இஸ்லாம் அமைதி மார்கமா? இஸ்லாம் இனிய மார்கமா? இஸ்லாம் உண்மையான மார்கமா?

ஆன்சரிங் இஸ்லாம்

பல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்

சத்தியவான் தளம் செல்ல

Wednesday, July 25, 2012

ரமளான் நாள் 5 – கிறிஸ்தவத்தின் தொடர்ச்சி இஸ்லாம் அல்ல

 

[அன்புள்ள தம்பிக்கு உமர் எழுதும் கடிதங்கள்: கடிதம் 1, கடிதம் 2, கடிதம் 3, கடிதம் 4 ]
அன்பு தம்பிக்கு,

உனக்கு சமாதானம் உண்டாவதாக.

என்னுடைய முந்தைய கடிதத்தை நீ படித்து இருப்பாய் அதாவது, அல்லாஹ்விற்கும், பைபிளின் தேவனுக்கும் எந்த ஒரு சம்மந்தமும் இல்லை என்பதை விளக்கியிருந்தேன். 

இந்த கடிதத்தில் கிறிஸ்தவர்களிடம் இஸ்லாமியர்கள் சொல்லும் இன்னொரு தவறான தகவல் பற்றி விளக்குகிறேன்.

சபை ஐக்கியம்: ஒரு கிறிஸ்தவர் சபை ஐக்கியத்தில் தொடர்ந்து பங்கு பெற்று, பைபிளை படித்து தியானித்து, பழைய ஏற்பாடு மற்றும் புதிய ஏற்பாட்டின் பொதுவான வேத அறிவை பெற்று இருந்தால், அவரிடம் இஸ்லாமியர்களின் வாதம் எடுபடாது. அவர்கள் சொல்லும் விவரங்களை அந்த கிறிஸ்தவன் பைபிளோடு உரசிப்பார்த்து அவர்கள் சொல்லும் விவரங்களில் எது உண்மை எது தவறு என்று அறிந்துக்கொள்வான். ஆனால், சபை ஐக்கியத்தில் ஈடுபடாமல், வேதத்தில் அதிகமாக முக்கியத்தும் காட்டாத சராசரி கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்களின் வாதத்தை நம்பிவிடுகின்றனர். கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்களாக மாறுவதற்கு அனேக காரணங்கள் உண்டு, அதில் சபை ஐக்கியத்தை விட்டுவிடுதலும் ஒரு முக்கியமான காரணமாக இருக்கிறது.

ஏன் இஸ்லாம் கிறிஸ்தவத்தின் தொடர்ச்சி இல்லை என்பதை இப்போது காண்போம்:

1.       அல்லாஹ் தம்மை பைபிளின் தேவனோடும், அவரது தீர்க்கதரிசிகளோடும், பைபிளின் நிகழ்ச்சிகளோடும் சம்மந்தப்படுத்திக் கொள்கிறார். இது தவறானதாகும், ஏனென்றால், நான் உனக்கு எழுதிய முந்தைய கடிதத்தில் குறிப்பிட்டதுபோல, அல்லாஹ்வும் பைபிளின் தேவனும் வெவ்வேறானவர்கள்.

2.       பழைய மற்றும் புதிய ஏற்பாட்டின் படி, தேவன் மேசியாவை அனுப்பி தம் திட்டத்தை நிறைவேற்றியுள்ளார். அதாவது இயேசுவின் முதல் வருகை மற்றும் அவர் நிறைவேற்றிய காரியங்கள் யெகோவா தேவனின் மிகப்பெரிய வெற்றியாகும்.

3.       அதே பழைய மற்றும் புதிய ஏற்பாட்டின் படி, மேசியாவின் இரண்டாம் வருகைக்காக உலகம் காத்துக்கொண்டு இருக்கிறது. பைபிள் தெளிவாக முழு விவரங்களையும் சொல்லும் போது, இடையில் இஸ்லாம் எங்கேயிருந்து வந்தது?

4.       குர்-ஆனில் பல பைபிள் நிகழ்ச்சிகள், தீர்க்கதரிசிகளின் பெயர்கள் குறிப்பிட்டு இருந்தால், அதனை யெகோவா தேவன் தான் அனுப்பினார் என்று எப்படி நம்பமுடியும்? பைபிளின் அடிப்படை சத்தியத்திற்கு எதிராக குர்-ஆன் பேசும் போது, எப்படி இவ்விரு வேதங்களையும் அனுப்பினவர் ஒருவராக இருக்கமுடியும்?

5.      பைபிளின் தேவன் தம்மை "பிதா" என்ற உறவு முறையில் தம்மை வெளிப்படுத்துகிறார், இதனை குர்-ஆன் நிராகரிக்கிறது. இயேசு தேவனுடைய வார்த்தையாக இருக்கிறார், தேவகுமாரனாக இருக்கிறார் என்று பைபிள் சொல்லும் போது குர்-ஆன் அதனை நிராகரிக்கிறது. இயேசுவின் பாடுகள், சிலுவையில் அறையப்படுதல், மரணம் மற்றும் உயிர்த்தெழுதலை குர்-ஆன் நிராகரிக்கிறது. இப்படி இருக்கும் போது எப்படி கிறிஸ்தவத்தின் தொடர்ச்சியாக "இஸ்லாம்" இருக்கமுடியும்? கிறிஸ்தவத்தை நிராகரிக்கும் இஸ்லாம், கிறிஸ்தவத்தின் தொடர்ச்சி அல்ல.

6.      பைபிளில் காணப்படும் நிகழ்ச்சிகளை குர்-ஆன் எடுத்துக்கொண்டதோடு  மட்டுமல்லாமல், அவைகளை மாற்றியும் திருத்தியும் கூறியுள்ளது, இப்படி இருக்க பைபிளையும் குர்-ஆனையும் கொடுத்தவர் எப்படி ஒரே இறைவனாக இருக்கமுடியும்? எப்படி அந்த தேவன் கிறிஸ்தவத்திற்கு பிறகு இஸ்லாமை தொடரச்செய்வார்?

7.       பிதாவையும்,குமாரனையும் மறுதலிக்கிறவன் பொய்யன் என்றும், அந்திக்கிறிஸ்து என்றும் முதல் நூற்றாண்டிலேயே புதிய ஏற்பாடு ஆணித்தரமாக கூறுகிறது, ஆறு நூற்றாண்டுகளுக்கு பிறகு வந்த இஸ்லாம் சொல்லிவைத்தாற் போல பிதாவையும், குமாரனையும் மறுதலித்துள்ளது. புதிய ஏற்பாட்டின் பாடி  இஸ்லாம் ஒரு பொய்யான மற்றும் அந்திக் கிறிஸ்துவின் மார்க்கம் என்றுச் சொல்லவேண்டும்.

8.       முஹம்மது என்ற பெயரில் ஒரு நபி/தீர்க்கதரிசி வருவார் என்று இயேசு முன்னுரைத்தார் என்று அறியாமையில் இஸ்லாமியர்கள் கூறுகிறார்கள். பரிசுத்த ஆவியானவர் பற்றி இயேசு கூறிய முன்னறிவிப்பை திருத்தி, முஹம்மதுவிற்கு முடிச்சு போட இஸ்லாமியர்கள் முயற்சி எடுக்கிறார்கள், இதுவும் இஸ்லாமியர்களின் தவறான தகவலாகும்.  (யோவான் 14.16-17, 14.26, 15.26 & 16.70)

9.       இயேசு முன்னுரைத்தது முஹம்மதுவை அல்ல, அவர் பரிசுத்த ஆவியானவரைத் தான் என்பதை நிருபிக்க அனேக காரணங்களை காட்டலாம், அவைகளில் சிலவற்றை நான் உனக்காக சுருக்கமாக குறிப்பிடுகிறேன். இயேசு வருவார் என்றுச் சொன்ன 'தேற்றரவாளனை' தம்முடைய சீடர்களுக்கு இயேசு வாக்குபண்ணினார். அதாவது பேதுரு, யோவான், மத்தேயூ போன்ற சீடர்கள் உயிரோடு இருக்கும் போதே 'தேற்றரவாளனை'  அனுப்புவேன் என்று இயேசு சொன்னாரே தவிர, 600 ஆண்டுகளுக்கு பிறகு வரும் அரேபிய மக்களுக்காக 'தேற்றரவாளனை'  அனுப்புவேன் என்று கூறவில்லை.

10.    உங்களோடு கூட அவர் (தேற்றரவாளன்) எப்போதும்  இருப்பார் என்று இயேசு கூறினார். இயேசுவின் காலத்தில் முஹம்மது வரவில்லை மற்றும் அவர் எப்போதும் மக்களோடு இருக்கப்போவதுமில்லை. 63 ஆண்டுகள் வாழ்ந்து முஹம்மது மரித்துவிட்டார். ஆகையால் இயேசு கூறியது பரிசுத்த ஆவியானவரைத்தான், முஹம்மதுவை அல்ல என்பது திண்ணம்.

11.    இயேசு சீடர்களிடம் கூறும் போது, அவர் உங்களுக்குள் வாழுகிறார், உங்களோடு இருக்கிறார் என்று கூறினார். முதல் நூற்றாண்டின் சீடர்களுக்குள் எப்படி 7ம் நூற்றாண்டில் வந்த முஹம்மது வாழமுடியும் அல்லது அவர்களோடு இருக்கமுடியும்?

எந்த வசனங்களை இஸ்லாமியர்கள் மேற்கோள் காட்டுகிறார்களோ அதே வசனங்களைக் கொண்டு இயேசு முன்னறிவித்தது பரிசுத்த ஆவியானவரைத் தான் முஹம்மதுவை அல்ல என்று தெளிவாக முடியும்.

எனவே, பரிசுத்த ஆவியானவர் பற்றிய முன்னறிவிப்பை, முஹம்மதுவிற்கு முடிச்சுப்போடுவது அறியாமையாகும். மேலும், கிறிஸ்தவத்தின் தொடர்ச்சி தான் இஸ்லாம் என்றுச் சொல்வதும் அடிப்படையிலிருந்தே தவறானதாகும்.

 தம்பி, இதைப் பற்றி மேலும் அறிய நீ ஆவலாக இருந்தால், ஒரே ஒரு முறை புதிய ஏற்பாட்டை படித்துப்பார்,  பரிசுத்த ஆவியானவர் பற்றிய ஒரு சில வசனங்களை படித்து ஆராய்ந்துப்பார், உனக்கே உண்மை விளங்கும்.  மேலும் விளக்கம் தேவை என்று விரும்பினால், எனக்கு எழுது, நான் மறுபடியும் உனக்கு அதிக விளக்கங்களைத் தருவேன்.

உன்னை அடுத்த கடிதத்தில் சந்திக்கிறேன்.

 

இப்படிக்கு உன் சகோதரன்

தமிழ் கிறிஸ்தவன்.



--
7/24/2012 10:06:00 AM அன்று ஈஸா குர்-ஆன் - Isa Koran இல் Isa Koran ஆல் இடுகையிடப்பட்டது


ரமளான் நாள் 4 – இருவரும் ஒருவரல்ல

 

 
[அன்புள்ள தம்பிக்கு உமர் எழுதும் கடிதங்கள்: கடிதம் 1, கடிதம் 2, கடிதம் 3 ]
 
அன்பு தம்பிக்கு,

உனக்கு சமாதானம் உண்டாவதாக.

நீ எழுதிய மெயில் (கடிதம்) கண்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். என்னுடைய மூன்று கடிதங்களுக்கு ஒரு பதிலையாவது நீ எழுதினாய் என்று நினைக்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது.  நீ அந்த கடிதத்தில். பைபிளின் தேவனாகிய "யெகோவா தேவனும், அல்லாஹ்வும் ஒருவரே" என்று குறிப்பிட்டு இருந்தாய். இன்று அதே தலைப்பு குறித்து ஒரு சில விவரங்களை சுருக்கமாக நான் உனக்கு எழுதட்டுமா? நம்முடைய இந்த உரையாடல் மிகவும் உபயோகமான ஒன்றாக இருக்கும் என்று நம்புகிறேன்.

ஒரு தவறான தகவலை முஸ்லிம்கள் உனக்குச் சொல்லியுள்ளார்கள். பைபிளின் தேவனும், குர்-ஆனின் அல்லாஹ்வும் ஒரே நபர் அல்ல, இவர்கள் வெவ்வேறானவர்கள். வானத்துக்கும் பூமிக்கும் எவ்வளவு தூரம் இருக்கிறதோ அவ்வளவு இடைவெளி இவ்விருவருக்கும் இடையே உள்ளது.  நீ சௌதி சென்ற பிறகு பல மாதங்களாக சபை ஐக்கியத்தையும், சகோதர ஐக்கியத்தையும் உதறி தள்ளிவிட்டதினால் தான், நீ இஸ்லாமியர்களின் சொற்களை கேட்டு, அவர்கள் சொல்வது உண்மை என்று நம்பியுள்ளாய். சரி விஷயத்திற்கு வருகிறேன். யெகோவா தேவனும், அல்லாஹ்வும் வெவ்வேறானவர்கள் என்பதை விளக்க ஒரு புத்தகமே எழுதலாம், ஆனால், நீண்ட விளக்கங்களை படித்தால் என் தம்பிக்கு சலிப்பு உண்டாகுமே என்ற எண்ணத்தால்,  சுருக்கமாக சில குறிப்புக்களை எழுதுகிறேன். உனக்கு நேரம் கிடைக்கும்போது நான் சொல்லும் விவரங்களை நீயே படித்து தெரிந்துக்கொள்.

• முதலாவதாக, பைபிளின் இறைவன் தன்னை திரித்துவ தேவனாக வெளிப்படுத்துகிறார், பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவராக  இருக்கிறார். ஆனால், அல்லாஹ்வோ ஏக இறைவனாக தம்மை வெளிப்படுத்துகிறார்.

• இரண்டாவதாக, பைபிளின் தேவன் தம்மை ஒரு பிதாவாக அனேக இடங்களில் தம்மை வெளிப்படுத்துகிறார். ஆனால், அல்லாஹ்வோ ஒரு எஜமானன் போல காட்சி அளிக்கிறார். தம்மை பின்பற்றுபவர்களை தன் பிள்ளைகளைப்போல அன்பாக பார்க்காத இறைவனாக அல்லாஹ் இருக்கிறார். உனக்கு சந்தேகம் இருந்தால், இஸ்லாமிய அறிஞர்களை கேட்டுப்பார், அதாவது "நான் அல்லாஹ்வை அப்பா என்று அழைக்கலாமா? அப்பா என்ற உரிமையோடு வேண்டிக்கொள்ளலாமா?" என்று கேட்டு தெரிந்துக்கொள். ஜாக்கிரதை நீ இஸ்லாமியர்களிடம் கேட்கும் கேள்விகள் உன்னை ஆபத்தில் கொண்டுச் சேர்க்கும்.

• மூன்றாவதாக, பைபிளின் தேவன் மக்களின் மீது "நிபந்தனையற்ற அன்பை பொழிகிறார், பாவி மீதும் அன்பு கொள்கிறார், அவன் திருந்தி மறுபடியும் தன்னிடம் வருவதற்கு தேவையான எல்லா ஏற்பாடுகளையும் செய்துள்ளார்". ஆனால், அல்லாஹ் இப்படி இல்லை. அவர் தீயவர்களை நேசிப்பதில்லை, பாவிகளை நேசிப்பதில்லை (ஸூரா 28:77, 30:45).  நற்செயல்களைச் செய்து தம்மை தொழுதுக்கொள்கிறவர்களை மட்டுமே நேசிக்கிறார் (ஸுரா 2:195, 2:222, 3:76, 3:146, 3:159, 5:13). நாம் பாவிகளாக இருக்கும் போதே நம் தேவன் நம்மீது அன்பு கூர்ந்து, தம்மைத் தாமே நமக்காக ஒப்புக்கொடுத்தார் (உனக்கு பைபிள் வசனங்களை அதிகமாக மேற்கோள் காட்டவேண்டிய அவசியமில்லை என்று நினைக்கிறேன். இன்னும் உன் பைபிள் உன்னிடம் உள்ளதா? அல்லது அதனை தூக்கி எறிந்துவிட்டாயா?)

• நான்காவதாக, பைபிளின் தேவன்  நம் நிலைக்கு இறங்கிவந்து நம்முடன்  ஒரு நண்பனைப்போல நட்புறவை வைத்துக்கொள்ள  விரும்புகிறார். நாமும் முழு இருதயத்தோடு அவரை நேசிக்கவேண்டும் என்று விரும்புகிறார்.  ஆனால், அல்லாஹ் தன் மக்களிடம் எதிர்ப்பார்ப்பதெல்லாம் 'கீழ்படிதல்' மட்டுமே ஆகும்.  இயந்திரங்களைப் போல மக்கள் தன்னை தொழுதுக்கொள்ள வேண்டும், புரிந்தாலும், புரியாவிட்டாலும் தன் வேதத்தை படிக்கவேண்டும் என்று எதிர்ப்பார்க்கிறார். கிறிஸ்தவர்களுக்கு தேவன் ஆறுதல்படுத்தும் பிதாவாகவும் உற்ற நண்பனாகவும் இருக்கிறார். ஆனால், முஸ்லிம்களுக்கு அல்லாஹ் அதிகாரம் செலுத்தும் ஒரு எஜமானனாக இருக்கிறார்.

• ஐந்தாவதாக,  பைபிளின் தேவன் அன்பானவர் மட்டுமல்ல, அவர் பரிசுத்தராகவும் பரிபூரண நீதியுள்ளவராகவும் இருக்கிறார். அதாவது நாம் பாவம் செய்யும் போது நம் தேவனுக்கு அவமானத்தை கொண்டு வருகிறோம், அவருக்கு எதிராக செயல்படுகிறோம், இதற்காக நீதியுள்ள தேவனிடமிருந்து நமக்கு தண்டனை காத்திருக்கும். அவர் நீதியுள்ளவர் என்பதால் தண்டனை நமக்கு தப்பாது.  அதே நேரத்தில் அவர் அன்புள்ளவராக இருப்பதினால், நம்முடைய தண்டனையை  அவர் தம்முடைய வார்த்தையை குமாரனாக அனுப்பி தாமே அதனை சுமந்தார். ஆனால், மக்கள் பாவங்கள் செய்து அல்லாஹ்வை அவமானப்படுத்தினாலும் சரி, சில சடங்காச்சாரங்களை செய்து மன்னிப்பு கேட்டால் அதனை அல்லாஹ் மன்னித்துவிடுகிறார், தன் நீதி பற்றி தனக்கே அக்கரையில்லாத இறைவனாக அல்லாஹ் காணப்படுகிறார்.  தம்மை மக்கள் அவமானப்படுத்தினதை காற்றில் விட்டுவிட்டார். எனவே அல்லாஹ் "பரிபூரண நீதியுள்ள நியாயாதிபதி" அல்ல. பைபிளின் தேவன் பரிபூரண நீதியுள்ள நியாயாதிபதியாகவும் இருக்கிறார், அதே நேரத்தில் அன்பாகவும் இருக்கிறார்.

• ஆறாவதாக பைபிளின் தேவன் தம்மை விட பெரியவர் யாரும் இல்லை என்பதால் தம்மீது மட்டுமே சத்தியம் செய்வார். ஆனால், அல்லாஹ் அனேக காரியங்கள் மீது சத்தியம் செய்வார், அதாவது இரவின் மீதும், மலையின் மீதும், நட்சத்திரங்கள் மீதும், நகரத்தின் மீதும், காலத்தின் மீதும் இன்னும் அனேக விஷயங்கள் மீதும் சத்தியம் செய்கிறார்.  இவ்விருவருக்கும் இடையே இருக்கும் வித்தியாசத்தைப் பார்.

• ஏழாவதாக, பைபிளின் தேவனின் பரலோகம் அல்லது சொர்க்கம் ஆவிக்குரிய சொர்க்கமாகும். பரலோகில் திருமணம் இல்லை, உடலுறவு இல்லை என்று வேதம் தெளிவாகச் சொல்கிறது. ஆனால், அல்லாஹ்வின் சொர்க்கமோ, மோகம் நிறைந்த ஒரு இடமாக காட்சி அளிக்கிறது. குறைந்த பட்சம் ஒரு முஸ்லிம் சொர்க்கத்தில் தன் மனைவியோடு உடலுறவு கொள்கிறார் என்று சொன்னாலும் ஒருவகையில் ஏற்றுக்கொள்ளலாம், ஆனால் அல்லாஹ்வின் சொர்க்கம் கிட்டத்தட்ட ஒரு விபச்சார விடுதி போல காட்சி அளிக்கிறது (தம்பி இந்த வார்த்தையை பயன்படுத்த எனக்கு வேதனையாக உள்ளது, ஆனால் வேறு வழியில்லை, உண்மை கசக்கத்தான் செய்யும்). அனேக கன்னிப்பெண்கள் முஸ்லிம்களுக்கு கிடைப்பதாகவும், அவர்களோடு முஸ்லிம்கள் உடலுறவில் ஈடுபட்டு இருப்பதாகவும் இஸ்லாம் கூறுகிறது. நீ சிந்தித்துப்பார், பைபிளின் தேவனின் சொர்க்கத்திற்கும், அல்லாஹ்வின் சொர்க்கத்திற்கும் இடையே எவ்வளவு பெரிய இடைவெளி, இவ்விருவரும் ஒருவராக இருக்கமுடியுமா? நிச்சயமாக இல்லை.

இப்படி அனேக வித்தியாசங்களைச் சொல்லிக்கொண்டு போகலாம். ஒரு சில மாதங்களாக இஸ்லாமியனாக இருக்கின்ற நீ, நிச்சயம் இஸ்லாமிய சொர்க்கம் பற்றி, அல்லது இஸ்லாமியர்களுக்கு சொர்க்கத்தில் கிடைக்கவிருக்கும் பெண்கள் பற்றிய ஒரு பிரசங்கத்தையாவது (பயானை) கேட்டு இருப்பாய் என்று நிச்சயமாக நான் நம்புகிறேன். 

ஆகவே, தம்பி நீ நினைப்பதுபோல, பைபிளின் தேவனும் குர்-ஆனின் அல்லாஹ்வும் ஒருவரல்ல என்பதை நீ புரிந்துக்கொள்ளவேண்டும்.

இதைப் பற்றி இன்னும் அதிகமாக உனக்கு விவரம் தேவைப்பட்டால் எனக்கு தெரிவிக்க மறந்துவிடாதே.

அடுத்த கடிதத்திலுல் உன்னை சந்திக்கிறேன்.

இப்படிக்கு
உன் சகோதரன்
தமிழ் கிறிஸ்தவன்.



--
7/23/2012 11:21:00 AM அன்று ஈஸா குர்-ஆன் - Isa Koran இல் Isa Koran ஆல் இடுகையிடப்பட்டது


ரமளான் நாள் 3 – நீ அல்லாஹ்வை நேசிக்கிறாயா?

 

ரமளான் நாள் 3 – நீ அல்லாஹ்வை நேசிக்கிறாயா?
 
[அன்புள்ள தம்பிக்கு உமர் எழுதும் கடிதங்கள்: கடிதம் 1, கடிதம் 2]

அன்பு தம்பிக்கு,

உனக்கு சமாதானம் உண்டாவதாக.

என்னுடைய இரண்டாவது கடிதத்தை படித்தாயா? நான் கேட்கச்சொன்ன விவரங்களை கேட்டாயா?

இஸ்லாமுக்கும் கிறிஸ்தவத்திற்கும் இடையே இருக்கும் முக்கியமான வித்தியாசங்களை நீ அறியாததால் தான் இஸ்லாமை தழுவியுள்ளாய்.

இஸ்லாமுக்கும் கிறிஸ்தவத்திற்கும் இடையே இருக்கும் முக்கியமான வித்தியாசங்கள் இவைகளாகும்:
  •  இஸ்லாமின் தெய்வம் ஒரு எஜமான், நீ அவனது அடிமை (Master and Slave)
  • கிறிஸ்தவத்தின் தெய்வம் ஒரு தந்தை, நீ அவரது செல்லக்குமாரன். (Father and Son) 
  • ஒரு மனிதனுக்கும் அல்லாஹ்விற்கும் இடையே இருப்பது ஒரு "ஒப்பந்தம்" (Contract).
  • ஒரு மனிதனுக்கும் யெகோவா தேவனுக்கும் இடையே இருப்பது ஒரு "உறவு முறை" (Relationship).
ஒரு அன்பான அப்பாவிற்கு மகனாக இருப்பதை உதறி தள்ளிவிட்டு, நீ ஒரு கடினமான எஜமானனுக்கு அடிமையாக வேலை செய்ய உன்னை விற்றுவிட்டாய்.
 
பைபிளின் தெய்வமாகிய நம் பரம பிதா தன் மகனுக்காக எதையும் செய்வார். இந்த பிதா தன் மகனுக்காக தன் நிலையிலிருந்து இறங்கி வருவார், தன் மகனை தன் தோளில் சுமப்பார், முதிர்வயது வரையும் சுமப்பார், ஆறுதல்படுத்துவார், கடினமான நேரங்களில் பலப்படுத்துவார், தன்னால் முடிந்த அனைத்தையும் தன் மகனுக்காக மகளுக்காக செய்வார். ஏன் இப்படி சர்வ வல்ல தேவன் செய்கிறார் என்று நாம் பார்த்தால், அதற்கு ஒரே ஒரு பதில் தான் நமக்கு கிடைக்கும், அது என்னவென்றால் "அவர் நம்மை நேசிக்கிறார்" என்பதாகும். இதைவிட வேறு எந்த காரணமும் இருக்கமுடியாது. இப்படிப்பட்ட பிதாவை நாம் நேசிக்க நமக்கு வேறு ஒரு பலமான காரணம் ஒன்று தேவையா?

ஆனால், அல்லாஹ் தன் அடியார்களிடம் நெருங்கி வந்து ஆறுதல்படுத்துகிறாரா? ஒரு தந்தையைப் போல அன்போடு நடந்துக்கொள்கிறாரா? சிந்தித்துப்பார்.

இதோ "நான் உனக்காக இவைகளை செய்தேன், இதோ உனக்காக நான் இவ்வளவு அதிகமாக அன்பு கூறுகிறேன்" என்று பைபிளின் தேவன் தன் அன்பை வெளிப்படுத்துகிறார். ஆனால், அல்லாஹ், எனக்கு கீழ்படிகிறாயா? நான் சொன்ன சட்டங்களை கைக்கொள்கிறாயா? எனக்கு அடிமையாக எப்பொதும் இருப்பாயா? என்று மக்களிடம் கேட்டு தம்முடைய ஒப்பந்தத்தை வெளிப்படுத்துகிறார். மனிதனுக்காக தன் நிலையிலிருந்து இறங்கி வருகிற ஒரு அப்பாவாக  அல்லாஹ் இல்லை என்பது தான் மிகவும் வேதனையான விஷயம்.

நீ அப்பா இல்லாத அனாதையாக இருப்பதை நான் விரும்பவில்லை தம்பி. எனக்கு பரலோகில் ஒரு பிதா உண்டு.  அவரே உனக்கும் பிதாவாக இருக்கிறார், நீ அவரை உதறிதள்ளிவிட்டாய். ஆனால், இன்னும் அவர் உனக்காக காத்துக்கொண்டு இருக்கிறார். இளையக் குமாரன் எப்போது வருவான் என்று எதிர்ப்பார்த்து வாசலிலேயே காத்துக்கிடந்த அந்த உவமையில் வரும் பிதாவைப்போல, நம் தேவன் கூட உனக்காக காத்துக்கொண்டு இருக்கிறார். நீ எப்போது வேண்டுமாலும் வரலாம், நிபந்தனைகளோ சட்டங்களோ கிடையாது. மகன் அப்பா வீட்டிற்கு வருவதற்கு  எது தடையாக இருக்கமுடியும்?

இன்று நீ நோன்பு ஆரம்பித்து மூன்றாம் நாள் ஆகிறது. நீ உன் பரலோக அப்பாவின் பிரசன்னத்தை மற்றும் அன்பை உணர்ந்தாயா? அல்லது அல்லாஹ்விற்கு பயந்து ஒரு எஜமானனுக்கு முன்பாக நடுங்கிக்கொண்டு நிற்கும் ஒரு அடிமையைப்போல தொழுதுக்கொள்கிறாயா? சிந்தித்து பாரடா தம்பி சிந்தித்து பாரு,

அம்மாவின் அன்பை நீ ருசி பார்த்துள்ளாய்; நம் அப்பாவின் அன்பையும் நீ ருசி பார்த்துள்ளாய், நம் சகோதர சகோதரிகளின் அன்பையும் நீ ருசி பார்த்துள்ளாய், உன் நல்ல நண்பர்களின் நட்பையும் நீ ருசி பார்த்துள்ளாய். ஆனால், உன்னை படைத்த இறைவன் உன்னை அதிகமாக நேசிக்கிறார் என்பதை உணராமல் போய்விட்டாயே, அவரது அன்பை ருசி பார்க்காமல் சென்று விட்டாயே!

இன்று நீ அல்லாஹ்வை தொழுதுக்கொள்ளும் போது "யா அல்லாஹ், நீங்கள் என் தந்தை, நான் உம்முடைய மகன், நான் உம்மை நேசிக்கிறேன், நீங்களும் என்னை நேசிக்கிறீர்களா இல்லையா என்பதை எனக்கு எவ்விதத்திலாவது தெரியப்படுத்தும்" என்று வேண்டிக்கொள்.  ஆனால், தம்பி இஸ்லாமில் இப்படி வேண்டுவது பாவமாகவும், மிகப்பெரிய தவறாகவும் கருதப்படுகிறது என்பதை நீ அறிந்துக்கொள்.  நீ அல்லாஹ்வை ஒரு அப்பாவைப்போல  நேசிக்கமுடியாது. ஒரு அடிமையைப் போல வெறும் கீழ்படிய மட்டுமே உன்னால் முடியும். உன் அல்லாஹ் உன் வேண்டுதலுக்கு பதில் அளிக்கமாட்டார், ஆனால், நான் உனக்கு சவால் விடுகிறேன், அல்லாஹ்விடம் நீ கேட்ட வேண்டுதலுக்கு நம் தேவன் பதில் அளிப்பார்.  இந்த சவாலை ஏற்க நீ தயாராக இருந்தால், தினமும் இந்த வேண்டுதலை செய்துப்பார்.

நான் உன்னை அடுத்த கடிதத்தில் சந்திக்கிறேன்,

இப்படிக்கு உன் சகோதரன்

தமிழ் கிறிஸ்தவன்.
 



--
7/22/2012 08:16:00 PM அன்று ஈஸா குர்-ஆன் - Isa Koran இல் Isa Koran ஆல் இடுகையிடப்பட்டது



ரமளான் நாள் 2 – விடுதலை. . . விடுதலை. . . விடுதலை

 

அன்புள்ள தம்பிக்கு உமர் எழுதும் கடிதங்கள்: கடிதம் 1ஐ இங்கு சொடுக்கி படிக்கவும்.



ரமளான் நாள் 2 – விடுதலை. . . விடுதலை. . . விடுதலை

அன்புள்ள தம்பி,

உனக்கு சமாதானம் உண்டாவதாக.

நேற்று நான் அனுப்பிய கடிதத்தை படித்து இருப்பாய் என்று நம்புகிறேன். 

நீ ஒரு முஸ்லிமோடு அதிகமாக நட்பாக இருக்கிறாய், உங்கள் இருவரின்  நட்பு அதிகமாக உள்ளது என்று சௌதியில் இருக்கும் என் நண்பன் எனக்கு கூறியபோது, "இதிலென்ன தவறு? எனக்கும் இஸ்லாமியர்கள் நண்பர்களாக இருக்கிறார்கள் அல்லவா?" என்று நான் கூறினேன்.  என் தம்பி என்ன குழந்தையா? இவனோடு பேசு அவனோடு பேசாதே என்று கட்டுப்பாடு விதிப்பதற்கு? அவன் நண்பர்களோடு சுதந்திரமாக பழகட்டுமே, சுதந்திரத்திற்கு தடை போடவேண்டாம் என்று நான் என் நண்பனிடம் கூறினேன்.

ஆனால், சில நாட்களுக்கு பிறகு நீ ஒரு மெயில் அனுப்பி "நான் முஸ்லிமாகிவிட்டேன்" என்று கூறினாய், நான் சுயமாக இந்த முடிவை எடுத்தேன் என்றும் கூறினாய். அப்பா அன்று அதிகமாக துக்கப்பட்டார், நான் அவ்வளவு துக்கம் அடையவில்லை, ஏனென்றால் உன்னுடைய பலம் மற்றும் பலவீனம் எது என்று எனக்கு நன்றாகத் தெரியும். நீ சுதந்திரமாக எடுத்த முடிவை நான் மதிக்கிறேன். 

நான் உன்னிடம் ஒரு விஷயத்தை பற்றி கேட்க விரும்புகிறேன்.  நீ சுதந்திரமாக இஸ்லாமை தழுவினாய், அதற்கு உனக்கு சுதந்திரம் இருந்தது. ஆனால், நீ இஸ்லாமை விட்டு வெளியே வர விரும்பினால், அப்படி செய்ய உனக்கு சுதந்திரம் உண்டா? 

உன்னை இஸ்லாமை தழுவும் படி உற்சாகப்படுத்திய உன் நண்பர்கள், நீ மறுபடியும் அதைவிட்டு வெளியேறவேண்டும் என்று விரும்பினால், அவர்கள் உனக்கு எந்த ஒரு தீங்கும் செய்யாமல் வெளியேற அனுமதிப்பார்களா? 

நான் ஏன் இந்த கடிதங்களை எழுதுகிறேன் என்பதை உனக்கு விளக்குகிறேன். நீ நம் குடும்பத்தின் ஒரு அங்கம், நீ எங்கு இருந்தாலும், நன்றாக இருந்தால் அது போதும் எங்களுக்கு. ஆனால்,  ஒரு நாள் கர்த்தரிடத்தில் மறுபடியும் நீ வரவிரும்புகிறாய் என்று வைத்துக்கொள்வோம், அப்போது நீ இஸ்லாமை விட்டு வெளியேற விரும்பினால், இஸ்லாம் இடம் கொடுக்குமா? இஸ்லாமியர்கள் உன்னை வாழவிடுவார்களா? இது தான் என் பயம்.

உனக்கு நெருங்கிய நல்ல நேர்மையான இஸ்லாமிய நண்பன் ஒருவன் இருந்தால், அவனிடம் "ஒரு வேளை நான் இஸ்லாமை விட்டு வெளியேற விரும்பினால், நீங்கள் அனுமதிப்பீர்களா?" என்று கேட்டு அதற்கு அவன் என்ன பதில் சொல்கிறான் என்று கவனித்துப்பார். என் தம்பி இஸ்லாமில் பாதுகாப்பாக இருப்பானா? அவன் வெளியே வரவிரும்பினால் கூட பாதுகாப்பாக இருப்பானா? என்பதை கேட்டு எனக்குச் சொல்வாயா?

இஸ்லாமை விட்டு வெளியேறும் முஸ்லிம்கள் இஸ்லாமிய நாடுகளில் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்று சிறிது கவனித்துப்பார்? ஷரியா சட்டம் இஸ்லாமியர்களை என்ன பாடுபடுத்துகிறது என்று கவனித்துப்பார். இஸ்லாமை விட்டு வெளியேறியவர்கள் சந்தித்துக்கொண்டு இருக்கும் பிரச்சனைகளை  செய்தித்தாள்களில் படித்துப்பார்? நீ குழந்தையல்ல, எனவே, அனைத்தையும் சோதித்துப் பார்.

நல்லவேளை நாம் இந்தியாவில் பிறந்தோம், இஸ்லாமிய நாட்டில் பிறக்கவில்லை, அதற்காக இறைவனுக்கு நன்றி சொல்லவேண்டும். ஆனால், அதிகமாக சந்தோஷப்பட முடியாது, இங்கும் மறைவாக அனேக தீங்குகள் இஸ்லாமை விட்டு வெளியேறுபவர்களுக்கு எதிராக நடந்துக்கொண்டு இருக்கிறது. தம்பி, ஒரு மனிதனுக்கு இருக்கும் மிகவும் முக்கியமான பொக்கிஷம், அவன் சுதந்திரமாக வாழுவதும், சுதந்திரமாக முடிவுகளை எடுப்பதுமாகும், இந்த இரண்டும் இந்நாள் வரை உனக்கு இருந்தது, இனி இப்படிப்பட்ட சுதந்திரம் உனக்கு கிடைக்குமோ என்பது தான் என் கேள்வி?

உன்னை அடுத்த கடிதத்தில் சந்திக்கிறேன். நான் கேட்ட விஷயத்தை மட்டும் உன் நண்பர்களிடம் கேட்டுச் சொல்வாயா? நீ மிகவும் ஜாக்கிரதையாக இருக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

"சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்" 

இப்படிக்கு, உன் அண்ணன்,
தமிழ் கிறிஸ்தவன்.



--
7/21/2012 06:57:00 PM அன்று ஈஸா குர்-ஆன் - Isa Koran இல் Isa Koran ஆல் இடுகையிடப்பட்டது


ரமளான் நாள் 1 – நோன்பு (அன்புள்ள தம்பிக்கு உமர் எழுதும் கடிதம்)

  


முன்னுரை:

உமரின் தம்பி சௌதி அரேபியாவில் மூன்று வருடங்களாக வேலை செய்கிறார். ஒரு நாள் திடீரென்று 'தான் இஸ்லாமியராக மாறிவிட்டதாக' ஒரு மெயில் அனுப்பினார். அதன் பின்பு குடும்பத்தோடு தொலைபேசியில் பேசுவதையும் சிறிது சிறிதாக குறைத்துக்கொண்டு வருகிறார். உமர் இந்த ரமளான் மாதத்தில் தன் தம்பிக்கு கடிதங்கள் எழுத முடிவு செய்துள்ளார். ஒவ்வொரு நாளும் ஒரு கடிதத்தை எழுதி தன் தம்பிக்கு அனுப்பிக்கொண்டு இருக்கிறார்.

ரமளான் நாள் 1 – நோன்பு

அன்புள்ள தம்பி,

உனக்கு சமாதானம் உண்டாவதாக.

இந்த வருடம் என்னோடு சேர்ந்து கிறிஸ்துமஸ் கொண்டாடுவாய் என்று நினைத்தேன், ஆனால், நீ ரமளான் பண்டிகையை கொண்டாடப்போகிறாய்.  இந்த வருடம் டிசம்பர் மாதம் ஊருக்கு வருவாய் என்று நாங்கள் எல்லாரும் காத்திருக்கிறோம். ஆனால், நீயோ இன்னும் இரண்டு வருடங்கள் ஊருக்கு வரமுடியாது என்று சொல்லிவிட்டாய். உனக்குள் ஏற்பட்ட மாற்றம் பற்றி சிறிது அறிந்துக் கொள்ளலாம் என்றும், நீ இஸ்லாம் பற்றி முழுவதும் அறிந்த பிறகு தான் அதனை தழுவினாய் என்பதை அறிந்துக் கொள்ளவும் என்றும் இந்த கடிதங்களை எழுதுகிறேன்.

நானும் நீயும் ஒன்றாக சேர்ந்து வேதம் வாசித்தோம், ஜெபித்தோம், அனேக விஷயங்களை தியானித்தோம், எனவே உனக்கும் எனக்கும் இடையே இருக்கும் உறவு "அண்ணன் தம்பி" என்ற முறையில் இருந்தாலும், நாம் அதையும் தாண்டி நெருங்கிய நண்பர்களாக இருந்தோம். இதன் அடிப்படையில் இந்த ரமளான் மாதம் முழுவதும் ஒவ்வொரு நாளும் ஒரு சிறிய கடிதத்தை உனக்கு எழுதலாம் என்று முடிவு செய்துள்ளேன். இவைகளை நீ படித்து எனக்கு பதில் எழுதுவாய் என்று நம்புகிறேன். இந்த கடிதத்தை கண்டவுடன் நீ இதனை கிழித்துப்போடவேண்டாம், ஏனென்றால், இது உன் நித்தியத்தைப் பற்றிய விஷயமாகும். நீ எடுக்கும் முடிவுகளில் அதிமுக்கியமான முடிவு, உன் நித்தியம்  பற்றிய முடிவாகும். உன்னுடைய வெற்றி இந்த அண்ணனின் வெற்றியாகும், உன்னுடைய தோல்வி இந்த அண்ணனின் தோல்வியாகும்.

இன்று ரமளான் முதல் நோன்பு ஆரம்பமாகியுள்ளது, நீயும் நோன்பு இருக்கிறாய் என்று நம்புகிறேன்.

நாம் இருவரும் அனேக முறை உபவாசம் இருந்துள்ளோம், அந்நாட்களில் அதிகமாக பல விஷயங்களுக்காக ஜெபித்துள்ளோம். உனக்கு ஞாபகம் இருக்கிறதா? ஒரு முறை நான் என் முகத்தை மிகவும் வாடலாக வைத்திருந்த போது என்னை நீ கண்டித்தாய், முகத்தை உற்சாகமாக வைத்திருக்கவேண்டும், மற்றவர்களுக்கு நாம் உபவாசம் இருப்பது தெரியக்கூடாது என்று கூறினாய், அந்தரங்கத்தில் தேவனுக்கு காணப்படவேண்டிய உபவாசத்தை மக்களின் முன்பாக மறந்தும் கூட காட்டக்கூடாது என்று கடிந்துக்கொண்டாய்.   ஆனால், இன்று நீ உபவாசம் இருக்கிறாய், எல்லாருக்கும் தெரிந்திருக்கிறபடி வெளிப்படையாக எல்லா சடங்காச்சாரங்களையும் செய்கிறாய், இஸ்லாமுக்கு முன்பு வாழ்ந்த 'பல தெய்வ வழிப்பாட்டு மக்கள்' பின்பற்றின "30 நாட்கள் நோன்பு" என்ற சடங்காச்சாரத்தை இன்று நீ பின்பற்றுகிறாய்.  இஸ்லாமிய நோன்பு என்பது 'பல தெய்வங்களை வணங்கும் மக்களின்' மதச்சடங்கு என்று உனக்குத் தெரியுமா? மேலும் இஸ்லாமில் காணப்படும் அனேக சடங்காச்சாரங்களாகிய தொழுகை செய்வதிலிருந்து, மக்காவிற்கு ஹஜ் செய்யும் வரையுள்ள பெரும்பான்மையான சடங்குகள் பழங்குடி மக்கள் பின்பற்றியவைகள் என்று உனக்கு தெரியுமா?

அன்று தேவனுக்கு மட்டும் தெரிந்திருக்கவேண்டும் என்ற நோக்கத்தோடு அந்தரங்கத்தில் உன் பக்தியை காண்பித்த நீ, இன்று எல்லாவற்றையும் வெளிப்படையாக செய்கிறாய். இதைப் பற்றி நீ சிந்தித்து பார்த்ததுண்டா? கதவு மூடப்பட்ட ஒரு அறைக்குள்ளே உன் பிதாவை நோக்கி அந்தரங்கத்தில் வேண்டுதல் செய் என்ற கட்டளைக்கு எதிராக உலக மக்கள் காணும்படியாக வெளிப்படையாக நீ தொழுதுக்கொள்கிறாய்.

மெய்யான தேவனாகிய யெகோவா தான் 'அல்லாஹ்' என்று நீ சொல்கிறாய், ஆனால், அந்த பைபிளின் மெய் தேவன் விதித்த கட்டளைகளை நீ மறந்துபோனாய்? அந்நிய தெய்வங்களையும், அவர்களின் பாரம்பரியங்களையும் பின்பற்றாதீர்கள் என்று அவர் கட்டளையிட்டு இருக்கும் போது, நீ இஸ்லாமிய போர்வையில், அந்நிய தெய்வத்தை பின் பற்றிக்கொண்டு இருக்கிறாய். 

உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்தில் நீ போய்ச் சேரும் போது, அந்த ஜாதிகள் செய்யும் அருவருப்புகளின்படி செய்யக் கற்றுக் கொள்ளவேண்டாம் (உபாகமம் 18:9) .

நீங்கள் குடியிருந்த எகிப்துதேசத்தாருடைய செய்கையின்படி செய்யாமலும், நான் உங்களை அழைத்துப்போகிற கானான் தேசத்தாருடைய செய்கையின்படி செய்யாமலும், அவர்களுடைய முறைமைகளின்படி நடவாமலும், என்னுடைய நியாயங்களின்படி செய்து, என்னுடைய கட்டளைகளைக் கைக்கொண்டு நடவுங்கள்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் (லேவியராகமம் 18:3-4).

நீங்கள் உபவாசிக்கும்போது, மாயக்காரைப்போல முகவாடலாய் இராதேயுங்கள்; அவர்கள் உபவாசிக்கிறதை மனுஷர் காணும் பொருட்டாக, தங்கள் முகங்களை வாடப்பண்ணுகிறார்கள்; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். நீயோ உபவாசிக்கும்போது, அந்த உபவாசம் மனுஷர்களுக்குக் காணப்படாமல், அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவுக்கே காணப்படும்படியாக, உன் தலைக்கு எண்ணெய் பூசி, உன் முகத்தைக் கழுவு. அப்பொழுது, அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா உனக்கு வெளியரங்கமாய்ப் பலனளிப்பார் (மத்தேயு 6:16-18).

தம்பி, நீ எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து முடிவு எடுப்பவன் என்று எனக்குத் தெரியும், ஆனால், இந்த விஷயத்தில் மட்டும் நீ சரியாக இஸ்லாமை சோதிக்காமல் முடிவு எடுத்துள்ளாய் என்பதை உனக்கு சொல்லிக்கொள்கிறேன். நம்முடைய இந்த கடிதத்தொடர்பு நம் இருவருக்கும் உபயோகமாக இருக்கும். உன்னுடைய புதிய மார்க்கம் பற்றி நீ அறிந்துக்கொண்டவைகளை என்னோடு பகிர்ந்துக்கொள்ள இது ஒரு அருமையான வாய்ப்பாகும். எனவே, இதனை நீ நல் முறையில் பயன்படுத்திக்கொள்வாய் என்று நம்புகிறேன்.

இந்த கடிதத்தை படித்த பிறகு எனக்கு நீ பதில் எழுதுவாய் என்று நம்புகிறேன்.

இப்படிக்கு,
கிறிஸ்துவிற்குள் உன் சகோதரன்

தமிழ் கிறிஸ்தவன்



--
7/20/2012 07:44:00 PM அன்று ஈஸா குர்-ஆன் - Isa Koran இல் Isa Koran ஆல் இடுகையிடப்பட்டது


கிறிஸ்தவ சபையே! விழிமின் எழுமின் - பாகம் 4

 
     

கிறிஸ்தவ சபையே! விழிமின் எழுமின் - பாகம் 4

முன்னுரை: 'கிறிஸ்தவ சபையே! விழிமின் எழுமின்' என்ற தலைப்பில் தொடர் கட்டுரைகளை நாம் படித்துக்கொண்டு இருக்கிறோம். முதல் மூன்று பாகங்களை கீழ்கண்ட தொடுப்புகளில் படிக்கலாம்:

கிறிஸ்தவ சபையே! விழிமின் எழுமின் – பாகம் 1, பாகம் 2 & பாகம் 3

முதல் மூன்று பாகங்களை முதலாவது படித்துவிட்டு, நான்காவது பாகத்தை படித்தால் கோர்வையாக விவரங்கள் புரியும்.

பாகம் 4:

(பழைய ஏற்பாட்டின் வெளிச்சத்தில் முஹம்மதுவின் நபித்துவத்தைப் பற்றிய கேள்வி பதில்களின் தொடர்ச்சி...)

கேள்வி 8: என் பெயர் செல்வி. நான் சிறுபிள்ளைகளுக்கு ஞாயிறு பள்ளி நடத்தும் ஆசிரியையாக இருக்கிறேன். என் கேள்வி என்னவென்றால், தீர்க்கதரிசிகள் என்றாலே நம் மனதில் "அற்புதங்கள், அடையாளகள், சுகமாக்குதல், சாகசங்கள்" போன்றவைகளை செய்யும் நபர்கள் தான் நினைவிற்கு வருகிறார்கள். இதனை நாம் பழைய ஏற்பாட்டில் ஆங்காங்கே படிக்கிறோம். ஒரு தீர்க்கதரிசி என்பவர் அற்புத அடையாளங்கள் செய்யும் ஒரு நபராகவே கட்டாயமாக இருக்கவேண்டுமா? எந்த ஒரு அற்புதமும் செய்யாதவர் கர்த்தரின் தீர்க்கதரிசியாக இருக்கமுடியாதா? முஹம்மது ஒரு அற்புதமும் செய்யவில்லை என்றுச் சொல்கிறார்கள். அற்புத அடையாளங்களின் அடிப்படையில் பார்த்தால், நாம் முஹம்மதுவை தீர்க்கதரிசி என்று ஏற்றுக் கொள்ளமுடியுமா?

உமர் பதில் 8: நீங்கள் சிறு பிள்ளைகளின் ஞாயிறு பள்ளி ஆசிரியை என்பதால், பைபிளில் காணப்படும் அற்புத அடையாளங்கள் பற்றியே அதிகமாக பிள்ளைகளுக்கு போதிக்கிறீர்கள் போல் தெரிகிறது. உங்கள் கேள்வி இஸ்லாமியர்களையும், கிறிஸ்தவர்களையும் சிந்திக்கச் செய்யும் கேள்வியாக உள்ளது. இப்போது அதற்கான பதிலைக் காண்போம்.

பழைய ஏற்பாட்டில், ஆபிரகாமுக்கு அடுத்து முதன் முதலாக ஒரு தீர்க்கதரிசி என்ற பட்டத்தோடு மக்களை சந்திக்க தேவன் அனுப்பிய மோசேயையும், புதிய ஏற்பாட்டில் அதே நிலையில் வந்த யோவான் ஸ்நானகனையும் நாம் இப்போது இந்த கேள்விக்காக‌ தியானிக்கப் போகிறோம், பிறகு, முஹம்மதுவை சந்திப்போம்.

மோசே மற்றும் யோவான் ஸ்நானகனை நாம் ஒப்பிட்டால், இவ்விருவருக்கும் இடையே அனேக வித்தியாசங்களைக் காணலாம். இவ்விருவரும் மிகப்பெரிய தீர்க்கதரிசிகளாக இருக்கிறார்கள். ஆனால், மோசேயைப் பற்றி பார்க்கும் போது, தேவனின் உதவியுடன் இவர் அற்புதங்கள் மேல் அற்புதங்களைச் செய்தார், ஆனால், யோவான் ஒரு அற்புதமும் செய்யவில்லை, இருந்த போதிலும் இயேசு கூறும் போது, "ஸ்திரீகளிடத்திலே பிறந்தவர்களில் யோவான்ஸ்நானனைப் பார்க்கிலும் பெரிய தீர்க்கதரிசி ஒருவனுமில்லை" என்று கூறினார். ஒரு அற்புதமும் செய்யாத ஒரு தீர்க்கதரிசி, இயேசுவிடம் மிகப்பெரிய புகழ்ச்சியைப் பெற்றார் என்பதை இதன் மூலம் அறியலாம்.

மேலும், நாம் பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகளை வகைப்படுத்தும் போது, பெரிய தீர்க்கதரிசிகள் என்றும், சிறிய தீர்க்கதரிசிகள் என்றும் சொல்லுகிறோம். ஆனால், "பெரிய அல்லது சிறிய தீர்க்கதரிசிகள்" என்று நாம் கூறும் போது அவர்களின் தரத்தைப் பற்றியோ அல்லது அவர்கள் செய்த அற்புதங்கள் பற்றியோ கருத்தில் கொண்டு கூறுவதில்லை. அவர்கள் எழுதிய தீர்க்கதரிசன புத்தகங்களின் அளவைப் பொருத்தே நாம் அப்படி கூறுகிறோம்.

சுருக்கமாக கூறவேண்டுமென்றால், பைபிளைப் படிக்கும் ஒரு கிறிஸ்தவர் எப்படி அற்புதங்களை அதிகமாக செய்த மோசேயை மதிக்கிறாரோ, அதே நிலையில் தான் ஒரு அற்புதத்தையும் செய்யாத யோவான் ஸ்நானகனையும் மதிக்கிறார் .

எனவே, ஒருவர் தீர்க்கதரிசியாக இருக்கவேண்டுமென்றால், "அற்புதங்களை நிச்சயமாக செய்தே ஆகவேண்டும்" என்ற கட்டாயமில்லை. அவர் நீதிமானாகவும், கர்த்தர் சொல்லும் வார்த்தைகளை மக்களிடம் கொண்டு வந்துச் சொல்லும் சாதாரண மனிதனாகவும் இருந்தாலே போதும். இதற்கும் நாம் அனேக உதாரணங்களை பைபிளில் காணலாம். தீர்க்கதரிசிகளேயானாலும், அவர்கள் தவறுகள் செய்யும் போது, அதனை தேவன் அவர்களுக்கு வெளிப்படுத்தினால், மன்னிப்பு கேட்டு அவைகளை விட்டுவிடும் நபர்களே தேவனுடைய வேலைக்கு தகுதியானவர்களாக இருப்பார்கள்.

சரி, இப்போது சிலருக்கு கீழ்கண்ட கேள்விகள் எழும்:

1) ஒருவர் தீர்க்கதரிசியாக இருக்கவேண்டுமென்றால், "அற்புதங்கள்" செய்யவேண்டுமென்ற நிலை தேவையில்லை என்று இருக்கும் போது, ஏன் தேவன் பல தீர்க்கதரிசிகள் மூலமாக அற்புதங்கள் செய்தார்?

2) ஏன் மோசே கேட்ட போது, பார்வோனுக்காக மற்றும் இஸ்ரவேலுக்காக அற்புதங்கள் செய்யும் தகுதியோடு மோசேயை தேவன் அனுப்பினார்?

3) அவ்வளவு எதற்கு, ஏன் இயேசு கூட "நான் பிதாவிலும் பிதா என்னிலும் இருக்கிறதை நம்புங்கள்; அப்படியில்லாவிட்டாலும் என் கிரியைகளினிமித்தமாவது என்னை நம்புங்கள்" என்றுச் சொல்லி, குறைந்தபட்சம் நான் செய்யும் அற்புத கிரியைகளையாவது கண்டு, என்னை நம்புங்கள் என்று கூறினார்?

4) கடைசியாக, ஒரு நபிக்கு அற்புதம் செய்யும் வரம் இல்லாவிட்டாலும் அவர் ஒரு நபியாக இருக்கமுடியும் என்றுச் சொன்னால், ஒரு அற்புதமும் செய்யாத முஹம்மதுவை நாம் ஏன் நம்பக்கூடாது? ஏன் அவர் ஒரு அற்புதமும் செய்யவில்லை என்று நாம் (கிறிஸ்தவர்கள்) குற்றம் சாட்டவேண்டும்?

இப்போது மேற்கண்ட கேள்விகளுக்கான பதில்களைக் காணலாம்.

நானே அதிகமாக பேசாமல், உங்களிடமிருந்தே இந்த கேள்விகளுக்கான விடையை பெற முயற்சி எடுக்கிறேன். நாம் அனைவரும் பைபிளை படிக்கிறோம், நூற்றுக்கணக்கன பிரசங்கங்களை கேட்கிறோம், ஆகையால், ஓரளவிற்கு நமக்கு பதில் சொல்லத்தெரியும். இந்த கேள்விகளை கேட்ட பிறகு உங்களுக்குத் தோன்றும் பதில்களை ஒவ்வொருவராக கூறுங்கள், அதன் பிறகு நான் சுருக்கமாக எல்லாவற்றையும் தொகுத்துக் கூறுகிறேன்.

முதலாவதாக, தேவன் ஏன் பல தீர்க்கதரிசிகள் மூலமாக அற்புதங்கள் செய்தார்? இதற்கு உங்களில் யாராவது பதில் சொல்லுங்களேன்?

சபை அங்கத்தினரிடமிருந்து ஒரு கரம் எழும்புகிறது: என் பெயர் சிவக்குமார், நான் என்னால் முடிந்த பதிலைச் சொல்கிறேன். ஒரு மனிதன் வேறு ஒரு மனிதன் சொல்லும் பொதுவான விஷயங்களை கேள்வி கேட்காமல் சில நேரங்களில் நம்புவான், ஆனால், அதே மனிதன் மார்க்க அல்லது மத விஷயங்கள் பற்றிச் சொல்லும் போது, அவனை எடுத்த எடுப்பிலேயே நம்புவது மிகவும் கடினமாக இருக்கும். எனவே, தேவன் தன் தீர்க்கதரிசிகளை அனுப்பும் போது, தேவைப்படும் நேரங்களில் அவர்கள் மூலமாக அற்புதங்கள் செய்வித்து, "இவன் என் பிரதிநிதியாக இருக்கிறான், இவனை நீங்கள் நம்பலாம் என்பதை மக்களுக்கு புரியவைக்க அற்புதங்களை அனுமதிக்கிறார்". தன்னை ஒரு தீர்க்கதரிசி என்றுச் சொல்லிக்கொள்கின்ற ஒரு நபர், நல்ல காரியங்களை பேசுவதோடு மட்டுமல்லாமல், ஒரு படிமேலே சென்று வியாதிகளை குணமாக்கி, அற்புதங்களைச் செய்துக் காட்டினால், இன்னும் அவர் மீது நம்பிக்கை வைக்க அது உபயோகமாக‌ இருக்கும். ஆக, அற்புதங்கள் என்பது கட்டாயமல்ல, ஆனால் சில நேரங்களில் அற்புதங்களை தேவன் ஒரு முக்கிய கருவியாக பயன்படுத்தி தன் செய்தியை மக்களிடம் சேர்க்கிறார்.

உமர்: சகோதரரே, நீங்கள் நன்றாக பதில் கூறினீர்கள். நீங்கள் சொன்னது உண்மையான வார்த்தைகள். அற்புதங்கள் என்பது சில நேரங்களில் தேவன் தம் பிள்ளைகள் மூலமாக செய்து, தம் ஊழியத்தை நிறைவேற்றிக் கொள்கிறார்.

அடுத்த கேள்வி: ஏன் மோசே கேட்ட போது, பார்வோனுக்காக மற்றும் இஸ்ரவேலுக்காக அற்புதங்கள் செய்யும் வல்லமையோடு மோசேயை அனுப்பினார்? "நான் அனுப்பினால் நீ போகவேண்டும், அவ்வளவு தான், கேள்வி எல்லாம் கேட்கக்கூடாது" என்று ஏன் தேவன் மோசேக்கு மறு உத்தரவு அளிக்கவில்லை, அதற்கு பதிலாக, ஒருசில அற்புதங்களை அப்போதே மோசேயை செய்யச் சொல்லி, மோசே அதை செய்துக்காட்டியபிறகு, அவரை இஸ்ரவேலர்களை விடுதலைச் செய்ய அனுப்பினார்.

இந்த கேள்விக்கு உங்களில் யார் பதில் சொல்லப்போகிறீர்கள்?

சபை அங்கத்தினரிடமிருந்து ஒரு கரம் எழும்புகிறது: என் பெயர் ருக்மணி, நான் ஒரு தனியார் கல்லூரி ஒன்றியில் ஆசிரியையாக இருக்கிறேன். மோசேவும், தேவனும் உரையாடிய அந்த உரையாடலை நாம் பார்த்தால், தேவன் அற்புதங்களோடு மோசேயை அனுப்பியது சரியானது தான் என்பது தெளிவாக புரியும்.

என் பைபிளில் நான் யாத்திராகமத்தை எடுத்துக்கொள்கிறேன். அதிலே மூன்றாம் அத்தியாயம் என்று நினைக்கிறேன், அதில் இந்த நிகழ்ச்சி உள்ளது. [எல்லாரும் தங்கள் பைபிளை யாத்திராகமம் மூன்றாம் அத்தியாயத்திற்கு திருப்புகிறார்கள்]

இதோ, இந்த மூன்றாம் அத்தியாயத்தில் முதல் சில வசனங்களை நாம் படித்தால், மோசே எரியும் முட்செடியை பார்க்கிறார், பிறகு தேவன் பேசுகிறார், இஸ்ரவேல் படும்வேதனையை நான் கண்டேன், அவர்களை கானான் தேசத்திற்கு கொண்டு வருவேன். ஆகையால் உன்னை பார்வோனிடம் அனுப்புகிறேன் என்றுச் சொல்கிறார்.

அப்பொழுது மோசே மிகவும் முக்கியமான கேள்வியை கேட்கிறார்: நான் இஸ்ரவேலர்களிடம் சென்று உங்கள் பிதாக்களுடைய தேவன் என்னை அனுப்பினார் என்றுச் சொன்னால், "அந்த தேவனின் பெயர்" என்ன என்று கேட்பார்களே, அதற்கு நான் என்ன பதில் சொல்வேன் என்று கேட்கிறார். அதற்கு தேவன் பதில் அளிக்கிறார் மற்றும் பார்வோன் உங்களை போக விடமாட்டான், எனவே, நான் அனேக அற்புதங்கள் செய்து அதன் மூலமாக உங்களை விடுதலையாக்கி கொண்டு வருவேன் என்று தேவன் கூறுகிறார்.

அடுத்ததாக, மோசே கேட்ட கேள்வி "மோசே ஒரு தீர்க்கதரிசி என்று மக்களை நம்பவைக்கும்" மிகவும் முக்கியமான கேள்வி, அதாவது பார்வோன் அற்புதங்களைக் காண்பான், கடைசியாக எங்களை அனுப்பிவிடுவான், ஆனால், இந்த மக்கள் என்னை நம்பவேண்டுமே, நான் பொய் சொன்னேன் என்றுச் சொல்வார்களே, உனக்கு தேவன் தரிசனமாகவில்லை என்றுச் சொல்வார்களே. அதற்கு என்ன பதில்? முதலாவது இஸ்ரவேல் மக்கள் என்னை நம்பினால் தானே நான் அவர்களின் பிரதிநிதியாக பார்வோனிடம் பேசமுடியும், இவர்களே என்னை நம்பவில்லையானால், பார்வோனிடம் செல்வது எப்படி? ஆரம்பமே அறைகுறையாக இருந்தால், முடிவு எப்படி இருக்கும்? நான் அதிகமாக இவர்களை கட்டாயப்படுத்தினால், என்னை ஒரு பைத்தியம் என்றுச் சொல்லி இவர்களே கொன்றுபோட்டுவிடுவார்களே.

இப்போது இதற்கு என்ன வழி?

மோசேயின் இந்த கேள்விக்கு, தேவன் மோசேயை கடிந்துக்கொள்ளவில்லை, அதற்கு மாறாக மூன்று அற்புத அடையாளங்களை செய்துக்காட்டி, மக்களை நம்பவைக்கிறார்.

யாத்திராகமம் 4: 1-9

1 அப்பொழுது மோசே: அவர்கள் என்னை நம்பார்கள்; என் வாக்குக்குச் செவிகொடார்கள்; கர்த்தர் உனக்குத் தரிசனமாகவில்லை என்று சொல்லுவார்கள் என்றான்.

2 கர்த்தர் அவனை நோக்கி: உன் கையிலிருக்கிறது என்ன என்றார். ஒரு கோல் என்றான்.

3 அதைத் தரையிலே போடு என்றார்; அவன் அதைத் தரையிலே போட்டபோது, அது சர்ப்பமாயிற்று; மோசே அதற்கு விலகியோடினான்.

4 அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: உன் கையை நீட்டி, அதின் வாலைப் பிடி என்றார்; அவன் தன் கையை நீட்டி, அதைப் பிடித்தபோது, அது அவன் கையிலே கோலாயிற்று.

5 ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாயிருக்கிற தங்கள் பிதாக்களுடைய தேவனாகிய கர்த்தர் உனக்குத் தரிசனமானதை அவர்கள் நம்புவதற்கு இதுவே அடையாளம் என்றார்.

6 மேலும், கர்த்தர் அவனை நோக்கி: உன் கையை உன் மடியிலே போடு என்றார்; அவன் தன் கையைத் தன் மடியிலே போட்டு, அதை வெளியே எடுக்கும்போது, இதோ, அவன் கை உறைந்த மழையைப்போல வெண்குஷ்டம் பிடித்திருந்தது.

7 அவர்: உன் கையைத் திரும்பவும் உன் மடியிலே போடு என்றார். அவன் தன் கையைத் திரும்பத் தன் மடியிலே போட்டு, தன் மடியிலிருந்து அதை வெளியே எடுத்தபோது, அது திரும்ப அவனுடைய மற்றச் சதையைப்போலாயிற்று.

8 அப்பொழுது அவர்: முந்தின அடையாளத்தை அவர்கள் கண்டு, உன்னை நம்பாமலும் உனக்குச் செவிகொடாமலும் போனால், பிந்தின அடையாளத்தைக் கண்டு நம்புவார்கள் .

9 இவ்விரண்டு அடையாளங்களையும் அவர்கள் நம்பாமலும், உன் வாக்குக்குச் செவிகொடமலும் இருப்பார்களானால், அப்பொழுது நீ நதியின் தண்ணீரை மொண்டு நிலத்தில் ஊற்றுவாயாக; நதியில் மொண்ட தண்ணீர் வெட்டாந்தரையிலே இரத்தமாகும் என்றார்.

மக்கள் சந்தேகம் கொள்வது நியாயமானது தான், அவர்களின் சந்தேகங்களை தீர்த்துவைப்பது ஒரு தீர்க்கதரிசியின் கடமை அல்லது அவனை அனுப்புகிற தேவனின் கடமை. அதனைத் தான், தேவன் இங்கு செய்கிறார். [இதனை அல்லாஹ் செய்தாரா என்பது தான் முக்கியமான கேள்வி] மக்களின் அவநம்பிக்கையைச் சொல்லி தன் ஊழியத்தை தட்டிக் கழிக்கலாம் என்று நினைத்த மோசேவினால், இப்போது மறுப்பு சொல்லமுடியவில்லை, ஏனென்றால், மக்கள் அற்புதங்களைக் கண்டால், நிச்சயமாக மார்க்கவிஷயங்களில் அதிகமாக நம்புவார்கள். அதன் பிறகு, மோசே தன்னால் சரியாக பேச வராது என்றுச் சொல்கிறார், அதன் பிறகு தேவன் அதற்கும் ஒரு வழிமுறையைச் சொல்கிறார்.

ஆக, ஒரு நபர் திடீரென்று வந்து நான் உங்கள் நபி, உங்களை விடுதலைச் செய்ய வந்துள்ளேன், உங்கள் பிரதிநிதியாக நான் பார்வோனிடம் பேசுகிறேன் என்றுச் சொன்னால்? மக்கள் என்ன பதில் சொல்வார்கள்? உடனே நம்பிவிடுவார்களா? அவர்களின் பிழைப்பில் மண்ணை வாரிப்போட ஒருவர் நினைக்கும் போது, அவர்களின் வாழ்க்கையையே மாற்றிவிடும் முடிவுகளை நான் உங்களுக்காக எடுக்கிறேன் என்று ஒருவர் சொல்லும் போது, மக்கள் அமைதியாக கேட்பார்களா? நிச்சயமாக கேட்கமாட்டார்கள். இப்படிப்பட்ட பெரிய முடிவுகளை மக்கள் நமபவேண்டுமென்றால், தங்கள் எதிர்காலத்தை ஒரு மனிதனின் வார்த்தைகள் மீது வைக்கவேண்டுமென்றால், அந்த மனிதன் சொல்வது உண்மையானது தான் என்பதை அவர்கள் நம்பும்படி, "அற்புதங்கள் அவசியமாகின்றன".

எனவே, மோசே மற்றும் தேவனின் இந்த உரையாடல் 100% மிகவும் சரியானது, மோசேயின் கேள்விகளில் நியாயம் இருந்தது, அதனை தேவன் உணர்ந்து, அற்புதங்கள் மூலமாக, மக்களை நம்பவைத்தார். மேலே உள்ள வசனங்களை சிறிது படித்துப் பாருங்கள், ஒவ்வொரு அற்புதத்தையும் சொல்லி, இதையும் கண்டு மக்கள் நம்பாமல் போவார்கள் அப்போது, இன்னொரு அற்புதம் செய் என்றுச் சொல்லி அடுத்தடுத்து மூன்று அற்புதங்களை கொடுத்து அனுப்புகிறார்.

பார்வோனை பணியவைக்க தேவன் 10 அற்புதங்களைச் செய்தார், அதே தேவன் தன் சுய ஜனங்களை நம்பவைக்க 3 அற்புதங்களை செய்யச் சொல்லி அனுப்புகிறார். இதில் ஜனங்கள் மீது தேவன் கோபம் கொள்ள அவசியமே இல்லை, இது இயற்கையான சந்தேகமே. இப்படிப்பட்ட பெரிய முடிவுகளை எடுக்க, மக்கள் ஒரு தீர்க்கதரிசியை நம்ப, நிச்சயமாக அற்புதங்கள் அவசியமே.

உமர்: மிகவும் அருமையாக கூறினீர்கள். கர்த்தருக்கே மகிமை உண்டாகட்டும். ஆக, மோசே மற்றும் தேவனின் இந்த உரையாடல் மிகவும் முக்கியமான உரையாடலாகும், அதாவது மனிதர்களின் இயற்கை குணமென்ன? அவர்கள் ஏன் எடுத்த எடுப்பிலேயே பெரிய முடிவுகளுக்கு "ஆம்" என்று கண்மூடித்தனமாக பதில் சொல்லக்கூடாது என்பதற்கு இந்த உரையாடல் தெளிவான பதில் தருகிறது.

சரி, அடுத்த கேள்விக்குச் செல்வோம்.

இயேசு "நான் செய்யும் அற்புத அடையாளங்களைக் (கிரியைகளைக்) கண்டாவது என்னை நம்புங்கள்" என்று ஏன் கூறினார்? இதற்கு யார் பதில் சொல்லப்போகிறீர்கள்?

[கூட்டத்திலிருந்து ஒரு கரம் எழும்புகிறது]

என் பெயர் சாலமோன், இதுவரை கேட்ட பதில்களிலிருந்தே இந்த கேள்விக்கான விடையை கொடுத்து விட முடியும். அதாவது, சில வேளைகளில் மனிதர்களின் ஞானமான பேச்சுக்களை கேட்டு மனிதர்கள் நம்பவில்லையானாலும், இயற்கைக்கு அப்பாற்பட்ட அற்புதங்களைக் கண்டால் நிச்சயமாக நம்புவார்கள். ஆனால், அக்கால யூத தலைவர்கள், அனேக இயற்கைக்கு அப்பாற்பட்ட அற்புதங்களை தங்கள் கண்களால் கண்டும் நம்பாத காரணத்தினால், இயேசு இப்படி கூறினார்.

பொதுவாக மனிதர்கள் அற்புதங்களைக் கண்டால் இயற்கையாக நம்புவார்கள், இந்த பொதுவான அறிவு கூட அல்லது நம்பிக்கை கூட இவர்களிடத்தில் இல்லையே என்று இயேசு அறிந்து இப்படி கூறினார். ஆக, ஒரு தீர்க்கதரிசி என்றால் கட்டாயமாக அற்புதம் செய்யவேண்டும் என்ற கட்டாயமில்லை, ஆனால், அவசியம் வரும் போது, நிச்சயமாக ஒரு அற்புதம் செய்து, தேவன் 'இவன் என் தீர்க்கதரிசி தான் என்பதை நிருபிக்க' அற்புதத்தை பயன்படுத்திக்கொள்வார்.

ஒரு தீர்க்கதரிசிக்கான அனேக தகுதிகளில், அற்புதம் செய்வது ஒரு தகுதியாகும். சிலருக்கு சில வேளைகளில் இது முக்கியமான முதலாவது தகுதியாகவும் (மோசே), சிலருக்கு அற்புதம் என்பது ஒரு தேவையில்லாத கருவியாகவும் (யோவான் ஸ்நானகன்) இருக்கும். புதிய ஏற்பாட்டில் இயேசுவிற்கும், இதர அப்போஸ்தலர்களுக்கும், மற்றும் பழைய ஏற்பாட்டின் முக்கியமான தீர்க்கதரிசிகளுக்கும் அற்புதங்கள் என்பது தங்கள் ஊழியங்களுக்கு தூண்களாகவும் இருக்கிறது.

உமர்: அருமை அருமை. மிகவும் அருமையாக கூறினீர்கள். இப்போது கடைசி கேள்விக்கு நான் பதில் சொல்கிறேன்.

கேள்வி: "ஒரு நபிக்கு அற்புதம் செய்யும் வரம் இல்லாவிட்டாலும் அவர் ஒரு நபியாக இருக்கமுடியும் என்றுச் சொன்னால், ஒரு அற்புதமும் செய்யாத முஹம்மதுவை நாம் ஏன் நம்பக்கூடாது? ஏன் அவர் ஒரு அற்புதமும் செய்யவில்லை என்று நாம் (கிறிஸ்தவர்கள்) குற்றம் சாட்டவேண்டும்?".

இதுவரை நம்முடைய சகோதர சகோதரிகள் சொன்ன பதில்களின் சுருக்கம் இதோ:

1) ஒருவர் தீர்க்கதரிசியாக இருக்கவேண்டுமென்றால், அவரது வாழ்க்கையில் அவர் ஒரு முறையாவது அற்புதம் செய்தாகவேண்டும் என்ற கட்டாயமில்லை.

2) அற்புதம் என்பது மக்களின் மனதில் நம்பிக்கையை கொடுக்க தேவன் பயன்படுத்தும் அனேக கருவிகளில் அற்புதமும் ஒன்று.

3) சில தீர்க்கதரிசிகளுக்கு அவர்களின் ஊழியத்தின் தன்மை, இடம் போன்றவற்றை பொறுத்து அற்புதங்கள் அவசியமாகும் (மோசே).

4) சில தீர்க்கதரிசிகளுக்கு அவர்களின் ஊழியத்தின் தன்மை, இடம் போன்றவற்றை பொறுத்து அற்புதங்கள் அவசியமே இல்லை (யோவான் ஸ்நானகன்)

இப்போது நம் கேள்வி என்னவென்றால், முஹம்மதுவிற்கு தன் ஊழியத்தைப் பொருத்து, அதன் வீரியத்தைப் பொருத்து பார்ப்போமானால், அவருக்கு அற்புதம் அவசியமா இல்லையா? அவசியம் என்றுச் சொன்னால், ஏன் அவசியம்? அவசியமில்லையென்றுச் சொன்னால், ஏன் அவசியமில்லை?

இந்த கேள்விகளுக்கு நாம் பதில்களை தெரிந்துக்கொண்டால், முஹம்மது ஒரு பொய்யான தீர்க்கதரிசியா அல்லது உண்மையான தீர்க்கதரிசியா என்பது தெளிவாக விளங்கும். புதிய மற்றும் பழைய ஏற்பாட்டின் வெளிச்சத்தில் நாம் இதுவரை கண்ட விவரங்களின் படி, முஹம்மது ஒரு கள்ள நபி என்று பார்த்தோம். ஆனால், இப்போது "அற்புதம் செய்யும் தகுதியின் அடிப்படையில்" அவரது நபித்துவத்தைப் பற்றி காண்போம்.

1) ஊழியத்தின் தன்மை (நபித்துவத்தின் வகை):

தேவன் சில தீர்க்கதரிசிகளை "மக்களை எச்சரிக்க மட்டும்" அனுப்புகிறார், இவர்கள் மூலமாக அவர் அற்புதம் செய்வதில்லை, உதாரணத்திற்கு யோவான் ஸ்நானகனையும், மற்றும் இதர சில தீர்க்கதரிசிகளையும் குறிப்பிடலாம்.

யோவானின் ஸ்நானகனின் ஊழியம் எப்படி இருந்தது: இவர் மக்களை எச்சரித்தார், தவறுகளை கண்டித்தார், கேட்டு திருந்துபவர்கள் திருந்தட்டும், கேளாதவர்கள் அவர்கள் வழியில் போகட்டும், அவ்வளவே. தான் பெரிய தீர்க்கதரிசி என்றுச் சொல்லி மக்களை கட்டாயப்படுத்தியோ, சாப‌மிட்டோ, தன் சீடர்களை ஒன்று சேர்த்துக்கொண்டு, மக்கள் மீது யுத்தம் செய்தோ தன் செய்தியை சொல்லவில்லை. ஆக, இந்த வகை தீர்க்கதரிசிகள், தேவன் கொடுத்த செய்தியை மக்களுக்கு கொடுப்பார்கள், கட்டாயப்படுத்தமாட்டார்கள். ஒருவேளை, இவர்கள் உயிருக்கே ஆபத்து ஏற்பட்டால் தப்பித்துச் செல்வார்கள் அல்லது தங்கள் ஊழியத்திற்காக உயிர் தியாகம் செய்து மரிப்பார்கள்.

வேறு வகையில் சொல்லவேண்டுமென்றால் இவர்களின் செய்தி மக்களின் மனதிலே மாற்றத்தை கொண்டு வரும் செய்தியாக இருக்கும், மக்களின் அரசியல் வாழ்க்கை சம்மந்தப்பட்ட பெரிய முடிவுகள் எடுக்கும் படி இவர்களின் செய்தி இருக்காது. ஆக, "மனதில் மாற்றம் செய்யுங்கள்" அல்லது "மனந்திரும்புங்கள்" என்ற வகையில் ஊழியம் செய்யும் நபிமார்கள் அற்புதம் செய்யவில்லையானாலும் பரவாயில்லை, நம்புபவர்கள் நம்பட்டும், நம்பாதவர்கள் நம்பாமலிருக்கட்டும்.

இரண்டாவதாக, இன்னொரு வகையான ஊழியம் செய்பவர்களும் இருக்கிறார்கள். இதற்கு எடுத்துக்காட்டாக மோசேயின் ஊழியத்தைக் கூறலாம். அதாவது, மக்கள் மிகப்பெரிய முடிவை எடுக்கவேண்டும் என்று இந்த தீர்க்கதரிசி கூறுவார். உதாரணத்திற்கு, 400க்கும் அதிகமான ஆண்டுகள் எகிப்தில் வாழ்ந்த இஸ்ரவேல் ஜனங்கள், தங்கள் இருப்பிடத்தைவிட்டுவிட்டு, மோசே என்ற ஒரு மனிதன் சொல்லும் வார்த்தைகளை கேட்டு,

அ) பார்வோன் இராஜாவிற்கு எதிராக செயல்படவேண்டும்,

ஆ) முழு குடும்பமும், இந்த ஒரு மனிதனின் (மோசே) பேச்சைக் கேட்டு, நாடு விட்டு நாடு கடந்துச் செல்லவேண்டும்.

இ) மட்டுமல்ல, தாங்கள் செல்லப்போகும் நாட்டில் ஏற்கனவே குடியிருக்கும் மக்களை துரத்தி,யுத்தம் செய்து, அங்கு இடம் பெயரவேண்டும்.

இப்படிப்பட்ட முடிவுகளை எடுக்கவேண்டுமென்றால்,

1) "ஏதோ ஒரு மனிதன் சொல்லும் பேச்சை கேட்டு எடுக்கமுடியுமா?"

2) இதற்கு உண்மையாகவே தேவனின் அங்கீகாரம் உண்டா?

3) தேவன் தங்களோடு இருந்து வழி நடத்துவாரா?

என்ற கேள்விகளுக்கு முதலில் பதில் தெரிந்துக்கொள்ளாமல், மோசேயை பின்பற்ற முடியுமா? இந்த கேள்விகளுக்கெல்லாம், பதில் ஒன்றே ஒன்று தான் உண்டு, அது "அற்புதங்கள்" என்பதாகும். இயற்கைக்கு அப்பாற்பட்ட அற்புதங்கள் செய்து மக்களின் மனதில் நம்பிக்கை ஊட்டினால் தவிர, மக்கள் நம்பமாட்டார்கள். தான் ஒரு உண்மையான தீர்க்கதரிசி என்று மோசே நிருபித்துக்கொண்டால் தவிர, இம்மக்கள் இவரை பின் பற்றமுடியாது. இது இரண்டாவது வகையான தீர்க்கதரிசிகளின் ஊழியம்.

இந்த வகையில் தீர்க்கதரிசியாக வரும் எந்த ஒரு நபராக இருந்தாலும் சரி, அவர் அற்புதங்கள் செய்பவராக இருக்கவேண்டும், அப்படி இல்லையானால், அந்த நபர் ஒரு பொய் நபியாவார், அவரை அனுப்பினவர் யெகோவா தேவன் இல்லை என்பது தெளிவாக புரிந்துவிடும்.

இப்போது இவ்விருவகையான நபித்துவத்தை கருத்தில் கொண்டு முஹம்மதுவை நாம் ஆராய்ந்தால் அவர் யார் என்பது விளங்கும்.

1) முஹம்மது அற்புதங்கள் செய்யாமலேயே நபியாக இருக்கமுடியும்:

முதலாவது முஹம்மது மக்காவில் தம் ஊழியத்தை ஆரம்பித்தார், தன்னை ஒரு தீர்க்கதரிசி என்றுச் சொல்லிக்கொண்டார், அனேக ஆண்டுகள் இப்படி உழைத்தார். ஒரு சிலர் மட்டுமே இவரது செய்தியைக் கேட்டு இவர் பக்கம் வந்தார்கள். மட்டுமல்ல மக்காவாசிக‌ள் இவரையும், இவரது சகாக்களையும் துன்பபடுத்தி, கொடுமைப்படுத்தினார்கள்.

இந்த நிலையில் முஹம்மது ஒரு யோவான் ஸ்நானகனைப்போல செயல்பட்டார், அதாவது தன் செய்தியைச் சொன்னார், மக்காவாசிக‌ள் கேட்டாலும் சரி, கேட்காவிட்டாலும் சரி, பாடுகளின் மத்தியில் தன் ஊழியத்தைச் செய்தார். ஆக, இந்த நிலையில் அவருக்கு அற்புதங்கள் தேவையில்லை. ஏனென்றால், இவர் கட்டாயப்படுத்தவில்லை, கையில் கத்தியை ஏந்தவில்லை, மனந்திரும்புங்கள் என்று கூறினார். ஆக, கையில் கத்தியை ஏந்தாத நிலையில் இருக்கும் இவருக்கு அற்புதங்கள் செய்யும் வல்லமை தேவையில்லை. அல்லாஹ் அற்புதங்கள் செய்து தன் செய்தியை உறுதிப்படுத்தவேண்டிய அவசியமில்லை.

முஹம்மது இப்படியே தன் வாழ் நாளெல்லாம் ஊழியம் செய்து இருந்திருந்தால், அவரிடம் "அற்புதங்களை" மக்கள் (கிறிஸ்தவர்கள் மற்றும் யூதர்கள்) எதிர்பார்த்து இருக்கமாட்டார்கள்.

2) முஹம்மது அற்புதங்கள் செய்தால் மட்டுமே, தன் நபித்துவத்துக்கான அடிப்படை தகுதியை உடையவராக மாறுவார்:

முஹம்மது மக்காவில் அமைதியாக தன் செய்தியை சொன்னார், மக்களை கட்டாயப்படுத்தாமல் இருந்தார். ஆனால், அவர் மதினாவிற்கு இடம்பெயர்ந்த பிறகு அனேக போர்களைச் செய்தார், தன்னை எதிர்த்தவர்களை கொன்றார், தான் செய்யும் ஒவ்வொரு காரியத்திற்கும் இறைவனை (பலிக்கடாவாக்கினார்) பயன்படுத்திக்கொண்டார். வன்முறையில் ஈடுபடும் முஹம்மதுவிற்கு இந்த அதிகாரத்தைக் கொடுத்தவர் யார்? என்பதை அறியவேண்டும். அவர் செய்யும் அனைத்து காரியங்களுக்கும் இறைவன் தான் காரணம் என்றுச் சொன்னால், அந்த காரியத்திற்கு இறைவனின் சாட்சி வேண்டும். அல்லாஹ் அற்புதங்கள், அடையாளங்கள் செய்து தன் நபியின் நபித்துவத்தை நிருபித்து இருந்திருக்கவேண்டும். ஆனால், இது நடக்கவில்லை.

மோசே தேவனிடம் கேட்ட கேள்விகளை முஹம்மது அல்லாஹ்விடம் கேட்கவில்லை. தன்னை அவர்கள் நபி என்று நம்பவேண்டும் என்று முஹம்மது கூறினாரே தவிர, தன் நபித்துவத்தை நிருபித்துக்கொள்ள எந்த ஒரு இயற்கைக்கு அப்பாற்பட்ட காரியங்களை அல்லாஹ் செய்யவில்லை. மோசே எங்கே, முஹம்மது எங்கே, யெகோவா தேவன் எங்கே, அல்லாஹ் எங்கே. இவ்விருவரும் நேர் எதிர் துருவங்கள்.

நாளைக்கு ஒருவன் வருவான், தன்னை நபி என்றுச் சொல்லுவான், ஒரு புதிய மதத்தை உருவாக்குவான், எல்லா இஸ்லாமியர்களும் தன் மார்க்கத்திற்கு வரவேண்டும் என்று கூறுவான், மாறவில்லையானால் மரண தண்டனை என்பான். அவனை பின்பற்ற ஒரு கூட்ட மக்களை சேர்த்துக்கொள்வான், பலவீனமாக மக்களை தாக்குவான், இதனை தன் இறைவன் செய்யும் படிச் சொன்னார் என்பான். இந்த சூழ்நிலையில் இஸ்லாமியர்கள் என்ன செய்வார்கள்? இந்த புதிய நபியை ஏற்றுக்கொள்வார்களா? அல்லது அவரிடம் தன் நபித்துவத்திற்கு அத்தாட்சி என்னவென்று கேட்பார்களா? சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால், மனந்திரும்புங்கள் என்றுச் சொல்லி, தன் செய்தியை மக்களின் மனதில் அமைதியாக பதியவைக்கும் ஒரு நபிக்கு அற்புதங்கள் தேவையில்லை. ஆனால், நாடு, அரசியல், சட்டம், யுத்தம், நாடுகளை பிடித்தல், நாட்டுக்கான சட்டங்களை உருவாக்கி தவறு செய்பவர்களை தண்டித்தல போன்ற மிகப்பெரிய மாற்றங்களைச் செய்யும் படி தன்னை இறைவன் அனுப்பினார் என்றுச் சொல்லும் ஒரு நபிக்கு கட்டாயமாக அற்புதங்கள் தேவை. இப்படிப்பட்ட ஊழிய அழைப்பில் வந்தவர் மோசே, ஆகையால் தேவன் மோசேயை வல்லமையோடு, அற்புதங்களோடு அனுப்பினார். ஆனால், அதே பாணியில், அதே ஊழிய அழைப்பில் வந்தவர் என்று இஸ்லாமியர்கள் கூறிக்கொள்ளும் தங்கள் நபிக்கு மட்டும், அல்லாஹ் அற்புதங்கள் இல்லாமல் அனுப்பினார். அற்புதங்களோடு மட்டுமே இறைவன் அவரை அனுப்பவேண்டும், அப்படி அனுப்பவில்லையானால் அவர் நபியுமல்ல, அவரை அனுப்பியவனும் இறைவனுமல்ல.

ஆக, முஹம்மது ஒரு கள்ள நபி என்பதை அறிய உதவும் அனேக காரணங்களில், "அற்புதங்களை" முஹம்மது செய்யாததும் ஒரு காரணமாகும்.

யோவான் ஸ்நானகன் அற்புதங்களைச் செய்யவில்லையானாலும் அவரை நாம் நபி என்று நம்பலாம், ஏனென்றால், அவர் ஒரு கத்தியை எடுத்து மக்களின் கழுத்து பக்கத்தில் வைத்து, தன் போதனையை செய்யவில்லை. ஆனால், முஹம்மது கட்டாயத்தின் பெயரில் தன் மார்க்கத்தை பரப்பினார், தன்னை நபி என்று ஏற்கும் படி அனேக நாடுகளுக்கு கடிதம் எழுதினார், பலவீனமான நாடுகள் அவரை நபி என்று அங்கீகரித்தன, எதிர்த்த நாடுகளோடு, இனங்களோடு மக்களோடு அவர் யுத்தம் செய்தார். இப்படிப்பட்டவரை மக்கள் நபி என்று நம்புவது எப்படி? மக்களை நம்பவைக்க வன்முறையை அல்ல, அற்புதங்களை முஹம்மது செய்திருக்கவேண்டும். ஆனால், அதில் அவர் தோல்வியுற்றதால், அவர் நபித்துவ பரிட்சையிலும் தோல்வியுறுகிறார்.

ஆக, மனதளவில் மாற்றத்தை உண்டாக்கும் நபிக்கு அற்புதங்கள் தேவையில்லை, நாட்டையும் சட்டத்தையும், ஆட்சியையும் தன் கையில் எடுக்கும் எந்த நபிக்கும் அற்புதங்கள் தேவை, அவரை அனுப்பும் இறைவனும் இதனை கடமையாக எண்ணவேண்டும்.

அடுத்த கேள்விக்குச் செல்வோம்.

கேள்வி 9: என் பெயர் ராஜாராம். முஹம்மது அற்புதங்கள் செய்யவில்லை என்று என் இஸ்லாமிய நண்பர்கள் ஏற்கிறார்கள். ஆனால், "குர்‍ஆன் தான்" முஹம்மதுவிற்கு அல்லாஹ் கொடுத்த அற்புதம் என்றுக் கூறுகிறார்கள். குர்‍ஆனைப் போல ஒரு நூல் உலகில் இல்லை என்றுச் சொல்கிறார்கள், அது வாழும் அற்புதம் என்கிறார்கள். என் கேள்வி என்னவென்றால், குர்‍ஆன் முஹம்மதுவின் நபித்துவத்திற்கு கிடைத்த அற்புதகமாக நாம் ஏற்கலாமா?

உமர் பதில் 9:

இந்த கேள்வியை நான் எதிர்ப்பார்த்தேன். இயேசுவைப் போலவும், அவரது சீடர்களைப் போலவும், இன்னும் பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகளைப் போலவும் அற்புதங்களை செய்யாத தங்கள் நபியான முஹம்மதுவிற்கு கிடைத்த கடைசி ஆயுதம் "குர்‍ஆன்". இதனை விட்டால் இஸ்லாமியர்களுக்கு தங்கள் நபியின் நபித்துவத்தை நிருபிக்க வேறு எதுவும் கிடைக்காது.

கேட்கிறவன் கேனையாக இருந்தால் சொல்கிறவன் எந்த பெரிய பொய்யையும் சொல்லுவான். அதாவது நாம் குர்‍ஆனை படிப்பதில்லை என்பதினாலும், நமக்கு அரபி மொழி தெரியாது என்பதினாலும், ஒரு வேளை நாம் தமிழ் அல்லது ஆங்கில குர்‍ஆனை படித்து, இது வேதமா என்று கேள்வி கேட்டால், நீங்கள் படிப்பது மொழியாக்கம் ஆகையால் தான் உங்களுக்கு புரியவில்லை, குர்‍ஆனின் மூல மொழியில் படித்தால் தான் குர்‍ஆனின் அர்த்தம் புரியும் என்று இஸ்லாமியர்கள் கூறுவார்கள்.

குர்‍ஆன் ஒரு அற்புதமா?

சுருக்கமாகச் சொல்லவேண்டுமென்றால், குர்‍ஆன் ஒரு அற்புதமல்ல, அது ஒரு சிறந்த இலக்கிய நூலுமல்ல, குறைந்தபட்சம் சாதாரண மனிதனுக்கு புரியும் அளவிற்கு கோர்வையாக எழுதப்பட்ட ஒரு நூலுமல்ல.

உண்மையச் சொல்லவேண்டுமென்றால், மக்கள் குர்‍ஆனை படித்து இஸ்லாமை புரிந்துக்கொள்வதை விட, இஸ்லாம் பற்றி குழப்பமடைவதே அதிகம்.

[குர்‍ஆனைப் பற்றிய ஒரு சுருக்கத்தை நாம் "கிறிஸ்தவ சபையே! விழிமின், எழுமின் பாகம் 1ல் கண்டுள்ளோம்]

குர்‍ஆன் ஒரு அற்புதமல்ல, இது இஸ்லாமியர்களால் சொல்லப்படும் பொய்யாகும், வாழ்நாளெல்லாம் குர்‍ஆனை அரபியில் படித்தால் தான் அதிக நன்மை என்று நம்பிக்கொண்டு, குர்‍ஆனின் வசனங்களின் பொருளை அறியாமல், படிக்கும் சராசரி இஸ்லாமியர்கள் நம்மிடம் அடிக்கடி சொல்லும் பொய் "குர்‍ஆன் ஒரு வாழும் அற்புதம்" என்பதாகும். நன்றாக கவனியுங்கள், பிறவியிலிருந்தே கண்கள் இல்லாத ஒரு மனிதன், தாஜ்மஹாலின் அழகை வர்ணித்தால், அப்படிப்பட்டவன் சொல்வதை நீங்கள் நம்புவீர்களா? அதே போலத்தான், குர்-ஆனை அரபியில் மட்டும் படித்துவிட்டு, நம்மிடம் வந்து பெரிய பெரிய கதைகளைச் சொல்வார்கள் முஸ்லிம்கள். இப்போது சராசரி மனிதனுக்கும் புரியும் படி குர்‍ஆன் ஒரு அற்புதமா? என்பதை காண்போம்.

1) வேதம் என்பது இறைவன் மக்களின் வழிகாட்டுதலுக்காக கொடுத்த புத்தகம் என்று பொதுவாகச் சொல்லுவோம். ஆனால், குர்‍ஆனை மட்டும் படித்து மக்கள் வழிநடத்தப்படுவார்களா? குர்‍ஆனை படித்து மக்கள் இஸ்லாமைப் பற்றி அறிந்துக்கொள்வார்களா? குறைந்தபட்சம், ஒரு நாளுக்கு எத்தனை முறை தொழவேண்டும் எப்படி தொழவேண்டும் போன்றவைகளை மக்கள் அறிந்துக்கொள்ள முடியுமா? போன்ற கேள்விகளை நாம் கேட்டால், இதற்கு "குர்‍ஆனை படித்து ஒரு மனிதன் இஸ்லாமை முழுவதுமாக அறிய முடியாது" என்பது தான் பதிலாகும். எந்த நோக்கத்திற்காக வேதம் கொடுக்கப்படுகின்றதோ, அந்த நோக்கத்தையே அந்த வேதத்தால் நிறைவேற்ற முடியவில்லையானால், அதனை "வேதம்" என்று அழைப்பதெப்படி? இப்படிப்பட்ட ஒரு புத்தகம் தான் குர்‍ஆன், இது எப்படி அற்புதமாகும்? குர்‍ஆன் எப்படி முஹம்மதுவிற்கு அல்லாஹ்வினால் கொடுக்கப்பட்ட அற்புதம் என்று இஸ்லாமியர்கள் கூறுகிறார்கள்?

2) அடுத்தபடியாக, ஒரு இறைவேதம் என்றால், அது பிழையற்ற ஒன்றாக இருக்கவேண்டும். எழுத்துக்கு எழுத்து அல்லாஹ்வின் வார்த்தை என்று இஸ்லாமியர்கள் நம்மிடம் கூறுவார்கள், ஆனால், குர்‍ஆனில் உள்ள முரண்பாடுகள், எழுத்துப்பிழைகள், கருத்துப் பிழைகள், இலக்கண பிழைகள், சரித்திர தவறுகள், விஞ்ஞான பிழைகள் என்று அனேக தவறுகள் இருக்கும் போது அது எப்படி வேதமாகும்? அது எப்படி அற்புதமாகும்? [நமக்கு இன்னொரு வாய்ப்பு கிடைத்தால், இந்த பிழைகள் அனைத்தையும் பற்றி விவரமாக பேசுவோம். அதுவரை எங்களுக்கு நேரமில்லை என்றுச் சொல்லுபவர்கள் இந்த தொடுப்புகளை சொடுக்கி, தமிழிலும், ஆங்கிலத்தில் குர்‍ஆனின் பிழைகளை, முரண்பாடுகளை அறிந்துக்கொள்ளுங்கள்: http://isakoran.blogspot.com/ and http://www.answering-islam.org/tamil/quran.html]

3) மேலும், இறைவன் ஒருவனே, உலக மக்கள் அனைவரும் அவரது படைப்புக்கள் என்றுச் சொல்லும் இஸ்லாமியர்கள், தங்கள் தொழுகையில் இன்னும் ஏன் அரபியை பயன்படுத்துகிறார்கள்? வேதம் மக்களுக்காக, மக்கள் புரிந்துக்கொண்டு, அதன் மூலமாக இறைவனை தொழுதுக்கொள்வதற்காக கொடுக்கப்படுகிறது என்று இருக்கும் போது, புரியாத மொழியில் குர்‍ஆனை படிப்பதினால் ஒரு சராசரி மனிதனுக்கு என்ன நன்மை? அர்த்தம் புரியவில்லையானாலும், நானும் குர்‍ஆனை படித்தேன் என்று பெருமையாக சொல்லிக்கொள்ள முடியுமே தவிர, இறைவனின் வார்த்தைகளை புரிந்துக்கொண்டு, அவனுக்கு கீழ்படிய முடியுமா?

4) அரபியில் படித்தால் தான் இலக்கிய நயம், மொழி நயம் நன்றாக இருக்கும் என்று இஸ்லாமியர்கள் சொல்வார்களானால், யாருக்கு வேண்டும் இலக்கிய நடை? யாருக்கு வேண்டும் மொழி நயம்? தன் வாழ்க்கையைப் பற்றி தனக்கே சரியாக புரியாத பாமர மனிதனுக்கு இலக்கிய நடை தேவையா? மொழி நயம் தேவையா? "தீமையை செய்யாதே நன்மையை செய்" என்பதை அவனுக்கு புரியும் தமிழில் சொல்லி அவனுக்கு வழிகாட்டுவாயா? அல்லது அரபி மொழியில் அவனுக்குச் சொல்லி, இதனை ஒரு நாளுக்கு ஐந்து முறை ஓது என்றுச் சொல்லி, மருத்துவர் கசப்பான மாத்திரைகளை கொடுத்து, ஒரு நாளுக்கு முன்று முறை சுடுதண்ணீரில் "மிழுங்கு" என்பானே அது போல, "அரபியை மிழுங்கச் சொல்கிறீர்களா"? பாமர மனிதனுக்கு தேவை, புரியும் வண்ணமிருக்கும் வேதமா? அல்லது கண்களை மூடிக்கொண்டு, வாயில் வெதுவெதுப்பான தண்ணீரை ஊற்றி மாத்திரையை போட்டு, வேண்டா வெறுப்போடு விழுங்க வைக்கும் அரபியில் அமைந்த குர்‍ஆனா? எது தேவை? புரியும் வேதமா? அல்லது புரியா வேதமா?

5) நீ என் வேதத்தை அரபியில் படித்தால் தான் நான் நன்மை செய்வேன் என்றுச் சொல்லும் இறைவன் யாருக்குத் தேவை? நீயும் வேண்டாம் உன் வேதமும் வேண்டாம்?

6) உனக்கு புரியும் மொழியில் நான் உன்னை தொழுதுக்கொள்ளமுடியாது, எனக்கு புரியும் மொழியில் நான் உன்னை தொழுதுக்கொள்ள உனக்கு சம்மதமா? இதற்கு "ஆம், என்றும் ஆமென்" என்றும் சொல்லும் இறைவன் தான் நமக்கு வேண்டுமே ஒழிய, ஏதோ டேப்பில் ரிகார்டு செய்து அடிக்கடி போட்டு கேட்டு சந்தோஷப்படும் இறைவன் நமக்கு தேவையில்லை. நாம் அல்லாஹ்வின் டேப்ரிகார்கர் அல்ல, இறைவன் நம்மை இயந்திரங்களாக படைக்கவில்லை என்பதை இஸ்லாமியர்கள் அறியவேண்டும்.

மார்க்கமோ அல்லது மதமோ அது "மனிதனைச் சுற்றியே அமைந்திருக்கவேண்டும், மனிதனுக்காகவே அது இருக்கவேண்டும்", அவனையே புறக்கணித்துவிட்டு, அவனுக்கு புரியாத மொழியில் தொழுதுக்கொள்ளவேண்மென்றால், மனிதனுக்கு மார்க்கமும் வேண்டாம், ஒரு மண்ணாங்கட்டியும் வேண்டாம். மனிதனுக்கு புரியாத மொழியில் அவனை தொழுதுக்கொள்ளச் சொல்லும் இறைவன் அவனுக்கு வேண்டாம். அவனுக்கு புரியாத மொழியில் அவனை தொழுதுக்கொள்ளச் சொல்லும் இறைவன் ஒரு இறைவனா? அப்படிப்பட்டவன் மனித சமுதாயத்திற்கு தேவையா? வேறுவகையில் சொல்லவேண்டுமென்றால், அவன் உண்மையான இறைவனே அல்ல, அவன் ஒரு பொய்யன்.

ஆகையால், குர்‍ஆன் ஒரு அற்புதமல்ல, அதனை அரபியில் படித்தால் தான் நல்லது என்றுச் சொல்லும் இஸ்லாம், இறைவனால் உண்டான மார்க்கமல்ல.

குர்‍ஆனைப் பற்றி அடுத்தடுத்த கூட்டங்களில் நாம் அலசுவோம், தியாணிப்போம்.

ஆக, "குர்‍ஆன் ஒரு அற்புதமல்ல", முஹம்மது ஒரு தீர்க்கதரிசி அல்ல, அவர் ஒரு கள்ள தீர்க்கதரிசியாவார். நமக்கு கொடுத்த நேரமும் கடந்துவிட்டது, எனவே, அடுத்த முறை இன்னும் அதிகமாக கேள்விகளுக்கு பதில்களைக் காண்போம்.

[உமர் அமர்கிறார், போதகர் பேச ஆரம்பிக்கிறார்]

போதகர்: இது வரை எங்களின் கேள்விகளுக்கு பதில்களைச் சொன்ன சகோதரர் ஜான்சன் மற்றும் உமர் அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நம்முடைய சபை விசுவாசிகளுக்கு நான் கூறிக்கொள்வது என்னவென்றால், இந்த கூட்டம் வெறும் ஆரம்பம் தான், இப்படிப்பட்ட கூட்டங்களை நாம் மாதம் ஒருமுறையாவது ஒழுங்குபடுத்துவோம், இன்னமும் இஸ்லாமைப் பற்றி அதிகமாக அறிந்துக்கொள்வோம்.

இந்த கூட்டங்கள் மூலமாக குர்‍ஆனை மட்டுமல்ல, இஸ்லாமியர்கள் கேள்விகள் கேட்கும் போது, எப்படி பைபிள் வசனங்களை பயன்படுத்தவேண்டும் என்பதையும் அறிந்துக்கொண்டோம். நமக்கு பைபிள் முழுவதும் தெரியும் என்பதற்காக, நாம் இஸ்லாமியர்கள் கேட்கும் கேள்விகளுக்கு உடனே பதில்களை கொடுத்துவிடமுடியாது, அவர்களோடு விவாதம் புரிய மேடை ஏறக்கூடாது. பைபிளோடு கூட, குர்‍ஆனையும், இஸ்லாமையும் நாம் கற்கவேண்டும், அதன் பிறகு தான் நம்முடைய இஸ்லாமிய கிறிஸ்தவ உரையாடல் மிகவும் பயனுள்ளதாக அமையும். எனவே, சபையின் அங்கத்தினர்களுக்கு நான் வேண்டிக்கொள்வது என்னவென்றால், உங்களிடம் இஸ்லாமியர்கள் கேள்விகள் கேட்கும் போது, சிறிது நேரம் உரையாடிவிட்டு, அவர்களை எங்களிடம் கொண்டு வாருங்கள், அவர்கள் கேள்விகளை எங்களிடம் கேளுங்கள், அறைகுறை ஞானத்தோடு நீங்களே முழு பதில்களையும் சொல்ல முயற்சி எடுக்காதீர்கள், இது மிகவும் ஆபத்தானது.

கர்த்தர் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக.

ஜெபம் செய்வோம்,....

[ஜெபம் செய்து, எல்லாரும் ஒருவரை ஒருவர் வாழ்த்திவிட்டு செல்கிறார்கள். உமரும் அவரது நண்பர் ஜான்சன் அவர்களும், போதகரோடும், அவரது குடும்பத்தோடும் ஒரு உணவு விடுதிக்குச் செல்கிறார்கள். போதகருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகளும் உண்டு. மூத்தவனுக்கு திருமணமாகி சில ஆண்டுகள் ஆகிறது, மற்ற இருவரும் பொறியியல் பட்டப்படிப்பை படித்துக்கொண்டு இருக்கிறார்கள். ஹோட்டலில் உணவு சாப்பிடும் போது... போதகரின் மகள் திடீரென்று "உமரண்ணா... ஒரு கிறிஸ்தவ பெண்.. ஒரு இஸ்லாமியரை திருமணம் செய்துக்கொள்வது பற்றி உங்கள் கருத்து என்ன என்று கேட்டாள்….இப்படிப்பட்ட கேள்வியை அதுவும் போதகரின் மகளின் வாயிலிருந்து இந்த கேள்வியை அந்த நேரத்தில் யாரும் எதிர்பார்க்கவில்லை… போதகரின் கண்கள் தன் மகளைப் பார்த்தது... உமருக்கும் .ஜான்சனுக்கும்  தலை சுற்றியது... போதகரின் மனைவியாகிய பாஸ்டரம்மாவிற்கோ..... தாங்க முடியாத அளவிற்கு சிரிப்பு வந்தது.]

அடுத்த பாகத்தில்.... போதகரின் பிள்ளைகள் மூவரும் கேட்கும் சில கேள்விகளுக்கு பதில்களைக் காண்போம். இஸ்லாமியர்களை திருமணம் செய்துக்கொள்ளுதல் முதற்கொண்டு, அவர்களிடம் நட்பு கொள்ளுதல் வரைக்கும் உள்ள சூடான மற்றும் மென்மையான கேள்விகளுக்கு பதில்களைக் காண்போம். "கிறிஸ்தவ சபையே (வாலிபர்களே)! விழிமின் எழுமின் பாகம் 5" வாலிபர்கள் கேட்கும் கேள்வி பதிலாக அமையும்....

கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக.



--
7/14/2012 11:10:00 AM அன்று ஈஸா குர்-ஆன் - Isa Koran இல் Isa Koran ஆல் இடுகையிடப்பட்டது


அன்புள்ள அப்துல்லாஹ் - கடிதம் 2

 

அன்புள்ள அப்துல்லாஹ் - 2

எழுதியவர்: ஜெரார்ட் நெல்ஸ்

(இது இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களிடையே தெளிவை உண்டாக்க உதவும்படிக்கு எழுதப்பட்ட கற்பனை உரையாடல் கடிதம் ஆகும். 'அப்துல்லாஹ்' என்ற பெயர் அரபி மொழி பெயராகும், இதன் பொருள் 'அல்லாஹ்வின் அடிமை, ஊழியன்' என்பதாகும். இந்த கடிதங்களை எழுதும் ஆசிரியரின் பெயர் 'தியோபிலஸ்' என்பதாகும், இது ஒரு கிரேக்க மொழி பெயராகும், அதன் பொருள் 'இறைவனால் நேசிக்கப்பட்டவன்' என்பதாகும்.)

கடிதம் 2

உன் பதிலுக்கு நன்றி. உன் உள்ளத்திலிருந்து வரும் வெளிப்படையான பதிலை எதிர்பார்த்துக் கொண்டிருந்தது நியாயமானது என்பது எனக்குத் தெரியும். நான் உன் உணர்வுகளை மதிக்கிறேன். உன் நேர்மையை நான் சிறிதும் சந்தேகிக்கவில்லை. இறைவன் மற்றும் அவருடனான நம் உறவு ஆகியவற்றுடன் தொடர்புடைய எந்த உரையாடலுக்கும் நேர்மையே அடிப்படையாக இருக்க வேண்டும். ஆயினும், அந்நேர்மையானது நிரூபிக்கப்பட்ட உண்மைகளுடன் இணைக்கப் பட்டதாக இருக்க வேண்டும். நான் முழுமனதுடன் பின்பற்றுவது உண்மையிலேயே சரியானதுதானா? என்ற கேள்வியை நாம் கேட்டுக் கொள்ள வேண்டும். குற்றவாளி என்று நியாயந்தீர்க்கப்பட்ட ஒருவரின் தாய் தன் மகன் குற்றமற்றவர் என்று முழுமையாக நம்பக்கூடும். ஆனால் அத்தாயின் அறியாமையின் நிமித்தமாக அவர் குற்றமற்றவராகி விடுவாரா? எது உண்மை என்பதை நம் நேர்மையின் அளவு தீர்மானிப்பதில்லை, ஒரு நீதிவிசாரணையே தீர்மானிக்கிறது, நேர்மையானது ஒரு பொய்யை உண்மையாக மாற்ற முடியாது.

ஆகவே, நான் மேலே சொன்னது போல, நம் நேர்மை அல்ல, நாம் எதன் மீது நம் நேர்மையை வைத்திருக்கிறோம் என்பதே மிக முக்கியமான காரியம் ஆகும். எனவே நான் உன் நேர்மையை பாராட்டுகிற அதே வேளையில், நீ உண்மை என்று ஏற்றுக் கொண்டிருக்கிறதைக் குறித்து நான் வினவுகிறேன் என்பதை தயவு செய்து ஏற்றுக் கொள்வாயாக. நான் இதை உனக்கு விளக்க விரும்புகிறேன்.

தற்போதைய வேதாகமத்தின் நம்பகத்தன்மையை ஏற்பது குறித்து உனக்கு ஆழ்ந்த தயக்கங்கள் இருப்பதாக நீ குறிப்பிட்டிருந்தாய். நான் இதை ஓரளவுக்கு எதிர்பார்த்திருந்தாலும், இன்னமும் உன் கருத்து எனக்கு ஆச்சரியமளிக்கிறது. உன் சந்தேகத்திற்கு நான் பதிலளிக்க விரும்புகிறேன். முதலாவதாக, நிரூபிக்கப்பட்ட உண்மைகள் மற்றும் அவைகளைக் குறித்த நம் விளக்கம் ஆகிய இரண்டையும் நாம் வேறுபிரித்துப் பார்க்க வேண்டும். இஸ்லாம் ஒரு போதும் அனுமதிக்காத காரியங்கள் கிறிஸ்தவத்தில் நடந்திருக்கின்றன. கடந்த சில நூற்றாண்டுகளாக வேதாகம விமர்சகர்கள் தாராளப் போக்கை முன் வைத்து தங்களின் கூற்றை பரப்பிக் கொண்டிருக்கின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் இறையியலார் ஆவர். அவர்களின் கூற்று பெரும்பாலும் தவறான விளக்கங்களின் அடிப்படையிலானவை ஆகும். இவை அவர்களின் செயல்கள், தனிப்பட்ட நம்பிக்கைகள் மற்றும் அவர்களின் கருத்துக்களில் வெளிப்படுகின்றன. இவைகளின் அடிப்படையிலே அவர்கள் வேதாகம விளக்கம் (அ) வியாக்கியானம் கொடுக்கிறார்கள். எனினும், நாம் கவனித்து செவிமடுக்க வேண்டிய வேதாகம விமர்சகர்ககளும் உண்டு.

நாம் விளக்கம் கூறுதலைக் குறித்த 'வார்த்தைத் திறனாய்வு' என்று அழைக்கப்படுவதற்கும் 'வரலற்று ஆராய்ச்சிமுறை' ஆகிய இரண்டையும் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும். வார்த்தைத் திறனாய்வு என்பது மூலப் பிரதியின் வார்த்தையை அறிந்து கொள்ள நிரூபிக்கப்பட்ட விஞ்ஞான முறை ஆகும். பல நூற்றாண்டுகளாக கைப்பிரதிகளில் பிரதி எடுக்கும் போது ஏதேனும் பிழைகள் உண்டாயிற்றா என்பதையும் ஒரு குறிப்பிட்ட வார்த்தை திரிக்கப்பட்டு மாற்றப்பட்டிருக்கிறதா என்பதையும் இதன் மூலம் ஆராய்ந்து அறிந்து கொள்ள முடியும். தவறாக புரிந்து கொள்ளப்பட்ட வார்த்தைகள், வாக்கியங்கள் மற்றும் உரைகள் ஆகியவற்றையும் இது சரிசெய்ய முயற்சிக்கிறது. அறிஞர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் மற்றவர்களைக் கொண்ட பல குழுக்கள் வேதாகமத்தின் பழைய கைப்பிரதிகள் ஒவ்வொன்றையும் முழுமையாக ஆராய்ந்திருக்கின்றனர். இது தவறுகளைக் கண்டுபிடிக்கவும், மூலப்பிரதியில் என்ன எழுதப்பட்டிருந்தது என்பதை அறிந்து கொள்வதற்கும் உதவியது. இது நாங்கள் ஆதியில் வெளிப்படுத்தப்பட்ட வார்த்தைக்கு ஒத்த, பிழையற்ற ஒரு வேதாகமத்தை எங்கள் கைகளில் வைத்திருக்கிறோம் என்கிற உறுதியை எங்களுக்குத் தருகிறது.

வரலாற்று ஆராய்ச்சி முறை முற்றிலும் வித்தியாசமானதாகும். ஒரு எழுத்தின் ஏற்றுக்கொள்ளக் கூடிய தன்மையை மதிப்பிடுவதன் மூலமாக அதைச் 'சரி செய்ய' இம்முறை முயற்சிக்கிறது. உதாரணமாக, யூதர்கள் செங்கடலை கட்டாந்தரையில் கடப்பது போல நடந்து சென்று கடந்தனர் அல்லது இயேசு கன்னியின் வயிற்றில் பிறந்தார், அவர் கடல் மீது நடந்தார், மரித்தவர்களை உயிரோடே எழுப்பினார் என்று பைபிள் போதிக்கிறது. இவைகள் நடைபெற சாத்தியமில்லாதவைகளாக இருக்கிற படியால் இவைகளை ஒரு புராணக் கதை என்றே ஒருவர் எடுத்துக் கொள்ள வேண்டும் என விமர்சகர் கருதுவார். இவர்கள் பலவிதங்களிலும், வழிமுறைகளிலும் அவர்கள் பைபிளில் இயற்கைக்கப்பாற்பட்டதாக தோன்றும் எந்தக் காரியத்தையும் தங்கள் பேனாக்களால் தணிக்கை செய்து விடுகிறார்கள். எதிர்பார்க்கப்பட்டது போலவே, இவர்களின் கூற்றுகள் மேற்கத்திய நாடுகளில் ஆவிக்குரிய சிதைவை பெருமளவில் உண்டாக்கி விட்டன. இதனால் பலருடைய மனதிலிருந்து கடவுள் நம்பிக்கை அழிக்கப்பட்டு விட்டது. தெரிந்தோ தெரியாமலோ இவ்வாராய்ச்சியாளர்கள் ஆதியந்தமற்ற இறைவனால் என்னவெல்லாம் செய்யமுடியும், எவைகளெல்லாம் செய்ய முடியாது என்பதை மதிப்பிடுவதற்கும் வரையறுப்பதற்கும் தங்கள் மனித அறிவையே நியாயாதிபதியாக வைத்திருக்கிறார்கள். இது தெய்வீக நூல் மற்றும் அதன் ஆசிரியரைக் குறித்த மனித விளக்கத்தையே தந்திருக்கிறது. நாம் இதை 'மதச்சார்பற்ற மனிதம்'| என்கிறோம். இது மிகவும் வருந்தத்தக்கதாகும். ஏனெனில் மேற்கத்திய ஊடகங்களில் வெளிப்படுவது போல பெரிய தலைவர்களும் இக்கருத்துடையோர்களாகவே உள்ளனர்.

தங்களுடைய கருத்துக்களுக்கு வலு சேர்ப்பதற்காக, இந்த விமர்சகர்கள் வேதாகம நூல்கள் எழுதப்பட்ட காலத்தை மாற்றியிருக்கிறார்கள். உதாரணமாக,மோசேயின் சட்டம் வேதபாரகனாகிய எஸ்றாவால் எழுதப்பட்டது என்று கூறுகின்றனர். இவர் மோசேக்குப் பின் 900 வருடங்கள் கழித்து வாழ்ந்தவர் ஆவார். மோசேயின் காலத்தில் எழுத்தறிவு இல்லை என்ற யூகத்தின் அடிப்படையில் இக்கருத்தை எழுப்புகின்றனர். ஆனால் ஆபிரகாமின் காலத்திற்கு வெகு காலத்துக்கு முன்பே (மோசேக்கு 500 வருடங்கள் முன்பே) எழுத்து வழக்கத்தில் இருந்தது என்பதை இப்போது அறிகிறோம்.

சில விமர்சகர்கள் இயேசு கிறிஸ்துவின் மரணத்திற்குப் பின் அவருடைய பரமேறுதல் நிகழ்வு நடைபெற சாத்தியமில்லாதது என்று கூறி அதை ஏற்றுக் கொள்ள மறுக்கின்றனர். இதன் மூலமாக இவை கட்டுக் கதை என எடுத்துக் கொண்டு பவுல் கிறிஸ்தவத்தை மாற்றிவிட்டார் என்று கூறினர். அவர் தன் இறையியல் கொள்கைக்கு ஏற்றவாறு சுவிசேஷத்தை தணிக்கை செய்துவிட்டார் என்றும் கூறப்படுகிறது. ஆனால் சமகால குறிப்புகள் பவுலுக்கும் இயேசுகிறிஸ்துவின் சீடர்களுக்கும் இடையே உபதேச முரண்பாடுகள் எதுவும் இருந்ததில்லை, இன்னும் சொல்லப் போனால் அவர் அவர்களிடம் கலந்தாலோசித்தார் என்று காண்பிக்கின்றன.

பிரதி எடுத்தலில் அவ்வப்போது நிகழ்ந்த பிழைகளை நாங்கள் ஒப்புக்கொள்ள தயாராக இருக்கும் வேளையில், இவை எவ்விதத்திலும் தேவனுடைய வார்த்தையின் செய்தி மற்றும் உள்ளடக்கத்தை மாற்றுவதில்லை என்பதில் நாங்கள் மிகவும் உறுதியுடனுருக்கிறோம். உண்மையில், மூவாயிரம் ஆண்டுகளுக்கும் அதிகமான காலத்தில் கரங்களால் நகலெடுக்கப்பட்ட வேதாகம கைப்பிரதிகள் மிகவும் சிறிதளவே பிழை உள்ளதாக காணப்படுவதை நாங்கள் முற்றிலும் அற்புதமானதாகவே கருதுகிறோம்.

அனேக இஸ்லாமியர், நற்செய்தி நூல்களில் உள்ள பிழைகள் குறித்த கட்டுரையை பரப்புவதற்கு இவ்விதமான தாராளப்போக்குடைய விவாதங்களையே பயன்படுத்துகின்றனர், ஆனால் அதேவேளையில் அவர்கள் தங்கள் சொந்த புனித நூலுக்கு மிகவும் அவசியமான வார்த்தைத் திறனாய்வை பயன்படுத்த மறுக்கின்றனர் என்பது நமக்கு மிகவும் ஆச்சரியத்துக்குரியதாக இருக்கிறது. பைபிளை விட குர்ஆன் காலத்துக்குப் பிந்தியதாக இருந்தாலும், பைபிளில் இருப்பது போல, அல்லது அதை விட மிகவும் சிக்கலான பிரச்சனைகள் உள்ளன என்ற உண்மையை முழுதுமாக மறைத்து விடுகின்றனர். இவ்வாக்கியம் எழுப்பும் அதிர்வலைகளை நான் அறிந்திருக்கிறேன். ஆனால் வேதாகமம் குறித்த பல இஸ்லாமியக் கூற்றுகள் எங்களுக்கு கோபமூட்டுவதாக இருப்பதைக்காட்டிலும் அதிகமாக இக்கருத்து உனக்கு கோபமூட்டுவதாக இருக்க முடியாது. சுருங்கக் கூறின், ஒரேவிதமான விதிகளைக் கொண்டு நாம் ஆராய வேண்டும் என்று கருதுகிறேன். தபரி, (கி.பி.855வரை வாழ்ந்தவர்), அல்-புகாரி (கி.பி.870 வரை வாழ்ந்தவர்), மற்றும் அல்-ஹஜாலி (கி.பி.1111 வரை வாழ்ந்தவர்) போன்ற முக்கியமான இஸ்லாம் அறிஞர்கள் (கிரேக்க) நற்செய்தி நூலின் உண்மைத்தன்மையை நம்பினர். இவர்களின் கூற்றை வேதாகமம் மாற்றி எழுதப்பட்டு விட்டது என்று பிரச்சாரம் செய்கிற இஸ்லாமிய அறிஞர்கள் மறைத்து (கண்டும் காணாதது போல இருந்து) விடுகின்றனர். குர்-ஆன் கூறும் செய்தியும் கூட நற்செய்தி நூல்களின் உண்மைத்தன்மையே:

(முஃமின்களே!)"நாங்கள் அல்லாஹ்வையும், எங்களுக்கு இறக்கப்பட்ட(வேதத்)தையும்; இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் இன்னும் அவர் சந்ததியினருக்கு இறக்கப்பட்டதையும்; மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் கொடுக்கப்பட்டதையும் இன்னும் மற்ற நபிமார்களுக்கும் அவர்களின் இறைவனிடமிருந்து கொடுக்கப்பட்டதையும் நம்புகிறோம், அவர்களில் நின்றும் ஒருவருக்கிடையேயும் நாங்கள் வேறுபாடு காட்ட மாட்டோம் ; இன்னும் நாங்கள் அவனுக்கே முற்றிலும் வழிபடுகிறோம்" என்று கூறுவீர்களாக. (குர்-ஆன் 2:136)

(ஆதலால்) இன்ஜீலையுடையவர்கள், அதில் அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு தீர்ப்பு வழங்கட்டும்;. அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு யார் தீர்ப்பளிக்கவில்லையே? அவர்கள் தான் பாவிகளாவார்கள். இன்னும் அல்லாஹ் அருள் செய்த (சட்ட திட்டத்)தைக் கொண்டே அவர்களிடையில் தீர்ப்புச் செய்வீராக. அவர்களுடைய மன இச்சைகளைப் பின்பற்றாதீர்கள்;. அல்லாஹ் உம்மீது இறக்கிவைத்ததில் சிலவற்றை விட்டும் அவர்கள் உம்மைத் திருப்பிவிடாதபடி, அவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பீராக. (உம் தீர்ப்பை) அவர்கள் புறக்கணித்து விடுவார்களானால், சில பாவங்களின் காரணமாக அவர்களைப் பிடிக்க நிச்சயமாக அல்லாஹ் நாடுகிறான் என்பதை அறிந்து கொள்வீராக. மேலும் நிச்சயமாக மனிதர்களில் பெரும்பாலோர் பாவிகளாகவே இருக்கின்றனர். அஞ்ஞான காலத்து தீர்ப்பையா அவர்கள் விரும்புகிறார்கள்? உறுதியான நம்பிக்கையுள்ள மக்களுக்கு அல்லாஹ்வைவிட தீர்ப்பு வழங்குவதில் அழகானவன் யார்? எனவே (நபியே!) எவர் இருதயங்களில் நோய் இருக்கின்றதே?, அத்தகையவர்தாம் அவர்களிடம் விரைந்து செல்வதை நீர் காண்பீர். (அவர்களைப் பகைத்துக் கொண்டால்) "எங்களுக்கு ஏதாவது துன்பச்சுழல் ஏற்படுமே? என்று அஞ்சுகிறோம்" என அவர்கள் கூறுகிறார்கள்; அல்லாஹ் (தான் நாடியபடி) தன்னிடமிருந்து (உங்களுக்கு) ஒரு வெற்றியையே? அல்லது ஏதாவது ஒரு (நற்) காரியத்தையோ கொடுத்து விடலாம்;. அப்பொழுது அவர்கள் தம் உள்ளங்களில் மறைத்து வைத்திருந்ததைப் பற்றி கைசேதமடைந்தோராக ஆகிவிடுவார்கள். (குர்-ஆன் 5:47,49,50,52)

இன்னும், நீங்கள் வேதத்தையுடையவர்களுடன் - அவர்களில் அக்கிரமமாய் நடப்பவர்களைத் தவிர்த்து, (மற்றவர்களுடன்) அழகிய முறையிலேயன்றித் தர்க்கம் செய்யாதீர்கள்; "எங்கள் மீது இறக்கப்பட்ட (வேதத்)தின் மீதும் உங்கள் மீது இறக்கப்பட்ட (வேதத்)தின் மீதும் நாங்கள் ஈமான் கொள்கிறோம்; எங்கள் இறைவனும் உங்கள் இறைவனும் ஒருவனே - மேலும் நாங்கள் அவனுக்கே முற்றிலும் வழிபட்டு, நடப்போர் (முஸ்லிம்கள்) ஆவோம்" என்று கூறுவீர்களாக. (குர்-ஆன் 29:46)

குர்-ஆன் எழுதப்பட்ட காலத்தில் வேதாகத்தில் திருத்தம் அல்லது நம்பகத்தன்மையின்மை குறித்த குறிப்பு எதுவும் காணப்பட வில்லை என்பது மிகவும் தெளிவாகிறது. இதற்கு முரணாகச் சொல்லுகிற எவரும் குர்ஆனுக்கு எதிராகச் செல்வதோடன்றி, கீழ்க்காணும் கேள்விகளுக்கும் பதிலளிக்க வேண்டும்:

• வேதாகமத்தை திருத்தியது அல்லது மாற்றியது யார்?

• வேதாகமம் எப்பொழுது திருத்தப்பட்டது?

• திருத்தப்பட்டது எனில் மூலப்பிரதி எங்கே அல்லது அப்படிப்பட்ட ஒன்று இருக்கிறது என்பதற்கான ஆதாரம் எங்கே?


இதுகாறும் இவைகளுக்கு பதில் எனக்கு கிடைக்கவே இல்லை.

முஹம்மதுவின் காலத்திற்கு முன்போ அல்லது அவரது காலத்திலோ வேதாகமம் திருத்தப்பட்டிருக்கும் எனில், குர்-ஆன் வேதாகமம் குறித்து சாதகமாக சொல்லியிருக்காது. அப்படியானால் அதற்குப் பின்னர் வேதாகமம் திருத்தப்பட்டதா? முஹம்மதுவின் காலத்துக்கும் நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே எழுதப்பட்ட கைப்பிரதிகள் தற்போது உள்ளன, அவை அதற்கு சான்று பகரும். வேதாகமம் இறைவனுடைய வார்த்தைதான் என்பதை குர்-ஆனில் இருந்தே நாம் சற்று முன்பு வாசித்தோம். அத்துடன், |அல்லாஹ்வின் வாக்குகளை யாராலும் மாற்ற முடியாது| (ஸூரா 6:34; 10:64) என்ற குர்-ஆன் வாசகத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இப்படியாக, வேதாகமத்தைக் குறைகூறும் முஸ்லீம் அறிஞர்கள் என்னதான் செய்ய முயற்சிக்கிறார்கள்?

வேதாகமம் திரித்து எழுதப்பட்டிருக்கிறது என்று குர்-ஆன் கூறுகிறது என்று சில முஸ்லீம்கள் கூறுவர். அவர்கள் மேற்கோளாக காண்பிப்பது கீழ்கண்ட வசனங்களாகும்:

வேதத்தையுடையோரே! சத்தியத்தை அசத்தியத்துடன் ஏன் நீங்கள் கலக்குகிறீர்கள்? இன்னும் நீங்கள் அறிந்து கொண்டே ஏன் உண்மையை மறைக்கிறீர்கள்? (ஸூரா 3:71)

நிச்சயமாக அவர்களில் ஒரு பிரிவார் இருக்கின்றார்கள் - அவர்கள் வேதத்தை ஓதும்போதுத் தங்கள் நாவுகளைச் சாய்த்து ஓதுகிறார்கள் - (அதனால் உண்டாகும் மாற்றங்களையும்) வேதத்தின் ஒரு பகுதிதானென்று நீங்கள் எண்ணிக் கொள்வதற்காக் ஆனால் அது வேதத்தில் உள்ளதல்ல் அது அல்லாஹ்விடம் இருந்து (வந்தது) என்றும் அவர்கள் கூறுகிறார்கள்; ஆனால் அது அல்லாஹ்விடமிருந்து (வந்ததும்) அல்ல இன்னும் அறிந்து கொண்டே அவர்கள் அல்லாஹ்வின் மீது பொய் கூறுகின்றார்கள். (ஸூரா.3:78)

மேற்கண்ட குர்-ஆன் வாக்கியங்கள் கூறுகிறது போல, யூதர்கள் பேசும்போது தங்கள் நாவினால் வசனத்தை திருத்திச் சொன்னார்களே அன்றி தங்கள் எழுதுகோலினால் வேதாகமத்தைத் திருத்தவில்லை என்பதை அறிந்துகொள்ளலாம். இல்லையேல், முஸ்லீம்கள் வேதாகமத்தின் உள்ளடக்கத்தைக் குறித்து வேதத்தை உடையவர்களிடம் (யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள்) கேட்க வேண்டும் என்று குர்-ஆன் சொல்லியிருக்காது:

வேதங்களுடையோரிடம் கேட்டுத் (தெரிந்து) கொள்ளுங்கள் (என்று நபியே! அவர்களிடம் கூறும்) (ஸூரா 21:7)

அப்படியானால் அனேக முஸ்லீம்கள் வேதாகமம் திருத்தப்பட்டுவிட்டது என்று ஏன் நம்புகின்றனர்? வரலாறு, அகழ்வாராய்ச்சி மற்றும் குர்-ஆன் போன்றவை அதை மறுத்தும் ஏன் அவர்கள் அவ்வாறு நம்புகின்றனர் என்று நாம் கேட்கலாம். இக்கேள்விக்கான பதில் அது ஒரு சதி என்றே எண்ணத்தோன்றுகிறது.

இப்னு - காஜெம் (Ibn Khazem) (கி.பி 1064ல் மரித்தார்) என்பவர் கலீஃபா அவர்களின் மந்திரியாக தெற்கு ஸ்பெயின் பகுதியை சில காலம் ஆட்சி செய்தார். அவர் குர்-ஆனை வாசித்துக் கொண்டிருந்த போது ஈஸா (இயேசு) தனக்குப் பின் வரவிருக்கும் அஹமது என்னும் பெயரையுடைய தூதரைப் பற்றிய நற்செய்தியைக் கூறுவதை வாசித்தார் (ஸூரா 61:6). அந்த அரேபியப் பெயரின் பொருளும் முஹம்மது என்ற பெயரின் பொருளும் ஒத்த தன்மையுடையது ஆகும். மேலும் எழுதப்படிக்கத் தெரியாத நபியாகிய நம் தூதரைப் பின்பற்றுகிறார்களோ - அவர்கள் தங்களிடமுள்ள தவ்ராத்திலும் இன்ஜீலிலும் இவரைப் பற்றி எழுதப் பட்டிருப்பதைக் காண்பார்கள் என்று சொல்லப்பட்டிருப்பதையும் அவர் வாசித்திருக்க வேண்டும். (ஸூரா.7:157). ஆகவே அவர் முஹம்மதுவைப் பற்றிய குறிப்புகளுக்காக வேதாகமத்தில் தேட ஆரம்பித்தார். ஆனால் அவரைப் பற்றிய எந்த குறிப்பும் இல்லாததைக் கண்டு அவர் ஆச்சரியப்பட்டிருக்கக் கூடும். ஒரே இறைவனிடமிருந்து தோன்றியதாகக் கூறப்பட்ட குர்-ஆன் மற்றும் வேதாகமத்திற்கு இடையே உள்ள பல முரண்பாடுகளையே அவர் கண்டார். இப்னு காஜெம் சந்தித்த பிரச்சனையை நாம் கண்டு கொள்ள முடியும். வேதாகமம் மற்றும் குர்-ஆன் ஆகிய இரண்டு புத்தகங்களும் இறை வார்த்தை என்று குறிப்பிடப்பட்டது - ஆனால் அவை ஒன்றுக்கொன்று முரண்பட்டவையாக உள்ளன.

இப்னு - காஜெம் குர்-ஆனின் தூய்மையைக் குறித்து சந்தேகப்படக் கூடாது என தீர்மானித்தார். முஹம்மது நற்செய்தி நூல்களைக் குறித்து உயர்வாக சொல்லியிருக்கிற படியால், அவை குர்-ஆனுக்கு இசைந்து காணப்பட வேண்டும் என்றும், யூதர்களாலும் கிறிஸ்தவர்களாலும் இப்போது அவை மாற்றப்பட்டுவிட்டன என்று அனுமானித்தார். இந்த யூகம் குர்-ஆன் மீது அவர் கொண்டிருக்கும் வைராக்கியத்தைக் காண்பிக்கலாம், ஆனால் அது சரித்திர உண்மைகளின் மீது அமைந்தது அல்ல.

அவரது காலத்திலிருந்து முஸ்லீம்கள் வேதாகமத்தின் தூய்மையைக் குறித்து கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கின்றனர். அவர்களுடைய விவாதமானது குர்-ஆனுக்கு முரண்பட்டதாக இருக்கிறதோடு மாத்திரமல்லாது, வேதாகமத்தின் உண்மைத்தன்மையை ஆதரிக்கும், அதிகரித்துக் கொண்டே இருக்கிற சரித்திர மற்றும் அகழ்வாராய்ச்சி சான்றுகளுக்கும் முரண்பட்டு விளங்குகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, இறைவனுடைய வார்த்தையை எந்தக் காரணத்திற்காக, எவரேனும் மாற்ற வேண்டும்?

அனேக முஸ்லீம்கள் அறிந்து கொள்ளாத ஒன்றைக் கண்டுகொள்ள இந்த கடிதம் உனக்கு உதவியிருக்கும். உண்மைக் கிறிஸ்தவர்கள் தங்கள் இருதயத்திலும் வாழ்க்கையிலும் வேதாகமத்திற்கு மிகவும் சிறந்ததொரு இடத்தைக் கொடுத்திருக்கின்றனர். வேதாகமம் தேவன் அவர்களுக்கு எழுதின அன்பின் கடிதம் ஆகும்.

உனது ஆழ்ந்த நம்பிக்கையின் ஆதாரத்தைக் குறித்து கேள்வி கேட்கும் ஒரு கடிதம் எழுதுவது என்பது எனக்கு மிகவும் வேதனை அளிப்பதாகவே இருக்கிறது. ஏனெனில் இது உன் உணர்வுகளை பாதிக்கக் கூடும். ஆனால் இறைவனில் உள்ள நம் நம்பிக்கைக்கான அஸ்திபாரத்தைக் குறித்த நம் கவனம் இத்தகைய உணர்ச்சிப் பூர்வமான தடைகளை மேற்கொள்ள நமக்கு பலமளிக்கும்.

இந்தக் கடிதத்தை நீ பெறும்போது நலமாகவும் சரீர ஆரோக்கியத்துடனும் இருப்பாய் என்று நம்புகிறேன். தயவு செய்து சீக்கிரம் பதில் கடிதம் எழுது. இனிய நல் வாழ்த்துக்கள்

இப்படிக்கு உண்மையுடன்
தியோபிலஸ்

ஆங்கில மூலம்: Dear Abdallah - Second Letter

முதல் கடிதம்

பட்டியல்

மூன்றாம் கடிதம்


© Answering Islam, 1999 - 2012. All rights reserved.
 
 


--
7/14/2012 10:46:00 AM அன்று ஈஸா குர்-ஆன் - Isa Koran இல் Isa Koran ஆல் இடுகையிடப்பட்டது


பீஜே குழுவிற்கு கேள்வி: நவீன விஞ்ஞானம் குர்-ஆனில் காணப்படுமா?

 

உமரின் முன்னுரை: சில மாதங்களுக்கு முன்பு சான் குழுவினருக்கும், பீஜே குழுவினருக்கும் இடையே நடைப்பெற்ற "குர்-ஆன் இறைவேதமா?" என்ற விவாதத்தில், பீஜே குழுவினர் "குர்-ஆன் இறைவேதம் தான் என நிருபிக்க, குர்-ஆனில் நவீன விஞ்ஞானம் உண்டு" என்ற வாதத்தை முன்வைத்தனர். சான் குழுவினர் "குர்-ஆனில் விஞ்ஞானம் என்று ஒன்று இல்லை, ஒருவேளை ஒருபேச்சுக்காக குர்-ஆனில் இருக்கிறது என்று ஏற்றுக்கொண்டாலும், குர்-ஆன் இறைவேதம் ஆகமுடியாது, ஏனென்றால், உலகில் அனேக பழமைவாய்ந்த புத்தகங்களிலும் இதர மார்க்க புத்தகங்களிலும் விஞ்ஞானம் உண்டு, அப்படியானால், அந்த புத்தகங்களை இறைவன் தான் அருளினான் என்பதை முஸ்லிம்கள் ஏற்கமுடியுமா? என்று கேள்வி கேட்டு, இஸ்லாமியர்களின் விஞ்ஞான கட்டுக்கதைகளுக்கு அன்றைக்கே முற்றுப்புள்ளி வைத்தனர்".  இதனை நாம் விவாத வீடியோக்களில் காணலாம். அந்த வீடியோக்களை பார்த்த நாளிலிருந்து ஏன் நாம் பீஜே குழுவினர் முன்வைத்த விஞ்ஞான விவரங்களுக்கு பதில்களை பதிக்கக்கூடாது? என்ற எண்ணம் வந்தது. அதன் அடிப்படையில், இந்த ரமளான் மாதத்தில் "குர்-ஆனும் விஞ்ஞானமும்" என்ற தலைப்பில் தொடர் கட்டுரைகளை பதிக்கலாம் என்று விரும்பி, இந்த முதல் கட்டுரையை பதிக்கிறேன். இதைப் பற்றி மறுப்பு எழுத விரும்பும் இஸ்லாமியர்களுக்கு என் ரமளான் வாழ்த்துதல்களைச் சொல்லிக் கொள்கிறேன்.
 
------------------------------

நவீன விஞ்ஞானம் குர்-ஆனில் காணப்படுமா?

'குர்-ஆனில் விஞ்ஞானம்' காணப்படுகிறது என்பவர்களுக்கு பொதுவான மறுப்பு

இணைய தளமாகிய soc.religion.islam தளத்திலும் மற்றும் இதர இணைய தளங்களில் ஒரு குறிப்பிட்ட வாதம் அடிக்கடி பதியப்படுகின்றது. நவீன விஞ்ஞானம் குர்-ஆனில் காணப்படுகின்றது என்பது தான் அந்த வாதமாகும். கிரகங்கள் முதற்கொண்டு வானவியல் வரைக்கும், கரு உருவாகுதல் முதற்கொண்டு, புவியமைப்பியல் வரைக்கும் உள்ள விஞ்ஞான தகவல்கள், இன்னும் அனேக விஞ்ஞான குறிப்புகள் குர்-ஆனின் அனேக அத்தியாயங்களில் (ஸூராக்களில்) காணப்படுகிறது என்று இஸ்லாமியர்கள் வாதிக்கிறார்கள். மேலும் இப்படிப்பட்ட நவீன விஞ்ஞானம் பற்றிய தகவல்கள் அக்காலத்தில் முஹம்மதுவிற்கு தெரிய வாய்ப்பில்லை, அப்படி இருந்தும் குர்-ஆனில் இவைகள் இருப்பதினால், நிச்சயமாக குர்-ஆனை இறைவன் தான் இறக்கினான் என்று இஸ்லாமியர்கள் முடிவு செய்கிறார்கள்.

இஸ்லாமியர்களின் இந்த விஞ்ஞான வாதத்திற்கு மறுப்பாக, ஒவ்வொரு தலைப்பாக எடுத்துக்கொண்டு, அதற்கான பதிலைத் தரலாம். ஒவ்வொரு தலைப்பாக எடுத்துக்கொண்டு அதற்கு மறுப்பை சகோதரர் "ஆண்ட்ரு வர்கோ" அவர்கள் கொடுத்துள்ளார்கள், அந்த பதில்களை படிக்க இங்கு சொடுக்கவும். ஏற்கனவே தனித்தனியாக பதில் கொடுக்கப்பட்டு இருப்பதினால், மறுபடியும் அதே வகையில் பதில் தரவேண்டிய அவசியமில்லை. எனவே இந்த சிறிய கட்டுரையில், "குர்-ஆனில் நவீன விஞ்ஞானம்" என்ற இஸ்லாமியர்களின் புதிய "கோட்பாட்டிற்கு" மறுப்பை காண்போம். இஸ்லாமியர்களின் இந்த வாதம் தர்க்கரீதியாக பிழையாக உள்ளது. இந்த கட்டுரையில் செய்யப்படும் ஆய்வானது, குர்-ஆனில் விஞ்ஞானம் உண்டு என்றுச் சொல்லப்படுகின்ற புவியியல், கருவியல் மற்றும் எல்லா விதமான விஞ்ஞான வாதத்திற்கும் மறுப்பு அளிக்கும்.

இந்த கட்டுரை, "soc.religion.islam" என்ற தளத்தில் "ஆறுகள் மற்றும் சமுத்திரங்கள்" என்ற தலைப்பில் நான் புரிந்த விவாதத்தின் அடிப்படையில் உருவானதாகும், எனவே, ஆறுகள்/சமுத்திரங்கள் பற்றிய சில விவரங்கள் இக்கட்டுரையிலும் தொடப்படுகின்றது.

நவீன விஞ்ஞானம் குர்-ஆனில் உண்டு, ஆகையால், குர்-ஆன் இறைவேதம் என்ற வாதத்தில் இருக்கும் ஆறு வகையான பிழைகளை கீழே பார்க்கலாம்:

1 இவ்வகையான வாதத்தை ஆதரிப்பவர்கள், அவ்வசனங்களுக்கு வேறு வகையான பொருள் வருவதை தடுக்கிறார்கள்.
(Those who pursue the argument leave no room for alternative interpretations)
2 இந்த வாதம் அல்லாஹ்வை பலவீனமானவராக சித்தரிக்கிறது.
(The argument as it stands makes Allah out to be weak)
3 இந்த 'புதிய விஞ்ஞானம்' தற்கால இஸ்லாமிய அறிஞர்களின் வாதங்களாகும்.
(The argument is a modern polemic)
4 முடிவாக, "குர்-ஆனை நிருபிக்கும் நவீன விஞ்ஞானம்" என்ற வாதம், குர்-ஆனில் விஞ்ஞானத்தை காணாமல் தடுமாறுகிறது. மேலும் விஞ்ஞானமே குர்-ஆனை குற்றப்படுத்துகிறது.
(At the end of the day, the "modern science proves the Qur'an" argument does not find science in the Qur'an, rather it uses science to judge the Qur'an)
5 தெரிவு செய்து விளக்கம் அளித்தால், எதை வேண்டுமானாலும் நிருபித்து விடலாம்.
(Selective interpretation can be used to prove anything)
6 இந்த வாதம் குர்-ஆன் அதிகாரபூர்வமானது அல்ல என்பதை நிருபிக்கிறது
(Applying the argument means that the Qur'an is no longer authoritative)
முடிவுரை (Conclusion)

வாசகர்களுக்கு இந்த கட்டுரை பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். எனக்கு மகிழ்ச்சியும், உற்சாகவும் உண்டாக்கும் விவரம் என்னவென்றால், இஸ்லாமியர்கள் இந்த கட்டுரைக்கு அளித்த வரவேற்பாகும். எனக்கு அனேக இஸ்லாமியர்கள் பின்னூட்டமிட்டு, நீங்கள் சொல்வது தான் சரியானது, மற்றும் எங்கள் அறிஞர்கள் இப்படிப்பட்ட வாதங்களைச் சொல்லி குர்-ஆனுக்கு நற்பெயரை கொண்டு வர முயற்சி எடுப்பது தவறானதாகும் என்று எனக்கு எழுதியுள்ளார்கள். உதாரணத்திற்கு, அப்துல் ரஹ்மான் லோமக்ஷ் என்ற இஸ்லாமியர், என்னுடைய மேற்கண்ட நான்காவது பாயிண்டை குறிப்பிட்டு, கீழ்கண்டவாறு எழுதுகிறார்:

"இந்த காரணங்களால் தான் எங்கள் அறிஞர்கள் பொதுவாக 'குர்-ஆனில் விஞ்ஞானம்' என்ற வாதத்தை மறுக்கிறார்கள்" என்று பின்னுட்டமிட்டு, கடைசியாக, 'மொத்தத்திலே , *Andy is right.*' என்று முடித்தார்.

கடைசியாக, "soc.religion.islam" என்ற தளத்தில் நடந்த விவாதத்தை படிக்க விரும்புகிறவர்கள், கீழ்கண்ட தொடுப்புக்களில் அவைகளை படிக்கலாம்.

The posting from Suleiman that started it all.

My reply to Suleiman and his friend Abujamal (basically the text of this paper).

AbdulraHman Lomax's reply to me.


இந்த கட்டுரையை நீங்கள் தாராளமாக பயன்படுத்தலாம்.


1) இவ்வகையான வாதத்தை ஆதரிப்பவர்கள், அவ்வசனங்களுக்கு வேறு வகையான பொருள் வருவதை தடுக்கிறார்கள்.
(Those who pursue the argument leave no room for alternative interpretations)

இஸ்லாமியர்களால் பலவகையான அர்த்தங்கள் கொடுக்கும்படியாகவே குர்-ஆனின் வசனங்கள் உள்ளன. இதில் தவறேதும் இல்லை. வேத வசனங்களுக்கு பொருள் கூறுவது சுலபமானதல்ல, மற்றும் வேத வசனங்கள் இறக்கப்பட்ட காலகட்டத்தில் நிலவிய சரித்திர பின்னணியை கருத்தில் கொண்டு இன்று விளக்கம் அளிப்பது என்பது கடினமான ஒன்றாகும். உதாரணத்திற்கு, குர்-ஆனில் வரும் துல் கர்னைன் என்ற ஒரு நபரை எடுத்துக்கொள்வோம். ஸூரா 18ல் வரும் இந்த விசித்திர பயணி யார் என்று இஸ்லாமியர்களிடையே கருத்து வேறுபாடு உள்ளது. யூசுப் அலி போன்றவர்கள் இந்த நபர் "மகா சக்கரவர்த்தி அலேக்சாண்டர்" என்று நம்புகிறார். இதர இஸ்லாமியர்கள் இதனை மறுக்கிறார்கள், மற்றும் இவர் சைரஸ் என்ற அரசராக இருக்கிறார் என்று நம்புகிறார்கள். இந்த விஷயம் பற்றி நல்ல முறையில் விவாதிக்க வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளது.

ஆனால், "குர்-ஆனில் நவீன விஞ்ஞானம்" உண்டு என்று போதிக்கின்ற இஸ்லாமியர்கள் அந்த வசனங்கள் என்ன சொல்கின்றன என்று கவனிப்பதில்லை, அதற்கு பதிலாக தங்கள் சொந்த விரிவுரைகளை கொடுக்கிறார்கள். இப்படிப்பட்ட செயல்களைச் செய்பவர்கள், வேண்டுமானால் தங்களின் நம்பிக்கையை இவ்விதமாக அழைத்துக்கொள்ளட்டும் அதாவது, "குர்-ஆன் அல்லாஹ்விடமிருந்து வந்தது என்பதை நிருபிக்க, குர்-ஆனில் நவீன விஞ்ஞானம் உண்டு என்று விளக்கமளிக்கும் நம்பிக்கை" ("Belief that an interpretation of the Qur'an contains modern science demonstrates that it is from Allah."). உண்மையில், குர்-ஆனில் எந்த ஒரு வசனத்திலும் உண்மையான விஞ்ஞானம் இல்லை (மேலும் அறிய இக்கட்டுரையின் இரண்டாவது பாயிண்டை படிக்கவும்).

இணைய தளத்தில் "soc.religion.islam" என்ற குழுவில், இந்த விஞ்ஞானம் பற்றிய விவாதம் ஸூரா 25:53 வசனத்திலிருந்து ஆரம்பித்தது. இந்த வசனத்தை ஒருமுறை படிக்கவும்:

அவன்தான் இரு கடல்களையும் ஒன்று சேர்த்தான்.; ஒன்று, மிக்க இனிமையும் சுவையுமுள்ளது மற்றொன்று உப்பும் கசப்புமானது - இவ்விரண்டிற்குமிடையே வரம்பையும், மீற முடியாத ஒரு தடையையும் ஏற்படுத்தியிருக்கிறான்.

"It is He Who has let free the two bodies of flowing water: One palatable and sweet, and the other salt and bitter; yet has He made a barrier between them, a partition that is forbidden to be passed." (Sura 25:53; Yusuf Ali)

நான் விவாதம் புரிந்த இஸ்லாமியரின் வாதம் கீழ்கண்ட விதமாக இருந்தது(மேலும் அனேகர் அவரோடு சேர்ந்து விவாதித்தனர்):

மேற்கண்ட குர்-ஆன் வசனமானது, பெரிய ஆறுகள், சமுந்திரங்களோடு அல்லது கடல்களோடு கலப்பதைப் பற்றி தெளிவாக பேசுகிறது. அதாவது சில நேரங்களில் சில ஆறுகள் கடலோடு கலந்து பல மைல்கள் செல்லும், அப்படி செல்லும் போது, அது கடலின் உப்பு நீரோடு கலந்துவிடாமல் சுத்த நீராகவே கடந்துச் செல்லும். தற்கால விஞ்ஞானிகள் இதனை கண்டுபிடித்துள்ளனர். ஏன் இப்படி சுத்தமான நீர் உப்பு நீரோடு கலக்கவில்லை என்ற காரணத்தையும், மறுப்பிற்கு இடமில்லாத வகையில் குர்-ஆன் தெளிவாக விவரிக்கிறது. தற்கால விஞ்ஞான முறையில் கூறவேண்டுமானால், இவ்விரு தண்ணீர்களுக்கும் இடையில் இருக்கும் ஈர்ப்பு சக்தியினால் இப்படி நடக்கிறது என்று நவீன விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். (Suleiman, in thread "Scientific facts and Qur'an", soc.religion.islam, 4-Nov-99; online source)

எனினும், இந்த வசனத்தை பல ஆங்கில மொழியாக்கங்களில் படித்தால், இந்த வசனம் நதிகள் பற்றி பேசவில்லை, அதற்கு பதிலாக தண்ணீர்கள் இருக்கும் இடங்களைப் பற்றி பேசுகிறது என்பதை காணலாம், இதனை அரபி மொழியில் படித்து சரி பார்த்துக்கொள்ளலாம் (இந்த விஷயத்தில் எனக்கு ஒரு இஸ்லாமியர் உதவி செய்தார்).

அவன்தான் இரு கடல்களையும் ஒன்று சேர்த்தான்.; ஒன்று, மிக்க இனிமையும் சுவையுமுள்ளது மற்றொன்று உப்பும் கசப்புமானது - இவ்விரண்டிற்குமிடையே வரம்பையும், மீற முடியாத ஒரு தடையையும் ஏற்படுத்தியிருக்கிறான். (முஹம்மது ஜான் தமிழாக்க வசனம்)

அவனே இரண்டு கடல்களை ஒன்று சேர்த்துள்ளான். இது மதுரமாகவும், தாகம் தீர்ப்பதாகவும் உள்ளது. அது உப்பாகவும், கசப்பாகவும் உள்ளது. அவ்விரண்டுக்குமிடையே ஒரு திரையையும், வலுவான தடுப்பையும் அவன் ஏற்படுத்தியுள்ளான்.(பீஜே தமிழாக்கம்)

YUSUFALI: It is He Who has let free the two bodies of flowing water: One palatable and sweet, and the other salt and bitter; yet has He made a barrier between them, a partition that is forbidden to be passed.

PICKTHAL: And He it is Who hath given independence to the two seas (though they meet); one palatable, sweet, and the other saltish, bitter; and hath set a bar and a forbidding ban between them.

SHAKIR: And He it is Who has made two seas to flow freely, the one sweet that subdues thirst by its sweetness, and the other salt that burns by its saltness; and between the two He has made a barrier and inviolable obstruction.

இப்போது, குர்-ஆனில் நவீன விஞ்ஞானத்தை நுழைக்க வேண்டும் என்று விரும்புகிறவர்கள், இந்த வசனத்தில் காணப்படும் தண்ணீர் நிலைகள் இரண்டும், கடல்கள் அல்ல அவற்றில் ஒன்று "நதி (அ) ஆறு" என்று கூறுகிறார்கள். ஆனால், மூல மொழியாகிய அரபி மொழி இவர்களைப்போல வேறுபடுத்தி கூறவில்லை. இந்த விவரம் இந்த விவாதத்திற்கு முக்கியமான ஒன்றா? குர்-ஆனில் நவீன விஞ்ஞானத்தை நுழைக்க விரும்பும் சுலைமான் போன்றவர்கள் இந்த இரண்டு நீர் நிலைகள் என்பதில், ஒன்று நதியாக உள்ளது (நல்லத் தண்ணீர்), மற்றோன்று கடலாக இருக்கிறது (உப்புத் தண்ணீர்) என வாதிக்கிறார்கள் . அதன் பிறகு இந்த நல்லத் தண்ணீர் ஓடும் நதி அப்படியே கடலில் கலக்கும், அப்படி கலந்த பின்னரும் அது அதன் சுவையை இழக்காது என்ற ஒரு கோட்பாட்டை நுழைக்கிறார்கள். இப்போது நான் சொல்வது சரியா, அல்லது சுலைமான் சொல்வது சரியா என்பதை பக்கத்தில் வைத்து, இதை விட முக்கியமான ஒரு அடிப்படை பிரச்சனையை காண்போம். அரபி மொழியானது இந்த வசனத்தில் குறிப்பிட்டு இருப்பது 'நதியை' அல்ல என்று நிருபனமாகிவிட்டால், அதன் பிறகு இந்த வசனத்தின் விளக்கம் மிகவும் சுலபமானதாகிவிடும்.

1 • இந்த வசனத்தின் படி, முதலாவது நீர் நிலை 'கடல்' (அ) 'பஹர்' (அரபியில்) என்பது செங்கடலைக் குறிக்கும். முஹம்மதுவிற்கு தெரிந்து இருந்த மற்றும் மக்கா மதினாவிற்கு அருகில் இருக்கும் உப்பு நீர் கடலாகும்.

The first "sea" or "body of water" or "bahr" (in Arabic) in question is the Red Sea (close to Mecca and Medina) and known to Muhammad, which is salt water.
2 • இவ்வசனத்தில் வரும் இரண்டாவது 'கடல்' (அ) 'பஹ்ர்' (அரபியில்) என்பது பாலைவனத்தில் ஆங்காங்கே காணப்படும் சுத்தமான நீர் கிடைக்கும் பாலைவன நீரோடை போன்ற நீர் நிலையாக இருக்கலாம்.

The second "sea" or "body of water" or "bahr" in question could be any local sheet of fresh water (plenty of oases to choose from).
3 • இந்த இரண்டு நீர் நிலைகளுக்கும் இடையே இருக்கும் மீறமுடியாத ஒரு தடை 'இவ்விரண்டுக்கும் இடையே இருக்கும் நிலமாகும்'.

These two "seas" or "bodies of water" or "bahr" are separated by land; this is the impassable barrier.
4 • ஆக, ஸூரா 25:53 காணப்படும் விவரம் என்னவென்றால், நல்ல தண்ணீர் மற்றும் உப்புத்தண்ணீருக்கும் இடையே அல்லாஹ் மீறமுடியாத தடையாக நிலப்பரப்பை வைத்தார், இது ஒரு அற்புதம் என்று முஹம்மது நினைத்ததால், அதைப் பற்றி இவ்வசனத்தில் தன் கருத்தைக் கூறுகிறார்.

Hence Sura 25:53 was actually a comment by Muhammad on the wondrous miracle (as he saw it), that Allah has seen fit to separate fresh and salt water.

சுலைமான் அவர்கள் மற்றும் இவரைப்போல கூறுபவர்களாகிய மற்றவர்கள் கூறும் நவீன விஞ்ஞான விளக்கத்தை விட, இந்த மேற்கண்ட விளக்கம் அனேக நன்மைகளை உள்ளடக்கியுள்ளது. இப்போது அந்த நனமைகள் என்னவென்று காண்போம்:

i சுலைமானின் கூற்றுப்படி 'முஹம்மது நதிகளையோ/ஆறுகளையோ கண்டுயிருக்க வாய்ப்பு இல்லை, ஏனென்றால், அவர் நதிகள் மற்றும் கடல்களுக்கு பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் பாலைவன பகுதியில் வாழ்ந்தார். இது தான் சுலைமான் அவர்கள் நவம்பர் 4ம் 1999ல் கூறிய கூற்று. சுலைமான் அவர்களின் இந்த கூற்று உண்மையாக இருந்திருக்குமானால், நான் மேலே சொன்ன விவரம் தான் சரியான விளக்கமாக அமையும், ஏனென்றால், நல்லத் தண்ணீர் மற்றும் உப்புத் தண்ணீர் ஒன்றாக கலக்க வாய்ப்பு இல்லை, இதைப் பற்றிய சிந்தை முஹம்மதுவின் மனதிலே வந்திருக்காது.
ii இதன் பொருள் என்னவென்றால், ஸூரா 25:53ம் வசனம் இரண்டு காலங்களுக்கு பொருந்தக்கூடியதாக இருக்கவேண்டும், அதாவது அவ்வசனம் எழுதப்பட்ட காலமாகிய கி.பி. 7ம் நூற்றாண்டு, மற்றும் 21ம் நூற்றாண்டாகிய இன்று, இந்த இரண்டு காலக்கட்டத்திற்கு ஏற்ற பொருளை இவ்வசனம் கொண்டுள்ளது என்று அர்த்தம். இவ்வசனத்தை 7ம் நூற்றாண்டில் படித்த இஸ்லாமியர்கள், இவ்வசனத்தில் முதலாவது பொருளுக்காக, இறைவனை துதித்து இன்று இஸ்லாமியர்கள் மகிழ்வது போல அன்று மகிழ்ந்திருப்பார்கள். இந்த வசனத்தின் இரண்டாவது பொருளை இன்று இஸ்லாமியர்கள் நம்மிடம் விஞ்ஞானம் என்று கூறுகிறார்கள், இதன்படி பார்த்தால், இந்த வசனம் கடந்த 1300 ஆண்டுகளாக பொருளற்ற ஒன்றாக இருந்தது என்று அர்த்தமாகிறது. தற்காலத்தில் விஞ்ஞான வளர்ச்சியினால் இஸ்லாமியர்கள் இவ்வசனத்திற்கு பொருளை இன்று கண்டுபிடித்துள்ளார்கள். அதாவது, அல்லாஹ் இறக்கிய வசனத்தின் இரண்டாவது பொருள் கிடைக்க 1300 அதிகமான ஆண்டுகள் ஆனது, அதுவரை பொருளற்ற வசனமாக இது இருந்துள்ளது. ஆக, குர்-ஆன் எல்லா காலத்திற்கும் எல்லா மனிதர்களுக்கும் ஏற்ற ஒன்றல்ல என்று நிருபனமாகிறது.
iii முஹம்மது ஏன் ஸூரா 25:53ஐ அறிவித்தார் என்பதை நான் கொடுத்த விளக்கம் தெளிவாக விளக்குகிறது. நதிகள், கடல்கள் மற்றும் இவ்விரண்டும் ஒன்று சேறுதல், அல்லது தனித்து இருத்தல் போன்றவற்றை அறியாத முஹம்மதுவிற்கு நல்ல தண்ணீரின் முக்கியத்துவம் தெரிந்திருக்கிறது. கடல்களில் இருக்கும் உப்புத் தண்ணீரையும், மனிதர்கள் குடிப்பதற்கு நல்லத் தண்ணீரையும் அல்லாஹ் வெவ்வேறு இடங்களில் வைத்து, ஒரு சரியான காரியம் செய்து இருப்பதினால், இந்த முக்கியமான விவரத்தை குர்-ஆனில் முஹம்மது அறிவித்து இருக்கிறார்.

"நவீன விஞ்ஞானம் குர்-ஆனை நிருபிக்கிறது" என்ற வாதத்தை ஆதரிப்பதற்காக ஸூரா 25:53 ஐ பயன்படுத்திக்கொண்டால், மேலே கண்ட பிந்தைய விளக்கத்தை உதறித்தள்ளவேண்டி வரும். இந்த வசனத்தில் அற்புதம் உள்ளது என்று இஸ்லாமியர்கள் சொல்லும் "வாதத்தைத் தவிர" வேறு எந்த உண்மையும் இவ்வசனத்தில் காணப்படுவதில்லை. (இங்கு கவனிக்கவும், சுலைமான் அவர்களின் விளக்கம் "குர்-ஆனில் விஞ்ஞானம் உள்ளது" என்பதை நிருபிக்கவில்லை, அதற்கு பதிலாக, குர்-ஆனின் அந்த வசனத்தில் விஞ்ஞானம் உண்டு என்று "இவரது விளக்கம் தனிப்பட்ட முறையில் கூறுகிறது" அவ்வளவு தான்.)

2) இந்த வாதம் அல்லாஹ்வை பலவீனமானவராக சித்தரிக்கிறது.
(The argument as it stands makes Allah out to be weak)

உண்மையாகவே விஞ்ஞானத்தைக் கொண்டு குர்-ஆனை நிருபிக்க அல்லாஹ் விரும்பி இருந்தால், ஏன் இவர் அதனை சுலபமான முறையில் தெளிவாக விளக்கியிருக்கக்கூடாது. இப்படி செய்வதை விட்டுவிட்டு, அல்லாஹ் ஏன் இப்படிப்பட்ட வாதங்களை சொல்கிற இஸ்லாமியர்களின் "தீவிர ஆழ்ந்த விளக்கங்கள்" மேல் ஆதாரப்பட்டு வசனங்களை இறக்கவேண்டும், நேரடியாகவே தெளிவாக வசனத்தை இறக்கியிருக்கலாமே, எந்த ஒரு பிரச்சனையும், குழப்பமும் இல்லாமல் எல்லாரும் அங்கீகரித்து இருப்பார்களே. ஒரு எடுத்துக்காட்டுக்காக சொல்லவேண்டுமென்றால், தொலைக்காட்சியை பற்றி ஏன் அல்லாஹ் கீழ்கண்ட வசனத்தை போன்றதொரு வசனத்தை இறக்கக்கூடாது:

"முஹம்மதுவே கூறுவீராக, 'ஒரு சிறிய பெட்டியில் அசையும் படங்களை மக்கள் தங்கள் அறையில் உட்கார்ந்துக்கொண்டே பார்ப்பார்கள்' "

நிலவில் மனிதன் கால் வைப்பான் என்பதைப் பற்றிய ஒரு உதாரணம்:

"முஹம்மதுவே கூறுவீராக, இதோ, மனிதர்கள் நிலவின் மேற்பரப்பில் நடப்பார்கள், மற்றும் அங்கே ஒரு கொடியையும் நாட்டிவைப்பார்கள் ".

மேற்கண்ட வசனங்களை கவனித்தீர்களா? அல்லாஹ் இப்படி வசனங்களை இறக்கியிருந்தால், எந்த ஒரு பிரச்சனையும் யாருக்குமே இருக்காது, தெளிவாக விஷயங்கள் புரிந்துயிருக்கும். ஆனால் இப்போது குர்-ஆனின் நிலை இருப்பது போல இருந்திருக்காது. தற்போது குர்-ஆனின் நிலை எப்படி உள்ளது தெரியுமா?

அ) குர்-ஆனின் அற்புத வசனங்கள் பற்றிய விரிவுரைகள் மிகவும் குழப்பமாகவும், தெளிவற்றவையாகவும் காணப்படுகிறது.

ஆ) விஞ்ஞானத்தை குர்-ஆனில் புகுத்தவேண்டும் என்று வாதிப்பவர்கள், தங்களுடைய விளக்கம் தான் சரியான விளக்கம் மற்றவர்களின் விளக்கம் சரியானதல்ல என்று சொல்லும் நிலையில் இருக்கிறார்கள். (இப்படி சொல்லும் இஸ்லாமியர்கள், கடந்த 1000 ஆண்டுகளுக்கு மேல் இருந்துவந்த இஸ்லாமிய அறிஞர்கள் அவ்வசனங்களுக்கு என்ன விளக்கம் கொடுத்தார்கள், அவர்கள் அதனை எப்படி புரிந்துக்கொண்டார்கள், போன்றவற்றை புறக்கணித்துவிடுகிறார்கள்).

குர்-ஆன் வேறு இடங்களில் சில விவரங்கள் பற்றி பேசும் போது, மிகவும் தெள்ளத் தெளிவாக கூறுகிறது, உதாரணத்திற்கு ஸூரா 2:255ஐ பார்க்கவும்:

அல்லாஹ்-அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறு இல்லை. அவன் என்றென்றும் ஜீவித்திருப்பவன், என்றென்றும் நிலைத்திருப்பவன்;

மேற்கண்ட வசனம் "அல்லாஹ் ஒருவரே, அவர் ஜீவித்து இருப்பவர், நிலைத்திருப்பவர்" என்று தெளிவாகச் சொல்கிறது, இதைப் பற்றி யாரும் குறுக்கு கேள்வி கேட்கமாட்டார்கள். குர்-ஆனில் விஞ்ஞான அற்புதம் இருக்குமானால், குர்-ஆனின் தெய்வீகத்தை நிருபிக்க இஸ்லாமியர்களுக்கு இது மிகவும் உபயோகமான ஒரு சான்றாகும். அப்படி இருக்கும் போது அந்த வசனங்கள் மிகவும் தெளிவாக இருக்கவேண்டுமல்லவா? இவ்வசனங்கள் அப்படி இல்லாமல், புதைக்கப்பட்ட வசனங்களாக இருக்கின்றன, அவைகளிலுள்ள விஞ்ஞானத்தை காட்ட மிகபெரிய அறிவு படைத்தவர்களின் விரிவுரை தேவைப்படுகிறது, இது சரியானதா? உண்மையாகவே அல்லாஹ் குர்-ஆனில் விஞ்ஞானத்தை காட்டவேண்டும் என்று விரும்பியிருந்தால், அவர் அதனை எல்லாருக்கும் புரியும் வண்ணம் மிகவும் தெளிவான வசனங்களைக் கொண்டு விளக்கியிருக்கவேண்டும், ஆனால், அவர் அப்படி செய்யவில்லை. ஆகையால், குர்-ஆனில் விஞ்ஞானம் இல்லை, ஆனால், சில இஸ்லாமியர்கள் விஞ்ஞானம் இருப்பதாக விரிவுரை கொடுக்கிறார்கள் அவ்வளவு தான்.

3) இந்த 'புதிய விஞ்ஞானம்' தற்கால இஸ்லாமிய அறிஞர்களின் வாதங்களாகும்.
(The argument is a modern polemic)

'நவீன விஞ்ஞானம் குர்-ஆனில் காணப்படுகிறது எனவே குர்-ஆன் இறைவேதம் என நிருபிக்கப்படுகிறது' என்ற இஸ்லாமியர்களின் வாதமானது, தற்காலத்தில் வாழும் இஸ்லாமிய அறிஞர்களின் கண்டுபிடிப்பாகும், இது தான் எனக்கு சுவாரசியமான விஷயமாக உள்ளது. இப்படிப்பட்ட வாதங்களை 500 ஆண்டுகளுக்கு முன்பு எந்த இஸ்லாமிய அறிஞராவது முன்வைத்ததாக உங்களில் யாராவது கண்டுபிடிக்கமுடியுமா? அல்லது குறைந்த பட்சம் 200 ஆண்டுகளுக்கு முன்பாவது இப்படி யாராவது வாதங்களை முன்வைத்துள்ளார்களா? கடைசியாக 100 ஆண்டுகளுக்கு முன்பாவது யாராவது கூறியுள்ளார்களா? இதற்கு பதில் "இல்லை" என்பதாகும், ஏனென்றால், தற்கால இஸ்லாமியர்களின் கைவரிசை தான் இந்த புதிய விஞ்ஞான வாதங்கள். உங்கள் எல்லாருக்கும் தெரிந்திருக்கிறபடி, விஞ்ஞானம் என்பது தற்காலத்தில் தோன்றியதில்லை, ஆனால், இஸ்லாமியர்களின் இந்த வாதங்கள் மட்டும் தற்காலத்தில் தோண்றியது தான். ஏன் இப்படி? என்று கேள்வி நமக்கு எழலாம். இதற்கு காரணம் என்னவென்றால், சமீப காலமாக மக்கள் குர்-ஆன் சொல்வதை கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை, மக்கள் குர்-ஆனை கேள்வி கேட்க ஆரம்பித்துள்ளார்கள். ஆகையால், குர்-ஆன் என்பது "தெய்வீகமானது, அதனை இறைவன் எழுதினான்" என்று நிருபிக்க முஸ்லிம்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். எனவே, விஞ்ஞானத்திலிருந்து ஆதாரங்களையும், மேற்கத்திய அறிஞர்களின் விளக்கங்களையும் உள்ளுக்குள் சேர்த்து மக்களை நம்பவைக்கலாம் என்று இஸ்லாமியர்கள் முயற்சி எடுக்கிறார்கள், அதாவது வேறுவகையில் சொல்லவேண்டுமென்றால், மேற்கத்திய மக்களை நோக்கி, இஸ்லாமை இஸ்லாமியர்கள் நகர்த்த முயற்சி எடுக்கிறார்கள். எனவே, இப்படிப்பட்ட நவீன விஞ்ஞானம் பற்றிய வாதங்களை புதிதாக இஸ்லாமியர்கள் உருவாக்கிக்கொண்டு வருகிறார்கள்.

இன்னொரு சுவாரசியமான விஷயம் இது தான்: "நவீன விஞ்ஞானம் குர்-ஆனை நிருபிக்கிறது" என்ற வாதம் தற்கால இஸ்லாமிய அறிஞர்களுடையதாகும், மேலும் இப்படிப்பட்ட வாதம் இன்னொரு பிரச்சனையை குர்-ஆனுக்கு உருவாக்கிவிடும். அது என்னவென்றால், இந்த அறிஞர்கள் சிறிது எச்சரிக்கையாக இல்லாவிட்டால், அது "குர்-ஆனை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் சம்மந்தப்பட்டது" என்ற கருத்தை நிலைநாட்டுவதாக ஆகிவிடும். இங்கு கவனிக்கவும், குர்-ஆனில் விஞ்ஞானத்தை வைக்கவேண்டும் என்று அல்லாஹ் விரும்பியிருந்தால், இன்றிலிருந்து இன்னும் 100 ஆண்டுகள் வரை இஸ்லாமியர்கள் மேலும் அனேக விஞ்ஞான கண்டுபிடிப்புகளை அதிகமாக குர்-ஆனில் கண்டுபிடிப்பார்கள். பொதுவாக விஞ்ஞானம் இன்னும் வளர்ந்துக்கொண்டே செல்லும். அப்படியானால், இவைகளை கருத்தில் கொண்டு கீழ்கண்ட விவரங்களை படியுங்கள்:

• ஏறக்குறைய குர்-ஆனில் 6400 வசனங்கள் இருக்கின்றன.

• The Qur'an consists of approximately 6,400 verses.
• ஒரு வாதத்திற்காக குர்-ஆனில் உள்ள மொத்த வசனங்களில் 10% வசனங்களில் விஞ்ஞானம் இருப்பதாக இஸ்லாமியர்கள் கருதுகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம்.

• Let us assume, for the sake of argument, that 10% of these can be cleverly interpreted so that they appear to contain "science".
• அப்படியானால், 640 வசனங்கள் விஞ்ஞான வசனங்களாக இப்போது நம்முடைய ஆய்விற்குள் அடங்கும்.

• Therefore we have 640 verses for our source material.

"நவீன விஞ்ஞானம் குர்-ஆனை நிருபிக்கிறது" என்ற வாதம் கடந்த 30 ஆண்டுகளாக மிகவும் புகழ்பெற்ற விஷயமாக இஸ்லாமியர்கள் மத்தியிலே காணப்படுகிறது. இஸ்லாமியர்களால் அனேக வசனங்கள் இதற்காக மேற்கோள் காட்டப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் 20 புதிய வசனங்களில் விஞ்ஞானம் காணப்படுகிறது என்று இஸ்லாமியர்கள் வாதிக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். இதன் பொருள் என்னவென்றால், கடந்த முப்பது ஆண்டுகளாக இஸ்லாமியர்களால் கிட்டத்தட்ட 90% சதவிகித வசனங்களில் விஞ்ஞானம் உண்டு என்று காட்டப்பட்டாகிவிட்டது. இன்னும் 5 ஆண்டுகளில் மீதமுள்ள வசனங்களில் விஞ்ஞானத்தை இஸ்லாமியர்கள் கண்டுபிடித்து விடுவார்கள். அதன் பிறகு குர்-ஆனில் விஞ்ஞான வசனங்கள் ஒன்றும் மீதமிருக்காது. இதன் பொருள் என்னவென்று உங்களுக்கு புரிகின்றதா? அதாவது, கி,பி. 700 லிருந்து கி.பி. 2010 ஆண்டுகள் வரையுள்ள இடைவெளியில், கடந்த 30 அல்லது 40 ஆண்டுகளாகத் தான் இஸ்லாமியர்கள் நவீன விஞ்ஞானம் குர்-ஆனில் உண்டு என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்(1970 லிருந்து 2010 வரை). ஆனால், இதன் பிறகு விஞ்ஞான வசனங்கள் தீர்ந்துவிடுமே, அதைப் பற்றி குர்-ஆன் ஒன்றுமே சொல்வதில்லையே. இது நமக்கு எதைக் காட்டுகிறது? "நவீன விஞ்ஞானம் குர்-ஆனை நிருபிக்கிறது" என்ற தற்கால இஸ்லாமிய அறிஞர்களின் வாதம் வெறும் சில ஆண்டுகள் மட்டுமே நிலைநிற்கக்கூடிய விஷயமாகும், ஏனென்றால், இன்னும் சில ஆண்டுகளில் விஞ்ஞான வசனங்களை அனைத்தும் தீர்ந்துவிடும், அதன் பிறகு வரும் விஞ்ஞானத்தை வெளிக்காட்ட குர்-ஆன் வசனங்கள் இருக்காது.

4) முடிவாக, "குர்-ஆனை நிருபிக்கும் நவீன விஞ்ஞானம்" என்ற வாதம், குர்-ஆனில் விஞ்ஞானத்தை காணாமல் தடுமாறுகிறது. மேலும் விஞ்ஞானமே குர்-ஆனை குற்றப்படுத்துகிறது.
(At the end of the day, the "modern science proves the Qur'an" polemic does not find science in the Qur'an, rather it uses science to judge the Qur'an)

இந்த விவரத்தை மிகவும் அழகாக ஸூரா 18:86 விளக்குகிறது, இதனை "soc.religion.islam" என்ற தளத்தில் நடந்த விவாதத்தில் முன்வைக்கப்பட்டது. இந்த வசனத்தை ஒரு முறை பார்ப்போமா?

"Until, when he reached the setting of the sun, he found it set in a spring of murky water: Near it he found a People: We said: "O Zul-qarnain! (thou hast authority,) either to punish them, or to treat them with kindness."" (Yusuf Ali)

சூரியன் மறையும் (மேற்குத்) திசைவரை அவர் சென்றடைந்த போது, அது ஒரு சேறு கலந்த நீரில் (மூழ்குவதுபோல்) மறையக் கண்டார் ; இன்னும் அவர் அவ்விடத்தில் ஒரு சமூகத்தினரையும் கண்டார்; "துல்கர்னைனே! நீர் இவர்களை(த் தண்டித்து) வேதனை செய்யலாம்; அல்லது அவர்களுக்கு அழகியதான நன்மை செய்யலாம்" என்று நாம் கூறினோம் (முஹம்மது ஜான் டிரஸ்ட் வெளியீடு).

சூரியன் மறையுமிடத்தை அவர் அடைந்த போது சேறு நிறைந்த தண்ணீரில் அது மறைவதைக் கண்டார். அங்கே ஒரு சமுதாயத்தைக் கண்டார். "துல்கர்னைனே! அவர்களை நீர் தண்டிக்கலாம்; அல்லது அவர்களிடமிருந்து அழகிய முறையில் (வரியை) பெற்றுக்கொள்ளலாம்" என்று கூறினோம் (பீஜே தமிழாக்கம்)

இப்போது இஸ்லாமியர்களிடம் 'இந்த வசனத்தில் விஞ்ஞானம் இருக்கிறதா?' என்று கேட்டுப்பாருங்கள், நிச்சயமாக இல்லை என்று அடம்பிடிப்பார்கள். ஏன்? ஏனென்றுச் சொன்னால், இந்த 21ம் நூற்றாண்டில், நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் என்னவென்றால், சூரியன் சேறு கலந்த நீரில் அஸ்தமிப்பது இல்லை மற்றும் சூரியன் அஸ்தமிக்கும் இடத்திற்கு எந்த ஒரு மனிதனும் செல்லமுடியாது. காரணமென்ன? உண்மையாக சூரியன் சேறு கலந்த தண்ணீரிலோ, ஏரியிலோ அல்லது இதர தண்ணீர் அமைந்துள்ள இடங்களிலோ அஸ்தமிப்பதில்லை, இதை அனைவரும் அறிந்துள்ளோம். இது தான் விஷயம் அதனால், எந்த முஸ்லிமும் இந்த வசனத்தில் நவீன விஞ்ஞானம் உண்டு என்று சொல்லமாட்டார். சரி, இதனை சரி செய்ய இஸ்லாமியர்கள் என்ன செய்கிறார்கள் என்று தெரிந்துக்கொள்ளுங்கள். அதாவது குர்-ஆனின் எந்தெந்த வசனங்களை நவீன விஞ்ஞானம் குற்றப்படுத்துமோ, அப்போது முஸ்லிம்கள் இந்த வசனம் ஒரு உவமையாக அல்லது உவமேயமாக சொல்லப்பட்டது என்று கூறி விடுவார்கள். உதாரணத்திற்கு:

• ஸூரா 18:86 = சூரியன் அஸ்தமிப்பது பற்றி பேசுகிறது = விஞ்ஞானத்தின்படி இது அடிமட்ட குர்-ஆனின் தவறாகும் = ஆகையால், இஸ்லாமியர்கள் இவ்வசனத்தில் வரும் விவரம் உவமை அல்லது உவமேயம் என்று சொல்லி சமாளிக்கிறார்கள்.

• Sura 18:86 = talks about someone finding the sunset = scientific nonsense = therefore it is claimed to be speaking metaphorically!
• ஸூரா 25:53 (உதாரணத்திற்கு) = இரண்டு தண்ணீர் நிலைகள் பற்றி பேசுகிறது, ஒரு நல்லத்தண்ணீர், மற்றொன்று உப்புத் தண்ணீர் = இது விஞ்ஞானத்திற்கு முரண்படவில்லை = ஆகையால், இஸ்லாமியர்கள் இந்த வசனம் விஞ்ஞானம் பற்றி கூறுகிறது என்று வாதிப்பார்கள்.

• Sura 25:53 (for example) = talks about two separate bodies of water, one salt one fresh = does not contradict science = therefore is claimed to be scientific

முஸ்லிம்களின் மேற்கண்ட வாதங்களில் உள்ள பிரச்சனை உங்களுக்கு தெரிகிறதா? குர்-ஆன் என்பது இறைவனின் வார்த்தை என்றும், அதில் மனிதர்களுக்கு வழிகாட்டுதல் உண்டு என்றும் இஸ்லாமியர்கள் வாதிக்கிறார்கள். ஆனால், யார் குர்-ஆனில் நவீன விஞ்ஞானம் உண்டு என்று வாதிக்கிறார்களோ, அவர்கள் இஸ்லாமின் இந்த அடிப்படை சட்டத்திற்கு முரண்பட்டு செயல்படுகிறார்கள். உண்மையைச் சொல்லவேண்டுமென்றால், முஸ்லிம்கள் விஞ்ஞானத்தில் இருக்கும் உண்மையை அங்கீகரிக்கவேண்டுமே ஒழிய, குர்-ஆனையல்ல. மேலும் விஞ்ஞானத்தின் அடிப்படையில் குர்-ஆனை பரிசோதிக்கவேண்டும், சரிபார்க்கவேண்டும்.

5) தெரிவு செய்து விளக்கம் அளித்தால், எதை வேண்டுமானாலும் நிருபித்து விடலாம்.
(Selective interpretation can be used to prove anything)

நான் மேற்கண்ட நான்காவது குறிப்பில் சொன்னது போல, இஸ்லாமியர்கள் "நவீன விஞ்ஞானம் குர்-ஆனை நிருபிக்கிறது" என்ற வாதத்திற்காக, தங்களுடைய வாதத்திற்கு ஏற்றாற்போல வசனங்களை தெரிவு செய்துக்கொண்டு, அவைகளுக்கு தங்கள் விருப்பப்படி விளக்கம் தருகிறார்கள், ஆனால், தங்கள் குர்-ஆனுக்கு பிரச்சனை உண்டாக்கும் வசனங்களை அப்படியே மறைத்துவிடுகிறார்கள். அதாவது நாம் தெரிவு செய்து விளக்கம் அளிப்பதாக இருந்தால், எல்லாவற்றையும் நிருபிக்கலாம். உதாரணத்திற்கு, நான் ஒரு நபி(தீர்க்கதரிசி)  என்று சொல்லிக்கொண்டு மற்றும் எதிர்காலத்தில் நடக்கும் விவரங்கள் எனக்குத் தெரியும் என்று நான் மக்களை நம்பவைக்க நினைக்கிறேன் என்று வைத்துக்கொள்வோம். நான் இந்த கட்டுரையை எழுதுகிற இந்த சமயத்தில், இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து நாடுகளுக்கிடையில் கால்பந்து போட்டிகள் நடக்கவிருக்கின்றன, அதாவது நவம்பர் 14, 1999 அன்று இப்போட்டிகள் நடக்கவுள்ளன. போட்டிகள் நடப்பதற்கு முன்பாக நான் கீழ்கண்ட மூன்று விவரங்களை கூறுகிறேன் என்று வைத்துக்கொள்ளுங்கள்:

1) இங்கிலாந்து இப்போட்டிகளில் வெற்றிப்பெறும்

2) ஸ்காட்லாந்து இப்போட்டிகளில் வெற்றிப்பெறும்

3) இந்த போட்டிகள், வெற்றி தோல்வியின்றி 'ட்ராவில்' முடியும்


ஒரு வேளை போட்டிகள் முடிந்த பிறகு, அதில் இங்கிலாந்து 2-0 என்ற விகிதத்தில் வெற்றிப்பெற்றதாக நினைத்துக்கொள்வோம். இப்போது நான் கீழ்கண்டவாறு கூறுகிறேன்: "நான் போட்டிகளுக்கு முன்பாக சொன்ன விவரங்களில் 2 மற்றும் 3ம் விவரங்களை ஒரு உவமையாகச் சொன்னேன். ஆனால், விவரம் 1ல் நான் உவமையில்லாமல் நேரடியாகச் சொன்னேன், பாருங்கள், நான் சொன்னபடி, இங்கிலாந்து வெற்றிப்பெற்றது, ஆகையால் நான் ஒரு நபி".

என்னுடைய மேற்கண்ட வாதத்தில் உள்ள பிழையை கண்டுபிடிப்பதற்கு ஒருவன் மிகப்பெரிய ஞானியாக இருக்கவேண்டிய அவசியமில்லை. யாரெல்லாம் 'நவீன விஞ்ஞானம் குர்-ஆனை நிருபிக்கும்' என்று வாதம் புரிகிறார்களோ, அவர்கள் நான் மேலே சொன்ன தீர்க்கதரிசியின் விளக்கம் போலவே நடந்துக்கொள்கிறார்கள், இவர்களும் அதே போல காரணங்களைச் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். குர்-ஆனின் அனேக வசனங்கள் விஞ்ஞானத்திற்கு முரண்படுகிறது என்று நாம் அவர்களிடம் கூறும்போது (பொதுவாக நான் ஸூரா 18:86ஐ குறிப்பிடுவேன்), இஸ்லாமியர்கள் "இல்லை இல்லை, இது ஒரு உவமை, அல்லது கதை, அல்லது உவமேயம்" என்று அனேக காரணங்களைச் சொல்லி நழுவிவிடுகிறார்கள். குர்-ஆனின் வசனங்களை சரியான நேர்மையான முறையில் விளக்கம் அளிப்போமானால், அதன் முடிவு, இஸ்லாமியர்களுக்கு ஏற்ற ஒன்றாக இருக்காது.

6) இந்த வாதம் 'குர்-ஆன் அதிகாரபூர்வமானது அல்ல' என்பதை நிருபிக்கிறது.
(Applying the argument means that the Qur'an is no longer authoritative)

இவ்வளவு விவரங்களை கண்ட பிறகும், இஸ்லாமியர்கள் 'நவீன விஞ்ஞானம் குர்-ஆனை நிருபிக்கிறது' என்றும், இது மிகப்பெரிய அற்புதமென்றும் கூறுவார்களானால், அவர்களுக்கு இது மேலும் அதிக பாரமாக பிரச்சனையாக மாறுகிறது, எப்படி என்பதை இப்போது காண்போம். அவர்களின் வாதமே குர்-ஆன் அதிகாரபூர்வமற்றது என்பதை நிருபிக்கும். ஒரு பேச்சுக்காக ஸூரா 25:53 சமுத்திரங்களைப் பற்றியே பேசுகிறது என்றே வைத்துக்கொள்வோம். ஆனால், இதைப் பற்றி குர்-ஆன் ஒரே இடத்தில் தான் கூறுகிறது. இந்த விவரம் குறித்து (சமுத்திரத்தில் ஆறுகள் கலப்பது குறித்து) முழுவதுமாக நாம் தெரிந்துக்கொள்ள வேண்டுமென்றால், நாம் குர்-ஆனுக்கு வெளியே செல்லவேண்டும், ஏனென்றால், குர்-ஆன் இதைப் பற்றி அதிகமாக வேறு எதையும் சொல்வதில்லை. இந்த சமுத்திரம் விஷயத்தில் குர்-ஆன் சொல்லும் விவரத்தைக் காட்டிலும், குர்-ஆனுக்கு வெளியே அனேக புத்தகங்கள், பத்திரிக்கைகள், ஆய்வுக் காட்டுரைகள் என்று அனேக விவரங்கள் இருக்கின்றன. இதனால் ஒரு முக்கியமான கேள்வி எழுகிறது: ஒரு விவரம் பற்றி முழுவதுமாக நாம் தெரிந்துக்கொள்ள வேண்டுமென்றால், நாம் குர்-ஆனுக்கு வெளியே தான் அவைகளை தேடி படித்து தெரிந்துக்கொள்ள முடியும் என்ற நிலை இருந்தால், ஏன் நாம் இதர விவரங்களையும் குர்-ஆனுக்கு வெளியே படித்து தெரிந்துக்கொள்ளக்கூடாது? விஷயம் இப்படி இருக்கும்போது, மனித வாழ்விற்கு தேவையான அனைத்தும் குர்-ஆனில் இருக்கிறது என்று எப்படி இஸ்லாமியர்கள் கூறமுடியும்? குர்-ஆனில் முழு வழிகாட்டுதலும் கிடைப்பதில்லை, நாம் அதற்கு வெளியே அவைகளை படித்து தெரிந்துக்கொள்ள வேண்டியுள்ளது. இறைவன் பற்றி நாம் தெரிந்துக்கொள்ளவேண்டிய அனைத்தும் (அ) நாம் எப்படி வாழவேண்டும் என்று இறைவன் விரும்புகிறார் போன்ற விஷயங்களை குர்-ஆன் முழுவதுமாக போதிக்கிறது என்று எப்படி இஸ்லாமியர்கள் அவ்வளவு உறுதியாக கூறமுடியும்? குர்-ஆனில் சொல்லப்படும் ஒரு சில வரிகளை படித்து முழுவதும் தெரிந்துக்கொள்ள முடியாது, குர்-ஆனுக்கு வெளியே சென்று படித்தால் தான் முழு விவரமும் தெரியவரும்.

ஆக, 'நவீன விஞ்ஞானம் குர்-ஆனை நிருபிக்கும்' என்ற வாதம் குர்-ஆனின் நம்பகத்தன்மையை, அதிகாரத்தை முழுவதுமாக அழித்துவிடுகிறது.

முடிவுரை:

ஒரு வாதத்தை நாம் முன் வைக்கும்போது அதற்கு எதிர் தரப்பு கேள்விகள் வரக்கூடாது என்று நாம் நினைக்க முடியாது. நாம் எந்த நிலைப்பாட்டில் இருந்துக்கொண்டு அவ்வாதத்தை வைக்கிறோமோ அந்த நிலைப்பாட்டிற்கு ஏற்ற எதிர்விணைகள் அல்லது கேள்விகள் நிச்சயம் கிடைக்கும். இந்த நிலை இஸ்லாமியர்களின் 'நவீன விஞ்ஞானம் குர்-ஆனை நிருபிக்கும்' என்ற வாதத்திற்கும் பொருந்தும். குர்-ஆனில் விஞ்ஞானம் உண்டு என்று சொல்லும் விவரங்களை கேட்டு சராசரி முஸ்லிம்கள் அதிகமாக மகிழுவார்கள். தாங்கள் நம்பும் குர்-ஆனில் விஞ்ஞானம் உண்டு என்றுச் சொல்லி பெருமிதம் கொள்வார்கள். ஆனால், இந்த வாதத்தை ஒரு இஸ்லாமிய அறிஞர் விவாதத்திற்கு முன் வைப்பாரானால், அதனால், அனேக தத்துவ ரீதியான பிரச்சனைகளை அவர் எதிர்கொள்வார், இந்த வாதத்தினால் அல்லாஹ்வின் நிலை கேவலப்படுத்தப்படும், குர்-ஆனின் தரத்தை விட விஞ்ஞானத்தின் தரம் உயர்ந்து காணப்படும் படி ஆகிவிடும், கடைசியாக நாம் இந்த கட்டுரையில் கண்டது போல, குர்-ஆனின் நம்பகத்தன்மையை, அதிகாரத்தை முழுவதுமாக இப்படிப்பட்ட வாதங்கள் அழித்துவிடும். இஸ்லாமிய விவாதம் புரிபவர்களுக்கு இந்த விஞ்ஞான அற்புதம் பற்றிய வாதம் மிகவும் பலவீனமானதும், ஆபத்தானதுமாகும். ஆகையால், இந்த வாதத்தை இஸ்லாமியர்கள் தவிர்த்தால் அவர்களுக்கு நன்மை விளையும்.

ஆங்கில மூலம்: Can "Modern Science" be found in the Qur'an? - A general rebuttal of this Muslim polemic by Andy Bannister

ஆண்டி பானிஸ்டர் அவர்களின் இதர கட்டுரைகள்


© Answering Islam, 1999 - 2012. All rights reserved.
 
 
 


--
7/14/2012 11:01:00 AM அன்று ஈஸா குர்-ஆன் - Isa Koran இல் Isa Koran ஆல் இடுகையிடப்பட்டது


இஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்

முன் பக்கம் செல்ல

HOME PAGE

தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்

1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1

2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2

3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3

4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4

பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்

1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1

2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2

பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்

1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்

2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்