இஸ்லாம் அமைதி மார்கமா? இஸ்லாம் இனிய மார்கமா? இஸ்லாம் உண்மையான மார்கமா?

ஆன்சரிங் இஸ்லாம்

பல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்

சத்தியவான் தளம் செல்ல

Wednesday, February 9, 2011

Answering Ziya: "அல்லாஹ்" என்றால் "கர்வாலி மரம்" என்று பொருள்

 

 
Answering Ziya: "அல்லாஹ்" என்றால் "கர்வாலி மரம்" என்று பொருள்

இஸ்லாமியர்களின் அறியாமைக்கு வானமே எல்லை. இஸ்லாமியர்களின் ஏமாற்று வேலைக்கு எல்லையே இல்லை.

முன்னுரை:

இஸ்லாமியர்கள் தங்கள் "அல்லாஹ்வை" பைபிளில் கண்டுபிடிக்க படாதபாடு படுகின்றனர். குர்‍ஆனின் படி, பைபிளின் தேவன் "யேகோவா" தான், குர்‍ஆனின் இறைவன் "அல்லாஹ்". ஆனால், உண்மை இதற்கு எதிர்மாறாக உள்ளது. அதாவது பைபிளின் தேவன் வேறு, அல்லாஹ் வேறு. அல்லாஹ் தன்னை பைபிளோடும், பழைய/புதிய‌ ஏற்பாட்டு நிகழ்ச்சிகளோடும் சம்மந்தப்படுத்திக் கொண்டால், அவர் யேகோவா தேவனாகிவிடமுடியுமா?

இவ்விருவரும் வேற்வேறானவர்கள் என்பதை குர்‍ஆனையும், பைபிளையும் படிப்பவர்கள் இதனை சுலபமாக அறிந்துக்கொள்ளலாம். யேகோவா சொன்னதற்கு நேர் எதிராக அல்லாஹ் சொல்கிறார், செயல்படுகிறார். ஆக, இவ்விருவரும் ஒருவரல்ல என்பது உண்மை.

இது ஒரு புறமிருக்க, இஸ்லாமியர்கள் "அல்லாஹ்வை" பைபிளில் கண்டுபிடிக்க, அனேக யுக்திகளை கையாளுகின்றனர். இதில் ஒன்று "வார்த்தைகளின் ஓசை அல்லது உச்சரிப்பு சம்மந்தப்பட்டது". இதன் படி, "அல்லாஹ்", "முஹம்மது", "மக்கா" போன்ற வார்த்தைகளின் உச்சரிப்பு போலவே இருக்கும் வார்த்தைகள் இதர மார்க்க‌ வேதங்களில் காணப்பட்டால், "இதர மார்க்க வேதங்களில் இஸ்லாம் பற்றி கூறப்பட்டுள்ளது, இதனால், இஸ்லாம் தான் உண்மையான மார்க்கம் என்று இஸ்லாமியர்கள் சொல்லிவிடுகிறார்கள்".

இதனால் விளையும் ஆபத்துக்கள் என்ன? என்று சிந்திக்கமாட்டார்கள் இஸ்லாமிய அறிஞர்கள். இஸ்லாமியர்களின் இந்த செயல்களை நாம் "அறியாமை" என்றுச் சொல்வதா அல்லது ஏமாற்றவேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்படுகிறார்கள் என்றுச் சொல்வதா? இது அறியாமையோ அல்லது ஏமாற்று வேலையோ, ஆனால், உண்மையை சொல்லவேண்டியது நம்முடைய கடமை, கிறிஸ்தவர்களை இப்படிப்பட்டவர்களிடமிருந்து எச்சரிக்கை செய்யவேண்டியது நம்முடைய கடமை.

இதைப் பற்றி தமிழ் முஸ்லிம் தளத்தின் கட்டுரையையும், அதற்கான எங்கள் மறுப்பையும் இங்கு படிக்கலாம்:

தமிழ் முஸ்லீம் தளமும், " அல்லேலூயா " வார்த்தையும் - http://isakoran.blogspot.com/2007/10/blog-post_29.html

இதைப் பற்றி ஜியா என்ற சகோதரரின் கட்டுரையையும், அதற்கான எங்கள்முதல் மறுப்பையும் இங்கு படிக்கவும்:

Answering Ziya: அல்லேலூ "யா" வும் "அல்லாஹ்" படும் அல்லல்களும் - பாகம் 1 - http://isakoran.blogspot.com/2011/01/answering-ziya-1.html

சகோதரர் ஜியா அவர்களுக்கு கொடுத்த முதல் பதிலுக்கு மேலதிக விவரங்களுக்காக (போனஸாக) இந்த பதிலும் அளிக்கப்படுகிறது.

ஜியா கீழ்கண்டவாறு எழுதுகிறார்:

Do you have any concern in pronouncing "elah" as "alah" even though they sound same? When you don't have concern in calling "Isah" as "Jesus" which he never heard on his life time? Does it make any sense when "Elah" can be spelled as "Alah" which both sounds same? Try in Wikipedia you will find more proof!! We request you to read the original transcripts and then learn Christianity which will help you in turn to understand the Christianity better…

Source

இஸ்லாமியர்களில் யார் யாரெல்லாம், "அல்லாஹ்" என்ற வார்த்தை பைபிளில் இருக்கிறது என்றும், அல்லது ஓசையில் "அல்லாஹ்" என்பது போல வரும் வார்த்தைகள் பைபிளில் இருக்கிறது, அது அல்லாஹ்வையே குறிக்கிறது என்று கூறுகிறார்களோ, அவர்களுக்கு இந்த பதில் அளிக்கப்படுகிறது.

இஸ்லாமியர்கள் அதிகமாக மதிக்கும் அஹமத் தீதத் என்பவரும் இதைப் பற்றி எழுதியுள்ளார், அவருக்கு ஒரு சிறிய கட்டுரையை அடுத்த முறை பதிக்கிறேன். இந்த கட்டுரையில், பைபிளில் "அல்லாஹ்", "அலா", "அல்-லா" … என்று வரும் வார்த்தைகள் எங்கெங்கே வருகின்றது அதன் பொருள் என்ன என்பதை காண்போம்.

முக்கிய குறிப்பு: பழைய ஏற்பாட்டில் உள்ள ஒவ்வொரு எபிரேய வார்த்தைக்கும் ஒரு எண் கொடுக்கப்பட்டுள்ளது, இதனால், எபிரேய அகராதியில் பைபிள் வார்த்தைகளை தேடுவதற்கு வசதியாக இருக்கும். இதே போல புதிய ஏற்பாட்டு, கிரேக்க வார்த்தைகளுக்கும் ஒரு எண் கொடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, "H421" என்று எழுதினால், இது ஒரு எபிரேய வார்த்தையை குறிக்கிறது (H - Hebrew Language), அவ்வார்த்தைக்கு இடப்பட்ட எண் 421 என்பதாகும். இதே போல, "G235" என்று எழுதினால், இது ஒரு கிரேக்க வார்த்தையை குறிக்கிறது (G - Greek Language), இவ்வார்த்தைக்கு இடப்பட்ட எண் 235 என்பதாகும்.

இந்த கட்டுரையில் பைபிளின் எபிரேய மற்றும் கிரேக்க வார்த்தைகளை தேட, "Blue Letter Bible (Bible / Dictionary Search) - http://www.blueletterbible.org/" என்ற தளத்தை பயன்படுத்துகிறோம்.

பழைய ஏற்பாட்டில் அல்லாஹ்

1)'alah ('அலாஹ்) - ஒப்பாறி அல்லது புலம்பல்

இஸ்லாமிய இறைவனின் பெயராகிய‌, ஆங்கிலத்தில் "Allah" என்று வரும் வார்த்தைக்கு ஒரு எழுத்து குறைவாக உள்ள‌ "'alah" என்ற வார்த்தை பழைய ஏற்பாட்டில் ஒரு முறை யோவேல் 1:8ம் வசனத்தில் வருகிறது. உச்சரிப்பும் ஒரே மாதிரியாகத் தான் இருக்கும்.

இவ்வார்த்தையின் எபிரேய எண் "H421" என்பதாகும், இதன் பொருள் "ஒப்பாறி" அல்லது "புலம்பல்" என்பதாகும். அதாவது, நம்முடைய கிராமங்களில் ஒரு அசம்பாவிதம் நடந்துவிட்டால், யாராவது மரித்து விட்டால், "ஒப்பாறி" வைத்து அழுவார்கள். வேதனை அதிகமாகும் போது, தாங்க முடியாத துக்கமடையும் போது வார்த்தைகள் சிலவற்றைச் சொல்லி அழுவது தான், புலம்பல் அல்லது ஒப்பாறி என்போம். இது தான் இவ்வார்த்தையின் பொருள்.

யோவேல் 1:8 (Joel 1:8)

LamentH421 like a virginH1330 girdedH2296 with sackclothH8242 forH5921 the husbandH1167 of her youth.H5271 (KJV)

தன் பாலியவயதின் புருஷனுக்காக இரட்டுடுத்தியிருக்கிற பெண்ணைப்போலப் புலம்பு.

ஆங்கிலத்தில் பொருள்:

'alah (Strong's Number: H421, verb): to bewail :- lament.

கீழ்கண்ட தொடுப்பை சொடுக்கி, எபிரேய வார்த்தையின் பொருளை தெரிந்துக்கொள்ளுங்கள்

Link: 'alah(H421) - http://www.blueletterbible.org/lang/lexicon/lexicon.cfm?Strongs=H421&t=KJV

இஸ்லாமியர்களிடம் சில கேள்விகள்:

1) அல்லாஹ் என்ற வார்த்தைக்கு இணையாக இந்த வார்த்தையின் உச்சரிப்பும் உள்ளது. இதனால், ஒப்பாறி என்றால் அல்லாஹ் என்று பொருளா?

2) உங்களுடைய லாஜிக்கின் படி, உச்சரிப்பு ஒரே மாதிரியாக இருப்பதினால், இனி அல்லாஹ் என்ற இடத்தில் எல்லாம், "ஒப்பாறி" என்றோ அல்லது "புலம்பல்" என்றோ பொருள் கொள்வீர்களா?

3) "அலா" என்பதை "இலா" என்று உச்சரித்தால் உங்களுக்கு ஏதாவது பிரச்சனையா? என்று கேட்டுள்ளீர்கள் இப்போது சொல்லுங்கள், "அல்லாஹ்" என்ற வார்த்தையின் பொருள் "ஒப்பாறி/புலம்பல்" என்றுச் சொன்னால் ஏற்றுக்கொள்வீர்களா?

இப்போது அடுத்த வார்த்தைக்கு கடந்துச் செல்வோம் (H422)

2) 'alah (H422) - சாபம், சபித்தல் மற்றும் சத்தியம் செய்தல்

இந்த வார்த்தையும் அல்லாஹ் என்ற வார்த்தையை போலவே உச்ச‌ரிக்கப்படுகிறது. இதன் பொருள், சத்தியம் செய்தல், சாபம் என்பதாகும், எண் H422 ஆகும்.

இவ்வார்த்தை கீழ்கண்ட வசனங்களில் காணப்படுகிறது:

நியாயாதிபதிகள் 17:2 (Judges)

1 சாமுவேல் 14:24 (1 Samuel)

1 இராஜாக்கள் 8:31 ( 1 Kings)

2 நாளாகமம் 6:22 (2 Chronicles)

ஓசியா 4:2 மற்றும் 10:4 (Hosea)

ஆங்கிலத்தில் பொருள்:

'alah (Strong's Number: H422, verb) - adjure, curse, swear.

கீழ்கண்ட தொடுப்பை சொடுக்கி, எபிரேய வார்த்தையின் பொருளை தெரிந்துக்கொள்ளுங்கள்

Link: 'alah (H422) - http://www.blueletterbible.org/lang/lexicon/lexicon.cfm?Strongs=H422&t=KJV

இஸ்லாமியர்கள் இப்போது "அல்லாஹ்" என்றால், "சாபம்" என்று பொருள் என்று அங்கீகரிப்பார்களா? அங்கீகரிக்கமாட்டார்கள். இது எப்படி சாத்தியம் என்பார்கள். எபிரேய மொழியில் உள்ள "சாபம்" என்று பொருள் தரும் வார்த்தை, அரபி மொழியின் "அல்லாஹ்" என்ற வார்த்தையைப் போலவே உச்சரிப்பு இருந்தாலும், இப்படி பொருள் கூறுவது முட்டாள் தனம் என்பார்கள்.

ஆனால், தமிழ் முஸ்லிம் தளம், "அல்லேலூ" என்ற எபிரேய வார்த்தையின் பொருள் "துதி" என்று இருக்கும் போது, இவ்வார்த்தை "அல்லாஹ்" என்ற வார்த்தையின் உச்சரிப்பைப் போலவே இருப்பதினால், கீழ்கண்ட வாறு கூறுவது முட்டாள் தனமில்லையா?

தமிழ் முஸ்லீம் தளம் எழுதியது :

இனி பைபிளை எடுத்துக் கொள்வோம்.

அல்லேலுயா!

இது ஒரு ஹிப்ரு சொல்லாகும். இதன் இறுதியில் இடம் பெறக்கூடிய 'யா' என்பது ஒரு விளி வேற்றுமை சொல்லாகும். ஆச்சரியத்திற்கு பயன் படுத்தக்கூடியதாக சொல்லப்படுகிறது.

அல்லேலுயா! என்பதை 'யா அல்லேலு' என்று சொன்னாலும் அதன் பொருளானது மாறுவதில்லை.

கிறிஸ்துவர்கள் 'யா அல்லேலு' என்கிறார்கள்

முஸ்லிம்கள் 'யா அல்லாஹ்' என்கிறார்கள்

அவ்வளவுதான் வித்தியாசம்!

Source: http://isakoran.blogspot.com/2007/10/blog-post_29.html

இந்த வார்த்தையைப் பற்றி இஸ்லாமிய அறிஞர் கலாஞ்சென்ற திரு அஹமத் தீதத் அவர்கள் என்ன எழுதியிருக்கிறார்கள் என்பதை ஒரு சிறிய கட்டுரையில் விளக்குவேன்.

கிறிஸ்தவர்களே, இனியும் ஏமாறாதீர்கள். யாராவது உங்களிடம் வந்து "அல்லாஹ்" என்ற வார்த்தை பைபிளில் உள்ளது என்று சொல்வார்களானால், ஆமாம், எங்களுக்கும் தெரியும், "அதன் பொருள் சாபம்" என்பதாகும் என்றுச் சொல்லுங்கள்.

இப்போது அடுத்த வார்த்தைக்குச் செல்வோம் (H423).

3) 'alah (H423) - சாபம், சத்தியம் செய்தல்

இந்த வார்த்தையின் பொருளும் சாபம், சத்தியம் செய்தல் போன்றவையாகும். இதன் எபிரேய எண் H423 என்பதாகும்.

இவ்வார்த்தை கீழ்கண்ட வசனங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஆதியாகமம் 24:41; 26:28 (Genesis)

லேவியராகமம் 5:1 (Leviticus)

எண்ணாகமம் 5:21, 23, 27 (Numbers)

உபாகமம் 29:12, 14, 19, 20, 21; 30:7 (Deuteronomy)

1 இராஜாக்கள் 8:31 (1 Kings)

2 நாளாகமம் 6:22; 34:24 (2 Chronicles)

நேகேமியா 10:29 (Nehemiah)

யோபு 31:30 (Job)

சங்கீதம் 10:7; 59:12(Psalms)

நீதிமொழிகள் 29:24 (Proverbs)

ஏசாயா 24:6 (Isaiah)

எரேமியா 23:10; 29:18; 42:18; 44:12 (Jeremiah)

எசேக்கியேல் 16:59; 17:13, 16, 18, 19 (Ezekiel)

தானியேல் 9:11 (Daniel)

சகரியா 5:3 (Zechariah)

ஆங்கிலத்தில் பொருள்:

'alah (Strong's Number: H423, noun): an imprecation: - curse, cursing, execration, oath, swearing.

கீழ்கண்ட தொடுப்பை சொடுக்கி, இவ்வார்த்தையின் எபிரேய உச்சரிப்பு, பொருள் மற்றும் இதர விவரங்களை தெரிந்துக்கொள்ளுங்கள்.

Link: 'alah (H423) - http://www.blueletterbible.org/lang/lexicon/lexicon.cfm?strongs=H423&t=KJV&page=1

4) 'allah (H427)- "கர்வாலி மரம்" - oak tree

இந்த வார்த்தை முழுக்க முழுக்க இஸ்லாமியர்களின் இறைவனுக்கு இருக்கும் "அல்லாஹ்" என்றே உச்சரிக்கப்படுகிறது மற்றும் ஆங்கிலத்தில் நாம் கவனித்தால், இஸ்லாமியர்கள் பயன்படுத்தும் அதே எழுத்துக்களை கொண்டுள்ளது. இதன் எண் H427.

அல்லாஹ் ‍ = 'allah

இவ்வார்த்தையின் பொருள் "கர்வாலி மரம்" என்பதாகும். அல்லாஹ் என்ற எபிரேய வார்த்தையின் பொருள், "கர்வாலி மரம்" என்று உள்ளதால், இனி இஸ்லாமியர்களின் இறைவனுக்கு "கர்வாலி மரம்" என்று பொருள் என்று நாம் கூறலாமா? இஸ்லாமியர்கள் இதற்கு அனுமதி அளிப்பார்களா?

இஸ்லாமியர்கள் மற்றவர்களின் வேதங்களிலிருந்து வார்த்தைகளை எடுத்து அதை திருத்தி, மாற்றி பொருள் கூறுவது போல அல்லாமல், இந்த வார்த்தை எழுத்துக்கு எழுத்து அப்படியே "அல்லாஹ்" என்று வருகிறது, எனவே, அல்லாஹ் என்றால் கர்வாலி மரம் என்று அர்த்தம். என்ன இஸ்லாமிய அறிஞர்களே, உங்கள் லாஜிக்கின் படி இது சரி தானே!

இந்த வார்த்தை யோசுவா 24:26ம் வசனத்தில் வருகிறது:

யோசுவா 24:26

இந்த வார்த்தைகளை யோசுவா தேவனுடைய நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதி, ஒரு பெரிய கல்லை எடுத்து, அதை அங்கே கர்த்தருடைய பரிசுத்த ஸ்தலத்தின் அருகில் இருந்த கர்வாலி மரத்தின் கீழ் நாட்டி,

Joshua 24:26 And Joshua wrote these words in the book of the law of God, and took a great stone, and set it up there under an oak, that was by the sanctuary of the LORD. (KJV)

KJV with Hebrew numbers:

Joshua 24:26 And JoshuaH3091 wroteH3789 theseH428 (H853) wordsH1697 in the bookH5612 of the lawH8451 of God,H430 and tookH3947 a greatH1419 stone,H68 and set it upH6965 thereH8033 underH8478
an oak,H427 thatH834 was by the sanctuaryH4720 of the LORD.H3068

ஆங்கிலத்தில் பொருள்:

'allah (Strong's Number: H427, noun): oak.

இந்த தொடுப்பை இஸ்லாமியர்கள் கட்டாயமாக சொடுக்கி பார்க்கவேண்டும், மற்றும் உச்சரிப்பு என்ன என்பதை தங்கள் காதுகளினால் தங்கள் இறைவனின் பெயரை கேட்கவேண்டும்.

Link: 'allah (H427) - http://www.blueletterbible.org/lang/lexicon/lexicon.cfm?strongs=H427&t=KJV

5) 'elah என்றாலோ, alah என்றாலோ இரண்டும் ஒன்றுதானாம்.

இப்போது ஜியா சகோதரர் எழுதியதை இன்னொரு முறை படிப்போம்:

Do you have any concern in pronouncing "elah" as "alah" even though they sound same? When you don't have concern in calling "Isah" as "Jesus" which he never heard on his life time? Does it make any sense when "Elah" can be spelled as "Alah" which both sounds same?

ஒரே மாதிரியாக உச்சரிப்பு இருக்கும் வார்த்தைகளாகிய "Elah" மற்றும் "Alah" என்ற வார்த்தைகளில், அல்லாஹ்வை குறிக்க எதை வேண்டுமானாலும் கூறலாமாம்.

இலாஹ் என்ற எபிரேய வார்த்தைக்கு என்ன பொருள்?

அல்லாஹ் என்ற அரபி வார்த்தைக்கு என்ன பொருள்?

இவ்விரண்டு வார்த்தைகளின் மூல வார்த்தை என்ன?

ஒரு மொழியில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட வார்த்தையின் உச்சரிப்பு போலவே, இன்னொரு மொழியில் ஒரு வார்த்தை இருந்தால், இவ்விரண்டிற்கும் ஒரே பொருள் என்று கூறமுடியுமா?

இப்படியெல்லாம் சிந்திக்க இஸ்லாமியர்களுக்கு நேரமில்லை, எனவே தான் மேற்கண்ட விதமாக அறியாமையில் (அல்லது) ஏமாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் தெரிந்தே வஞ்சிக்கிறார்கள்.

சரி, இலாஹ் என்ற எபிரேய வார்த்தையின் பொருள் என்னவென்று இப்போது காண்போம். இவ்வார்த்தையின் பொருள் "கர்வாலி மரம் அல்லது பெரிய மரம்" என்பதாகும்.

இவ்வார்த்தை கீழ்கண்ட வசனங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஆதியாகமம் 35:4

நியாயாதிபதிகள் 6:11

நியாயாதிபதிகள் 6:19

2 சாமுவேல் 18:9

2 சாமுவேல் 18:10

2 சாமுவேல் 18:14

1 இராஜாக்கள் 13:14

1 நாளாகமம் 10:12

ஏசாயா 1:30

ஏசாயா 6:13

எசேக்கியேல் 6:13

ஓசியா 4:13



ஆங்கிலத்தில் பொருள்:

'elah (H424)

1) terebinth, terebinth tree

2) valley where David killed Goliath

இவ்வார்த்தையின் எபிரேய விளக்கத்திற்கான தொடுப்பு:

Link: 'Elah - H424 - http://www.blueletterbible.org/lang/lexicon/lexicon.cfm?strongs=H424&t=KJV

இதே பெயரில்(Elah - ஏலா - H425) ஒரு பள்ளத்தாக்கு இருந்தது. இந்த இடத்தில் தான் தாவீது கோலியாத்தை கொன்றார்.

1 சாமுவேல் 17:2 சவுலும் இஸ்ரவேல் மனுஷரும் ஒருமித்துக் கூடி, ஏலா பள்ளத்தாக்கிலே பாளயமிறங்கி, பெலிஸ்தருக்கு எதிராக யுத்தத்திற்கு அணிவகுத்து நின்றார்கள்.

1 Samuel 17:2 And SaulH7586 and the menH376 of IsraelH3478 were gathered together,H622 and pitchedH2583 by the valleyH6010 of Elah,H425 and set the battleH4421 in arrayH6186 againstH7125 the Philistines.H6430

இதுவரை நாம் பார்த்த விவரங்களின் சுருக்கம் கீழே உள்ள படத்தில் காணலாம். இந்த வார்த்தைகளில் எங்கும் "அலாஹ் (alah)" (அ) "அல்லாஹ்(allah)" என்றால் "தேவன்/இறைவன்" என்ற பொருள் இல்லை. எனவே, அல்லாஹ்வை பைபிளில் கண்டுபிடிப்பவர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சம் ஏனென்றால், அறியாத மக்களிடம் "பைபிளில் அல்லாஹ் இருக்கிறார் அல்லது அல்லாஹ் என்ற வார்த்தை உள்ளது" என்று ஏமாற்றியவர்களுக்கு ஏமாற்றம் தானே மிஞ்சும்.



இதுவரை நாம் அல்லாஹ் என்ற வார்த்தை அல்லது உச்சரிப்பில் "அல்லாஹ்" என்று வரும் வார்த்தைகளை பழைய ஏற்பாட்டிலிருந்து கண்டோம். இனி புதிய ஏற்பாட்டில் அல்லாஹ் என்ற வார்த்தையின் பொருள் என்ன, இவ்வார்த்தை எங்கேங்கே வருகிறது என்பதை காண்போம்.

இனி எந்த கிறிஸ்தவரானாலும் சரி, பைபிளில் "அல்லாஹ்" என்ற வார்த்தை இல்லை என்று சொல்லக்கூடாது. ஏனென்றால், அல்லாஹ் பைபிளில் இருக்கிறார் ஆனால், அதன் அர்த்தம் "சத்தியம் செய்தல், சபித்தல், கர்வாலி மரம், ஒப்பாறி வைத்தல், புலம்புதல்" என்பதாகும். தமிழில் எப்படி ஒரே வார்த்தைக்கு அனேக அர்த்தங்கள் இருக்கிறதோ அதே போல, எபிரேய மொழியில் "அலாஹ்/அல்லாஹ்" என்ற வார்த்தைக்கு அனேக அர்த்தங்கள் உள்ளது (தமிழில் நாணயம் என்றால், நேர்மையையும் குறிக்கும், காசு என்ற பணத்தையும் குறிக்கும்).

புதிய ஏற்பாட்டில் 'அல்லாஹ்'

பழைய ஏற்பாட்டின் எபிரேய மொழியில் மட்டுமல்ல, புதிய ஏற்பாட்டின் கிரேக்க மொழியிலும் அல்லாஹ் வருகிறார். கிரேக்க மொழியில் "அல்லாஹ்" அல்லது "அல்லா" என்றால் "ஆனால்" என்று பொருள்.

இவ்வார்த்தையின் கிரேக்க மொழி எண் G235 ஆகும்.

alla (ἀλλά):

1) but

   a) nevertheless, notwithstanding

   b) an objection

   c) an exception

   d) a restriction

   e) nay, rather, yea, moreover

   f) forms a transition to the cardinal matter

Source: http://www.blueletterbible.org/lang/lexicon/lexicon.cfm?Strongs=G235&t=KJV

அல்லாஹ் என்ற கிரேக்க வார்த்தை புதிய ஏற்பாட்டின் அனைத்து புத்தகங்களிலும் வருகிறது.
(நான் இப்படி எழுதினேன் என்பதற்காக, இஸ்லாமியர்களில் சிலர் ஒன்றும் அறியாத மக்களிடம் சென்று பைபிளில் உள்ள புதிய ஏற்பாட்டின் அனைத்து புத்தகங்களிலும் அல்லாஹ் வருகிறார் என்று அப்படியே பிளேட்டை மாற்றி கதை விடப்போகிறீர்கள்! கிறிஸ்தவர்களே! எச்சரிக்கையாக இருங்கள், இஸ்லாமியர்கள் இப்படி கதை விட்டாலும் விடுவார்கள்)

மத்தேயு (Matthew) 4:4; 5:15, 17, 39; 6:13, 18; 7:21; 8:4, 8; 9:12, 13, 17, 18, 24; 10:20, 34; 11:8, 9; 13:21; 15:11; 16:12, 17, 23; 17:12; 18:30; 19:6, 11; 20:23, 26, 28; 21:21; 22:30, 32; 24:6; 26:39; 27:24

மாற்கு (Mark) 1:44, 45; 2:17, 22; 3:26, 29; 4:17, 22; 5:19, 26, 39; 6:9; 7:5, 15, 19; 8:33; 9:8, 13, 22, 37; 10:8, 27, 40, 43, 45; 11:23, 32; 12:14, 25, 27; 13:7, 11, 20, 24; 14:28, 29, 36, 49; 16:7

லூக்கா (Luke) 1:60; 4:4; 5:14, 31, 32, 38; 6:27; 7:7, 25, 26; 8:16, 27, 52; 9:56; 11:4, 33, 42; 12:7, 51; 13:3, 5; 14:10, 13; 16:21, 30; 17:8; 18:13; 20:21, 38; 21:9; 22:26, 36, 42, 53; 23:15; 24:6, 21, 22

யோவான் (John) 1:8, 13, 31, 33; 3:8, 15, 16, 17, 28, 36; 4:2, 14, 23; 5:18, 22, 24, 30, 34, 42; 6:9, 22, 26, 27, 32, 36, 38, 39, 64; 7:10, 12, 16, 22, 24, 27, 28, 44, 49; 8:12, 16, 26, 28, 37, 42, 49, 55; 9:3, 31; 10:1, 5, 8, 18, 26, 33; 11:4, 11, 15, 22, 30, 42, 51, 52, 54; 12:6, 9, 16, 27, 30, 42, 44, 47, 49; 13:9, 10, 18; 14:24, 31; 15:16, 19, 21, 25; 16:2, 4, 6, 7, 12, 13, 20, 25, 33; 17:9, 15, 20; 18:28, 40; 19:21, 24, 34; 20:7, 27; 21:8, 23

அப்போஸ்தலர் நடபடிகள் (Acts) 1:4, 8; 2:16; 4:17, 32; 5:4, 13; 7:39, 48; 10:20, 35, 41; 13:25; 15:11, 20; 16:37; 18:9, 21; 19:2, 26, 27; 20:24; 21:13, 24; 26:16, 20, 25, 29; 27:10

ரோமர் (Romans) 1:21, 32; 2:13, 29; 3:27, 31; 4:2, 4, 10, 12, 13, 16, 20, 24; 5:3, 11, 14, 15; 6:5, 13, 14, 15; 7:7, 13, 15, 17, 19, 20; 8:1, 4, 9, 15, 20, 23, 26, 32, 37; 9:7, 8, 10, 11, 16, 24, 32; 10:2, 8, 16, 18, 19; 11:4, 11, 18, 20; 12:2, 3, 16, 19, 21; 13:3, 5, 14; 14:13, 17, 20; 15:3, 21; 16:4, 18

1 கொரிந்தியர் (1 Corinthians) 1:17, 27; 2:4, 5, 7, 9, 12, 13; 3:1, 2, 5, 6, 7; 4:3, 4, 14, 15, 19, 20; 5:8; 6:6, 8, 11, 12, 13; 7:4, 7, 10, 19, 21, 35; 8:6, 7; 9:2, 12, 21, 27; 10:5, 13, 20, 23, 24, 29, 33; 11:8, 9, 17; 12:14, 22, 24, 25; 14:2, 17, 19, 20, 22, 33, 34; 15:10, 35, 37, 39, 40, 46

2 கொரிந்தியர் (2 Corinthians) 1:9, 12, 13, 19, 24; 2:4, 5, 13, 17; 3:3, 5, 6, 14, 15; 4:2, 5, 8, 9, 16, 18; 5:4, 12, 15, 16; 6:4; 7:5, 6, 7, 9, 11, 12, 14; 8:5, 7, 8, 10, 14, 19, 21; 9:12; 10:4, 12, 13, 18; 11:1, 6, 17; 12:14, 16; 13:3, 4, 7, 8

கலாத்தியர் (Galatians) 1:1, 8, 12, 17; 2:3, 7, 14; 3:12, 16, 22; 4:2, 7, 8, 14, 17, 23, 29, 30, 31; 5:6, 13; 6:13, 15

எபேசியர் (Ephesians) 1:21; 2:19; 4:29; 5:4, 15, 17, 18, 24, 27, 29; 6:4, 6, 12

பிலிப்பியர் (Philippians) 1:18, 20, 29; 2:3, 4, 7, 12, 17, 27; 3:7, 8, 9; 4:6, 17

கொலோசெயர் (Colossians) 2:5; 3:11, 22

1 தெசலோனிக்கேயர் (1 Thessalonians) 1:5, 8; 2:2, 4, 7, 8, 13; 4:7, 8; 5:6, 9, 15

2 தெசலோனிக்கேயர் (2 Thessalonians) 2:12; 3:8, 9, 11, 15

1 தீமோத்தேயு (1 Timothy) 1:13, 16; 2:10, 12; 3:3; 4:12; 5:1, 13, 23; 6:2, 4, 17

2 தீமோத்தேயு (2 Timothy) 1:7, 8, 9, 12, 17; 2:9, 20, 24; 3:9; 4:3, 8, 16

தீத்து (Titus) 1:8, 15; 2:10; 3:5

பிலேமோன் (Philemon) 1:14, 16

எபிரேயர் (Hebrews) 2:16; 3:13, 16; 4:2; 5:4, 5; 7:16; 9:24; 10:3, 25, 39; 11:13; 12:11, 22, 26; 13:14

யாக்கோபு (James) 1:25, 26; 2:18; 3:15; 4:11

1 பேதுரு (1 Peter) 1:15, 19, 23; 2:16, 18, 20, 25; 3:4, 14, 21; 4:2, 13; 5:2, 3

2 பேதுரு (2 Peter) 1:16, 21; 2:4, 5; 3:9

1 யோவான் (1 John) 2:2, 7, 16, 19, 21, 27; 3:18; 4:1, 10, 18; 5:6, 18

2 யோவான் (2 John) 1:1, 5, 8, 12

3 யோவான் (3 John) 1:9, 11, 13

யூதா (Jude) 1:6, 9

வெளிப்படுத்தின விசேஷம் (Revelation) 2:4, 6, 9, 14, 20; 3:9; 9:5; 10:7, 9; 17:12; 20:6

உதாரணத்திற்கு, ஒரு வசனத்தை கிரேக்க எண்களோடு காண்போம், "but G235" என்ற வார்த்தையை கவனிக்கவும்

Matthew 4:4 ButG1161 heG3588 answeredG611 and said,G2036 It is written,G1125 ManG444 shall notG3756 liveG2198 byG1909 breadG740 alone,G3441 butG235 byG1909 everyG3956 wordG4487 that proceedethG1607 out ofG1223 the mouthG4750 of God.G2316

முடிவுரை: இதுவரை நாம் இஸ்லாமியர்கள் தங்கள் இறைவனின் பெயர் (அல்லாஹ்) பைபிளில் உள்ளது, அதனை கிறிஸ்தவர்கள் மற்றும் யூதர்கள் மறைத்துவிட்டார்கள் என்று சொல்லி வரும் செய்தி பொய்யானது என்பதைக் கண்டோம். அதாவது, அல்லாஹ் என்ற வார்த்தை பைபிளில் உண்டு, ஆனால், அதன் அர்த்தம் "இறைவன் என்றோ, தேவன் என்றோ, கடவுள் என்றோ" அல்லாமல், சாபம் என்றும், சத்தியம் செய்தல் என்றும், கர்வாலி மரம் என்றும் புலம்பல் என்றும், ஒப்பாறி என்றும் உள்ளது என்பதை கண்டோம்.

இதுவரை கண்ட விவரங்களின் சுருக்கம் கீழே உள்ள படத்தில் காணலாம்.




இக்கட்டுரை சகோதரர் ஜியா அவர்களின் கட்டுரைக்கு கொடுத்த முதல் மறுப்பிற்கு மேலதிக விவரங்களுக்காக எழுதப்பட்டுள்ளது, இதன் தொடர்ச்சியாக இன்னொரு கட்டுரையும் எழுதப்படுகின்றது, அதாவது, எலோஹிம் என்ற எபிரேய வார்த்தைக்கு இவர் எழுதிய விவரத்திற்கு மறுப்பாக எழுதப்படும். அதன் பிறகு, "அல்லேலூயாவும், அல்லாஹ் படும் அல்லல்களும் பாகம் - 2" என்ற மறுப்புக் கட்டுரை வெளியிடப்படும், கர்த்தருக்கு சித்தமானால்.

இக்கட்டுரைக்கு உதவிய கட்டுரைகள்/தொடுப்புக்கள்:

1) http://www.blueletterbible.org/lang/lexicon/lexicon.cfm?Strongs=H421&t=KJV
2) http://www.blueletterbible.org/lang/lexicon/lexicon.cfm?Strongs=H422&t=KJV
3) http://www.blueletterbible.org/lang/lexicon/lexicon.cfm?Strongs=H423&t=KJV
4) http://www.blueletterbible.org/lang/lexicon/lexicon.cfm?Strongs=H424&t=KJV
5) http://www.blueletterbible.org/lang/lexicon/lexicon.cfm?Strongs=H427&t=KJV
6) http://www.blueletterbible.org/lang/lexicon/lexicon.cfm?Strongs=G235&t=KJV
7) The Name of God in the Bible and the Quran - Part Three: Allah the Oak?

 

Friday, February 4, 2011

வங்காளதேசத்தில் பிரம்படி கொடுத்து 14 வயது சிறுமி கொலை


வங்காளதேசத்தில் பிரம்படி கொடுத்து 14 வயது சிறுமி கொலை
மணமானவருடன் கள்ள உறவு வைத்து இருந்ததால்


டாக்கா, பிப்.4-

வங்காள தேசத்தை சேர்ந்த 14 வயது சிறுமி மொசாமெட் ஹெனா. இவள் டாக்கா நகருக்கு வெளியே உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வந்தாள். அவள் அந்த கிராமத்தை சேர்ந்த திருமணமான 40 வயது ஆணுடன் கள்ளத் தொடர்பு வைத்து இருந்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த கிராமவாசிகள் மதத்தலைவர்களிடம் புகார் கூறினார்கள். மதத்தலைவர்களின் பஞ்சாயத்து கூடி இது பற்றி விசாரணை நடத்தியது.

முடிவில் அந்த சிறுமிக்கு சாகும் வரை 100 முறை சவுக்கடி கொடுக்க வேண்டும் என்றும், கள்ள உறவு வைத்து இருந்த 40 வயது ஆணுக்கும் 100 பிரம்படி கொடுக்க வேண்டும் என்றும் தீர்ப்பு கூறப்பட்டது.

இதை தொடர்ந்து அந்த கிராமத்தில் பொதுமக்கள் முன்னிலையில் அந்த பெண்ணுக்கு பிரம்படி கொடுக்கப்பட்டது. 70 முறை பிரம்படி கொடுக்கப்பட்ட போதே அந்த பெண் மயங்கி விழுந்து விட்டாள். அதன் பிறகு அவள் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டாள். அங்கு அவள் இறந்து விட்டதாக டாக்டர்கள் அறிவித்தனர்.

அவளுடன் தொடர்பு வைத்து இருந்ததாக கூறப்பட்ட ஆண் தண்டிக்கப்படுவதற்கு முன்பே அங்கு இருந்து தப்பி ஓடிவிட்டார். இந்த சம்பவம் அந்த நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் குறித்து டாக்கா ஐகோர்ட்டு தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. அந்த சிறுமியை பாதுகாக்க தவறியது ஏன் என்பதற்கான விளக்கத்தை 15 நாட்களுக்குள் அளிக்க வேண்டும் என்று கூறி மாவட்ட போலீஸ் அதிகாரிக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

வங்காள தேசத்தில் மதத்தலைவர்கள் பஞ்சாயத்து நடத்தி தீர்ப்பு அளிப்பது தடை செய்யப்பட்டு உள்ளது.

Tuesday, February 1, 2011

Answering Ziya: அல்லேலூ "யா" வும் "அல்லாஹ்" படும் அல்லல்களும் - பாகம் 1

 


Answering Ziya: அல்லேலூ "யா" வும் "அல்லாஹ்" படும் அல்லல்களும் - பாகம் 1

தமிழ் முஸ்லிம் தளம் கிறிஸ்தவர்கள் அதிகமாக பயன்படுத்தும் "அல்லேலூயா" என்ற வார்த்தைக்கு சொந்தமாக ஒரு விளக்கத்தை கொடுத்து இருந்தது. இஸ்லாமியர்கள் பொதுவாக செய்யும் ஒரு ஏமாற்று வேலை என்னவென்றால், அடுத்தவர்களின் வேதங்களில் இருக்கும் வசனங்களில் இஸ்லாம் பற்றி சொல்லியுள்ளது, முஹம்மது பற்றி கூறியுள்ளது என்றுச் சொல்லி, உண்மை பொருளை மாற்றி இஸ்லாமிய பாணியில் விளக்கம் கொடுக்க முயலுவது தான‌.

இப்படிப்பட்ட ஒரு ஏமாற்று வேலையை தமிழ் முஸ்லிம் தளம் செய்து இருந்தது, அதற்கு நான் 2007ம் ஆண்டு அக்டோபர் மாதம் மறுப்பு தெரிவித்து இருந்தேன். இவைகள் பற்றிய என் மறுப்பையும், தமிழ் முஸ்லிம் தளம் கொடுத்த விளக்கத்தையும் கீழ்கண்ட கட்டுரையில் படிக்கலாம்:

தமிழ் முஸ்லீம் தளமும், "அல்லேலூயா" வார்த்தையும் http://isakoran.blogspot.com/2007/10/blog-post_29.html

என்னுடைய மறுப்பிற்கு பதில் என்றுச் சொல்லி, ஜியா என்ற இஸ்லாமிய சகோதரர் ஒரு கட்டுரையை எழுதியிருக்கிறார். இந்த கட்டுரைக்காக அவர் ஆராய்ச்சி செய்து எழுதியது போல ஒரு பாசாங்கு செய்து இருக்கிறார், ஆனால், அவரது பதிலில், உண்மையாகவே அவர் என் கட்டுரைக்கு மறுப்பை எழுதினாரா என்பதை நாம் காண்போம். குறைந்த‌பட்சம் அவருடைய கட்டுரைக்கு உதவிய விக்கிபீடியா தொடுப்புகளையாவது கொடுத்தாரா? என்பதை இக்கட்டுரையில் காணப்போகிறோம்.

இதை படிக்கும் வாசகர்களுக்கு தெரிவித்துக்கொள்வது என்னவென்றால், இஸ்லாமியர்கள் சொல்லும் விவரங்கள் குறித்து நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும், "மக்களை ஏமாற்றவேண்டும், இஸ்லாமுக்கு நல்ல பெயரை கொண்டுவரவேண்டும்" என்ற ஒரே நோக்கத்திற்காக எவ்வளவு கீழ்தரமாக செயல்படவும், இஸ்லாமிய அறிஞர்கள் தயங்க மாட்டார்கள். (இப்படி நான் எழுதுகிறேன் என்று என் மீது யாரும் கோபம் கொள்ளவேண்டாம், ஏனென்றால், கடந்த மூன்று வருடங்களாக இணையத்தில் எழுதும் இஸ்லாமியர்களின் நேர்மையை பார்த்துக்கொண்டு இருக்கிறேன், இதன் விளைவு தான் இந்த வரிகள்)

ஜியா அவர்களின் கட்டுரைக்கு இரண்டு பாகமாக நாம் பதிலைக் காண்போம். அவர் ஆங்கிலத்தில் முதலாவது சில விவரங்களை விகிபீடியாவிலிருந்தும், இன்னும் இதர தளங்களிலிருந்தும் எடுத்து பதித்துள்ளார், பிறகு தன் விளக்கத்தை தமிழில் எழுதியுள்ளார். நம்முடைய இந்த முதலாம் பாகத்தில் ஆங்கிலத்தில் அவர் எழுதிய சில வரிகளுக்கு பதிலைக் காண்போம். இரண்டாம் பாகத்தில் அவர் தமிழில் மொழியாக்கம் செய்து பதித்த விவரத்திற்கு பதிலைக் காண்போம்.

இனி, சகோதரர் ஜியா அவர்கள் எழுதியவைகளை அலசுவோம்:

ஜியா அவர்கள் எழுதியவை:

Source: http://isaakoran.blogspot.com/2010/11/blog-post_3573.html

அல்லேலூயாவும் ஈசா உமரும் !!!

உமரின் "தமிழ் முஸ்லீம் தளமும், " அல்லேலூயா " வார்த்தையும்" என்ற கட்டுரைக்குவாசகர் பதில்

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் நிர்ரஹீம்

அஸ்ஸலாமு அழைக்கும் - சாந்தியும் சமாதானமும் உங்கள் மிது உண்டாகுக யோவான் 20:21.

உமர் அவர்களே,

உங்கள் வலைத்தளத்தில் "தமிழ் முஸ்லீம் தளமும், " அல்லேலூயா " வார்த்தையும்" என்ற கட்டுரை இடம்பெற்றிருந்தது. அதற்கு விளக்கமாக அல்லேலுயா (Halleluyah) என்ற வார்த்தை இரண்டு வார்த்தைகளை உள்ளடக்கியது, Halelu – அல்லேலு என்றால் துதி அல்லது போற்றுதல் (Praise), Yah – யா "Yah" or "Jah" என்றால் "யேகோவா" தேவனின் பெயரைக்குறிக்கும் "Yahweh" என்பதின் சுருக்கமே "Yah " என்று விளக்கம் தந்திருந்தீர்கள். அதற்கு"விகிபீடியா"வை Source: http://en.wikipedia.org/wiki/Hallelujah ஆராய்ந்து பார்க்க சொல்லி இருந்தீர்.

உமரின் பதில்:

ஆமாம், என் தளத்தில் நீங்கள் குறிப்பிட்ட கட்டுரையை நான் எழுதியிருந்தேன். ஒரு கேள்வியை உங்களிடம் கேட்கவிரும்புகிறேன், என் தளத்தில் நீங்கள் படித்த கட்டுரையின் தொடுப்பு என்ன என்று உங்களுக்குத் தெரியுமா? உங்களுக்குத் தெரியும் என்று எனக்குத் தெரியும், ஆனால், உங்கள் தளத்தில் உங்கள் கட்டுரையை படிக்கும் வாசகர்களுக்கு, நீங்கள், என் கட்டுரையின் தொடுப்பை கொடுப்பது உங்கள் கடமையல்லவா? இதை அங்கீகரிக்கிறீர்களா இல்லையா?

இணையத்தில் ஆதாரங்களை வாசகர்களுக்கு கொடுப்பது மிகவும் சுலபமானது, ஒரு நொடியில் அவர்கள் சொடுக்கி ஆதாரங்களை சரி பார்த்துக்கொள்வார்கள், ஆனால், இந்த குறைந்த பட்ச பொது அறிவு கூட இல்லாமல் கட்டுரையை எழுத வந்து இருக்கிறீர்களே! மூல தொடுப்பை கொடுக்க மறுக்கும் உங்களைப் போன்றவர்களின் கட்டுரையில் எவ்வளவு உண்மைகள் இருக்கும்? எவ்வளவு நேர்மை இருக்கும்? அய்யோ பாவம் வாசகர்கள்! அவர்களை அல்லாஹ் தான் உங்களிடமிருந்து காப்பாற்றவேண்டும்.

எனக்கு பதில் சொல்வதற்கு முன்பாக, தமிழ் முஸ்லிம் தளம் எழுதிய கட்டுரைப் பற்றி உங்கள் கருத்தைச் சொல்லியிருக்கலாம், அதாவது, அவர்கள் சொல்லிய விளக்கம் சரியானதா இல்லையா என்பதை விளக்கியிருக்கலாம்.

ஜியா அவர்கள் எழுதியவை:

"The word hallelujah occurring in Psalms is a Hebrew request for a congregation to join in praise. It can be translated as "Praise God", "Praise the Lord", "Praise Yahweh, you people", and is usually worded in English contexts as "Praise ye the LORD" or "Praise the LORD". This is not a direct translation, as Yah represents the first two letters of YHWH, the name for the Creator, and not the title "lord".[1] To give fuller meaning in this context, Hallelujah could rightly be translated "Praise Yahweh", or "Praise Jehovah" (signified by Jah).[2]

We don't know how could "Yahuwa" or "Yahweh" be pronounced as "Jehovah"? In the phrase "Praise Yahuwa" or "Praise Yahweh", what does "Yahuwa" or "Yahweh" means?

உமரின் பதில்:

நான் மேற்கோள் காட்டி, மேலதிக விவரங்களுக்காக படியுங்கள் என்று கூறிய விக்கிபீடியா தொடுப்பை நீங்கள் படித்ததாகவும், அதிலிருந்து விவரங்களை பதித்ததாகவும் "பாசாங்கு" காட்டியுள்ளீர்கள். நான் உங்களிடம் கேட்கிறேன், நான் கொடுத்த தொடுப்பை மட்டுமே படித்தீர்களா? அல்லது இன்னும் சில தொடுப்புகளை படித்து, அதிலிருந்தும் விவரங்களை எடுத்து, "ஒரே தொடுப்பிலிருந்து தான் நீங்கள் விவரங்களை சேகரித்தீர்கள்" என்பது போல ஒரு மாயையை உண்டாக்கியிருக்கிறீர்களா?

நான் கொடுத்த தொடுப்பு இது: http://en.wikipedia.org/wiki/Hallelujah

உங்கள் பதிலில் முதல் பாகத்தில் நீங்கள் "விக்கிபீடியாவிலிருந்து ஆங்கிலத்தில் உள்ள விவரங்களை பதித்ததாக" கட்டியுள்ளீர்கள். பிறகு அதன் கீழே மொழிப்பெயர்ப்பு என்றுச் சொல்லி, அந்த ஆங்கில வரிகளை மொழியாக்கம் செய்ததாக காட்டியுள்ளீர்கள். உங்களிடம் நாம் கேட்கவிரும்பும் கேள்விகள்:

• ஆங்கிலத்தில் நீங்கள் பதித்த அனைத்து விவரங்களும் விக்கிபீடியாவிலிருந்தா எடுத்தீர்கள்? நான் கொடுத்த ஒரே தொடுப்பிலிருந்தா எடுத்தீர்கள்?

• அல்லது ஒரு தொடுப்பிலிருந்து வெறு தொடுப்பிற்கு தாவி அதிலிருந்து சில விவரங்களை எடுத்துக்கொண்டு, இன்னும் விக்கிபீடியா அல்லாத தளங்களிலிருந்தும் சில விவரங்களை எடுத்துக்கொண்டு, சொந்தமாக ஆங்கிலத்தில் ஒரு சில வரிகளை எழுதி, கடைசியாக, எல்லாவற்றையும் விக்கிபீடியா தொடுப்பிலிருந்து தான் எடுத்தது போல காட்டியுள்ளீர்களா?

• நீங்கள் பதித்த "We don't know…" என்று தொடரும் ஆங்கில வரிகள் உங்கள் சொந்த வரிகள் தானே.

ஒரு கட்டுரையை எழுதும் போது, மற்ற தளங்களின் மேற்கோள்களை காட்டும் போது, எந்த வரிகளை நாம் மேற்கோள்களாக காட்டுகின்றோம், எந்த வரிகள் நம்முடைய சொந்த வரிகள் என்று வித்தியாசம் தெரியும் படி எழுதுவது தான் வாசகர்களை ஏமாற்றாமல் நேர்மையாக எழுதும் முறை, இந்த குறைந்த பட்ச அறிவு கூட இல்லாமல், வாசகர்களை ஏமாற்ற வந்துள்ளீர்கள்.

ஜியா அவர்கள் எழுதியவை:

….. ஒரு ஹிந்து மதத்தை சர்ர்ந்தவர் மொழிபெயர்த்த நூலைய வேத நூல் என்று கூறுகிறீர்கள் ??

உமரின் பதில்:

அங்கே இங்கே சுற்றி வளைத்து, கடைசியாக "எலோஹிம்" என்ற வார்த்தைக்கு வந்து, அதற்கு தமிழில் "தேவன்" என்று மொழிப் பெயர்த்துள்ளார்கள் என்றுச் சொல்லி, "ஒரு ஹிந்து மதத்தை சார்ந்தவர் மொழிப்பெயர்த்த நூலையா வேத நூல் என்றுச் சொல்கிறீர்கள்?" என்று கேள்வியோடு முடித்துள்ளீர்கள். உங்கள் வழிக்கே வருகிறேன், ஒரு ஹிந்து மதத்தை சார்ந்தவர் மொழிப்பெயர்க்க உதவினால் என்ன? ஒரு கிறிஸ்தவர் மொழிப்பெயர்க்க உதவினால் என்ன? வேறு வகையில் சொல்லவேண்டுமானால், ஒரு ஹிந்து சகோதரர் உதவிய மொழியாக்கத்தை அனேக ஆண்டுகளாக நாங்கள் பயன்படுத்திக்கொண்டு வருகிறோம், ஆனால், யாரும் சண்டையிட்டுக்கொள்ளவில்லை. ஆனால், இஸ்லாமியர்கள் என்றுச் சொல்லிக்கொள்ளும் உங்களைப்போன்ற இஸ்லாமிய அறிஞர்கள் மொழிப்பெயர்த்த குர்‍ஆனை வைத்துக்கொண்டு நீங்கள் போடும் கூத்து இருக்கிறதே! அடேங்கப்பா! ஒன்றுமே இல்லாத சப்ப மேட்டருக்காக ஒரு இடத்தை வாடகைக்கு வாங்கி, அதற்கு பணத்தை செலவு செய்து, இரண்டு பேரும் உடகார்ந்துக்கொண்டு, உன் குர்‍ஆனில் தவறு, ஆபாசம், அவங்க குர்‍ஆனில் தவறு ஆபாசம் என்றுச் சொல்லி, காலையிலிருந்து மாலை வரைக்கும் சளிக்காமல் சண்டைப்போட்டுக்கொண்டு இருக்கிறீர்களே இதை என்னவென்றுச் சொல்வது?

இந்த குர்‍ஆன் மற்றும் இஸ்லாம் ஆபாச சண்டைகளை பார்த்து இரசிக்க, பீஜே அவர்களின் தளத்தில் சென்று வீடியோக்களை ஆடியோக்களை சொடுக்கி பார்க்கவும்.

சரி, உங்க வரிகளுக்கு வருகிறேன், ஒரு ஹிந்து சகோதரர் மொழியாக்கத்திற்கு உதவிய நூலையா நீங்கள் வேதம் என்றுச் சொல்கிறீர்கள் என்று கேட்கும் சகோதரர் ஜியா அவர்களே, சிறிது நேரம் எடுத்து கீழ்கண்ட விவரங்களை படித்து பதில் சொல்வீர்களா?

1) தான் ஒரு பொய் நபியாக இருந்தும், தனக்கு வெளிப்பாடு வந்தது என்றுச் சொல்லிக்கொண்ட ஒரு கள்ள நபியாகிய முஹம்மது கொண்டு வந்த நூலையா இஸ்லாமியர்களாகிய நீங்கள் வேதம் என்றுச் சொல்கிறீர்கள்?

2) பெண் பித்து பிடித்து, அனேக திருமணங்களை செய்துக்கொண்டு, வைப்பாட்டிகளாக பெண்களை வைத்துக்கொண்டு, சிறுமி என்றும் பாராமல் வெட்கமில்லாமல் திருமணம் செய்துக்கொண்ட உங்கள் நபி கொண்டு வந்த நூலையா நீங்கள் வேதம் என்றுச் சொல்கிறீரகள்?

3) தன் வளர்ப்பு மகனின் மனைவியை (மகளுக்கு சமமான மருமகளை) திருமணம் செய்துகொண்ட ஒரு காமம் நிறைந்த ஒரு நபர் கொண்டு வந்த நூலையா நீங்கள் வேதம் என்றுச் சொல்கிறீர்கள்? அந்தோ பரிதாபம் இஸ்லாமியர்கள்!

4) தன் மதத்தை பரப்ப ஆயுதமாக வன்முறையை பயன்படுத்திக்கொண்டு, மக்களை கொள்ளையடித்து, பெண்களை சிறைபிடித்து, அவர்களை கற்பழித்து, அனேக பாவங்களை செய்த உங்கள் முஹம்மது கொண்டு வந்த நூலையாக இஸ்லாமியர்களாகிய நீங்கள் வேதம் என்றுச் சொல்கிறீர்கள்?

சகோதரர் ஜியா அவர்களே, நீங்கள் பைபிள் "தமிழாக்கம்" பற்றி பேசுகின்றீர்கள், ஆனால், நான் மேலே கேட்ட கேள்விகள் மூல குர்‍ஆன் சம்மந்தப்பட்டது.

மேற்கண்ட முறையில் கீழ்தரமாக நடந்துக்கொண்ட முஹம்மது கொண்டு வந்த நூலை வேதம் என்று நீங்கள் அங்கீகரிக்கும் போது, அதற்காக உலகத்தின் அமைதியை சீர்குலைத்துக்கொண்டு இருக்கும் போது, அப்படிப்பட்ட நூலை படிக்க (இதில் இன்னொரு வேடிக்கை புரியாமல் படிக்க) வெட்கப்படாத உங்களைப்போன்ற இஸ்லாமியர்கள் இருக்கும் போது, ஒரு ஹிந்து சகோதரர் உதவிய மொழிப்பெயர்ப்பை படிக்க எங்களுக்கு ஏன் வெட்கம் சொல்லுங்கள்? இன்னும் சொல்லப்போனால், ஒரு ஹிந்து சகோதரர் உதவிய மொழியாக்கத்தைக் கொண்டு, இன்று எங்களிடம் இருக்கும் தமிழ் மொழியாக்க பைபிள் மூலமாக இலட்சக்கணக்கான மக்கள் இயேசுவை அறிந்துக்கொள்கிறார்கள் என்று நினைக்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அந்த ஹிந்து சகோதரருக்கு நான் தனிப்பட்ட முறையில் நன்றி சொல்கிறேன். அவர் கிறிஸ்தவத்தை எதிர்க்கட்டும், புத்தகங்கள் எழுதட்டும், இருந்தபோதிலும், அவர் அன்று நீட்டிய உதவிக் கரத்திற்காக அவருக்கு இன்று என் நன்றிகள் உரித்தாகுக.

எனவே, குர்‍ஆனை இறைவேதம் என்றுச் சொல்ல இஸ்லாமியர்கள் வெட்கப்படவேண்டும், முஹம்மது எங்கள் நபி/தீர்க்கதரிசி என்றும், எங்கள் வழிகாட்டி என்றும் சொல்ல இஸ்லாமியர்கள் வெட்கப்படவேண்டும்.

ஒரு ஹிந்து சகோதரர் பைபிள் தமிழாக்கத்திற்கு உதவியதற்காக கிறிஸ்தவர்கள் வெட்கமடையத் தேவையில்லை. யார் மொழியாக்கம் செய்தார்கள்? என்பதை விட, அந்த வேதம் என்ன சொல்கிறது என்பது தான் எங்களுக்கு முக்கியம், நாங்கள் எங்கள் வேதத்தை எங்களுக்கு புரியும் மொழியில் படிக்கின்றோமா என்பது தான் எங்களுக்கு முக்கியம். (குர்‍ஆன் இறைவேதம் என்று பெருமைப்படும் இஸ்லாமியர்கள் அதை தனக்கு புரியாத மொழியில் படித்தால் தான் நன்மை என்றுச் சொல்லி, அதை அரபியிலேயே படிக்கிறார்களே, இதைவிட ஒரு பெரிய அறியாமை உலகில் ஏதாவது உண்டா?)

ஜியா அவர்கள் எழுதியவை:

So "Ya-huwa eloh" or "Ya-huwa elah" means "Oh he is Eloh" or "Oh he is elah". If the "Ya" (Oh) exclamatory is separated then it will sounds "Huwa elah" sounds similar to "Hu wallah" (he is allah)

"Hu walla hu ullazee la ilaha illa hu" (holy quran 59:22)

He is allah, besides whom there is no other god. (holy quran 59:22)

According to this "Halleluyah" means "Praise oh! He is Eloh" or "Praise oh! He is Elah" or "Praise oh! He is Alah".

Do you have any concern in pronouncing "elah" as "alah" even though they sound same? When you don't have concern in calling "Isah" as "Jesus" which he never heard on his life time? Does it make any sense when "Elah" can be spelled as "Alah" which both sounds same? Try in Wikipedia you will find more proof!! We request you to read the original transcripts and then learn Christianity which will help you in turn to understand the Christianity better…
உமரின் பதில்:

உங்கள் முழு கட்டுரையின் சாராம்சம் இந்த வரிகளில் காணப்படுகின்றது. உங்கள் பதிலின் முடிவுரையை இங்கு நீங்கள் கூறியுள்ளீர்கள், இந்த ஆங்கில விவரத்தை தமிழாக்கம் செய்துள்ளீர்கள், இதற்கு தான் நான் முக்கியமாக பதிலைச் சொல்லப்போகிறேன். இக்கட்டுரையின் இரண்டாம் பாகத்தில் அதற்கான பதிலைத் தருவேன்.

இஸ்லாமை காப்பாற்றுவதற்காக, வெறும் சொற்களில் அல்லது ஓசைகளில் வரும் ஒற்றுமையை வைத்துக்கொண்டு இஸ்லாமிய உலகம் வெளிப்படுத்திக்கொண்டு இருக்கும் முட்டாள் தனம் எவ்வளவு ஆபத்தானது, அறிவில்லாதது என்பதை நீங்களும் விளங்கிக்கொள்வீர்கள்.

முடிவுரை: இஸ்லாமியர்களாகிய நீங்கள் கட்டுரைகளை எழுதும்போது, வாசகர்களை ஏமாற்றக்கூடாது என்ற எண்ணத்தை மனதில் வைத்துக்கொள்ளுங்கள், மற்றும் மூல தொடுப்புக்களை பயமில்லாமல் தாருங்கள். எந்த வரிகளை நீங்கள் சொந்தமாக எழுதுகிறீர்கள், எந்த வரிகளை நீங்கள் மேற்கோள் காட்டுகிறீர்கள் என்பதை விளங்கும்படி பதியுங்கள்.

உங்கள் பதிலில்:

1) தமிழ் முஸ்லிம் தளம் கொடுத்த "அல்லேலூயா" விளக்கம் சரியானதா (அ) தவறானதா என்பதை நீங்கள் உங்கள் கருத்தைச் சொல்லவில்லை. குறைந்த பட்சம் அவர்களுக்கு நான் கொடுத்த விளக்கம் சரியா தவறா என்பதையும் கூறவில்லை.

2) அனேக தளங்களிலிருந்து விவரங்களை எடுத்துக்கொண்டு மேற்கோள் காட்டி, உங்கள் சொந்த வரிகளையும் சேர்த்துக்கொண்டு மூல தொடுப்புக்களை தராமல், வாசகர்களை சரியாக குழப்பியிருக்கிறீர்கள்.

3) ஒரு ஹிந்து சகோதரர் பைபிள் மொழியாக்கத்திற்கு உதவினார் என்பதை குறிப்பிட்டு, ஒரு ஹிந்து உதவிய மொழியாக்கத்தை எப்படி "வேதம்" என்றுச் சொல்கிறீர்கள் என்று கேட்டுள்ளீர்கள், அதற்கு நாம் பதில் அளித்துள்ளோம்.

நீங்கள் ஆங்கிலத்தில் எழுதிய வரிகளில் இருக்கும் பொதுவான விவரங்களுக்கு மட்டுமே இந்த கட்டுரையில் சிறிய பதிலை கொடுத்துள்ளேன். ஆங்கிலத்திலும், தமிழிலும் "அல்லேலூயா" வார்த்தைக்கு நீங்கள் அளித்த விளக்கத்தை மறுப்பு அடுத்த பாகத்தில் தரப்படும்.
 
உம‌ர்


--
1/30/2011 02:49:00 AM அன்று ஈஸா குர்-ஆன் - Isa Koran இல் Isa Koran ஆல் இடுகையிடப்பட்டது


அன்புள்ள அப்துல்லாவிற்கு கிறிஸ்தவ நண்பன் எழுதும் க...

 

அன்புள்ள அப்துல்லாவிற்கு கிறிஸ்தவ நண்பன் எழுதும் கடிதம் 1

ஆசிரியர்: ஜெரார்ட் நெல்ஸ்

[இது இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களிடையே தெளிவை உண்டாக்க உதவும்படிக்கு எழுதப்பட்ட கற்பனை உரையாடல் கடிதம் ஆகும். "அப்துல்லா" என்ற பெயர் அரபி மொழி பெயராகும், இதன் பொருள் "அல்லாஹ்வின் அடிமை/ஊழியன்" என்பதாகும். இந்த கடிதங்களை எழுதும் ஆசிரியரின் பெயர் "தியோபிலஸ்" என்பதாகும், இது ஒரு கிரேக்க மொழி பெயராகும், அதன் பொருள் "இறைவனால் நேசிக்கப்பட்டவன்" என்பதாகும்.]

அன்புள்ள அப்துல்லா,

நான் உன்னை சந்தித்ததில் எவ்வளவு மகிழ்ச்சி அடைந்தேன் என்பதை தெரிவிப்பதற்காக இந்த கடிதத்தை எழுதுகிறேன். ஒரு இஸ்லாமியனாகிய நீயும், கிறிஸ்தவனாகிய நானும் சந்தித்து பேசிக்கொண்டது போல எல்லாருக்கும் சம்பவிக்கும் என்று எனக்கு தோன்றவில்லை. எந்த ஒரு பெரிய வித்தியாசமுமே இல்லை என்பதாகக் காட்டிக் கொள்ளாமல், நாம் நம் இருவருக்கும் பொதுவான பல காரியங்களைக் கண்டு கொண்டோம். நாம் நம் நம்பிக்கைகளுக்கு இடையேயான வித்தியாசங்களையும் மற்றும் அவைகளை முழுமையாக ஆராயவேண்டிய அவசியம் இருக்கிறது என்பதையும் அறிந்திருக்கிறோம். நம் விவாதம் நட்புணர்வுடனும், தலைப்பிற்கு பொருத்தமானதாகவும் இருக்கவேண்டும் என்ற நம் உறுதிமொழியை, முற்றிலும் மனதுக்கு இனியதானதாக நான் கருதுகிறேன். இதன் மூலமாக இறைவன் உயர்த்தப்படுவாராக.

வாழ்க்கையைக் குறித்த எதிர்பார்ப்புகளும் நம்பிக்கைகளும் நம் இருவருக்கும் ஒன்றுபட்டு இருப்பதை உணர்ந்து கொள்வது நல்லது. குறிப்பாக, இறைவனைப் பற்றிய நமது உணர்வு என்னை ஈர்க்கிறது. மார்க்க சித்தாந்தங்கள் பற்றிய நம் புரிதல் வேறுபடலாம் என்ற போதிலும், இறைவனைக் குறித்த உள்ளுணர்வு, அன்பு மற்றும் விருப்பம் ஆகியவை குறிப்பிடத்தக்க அளவில் ஒன்றுபோல காணப்படுகிறது. இது எனக்கு உணர்த்தும் காரியம் என்னவெனில், மனிதன் இயற்கையாகவே இறைவனைக் குறித்த உள்ளார்ந்த அறிவைப் பெற்றிருக்கிறான், அதை அவரே நம் இருதயங்களில் வைத்திருக்கிறார் என்பதே.

இறைவனுடைய பார்வையில் நாம் சுத்த இருதயமுள்ளவர்களாக இருக்க வேண்டிய அவசியத்தை நாம் இருவரும் நன்கறிந்து இருக்கிறோம் என்ற உண்மை இத்துடன் தொடர்புடையதாகவும் எனக்கு மிகவும் முக்கியமானதாகவும் இருக்கிறது. இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் மாத்திரமே இறைவனைக் காண்பார்கள் (மத்தேயு 5:8) என்று இயேசு ஒரு முறை கூறியிருப்பது போல இது மிகவும் முக்கியமானதாகும். இது எனக்கு கீழ்கண்ட வசனங்களை ஞாபகப்படுத்துகிறது:

இது எனக்கு கீழ்கண்ட வசனங்களை ஞாபகப்படுத்துகிறது:

நீங்கள் முன்னே உங்கள் அறியாமையினாலே கொண்டிருந்த இச்சைகளின்படி இனி நடவாமல், கீழ்ப்படிகிற பிள்ளைகளாயிருந்து,

உங்களை அழைத்தவர் பரிசுத்தராயிருக்கிறதுபோல, நீங்களும் உங்கள் நடக்கைகளெல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள். (1 பேதுரு 1:14,15)

யாவரோடும் சமாதானமாயிருக்கவும், பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கவும் நாடுங்கள்; பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே. (எபிரேயர் 12:14)

நம்மிடம் உள்ளான பரிசுத்தம் இல்லை என்பதை நாம் அனைவரும் அறிந்திருக்கிறோம் என்று நான் கருதுகிறேன். நம்முடைய சிந்தனைகளும், செயல்களும் பெரும்பாலும் பரிசுத்தமில்லாததாகவே காணப்படுகிறது. நாம் எவ்வளவு தான் மத சடங்குகளை சட்டங்களை பின்பற்றினாலும், நம் இருதயத்தின் ஆழத்தில் நம் குறைபாட்டினால் உண்டான ஆன்மீகக் குறை குறித்து அறிந்திருக்கிறோம் என்று நான் எண்ணுகிறேன். மரணத்துடனான ஒவ்வொரு சந்திப்பு அல்லது எதிர்கொள்ளலும் நமக்குள் பிரச்சனைக்குரிய கேள்விகளை எழுப்புகின்றன. அவை மரணத்தைக் குறித்த பயத்தை நமக்குண்டாக்குகிறது - அல்லது மரணத்துக்குப் பின் என்ன நேரிடும் என்பதைக் குறித்த பயத்தை உண்டாக்குகிறது. இறைவனைத் தள்ளி விட்ட சூழ்நிலையில் ஒருவன் வாழ்க்கையை மிகவும் சந்தோசமாக வாழலாம், ஆனால் இறுதியில் மரணத்தைக் குறித்த எதிர்பார்ப்பு அவை எல்லாவற்றையும் பாழாக்கிவிடுகிறது. ஏனெனில் நாம் அனைவரும் பின்வரும் வேத கூற்றை அறிந்திருக்கிறோம்;

ஒரே தரம் மரிப்பதும், பின்பு நியாயந்தீர்ப்பு அடைவதும் மனுஷனுக்கு நியமிக்கப்பட்டு இருக்கிறது (எபிரேயர் 9:27)

இறுதியாக மனுக்குலமனைத்தும் ஒரே படகில்தான் அமர்ந்திருக்கிறோம். சிந்தனை, செயல் மற்றும் வார்த்தை ஆகிய அனைத்திலும் நாமனைவரும் இறைவனுடைய பார்வையில் குறைவுள்ளவர்களாகவே இருக்கிறோம்.

இந்தச் சூழலில் சுத்திகரிப்பை முக்கியப்படுத்துகிற மதச் சடங்காச்சாரங்களை எல்லா மதங்களும் பின்பற்றுகின்றன என்பதைக் குறிப்பிடுவது மிகவும் ஆச்சரியமானதாயிருக்கிறது அல்லவா? இவை வெறும் அடையாளச் சின்னங்களே அன்றி எந்த ஒரு மாற்றத்தையும் உண்டாக்காதவை ஆகும். இந்த சடங்காச்சாரங்களினால் நம்முடைய உடலை வெளிப்பிரகாரமாக நாம் சுத்தப்படுத்திக்கொண்டாலும், தண்ணீர் பாவத்தைக் கழுவி, ஒரு சுத்த இருதயத்தை உண்டாக்க முடியாது என்பதை நாம் நன்கறிந்திருக்கிறோம்.

உணவு சாப்பிடுவதற்கு முன்பாக கைகளைக் கழுவும் மத சடங்காச்சாரத்தை ஒரு முறை இயேசு எதிர்க்கொள்ளும் போது, கீழ்கண்ட வார்த்தைகளைச் சொன்னார்:

அதற்கு இயேசு நீங்களும் இன்னும் உணர்வில்லாதவர்களாயிருக்கிறீர்களா?
வாய்க்குள்ளே போகிறதெல்லாம் வயிற்றில் சென்று ஆசனவழியாய்க் கழிந்துபோம் என்பதை நீங்கள் இன்னும் அறியவில்லையா? வாயிலிருந்து புறப்படுகிறவைகள் இருதயத்திலிருந்து புறப்பட்டுவரும்; அவைகளே மனுஷனைத் தீட்டுப்படுத்தும். எப்படியெனில், இருதயத்திலிருந்து

பொல்லாத சிந்தனைகளும்,
கொலைபாதகங்களும்,
விபசாரங்களும்,
வேசித்தனங்களும்,
களவுகளும்,
பொய்ச்சாட்சிகளும்,
தூஷணங்களும் புறப்பட்டுவரும்.

இவைகளே மனுஷனைத் தீட்டுப்படுத்தும்; கைகழுவாமல் சாப்பிடுகிறது மனுஷனைத் தீட்டுப்படுத்தாது என்றார். (மத்தேயு 15:16-20)

மதச் சடங்குகள் என்பவை, நாம் பரிசுத்தமற்றவர்கள் என்பதை நாம் அறிந்திருக்கிற படியால், நமக்கு சுத்திகரிப்பு தேவை நினைவுபடுத்தும் ஒன்று என்பதேயன்றி வேறல்ல. தாவீது குறிப்பிட்ட ஒரு கேவலமான பாவத்தை செய்துவிட்ட பிறகு, தன்னுடைய விருப்பத்தை தன் சங்கீதத்தில் கீழ்க்கண்டவாறு மிகவும் அழகாக வெளிப்படுத்துகின்றார்.

தேவனே, உமது கிருபையின்படி எனக்கு இரங்கும், உமது மிகுந்த இரக்கங்களின்படி என் மீறுதல்கள் நீங்க என்னைச் சுத்திகரியும்.என் அக்கிரமம் நீங்க என்னை முற்றிலும் கழுவி, என் பாவமற என்னைச் சுத்திகரியும்.

என் மீறுதல்களை நான் அறிந்திருக்கிறேன்; என் பாவம் எப்பொழுதும் எனக்கு முன்பாக நிற்கிறது.

தேவரீர் ஒருவருக்கே விரோதமாக நான் பாவஞ்செய்து, உமது கண்களுக்கு முன்பாகப் பொல்லாங்கானதை நடப்பித்தேன்;
நீர் பேசும்போது உம்முடைய நீதி விளங்கவும், நீர் நியாயந்தீர்க்கும்போது உம்முடைய பரிசுத்தம் விளங்கவும் இதை அறிக்கையிடுகிறேன்.

என் பாவங்களைப் பாராதபடிக்கு நீர் உமது முகத்தை மறைத்து, என் அக்கிரமங்களையெல்லாம் நீக்கியருளும்.
தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும், நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும். (சங்கீதம் 51:1-4, 9-10)

இதுவரை பார்த்த விவரங்களை நாம் இருவரும் அங்கீகரிப்போம் என்றும் இவைகளை நாம் உணர்ந்துள்ளோம் என்றும் நான் நம்புகிறேன். எனினும் நாம் ஒத்துப்போக விரும்பாத தலைப்புகள் இன்னும் பல உண்டு. ஆன்மீக உரையாடல்களில் நம் பரஸ்பர நம்பிக்கைகளின் படி விவாதிப்பது இயற்கைதான். ஒருவர் இவ்விதமாக கூறினார், அதாவது "நம்முடைய திட நம்பிக்கைகள் பொய்களுக்கு எதிரிகளாக இருப்பதைக் காட்டிலும், உண்மைக்கு அதிகமாக எதிரிகளாக இருக்கின்றன". "திட நம்பிக்கைகள்" கருத்துக்களைக் காட்டிலும் ஒரு படி மேலே இருக்கின்றன.இந்த அடிப்படையில் விவாதங்கள் முன் அனுமானிக்கக் கூடியவைதான் : "எல்லாரும் பேசுவார்கள், மற்றவர்கள் சொல்வதைக் கேட்கமாட்டார்கள்". நாம் இப்படிப்பட்ட அணுகுமுறையைப் பின்பற்றக் கூடாது. நம் பதிலானது விவாதம் எழுப்பிய கேள்வியை நேர்மையாக எதிர்கொள்வதாகவும், எது நம்பத்தக்கது, ஏன் அதை நம்ப வேண்டும் என்பதை நாம் இருவரும் சேர்ந்து கண்டுகொள்ள வேண்டும் என்ற தீர்மானத்துடனும் இருக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன். எல்லாவற்றிற்கும் மேலாக, இது நம் நித்தியத்தை பாதிக்கிற காரணியாக இருக்கிறது. ஆகவே நாம் நம் தேடலில் மேலோட்டமாக இருக்கத் துணியக் கூடாது. நம்மில் ஒருவர் வழிவிலகிப் போய்விடுவார் என்கிற சூழலை நாம் விரும்ப வில்லை. இறைவனிடமிருந்து வந்த வெளிப்பாட்டின் மீது நம் நம்பிக்கை அமையாதவரையில், நாம் இக்கட்டான நிலையிலிருப்போம். அனைத்திற்கும் மேலாக, நாம் இறைவனின் உண்மையைப் பின்பற்றி அதை நம்புவோமாகில், நித்தியத்தை இழந்து போவது குறித்து நாம் பயப்பட என்ன இருக்கிறது? தெய்வீக உண்மை கண்டு கொள்ளக் கூடியதாகவும், ஆதாரச் சான்று உடையதாகவும் இருக்க வேண்டும்.

இப்பொழுது நாம் ஒருவரையொருவர் ஓரளவுக்கு அறிந்திருக்கிறோம். ஆகவே நாம் இருவரும் சேர்ந்து வெறுப்பின்றி, புரிந்து கொள்ளுதல் மற்றும் தெளிவான எண்ணத்துடன் இந்த உலகில் இருக்கும் எதைக்காட்டிலும் மிகவும் அதிக முக்கியமானதாக நாம் கருதுகிறதைக் கண்டு கொள்வோம் என்று நம்புகிறேன்.

இப்படிக்கு உண்மையுடன்
தியோபிலஸ்

ஆங்கில மூலம்: Dear Abdulla - Letter 1

அன்புள்ள அப்துல்லா கடிதங்கள்
ஜெரார்ட் நெல்ஸ் அவர்களின் கட்டுரைகள்


© Answering Islam, 1999 - 2011. All rights reserved.
 


--
1/23/2011 05:16:00 AM அன்று ஈஸா குர்-ஆன் - Isa Koran இல் Isa Koran ஆல் இடுகையிடப்பட்டது


இயேசு ஒரு தீர்க்கதரிசியை விட மேலானவர் என்பதற்கான ஐந்து காரணங்கள்

 

cFive Reasons Why Jesus is Not Merely a Prophet

ஆசிரியர்: கெய்த் தாம்சன்

இயேசுவை தேவனாக அல்லாது ஒரு சாதாரண தீர்க்கதரிசியாக மட்டுமே புதிய ஏற்பாடு போதிக்கிறது என்று நம்பும் முஸ்லீம் வாசகர்களுக்கு இந்தக் கட்டுரை கேள்விகளையும் வாதங்களையும் முன் வைக்கும். இயேசு ஒரு சாதாரண தீர்க்கதரிசி என்று குர்‍ஆனில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. உதாரணமாக சூரா 5:75ல் நாம் பின்வருமாறு வாசிக்கிறோம்:

" மர்யமுடைய குமாரர் மஸீஹ் இறை தூதரேயன்றி வேறில்லை....".

ஆனால் இயேசுவை நேரடியாகக் கண்டவர்கள் மற்றும் இயேசு பேசினதைக் கேட்டவர்களால் எழுதப்பட்ட முதல் நூற்றாண்டு நூல்கள் இக்கருத்துக்கு மாறான உண்மையான இயேசுவை நமக்கு காண்பிக்கின்றன. எனவே முதல் நூற்றாண்டில் வாழ்ந்த இயேசு ஒரு தீர்க்கதரிசியை விட மேலானவர் என்பதை இக்கட்டுரை நிரூபிக்கும். இயேசு ஒரு தீர்க்கதரிசியாக இருந்தார் என்றாலும் கூட அவர் சாதாரண தீர்க்கதரிசி மட்டுமல்ல என்பது இக்கட்டுரையில் எடுத்துக் காட்டப்படும். அவர் தேவன் ஆவார். கிறிஸ்துவிடமாக பிதாவானவர் இழுத்துக் கொண்டிருக்கும் முஸ்லீம்களுக்கு புதிய ஏற்பாடு, இயேசுவைக் குறித்து என்ன போதிக்கிறது என்பதைக் குறித்த தெளிவான‌ கருத்தை இந்தக் கட்டுரை அளிக்கும் என்பதே எனது நம்பிக்கையாக இருக்கிறது.

#1. இயேசு சாதாரணமான ஒரு தீர்க்கதரிசியாக மட்டும் இருந்திருந்தால் ஏன் யோவான் 5:22-23 ஆகிய வசனங்கள்:

"பிதாவைக் கனம்பண்ணுகிறது போல எல்லாரும் குமாரனையும் கனம்பண்ணும்படிக்கு பிதாவானவர் தாமே ஒருவருக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமல் நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புக் கொடுத்திருக்கிறார். குமாரனைக் கனம்பண்ணாதவன் அவரை அனுப்பின பிதாவையும் கனம் பண்ணாதவனாயிருக்கிறான்" என்று கூறுகிறது?

இயேசு ஒரு சாதாரண தீர்க்கதரிசியாக மட்டும் இருந்திருந்தால் இயேசுவைக் கனம் பண்ணுதல் அல்லது பிதாவைக் கனம் பண்ணுவது போல இயேசுவைக் கனம் பண்ணுதல் என்பது தேவ தூஷணமாகுமல்லவா? அல்லாஹ்வைக் கனம் பண்ணுவது போலவே முஹம்மது நபியைக் கனம் பண்ணுதல் என்பது ஒரு முஸ்லீமுக்கு ஏற்புடையதாக இருக்குமா?

"போல" என்பதைக் குறிக்கும் "kathōs" என்கிற கிரேக்க வார்த்தைக்கான பொருள்/விளக்கம்: "… ஒரே விதத்தில், உள்ள படி, சமமான படி, அதே அளவின் படி, அந்த நிலையில்..." என்று வருகிறது.

The primary definition of Greek word for "just as" (kathōs) is "… according as, just as, even as, in proportion as, in the degree that." 1

ஆகவே, நாம் பிதாவாகிய தேவனைக் கனம் பண்ணி பயபக்தியுடன் இருப்பது போலவே, இயேசுவையும் அதே நிலையில் வைத்து கனம் பண்ணி பயபக்தியுடன் இருக்க வேண்டும் என்று இந்த வசனம் விசுவாசிகளுக்கு கட்டளையிடுகிறது என்பதில் எவ்வித ஐயமுமில்லை. பிதாவாகிய தேவன் மிக உயர்ந்த நிலையில் தேவனாக இருக்கிறார். இயேசுவும் அதே போல மிக உயரிய நிலையில் இருக்கிறார். ஆகவே, இயேசு சாதாரண தீர்க்கதரிசியை விட மேலானவர் ஆவார்.

#2. இயேசு ஒரு தீர்க்கதரிசியாக மட்டும் இருந்திருந்தால், பின்னர் ஏன் வெளிப்படுத்தல் 5:8-14 வரையிலான வசனங்கள் தேவ தூதர்கள் மற்றும் மூப்பர்கள் ஆகியோரையும் சேர்த்து பரலோகத்திலுள்ளவைகள் அனைத்தும் இயேசு துதிக்கும் மகிமைக்கும் கனத்திற்கும் மற்றும் வல்லமைக்கும் என்றும் பாத்திரர் என்று ஏன் கூறுகின்றன?

இயேசு தேவனாக இல்லாமல் சாதாரண தீர்க்கதரிசியாக இருந்தால், தேவனுக்கு மட்டுமே உரிய ஆராதனையிலிருந்து தவறுவதாக அது இருக்குமல்லவா? அது தேவனுக்கு மட்டுமே உரிய ஆராதனையாக இருக்குமென்றால், அது இயேசு ஒரு தீர்க்கதரிசியை விட மேலானவர் என்பதை உறுதிப்படுத்துகிறது அல்லவா? வெளிப்படுத்தல் 5:8-14 கூறுவதாவது:

அந்தப் புஸ்தகத்தை அவர் வாங்கினபோது, அந்த நான்கு ஜீவன்களும், இருபத்துநான்கு மூப்பர்களும் தங்கள் தங்கள் சுரமண்டலங்களையும், பரிசுத்தவான்களுடைய ஜெபங்களாகிய தூபவர்க்கத்தால் நிறைந்த பொற்கலசங்களையும் பிடித்துக்கொண்டு, ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாக வணக்கமாய் விழுந்து: தேவரீர் புஸ்தகத்தை வாங்கவும் அதின் முத்திரைகளை உடைக்கவும் பாத்திரராயிருக்கிறீர்; ஏனெனில் நீர் அடிக்கப்பட்டு, சகல கோத்திரங்களிலும் பாஷைக்காரரிலும் ஜனங்களிலும் ஜாதிகளிலுமிருந்து எங்களைத் தேவனுக்கென்று உம்முடைய இரத்தத்தினாலே மீட்டுக்கொண்டு, எங்கள் தேவனுக்குமுன்பாக எங்களை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கினீர்; நாங்கள் பூமியிலே அரசாளுவோம் என்று புதிய பாட்டைப் பாடினார்கள். பின்னும் நான் பார்த்தபோது, சிங்காசனத்தையும் ஜீவன்களையும் மூப்பர்களையும் சூழ்ந்திருந்த அநேக தூதர்களுடைய சத்தத்தைக் கேட்டேன்; அவர்களுடைய இலக்கம் பதினாயிரம் பதினாயிரமாகவும், ஆயிரமாயிரமாகவுமிருந்தது. அவர்களும் மகா சத்தமிட்டு: அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவர் வல்லமையையும் ஐசுவரியத்தையும் ஞானத்தையும் பெலத்தையும் கனத்தையும் மகிமையையும் ஸ்தோத்திரத்தையும் பெற்றுக்கொள்ளப் பாத்திரராயிருக்கிறார் என்று சொன்னார்கள். அப்பொழுது, வானத்திலும் பூமியிலும் பூமியின் கீழுமிருக்கிற சிருஷ்டிகள் யாவும், சமுத்திரத்திலுள்ளவைகளும், அவற்றுளடங்கிய வஸ்துக்கள் யாவும்: சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் ஸ்தோத்திரமும் கனமும் மகிமையும் வல்லமையும் சதா காலங்களிலும் உண்டாவதாக என்று சொல்லக்கேட்டேன். அதற்கு நான்கு ஜீவன்களும்: ஆமென் என்று சொல்லின. இருபத்து நான்கு மூப்பர்களும் வணக்கமாய் விழுந்து சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவரைத் தொழுதுகொண்டார்கள்.

#3. மனுக்குலத்தில் உள்ள அனைவரையும் போல வாழ்க்கையை கரு தோன்றியதில் இருந்து ஆரம்பித்த இயேசு சாதாரணமானதொரு தீர்க்கதரிசியாக இருந்திருந்தால், ஏன் புதிய ஏற்பாடு, இயேசுவானவர் பிதாவோடு கூட முன்னமே தனித்துவமான மகிமையில் வாசம் செய்தார் என்று போதிக்கிறது?

பிலிப்பியர் 2:6-11 குறிப்பிடுவதாவது:

அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார். ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி, இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும், பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசு கிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்.

இயேசு தேவனுடைய ரூபமாக (தேவனுடய மகிமையாக) முன்பே இருந்தார் என்பதையும், ஒரு மனிதனாக தம்மைத் தாழ்த்தினார் என்பதையும் கவனியுங்கள். தேவனின் வல்லமை மற்றும் சக்தி இருந்தாலொழிய இயேசு தம்மைத்தாமே தாழ்த்தி மனிதனாக வருவது என்பது சாத்தியமில்லாத காரியமாயிருக்கிறபடியால் இயேசு தெய்வீக வல்லமை உடைவராக இருந்தார் என்பதை இது காண்பிக்கிறது. இதேபோல, யோவான் 8:58ல் இயேசு தாம் மனிதனாக தோன்றுவதற்கு முன்பே இருந்து வருகிறதை பின்வருமாறு விளக்கினார், "அதற்கு இயேசு: ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்".

கவனியுங்கள் ஆபிரகாம் வாழ்வதற்கு முன்னமே நான் இருந்தேன் என்று மட்டும் இயேசு சொல்லாமல், ஆபிரகாம் பிறப்பதற்கு முன்னமே தாம் தேவனாக இருந்ததாக சொல்வதை "நான்...இருக்கிறேன் – I AM" என்று தேவனுக்கு உரிய பதத்தை பயன் படுத்துவதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.2

#4. இயேசு சாதாரண‌மான ஒரு தீர்க்கதரிசியாக மட்டும் இருந்திருந்தால், தாம் கொல்லப்படும் போது, தம்மைத் தாமே உயிரோடெழுப்புவதற்கு தனக்கு வல்லமை உண்டு என்று ஏன் கூறினார்?

ஒரு தீர்க்கதரிசியால் எப்பொழுதாவது இப்படிக் கூற முடியுமா? தாம் மரித்த பிறகு தமது சரீரத்தை உயிரோடு எழுப்பிக்கொள்ள தன்னால் முடியும் என்று இயேசு கூறியதால், அவர் மரித்த பிறகும், இறைவனைப் போல தெய்வீக வல்லமையோடு இருப்பதாக இந்த வார்த்தைகள் காட்டவில்லையா? தேவன் மனிதனானால் மட்டுமே இதைச் செய்ய முடியும் என்று நாம் எதிர்பார்க்கிற ஒரு காரியமாக இது இருக்கிறதல்லவா?

யோவான் 2:19-21 மற்றும் யோவான் 10:17 குறிப்பிடுவதாவது:

இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: இந்த ஆலயத்தை இடித்துப்போடுங்கள், மூன்று நாளைக்குள்ளே இதை எழுப்புவேன் என்றார். அப்பொழுது யூதர்கள்: இந்த ஆலயத்தைக் கட்ட நாற்பத்தாறு வருஷம் சென்றதே, நீர் இதை மூன்று நாளைக்குள்ளே எழுப்புவீரோ என்றார்கள். அவரோ தம்முடைய சரீரமாகிய ஆலயத்தைக்குறித்துப் பேசினார். (யோவான் 2:19-21)

நான் என் ஜீவனை மறுபடியும் அடைந்துகொள்ளும்படிக்கு அதைக் கொடுக்கிறபடியினால் பிதா என்னில் அன்பாயிருக்கிறார். (யோவான் 10:17)

#5. இயேசு தமது தீர்க்கதரிசன அழைப்பை மட்டும் பிரசங்கித்துக் கொண்டு ஒரு சாதாரண தீர்க்கதரிசியாக இருந்திருந்தால், ஏன் அவருடைய கூற்றுகள் தாம் தேவனுக்கு சமமாக இருப்பதாகவும், தாம் தேவனாக இருப்பதாகவும் கூறுகின்றன‌?

யோவான் 10:33 மற்றும் யோவான் 5:18ல் நாம் பின்வருமாறு வாசிக்கிறோம்:

அவர் ஓய்வுநாள் கட்டளையை மீறினதுமல்லாமல், தேவனைத் தம்முடைய சொந்தப் பிதா என்றுஞ் சொல்லித் தம்மைத் தேவனுக்குச் சமமாக்கினபடியினாலே, யூதர்கள் அவரைக் கொலைசெய்யும்படி அதிகமாய் வகைதேடினார்கள்.

(யோவான் 5:18)

யூதர்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: நற்கிரியையினிமித்தம் நாங்கள் உன்மேல் கல்லெறிகிறதில்லை; நீ மனுஷனாயிருக்க, உன்னைத் தேவன் என்று சொல்லி, இவ்விதமாகத் தேவதூஷணஞ் சொல்லுகிறபடியினால் உன்மேல் கல்லெறிகிறோம் என்றார்கள்.

(யோவான் 10:33)

இயேசுவின் காலத்தில் வாழ்ந்த மக்கள் மற்றும் அப்போஸ்தலனாகிய யோவான் எழுதிய எழுத்துக்களும் இங்கே அவர் பயன்படுத்தியிருக்கிற வார்த்தைகள் அவருடைய தெய்வீகத்தை உறுதிப்படுத்துவதில் மிகவும் வெளிப்படையாக இருக்கிறது என்பதை காட்டுகிறது. அவர் தம்மை தேவனாக உரிமைப் பாராட்டினார் என்பதை அவர்கள் சந்தேகமின்றி அறிந்திருந்தனர். வேதாகமம் அல்லது குர்‍ஆனில் ஏதாவது ஒரு தீர்க்கதரிசியின் போதனையைக் கேட்ட மக்கள், அவர் தன்னை தேவனாக உரிமைப் பாராட்டுவதாக நம்பச் செய்யும்படிக்கு ஏதாவது ஆதாரங்கள் இருக்கின்றதா?

முடிவுரை:

முதல் நூற்றாண்டைச் சேர்ந்த தொன்மையான குறிப்புகள் இயேசு ஒரு சாதாரண தீர்க்கதரிசியிலும் மேலானவர் என்பதைக் காண்பிக்கின்றன என்பதே உண்மை ஆகும். எந்த தீர்க்கதரிசியும் பேசாத செய்யாத காரியங்களை இயேசு செய்தார். ஒரு சாதாரண தீர்க்கதரிசியால் செய்ய முடியாத பல காரியங்கள் இயேசுவைக் குறித்துச் சொல்லப்பட்டிருக்கின்றன. இப்படியாக வரலாற்றுப் பூர்வமாகவும் மற்றும் இறையியல் பூர்வமாக சொல்லுவதானால் - இயேசு ஒரு தீர்க்கதரிசியை விடவும் மேலானவர்- இயேசு இறைவன் ஆவார்.

இயேசுவைக் குறித்து முதல் நூற்றாண்டுக் குறிப்புகள் என்ன சொல்லுகின்றன என்பதை உண்மையாகவே அறிந்துகொள்ள விரும்பி; கிறிஸ்துவிடமாக இழுக்கப்படும் ஒவ்வொரு முஸ்லீமுக்கும் இந்த தகவல்கள் பிரயோஜனமாக இருப்பதாக.

கிறிஸ்து உயிர்த்தெழுந்தார். அவர்" கர்த்தர்.

பின் குறிப்புக்கள்:

1 Joseph Henry Thayer, A Greek-English lexicon of the New Testament, [Harper, 1887], p. 315

2. "இருக்கிறேன் (I AM)" என்பது பழைய ஏற்பாட்டில் தேவன் தனக்குத் தானே கொடுத்துக்கொண்ட தெய்வீகப் பட்டப்பெயராகும். உதாரணத்திற்கு, யாத்திராகமம் 3:14ல் தேவன் மோசேயை நோக்கி: "அதற்குத் தேவன்: இருக்கிறவராக இருக்கிறேன் (I AM WHO I AM) என்று மோசேயுடனே சொல்லி, இருக்கிறேன் (I AM) என்பவர் என்னை உங்களிடத்துக்கு அனுப்பினார் என்று இஸ்ரவேல் புத்திரரோடே சொல்வாயாக என்றார்". இந்த தெய்வீக பட்டப்பெயர் பழைய ஏற்பாட்டின் செட்பாஜின்ட் கிரேக்க மொழியாக்கத்தில் "egō eimi" என்று மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதே வார்த்தையைத் தான் இயேசுவும் யோவான் 8:58ல் தனக்குத் தானே "இருக்கிறேன் (I AM)" என்று கூறினார், அதாவது தன்னை தேவன் என்று வெளிப்படுத்தினார்.

ஆங்கில மூலம்: Five Reasons Why Jesus is Not Merely a Prophet

கெய்த் தாம்சன் கட்டுரைகள்


© Answering Islam, 1999 - 2011. All rights reserved.
 
 


--
1/23/2011 05:23:00 AM அன்று ஈஸா குர்-ஆன் - Isa Koran இல் Isa Koran ஆல் இடுகையிடப்பட்டது


முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?

 

முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?

Does Muhammad Pass the 1 John 4 Prophethood Test?

ஆசிரியர்: கெய்த் தாம்சன்

பிரியமானவர்களே, உலகத்தில் அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதினால், நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனால் உண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள். தேவ ஆவியை நீங்கள் எதினாலே அறியலாமென்றால்: மாம்சத்தில் வந்த இயேசு கிறிஸ்துவை அறிக்கைபண்ணுகிற எந்த ஆவியும் தேவனால் உண்டாயிருக்கிறது. மாம்சத்தில் வந்த இயேசு கிறிஸ்துவை அறிக்கைபண்ணாத எந்த ஆவியும் தேவனால் உண்டானதல்ல; வருமென்று நீங்கள் கேள்விப்பட்ட அந்திக்கிறிஸ்துவினுடைய ஆவி அதுவே, அது இப்பொழுதும் உலகத்தில் இருக்கிறது. (1 யோவான் 4:1-3)

இஸ்லாமிய அறிஞர்கள் 1 யோவான் 4ம் அதிகாரத்தின் முதல் மூன்று வசனங்களை மட்டும் மேற்கோள் காட்டி, இதன் படி, முஹம்மது நபித்துவ பரிட்சையில் வெற்றி பெற்று இருக்கிறார் என்று சொல்கிறார்கள். இந்த இஸ்லாமிய அறிஞர்களின் வாதம் என்னவென்றால், மனிதனாக (மாமிசத்தில்) வந்த கிறிஸ்துவை முஹம்மது அறிக்கையிடுவதினால், முஹம்மது இந்த பரிட்சையில் வெற்றி பெறுகிறார், ஆகையால் முஹம்மதுவை கிறிஸ்தவர்கள் ஒரு உண்மை தீர்க்கதரிசி (நபி) என்று நம்பவேண்டும் என்பதாகும். சமி ஜாதாரி என்ற இஸ்லாமிய அறிஞர் கீழ்கண்டவாறு கூறுகிறார்:

"இந்த வசனங்களில் சொல்லப்பட்டுள்ள "விசுவாசியின் தன்மைக்கு" முஹம்மது சரியாக பொறுந்துகிறார்!

....

ஆகையால் க‌வ‌னியுங்கள், இயேசு தான் கிறிஸ்து என்று யார் சொல்கிறாரோ (அறிக்கையிடுகிறாரோ) அவர் தேவனிடத்திலிருந்து வந்தவர் என்று பொருள். இதன்படி, யார் யாரெல்லாம் "இயேசு, கிறிஸ்து அல்ல" என்றுச் சொல்கிறார்களோ அவர்கள் "அந்திக் கிறிஸ்து" என்று அர்த்தமாகும். இதனால், முஹம்மது இறைவனிடமிருந்து வந்தவராகிய நபியாவார்கள், ஏனென்றால் முஹம்மது, "இயேசு தான் கிறிஸ்து (ஈஸா மஸீஹா)" என்று அறிக்கையிட்டுள்ளார்கள். (மூலம்)

சமி ஜாதாரி அவர்களின் இப்படிப்பட்ட வாக்குவாதங்களில் உள்ள குறைகளை கீழ்கண்ட விவரங்களின் மூலம் அறிந்துக்கொள்ளலாம்.

1) "கிறிஸ்து மாமிசத்தில் வந்தார் என்கின்ற அறிக்கை" என்பதின் பொருளை ஜாதாரி புரிந்துக்கொள்ளவில்லை.

2) ஒரு தீர்க்கதரிசியை பரிசோதிக்க தேவையான பரிட்சை, வெறும் முதல் மூன்று வசனங்களில் மட்டும் சொல்லப்படவில்லை, அதற்கு பதிலாக இந்த பரிட்சை அந்த அதிகாரம் முழுவதும் வியாபித்து உள்ளது.

நாம் மேலே கண்ட முதல் விவரம் பற்றி இரண்டு விளக்கங்கள் உள்ளது. இதில் முதலாவது விளக்கம் என்னவென்றால், "மாமிசத்தில் வந்த கிறிஸ்துவை அறிக்கை பண்ணுவது" என்பது, "இறைவன் மனிதனாக வந்தார், அதாவது இயேசு மனித அவதாரமெடுத்தார்" என்பதை குறிப்பதாகும். (யோவான் 1:1-3, பிலிப்பியர் 2:6-11, யோவான் 8:58).

இதைப் பற்றி டாக்டர் பிரான்ஸிஸ் எ கீப்பெர் (Dr. Francis A. Schaeffer) கீழ்கண்டவிதமாக கூறுகிறார்:

"தீர்க்கதரிசிகளையும் ஆவிகளையும் பரிசோதிக்க, அவர்கள் இயேசு மனிதனாக (மாமிசத்தில்) வந்தார் என்று அறிக்கையிடுகின்றனவா இல்லையா என்பதை பார்க்கவேண்டும். இந்த அறிக்கை இரண்டு பிரிவுகளை உட்கொண்டது. அதாவது இயேசு ஆதி முதலே இருக்கிறார் என்பதையும், அவர் மனிதனாக வந்தார் என்பதையும் உறுதிப்படுத்துகிறது. வேறுவகையில் கூறவேண்டுமானால், ஆவிகளும் தீர்க்கதரிசிகளும் இயேசு ஆதிமுதலே இருக்கிறார் என்பதை அங்கீகரிக்கவேண்டும், அதோடு கூட அவர் மனிதனாக வந்தார் என்பதையும் அறிக்கையிடவேண்டும்.

"The Spirits and prophets are to be tested by whether they confess that Jesus "is come in the flesh," a confession that has two elements of content. It affirms both that Jesus existed before and also that He has come in the flesh. In other words, spirits and prophets must acknowledge both Jesus' pre-existence and His incarnation."[1]

ஆகையால், இயேசு ஆதிமுதலாக இறைவனாக இருக்கிறார், அவர் மனிதனாக வந்தார் என்று வேதம் தெளிவாகச் சொல்வதை முஹம்மது அறிக்கையிடவில்லை, எனவே முஹம்மது நபித்துவ பரிட்சையில் தோற்றுவிடுகிறார். இரண்டாவதாக, "மாமிசத்தில் இயேசு வந்தார் என்று அறிக்கை பண்ணுவது" என்பது, நாக்ஸ்டிக் (Gnostic) என்ற ஒரு மார்க்கத்தின் கோட்பாட்டிற்கு எதிராக உள்ளது எனலாம். இந்த குறிப்பிட்ட மார்க்கத்தவர்களின் நம்பிக்கையின் படி, உலகம் எல்லாம் தீயதாக உள்ளது, அப்படி இருக்கும்போது இயேசு மனிதனாக வந்தார் என்பதை ஏற்கமுடியாது என்பது அவர்களின் நம்பிக்கை. இவர்களின் படி, இயேசு ஒரு ஆவியாக இருந்தார், அவர் மனிதனாக இல்லை என்பதாகும் [2]. இவர்களின் விளக்கத்தை ஒருவேளை சரி என்று நாம் நினைத்தாலும், "இயேசு மனிதனாக வந்தார்" என்பது அவரின் உண்மை தெய்வீகத்தன்மையை வெளிப்படுத்துகிறதாக இருக்கிறது. அதாவது அவர் ஆதியிலிருந்தே (உலக தோற்றத்திற்கு முன்பே) இருக்கிறார் மற்றும் அவர் மனிதனாக வந்தார் என்பதை காட்டுகிறது. இந்த இரண்டு விவரங்களும் ஒன்றுக்கொன்று எதிரானது அல்ல. அதாவது இயேசு மாமிசத்தில்(மனிதனாக) வந்தார் என்று கூறினால், அவர் ஏற்கனவே இருந்திருக்கிறார் (Pre-Exist) என்பது புரிகின்றது. வேதத்தின் வெளிச்சத்தில் காணும் போது, திரித்துவத்தில் இரண்டாம் நபராக உள்ள இயேசு பரலோகத்தை விட்டு மகிமையை விட்டு இறங்கி மனிதனாக வந்தார் என்பது புரியும்.

ஒரு வேளை இஸ்லாமிய அறிஞராகிய ஜாதாரி மேற்கண்ட வசனத்தை மேலோட்டமாக புரிந்துக்கொண்டு, யார் யாரெல்லாம் "இயேசு தான் மேசியா (கிறிஸ்து)" என்று அறிக்கையிடுகிறார்களோ அவர்கள் எல்லாம் இறைவன் அனுப்பிய நபிகள் (தீர்க்கதரிசிகள்) என்று முடிவை எடுப்பாரானால், இது அவருக்கு பிரச்சனையாக மாறும். ஏனென்றால், அவரின் இந்த வாதத்தின் படி அவர் மர்மோனிசம் என்ற மார்க்கத்தை ஸ்தாபித்த ஜோசப் ஸ்மித் என்பவரும் இறைவன் அனுப்பிய நபி (தீர்க்கதரிசி) என்று நம்பவேண்டும். ஏனென்றால், ஜோசப் ஸ்மித் என்பவரும் "இயேசு தான் மஸீஹா" என்று அறிக்கையிட்டார், அங்கீகரித்தார். ஆனால், ஜோசப் ஸ்மித் ஒரு நபி என்று ஜாதாரி அங்கீகரிக்கமாட்டர் என்று நமக்கு நன்றாகத் தெரியும். இயேசு தான் மேசியா (மஸீஹா) என்று முஹம்மது கூறியதால், அவர் ஒரு உண்மையான நபி என்றும் அவர் இறைவனிடமிருந்து வந்தார் என்றும் ஜாதாரி கூறுவாரானால், அதே நிலையில் உள்ள ஜோஸப் ஸ்மித்தையும் ஒரு நபி என்றும் அவரையும் இறைவன் தான் அனுப்பினார் என்றும் ஜாதாரி நம்பவேண்டும். ஆனால், இப்படி ஜாதாரி நம்புவாரா? நம்பமாட்டார் [3]. ஆக, 1 யோவான் 4ம் அதிகாரம் முதல் மூன்று வசனங்கள் கூறும் கிறிஸ்துவின் தெய்வீகத் தன்மையை ஜாதாரி அறியாததால், அவரின் வாதம் இதோடு தோற்றுப்போகிறது.

1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் முஹம்மது தோற்றுப் போகிறார்:

ஜாதாரி செய்த இரண்டாம் பிழை என்னவென்றால், நபித்துவத்தின் பரிட்சை வெறும் முதல் மூன்று வசனங்களில் மட்டுமே அடங்கியுள்ளது என்று தவறாக நினைத்துவிட்டார். ஆனால், அந்த அதிகாரம் முழுவதும் உண்மையான கிறிஸ்தவர்களாக இருப்பதற்கு எப்படிப்பட்ட பரிட்சைகளில் நாம் வெற்றிப் பெறவேண்டும் என்பதைப் பற்றி பேசுகின்றது. இந்த பரிட்சைகளில் முஹம்மது தோல்வியை தழுவுகிறார். உதாரணத்திற்கு, முஹம்மது ஒரு கிறிஸ்து எதிரி (அந்திக் கிறிஸ்து) என்பதற்கும், இதனால் அவரை நாம் பின் பற்றக்கூடாது என்பதற்கும், 1 யோவான் 4:15ம் வசனத்தை பார்ப்போம்:

இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று அறிக்கைபண்ணுகிறவன் எவனோ அவனில் தேவன் நிலைத்திருக்கிறார், அவனும் தேவனில் நிலைத்திருக்கிறான். (1 யோவான் 4:15)

பரிட்சை என்பது மூன்று வசனங்களோடு மட்டும் முடிந்துவிடவில்லை என்பதை இந்த வசனம் தெளிவாக காட்டுகின்றது. இந்த 15ம் வசனத்தில் நாம் பார்க்கிறோம், அதாவது ஒருவர் தேவனுக்குள் இருக்கிறார் (அல்லது) உண்மையான விசுவாசியாக இருக்கிறார் என்றுச் சொல்லவேண்டுமானால், அவர் இயேசு தேவகுமாரன் என்பதை நம்பவேண்டும் மற்றும் அறிக்கையிடவேண்டும். ஆனால், கிறிஸ்துவின் எதிரியாகிய (அந்திக் கிறிஸ்துவாகிய) முஹம்மது இதனை மறுத்தார், அதாவது இயேசு தேவகுமாரன் இல்லை என்று கூறினார், பார்க்க குர்‍ஆன் 19:34-35.

இ(த்தகைய)வர் தாம் மர்யமுடைய புதல்வர் ஈஸா (ஆவார்) எதைக் குறித்து அவர்கள் சந்தேகம் கொண்டிருக்கிறார்களோ அதுபற்றிய உண்மையான சொல் (இதுவே ஆகும்). அல்லாஹ்வுக்கு எந்த ஒரு புதல்வனையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை அவன் தூயவன்; அவன் ஒரு காரியத்தைத் தீர்மானித்தால், "ஆகுக!" என்று தான் கூறுவான்; (உடனே) அது ஆகிவிடுகிறது. (குர்‍ஆன் 19:34-35)

ஆக, 1 யோவான் 4ம் அதிகாரத்தின் நபித்துவ பரிட்சையில் முஹம்மது தோற்றுப்போகிறார் மற்றும் அவர் ஒரு பொய் நபி என்பதும் இதன் மூலம் நிரூபனமாகிறது. தேவனின் அன்பின் உண்மைச் செய்தி என்னவென்றால், தேவன் தம்முடைய குமாரனை உலக மக்களின் பாவங்களுக்காக மரிக்க அனுப்பினார் என்பதாகும்.

நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்ததினால் அல்ல, அவர் நம்மிடத்தில் அன்புகூர்ந்து, நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலியாகத் தம்முடைய குமாரனை அனுப்பினதினாலே அன்பு உண்டாயிருக்கிறது. (1 யோவான் 4:10)

அந்திக் கிறிஸ்துவின் ஆவியினால் ஆட்கொள்ளப்படவராக முஹம்மது தோல்வியுற்று ஒரு பொய் நபி என்று நிருபிக்கப்பட்டுள்ளார். இயேசு நம்முடைய பாவங்களுக்காக சிலுவையில் செய்த அந்த தியாக பலியை முஹம்மது மறுத்தார் மற்றும் அந்த சிலுவை நிகழ்ச்சியை கண்ட அனைவரையும் அல்லாஹ் தந்திரமாக‌ ஏமாற்றியதாக முஹம்மது கூறினார்.

இன்னும், "நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் தூதராகிய - மர்யமின் குமாரராகிய-ஈஸா மஸீஹை கொன்றுவிட்டோம்" என்று அவர்கள் கூறுவதாலும் (அவர்கள் சபிக்கப்பட்டனர்). அவர்கள் அவரைக் கொல்லவுமில்லை, அவரை அவர்கள் சிலுவையில் அறையவுமில்லை. ஆனால் அவர்களுக்கு (அவரைப் போன்ற) ஒருவன் ஒப்பாக்கப்பட்டான்;. மேலும் இ(வ் விஷயத்)தில் அபிப்ராய பேதம் கொண்டவர்கள், அதில் சந்தேகத்திலேயே இருக்கின்றார்கள் - வெறும் யூகத்தைப் பின்பற்றுவதேயன்றி அவர்களுக்கு இதில் எத்தகைய அறிவும் கிடையாது. நிச்சயமாக அவர்கள், அவரைக் கொல்லவே இல்லை. (குர்‍ஆன் 4:157)

முடிவுரை:

1 யோவான் 4ம் அதிகாரத்தைக் காட்டி இஸ்லாமிய அறிஞர்கள் முஹம்மதுவின் நபித்துவத்தை நிலை நிறுத்த முயற்சி எடுத்தாலும், அந்த முயற்சி தோல்வியுற்றதை நாம் கண்டோம். "இயேசுக் கிறிஸ்து மாமிசத்தில் வெளிப்பட்டார்/வந்தார்" என்பதின் பொருளை அவர்கள் அறிந்துக்கொள்ளவில்லை. இந்த வசனங்கள் இயேசுவின் ஆதித் தன்மையையும், அவரது மனித அவதாரத்தையும் காட்டும் வசனமாக இருப்பதை நாம் கண்டோம். மேலும், நபித்துவ பரிட்சையானது 4ம் அதிகாரத்தின் முதல் மூன்று வசனங்களோடு நின்றுவிடவில்லை அது முழு அதிகாரமும் வியாபித்து உள்ளது என்பதையும் கண்டோம். இதன் மூலமாக முஹம்மது ஒரு பொய்யான தீர்க்கதரிசி என்றும், அவர் அந்திக் கிறிஸ்துவின் ஆவியை உடையவர் என்றும் நிருபனமாகியுள்ளது. நற்செய்தி நூல்களில் கூறப்பட்டுள்ள இயேசுவின் குமாரத்துவம் மற்றும் சிலுவை மரணத்தை மறுப்பதினால் முஹம்மது அந்திக் கிறிஸ்துவின் ஆவியை உடையவர் என்பது திண்ணம்.

கிறிஸ்து உயிர்த்தெழுந்தார், அவரே தேவன்.

பின் குறிப்புக்கள்:

1 Francis A. Schaeffer, A Christian View of spirituality, Vol. 3, [Good News Publishers, 1985], p. 179
2 Wayne Grudem, Systematic Theology: An Introduction to Biblical Doctrine, [Zondervan, 1994], p. 540
3 ஜாதாரி அவர்கள் ஜோசப் ஸ்மித் என்பவர் மட்டும் உண்மையான நபி இல்லை, மிர்ஜா குலாம் அஹமத் மற்றும் பஹாயுல்லாஹ் போன்றவர்களும் உண்மையான நபிகள் என்று அங்கீகரிக்கவேண்டும். ஏனென்றால், அஹமதீயா இயக்கத்தின் தலைவராகிய மிர்ஜா குலாம் அஹமத் அவர்களும், பஹாய் மத ஸ்தாபகருமான பஹாயுல்லாஹ் அவர்களும், முஹம்மதுவைப் போலவே, பூமியில் ஒரு மனிதராக வாழ்ந்த இயேசு ஒரு மஸீஹா என்று அங்கீகரித்தார்கள்.

ஆங்கில மூலம்: Does Muhammad Pass the 1 John 4 Prophethood Test?

கெய்த் தாம்சன் கட்டுரைகள்


© Answering Islam, 1999 - 2011. All rights reserved.
 
 


--
1/23/2011 05:19:00 AM அன்று ஈஸா குர்-ஆன் - Isa Koran இல் Isa Koran ஆல் இடுகையிடப்பட்டது


இஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்

முன் பக்கம் செல்ல

HOME PAGE

தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்

1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1

2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2

3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3

4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4

பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்

1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1

2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2

பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்

1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்

2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்