இஸ்லாம் அமைதி மார்கமா? இஸ்லாம் இனிய மார்கமா? இஸ்லாம் உண்மையான மார்கமா?

ஆன்சரிங் இஸ்லாம்

பல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்

சத்தியவான் தளம் செல்ல

Friday, October 29, 2010

தலாக் கோமாளித்தனத்தால் விபரீதம்

தலாக் ஜோக் அடித்ததால் தன் திருமணவாழ்க்கையை தொலைக்கும்  இளைஞன் 

ஷரன்புர் (உ.பி):  இணையதளத்தில் தன்னுடைய மனைவியுடன் தலாக் ஜோக் அடித்த ஒரு இளைஞன் தன் திருமண வாழ்க்கையை தொலைக்கும் அபாயத்தில் உள்ளார். 

 கத்தார் வாசியான ஒருவர் தன்னுடைய மனைவியோடு இணையதளம் மூலம்  (சாட்டிங்) உரையாடும் போதும் மூன்று முறை தலாக் என்று கூறியிருக்கிறார்;, ஆனால் விளையாட்டாக தான் கூறியவை தன் திருமணவாழ்க்கைக்கே ஆப்பு வைக்கப் போகிறது என்று அறியவில்லை. 

  இளைஞனுடைய குடியுரிமை அல்லது முகவரி அறிவிக்கப்படவில்லை. அந்த இளைஞனுடைய வேண்டு கோளுக்கு பதில் அளித்து டியோபன்டின் (னுநழடியனெ)  அறிக்கைப் பிரிவான டருல் இட்பா (னுயசரட ஐவகய)வால் கொடுக்கப்பட்டுள்ள அறிக்கையில்  இஸ்லாமிய சட்டமான ஷரியத் சட்டத்தின் படி மூன்று முறை தலாக் சொன்னால் திருமணம் செல்லாததாகிவிடும் என்று இஸ்லாமிய பல்கலைகழகமான னுயசரட ருடழழஅ னுநழடியனெ அறிவித்துள்ளது.  

  தன்னுடைய வேண்டுகோளில் அந்த இளைஞன், "எனக்கு இஸ்லாம் பற்றி கொஞ்சம் அறிவே இருக்கிறது, என் மனைவியோடு சாட்டிங் செய்யும் போது விளையாட்டாக தலாக் என்று மூன்று முறை கூறினேன், மேலும் தலாக் சொல்லுவது எப்படி எடுத்துக் கொள்ளப்படும் என்று எனக்கு தெரியாது. மேலும் நான் சந்தோஷமாக திருமணம் செய்து கொண்டவன் நான் என் மனைவியோடு வாழவே விரும்புகிறேன்" என்றும் கூறியுள்ளார்.

 டருல் இட்பா அவருக்கு அளித்திருக்கிற பதிலாவது:  தலாக் என்று மூன்றுமுறை சொல்லிவிட்டால் அது விவாகரத்து நிறைவேற்றப்பட்டுவிட்டதாகும். எனவே அவருடைய மனைவி அவருக்கு "ஹராம்"  ஆகிவிடுகிறாள். அவருக்கு இஸ்லாம் பற்றி போதிய அறிவு இருக்கிறதா அல்லது இல்லையா என்பது ஒரு பொருட்டல்ல. அப்படிப்பட்ட நிலையில் அந்த இளைஞன் தன் மனைவியை கூட்டிக் கொண்டு போகவோ அல்லது மீண்டும் அவளைத் திருமணம் செய்து கொள்ளவோ அனுமதியில்லை. மீண்டும் அவள் தன் கணவனிடம் சேர வேண்டுமென்றால் அவள் "ஹலாலா" வை நிறைவேற்ற வேண்டும். 

  "ஹலாலா" என்னும் செயலானது, மனைவியானவள் தன் கணவனிடம் சேருவதற்கு முன்  இன்னொரு மனிதனை திருமணம் செய்து கொண்டு பிறகு அவனை விவாகரத்து செய்திருக்க வேண்டும் மேலும் அவள் "இத்தாத்" (மூன்று மாத காலகட்டம்) காலத்தையும் நிறைவேற்றிய பிறகே இன்னொரு மனிதனை இரண்டாவதாக திருமணம் செய்ய முடியும். அவள் இரண்டாவது கணவனை விவாகரத்து செய்த பிறகு மீண்டும் "இத்தாத்" காலத்தை நிறைவேற்றிய பிறகே தன் முதல் கணவனை திருமணம் செய்து கொள்ள முடியும். "இத்தாத்" காலத்தின் போது எந்த விழாக்களிலும் பொது நிகழ்ச்சிகளிலும் அவள் கலந்து கொள்ளக் கூடாது. "நீ மூன்று தலாக் கூறும் பொழுது இந்த மூன்றும் நடைபெறுகிறது" மனைவி தலாக் கூறுகிறாளா என்பது முக்கியமல்ல. உனக்கு கட்டளையைக் குறித்து அறிவு இருந்தாலும் இல்லாதிருந்தாலும் உன்னுடைய மனைவி உனக்கு "ஹராம்" ஆகிவிட்டாள்" என்று அறிக்கை கூறுகிறது.  ஷரியத் சட்டத்தின் படி தலாக் என்று சும்மா சொன்னாலும் அது விவாகரத்து செய்ததற்கு சமம் என்று ளுநnழைச அரகவi ழக னுயசரட ருடழழஅ றுயஙக  யுசகை  முயளஅi  கூறினார். 

Talaq joke may cost youth his marriage

Saharanpur (U.P.): A talaq joke to his wife on the Internet may cost an e-savvy youth his marriage.

The man, a resident of Qatar, spelt talaq thrice while chatting with his wife, but little did he know that his humorous intention could nullify his marriage in reality.

The Islamic seminary, Darul Uloom Deoband, has ruled that saying talaq thrice, even casually, is valid as per the Shariyat (Islamic Law) and the marriage will stand nullified. The nationality or the identity of the youth has not been revealed. The fatwa was given by the Deoband's fatwa section, Darul Ifta, in reply to a query posted by the youth.

In his query he had stated that while chatting with his wife over the Internet he jokingly spelled talaq thrice. Claiming to have little knowledge of Islam, the youth said that he didn't know how talaq was taken, adding that he was happily married and wanted to live with his wife.

Darul Ifta had replied to him that once talaq is spelled thrice it amounted to divorce and that his wife was "haraam" for him. It does not matter whether he had enough knowledge of Islam or not. Under such circumstances, the youth is neither allowed to take his wife nor to marry her again, and that she would be required to go through "halalah," if she wanted to return to her husband.

"Halalah" is a practice under which the woman has to marry another man and divorce him before she can marry her previous husband againThe wife would be required to complete the 'iddat' (three months time) period after which she would be allowed to marry another man. In case she divorced her second husband, she would have to go through the iddat period again before she could re-marry her former husband, it stated. During "iddat" a woman is supposed to stay away from celebrations and socialising. "When you gave three talaqs, all the three took place. It does not matter whether the woman gives talaq or not. Your wife became "haraam" for you, whether you are aware of the commandment or not," the fatwa read. Senior mufti of Darul Uloom Waqf Arif Kasmi said that under the 'Shariyat' talaq, even if given in a lighter vein, amounts to divorce. — PTI


http://www.hindu.com/2010/10/28/stories/2010102858282000.htm

Thursday, October 28, 2010

கிறிஸ்தவத்திற்கு பதில்: பீஜேயின் புதிய தளம் ஆரம்பம்

 

கிறிஸ்தவத்திற்கு பதில்: பீஜேயின் புதிய தளம் ஆரம்பம்

முன்னுரை:

பீஜே அவர்களின் அதிகார பூர்வமான தளமாகிய ஆன்லைன் பீஜே தளத்தில், கிறிஸ்தவர்களுக்கு பதில் தருவதற்காக ஒரு புதிய தளத்தை ஆரம்பித்துள்ளதாக பீஜே அவர்கள் பிரகடனம் செய்துள்ளார்கள். அந்த புதிய தளத்திற்கு "ஏசு அழைக்கிறார்"  என்று பெயரை சூட்டியுள்ளார்.

இந்த கட்டுரையில் கீழ்கண்ட விவரங்கள் பற்றி நான் எழுதப்போகிறேன்.

1. பீஜே அவர்களின் புதிய தள அறிமுகம்
2. பீஜே அவர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி
3. பீஜே அவர்களின் புதிய தளத்தில் நாம் எதிர்பார்க்கும் விவரங்கள்
4. எழுத்து விவாதத்திற்கு பீஜே அவர்கள் இப்போது தயாரா?
5. முடிவுரை
--------------------------------------------------------------------------------

1. பீஜே அவர்களின் புதிய தள அறிமுகம்

பீஜே அவர்கள் "கிறிஸ்தவத்திற்கு மட்டும் பதில் தருவதற்கு" மட்டுமே ஒரு தளத்தை ஆரம்பித்துள்ளார். இது மிகவும் மகிழ்ச்சியான விஷயம். எனக்கு மிகவும் பிடித்த விஷயம் ஒன்று உண்டு என்றால், இஸ்லாமியர்கள் அதிகமாக எழுதுவதும்/பேசுவதுமேயாகும்.  முக்கியமாக, கிறிஸ்தவத்திற்கு பதில் என்றுச் சொல்லி ஒரு தளம் அதுவும் தமிழில் பீஜே அவர்கள் ஆரம்பித்து இருப்பது மிகவும் மகிழ்ச்சிகரமான விஷயம். இதற்காக நான் பீஜே அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

சரி, பீஜே அவர்கள் தங்கள் புதிய தளம் பற்றி எப்படி அறிமுகம் செய்கின்றார் என்பதை இப்போது படிப்போம்.


சோதனை ஓட்டம் ஆரம்பம்

•         இஸ்லாத்துக்கு எதிராக கிறித்தவ உலகம் எழுப்பும் கேள்விகளூக்கும் அவதூறுப் பிரச்சாரங்களுக்கும் தக்க பதில் அளிக்கவும், கிறித்தவத்தின் பொய்மையை உலகுக்கு உணர்த்தவும் இணைய தளம் சோதனை ஓட்டம் ஆரம்பம். jesusinvites.com. விரைவில் முழுமையான ஒளிபரப்பு செயல்படும் இன்ஷா அல்லாஹ். உங்களின் ஆலோசனைகள் ஆக்கங்கள் வரவேற்கப்படுகின்றன. kaliltntj@gmail.com மற்றும் admin.jesusinvites@gmail.com என்ற முகவரிகளுக்கு அனுப்பி உதவுங்கள். . . .



அதாவது, இரண்டு காரணங்களுக்காக இந்த தளத்தை ஆரம்பிப்பதாக கூறுகிறார்.

1) இஸ்லாத்துக்கு எதிராக கிறித்தவ உலகம் எழுப்பும் கேள்விகளூக்கும் அவதூறுப் பிரச்சாரங்களுக்கும் தக்க பதில் அளிக்கவும்
2) கிறித்தவத்தின் பொய்மையை உலகுக்கு உணர்த்தவும்

மேலே குறிப்பிட்ட இரண்டு காரணங்களில், இரண்டாவது காரணம் பற்றி அதிகமாக எழுதுவார் என்று எனக்குத் தெரியும், அதாவது முஹம்மதுவைப் போல மார்க்கத்தின் பெயரை வைத்துக்கொண்டு அட்டூழியங்களைச் செய்த (அ) செய்துக்கொண்டு இருக்கும் ஒரு சில கிறிஸ்தவ பாதிரியார்கள் பற்றி எழுதுவார் என்று எனக்கு நன்றாகத்  தெரியும் ஆனால், முதல் காரணத்தை நிறைவேற்றுவாரா? நாம் கேட்கும் அல்லது இதுவரை கேட்டு இருக்கும் கேள்விகளுக்கு பதிலைத் தருவாரா? என்பதை நாம் பொருத்து இருந்து தான் பார்க்கவேண்டும்.

இப்போதைக்கு, அவரது வாக்குக்களை அப்படியே நம்பி, இந்த புதிய தளத்தை எல்லாரும் வரவேற்போம்.

உமராகிய நான் மன மகிழ்ச்சியோடு, பீஜே அவர்களின் புதிய தளத்தை கிறிஸ்தவ உலகிற்கு அறிமுகம் செய்கின்றேன். 

தளத்தின் பெயர்: ஏசு அழைக்கிறார் (jesusinvites.com)
நோக்கம்: கிறிஸ்தவர்கள் இஸ்லாம் குறித்து கேட்கும் கேள்விகளுக்கு பதிலைத் தருவது, மற்றும் கிறிஸ்தவம் பற்றிய உண்மைகளை உலகிற்கு தெரிவிப்பது.
த‌ள‌ நிர்வாகி அல்ல‌து ஆசிரிய‌ர்: திரு பீஜே அவ‌ர்க‌ள்


2 பீஜே அவர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி

பீஜே அவர்கள் இந்த ஆண்டின் முதல் மாதத்தில், என்னை நேரடிவிவாதத்திற்கு அழைத்தார், நான் மறுத்தேன், எழுத்துவிவாதத்தை மட்டுமே நான் ஒப்புக்கொள்வேன் என்றேன். இதற்கு பீஜே அவர்கள் கீழ்கண்டவாறு இஸ்லாமியர்களுக்கு அறிவுரை கூறினார்:


பீஜே அவர்கள் எழுதியது

இந்த இடத்தில் முஸ்லிம் எழுத்தாளர்களுக்கு முக்கிய ஆலோசனை ஒன்றை நாம் சொல்ல வேண்டியுள்ளது.
முஸ்லிம் அல்லாதவர்கள் இஸ்லாம் குறித்து விமர்சனம் செய்தால் அவர்களை இரண்டு வகையாக பிரித்து பார்க்க வேண்டும். முகவரியோடு விமர்சித்தால் அவர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் அளிக்க வேண்டும். நாமும் சில கேள்விகள் கேட்க வேண்டும். முகவரி இல்லாமல் நீங்கள் குறிப்பிடுவது போல் பெட்டையைப் போல் ஒளிந்து கொண்டு எதையாவ்து எழுதினால் எழுத்துவதற்கு பதில் கொடுக்காமல் நீங்கள் கேள்வி கேட்க வேண்டும்.

தன்னுடைய இன்னொரு கட்டுரையில் எனக்கு நெருக்கடியை உண்டாக்கும் படி(நேரடி விவாதத்திற்கு ஒப்புக்கொள்ளவேண்டும் என்று) அறிவுரை கூறினார்.

பீஜே அவர்கள் எழுதியவை:

இந்த அழைப்பை அனைவருக்கும் தெரியும் வகையில் பரவலாக்குங்கள். அவர்கள் ஒப்புக் கொண்டால் எங்கே தொடர்பு கொள்ள வேண்டும் என்று தெரிவித்தால் நான் சென்று விவாத ஒப்பந்தம் செய்யத் தயார். இதை அவர்களுக்குத் தெரிவித்து வலியுறுத்துங்கள். கிறித்தவ நண்பர்கள் உங்களுக்கு இருந்தால் அவர்கள் மூலமாகவும் நெருக்கடியை ஏற்படுத்துங்கள்

Sources: 


ஆனால், நான் அப்போதே அவருக்கு  பதில்  எழுதினேன், நெருக்கடி எனக்கு அல்ல உங்களுக்குத் தான், மற்றும் இஸ்லாமியர்களுக்கு நீங்கள் சொன்ன அறிவுரையை அவர்கள் நிறைவேற்றுவார்கள், ஆனால் நீங்கள் மட்டும் அதை பின்பற்றப்போவதில்லை, இப்போது தான் வருடம் ஆரம்பித்தது, இவ்வருட முடிவிற்குள் ஒரு முடிவு தெரியவரும் என்று எழுதினேன், அதே போல, பீஜே அவர்கள் கிறிஸ்தவர்களின் கேள்விகளுக்கு தக்க பதில் அளிக்கப்படும் என்றுச் சொல்லி தளத்தை ஆரம்பித்துள்ளார்.

2010 ஜனவரி மாதம் நான் கொடுத்த பதிலை கீழே படிக்கவும்:

உமர் எழுதியது: 

2007ம் ஆண்டிலிருந்து என் எழுத்து விவாத அழைப்பு பரவலாக இணையத்தில் இருக்கிறது, உங்களுக்கு எவ்வளவு நெருக்கடியை எங்கள் கட்டுரைகள் உருவாக்கியிருக்கிறது என்பதை என்னால் உணரமுடிகிறது. 

….தமிழ் கிற்ஸ்தவர்கள் இஸ்லாமிய அறிஞர்களின் விமர்சனங்களை படித்துள்ளார்கள், அதுபோல கிறிஸ்தவ பதில்களையும் படித்துக்கொண்டு இருக்கிறார்கள், இஸ்லாம் பற்றி ஓரளவிற்கு அவர்களுக்கு புரிந்துவிட்டது, எனவே, யாரும் எங்களுக்கு நெருக்கடி கொடுக்கமுடியாது. …


ஈஸா குர்ஆன்

இப்போது தான் எனக்கு புரிந்துள்ளது, நாங்கள் அடித்துக்கொண்டு இருக்கின்ற இடம் சரியான இடம் தான் என்று. 
எங்கள் கட்டுரைகளுக்கு பதிலைத் தராதீர்கள் என்று மற்ற இஸ்லாமியர்களுக்கு எந்த ஆலோசனை கொடுத்தீர்களோ.. அந்த ஆலோசனையை நீங்களே முறித்துவிட்டு, நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு உங்களின் இதே தளத்தில் பதிலைத் தரும் காலம் மிக சமீபமாக உள்ளது.

உங்களின் ஆலோசனையை மற்றவர்கள் பின்பற்றக்கூடும், ஆனால், நீங்கள் அதனை முறித்துவிடும் காலம் வருகிறது....

கேளுங்கள் பீஜே அவர்களே... 

கேள்விகளை கேளுங்கள்... 

எதை வேண்டுமானாலும் கேளுங்கள்... 

ஆனால், ஜாக்கிரதை....... 

நீங்கள் பின்பற்றுவது குர்ஆனை... முஹம்மதுவை... அவர் நடந்துக்கொண்ட விதத்தை...

என்பதை மட்டும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள். 

முடிவுரை: 

ஆக, பீஜே அவர்கள் எழுத்து விவாதத்திற்கு வரமாட்டார்கள். எங்கள் இஸ்லாமிய கட்டுரைகளுக்கு பதில்களைத் தராதீரகள் என்று அறிவுரை கூறியுள்ளார்கள். இந்த அறிவுரையை இவர் பின்பற்ற முடியுமா... காலம் தான் பதில் சொல்லும்... இப்போது தான் 2010 ஆண்டு ஆரம்பித்துள்ளது... இன்னும் அனேக நாட்கள் உள்ளது இவ்வாண்டு முடிவதற்குள்... 

நான் அடிக்கடி எழுதுவதுண்டு "இஸ்லாமியர்களை பேசவிடுங்கள்... இஸ்லாமை விளக்க விடுங்கள்... அவர்கள் அதிகமாக பேச வேண்டும் எழுதவேண்டும், அப்போது தான் நமக்கு எழுத வாய்ப்பு கிடைக்கும்". 

ஆக, நான் சொல்லியது போலவே, பீஜே அவர்கள் எங்கள் கேள்விகளுக்கு தக்க பதில்களை தருவதாக கூறியுள்ளார், பாவம் எவ்வளவு நெருக்கடியோ... நேரடி விவாதத்திற்கு தான் ஒப்புக்கொள்வேன் என்றுச் சொன்னவர், இஸ்லாமியர்களுக்கு அறிவுரை கூறியவர்... இப்போது பதில் தரவந்துள்ளார்.   பீஜே அவர்களே! உங்களை வருக வருக என வரவேற்கிறேன். 

[பின் குறிப்பு: கிறிஸ்தவத்திற்கு தக்க பதில் தருவேன் என்றுச் சொல்லி, வெறும் இந்த பாதிரியார் இப்படி செய்தார்.. அந்த பாதிரியார் அப்படி செய்தார் என்று மட்டும் சொல்லிக்கொண்டு இருந்துவிட்டு, இஸ்லாம் பற்றி, முஹம்மது பற்றி, குர்‍ஆன் பற்றி நாங்கள் எழுப்பிய கேள்விகளை அப்படியே காற்றில் விட்டுவிடப்போகிறீர்கள்....]

"இன்னும் அனேக நாட்கள் உள்ளது இவ்வாண்டு முடிவதற்குள்" என்று நான் எழுதினேன், அதே போல, "உங்கள் புதிய தளம் இவ்வாண்டிற்குள் வந்தமைக்கு மிக்க நன்றி".  எல்லாரும் பீஜே அவர்களுக்கு ஒரு "ஓ"ப்போடுங்க....



3. பீஜே அவர்களின் புதிய தளத்தில் நாம் எதிர்பார்க்கும் விவரங்கள்

பீஜே அவர்கள் தன் தளத்தில் "கிறிஸ்தவர்களின் கேள்விகளுக்கு அவதூறுகளுக்கு தக்க பதில் தருவதாக" வாக்கு கொடுத்துள்ளார். ஆகையால், மற்ற இஸ்லாமிய தளம் போல அல்லாமல், தம்முடைய அதிகார பூரவமான தளத்தில் எழுதியது போல அல்லாமல் கீழ்கண்ட வழியில் நேர்மையாக நடந்துக்கொள்வார் என்று தமிழ் கிறிஸ்தவ உலகம்  அவரிடமிருந்து எதிர்ப்பார்க்கிறது.

1) எங்களுக்கு பதில் தரும் போது, எங்கள் வரிகளை பதிக்கும் போது, எங்கள் கட்டுரையின் தொடுப்பு என்ன என்று குறிப்பிட்டு பதில் தருவார் என்று எதிர்பார்க்கிறோம்.

2) அவருடைய புதிய தளத்தில் படிக்கப்போகும் வாசகர்கள் வெறும் இஸ்லாமியர்களாக மட்டும் இருக்கமாட்டாரக்ள், அவர்கள் அனைத்து தர மக்கள் இருப்பார்கள். எனவே, அவர் சொல்வது உண்மையா இல்லையா என்பதை சரிபார்க்க, எங்கள் வரிகளை/கட்டுரைகளை மேற்கோள் காட்டி பதில் சொன்னால், நியாயமானதாக இருக்கும்.

3) இஸ்லாமியர்கள் நேர்மையாக நடந்துக்கொள்கிறார்கள் என்று மேடையில் சொல்வது மட்டுமல்ல, அதனை செயலில் காட்ட முஹம்மதுவை பின்பற்றுபவர்கள் கடமைப்பட்டுள்ளார்கள்.

4) பீஜே அவர்களின் கட்டுரையை அவரது தளத்தில் படிக்கும் கிறிஸ்தவர்கள் அதற்கான பதிலை நாங்கள் கொடுத்து இருந்தால், அதனை (அ) அதன் தொடுப்பை  அவர்கள் தளத்தில் பின்னூட்டமிட அனுமதி அளிப்பார் என்று நம்புகிறேன், ஏன்னெறால், அப்போது தான் அவரது தளத்தில் படிக்கும் இஸ்லாமியர்களுக்கும் இரண்டு வாதங்களையும் படித்து சரி பார்க்கமுடியும்.

5) தங்கள் தளத்தில் படிக்கவரும் வாசகர்களை ஏமாற்றாமல் இருக்கவேண்டுமானால், நாங்கள் கொடுத்த பதிலின் தொடுப்பையும் கொடுக்கவேண்டும்.

6) உங்கள் தொடுப்பை நாங்கள் கொடுக்கமாட்டோம், நாங்கள் உங்கள் வரிகளை பதித்து எங்கள் பதிலை மட்டும் தருவோம் என்று இதர கோழையான இஸ்லாமிய தளங்கள் சொல்வது போல, பீஜே அவர்களும் சொல்வாரானால்... அவருக்கு இஸ்லாம் மீது நம்பிக்கை இல்லை... அல்லது உண்மைக்கு முன்னால் இஸ்லாம் தோற்றுவிடும் என்று பயப்படுகிறார் என்று அர்த்தம். ஒரு தளத்தின் தரம், அந்த தளம் முன்வைக்கும் ஆதாரங்கள் மீது சார்ந்துள்ளது என்பதை கவனத்தில் கொள்ளவும்.

7)  உங்கள் புதிய தளம் பற்றி நான் ஏன் கிறிஸ்தவர்களுக்கு அறிமுகம் செய்கின்றேன் என்றால், எனக்கு கிறிஸ்தவம் மீது நம்பிக்கை உண்டு, பைபிள் பற்றி நம்பிக்கை உண்டு, ஆகையால், பயப்படாமல் என் கட்டுரைகளில் யாருக்கு பதில் தருகிறேன், அந்த தளத்தின் தொடுப்பு என்ன என்று எழுதுகிறேன். அதே போல, நீங்களும் செய்வீர்கள் என்று தமிழ் கிறிஸ்தவ உலகம் நம்புகிறது.

8) இது எங்கள் எதிர்ப்பார்ப்பு மட்டுமல்ல, இஸ்லாம் தான் சரியான மார்க்கம் என்று நம்பிக்கொண்டு இருக்கும் ஆயிரக்கணக்கான படித்த அறிவுள்ள இஸ்லாமியர்களின் நம்பிக்கையும் இது தான். இரு தரப்பினரின் வாதம் படித்த பிறகு உண்மை தெரியவரும். இதனை பீஜே மறுக்கமாட்டார் என்று நம்புகிறேன்.

எனவே, பீஜே அவர்கள் தங்கள் தளத்தில் நேர்மையனவராக நடந்துக்கொள்வார் என்ற நம்பிக்கையோடு நாம் முன் செல்லலாம்.


4 எழுத்து விவாதத்திற்கு பீஜே அவர்கள் இப்போது தயாரா?

நான் எழுத்துவிவாதத்திற்கே வரமாட்டேன் என்று அடம்பிடித்தவர், முகவரி இல்லாமல் எழுதும் கிறிஸ்தவர்களுக்கு ஒரு பதில் கூட‌  எழுதவேண்டாம் என்று சொன்னவர், வெறும் கேள்விகளை மட்டும் கேட்டுக்கொண்டே இருங்கள் என்றுச் சொன்னவர்,  இப்போது கிறிஸ்தவ கேள்விகளுக்கு தக்க பதில் தருவதாக சொல்லியுள்ளார்.

இனியாவது.. எழுத்து விவாதத்திற்கு வருவாரா?

அப்படி வருவதாக இருந்தால்.. கீழ்கண்ட கேள்விகளில் எந்த தலைப்பையும் தெரிந்தெடுத்துக்கொண்டு விவாத கட்டுரை எழுதினால் நான் பதில் தர தயாராக இருக்கிறேன்.

1) முஹம்மது ஒரு நபியா (தீர்க்கதரிசியா) VS   இயேசு இறைமகனா?

2) குர்‍ஆன் இறைவேதமா VS    பைபிள் இறைவேதமா?

3) வன்முறையை தூண்டுவது குர்‍ஆனா அல்லது பைபிளா?

4) முஹம்மது ஒரு பாவியா VS   இயேசு பரிசுத்தரா?

5) இஸ்லாமில் பெண்களின் நிலை VS கிறிஸ்தவத்தில் பெண்களின் நிலை

6) இஸ்லாமிய சொர்க்கம் VS கிறிஸ்தவ சொர்க்கம் 

7) மனிதர்கள் பின்பற்றத்தகுந்த மாமனிதர் முஹம்மதுவா? அல்லது கிறிஸ்துவா?

8) இஸ்லாம் ஒரு தீவிரவாத மார்க்கமா VS கிறிஸ்தவம் ஒரு தீவிரவாத மார்க்கமா?


இவ்வளவு தான் தலைப்புகள் என்று எண்ணவேண்டாம்... வேறு தலைப்புக்களையும் நீங்கள் தெரிந்தெடுத்துக்கொள்ளலாம்.. ஆனால், இரண்டு பக்கமும் அதைப் பற்றி விவாதிக்கும் வண்ணம் அந்த தலைப்பு இருக்கவேண்டும்.  


5. முடிவுரை

பீஜே அவர்களின் புதிய தளத்தை பார்வையிட்டபோது, தற்கால கிறிஸ்தவ ஊழியர்களில் சிலர் செய்யும் அட்டூழியங்கள் பற்றி, பண கையாடல் பற்றி படங்களோடு எழுதியிருந்தார், நல்லது, இது பீஜே என்ற தனி மனிதருக்கு இருக்கும் உரிமை. இயேசுவின் அடியார்களில் ஒரு சிலர் செய்யும் அட்டகாசங்கள் பற்றி படங்கள் போட்டு எழுதியிருந்தார், அதே போல, அல்லாஹ்வின் அடியார்கள் (முஹம்மது மற்றும் இன்றுள்ள அடியார்கள்) செய்த‌/செய்யும் அட்டகாசங்களை படங்களோடு நாங்கள் எழுதினால் நீங்கள் மனம் வருந்த மாட்டீர்கள் என்று நம்புகிறேன். ஏனென்றால், சமத்துவம் பற்றி, சம உரிமை பற்றி அதிகம் பேசுபவர்கள் நீங்கள் என்பதால் இப்படி உங்களைப் பற்றி நாங்கள் நினைப்பது சரியாகத் தான் இருக்கும்.

பீஜே அவர்கள் எடுத்த முடிவு, மிகவும் உயர்ந்தது, அதாவது இஸ்லாம் பற்றி எழுத்து மூலமாக கிறிஸ்தவர்களுக்கு கேள்வி கேட்க/பதில்கள் தர முன்வந்திருப்பது அதிக ஆபத்தானது, இருந்தாலும் பீஜே வந்துள்ளார் என்றால் இதன் அறுவடையை நிச்சயமாக அறுப்பார்.

கடைசியாக, உங்களின் புதிய "இயேசு அழைக்கிறார்" தளத்தை வரவேற்று இந்த அறிமுக கட்டுரையை முடிக்கிறேன்.

இப்படிக்கு,
உங்கள் வாசகன் உமர்





--
10/27/2010 12:05:00 PM அன்று ஈஸா குர்-ஆன் - Isa Koran இல் Isa Koran ஆல் இடுகையிடப்பட்டது


Saturday, October 16, 2010

குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்

 

குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள் 

Slave-girls as sexual property in the Quran

ஆசிரியர்: ஜேம்ஸ் எம். அர்லாண்ட்சன்

அடிமைப் பெண்களின் அடிமைத்தன வாழ்க்கை முழுவதும் அவர்களோடு தன்னுடைய மனிதர்களை செக்ஸ் வைத்துக் கொள்ள அனுமதித்து, இந்தச் செயலை அவர்களுடைய புனித புத்தகத்தில் தொகுத்து வழங்கியிருக்கும் ஒரு மதத்தை நீங்கள் தழுவ விரும்புவீர்களா? 

மேற்கத்திய நாடுகளிலும் (இதர நாடுகளிலும்) இஸ்லாமுக்கு மதம் மாறும் அநேகர் பெண்களாயிருக்கிறார்கள். இரண்டு வருடங்களுக்கு முன்பு இஸ்லாமுக்கு மாறினேன் என்று சொல்லும் ஒரு பெண்ணின் மின்னஞ்சல் எனக்கு வந்தது. இந்த மார்க்கத்தின் எல்லா விவரங்களையும் இந்தப் பெண்கள் அறிந்திருந்தால் இஸ்லாமுக்கு மாறுவார்களா? பெண்கள் இந்த ஆபத்தான முடிவை எடுப்பதற்கு முன் அறிவுடமையோடு சற்று நின்று இரண்டாம் முறை யோசிக்க வெண்டும். (ஆனால் இஸ்லாமை விட்டு மறுபடியும் திரும்பிச்செல்வது என்பது அநேக இஸ்லாமிய நாடுகளில் மரணத்தண்டனைக்கு உரியதாக உள்ளது) 

வெறும் ஐந்து தூண்களோடு மட்டும் நின்றுவிடாமல், இஸ்லாம் இன்னும் அதிக ஆழமாக செல்கிறது. அதன் புனித வார்த்தைகளில் விரும்பத்தகாத‌ அநேக உண்மைகள் ஒளிந்து கொண்டிருக்கின்றன‌. இந்த கட்டுரையின் நோக்கம் என்னவெனில் இப்படிப்பட்ட உண்மைகளில் இன்னும் ஒன்றை வெளிக் கொண்டுவந்து, அதன் மூலம் எல்லா நிகழ்வுகளையும் மக்கள் முழுமையாக அறிந்துக்கொள்ள வகை செய்வது மற்றும் இதன் மூலம ஒரு சரியான முடிவை இஸ்லாமியர்கள் எடுக்க உதவுவதாகும். 

இயேசு ஒரு சிறந்த வழியைக் காண்பித்து சென்று இருக்கும் போது, அதன் பிறகு அறுநூறு வருடங்களுக்குப் பின்பு, ஒரு உண்மையான இறைவன் பின்வரும் வசனங்களை குர்‍ஆனில் இறக்கியிருப்பாரா?

அமைதி நேரங்களில் அடிமைப் பெண்களோடு செக்ஸ்:
Sex with slave-girls in times of peace:

கி.பி 622 ல் தன்னுடைய சொந்த நகரத்திலிருந்து மதினாவிற்கு முஹம்மது ஹிஜ்ரா அல்லது இடம் பெயர்நது செல்வதற்கு முன்பு, அவர் மக்காவில் இருக்கும் போது இந்த 23ம் சூரா (அதிகாரம்) வெளிப்படுத்தப்பட்டது. அவருடைய பணியின் ஆரம்பத்தில் ஒரு அளவிற்கு அவர் பாடுகளை அனுபவித்த போதும் அவர் யார் மீதும் போர் தொடுக்கவில்லை, எனவே இவை அமைதியின் வருடங்களாக இருக்கிறது. இந்த சூராவைப் பற்றிய சரித்திர பின்னணி மற்றும் விரிவுரையை அறிந்துக்கொள்ள, இந்த தொடுப்பை சொடுக்கவும்.

சூரா 23:5-6 ல் குர்‍ஆன் சொல்லுகிறது:

முஹம்மது ஜான் மொழியாக்கம்:

மேலும், அவர்கள் தங்களுடைய வெட்கத் தலங்களைக் காத்துக் கொள்வார்கள். ஆனால், அவர்கள் தங்கள் மனைவிகளிடமோ அல்லதுதங்கள் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடமோ தவிர - (இவர்களிடம் உறவு கொள்வது கொண்டும்) நிச்சயமாக அவர்கள் பழிக்கப்படமாட்டார்கள். 

பீஜே மொழியாக்கம்: 

தமது மனைவியர் அல்லது தமது அடிமைப் பெண்களிடம் தவிர, தமது கற்பைக் காத்துக்கொள்வார்கள், அவர்கள் பழிக்கப்பட்டோர் அல்லர் 

Maududi Translation: 

5 [Most certainly true believers] . . . guard their private parts scrupulously, 6 except with regard to their wives and those who are legally in their possession, for in that case they shall not be blameworthy. (Sayyid Abul A'La Maududi, The Meaning of the Quran, vol. 3, p. 237)

இங்கே முக்கியமான வார்த்தைகள் "தங்கள் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்கள் (those who are legally in their possession)" என்பதாகும். மௌதுதி (Maududi: மரணம் - 1979) என்பவர் மிகவும் மதிக்கப்பட்ட‌ குர்‍ஆன் விரிவுரையாளர், அவர் இவ்வார்த்தைகளுக்கு பொருள் கூறுகிறார், அதாவது "அடிமைப் பெண்களோடு செக்ஸ் வைத்துக் கொள்வது நியாயமானது" என்று விளக்கிக் கூறுகிறார். 

மௌதுதி (Maududi) எழுதுகிறார்:

இரண்டு விதமான பெண்களிடமிருந்து தங்கள் இரகசிய உறுப்புகளை மறைத்து கொள்ள வேண்டியதில்லை: 

அ) மனைவிகள் 
ஆ) ஒருவனுடைய நியாயமான பங்கிலிருக்கும் பெண்கள், எ.கா அடிமைப் பெண்கள். 

ஆக, இந்த வசனமானது ஒருவன் தன் மனைவியினிடத்தில் செக்ஸ் வைத்துக் கொள்வது போல தன் அடிமைப் பெண்ணிடமும் செக்ஸ் வைத்துக் கொள்ளலாம், அதற்கு அடிப்படை திருமணம் அல்ல தனக்கு சொந்தமான அடிமை என்பதாகும். திருமணம் தான் நிபந்தனை என்று இருந்திருந்தால் அடிமைப் பெண்களும் மனைவிகளில் ஒருவராக ஏற்கப்பட்டிருப்பார்கள், அவர்களை தனியே பிரித்துக் கூற வேண்டியிருக்காது. 

Two categories of women have been excluded from the general command of guarding the private parts: (a) wives, (b) women who are legally in one's possession, i.e. slave-girls. Thus the verse clearly lays down the law that one is allowed to have sexual relation with one's slave-girl as with one's wife, the basis being possession and not marriage. If marriage had been the condition, the slave-girl also would have been included among the wives, and there was no need to mention them separately. (Ibid. p. 241, note 7)

அடிமை முறையை மட்டுமல்ல, ஆண் எஜமான்கள் தங்கள் பெண் அடிமைகளிடம் செக்ஸ் வைத்துக் கொள்வதையும் முஹம்மதுவே ஆதரிக்கிறார் என்பதை மௌதுதி (Maududi) கண்டுக்கொள்ளாமல் விடுவது அல்லது விமர்சிக்க மறுப்பதுதான் இந்தப் பிரிவின் முக்கியமான குறிப்பு ஆகும். இஸ்லாமை அதிகமாக பாதிக்காத வண்ணம் எப்படி மௌதுதியும் மற்ற உண்மையான இஸ்லாமியர்களும் தங்கள் நபியைப் பற்றி விமர்சிக்க முடியும்? ஆனால், முஸ்லீம்கள் மனுக்குல நன்மையை கருத்தில் கொண்டு தெளிவாக சிந்தித்தால், கண்டிப்பாக விமர்சிப்பார்கள். 

சூரா 70:29-30ம் வசனங்களும் மக்காவில் வெளிப்படுத்தப்பட்டு கிட்டத்தட்ட சூரா 23:5-6 ஐப் போலவே குறிப்பிடுவதை கவனிக்கலாம். ஆண்கள் தங்கள் அந்தரங்க உறுப்புகளை எல்லாரிடமிருந்து மறைத்துக் கொள்ள வேண்டும் ஆனால் மனைவிகளிடம் மற்றும் அடிமைப் பெண்களிடமல்ல. இதன் பொருள் என்னவென்றால் - இந்த இரண்டு 'வகை" (மௌதுதியின் வார்த்தைகள்)ப் பெண்களிடம் செக்ஸ் வைத்துக் கொள்ளலாம் என்பதாகும். 

இந்த வசனங்களை பல்வேறு ஆங்கில மொழிபெயர்ப்புகளில் வாசிக்க விரும்பும் வாசகர்கள் இந்த இணைதளத்திற்கு செல்லவும். இந்த மற்றொரு இணைய தளத்தில் மூன்று ஆங்கில மொழியாக்கங்கள் இருக்கிறது.

போர்க் காலத்தில் அடிமைப் பெண்களோடு செக்ஸ் வைத்துக் கொள்வது:
Sex with slave-girls in times of war:

இப்போது முஹம்மது மக்காவிலிருந்து இடம் பெயர்ந்து மதினாவிற்கு சென்றுவிட்டார். நம்முடைய அடுத்து குர்‍ஆன் வசனம் காணப்படும் சூரா 4 வெளிப்படுவதற்குள் அவர் நிறைய போர்களையும் தாக்குதலையும் நடத்திமுடித்திருந்தார். உதாரணமாக, கி.பி 624 ல் பத்ருப் போரில் அவர் மக்காவினர்களோடு சண்டையிட்டார் மீண்டும் கி.பி 625 ல் மக்காவினர்களோடு உஹுத் போரில் சண்டையிட்டிருந்தார். மேலும் அவர் கி.பி 624 ல் யூத குலமான குவாய்னுக்காவையும் கி.பி 625 ல் நதீர் என்ற இனத்தையும் நாட்டை விட்டு அகற்றியிருந்தார். ஆண் எஜமான்கள் தங்கள் பெண் அடிமைகளோடு செக்ஸ் வைத்துக் கொள்ளும் இந்தக் கொள்கையை அவர் மதினாவிற்கு எடுத்துச் சென்றார். யுத்தத்தில் பிடிக்கப்பட்ட பெண் கைதிகளை அடிமைகளாக்கி அவர்களோடு தன்னுடைய வீரர்களை செக்ஸ் வைத்துக் கொள்ள அனுமதித்தார். இந்த சூராவைப் பற்றிய சரித்திர பின்னணி மற்றும் விரிவுரையை அறிந்துக்கொள்ள, இந்த தொடுப்பை சொடுக்கவும்.

சூரா 4:24 ல் குர்‍ஆன் சொல்லுகிறது: 

முஹம்மது ஜான் மொழியாக்கம்

இன்னும் (போரில் பிடிபட்டு உங்கள் ஆதரவிலிருக்கும்) அடிமைப் பெண்களைத் தவிர, கணவனுள்ள பெண்களை நீங்கள் மணமுடிப்பது விலக்கப்பட்டுள்ளது.… 

பீஜே மொழியாக்கம்: 

உங்கள் அடிமைப் பெண்களைத் தவிர கணவனுள்ள பெண்களும் (மணமுடிக்க தடுக்கப்பட்டுள்ளனர்... (மற்றும் சூரா 4:3 and 33:50யும் பார்க்கவும்) 

Maududi Translation:

And forbidden to you are wedded wives of other people except those who have fallen in your hands (as prisoners of war) . . . (Maududi, vol. 1, p. 319). (See also Suras 4:3 and 33:50)

போரில் பிடிப்பட்ட பெண்கள், திருமணமாவர்களாக இருந்தாலும் சரி, திருமணமாகாதவர்களாக இருந்தாலும் சரி, தங்கள் ஆண் எஜமானர்களை திருமணம் செய்துக்கொள்ள கட்டாயப்படுத்தப்பட்டனர். அதாவது, அந்த எஜமான்கள் தங்கள் அடிமைப்பெண்களிடம் (சொத்துக்கள் - இஸ்லாமின் படி அடிமைப்பெண்கள் எஜமான்களின் உடமைகள்) உடலுறவு வைத்துக்கொள்ளலாம். 

மௌதுதி இந்த வசனத்திற்கான தன்னுடைய விளக்கத்தில் முஸ்லீம் புனித விரர்கள் போரில் தாங்கள் பிடித்த பெண் கைதிகளை அவர்களுடைய கணவர்கள் உயிரோடிருந்தாலும் திருமணம் செய்வது நியாயமானது என்று கூறுகிறார். ஆனால் கணவன்மார்களையும் மனைவிகளோடு சேர்த்து சிறைப்பிடித்திருந்தால் என்ன நடக்கும்? மௌதுதி ஒரு சட்டக் கருத்தை (School of Law) சுட்டிக் காட்டுகிறார், இச்சட்டத்தின்படி முஸ்லீம்கள் அவர்களைத் திருமணம் செய்யக் கூடாது, ஆனால் வேறு இரண்டு சட்டக் கருத்துகளோ, சிறைபிடிக்கப்பட்ட கணவன் மனைவிக்கு இடையில் திருமண உறவு முறிக்கப்பட்டு விட்டது என்று கூறுகின்றன. (குறிப்பு 44) 

ஆனால் இந்தக் கொடுமையைப் பற்றிய விவாதம் ஏன் எழும்புகிறது? நீதியை புரிந்து கொள்பவர்களுக்கு பதில் தெளிவாக இருக்கிறது. போரில் பிடிக்கப்பட்ட திருமணமான பெண் கைதிகளுக்கும் அவர்களை பிடித்த ஆண் சிறையாளர்களுக்கும் இடையில் எந்த செக்ஸ் உறவும் இருக்க கூடாது. உண்மையில் பெண் சிறை கைதிகளுக்கும் அவர்களுடைய ஆண் எஜமான்களுக்கும் இடையில் எந்த சூழ்நிலையிலும் செக்ஸ் உறவு இருக்கக் கூடாது. 

இந்த பாலியல் பலாத்காரம் அநீதியானது மற்றும் கண்டிக்கத்தக்கது, ஆனால் அல்லாஹ் அதில் விருப்பமற்றவாராக இருக்கிறார் - இப்படித்தான் குர்‍ஆன் சொல்லுகிறது. 

குர்‍ஆன் ஒழுங்கீனமானதை வெளிப்பாடாக அளித்திருக்கிறது என்பதை இந்த ஹதீஸ் நினைவுபடுத்துவதாக இருக்கிறது. 

ஹதீஸ்கள் என்பது குர்‍ஆனுக்கு வெளியே முஹம்ம‌துவின் வாழ்க்கை மற்றும் நடவடிக்கைகளைப் பற்றி விளக்குவதாகும். மிகவும் நம்பிக்கைக்குரிய தொகுப்பாளர் மற்றும் பதிப்பாளர் புகாரி என்பவராவார் (மரணம் 870) . 

முஸ்லீம் ஜிஹாதிகள் தாங்கள் சிறைப்பிடித்த பெண்கள் திருமணம் ஆனவர்களாயிருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர்களோடு செக்ஸ் வைத்துக் கொண்டார்கள் என்று குறிப்பிடுகிறது. பின்வரும் பத்தியில் குமுஸ்(Kumus) என்பது கொள்ளையில் ஐந்தில் ஒரு பங்கு. 

முஹம்ம‌துவின் சொந்தக்காரரும் மருமகனுமான அலி ஒரு ஒய்யாரக் குளியல் ஒன்றை சற்றே முடித்தார். ஏன்?

பாகம் 4, அத்தியாயம் 64, எண் 4350

புரைதா இப்னு ஹுஸைப்(ரலி) அறிவித்தார் 

நபி(ஸல்) அவர்கள் காலித் இப்னு வலீத்(ரலி) அவர்களிடம் 'குமுஸ்' நிதியைப் பெற்றுவர அலீ(ரலி) அவர்களை அனுப்பினார்கள். அலீ(ரலி) (போர்ச் செல்வத்தில் தமக்கென அடிமைப் பெண்ணை எடுத்துக் கொண்ட பின் [அப்பெண்ணோடு உடலுறவு கொண்டுவிட்டு]) குளித்துவிட்டு வந்தார்கள்…. 

அடைப்பு குறிக்குள் [ ] உள்ளதை நாம் எழுதினோம். 

The Prophet sent Ali to Khalid to bring the Khumus (of the booty) and . . . Ali had taken a bath (after a sexual act with a slave-girl from the Khumus).

அலியின் இந்த செயலுக்காக அவரை வெறுத்த ஒரு மனிதனுக்கு முஹம்ம‌துவின் பதில் என்ன?

அவர்கள் நான் கோபமடைந்து, காலிதிடம், 'இவரை நீங்கள் பார்க்கமாட்டீர்களா?' என்று கேட்டேன். நாங்கள் நபி(ஸல்) அவர்களிடம் சென்றபோது, நான் அவர்களிடம் அதைச் சொன்னனே;. அதற்கு அவர்கள், 'புரைதாவே! நீ அலீ மீது கோபமடைந்து இருக்கிறாயா?' என்று கேட்க நான், 'ஆம்!'' என்று பதிலளித்தேன். அதற்கு அவர்கள், 'அவரின் மீது நீ கோபம் கொள்ளாதே! ஏனெனில், அவருக்கு 'குமுஸ்' நிதியில் அதை விட அதிக உரிமையுள்ளது'' என்று கூறினார்கள்.

இவ்வாறு கொள்ளையின் ஐந்தில் ஒரு பங்காக இருக்கும் அடிமைப் பெண்கள் உடலுறவு சொத்துக்களாக நடத்தப்படலாம் என்று முஹம்ம‌து நம்பினார். அலி ஒரு முஸ்லீம் ஹீரோ. அவர் முஹம்ம‌துவின் முதல் மனைவி கதீஜாவிற்கு பிறந்த முஹம்ம‌துவின் மகள் பாத்திமாவின் கணவர். எனவே உலகத்திற்கே முன்மாதிரியான நபி தன்னுடைய மருமகன் ஒரு அடிமைப் பெண்ணிடம் செக்ஸ் வைத்துக்கொண்டதை எதற்காக கண்டிப்பார்? ஏனெனில் அடிமைப் பெண்கள் எல்லாம் ஒரு அருமையான செக்ஸ் விளையாட்டு தானே. அப்படித்தான் குர்‍ஆன் சொல்லுகிறது. 

மேலும் புனித ஜிஹாதிகள் தாங்கள் பிடிக்கும் பெண் அடிமைகளிடம் விந்து சேர்வதை (coitus interruptus) தடுக்கமாட்டார்கள். ஒருவர் எதிர்பார்க்கும் காரணத்திற்காக அல்ல மாறாக எளிய நீதிக்காக. 

இராணுவ முகாம்களில் இருக்கையில், மனைவிகளை விட்டுப் பிரிந்திருக்கையில், முஸ்லீம் ஜிகாதிகள் "அரபு கைதிகளிலிருந்த பெண்களை விரும்பினோம் விரதத்துவம் எங்களுக்கு கடினமாக இருந்தது நாங்கள் விந்து வெளியேற்றம் செய்ய விரும்பினோம்" என்று கூறினார்கள். அவர்கள் இதைப் பற்றி புனித நபியிடத்தில் கேட்டார்கள், அவர் இங்கு என்ன சொல்லவில்லை என்று கவனிப்பது மிக முக்கியமானதாகும். 

அவர் அவர்களை ஹராம் என்று கூறி எந்த விதமான செக்ஸ் செயலும் தவறு என்று தடைசெய்யவோ கடிந்துகொள்ளவோ இல்லை. மாறாக அவர் விதியைப் பற்றிய தன்னுடைய ஆழ்ந்த இறையியலில் மூழ்கிப்போனவராக:

பாகம் 3, அத்தியாயம் 49, எண் 2542

இப்னு முஹைரீஸ்(ரஹ்) அறிவித்தார். 

.... அதற்கு, 'நீங்கள் அதைச் செய்யாமலிருந்தால் தவறேதுமில்லையே! மறுமைநாள் வரை தவறேது மில்லையே! மறுமை நாள் வரை (இறைவிதிப்படி) உருவாக வேண்டிய எந்த உயிரும் கட்டாயம் உருவாகியே தீரும்" என்று பதிலளித்தார்கள். 

It is better for you not to do so [practice coitus interruptus]. There is no person that is destined to exist, but will come to existence, till the Day of Resurrection. (Bukhari; for parallel hadiths go hereand here)

இந்த பதிலிலிருந்து கிடைக்கும் விவரங்கள் என்னவென்றால், இதை விசாரிக்கும் முஸ்லீம்கள் விந்து வெளியேற்றம் செய்வதை நிறுத்த வேண்டும் பதிலாக செக்ஸ் உடைமைகளாக இருக்கும் பெண்களிடம் எப்படியாவது நடந்துக்கொள்ளலாம், இது தான் முஹம்மதுவின் பதில். யார் பிறக்க வேண்டும் என்பதை விதி நிர்ணயிக்கும். மிகவும் நெறிகெட்ட இந்த செயலை தடுக்க வேண்டிய நேரத்தில் முஹம்மது இதை தடுக்கவில்லை. 

எந்த இராணுவத்திலும் சில‌ சிப்பாய்களிடம் இருக்கும் ஒரு தவறான காரியம், பெண்களை கற்பழிப்பதாகும். எல்லா இராணுவத்திலும் இந்த குற்றத்தை செய்யும் குற்றவாளிகள்(கிரிமினல்கள்) உள்ளனர். ஆனால், இந்த கற்பழிப்பை சட்டமாக்கி, அதனை தங்கள் புனித புத்தகத்திலும் வசனமாக இறக்கிவைத்திருப்பது மிகவும் வேதனையான விஷயமாகும். 

இஸ்லாம் கற்பழிப்பதை நியாயப்படுத்தி சட்டமாக்கியிருக்கிறது. 

குர்‍ஆன் இந்த பாலியல் குற்றத்தை தெளிவான முறையில் : எந்த சந்தர்ப்பத்திலும் நீங்கள் அடிமைப் பெண்களோடு உடலுறவு கொள்ளக் கூடாது என்றுச் சொல்லி, நீக்காமலிருப்பது வருத்தத்திற்குரியது.

முடிவுரை: 

உள்நாட்டு கலவரத்திற்கு முன் அமெரிக்க எஜமான்கள் தங்கள் அடிமைகளோடு பாலியல் குற்றங்கள் புரிந்ததார்களே (Civil War -1861-1865), அப்படியிருக்க இஸ்லாமைக் குற்றப்படுத்த இந்த கிறிஸ்தவர்களும், அமெரிக்கர்களும் யார் என்று கேட்கின்றனர் (உண்மையில் கிறிஸ்தவர்களும், அமெரிக்கர்களும் ஒருவரல்ல). 

பதில்: அந்த இரண்டு சந்தர்ப்பங்களும் வெவ்வேறானவை. முதலாவது அமெரிக்காவை தனக்கு புனித வெளிப்பாடு கிடைத்தது என்று சொல்லி முஹம்மது உருவாக்கிய இஸ்லாமிய சமுதாயத்தோடு ஒப்பிடுவது தவறாகும். அதைவிடச் சிறந்தது, ஒரு மார்கத்தை தோற்றுவித்த ஒருவரோடு (இயேசுவோடு) மற்றொரு மார்க்கத்தை உருவாக்கியவரை (முஹம்மதுவோடு) ஒப்பிடுவது சரியானதாகும். 

இரண்டாவதாக புதிய ஏற்பாட்டில் எந்த ஒரு இடத்திலும் தேவன் ஆண்களுக்கு (கிறிஸ்தவனுக்கோ, அல்லது தனி மனிதனுக்கோ) - அடிமைப் பெண்களோடு செக்ஸ் வைத்துக் கொள்ள அனுமதியளிக்கவில்லை. இது இயேசுவின் ஊழியத்தின் நோக்கத்தையும், இயேசுவை பழைய ஏற்பாட்டின் நிறைவேறுதலாக புரிந்து கொண்ட புதிய ஏற்பாட்டு ஆக்கியோன்களின் எழுத்துக்களையும் மீறுவதாக இருக்கும். ஒருவேளை அமெரிக்கர்கள் தவறுதலாக இந்தக் குற்றத்தை செய்திருப்பார்கள் என்றால் அவர்கள் தேவனுடைய சட்டத்தை பின்பற்றாதவர்களாவார்கள். ஆனால் குர்‍ஆன் இந்தக் காரியத்தை நியாயப்படுத்தி சட்டமாக்கியுள்ளது. இந்த புத்தகம் காபிரியேல் மூலமாக முஹம்மதுவிற்கு அல்லாஹ்விடத்திலிருந்து இறக்கிவைக்கப்பட்ட புனித புத்தகமாகவும் கூறப்படுகிறது. நன்றாக சிந்திக்கும் எந்த ஒரு மனிதனும் ஒரு கொடிய நிர்ப்பந்தமான நிலையிலிருக்கும் (அடிமைகளாக இருக்கும்) பெண்களோடு செக்ஸ் வைப்பது தவறு என்று காண்பான். 

இஸ்லாமுக்கு இருக்கும் இந்த முக்கியமான பிரச்சனை, அமெரிக்க வரலாற்றைக் கேள்வி கேட்பதைவிட பெரிதானதாகும். 

பின்வரும் இந்தக் கேள்வி கேட்கப்பட்டு அதற்கு பதிலளிக்கப்பட வேண்டும்: 

இஸ்லாமியர்களின் புனித நூல் குர்‍ஆனும், நல்ல நபி என்று கருதும் முஹம்மதுவும், இஸ்லாமும் மனித சமுதாயத்தை ஒரு புதிய நூற்றாண்டிற்குள் சரியான முறையில் நடத்திச் சென்று வழி காட்ட முடியுமா?

இஸ்லாமுக்கு வெளியே இருந்து இந்த இஸ்லாமிய சட்டங்களை தகுந்த சான்றுகளோடு ஆராய்ந்து பார்க்கும் நமக்கு, "வாழ்நாளெல்லாம் இஸ்லாமுக்கே பக்தியாக இருக்கவேண்டும்" என்ற கோட்பாடுகளினால் குருடர்களாக்கப்படாத நமக்கு, இந்த வலிமையான கேள்விக்கு பதில் தெளிவாக உள்ளது. அதாவது, இந்த புதிய நூற்றாண்டில் கண்டிப்பாக இஸ்லாமிய சட்டங்கள் மனித இனத்தை வழிநடத்துவதற்கு தகுதியுடையவைகள் அல்ல‌ என்பதாகும். 

எனவே தெளிவாக சிந்திக்கும் எல்லா முஸ்லீம்களும் மார்க்கதின் மூலம் அடக்குபவர்களை தூக்கியெறிந்து விட்டு முதலாம் உலகப்போருக்கு பின் துருக்கியில் ஏற்பட்டது போல ஒரு சுய புரட்சியை உண்டாக்க வேண்டும். ஒருவேளை ஈரானிலே இது நடக்கலாம், ஈராக் தங்கள் ஷரியா சட்டத்தை நீக்கிவிட்டு மக்களாட்சிக்கு நேராக தங்கள் அடியை எடுத்து வைக்கலாம். அவர்கள் இந்த குர்‍ஆனையும் முஹம்மதுவின் முன் உதாரணங்களையும் விட்டு வெளியேற வேண்டும். 

இப்படிப்பட்ட புரட்சி ஏற்படும் வரைக்கும், மார்க்கத் தலைவர்கள் குர்‍ஆனிலும் ஹதீஸிலும் உள்ள பல வசனங்களை துறக்கும் வரையிலும், இந்த சமயத்திற்கு வெளியே இருக்கும் நாம் முஹம்மதுவின் மார்க்கத்தை அவநம்பிக்கை கொள்ள அனுமதிக்கப்படுகிறோம். 

இந்த மார்க்கத்திற்கு மாற நினைக்கும் பெண்கள் கொஞ்சம் நின்று ஒன்றுக்கு இரண்டு தடவை நிதானமாக யோசித்து முடிவெடுக்க வேண்டும். 

துணைச் சேர்க்கைகள்:

1. MUHAMMAD AND THE FEMALE CAPTIVES

இந்த கட்டுரையானது யுத்தத்தில் பிடிக்கப்படும் பெண்களோடு செக்ஸ் வைப்பது பற்றிய குர்‍ஆன் மற்றும் ஹதீஸ் வசனங்களை குறிப்பிடுகிறது. மேலும் நவீன இஸ்லாமிய அறிஞர்கள் இந்த தலைப்புகளில் கூறுவதைப் பற்றியும் ஆராய்கிறது. இவர்கள் இந்த சட்டத்தை ஆதரிக்கிறார்கள். இக்கட்டுரையின் கடைசியில் ஒரு பிறசேர்க்கையில் பழைய ஏற்பாடும் கூட இச்செயலுக்கு ஆதரவளித்திருக்கிறது என்ற ஒரு இஸ்லாமியரின் கேள்விக்கு இதன் ஆசிரியர் பதிலளிக்கிறார். 

2. Women in Islam - part 3

இந்த அடுத்த கட்டுரை, இஸ்லாமிய ஆண்களுக்கு அடிமைப்பெண்களிடம் உடலுறவு கொள்ள இஸ்லாம் அனுமதி அளிக்கிறது என்பதைப் பற்றி ஆய்வு செய்கிறது (சில பத்திகளைத் தாண்டி படிக்கவும்). இரண்டு பழைய ஏற்பாட்டு நிபுனர்கள், பழைய ஏற்பாட்டில் யுத்தத்திற்கு பிறகு திருமணம் எப்படி செய்யவேண்டும் என்பதைப் பற்றிய விவரங்களைப் பற்றியும் இந்த கட்டுரை குறிப்பிடுகிறது. 

3. Adultery: Do it! Do it! Do it! 

இந்த கட்டுரை, முஹம்மது தன் இராணுவ வீரர்களை உற்சாகமூட்டி போரில் பிடிபட்ட பெண்களோடு "செய்யுங்கள் - DO IT" என்றுச் சொன்ன விவர‌ம் பற்றி ஆய்வு செய்கிறது.

4. இஸ்லாமும் விபச்சாரமும் முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு 

முஹம்மதுவிற்கு விசேஷித்த விதமாக கொடுக்கப்பட்ட சிறப்பு திருமண சலுகைகள் பற்றிய ஒரு சிறிய கட்டுரையை இங்கு படிக்கலாம். 

5. Slaves of Muhammad - Prophet of Freedom and Equality! 

முஹம்மதுவிற்கு இருந்த சொந்த அடிமைகளைப் பற்றிய விவரங்களை இக்கட்டுரை விவரிக்கிறது. 

6. The Place of Women in Pure Islam

இஸ்லாமில் பெண்களின் நிலை என்ன என்பதைப் பற்றி அனேக குர்‍ஆன் வசனங்கள் மற்றும் அனேக ஹதீஸ்களைக் கொண்டு இக்கட்டுரை விவரிக்கிறது. இந்த வசனங்கள் மற்றும் ஹதீஸ்களை படித்த பிறகு ஒருவர் என்ன முடிவிற்கு வருவார் என்று கேட்டால் "இஸ்லாம் பெண்களை கவுரப்படுத்தவில்லை" என்ற முடிவிற்கு வருவார். 

7. SLAVERY IN ISLAM 

பொதுவாக அடிமைத்தனம் பற்றிய விவரங்களோடு, அடிமை வியாபாரத்தை இஸ்லாமியர்கள் எப்படி செய்தார்கள் என்பதை இக்கட்டுரை விளக்குகிறது. இதே நிலை தற்காலத்திலும் எப்படி இஸ்லாமிய நாடுகள் பின்பற்றப்படுகிறது என்பதையும் விளக்குகிறது. 

8. Christianity, Islam and Slavery

இந்த சிறிய கட்டுரை, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவத்தில் அடிமைத் தனம் பற்றியுள்ள வேறுபாடுகளை விளக்குகிறது. 

9. Chapter 5: Slavery in Islam 

இஸ்லாமில் அடிமைத் தனம் பற்றிய ஒரு சுருக்கமான கட்டுரை. 

10. Women in Christianity and Islam

இந்த பக்கத்தில் "இஸ்லாமில் மற்றும் கிறிஸ்தவத்தில் பெண்கள்" என்ற தலைப்பில் அனேக கட்டுரைகளின் தொடுப்புக்கள் உள்ளன. 

11. Index - Slavery 

இந்த பக்கத்தில், இஸ்லாமில் அடிமைத் தனம் பற்றிய வசனங்கள், பின் இணைப்புக்கள் அடங்கிய தொடுப்புக்கள், கட்டுரைகள் உள்ளன. 

Copyright by James Malcolm Arlandson. 

ஆங்கில மூலம்: Slave-girls as sexual property in the Quran 

ஜேம்ஸ் அர்லண்ட்சன் அவர்களின் இதர கட்டுரைகள்.


© Answering Islam, 1999 - 2010. All rights reserved.





--
10/02/2010 01:43:00 AM அன்று ஈஸா குர்-ஆன் - Isa Koran இல் Isa Koran ஆல் இடுகையிடப்பட்டது


இஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்

முன் பக்கம் செல்ல

HOME PAGE

தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்

1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1

2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2

3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3

4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4

பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்

1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1

2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2

பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்

1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்

2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்