இஸ்லாம் அமைதி மார்கமா? இஸ்லாம் இனிய மார்கமா? இஸ்லாம் உண்மையான மார்கமா?

ஆன்சரிங் இஸ்லாம்

பல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்

சத்தியவான் தளம் செல்ல

Monday, April 20, 2009

ஜாகிர் நாயக் அவர்களுக்கு பதில் - பல தார மணம் (Polygamy)

 

ஜாகிர் நாயக் அவர்களுக்கு பதில்கள்

 

 
இஸ்லாமியரல்லாதவர்கள் கேட்கும் பொதுவாக கேள்விகளுக்கு பதில்கள்
 
 
பல தார மணம் (Polygamy)


இக்கட்டுரையில் டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களின் வரிகள் பச்சை வண்ணத்தில் தரப்படுகிறது.
 
கேள்வி: ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்களை ஒரு மனிதன் திருமணம் செய்துகொள்ள இஸ்லாம் ஏன் அனுமதிக்கிறது? அல்லது பலதார மணத்தை இஸ்லாம் ஏன் அனுமதிக்கிறது?

பதில்:

1. பலதார மணம் என்றால் என்ன?

பலதார மணம் என்ற திருமண அமைப்பில் ஒரு நபர் ஒன்றுக்கும் மேற்பட்டவர்களை திருமணம் செய்து கொள்ளலாம். பல தார மணம் என்பது இரண்டு வகைப்படும். முதலாவது Polygyny என்பதாகும் இதில் ஒரு மனிதன் ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்களை திருமணம் செய்யலாம். இரண்டாவது Polyandry என்பதாகும், இம்முறைப்படி ஒரு பெண் பல ஆண்களை திருமணம் செய்யலாம். இஸ்லாமில் முதலாம் வகையான polygyny ஒரு வரையறையோடு அனுமதிக்கப்பட்டுள்ளது ஆனால் இரண்டாம் வகையான polyandry முழுவதுமாக‌ தடை செய்யப்பட்டுள்ளது. இப்போது நமது பழைய கேள்விக்கு வருவோம் ஒரு மனிதன் ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்களை திருமணம் செய்துக்கொள்ள‌ ஏன் அனுமதியளிக்கப்பட்டுள்ளது?
 
டாக்டர் ஜாகீர் நாயக்கின் வரையறையை (விளக்கத்தை) நான் ஏற்றுக்கொள்கிறேன்.
 
2. உலகத்தில் உள்ள மதம் சார்ந்த மத நூல்களிலேயே திருக் குரானில் தான் ஒருவரை மட்டும் திருமணம் செய்துக்கொள் என்ற வார்த்தைகள் அல்லது கருத்து உள்ளது. மற்ற மறை நூல்களில் அவ்வாறு ஒரு மனிதனுக்கு ஒருத்தி என்ற கொள்கை இல்லவே இல்லை எனலாம். ஏனைய மறை நூல்களான வேதங்கள், இராமாயணம், மகாபாரதம், பகவத் கீதை, பரிசுத்த வேதாகமம் ஆகியனவற்றில் ஒரு ஆண் எத்தனை பெண்களை திருமணம் செய்யலாம் என்ற வரையறை காணப்படவில்லை. அந்நூல்களில் உள்ளபடி ஒரு மனிதன் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் திருமணம் செய்துகொள்ளலாம்.
 
இது ஒரு பொருந்தாத வாதமாகும். பைபிளுக்கு ஒவ்வாத வாதத்தை ஜாகிர் நாயக் முன்வைத்திருக்கிறார். ஆனால், இவர் சொல்வதற்கு எதிர்மறையாக‌, தேவன் ஒருவனுக்கு ஒருத்தி என்ற திட்டத்தைத் தான் உருவாக்கி வைத்து இருந்தார். இதைத்தான் வேதாகமத்தின் முதல் புத்தகமான ஆதியாகமத்தில் காண்கிறோம்.
 
"இதினிமித்தம் புருஷன் தன் தகப்பனையும் தாயையும் விட்டு தன் மனைவியோடே இசைந்திருப்பான், அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள்" (ஆதியாகமம் 2:24)

"அவர் ஒருவனையல்லவா படைத்தார்? ஆவி அவரிடத்தில் பரிபூரணமாயிருந்ததே, பின்னை ஏன் ஒருவனை படைத்தார்? தேவபக்தியுள்ள சந்ததியை பெறும்படிதானே. ஆகையால் ஒருவனும் தன் இளவயதின் மனைவிக்கு துரோகம் பண்ணாதபடிக்கு, உங்கள் ஆவியை குறித்து எச்சரிக்கையாடிருங்கள்" (மல்கியா 2:15)
 
இயேசுவும் இவ்விதம் சொல்லியுள்ளார்...

"இப்படி இருக்கிறபடியினால் அவர்கள் இருவராயிராமல், ஒரே மாம்சமாயிருக்கிறார்கள்; ஆகையால் தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன் எனறார். அதற்கு அவர்கள்; அப்படியானால் தள்ளுதற்சீட்டைக் கொடுத்து, அவனை தள்ளிவிடலாமென்று மோசே ஏன் கட்டளையிட்டார் என்றார்கள். அதற்கு அவர்: உங்கள் மனைவிகளை தள்ளிவிடலாமென்று உங்கள் இருதய கடினத்தினிமித்தம் மோசே உங்களுக்கு இடங்கொடுத்தார்; ஆதிமுதலாய் அப்படியிருக்கவில்லை". (மத்தேயு 19:6-8)
 
பின்னர் தான் கிறிஸ்தவ பாதிரிகளும் இந்து பூசாரிகளும் மனைவிகளின் எண்ணிக்கையை ஒன்று என குறைத்துவிட்டனர்.
 
வேதாகமத்திலேயே தேவனுடைய திட்டம் ஒருவனுக்கு ஒருத்தி என தெளிவாக கூறப்பட்டுள்ள போது, திருச்சபையானது எப்படி ஒரு மனிதனுக்கு ஒரு மனைவி தான் இருக்க வேண்டும் என்பதை வரையறுத்திருக்க முடியும்? இந்து திருமண சடங்குகளை எப்படி இந்த விவாதத்தில் வரமுடியும்? என்று நான் வியப்படைகிறேன். டாக்டர் நாயக் தான் உண்மையானது என கருதும் இஸ்லாமிய பழக்க வழக்கங்களை உறுதிப்படுத்த, தான் தவறானது என கருதும் மற்றொரு மதத்தின் திருமண சடங்குகளை எப்படி இந்த விவாதத்தில் நுழைக்க முடியும்?
 
இந்து மதத்தில் உள்ள பிரபலமான அனேகர் பல மனைவிகளை கொண்டிருந்தனர். எடுத்துக்காட்டாக ராமரின் தந்தையான தசரதன் ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவியரை மணமுடித்து இருந்தார். கிருஷ்ணருக்கும் பல மனைவிகள் இருந்தனர்.
 
டாக்டர் நாயக் தனது மூதாதையரின் மதத்தை பற்றி தவறாக புரிந்துகொண்டிருக்கிறார். ஒரு ஆண் வாரிசை பெறுவதற்காக தசரதன் மூன்று பெண்களை திருமணம் செய்தார். தசரதனுக்கு மகள் இருந்தாள் ஆனால் தனது அரியணையை அலங்கரிக்க ஆண் வாரிசு வேண்டும் என விரும்பினார். கௌசல்யை மகனை பெறாததால் சுமித்திரையை திருமணம் செய்தார், அவரும் ஆண் வாரிசை பெற தவறியதால் கைகேயியை திருமணம் செய்தார். இவ்வாறு இருந்த சூழ் நிலையிலும் இந்து மதத்தில் ஒரு மனிதன் பல பெண்களை திருமணம் செய்வது ஏற்றுக்கொள்ளப்பட்ட பழக்கமாக இருந்ததில்லை. ராமன், லஷ்மணன், பரதன், சத்ருகன் ஆகியோர்கள் ஒரு மனைவியை மாத்திரம் திருமணம் செய்திருந்தனர். கிருஷ்ணரும் பல பெண்கள் அவரை திருமணம் செய்ய விரும்பியதால் அவர்களை திருமணம் செய்தார். இந்து மதத்தில் ஒரு பெண் பல ஆண்களை திருமணம் செய்யும் பழக்கத்தையும் திரௌபதியின் வாயிலாக சுட்டிக்காட்டப்படுகிறது.

நான் மறுபடியும் டாக்டர் நாயக்கை வினவுகிறேன், ஏன் தனது மத நம்பிக்கைகளை வலுப்படுத்த இந்து புராணங்களை இழுக்கிறார். இந்து மத பாத்திரங்கள் எங்ஙனம் இஸ்லாமிய முறைமைகளை உறுதிப்படுத்த முடியும். நம்பிக்கையற்றவர்களின் பழக்கவழக்கங்களைக்கொண்டு தனது மதத்தை ஏன் அவர் நியாயப்படுத்த முயல்கிறார்.
 
பண்டைய காலத்தில் கிறிஸ்தவ ஆண்கள் பல பெண்களை திருமணம் செய்து கொள்ள அனுமதி பெற்றிருந்தனர், பைபிள் எத்தனை பெண்களை திருமணம் செய்யலாம் என்று ஒரு வரையறையை கொடுக்கவில்லை. இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு தான் கிறிஸ்தவ திருச்சபை ஒரு மனிதனுக்கு ஒருத்தி என நெறிப்படுத்தியது.
 
இல்லை, பவுல் அப்போஸ்தலன் ஒருவனுக்கு ஒருத்தி என்பதை கிறிஸ்தவ சபையின் தொடக்க காலத்திலேயே பிரசங்கித்து வந்தார்.
 
"ஆகையால் கண்காணியானவன் குற்றஞ்சாட்டப்படாதவனும், ஒரே மனைவியை உடைய புருஷனும், ஜாக்கிரதையுள்ளவனும், தெளிந்த புத்தியுள்ளவனும், யோக்கியதையுள்ளவனும், அந்நியரை உபசரிக்கிறவனும், போதகசமர்த்தனுமாய் இருக்கவேண்டும்" 1 தீமோத்தேயு 3:2

"மேலும், உதவிக்காரரானவர்கள் ஒரே மனைவியையுடைய புருஷருமாய், தங்கள் பிள்ளைகளையும் சொந்தக் குடும்பங்களையும் நன்றாய் நடத்துகிறவர்களுமாயிருக்கவேண்டும்" 1 தீமோத்தேயு 3:12

"குற்றஞ்சாட்டப்படாதவனும், ஒரே மனைவியையுடைய புருஷனும், துன்மார்க்கரென்றும் அடங்காதவர்களென்றும் பேரெடுக்காத விசுவாசமுள்ள பிள்ளைகளை உடையவனுமாகிய ஒருவனிருந்தால் அவனையே ஏற்படுத்தலாம்" தீத்து 1:6

"இதினிமித்தம் மனுஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியுடன் இசைந்து, இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள்" எபேசியர் 5 :31
 
டாக்டர் நாயக்:

ஒரு மனிதன் பல பெண்களை திருமணம் செய்ய யூத மதத்தில் அனுமதியுள்ளது, தல்மூத் சட்டத்தின் படி ஆபிரகாமுக்கு 2 மனைவிகள் இருந்தனர், சாலொமொனுக்கோ நுற்றுக்கணக்கான மனைவியர் இருந்தனர்.
 
டாக்டர் நாயக் சாலொமோனின் வரலாறை கூறியுள்ளார். சாலொமோனின் வாழ்க்கை வரலாறு நமக்கு போதிக்கும் பாடம், நம் சொந்த விருப்பத்தின் படி நடந்து, தேவனுடைய திட்டத்தின் படி நடக்கவில்லை என்றால் என்ன நடக்கும் என்பதின் மிகச்சிறந்த உதாரணமாகும்.
 
அவனுக்குப் பிரபுக்கள் குலமான எழுநூறு மனையாட்டிகளும், முந்நூறு மறுமனையாட்டிகளும் இருந்தார்கள், அவனுடைய ஸ்திரீகள் அவன் இருதயத்தை வழுவிப்போகப் பண்ணினார்கள். சாலொமோன் வயதுசென்றபோது, அவனுடைய மனைவிகள் அவன் இருதயத்தை அந்நியதேவர்களைப் பின்பற்றும்படி சாயப்பண்ணினார்கள்; அதினால் அவனுடைய இருதயம் அவன் தகப்பனாகிய தாவீதின் இருதயத்தைப்போல, தன் தேவனாகிய கர்த்தரோடே உத்தமமாயிருக்கவில்லை. (1 இராஜாக்கள் 11:3-4)
 
தனது தெய்வீக திட்டத்திற்கு முரண்பட்ட சமுதாய அமைப்பை தேவன் அங்கீகரிக்கவேண்டுமென்று அவரை கட்டாயப்படுத்தமுடியாது. முகமதுவின் பலதாரமண கொள்கை அமைதியான குடும்ப வாழ்விற்கான அமைப்பாக இருந்ததில்லை. அவரது மனைவிகளுக்கும் மறுமனையாட்டிகளுக்கும் மனக்கசப்புகள், போராட்டங்கள் நிறைந்து காணப்பட்டன. ஒருமுறை தனது வீட்டில் சமாதானத்தை நிறுவச்செய்ய இறைவனிடமிருந்து வெளிப்பாடுகள் அவருக்கு தேவைப்பட்டது. மேலும் விபரங்களுக்கு "தன் பாலியல் காரணங்களுக்காக தான் செய்த சத்தியத்தை உடைத்த நபி - Sex, Oaths, and the Prophet (சூரா 66)" என்ற கட்டுரையை படிக்கவும்.

 
தேவன் ஆதாமை படைத்து அவனது துணையாக ஏவாளையும் படைத்தார், இதுவே மனுக்குலத்திற்கு தேவன் அமைத்த சரியான குடும்ப முறையாகும். ஒரு மனுஷனும் மனுஷியும் இணையும் திருமணம் என்ற அமைப்பை தேவன் மதித்து அதை ஏற்றுக்கொள்ளவும் செய்கிறார். தேவனுடைய இத்திட்டத்தை விட்டு வழிவிலகினால் (அஃதாவது ஒருவன் பல பெண்களை திருமணம் செய்தல், ஒரு பெண் பல ஆண்களை திருமணம் செய்தல், விபச்சாரம், திருமணத்திற்கு முந்தைய தொடர்புகள், ஓரினச்சேர்க்கை.. போன்றவைகளை நாம் செய்தால்) வாழ்க்கையிலும் தேவனின் நியாயத்தீர்ப்பு நாளிலும் எதிர்மறையான விளைகளை நாம் சந்திக்கவேண்டி வரும்.
 
ஒருவன் பல பெண்களை திருமணம் செய்யும் வழக்கம் ரபி கெர்சோம் பென் யெகுதா (கிபி 960 முதல் கிபி 1030) (Rabbi Gershom ben Yehudah) எதிர்ப்பு சட்டம் கொண்டு வரும் வரை நீடித்து இருந்தது. இஸ்லாமிய நாடுகளில் வாழ்ந்து வந்த யூதர்கள் கிபி 1950 வரை இப்பழக்கத்தை கடைப்பிடித்து வந்தனர். இஸ்ரேலில் இருந்த தலைமை மதகுரு ஒரு பெண்ணுக்கு மேல் திருமணம் செய்வதை தடை செய்யும் வரை இப்பழக்கம் நீடித்தது.
 
ரபி கெர்சோம் பென் யெகுதா தேவனுடைய திட்டத்தை ஏற்றுக்கொண்டார் என்பதையே இது காட்டுகிறது
 
3. இந்துக்களே இஸ்லாமியரை விட பலதார மணம் புரிபவராக இருந்துள்ளனர். 1975ல் வெளியிடப்பட்ட" இஸ்லாமில் பெண்களின் நிலை - Committee of The Status of Woman in Islam" என்ற அறிக்கையில் பக்கங்கள் 66,67 ல் இவ்வாறு கூறப்பட்டுள்ளது, அஃதாவது 1951 முதல் 61 வரை நடைபெற்ற பலதார மணங்களின் படி இந்துக்கள் 5.06 விழுக்காடாகவும் இஸ்லாமியர் 4.31 விழுக்காடாகவும் பலதார மணம் புரிபவராக இருந்துவந்துள்ளனர். அதுவும் இந்தியாவில் இஸ்லாமியர் அல்லாதோர் பலதார மணம் புரிவது சட்டவிரோதம் என இருக்கும் போதே இந்த நிலை. ஒருவேளை இந்து ஆண்களுக்கு பலதார மணம் சட்டரீதியாக அனுமதிக்கப்பட்டிருந்தால் இந்துக்களின் பலதாரமண விழுக்காடு எந்த அளவுக்கு அதிகமாக இருந்திருக்கும். 1954 ம் ஆண்டு இந்து திருமண சட்டம் வந்த பின் தான் இந்து ஆண்கள் ஒரு பெண்ணுக்கும் மேல் திருமணம் செய்தால் குற்றம் என்ற நிலை வந்தது. இப்போதும் கூட இந்திய சட்டம் தான் இந்துக்களின் பலதார மணத்தை தடை செய்து வைத்துள்ளதேயன்றி இந்து வேதங்கள் அல்ல.
 
மறுபடியுமாக ஒரு விஷயம் எனக்கு புரியவில்லை, அது என்னவெனில் டாக்டர் நாயக் அவர்கள் தனது மத பழக்கவழக்கங்களை நியாயப்படுத்த ஏன் தான் போலி சமயமாக கருதும் இந்து மதத்தை குறிப்பிடுகிறார்? ஏன் 19ம் நூற்றாண்டு மோர்மொன்கள், பல்வேறு நாடுகளில் இருந்த மதங்கள் பலதார மணம் என்ற பழக்கத்தை கொண்டிருந்தது தெரியவில்லையா? அவைகள் பற்றி ஏன் அவர் குறிப்பிடவில்லை? டாக்டர் நாயக் அவர்கள் "பொய்யான" மார்க்கம் எனக்கருதும் ஒரு மதத்தின் பழக்கங்கள் எப்படி அவர் "சரியான மார்க்கம்" எனக் கருதும் இஸ்லாம் சரியானது என நிருபிக்க உதவும்? வட இந்தியாவிற்கு எனது வாழ் நாளில் இரண்டு முறை சுற்றுப்பயணம் செய்திருக்கிறேன், நான் பார்த்த வரை எந்த ஒரு இந்து மனிதனும் பலதார மணம் புரிந்தவராக இருந்ததில்லை.
 
சரி இப்போது நாம் இஸ்லாமில் ஏன் ஒரு மனிதன் பலதார மணம் புரிய அனுமதியளிக்கப்பட்டுள்ளது என்பதை பற்றி காண்போம்.

4. அளவான பலதார முறையை இஸ்லாம் அனுமதித்துள்ளது. இந்த உலகத்தில் உள்ள மறை நூல்களிலேயே இஸ்லாமிய மறை நூலான குர்ஆனில் தான் ஒருவனுக்கு ஒருத்தி என கூறப்பட்டுள்ளது. இதை சூரா நிஸா என்ற அத்தியாயத்தில் காணலாம், "உங்களுக்குப் பிடித்தமான பெண்களை மணந்து கொள்ளுங்கள் - இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நன்னான்காவோ. ஆனால், நீங்கள் (இவர்களிடையே) நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தால், ஒரு பெண்ணையே (மணந்து கொள்ளுங்கள்)..(குர்ஆன்4:3). குர்ஆன் இறக்கப்படும் முன்னர் வரை ஆண்கள் வகைதொகையற்ற அளவு மணம் புரிபவர்களாக இருந்தனர். ஒருவர் நூற்றுக்கணக்காக கூட திருமணம் செய்து இருந்தனர். இஸ்லாம் மாத்திரமே நான்கு மனைவியர் என்ற அதிகபட்ச அனுமதியளித்துள்ளது. இஸ்லாமில் மாத்திரமே ஒரு மனிதன் அவர்களிடம் நியாயமான முறையில் நடந்துக்கொள்ளும் பட்சத்தில் 2, 3 அல்லது 4 பேரை திருமணம் செய்யலாம் என்ற வரைமுறை உள்ளது. சூரா நிஸாவின் 129 ல் "(முஃமின்களே!) நீங்கள் எவ்வளவுதான் விரும்பினாலும், மனைவியரிடையே நீங்கள் நீதம் செலுத்த சாத்தியமாகாது" (குர்ஆன் 4:129). எனவே பலதார மணம் என்பது சட்டம் அல்ல அது ஒரு விதிவிலக்கு மாத்திரமே. ஒரு இஸ்லாமியர் கண்டிப்பாக 4 பெண்களை திருமணம் செய்ய வேண்டும் என பலர் தவறாக எண்ணுகின்றனர். இஸ்லாமில் செய்ய வேண்டியது, செய்யக்கூடாதது என 5 காரியங்கள் உண்டு.

1) "ஃபார்ஸ் - Farz" அதாவது கட்டாயமாக செய்யவேண்டியவைகள்
2) "மஸ்தஹப் - Mustahab" அதாவது பரிந்துரைக்கப்பட்டது
3) "மஃபா - Mubah" அதாவது அனுமதியளிக்கப்பட்டது
4) "மாக்ரூஹ் - Makruh" அதாவது பரிந்துரைக்கப்படாதது
5) "ஹராம் - Haram" அதாவது கண்டிப்பாக தடை செய்யப்பட்டது

பலதார மணம் இதில் நடுவில் வரும் அனுமதிக்கப்பட்ட பிரிவில் வருபவர். இதை 2, 3 அல்லது 4 மனைவிகள் உள்ள இஸ்லாமியர் ஒரு மனைவி உள்ள இஸ்லாமியரை விட சிறந்தவர் என நாம் எடுத்துக்கொள்ளக்கூடாது.
 
முகமது ஏன் 4 மனைவியருக்கு மேல் வைத்திருக்க அனுமதி பெற்றிருந்தார்?
 
5. பெண்களின் சராசரி ஆயுட்காலம் ஆண்களின் ஆயுட்காலத்தை விட அதிகமாகும். இயற்கையாகவே ஆண்களும் பெண்களும் ஒரே விகிதாச்சாரப்படியே பிறக்கின்றனர்.

சிறுவயதில் இருந்தே பெண் பிள்ளைகளுக்கு ஆண் பிள்ளைகளை விட அதிக நோய் எதிர்ப்பு சக்தி உண்டு. அதனாலேயே சிறு வயதில் ஆண் பிள்ளைகள் அதிகம் பேர் நோய்வாய்ப்பட்டு இறக்கின்றனர். போர்க்காலங்களில் ஆண்களே பெண்களைவிட அதிகம் கொல்லப்படுகின்றனர். பல ஆண்கள் விபத்துகளிலும் நோய்களிலும் பெண்களைவிட அதிகமாக இறக்கின்றனர். பெண்களின் சராசரி ஆயுட்காலம் ஆண்களை விட அதிகமாகும். எந்த ஒரு காலகட்டத்திலும் துணையை இழந்து வாழுபவர்களில் ஆண்களை விட பெண்களே அதிகமாக இருப்பர்.
 
இவ்வாறு இருப்பினும் பால் விகிதாச்சாரம் உலக அளவில் 1.01 ஆண்கள்/ பெண்கள் என்றே உள்ளது, மூலம் (2000 est.).

இதை பகுத்து பார்த்தால்

 
பிறப்பின் போது : 1.05 ஆண்கள்/ பெண்கள்

 
15 வயதுக்கு கீழ் : 1.05 ஆண்கள்/ பெண்கள்

 
15 முதல் 64 வயது வரை : 1.02 ஆண்கள்/பெண்கள்

65 வயதுக்கு மேல் : 0.78 ஆண்கள்/ பெண்கள்

 
எனவே பலதார மணம் என்பது இளம் ஆண்கள் வயதான பெண்களை திருமணம் செய்ய சம்மதித்தாலே சாத்தியமாகும்.
 
6. இந்தியாவில் பெண்களைவிட ஆண்களே அதிகமாக இருக்கின்றனர்.

பெண்களைவிட ஆண்கள் அதிகம் இருக்கும் நாடுகளில் இந்தியாவும் அதை சுற்றியுள்ள நாடுகளும் அடங்கும். இதற்கு காரணம் இந்தியாவில் அதிகம் காணப்படும் பெண் சிசுக்கொலை எனும் பழக்கமாகும். இந்தியாவில் 10 லட்சத்திற்கும் அதிகமான பெண் சிசுக்கள் கருவிலேயே அழிக்கப்படுகின்றனர். இத்தீய பழக்கம் ஒழிக்கப்பட்டால் இந்தியாவிலும் ஆண்களை விட பெண்களே அதிகமாக இருப்பார்கள்
 
சரி இப்போது புள்ளிவிவரத்திற்கு வருவோம்.

 
2000 ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி இந்தியாவில் 1.07 ஆண்கள்/பெண்கள் என்ற விகிதாச்சாரம் உள்ளது.

 
கருக்கலைப்பு, பெண் சிசுக்கொலை மிகவும் தீய பழக்கவழக்கமாகும், இந்திய சமுதாயம் அதற்காக கண்டிக்கப்பட வேண்டியது தான், அமெரிக்காவும் அதன் கருக்கலைப்பு பழக்கத்திற்காக கண்டிக்கப்படவேண்டியதே. ஆனால் இந்தியாவில் உள்ள ஆண்/பெண் விகிதாச்சாரம் மற்ற இஸ்லாமிய நாடுகளை விட குறைவாகவே உள்ளது.

 
2000 ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி,

 
பஹ்ரைன் 1.03 ஆண்கள்/பெண்கள்

 
ட்ஜிபௌடி 1.07 ஆண்கள்/பெண்கள்

 
ஜோர்டான் 1.1 ஆண்கள்/பெண்கள்

 
குவைத் 1.5 ஆண்கள்/பெண்கள்

 
ஓமன் 1.31 ஆண்கள்/பெண்கள்

 
கத்தார் 1.93 ஆண்கள்/பெண்கள்

 
சவுதி அரேபியா 1.24 ஆண்கள்/பெண்கள்

 
ஐக்கிய எமிரேட் 1.51 ஆண்கள்/பெண்கள்

 
டாக்டர் நாயக் அவர்களே இஸ்லாமிய நாடுகளிலும் ஏன் இதே நிலை உள்ளது.
 
7. உலகத்திலேயே ஆண்களை விட பெண்களே அதிகம் உள்ளனர்.
 
உலக பெண்களின் எண்ணிக்கை ஆண்களை விட குறைவே. உலகத்தில் 3,059,307,647 ஆண்களும் 3,019,466,887 பெண்களும் உள்ளனர் (மூலம்). அதாவது உலகத்தில் பெண்களை விட 40 மில்லியன் ஆண்கள் அதிகமாக உள்ளனர்.
 
அமெரிக்க ஐக்கிய நாடுகளில் ஆண்களை விட 7.8 மில்லியன் பெண்கள் அதிகமாக‌ உள்ளனர்.
 
இல்லை, அமெரிக்காவில் 134,774,894 ஆண்களும் 140,787,779 பெண்களும் உள்ளனர், அஃதாவது 6 மில்லியன் பெண்கள் அதிகம். ஆனாலும் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் இதில் 5.9 மில்லியன் பெண்கள் 65 அதற்கு மேற்பட்ட வயது உள்ளவர்களாவார்கள். (மூலம்)
 
நியூ யார்க்கில் மட்டும் ஆண்களை விட 1 மில்லியன் பெண்கள் அதிகமாக உள்ளனர். நியூ யார்ர்கின் ஜனத்தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் ஓரினச்சேர்க்கை பழக்கம் (gays i.e sodomites) உள்ளவர்கள்.
 
நியூ யார்க் நகரத்தில் 3,437,687 ஆண்கள் மற்றும் 3,884,887 பெண்களும் உள்ளனர். அஃதாவது 447,000 பேர் பெண்கள் அதிகம் ( மூலம்). ஆனாலும் இதில் அதிக பட்சம் 65 வயதிற்கு மேற்பட்ட பெண்களே உள்ளனர். நியூ யார்க் நகரத்தில் மூன்றில் ஒரு பங்கினர் ஓரினச்சேர்க்கை பழக்கமுடையவர்கள் என டாக்டர் நாயக் எப்படி முடிவு கட்டினார் என எனக்கு புரியவில்லை. 3,437,687 ஆண்கள் நியூயார்க்கில் உள்ளனர், இதில் 1,113,888 ஆண்களில் (32% ) திருமணமே ஆகாதவர்கள், மற்ற்வர்கள் திருமணமானோர்,விவாகரத்து பெற்றவர்கள், மனைவியை இழந்தோர். டாக்டர் நாயக்கின் கணக்கை அடைய வேண்டுமானால் நியூயார்க்கில் திருமணமாகாத ஆண்கள் அனைவருமே ஓரினச்சேர்க்கை பழக்கம் உடையவரே என்று சொல்லவேண்டும்d, இந்த கணக்கில் ஏனைய திருமணமானோர், விவாகரத்து பெற்றவர்கள், மனைவியை இழந்தோரும் அடங்குவர். டாக்டர் நாயக் இதை யோசித்து இருக்க மாட்டார், அதாவது பெண்களில் கூட ஓரினச்செர்க்கை உள்ளவர்கள் இருக்கிறார்கள். நியூயார்க்கில் 1,080,026 திருமணமாகாத பெண்கள் உள்ளனர். இதில் சிலர் ஓரினச்சேர்க்கை பழக்கமுடியவர்களாகவும் இருக்கலாம்!
 
அமெரிக்காவில் மட்டும் 25 மில்லியன் ஆண்களுக்கும் மேல் ஓரினச்சேர்க்கை பழக்கமுடையவர்களாக இருக்கின்றனர். இதன் பொருள் இந்த ஆண்கள் பெண்களை திருமணம் செய்துக்கொள்வதில்லை.
 
இந்த புள்ளி விவரத்திற்கு என்ன ஆதாரம்? ஓரினச்சேர்க்கை ஆண்களை பற்றி பேசும் டாக்டர் நாயக் ஓரினச்சேர்க்கை பெண்களை பற்றி கவனிக்க மறுக்கிறார்.
 
பிரிட்டனில் மட்டும் ஆண்களை விட 4 மில்லியன் பெண்கள் அதிகமாக உள்ளனர்.
 
பிரிட்டனில் 29,303,077 ஆண்களும் 30,208,387 பெண்களும் உள்ளனர், அதாவது 1.6 மில்லியன் பெண்கள் ஆண்களை விட அதிகமாக உள்ளனர், இவர்கள் 65 வயதிற்கும் மேற்பட்டவர்கள்.
 
ஜெர்மனியிலும் ஆண்களை விட 5 மில்லியன் பெண்கள் அதிகமாக உள்ளனர்.
 
ஜெர்மனியில் 40,451,865 ஆண்களும் 42,345,543 பெண்களும் உள்ளனர். அஃதாவது 1,893,678 பெண்கள் ஆண்களை விட அதிகமாக உள்ளனர். இருப்பினும் ஆண்களைவிட அதிகமாக உள்ள 3 மில்லியன் பெண்கள் 65 வயதிற்கு மேற்பட்டவர்களாக உள்ளனர்! (மூலம்).
 
ரஷ்யாவில் ஆண்களை விட 9 மில்லியன் பெண்கள் அதிகமாக‌ உள்ளனர். உலகம் முழுவதிலும் எவ்வளவு பெண்கள் ஆண்களை விட அதிகமாக உள்ளனர் என்பதை இறைவன் அறிவார்.
 
இதிலும் பெரும்பாலானோர் 65 வயதிற்கு மேற்பட்டவரே.
 
8. ஆகவே ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரே ஒரு மனைவி என்ற சித்தாந்தம் நடைமுறையில் ஒத்துவராத ஒன்றாகும்.

ஒவ்வொரு மனிதனும் ஒரேயொரு மனைவியை திருமணம் செய்கிறார்கள் என வைத்துக்கொள்வோம் அப்படிப்பட்ட சூழ் நிலையில் அமெரிக்காவில் மட்டும் 30 மில்லியன் பெண்களுக்கு கணவர்கள் கிடைக்கமாட்டார்கள் (அமெரிக்காவில் 25 மில்லியன் ஓரினச்சேர்க்கை பழக்கமுடைய ஆண்கள் இருப்பதாக வைத்துக்கொண்டால்). அதேபோல் பிரிட்டனில் 4 மில்லியன் பெண்களுக்கும், ஜெர்மனியில் 5 மில்லியன் பெண்களும் ரஷ்யாவில் 9 மில்லியன் பெண்களுக்கும் கணவர்கள் கிடைக்கமாட்டார்கள்.
 
அமெரிக்காவில் 28,200,083 ஆண்களும் 23,434,118 பெண்களும் திருமணமே ஆகாதவர்களாக உள்ளனர்! (மூலம்). இந்த வேறுபாட்டைக்கொண்டு எப்படி பலதார மணத்தை அங்கீகரிக்க முடியும்? டாக்டர் நாயக் அவர்களின் இந்த ஓரினச் சேர்க்கை பற்றிய அவரது புள்ளிவிவரத்திற்கு ஆதாரத்தை கொடுக்கும் படி அவரிடம் கேட்டுக்கொள்கிறேன். ஓரினச்சேர்க்கை பழக்கமுடையவர்களை குறித்து டாக்டர் நாயக் அவர்களின் புள்ளிவிபரம் உண்மையாக இருக்கும் பட்சத்தில் அமெரிக்காவில் வெறும் 3 மில்லியன் பேரே ஓரினச்சேர்க்கை பழக்கம் இல்லாத வாலிபர்களாக இருப்பார்கள்.
 
ஒருவேளை உங்களுடைய அல்லது என்னுடைய தங்கை அமெரிக்காவில் வசிக்கிறார் என வைத்துக்கொள்வோம், அவருக்கு திருமணம் ஆகியிராத பட்சத்தில் அவர் ஏற்கனவே திருமணமான ஆணைத்தான் திருமணம் செய்யமுடியும் அல்லது பொதுவான உடமையாக (Public property) இருக்க வேண்டும். இஸ்லாமியர் அல்லாதோர் பலரிடம் இதை குறித்து கேட்டபோது நூற்றுக்கணக்கானோர் முதலாவது வழிமுறையே சிறந்தது என ஒத்துக்கொண்டனர். சில புத்திசாலிகள் மாத்திரம் தங்கள் தங்கையர் திருமணம் செய்யாமல் கன்னியாகவே வாழ அனுமதிப்போம் என்றனர்.
 
என்னது பொது உடைமையா??!! (Public property!??!), டாக்டர் நாயக் அவர்களின் தங்கையோ அல்லது வேறு எவரின் தங்கையோ யாருக்கும் பொது உடமையாக இருப்பார்கள் என எனக்கு நம்பிக்கையில்லை. வேதம் நமக்கு இப்படி கூறுகிறது.
 
"மனைவியானவள் தன் சுயசரீரத்திற்கு அதிகாரியல்ல, புருஷனே அதற்கு அதிகாரி; அப்படியே புருஷனும்தன் சுயசரீரத்திற்கு அதிகாரியல்ல மனைவியே அதற்கு அதிகாரி 1 கொரி 7:4
 
உயிரியல் பூர்வமாக எந்த ஒரு மனிதனோ மனுஷியோ வாழ் நாள் முழுவதும் துறவற வாழ்க்கையை மேற்கொள்ள முடியாது, ஒருவேளை சில விதிவிலக்குகள் அதுவும் பத்தாயிரத்தில் ஒன்று என இருக்கலாம். பெரும்பாலான மக்கள் திருமணம் செய்கின்றனர் அல்லது முறைகேடான பால் உறவு பழக்கங்களை கொண்டுள்ளனர். மனிதனுடைய உடலில் பால் உணர்வை தூண்டும் ஹார்மோன்கள் சுரப்பிகள் வாயிலாக கலக்கின்றன. அதனால் தான் இஸ்லாமில் துறவற பழக்கமுறை தடைசெய்யப்பட்டுள்ளது.
 
மனிதனின் பால் உறவு வேட்கையை காரணம் காட்டி, பல தாரமணத்தையோ அல்லது தவறான பால் உறவின் தீய செயல்கள் செய்வதையோ நாம் நியாயப்படுத்த முடியாது. தேவன் நமக்கு பால் உறவு வேட்கையையும் கொடுத்திருக்கிறார் அதேபோல் இந்த பால் உறவு வேட்கையை தணித்துக்கொள்ள திருமணம் என்ற அருமையான எடுத்துக்காட்டை உருவாக்கியுள்ளார். எப்போதெல்லாம் நாம் தேவனுடைய இத்திட்டத்தை விட்டு வழிவிலகி பலதாரமணம் என்ற வகையிலோ அல்லது வேறு தவறான இச்சைகளை தீர்த்துக்கொள்ள முயற்சி செய்தாலோ நாம் அதன் பலனை அனுபவிக்கவேண்டும். இதைத்தான் வேதம் இவ்வாறு சொல்கிறது.
 
விவாகமில்லாதவர்களையும், கைம்பெண்களையும் குறித்து நான் சொல்லுகிறது என்னவென்றால், அவர்கள் என்னைப்போல இருந்துவிட்டால் அவர்களுக்கு நலமாயிருக்கும். ஆகிலும் அவர்கள் விரத்தராயிருக்கக் கூடாதிருந்தால் விவாகம்பண்ணக்கடவர்கள்; வேகிறதைப்பார்க்கிலும் விவாகம் பண்ணுகிறது நலம். விவாகம்பண்ணிக்கொண்டவர்களுக்கு நானல்ல, கர்த்தரே கட்டளையிடுகிறதாவது: மனைவியானவள் தன் புருஷனை விட்டு பிரிந்துபோகக்கூடாது. பிரிந்துபோனால் அவன் விவாகமில்லாதிருக்கக்கடவள், அல்லது புருஷனோடே ஒப்புரவாகக்கடவள்; புருஷனும் தன் மனைவியை தள்ளிவிடக்கூடாது. (1 கொரி 7:8-11)
 
மேற்கத்திய சமுதாயத்தில் ஒரு மனிதன் திருமணத்திற்கு வெளியே ஒரு பெண்ணோடு உறவு வைத்துக்கொள்வதோ அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்களை வைத்துக்கொள்வதோ சகஜமான ஒன்று, இதனால் பெண் பாதுகாப்பில்லாத மற்றும் அவமானகரமான வாழ்க்கை வாழ நேரிடுகிறது. அதே மேற்கத்திய சமுதாயம் ஒரு மனிதன் ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்களை திருமணம் செய்துகொள்ளவோ அல்லது ஒரு பாதுகாப்பான வாழ்க்கை வாழ அனுமதியளிப்பதில்லை. இதனால் கணவர் கிடைக்காத பெண் ஒன்று திருமணமான் ஆணை திருமணம் செய்யவேண்டும் அல்லது பொது உடமையாக வேண்டும். இஸ்லாம் மாத்திரமே முதலாவது வழிமுறையை ஆதரித்து இரண்டாவது வழிமுறையை எதிர்த்து தடை செய்கிறது. பலதார மணத்தை ஆதரிக்க பல காரணங்கள் இருப்பினும் பெண்களின் கற்பையும் ஒழுக்கத்தையும் பாதுக்காகவே என்பதை எடுத்துக்கொள்ளவேண்டும்.
 
ஆண்கள் திருமணத்திற்கு வெளியே உறவு வைத்துக்கொள்வது சகஜமான ஒன்று என்பதை டாக்டர் நாயக் எப்படி, எந்த ஆதாரங்களின் அடிப்படையில் கூறுகிறார்? பெண்களும் திருமணத்திற்கு வெளியே உறவு வைத்துள்ளார்கள் என்பதை டாக்டர் நாயக் புறந்தள்ளிவிடுகிறார். ஒரு மனிதன் தானாகவும் திருமணத்திற்கு வெளியே உறவு வைத்துக்கொள்ளமுடியாது. பல மனைவிகள் வைத்துள்ள மனிதன் ஒருவன் முறைதவறிய உறவு வைத்துக்கொள்ள வாய்ப்பு உள்ளது என்பதையும் டாக்டர் நாயக் மறந்துவிடுகிறார். மறுபடியும், பெண்கள் "பொது உடமைகள்" என்ற ஏற்றுக்கொள்ளமுடியாத விவரத்தை நாயக் சொல்லியுள்ளார்.

 
குர்ஆனிலும் பெண்கள் எவ்வாறு "மதிப்பாக வைக்கப்படுகின்றனர்" என்பதை கீழ்க்கண்ட வாசகத்தில் காணலாம்.
 
உங்கள் மனைவியர் உங்கள் விளைநிலங்கள். ஆவார்கள்; எனவே உங்கள் விருப்பப்படி உங்கள் விளை நிலங்களுக்குச் செல்லுங்கள்;. உங்கள் ஆத்மாக்களுக்காக முற்கூட்டியே (நற்கருமங்களின் பலனை) அனுப்புங்கள்;. அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; (மறுமையில்) அவனைச் சந்திக்க வேண்டும் என்பதை உறுதியாக அறிந்து கொள்ளுங்கள். நம்பிக்கை கொண்டவர்களுக்கு நற்செய்தி கூறுவீராக!  (2:223)
 
Polyandry

கேள்வி: ஒரு மனிதன் ஒரு மனைவிக்கும் மேல் வைத்துக்கொள்ள அனுமதி இருக்கும் போது ஏன் ஒரு பெண் ஒன்றுக்கும் மேற்பட்ட கணவர்களை வைத்துக்கொள்ள முடியாது?

பதில்: முஸ்லீம்கள் உட்பட பலர் இக்கேள்வியை கேட்கின்றனர். முதலில் ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன் அதாவது இஸ்லாமின் அஸ்திபாரம் நீதி, நியாயம் என்ற கொள்கைகளின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது, அல்லாஹ் ஆண்களையும் பெண்களையும் சரிசமமாகவே படைத்துள்ளார், ஆனால் வெவ்வேறு தகுதிகளின் அடிப்படையிலேயே, ஆண்களும் பெண்களும் உடல் மற்றும் மனோரீதியாகவும் வெவ்வேறு வகையினர், அவர்களது கடமைகளும் வெவ்வேறானதே.
 
மேற்கண்ட குர்‍ஆன் வசனமானது, இக்கேள்விக்கான பதிலை தருகிறது: குர்‍ஆனின் படி பெண்கள் ஆண்களை திருப்தி செய்யவே படைக்கப்பட்டுள்ளனர்.
 
ஒரு பெண் ஒன்றுக்கும் மேற்பட்ட ஆண்களை திருமணம் செய்ய இஸ்லாம் ஏன் தடை செய்துள்ளது என்பதை காண்போம்.

1. ஒரு மனிதன் ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்களை திருமணம் செய்தால் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளின் பெற்றோரை எளிதில் அடையாளம் காணப்படும். ஆனால் பல ஆண்களை திருமணம் செய்தால் அவர்களுக்கு பிறக்கும் குழந்தை தாயை வைத்தே அடையாளம் காணப்படுமேயன்றி தந்தையை வைத்து அல்ல. இஸ்லாம் பெற்றோர் இருவருக்குமே அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. உளவியல் நிபுணரும் நமக்கு கூறுவது என்னவெனில் பெற்றோரை அறியாத குழந்தைகள் அதிலும் குறிப்பாக தகப்பனை அடையாளம் தெரியாத குழந்தைகள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாவார்கள். அவர்களது குழந்தைப்பருவம் சந்தோஷமாக இருக்காது. இதனாலேயே விலை மாதரின் பிள்ளைகள் சந்தோஷமாக இருப்பதில்லை. இப்படி திருமண உறவுக்கு வெளியே பிறக்கும் குழந்தைகள் பள்ளிகளில் சேர்க்கப்படும் போது ஒன்றுக்கும் மேற்பட்ட ஆண்களை தகப்பன் என சொல்ல நேரிடும். சமீப காலங்களில் ஒரு குழந்தையின் தாய் தகப்பனை மரபணு சோதனையின் மூலம் கண்டுபிடிக்க இயலும். இந்த ஒரு வாதம் கடந்த காலத்திற்கு ஏற்றதாக இருக்கும்.
 
சரி அப்போது ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவிகளை வைத்துள்ளவர் வீடுகளில் பிறக்கும் பிள்ளைகளுக்கு மன உளைச்சல் இல்லாமல் இருக்குமா? முக்கியமாக வாலிப பெண் பிள்ளைகளுக்கு?
 
2. இயற்கையாகவே பெண்ணைவிட ஆண் பலதார மண எண்ணம் உள்ளவராக இருக்கின்றனர்.
 
மனிதன் இயல்பாகவே பாவ சுபாவ உணர்ச்சிகள் உள்ளவன். ஆனால் அதற்காக நம் பாவமான சுபாவங்களை நியாயப்படுத்த‌ பலதார மனம் போன்ற பாவமான அமைப்பை நாம் உருவாக்க வேண்டுமா? தேவன் ஒரு பாவத்தை மற்றொரு பாவத்தை விட லேசானது என ஏற்றுக்கொள்வாரா?
 
3. உயிரியல் ரீதியாக பல மனைவிகளை உடையவன் தனது கடமைகளை தவறாமல் செய்யமுடியும், ஆனால் பல கணவரை உடைய பெண்ணுக்கு மனைவி என்ற ஸ்தானத்தில் இருந்து தனது கடமைகளை செய்ய முடியாது.
 
டாக்டர் நாயக் இந்த விஷயத்தை மேலும் தெளிவு படுத்தியிருக்கலாம், உண்மையாகவே, இதில் எந்த தெளிவும் இல்லை.
 
4. ஒரு பெண் பல ஆண்களை திருமணம் செய்திருந்தால் பலரோடு பால் உறவு கொள்ள நேரிடும். அப்போது பால்வினை நோய்கள் அவர்கள் மூலமாக அவர்களது கணவர்களுக்கு பரவ நேரிடும். அவர்களது கணவர்கள் வேறு தொடர்புகள் வைத்திருக்குக்காதபோதே இந்த நிலை தான். ஆனால் ஒரு மனிதன் பல மனைவிகள் வைத்திருக்கும் போது நோய் பரவும் வாய்ப்புகள் குறைவே. இது போன்ற காரணங்கள் நாம் எளிதில் அறிந்து கொள்ளக்கூடியவையே. இது போன்ற பல காரணங்களுக்காகவே அல்லாஹ் தனது திவ்ய ஞானத்தால் ஒரு பெண் பல ஆண்களை திருமணம் செய்யும் வழக்கத்தை தடைசெய்திருக்கிறார்.
 
இவ்வாதம் ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல. ஒரு வேளை இவ்வித அமைப்பில் உள்ள மக்கள் வேறு எந்த தொடர்புகளும் இல்லாமல் இருந்தாலும் எங்ஙனம் பால் ரீதியான நோய்கள் பரவுகின்றன?

 
ஆக மொத்தத்தில் ஒரு தார மணம் என்ற வழக்கமே மனுக்குலத்திற்கு கடவுள் காட்டியுள்ள வழியாகும். இதிலிருந்து நாம் மாறுபட்டால் பாடுபடவேண்டியதுதான். மற்ற மத வழக்கங்களில் உள்ள பலதார மணத்தை சுட்டிக்காட்டி இஸ்லாமில் உள்ள பலதார வழக்கத்தை நாம் நியாயப்படுத்த முடியாது. விபச்சாரம், ஓரினச்சேர்க்கை, இச்சை போன்ற பாவங்களை மேற்கொள்ள ஒரு ஆண் பல பெண்களை திருமணம் செய்துகொள்ளலாம் என்ற வாதம் தேவனுடைய பரிசுத்தத்தையும் ஞானத்தையும் கேள்விக்குரியதாக ஆக்கிவிடும்.


ஆங்கில மூலம்: Response to Zakir Naik - Polygamy

ஜாகிர் நாயக் அவர்களுக்கு அளித்த இதர பதில்கள்




 

 

 
 

இஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்

முன் பக்கம் செல்ல

HOME PAGE

தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்

1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1

2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2

3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3

4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4

பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்

1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1

2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2

பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்

1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்

2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்