இஸ்லாம் அமைதி மார்கமா? இஸ்லாம் இனிய மார்கமா? இஸ்லாம் உண்மையான மார்கமா?

ஆன்சரிங் இஸ்லாம்

பல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்

சத்தியவான் தளம் செல்ல

Monday, December 22, 2008

குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2



 

ஏகத்துவத்திற்கு பதில் அல்லது கேள்வி
 

மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
 


ஒரே நிகழ்ச்சியை வித்தியாசமாகச் சொல்லும் அல்லா, குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 2
 
 
 
முன்னுரை: ஏகத்துவ தளத்தின் கிறிஸ்தவமும் பவுலும் என்ற தலைப்பின் கட்டுரைக்கு தொடர் பதில்கள் நாம் அளித்துக்கொண்டு இருக்கிறோம். ஏன் பவுலின் மனந்திரும்பிய நிகழ்ச்சி பற்றிய விவரங்கள் ஒவ்வொரு இடத்திலும் வித்தியாசமாக சொல்லப்பட்டுள்ளது என்று இஸ்லாமியர்கள் கேள்வியை எழுப்பினார்கள். அதற்கு நாம் இதுவரை கீழ் கண்ட பதிலை அளித்துள்ளோம்.
 
 
ஏகத்துவ தளத்திற்கு பதில்: இயேசுவும் பவுலும்:

 
 
பைபிளுக்கு இஸ்லாமியர்கள் நியமிக்கும் நிபந்தனைகளில் பைபிள் வெற்றிப் பெறுகிறது, ஆனால், அதே நிபந்தனையை குர்‍ஆனுக்கு இட்டால், அது படுதோல்வி அடைகிறது, காரணம் குர்‍ஆன் இறைவனால் இறக்கப்ப‌ட்டது இல்லை என்பதால் தான்.

 
ஒரே நிகழ்ச்சியை விவரிக்கும் போது அல்லா செய்த முரண்பாடுகளை வித்தியாசத்தை கீழ் கண்ட பாகம் 1ல் காணவும்.
 
ஒரே நிகழ்ச்சியை வித்தியாசமாகச் சொல்லும் அல்லா, குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1

மோசேயும், எரியும் புதரும்-MOSES AND THE BURNING BUSH

 
பாகம் - 2

 
 
மோசேயின் குழந்தை பருவம் பற்றி அல்லாவின் வார்த்தைகள் - MOSES' CHILDHOOD
 
 
 
மோசேயின் தாயிடம் "குழந்தையை ஆற்றில் போட்டுவிடும் படி அல்லா சொல்கிறார்", அப்படியே போட்டுவிடும் போது, பார்வோனின் குடும்பத்தார்கள் அவரை எடுத்துக்கொள்ளும் போது, மோசேயின் சகோதரி "அவர்களிடம் அக்குழந்தையை பாலூட்டி வளர்க்க ஒரு குடும்பத்தை நான் காட்டட்டுமா" என்று சொல்கிறார்கள். இந்த இரண்டு உரையாடலைப் பற்றி அல்லா சொல்லும் போது இரண்டு இடங்களில் வித்தியாசமாகச் சொல்கிறார்.

 
ஒரு நிகழ்ச்சி அல்லது உரையாடல் ஒரே மாதிரியாகத் தான் இருக்கவேண்டும், அப்படி இல்லையானால், அது வேதமாகாது என்ற கருத்துடைய இஸ்லாமியர்கள், அல்லா மோசேயின் தாயிடம் பேசிய உரையாடலையும், மோசேயின் சகோதரியின் ஒரு சின்ன உரையாடலையும் குர்‍ஆனில் ஒரே மாதிரியாக இரண்டு இடங்களில் பதிக்க அல்லா தவறிவிட்டார் என்பதைக் குறித்து என்னச் சொல்லப்போகிறார்கள்?

 
முதலில் இவ்வுரையாடல்கள் அடங்கிய குர்‍ஆன் வசனங்களைக் காண்போம். இவைகளில் அல்லா பேசிய மற்றும் மோசேயின் சகோதரி பேசிய வார்த்தைகளை சிகப்பு வண்ணத்தில் காட்டியுள்ளேன்.
 
 
மோசேயை ஆற்றில் போட்டுவிடும் படி அல்லாவின் உரையாடல்:
 
 
 
தலைப்புக்கள் குர்‍ஆன் 20:38-40 குர்‍ஆன் 28:7, 11-13
1. அல்லாவின் உரையாடல் "உம் தாயாருக்கு அறிவிக்க வேண்டியதை அறிவித்த நேரத்தை (நினைவு கூர்வீராக)! (20:38)

அவரை (குழந்தையை)ப் பேழையில் வைத்து (அப்பேழையை நீல்) நதியில் போட்டுவிடும்; பின்னர் அந்த நதி அதைக் கரையிலே கொணர்ந்து எறிந்து விடும், அங்கே எனக்கு பகைவனும், அவருக்குப் பகைவனுமாகிய (ஒரு)வன் அவரை எடுத்துக்கொள்வான்" (எனப் பணித்தோம்). மேலும், "(மூஸாவே!) நீர் என் கண் முன்னே வளர்க்கப்படுவதற்காக உம் மீது அன்பைப் பொழிந்தேன். (20:39)
நாம் மூஸாவின் தாயாருக்கு; "அவருக்கு (உன் குழந்தைக்குப்) பாலூட்டுவாயாக அவர் மீது (ஏதம் ஆபத்து வரும் என்று) நீ பயப்படுவாயானால், அவரை ஆற்றில் எறிந்து விடு - அப்பால் (அவருக்காக) நீ பயப்படவும் வேண்டாம், துக்கப்படவும் வேண்டாம்; நிச்சயமாக நாம் அவரை உன்னிடம் மீள வைப்போம்; இன்னும், அவரை (நம்) தூதர்களில் ஒருவராக்கி வைப்போம்" என்று வஹீ அறிவித்தோம். (28:7)
2. மோசேயின் சகோதரியின் உரையாடல் (பேழை கண்டெடுக்கப்பட்ட பின்) உம் சகோதரி நடந்து வந்து, 'இவரை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒருவரை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா?' என்று கேட்டாள், ஆகவே நாம் உம் தாயாரிடம், அவருடைய கண் குளிர்ச்சியடையும் பொருட்டும், அவர் துக்கம் அடையாமல் இருக்கும் பொருட்டும் உம்மை (அவர்பால்) மீட்டினோம், பின்னர் நீர் ஒரு மனிதனைக் கொன்று விட்டீர், அப்பொழுதும் நாம் உம்மை அக்கவலையிலிருந்து விடுவித்தோம், மேலும் உம்மைப் பல சோதனைகளைக் கொண்டு சோதித்தோம். அப்பால் நீர் பல ஆண்டுகளாக மதியன் வாசிகளிடையே தங்கியிந்தீர்; மூஸாவே! பிறகு நீர் (நம் தூதுக்குரிய) தக்க பருவத்தை அடைந்தீர். (20:40) இன்னும் மூஸாவின் சகோதரியிடம்; "அவரை நீ பின் தொடர்ந்து செல்" என்றும் (தாய்) கூறினாள். (அவ்வாறே சென்று ஃபிர்அவ்னின்) ஆட்கள் காண முடியாதபடி அவள் தூரத்திலிருந்து அவதை கவனித்து வந்தாள். (28:11)
நாம் முன்னதாகவே அவரை(ச் செவிலித்தாய்களின்) பாலருந்துவதை தடுத்து விட்டோம்;
(அவருடைய சகோதரி வந்து) கூறினாள்; "உங்களுக்காக பொறுப் பேற்று அவரை(ப் பாலூட்டி) வளர்க்கக் கூடிய ஒரு வீட்டினரை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? மேலும் அவர்கள் அவர் நன்மையை நாடுபவராக இருப்பார்கள்." (28:12)
இவ்வாறு அவருடைய தாயாரின் கண்குளிர்ச்சியடையவும், அவள் துக்கப்படாதிருக்கவும், நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது என்பதை அவள் அறிந்து கொள்வதற்காகவும் நாம் அவரை அவர் தாயாரிடத்தே திரும்பச் சேர்த்தோம் - எனினும், அவர்களில் பெரும்பாலோர் (இதை) அறிய மாட்டார்கள். (28:13)
 
 
 
1. அல்லாவின் உரையாடல் (குர்‍ஆன் 20:39 & 28:7)

 
குர்‍ஆன் 20:39 மற்றும் 28:7 என்ற வசனங்களில் அல்லா மோசேயின் தாயிடம் பேசிய வார்த்தைகள் கொடுக்கப்பட்டுள்ளது.
 
 
(குர்‍ஆன் 20:39) அவரை (குழந்தையை)ப் பேழையில் வைத்து (அப்பேழையை நீல்) நதியில் போட்டுவிடும்; பின்னர் அந்த நதி அதைக் கரையிலே கொணர்ந்து எறிந்து விடும், அங்கே எனக்கு பகைவனும், அவருக்குப் பகைவனுமாகிய (ஒரு)வன் அவரை எடுத்துக்கொள்வான்"…..

 
(குர்‍ஆன் 28:7) நாம் மூஸாவின் தாயாருக்கு; "அவருக்கு (உன் குழந்தைக்குப்) பாலூட்டுவாயாக அவர் மீது (ஏதம் ஆபத்து வரும் என்று) நீ பயப்படுவாயானால், அவரை ஆற்றில் எறிந்து விடு - அப்பால் (அவருக࠯?காக) நீ பயப்படவும் வேண்டாம், துக்கப்படவும் வேண்டாம்; நிச்சயமாக நாம் அவரை உன்னிடம் மீள வைப்போம்; இன்னும், அவரை (நம்) தூதர்களில் ஒருவராக்கி வைப்போம்" என்று வஹீ அறிவித்தோம்.
 
 
மேலே உள்ள வசனங்கள் குறிப்பிடுவது அல்லாவின் ஒரே உரையாடல், ஆனால், எவ்வளவு வேறுபாடுகள் பாருங்கள். இவ்வசனங்களைக் காணும்போது கீழ் கண்ட கேள்விகள் எழுகின்றன. ஏன் இந்த வித்தியாசங்கள் என்பதை இஸ்லாமியர்கள் தான் விளக்கவேண்டும்.
 
 
1. குர்‍ஆன் 20:39ம் வசனத்தில் "குழந்தையை பேழையில் வைத்து நதியில் போட்டு விடும்" என்று உள்ளது ஆனால், குர்‍ஆன் 28:7ல், "நீ பயப்பட்டால் ஆற்றில் போட்டுவிடு" என்று வருகிறது. ஏன் இந்த வித்தியாசம். அதாவது, "நீ பயப்பட்டால்" என்ற வார்த்தையை அல்லா சொன்னாரா இல்லையா? ஒருமுறை சொன்னவர் இன்னொரு முறை ஏன் சொல்லவில்லை?

 
2. இரண்டு இடங்களிலும் பேசியவர் "அல்லா" தான் என்றுச் சொன்னால், தான் பேசியதை தானே மறந்துவிட்டாரா?

 
3. ஆற்றில் விட்டுவிட்டு, அவரைப் பற்றி "நீ பயப்படவும் வேண்டாம், துக்கப்படவும் வேண்டாம்" என்று குர்‍ஆன் 28:7ல் அல்லா சொல்கிறார். ஆனால், இந்த விவரத்தை குர்‍ஆன் 20:38ல் அல்லா சொல்லவில்லை? ஏன் இந்த வித்தியாசம்?

 
4. குர்‍ஆன் 20:39ல் "அங்கே எனக்கு பகைவனும், அவருக்குப் பகைவனுமாகிய (ஒரு)வன் அவரை எடுத்துக்கொள்வான்" என்றுச் சொல்கிறார். ஆனால், இந்த விவரம் குர்‍ஆன் 28:7ல் இல்லை. ஏன் இந்த வித்தியாசம்?

 
5. குர்‍ஆன் 28:7ல், "நிச்சயமாக நாம் அவரை உன்னிடம் மீள வைப்போம்; " என்றும், "அவரை (நம்) தூதர்களில் ஒருவராக்கி வைப்போம்" என்றும் சொல்லியுள்ளார். ஆனால், இந்த விவரம் குர்‍ஆன் 20:39ல் இல்லை? அது ஏன்?

 
6. உண்மையில் மோசேயின் தாயிடம் குர்‍ஆன் 20:39ம் வசனத்தில் வருவதைப்போலச் சொனனாரா அல்லது குர்‍ஆன் 28:7ம் வசனத்தில் வருவதைப்போலச் சொன்னாரா?
 
 
இவைகள், எல்லாம் அறிந்த அல்லா பேசிய உரையாடல் பற்றிய குர்‍ஆன் வித்தியாசங்கள்.
 
 
 
2. மோசேயின் சகோதரியின் உரையாடல்

 
குர்‍ஆன் 20:40 மற்றும் 28:12 என்ற வசனங்களில் மோசேயின் சகோதரி பார்வோன் குடும்பத்தாரிடம் பேசிய உரையாடல் உள்ளது.
 
 
(பேழை கண்டெடுக்கப்பட்ட பின்) உம் சகோதரி நடந்து வந்து, 'இவரை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒருவரை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா?' என்று கேட்டாள்,….. (குர்‍ஆன் 20:40)

 
….; (அவருடைய சகோதரி வந்து) கூறினாள்; "உங்களுக்காக பொறுப் பேற்று அவரை(ப் பாலூட்டி) வளர்க்கக் கூடிய ஒரு வீட்டினரை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? மேலும் அவர்கள் அவர் நன்மையை நாடுபவராக இருப்பார்கள்." (குர்‍ஆன் 28:12)
 
 
மேலே உள்ள வசனங்களை கவனியுங்கள், எவ்வளவு வித்தியாசமாக இரு வசனங்களும் சொல்கின்றன.
 
 
1. குர்‍ஆன் 20:40ல், "பொறுப்பை ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒருவரை" என்றுச் சொன்ன அதே சகோதரி, குர்‍ஆன் 28:12ல் "ஒரு வீட்டினரை" என்று சொல்கிறார். இதில் எது சரி, எது தவறு? மோசேயின் சகோதரி "ஒருவரை காட்டட்டுமா?" என்றுச் சொன்னாரா அல்லது "ஒரு வீட்டினரைக் காட்டட்டுமா?" என்றுச் சொன்னாரா? பொருளில் அதிகமாக வித்தியாசம் இல்லையானாலும், இஸ்லாமியர்களின் "வேத நிபந்தனையை" குர்‍ஆனுக்கு இட்டால் எப்படி இருக்கும் என்று நாம் சோதிக்கும் போது, இப்படிப்பட்ட முரண்பாடுகள் வெடிக்கின்றன‌

 
2. குர்‍ஆன் 28:12ல் "அவர்கள் அவர் நன்மையை நாடுபவராக இருப்பார்கள்" என்ற அதிகபடியாக சொன்னதாக உள்ளது, ஆனால் இந்த விவரம் குர்‍ஆன் 20:40ல், அதே சகோதரி பேசிய உரையாடலில் இல்லை. அல்லாவின் மாறாத பிழையில்லாத, குர்‍ஆனில் ஏன் இந்த வித்தியாசம்? இஸ்லாமியர்கள் முக்கியமாக ஏகத்துவ தள அறிஞர்கள் விளக்குவார்களா?
 
 
இதே போல அல்லா பேசிய இன்னொரு எடுத்துக்காட்டு, இதில் கூட சில வார்த்தைகள் மாறுபடுகிறது. இந்த வித்தியாசத்தை(Verbal Differences) குர்‍ஆனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த‌ யூசுப் அலி அவர்கள் கூட கவனித்துள்ளார் மற்றும் அதற்கு பின்குறிப்பும் எழுதியுள்ளார்.


 
 
இஸ்ரவேல் மக்களும் அவர்களின் கீழ் படிதலும் - ISRAEL AND OBEDIENCE
 
 
 
குர்‍ஆன் 2:58-59 மற்றும் 7:161-162 என்ற வசனங்களை படிக்கவும்:
 
 

 

 
 
குர்‍ஆன் 2:58-59 குர்‍ஆன் 7:161-162
இன்னும் (நினைவு கூறுங்கள்;) நாம் கூறினோம்; " இந்த பட்டினத்துள் நுழைந்து அங்கு நீங்கள் விரும்பிய இடத்தில் தாராளமாகப் புசியுங்கள்; அதன் வாயிலில் நுழையும் போது, பணிவுடன் தலைவணங்கி 'ஹித்ததுன்' (-"எங்கள் பாபச் சுமைகள் நீங்கட்டும்") என்று கூறுங்கள்; நாம் உங்களுக்காக உங்கள் குற்றங்களை மன்னிப்போம்; மேலும் நன்மை செய்வோருக்கு அதிகமாகக் கொடுப்போம். (2:58) இன்னும் அவர்களை நோக்கி; "நீங்கள் இவ்வூரில் வசித்திருங்கள், இதில் நீங்கள் விரும்பிய இடத்திலெல்லாம் (நீங்கள் நாடிய பொருட்களைப்) புசித்துக் கொள்ளுங்கள்; 'ஹித்ததுன்' (எங்களுடைய பாவங்கள் மன்னிக்கப்படுவதாக,) என்று கூறியாவாறு (அதன்) வாயிலில் (பணிவோடு) தலைதாழ்த்தியவர்களாக நுழையுங்கள்; நாம் உங்கள் குற்றங்களை மன்னிப்போம். நன்மை செய்பவர்களுக்கு நாம் அதிகமாகவே (கூலி) கொடுப்போம்" என்று கூறப்பட்டபோது (7:161)
ஆனால் அக்கிரமக்காரர்கள் தம்மிடம் கூறப்பட்ட வார்த்தையை அவர்களுக்குச் சொல்லப்படாத வேறு வார்த்தையாக மாற்றிக் கொண்டார்கள்; ஆகவே அக்கிரமங்கள் செய்தவர்கள் மீது - (இவ்வாறு அவர்கள்) பாபம் செய்து கொண்டிருந்த காரணத்தினால் வானத்திலிருந்து நாம் வேதனையை இறக்கிவைத்தோம். (2:59) அவர்களில் அநியாயம் செய்தவர்கள் அவர்களுக்கு கூறப்பட்டதை வெறொரு சொல்லாக மாற்றி விட்டார்கள்; எனவே அவர்கள் அநியாயம் செய்ததின் காரணமாக அவர்கள் மீது நாம் வானத்திலிருந்து வேதனையை இறக்கினோம். (7:162)
And remember We said: "Enter this town, and eat of the plenty therein As ye wish; but enter The gate with humility, In posture and in words, And We shall forgive you your faults And increase (the portion of) Those who do good." But the transgressors Changed the word from that Which had been given them; So we sent on the transgressors A plague from heaven, for that they infringed (Our command) repeatedly. [S. 2:58-59] And remember it was said to them: "Dwell in this town And eat therein as you wish, But say The word of humility and enter the gate In a posture of humility: We shall forgive you Your faults; We shall increase (The portion of) those Who do good." But the transgressors among them Changed the word from that Which had Been given them So we sent on them a plague from heaven For that they repeatedly transgressed. [S. 7:161-162]
 
 
 
கேள்விகள்:

 
1. குர்‍ஆன் 2:58ல், அல்லா இஸ்ரவேல் மக்களிடம் "இந்த பட்டினத்துள் நிழைந்த" என்றுச் சொல்கிறார், ஆனால், குர்‍ஆன் 7:161ம் வசனத்தில் "நீங்கள் இவ்வூரில் வசித்திருங்கள்" என்றுச் சொல்கிறார்? இதில் எது சரியானது, எது தவறானது அல்லது இரண்டும் சரியானதா? அப்படியானால் ஏன் அல்லா மாற்றிச் சொல்கிறார்?

 
2. ஆங்கில மொழிபெயர்ப்பை கவனிக்கவும்: குர்‍ஆன் 2:29ல், "infringed (Our command)- அக்கிரமங்கள் செய்தவர்கள் மீது - (இவ்வாறு அவர்கள்) பாபம் செய்து " என்றுச் சொல்லப்பட்ட விவரங்கள், குர்‍ஆன் 7:162ல், " transgressed - எனவே அவர்கள் அநியாயம் செய்ததின் காரணமாக " என்று அல்லா சொல்கிறார். இதில் எதை அல்லா சொல்லியிருப்பார்?

 
இதைப் பற்றி யூசுப் அலி அவர்களின் பின் குறிப்பை கீழே காணலாம்:
 
 
வார்த்தைகளில் வித்தியாசம்(Verbal Differences) பற்றி யூசுப் அலி அவர்கள்:
 
 
யூசுப் அலி அவர்களின் பின்குறிப்பு:

 
இந்த அதிகாரத்தின் 58 மற்றும் 59ம் வசனங்களை, குர்‍ஆன் 7 :161-162 வசனங்களோடு நாம் ஒப்பிட்டால், இரண்டு எழுத்து வித்தியாசங்களை நாம் காணலாம். இங்கு (2:28ம் வசனத்தில்) "பட்டனத்திற்குள் நிழைந்து" என்று வருகிறது, மற்றும் குர்‍ஆன் 7:161ல் "நீங்கள் இவ்வூரில் வசித்திருங்கள்" என்று வருகிறது. அதே போல, குர்‍ஆன் 2:59ம் வசனத்தில் நாம் "infringed (Our command)" என்று உள்ளதை காணலாம் மற்றும் குர்‍ஆன் 7:162ம் வசனத்தில் " transgressed" என்று வருகிறது. இப்படி வார்த்தைகளில் வித்தியாசம் இருந்தாலும், சொல்லப்பட்ட செய்தியின் பொருளில் வித்தியாசம் இல்லை. (Ali, The Holy Quran-Translation and Commentary, p. 31, f. 72)

 
A. Yusef Ali's footnote:

 
These verses, 58-59, may be compared to vii. 161-162. There are two verbal differences. Here (ii. 58) we have "enter the town" and in vii. 161 we have "dwell in the town." Again in ii. 59 here we have "infringed (Our command)," and in vii. 162, we have "transgressed." The verbal differences make no difference to the sense. (Ali, The Holy Quran-Translation and Commentary, p. 31, f. 72)
Source
 
 
அதாவது, ஒரே செய்தியாக இருந்தாலும், ஒரு முறை அல்லா ஒரு இடத்தில் சொல்லப்பட்ட செய்தியாக இருந்தாலும்(இஸ்ரவேல் மக்களுக்கு அல்லா சொன்ன செய்தி), அதனை குர்‍ஆனில் இரண்டு இடங்களில் சொல்லும் போது, வெவ்வேறு வார்த்தைகளைக் கொண்டு சொல்லியுள்ளார். பொருளில் அவ்வளவாக வித்தியாசம் இல்லாமல் இருந்தாலும், ஒரே உரையாடலை ஏன் இரண்டு வகையாகச் சொல்கிறார் அல்லா என்பதை இஸ்லாமியர்கள் தான் விளக்கவேண்டும்?
 
 
 
முடிவுரை: நான் இவ்விதமாக ஏன் கேள்விகள் கேட்கிறேன் என்றால் பைபிளில் ஒரு நிகழ்ச்சியை இடம் பொருள் ஏவலை அறிந்து இடத்திற்கு ஏற்ப சுருக்கியும், விவரித்தும் சொல்லப்பட்டதை முரண்பாடு என்று இஸ்லாமியர்கள் சொல்லும் போது, தாங்கள் இறைவனின் வேதம் என்று நம்பும் குர்‍ஆனில் உள்ள இந்த வித்தியாசங்களை "முரண்பாடுகள்" என்றுச் சொல்வார்களா? அல்லது "இதுவும் அல்லாவின் அற்புதங்களில் ஒன்று" என்றுச் சொல்லி, இந்த முரண்பாட்டையும் ஒரு அற்புதமாக மாற்றி விடுவார்களா?

அடுத்த பாகத்தில் சந்திப்போம்....

 
ஏகத்துவத்திற்கு பதில்கள்:



 

 
 

இஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்

முன் பக்கம் செல்ல

HOME PAGE

தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்

1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1

2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2

3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3

4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4

பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்

1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1

2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2

பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்

1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்

2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்