இஸ்லாம் அமைதி மார்கமா? இஸ்லாம் இனிய மார்கமா? இஸ்லாம் உண்மையான மார்கமா?

ஆன்சரிங் இஸ்லாம்

பல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்

சத்தியவான் தளம் செல்ல

Wednesday, April 9, 2008

19 காரணங்கள்: ஏன் கௌரவமான மனிதர்களில் பலர் முஸ்லீம்களாக மாற விரும்புவதில்லை?




19 காரணங்கள்: ஏன் கௌரவமான மனிதர்களில் பலர் முஸ்லீம்களாக மாற விரும்புவதில்லை

19 Reasons why many Honorable People Don't Want to Be Muslims

மற்றவர்களை இஸ்லாமியர்களாக மாற்ற விரும்பும் முஸ்லீம்கள், "ஏன் உண்மையை அறிய விரும்பும் மனிதர்கள், இஸ்லாமை நம்புவதில்லை?" என்ற கேள்வியின் பதிலை தெரிந்துக்கொள்ள விரும்பக்கூடும். இதற்கு சில முக்கியமான காரணங்கள் உண்டு, இந்த கட்டுரையில் அந்த காரணங்களை ஒவ்வொன்றாக காணலாம். இந்த காரணங்களில் ஒன்று உண்மையாக இருந்தாலும், அது இஸ்லாம் உண்மையான மார்க்கம் இல்லை என்பதை தெளிவாக்கிவிடும். இந்த கட்டுரையில் கொடுக்கப்பட்ட தொடுப்புக்கள் ஒவ்வொரு காரணத்தையும் தெளிவாக விளக்கும்.

இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டு இருக்கும் பட்டியல், குற்றப்படுத்தும் தோரணையில் அல்லாமல், சொல்லப்படும் எல்லா காரணங்களுக்கும் தேவையான எல்லா ஆதாரங்களையும் தருகிறது. இந்தக் கட்டுரை சில காரணங்களை சுருக்கமாக‌ விளக்குகிறது, முழுவிவரங்களையும் தெரிந்துக்கொள்ள கொடுக்கப்பட்ட தொடுப்புக்களில் சென்று படிக்கவும்.



இஸ்லாம் முந்தைய தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளை நிராகரிக்கிறது

ISLAM DENIES WORDS OF PREVIOUS PROPHETS


1. முஸ்லீம்கள், முந்தைய தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளை நிராகரிக்கிறார்கள், அவ்வசனங்கள் திருத்தப்பட்டன என்று வாதாடுகிறார்கள். இயேசு முந்தைய வேத சட்டத்தையும், இன்ஜீலையும்(சுவிசேஷத்தையும்) உண்மைய்ப்படுத்தக் கூடியவராக இருந்தார் என்று குர்‍ஆனில் சூரா 5:46-48 சொல்கிறது. மற்றும் சவக்கடல்(Dead Sea Scrolls) பகுதியில் கிடைத்த பிரதிகளில் இயேசுவின் காலத்தில் இருந்த பழைய ஏற்பாட்டு பிரதிகள் கூட இருந்தன. படிக்க‌: http://www.muslimhope.com/DeadSeaScrolls.htm

மோசே மூலமாக கொடுத்த தன் சட்டத்தை பாதுகாக்கவும், இயேசுவிற்கு கொடுத்த இன்ஜீலையும் பாதுகாக்க அல்லாவினால் முடியவில்லையானால், குர்‍ஆனில் கொடுத்த அவரது வசனங்களையும் பாதுகாக்க அல்லாவினால் முடியாது. குர்‍ஆனுக்கு முன் இறக்கிய தன் வேதத்தையும் அல்லா பாதுகாத்து இருக்கவேண்டும். படிக்க: http://www.biblequery.org/History/ChurchHistory/WhatEarlyChristiansTaught.htm

2. தீர்க்கதரிசிகளின் போதனையாகிய "தேவன் பிதாவாக இருக்கிறார்" என்பதை இஸ்லாம் நிராகரிக்கிறது.

தேவன் நமக்கு தந்தையாக இருக்கிறார் என்பதை யுதர்களும், கிறிஸ்தவர்களும் நம்புகிறார்கள் மற்றும் பழைய ஏற்பாட்டிலும், புதிய ஏற்பாட்டிலும் "தேவன் பிதாவாக இருப்பதாக" நாம் பல விவரங்களைக் காணலாம். படிக்க:
http://www.muslimhope.com/FatherhoodOfGod.htm

அதாவ‌து, ச‌ரீர பிர‌கார‌மாக‌ தேவ‌ன் ந‌ம‌க்கு த‌ந்தையாக‌ இல்லை, அத‌ற்கு ப‌திலாக‌ எல்லா விசுவாசிக‌ளையும் அவ‌ர் த‌ன் பிள்ளைக‌ளாக கருதுகிறார் ம‌ற்றும் முக்கிய‌மாக‌ இயேசுவை அவ‌ர் உல‌க‌தோற்ற‌த்திற்கு முன்பே த‌ன் பிள்ளையாக பெற்றார். இயேசு வாழ்ந்த காலத்தில் இருந்த வேத பிரதிகளிலும் "தேவன் நமக்கு தந்தையாக" இருக்கிறார் என்பதை தெளிவாக காணமுடியும். படிக்க: http://www.muslimhope.com/DeadSeaScrolls.htm

3. இயேசு தான் ஒரு தேவகுமாரன் என்று போதித்தார் மற்றும் தன்னை தேவனாக தொழுதுக்கொள்வதை அவர் ஏற்றுக்கொண்டார். குர்‍ஆன் இதை நிராகரிக்கிறது:

இயேசு இப்படித்தான் போதித்தார் என்று ஆரம்ப கால புறசமய எழுத்தாளர்கள்(early pagan writers) இதை அங்கீகரித்துள்ளனர். படிக்க:
Proving for Muslims That Jesus is God (and Lord) - http://www.muslimhope.com/JesusIsGod.htm

4. அல்லா ஏமாற்றுகிறார் : இயேசுவை பின்பற்றின எல்லாரையும் அல்லா ஏமாற்றினார்: இறைவன் என்பவர் பொய் சொல்வதில்லை என்று பைபிள் சொல்கிறது. (எண்ணாகமம் 23:19, 1 சாமுவேல் 15:29). குர்‍ஆன் சொல்கிறது, "அல்லா, சதி செய்பவர்களில் எல்லாம் மிகப்பெரிய சதிகாரர்". தன்னை பின்பற்றினவர்களை எல்லாம்(இயேசுவின் சீடர்களை) அல்லா முட்டாளாக்கினார். அதாவது, இயேசு சிலுவையில் அறையப்பட்டதாகவும், அவர் மறுபடியும் மரித்தோரிலிருந்து எழுந்திருந்ததாகவும் அவர்கள் நினைக்கச்செய்தார். படிக்க: http://www.muslimhope.com/DeceptionInIslam.htm



குர்‍ஆனில் உள்ள சில பிழைகள்(தவறுகள்)

SOME ERRORS IN THE QUR'AN


5. ஜுல் கர்னைன்: சூரியன் சேறு கலந்த நீரில் மூழ்குவது இல்லை:

இரவிலே சூரியன் சேறு கலந்த நீரில் மூழ்குகிறது என்று சூரா 18:85-86 சொல்கிறது என்று இஸ்லாமிய சரித்திர ஆசிரியர்கள் நம்பினார்கள், இது பல முஸ்லீம்களை சமீக காலம் வரை நம்பச்செய்தது. இதைப் பற்றி மேலும் அறிய படியுங்கள்:
http://www.muslimhope.com/ZulQarnain.htm and http://www.muslimhope.com/AstronomyAndTheQuran.htm

6. முகமதுவின் "இரவு பிரயாண" சமயத்தில், எருசலேமில் எந்த மசூதியும் இல்லை (சூரா 17:1):

யூதர்களின் தேவாலயம் அழிக்கப்பட்ட இடத்தில் மற்றும் முகமதுவிற்கு பிறகு உருவான அல்‍அக்ஸர் மசூதி பற்றி முகமதுவின் காலத்தில் இஸ்லாமியர்கள் எழுதிவைத்தது ஒரு தவறாகும்(garbage dump). உண்மையில் இல்லாத இடத்தைச் "சென்று பார்த்தேன்" என்று முகமது சொல்லியுள்ளார். இந்த விவரம், இஸ்லாமியர் அல்லாதவர்கள் "ஏன் பாலஸ்தீனர்கள் அல்‍அக்ஸர்க்காக போர் செய்வோம் என்றுச் சொல்கிறார்கள் என்ற‌" கேள்வியை எழுப்புவதற்கு காரணமாக உள்ளது. இதைப் பற்றி மேலும் அறிய படியுங்கள்:
http://www.muslimhope.com/NightJourney.htm

குர்‍ஆனில் திருத்தங்கள்

CHANGES IN THE QUR'AN


7. பெரிய திருத்தம்: சூரா 53ல் இருந்த "அல்லாவின் மகள்கள்"

ஆரம்ப கால நான்கு இஸ்லாமிய சரித்திர ஆசிரியர்களும், அதற்கு பின்பு வந்த ஏழு இஸ்லாமிய சரித்திர ஆசிரியர்களும், குர்‍ஆனின் சூரா 53 கீழ் கண்டவாறு இருந்தது என்று எழுதிவைத்துள்ளார்கள்.

நீங்கள் (ஆராதிக்கும்) லாத்தையும், உஸ்ஸாவையும் கண்டீர்களா? மற்றும் மூன்றாவதான "மனாத்"தையும் (கண்டீர்களா?) "இவைகள் உயரத்தில் பறக்கும் பறவைகள், உண்மையாகவே இவர்களின் மத்தியஸ்தம் அங்கீகாரத்துடன் ஏற்றுக்கொள்ளப்படும்"
("Have ye seen [the pagan goddesses] Lat, and 'Uzza, And another, the third, Manat? These are the exalted cranes (intermediaries) Whose intercession is to be hoped for.")

அல்லாவின் வசனங்கள் முகமதுவிற்கு வெளிப்படுத்தப்பட்ட போது, சாத்தான் சில பொய்யான வசனங்களை முகமதுவிற்கு வெளிப்படுத்தினான் என்று ஹதீஸும் குர்‍ஆனும் ஒத்துக்கொள்கிறது. படிக்க: http://www.muslimhope.com/DaughtersOfAllah.htm

8. கூடுதலான‌ (அ) குறைவான வசனங்கள்(Variants):

முகமதுவுடைய உதவியாளர் "உபைய் பின் கைப்" மற்றும் இதர மக்களிடம் இருந்த‌ குர்‍ஆனின் வசனங்கள் சிலரிடம் கூடுதலாகவும், சிலரிடம் குறைவாகவும் இருந்தன. குர்‍ஆனின் மாற்றங்கள் இல்லை என்று முஸ்லீம்கள் சொல்வது ஒரு பெரிய பொய்யாகும். படிக்க:
http://www.muslimhope.com/QuranVariants.htm

இரத்து செய்யப்பட்ட வசனங்கள் என்றுச் சொல்லி குர்‍ஆனிலிருந்து நீக்காமல் அப்படியே விட்டுவிட்ட வசனங்கள் தவிர, ஹதீஸ்களும், மற்றும் இஸ்லாமிய சரித்திர ஆசிரியர்களும் குர்‍ஆனிலிருந்து அமைதியாக நீக்கிவிட்ட வசனங்கள், மற்றும் அதிகாரங்கள் பற்றியும் சொல்லியுள்ளார்கள். இப்போது புதிதாக கண்டெடுக்கப்பட்ட பிரதியாகிய சனா/யேமினி குர்‍ஆனில்(San'a/Yemeni Qur'an) கூட பல மாற்றங்கள் இருப்பதை காணலாம்.



முகமது மற்றும் ஆரம்பகால முஸ்லீம்களின் "வன்முறை" செயல்கள்

VIOLENCE OF MOHAMMED AND EARLY MUSLIMS


9. முகமது மக்களை கொடுமைசெய்ய குறைந்தபட்சம் இரண்டுமுறை கட்டளையிட்டார்:

கினானா பின் அல்ரபி பொக்கிஷங்கள் எங்கே இருக்கின்றன என்று முகமதுவிற்கு சொல்லாத காரணத்தால், அவர் கொஞ்சம் கொஞ்சமாக கொளுத்தப்பட்டார். மேலும் அறிய படியுங்கள்:
http://www.muslimhope.com/WarInIslam.htm

10. மற்றவர்களை கொல்லும்படி முகமது கட்டளையிட்டார்:

அ) கப் பின் அஷ்ரப் அல்லாவையும் முகமதுவையும் அவமதித்தார். இவரை கொள்ள ஒரு மனிதன் முகமதுவின் அனுமதியோடு அஷ்ரப்போடு சேர்ந்துக்கொண்டார். இந்த மனிதனை அஷ்ரப் நம்பினார், ஆனால், அந்த மனிதர் அஷ்ரபை கொன்றுவிட்டான். அஷ்ரபை கொல்ல எந்த பொய்யையாவது சொல்லி கொல்லும்படி முகமது அனுமதி அளித்தார்.

ஆ) அபு ரபி இவர் இராணுவ அல்லது அரசியல் காரணங்களுக்காக கொல்லப்பட்டார்.

இ) மக்காவின் தலைமை அதிகாரி அபு ரபியை கொலை செய்ய முயற்சி செய்யப்பட்டது.

ஈ) அல் அஸ்வத், இவர் தன்னை ஒரு தீர்க்கதரிசி (நபி) என்று சொல்லிக்கொண்டார், அதனால், இவரின் வாயை மூட வன்முறையை முகமது பயன்படுத்தி, இவரை கொன்றார்.

உ) கலிட் பின் சுஃப்யான் (முகமது தனக்கு எதிராக இந்த மனிதன் ஒரு கூட்டத்தை தயார்படுத்திக்கொண்டு இருக்கிறார் என்று கேள்விப்பட்டு, இவரை கொன்றார்)

ஊ) யாஸர் பின் ரிஜம் ( இவரை கொல்லும்படி முகமது கட்டளையிடவில்லை, இருந்தாலும், இவர் முதலில் முஸ்லீமாக மாறுவேன் என்றும் சொல்லி, பிறகு பின் வாங்குகிறார் என்று இதர முஸ்லீம்கள் கேள்விப்பட்டு இவரை கொன்றுப்போட்டார்கள்)

இந்த நிகழ்ச்சிகள் பற்றி அறிய படியுங்கள்:http://www.muslimhope.com/Assassinations.htm

11. முகமது வாளினால் இஸ்லாமை பரப்பினார்:

எதிர்பாராத விதத்தில் முகமது திடீரென்று மக்களின் மீது தாக்குதல் நடத்த கட்டளையிட்டார். இஸ்லாம் என்றால் "அமைதி" என்று பொருள் என்றுச் சொன்னால், 10 ஆண்டு காலத்தில் ஏன் 82 தாக்குதல்கள் நடந்ததன்? மேலும் அறிய படிக்கவும்:
http://www.muslimhope.com/WarInIslam.htm and http://www.muslimhope.com/BanuMustaliq.htm



பெண்கள் மற்றும் திருமணம் பற்றி இஸ்லாமின் பார்வை

ISLAMIC VIEW OF WOMEN AND MARRIAGE


12. உங்கள் வலக்கை சொந்தமாக்கிக் கொண்டவர்கள்:

ஒவ்வொரு முஸ்லீமுக்கு நான்கு மனைவிகள் தவிர, கணக்கிலடங்கா அடிமைப்பெண்களையும், போரில் கைதான பெண்களையும் தாங்கள் உடலுறவு கொள்ள‌ பயன்படுத்திக்கொள்ளலாம், அந்த பெண்களுக்கு விருப்பமில்லையானாலும் சரி. மேலும் அறிய படிக்க:
http://www.muslimhope.com/WomenInIslam.htm and http://www.muslimhope.com/RightHand.htm

13. பெண்கள் ஆண்களைவிட குறைவானவர்கள்: மாதத்தில் சில நாட்களில் அவர்கள் தொழுகை செய்யக்கூடாது, பெண்களுக்கு அறிவு குறைவு, இவர்கள் தான் நரகத்தில் அதிகமாக காணப்படுவார்கள்:

இஸ்லாமிய மேதாவி அல்-கஜாலி(al-Ghazali 1058-1111 கி.பி) 18 வழிகளில் பெண்கள் ஆண்களைவிட குறைவானவர்கள் என்று குறிப்பிடுகிறார். அவைகள்:

ஒரு பெண்ணின் சாட்சி ஒரு ஆணின் சாட்சியில் பாதியாகும்

ஒரு ஆண் பல மனைவிகளை திருமணம் செய்யலாம், ஆனால், பெண்ணுக்கு ஒரு கணவன் தான்.

ஆண்களைப் போல ஒரு பெண் மிகவும் சுலபமாக விவாகரத்து செய்யமுடியாது.

மனைவி என்பவள் வீட்டிலேயே இருக்கவேண்டும்

ஒரு பெண் தன் தலையை மூடிக்கொண்டே இருக்கவேண்டும்

ஆண்கள் மட்டும் தான் வெள்ளிக்கிழமை நாட்களில், மற்றும் பண்டியை நாட்களில் மட்டும் சவ அடக்கத்திற்கு ஆஜராகவேண்டும்.

ஒரு பெண் "ஒரு நீதிபதியாகவோ" அல்லது "ஒரு ஆட்சி செய்யும் தலைவியாகவோ இருக்கக்கூடாது".

மேலும் அறிய படிக்க: http://www.muslimhope.com/WomenInIslam.htm

14. முஸ்தஹில் மற்றும் முடா அருவருப்பான செயல்கள் (Mustahil and Mu'tah – they sound disgusting)

ஒரு முஸ்லீம் திரும்பப்பெறாத விவாகரத்தை செய்துவிட்டால், அந்தப்பெண் மறுபடியும் அந்த பழைய கணவனோடு சேர்ந்து வாழவேண்டுமானால், இந்தப் பெண் வேறு ஒரு ஆணோடு திருமணம் செய்யவேண்டும், பிறகு தான் தன் பழைய கணவனோடு சேர்ந்து வாழவேண்டும். இப்படிப்பட்ட வேலைக்காக உள்ள மனிதனைத் தான் முஸ்தஹில் என்பார்கள். முடா என்றுச் சொல்வது "தற்காலிகமான திருமணமாகும்", அதாவது, ஒரு முஸ்லீம் ஒரு பெண்ணை சில மணித்துளிகளுக்காக அல்லது அதற்கும் அதிகமாக காலத்திற்காக திருமணம் செய்துக்கொள்வதாகும், ஆனால், இது விபச்சாரம் என்று எண்ணப்படாது. சுன்னி முஸ்லீம்கள் "முகமது இதை ஒரு குறிப்பிட்ட காலத்திற்காகத் தான் அனுமதித்தார்" என்றுச் சொல்கிறார்கள். ஆனால், ஷிய முஸ்லீம்கள் இந்த "தற்காலிகமான திருமணம்" என்பது இன்று கூட பின்பற்றத்தகுந்தது என்றுச் சொல்கிறார்கள், மற்றும் இன்று கூட இதை ஈரான் மற்றும் இதர இடங்களில் பின்பற்றுகிறார்கள். மேலும் அறிய படிக்க:
http://www.muslimhope.com/WomenInIslam.htm

15. ஏன் முகமது 8 லிருந்து 9 வயது உள்ள சிறுமியை திருமணம் செய்துக்கொண்டார்? முகமதுவின் இந்த செயல், ஆப்ரிக்காவில் மற்றும் இதர இடங்களில் உள்ள வாலிப முஸ்லீம் பெண்களுக்கு சொல்லமுடியாத வேதனையையும், உடல் சம்மந்தப்பட்ட பிரச்சனையையும் கொடுத்துள்ளது. மேலும் அறிய படிக்க http://www.muslimhope.com/AishaNine.htm



இயற்கைக்கு மாறான நடத்தையுள்ள முகமது

THE UNUSUAL CHARACTER OF MOHAMMED


16. ஏன் முகமதுவிற்கு இத்தனை மனைவிகள் தேவைப்பட்டது?

முகமதுவின் வளர்ப்பு மகன் தன் மனைவியை(ஜைனப் பின்ட் ஜஷ்) விவாகரத்து செய்துவிட்டபிறகு, முகமது அப்பெண்ணை திருமணம் செய்துக்கொண்டார். முகமதுவின் மற்ற மனைவிகளான "ஷஃபியா" மற்றும் "ஜுவர்ரியா பின்ட் ஹரித்" என்பவர்கள் விதவைகளானார்கள் ஏனென்றால், முகமது தான் இப்பெண்களின் கணவர்களை இதற்கு முன்பே கொன்றார். சில பெண்கள் முகமதுவின் திருமண விண்ணப்பத்தை நிராகரித்தனர், முகமது விவாகரத்து செய்த விவரங்களையும் இஸ்லாமிய சரித்திர ஆசிரியர்கள் எழுதியுள்ளார்கள். முகமதுவிற்கு வைப்பாட்டிகளும் இருந்தனர். மேலும் அறிய படியுங்கள்:
http://www.muslimhope.com/WhyDidMohammedGetSoManyWives.htm

17. தீய சக்தியால் பீடிக்கப்பட்டு இருந்தார் (Bewitched):

இறைவனின் உண்மையான தீர்க்கதரிசி எப்படி ஒரு தீயசக்தியின் சக்திக்கு (பில்லி சூன்யம் கட்டுக்கு உட்பட்டார்) கட்டுப்படமுடியும்? இந்த நிகழ்ச்சியைப் பற்றி ஹதீஸ்களில் 11 இடங்களில் சொல்லப்பட்டு உள்ளது, இந்த ஹதீஸ்கள் தான் சுன்னி இஸ்லாமின் ஷரியா சட்டத்தொகுப்பிற்கு அடிப்படை. மேலும் அறிய படியுங்கள்:
http://www.muslimhope.com/IslamAndScience.htm

18. வித்தியாசமான மூட பழக்கவழக்கங்கள் (Odd Superstitions):

முகமது சொன்னதாக ஹதீஸ்கள் பல விவரங்களைச் சொல்கின்றன, அதாவது "கண் திருஷ்டி" உண்மை என்று முகமது சொன்னதாக ஹதீஸ் உள்ளது. எப்போதெல்லாம் மலம் கழிக்கிறோமோ அப்போதெல்லாம் ஒற்றைப்படை எண்களில் கற்களை பயன்படுத்துங்கள் என்றும், உங்கள் மூக்கை ஒற்றைப்படை எண்களில் கழுவுங்கள் என்றும், தொழுகை செய்யும்போது ஒற்றைப்படை எண்களில் தொழுவுங்கள் என்றும், கண்களுக்கு மருந்துபோடும்போது(கழுவும் போது) ஒற்றைப்படை எண்களில் கழுவவேண்டும் என்றும் முகமது சொன்னதாக ஹதீஸ்கள் உள்ளன. நீங்கள் கால்களில் செருப்புக்களை போடும்போது, முதலில் வலது கால் செருப்பை போடவேண்டும், அதே போல‌ செருப்பை கழற்றும்போது, இடது கால் செருப்பை முதலில் கழற்றவேண்டும் என்றும் முகமது சொல்லியுள்ளார். நீங்கள் சாப்பிடும் போது "வலது கையினால் சாப்பிடுங்கள்", ஏனென்றால், இடது கையினால் "சாத்தான்" சாப்பிடுகிறான் என்று சொல்லியுள்ளார். இதைப்பற்றி மேலும் அறிய படியுங்கள்:
http://muslimhope.com/IslamAndScience.htm and http://muslimhope.com/IslamAndMedicine.htm

19. கல்லரைக்குள்(சமாதிக்குள்) சித்திரவதை (Torment of the grave):

முகமதுவே பயந்த ஒரு விஷயம் இருக்குமானால், அது "சமாதிக்குள் சித்திரவதை அனுபவிப்பது" என்பதைப் பற்றித் தான். இதன் பொருள் "நரகத்தில் அனுபவிக்கும் சித்திரவதைப் பற்றியது அல்ல, இது சமாதி செய்யப்பட்ட இடத்திலேயே(மண்ணுக்குள்) அனுபவிக்கும் சித்திரவதை பற்றியதாகும்". முகமது, இந்த சித்திரவதையை மற்றவர்கள், மற்றும் தன்னை பின்பற்றுகிறவர்கள், ஏன் தானே அனுபவிக்கக்கூடாது என்று பயந்து இருந்தார். இதைப்பற்றி மேலும் அறிய படியுங்கள்:
http://www.muslimhope.com/TormentOfTheGrave.htm

மூலம்: http://www.muslimhope.com/19ReasonsWhyManyHonorablePeopleDontWantToBeMuslims.htm

மேலும் விவரங்களுக்கு இங்கு சொடுக்கவும்: http://www.muslimhope.com

Isa Koran Home Page Articles Index
setstats1
 

இஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்

முன் பக்கம் செல்ல

HOME PAGE

தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்

1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1

2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2

3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3

4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4

பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்

1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1

2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2

பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்

1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்

2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்