இஸ்லாம் அமைதி மார்கமா? இஸ்லாம் இனிய மார்கமா? இஸ்லாம் உண்மையான மார்கமா?

ஆன்சரிங் இஸ்லாம்

பல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்

சத்தியவான் தளம் செல்ல

Wednesday, April 28, 2010

அவர்கள் இருவரும் வாலிபர்களா?

 

Two young men?

யோசேப்பின் வாழ்க்கையைப் பற்றியும், அஜீஜ் என்பவரின் மனைவியினால் அவர் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டது பற்றியும் குர்ஆன் கூறுகிறது.

அவருடன் இரண்டு வாலிபர்களும் சிறையில் புகுந்தனர்; அவ்விருவரில் ஒருவன், "நான் திராட்சை மது பிழிவதாக நிச்சயமாக ஒரு கனவு கண்டேன்" என்று கூறினான். மற்றவன், "நான் என் தலைமீது ரொட்டி சுமப்பதாகவும், அதிலிருந்து பறவைகள் தின்பதாகவும் கனவு கண்டேன்" என்று கூறினான். (பின் இருவரும் "யூஸுஃபே!) எங்களுக்கு இவற்றின் விளக்கத்தை அறிவிவப்பீராக மெய்யாக நாங்கள் உம்மை (ஞானமுள்ள முஹ்ஸின்களில்) - நன்மை செய்பவர்களில் ஒருவராகக் காண்கிறோன்" (என்று கூறினார்கள்). (குர்‍ஆன் 12:36)

And there entered with him two young men in the prison. One of them said: "Verily, I saw myself (in a dream) pressing wine." The other said: "Verily, I saw myself (in a dream) carrying bread on my head and birds were eating thereof." (They said): "Inform us of the interpretation of this. Verily, we think you are one of the Muhsinûn (doers of good)." [Hilali/Khan Translation] (Surah 12:36)

ஆதியாகமம் 40ம் அதிகாரத்தில் இந்த நிகழ்ச்சி விவரமாக கூறப்பட்டுள்ளது. அந்த இரண்டு நபர்களில் ஒருவர், பார்வோன் இராஜாவின் பானங்களை சுமப்பவர்களுக்கு தலைவராக இருப்பதாகவும், இன்னொருவர் பார்வோன் இராஜாவிற்கு உணவு தயாரிப்பவராக இருப்பதாகவும் நாம் காண்கிறோம்.

மேலே படித்த குர்ஆன் வசனத்தில் இரண்டு தவறுகள் உள்ளது. முதலாவதாக, குர்ஆன் தோராவிற்கு முரண்பட்டதாக உள்ளது, அதாவது ஆதியாகமம் 39:19 லிருந்து 40:3 வரையிலுள்ள வசனங்களின் படி, அந்த இரண்டு மனிதர்கள் யோசேப்பு அடைக்கப்பட்ட அதே சிறைச்சாலைக்கு வருவதற்கு முன்பதாகவே யோசேப்பு சிறைச்சாலையில் இருந்தார். இதற்கு முரண்பட்ட விதமாக, அவர்கள் இருவரும் யோசேப்போடு கூட ஒரே சமயத்தில் சிறைச்சாலையில் சென்றார்கள் என்று குர்ஆன் கூறுகிறது.

இரண்டாவதாக, அந்த இருவரின் வயது பைபிளில் குறிப்பிடவில்லையானாலும், பார்வோன் இராஜ்யத்தில் இந்த இரண்டு நபர்கள் அப்படிப்பட்ட உயர்ந்த பதவியில் இருக்கிறார்கள் (இராஜாவிற்கு பானங்களை சுமப்பவர்களின் தலைவராக, மற்றும் உணவு தயாரிப்பவர்களுக்கு தலைவராக இருக்கிறார்கள்) என்பதை கவனிக்கும் போது, குர்ஆன் சொல்வது போல இவர்கள் வாலிபர்களாக இருக்கமுடியாது என்பதை அறியலாம்.

ஆங்கில மூலம்: Two young men?

இதர குர்‍ஆன் முரண்பாடுகளை படிக்கவும்


source:http://www.answering-islam.org/tamil/quran/contra/qb015.html

ஆபிரகாமின் பெயர்

 

Abraham's name

தோராவில், ஆதியாகமம் 17:1,3,5ம் வசனங்கள் கீழ்கண்டவாறு கூறுகின்றன:

ஆபிராம் தொண்ணூற்றொன்பது வயதானபோது, கர்த்தர் ஆபிராமுக்குத் தரிசனமாகி: நான் சர்வவல்லமையுள்ள தேவன்; நீ எனக்கு முன்பாக நடந்துகொண்டு உத்தமனாயிரு. ..... அப்பொழுது ஆபிராம் முகங்குப்புற விழுந்து வணங்கினான். தேவன் அவனோடே பேசி: ........ இனி உன் பேர் ஆபிராம் என்னப்படாமல், நான் உன்னைத் திரளான ஜாதிகளுக்குத் தகப்பனாக ஏற்படுத்தினபடியால், உன் பேர் ஆபிரகாம் என்னப்படும்.

When Abram was ninety-nine years old, the LORD appeared to him and said, "I am God Almighty, walk before me and be blameless. ... Abram fell facedown, and God said to him ... No longer will you be called Abram, your name will be Abraham for I have made you father of many nations."

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு அவரின் பெயர் "ஆபிரகாம்" என்றே பயன்படுத்தப்பட்டது. பைபிளின் பழைய ஏற்பாட்டில் குலத்தலைவராகிய இவரை எல்லாரும் இந்த பெயரிலேயே அறிவார்கள். சிலருக்கு அவருக்கு முன்பாக இருந்த உண்மையான பெயர் தெரியாது.

பைபிளைப் பற்றிய அறிவு இல்லாத அனேக மக்களுக்கு ஆபிரகாமின் உண்மைப் பெயர் என்னவென்று தெரியாமல் இருப்பதுபோல, முஹம்மதுவிற்கும் இந்த பெயர் தெரியாமல் இருந்திருக்கிறது. ஆபிராம் என்ற பெயரை தேவன் ஆபிரகாம் என்று மாற்றி மற்றும் அதே நேரத்தில் ஈசாக்கின் பிறப்பு பற்றிய வாக்குறுதியையும் கொடுத்தார், உடன்படிக்கையையும் உறுதிப்படுத்தினார். ஆனால், "ஆபிராம்" வாலிபராக இருக்கும் சமயத்தில் அவரை "ஆபிரகாம்" என்று அழைப்பதை நாம் குர்ஆனில் காண்கிறோம். உண்மையில் அவரது பெயர் அந்த நேரத்தில் "ஆபிராம்" என்பதாகும்.

அதற்கு (அவர்களில் சிலர்) "இளைஞர் ஒருவர் இவற்றைப் பற்றி (அவதூறாகக்) குறிப்பிட்டு வந்ததை நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம், அவருக்கு இப்றாஹீம் என்று பெயர் சொல்லப்படுகிறது" என்று கூறினார்கள். (குர்ஆன் 21:60)

They said: "We heard of the youth talked of them: He is called Abraham." (Sura 21:60)

குர்ஆனின் அனேக சரித்திர தவறுகளில் இதுவும் ஒன்று. ஆபிராமுக்கு எண்பது அல்லது அதற்கும் குறைவான வயது இருக்கும் போது அவரை "ஆபிரகாம்" என்று குர்ஆன் அழைத்து சரித்திர பிழையை செய்துள்ளது. அப்போது அவருக்கு இருந்த பெயர் "ஆபிராம்" என்பதாகும். இது அல்லாஹ்விற்கு தெரியாமல் இருந்திருக்கிறது. இது ஒரு சிறிய தவறாக தெரியலாம், ஆனால், பைபிள் பற்றிய பொது அறிவு இல்லாமல், அல்லாஹ் மேலோட்டமாக செய்த தவறு சிறிய தவறு அல்ல‌.

ஆங்கில மூலம்: Abraham's name

குர்‍ஆன் பற்றிய கட்டுரைகளை படிக்கவும்


source:http://www.answering-islam.org/tamil/quran/contra/qbhc12.html

இஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்

முன் பக்கம் செல்ல

HOME PAGE

தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்

1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1

2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2

3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3

4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4

பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்

1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1

2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2

பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்

1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்

2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்