இஸ்லாம் அமைதி மார்கமா? இஸ்லாம் இனிய மார்கமா? இஸ்லாம் உண்மையான மார்கமா?

ஆன்சரிங் இஸ்லாம்

பல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்

சத்தியவான் தளம் செல்ல

Tuesday, June 23, 2009

அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?


 

அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?

ஆசிரியர்: முடே அல்ஃபதி

பல சமயங்களில் நமது இஸ்லாமிய நண்பர்கள் தங்களது அல்லாஹ்வைக் குறித்து உண்மைக்கு மாறாக மிகவும் நேர்த்தியான ஒரு தோற்றத்தைக் காட்ட முயற்சிக்கிறார்கள். அதாவது அல்லாஹ் பைபிளின் தேவனைப் போல‌, கருணையும் அன்பும் நிறைந்தவராக இஸ்லாமியர்களால் சித்தரிக்கப்படுகிறார்.

தீவிர‌ இஸ்லாமிய நாடாகிய ச‌வுதி அரேபியாவில் என்னுடைய சொந்த ஊரில் ஒரு பக்தி வைராக்கியமான வஹாபி முஸ்லீமாக வாழ்ந்து, கிறிஸ்தவர்களுடன் எவ்விதத் தொடர்புமின்றி வளர்ந்த நான், இப்போது என்னுடைய‌ இஸ்லாமிய மக்கள், கிறிஸ்தவர்களிடம் அல்லாஹ்வைப் பற்றியும் இஸ்லாமைப் பற்றியும் பகிர்ந்துகொள்ளும் ஒரு சில விவாதங்களைக் குறித்து மிகவும் ஆச்சரியப்படுகிறேன். அவர்கள் அல்லாஹ்வைக் குறித்து, மசூதிகளில் நான் ஒருபோதும் கேள்விப்பட்டிராத வண்ணமாயும், குறிப்பாக மதப் பற்றான முஸ்லீம்களின் மத்தியில் சொல்லப்படாத வகையினில் அவரை ஒரு மாறுபட்ட விதமாகச் சித்தரிக்கின்றார்கள். மக்கள் அல்லாஹ்வை, கூப்பிடும் போதெல்லாம் ஜனங்களின் ஜெபங்களைக் கேட்டு அதற்கு பதிலளிக்கும் கடவுளாக அல்லாஹ்வை சித்தரிக்க முஸ்லீம்கள் அரும்பாடு படுகிறார்கள். இந்தக் காரணத்திற்காக அவர்கள் சில கு‍ர்‍ஆன் வசனங்களை நம் முன் வைக்கிறார்கள், ஆனால் அவைகளைச் சற்று ஆராய்வோமானால், அவர்களின் கூற்றுக்கு எதிரானவையாக அவ்வசனங்கள் இருப்பதைக் காணலாம். அதாவது, அவர்கள் காட்டும் கடவுள், சாதாரண மனிதர்களைப் போலவே அவர்கள் மீது உண்மையான அக்கரை கொண்டவராக அல்லாமல், மாறாக தமது நலனிலேயே குறியாக இருப்பவராகவே இவ்வசனங்கள் நமக்குக் காண்பிக்கின்றன‌.

நமது ஜெபங்களுக்குப் பதிலளிப்பதில் அல்லாஹ் விருப்பம் கொண்டவராகவோ அல்லது அவ‌ர் நமது விண்ணப்பங்களை நாம் இருக்கும் வண்ணமாகவே அவரிடம் சொல்ல‌ சாத்தியமுள்ளவராகவோ நாங்கள் ஒருபோதும் கற்பிக்கப்பட்டதில்லை. ஆயினும், ஒரு மேற்கத்திய நாட்டில் வசிக்கும் நான், பைபிள் போதிக்கும் தேவனின் சாயலை இஸ்லாமியர்கள், அல்லாஹ்வுக்கு ஒப்பாக்கவும், அவர் பைபிளின் தேவன் போன்றே கருதப்படவும் வேண்டுமென்று முயற்சிக்கிறார்கள் எனக் காண்கிறேன். அதாவது, வேறு விதமாகச் சொல்வோமாயின், அல்லாஹ்வின் தோற்றத்தை அவர்கள் "கிறிஸ்துவ மயமாக்க" (Christianize Allah's image) முயற்சிக்கிறார்கள் .

இச்சிறிய கட்டுரையில், மேற்கத்திய முஸ்லீம்கள் அல்லாஹ்வை எவ்விதம் சித்தரிக்கிறார்கள் என்பதற்கு ஒரு உதாரணத்தைக் காண்பிக்க விரும்புகிறேன். இதற்காக இஸ்லாமியர்கள் பொதுவாகக் குறிப்பிட்டுக் காட்டும் இரண்டு குர்‍ஆன் வசனங்களையும், அதற்கான இஸ்லாமிய அறிஞர்களின் அதிகார பூர்வமான விளக்கங்களையும் எடுத்துக் கொள்ளுவோம். அவைகளின் மூலம் நமது வாசகர்களும், குறிப்பாக இஸ்லாமின் ஆதரவாளர்களும், "அல்லாஹ்வின் கருணையும் நம் ஜெபங்களுக்கான அவரின் பதிலும்" சில இஸ்லாமிய நண்பர்களின் மனதில் உதித்த‌ புதிய‌ விருப்பத்தின் தோற்றமே தவிர வேறல்ல என்பதினைத் தாமே புரிந்துகொள்ளும் வகையில் ஒரு எளிதாக்கப்பட்ட விளக்கத்தினைக் கொடுக்க முற்படுகின்றேன்.

நாம் ஆராய‌ப்போகும் முத‌லாவ‌து வ‌ச‌ன‌ம் சூரா: 2:186 ல் அட‌ங்கியுள்ள‌து

(நபியே!) என் அடியார்கள் என்னைப் பற்றி உம்மிடம் கேட்டால்; "நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்;, அவர்கள் என்னிடமே (பிரார்த்தித்துக்) கேட்கட்டும்;, என்னை நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்" என்று கூறுவீராக.

"And when My servants ask you concerning Me, then surely I am very near; I answer the prayer of the suppliant when he calls on Me, so they should answer My call and believe in Me that they MAY walk in the right way." – Q. 2:186 Shakir (emphasis ours)

இந்த வசனம் எடுத்த எடுப்பில், இஸ்லாமிய‌ரின் க‌ட‌வுளாகிய‌ அல்லாஹ், அவரைப் பின்பற்றுவோரின் ஜெபங்களைக் கேட்டு அவைகளுக்குப் பதிலளிப்பவராக தெரிந்தாலும், இவ்வசனத்தின் வரிகளுக்கு ஊடே இழையோடியிருக்கும் அர்த்தத்தைச் சிந்திப்போமானால், இவ்விதம் நடைபெறுவதற்குச் சில நிபந்தனைகள் இடப்பட்டிருப்பதினைக் காணலாம்.

1. அல்லாஹ்வை நோக்கிக் கூப்பிடும் நபரை இந்த வசனம் அல்லாஹ்வின் கட்டளைகளைக் கைக்கொள்ளும்படிச் சொல்கின்றது. அதாவது அந்த நபர் தனது கடமையைச் செய்தல் வேண்டும்; அநீதியானவற்றையோ அல்லது அல்லாஹ் வெறுக்கும் காரியங்களையோ செய்தல் கூடாது.

2. அந்த நபர் உண்மையிலேயே அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும். குழப்பம் இங்குத் தான் உருவாகின்றது. இந்த வசனம் அல்லாஹ்வால் அவரது அடியார்க்கு (இஸ்லாமியர்கள்) கொடுக்கப்பட்டிருந்தால், அவர்கள் அல்லாஹ்வை நம்பும்படிக்கு மறுபடியும் கேட்டுக் கொண்டிருக்கப்படுவதின் அவசியம் என்ன? இது அல்லாஹ் அவர்களின் பக்தியினையும் அவர்களது உள்ளுணர்வினையும் குறித்துச் சந்தேகத்துடன் இருப்பதாகத் தோற்றமளிக்கிறது. உண்மையில், இவ்விதமான எதிர்பார்ப்பு, அல்லாஹ், அவரது அடியார்கள் அவரை நோக்கிக் கூப்பிடும்போதெல்லாம் அவர்களுக்கு பதிலளிக்கும்படியான உறுதியினை வழங்கும் தெய்வம் அல்ல என்பதனையே காட்டுகின்றது.

3. இந்த‌ வ‌ச‌ன‌ம், அல்லாஹ்வை நோக்கிக் கூப்பிடும் ஒருவருக்கு, அவர் அல்லாஹ்வின் எல்லாக் கட்டளைகளுக்கும் கீழ்ப்படிந்து நல் வழியில் நடந்திருப்பினும் அவ‌னின்/அவ‌ளின் ஜெப‌ங்க‌ளுக்கு அவ‌ர் உண்மையிலேயே ப‌தில‌ளிப்பார் என்கின்ற வகையில் எந்த விதமான‌ உத்திரவாத‌த்தையும் கொடுக்க‌வில்லை.

அல்-குர்துபி (Al Qurtubi)[1], இந்த வசனத்தின் விளக்க உரையில், ஒரு முஸ்லீமின் வேண்டுதல் அல்லாஹ்வினால் பதிலளிக்க‌ப்படுவதற்குச் சில நிபந்தனைகள் உள்ளன எனக் குறிப்பிடுகிறார்:

• அல்லாஹ்வை நோக்கி ஜெபித்து விண்ணப்பம் செய்யும் ஒருவர் அறிந்தோ அல்லது அறியாமலோ அல்லாஹ்விற்கு எதிரான பாவங்களைச் செய்து இருத்தலாகாது. இதற்கு ஆதாரமாக அவர் சூரா 7:55 ஐக் காட்டுகிறார்.

(ஆகவே, முஃமின்களே!) உங்களுடைய இறைவனிடம் பணிவாகவும், அந்தரங்கமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள் - வரம்பு மீறியவர்களை நிச்சயமாக அவன் நேசிப்பதில்லை.

"வரம்பு மீறுதல்" என்றால் என்ன‌?

அல்-குர்துபி சொல்வதின்படி இதன் அர்த்தம் என்னவென்றால்:

• தடை செய்யப்பட்ட எவற்றையும் கேளாதிருத்தல்

• உங்களுடைய வாழ்கையில், உங்கள் பணத்திற்கு வட்டி வாங்குதல், பிறர் பொருளை அபகரித்தல், பணப் பற்றுவரவில் நாணயமற்று இருத்தல் போன்ற பாவங்கள் செய்து கொண்டிருக்கும் போது அல்லாஹ்விடம் எதனையும் கேளாதிருத்தல்.

• தான் கேட்பதற்கு அல்லாஹ் பதிலளிப்பாரென்ற நம்பிக்கையின்றி ஒரே காரியத்தை தொடர்ந்து கேட்டுக்கொண்டேயிருத்தல்.

• அல்லாஹ்வை நோக்கிக் கூப்பிடும் ஒருவர் தெளிவான சிந்தையுடன் தூய மனதுடன் அவ்வாறு செய்ய வேண்டும். ஜெபிக்கும் போது மனதினை வேறு திசையில் அலைய விடக்கூடாது.

உண்மையில், இபின் அட்டாவின் (Ibn Atta) கூற்றுப்ப‌டி அல்லாஹ்வை வேண்டிக்கொள்ளும் போது, வேண்டிக்கொள்ளும் ந‌ப‌ர் க‌டைப்பிடிக்க‌ வேண்டிய‌ சில‌ நிபந்தனைக‌ள் உள்ளன‌ என‌ அல்-குர்துபி சொல்கிறார். இந்த‌ நிபந்த‌னைக‌ள் கீழ்க‌ண்ட‌வ‌ற்றை உள்ள‌ட‌க்கிய‌து:

• மனத்தாழ்ச்சியுடன் கூடிய பணிவு, பயம், நம்பிக்கை, தொடர்ந்து விண்ணப்பித்தல், தடை செய்யப்படாத உணவையே (ஹலால்) உண்ணுதல்.

• விண்ணப்பம் செய்தல் உண்மையுடன் கூடியதாக இருக்க வேண்டும் என இபின் அட்டா கூறுகிறார்.

• விண்ணப்பம் செய்தல், கீழ்கண்டவாறு ஏற்ற வேளையிலே செய்யப்படுதல் வேண்டும்:

o உப‌வாச‌த்தை முடிக்கும் போதோ அல்ல‌து விடிய‌லுக்கு முன்பாக‌ உப‌வாச‌த்தைத் தொட‌ங்கும் போதோ, தொழுகைக்கான‌ அழைப்பிற்கும் தொழுகை ஆரம்பிக்கும் வேளைக்கும் இடைப்பட்ட நேரம், நாளின் இரண்டாவது மற்றும் மூன்றாவது தொழுகை வேளைக்கு இடைப்ப‌ட்ட‌ நேர‌ம், ம‌ற்றும் புத‌ன் கிழ‌மைக‌ள். ஏனைய‌ வேளைக‌ள் தேவைக்கேற்ப துரித ம‌ற்றும் அவ‌ச‌ர‌ கால‌ங்க‌ளை உள்ள‌ட‌க்கும்.

o விண்ணப்பத்தின் முதன்மையான நோக்கம் முஹம்மது நபியினை மகிமைப்படுத்தும் வண்ணம் இருத்தல் வேண்டும்.

o விண்ணப்பம் கேட்பதற்குத் தெளிவாக இருக்கும் வண்ணம் செய்தல் வேண்டும். முணுமுணுத்தல் இருத்தலாகாது.

மேலே கண்ட நிபந்தனைகளை வாசிக்கும்போது, கட்டுகளுடன் கூடிய ஒரு சட்டரீதியான ஒப்பந்த பத்திரத்தினை வாசிப்பது போன்ற ஒரு உணர்வினையே ஒருவர் பெறுவாரேயன்றி, திறந்த வாசலை உடையவர் என்று வர்ணிக்கப்படக்கூடிய கடவுளின் (அல்லாஹ்) வார்த்தைகளைப் ப‌டிக்கும் உணர்வினை அடையமாட்டார்.

நாம் ஆராய‌ப் போகும் அடுத்த‌ வ‌ச‌ன‌ம் சூரா 40:60ல் அட‌ங்கியுள்ள‌து.

وَقَالَ رَبُّكُمُ ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ إِنَّ الَّذِينَ يَسْتَكْبِرُونَ عَنْ عِبَادَتِي سَيَدْخُلُونَ جَهَنَّمَ دَاخِرِينَ

உங்கள் இறைவன் கூறுகிறான்; "
என்னையே நீங்கள் பிரார்த்தியுங்கள்; நான் உங்(கள் பிரார்த்தனை)களுக்கு பதிலளிக்கிறேன்; எவர்கள் என்னை வணங்குவதை விட்டும் பெருமையடித்துக் கொண்டிருக்கிறார்களோ, அவர்கள் சிறுமையடைந்தவர்களாக நரகத்தில் நுழைவார்கள்."

"And your Lord says: Call upon Me, I will answer you; surely those who are too proud for My service shall soon enter hell abased" – Q. 40:60 Shakir

அரபியில் இது கீழ் கண்டவாறு வாசிக்கப்படுகிறது[2].

"Waqala rabbukumu odAAoonee astajib lakum inna allatheena yastakbiroona AAan AAibadatee sayadkhuloona jahannama dakhireena"

மேலே காணப்பட்ட வசனத்தில் ஆய்வுக்குரிய வார்த்தை "Call upon Me" அரபி மொழியில் "odAAoonee" (ادْعُونِي) என்பதாகும். இதன் விளக்கத்தினை/விளக்கவுரையை[3] நாம் வாசிப்போமானால், ஆரம்ப கால இஸ்லாமியர்கள் "odAAoonee" (ادْعُونِي)" என்ற வார்த்தைக்கு "என்னையே தொழுதுக்கொள்ளுங்கள் – Worship me" அல்லது "சேவியுங்கள் – Serve me" என்றே பொருள் கொண்டார்கள் என்பதினைக் காணலாம். உண்மையில் இஸ்லாமின் நபியாகிய முஹம்மதுவிடம், இந்த வசனத்தின் பொருள் குறித்துக் கேட்டபோது, "Call upon Me" அல்லது "odAAoonee" (ادْعُونِي)" என்ற வார்த்தை அரபி மூலத்தில் "D-A-A" (دعا) என்பதில் இருந்து உருவாக்கப்பட்டது எனக் காண்பித்தார். அவரது கூற்றின்படி இந்த வார்த்தையின் அர்த்தம் என்னவெனில் "அல்லாஹ்வைத் தொழுகையின் மூலம் சேவித்தல் - serve Allah in worship" என்பதாகும். (அதாவது அரபியில் Ibada). மேலும், முஹம்மது உபயோகித்த வார்த்தையை நாம் அரேபிய அகராதியில்[4] பார்த்தால் ("A-B-D" (عبد) ) என்ற மூல வார்த்தை "சமய தொழுகையை – Religious Worship" குறிப்பதை காணலாம்.

இஸ்லாமிய‌ர்க‌ள், அல்லாஹ் தங்களின் ஜெபங்களுக்கு பதிலளிக்கக் காட்டும் ஆர்வத்திற்கு ஆதாரமாகச் சொல்லும் இந்த இரு வசனங்களை நன்கு ஆராய்ந்த பின்பு இவைகளில் இதற்கான சான்றோ, அல்லாஹ்வின் பதிலளிக்கும் முனைப்போ அல்லது அவர்களை அவர் இக்கட்டுகளிலிருந்து காப்பாற்ற விரைந்து வரும் பண்போ இருப்பதாக சிறிதளவேனும் நம்மால் காண முடியவில்லை. இதற்கு ஒப்பீடாகவுள்ள மெய்யான கடவுளாகிய பைபிளின் தேவன் அவரைப் பின்பற்றுவோருக்கு தங்களின் ஜெபங்களுக்கு பதிலினை காலங்காலமாக வாக்களிப்பவராக இருக்கிறார்.

"ஆபத்துக் காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு; நான் உன்னை விடுவிப்பேன், நீ என்னை மகிமைப் படுத்துவாய்." (சங்கீதம் 50:15)

"
கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள் அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும். ஏனென்றால், கேட்கிற எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும். உங்களில் எந்த மனுஷனானாலும் தன்னிடத்தில் அப்பத்தைக்கேட்கிற தன் மகனுக்குக் கல்லைக் கொடுப்பானா? மீனைக்கேட்டால் அவனுக்குப் பாம்பைக்கொடுப்பானா? ஆகையால், பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக் கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?" (மத்தேயு 7:7-11)

"மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால், என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிறகிரியைகளைத் தானும் செய்வான், இவைகளைப் பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வான்.
நீங்கள் என் நாமத்தினாலே எதைக் கேட்பீர்களோ, குமாரனில் பிதா மகிமைப்படும்படியாக, அதைச் செய்வேன். என் நாமத்தினாலே நீங்கள் எதைக்கேட்டாலும் அதை நான் செய்வேன்." (யோவான் 14:12-14)

"அந்த நாளிலே நீங்கள் என்னிடத்தில் ஒன்றுங் கேட்கமாட்டீர்கள். மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் என் நாமத்தினாலே பிதாவினிடத்தில்
கேட்டுக்கொள்வதெதுவோ அதை அவர் உங்களுக்குத் தருவார். இதுவரைக்கும் நீங்கள் என் நாமத்தினாலே ஒன்றும் கேட்கவில்லை; கேளுங்கள், அப்பொழுது உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி பெற்றுக்கொள்வீர்கள்.… இவைகளை நான் உவமைகளாய் உங்களுடனே பேசுகிறேன்; காலம் வரும், அப்பொழுது நான் உவமைகளாய் உங்களுடனே பேசாமல், பிதாவைக்குறித்து வெளிப்படையாக உங்களுக்கு அறிவிப்பேன். அந்த நாளில் நீங்கள் என் நாமத்தினாலே வேண்டிக்கொள்வீர்கள். உங்களுக்காகப் பிதாவை நான் கேட்டுக்கொள்வேனென்று உங்களுக்குச் சொல்லவேண்டியதில்லை. நீங்கள் என்னைச் சிநேகித்து, நான் தேவனிடத்திலிருந்து புறப்பட்டுவந்தேனென்று விசுவாசிக்கிறபடியினால் பிதாதாமே உங்களைச் சிநேகிக்கிறார்." (யோவான் 16:23-27)

"அறிவுக்கெட்டாத அந்த அன்பை அறிந்துகொள்ள வல்லவர்களாகவும், தேவனுடைய சகல பரிபூரணத்தாலும் நிறையப்படவும், அவர் தமது மகிமையினுடைய ஐசுவரியத்தின்படியே, உங்களுக்கு அநுக்கிரகம் பண்ணவேண்டுமென்று வேண்டிக்கொள்ளுகிறேன்.
நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு, சபையிலே கிறிஸ்து இயேசுவின் மூலமாய்த் தலைமுறை தலைமுறைக்கும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென்.(எபேசியர் 3:19-21).

"
நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படிகேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்பதே அவரைப் பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம். நாம் எதைக் கேட்டாலும் அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்று நாம் அறிந்திருந்தோமானால், அவரிடத்தில் நாம் கேட்டவைகளைப் பெற்றுக்கொண்டோமென்றும் அறிந்திருக்கிறோம்.." (I யோவான் 5:14-15)

இதன் பயனாக, நமது இஸ்லாமிய நண்பர்கள் முன்பு நாம் குறிப்பிட்ட‌ வசனங்களை முன்னிறுத்தி முனைவதினைக் குறித்து அவர்கள் தவறாக நடத்தப்படுகிறார்களோ அல்லது தவறாகப் பிறரை வழி ந‌டத்த விழைகிறார்களோ என்ற சந்தேகத்துடன் பார்ப்பதைத் தவிர‌ நமக்கு வேறு வழி இல்லை. இதன் பின்னணியில், உண்மையாகவே இக்காரியத்தினை ஆராய முற்படும் இஸ்லாமியர்களை நான் வரவேற்பதுடன், தேவன் தாமே இவர்களின் சத்திய தாகத்தினை ஆற்றும்படிக்கு வேண்டிக்கொள்கிறேன்.

"ஆகையால் குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்" (யோவான் 8:36)

கேட்கிறவரும் பதிலளிப்பவருமாகிய நம் ஆண்டவரும் மீட்பருமாகிய இயேசு கிறிஸ்துவுக்கே, சதாகாலங்களிலேயும் மகிமையும் மகத்துவமும் உண்டாகியிருப்பதாக, ஆமென்.

Footnotes

1
Arabic source, translation is my own.
2
Source
3
Ibn Kathir, Al Jalalayn, Al Tabari and Al Qurtubi
4 Lane's Lexicon,
source

ஆங்கில மூலம்:
Does Allah Answer Prayers?

ஆசிரியரின்
இதர கட்டுரைகளை படிக்க‌வும்



--
6/22/2009 03:07:00 AM அன்று ஈஸா குர்-ஆன் - Isa Koran இல் Isa Koran ஆல் இடுகையிடப்பட்டது

 

இஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்

முன் பக்கம் செல்ல

HOME PAGE

தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்

1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1

2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2

3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3

4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4

பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்

1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1

2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2

பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்

1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்

2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்