இஸ்லாம் அமைதி மார்கமா? இஸ்லாம் இனிய மார்கமா? இஸ்லாம் உண்மையான மார்கமா?

ஆன்சரிங் இஸ்லாம்

பல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்

சத்தியவான் தளம் செல்ல

Wednesday, March 25, 2009

பன்றி மாமிசம் சாப்பிடுவதைப் பற்றிய விவாதம் - The I...


 

பன்றி மாமிசம் சாப்பிடுவதைப் பற்றிய விவாதம்

 

The Issue of Eating Pork

 

கிறிஸ்தவர்கள் பன்றி மாமிசம் சாப்பிடுவதைக் கண்டு அனேக இஸ்லாமியர்கள் அதிர்ச்சி அடைகிறார்கள். மோசே சட்டத்தின் கீழ் வாழும் இஸ்ரவேல் மக்கள் எப்படி பன்றியைக் கண்டவுடன் தூரமாக ஒதுங்குகிறார்களோ, அது போல, இஸ்லாமியர்களும் பன்றியைக் கண்டதும் ஒதுங்குகிறார்கள். இன்று உலகில் வாழும் பல இலட்ச யூதர்கள் மோசேயின் கட்டளைகளை பின் பற்றுகிறார்கள். உண்மையாகவே, பழைய ஏற்பாட்டில் பன்றி தடை செய்யப்பட்டுள்ளது.

 
பன்றியின் குளம்பு விரிகுளம்பும் இரண்டாக பிரிந்ததுமாயிருந்தும், அது அசைபோடாது; அது உங்களுக்கு அசுத்தமாயிருக்கும். இவைகளின் மாம்சத்தைப் புசிக்கவும், இவைகளின் உடல்களைத் தொடவும் வேண்டாம்; இவைகள் உங்களுக்குத் தீட்டாயிருக்கக்கடவது. (லேவியராகமம் 11:7-8)
 
இதே போல தடை குர்‍ஆனிலும் உண்டு:
 
தானாகவே செத்ததும், இரத்தமும், பன்றியின் மாமிசமும், அல்லாஹ் அல்லாத பெயர் சொல்லப்பட்டதும் ஆகியவைகளைத்தான் உங்கள் மீது ஹராமாக ஆக்கிருக்கிறான்;... (குர்‍ஆன் 2:173)
 
பன்றி மாமிசம் சாப்பிடக்கூடாது என்று இஸ்லாமில் உறுதியாக கட்டளையிடப்பட்டுள்ளதால், பன்றி மாமிசம் சாப்பிடுவது என்பது ஒரு "பரிசுத்தமில்லாத செயல்" அதாவது இறைவனுக்கு முன்பாக தகாத செயல் என்று இஸ்லாமியர்கள் கருதுகிறார்கள் என்பதை நாம் விளங்கிக் கொள்ளலாம். இந்த காரணத்திற்காகத் தான், பரிசுத்த நபியாகிய இயேசுவைப் பின்பற்றுகிறோம் என்றுச் சொல்லி கொள்பவர்கள், பன்றி மாமிசம் சாப்பிடுவதை மிகப்பெரிய குற்றமாக இஸ்லாமியர்கள் கருதுகிறார்கள்.

மோசேயின் சட்டங்களை புரிந்துக்கொள்வதும், அந்த சட்டங்கள் இஸ்ரவேல் மக்களுக்கு கொடுக்கப்பட்ட நோக்கத்தை புரிந்துக்கொள்வதும் மிகவும் முக்கியமானதாகும், பழைய ஏற்பாட்டின் சட்டங்கள் இரண்டு வகையாக உள்ளன, அவைகள்:

அறநெறி சட்டங்கள் (Moral Law)

மற்றும்

அரசாங்க, ஆரோக்கிய மத‌ சட்டங்களாகும் (Civil Law)

வாழ்க்கையின் முக்கியமான நன்னடத்தை சம்மந்தப்பட்ட விவரங்கள் அறநெறி சட்டத்தின் கீழ் வருகின்றன. இந்த அறநெறி சட்டத்தின் முக்கிய நோக்கம், தெரிந்தெடுக்கப்பட்ட இஸ்ரவேல் மக்கள் தங்கள் உள்ளான பரிசுத்தத்தினால் மற்ற மக்களைவிட வேறுபட்டவர்களாக காணப்படவும், மற்றும் மனிதர்களுக்கும் தேவனுக்கும் முன்பாக பரிசுத்தமாக வாழுவதற்கும் கொடுக்கப்பட்டது. இந்த உயர்ந்த அறநெறி சட்டங்கள் இஸ்ரவேல் மக்களின் தரத்தை உயர்த்தவும், அவர்கள் தங்கள் பரிசுத்தத்தில் மற்ற மக்களுக்கு, வம்சங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டான வாழ்க்கை வாழவும் கொடுக்கப்பட்டது. உதாரணத்திற்குச் சொல்லவேண்டுமானால், "பத்து கட்டளைகளைச்" சொல்லலாம். ஒரு மனிதன் தன் சக மனிதனுக்கும் அதே நேரத்தில் தேவனுக்கும் ஆற்றவேண்டிய கடமைகளை இந்த பத்து கட்டளைகள் சொல்கின்றன. இந்த சட்டங்கள் சூழ்நிலைகளில் மாற்றம் ஏற்பட்டாலும் மாற்றமடையாத நிலையான சட்டங்களாகும்.

சிவில் சட்டங்கள் என்றுச் சொல்லக்கூடிய "அரசாங்க, ஆரோக்கிய மத" சட்டங்கள் வித்தியாசமானவைகள். இந்த சட்டங்கள் ஒவ்வொரு நாளும் நாம் வாழும் சமுதாயத்தில் பின் பற்றவேண்டிய சட்டங்களாகும். இந்த சட்டங்கள் சூழ்நிலைகள் மாறும் போதும், நம் அருகிலுள்ள சமுதாயத்திற்கு ஏற்ற விதமாக பழக்கவழக்கங்களினால் மாறக்கூடியதாக உள்ளது. இந்த‌ ச‌ட்ட‌ங்க‌ள் வெளிப்புற சுத்தம் பற்றியும், ஆரோக்கிய‌ம் ப‌ற்றியும், உண‌வுக‌ளைப் ப‌ற்றியும், உடைக‌ளைப் ப‌ற்றியும் ம‌ற்றும் ம‌த‌ ச‌ட‌ங்குக‌ளைப் ப‌ற்றியும் சொல்கின்ற‌ன‌. இந்த‌ ச‌ட்ட‌ங்க‌ளின் முக்கிய‌ நோக்க‌ம், இஸ்ர‌வேல் ம‌க்க‌ள் வெளிப்புற‌ ப‌ரிசுத்த‌த்தின் அடிப்ப‌டையில் ம‌ற்ற‌ ச‌முதாய‌ங்க‌ளை விட‌ எப்ப‌டி வேறு பிரிக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளாக‌ இருக்கிறார்க‌ள் என்ப‌தைக் காட்ட‌வேயாகும். இந்த‌ இஸ்ர‌வேல் ம‌க்க‌ள் தனித்தன்மை வாய்ந்தவர்களாக, ஒரே மெய்யான தேவனை அவர்கள் தொழுதுக்கொள்வதால் உலகத்திலுள்ள மற்றவர்க‌ளின் பார்வையில் வித்தியாசமானவர்களாக காணப்படும்படி வாழவேண்டும். அதே நேரத்தில் தங்களைச் சுற்றியுள்ள மற்ற சமுதாயத்தின் மூட பழக்கவழக்கங்களையும், விக்கிர ஆராதனையையும் பின் பற்றாதவர்களாகவும் இருக்கவேண்டும் என்பதற்காக இச்சட்டங்கள் கொடுக்கப்பட்டன.

இந்த‌ சிவில் சட்டங்களில் ஒன்று தான் "ப‌ன்றி மாமிசம் உண்ணக்கூடாது" என்ற‌ த‌டை க‌ட்டளையாகும். இஸ்ரவேலை சுற்றியிருந்த ப‌ழ‌ங்குடியினர் த‌ங்க‌ள் விக்கிரகங்களுக்கு ப‌ன்றியை ப‌லியிடுவ‌து அவர்களுக்கு ஆராதனை வழக்கமாக இருந்த‌து. இன்னும் அந்த‌ கால‌த்தில் அந்த‌ இட‌ங்க‌ளில் வாழும் ப‌ன்றிக‌ள், குப்பை கூள‌ங்க‌ளையும் இத‌ர‌ கழிவுக‌ளையும் திண்ப‌வைக‌ளாக‌ இருந்த‌ன‌. இத‌னால், ப‌ன்றியின் மாமிசத்தை உட்கொள்ளுதல், அனேக கொடுமையான வியாதிகளைக் கொண்டுவந்து மொத்த சமுதாயத்தையும் தாக்குவதாக இருந்தது.

இஸ்ரவேல் மக்கள் இப்படிப்பட்ட பழங்குடி மற்றும் அவர்களின் இந்த பழக்கவழக்கங்களிலிருந்து தங்களை காத்துக்கொண்டு தூரமாக இருக்கவேண்டும்.

இஸ்ரவேல் மக்கள் தனக்கு பரிசுத்த ஜனங்கள் என்று தேவன் அவர்களை பிரித்தெடுத்து, மெய்யான ஒரே தேவனாகிய தன்னை தொழுதுக்கொள்ளவேண்டுமென்று, ஆபிரகாமின், ஈசாக்கின் மற்றும் யாக்கோபின் தேவன் விரும்பினார். இஸ்ரவேல் மக்கள் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக பிரித்தெடுக்கப்பட்டார்கள், இதனை அவர்கள் தொடர்ந்து நியாபகத்தில் வைத்திருக்கவேண்டும். இதனை குர்‍ஆன் இவ்விதமாக கூறுகிறது:
 
(நபியே! ஆத்மீக) ஆற்றலும், அகப்பார்வையும் உடையவர்களாயிருந்த நம் அடியார்களான இப்றாஹீம், இஸ்ஹாஃக், யஃகூப் ஆகியோரையும் நினைவு கூர்வீராக! நிச்சயமாக, நாம் இவர்களை (மறுமை) வீட்டை நினைவூட்டுவதற்காகவே பூரண பரிசுத்தமானவர்களாக(த் தேர்ந்தெடுத்தோம்). (குர்‍ஆன் 38:45- 46)

இஸ்ராயீலின் மக்களே! (முன்னர்) நான் உங்களுக்கு அளித்த என்னுடைய அருட் கொடையையும், உலகோர் யாவரையும் விட உங்களை மேன்மைப்படுத்தினேன் என்பதையும் நினைவு கூறுங்கள். (குர்‍ஆன் 2:47)
 
ஏன் இஸ்ரவேல் மக்கள் விசேஷித்தவர்கள்? எந்த நோக்கத்திற்காக தேவன் அவர்களை தெரிந்தெடுத்துக் கொண்டார்? இந்த தெரிந்தெடுத்த சமுதாயத்திலிருந்து தான் உலக இரட்சகர் மேசியாவாகிய‌ இயேசு வரவேண்டும், இவர் மனித இனத்தை காப்பாற்ற தன்னையே ஒப்புக்கொடுக்க தேவனிடமிருந்து வந்தவர். தேவனின் வார்த்தை மனிதனாக வந்தார், கன்னி மரியாளுக்கு மகனாக இயேசுவாக வந்தார். இந்த பரிசுத்தர் ஆபிரகாமின், ஈசாக்கின் மற்றும் யாக்கோபின் வம்சமாகிய இஸ்ரவேல் வம்சத்தில் பிறக்கவேண்டும். இஸ்ரவேல் மக்கள் மற்றவர்களைவிட தனித்தன்மை வாய்ந்தவர்க்ளாக தனக்கு பரிசுத்த ஜனம் என்று தேவன் அழைத்து அவர்களை தெரிந்தெடுத்தது ஒன்றும் ஆச்சரியமில்லையே.

இயேசு இந்த‌ உல‌கில் ஊழிய‌ம் செய்த‌ கால‌த்தில், துர‌திஷ்ட‌வ‌ச‌மாக‌, இஸ்ர‌வேல் ம‌க்க‌ளில் அனேக‌ர் கட்டளைகளின் நோக்க‌த்தை ம‌ற‌ந்த‌வ‌ர்களாக‌ வாழ்ந்துக்கொண்டு இருந்தார்க‌ள். இத‌ய‌த்தை சுத்த‌மாக‌ வைத்திருப்ப‌தைக் காட்டிலும், த‌ங்க‌ள் கைக‌ளை சுத்தமாக வைத்திருப்பதற்கே அதிக‌ முக்கிய‌த்தும் கொடுத்து வ‌ந்தார்க‌ள். அவர்கள் ந‌ன்னெறி ச‌ட்ட‌ங்க‌ளுக்கு அதிக முக்கிய‌த்துவ‌ம் கொடுப்ப‌தைக் காட்டிலும், சிவில் ச‌ட்ட‌ங்களுக்கு அதிக முக்கிய‌த்துவ‌ம் கொடுத்தார்க‌ள். முக்கிய‌மாக‌ ம‌த‌த் த‌லைவ‌ர்க‌ள் இத‌ய‌த்தை பரிசுத்த‌மாக‌ வைத்திருப்ப‌த‌ற்கு ப‌திலாக‌, அனேக‌ சுத்திக‌ரிப்பு க‌ட்ட‌ளைக‌ளை உருவாக்கி அவைக‌ளை க‌டைபிடித்த‌ன‌ர், ம‌ற்றும் இவைக‌ளே முக்கிய‌மான‌வைக‌ள் என்றும் சொல்லிவ‌ந்த‌ன‌ர். இத‌ய‌த்தை ப‌ரிசுத்த‌மாக‌ வைத்திருப்ப‌து கொஞ்ச‌ம் க‌டினமே. இதனால், உண்மையான மார்க்கத்தை பின் பற்றுகிறவர்களின் நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக மத சடங்குகளாலும், மாய்மாலத்திலும் நிறைந்திருந்தது. மதத் தலைவர்களை வெளிப்புறமாக கண்டால், அவர்கள் தங்கள் ஜெபங்களை அடிக்கடி செய்கிறவர்களாகவும், தங்கள் கைகளை கழுவி சுத்தமாக வைத்திருப்பவர்களாகவும், மற்றும் அனுமதிக்கப்பட்ட உணவுகளை மட்டுமே உண்கிறவர்களாகவும் காணப்பட்டார்கள். ஆனால், அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையைக் கண்டால், வெறுப்பிலும், பேராசையிலும், பொறாமையிலும் காமத்தால் நிறைந்ததாயும் இருந்தது. தன் பரிசுத்தம் பற்றி தானே புகழ்ந்துப் பேசி மனிதன் தேவனின் கட்டளைகளை அவமதித்தான்.

இந்த சிவில் சட்டத்தை மனிதன் தவறாக மாற்றியதால், தேவன் கொடுத்த தனக்கிருந்த அதிகாரத்தினால் இயேசு காரியத்தில் இறங்கினார். அந்த மக்களின் மாய்மால வாழ்க்கையை நீக்குவதற்காக எல்லா உணவுகளும் சுத்தமானவைகள் என்று அறிவித்தார், இதன் மூலம், உண்மையான பரிசுத்தம் என்பது உண்ணும் உணவினால் அல்ல, மனதில் ஏற்பட்டிருக்கும் பரிசுத்தமே உண்மையான பரிசுத்தம் என்பதை காட்டினார். இதன் காரணமாக, இயேசுவை பின்பற்றுகிறவர்களுக்கு எல்லா உணவுகளும் நல்ல உணவுகளே, அனுமதிக்கப்பட்டதே. இயேசு சொன்னதாக குர்‍ஆன் இவ்விதமாகச் சொல்கிறது:
 
"எனக்கு முன் இருக்கும் தவ்ராத்தை மெய்பிக்கவும், உங்களுக்கு விலக்கி வைக்கப்பட்டவற்றில் சிலவற்றை உங்களுக்கு அனுமதிக்கவும், உங்கள் இறைவனிடமிருந்து (இத்தகைய) அத்தாட்சியை உங்களிடம் நான் கொண்டு வந்திருக்கிறேன்; …." (குர்‍ஆன் 3:50)
 
பரிசுத்தம் பற்றி இயேசுவின் போதனையை புதிய ஏற்பாடு இவ்விதமாகச் சொல்கிறது:
 
அதற்கு அவர்: நீங்களும் இவ்வளவு உணர்வில்லாதவர்களா? புறம்பேயிருந்து மனுஷனுக்குள்ளே போகிறதொன்றும் அவனைத் தீட்டுப்படுத்தமாட்டாதென்று நீங்கள் அறிந்துகொள்ளவில்லையா? அது அவன் இருதயத்தில் போகாமல் வயிற்றிலே போகிறது; அதிலிருந்து எல்லாப் போஜனங்களின் அசுத்தங்களையும் கழிக்கிற ஆசனவழியாய் நீங்கிப் போகும். மனுஷனுக்குள்ளே இருந்து புறப்படுகிறதே மனுஷனைத் தீட்டுப்படுத்தும். எப்படியெனில், மனுஷருடைய இருதயத்திற்குள்ளிருந்து பொல்லாத சிந்தனைகளும், விபசாரங்களும், வேசித்தனங்களும், கொலைபாதகங்களும், களவுகளும், பொருளாசைகளும், துஷ்டத்தனங்களும், கபடும், காமவிகாரமும், வன்கண்ணும், தூஷணமும், பெருமையும், மதிகேடும், புறப்பட்டுவரும். பொல்லாங்கானவைகளாகிய இவைகளெல்லாம் உள்ளத்திலிருந்து புறப்பட்டு மனுஷனைத் தீட்டுப்படுத்தும் என்றார். (மாற்கு 7:18-23)
 
இந்த இடத்தில் ஒரு விவரத்தை குறிப்பிடவேண்டும், அதாவது இயேசு இந்த உலகத்தில் வந்துவிட்டதினால், இஸ்ரவேல் மக்கள் ஒரு பிரித்தெடுக்கப்பட்ட ஜனமாக இருக்கவேண்டிய அவசியமில்லை. உண்மையில், இயேசு உலகத்தில் உள்ள‌ எல்லா நாடுகளையும், மக்களையும் தேவனுக்குள் ஒன்றாக்கியுள்ளார். எல்லா நாட்டு மக்களும் இனி தேவனின் நன்னெறி சட்டங்களை (Moral Laws) பின்பற்றி வாழ்ந்து தேவனுக்கு முன்பாக பரிசுத்தவான்களாக வாழமுடியும். இயேசுவின் மக்களாகிய கிறிஸ்தவர்கள் உலகம் முழுவதும் பரவியிருப்பதாலும், அவர்கள் அதிகமதிகமாய் பெருகுவதாலும் இனி எல்லா நாட்டு மக்களுக்கும், கலாச்சாரத்திற்கு ஏற்ற ஒரு பொதுவான சிவில் சட்டம் இனி தேவையில்லை. ஏனென்றால், உலக மக்களின் சூழ்நிலைகள் வேறு, கலாச்சாரங்கள் வேறு, வாழும் இடமும், சீதோஷ்ண நிலையும் வேறு. எனினும், எல்லாருக்கும் பொருந்தக்கூடிய இயேசுவின் நன்னெறி போதனைகள் மாறாமல் அப்படியே உள்ளது. அது என்னவென்றால், நாம் உணவை தவிர்ப்பதினால் சர்வ வல்லவருக்கு மகிமை உண்டாக்கப்போவதில்லை, ஆனால், தேவனுக்காகவும், தன் சக மனிதனுக்காகவும் இருதயத்தில் உண்டாகும் உண்மையான அன்பே, அதிக முக்கியமானது. இந்த சட்டமானது, எந்த நாட்டில் வாழ்பவனாக இருந்தாலும், உலகில் யாராக இருந்தாலும் சரி, அது அவனுக்கு பொருந்தக்கூடியதாக இருக்கிறது.

இங்கு ஒன்றை நாம் குறிப்பிட‌வேண்டும், மோசேயின் சிவில் ச‌ட்ட‌ங்க‌ள் இஸ்ர‌வேல் வ‌ம்ச‌த்தாருக்கு கொடுக்க‌ப்ப‌ட்ட‌து. இன்றுள்ள‌ கிறிஸ்த‌வர்க‌ளில் அனேக‌ர் இஸ்ர‌வேல் வ‌ம்ச‌த்தில் பிற‌ந்த‌வ‌ர்க‌ள் அல்ல‌. இத‌னால், இஸ்ரவேல் ச‌முதாய‌ "சிவில் ச‌ட்ட‌திட்ட‌ங்க‌ளுக்கு" கிறிஸ்தவர்கள் அப்பாற்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் ஆவார்கள்.

சில நேரங்களில் கிறிஸ்தவர்கள் பன்றி மாமிசம் சாப்பிடாமல் இருப்பது நல்லது. அதாவது, தாங்கள் வாழும் நாடுகளில் உள்ள பன்றிகள் கழிவுகளையும், இதர குப்பை கூளங்களையும் சாப்பிட்டு வளவதாக‌ கிறிஸ்தவர்கள் அறிய வந்தால், உடல் ஆரோக்கியத்தை மனதில் கொண்டவர்களாக‌, பன்றியின் மாமிசம் சாப்பிடாமல் இருக்கவேண்டும். நாம் நம்முடைய உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதும் கூட‌ தேவனுக்கு பிரியமான செயலாக இருக்கிறது.

இஸ்ரவேல் அல்லாத அந்நிய ஜனங்களுக்கும் கட்டாயமாக‌ சுவிசேஷம் சொல்லவேண்டும் என்பதை அப்போஸ்தலர் பேதுரு உணரவேண்டும் என்பதற்காக "குறிப்பிட்ட மிருக மாமிசத்தை உண்ணுங்கள்" என்ற பழைய ஏற்பாட்டின் கட்டளையை குறிப்பிட்டு, இயேசு ஒரு தரிசனத்தை பேதுருவிற்கு கொடுத்து அவரை அந்நிய ஜனங்களுக்கும் சுவிசேஷம் சொல்லும் படி தயார்படுத்தினார். அப்போஸ்தலர் நடபடிகள் 10ம் அதிகாரத்தில் இந்த நிகழ்ச்சி விவரமாக சொல்லப்பட்டுள்ளது. அந்த தரிசனத்தின் மூலமாக பேதுரு தெரிந்துக்கொண்ட ஒரு தீர்மானத்தை 28ம் வசனத்தில் நாம் காணலாம்.
 
அப்போஸ்தலர் நடபடிகள் அதிகாரம் 10

11 வானம் திறந்திருக்கிறதாகவும், நாலுமுனைகளும் கட்டப்பட்ட பெரிய துப்பட்டியைப்போல ஒருவிதமான கூடு தன்னிடத்தில் இறங்கித் தரையில் விடப்பட்டிருக்கிறதாகவும்,

12 அதிலே பூமியிலுள்ள சகலவிதமான நாலுகால் ஜீவன்களும், காட்டுமிருகங்களும், ஊரும் பிராணிகளும், ஆகாயத்துப் பறவைகளும் இருக்கிறதாகவும் கண்டான்.

13 அல்லாமலும்: பேதுருவே, எழுந்திரு, அடித்துப் புசி என்று அவனுக்குச் சொல்லும் ஒரு சத்தம் உண்டாயிற்று.

14 அதற்குப் பேதுரு: அப்படியல்ல, ஆண்டவரே, தீட்டும் அசுத்தமுமாயிருக்கிற யாதொன்றையும் நான் ஒருக்காலும் புசித்ததில்லை என்றான்.

15 அப்பொழுது: தேவன் சுத்தமாக்கினவைகளை நீ தீட்டாக எண்ணாதே என்று இரண்டாந்தரமும் சத்தம் அவனுக்கு உண்டாயிற்று.

28 அவர்களை நோக்கி: அந்நிய ஜாதியானோடே கலந்து அவனிடத்தில் போக்குவரவாயிருப்பது யூதனானவனுக்கு விலக்கப்பட்டிருக்கிறதென்று நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்; அப்படியிருந்தும், எந்த மனுஷனையும் தீட்டுள்ளவனென்றும் அசுத்தனென்றும் நான் சொல்லாதபடிக்கு தேவன் எனக்குக் காண்பித்திருக்கிறார்.
 
அப்போஸ்தலர் நடபடிகள் 10ம் அதிகாரத்தில் குறிப்பிடப்பட்ட நிகழ்ச்சியின் முக்கியத்துவம் "அந்நிய ஜனங்கள் (யூதரல்லாதவர்கள்) அசுத்தமானவர்கள் என்று இனி கருதவேண்டாம்" என்பதைச் சொல்வதற்காகவே ஆகும். இதன் படி "சுத்திகரிப்பு சடங்குகள் சம்மந்தப்பட்ட சட்டங்கள்" இனி அமுலில் இல்லை என்பதை காட்டவேயாகும். ஏனென்றால், பழைய ஏற்பாட்டில் யார் யாரெல்லாம் "அசுத்தமான தடை செய்யப்பட்ட உணவை உட்கொள்கிறாரோ" அவர் யூதர்களுக்கு அசுத்தமாக இருப்பார் என்ற கட்டளை இனி செல்லாது என்பதை தெரிவிக்கவேயாகும். ஆக, யூதர்களையும், யூதரல்லாதவர்களாகிய அந்நிய ஜனங்களையும் பிரித்துக்காட்டும் உணவு சம்மந்தப்பட்ட சட்டங்கள் இனி அமுலில் இருக்காது அல்லது செல்லுபடியாகாது, என்று தெரிவிக்க போதுருவிற்கு இயேசு தரிசனத்தைக் கொடுத்தார்.

இதன்படி, அப்போஸ்தலர் நடபடிகள் 15ம் அதிகாரத்தில், பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதலின் படி, அப்போஸ்தலர்கள், அந்நிய ஜனங்களிலிருந்து இரட்சிக்கப்பட்டவர்களை "யூதர்களின் உணவு பற்றிய சட்டத்திட்டங்களிலிருந்து" விடுதலைக் கொடுத்தார்கள். இதே போல, 1 கொரிந்தியருக்கு எழுதிய கடிதத்தில், எல்லா உணவுகளையும் நாம் உண்ணலாம், ஆனால், பலவீனமான சகோதரரின் விசுவாசத்தையும், மனசாட்சியையும் கருத்தில்கொண்டு செய்யுங்கள் என்று அறிவுரை கூறப்பட்டுள்ளது.

ஆங்கில மூலம்: The Issue of Eating Pork



 

 


 

Tuesday, March 24, 2009

[ஈஸா குர்-ஆன் - Isa Koran] பன்றி மீது ஷப்பீர் அலி அவர்களின் அதீத விருப்பம் பற...

 

பன்றி மீது ஷப்பீர் அலி அவர்களின் அதீத விருப்பம் பற்றிய ஆய்வு

 
"ப‌ன்றி க‌றியை உண்ணுத‌ல்" க‌ட்டுரைக்கு கிறிஸ்த‌வ‌ ப‌தில்
 

An Examination of Shabir Ally's Fascination with Pigs

 

Being a Christian Response to his "Eating Pork" Article

 
[பாகம் 1]
 

கிறிஸ்தவர்கள் பன்றியின் மாமிசம் உண்ணக்கூடாது என்பதை நிருபிப்பதற்காக ஷப்பீர் அலி அவர்கள் ஒரு கட்டுரையை எழுதியிருக்கிறார்கள். தன் வாதத்தை நிருபிப்பதற்காக அவருக்கு பல விவரங்களை மறைக்கவேண்டி வந்துள்ளது, மற்றும் வசனங்கள் சொல்லப்பட்ட சூழ்நிலைக்கு வெளியே கொண்டு வந்து பொருள் கூறவேண்டி வந்துள்ளது. ஷப்பீர் அலி அவர்களின் தவறான வழிமுறையினாலும் மற்றும் தவறான ஆய்வினாலும், அவர் கொடுத்த முடிவுரையைக் கண்டு, பைபிளின் வசனங்களுக்கு தவறான பொருளை அவர் கொடுத்ததைக் கண்டு நாம் வியப்படையத் தேவையில்லை.

 
ஷப்பீர் எழுதுகிறார்:

பைபிளும் குர்‍ஆனும் பன்றியின் மாமிசம் சாப்பிடுவதை தடை செய்துள்ளன. இந்த தடையை இஸ்லாமியர்கள் அறிந்துவைத்துள்ளனர், மற்றும் அதனை தீவிரமாக கடைபிடுத்தும் வருகின்றனர். ஆனால், பைபிளை ப‌டிக்கும் அனேகர், இந்த‌ விவ‌ர‌ம் எங்கே உள்ள‌து என்று கூட‌ தெரிவ‌தில்லை என்றுச் சொல்கிறார்கள்.
 
பதில்:

பைபிள் "பன்றியின் மாமிசம்" உண்பதை தடை செய்த விவரத்தை ஷப்பீர் அலி அவர்கள் பொதுவாக எல்லாருக்கும் எல்லா காலத்திற்கும் பைபிள் சொன்னதாக கூறியுள்ளார். பைபிளில் உள்ள அனேக புத்தகங்களில் ஒரு புத்தகத்தை நாம் குறிப்பிடுவதற்கு அல்லது ஒரு பகுதியை குறிப்பிடுவதற்கு பொதுவாக "பைபிள்" என்று நாம் சொல்கிறோம். ஆனால், பன்றியின் மாமிசம் உண்பதைப் பற்றிய இந்த விவரமானது, பைபிளில் ஒரு பகுதியில் சொல்லப்பட்ட விவரமாகும். இதன் பொருள் என்னவென்றால், நாம் எழுதும் போது சரியான வார்த்தைகளை சரியான இடத்தில் பயன்படுத்தவேண்டும். நாம் எச்சரிக்கையாக இல்லாத பட்சத்தில், மக்கள் தவறாக புரிந்துக்கொள்ள வாய்ப்பு உண்டாகும். அதாவது பைபிள் ஒரு குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட மக்களுக்குச் சொன்ன கட்டளைகளை பைபிள் முழுவதும் சொல்லப்பட்டுள்ளது என்று மக்கள் தவறாக புரிந்துக்கொள்ளக்கூடும்.

நாம் முழூ பைபிளையும் சரியாக படித்தால், இந்த தடையானது ஒரு குறிப்பிட்ட மக்களுக்காக கொடுக்கப்பட்டது என்பதைக் காணலாம். இந்த தடையானது "எல்லா மக்களுக்கும், எல்லா காலத்தில் வாழ்பவர்களுக்கும்" விதிக்கப்பட்டதல்ல. இந்த விவரம் பற்றிய அதிகபடியான விவரங்களை கீழே காணலாம்.

பன்றி தடைப் பற்றிய வசனம் பைபிளில் எங்குள்ளது என்பதுப் பற்றி, பைபிளைப் படிக்கும் அனேகருக்கு தெரியாமல் இருக்கிறது என்று ஷப்பீர் அலி சொல்கிறார், மற்றும் இதனை எந்த காரணத்திற்காக குறிப்பிடுகிறார் என்பது நமக்கு தெரியாது. ஆனால், இதே போல, பெரும்பான்மையான இஸ்லாமியர்களுக்கு "இஸ்லாமின் கட்டளைகளாகிய" சுன்னத்து செய்தல் (விருத்தசேதனம்) மற்றும் தினமும் ஐந்து வேளை நமாஜ் (தொழுகை) செய்தல் போன்ற கட்டளைகள் எங்கு உள்ளது என்பதும் தெரியாமல் இருக்கிறது என்பதை இங்கு குறிப்பிடவேண்டும். இஸ்லாமியர்களில் அனேகருக்கு சுன்னத்துப் பற்றி மற்றும் ஐந்து வேளை தொழுகை பற்றி குர்‍ஆன் எந்த வசனத்தில் சொல்கிறது என்று தெரியாது. இந்த இரண்டு விவரங்கள் பற்றிய அறியாமையில் இஸ்லாமியர்கள் இருக்கிறார்கள் என்று நாங்கள் அவர்கள் மீது குற்றம் சுமத்தவில்லை, ஏனென்றால், இந்த இரண்டு கட்டளைகளும் குர்‍ஆனில் இல்லை என்பது தான் உண்மை.
 
ஷப்பீர் எழுதுகிறார்:

லேவியராகமம் என்ற புத்தகத்தில், 11ம் அதிகாரத்தில் 7ம் வசனத்தில் "நம்பிக்கையாளர்களுக்கு பன்றி ஒரு சுத்தமில்லாத மிருகம்" என்று தேவன் கூறியுள்ளார். மறுபடியும், 8ம் வசனத்தில், தேவன் கூறுகிறார்: "இவைகளின் மாம்சத்தைப் புசிக்கவும், இவைகளின் உடல்களைத் தொடவும் வேண்டாம்; இவைகள் உங்களுக்குத் தீட்டாயிருக்கக்கடவது". இதே கட்டளை மறுபடியும் உபாகமம் 14: 7-8ம் வசனத்திலும் கொடுக்கப்பட்டுள்ளது. பிறகு, ஏசாயா 65:2-4, 66:17ம் வசனத்திலும் பன்றியின் மாமிசம் உண்பவர்களைப் பற்றி மிகவும் கடுமையான எச்சரிக்கையை தேவன் கொடுத்துள்ளார்.
 
பதில்:

ஒரு முக்கியமான விவரம் என்னவென்றால், ஷப்பீர் அவர்கள் பன்றியைப் பற்றிய தடையைப் பற்றிய விவரங்களிலேயே நிலைக் கொண்டுவிட்டார், ஆனால், அந்த தடைக்குப் பிறகு லேவியராகமம் 11ம் அதிகாரத்தில் என்ன சொல்லியிருக்கிறது என்பதைக் காண தவறிவிட்டார்.
 
கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி: நீங்கள் இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால், பூமியிலிருக்கிற சகல மிருகங்களிலும் நீங்கள் புசிக்ககத்தக்க ஜீவ ஜந்துக்கள் யாதெனில்: மிருகங்களில் விரிகுளம்புள்ளதாயிருந்து, குளம்புகள் இரண்டாகப் பிரிந்திருக்கிறதும் அசைபோடுகிறதுமானவைகளையெல்லாம் நீங்கள் புசிக்கலாம். ஆனாலும், அசைபோடுகிறதும் விரிகுளம்புள்ளதுமானவைகளில் ஒட்டகமானது அசைபோடுகிறதாயிருந்தாலும், அதற்கு விரிகுளம்பில்லாதபடியால், அது உங்களுக்கு அசுத்தமாயிருக்கும். லேவியராகமம் 11:1-4
 
ஷப்பீர் அலி அவர்கள் உபாகமத்திலிருந்து வசனத்தை மேற்கோளாக காட்டினாலும், அந்த வசனத்திற்கு பிறகு என்ன சொல்லப்பட்டுள்ளது என்பதை காட்ட தவறிவிட்டார்.
 
அருவருப்பானதொன்றையும் புசிக்க வேண்டாம். நீங்கள் புசிக்கத்தகும் மிருகங்களாவன: மாடும், செம்மறியாடும், வெள்ளாடும், மானும், வெளிமானும், கலைமானும், வரையாடும், புள்ளிமானும், சருகுமானும், புல்வாயுமே. மிருகங்களில் விரிகுளம்புள்ளதாயிருந்து, குளம்புகள் இரண்டாகப் பிரிந்திருக்கிறதும், அசைபோடுகிறதுமான சகல மிருகங்களையும் நீங்கள் புசிக்கலாம்; அசைபோடுகிறவைகளிலும், விரிகுளம்புள்ளவைகளிலும், நீங்கள் புசிக்கத்தகாதவைகள் எவையென்றால்: ஒட்டகமும், முசலும், குழிமுசலுமே; அவைகள் அசைபோட்டும் அவைகளுக்கு விரிகுளம்பில்லை; அவைகள் உங்களுக்கு அசுத்தமாயிருப்பதாக. (உபாகமம் 14:3-7)
 
நம்முடைய தற்போதைய விவாதத்திற்கும், ஒட்டகத்தின் மாமிசம் உண்ணக்கூடாது என்ற தடைக்கும் சம்மந்தமென்ன என்று இக்கட்டுரையை படிக்கும் வாசகர்கள் வியக்கலாம். இதற்கு பதில், ஒட்டக மாமிசம் உண்ணலாம் என்றும், ஒட்டகங்களை அல்லாஹ்விற்கு பலி இடலாம் என்றுச் சொல்லி, அனுமதி அளிக்கும் கீழ்கண்ட வசனங்கள் தான் காரணம்.
 
இன்னும் கால்நடைகளில் சில சுமை சுமப்பதற்கும், சில உணவுக்காகவும் உள்ளன. அல்லாஹ் உங்களுக்கு அளித்ததிலிருந்து உண்ணுங்கள் - நீங்கள் ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள்- நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவனாவான். (நபியே! அம்மக்களிடம்) "கால்நடைகளில் எட்டு வகைகள் உள்ளன - செம்மறி ஆட்டில் (ஆண், பெண்) இரு வகை, வெள்ளாட்டில் (ஆண், பெண்) இரு வகை, அவன் (அல்லாஹ்) ஆண் இரண்டையும் ஹராமாக்கி விட்டானா? அல்லது பெட்டை இரண்டையும் ஹராமாக்கி விட்டானா? அல்லது அவ்விரு வகைகளிலுமுள்ள பெண்களின் கர்ப்பங்களில் உள்ளவற்றையா (அவன் தடுத்திருக்கிறான்?) நீங்கள் உண்மை கூறுபவர்களாக இருந்தால், (இதனை) ஆதாரத்துடன் எனக்கு அறிவியுங்கள்" என்று கேட்பீராக. இன்னும், "ஒட்டகையில் (ஆண், பெண்) இரு வகை, மாட்டிலும் (பசு, காளை) இரு வகையுண்டு - இவ்விரு வகைகளிலுள்ள ஆண்களையா அல்லது பெட்டைகளையா அல்லது இவ்விரு வகையிலுள்ள பெட்டைகளின் கர்ப்பங்களில் உள்ளவற்றையா (இறைவன்) தடுத்திருக்கிறான். இவ்வாறு அல்லாஹ் கட்டளையிட்ட(தாகக் கூறுகிறீர்களே, அச்)சமயம் நீங்கள் சாட்சியாக இருந்தீர்களா?" என்றும் (நபியே!) நீர் கேளும் - மக்களை வழி கெடுப்பதற்காக அறிவில்லாமல் அல்லாஹ்வின் மீது பொய்க் கற்பனை செய்பவனைவிட அதிக அநியாயக்காரன் யார்? நிச்சயமாக அல்லாஹ் இத்தகைய அநியாயக்காரக் கூட்டத்தினருக்கு நேர்வழி காட்டமாட்டான். (நபியே!) நீர் கூறும்; "தானாக இறந்தவைகளையும் வடியும் இரத்தத்தையும் பன்றியின் மாமிசத்தையும் தவிர உண்பவர்கள் புசிக்கக் கூடியவற்றில் எதுவும் தடுக்கப்பட்டதாக எனக்கு அறிவிக்கப்பட்டதில் நான் காணவில்லை" - ஏனெனில் இவை நிச்சயமாக அசுத்தமாக இருக்கின்றன. அல்லது அல்லாஹ் அல்லாதவற்றின் பெயர் சொல்லி அறுக்கப்பட்டது பாவமாயிருப்பதனால் - (அதுவும் தடுக்கப்பட்டுள்ளது) - ஆனால் எவரேனும் நிர்ப்பந்திக்கபட்டு, வரம்பை மீறாமலும் பாவம் செய்ய நினைக்காமலும் புசித்துவிட்டால் - (அவர்மீது குற்றமாகாது ஏனெனில்) நிச்சயமாக உங்கள் இறைவன் மிக்க மன்னிப்போனாகவும், பெருங் கருணையுடையோனுமாகவும் இருக்கின்றான். நகத்தையுடைய அனைத்தையும் யூதர்களுக்கு நாம் ஹராமாக்கியிருந்தோம்; ஆடு, மாடு ஆகியவற்றில் - அவற்றின் முதுகுகளிலோ அல்லது வயிறுகளிலோ அல்லது எலும்புகளுடன் கலந்தோ இருக்கும் கொழுப்பைத் தவிர மற்ற அவற்றின் கொழுப்பையும் ஹராமாக்கினோம் - அவர்கள் அக்கிரமம் செய்த காரணத்தினால் அவர்களுக்கு இதனை நாம் கூலியாக கொடுத்தோம் - நிச்சயமாக நாம் உண்மையே கூறுகிறோம். நபியே!) இவர்கள் உம்மைப் பொய்ப்பிப்பார்களானால், "உங்களுடைய இறைவன் விசாலமான கருணையுடையவன்தான்; (எனினும்) குற்றம் செய்த கூட்டத்தாரைவிட்டு அவன் தண்டனை தடுக்கப்படமாட்டாது. (6:142-147)

இன்னும் (குர்பானிக்கான) ஒட்டகங்கள்; அவற்றை உங்களுக்காக அல்லாஹ்வின் அடையாளங்களிலிருந்தும் நாம் ஆக்கியிருக்கிறோம்; உங்களுக்கு அவற்றில் மிக்க நன்மை உள்ளது எனவே (அவை உரிய முறையில்) நிற்கும் போது அவற்றின் மீது அல்லாஹ்வின் பெயரைச் சொல்(லி குர்பான் செய்)வீர்களாக் பிறகு, அவை தங்கள் பக்கங்களின் மீது சாய்ந்து கீழே விழுந்(து உயிர் நீத்)த வின் அவற்றிலிருந்து நீங்களும் உண்ணுங்கள்; (வறுமையிலும் கையேந்தாமல் இருப்பதைக் கொண்டு) திருப்தியாய் இருப்போருக்கும், இரப்போருக்கும் உண்ணக் கொடுங்கள் இவ்விதமாகவே, நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு அவற்றை உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறோம். (22:36)
 
ஹதீஸ்கள் கீழ் கண்டவிதமாக சொல்கின்றன:
 
பாகம் 2, அத்தியாயம் 25, எண் 1551

அனஸ்(ரலி) அறிவித்தார்.

நாங்கள் நபி(ஸல்) அவர்களோடு இருந்தோம். அவர்கள் மதீனாவில் நான்கு ரக்அத்கள் லுஹர் தொழுதார்கள். துல் ஹுலைஃபாவில் இரண்டு ரக்அத்கள் அஸர் தொழுதார்கள். பிறகு விடியும் வரை அங்கேயே தங்கிவிட்டு மீண்டும் வாகனத்தின் மீதமர்ந்து பைதா எனுமிடத்தில் வாகனம் நிலைக்கு வந்தபோது 'அல்ஹம்துலில்லாஹ், ஸுப்ஹானல்லாஹ், அல்லாஹு அக்பர்' எனக் கூறினார்கள். பிறகு ஹஜ், உம்ரா இரண்டிற்காகவும் இஹ்ராம் அணிந்து, தல்பியா கூறினார். நாங்கள் மக்கா வந்து (உம்ராவை முடித்த போது) இஹ்ராமிலிருந்து விடுபடும்படி மக்களுக்குக் கட்டளையிட்டார்கள். மக்கள் துல்ஹஜ் பிறை எட்டு அன்று ஹஜ்ஜுக்காக மீண்டும் இஹ்ராம் அணிந்தார்கள்.

நபி(ஸல்) அவர்கள் ஒட்டகங்களை நிற்கவைத்துத் தம் கைகளாலேயே அறுத்தார்கள். இன்னும் நபி(ஸல்) அவர்கள் மதீனாவில் பெருநாளில் இரண்டு கருப்பு நிறம் கலந்த வெள்ளை நிற ஆடுகளை அறுத்தார்கள்.

பாகம் 2, அத்தியாயம் 25, எண் 1716

அலீ(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் (குர்பானி ஒட்டகங்களை பலியிடுவதற்கு) என்னை நியமித்தார்கள். பிறகு அவற்றின் இறைச்சிகளைப் பங்கிடுமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள். அவ்வாறே செய்தேன். அவற்றின் சேணங்களையும் தோல்களையும் பங்கிட்டுவிடுமாறும் எனக்குக் கட்டளையிட்டார்கள். அவ்வாறே செய்தேன்.

இன்னொரு அறிவிப்பில் 'பலிப் பிராணிகளை கவனித்துக் கொள்ளுமாறும் அவற்றை அறுப்பதற்குக் கூலியாக அவற்றில் எதையும் கொடுக்கக்கூடாது என்றும் எனக்கு நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்" என அலீ(ரலி) கூறினார் என உள்ளது.
 
யேகோவா தேவன் ஒட்டக மாமிசம் தடை செய்தார், ஆனால், அல்லாஹ் அதனை சாப்பிட அனுமதியும் அளித்து, தனக்காக ஒட்டகங்களை பலியிடவும் அனுமதியளித்தார்.

இன்னும் தண்ணீரில் வசிக்கும் குறிப்பிட்ட உயிரிணங்களை சாப்பிடுவதை தவ்ராத் (ஐந்தாகமங்கள் - Torah) தடை செய்துள்ளது, அதாவது சிறகும் செதிள்களும் இல்லாதவைகளை உண்ணக்கூடாது என்றுச் சொல்கிறது (லேவியராகமம் 11:9-12; உபாகமம் 14:9-10). ஆனால், இஸ்லாமில் எல்லா நீர் வாழும் உயிரிணங்களை உண்ண அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
 
உங்களுக்கும் (இதர) பிரயாணிகளுக்கும் பலன் கிடைக்கும் பொருட்டு (நீங்கள் இஹ்ராம் கட்டியிருந்தாலும்) கடலில் வேட்டையாடுவதும், அதைப் புசிப்பதும் உங்களுக்கு ஹலாலாக - ஆகுமானதாக ஆக்கப்பட்டுள்ளது. ஆனால் நீங்கள் இஹ்ராம் கட்டியிருக்கும் காலமெல்லம் தரையில் வேட்டையாடுவது உங்கள் மீது ஹராமாக்கப்பட்டுள்ளது. எனவே நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள், அவனிடத்திலேயே நீங்கள் ஒன்று சேர்க்கப்படுவீர்கள். (குர்‍ஆன் 5:96)

நீங்கள் கடலிலிருந்து நய(மும், சுவையு)முள்ள மீன் போன்ற மாமிசத்தை புசிப்பதற்காகவும், நீங்கள் அணிந்து கொள்ளக்கூடிய ஆபரணத்தை அதிலிருந்து நீங்கள் வெளிப்படுத்தவும் அவன் தான் அதனையும் (கடலையும்) வசப்படுத்தித் தந்தான்; இன்னும் அதில் தண்ணீரைப் பிளந்து கொண்டு செல்லும் கப்பலை நீங்கள் காணுகிறீர்கள்; (பல்வேறு இடங்களுக்குச் சென்று) அவன் அருட்கொடையை நீங்கள் தேடவும், நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டும் (அதை) இவ்வாறு வசப்படுத்திக் கொடுத்தான். (குர்‍ஆன் 16:14)
 
இமாம் மாலிக் கீழ்கண்ட விதமாக பதிவு செய்துள்ளார்:
 
Yahya related to me from Malik from Safwan ibn Sulaym from Said ibn Salama of the Bani Azraq from al-Mughira ibn Abi Burda of the tribe of Bani Abd ad-Dar that he had heard Abu Hurayra speak about a man who came to the Messenger of Allah, may Allah bless him and grant him peace, and said, "Messenger of Allah! We travel by sea and we do not carry much fresh water with us so if we do wudu with it we go thirsty. Can we do wudu with seawater?" The Messenger of Allah, may Allah bless him and grant him peace, replied, "Its water is pure, and its dead creatures are halal." (Malik's Muwatta, Book 2, Number 2.3.12)

Yahya related to me from Malik from Nafi that Abd ar-Rahman ibn Abi Hurayra asked Abdullah ibn Umar about eating what was cast up by the sea and he forbade him to eat it. Then Abdullah turned and asked for a Qur'an, and read, "The game of the sea and its flesh are halal for you." Nafi added, "Abdullah ibn Umar sent me to Abdar-Rahman Ibn Abi Hurayra to say that there was no harm in eating it." (Malik's Muwatta, Book 25, Number 25.3.9)

Yahya related to me from Malik from Abu'z-Zinad from Abu Salama ibn Abd ar-Rahman that some people from al-Jar came to Marwan ibn al-Hakam and asked him about eating what was cast up by the sea. He said, "There is no harm in eating it." Marwan said, "Go to Zayd ibn Thabit and Abu Hurayra and ask them about it, then come to me and tell me what they say." They went to them and asked them, and they both said, "There is no harm in eating it " They returned to Marwan and told him. Marwan said, "I told you."

Malik said that there was no harm in eating fish caught by magians, because the Messenger of Allah, may Allah bless him and grant him peace, said, "In the sea's water is purity, and that which is dead in it is halal. "

Malik said, "If it is eaten when it is dead, there is no harm in who catches it." (Malik's Muwatta, Book 25, Number 25.3.12)
 
கடைசியாக, ஷப்பீர் அவர்கள் ஏசாயாவிலிருந்து பன்றி மாமிசம் பற்றி ஒருமேற்கோளை காட்டினாரே தவிர, அந்த ஏசாயா புத்தகத்தில் அவ்வசனத்தைச் சுற்றியுள்ள இதர விவரங்களை படிக்க தவறிவிட்டார். ஏசாயாவில் கீழ்கண்ட விதமாக உள்ளது:
 
கர்த்தர் சொல்லுகிறார்: நீங்கள் நியாயத்தைக் கைக்கொண்டு, நீதியைச் செய்யுங்கள்; என் இரட்சிப்பு வரவும், என் நீதி வெளிப்படவும் சமீபமாயிருக்கிறது. இப்படிச் செய்கிற மனுஷனும், இதைப் பற்றிக்கொண்டிருந்து, ஓய்வுநாளைப் பரிசுத்தக் குலைச்சலாக்காதபடி ஆசரித்து, ஒரு பொல்லாப்பையும் செய்யாதபடி தன் கையைக் காத்துக்கொண்டிருக்கிற மனுபுத்திரனும் பாக்கியவான். கர்த்தரைச் சேர்ந்த அந்நியபுத்திரன்: கர்த்தர் என்னைத் தம்முடைய ஜனத்தைவிட்டு முற்றிலும் பிரித்துப்போடுவாரென்று சொல்லானாக, அண்ணகனும்: இதோ, நான் பட்டமரமென்று சொல்லானாக. என் ஓய்வுநாட்களை ஆசரித்து, எனக்கு இஷ்டமானவைகளைத் தெரிந்துகொண்டு, என் உடன்படிக்கையைப்பற்றிக்கொள்ளுகிற அண்ணகர்களைக் குறித்துக் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: நான் அவர்களுக்கு என் ஆலயத்திலும், என் மதில்களுக்குள்ளும் குமாரருக்கும் குமாரத்திகளுக்குமுரிய இடத்தையும் கீர்த்தியையும்பார்க்கிலும், உத்தம இடத்தையும் கீர்த்தியையும் கொடுப்பேன், என்றும் அழியாத நித்திய நாமத்தை அவர்களுக்கு அருளுவேன். கர்த்தரைச் சேவிக்கவும், கர்த்தருடைய நாமத்தை நேசிக்கவும், அவருக்கு ஊழியக்காரராயிருக்கவும், அவரைச் சேர்ந்து, ஓய்வுநாளைப் பரிசுத்தக் குலைச்சலாக்காதபடி ஆசரித்து, என் உடன்படிக்கையைப் பற்றிக்கொண்டிருக்கிற அந்நியபுத்திரர் அனைவரையும், நான் என் பரிசுத்த பர்வதத்துக்குக் கொண்டுவந்து: என் ஜெபவீட்டிலே அவர்களை மகிழப்பண்ணுவேன்; அவர்களுடைய சர்வாங்கதகனங்களும், அவர்களுடைய பலிகளும், என் பலிபீடத்தின்மேல் அங்கிகரிக்கப்பட்டிருக்கும்; என்னுடைய வீடு சகல ஜனங்களுக்கும் ஜெபவீடு என்னப்படும். இஸ்ரவேலில் தள்ளுண்டவர்களைச் சேர்க்கிற கர்த்தராகிய ஆண்டவர்: அவனிடத்தில் சேர்க்கப்பட்டவர்களையல்லாமல் இன்னும் அவனிடத்தில் சேர்ப்பேன் என்கிறார். (ஏசாயா 56:1-8)

என் பரிசுத்தநாளாகிய ஓய்வுநாளிலே உனக்கு இஷ்டமானதைச் செய்யாதபடி, உன் காலை விலக்கி, உன் வழிகளின்படி நடவாமலும், உனக்கு இஷ்டமானதைச் செய்யாமலும், உன் சொந்தப்பேச்சைப் பேசாமலிருந்து, ஓய்வுநாளை மனமகிழ்ச்சியின் நாளென்றும், கர்த்தருடைய பரிசுத்த நாளை மகிமையுள்ள நாளென்றும் சொல்லி, அதை மகிமையாக எண்ணுவாயானால், அப்பொழுது கர்த்தரில் மனமகிழ்ச்சியாயிருப்பாய்; பூமியின் உயர்ந்த இடங்களில் உன்னை ஏறியிருக்கும்படி பண்ணி, உன் தகப்பனாகிய யாக்கோபுடைய சுதந்தரத்தால் உன்னைப் போஷிப்பேன்; கர்த்தருடைய வாய் இதைச் சொல்லிற்று. (ஏசாயா 58:13-14)
 
ஓய்வு நாளை கடைபிடிக்கும் அனைவரையும் தேவன் ஆசீர்வதிப்பதாக கூறுகிறார். தவ்ராத்தின் (ஐந்தாகமங்கள் - Torah) கட்டளையை மறுபடியும் நியாபகப்படுத்துகிறார் ஏசாயா.
 
ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக; ஆறுநாளும் நீ வேலைசெய்து, உன் கிரியைகளையெல்லாம் நடப்பிப்பாயாக; ஏழாம்நாளோ உன் தேவனாகிய கர்த்தருடைய ஓய்வுநாள்; அதிலே நீயானாலும், உன் குமாரனானாலும், உன் குமாரத்தியானாலும், உன் வேலைக்காரனானாலும், உன் வேலைக்காரியானாலும், உன் மிருகஜீவனானாலும், உன் வாசல்களில் இருக்கிற அந்நியனானாலும், யாதொரு வேலையும் செய்யவேண்டாம். கர்த்தர் ஆறுநாளைக்குள்ளே வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கி, ஏழாம்நாளிலே ஒய்ந்திருந்தார்; ஆகையால், கர்த்தர் ஓய்வுநாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார். (யாத்திராகமம் 20: 8-11)

மேலும், கர்த்தர் மோசேயினிடத்தில்: நீ இஸ்ரவேல் புத்திரரை நோக்கி, நீங்கள் என் ஓய்வுநாட்களை ஆசரிக்கவேண்டும்; உங்களைப் பரிசுத்தப்படுத்துகிற கர்த்தர் நான் என்பதை நீங்கள் அறியும்படி, இது உங்கள் தலைமுறைதோறும் எனக்கும் உங்களுக்கும் அடையாளமாயிருக்கும். ஆகையால், ஓய்வுநாளை ஆசரிப்பீர்களாக; அது உங்களுக்குப் பரிசுத்தமானது; அதைப் பரிசுத்தக் குலைச்சலாக்குகிறவன் கொலையுண்கக்கடவன்; அதிலே வேலைசெய்கிற எந்த ஆத்துமாவும் தன் ஜனத்தின் நடுவில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான். ஆறுநாளும் வேலைசெய்யலாம்; ஏழாம் நாளோ வேலை ஒழிந்திருக்கும் ஓய்வுநாள்; அது கர்த்தருக்குப் பரிசுத்தமானது; ஓய்வுநாளில் வேலைசெய்கிறவன் எவனும் கொலைசெய்யப்படவேண்டும். ஆகையால், இஸ்ரவேல் புத்திரர் தங்கள் தலைமுறைதோறும் ஓய்வுநாளை நித்திய உடன்படிக்கையாக ஆசரிக்கும்படி, அதைக் கைக்கொள்ளக்கடவர்கள். அது என்றைக்கும் எனக்கும் இஸ்ரவேல் புத்திரருக்கும் அடையாளமாயிருக்கும்; ஆறுநாளைக்குள்ளே கர்த்தர் வானத்தையும் பூமியையும் உண்டாக்கி, ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்து பூரித்தார் என்றார். (யாத்திராகமம் 31:12-17)

உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கட்டளையிட்டபடியே, ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிப்பாயாக. ஆறுநாளும் நீ வேலைசெய்து, உன் கிரியைகளையெல்லாம் நடப்பிப்பாயாக. ஏழாம் நாளோ உன் தேவனாகிய கர்த்தருடைய ஓய்வுநாள்; அதிலே நீயானாலும், உன் குமாரனானாலும், உன் குமாரத்தியானாலும், உன் வேலைக்காரனானாலும், உன் வேலைக்காரியானாலும், உன் எருதானாலும், உன் கழுதையானாலும், உனக்கு இருக்கிற மற்றெந்த மிருகஜீவனானாலும், உன் வாசல்களில் இருக்கிற அந்நியனானாலும் யாதொரு வேலையும் செய்யவேண்டாம்; நீ இளைப்பாறுவதுபோல உன் வேலைக்காரனும் உன் வேலைக்காரியும் இளைப்பாறவேண்டும்; நீ எகிப்துதேசத்தில் அடிமையாயிருந்தாய் என்றும், உன் தேவனாகிய கர்த்தர் உன்னை அவ்விடத்திலிருந்து வல்லமையுள்ள கரத்தினாலும் ஓங்கிய புயத்தினாலும் புறப்படப்பண்ணினார் என்றும் நினைப்பாயாக; ஆகையால் ஓய்வுநாளை ஆசரிக்க உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கட்டளையிட்டார். (உபாகமம் 5: 12-15)
 
ஓய்வு நாளை கடைபிடிப்பது எவ்வளவு முக்கியமென்றால், யாராவது வேண்டுமென்றே தெரிந்தே ஓய்வு நாளை கடைபிடிக்கவில்லையானால், அவர்கள் கொல்லப்படவேண்டும் என்று கட்டளையும் உள்ளது.
 
அன்றியும் தேசத்திலே பிறந்தவர்களிலாகிலும் அந்நியர்களிலாகிலும், எவனாவது துணிகரமாய் யாதொன்றைச் செயதால், அவன் கர்த்தரை நிந்திக்கிறான்; அந்த ஆத்துமா தன் ஜனத்தாரில் இராதபடிக்கு அறுப்புண்டுபோகவேண்டும். அவன் கர்த்தரின் வார்த்தையை அசட்டைபண்ணி, அவர் கற்பனையை மீறினபடியால், அந்த ஆத்துமா அறுப்புண்டுபோகவேண்டும், அவன் அக்கிரமம் அவன்மேல் இருக்கும் என்று சொல் என்றார். இஸ்ரலே புத்திரர் வனாந்தரத்தில் இருக்கையில், ஓய்வுநாளில் விறகுகளைப் பொறுக்கிக்கொண்டிருந்த ஒரு மனிதனைக் கண்டுபிடித்தார்கள். விறகுகளைப் பொறுக்கின அந்த மனிதனைக் கண்டுபிடித்தவர்கள், அவனை மோசே ஆரோன் என்பவர்களிடத்துக்கும் சபையார் அனைவரிடத்துக்கும் கொண்டுவந்தார்கள். அவனுக்குச் செய்யவேண்டியது இன்னதென்று தீர்க்கமான உத்தரவு இல்லாதபடியினால், அவனைக் காவலில் வைத்தார்கள். கர்த்தர் மோசேயை நோக்கி: அந்த மனிதன் நிச்சயமாய்க் கொலைசெய்யப்படவேண்டும்; சபையார் எல்லாரும் அவனைப் பாளயத்திற்குப் புறம்பே கல்லெறியக்கடவர்கள் என்றார். அப்பொழுது சபையார் எல்லாரும் கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே, அவனைப் பாளயத்திற்குப் புறம்பே கொண்டுபோய்க் கல்லெறிந்தார்கள்; அவன் செத்தான். (எண்ணாகமம் 15:30-36)
 
இப்போது கீழ்கண்ட கேள்விகள் எழும்புகின்றன:

யேகோவாவின் ஓய்வு நாளை கட்டாயமாக கடைபிடிப்பதை இஸ்லாம் கடமையாக்கியுள்ளதா?

ஒரு முஸ்லீம் தவ்ராத்திலும், ஏசாயாவிலும் கட்டளையிடப்பட்ட ஓய்வு நாளை கட்டாய கடமையாக கடைபிடிக்கவேண்டுமா?

இந்த கேள்விகளுக்கு பதில் "இல்லை" என்றுச் சொல்வார்கள் இஸ்லாமியர்கள்.

இது மட்டுமல்ல, இன்னொரு உதாரணத்தையும் கூறலாம், எப்படி உண்மையான தேவனின் வார்த்தைக்கு குர்‍ஆன் முரண்படுகிறது என்பதை எடுத்துக்காட்ட கீழ்கண்ட விவரங்களை படிக்கவும், தவ்ராத் சொல்கிற‌து:
 
ஒருவன் ஒரு ஸ்திரீயை விவாகம்பண்ணிக்கொண்டபின்பு, அவளிடத்தில் இலச்சையான காரியத்தைக் கண்டு, அவள்மேல் பிரியமற்றவனானால், அவன் தள்ளுதலின் சீட்டை எழுதி, அவள் கையிலே கொடுத்து, அவளைத் தன் வீட்டிலிருந்து அனுப்பிவிடலாம். அவள் அவனுடைய வீட்டைவிட்டுப் போனபின்பு, வேறொருவனுக்கு மனைவியாகலாம். அந்த இரண்டாம் புருஷனும் அவளை வெறுத்து, தள்ளுதலின் சீட்டை எழுதி, அவள் கையிலே கொடுத்து, அவளைத் தன் வீட்டிலிருந்து அனுப்பிவிட்டாலும், அவளை விவாகம்பண்ணின அந்த இரண்டாம் புருஷன் இறந்துபோனாலும், அவள் தீட்டுப்பட்டபடியினால், அவளைத் தள்ளிவிட்ட அவளுடைய முந்தின புருஷன் திரும்பவும் அவளை மனைவியாகச் சேர்த்துக்கொள்ளக்கூடாது; அது கர்த்தருக்கு முன்பாக அருவருப்பானது; உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கும் தேசத்தின்மேல் பாவம் வரப்பண்ணாயாக. (உபாகமம் 24:1-4)
 
இப்போது கீழ் கண்ட குர்‍ஆன் விவரங்களை இதனோடு ஒப்பிட்டுப்பார்க்கவும்:
 
(இத்தகைய) தலாக் இரண்டு முறைகள் தாம் கூறலாம் - பின் (தவணைக்குள்)முறைப்படி கணவன், மனைவியாகச் சேர்ந்து வாழலாம்; அல்லது நேர்மையான முறையில் பிரிந்து போக விட்டுவிடலாம்;;. அவ்விருவரும் அல்லாஹ்வின் வரம்புகளை நிலை நிறுத்த முடியாது என்று அஞ்சும் போது தவிர. நீங்கள் மனைவியருக்கு கொடுத்தவற்றிலிருந்து யாதொன்றையும் திருப்பி எடுத்துக் கொள்ளுதல் கூடாது - இன்னும் நீங்கள் அல்லாஹ்வின் வரம்புகளை அவர்களால் நிலை நிறுத்த முடியாது என்று அஞ்சினால், அவள் (கணவனுக்கு) ஏதேனும் ஈடாகக் கொடுத்து(ப் பிரிந்து) விடுவதில் குற்றமில்லை. இவை அல்லாஹ் ஏற்படுத்தியுள்ள வரையறைகளாகும்;. ஆகையால் அவற்றை மீறாதீர்கள்;. எவர் அல்லாஹ்வின் வரையறைகளை மீறுகிறார்களோ, அவர்கள் அக்கிரமக்காரர்கள் ஆவார்கள். மீட்ட முடியாதபடி - (அதாவது இரண்டு தடவை தலாக் சொன்ன பின்னர் மூன்றாம்) தலாக் சொல்லிவிட்டால் கணவன் அப்பெண்ணை மறுமணம் செய்து கொள்ள முடியாது. ஆனால் அவள் வேறு ஒருவனை மணந்து - அவனும் அவளை தல?ாக் சொன்னால் அதன் பின் (முதற்) கணவன் - மனைவி சேர்ந்து வாழ நாடினால் - அதன் மூலம் அல்லாஹ்வுடைய வரம்புகளை நிலைநிறுத்த முடியும் என்று எண்ணினால், அவர்கள் இருவரும் (மறுமணம் செய்து கொண்டு மணவாழ்வில்) மீள்வது குற்றமல்ல. இவை அல்லாஹ்வின் வரையறைகளாகும்; இவற்றை அல்லாஹ் புரிந்து கொள்ளக்கூடிய மக்களுக்குத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறான். (குர்‍ஆன் 2:229-230)
 
எதை யேகோவா தேவன் "கேவலம் என்றும் அருவருப்பு" என்றும் அழைக்கிறாரோ, அதனை அல்லாஹ் "அனுமதிக்கப்பட்டது" என்று அழைக்கிறார்!

இதுவரை நாம் கண்ட விவரங்களிலிருந்து, ஏன் ஷப்பீர் அலி அவர்கள் குர்‍ஆன் மற்றும் தவ்ராத்திற்கு இடையே உள்ள ஒரு குறிப்பிட்ட விவரம் பற்றி மட்டும் குறிப்பிட்டுவிட்டு, இவ்விரண்டு புத்தகங்களுக்கும் இடையே உள்ள மற்ற மிகப்பெரிய வித்தியாசங்களை, முரண்பாடுகளை பார்க்க தவறிவிட்டார் என்பதை கண்டுக்கொள்ளலாம். இப்போது, மோசேயின் கட்டளைகளுக்கு முரண்பட்டதாக குர்‍ஆன் இருக்கிறது என்பதை உணர்ந்தவராக, ஷப்பீர் அலி அவர்கள் முஹம்மது தேவனின் சட்டங்களை மீறிவிட்டார் என்பதை கண்டு, முஹம்மதுவை மறுதலிப்பாரா? அல்லது மோசேயின் கட்டளைகள் அந்த குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே கொடுக்கப்பட்டது, தற்கால விசுவாசிகளுக்கு / நம்பிக்கையாளர்களுக்கு அவைகள் பொருந்தாது என்றுச் சொல்வாரா? இந்த‌ இர‌ண்டாம் தெரிவை ஷ‌ப்பீர் அலி எடுப்பாரானால், கிறிஸ்த‌வ‌ர்க‌ளுக்கும் ப‌வுலுக்கும் எதிராக‌ ப‌ன்றியின் க‌றியைப் ப‌ற்றி அவர் முன்வைக்கும் குற்ற‌ச்சாட்டான‌து அவ‌ர‌து காலுக்கு கீழேயே ந‌சுங்கிவிடும். ஷ‌ப்பீர் அலி அவ‌ர்க‌ளின் வாத‌ங்க‌ளை நாம் கூர்மையாக‌ அல‌சுவோம் என்றால், அவ‌ருடைய‌ வாத‌ங்க‌ளுக்கு நிற்க‌ இட‌மில்லாம‌ல், த‌டுமாறுவ‌தைக் காண‌லாம்.

முதல் பாகம் இதோடு முடிகிறது, இரண்டாம் பாகத்தை இங்கு படிக்கவும்: An Examination of Shabir Ally's Fascination with Pigs - Part 2




 

 


 
 

Thursday, March 12, 2009

கிறிஸ்தவன் பார்வையின் "பைபிள் கூறும் பயங்கரவாதம் (1) கட்டுரைக்கு பதில் 1

 
.

கிறிஸ்தவன் பார்வையின்:

பைபிள் கூறும் பயங்கரவாதம் (1) கட்டுரைக்கு பதில் 1

முன்னுரை: அபூ அப்திர்ரஹ்மான் என்ற இஸ்லாமிய சகோதரர் எனக்கு பைபிள் கூறும் பயங்கரவாதம் என்ற தொடர் கட்டுரைகளை அனுப்புகிறார். அவர் அனுப்பிய தொடர் கட்டுரைகளுக்கு பதிலை நாம் தொடர் கட்டுரைகளாக காணலாம்.

அவர் அனுப்பிய கட்டுரை "பைபிள் கூறும் பயங்கரவாதம்" என்ற தலைப்புள்ளதால், அவர் முன்வைக்கும் வசனங்களுக்கு விளக்கமளிப்பது நம் கடமையாக இருக்கிறது, அதே நேரத்தில், பயங்கரவாதம் பற்றி அவருக்கும் (இஸ்லாமுக்கும்) சில கேள்விகளும் முன்வைக்கப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

அபூ அப்திர்ரஹ்மான்

பைபிள் கூறும் பயங்கரவாதம் (1)

கிறிஸ்தவர்களில் சிலர், முகம்மது (ஸல்) அவர்கள் வன்முறையைப் போதித்ததாகவும் இயேசு அகிம்சையையும் அன்பையும் போதித்ததாகவும் ஒப்பீட்டுப் பிரச்சாரம் நடத்தி வருகின்றனர்.

Source: http://christianpaarvai.blogspot.com/2009/02/1.html
emphasis mine

ஈஸா குர்‍ஆன்:

உண்மை தானே. முஹம்மது பற்றி அறியவேண்டுமானால், குர்‍ஆனை, ஹதீஸ்களை படித்துப் பாருங்கள். இயேசுவின் போதனைகளை அறிய பைபிளை படியுங்கள். இருவரின் வாழ்க்கை சரித்திரம் மட்டுமே அவர்கள் என்ன சொன்னார்கள், செய்தார்கள் என்பதை அறிந்துக்கொள்வதற்கு உதவும்.

அபூ அப்திர்ரஹ்மான்

முஸ்லிம்களைப் பொறுத்தவரை இதற்கு மாறாக இயேசுதான் வன்முறையைப் போதித்தார் என்று ஒருபோதும் சொல்ல மாட்டார்கள்; சொல்லவும் முடியாது. ஏனென்றால் அது அவர்களின் நம்பிக்கைக்கு எதிரானதாகும்.

ஈஸா குர்‍ஆன்:

இயேசு வன்முறையை போதித்தார் என்று உங்களால் எப்படி சொல்லமுடியும்? அதற்கு உங்களுக்கு ஆதாரங்கள் வேண்டுமல்லவா?

ஆனால், முஹம்மதுவின் முழு வாழ்க்கையும் செயல்களும் வெட்ட வெளிச்சமாக குர்‍ஆனிலும், ஹதீஸ்களிலும், அவரது வாழ்க்கை சரித்திரங்களிலும், அதே நேரத்தில் தற்காலத்தில் நம் முன் வாழும் சில இஸ்லாமியர்களின் வாழ்க்கையிலும் தெளிவாக தெரிவதால், அதைப் பற்றி கேள்வி எழுப்புகிறார்கள், உலக மக்கள் அல்லது கிறிஸ்தவர்கள்.

அபூ அப்திர்ரஹ்மான்

முஸ்லிம்களைப் பொறுத்தவரை இயேசுவும் முஹம்மதுவும் (அவர்கள் மீது இறையருள் உண்டாகட்டும்) தார்மீக வழிகாட்டுதல்களுடன் அனுப்பப்பட்ட இறைவனின் அடியார்களும் தூதர்களும் ஆவார்கள். அவர்கள் இருவரிடையே வேற்றுமை பாராட்டுவது இஸ்லாமிய நம்பிக்கைக்கு எதிரான செயல்பாடாகும்.

ஈஸா குர்‍ஆன்:

இஸ்லாமிய நம்பிக்கையின் படி எப்படி "இயேசுவை ஒரு நபி" என்று நீங்கள் நம்புகிறீர்களோ, அதே போல, பைபிளின் நம்பிக்கையின் படி "முஹம்மது ஒரு நபி இல்லை" அதாவது, பைபிள் படி வந்த நபி அல்ல என்று நம்புகிறோம்.

உங்களின் நம்பிக்கையின் படி, இயேசு ஒரு நபி, எங்களின் நம்பிக்கையின் படி, முஹம்மது ஒரு நபி அல்ல அவ்வளவே.

உங்களுக்கு வேண்டுமானால், இவ்விருவருக்கும் இடையில் வேற்றுமை பாராட்டுவது இஸ்லாமிய நம்பிக்கைக்கு எதிராக இருக்கலாம். ஆனால், எங்கள் நம்பிக்கையின் படி, "இவ்விருவரும் இறைத்தூதர்கள் மட்டுமே" என்றுச் சொல்வது இறைக் குற்றமாகும். அதாவது, யேகோவா தேவன் அனுப்பாத ஒரு தூதரை அவர் அனுப்பியதாக கிறிஸ்தவர்கள் நம்பினால் அது தவறாகும். அதே போல, இயேசு தெய்வமாக இருக்கும் போது, அவர் ஒரு மனிதர், தூதர் மட்டுமே என்றுச் சொல்வது தவறானதாகும்.

உங்களுக்கு உங்கள் நம்பிக்கைத் தான் சரி, எங்களுக்கு எங்கள் நம்பிக்கைத் தான் சரி. ஆனால், இயேசு இறைவனாக இருக்கிறாரா? என்ற கேள்வியும், அதே நேரத்தில் முஹம்மது ஒரு தீர்க்கதரிசியாக (நபியாக) இருந்தாரா? அல்லது ஒரு நபிக்கான தகுதி அவருக்குள்ளதா? போன்ற கேள்விகளும் எழும்பும். இக்கேள்விகளுக்கு பதில்கள், பைபிளும், குர்‍ஆனிலும், ஹதீஸ்களிலும் கிடைக்கும்.

ஆக, இயேசுவோடு முஹம்மதுவை ஒப்பிட்டு, நாங்கள் வேற்றுமை பாராட்டமாட்டோம் என்றுச் சொல்வது உங்களுக்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம். ஆனால், இறைவனோடு ஒரு சாதாரண மனிதரை ஒப்பிடுவது கிறிஸ்தவத்திற்கு ஏற்றதல்ல.

அபூ அப்திர்ரஹ்மான்

இஸ்லாம் பயங்கரவாதத்தைப் போதிக்கும் பொய் மார்க்கம் என்றும் கிறிஸ்தவம் தான் படைத்தவனின் உண்மையான வழிகாட்டுதல் - மார்க்கம் என்றும் நிறுவதற்காகவே இத்தகைய பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன எனில், அவற்றிற்குச் சரியான பதிலளிப்பதும் உண்மை என்ன என்பதை ஆதாரங்களுடன் வெளிப்படுத்துவதும் முஸ்லிம்களின் மீது கடமையாகிறது!

ஈஸா குர்‍ஆன்:

நீங்கள் சொல்வது போல, இஸ்லாம் தான் உண்மையான மார்க்கம் என்றுச் சொல்லி, கிறிஸ்தவத்திற்கும், பைபிளுக்கும் எதிராக இஸ்லாமியர்களால முன்வைக்கும் கேள்விகளுக்கு பதில்கள் சொல்வதும், ஆதாரங்களை முன்வைப்பதும் எங்களுக்கும் கடமையாக உள்ளது.

உங்கள் கடமையை நீங்கள் செய்யும் போது, நாங்கள் அமைதியாக பதில் தருவது போல, குறைந்த பட்சமாக, நீங்களும் எங்கள் கடமையை நாங்கள் செய்ய எங்களை அனுமதிப்பீர்கள் என்று நம்புகிறோம்.

அபூ அப்திர்ரஹ்மான்

இஸ்லாம் வன்முறை - பயங்கரவாத மதம் என சாதாரண மக்களை ஏமாற்ற முயலும் இத்தகையவர்கள், தாங்கள் வேதமாக நம்பியிருக்கும் "மனித கரங்களால் கையாடல் செய்யப்பட்டுள்ள பைபிள்" உண்மையில் அகிம்சையையும் அன்பையும் தான் போதிக்கிறதா? என்பதை முழுமையாக விளக்க முற்படுவதில்லை.

மாறாக இயேசுவின் உபதேசங்களாகக் குறிப்பிடப்பட்ட சிலக் கருத்துக்களை மட்டும் பொறுக்கி எடுத்து முஹம்மது (ஸல்) அதற்கு எதிரானவர் என்று ஒப்பீட்டுப் பிரச்சாரம் செய்து பாமர மக்களை ஏமாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஈஸா குர்‍ஆன்:

"இஸ்லாம் வன்முறை பயங்கரவாத மார்க்கம்" என்று ஏன் நாங்கள் சாதாரண மக்களை ஏமாற்றப் போகிறோம்? உங்கள் குர்‍ஆனின் வசனங்கள், ஹதீஸ்கள் இப்படி சொல்கின்றன என்றுச் சொல்கிறோம், அதைப் படிப்பவர்கள் இஸ்லாமின் உண்மை முகம் என்ன என்று அவர்களாகவே, அவ்வசனங்களை பார்த்து தெரிந்துக்கொள்வார்கள்.

நாங்கள் காட்டும் வசனங்கள் உங்கள் குர்‍ஆனில் இல்லையா?

நாங்கள் முன்வைக்கும் ஹதீஸ்கள் இஸ்லாமிய உண்மை ஹதீஸ்கள் இல்லையா?

எங்கள் கட்டுரையை படிப்பவர்களுக்கு, உங்கள் கட்டுரைகளையும் படிக்க வசதி கிடைக்கும் விதமாக, உங்கள் கட்டுரைகளின் தொடுப்புக்களையும் நாங்கள் தருவதில்லையா?

சாதாரண மக்களாகிய இஸ்லாமியர்களை ஏமாற்றுவது நீங்கள் தானே?

கீழ் கண்ட விவரங்களை சிந்தித்துப் பாருங்கள்.

1) அல்லாஹ் உங்களுக்காக இறக்கிய குர்‍ஆனை ஏன் தாய் மொழியில் படிக்க உற்சாகப்படுத்துவதில்லை?

2) இமாம்கள், இஸ்லாமிய அறிஞர்கள் சொல்வதைத் தான் சாதாரண இஸ்லாமியர்கள் நம்பவேண்டுமா? அவர்களாகவே அல்லாஹ்வின் வார்த்தையாகிய குர்‍ஆனை புரியும் மொழியில் படிக்கக்கூடாதா?

3) எங்கள் கட்டுரைகளை படிக்க இஸ்லாமியர்களுக்கு ஏன் வாய்ப்பு தருவதில்லை, அதாவது, எங்களுக்கு பதில்கள் என்று எழுதிவிட்டு, எங்கள் தொடுப்புக்களையும் தருவதில்லையே ஏன்?

இப்பொழுது, "புரியும் மொழியில் குர்‍ஆனை படிக்காமலா நாங்கள் கட்டுரைகள் எழுதுகிறோம்?" என்று நீங்கள் கேட்கக்கூடும். நாங்கள் கேட்கும் கேள்வி, எத்தனை பேர் கட்டுரைகளை எழுதுகிறீர்கள்? எத்தனை பேர் பதில்களை எழுதுகிறீர்கள்? இங்கு கேள்வி, ஒட்டு மொத்த இஸ்லாமிய மக்களின் குர்‍ஆன் அறிவைப் பற்றியது.

இஸ்லாமிய ஜனத்தொகையில் படிக்கத் தெரிந்தவர்களில் 10% பேராவது குர்‍ஆனை தங்கள் தாய் மொழியில் படிக்கிறார்களா? இந்த எண்ணிக்கையை 20%ஆக உயர்த்தலாமா? 30%, 40% அல்லது 50% ஆக உயர்த்தலாமா?

ஒரு பேச்சுக்காக 50% என்றே வைத்துக்கொண்டாலும், மீதமுள்ள 50% சதவிகிதம் பேர், உங்களைப் போன்ற இஸ்லாமிய அறிஞர்கள் சொல்வதைத் தானே இஸ்லாம் என்று நம்பவேண்டிய நிர்பந்தத்தில் பரிதாப‌ நிலையில் இருக்கிறார்கள்? கிறிஸ்தவம் பற்றி பைபிள் பற்றி நீங்கள் சொல்லும் பொய்யும் புரட்டும் தானே "கிறிஸ்தவம் என்று அவர்கள்" நம்பவேண்டிய நிலையில் இருக்கிறார்கள்?

ஆகையால், சாதாரண மக்களை ஏமாற்றுவது நாங்கள் அல்ல, நீங்களும் உங்கள் இஸ்லாமும் தான்.

இறைவன் "எல்லாருக்காக" இறக்கிய வேதம் என்று ஒரு புறம் சொல்லிக்கொண்டு, இன்னொரு புறம் அவர்களை அரபியில் மட்டுமே படிக்க உற்சாகப்படுத்துகிறீர்களே, இதை என்னவென்றுச் சொல்லலாம். குறைந்த பட்சம், அரபியில் குர்‍ஆனை படிக்கும் ஒவ்வொருவரும் கண்டிப்பாக தமிழிலும் படிக்கவேண்டும் என்று தமிழ் நாட்டு எல்லா இஸ்லாமியர்களுக்கும் அதிகார பூர்வமாக அறிவுரை சொல்லமுடியுமா? அப்படி சொல்லிவிட்டு, அதன்படி தாய் மொழியில் படிக்கிறார்களா என்று தொடர்ந்து உற்சாகப்படுத்த முடியுமா?

இப்படி செய்யாத பட்சத்தில், சாதாரண இஸ்லாமியர்களின் இஸ்லாமிய ஞானம் வெறும் கேள்வி ஞானம் தானே!

யார் யாரை ஏமாற்றுகிறார்கள்? என்று இப்பொழுது சிந்தித்துப்பாருங்கள்.

//தாங்கள் வேதமாக நம்பியிருக்கும் "மனித கரங்களால் கையாடல் செய்யப்பட்டுள்ள பைபிள்" உண்மையில் அகிம்சையையும் அன்பையும் தான் போதிக்கிறதா? என்பதை முழுமையாக விளக்க முற்படுவதில்லை.//

குர்‍ஆன் மனிதனின் கற்பனையா அல்லது அல்லாஹ் இறக்கினானா என்பதை நாம் கடந்த இரண்டு ஆண்டுகளாக பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம். அதே நேரத்தில் பைபிளை ஒருவர் படித்தால், புரிந்துக்கொள்ள முடியாத நிலையில் இருப்பதற்கு பைபிள் ஒன்றும் குர்‍ஆன் போல அமைப்பு உள்ளதல்ல.

ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் சம்மந்தப்பட்ட சூழ்நிலை என்ன என்பதை பைபிள் தன்னகத்தே கொண்டுள்ளது, மற்றும் நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு நாங்கள் விளக்கங்கள் கொடுத்துக்கொண்டே இருக்கிறோம்.

கிறிஸ்தவத்தின் போதனை அன்பா, அஹிம்சையா என்பதை பைபிளை படித்தால் புரியும், அதே போல, குர்‍ஆனை படித்தால், ஹதீஸ்களை படித்தால், இஸ்லாம் என்றால் வன்முறை என்பது விளங்கும், அதை விளங்கிக்கொண்டு தானே இப்போது உலகில் எல்லா தீவிரவாத செயல்கள் நடைபெறுகின்றன.

//மாறாக இயேசுவின் உபதேசங்களாகக் குறிப்பிடப்பட்ட சிலக் கருத்துக்களை மட்டும் பொறுக்கி எடுத்து முஹம்மது (ஸல்) அதற்கு எதிரானவர் என்று ஒப்பீட்டுப் பிரச்சாரம் செய்து பாமர மக்களை ஏமாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.//

யார் இயேசுவின் ஒரு சில வசனங்களை எடுத்து விளக்கமளிக்கிறார்கள் என்பதை இந்த தொடர் கட்டுரைகளில் பார்க்கத் தான் போகிறோம்.

அமைதியை போதித்த இயேசு எங்கே, வன்முறையை தன் ஆயுதமாகக் கொண்ட முஹம்மது எங்கே, நம் பதில்களில் நாம் காண்போம்.

அபூ அப்திர்ரஹ்மான்

அத்துடன் உலகெங்கும் வாழும் கோடிக்கணக்கான மக்கள் தம் உயிரைவிட மேலாக மதிக்கக் கூடிய, ஒரு சமுதாயத்தின் நம்பிக்கைக்கு உட்பட்ட ஆன்மீகத் தலைவரை ஒற்றை வார்த்தையில் பொய்யான குற்றச்சாட்டுகளுடன் கேவல விமர்சனம் செய்வதன் மூலம் தம்மை விட மதவெறி பிடித்தவர்கள் வேறுயாரும் இல்லை என்பதையும் வெளிக்காட்டியுள்ளனர்.

ஈஸா குர்‍ஆன்:

இதே போல, கோடிக்கணக்கான மக்கள் இறைவன் என்று நம்பும் இயேசுவை "அவர் ஒரு நபி என்றுச் சொல்லி அவமானப்படுத்துவதும், இயேசுவை முஹம்மதுவோடு ஒப்பிட்டு அவர் வெறும் நபி என்று இஸ்லாமியர்கள் சொல்வதும்" மதவெறி இல்லையா?

உங்கள் சமுதாயத்திற்கு அவர் வழிகாட்டி என்பதால், மற்ற மார்க்கங்கள் பற்றி அவர் எது சொன்னாலும் மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளவேண்டுமா என்ன? அப்படி ஒன்றும் கட்டாயமில்லையே. அவர் மற்ற மார்க்கங்களை விமர்சித்தால், அதைக் கேட்டுக்கொண்டு, சும்மா இருப்பதற்கு யாரும் காதில் பூவைத்துக் கொண்டு இல்லையே!

நாளைக்கு ஒருவர் தன்னை முஹம்மதுவிற்கு பின்பு வந்த நபி என்றுச் சொல்லி, இஸ்லாம் தவறு, அதன் புனிதத்தன்மை மாற்றப்பட்டுவிட்டது, அதை சரிபடுத்த என்னை அல்லாஹ் அனுப்பினார் என்று சொன்னால், அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பீர்களா? அவருக்கு பதில் சொல்லமாட்டீர்களா, விமர்சிக்கமாட்டீர்களா, அவர் ஒரு பொய் நபி என்றுச் சொல்லமாட்டீர்களா? அதே போலத்தான் முஹம்மதுவும் கிறிஸ்தவர்களைப் பொருத்தமட்டில், "ஒரு பொய் நபி" ஆவார்.

யாருக்கு மதவெறி உள்ளது என்பதை இஸ்லாமிய நாட்டில், ஷரியா சட்டமுள்ள நாட்டில் சென்று பார்த்தால் தெரியும்?

அபூ அப்திர்ரஹ்மான்

பைபிள் என்றவுடனே பெரும்பாலானவர்களுக்கு நினைவில் வருவது "ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு" என்பது மட்டும் தான். சுருங்கக் கூறினால், இந்த ஒரு சொல்லை மட்டும் பரவலாக எடுத்து வைத்து, மனிதர்களால் கலப்படம் செய்யப்பட்ட பைபிளின் உண்மையான பக்கங்களுக்குள் பாமர மக்களைச் செல்ல விடாமல், காசுக்கு மாரடிக்கும் மிஷனரிகள் கட்டி வைத்துள்ளன.

தொடரும்...

ஈஸா குர்‍ஆன்:

இஸ்லாம் என்றுச் சொன்னால், இஸ்லாமியரல்லாத உலக மக்களுக்கு என்ன நியாபகம் வரும் என்று உங்களுக்குத் தெரியுமா?

"தீ வி ர வா த ம்" என்ற வார்த்தை தான் நியாபகம் வரும்.

இதற்கு எங்களைப் போல, விரல் விட்டு எண்ணக்கூடிய வாசகர்கள் படிக்கும் கட்டுரைகள் எழுதுபவர்கள் காரணமல்ல. இதற்கு காரணம்,

தங்களை இஸ்லாமியர்கள் என்று அடையாளம் காட்டிக்கொள்ளும் தீவிரவாதிகளும்,

தங்கள் கைகளில் துப்பாக்கியுடனும், குர்‍ஆனுடனும் புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கும் தீவிரவாதிகளும் தான் கார‌ண‌ம்.

மட்டுமல்ல, உங்கள் குர்‍ஆனின் போதனைகளும், உங்கள் அன்பான நபியின் செயல்களும் தான் படித்தவர்களின் மத்தியில் இப்படிப்பட்ட எண்ணத்தை உண்டாக்குகிறது.

இன்னும் பல ஆண்டுகள் சென்றால், இஸ்லாம் என்றால் என்ன பொருள் என்று கேட்டால், மக்கள் "வன்முறை அல்லது தீவிரவாதம்" என்று பொருள் கூறும் நாட்கள் வந்துவிடும் போல் இருக்கிறது. அதற்கான அடிப்படையை "ஒரு சில இஸ்லாமியர்கள்" இப்போதே அமைத்துக்கொண்டு இருக்கிறார்கள். மக்கள் நடமாடும் சாலைகள், கடைகள், பேருந்துகள், போதாகுறைக்கு உணவு விடுதிகளையும் விட்டு வைக்காமல் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டவர்கள் இப்போது, கிரிக்கெட்டையும் விட்டுவைக்கவில்லை.

உலகத்தில் அன்று, "இலங்கை" என்றுச் சொன்னால், அங்கு நடக்கும் உள்நாட்டுச் சண்டை, மற்றும் விளையாட்டு என்றால், பந்து வீச்சாளர் முரளிதரன் போன்றவர்கள் நியாபகத்துக்கு வருவார்கள். ஆனால், இப்போது "என்ன நியாபகம் வரும் தெரியுமா? பாகிஸ்தான், லாஹூர், மற்றும் தீவிரவாதம் கடைசியாக இஸ்லாம்".

எனவே, நாங்கள் அல்ல, உங்கள் இஸ்லாமியர்களே இஸ்லாமுக்கு அதிக பாதிப்பை உண்டாக்குகிறார்கள்.

எனவே, முதலில் இஸ்லாம் வன்முறையை செய்யும் படி சொல்வதில்லை என்று உங்கள் "இஸ்லாமியர்களுக்கு" போதியுங்கள், குர்‍ஆன் அப்படி போதிக்கவில்லை என்று நீங்கள் கருதினால்.

// மனிதர்களால் கலப்படம் செய்யப்பட்ட பைபிளின் உண்மையான பக்கங்களுக்குள் பாமர மக்களைச் செல்ல விடாமல், காசுக்கு மாரடிக்கும் மிஷனரிகள் கட்டி வைத்துள்ளன.//

பாமர மக்கள் பைபிளை தங்கள் மொழியில் படித்து தெரிந்துக் கொள்கிறார்கள், கிறிஸ்தவர்களிடம் "யாரும் தங்கள் கைவரிசையை" காட்டமுடியாது. பாமர மக்கள் இஸ்லாமின் உண்மை முகத்தை தெரிந்துக் கொள்ளக் கூடாது என்பதற்காகத் தானே, அரபியில் படித்தால் தான் அதிக நன்மைகள் என்று அவர்களை ஏமாற்றிக்கொண்டு வருகிறீர்கள்? முதலில், அரபியை விட்டு வெளியே வாருங்கள், புரியும் மொழியில் படியுங்கள், அப்போது புரியும் உண்மை எது பொய் எது என்று.

யார் இஸ்லாமை விமர்சித்தாலும் போதும், உடனே "காசுக்காக மாரடிக்கிறவர்கள்" என்று பட்டம் கொடுத்துவிடுவார்கள் இஸ்லாமியர்கள்.

நான் என் சொந்த வேலை செய்கிறேன், வருமானத்தை சம்பாதிக்கிறேன், எனக்கு யாருடைய காசும் தேவையும் இல்லை. சரி ஒரு கேள்வியை கேட்கிறேன், "இஸ்லாமை ஒருவர் கேள்வி கேட்டால், அவர் காசுக்காக மாரடிப்பதாக அர்த்தம் அப்படித்தானே, அதே நீங்கள் இஸ்லாமுக்கு வக்காளத்து வாங்கினால், உங்களுக்கு சொர்க்கத்தில் "அனேக பெண்கள்" கிடைப்பார்கள் என்ற நப்பாசையாலா?"

முடிவுரை:

அருமை அப்திர்ரஹ்மான் அவர்களே, பயங்கரவாதம், தீவிரவாதம் என்பதைப் பற்றி இஸ்லாமியர்கள் எழுதவேண்டுமென்றால், ஒரு முறைக்கு நூறு முறை சிந்திக்கவேண்டும், அப்படி சிந்திக்காத பட்சத்தில் அனேக கேள்விகளுக்கு பதில் அளிக்கும் கட்டாயத்தில் தள்ளப்படுவீர்கள். உங்களின் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

இஸ்லாம் மற்றும் பயங்கரவாதம் பற்றிய தமிழ் கட்டுரைகள்

இஸ்லாம் அமைதி மார்க்கம் இல்லை என்பதற்கு பத்து முக்கிய காரணங்க‌ள் (முஹம்மதுவின் வாழ்க்கையிலும் குர்‍ஆனிலும் வன்முறை) Top ten reasons why Islam is NOT the religion of peace (Violence in Muhammad's life and the Quran)

அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு (To Kill and To Die In The Name of Allah)

முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும் (MUHAMMAD AND THE MURDER OF ABU AFAK)

முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல் (திய வான் கோவின் கொலை) MUHAMMAD'S ASSASSINS AND INTIMIDATION IN ISLAM (The Murder of Theo Van Gogh)

முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும் (MUHAMMAD'S USE OF TORTURE)

இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)




Isa Koran Home Page Back - Abu AbdirRahmaan/AbuNoora/UlaralPage Rebuttals Index
Source: http://www.geocities.com/isa_koran/tamilpages/Rebuttals/AbuNoora/cpaarvai_violence1.html

--
3/11/2009 11:02:00 AM அன்று ஈஸா குர்-ஆன் - Isa Koran இல் Isa Koran ஆல் இடுகையிடப்பட்டது

Friday, March 6, 2009

முஹம்மதுவின் பாவங்கள்

முஹம்மதுவின் பாவங்கள்

The Sins of Muhammad

சூரா முஹம்மது (47:19)

அதிக ஆதாரங்கள் இருந்தாலும் அதற்கு எதிராக உள்ள ஒரு இஸ்லாமிய சித்தாந்தம் என்னவென்றால், "இறைவனின் தீர்க்கதரிசிகள் (நபிகள்) பாவங்களை செய்யமாட்டார்கள் என்ற நம்பிக்கையாகும்". இந்த நம்பிக்கையினால், சில நேரங்களில் இஸ்லாமியர்கள் முஹம்மதுவின் பாவங்கள் பற்றியுள்ள தெளிவான குர்‍ஆன் வசனங்களை மொழியாக்கம் செய்யும் போது வேண்டுமென்றே மாற்றி மொழியாக்கம் செய்கிறார்கள். இப்படிப்பட்ட ஒரு வசனம் தான் குர்‍ஆன் சூரா 47:19 ஆகும். இப்போதைக்கு, இவ்வசனத்தின் கடைசியில் உள்ள வித்தியாசங்களை விடுத்து, மீதமுள்ள வசனத்தை நாங்கு நேர்மையான ஆங்கில மொழியாக்கங்களிலும் மற்றும் நேர்மையான இரண்டு தமிழ் மொழியாக்கங்களிலும் காண்போம்.

முஹம்மது ஜான் பி. ஜைனுல் ஆபீதீன்
ஆகவே, நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர (வேறு) நாயன் இல்லை என்று நீர் அறிந்து கொள்வீராக இன்னும் உம்முடைய பாவத்திற்காகவும், முஃமின்களாகன ஆண்களுக்காகவும், பெண்களுக்காகவும் (பாவ) மன்னிப்புத் தேடுவீராக - அன்றியும் உங்களுடைய நடமாட்டத்தலத்தையும் உங்கள் தங்குமிடங்களையும் அல்லாஹ் நன்கறிகிறான் (47:19). "அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை" என்பதை அறிந்து கொள்வீராக! உமது பாவத்திற்காகவும், நம்பிக்கை கொண்ட ஆண்களுக்காகவும், பெண்களுக்காகவும் நீர் மன்னிப்புக் கேட்பீராக! நீங்கள் இயங்குவதையும், தங்குவதையும் அல்லாஹ் அறிவான் (47:19).
Pickthall Al-Hilali & Khan
So know (O Muhammad) that there is no God save Allah, and ask forgiveness for thy sin and for believing men and believing women. Allah knoweth (both) your place of turmoil and your place of rest. So know (O Muhammad) that La ilaha ill-Allah (none has the right to be worshipped but Allah), and ask forgiveness for your sin, and also for (the sin of) believing men and believing women. And Allah knows well your moving about, and your place of rest (in your homes).
M. Sarwar R. Khalifa
Know that God is the only Lord. Ask forgiveness for your sins and for the sins of the believing men and women. God knows when you move and when you rest. You shall know that: "There is no other god beside GOD," and ask forgiveness of your sins and the sins of all believing men and women. GOD is fully aware of your decisions and your ultimate destiny.

[ Information about the translations used in this article ]

மூல அரபி மொழியின் வசனத்தின் படி, முஹம்மது தன் பாவங்களுக்காக பாவமன்னிப்பு கோரும் படி கட்டளையிடப்பட்டுள்ளார். இதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த வசனத்தின் பொருள் பற்றியும், முஹம்மது பாவங்கள் செய்தார் என்றுச் சொல்லும் இதர வசனங்கள் பற்றியும், இன்னும் பொதுவாக நபிகளின் பாவங்கள் பற்றிய விவரங்களும் இந்த இரண்டு கட்டுரைகளில் விவரமாக காணலாம், "இஸ்லாமும் நபிகளின் பாவங்களும்" மற்றும் "முஹம்மது ஒரு பாவியா?". ஆனால், இஸ்லாமிய நம்பிக்கை "இப்படி நபிகள் பாவம் செய்கிறவர்களாக இருக்கமாட்டார்கள்" என்பது தான். கீழ் கண்ட ஆங்கில மொழியாக்கங்கள் இவ்வசனம் சொல்லும் அழுத்தமான விவரத்தை சிறிது குறைப்பது போல மொழியாக்கம் செய்துள்ளார்கள்.

T.B. Irving Yusuf Ali
Know that there is no deity except God [Alone], and beg forgiveness for your offence, as well as for believing men and believing women. God knows how you (all) bustle about on your business and where you settle down. Know, therefore, that there is no god but Allah, and ask forgiveness for thy fault, and for the men and women who believe: for God knows how ye move about and how ye dwell in your homes.
Shakir Sher Ali
So know that there is no god but Allah, and, ask protection for your fault and for the believing men and the believing women; and Allah knows the place of your returning and the place of your abiding. Know, therefore, that there is no god other than ALLAH, and ask protection for thy human frailties, and for believing men and believing women. And ALLAH knows the place where you move about and the place where you stay.
Maulana M. Ali
So know, that there is no God but Allah and ask protection for thy sin, and for the believing men and the believing women.2300 And Allah knows your moving about and your staying (in a place).

மேற்கண்ட குர்‍ஆன் வசனத்தின் அழுத்தத்தை குறைப்பதற்காக இரண்டு மாற்றங்கள் ஆங்கில மொழியாக்கங்களில் செய்யப்பட்டுள்ளன. முதலாவதாக, "பாவம் - Sin" என்ற வார்த்தைக்கு பதிலாக சிறிது அழுத்தம் குறைவாக உள்ள வார்த்தைகளான "குறைபாடு, தவறு (fault, offese)" அல்லது "பிழை – Human frailty " என்ற வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இன்னும் சில குர்‍ஆன் மொழியாக்கம் செய்தவர்கள், "மன்னிப்பு – forgiveness" என்ற வார்த்தைக்கு பதிலாக "பாதுகாப்பு - protection" என்ற வார்த்தையை பயன்படுத்தியுள்ளார்கள். ஆனால், அரபி வசனம் "istaghfir li dhanbika" என்றுச் சொல்கிறது. "istaghfir" என்ற வார்த்தையின் பொருள் "மன்னிப்பை தேடுவீராக" என்பதாகும், இதன் பொருள் "பாதுகாப்பிற்காக கேட்பீராக" என்பதல்ல. இன்னும் "dhanb" என்ற அரபி வார்த்தையின் பொருள் "பாவம் - sin" அல்லது "குற்றம்- guilt" என்பதாகும். இந்த வார்த்தை சிறிய பிழைகளை, தவறுகளை சுட்டும் வார்த்தையில்லை. "ka" என்ற வார்த்தை "உன்னுடைய" என்பதாகும் (ka is the second person singular (your)).

எனினும், மௌலான முஹம்மது அலி அவர்கள் "
Sin - பாவம்‍" என்ற வார்த்தையையே தன் மொழியாக்கத்தில் பயன்படுத்தியுள்ளார். பிறகு பின் குறிப்பு ஒன்று இவ்வசனத்திற்கு கொடுக்கிறார், அதில் "ஏற்கனவே செய்த பாவங்களுக்காக மன்னிப்பை கோருங்கள்" என்பதாக இதன் பொருளை நாம் புரிந்துக் கொள்ளக்கூடாது என்று எழுதுகிறார்:

2300 Not only the Prophet but every believer is told here to keep praying to God for being protected from sin, for himself and for all the believers, men as well as women; ...

நாம் மேலே கண்ட மேற்கொள்களில், தெளிவாக புரியும் ஒரு குறிப்பிட்ட வார்த்தைகளின் பொருளை மாற்றும் தந்திரத்தை மட்டும் குர்‍ஆன் மொழியாக்கம் செய்பவர்கள் செய்யவில்லை, இன்னும் அனேக தந்திரங்களையும் கையாள்கிறார்கள். முஹம்மது பாவம் செய்தார் என்ற வசனத்திலிருந்து அவரை காப்பாற்ற மேலும் இரண்டு மொழியாக்கம் செய்பவர்கள், ஒரு புதுமையான யுக்தியை பயன்படுத்துகிறார்கள்.

இவ்வசனத்தை
முஹம்மது அஸத் (Muhammad Asad) என்பவர் கீழ்கண்டவாறு மொழியாக்கம் செய்கிறார்:

Know, then, [O man,] that there is no deity save God, and [while there is yet time,] ask forgiveness for thy sins, and for the sins of all other believing men and women: for God knows all your comings and goings as well as your abiding [at rest].

அஸத் அவர்கள் "இஸ்தஃபிர் லி தன்பிகா - istaghfir li dhanbika" என்ற வாக்கியத்தை நேர்மையான முறையில் சரியாக மொழியாக்கம் செய்தாலும், அடைப்பு குறிக்குள் "(ஓ மனிதனே)" என்று ஒரு வார்த்தையை சேர்கிறார். இதனால், இந்த வசனத்தில் சொல்லப்பட்ட விவரம் குறிப்பாக முஹம்மதுவிற்கு கட்டளையாகச் சொல்லாமல், மொத்த மனித இனத்திற்கு இட்ட கட்டளையாக பொருள் கொள்ளும் படி செய்துள்ளார். எல்லா மனிதர்களும் பாவம் செய்கிறவர்களே, ஆகையால் முஹம்மதுவிற்கு மட்டும் குறிப்பாகச் சொன்னாலும், அல்லது மற்ற மக்களுக்குச் சொன்னாலும் இதில் எந்த பிரச்சனையும் இல்லை.

நூருத்தீன் (Nooruddin) என்பவருக்கு இந்த வசனத்தின் உண்மைப் பொருள் மிகப்பெரிய பிரச்சனையாக தென்பட்டுள்ளது, எனவே, தனது மொழியாக்கத்தில் அதிக தந்திரத்தை பயன்படுத்தி மொழியாக்கம் செய்துள்ளார்.

(Believer!) know, therefore, that there is no other, cannot be and will never be One worthy of worship other than Allah and seek His protection and forgiveness of your (human) shortcomings and (also) for believing men and believing women. Allah knows your haunt (where you move about), and your resting-place.

இவர் "பாவங்கள் – Sins" என்ற வார்த்தைக்கு பதிலாக "மனித குறைபாடுகள் (human) shortcomings" என்று மாற்றி எழுதுகிறார், மற்றும் "மன்னிப்பு - Forgiveness" என்ற வார்த்தைக்கு பதிலாக "பாதுகாப்பு - Protection" ம?ன்ற வார்த்தையை பயன்படுத்துகிறார். இந்த வசனம் முஹம்மதுவை குறிப்பிட்டுச் சொல்லாமல், பொதுவாக‌ நம்பிக்கையாளர்களுக்கு சொல்லப்பட்டது போல எழுதுகிறார்.

சமீப காலத்தில் பார்க்க நேர்ந்த இன்னுமொரு மொழியாக்கம் இப்படியாகச் சொல்கிறது:

Therefore know (O dear Prophet Mohammed - peace and blessings be upon him) that there is none worthy of worship except Allah, and seek the forgiveness of sins of your close ones and for the common believing men and women; and Allah knows your movements during the day and your resting during the night.

மேலே குறிப்பிட்டது போல வார்த்தைகளைக் கொண்டு ஒரு குர்‍ஆன் மொழியாக்கம் செய்யப்பட்டு இருக்கின்றதா என்று எங்களுக்குத் தெரியாது. ஆனால், இந்த மொழியாக்கம் தான் சரியான மொழியாக்கம் என்று ஒரு இஸ்லாமியர் வாதம் புரிகிறார். முஹம்மது பாவம் செய்தார் என்பதை குர்‍ஆன் சொல்கிறது என்பதை கேள்விப்பட்டு, இவர் தேடிப்பார்த்ததில் இப்படிப்பட்ட மொழியாக்கம் கிடைத்தது என்றுச் சொல்கிறார். இவரின் பதிலின் படி, "அரபி மொழிக்கு நிகரான மொழியாக்கம் என்னவென்றால், முஹம்மது தனக்காக அல்ல, இஸ்லாமின் மீது நம்பிக்கை வைத்திருக்கும் அனைவரின் பாவத்திற்காக மன்னிப்பை கோரும்படி சொல்லப்பட்ட வசனம்" தான் இது என்றுச் சொல்கிறார், ஏனென்றால், முஹம்மது பாவம் செய்யாதவர் என்று கூறுகிறார். எனவே, மற்ற மொழியாக்கங்களில் உள்ள தவறை இவர் திருத்தி, "Not his own sins, but the sins of his close ones" என்ற விவரத்தை அனுப்பியுள்ளார்.

ஆனால், அரபியில் உள்ள வசனத்திற்கு நிகரான வார்த்தைகள் இவைகள் அல்ல, அதாவது, "உங்களுடைய சொந்த பந்தங்களுக்காக பாவமன்னிப்பு கோருங்கள்" என்ற வார்த்தைகள் அரபி மூல‌ வசனத்தோடு ஒத்துப்போவதில்லை. இப்படி மாற்றி மொழியாக்கம் செய்யும் செயல், ஒன்றை மட்டும் தெளிவாக சாட்சியிடுகிறது, அது என்னவென்றால், முஹம்மது பாவங்கள் செய்தார் என்ற விவரம் குர்‍ஆனிலிருந்தே வந்தாலும் சரி அதனை ஜீரணிக்க சில முஸ்லீம்களால் முடியவில்லை என்பதைக் காட்டுகிறது.

மூலம்: The Sins of Muhammad

தமிழ் மூலம்: http://www.answering-islam.org/tamil/quran/versions/047019.html




Isa Koran Home Page Back - Quran Version's Page
1

இஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்

முன் பக்கம் செல்ல

HOME PAGE

தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்

1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1

2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2

3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3

4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4

பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்

1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1

2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2

பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்

1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்

2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்