இஸ்லாம் அமைதி மார்கமா? இஸ்லாம் இனிய மார்கமா? இஸ்லாம் உண்மையான மார்கமா?

ஆன்சரிங் இஸ்லாம்

பல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்

சத்தியவான் தளம் செல்ல

Friday, March 21, 2008

இஸ்லாம் இணையத்திற்கு பதில்: இஸ்லாம் சரியான மார்க்கம் என்று தெரிந்தும் கிறிஸ்தவர்கள் நிராகரிக்கின்றார்களா?



 

இஸ்லாம் இணையத்திற்கு பதில்:

இஸ்லாம் சரியான மார்க்கம் என்று தெரிந்தும் கிறிஸ்தவர்கள் நிராகரிக்கின்றார்களா?


முன்னுரை:

சமீப காலமாக இஸ்லாமிய கிறிஸ்தவ கட்டுரைகள் தமிழ் இணைய உலகில் உலா வந்துக்கொண்டு இருக்கின்றன.இதில் இஸ்லாமியர்கள் "நாங்கள் கேள்விகள் மட்டுமே கேட்போம், பதில் சொல்லமாட்டோம், மற்ற மார்க்கங்களின் வேதங்களில் கை வைத்து, எங்களுக்கு ஏற்ற விதத்தில் பொருள் கூறுவோம், அவர்கள் பதில் சொன்னால் அதை காதில் வாங்க மாட்டோம், எங்கள் குர்‍ஆனை அவர்கள் படித்து கேள்விகள் கேட்டால், இஸ்லாமுக்கும், முகமதுவிற்கும் அவதூறு செய்கிறார்கள் என்று ஓயாமல் சொல்லிக்கொண்டே இருப்போம், ஆனால், தப்பித்தவறியும் பதில் சொல்லமாட்டோம்" என்ற தோரணையில் இணைய தளங்களை நடத்திக்கொண்டு வருகின்றனர்.

இந்த கட்டுரையில், நாம், "இஸ்லாம் இணைய பேரவை" தளம் எழுதிய ஒரு கட்டுரைக்கான பதிலை காணப்போகிறோம். இந்த கட்டுரையில் இவர்களாகவே சில விஷயங்களை சுயமாக முடிவு செய்துவிட்டு அதை வெளியிட்டுள்ளனர்.

இவர்கள் சுயமாக எடுத்த முடிவு என்ன?

1. கிறிஸ்தவர்களுக்கு உண்மை மார்க்கம் இஸ்லாம் என்று தெரியுமாம்

2. அப்படி தெரிந்து இருந்தும், கிறிஸ்தவர்கள் வறட்டு கௌரவத்தால் இஸ்லாமை நிராகரிக்கிறார்களாம்
.

[என்னே கண்டுபிடிப்பு! நான் மட்டும் நோபல் யாருக்கு கொடுக்கலாம் என்று நிர்ணயிக்கும் குழுவில் இருந்தால், 2008ம் ஆண்டிற்கான நோபல் பரிசை இந்த கண்டுபிடிப்பிற்காக இதை எழுதவருக்கு கொடுக்க சிபாரிசு செய்வேன்.]

நான் இந்த கட்டுரையில் மேலே குறிப்பிட்ட இரண்டு குறிப்புகளுக்கு மட்டும் பதில் தரலாம் என்று விரும்புகிறேன். அதே நேரத்தில் இவர்களின் வாடிக்கையான கிளிப்பிள்ளை வார்த்தைகளுக்கும் பதில் ஆங்காங்கே சொல்லிவிடுகிறேன்.

இன்னும் அவர்கள் என்ன என்ன சொல்லியுள்ளார்கள் என்று நீங்களே படியுங்கள்:

இஸ்லாம் இணையம் எழுதியது:

வேதக்காரர்களான யூதர்களும் கிரிஸ்தவர்களும் உண்மை மார்க்கம் இஸ்லாம் மட்டுமே என்று தெரிந்த பின்னரும் வறட்டு கௌரவத்தால் சத்தியத்தை நிராகரித்து இறைவேதத்தை இருட்டடிப்பு செய்தும், நவிமொழிகளை நாசவேளை செய்தும் உண்மைக்கு மாற்றமான செய்திகளை பரப்பிவருகிறார்கள். அல்குர்ஆனில் சில வசனங்களை மாற்றியமைத்து தனக்கு சாதகமான சூழ் நிலையை உருவாக்குகிறார்கள். இதுபோதுமல்லாது பல இணையதளங்களை நிறுவி அதன்மூலம் காபாவில் சிலைவணங்குதல், நபிகளார்(ஸல்) அவர்களின் குடும்பத்தை பழித்து வர்ணித்தல், காட்டுமிரான்டி மார்க்கம் என்பனபோன்ற எண்ணற்றக் குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்ற வகையில் உண்மை எதுவென்று தெரிந்த பின்னரும் அவதூராக பரப்பிவருகிறார்கள். இதை இறைவன் அவர்களின் முகத்திறையை இவ்வாறு கிழிக்கிறான்,

வேதத்தையுடையோரே! சத்தியத்தை அசத்தியத்துடன் ஏன் நீங்கள் கலக்குகிறீர்கள்? இன்னும் நீங்கள் அறிந்து கொண்டே ஏன் உண்மையை மறைக்கிறீர்கள்? (அல்குர்ஆன் 3:71)

இப்படி பல ஆக்கங்களை நிறுவி முஸ்லிம்களின் உள்ளங்களில் சிந்தனை மாற்றத்தை ஏற்படுத்தி தவறான வழிக்கு கொண்டுசெல்ல வேண்டும் என்பதே அந்த கோர முகங்களின் நஞ்சு எண்ணமாகும். இவ்வாறு இணையதளத்தில் நிறுவப்பட்ட ஆக்கங்கள் புதிதாக இஸ்லாத்தை அறியவேண்டும் என்பதற்காக ஒருவர் விரும்பி தேடும்போது இதை பார்ப்பாரேயானால் விரண்டோடக்கூடிய ஒரு துர்பாக்கிய சூழ்நிலைதான் அங்கு உருவாகும். ஆகவே இப்படிப்பட்ட பல சூழ்ச்சிகளின் மூலம் இஸ்லாத்தின் எழுச்சியை அமுக்க நாடுகிறார்கள், ஆனால் அவர்களுக்கு தெரியவில்லை தங்களது விழிகளை உளியை கொண்டு குத்திக்கொண்டு இருக்கிறோம் என்று. இறைவன் அந்த வேதக்காரர்களின் கூறுகெட்டச் செயலை இவ்வாறு விவரிக்கிறான்.

வேதத்தையுடையோரில் ஒரு சாரார் உங்களை வழி கெடுக்க விரும்புகிறார்கள். ஆனால் அவர்கள் தங்களையே அன்றி வழி கெடுக்க முடியாது. எனினும் (இதை) அவர்கள் உணர்கிறார்களில்லை. (அல்குர்ஆன் 3:69)

Source:


1. இஸ்லாமியர்கள் அளவிற்கு அதிகமாகவே பயந்துள்ளார்கள்:

நாம் சிறுவயதிலே சில இடங்களை கடந்துச்செல்லும் போது, உதாரணத்திற்கு ஒரு பாழடைந்த வீட்டை கடந்துச்செல்லும் போது, அல்லது அதிகமாக மரங்கள் உள்ள இடத்தை கடந்துச்செல்லும் பொது, அல்லது ஆள் நடமாட்டம் இல்லாத கல்லரைகளை கடந்துச்செல்லும் போது, மனதிலே பயம் ஒரு புறம் இருந்தாலும், நமக்கு நாமே தைரியம் கொண்டு, ஏதோ ஒரு பாட்டை சத்தமாக பாடிக்கொண்டே, நடுங்கிக்கொண்டே அந்த இடத்தை கடந்துவிடுவோம். சிலர், "நான் பயப்படமாட்டேன், நான் தைரியமானவன், நான் ஒரு வீரன்" என்று சொல்லிகொண்டு ஓடோடி அந்த இடத்தை சீக்கிரமாக கடந்துவிடுவோம். முக்கியமாக கிராமங்களில் இருப்பவர்களுக்கு இந்த அனுபவம் இருக்கும். அந்த இடத்தை கடந்தபிறகு நிம்மதியாக நடந்துச்செல்வோம். உள்ளத்தின் ஆழத்தில் பயம் இருந்தாலும் வெளியே காட்டிக்கொள்ளாமல், ஏதேதோ சொல்லிக்கொண்டு அந்த இடத்தை எப்படியாவது கடந்துப்போவோம்.

இதே போலத்தான் இஸ்லாமியர்களும், இவர்கள் கட்டுரைகளை கவனித்தீர்களானால்:

1. நாங்கள் வெற்றி பெற்றே தீருவோம்,

2. நீங்கள் எவ்வளவுதான் இடையூறுகளை ஏற்படுத்தினாலும் இஸ்லாம் என்கின்ற சத்திய ஒளிக்கு என்றைக்குமே திறையிட முடியாது

3. சத்தியம் ஜெயித்தே தீரும்,

4. யாரும் குர்‍ஆனுக்கு எதிராக ஒன்றும் செய்யமுடியாது,

5. சூரியனை கைகளால் மறைக்கமுடியாது,

6. சத்தியமார்க்கம் வெற்றிப்பெறும்

7. நாங்கள் பயப்படமாட்டோம்

இவர்களுக்கு பயம் வரும்போதெல்லாம், ஒரு கட்டுரையாவது இப்படி வெளியிட்டுக்கொண்டே இருப்பார்கள். இதை படிக்கும் இதர முஸ்லீம்கள் அப்படியே பொங்கிப்போவார்கள். குர்‍ஆன் வசனங்களுக்கு இவர்கள் அர்த்தத்தை மாற்றிச் சொல்கிறார்கள், இவர்கள் வெற்றிப்பெறமுடியாது, நாங்கள் தான் வெற்றிப்பெறுவோம் என்று ஓயாமல் கிளிப்பிள்ளைப்போல சொல்லிக்கொண்டே இருப்பார்களே தவிர, இவர்களாகவே குர்‍ஆன் வசனங்களுக்கு சரியான பொருள் கூறமாட்டார்கள், ஹதீஸ்களுக்கு பொருள் கூறமாட்டார்கள், அப்படி கூறுகிறவர்களின் அர்த்தம் தவறு என்றுச் சொல்வார்கள். இந்த வகையில் அவர்கள் எழுதிய கட்டுரைக்குத் தான் இப்போது நாம் பதிலை பார்த்துக்கொண்டு இருக்கிறோம்.

சரி, இவர்களின் "கிறிஸ்தவர்கள் உண்மை மார்க்கம் இஸ்லாம் என்று தெரிந்தே நிராகரிக்கின்றனர" என்ற குற்றச்சாட்டிற்கு பதிலை காண்போம்.

2. கிறிஸ்தவர்கள் உண்மை மார்க்கம் இஸ்லாம் என்று தெரிந்தே நிராகரிக்கின்றனரா?

உண்மையில் "கிறிஸ்தவர்கள் இஸ்லாம் தான் உண்மை மார்க்கம் என்று தெரிந்துவைத்து இருக்கிறார்கள்" என்றுச் சொல்ல உங்களால் எப்படி முடிகிறது. முஸ்லீம்களே! உங்களுக்கு இப்படி எழுதுவது அடிப்படை இல்லாமல் எழுதுவது போல தோன்றவில்லை? எங்களுக்கு எல்லாம் தெரிந்து தான் நாங்கள் எழுதுகிறோம் என்றுச் சொல்வீர்களானால், கீழ் கண்ட வரிகளை முதலில் படியுங்கள்:

"முஸ்லீம்கள் கிறிஸ்தவம் தான் உண்மை மார்க்கம் என்றும், முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்றும், குர்‍ஆன் என்பது இறைவன் அருளிய வேதம் இல்லை என்பதையும் நன்றாக தெரிந்து வைத்துக்கொண்டே, முஸ்லீம்கள் வறட்டு கௌரவத்தால், கிறிஸ்தவத்தை எதிர்க்கிறார்கள்"

என்று நான் சொன்னால் எப்படி இருக்கும்? எந்த காரணத்தால் இப்படி இவர் சொல்கிறார்? என்று கேட்கத்தோன்றுகிறது அல்லவா உங்களுக்கு? அதே போலத்தான், நானும் உங்களை கேட்கிறேன், எதை அடிப்படையாக வைத்துக்கொண்டு, "இஸ்லாம் உண்மை மார்க்கம்" என்று கிறிஸ்தவர்களுக்கு தெரியும் என்று நீங்கள் சொல்கிறீர்கள்? மனிதனின் உள்ளத்தில் இருப்பது தெரிந்துக்கொள்ள வேண்டுமானால், முதலாவது அம்மனிதன் அதை சொல்லவேண்டும், அல்லது நீங்கள் இறைவனாக இருக்கவேண்டும்?

இவை இரண்டும் இல்லாமல் எப்படி உங்களால் இப்படி பிரயோஜமில்லாத "அறிக்கைகளை" வெளியிடமுடிகிறது?

சரி, எங்கள் உள்ளங்களில் உள்ளதை நீங்கள் சொன்னதால், "கிறிஸ்தவர்கள் இஸ்லாம் பற்றி என்ன கருதியிருக்கிறார்கள் என்று சொல்லிவிடுகிறேன்."

3. "மார்க்கம் வேண்டாம்" என்றுச் சொல்பவனை இஸ்லாம் போல கிறிஸ்தவம் கொல்வதில்லை, அல்லது மனிதனை கொல்லச்சொல்லும் ஷரியா சட்டம் எங்களுக்கு இல்லை:

ஒரு முஸ்லீம் கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொள்ளும் பொது, எங்கே இவர்கள் தன்னை கொன்றுவிடுவார்கள் என்று பயந்துக்கொண்டு வாழுகிறான். பல இஸ்லாமிய நாடுகளிலும் இந்த சட்டம் உண்டு, அதாவது ஒருவன் இஸ்லாமை விட்டு கிறிஸ்தவனானால், அவனுக்கு மரண தண்டனை உண்டு. செய்திகளிலும் நாம் இதனை பார்க்கமுடியும். கிறிஸ்தவத்தில் இப்படி "கொடூரமான‌ சட்டமில்லை", விருப்பமிருப்பவன் இருக்கட்டும் இல்லையானால் போகட்டும், அவ்வளவு தான். வேண்டுமானால், அவன் குடும்ப நபர்கள் அவனுக்கு அறிவுரை கூறுவார்கள், புத்தி சொல்வார்கள், கேட்கமாட்டேன் என்றால் விட்டுவிடுவார்கள். ஆனால், பைபிள் அவனை கொல்லுங்கள் என்று குர்‍ஆன் போல சொல்வதில்லை.

உண்மை இப்படி இருக்க, ஒரு கிறிஸ்தவன் முஸ்லீமாக மாறினால் அவனுக்கு தன் "புதிய இஸ்லாமிய நம்பிக்கையை" வெளிக்காட்ட தடைகள் இல்லை. தன்னை கிறிஸ்தவர்கள் கொன்றுவிடுவார்கள் என்று அவன் பயந்து வாழவேண்டிய அவசியமில்லை. ஆனால், ஒரு முஸ்லீம் கிறிஸ்தவனானால், பல ஆண்டுகள் கடந்தும் தன் நம்பிக்கையை அப்படியே மூடி வைப்பான், காரணம் உயிர்... உயிர்... உயிர்.... மட்டுமல்ல, பல இஸ்லாமிய நாடுகளில் அவன் வாழும் இடத்தில் பிரச்சனை வரும், வேலையில் பிரச்சனை வரும். இப்படி பல கொடுமைகள் இஸ்லாமின் பெயரில் நடந்துக்கொண்டு இருக்கிறது.

நான் இங்கு சொல்லவிரும்புவது இது தான், பல முஸ்லீம்கள் "கிறிஸ்தவம் தான் உண்மை மார்க்கம் என்று நம்பியிருப்பார்கள்", ஆனால், வெளியே சொல்லமுடியாமல் தவிப்பார்கள். ஆனால், ஒரு கிறிஸ்தவன் முஸ்லீமாக மாறி தன்னை மறைத்துக்கொண்டு வாழமாட்டான், அப்படி அவனை மறைந்து வாழச்சொல்வீர்களா நீங்கள்! அடேங்கப்பா மலைகளை கவுத்துவிடமாட்டீர்கள் நீங்கள்?! உண்மை மார்கத்தை ஒருவன் ஏற்றுக்கொண்டாலும் அதற்கு இவர்கள் தடையாக இருக்கிறார்கள் என்றுச் சொல்லி, உலகை ஒரு வழி ஆக்கிவிடமாட்டீர்கள் நீங்கள்!

எனவே, நீங்கள் சொல்வது தவறு, ஒருவன் முஸ்லீமானால், அவன் உடனே அதை வெளிப்படுத்துவான், ஆனால், ஒரு முஸ்லீம் கிறிஸ்தவனானால், அவன் இழக்கவேண்டியது மிகவும் அதிகமாக இருக்கும். இதற்கு காரணம், இஸ்லாம் கொடூரம், கிறிஸ்தம் அமைதி என்பதால் தான்.

4.இஸ்லாம், "பொய் மார்க்கம்" என்று எல்லா கிறிஸ்தவர்களுக்கும் தெரியும்:

a) இன்னொரு வேதம், இன்னொரு நபி கிறிஸ்தவர்களுக்குத் தேவையில்லை:

பைபிளில் எங்களுக்கு தேவையான எல்லா கட்டளைகளும், நல்ல வழியும், இரட்சிப்பும் உண்டு. எனவே, இன்னொரு வேதம் எங்களுக்குத் தேவையில்லை. நான் ஒரு நபியை எழுப்புவேன், அவரை நம்புங்கள், அவரை அப்படியே அச்சடித்தது போல பின்பற்றுங்கள், அவரின் உடை, நடை பாவனையை அப்படியே காபி அடியுங்கள், என்று இயேசு எங்களுக்குச் சொல்லிவிட்டுப்போகவில்லை. பரிசுத்த ஆவியானவர் உங்கள் உள்ளங்களில் வருவார், அவர் உங்களை நீதியில், சத்தியத்தில் நடக்க உதவிச்செய்வார், நீங்கள் தவறு செய்ய முற்படும் பொது உங்களை கடிந்துக்கொள்வார்,எல்லாரிடத்திலும் அன்பு கூறுங்கள், அதன் மூலம் நீங்கள் என் சீடர்கள் என்று உலகம் அறிந்துக்கொள்ளட்டும் என்று பல அறிவுரைகளை கட்டளைகளை இயேசு கொடுத்துள்ளார். அப்படியே பெந்தகோஸ்தே நாளன்று, பரிசுத்த ஆவியானவர் இறங்கினார். குர்‍ஆனை கிறிஸ்தவர்கள் வேதம் என்று நம்புவதுமில்லை, முகமது ஒரு தீர்க்கதரிசி என்று நம்புவதுமில்லை, எங்களுக்கு இப்படிப்பட்ட வேதமும், நபியும் தேவையும் இல்லை. நாங்கள் தெளிவாக இருக்கிறோம். எனவே, உங்கள் கிளிப்பிள்ளை அறிக்கைகளை நாங்கள் நம்பத்தயாராக இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

b) ஆட்டுத்தோலை போர்த்துக்கொண்ட ஓநாய்கள் வருவார்கள் என்றும் இயேசு எச்சரித்துள்ளார்:

இயேசுவின் நற்செய்தியையே நாங்கள் நம்புகிறோம். வேறு ஒரு நற்செய்தி(சுவிசேஷம்) எங்களுக்குத் தேவையில்லை. உலகத்தில் பல பேர் எழும்பி, பல பேரை குழப்புவார்கள் என்றும், ஆட்டுத்தோலை போர்த்துக்கொண்ட ஓநாய்கள் வருவார்கள் என்றும் இயேசு எச்சரித்துள்ளார்.

கள்ளத் தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள்; உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள் (மத்தேயு 7:15)


இப்படி பலபேர் "தங்களை இயேசுவிற்கு அடுத்த தீர்க்கதரிசிகள்" என்று சொல்லிக்கொண்டு வந்தார்கள், மரித்தார்கள். எனவே, நபி என்று சொல்லிக்கொண்டு வருபவர்களையும் போகிறவர்களையும் நாங்கள் நம்பவேண்டிய அவசியம் இல்லை.

c) வேறு ஒரு சுவிசேஷம் கொண்டுவருபவன் "சபிக்கப்பட்டவன்":

நாங்கள் நம்பியிருக்கின்ற சுவிசேஷம் தவிர வேறு ஒரு சுவிசேஷம் கொண்டுவருபவன், அவன் தேவதூதனே ஆனாலும், அவன் சபிக்கப்பட்டவன் என்று பைபிள் சொல்கிறது.

நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன். முன் சொன்னதுபோல மறுபடியும் சொல்லுகிறேன்; நீங்கள் ஏற்றுக்கொண்ட சுவிசேஷத்தையல்லாமல் வேறொரு சுவிசேஷத்தை ஒருவன் உங்களுக்குப் பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்.(கலாத்தியர் 1:8,9)


இஸ்லாம் படி பார்த்தால், இந்த வசனத்தின் படி காபிரியேல் தூதன் சபிக்கப்பட்டவன். எனவே, கிறிஸ்தவர்கள் "இஸ்லாம் உண்மை மார்க்கம் அல்ல என்று தான்" நம்பியிருக்கிறார்கள். கிறிஸ்தவர்களில் "இஸ்லாம் தான் மெய் மார்க்கம்" என்று நம்புகிறவன், எப்போதோ இஸ்லாமுக்கு சென்று இருப்பான் அல்லவா? அவனவனுக்கு தன் தன் மார்க்கம் மெய்மார்க்கம். இதை நான் ஏன் எழுதவேண்டி வந்தது என்றால், "கிறிஸ்தவர்களின் நம்பிக்கையைப் பற்றிய அறிக்கையை" இஸ்லாமியர்களே முடிவு செய்து சொன்னதால், உண்மையை அழுத்தமாக சொல்லவேண்டி வருகிறது.

d) பெயரளவிற்காகக் கூட கிறிஸ்தவர்கள், முகமதுவை நபி என்று நம்பமாட்டார்கள்:

இயேசுவின் வாழ்க்கையை நாங்கள் படிக்கிறோம், அதன்படி வாழ முயற்சி எடுக்கிறோம். ஒருவேளை கிறிஸ்தவர்களாகிய எங்களில் சிலர், "இயேசு சொன்னது போல, உன்னைப்போல் பிறனையும்(அவன் இந்துவாக இருந்தாலும் சரி, முஸ்லீமாக இருந்தாலும் சரி, நாத்தீகனாக இருந்தாலும் சரி) நேசிப்பாயாக" என்ற கட்டளையை சரியாக பின்பற்ற தவறினாலும், அந்த கட்டளை மிகவும் உன்னதமானது, இறைவன் கொடுத்தது என்று ஏற்றுக்கொள்கிறோம். எங்கள் வழி அன்பின் வழி. இயேசு சொன்னது போல, நீங்கள் அன்புள்ளவர்களாக இருந்தால், நீங்கள் என் சீடர்கள் என்று உலகம் அறிந்துக்கொள்ளும், என்ற வார்த்தைக்கு இணங்க, நாங்கள் நடக்க விரும்புகிறோம். அதற்காகத்தான் நீங்கள் எவ்வளவு கேவலமான வார்த்தைகளை சொன்னாலும், எங்கள் இயேசுவைப்போல பொருத்துக்கொண்டு போய்க்கொண்டு இருக்கிறோம்.

ஒருவர் "தன்னை தீர்க்கதரிசி அதுவும் இயேசுவிற்கு அடுத்தபடியாக வந்தவர், உலகத்திற்கு வெளிச்சம் கொடுக்க வந்தவர், சத்திய மார்க்கம் பற்றி சொல்லவந்தவர் என்றுச் சொல்லும் போது, அவருக்கு என்னென்ன‌ குண‌ங்க‌ள் குறைந்த‌ ப‌ட்ச‌ம் இருக்க‌வேண்டும்" என்று எங்க‌ளுக்கு தெளிவாக‌த்தெரியும்.

இந்த வகையில் கிறிஸ்தவர்கள் முகமதுவின் வாழ்க்கையை முழுவதும் தெரிந்துக்கொண்ட பிறகு அவரை ஒரு "பெயரளவிற்காகவாவது, ஒரு நபியாக" நினைக்கவும் எங்களுக்கு மனம் இடம் கொடுப்பதில்லை.

உதாரணத்திற்கு: கிறிஸ்தவத்தில் ஒருவரை "பிஷப்பாக, போதகராக, மூப்பராக etc." நியமிக்க அவருக்கு இருக்கவேண்டிய குணங்கள் என்ன என்று பைபிள் சொல்கிறது. குறைந்த பட்சம் ஒரு போதகருக்கு இருக்கவேண்டிய இந்த குணங்களில், உலகத்தில் சத்திய மார்க்கத்தை பரப்ப வந்தவர் என்று இஸ்லாமியர்களால் சொல்லப்படும் முகமதுவிடம் இந்த குணங்களில் எத்தனை இருக்கிறது என்று நீங்களே சோதித்துப்பாருங்கள். சாதாரண மக்கள் நியமிக்கும் ஊழியர்களுக்கே இந்த தகுதிகள் இருக்கவேண்டும் என்று பைபிள் சொல்வதை படிக்கும் கிறிஸ்தவர்களுக்கு, அல்லா நியமித்த முகமதுவிற்கு எவ்வளவு தகுதிகள் இருக்கவேண்டும் தெரியாதா?

மூப்பருக்கு இருக்கவேண்டிய குணங்கள்:

குற்றஞ்சாட்டப்படாதவனும்,

ஒரே மனைவியையுடைய புருஷனும்,

துன்மார்க்கரென்றும் அடங்காதவர்களென்றும் பேரெடுக்காத விசுவாசமுள்ள பிள்ளைகளை உடையவனுமாகிய ஒருவனிருந்தால் அவனையே ஏற்படுத்தலாம்.

ஏனெனில், கண்காணியானவன் தேவனுடைய உக்கிராணக்காரனுக்கேற்றவிதமாய்,

குற்றஞ்சாட்டப்படாதவனும்,

தன் இஷ்டப்படி செய்யாதவனும்,

முற்கோபமில்லாதவனும்,

மதுபானபிரியமில்லாதவனும்,

அடியாதவனும்,

இழிவான ஆதாயத்தை இச்சியாதவனும்,

அந்நியரை உபசரிக்கிறவனும்,

நல்லோர்மேல் பிரியமுள்ளவனும்,

தெளிந்தபுத்தியுள்ளவனும்,

நீதிமானும்,

பரிசுத்தவானும்,

இச்சையடக்கமுள்ளவனும்,

ஆரோக்கியமான உபதேசத்தினாலே புத்திசொல்லவும்,

எதிர்பேசுகிறவர்களைக் கண்டனம் பண்ணவும் வல்லவனுமாயிருக்கும்படி,

தான் போதிக்கப்பட்டதற்கேற்ற உண்மையான வசனத்தை நன்றாய்ப் பற்றிக்கொள்ளுகிறவனுமாயிருக்கவேண்டும்.(தீத்து 1:6-9)

சபையில் உதவிக்காரர்களின்(Deacon) தகுதிகள்

மேலும் உதவிக்காரரானவர்கள்

ஒரே மனைவியையுடைய புருஷருமாய்,

தங்கள் பிள்ளைகளையும்சொந்தக் குடும்பங்களையும் நன்றாய் நடத்துகிறவர்களுமாயிருக்கவேண்டும்.( 1 தீமோ 3:12)

சபையில் கண்காணிப்பவரின்(பிஷப்) தகுதிகள்:

ஆகையால் கண்காணியானவன்

குற்றஞ்சாட்டப்படாதவனும்,

ஒரே மனைவியை உடைய புருஷனும்,

ஜாக்கிரதையுள்ளவனும்,

தெளிந்த புத்தியுள்ளவனும்,

யோக்கியதையுள்ளவனும்,

அந்நியரை உபசரிக்கிறவனும்,

போதகசமர்த்தனுமாய் இருக்கவேண்டும்.

அவன் மதுபானப்பிரியனும்,

அடிக்கிறவனும்,

இழிவான ஆதாயத்தை இச்சிக்கிறவனுமாயிராமல்,

பொறுமையுள்ளவனும்,

சண்டைபண்ணாதவனும்,

பணஆசையில்லாதவனுமாயிருந்து,

தன் சொந்தக் குடும்பத்தை நன்றாய் நடத்துகிறவனும்,

தன் பிள்ளைகளைச் சகல நல்லொழுக்கமுள்ளவர்களாகக் கீழ்ப்படியப்பண்ணுகிறவனுமாயிருக்கவேண்டும்.

ஒருவன் தன் சொந்தக் குடும்பத்தை நடத்த அறியாதிருந்தால், தேவனுடைய சபையை எப்படி விசாரிப்பான்? அவன் இறுமாப்படைந்து, பிசாசு அடைந்த ஆக்கினையிலே விழாதபடிக்கு, நூதன சீஷனாயிருக்கக்கூடாது. அவன் நிந்தனையிலும், பிசாசின் கண்ணியிலும் விழாதபடிக்கு, புறம்பானவர்களால் நற்சாட்சி பெற்றவனாயுமிருக்கவேண்டும்.(1 தீமோ 3:2-7)

கர்த்தருடைய ஊழியக்காரனுக்கு இருக்கவேண்டிய தகுதிகள்:

கர்த்தருடைய ஊழியக்காரன்

சண்டைபண்ணுகிறவனாயிராமல்,

எல்லாரிடத்திலும் சாந்தமுள்ளவனும்,

போதகசமர்த்தனும்,

தீமையைச் சகிக்கிறவனுமாயிருக்கவேண்டும்.

எதிர்பேசுகிறவர்கள் சத்தியத்தை அறியும்படி தேவன் அவர்களுக்கு மனந்திரும்புதலை அருளத்தக்கதாகவும், பிசாசானவனுடைய இச்சையின்படி செய்ய அவனால் பிடிபட்டிருக்கிற அவர்கள் மறுபடியும் மயக்கந்தெளிந்து அவன் கண்ணிக்கு நீங்கத்தக்கதாகவும், சாந்தமாய் அவர்களுக்கு உபதேசிக்கவேண்டும்.(2 தீமோ 2:24-26)

நான் உங்களை குற்றப்படுத்த இதனை எழுதவில்லை, நாங்கள் இந்த தகுதிகள் உள்ளவர்களைத் தான் குறைந்த பட்சம் தேவனுடைய ஊழியக்காரர்களாக நியமித்துக்கொள்கிறோம். அப்படி இருக்கும் போது, இந்த தகுதிகளில் பலவற்றை இழந்துள்ள முகமதுவை எப்படி கிறிஸ்தவர்கள் "தீர்க்கதரிசி" என்று நம்புவார்கள் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள். அவர் சொன்னது தேவன் சொன்ன வேதம் என்று கிறிஸ்தவர்கள் நம்புவார்கள் என்று எப்படி முடிவு செய்தீர்கள்?

[இன்று நாம் காணும் உலகத்தில் இந்த குணங்கள் உள்ளவரையா நீங்கள் தேவனின் ஊழியக்காரர்களாக் நியமிக்கிறீர்கள், அப்படி சில ஊழியர்கள் இருப்பதாக தெரியவில்லையே என்று என்னைக் கேட்டால், இந்த தகுதிகள் இல்லாதவரை யாராவது போதகராக நியமித்தால், ரொம்ப நாட்கள் நிலைக்காது, அவரை நியமித்தவர் அதன் பலனை நிச்சயமாக அடைவார். செய்திகளில் சில ஊழியர்கள் சபை பணத்தை கலவாடினார்கள், பெண்களை ஏமாற்றிவிட்டார்கள் என்று நாம் படிக்கிறோமே, இவர்கள் எல்லாம் இந்த தகுதியில்லாத கேடகரி தான். இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி, நீங்களும் உங்கள் இஸ்லாமிய மசூதிகளில் நியமிக்கும் ஊழியருக்கு என்ன என்ன தகுதிகள் இருப்பவரை நியமிக்கிறீர்கள், மற்றுமுள்ள இமாம்கள், இன்னுமுள்ள ஊழியர்களை எப்படி நியமிக்கிறீர்கள் என்று எங்களிடம் பகிர்ந்துக்கொண்டால், தமிழ் மக்கள் அனைவரும் இஸ்லாம் பற்றியும் சிறிது அறிந்துக்கொள்வார்கள்]]

முடிவுரை: "கிறிஸ்தவர்கள் இஸ்லாமை உண்மை மார்க்கம்" என்று நம்பமாட்டார்கள் என்பதை பைபிளை அடிப்படையாகக் கொண்டு இன்னும் பல தகவல்களை கொடுக்கமுடியும், இந்த கட்டுரைக்கு இந்த தகவல்கள் போதும் என்று எண்ணுகின்றேன். மேலும் நீங்கள் ஏதாவது விவரம் கேட்டால் தருவேன்.

தமிழ் இஸ்லாமிய அறிஞர்களுக்கு: இயேசுவின் போதனைகளை கடைபிடிக்கும் எந்த நபரும் முகமதுவின் போதனையை நமபவேண்டுமானால், அது அற்புதம் என்று தான் சொல்லவேண்டும். நீ உன்னில் அன்பு கூருவதுபோல பிறனிடத்தில் அன்பு கூறவேண்டும் என்ற இயேசுவின் கட்டளையை நம்பும் கிறிஸ்தவன், அல்லாவின் பாதையில் போரிடு என்ற குர்‍ஆனின் கட்டளையை நம்புவது என்பது உலக அதியங்களில் ஒன்று.

நாங்கள் பைபிளை நம்புகிறோம், இயேசுவை நம்புகிறோம், அவ்வளவுத்தான், இஸ்லாம் உண்மை மார்க்கம் என்பதை நாங்கள் கனவிலும் நம்புவதில்லை.

Source: http://www.tamilchristians.com/modules.php?name=Forums&file=viewtopic&p=12579#12579
 
 

இஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்

முன் பக்கம் செல்ல

HOME PAGE

தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்

1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1

2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2

3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3

4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4

பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்

1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1

2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2

பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்

1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்

2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்