இஸ்லாம் அமைதி மார்கமா? இஸ்லாம் இனிய மார்கமா? இஸ்லாம் உண்மையான மார்கமா?

ஆன்சரிங் இஸ்லாம்

பல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்

சத்தியவான் தளம் செல்ல

Friday, July 11, 2008

குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் - பாகம் 1 - பைபிளில் இல்லாத குழந்தை அற்புதம் முகமது "காப்பி" அடித்தது தான்





 

குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் - பாகம் 1


[இயேசுவின் பிறப்பு சம்மந்தப்பட்ட குர்‍ஆன் வசனங்களில் உள்ள முரண்பாடுகள், பிழைகள், கட்டுக்கதைகள் போன்றவற்றை, தொடர் கட்டுரைகளாக நாம் இனி காணப்போகின்றோம்.]

இஸ்லாம் கல்விக்கு பதில்:

பைபிளில் இல்லாத குழந்தை அற்புதம் முகமது "காப்பி" அடித்தது தான்


முன்னுரை: இஸ்லாம் கல்வி தள கட்டுரை சொல்கின்றது, பைபிளைக் கண்டு குர்‍ஆன் "காப்பி" அடிக்கவில்லை, காரணம், பைபிளில் சொல்லாத பல அற்புதங்கள் குர்‍ஆனில் உள்ளது, எனவே, முகமது பைபிளிலிருந்து காப்பி அடிக்கவில்லை என்பது தெளிவு என்று எழுதியிருந்தார்கள். இயேசு குழந்தையாக இருக்கும் போது பேசியதாக குர்‍ஆன் சொல்லும் அற்புதம், இயேசு களிமண்ணினால் பறவை செய்து அதற்கு உயிர் கொடுத்த அற்புதம் இவைகள் பைபிளில் இல்லை, அதனால், பைபிளைக்கொண்டு காப்பி அடித்தது தான் குர்‍ஆன் என்று எப்படி கேட்கிறார்கள் கிறிஸ்தவர்கள் என்று கேள்வி எழுப்புகின்றது இஸ்லாம் கல்வி தளம்.

இஸ்லாம் கல்வி தளத்தில் கீழ் கண்டவாறு எழுதப்பட்டுள்ளது.
"ஈஸா அலைஹிஸ்ஸலாம் (இயேசு) அவர்களின் பிறப்பு முதல் பைபிளில் காணப்படாத ஏராளமான சம்பவங்களை திருக்குர்ஆன் விவரிக்கின்றது. ........
ஈஸா (இயேசு) அலைஹிஸ்ஸலாம் அவர்கள்தொட்டில் குழந்தையாக இருக்கும்போதே நான் அல்லாஹ்வின் தூதராவேன் என்று கூறி மக்களிடம் பேசியதன் மூலம் தன் முதல் அற்புதத்தை வெளிப்படுத்தியமை (19: 29-33) களிமண்ணில் ஒரு பறவையைப் போன்ற உருவத்தைச் செய்து அதில் அவர் ஊதியபோது அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு அது உயிருள்ள பறவையாக மாறியது (3:49) போன்ற தகவல்களும் பைபிளில் எங்கும் இல்லை. பைபிளைப் பார்த்து காப்பியடித்து முஹம்மது நபி (ஸல்) அவர்கள் திருக்குர்ஆனை உருவாக்கியிருப்பின் பைபிளில் எங்குமே காணக்கிடைக்காத தகவல்களை அவர்கள் எங்கிருந்து பெற்றனர்?
திருக்குர்ஆன் முற்றிலும் இறைவனால் அருளப்பட்டது! அதன் காரணமாகவே பைபிளின் எந்தப் பகுதியிலும் இடம்பெறாத பல உண்மைச் சம்பவங்களும் திருக்குர்ஆனில் இடம்பெற்றுள்ளன."

Source: http://www.islamkalvi.com/portal/?p=622

பைபிளில் இல்லாத அற்புதங்கள் பற்றிய விவரங்களை முகமது எங்கே இருந்து பெற்றார்? என்று கேள்வி எழுப்பியுள்ளனர், நம் சகோதரர்கள். இக்கேள்விக்கு பதில் தான் இக்கட்டுரை.

குர்‍ஆனின் இந்த குழந்தை அற்புத விவரங்கள், காப்பி அடித்தது தான்:

பைபிளில் தான் இந்த அற்புதம் பற்றி சொல்லப்படவில்லையே பின் எப்படி, காப்பி என்று சொல்கிறீர்கள் என்று கேட்டால், இது பைபிளிலிருந்து காப்பி அடிக்கவில்லை, அதற்கு பதிலாக, முகமது காலத்திற்கு முன்பு இருந்த பல புராணக்கதைகள், கட்டுக்கதைகள் மற்றும் இரண்டாம் மூன்றாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பல தள்ளுபடி ஆகமங்களிலிருந்து தான் முகமது இவைகளை சொல்லியுள்ளார். இவைகள் இப்படிப்பட்ட புத்தகங்கள்(Infancy of Gospel Thomas, Arabic Infancy of Gospel etc..)இறைவனின் வெளிப்பாடுகள் அல்ல என்று ஒதுக்கிவிட்ட புத்தகங்களிலிருந்து எடுத்து குர்‍ஆனில் சேர்த்துவிட்டு, இது தான் அல்லா இறக்கியது என்று சொல்லியுள்ளார் முகமது, அதையும் இஸ்லாமியர்கள் நம்பிவிட்டு, இக்கதைகள் பைபிளில் இல்லை, குர்‍ஆனில் மட்டுமே உள்ளது என்று பெருமைப்படுகிறார்கள்.

Details of Infancy Gospels of Jesus


1) The Encyclopedia Britannica(பிரிட்டனிகா என்சைக்லோபீடியா):

பிரிட்டனிகா என்சைக்லோபீடியா சொல்கிறது

The Encyclopedia Britannica comments: "The Gospel was known to him chiefly through apocryphal and heretical sources."

"முகமதுவிற்கு சுவிசேஷம் பற்றிய விவரங்கள், தள்ளுபடி ஆகமங்களிலிருந்து, வேறுபல ஆகமங்களிலிருந்து கிடைத்துயிருக்கும்".


Britannica Encyclopedia Says about Gospel of the Infancy of Christ

...of Mark, and Gospel of Philip) preserve some legends and myths found in the early Christian centres of Edessa, Alexandria, and Asia Minor. The First Gospel of the Infancy of Jesus (known also as the Arabic Infancy Gospel ), for example, recounts that, one day, Jesus and his playmates were playing on a rooftop and one fell down and...

Source:    http://www.britannica.com/eb/topic-208181/First-Gospel-of-the-Infancy-of-Jesus


2) Wikipedia Encyclopedia(விக்கிபீடியா கூற்றுப்படி):.

Wikipedia Encyclopedia says about Gospel of the Infancy of Christ

The Infancy Gospel of Thomas is a non-canonical text that was part of a popular genre, aretalogy, of the 2nd and 3rd centuries

The text describes the life of the child Jesus, with fanciful, and sometimes malevolent, supernatural events, comparable to the trickster nature of the god-child in many a Greek myth. One of the episodes involves Jesus making clay birds, which he then proceeds to bring to life,
an act also attributed to Jesus in the Qur'an, thus indicating the text may have had substantial influence on Arabic tradition by the 7th century.

Source :  http://en.wikipedia.org/wiki/Infancy_Gospel_of_Thomas


Jesus creates birds in Infancy Gospel of Thomas and in Quran
Jesus creates birds

In the Qur'an, Jesus forms birds out of clay,

Quran : " I fashion for you out of clay the likeness of a bird, and I breathe into it and it is a bird [Qur'an [5:110]] "

This parallels an episode in the apocryphal Infancy Gospel of Thomas where he does the same:[24]

Infancy Gospel of Thomas :"
[Jesus] then made soft clay and shaped it into twelve sparrows.[25] "

The Infancy Gospel of Thomas was written, at the earliest,in the second century or, at the latest, in the sixth century.
Source : http://en.wikipedia.org/wiki/Legends_and_the_Qur'an


Jesus speaks in the cradle in Infancy Gospel of Thomas and in Quran
The Injilu 't Tufuliyyah or the Gospel of the Infancy of Jesus Christ, contains an Arabic translation of the Infancy Gospel of Thomas and additional narratives. This contains a narrative of Jesus speaking while an infant, also contained in the Qur'an.

Quran

" But she pointed to the babe. They said: "How can we talk to one who is a child in the cradle?" He [Jesus] said: "I am indeed a servant of Allah: He hath given me revelation and made me a prophet; And He hath made me blessed wheresoever I be, and hath enjoined on me Prayer and Charity as long as I live; (He) hath made me kind to my mother, and not overbearing or miserable; [Qur'an 19:29] "


Infancy Gospel of Thomas

" Jesus spake when he was in the cradle, and called out to his mother Mary:— "Verily I am Jesus, the Son of God, the Word, whom thou hast given birth to according to the good tidings given thee by the Angel Gabriel, and my Father hath sent me for the Salvation of the World."

Source: http://en.wikipedia.org/wiki/Legends_and_the_Qur'an



இந்த புத்தகத்தின் முதல் 3 வசனங்களிலேயே இயேசு குழந்தையாக இருக்கும் போது தன் தாயாகிய மரியாளிடம் பேசியதாக எழுதப்பட்டுள்ளது.


1st Gospel of the Infancy of Christ - Verse 2 and 3 இயேசு குழந்தையாக இருக்கும் போது பேசியதாக எழுதப்பட்டுள்ளது

வசனம் 2: இயேசு குழந்தையாக தொட்டிலில் இருக்கும்போதே தன் தாயாரிடம் பேசியதாக‌, அவர் கூறுகிறார்.

வசனம் 3: மரியாளே, காபிரியேல் தூதன் உனக்கு சொன்னது போல நான் தேவனுடைய குமாரனாகிய இயேசு, உலகத்தின் இரட்சிப்பிற்காக என் பிதா என்னை அனுப்பியுள்ளார்.

2. He relates that Jesus spoke even when he was in the cradle and said to his mother :

3. Mary, I am Jesus the Son of God, that word which you brought forth according to the declaration of the angel Gabriel to you, and my Father has sent me for the salvation of the world.


இந்த புத்தகத்தை முழுவதுமாக இங்கு படிக்கலாம்:

http://wesley.nnu.edu/biblical_studies/noncanon/gospels/infgos1.htm
http://www.pseudepigrapha.com/LostBooks/infancy1.htm
http://ministries.tliquest.net/theology/apocryphas/nt/infancy1.htm


இயேசு குழந்தையாக இருக்கும் போது பேசிய நிகழ்ச்சி முதல் முதலில் சொன்னது குர்-ஆன் இல்லை என்பது தான் உண்மை. மற்றும் இயேசு இப்படி பேசினார், என்பதற்கு ஆதாரமே இல்லை. அப்படி பேசியிருந்திருந்தால், இயேசுவின் சீடர்களே, எழுதியிருப்பார்கள். மரியாளும் அவர்களோடு சேர்ந்து ஊழியம் செய்துள்ளார் என்பதை நாம் மறக்கக்கூடாது. இப்படி இயேசு செய்யாத அற்புதத்தை, மற்ற புத்தகங்களிலிருந்து "காபி" அடித்துவிட்டு, பைபிளில் சொல்லப்படவில்லை என்று பெருமையடித்தால் எப்படி?


இஸ்லாம் கல்வி சகோதரர்களுக்கு நான் சொல்லிக்கொள்வது ஒன்று தான், அதாவது, இயேசுவின் பிறப்பு சம்மந்தப்பட்ட இந்த குழந்தையாக இருக்கும் போது பேசிய அற்புதம், மற்றும் களிமண் பறவையை உயிர் பெறச்செய்த அற்புதம், இவைகள் முகமது பைபிளிலிருந்து காப்பி அடிக்கவில்லை, மாறாக கிறிஸ்தவர்கள், யூதர்கள் எல்லாரும் தள்ளுபடி ஆகமங்கள் என்றும், இவைகள் இறைவனின் வெளிப்படுகள் அல்ல என்றும் ஒதுக்கி தள்ளிவிட்ட புத்தகங்களிலிருந்து அவர் காப்பி அடித்துள்ளார் என்பதை மட்டும் நாங்கள் ஒத்துக்கொள்கிறோம்.

முடிவுரை: இன்னும் இயேசுவின் பிறப்பு பற்றி குர்‍ஆன் சொல்லும் விவரங்களில் உள்ள முரண்பாடுகளையும், நடைமுறைக்கு ஏற்காத விவரங்களையும் கர்த்தருக்கு சித்தமானால், அடுத்த பாகத்தில் காணலாம்.

 

 

இஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்

முன் பக்கம் செல்ல

HOME PAGE

தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்

1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1

2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2

3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3

4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4

பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்

1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1

2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2

பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்

1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்

2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்