இஸ்லாம் அமைதி மார்கமா? இஸ்லாம் இனிய மார்கமா? இஸ்லாம் உண்மையான மார்கமா?

ஆன்சரிங் இஸ்லாம்

பல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்

சத்தியவான் தளம் செல்ல

Friday, March 6, 2009

முஹம்மதுவின் பாவங்கள்

முஹம்மதுவின் பாவங்கள்

The Sins of Muhammad

சூரா முஹம்மது (47:19)

அதிக ஆதாரங்கள் இருந்தாலும் அதற்கு எதிராக உள்ள ஒரு இஸ்லாமிய சித்தாந்தம் என்னவென்றால், "இறைவனின் தீர்க்கதரிசிகள் (நபிகள்) பாவங்களை செய்யமாட்டார்கள் என்ற நம்பிக்கையாகும்". இந்த நம்பிக்கையினால், சில நேரங்களில் இஸ்லாமியர்கள் முஹம்மதுவின் பாவங்கள் பற்றியுள்ள தெளிவான குர்‍ஆன் வசனங்களை மொழியாக்கம் செய்யும் போது வேண்டுமென்றே மாற்றி மொழியாக்கம் செய்கிறார்கள். இப்படிப்பட்ட ஒரு வசனம் தான் குர்‍ஆன் சூரா 47:19 ஆகும். இப்போதைக்கு, இவ்வசனத்தின் கடைசியில் உள்ள வித்தியாசங்களை விடுத்து, மீதமுள்ள வசனத்தை நாங்கு நேர்மையான ஆங்கில மொழியாக்கங்களிலும் மற்றும் நேர்மையான இரண்டு தமிழ் மொழியாக்கங்களிலும் காண்போம்.

முஹம்மது ஜான் பி. ஜைனுல் ஆபீதீன்
ஆகவே, நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர (வேறு) நாயன் இல்லை என்று நீர் அறிந்து கொள்வீராக இன்னும் உம்முடைய பாவத்திற்காகவும், முஃமின்களாகன ஆண்களுக்காகவும், பெண்களுக்காகவும் (பாவ) மன்னிப்புத் தேடுவீராக - அன்றியும் உங்களுடைய நடமாட்டத்தலத்தையும் உங்கள் தங்குமிடங்களையும் அல்லாஹ் நன்கறிகிறான் (47:19). "அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை" என்பதை அறிந்து கொள்வீராக! உமது பாவத்திற்காகவும், நம்பிக்கை கொண்ட ஆண்களுக்காகவும், பெண்களுக்காகவும் நீர் மன்னிப்புக் கேட்பீராக! நீங்கள் இயங்குவதையும், தங்குவதையும் அல்லாஹ் அறிவான் (47:19).
Pickthall Al-Hilali & Khan
So know (O Muhammad) that there is no God save Allah, and ask forgiveness for thy sin and for believing men and believing women. Allah knoweth (both) your place of turmoil and your place of rest. So know (O Muhammad) that La ilaha ill-Allah (none has the right to be worshipped but Allah), and ask forgiveness for your sin, and also for (the sin of) believing men and believing women. And Allah knows well your moving about, and your place of rest (in your homes).
M. Sarwar R. Khalifa
Know that God is the only Lord. Ask forgiveness for your sins and for the sins of the believing men and women. God knows when you move and when you rest. You shall know that: "There is no other god beside GOD," and ask forgiveness of your sins and the sins of all believing men and women. GOD is fully aware of your decisions and your ultimate destiny.

[ Information about the translations used in this article ]

மூல அரபி மொழியின் வசனத்தின் படி, முஹம்மது தன் பாவங்களுக்காக பாவமன்னிப்பு கோரும் படி கட்டளையிடப்பட்டுள்ளார். இதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த வசனத்தின் பொருள் பற்றியும், முஹம்மது பாவங்கள் செய்தார் என்றுச் சொல்லும் இதர வசனங்கள் பற்றியும், இன்னும் பொதுவாக நபிகளின் பாவங்கள் பற்றிய விவரங்களும் இந்த இரண்டு கட்டுரைகளில் விவரமாக காணலாம், "இஸ்லாமும் நபிகளின் பாவங்களும்" மற்றும் "முஹம்மது ஒரு பாவியா?". ஆனால், இஸ்லாமிய நம்பிக்கை "இப்படி நபிகள் பாவம் செய்கிறவர்களாக இருக்கமாட்டார்கள்" என்பது தான். கீழ் கண்ட ஆங்கில மொழியாக்கங்கள் இவ்வசனம் சொல்லும் அழுத்தமான விவரத்தை சிறிது குறைப்பது போல மொழியாக்கம் செய்துள்ளார்கள்.

T.B. Irving Yusuf Ali
Know that there is no deity except God [Alone], and beg forgiveness for your offence, as well as for believing men and believing women. God knows how you (all) bustle about on your business and where you settle down. Know, therefore, that there is no god but Allah, and ask forgiveness for thy fault, and for the men and women who believe: for God knows how ye move about and how ye dwell in your homes.
Shakir Sher Ali
So know that there is no god but Allah, and, ask protection for your fault and for the believing men and the believing women; and Allah knows the place of your returning and the place of your abiding. Know, therefore, that there is no god other than ALLAH, and ask protection for thy human frailties, and for believing men and believing women. And ALLAH knows the place where you move about and the place where you stay.
Maulana M. Ali
So know, that there is no God but Allah and ask protection for thy sin, and for the believing men and the believing women.2300 And Allah knows your moving about and your staying (in a place).

மேற்கண்ட குர்‍ஆன் வசனத்தின் அழுத்தத்தை குறைப்பதற்காக இரண்டு மாற்றங்கள் ஆங்கில மொழியாக்கங்களில் செய்யப்பட்டுள்ளன. முதலாவதாக, "பாவம் - Sin" என்ற வார்த்தைக்கு பதிலாக சிறிது அழுத்தம் குறைவாக உள்ள வார்த்தைகளான "குறைபாடு, தவறு (fault, offese)" அல்லது "பிழை – Human frailty " என்ற வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இன்னும் சில குர்‍ஆன் மொழியாக்கம் செய்தவர்கள், "மன்னிப்பு – forgiveness" என்ற வார்த்தைக்கு பதிலாக "பாதுகாப்பு - protection" என்ற வார்த்தையை பயன்படுத்தியுள்ளார்கள். ஆனால், அரபி வசனம் "istaghfir li dhanbika" என்றுச் சொல்கிறது. "istaghfir" என்ற வார்த்தையின் பொருள் "மன்னிப்பை தேடுவீராக" என்பதாகும், இதன் பொருள் "பாதுகாப்பிற்காக கேட்பீராக" என்பதல்ல. இன்னும் "dhanb" என்ற அரபி வார்த்தையின் பொருள் "பாவம் - sin" அல்லது "குற்றம்- guilt" என்பதாகும். இந்த வார்த்தை சிறிய பிழைகளை, தவறுகளை சுட்டும் வார்த்தையில்லை. "ka" என்ற வார்த்தை "உன்னுடைய" என்பதாகும் (ka is the second person singular (your)).

எனினும், மௌலான முஹம்மது அலி அவர்கள் "
Sin - பாவம்‍" என்ற வார்த்தையையே தன் மொழியாக்கத்தில் பயன்படுத்தியுள்ளார். பிறகு பின் குறிப்பு ஒன்று இவ்வசனத்திற்கு கொடுக்கிறார், அதில் "ஏற்கனவே செய்த பாவங்களுக்காக மன்னிப்பை கோருங்கள்" என்பதாக இதன் பொருளை நாம் புரிந்துக் கொள்ளக்கூடாது என்று எழுதுகிறார்:

2300 Not only the Prophet but every believer is told here to keep praying to God for being protected from sin, for himself and for all the believers, men as well as women; ...

நாம் மேலே கண்ட மேற்கொள்களில், தெளிவாக புரியும் ஒரு குறிப்பிட்ட வார்த்தைகளின் பொருளை மாற்றும் தந்திரத்தை மட்டும் குர்‍ஆன் மொழியாக்கம் செய்பவர்கள் செய்யவில்லை, இன்னும் அனேக தந்திரங்களையும் கையாள்கிறார்கள். முஹம்மது பாவம் செய்தார் என்ற வசனத்திலிருந்து அவரை காப்பாற்ற மேலும் இரண்டு மொழியாக்கம் செய்பவர்கள், ஒரு புதுமையான யுக்தியை பயன்படுத்துகிறார்கள்.

இவ்வசனத்தை
முஹம்மது அஸத் (Muhammad Asad) என்பவர் கீழ்கண்டவாறு மொழியாக்கம் செய்கிறார்:

Know, then, [O man,] that there is no deity save God, and [while there is yet time,] ask forgiveness for thy sins, and for the sins of all other believing men and women: for God knows all your comings and goings as well as your abiding [at rest].

அஸத் அவர்கள் "இஸ்தஃபிர் லி தன்பிகா - istaghfir li dhanbika" என்ற வாக்கியத்தை நேர்மையான முறையில் சரியாக மொழியாக்கம் செய்தாலும், அடைப்பு குறிக்குள் "(ஓ மனிதனே)" என்று ஒரு வார்த்தையை சேர்கிறார். இதனால், இந்த வசனத்தில் சொல்லப்பட்ட விவரம் குறிப்பாக முஹம்மதுவிற்கு கட்டளையாகச் சொல்லாமல், மொத்த மனித இனத்திற்கு இட்ட கட்டளையாக பொருள் கொள்ளும் படி செய்துள்ளார். எல்லா மனிதர்களும் பாவம் செய்கிறவர்களே, ஆகையால் முஹம்மதுவிற்கு மட்டும் குறிப்பாகச் சொன்னாலும், அல்லது மற்ற மக்களுக்குச் சொன்னாலும் இதில் எந்த பிரச்சனையும் இல்லை.

நூருத்தீன் (Nooruddin) என்பவருக்கு இந்த வசனத்தின் உண்மைப் பொருள் மிகப்பெரிய பிரச்சனையாக தென்பட்டுள்ளது, எனவே, தனது மொழியாக்கத்தில் அதிக தந்திரத்தை பயன்படுத்தி மொழியாக்கம் செய்துள்ளார்.

(Believer!) know, therefore, that there is no other, cannot be and will never be One worthy of worship other than Allah and seek His protection and forgiveness of your (human) shortcomings and (also) for believing men and believing women. Allah knows your haunt (where you move about), and your resting-place.

இவர் "பாவங்கள் – Sins" என்ற வார்த்தைக்கு பதிலாக "மனித குறைபாடுகள் (human) shortcomings" என்று மாற்றி எழுதுகிறார், மற்றும் "மன்னிப்பு - Forgiveness" என்ற வார்த்தைக்கு பதிலாக "பாதுகாப்பு - Protection" ம?ன்ற வார்த்தையை பயன்படுத்துகிறார். இந்த வசனம் முஹம்மதுவை குறிப்பிட்டுச் சொல்லாமல், பொதுவாக‌ நம்பிக்கையாளர்களுக்கு சொல்லப்பட்டது போல எழுதுகிறார்.

சமீப காலத்தில் பார்க்க நேர்ந்த இன்னுமொரு மொழியாக்கம் இப்படியாகச் சொல்கிறது:

Therefore know (O dear Prophet Mohammed - peace and blessings be upon him) that there is none worthy of worship except Allah, and seek the forgiveness of sins of your close ones and for the common believing men and women; and Allah knows your movements during the day and your resting during the night.

மேலே குறிப்பிட்டது போல வார்த்தைகளைக் கொண்டு ஒரு குர்‍ஆன் மொழியாக்கம் செய்யப்பட்டு இருக்கின்றதா என்று எங்களுக்குத் தெரியாது. ஆனால், இந்த மொழியாக்கம் தான் சரியான மொழியாக்கம் என்று ஒரு இஸ்லாமியர் வாதம் புரிகிறார். முஹம்மது பாவம் செய்தார் என்பதை குர்‍ஆன் சொல்கிறது என்பதை கேள்விப்பட்டு, இவர் தேடிப்பார்த்ததில் இப்படிப்பட்ட மொழியாக்கம் கிடைத்தது என்றுச் சொல்கிறார். இவரின் பதிலின் படி, "அரபி மொழிக்கு நிகரான மொழியாக்கம் என்னவென்றால், முஹம்மது தனக்காக அல்ல, இஸ்லாமின் மீது நம்பிக்கை வைத்திருக்கும் அனைவரின் பாவத்திற்காக மன்னிப்பை கோரும்படி சொல்லப்பட்ட வசனம்" தான் இது என்றுச் சொல்கிறார், ஏனென்றால், முஹம்மது பாவம் செய்யாதவர் என்று கூறுகிறார். எனவே, மற்ற மொழியாக்கங்களில் உள்ள தவறை இவர் திருத்தி, "Not his own sins, but the sins of his close ones" என்ற விவரத்தை அனுப்பியுள்ளார்.

ஆனால், அரபியில் உள்ள வசனத்திற்கு நிகரான வார்த்தைகள் இவைகள் அல்ல, அதாவது, "உங்களுடைய சொந்த பந்தங்களுக்காக பாவமன்னிப்பு கோருங்கள்" என்ற வார்த்தைகள் அரபி மூல‌ வசனத்தோடு ஒத்துப்போவதில்லை. இப்படி மாற்றி மொழியாக்கம் செய்யும் செயல், ஒன்றை மட்டும் தெளிவாக சாட்சியிடுகிறது, அது என்னவென்றால், முஹம்மது பாவங்கள் செய்தார் என்ற விவரம் குர்‍ஆனிலிருந்தே வந்தாலும் சரி அதனை ஜீரணிக்க சில முஸ்லீம்களால் முடியவில்லை என்பதைக் காட்டுகிறது.

மூலம்: The Sins of Muhammad

தமிழ் மூலம்: http://www.answering-islam.org/tamil/quran/versions/047019.html




Isa Koran Home Page Back - Quran Version's Page
1

இஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்

முன் பக்கம் செல்ல

HOME PAGE

தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்

1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1

2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2

3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3

4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4

பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்

1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1

2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2

பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்

1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்

2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்