They are not to be forced, rather they are to be given the choice between becoming Muslim or paying the jizyah.

 

Other scholars said that this applied in the beginning, but was subsequently abrogated by Allaah's command to fight and wage jihad. So whoever refuses to enter Islam should be fought when the Muslims are able to fight, until they either enter Islam or pay the jizyah if they are among the people who may pay jizyah. The kuffaar should be compelled to enter Islam if they are not people from whom the jizyah may be taken, because that will lead to their happiness and salvation in this world and in the Hereafter. Obliging a person to adhere to the truth in which is guidance and happiness is better for him than falsehood. Just as a person may be forced to do the duty that he owes to other people even if that is by means of imprisonment or beating, so forcing the kaafirs to believe in Allaah alone and enter into the religion of Islam is more important and more essential, because this will lead to their happiness in this world and in the Hereafter. This applies unless they are People of the Book, i.e., Jews and Christians, or Magians, because Islam says that these three groups may be given the choice: they may enter Islam or they may pay the jizyah and feel themselves subdued.

 

Some of the scholars are of the view that others may also be given the choice between Islam and jizyah, but the most correct view is that no others should be given this choice, rather these three groups are the only ones who may be given the choice, because the Prophet (peace and blessings of Allaah be upon him) fought the kuffaar in the Arabian Peninsula and he only accepted their becoming Muslim. And Allaah says (interpretation of the meaning):

 

"But if they repent [by rejecting Shirk (polytheism) and accept Islamic Monotheism] and perform As-Salaah (Iqaamat-as-Salaah), and give Zakaah, then leave their way free. Verily, Allaah is Oft-Forgiving, Most Merciful"

 

[al-Tawbah 9:5]

 

He did not say, "if they pay the jizyah". The Jews, Christians and Magians are to be asked to enter Islam; if they refuse then they should be asked to pay the jizyah. If they refuse to pay the jizyah then the Muslims must fight them if they are able to do so. Allaah says (interpretation of the meaning):

 

"Fight against those who (1) believe not in Allaah, (2) nor in the Last Day, (3) nor forbid that which has been forbidden by Allaah and His Messenger  (Muhammad), (4) and those who acknowledge not the religion of truth (i.e. Islam) among the people of the Scripture (Jews and Christians), until they pay the Jizyah with willing submission, and feel themselves subdued"

 

[al-Tawbah 9:29]

 

And it was proven that the Prophet (peace and blessings of Allaah be upon him) accepted the jizyah from the Magians, but it was not proven that the Prophet (peace and blessings of Allaah be upon him) or his companions (may Allaah be pleased with them) accepted the jizyah from anyone except the three groups mentioned above.

 

The basic principle concerning that is the words of Allaah (interpretation of the meaning):

 

"And fight them until there is no more Fitnah (disbelief and polytheism, i.e. worshipping others besides Allaah), and the religion (worship) will all be for Allaah Alone [in the whole of the world]"

 

[al-Anfaal 8:39]

 

"Then when the Sacred Months (the 1st, 7th, 11th, and 12th months of the Islamic calendar) have passed, then kill the Mushrikoon (see V.2:105) wherever you find them, and capture them and besiege them, and lie in wait for them in each and every ambush. But if they repent [by rejecting Shirk (polytheism) and accept Islamic Monotheism] and perform As-Salaah (Iqaamat-as-Salaah), and give Zakaah, then leave their way free. Verily, Allaah is Oft-Forgiving, Most Merciful"

 

[al-Tawbah 9:5]

 

This verse is known as Ayat al-Sayf (the verse of the sword).

 

These and similar verses abrogate the verses which say that there is no compulsion to become Muslim.

 

And Allaah is the Source of strength.

 

Source: http://islamqa.com/en/ref/34770

 

 

 
இஸ்லாமியர்கள் "இஸ்லாமில் கட்டாயமில்லை" என்பதை மற்றவர்களுக்கு எடுத்துரைக்க பயன்படுத்தும் குர்‍ஆன் 2:256ம் வசனம் இரத்து செய்யப்பட்டு அதற்கு பதிலாக வேறு வசனங்கள் இறக்கப்பட்டதென்று, பல இஸ்லாமிய அறிஞர்கள் சொன்ன கருத்தை நான் இங்கு முன்வைத்தேன். இது என் கருத்தல்ல.

 

 
இனி "குர்‍ஆன் 2:256ம்" வசனம் குர்‍ஆனில் இருந்தாலும் அதை பின்பற்றவேண்டிய அவசியம் முஸ்லீம்களுக்கு இல்லை என்ற தோரணையில் இஸ்லாமிய அறிஞர்கள் சொல்கிறார்கள். எனவே, அருமை நண்பர் "அல் ஜப்பார்" அவர்கள் தான் முடிவு செய்யவேண்டும், அதாவது அவர் எனக்கு சொன்ன இந்த வசனம் இரத்து செய்யப்பட்டதா இல்லையா ? என்பதை அவர் தான் முடிவு செய்யவேண்டும்.

 

 
அல் ஜப்பார் அவர்களே, குர்‍ஆன் 2:256ம் வசனம் இரத்து செய்யப்பட்டது என்று சொல்லும் இஸ்லாமிய அறிஞர்கள் அனைவரும் தவறு செய்கிறார்கள் என்று நீங்கள் எண்ணுகின்றீர்களா? அப்படி எண்ணினால், இஸ்லாமுக்கு இதனால் உண்டான இழுக்கை நீக்க வேண்டிய கடமை உங்களுடையது என்னுடையது அல்ல? இந்த அறிஞர்களுக்கு நீங்கள் பதில் சொல்வீர்களோ இல்லையோ? அல்லது இவ்வசனம் இரத்து செய்யப்படவில்லை என்று ஆதாரத்தோடு விவரங்களைச் சொல்லி, உங்கள் இஸ்லாமிய அறிஞர்களை திருந்திவிடும்படி சொல்வீர்களோ இல்லையோ? அது உங்கள் விருப்பம்.

 

 
உண்மையிலேயே "இஸ்லாமில் கட்டாயமில்லை" என்பதை நீங்கள்  நம்புகிறவராக இருப்பீர்களானால், குறைந்தபட்சம் நான் மேலே குறிப்பிட்ட இஸ்லாம் கேள்விபதில் என்ற தளத்திற்கு மெயில் அனுப்பி, அவர்கள் தவறை உணரச்செய்யுங்கள். அப்படி இல்லை அவர்கள் சொல்வது தான் சரியானது என்றுச் சொல்வீர்களானால், எனக்கு இந்த வசனம் பற்றி நீங்கள் எழுதியது  ஒரு ஏமாற்று வேலை என்பது மட்டும் நிச்சயம். குர்‍ஆனில் இப்படிப்பட்ட வசனம்(2:256) இருப்பது பற்றி எனக்கு தெரிவிப்பதை விட, உங்கள் இஸ்லாமியர்களுக்கு, அறிஞர்களுக்கு தெரிவிப்பது தான் உங்களின் முக்கியமான கடமையாக இப்போது உள்ளது என்பது என் கருத்து.

 

 
அடுத்து உங்களுடைய அடுத்த கேள்விக்கு என் கருத்தைச் சொல்கிறேன்.

 

 

 

 
2) இரண்டாவதாக, குர்-ஆனிலோ, ஹதீஸ்களிலோ "இஸ்லாமை விட்டு வேறு மதத்திற்கு மாறுபவர்களைக் கொல்லூங்கள்" என்ற வசனம் எங்கே உள்ளது எனக்கு தெரிவியுங்கள் என்று கேள்வி கேட்டுள்ளீர்கள்.

 

 

 
அருமை நண்பர் அல் ஜப்பார் அவர்களே, இந்த கேள்வியை நீங்கள் கேட்கவேண்டிய ஆள் நான் அல்ல.

 

இந்த கேள்வியை என்னிடம் அல்ல, இதை நீங்கள் மருத்துவர் ஜாகிர் நாயக் அவர்களிடம் கேட்கவேண்டும், மற்றும் இதை நீங்கள், நண்பர் "அபூ முஹை" அவர்களிடம் கேட்கவேண்டும்.

 

 
ஏன் நான் இப்படி சொல்கிறேன் என்று ஆச்சரியப்படவேண்டாம். ஏனென்றால், இஸ்லாமை விட்டு வெளியேறினால் மரண தண்டனை உண்டு என்று நான் வாதட வரவில்லை. இதைச் சொன்னவர், நம் அருமை இஸ்லாமிய அறிஞர் ஜாகிர் நாயக் அவர்கள்.

 

 
இப்படி தண்டனை கொடுப்பது சரியானது தான், ஒருவர் "இஸ்லாமில் இணையும் போது" அவர் தன் உயிரை இஸ்லாம் எடுக்கவும் இஸ்லாமிய சட்டத்திற்கு அதிகாரம் கொடுத்துத் தான் சேறுகிறார் என்றுச் சொன்னவரும் நான் அல்ல. இதைச் சொன்னவர், சகோதரர் அபூ முஹை அவர்கள் தான்.

 

 
இந்த சவாலை இவர்கள் இருவருக்கும் இன்னும் இப்படி இஸ்லாமை விட்டு வெளியேறுபவர்களை இஸ்லாம் கொல்லச்சொல்கிறது என்றுச் சொல்லும் மற்ற இஸ்லாமிய அறிஞர்களுக்கும் நீங்கள் வைக்கவேண்டுமே ஒழிய என்னிடம் அல்ல.

 

 
அதாவது, உங்கள் வரிகளைக் கண்டால், இஸ்லாம் இப்படி எங்கும் சொல்லவில்லை என்றுச் சொல்கிறீர்கள், அதிலும் குர்‍ஆனிலும், ஹதீஸ்களிலும் இப்படி சொல்லப்படவில்லை என்றுச் சொல்கிறீர்கள். நீங்கள்  உண்மையாக இப்படி நம்புவீர்களானால், இந்த கேள்வியை அப்படியே திருப்பி, உங்கள் இஸ்லாமிய அறிஞர்களாகிய ஜாகிர் நாயக்கிற்கும், அபூ முஹை அவர்களுக்கும் கேட்டுப்பாருங்கள்.

 

 
உண்மையைச் சொல்லப்போனால், உங்கள் கருத்தும் என் கருத்தும் ஒன்று தான். அதாவது, அல்லா இப்படி சொல்லவில்லை என்று மிகவும் நம்பிக்கையாக நீங்கள் நம்புகிறீர்கள். அதே போலத்தான் நானும் நம்புகிறேன், ஒரு உண்மையான இறைவன் இப்படி கட்டளை கொடுக்கமாட்டார் என்று நானும் நம்புகிறேன். உங்களுக்கும் எனக்கும் ஒரு வித்தியாசம் என்னவென்றால், நீங்கள் இஸ்லாமுக்குள் இருந்து இந்த கேள்வியை கேட்டுள்ளீர்கள், நான் இஸ்லாமுக்கு வெளியே இருந்து கேட்கிறேன், அவ்வளவு தான்.  

 

 
ஜாகிர் நாயக் அவர்கள் சொன்ன கருத்து எப்படி நியாயமாகும் என்றுத் தான் நான் கேட்டேன், அதே போல, அபூ முஹை அவர்களும் நாயக் அவர்கள் சொல்வதை அங்கீகரித்ததால், நானும் இது எப்படி நியாயம் என்று கேட்டேன். எனவே, என்னிடம் நீங்கள் கேட்க வேண்டிய கேள்வி இது அல்ல. எனக்கு முன் வைக்க வேண்டிய சவால் இது அல்ல. இதை நீங்கள் "இஸ்லாமை விட்டு வெளியேறுபவனை" கொல்லவேண்டும் என்றுச் சொல்கின்ற எல்லாருக்கும் முன்பாக வைக்கவேண்டிய கேள்வி இது.

 

 
முடிவுரை: உண்மையிலேயே நீங்கள் சொன்னதை நம்புகிறவராக நீங்கள் இருப்பீரானால், உடனே, அபூ முஹை அவர்களுக்கு இந்த கேள்வியை வையுங்கள். சரி, உங்கள் வேலை சுலபம் ஆகவேண்டும் என்பதற்காக நானே அதை அபூ முஹை அவர்களுக்கு வைக்கிறேன்.
 

 

அருமை அபூ முஹை அவர்களே, குர்‍ஆனிலோ, ஹதீஸ்களிலோ இப்படி வசனம் வரவில்லை என்று அல் ஜப்பார் கேட்கிறார், அதாவது சவால் விடுகிறார். உங்களால் முடிந்தால் அவருக்கு பதில் அளியுங்கள். இந்த சவால் ஜாகிர் நாயக் அவர்களின் வார்த்தைகளை அங்கீகரிக்கும் நண்பர்களுக்கும் பொருந்தும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

 

 
கடைசியாக, அல் ஜப்பார் அவர்களே, உங்கள் முதலாவது விவரமாகிய குர்‍ஆன் 2:256ம் வசனம் இரத்துசெய்யப்பட்டு விட்டது என்று இஸ்லாமியர்கள் சொல்லும் விவரங்களுக்கு உங்கள் பதில் என்ன? இந்த வசனம் குர்‍ஆனில் இருப்பது எனக்கு தெரியும், ஆனால், இப்படி இது இரத்துசெய்யப்பட்டு விட்டது என்று இஸ்லாமிய அறிஞர்கள் சொல்வது உங்களுக்குத் தெரியுமா? இது சரியா தவறா என்பதை நீங்கள் தான் ஆராய்ந்து முடிவு செய்யவேண்டும்.

 

 
அடுத்ததாக, நீங்கள் முன்வைத்த சவாலை எனக்கு வைக்காமல், ஜாகிர் நாயக் அவர்களுக்கும், அபூ முஹை அவர்களுக்கும் கேளுங்கள், அவர்கள் தான் இப்படிச் சொன்னார்கள், நான் அதை எதிர்த்தேன் அவ்வளவு தான் (நீங்கள் இப்போது எதிர்ப்பது போல).

 

-------------------------------------------------

 

 

பின் குறிப்புக்கள்:

 

[1] இந்த வசனத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பவர்கள் எதிர்மறையான பொருள் வரும்படி மொழிபெயர்த்துள்ளார்கள்.

A.Yusuf Ali

None of Our revelations do We abrogate or cause to be forgotten, but We substitute something better or similar: Knowest thou not that Allah Hath power over all things?

 

Marmaduke Pickthall

Nothing of our revelation (even a single verse) do we abrogate or cause be forgotten, but we bring (in place) one better or the like thereof. Knowest thou not that Allah is Able to do all things ?

 

Dr Hilali &  Dr. Mohsin Khan

Whatever a Verse (revelation) do We abrogate or cause to be forgotten, We bring a better one or similar to it. Know you not that Allâh is able to do all things?

 

M.H. Shakir 

Whatever communications We abrogate or cause to be forgotten, We bring one better than it or like it. Do you not know that Allah has power over all things?

 

[2] Some Quranic exegetes state that Qur'an 2:256 has been abrogated by the following verses:

 

O Prophet! Strive against the disbelievers and the hypocrites! Be harsh with them.... (9:73)

 

O ye who believe! Fight those of the disbelievers who are near to you, and let them find harshness in you.... (9:123)

 

Say unto those of the wondering Arabs who were left behind: Ye will be called against a folk of mighty prowess to fight them until they surrender.... (48:16)[7]

 

http://www.answering-islam.org/Hahn/mappe.html

 

[3]  குர்‍ஆன் 9:5  (போர் விலக்கப்பட்ட துல்கஃதா, துல்ஹஜ்ஜு, முஹர்ரம், ரஜபு ஆகிய நான்கு) சங்ககைமிக்க மாதங்கள் கழிந்து விட்டால் முஷ்ரிக்குகளைக் கண்ட இடங்களில் வெட்டுங்கள், அவர்களைப் பிடியுங்கள்; அவர்களை முற்றுகையிடுங்கள், ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் அவர்களைக் குறிவைத்து உட்கார்ந்திருங்கள் - ஆனால் அவர்கள் (மனத்திருந்தி தம் பாவங்களிலிருந்து) தவ்பா செய்து மீண்டு, தொழுகையையும் கடைப்பிடித்து (ஏழைவரியாகிய) ஜகாத்தும் (முறைப்படிக்) கொடுத்து வருவார்களானால் (அவர்களை) அவர்கள் வழியில் விட்டுவிடுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.

 

 

 

Wednesday, May 14, 2008

இஸ்லாமும், நபிகளின் பாவங்களும் : பாகம் -1 (Islam and the Sins of the Prophets)




இஸ்லாமும், நபிகளின் பாவங்களும் பாகம் 1


முன்னுரை: சமீபகாலமாக கிறிஸ்தவர்களை விட முஸ்லீம்கள் பைபிளை அதிகமாக படிக்கிறார்கள் என்றுச் சொல்லத்தோன்றுகிறது. முஸ்லீம்கள் பைபிளின் பழைய ஏற்பாட்டில் உள்ள சில நிகழ்ச்சிகளை எடுத்துக்காட்டி, ஒரு தீர்க்கதரிசி என்பவர் இப்படிப்பட்ட தீய மற்றும் கீழ்தரமான செயல்களை செய்யமாட்டார். தீர்க்கதரிசிகள் பரிசுத்தமானவர்கள், எனவே தான் குர்‍ஆன் தீர்க்கதரிசிகளைப்பற்றிச் சொல்லும் போது, அவர்கள் இவ்வுலக தீய செயல்களுக்கு அப்பாற்பட்டவர்கள் என்றுச் சொல்கிறது என்று முஸ்லீம்கள் சொல்கின்றனர். பைபிளில் உள்ள இந்த நிகழ்ச்சிகள் தவறானவையாகும், அதனால், தான் பைபிள் வேதம் இல்லை என்று நாங்கள் சொல்கிறோம் என்று தங்கள் வாதத்தை முன்வைக்கின்றனர்.

ஆனால், குர்‍ஆனும், இஸ்லாமிய பாரம்பரிய நூல்களாகிய ஹதீஸ்களும் தீர்க்கதரிசிகளைப் பற்றி தரம்குறைவாக சொல்கிறது என்பதை மட்டும் வெளியே சொல்லமாட்டார்கள். பைபிளில் சொல்லப்பட்ட அதே கதை குர்‍ஆனில் இருந்தாலும் அதைப்பற்றி மூச்சு விடமாட்டர்கள் முஸ்லீம்கள். தாவீது விபச்சாரம் செய்தார் என்று பைபிள் சொல்வது தவறானது என்றுச் சொல்லி கட்டுரை எழுதினார்கள் இஸ்லாமியர்கள். ஆனால், இதே நிகழ்ச்சியைப் பற்றி குர்‍ஆனும், ஹதீஸ்களும், இஸ்லாமிய சரித்திர நுல்களும் சொல்கிறது என்பதை இவர்கள் மறைக்கிறார்கள்.

இஸ்லாமும் நபிகளின் பாவங்களும் பாகம் 1, பாகம் 2 என்று இரண்டு கட்டுரைகளில் இஸ்லாமியர்கள் சொல்வது பொய்யான தகவல் என்பதை நாம் பார்க்கப்போகிறோம். முதல் பாகமாகிய இந்த கட்டுரையில், ஆபிரகாம், லோத்து, யோசேப்பு பற்றி குர்‍ஆன் என்ன சொல்கிறது என்பதையும், இரண்டாம் பாகத்தில் "தாவீது விபச்சாரம் செய்த நிகழ்ச்சிப் பற்றி" இஸ்லாம் என்ன சொல்கிறது என்பதை காண்போம், கர்த்தருக்கு சித்தமானால்.

இஸ்லாமும், நபிகளின் பாவங்களும் பாகம் 1

Islam and the Sins of the Prophets

ஆசிரியர்: Sam Shamoun

தீர்க்கதரிசிகளின் வாழ்க்கையை எதிர்மறையான நிலையில் பைபிள் காட்டுகின்றது என்றுச் சொல்லி, முஸ்லீம்கள் அடிக்கடி பைபிளை தாக்குவார்கள். நோவா அதிகமாக திராட்சை ரசத்தை குடித்த நிகழ்ச்சியும், லோத்து தன் மகள்களோடு சயனித்ததும், தாவீது விபச்சாரம் செய்ததும் இன்னுமுள்ள நிகழ்ச்சிகள் அனைத்தும் உண்மையான இறைவனின் தீர்க்கதரிசிகளின் தரத்தை குறைப்பதாக இருக்கிறது, என்று முஸ்லீம்கள் வாதிக்கிறார்கள். இப்படிப்பட்ட வெட்கப்படக்கூடிய செயல்களுக்கு தீர்க்கதரிசிகள் தூரமானவர்கள் என்று முஸ்லீம்கள் சொல்லுவார்கள். இந்த நிகழ்ச்சிகளை ஆதாரமாக வைத்துக்கொண்டு பைபிள் திருத்தப்பட்டது என்று முஸ்லீம்கள் சொல்லுவார்கள்.

இப்படிப்பட்ட கேள்விகள் பலவற்றிற்கு ஏற்கனவே பதில்கள் அளிக்கப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு கீழ் கண்ட கட்டுரைகளை பார்க்கவும்.

http://answering-islam.org/Gilchrist/texthistory.html#nine
http://answering-islam.org/Responses/alcohol.html
http://answering-islam.org/BibleCom/gen19-28.html

குர்‍ஆனும் இஸ்லாமிய பாரம்பரிய நூல்களும் தீர்க்கதரிசிகளைப் பற்றிச் சொல்லும் போது அவர்கள் நூறு சதவிகிதம் ப‌ரிசுத்தவான்களாக காட்டாமல் சிறிது குறைவாகவே காட்டுகின்றது என்பதை இந்த கட்டுரையில் உங்களுக்கு காட்டவிரும்புகிறோம். இஸ்லாமிய‌ ஆர‌ம்ப‌ கால‌ நூல்க‌ள் கூட தாவீது செய்த விபச்சார செயலோடு கூட‌ சேர்த்து, இப்ப‌டிப்ப‌ட்ட‌ நிக‌ழ்ச்சிக‌ளை அங்கீக‌ரிக்கின்ற‌து என்ப‌தை அறியும் போது இதை ப‌டிக்கின்ற‌ உங்க‌ளுக்கு ஆச்ச‌ரிய‌மாக‌ இருக்கும்.

1. இஸ்லாமும் ஆபிரகாம் பொய் சொல்லுதலும்:


உதாரணத்திற்கு, குர்‍ஆனும், ஹதீஸ்களும் ஆபிரகாம் பொய் சொன்னார் என்று அங்கீகரிகின்றன.


 

பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3358

'இப்ராஹீம்(அலை) அவர்கள் மூன்று பொய்களைத் தவிர வேறு பொய் எதுவும் பேசியதில்லை. அவற்றில் இரண்டு அல்லாஹ்வின் (மார்க்கத்தின் நலன் காக்கும்) விஷயத்தில் சொன்னவையாகும். அவை: 1. (அவரை இணைவைக்கும் திருவிழாவிற்கு மக்கள் அழைத்தபோது,) 'நான் நோயுற்றிருக்கிறேன்" என்று (அதில் கலந்து கொள்ளாமல் தவிர்ப்பதற்காகக்) கூறியதும். 2. (சிலைகளை உடைத்துப் பெரிய சிலையின் தோளில் கோடரியை மாட்டிவிட்டு மக்கள், 'இப்படிச் செய்தது யார்?' என்று கேட்டபோது, 'ஆயினும், இவர்களில் பெரியதான இந்தச் சிலை தான் இதைச் செய்தது" என்று கூறியதுமாகும். . (மூன்றாவது முறையாகப் பொய் சொன்ன சூழ்நிலை வருமாறு:) ஒரு நாள் இப்ராஹீம்(அலை) அவர்களும் (அவர்களின் துணைவியார்) சாரா(அலை) அவர்களும் கொடுங்கோல் மன்னர்களில் ஒருவனுடைய வழியாகச் சென்றார்கள். அப்போது அந்த மன்னனிடம் (அவர்களைக் குறித்து) 'இங்கு ஒருவர் வந்திருக்கிறார்: அவருடன் அவரின் அழகான மனைவியும் இருக்கிறாள்" என்று கூறப்பட்டது. உடனே, இப்ராஹீம்(அலை) அவர்களை அழைத்து வரச் சொல்லி அந்த மன்னன் சாரா(அலை) அவர்களைக் கூப்பிட்டு அனுப்பினான். சாரா(அலை) அவர்கள் அவனிடம் சென்றபோது அவன் அவரைத் தன் கையால் அள்ள முயன்றான். உடனே, அவன் (வலிப்பு நோயால்) தண்டிக்கப்பட்டான். அவன் (சாரா(அலை) அவர்களிடம்), 'அல்லாஹ்விடம் எனக்காக (என் கைகளை குணப்படுத்தும்படி) பிரார்த்தனை செய். நான் உனக்குக் தீங்கு செய்ய மாட்டேன்" என்று சொன்னான். உடனே, சாரா(அலை) அவர்கள் அல்லாஹ் விடம் பிரார்த்திக்க, அவன் (வலிப்பிலிருந்து) விடுவிக்கப்பட்டான். பிறகு, இரண்டாவது முறையாக அவர்கள் அணைக்க முயன்றான். முன்பு போன்றே மீண்டும் தண்டிக்கப்பட்டான். அல்லது அதை விடக் கடுமையாகத் தண்டிக்கப்பட்டான். அப்போதும், 'எனக்காக (என் கைகளை குணப்படுத்தும்படி) அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய். நான் உனக்குத் தீங்கு செய்ய மாட்டேன்" என்று சொன்னான். அவ்வாறே அவர் பிரார்த்திக்க, அவன் (வலிப்பிலிருந்து) விடுவிக்கப்பட்டான். பிறகு, தன் காவலன் ஒருவனை அழைத்து, 'நீங்கள் என்னிடம் ஒரு மனிதரைக் கொண்டு வரவில்லை; ஒரு ஷைத்தானைத் தான் கொண்டு வந்துள்ளீர்கள்" என்று சொன்னான். பிறகு, ஹாஜர் அவர்களை, சாரா(அலை) அவர்களுக்குப் பணியாளாகக் கொடுத்தான். சாரா(அலை) அவர்கள், இப்ராஹீம்(அலை) அவர்களிடம் அவர்கள் தொழுது கொண்டிருக்கும்போது வந்தார்கள். இப்ராஹீம்(அலை) அவர்கள் கைகளால் சைகை செய்து, 'என்ன நடந்தது?' என்று கேட்டார்கள். அவர், 'அல்லாஹ் நிராகரிப்பாளனின்.. அல்லது தீயவனின்... சூழ்ச்சியை முறியடித்து, அவன் மீதே திருப்பிவிட்டான். ஹாஜிராவைப் பணிப்பெண்ணாக அளித்தான் என்று கூறினார்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

(அபூ ஹுரைரா(ரலி) கூறினார்:) வான் மழை (பிரதேச) மக்களே! அவர் (ஹாஜிரா)தான் உங்களின் தாயார்.

 
 
2. ஆபிரகாம் அல்லாவை சந்தேகித்தார் என்று கூட ஒரு ஹதீஸ் சொல்கிறது:


 

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4694

என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'

(இறைத்தூதர்) 'லூத்' (அலை) அவர்களுக்கு அல்லாஹ் கருணைகாட்டுவானாக! அன்னார் வலுவான ஓர் ஆதவாளனிடமே தஞ்சம் புகுபவர்களாக இருந்தார்கள். ஒசுஃப் (அலை) அவர்கள் கழித்த காலம் அளவிற்கு நான் சிறையில் காலம் கழித்திருந்தால் (என்னைச் சிறையிலிருந்து விடுதலை செய்ய) அழைப்பு விடுத்தவரை ஏற்று (விடுதலை பெற்று)க் கொண்டிருப்பேன். இப்ராஹீம் (அலை) அவர்களைவிட நாமே (இறைவனின் படைப்பாற்றலைக் கண்கூடாகக் கண்டு உறுதி பெற) அதிகத் தகுதியுடையவர்கள் ஆவோம். அல்லாஹ், "நீங்கள் நம்பிக்கை கொள்ளவில்லையா?' என்று கேட்டபோது அவர்கள், ஆம்; (நம்பிக்கை இருக்கத்தான் செய்கிறது) ஆயினும், என் நெஞ்சம் நிம்மதியடைவதற்காகத்தான் (இறந்ததை உயிர்ப்பித்துக் காட்டும்படி) கேட்டேன்' என்று பதிலளித்தார்கள்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

 
 
3. நாம் ஏற்றுக்கொள்ளக்கூடாத அளவிற்கு குர்‍ஆனால் எதிர்மறையாக சொல்லப்பட்டவர் இன்னொருவர் இருக்கிறார், அவர் தான் யோசேப்பு:


 

குர்‍ஆன் 12:23,24

அவர் எந்தப் பெண்ணின் வீட்டில் இருந்தாரோ, அவள் அவர்மீது விருப்பங்கொண்டு, கதவுகளைத் தாழிட்டுக் கொண்டு (தன் விருப்பதிற்கு இணங்குமாறு) "வாரும்" என்று அழைத்தாள் - (அதற்கு அவர் மறுத்து,) "அல்லாஹ் (இத்தீய செயலிலிருந்து) என்னைக் காத்தருள்வானாக் நிச்சயமாக (உன் கணவர்) என் எஜமானர், என் இடத்தை அழகாக (கண்ணியமாக) வைத்திருக்கிறார் - அநியாயம் செய்பவர்கள் நிச்சயமாக வெற்றி பெற மாட்டார்கள்" என்று சொன்னார். (குர்‍ஆன் 12:23)

ஆனால் அவளோ அவரைத் திடமாக விரும்பினாள்; அவரும் தம் இறைவனின் ஆதாரத்தைக் கண்டிராவிட்டால் அவள் மீது விருப்பம் கொண்டே இருப்பார்; இவ்வாறு நாம் அவரைவிட்டுத் தீமையையும் மானக்கேடான செயல்களையும் திருப்பிவிட்டோம் - ஏனெனில் நிச்சயமாக அவர் நம் தூய்மையான அடியார்களில் ஒருவராக இருந்தார். (குர்‍ஆன் 12:24)

And she, in whose house he was, asked of him an evil act. She bolted the doors and said: Come! He said: I seek refuge in Allah! Lo! he is my lord, who hath treated me honourably. Lo! wrong-doers never prosper. She verily desired him, and he would have desired her if it had not been that he saw the argument of his Lord. Thus it was, that We might ward off from him evil and lewdness. Lo! he was of Our chosen slaves. (S. 12:23-24 Pickthall)

 
 
"யோசேப்பு அந்த போத்திபாரின் மனைவி மீது விருப்பம் கொண்டே இருப்பார்" என்று குர்‍ஆன் சொல்கிறது, அதாவது, அந்த போத்திபாரின் மனைவியோடு அவர் விபச்சாரம் செய்ய விருப்பம் கொண்டே இருப்பார் என்று சொல்கிறது. ஆனால், பரிசுத்த பைபிள், குர்‍ஆனின் இந்த கருத்தை மறுத்துச் சொல்கிறது, அதாவது, இந்த தீய செயலை செய்ய யோசேப்பு திடமாக மறுத்தார் என்றுச் சொல்கிறது.
 
 

ஆதியாகமம் 39:6-10

ஆகையால், அவன் தனக்கு உண்டானதையெல்லாம் யோசேப்பின் கையிலே ஒப்புக்கொடுத்துவிட்டு, தான் புசிக்கிற போஜனம்தவிர தன்னிடத்திலிருந்த மற்றொன்றைக்குறித்தும் விசாரியாதிருந்தான். யோசேப்பு அழகான ரூபமும் சௌந்தரிய முகமும் உள்ளவனாயிருந்தான். சிலநாள் சென்றபின், அவனுடைய எஜமானின் மனைவி யோசேப்பின்மேல் கண்போட்டு, என்னோடே சயனி என்றாள். அவனோ தன் எஜமானுடைய மனைவியின் சொல்லுக்கு இணங்காமல், அவளை நோக்கி: இதோ, வீட்டிலே என்னிடத்தில் இருக்கிறவைகளில் யாதொன்றைக்குறித்தும் என் ஆண்டவன் விசாரியாமல், தமக்கு உண்டான எல்லாவற்றையும் என் கையில் ஒப்பித்திருக்கிறார். இந்த வீட்டிலே என்னிலும் பெரியவன் இல்லை; நீ அவருடைய மனைவியாயிருக்கிறபடியால் உன்னைத் தவிர வேறொன்றையும் அவர் எனக்கு விலக்கி வைக்கவில்லை; இப்படியிருக்க, நான் இத்தனை பெரிய பொல்லாங்குக்கு உடன்பட்டு, தேவனுக்கு விரோதமாய்ப் பாவம் செய்வது எப்படி என்றான். அவள் நித்தம் நித்தம் யோசேப்போடே இப்படிப் பேசிக்கொண்டு வந்தும், அவன் அவளுடனே சயனிக்கவும் அவளுடனே இருக்கவும் சம்மதிக்கவில்லை.

 
 
4. தன் மகள்களை கற்பழிக்க தீய மக்களிடம் ஒப்புக்கொடுத்த இஸ்லாமிய நபி லோத்து:


லோத்து தன்னிடம் வந்த விருந்தாளிகளை காப்பாற்றவேண்டி, தன் ஊரின் மக்களிடம் தன் மகள்களை ஒப்படைத்துவிடுகிறேன் என்றும், தன் விருந்தாளிகளை ஒன்றும் செய்யாமல் விட்டுவிடுங்கள் என்றும் சொன்னார் என்று குர்‍ஆன், பைபிள் சொல்வது போலவே அப்படியே சொல்லியுள்ளது.
 
 

குர்‍ஆன் 11:77 - 79

நம் தூதர்கள் (வானவர்கள்) லுத்திடம் வந்தபோது, (தம்) மக்களுக்கு அவர் பெரிதும் விசனமடைந்தார்; (அதன் காரணமாக) உள்ளம் சரங்கியவராக் "இது நெருக்கடி மிக்க நாளாகும்" என்று கூறினார். (11:77)

அவருடைய சமூகத்தார் அவரிடம் விரைந்தோடி வந்தார்கள்; இன்னும் முன்னிருந்தே அவர்கள் தீய செயல்களே செய்து கொண்டிருந்தார்கள். (அவர்களை நோக்கி லூத்) "என் சமூகத்தார்களே! இதோ இவர்கள் என் புதல்விகள்; இவர்கள் உங்களுக்கு(த் திருமணத்திற்கு)ப் பரிசத்தமானவர்கள்; எனவே நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சங்கள்; இன்னும் என் விருந்தினர் விஷயத்தில் என்னை நீங்கள் அவமானப் படுத்தாதீர்கள்; நல்ல மனிதர் ஒருவர் (கூட) உங்களில் இல்லையா?" என்று கூறினார்.( 11:78)

(அதற்கு) அவர்கள் "உம்முடைய புதல்வியரில் எங்களுக்கு எந்த பாத்தியதையுமில்லை என்பதைத் திடமாக நீர் அறிந்திருக்கிறீர்; நிச்சயமாக நாங்கள் விரும்புவது என்ன என்பதையும் நீர் அறிவீர்" என்று கூறினார்கள்.(11:79)

And when Our messengers came unto Lot, he was distressed and knew not how to protect them. He said: This is a distressful day. And his people came unto him, running towards him - and before then they used to commit abominations - He said: O my people! Here are my daughters! They are purer for you. Beware of Allah, and degrade me not in (the person of) my guests. Is there not among you any upright man? They said: Well thou knowest that we have no right to thy daughters, and well thou knowest what we want. (S. 11:77-79 Pickthall )

 


 

குர்‍ஆன் 15:67-71

(லூத்தின் விருந்தினர்களாக வாலிபர்கள் வந்திருப்பதையறிந்து) அந் நகரத்து மக்கள் மிக்க மகிழ்ச்சியுடன் வந்து சேர்ந்தார்கள். (15:67) (லூத் வந்தவர்களை நோக்கி;) "நிச்சயமாக இவர்கள் என்னுடைய விருந்தினர்கள். ஆகவே, (அவர்கள் முன்) என்னை நீங்கள் அவமானப்படுத்தி விடாதீர்கள்;" (15:68) "அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். என்னைக் கேவலப்படுத்தி விடாதீர்கள்" என்றும் கூறினார். (15:69) அதற்கவர்கள், "உலக மக்களைப் பற்றியெல்லாம் (எங்களிடம் பேசுவதை விட்டும்) நாங்கள் உம்மைத் தடுக்கவில்லையா?" என்று கேட்டார்கள். (15:70)

அதற்கவர், "இதோ! என் புதல்வியர் இருக்கிறார்கள். நீங்கள் (ஏதும்) செய்தே தீர வேண்டுமெனக் கருதினால் (இவர்களை திருமணம்) செய்து கொள்ளலாம்" என்று கூறினார். (15:71)

And the people of the city came, rejoicing at the news (of new arrivals). He said: Lo! they are my guests. Affront me not! And keep your duty to Allah, and shame me not! They said; Have we not forbidden you from (entertaining) anyone? He said: Here are my daughters, if ye must be doing (so). (S. 15:67-71 Pickthall)

 
 
தன் பிள்ளைகளின் ஆரோக்கியம், வாழ்க்கை மற்றும் குடும்ப கௌரவத்தைக் காப்பாற்றுவது ஒரு தந்தையின் கடமை இல்லையா? அவசரம் ஏற்பட்டால், தன் உயிரையும் கொடுத்து காப்பாற்றுவது ஒரு தந்தையின் கடமையில்லையா? இப்படி இருந்தும், இங்கு லோத்து என்பவர் தன் மகள்களாகிய கன்னிப்பெண்களை தீயமக்கள் கற்பழிக்க ஒப்புக்கொடுப்பதை காண்கிறோம். இதில் ஒரு முக்கியமான விவரம் என்னவென்றால், இதே கதையை பைபிளும் சொல்கிறது (பார்க்க ஆதியாகமம் 19:1- 9). இன்னும் ஒரு ஆச்சரியம் என்னவென்றால் முஸ்லீம்கள் இந்த கதைப் பற்றி ஒன்றுமே சொல்வதில்லை. இந்த கதைப் பற்றி ஏன் முஸ்லீம்கள் மூச்சுவிடுவதில்லை என்பதைப் பற்றிய காரணம் மிகவும் தெளிவாக உள்ளது, அது என்னவென்றால், இதே கதை தங்கள் புத்தகத்திலும் இருப்பதால் தான்! இது நமக்கு எதை காட்டுகிறது என்றால், பைபிளுக்கு எதிராக முஸ்லீம்களின் விமர்சனங்கள் அனைத்தும் புகையால் தங்கள் குர்‍ஆன் நிகழ்ச்சிகளை மறைக்கும் செயல்களுக்குச் சமமாகும். அதாவது பைபிளில் உள்ள அதே நிகழ்ச்சி அல்லது கதை குர்‍ஆனிலும் இருந்தால், அதை எந்த காரணத்தைக் கொண்டும் முஸ்லீம்கள் ஒரு பிரச்சனையாக வெளியே கொண்டுவரமாட்டார்கள்.

இது பரிசுத்த பைபிளைத் தாக்கும் முஸ்லீம்களின் கபடவேஷத்தை அப்படியே காட்டுகிறது. இப்படிப்பட்ட கதைகள் பைபிளில் சொல்லப்பட்டதால், அது இறைவனின் வேதம் இல்லை என்றுச் சொல்லும் அதே முஸ்லீம்கள், அதே கதை குர்‍ஆனில் இருப்பதால், குர்‍ஆன் இறைவனிடமிருந்து வந்த வேதம் என்றுச் சொல்லும் தகுதியை இழக்கிறது என்பதை ஒப்புக்கொள்ளமாட்டார்கள்.

 
 
பின் குறிப்பு: குர்‍ஆனை மொழிபெயர்க்கும் போது மொழிபெயர்ப்பாளர்கள், சில வார்த்தைகளை தங்களுக்கு சாதகமாக அடைப்பு குறிக்குள் இடுவார்கள், அது போல, லோத்து சம்மந்தப்பட்ட வசனத்தில் (திருமணம்) என்ற வார்த்தையை இட்டுள்ளார்கள். இதனால், சிலர் "லோத்து" தன் மகள்களை தன் ஊர் மக்களுக்கு திருமணம் செய்துக்கொள்ளும்படித் தான் சொன்னாரே தவிர, வேறு வகையில் அல்ல என்றுச் சொல்வார்கள். இப்படி நம் தமிழ் முஸ்லீம்கள் இந்த என் மொழிபெயர்ப்பு கட்டுரைக்கு பதில் எழுதினால், இதற்கான பதிலை நான் எழுதுவேன்.

உண்மையிலேயே லோத்து இப்படி சொன்னாரா? அவ்வூர் மக்களின் குண நலன்கள் என்ன என்று குர்‍ஆன் சொல்கிறது? ஒரு நபி இப்படி தன் இரண்டு மகள்களை, தீய ஊர் மக்கள் திருமணம் செய்துக்கொள்ள கொடுப்பேன் என்றுச் சொல்வது சரியானதா? திருமணம் என்ற பொருள் படும்படி அந்த நிகழ்ச்சி நடந்ததா? அவ்வூர் மக்களின் மனநிலை "அந்த சூழ்நிலையில்" என்னவாக இருந்தது என்று குர்‍ஆன் சொல்கிறது போன்றவற்றை நாம் சிந்திப்போம். லோத்து ஒரு நீதிமான் என்று தான் பைபிள் சொல்கிறது, ஆனால், குர்‍ஆன் அவரை ஒரு "தீர்க்கதரிசி" என்றுச் சொல்கிறது, இதைப்பற்றியும் சிந்திப்போம்.

Source: http://www.geocities.com/isa_koran/tamilpages/Authors/shamoun/SinsOfProphets-1.html

இஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்

முன் பக்கம் செல்ல

HOME PAGE

தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்

1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1

2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2

3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3

4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4

பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்

1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1

2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2

பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்

1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்

2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்