இஸ்லாம் அமைதி மார்கமா? இஸ்லாம் இனிய மார்கமா? இஸ்லாம் உண்மையான மார்கமா?

ஆன்சரிங் இஸ்லாம்

பல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்

சத்தியவான் தளம் செல்ல

Friday, February 13, 2009

அபூநூறா தளத்திற்கு பதில் -1 : போலி உமரும் உளறல்களும்

 

முன்னுரை:

கடந்த இரண்டாண்டுகளாக தமிழ் இணைய தளங்கள் முக்கியமாக இஸ்லாமிய கிறிஸ்தவ இணைய தளங்கள் அதிகமாக பெருகிக்கொண்டே இருக்கிறது. இதற்கு அனேக காரணங்கள் இருந்தாலும், அவைகளில் மிகவும் முக்கியமான காரணம், "இஸ்லாமை கேள்வி கேட்க" கிறிஸ்தவர்கள் ஆரம்பித்தது தான்.

தன் வழக்கிலே முதல்பேசுகிறவன் நீதிமான்போல் காணப்படுவான்; அவன் அயலானோ வந்து அவனைப் பரிசோதிக்கிறான் (நீதிமொழிகள் 18:17)

இஸ்லாமியர்கள் சொல்லும் அனைத்திற்கும், எழுதும் எல்லாவற்றிற்கும் தஞ்சாவூர் பொம்மைகள் போல தலையாட்டாமல் கிறிஸ்தவர்கள் கேள்விகள் கேட்டு, பதில்கள் சொல்வதினால், தளங்கள் அதிகமாகிக் கொண்டே வருகிறது.

நேர்மையானவர்களின் நேர்மையின்மை:

இஸ்லாமியர்களோ, கிறிஸ்தவர்களோ தளங்கள் ஆரம்பிப்பது தவறில்லை, அவைகளில் தங்கள் கருத்தை, விமர்சனத்தை எழுதுவதும் தவறில்லை(இந்த நாடு, இஸ்லாமிய ஆட்சி நடக்கும் நாடுகள் போல் இல்லாமல், ஜனநாயக நாடாக இருப்பதால், எல்லாருக்கும் சுதந்திரம் உண்டு). ஆனால், நேர்மையான முறையில் செய்கிறார்களா என்று கேட்டால் இல்லை என்று தான் சொல்லவேண்டும்.

கிறிஸ்த தளங்கள் தாங்கள் பதிக்கும் கட்டுரைகளின் தொடுப்புக்களை தருகிறார்கள். எந்த தள கட்டுரைக்கு பதில் தருகிறோம் என்பதை தொடுப்புக்களோடு பதிக்கிறார்கள்.

ஆனால், இஸ்லாமியர்கள்...? இஸ்லாமிய அறிஞர்கள்....? உலகத்திலேயே தங்கள் மதம் தான் உண்மையானது, நாங்கள் தான் நேர்மையானவர்கள் என மார்தட்டி ஆவேசமாக எழுதும் அறிஞர்கள் இப்படி நியாயமான முறையில் நடந்துக் கொள்கிறார்களா? என்று கேட்டால், இல்லை என்பது தான் பதில்.

இஸ்லாமிய தளங்களுக்கு வேண்டுகோள்:

ஈஸா குர்‍ஆன் தளத்தில் இரண்டு வகையான கட்டுரைகள் வெளியாகின்றன.

1) நான்(உமர்) எழுதும் கட்டுரைகள்

2) ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தளத்தின் கட்டுரைகள்

இவைகளில், நான் எழுதும் கட்டுரைகளை நீங்கள் உங்கள் தளங்களில் பதிக்கும் போது, அல்லது சில வரிகளை மேற்கோள் காட்டும் போது என் தளத்தின் தொடுப்பை தரவேண்டியது அவசியம். ஆனால் நீங்கள் தருவதில்லை ஏனென்றால், நீங்கள் உங்கள் முஹம்மது நடந்த வழியில் நடப்பவர்கள் என்று சொல்லிக்கொள்கிறீர்கள், அல்லாஹ் காட்டிய வழியில் நடப்பவர்கள் என்றுச் சொல்லிக்கொள்கிறீர்கள், உங்களுக்கு வழிகாட்டியவர்கள் இப்படித் தான் உங்களுக்குச் சொல்லிக்கொடுத்தார்களா என்று எல்லாரும் சந்தேகம் கொள்ளும் அளவிற்கு அநாகரீகமாக தளத்தின் மூல தொடுப்புக்களை தருவதில்லை.

இப்படி நீங்கள் என் தளத்தின் தொடுப்பை பதிப்பதில்லை என்று பல முறை சொல்லியாகிவிட்டது. நீங்கள் திருந்துவதாக தெரியவில்லை. ஆகையால் விட்டுவிட்டேன்.

ஆனால், ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தளத்தின் கட்டுரைகள் பதிப்பு காப்புரிமை(Copy Right) பெற்ற கட்டுரைகள், ஆகையால், அவைகளை பதிக்கும் போது கட்டாயமாக நீங்கள் தொடுப்பை கொடுத்தே ஆகவேண்டும். அப்படி தரவில்லையானால், அது சட்டவிரோத செயலாகும். இஸ்லாமியர்கள் சட்டவிரோத செயல்களில் ஈடுபடாதவர்கள் என்ற உணர்வை மக்களின் மனதில் உண்டாக்கவேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு இருந்தால், ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தள கட்டுரைகளை அல்லது அதன் ஒரு சில வரிகளை பதிக்கும்போது மூல தொடுப்பை தாருங்கள். இதனை செய்ய மறுத்தால், சட்டப்படி என்ன செய்ய வேண்டியதோ அதனை நான் செய்யவேண்டி வரும்.

உங்களுக்கு ஒரு மாதம் அவகாசம் தருகிறேன்(இன்று தேதி 13 பிப்ரவரி). அதற்குள் ஆன்சரிங் இஸ்லாம் தள கட்டுரைகளுக்கு தொடுப்பை கொடுங்கள், இல்லையானால், நான் ஆன்சரிங் இஸ்லாம் தள நிர்வாகத்திற்கு இதனை தெரிவிக்க வேண்டி வரும். இந்த எச்சரிக்கையை ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தளத்தின் கட்டுரையை பதிக்கும் அனைத்து இஸ்லாமிய தளங்களுக்கும் முன்வைக்கிறேன்.

இதனை நீங்கள் வேண்டுகோளாக எடுத்துக்கொள்ளலாம் அல்லது எச்சரிக்கையாகவும் எடுத்துக்கொள்ளலாம். உங்கள் மொழியில் சொல்லவேண்டுமென்றால், ஒரு காபிர் ஒரு இஸ்லாமியரை எச்சரிக்கை செய்யும் அளவிற்கு நீங்கள் தாழ்ந்துப் போக வேண்டாமென்றுச் சொல்கிறேன்.

முக்கியமாக அபூநூறா தள நிர்வாகிகளே,

உங்களுக்குச் சொல்லிக்கொள்கிறேன், "உளறல்பேஜ் (http://ularalpage.blogspot.com/2009/02/blog-post.html)" என்ற பிளாக்கரில் பதித்த கட்டுரை ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் கட்டுரையாகும், அது காப்புரிமை பெற்ற கட்டுரை, எனவே அக்கட்டுரையின் கடைசியில் மூல தொடுப்பாகிய‌ ஆன்சரிங் இஸ்லாம் தள தொடுப்பை தாருங்கள், அல்லது கட்டுரையை எடுத்துவிடுங்கள்.

என் இஸ்லாமிய பதில்/மறுப்பு கட்டுரைகளில் உங்கள் கட்டுரைகளை நான் பயன்படுத்தும் போது, பின்பற்ற வேண்டிய காப்புரிமை விவரங்களை எனக்குச் சொல்லவேண்டுமானாலும் சொல்லுங்கள், நானும் அதற்கு கட்டுப்படுவேன். காப்புரிமை சம்மந்தப்பட்ட விவரங்களுக்கு மட்டுமே கட்டுப்படுவேன். என் கட்டுரைகளில் உங்கள் கட்டுரைகளை மேற்கோள் காட்டி, அதன் தொடுப்பை தராமல் மறந்து இருந்தாலும் தெரிவித்தால், நான் திருத்திக்கொள்வேன்.

இனி, அபூநூறா தளத்தில் பதித்த கட்டுரைப் பற்றி கவனிப்போம்

(http://abu-noora.blogspot.com/2009/02/blog-post.html)

என்னை திட்டி தங்கள் கோபத்தை தீர்த்துக்கொள்ளும் அமைதி மார்க்கத்தார்கள்:

மரியாதை கொடுத்து மரியாதை வாங்கிக்கொள்ளுங்கள் என்று பல முறைச் சொல்லியும், இஸ்லாமியர்கள் திருந்துவதாகத் தெரியவில்லை. நான் அனேக முறை சொல்லி சொல்லி சோர்ந்துவிட்டேன். அபூநூறா தளம் எழுதுவதை கவனியுங்கள்.

அதில் ஒருவகையான மனோவியாதிக்கு அடிமையாகிவிட்ட உமர் என்பவரின் சமீபத்திய உளறல் ஒன்றை படிக்க நேர்ந்தது. (அதைப் படிக்க இதைச் சொடுக்கவும்.)



"உலகின் பல பாகங்களில் இஸ்லாம் வேகமாக பரவுவதை" முஸ்லிம்கள், "இஸ்லாம் தான் சிறந்த மார்க்கம் என்பதற்கான ஆதாரமாகக் காட்டுகிறார்களாம். அது தவறாம்".

ஒரே கேள்வி:

அவ்வாறு முஸ்லிம்கள் எங்கே கூறுகின்றனர்? என்று கேட்டு விட்டாலே கோயபல்ஸ் உமரின் அயோக்கியத்தனம் கழண்டு விழுந்து விடும்.

மனோவியாதி என்றும், அயோக்கியத்தனம் என்றும் இந்த அபூநூறா தளக்காரர் சொல்லியுள்ளார்.

இப்போது இவர்களுக்கு ஒரு கதையைச் சொல்வது தான் சரியானது:

அதாவது ஒரு ஊரில் ஒரு சாது இருந்தாராம், சிலர் அவரை தொடர்ந்து திட்டிக்கொண்டே இருந்தார்களாம். அப்போது அவரது சீடர்கள் "அவர்கள் அப்படி திட்டிக்கொண்டு இருக்கும்போது ஏன் சும்மா இருக்கிறீர்கள்?" என்று கேட்டார்களாம். அதற்கு அந்த சாது, "உங்களுக்கு பிடிக்காத ஒரு பொருளை யாராவது உங்களுக்கு கொடுத்தால் என்ன செய்வீர்கள்?" என்று கேட்டாராம். அதற்கு அவர்கள், "கொடுத்த நபரிடமே திருப்பி கொடுத்துவிடுவோம்" என்றார்களாம். அப்போது, அந்த சாது அதைத் தான் நாம் இப்போது செய்துக்கொண்டு இருக்கிறேன், எனக்கு தேவையில்லாத பொருளை எனக்கு வேண்டாம் என்றுச் சொல்லி அவர்களிடமே கொடுத்துவிடுகிறேன் என்றாராம்.

இந்த கதையில் வருவது போல, நான் செய்யமாட்டேன். நான் இவர்கள் தருபவற்றை அப்படியே இவர்களின் நபியிடம் கொடுத்துவிட விரும்புகிறேன். அவரிடம் கொடுத்து, இதோ பாருங்க இஸ்லாமிய நபி அவர்களே, உங்கள் சீடர்கள் இவைகளை என்னிடம் கொடுத்தார்கள், அவைகள் எனக்கு தேவையில்லாதது, எனவே, உங்களிடம் தருகிறேன், நீங்களாவது வைத்துக்கொள்ளுங்கள், அல்லது வேறு என்ன செய்யமுடியுமோ அதை செய்யுங்கள் என்று சொல்லி கொடுத்துவிடுகிறேன்.

ஆகையால், இனி எந்த இஸ்லாமியராவது என்னை "மனோவியாதிக்காரன்" என்றுச் சொன்னால், அது அவர்களின் நபிக்கு அவர்கள் சொல்வதாக ஆகிவிடும், எனவே எச்சரிக்கையாக இருங்கள் இஸ்லாமியர்களே! என்னை அயோக்கியன் என்றுச் சொன்னால், அது அவர்களது நபிக்கு அவர்களே தருவதாக அர்த்தமாகி விடும், எனவே எச்சரிக்கையாக இருங்கள்
.

இஸ்லாமியர்கள் அடிக்கடி சொல்லும் வாதங்கள்:

இஸ்லாமியர்கள் ஒரு சில வாதங்களை திரும்ப திரும்ப கிளிப்பிள்ளையைப் போல சொல்லிக்கொண்டே இருப்பவர்கள். அவைகளில் சில வாதங்கள் கீழ் கண்டவிதமாக இருக்கும்.

1) இஸ்லாம் தான் உயர்ந்தது, சிறந்தது, இதனை விமர்சிப்பவர்கள் எப்போதும் வெற்றியடைய மாட்டார்கள்.

2) உலகத்தின் பல நாடுகளில் இஸ்லாம் தான் வேகமாக வளரும் மதமாக உள்ளது, இதற்கு இஸ்லாமின் கோட்பாடுகள் தான் காரணம், இஸ்லாம் சத்தியமார்க்கம் என்பதை இதனால் அறியலாம்..

3) இஸ்லாமுக்கு மக்கள் அலையலையாக வருகிறார்கள். இஸ்லாம் தான் பெண்களுக்கு உரிமைகளை அதிகமாக தருகிறது.

4) தலைசிறந்த தலைவர்கள் 100 பேர்களில் முஹம்மது தான் முதலில் இருக்கிறார் (The 100: A Ranking of the Most Influential Persons in History- http://en.wikipedia.org/wiki/The_100)

இப்படி சொல்லிக்கொண்டு போகலாம். இவைகளை கண்டிப்பாக நாம் அடிக்கடி நம்முடைய இஸ்லாமிய நண்பர்கள் மூலமாக கேட்டிருப்போம்.

ஆனால், அபூநூறா தளத்தின் கட்டுரையில் இப்படியாக எழுதப்பட்டுள்ளது.

வேகமாக வளர்ந்தால் அது உண்மையானதாக இருப்பதாக பொருள் என்று முஸ்லிம்கள் கூறாத ஒன்றை தானே உருவாக்கி, அதற்குத் தானே பதில் கூறி திருப்திபட்டுக் கொள்ளும் இவரைக் கண்டுகொள்ளாமல் விடுவது தான் சிறந்தது என்றாலும் இல்லாத ஒரு குற்றச்சாட்டை "பொய்களின் கூடாரமான" கிறிஸ்தவத்தின் தூதர்கள் பரப்பும் பொழுது "அவ்வாறு இல்லை" என்று கூற வேண்டிய கடமை முஸ்லிம்களுக்கு உருவாகிறது.

இஸ்லாம் வேகமாக வளருகிறது, இது எதை காட்டுகிறது, இஸ்லாம் தான் உண்மையான மார்க்கம் என்பதைக் காட்டுகிறது என்று எந்த இஸ்லாமியரும் சொல்வதில்லையாம்.

ஒரு வேளை இந்த கட்டுரையை படிப்பவர்கள் இஸ்லாமியரல்லாதவராக இருப்பீர்களானால், நீங்கள் உங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது, உங்கள் இஸ்லாமிய நண்பரிமிருந்து கேட்பீர்கள், அல்லது கேள்விப்பட்டு இருப்பீர்கள்.

ஒரு வேளை இதை படிப்பவர்கள் இஸ்லாமியராக இருப்பீர்களானால், நீங்கள் சாதாரணமாக இணையத்தை பயன்படுத்துபவராக இருப்பீர்களானால், இப்படி சொல்லியிருப்பீர்கள் அல்லது உங்களிடம் மற்ற இஸ்லாமியர்கள் சொல்வதை கேட்டிருப்பீர்கள்.

ஆனால், அபூநூறா தளம் சொல்கிறது, இப்படி இஸ்லாமியர்கள் சொல்வதில்லையாம்.

உளறல்களிலெல்லாம் மிகப்பெரிய உளறல்:

மேலே உள்ளது போல, "இஸ்லாமியர்கள் சொல்லமாட்டார்கள் என்று" மறுத்துவிட்டு, தன் கட்டுரையிலேயே இன்னொரு இடத்தில் அருமை சகோதரர் அபூநூறா அவர்கள் கீழ் கண்டவாறு எழுதுகிறார்கள்:

ஆக உலகில் யாரேனும் ஒருவர் அல்லது ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் ஒரே குரலில் 'இஸ்லாம் வேகமாக வளருகின்றது' என்று சொல்வார்களாயின் அது தங்களுக்குக் கிடைத்த மகிழ்ச்சியான செய்தியை உணர்ச்சி பூர்வமாக வெளிப்படுத்துவதேயன்றி வேறில்லை.

அருமையான சகோதரரே, அந்த மகிழ்ச்சி பெருவெள்ளத்தில் மூழ்கிவிட்டு, இஸ்லாமியர்கள் சொல்லும் விவரங்கள் தான் என் கட்டுரையில் தரப்பட்டு இருந்தது.

கட்டுரையின் ஆரம்பத்தில், இப்படி எந்த இஸ்லாமியரும் சொல்வதில்லை என்று சொல்லிவிட்டு, பிறகு உலக இஸ்லாமியர்கள் இப்படி சொல்வார்களானால், அது உணர்ச்சிப் பெருக்கு என்கிறார்.

இதனை எங்கே சென்று முறையிடுவது?

இதை என்னவென்றுச் சொல்வது?

உளறல் என்பதா அல்லது "உளறல்களின் சிகரம்" என்றுச் சொல்வதா?


இதை வாசிக்கும் வாசகர்களே சிந்திக்கட்டும்.

ஆக, இப்போது எல்லாருக்கும் புரிந்திருக்கும் யார் உளறுகிறார்கள் அல்லது யார் உளறுகிறோம் என்பதை அறியாமலேயே உளறுகிறார்கள் என்று?

வேகமாக வளருகிறது என்பதைப் பற்றி இஸ்லாமிய தளத்திலிருந்து சில வரிகள்:

இஸ்லாம் இணைய பேரவையின் கட்டுரை:

....உண்மையில் இன்று உலகத்தில் வேகமாக வளரும் மார்க்கம் இஸ்லாம் என்பதை நிதர்சனாமாக நிருபித்துவருகிறது.

சர்வதேச அளவில் இஸ்லாம் மக்கள் உள்ளத்தில் எந்தளவு ஆன்மீக மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதற்கு உலகின் முதன்மை நாடாகத் திகழும் அமெரிக்காவில் இருந்து கிடைக்கும் இஸ்லாம் பற்றிய செய்திகளே, இஸ்லாம் ஒரு சத்தியமார்க்கம் என்பதற்கு சரியான எடுத்துகாட்டாகும். உலக மக்களிடையே ஏற்பட்டிருக்கும் ஆன்மீக வெற்றிடத்தை நிரப்பி இன்று அமெரிக்காவில் மிக வேகமாகப் பரவும் மதமாக இஸ்லாம் திகழ்ந்து கொண்டிருக்கின்றது எனலாம்....

Source: http://www.tmpolitics.net/iip/Articles/sathiyam.htm
Formats mine

மேலே அடிக் கோடிட்ட வரிகளைப் பாருங்கள்.

"இஸ்லாம் ஒரு சத்தியமார்க்கம் என்பதற்கு சரியான எடுத்துகாட்டாகும்."

எது சரியான எடுத்துக்காட்டு என்று இஸ்லாம் இணைய பேரவைச் சொல்கிறது?

அமெரிக்காவில் இஸ்லாம் வேகமாக வளருவது தான் இஸ்லாம் உண்மையான மார்க்கம் என்பதை எடுத்துக்காட்டுகிறதாம். இப்படி இஸ்லாமியர்கள் சொல்கிறார்கள் என்று தானே நான் எழுதினேன்( http://www.geocities.com/isa_koran/tamilpages/Authors/abumiriam/moreisbetter.html ).

என்ன அபூநூறா அவர்களே, இஸ்லாம் இணைய பேரவைத் தள அறிஞர்களும் என்னைப் போல "மனோ வியாதியால்" பாதிக்கப்பட்டவர்கள் என்று சொல்ல வருகிறீர்களா?

அவர்களே உங்களை நியாயம் தீர்க்கட்டும்.

உளறல் தள நிர்வாகி அவர்களுக்கு உமரின் வேண்டுகோள்கள்:

நான் எழுதியது உளறல் என்றுச் சொல்லி, ஒரு தளத்தை ஆரம்பித்து, அதில் என் கட்டுரையை பதித்துள்ளீர்கள், மிக்க நன்றி. ஆனால் மூல தொடுப்பு கொடுக்கும் படி நான் இக்கட்டுரையின் ஆரம்பத்தில் உங்களை கேட்டுள்ளேன்(அல்லது) எச்சரிக்கை செய்துள்ளேன். நீங்கள் கட்டுரையின் மூலத்தை(ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தொடுப்பை) தருவீர்கள் என்று நம்புகிறேன்.

முன்னுரையாக‌ ஒரு வரியும் சொந்தமாக கொடுக்காமல் நான் எழுதிய கட்டுரையை அப்படியே பதித்துள்ளீர்கள், அதே போல என் மற்ற கட்டுரைகளையும் (மன்னிக்கவும், உளறல்களையும்) பதிக்கும் தைரியம் உங்களுக்கு இருக்கின்றதா?

அதாவது, குர்‍ஆன் சம்மந்தப்பட்டு, உங்கள் நபி சம்மந்தப்பட்டு அனேக கட்டுரைகள் என் ஈஸா குர்‍ஆன்(http://www.geocities.com/isa_koran) தளத்திலும், ஆன்சரிங் இஸ்லாம் தமிழ்(http://www.answering-islam.org/tamil)தளத்திலும் இருக்கின்றனவே, அவைகளை பதிப்பீர்களா?

அப்படி பதிக்கமாட்டேன் என்று நீங்கள் அடம் பிடித்தால், இந்த ஒரு கட்டுரைத் தவிர மற்ற அனைத்து கட்டுரைகளும் "உமரின் உளறல்கள் அல்ல, அவைகள் இஸ்லாமின் உண்மை முகங்கள்" என்று எல்லாரும் முடிவு செய்துக்கொள்ளலாமா?

அதாவது, "உளறல் பக்கம்" என்றுச் சொல்லி, ஒரு கட்டுரையை மட்டுமே பதித்துள்ளீர்கள், இதுவரை இந்த ஒரு கட்டுரையை மட்டுமே "உளறல்" என்று நீங்கள் கருதுகிறீர்களா?

அல்லது எங்களுடைய அனைத்து கட்டுரைகளும்(முஹம்மதுவின் கொலைகள், குர்‍ஆனில் உள்ள எழுத்துபிழைகள், முரண்பாடுகள், etc…) உளறல்கள் என்று கருதுகிறீர்களா?

அப்படி என் எல்லா கட்டுரையும் உளறல் என்று நீங்கள் சொன்னால், அவைகளை உங்கள் (மன்னிக்கவும் என் உளறல் பக்கம்) தளத்தில் எப்போது பதிக்கப்போகிறீர்கள்?

ஈஸா குர்‍ஆனின் அனைத்து கட்டுரைகளை நீங்கள் அந்த தளத்தில் பதிக்க நான் அனுமதி அளிக்கிறேன். அவைகளுக்கு நீங்கள் உங்கள் வழக்கப்படி பயந்துப்போய் தொடுப்புக்களை கொடுக்காமல் இருந்தாலும் பரவாயில்லை. ஆனால், ஆன்சரிங் இஸ்லாம் கட்டுரைகளுக்கு மட்டும் மூல தொடுப்பை கொடுத்துவிடுங்கள்.

எப்படி வசதி?

எனக்கு ஒரு விவரம் தெரிந்தாக வேண்டும், நீங்கள் என் இந்த ஒரு கட்டுரையை மட்டும் உளறல் என்று கருதுகிறீர்களா அல்லது என் எல்லா கட்டுரைகளையும் உளறல்கள் என்று கருதுகிறீர்களா?

நான் எழுதுவது எல்லாம் உளறல் என்றுச் சொன்னால், அந்த எல்லா உளறல்களை எப்போது பதிப்பீர்கள்?

ஒரு நகைச்சுவை நியாபகத்திற்கு வருகிறது

நான் ஒரு முறை படித்த ஒரு நகைச்சுவை நியாபகத்திற்கு வருகிறது, அதனை கீழே தருகிறேன், படிக்கவும்:

There was a Christian lady who lived next door to an atheist. Every day, when the lady prayed, the atheist guy could hear her. He thought to himself, "She sure is crazy, praying all the time like that. Doesn't she know there isn't a God?"

Many times while she was praying, he would go to her house and harass her, saying "Lady, why do you pray all the time? Don't you know there is no God?" But she kept on praying.

One day, she ran out of groceries. As usual, she was praying to the Lord explaining her situation and thanking Him for what He was gonna do. As usual, the atheist heard her praying and thought to himself, "Humph! I'll fix her."

He went to the grocery store, bought a whole bunch of groceries, took them to her house, dropped them off on the front porch, rang the door bell and then hid in the bushes to see what she would do. When she opened the door and saw the groceries, she began to praise the Lord with all her heart, jumping, singing and shouting everywhere! The atheist then jumped out of the bushes and told her, "You ol' crazy lady, God didn't buy you those groceries, I bought those groceries!" At hearing this, she broke out and started running down the street, shouting and praising the Lord.

When he finally caught her, he asked what her problem was. She said, "
I knew the Lord would provide me with some groceries, but I didn't know he was gonna make the devil pay for them!" Source: http://www.basicjokes.com/djoke.php?id=2446

முடிவுரை:

அன்பான சகோதரரே (நீங்கள் கிறிஸ்தவம் பார்வை தள அறிஞர் அபூ அப்திர்ரஹ்மான் என்று நான் கருதுகிறேன்)

உங்களுக்கு உங்கள் இஸ்லாம் தான் உண்மையான மார்க்கம் என்ற நம்பிக்கை இருந்தால்,

நான் எழுதுகின்ற கட்டுரைகள் உளறல்கள் என்று கருதினால்,

என் அனைத்து கட்டுரைகளையும் பதியுங்கள். இப்போது பதித்தீர்களே, அது போல, அதாவது கட்டுரையை அப்படியே காபி பேஸ்ட் செய்துவிடுங்கள். நான் பதிக்கமாட்டேன் என்றுச் சொன்னால், மற்ற கட்டுரைகளை நீங்கள் உளறல்கள் அல்ல என்று ஒப்புக்கொண்டீர்கள் என்று பொருளாகிவிடும்.

References:

1) http://www.geocities.com/isa_koran/tamilpages/Authors/abumiriam/moreisbetter.html
2) http://ularalpage.blogspot.com/2009/02/blog-post.html
3) http://abunoora.com/




Isa Koran Home Page
 
 
1 http://www.geocities.com/isa_koran/tamilpages/Rebuttals/AbuNoora/AbuNoora-Umar1.html

காஸா(Gaza): நீதியில்லை, அமைதியில்லை! நீதியை அறிந்துக்கொள், அமைதியை அறிந்துக்கொள்!

 

 
Gaza: No Justice - No peace!

Know Justice – Know Peace!

ஆசிரியர்: ஆஸ்கார்(Oskar)

அறிமுகம்:

ஊடகத் துறைகளாகிய வானொலி, தொலைக்காட்சி மற்றும் இணையம் போன்றவைகளின் வருகை மற்றும் முன்னேற்றத்தினால், உலகில் ஒரு நிகழ்ச்சி எங்கு நடந்தாலும் அதைப் பற்றிய செய்திகள், உடனே மனிதனின் காதுகளுக்கு எட்டிவிடுகின்றன. அநீதியும் அதனால் விளையும் பயங்கரமான காயங்களும் நம்முடைய நீதியான சிந்தனைகளை எரித்துவிடுகின்றன. தனிமனிதனோ, குழுக்களோ, அரசாங்கங்களோ அல்லது நாடுகளோ "தவறு" என்று தெரிந்தும் தவறுகள் செய்யும் போது அனேகர் அதிகமாக துக்கப்படுகிறார்கள். ம‌னித‌ர்க‌ள் மாத்திர‌ம் அல்ல‌, உல‌கில் இருக்கும் எல்லா பெரிய ம‌த‌ங்க‌ளும் "அநீதி நடக்கும் போது அத‌ற்கு த‌ண்ட‌னை வ‌ழ‌ங்க‌ப்ப‌டவேண்டும்" என்ப‌தை ஏற்றுக்கொள்கின்ற‌ன‌. இருந்தபோதிலும், மனிதர்கள் அமைதியை நிலை நாட்ட‌ இப்படிப்பட்ட "அநீதி செய்பவர்களுக்கு தண்டனை கொடுத்த பின்னரும்" அமைதி தொடர்ந்து நிலைத்திருந்ததா என்று கேட்டால், "இல்லை" என்று சரித்திரம் நமக்கு பதில் சொல்கிறது. இந்த கட்டுரையில், இறைவன் இப்படிப்பட்ட அநீதி நடந்த போது "எப்படி அதை சமாளித்தார்?" மற்றும் "எந்த விதமான அமைதியை அவர் கொடுத்தார்?" என்பதை பைபிளின் அடிப்படையில் காணப்போகிறோம்.

நீதி மற்றும் அமைதியின் இறைவன்

God of Justice and Peace

சமாதானத்தின் தேவன் நீதியுள்ளவர்(பிலிப்பியர் 4:9; உபாகமம் 32:4). உண்மையில் அவரை அறிந்தவர்களின் வாழ்க்கை நன்மையான காரியங்களாலும், சமாதான காரியங்களாலும் அடையாளமிடப்பட்டு இருக்கும். ஆதாமும் ஏவாளும் தங்களை உருவாக்கிய தேவனுக்கு கீழ்படியாமல் போன அந்த காலத்திலிருந்து இந்த இணைபிரியாத "நீதியும் சமாதானமும்" உலகத்தில் அதிகமாக மறைந்துக் கொண்டே வருகிறது. எப்படி ஒரு பனிப்பந்து மலை உச்சியிலிருந்து உருண்டு கீழே வர வர பெரியதாக மாறிவிடுகிறதோ அது போல, அநீதியானது தாங்கமுடியாத அளவிற்கு பெருகிவிட்டது. இந்த அநீதியை தடுத்து நிறுத்துவதற்கும் அல்லது அதிக தீங்கு இன்னும் நடைபெறாமல் அநீதிக்கு தடை விதிப்பதற்கும், அதே போல நீதியை நிலை நாட்டுவதற்கும் யாரால் முடியும்? போர் அதிக சூடாக நடந்துக்கொண்டு இருக்கும் போது, யார் செய்தது தவறு, யார் செய்தது சரி என்று பிரித்துக்காட்ட யாரால் முடியும்? ஒருவர் பக்கம் சாய்ந்து அவர் சொல்லும் விவரங்களை நாம் கேட்போமானால், எதிராளியின் பார்வையில் இது அநியாயம் என்று அவருக்கு படுவதை நாம் காண தவறிவிடுவோம்.

தற்போது காஸாவில் நிலவும் சூழ்நிலையை இதற்கு ஒரு எடுத்துக்காட்டாக நாம் கொள்ளலாம். இஸ்ரேலிய இராணுவத்தின் தாக்குதலினால் பாதிக்கப்படும் சின்னங்சிறு குழந்தைகள் அனுபவிக்கும் வேதனையை ஊடகங்கள் விவரிக்கின்றன, மற்றும் பாலஸ்தீனா மீது இரக்கம் கொள்ளும் மக்கள் இந்த செய்திகளைக் கண்டு, கோபங்கொள்கின்றனர். அதே நேர‌த்தில், யூத‌ நாட்டின் ப‌க்க‌ம் உள்ள‌ ம‌க்க‌ள், இர‌த்த‌ம் சொட்டும் எரிந்த‌ முக‌ங்க‌ளோடு காண‌ப்ப‌டும் குழ‌ந்தைக‌ளைக் க‌ண்டு ம‌ன‌ம் வ‌ருந்தினாலும், த‌ங்க‌ள் மீது தாக்குத‌ல்(collateral damage) ந‌ட‌த்துப‌வர்க‌ளை எப்ப‌டி ச‌மாளிக்க‌ முடியும்? என்று கேட்டு, இஸ்ரேலின் செயலை நியாயப்படுத்துகிறார்கள். இஸ்ரேல் என்ற நாட்டை அழிக்கவேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு உருவாக்கப்பட்ட ஹமாஸ்(Hamas) என்ற இயக்கம் தொடர்ந்து ஏவுகனைகளோடு தாக்கும் போது, அதனிடமிருந்து தப்பிப்பதற்காக நடத்தப்படும் "ஒரு தற்காப்பு போர் இல்லையா இது?". அதே நேர‌த்தில் த‌ங்க‌ள் நாட்டிலேயே த‌ங்க‌ளை சிறைக் கைதிகளாக‌ வைத்திருக்கும் நாட்டிற்கு எதிராக‌ போர் புரியும் "சுத‌ந்திர‌ போர் வீர‌ர்க‌ள்" என ஹமாஸ் இயக்கத்தார்கள் கருதுகிறார்கள். சரி, உண்மையில் அந்த இடம் யாருடையது? குர்‍ஆனும் பைபிளும் அந்த இடத்தை யூதர்களுக்கு இறைவன் தான் கொடுத்தார் என்றுச் சொல்லவில்லையா(குர்‍ஆன் சூரா அல்-அரப் 7:133-138, யோசுவா 1:1-5)? இந்த சிக்கலான சூழ்நிலையில் இன்னொரு முக்கிய‌மான‌ விவ‌ர‌த்தைச் சொல்கிறேன், ஹ‌மாஸ் இய‌க்க‌த்தை ஸ்தாபித்த‌ ஷேக் ஹ‌சேன் யூசுப்(Sheikh Hassan Yousef) என்ப‌வ‌ரின் ம‌க‌னான‌ முச‌ப் ஹ‌சேன்(Mousab Hassan) என்ப‌வ‌ர் ச‌மீப‌ கால‌த்தில் பைபிளின் இயேசுக் கிறிஸ்துவை பின்பற்றப் போவதாக தன் முடிவை தெரிவித்துள்ளார்.

ஹ‌மாஸ் இய‌க்க‌ம் ஆட்சி செய்துக்கொண்டு இருக்கும் போது, ஹ‌மாஸ் த‌ன் சொந்த‌ ம‌க்க‌ளை கொடுமைப்ப‌டுத்துவ‌தையும், கொல்வ‌தையும் க‌ண்டு முச‌ப் அதிகமாக ப‌ய‌ந்துள்ளார். இவர்கள் எப்படிப்பட்ட சுதந்திரத்தை பிரகடனப்படுத்துகிறார்கள்? தன்னை பின்பற்றுகிறவர்களிடம் "உன் சத்துருக்களை நேசியுங்கள்" என்றுச் சொன்ன இயேசுவின் வார்த்தைகள், காஸாவில் இளைஞர் இயக்கத்திற்கு தலைவராக இருந்த முசப்பை, இந்த வித்தியாசமான மற்றும் வினோதமான போதனையை செய்த இயேசுவைப் பற்றி இன்னும் அதிகம் அறிய கட்டாயப்படுத்தியது(1, 2).

உன் எதிரியை நேசி! இதில் நீதி எங்கேயுள்ளது?

Love your enemy! Where is the justice in that?

நமக்கு எதிராக தீமை செய்பவர்களை மன்னித்து, அவர்கள் மீது அன்பு கூறுங்கள் என்று இயேசு எப்படி தன்னை பின்பற்றுகிறவர்களுக்கு கட்டளை கொடுக்கமுடிந்தது? இப்படி நமக்கு தீமை புரிந்தவர்களை மன்னித்தால், இது முழுவதும் அநீதி இல்லையா? ஆனால், உண்மையில் தௌராத்தில் தேவன் சொல்கிறார்:

பழிவாங்குவதும் பதிலளிப்பதும் எனக்கு உரியது; ஏற்றகாலத்தில் அவர்களுடைய கால் தள்ளாடும்; அவர்களுடைய ஆபத்துநாள் சமீபமாயிருக்கிறது; அவர்களுக்கு நேரிடும் காரியங்கள் தீவிரித்து வரும் (உபாகமம் 32:35).

'Punishment is mine and reward, at the time of the slipping of their feet: for the day of their downfall is near, sudden will be their fate.'(Deuteronomy 32:35)

நீதியை செய்வதற்காக தண்டனை கொடுக்கப்பட வேண்டும். இதை தேவன் தாமே தன் வழியிலே இந்த தண்டனையை நிறைவேற்றுவார். உண்மையில் சொல்லவேண்டுமானால், தேவன் ஏற்கனவே, அதிகமாகவே தண்டனை அளித்துவிட்டார், எனவே நாம் இப்போது நம் எதிரிகளை நேசிக்கவேண்டும், இனியும் நேசிக்கவேண்டும், தீமை புரிந்தவர்களுக்கு தண்டனை தருவது மஸீஹாவாகிய இயேசு பார்த்துக் கொள்வார்.

மஸீஹா(மேசியா) என்பதின் அர்த்தம்

Meaning of Messiah

குர்‍ஆன் கூட இயேசுவை "அல்-மஸீஹா"(சூரா அல்-இம்ரான் 3:45) என்று அழைக்கிறது. ஆனால், குர்‍ஆன் இந்த வார்த்தையின் பொருள் என்ன என்று விளக்குவதில்லை. இது மட்டுமல்ல, இந்த குறிப்பிட்ட பட்டம்/பெயர் ஏன் இயேசுவிற்கு மட்டும் தனிப்பட்ட விதத்தில் கொடுக்கப்பட்டது என்று கூட குர்‍ஆன் விவரிப்பதில்லை. குர்‍ஆனின் இந்த தெளிவற்ற விவரத்தின் மத்தியில், "மஸீஹா" என்னும் இயேசுக் கிறிஸ்து பைபிள் வெளிப்பாட்டின் முழுமுதல் நோக்கத்தை நிறைவேற்றியிருக்கிறார். மேசியா/மஸீஹா என்ற எபிரேய வார்த்தையின் அர்த்தம், "அபிஷேகம் செய்யப்பட்டவர்", இதனை ஆங்கிலத்தில் "கிறிஸ்து" என்று மொழி பெயர்த்து இருக்கிறார்கள். இந்த வார்த்தை பல விதங்களில் பயன்படுத்தப்பட்டது, கடைசியாக வருகிறவரான மேசியாவின் செயல்களை குறிப்பிட இவ்வார்த்தை பயன்படுத்தப்பட்டது. அவர் தேவனால் தெரிந்தெடுக்கப்பட்டவர், அவர் தன் மக்களை இரட்சிப்பார், அவர் தேவனின் எதிரிகளை நியாயந்தீர்த்து தண்டிப்பார் மற்றும் அவர் இந்த முழு உலகத்தின் எல்லா நாடுகளையும் நீதியோடும் நியாயத்தோடும் நித்திய நித்தியமாக ஆட்சி புரிவார். அவர் தேவனாக‌ உள்ளவர், அவர் பரலோகத்தில் இருக்கிறார், மனிதனாக வந்து நாம் பெறவேண்டிய தண்டனையை அவர் தன் மேல் ஏற்றுக்கொண்டார் என்று பைபிளில் விவரிக்கப்படுகிறார்(ஏசாயா 9:6-7, 53:1-12, தானியேல் 7:13-14).

நடைமுறைப் படுத்துதல்

Practical implications

ஒரு நல்ல செய்தி என்னவென்றால், "சமாதானம்-Peace" என்பது காஸாவிலும் இன்னும் சண்டைகள் சச்சரவுகள் உள்ள இடங்களிலும் சாத்தியம் தான், ஏனென்றால், நீதியை தேவனே நிலை நாட்டியிருக்கிறார். ஆனால், தேவனின் இந்த "சமாதான திட்டத்தை" நிராகரித்தால் என்ன நடக்கும்? இஞ்ஜில் என்றுச் சொல்லும் நற்செய்தி சொல்கிறது:

"கூடுமானால் உங்களாலான மட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள்" (ரோமர் 12:18)

'As far as it is possible for you be at peace with all men.'(Romans 12:18)

தேவனுடைய இந்த விலை மதிக்க முடியாத பரிசை எல்லாருக்கும் தருகிறார். ஆனால், இந்த பரிசை யார் யாரெல்லாம் அங்கீகரித்து ஏற்றுக் கொள்கிறார்களோ அவர்களே இப்பரிசு மூலம் கிடைக்கும் நன்மைகளை அனுபவிக்க முடியும். தேவனுடைய உதவியுடன் மன்னிப்பையும் அன்பையும் பெற்று யார் யாரெல்லாம் அவைகளை அனுபவிக்கிறார்களோ, அவர்களால் மட்டுமே மன்னிப்பையும் அன்பையும் மற்றவர்களுக்கு தரமுடியும். இப்படிப்பட்டவன் தன் நாட்டின் அரசாங்க சட்டங்களை மக்கள் பின் பற்றும்படி செய்கிறான், சில நேரங்களில் கட்டாயப்படுத்தியாவது செய்யச் செய்கிறான்(ரோமர் 13:1-8). ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பதிலாக அதிகாரிகள் செயல்படுகிறார்கள். ஒரு வேளை அரசாங்க அதிகாரிகள் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பாடுபடவில்லையானால், சட்டத்தை நிலை நிறுத்தவில்லையானால், நியாயந்தீர்ப்பு நாளிலே தேவன் அவர்களை நித்திய நரகத்திலே தள்ளி தண்டிப்பார். இதே த‌ண்ட‌னை தேவனது நீதியான‌ வ‌ழியை ம‌றுக்கும் ஒவ்வொருவ‌ருக்கும் கிடைக்கும்.

தேவனுடைய நீதியையும் அவரது சமாதானத்தையும் ஏற்றுக்கொண்டு, அதை சந்தோஷமாக அனுபவிக்கும் மக்கள், இந்த கடினமான காலங்களில் என்ன செய்யவேண்டும்? நாம் முழுமையான மனநிறைவோடு மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்பது நம்மை சுற்றியுள்ள சூழ்நிலைகளின் மீது ஆதாரப்பட்டு இருக்கவில்லை, அதற்கு பதிலாக நம்முடைய இரட்சகரோடு நாம் கொண்டுள்ள நல்லுறவின் மீது ஆதாரப்பட்டு இருக்கிறது. தனி மனிதனோ, குழுக்களோ அல்லது நாடுகளோ தங்கள் சுயநல வெறுப்பிலிருந்து விடுதலை அடைய விருப்பமில்லாமல் மறுப்பவர்களிடம் நாம் நல்ல சமாதான மற்றும் வெறுப்பில்லா வழிமுறைகளை பயன்படுத்தி சந்திக்கவேண்டும் (உதாரணம்: மார்டின் லூத்தர் கிங்). இது மிகவும் வலியுண்டாக்கும் நீண்ட வழிமுறையாக இருந்தாலும், இதற்கு அதிக காலமானாலும் இயேசுக் கிறிஸ்து அவர்களுக்காக உண்டாக்கியுள்ள பரலோகத்தில் அவர்களை கொண்டுச் செல்லும் வழி இதுவே. இயேசு அவர்களுக்காக உண்டாக்கிய இடம் தான், அவர்களின் நித்திய தாய் நாடு ஆகும். தேவனின் நீதியை அறியும் உங்கள் மீது தேவனின் சாந்தி உண்டாகட்டும்.

கேள்விகள் விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன, இக்கட்டுரையின் ஆசிரியரோடு தொடர்பு கொள்ள இங்கு சொடுக்கவும்.

Source: http://www.answering-islam.org/authors/oskar/justice_peace.html


ஆசிரியர் ஆஸ்கார் அவர்களின் கட்டுரைகள்
முகப்புப் பக்கம் ஆன்சரிங் இஸ்லாம் தமிழ்

இஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்

முன் பக்கம் செல்ல

HOME PAGE

தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்

1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1

2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2

3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3

4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4

பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்

1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1

2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2

பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்

1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்

2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்