இஸ்லாம் அமைதி மார்கமா? இஸ்லாம் இனிய மார்கமா? இஸ்லாம் உண்மையான மார்கமா?

ஆன்சரிங் இஸ்லாம்

பல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்

சத்தியவான் தளம் செல்ல

Thursday, November 8, 2007

இஸ்லாம்; Dr. Zakir Naik உடன் Pope Benedict XVI ஏன் விவாதிக்கக்கூடாது? ஏன்?







கடந்த வாரம் நம் தள நண்பரிடமிருந்து எனக்கு ஒரு மெயில் வந்தது. அதில் தனக்கு மெயிலில் வந்த ஒரு செய்தியைப் பற்றி என் கருத்தை கேட்டு இருந்தார்.

அவர் தெரிவித்த செய்தி இது தான்:




"டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள் தற்போதைய கத்தோலிக்க போப் பெனெடிக்ட் அவர்களை தன்னுடன் இஸ்லாம் பற்றியும், முகமது பற்றியும் விவாதம் செய்யும் படி அழைப்பு விடுத்து இருந்தார். ஆனால், இதுவரை போப் இந்த அழைப்பிற்கு பதில் தரவில்லை. "


இந்த அழைப்பை போப் ஏற்றுக்கொண்டு டாக்டர் ஜாகிர் நாயக்கிடம் விவாதித்து இருக்கலாம் இல்லையா ?

என்றும், இதைப் பற்றி என் கருத்து என்ன என்று கேட்டுயிருந்தார்.

தற்போதைய போப் பெனெடிக்ட் ஒரு கூட்டத்தில் பேசும் போது, முகமது குறித்து ஒரு கருத்தை தெரிவித்து இருந்தார். இதன் விளைவாக, இஸ்லாமியர்கள் அவர்

சொன்ன கருத்தை திரும்பி பெறவேண்டும் என்று தங்கள் எதிர்ப்பை தெரிவித்துக்கொண்டனர். இதனால், ஒரு கன்னியாஸ்திரியும் கொலை செய்யப்பட்டார்கள்.

உடனே, போப் தன் கருத்தை திரும்பி பெற்றுக்கொண்டார்.

என் கருத்தை சிலருக்கு பிரயோஜனமாக இருக்கும் என்று இங்கு அதை தருகிறேன். இந்த வாய்ப்பை பயன்படுத்து திரு ஜாகிர் நாயக் பற்றி சில விவரங்களை தெரிந்துக்கொள்வோம்.

ஏன் தற்போதைய கத்தோலிக்க போப் பெனெடிக்ட் டாக்டர் ஜாகிர் நாயக்கிடம் விவாதம் செய்யக்கூடாது?

இக்கேள்விக்கு என் பதிலை கீழ் கண்டவாறு பிரித்துச் சொல்கிறேன்.

1. அறிமுகம்: டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள்.
2. டாக்டர் ஜாகிர் நாயக்கின் அவர்களின் விவாதத் திறமை.
3. ஏன் ஜாகிர் நயாக் அவர்கள் எழுத்து வடிவில் விவாதத்தில் இறங்குவதில்லை?
4. இஸ்லாமியர்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதம்:
5. யார் பொறுப்பு வகிப்பது : ஜாகிர் நாயக் அல்லது போப் பெனெடிக்ட்?
6. முடிவுரை - என் கருத்து:



1. அறிமுகம்: டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள்:

டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள் ஒரு மருத்துவ(MBBS) படிப்பை முடித்தவர். மும்பையில் Islamic Research Foundation "இஸ்லாமிக் ரீஸர்ச் ஃப்வுண்டேஷன்" என்ற இயக்கத்தின் தலைவராக இருக்கிறார்.
இது வரை கணக்கிலடங்கா இஸ்லாமிய சொற்பொழிவுகள் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் அவர் ஆற்றியுள்ளார்.
(http://www.irf.net/irf/drzakirnaik/index.htm) உலக இஸ்லாமியர்களின் கண்ணியத்திற்கும், மதிப்பிற்கும் அவர் பாத்திரமாக உள்ளார். Peace TV (பீஸ் டீவி) என்ற ஒரு சானலையும் அவர் நடத்திவருகிறார் என்று கேள்விப்பட்டேன்.

2. டாக்டர் ஜாகிர் நாயக்கின் அவர்களின் விவாதத் திறமை:

டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள் "ஒரு நடமாடும் குர்-ஆன்" என்றுச் சொன்னால் அது மிகையாகாது. அவருடைய சொற்பொழிவுகளில் ஒரு முக்கிய அம்சமே "குர்-ஆன் வசனங்களை" கடகடவென்று வசன எண்ணோடு அப்படியே சொல்வது தான். அதுவும் அரபியில் முதலில் சொல்லி, பிறகு அதை ஆங்கிலத்தில் சொல்லுவார்.

கேட்கும் மக்கள் அப்படியே பூரித்துப்போவார்கள். இப்படிப் பட்ட திறமையுள்ளவர் டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள்.

இவருடைய விவாத சொற்பொழிவுகளில் முக்கிய இடம் வகிப்பது, "இதர மத தலைவர்களுடன், பெரியவர்களுடன்" விவாதிப்பது தான்.

[ தன்னைப் போல பிறரையும் நேசிக்கவேண்டும் என்பது இயேசுவின் கட்டளை. "பிறர்" என்பது கிறிஸ்தவராக இருக்கவேண்டிய அவசியமில்லை, அவர் திரு ஜாகிர் நாயக் அவர்கள் போல் "பைபிளை எதிர்த்து அதை விமர்சித்து" பல தவறான கருத்துக்களை பரப்புபவராக கூட இருக்கலாம். இவருடைய இரட்சிப்பிற்காக ஜெபியுங்கள். யாருக்குத் தெரியும், இவரும் மனந்திரும்பி ஒரு பவுலைப் போல், இயேசுவின் ஊழியராக கூட ஆகலாம்.]

3. ஏன் ஜாகிர் நயாக் அவர்கள் எழுத்து வடிவில் விவாதத்தில் இறங்குவதில்லை?

டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களுடைய கருத்துக்களில் உள்ள பிழைகளை, மற்றும் பைபிளுக்கு எதிராக அவர் வைக்கும் கருத்துக்கள், பைபிளில் பிழைகள் உள்ளது என்று அவர் சொல்லும் குற்றச்சாட்டுகளுக்கு, பதிலை கிறிஸ்தவ தளங்கள் ஏற்கனவே மறுப்பை, கட்டுரைகள் வடிவில் தெரிவித்துவிட்டன. அந்த மறுப்பை அவர்கள் தங்கள் தளங்களிலும் பிரசுரித்துள்ளனர்.

ஆனால், டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள் தன்னுடைய தளத்தில், அந்த மறுப்புக் கட்டுரைகளுக்கு எழுத்து வடிவில் பதிலைத் தருவதில்லை. தன்னுடைய தளத்தில் தான் ஆரம்ப முதல் சொல்லிவரும் சில கேள்விகள், அதற்கு பதில்கள் என்று கட்டுரைகள் கொடுத்துள்ளாரே தவிர, தன் கருத்துக்களை மறுக்கும் தளங்களுக்கு மறுப்பை அல்லது பதிலை கொடுக்கவில்லை. (நான் தேடிப்பார்த்ததில் கிடைக்கவில்லை, தெரிந்தவர்கள் தெரிவித்தால் நல்லது - நாமும் சேர்ந்து எழுதலாமே என்று கேட்கிறேன்.)

இதற்கு பதிலாக, தன்னிடம் நேரடியாக வாதம் செய்ய, தன் கருத்துக்களை மறுக்கும் நபர்களுக்கும், குர்-ஆனை விமர்சிக்கும் நபர்களுக்கும் அவர் அழைப்பு விடுத்துக் கொண்டு இருப்பார்.

1. பைபிள் சம்மந்தமான ஜாகிர் நாயக் அவர்கள் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பை இந்த கிறிஸ்தவ தளத்தில் காணலாம்.

http://www.answering-islam.org/Responses/Naik/index.htm


2. திரு ஜாகிர் நாயக் அவர்களுக்கு மறுப்பை இங்கும் காணலாம்:

http://www.faithfreedom.org/debates/NaikCampbellintro.htm
http://www.wikiislam.com/wiki/Rebuttals_to_Zakir_Naik
http://www.islam-watch.org/RebuttingIslam/index.html

3. A critical review on the debate between "William Campell Vs Dr. Zakir Naik" by Ali Sina

சவுதி அரசரின் சம்பளத்தில் "பைபிள் குர்-ஆன் விஞ்ஞானத்தின் வெளிச்சத்தில்(The Qur'an and the Bible in the Light of Science )" என்று ஒரு புத்தகத்தை "புகைலி" என்றவர் எழுதினார். குர்-ஆனின் வசனங்கள் தற்கால விஞ்ஞானத்திற்கு ஒத்துப் போகிறது என்று கூறினார்.

இந்த புத்தகத்தில் உள்ள தவறான ஆராய்ச்சியை விமர்சித்து வில்லியம் காம்பெல் என்ற கிறிஸ்தவர் ஒரு புத்தகத்தை எழுதினார்.

திரு ஜாகிர் நாயக்கிற்கும், வில்லியம் காம்பெல்லுக்கும் இடைய ஒரு விவாதம் 2001 ல் நடந்தது. அந்த விவாததில் ஜாகிர் நாயக் முன் வைத்த கருத்துக்களில் உள்ள பிழைகளை அலி சீனா இங்கு ஆதாரத்தோடு விவரித்துள்ளார். இங்கு அவர்கள் பேசிய வீடியோவும் கிடைக்கும்.

http://www.faithfreedom.org/debates/NaikCampbellintro.htm


4. ஜாகிர் நாயக் அவர்கள் சொல்வது இஸ்லாமிற்கு(சுன்னா) விரோதமாக இருக்கிறது என்று ஒரு இஸ்லாமிய தளம் அவரின் பிழையை சுட்டிக்காட்டும் தொடுப்பு.

http://www.sunniforum.com/forum/showthread.php?t=7220

(விவரம் சுருக்கமாக - சொர்க்கத்தில் அல்லா நல்ல அழகிய பெரிய கண்களுடைய "ஹூர்" என்ற பெண்களை ஆண்களுக்கு தருவதாக வாக்குத்தத்தம் செய்துள்ளார், மக்களிடம் நல்ல பெயர் எடுப்பதற்காக ஜாகிர் நாயக் அவர்கள், இந்த "ஹூர்" என்பவர்கள் "பெண்களுமல்ல, ஆண்களுமல்ல - Al-Hur Has No Gender! என்று சொல்லியுள்ளார் தன் பிரசங்களில், இதை இஸ்லாமியர்கள் ஏற்றுக்கொள்வதில்லை, அவர்கள் பெண்கள் தான் என்றும், அவர் சொல்வது தவறு என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்)

4. எழுத்துவடியில் விவாதிக்க அலி சீனாவின் அழைப்பை, ஜாகிர் நாயக் மறுத்தார் ஏன்?

அலி சீனா ஈரான் நாட்டில் வாழ்ந்த முன்னால் முஸ்லீம் ஆவார். இப்போது அவர் www.faithfreedom.org என்ற தளத்தை நடத்துகின்றார். இவர் பல இஸ்லாமிய அறிஞர்களிடம் இஸ்லாம், குர்-ஆன், முகமது தலைப்புகளில் பல விவாதங்களை மெயில் வடிவில் ( எழுத்து வடிவில்) செய்துள்ளார்.

Invitation to Zakir Naik:

1. http://www.faithfreedom.org/debates/ZakirNaik.htm


இவர் தன்னிடம் மெயில் மூலமாக விவாதிக்கும் படி திரு ஜாகிர் நாயக்கிற்கு அழைப்பு விடுத்துள்ளார், ஆனால், பதில் இல்லை. இது வரை ஏற்றுக்கொள்ளவில்லை.

இதற்கு மாறாக, அலி சீனாவை தன்னிடம் நேரடியாக மேடையில் விவாதிக்கும் படி, திரு ஜாகிர் நாயக்கிற்கு பதிலாக மற்றவர்கள் அழைப்பு விடுக்கின்றனர். ஆனால், இதற்கு அலி சீனா மறுப்பு தெரிவித்தார்.

( http://www.news.faithfreedom.org/index.php?name=News&file=article&sid=1358 )

இவர் தன் முகத்தை வெளியே காட்டாமல் வாழ்கிறார், தன் முகம் என்று வெளியே தெரியுமோ, நம் தமிழ் நாட்டு வழக்கப்படிச் சொல்லவேண்டுமானால், அடுத்த நளே அலிசீனாவிற்கு பால் ஊற்றவேண்டி வரும். எனவே, அலி சீனா இதற்கு ஒப்புக்கொள்ள வில்லை.


Wikipedia said:

Sina also posted a letter in his website claiming to be sent to Dr. Zakir Naik[11] inviting him for an open online debate. Mr. Sina received the information that Dr. Naik does not debate online but rather in person in public view.[11] Dr. Naik's office said "There are hundreds of such Ali Sina who have requested Dr. Zakir Naik to debate with him to gain popularity." (Source : http://en.wikipedia.org/wiki/Faith_Freedom_International )

சரி, தன் உயிருக்கு பயந்து அலி சீனா நேரடி வாதத்திற்கு மறுப்பு தெரிவித்தார். பின் ஏன், ஜாகிர் நாயக் மெயில் மூலமாக, எழுத்து வடியில் வாதிக்க சம்மதிக்கவில்லை?

காரணம்: நேரடி விவாதத்தில் திரு ஜாகிர் நாயக்கிற்கு கிடைக்கும் நன்மைகள்:

1. மேடையில் ஒரு மனிதனின் சொற்கள் மட்டும் வெளிப்படாது, அவனின் முகபாவனை, அவரின் கை அசைப்பு, கம்பீரம் மற்றும் இதர விஷயங்கள் வெளிப்படும். ஆனால், மெயில் மூலமாக செய்யும் விவாதத்தில், மனிதன் தெரியமாட்டன், அவன் எழுத்து, அவன் முன் வைக்கும் ஆதாரங்கள், மட்டும் தான் தெரியும்.

2. எழுத்து விவாதத்தில் திரு ஜாகிர் நாயக் தெரிய மாட்டார், அவரின் கருத்துக்கள், அவர் முன்வைக்கும் ஆதாரங்கள், மட்டும் தான் தெரியும். இது ஒரு வகையில் அவருக்கு தோல்வி தான்.

3. நேரடி விவாதத்தில் ஒருவருக்கு சொற்ப நேரம் மட்டும் ஒதுக்குவதால், இஸ்லாமுக்கு எதிரான எல்லா ஆதாரங்களையும் முன் வைக்க முடியாது. ஆனால், எழுத்து வடிவில் விவாதித்தால், பல ஆதாரங்கள், அகராதிகளிலிருந்து வார்த்தைகளின் பொருள், இன்னும் பல ஆதாரங்களை எவ்வளவு வேண்டுமானாலும் வைக்கலாம்.

4. நேரடி விவாதத்தில் பங்கு பெருபவர்கள், மேடையில் முன் வைக்கும் ஆதாரங்களை உடனே, சரி பார்க்க முடியாது, ஆனால், வெப் தளத்தில் படிப்பவர்கள் உடனே வசனங்களை, அதன் பொருளை உடனே சரி பார்க்க முடியும்.

5. கடைசியாக, அலி சீனா சொல்வது போல, மேடையில் ஒருவர் தன் வார்த்தைகளால், மாஜிக் காட்டி கேட்பவர்களை திசை திருப்பமுடியும். ஆனால், எழுத்தில், இதற்கு வாய்ப்பு இல்லை.

எனவே, திரு ஜாகிர் நாயக் அவர்கள், எழுத்து வடியில் அல்லது இணைய தளத்தின் கட்டுரைகள் மூலமாக விவாதிப்பது இல்லை.

4. இஸ்லாமியர்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதம்:

ஒரு முறை நான் ஒரு வாசகத்தை படித்தேன் "The World would become bored, if everyone agreed on everything". இது உண்மை தான்.

உலகத்தில் மனிதர்கள் தங்கள் எதிர்ப்பை வித்தியாசமான முறையில் வெளிப்படுத்துவார்கள். முஸ்லீம்களில் கூட தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்த, சிலர் கட்டுரை எழுதுவார்கள், சிலர் மேடை போட்டு பேசுவார்கள், சிலர் புத்தகங்கள் எழுதுவார்கள், சிலர் எதிர்ப்பு ஊர்வளம் வருவார்கள்.

ஆனால், முஸ்லீம்களில் ஒரு சிலரோ (கவனிக்கவும், ஒரு சிலர், எல்லாருமல்ல) தங்கள் எதிர்ப்பை வித்தியாசமான முறையில் வெளிப்படுத்துவார்கள். அதாவது, கடைகளை உடைப்பது, சொன்னவரை கொலை செய்வேன் என்று மிரட்டுவது இப்படி. போப் பெனெடிக்ட் முகமது பற்றி ஒரு புத்தகத்திலிருந்து ஒரு வாசகத்தைச் சொன்னார், அதற்காக ஒரு கத்தோலிக்க கன்னியாஸ்திரியை(Nun) ஒருவர் துப்பாக்கியால் சுட்டார்.

http://news.bbc.co.uk/2/hi/africa/5353850.stm

5. யார் பொறுப்பு வகிப்பது : ஜாகிர் நாயக் அல்லது போப் பெனெடிக்ட்? (இருவரும் விவாதித்தால் - உத்தரவாதம் யார் தருவார்)

ஒரு வார்த்தையை சொன்னதிற்காகவே, ஒரு கொலை நடக்குமானால், போப் மேடையில் இன்னும் அதிகமாக பேசினால், இதனால், யாரோ ஒருவர் கொலை செய்துக்கொண்டு இருந்தால்,

இதற்கு யார் பொறுப்பு வகிப்பது ?

டாக்டர் ஜாகிர் நாயக் பொறுப்பேற்றுக்கொள்வாரா ? அல்லது

போப் பெனெடிக்ட் இதற்கு பொறுப்பு வகிப்பாரா?


திரு ஜாகிர் நாயக்கிடம் கேட்டால், கொன்றவன் "முஸ்லீமே இல்லை" இது கண்டிக்கத்தக்கது என்று சொல்லுவார், இதனால், மரித்தவர்கள் எழுந்து வந்துவிடுவார்களா?

போப் என்ன செய்வார், சொன்ன வார்த்தையை நான் திரும்ப பெற்றுக்கொள்வேன் என்பார், போன உயிர் திரும்ப வருவது எப்படி?

மேடை என்று வந்துவிட்டால், முகமது செய்த யுத்தங்கள், அவரின் திருமண உறவுகள், இப்படி எதை வேண்டுமானாலும் விவாதிக்க வரலாம். இது சிலருக்கு எரிச்சலை உண்டாக்கும்.

6. முடிவுரை - என் கருத்து:

எனவே, என் கருத்து என்னவென்றால், இஸ்லாமைப் பற்றி சரியான விவரம் மக்களுக்கு தெரியும் வரை, இப்படி இணைய தளத்தில் கருத்துக்களை பகிர்ந்துக்கொள்வது தான் சரியான வழி.

திரு ஜாகிர் நாயக்கிடம் ஒரு சாதாரண மனிதன் விவாதித்தால், அதினால் பெரும் பாதிப்பு இல்லை, ஆனால் ஒரு பொறுப்புள்ள பதவி வகிக்கும் போப் போன்றவர்கள் இந்த வேலையை செய்யக்கூடாது. செய்தால், விளைவு மிகப்பெரிய அளவில் இருக்கும், இஸ்லாமியர்களோடு விவாதிப்பதால்.
 
 
 

இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவத்திற்கு உள்ள வேறுபாடு

இஸ்லாமிற்கும் கிறிஸ்தவத்திற்கும் வித்தியாசம் காணவேண்டுமென்றால், பைபிளின் தேவனாகிய "யேகோவா" விற்கும், குர்-ஆனின் இறைவனாகிய "அல்லா" விற்கும் உள்ள வித்தியாசத்தை நாம் காணவேண்டும்.

கிறிஸ்தவனும் இஸ்லாமியனும் வேறு வேறு இல்லை, இவர்கள் அனைவரும் ஒரு தாயின் வயிற்றுப்பிள்ளைகள். ஆனால் கிறிஸ்தவத்திற்கும், இஸ்லாத்திற்கும் தான் அதிக வித்தியாசம் உள்ளது.

யேகோவாவும், அல்லாவும் எப்போதும் ஒரே இறைவனாக ஆகமுடியாது. யேகோவா வேறு அல்லா வேறு. இதற்கான காரணங்களை இங்கே காணலாம்.

1. சத்தியம் செய்வதில் வேறுபாடு.
அல்லாவிற்கும் யேகோவாவிற்கும் உள்ள ஒரு முக்கியமான வேறுபாடு என்னவென்றால்,
யேகோவா சத்தியம் செய்யும்போது "தன் பெயர் மீதே" சத்தியம் செய்வார்,
ஏனென்றால், சத்தியம் செய்வதற்கு தன்னை விட பெரியவர் ஒருவரும் இல்லை என்பதனால். ஆனால் அல்லா சத்தியம் செய்யும் போது, நிலவின் மீது, நட்சத்திரங்களின் மீது, இரவின் மீது, மற்றும் பகலின் மீதும் சத்தியம் செய்வார். இந்த ஒரு வித்தியாசமே போதும் இருவரும் ஒருவரல்ல என்பதற்கு.

எபிரேயர் 6:13,14ஆபிரகாமுக்கு தேவன் வாக்குத்தத்தம்பண்ணினபோது, ஆணையிடும்படி தம்மிலும் பெரியவர் ஒருவருமில்லாதபடியினாலே தமது பேரிலே தானே ஆணையிட்டு:

நிச்சயமாக நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன்னைப்பெருகவே பெருகப்பண்ணுவேன் என்றார்.

எபிரேயர் 6:16
மனுஷர் தங்களிலும் பெரியவர்பேரில் ஆணையிடுவார்கள்; உறுதிபண்ணும்படிக்கு ஆணையிடுதலே சகல விவாதத்திற்கும் முடிவு.

எரேமியா 22:5
நீங்கள் இந்த வார்த்தைகளைக்கேளாமற்போனீர்களேயாகில் இந்த அரமனை பாழாய்ப்போம் என்று என்பேரில் ஆணையிட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

"I swear by Myself, says the LORD." Jeremiah 22:5

ஆனால், அல்லா தன்னைவிட குறைவானவற்றின் (தான் படைத்ததாக சொல்லும்) பொருட்களின் மீது சத்தியம் செய்வார்.

குர்-ஆன் மீது சத்தியமாக:
குர்-ஆன் 36:2 - "ஞானம் நிரம்பிய இக்குர்-ஆன் மீது சத்தியமாக".
குர்-ஆன் 38:1 - "ஸாத். நினைவுறுத்தலைக் கொண்ட இக்குர்-ஆன் மீது சத்தியமாக".

வானத்தின் மீதும், அதில் உள்ளவைகளின் மீதும் சத்தியம்:
குர்-ஆன் 86:1 - வானத்தின் மீது சத்தியமாக! தாரிக் மீது சத்தியமாக.
குர்-ஆன் 74:32-34 - (ஸகர் என்னும் நரகு நிராகரிப்போர் கூறுவது போல்) அல்ல, இன்னும் சந்திரன் மீது சத்தியமாக.
இரவின் மீதும் சத்தியமாக - அது பின்னோக்கிச் செல்லும் பொழுது.
விடியற் காலையின் மீது சத்தியமாக - அது வெளிச்சமாகும் பொழுது,

குர்-ஆன் 53:1 - விழுகின்ற நட்சத்திரத்தின் மீது சத்தியமாக!

எழுதுகோல் (பென்) மீது சத்தியம்:
குர்-ஆன் 68:1 - நூன்; எழுதுகோல் மீதும் இன்னும் ( அதன் மூலம்) அவர்கள் எழுதுவதின் மீதும் சத்தியமாக!


நகரத்தின் மீதும் சத்தியம்:
குர்-ஆன் 90:1 - இந்நகரத்தின் மீது நான் சத்தியம் செய்கின்றேன்.

படைப்பின் மீது சத்தியம்:
குர்-ஆன் 92:1-3 - (இருளால்) தன்னை மூடிக்கொள்ளும் இரவின் மீது சத்தியமாக-
பிரகாசம் வெளிப்படும் பகளின் மீதும் சத்தியமாக-
ஆணையும், பெண்ணையும் (அவன்) படைத்திருப்பதின் மீதும் சத்தியமாக-

உண்மை என்னவென்றால், அல்லா எல்லாவற்றின் மீதும் சத்தியம் செய்வான் (கிறிஸ்தவர்கள் மன்னிக்கவும், " செய்வார்" என்று மதிப்போடு நான் சொன்னால், முஸ்லீம்கள் கோபப்படுவார்கள், ஏனென்றால், "செய்வார்" என்றால் அது பன்மையாகும் இதனால் அல்லாவிற்கு இணைவைப்பதாக ஆகும் என்று அவர்கள் நம்புகின்றனர்.) ஆனால் யேகோவா தன் மீது மட்டும் தான் சத்தியம் செய்வார். எனவே இவர்கள் இருவரும் ஒருவர் ஆக முடியாது.

தான் ஒருவரே பெரியவர் என்று யேகோவாவிற்குத்தெரியும்.


2) அல்லாவின் பரலோகமும் (சொர்க்கம்) யேகோவாவின் பரலோகமும்:

அல்லாவின் பரலோகம் ஆபாசம் மற்றும் உடல் சம்மந்தமானது. யேகோவானின் பரலோகம் பரிசுத்தம் நிறைந்தது மற்றும் ஆவிக்குரியது.

அல்லாவின் சொர்க்கத்தில் கிடைப்பவை:
1) தூயமனைவிகள்
2) ஹூருல் ஈன் என்னும் பெண்கள் (ஒவ்வொரு முறை இவர்களுடன் உடலுறவு கொண்டுவிட்ட பிறகு, அல்லா இவர்களை மறுபடியும் கன்னிகளாக மாற்றுவான்).
3) ஒரேவயதுள்ள கன்னிகள்


குர்-ஆன் 2:25 - "... இன்னும் அவர்களுக்கு அங்கு தூய துனணவியரும் உண்டு ; மேலும் அவர்கள் எங்கே நிரந்தரமாக வாழ்வார்கள்".

இவர்கள் பூமியில் இருந்த மனைவிகள் அல்ல, பரலோகத்தில் மட்டும் தரப்படும் புதிய மனைவிகள். (குர்-ஆன் 4:57 ம் பார்க்க)


குர்-ஆன் 56:35-38 - நிச்சயமாக (ஹுருல் ஈன் என்னும் பெண்களைப்) புதிய படைப்பாக, நாம் உண்டாக்கி
அப்பெண்களைக் கன்னிகளாகவும்;
(தம் துணைவர் மீது) பாசமுடையோராகவும், சம வயதினராகவும்,
வலப்புறத்தோருக்காக (ஆக்கி வைத்துள்ளோம்).

குர்-ஆன் 78:32-34 - தோட்டங்களும், திராட்சைப் பழங்களும்.
ஒரே வயதுள்ள கன்னிகளும்.
பானம் நிறந்த கிண்ணங்களும், (இருக்கின்றன).



ஒருவன் அல்லாவின் பாதையில் ஜிஹாதில் மரித்தால் அவனுக்கு சொர்க்கத்தில் 72 கன்னிப்பெண்கள் கிடைப்பார்கள் என்று ஹதீஸ் சொல்கிறது. ( http://en.wikipedia.org/wiki/Jannah)
இப்போது புரிகிறதா நண்பர்களே ஏன் இஸ்லாமிய இளைஞர்கள் ஜிஹாதில் மரிக்க விரும்புகிறார்கள் என்று.


யேகோவாவின் பரலோகத்தில்:
1) பெண் கொடுப்பதும், பெண் கொள்வதுமில்லை ( திருமணமில்லை)
2) நீதியும், சமாதானமும், பரிசுத்த ஆவியினால் உண்டாகும் சந்தோஷமும்.
3) மரணமில்லை, துக்கமில்லை, அழுகையில்லை மற்றும் வலியுமில்லை.

லூக்கா 20:34-36
இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: இந்தப் பிரபஞ்சத்தின் பிள்ளைகள் பெண்கொண்டும் பெண்கொடுத்தும் வருகிறார்கள்.

மறுமையையும் மரித்தோரிலிருந்தெழுந்திருக்குதலையும் அடையப் பாத்திரராக எண்ணப்படுகிறவர்களோ பெண் கொள்வதுமில்லை பெண் கொடுப்பதுமில்லை.

அவர்கள் இனி மரிக்கவுமாட்டார்கள்; அவர்கள் உயிர்த்தெழுதலின் பிள்ளைகளானபடியால் தேவதூதருக்கு ஒப்பானவர்களுமாய், தேவனுக்குப் பிள்ளைகளுமாயிருப்பார்கள்.

ரோமர் 14:17
தேவனுடைய ராஜ்யம் புசிப்பும் குடிப்புமல்ல, அது நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷமுமாயிருக்கிறது.

வெளி 21:3-4
மேலும், பரலோகத்திலிருந்து உண்டான ஒரு பெருஞ்சத்தத்தைக் கேட்டேன்; அது: இதோ, மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது, அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார்; அவர்களும் அவருடைய ஜனங்களாயிருப்பார்கள், தேவன்தாமே அவர்களோடேகூட இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார்.

அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின என்று விளம்பினது.


இவைகள் மட்டுமில்லை அடிப்படை கொள்கைளில், சட்டங்களில் உள்ள பல வேறுபாடுகள் இவர்கள் இருவரும் ஒருவர் இல்லை என்றும் இவர்கள் ஒருவருக்கு ஒருவர் எதிர்மறையானவர்கள் என்று நாம் சுலபமாக அறிந்துக்கொள்ளலாம்.


யேகோவா
உங்கள் எதிரிகளை நேசியுங்கள்.
உங்களைப் போல் பிறர் மீதும் அன்பு கூறுங்கள்.
ஒரு கன்னத்தில் அறைந்தால், மறு கன்னத்தையும் காட்டு.


இன்னும் சொல்லவேண்டியதில்லை, இயேசுவை பின் பற்றும் சீடர்களின் மூலமாக அவரும் அவர் கட்டளைகளும் வெளிப்படுகிறது. "அவர்களின் கனிகளினால் அவர்களை அறிவீர்கள்".

அல்லா:
நம்பிக்கையில்லாதவர்களோடு நட்பு வேண்டாம். குர்-ஆன் 4:144, 9:16
நம்பிக்கையுள்ளவர்கள்(முஸ்லீம்கள்) தான் நண்பர்கள். குர்-ஆன் 5:55
ஜிஹாத் செய்யுங்கள். குர்-ஆன் 61:11, 2:244, 2:218
மனைவியை அடியுங்கள். குர்-ஆன் 4:34
நான்கு மனைவிகள் மற்றும் எண்ணிக்கையில்லா அடிமைப்பெண்களை வைத்துக்கொள்ளலாம். குர்-ஆன் 4:3

"அவர்களின் கனிகளினால் அவர்களை அறிவீர்கள்".
http://www.tamilchristians.com/modules.php?name=Forums&file=viewtopic&t=82

இஸ்லாம்; தாய் சுமப்பதும், பாலூட்டுவதும் 6, 24 மாதங்கள் - குர்-ஆன் முரண்பாடு

தாய் சுமப்பதும், பாலூட்டுவதும் 6, 24 மாதங்கள் - குர்-ஆன் முரண்பாடு

அல்லா குர்-ஆனில் நம்பிக்கையில்லாதவர்களுக்கு ஒரு சவால் விடுகிறார். குர்-ஆன் ஒரு இறைவேதம் என்று எல்லா இஸ்லாமியர்கள் நம்புகின்றனர். அல்லா கூட சொல்கிறார், குர்-ஆன் இறைவேதம் என்பதற்கு ஆதாரம், நிரூபனம் என்னவென்றால், "குர்-ஆனில் ஒரு முரண்பாட்டையும் காணமுடியாது." என்பது தான். மனிதன் எழுதும் புத்தகத்தில் முரண்பாடு இருக்கும், ஆனால் இறைவன் எழுதும் புத்தகத்தில் "முரண்பாடுகளோ அல்லது பிழைகளோ" இருக்காது என்று குர்-ஆன் சொல்கிறது (குர்-ஆன் 4:82) . இது உண்மை தான். இதை நானும் ஏற்றுக்கொள்கிறேன். இறைவன்
உருவாக்குவதில் குறையிருக்காது.. ஆனால், குர்-ஆனில்?

Quote:
4:82 அவர்கள் இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா, (இது) அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள்.



மேற் கண்ட வசனத்தில் அல்லா, குர்-ஆனில் முரண்பாடு அல்லது பிழை உள்ளதா என்று ஆராய்ந்து பார்க்கும்படி அறிவுரை கூறுகிறார் அல்லது சவால் விடுகிறார். உண்மையில் குர்-ஆனில் முரண்பாடு உள்ளதா? என்றால், "ஆம்" என்று தான் சொல்லவேண்டும்.

இந்த கட்டுரையில் நாம் குர்-ஆனில் முரண்பாடுகளில் ஒன்றைப்பற்றி பார்க்கப்போகிறோம். அதே கருத்துப்பற்றி வேறு சில செய்திகளையும் பார்க்கப்போகிறோம்.

இக்கட்டுரையில் நாம் கீழ்கண்ட மூன்று கருத்துக்களைப்பற்றிப் பார்க்கப்போகிறோம்.

1. ஒரு தாய் தன் குழந்தைக்கு எத்தனை மாதம் பால் கொடுக்கவேண்டும். இதில் குர்-ஆனின் முரண்பாடு என்ன?

2. வாலிபனாக வளர்ந்த ஒரு மனிதனுக்கு, பெண் பால் கொடுக்கச் சொன்ன முகமது, அதனால் வந்த சமீபத்திய ஃபத்வா (Fatwa) மற்றும் ஒரு பேராசியரின் வேலைநீக்கம்.

3. குழந்தைக்கு பால் கொடுத்துக்கொண்டு தூங்கிக்கொண்டு இருந்த ஒரு தாயில் வயிற்றில் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம், செய்யத்தூண்டிய மற்றும் சபாஷ் என்றுச் சொன்ன முகமது.

-------------------------------------------------------------------------------------
-----

1. ஒரு தாய் தன் குழந்தைக்கு எத்தனை மாதம் பால் கொடுக்கவேண்டும். இதில் குர்-ஆனின் முரண்பாடு என்ன?


குழந்தைக்கு தாய் 24 மாதங்கள் ( 2 வருடங்கள் ) பால் கொடுக்கவேண்டுமென்பது அல்லாவின் கட்டளை. ஆனால் வேறு இடத்தில் ஒரு தாய் தன் வயிற்றில் குழந்தையை சுமக்கும் காலமும், அக்குழந்தைக்கு பால் கொடுக்கவேண்டிய காலமும் சேர்த்து 30 மாதங்கள் என்றுச் சொல்கிறார்.

அ) பால் கொடுக்கும் காலம் 24 மாதங்கள்:

குர்-ஆன் 31:14 மற்றும் 2:233 போன்ற வசனங்களில் அல்லா சொல்கிறார், தாயானவள் தன் பிள்ளைக்கு பாலூட்டும் காலம் 24 மாதங்களாகும்.

Quote:
31:14 நாம் மனிதனுக்கு தன் பெற்றோர் (இருவருக்கும் நலம் செய்ய வேண்டியது) பற்றி வஸிய்யத்துச் செய்(து போதித்)தோம்; அவனுடைய தாய் பலஹீனத்தின் மேல் பலஹீனம் கொண்டவளாக (கர்ப்பத்தில்) அவனை சுமந்தாள்; இன்னும் அவனுக்குப் பால் குடி மறத்த(லி)ல் இரண்டு வருடங்கள் ஆகின்றன; ஆகவே 'நீ எனக்கும் உன் பெற்றோர்க்கும் நன்றி செலுத்துவாயாக; என்னிடமே உன்னுடைய மீளுதல் இருக்கிறது."

2:233 (தலாக் சொல்லப்பட்ட மனைவியர், தம்) குழந்தைகளுக்குப் புூர்த்தியாகப் பாலுூட்ட வேண்டுமென்று (தந்தை) விரும்பினால், தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு நிரப்பமான இரண்டு ஆண்டுகள் பாலூட்டுதல் வேண்டும்; ......



ஆ) குழந்தையை சுமப்பதும், பாலூட்டுவதும் மொத்தம் 30 மாதங்கள்:

ஆனால், குர்-ஆன் 46:15 ல் அல்லா சொல்கிறார், ஒரு பெண் தன் வயிற்றில் குழந்தை உருவானது முதல், அக்குழந்தை பிறந்து அதற்கு பால் கொடுக்கும் காலங்கள் மொத்தம் 30 மாதங்கள் என்று.

Quote:
46:15 மனிதன் தன் பெற்றோருக்கு நன்மை செய்யும்படி உபதேசம் செய்தோம்; அவனுடைய தாய், வெகு சிரமத்துடனேயே அவனைச் சுமந்து வெகு சிரமத்துடனேயே அவனைப் பெற்றெடுக்கிறாள்; (கர்ப்பத்தில்) அவனைச் சுமப்பதும்; அவனுக்குப் பால் குடி மறக்கச் செய்வதும் (மொத்தம்) முப்பதுமாதங்களாகும். அவன் வாலிபமாகி, நாற்பது வயதை அடைந்ததும்: 'இறைவனே! நீ என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்த நிஃமத்துக்காக, (அருள் கொடைகளுக்காக) நன்றி செலுத்தவும், உன்னுடைய திருப்தியை அடையக் கூடிய ஸாலிஹான நல்ல அமல்களைச் செய்யவும் எனக்கு அருள் பாலிப்பாயாக! (இதில் எனக்கு உதவுவதற்காக) என்னுடைய சந்ததியையும் ஸாலிஹானவர்களாக (நல்லது செய்பவர்களாக) சீர்படுத்தியருள்வாயாக! நிச்சயமாக நான் உன்பக்கமே திரும்புகிறேன்; அன்றியும், நான் முஸ்லிம்களில் நின்றுமுள்ளவனாக (உனக்கு முற்றிலும் வழிப்பட்டவனாக) இருக்கின்றேன்" என்று கூறுவான்.



குர்-ஆனின் முரண்பாடு அல்லது பிழை:

ஒரு இடத்தில் 24 மாதங்கள் பாலூட்டவேண்டுமென்றுச் சொல்லிவிட்டு, வேறு இடத்தில் சுமப்பதும், பாலூட்டுவதும் சேர்த்து மொத்தம் 30 மாதங்கள் என்று சொல்கிறார் அல்லா. இது ஒரு பிழையாகும்.

பாலூட்டும் மாதங்கள் (குர்-ஆன் படி) : 24
மொத்த மாதங்கள் (குர்-ஆன் படி) : -30
---------------------
வயிற்றில் குழந்தை இருக்கும் மாதங்கள் : -6 (குர்-ஆன் படி)
---------------------


நம் எல்லாருக்கும் தெரியும். சாதாரணமாக ஒரு குழந்தை வயிற்றில் இருப்பது, 9 மாதங்கள் ஆகும். சில வேளை அதற்கு முன்பு கூட, அதாவது 7 , 8 மாதங்களிலும் பிறப்பதுண்டு. இப்படி பிறக்கும்

குழந்தைகள் பெரும்பான்மையான நேரங்களில் சில பலவீனத்தோடு இருப்பார்கள் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். ஒரு வேளை 7 அல்லது 8 மாதங்கள் என்று வைத்துக்கொண்டாலும்:

வயிற்றில் குழந்தை இருக்கும் மாதங்கள் : 7
பாலூட்டும் மாதங்கள் (குர்-ஆன் படி) : 24
---------------------------------------------------:----
மொத்த மாதங்கள் : 31
---------------------------------------------------------


சாதாரணமாக வயிற்றில் குழந்தை இருக்கும் காலம் 9 மாதங்கள் என்று எல்லாருக்கும் தெரிந்து இருக்கும் போது, அல்லாவிற்கு மட்டும் ஏன் தெரியாமல் போனது. சிலர் சொல்லலாம், 6 மாதங்களில் கூட பிள்ளை பிறக்கும் என்று. ஆனால், இப்படி பிறந்தால், அக்குழந்தை ஒரு மனநோயாலியாகவோ அல்லது பிறந்த உடனே சில நாட்களுக்குள் மரித்துவிடும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்.

அல்லா இங்கு (46:15) "குறை-பிரசவ" குழந்தைகளைப் பற்றிச் சொல்கிறாரா?

ஆனால், அக்குழந்தை வாலிபனாக வளர்ந்து மனவளர்ச்சி குறையில்லாதவனாக , நல்ல மகனாக, அல்லாவிற்கு நல்ல பக்தனாக பேசுவதாகச் சொல்கிறதே இந்த வசனம். எனவே இது ஒரு குர்-ஆனில்
உள்ள முரண்பாடு என்று சுலமாக அறிந்துக்கொள்ளலாம். குர்-ஆன் 4:82 ன் படி "குர்-ஆன்" இறைவேதமல்ல, உண்மையாகவே இது "உண்மை இறைவனிடமிருந்து" வரவில்லை என்பதை நாம் அறிந்துக்கொள்ளலாம்.

இஸ்லாமியர்களின் பதில் அல்லது மறுப்பு என்ன?

இந்த முரண்பாட்டிற்கு சில இஸ்லாமியர்கள் மறுப்பு தெரிவிக்கின்றனர்.

இஸ்லாமியர்களின் மறுப்பு 1:
------------------------------------

சில இஸ்லாமியர்கள் சொல்கிறார்கள், குழந்தை வயிற்றில் இருப்பது 9 மாதங்கள் தான், ஆனால், ஒரு குழந்தை வயிற்றில் விழுந்த 3 மாதங்களுக்கு பிறகு தான் ஒரு "முழு" (Fetus) மனித உருவம் எடுக்கிறது , எனவே, முதல் மூன்று மாதங்களை கழித்துவிட்டு, மீதி இருக்கின்ற 6 மாதங்கள் பற்றித்தான் அல்லா சொல்கிறான். பிறகு பால் கொடுக்கும் 24 மாதங்கள், மொத்தம் 30 மாதங்கள்.

இது ஒரு பலவீனமாக விளக்கம். காரணம் இவ்விளக்கத்தை பல இஸ்லாமியர்களே ஏற்றுக்கொள்வதில்லை. மற்றும் அல்லா இப்படி விஞ்ஞான முறையில் சொல்லவேண்டுமானால், இதை இன்னும்
விளக்கி சொல்லியிருக்கலாம. ஆனால், அல்லா இப்படிச் சொல்லவில்லை. சாதாரணமான ஒரு சம்பவமாகவே விளக்குகிறார். ஒரு கரு வயிற்றில் விழுந்த ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான மாற்றத்திற்கு உள்ளாகிறது. இதை காரணம் காட்டிச் சொல்லவேண்டுமானால், 6 மாதமென்ன? 5, 4 மாதங்களுக்கும் விளக்கம் அளிக்கலாம். எனவே இது ஒரு பலவீனமாக விளக்கமாகும்.

Note: from Medical Term Dictionary : Definition of Fetus
Fetus: The unborn offspring from the end of the 8th week after conception (when the major structures have formed) until birth. Up until the eighth week, the developing offspring is called an embryo.
Source: http://www.medterms.com/script/main/art.asp?articlekey=3424


இஸ்லாமியர்களின் மறுப்பு 2:
------------------------------------
சிலர் மேலே சொன்ன விளக்கத்தை ஏற்றுக்கொள்வதில்லை. இதற்கு பதிலாக ஒரு ஹதீஸை எடுத்துக்காட்டுகிறார்கள்.

திருமணமான 6 மாதங்களில் ஒரு பெண்ணுக்கு ஒரு குழந்தை பிறக்கிறது. கணவன் சந்தேகப்படுகிறான். அவர்கள் இருவரும், உத்மானிடம் செல்கின்றனர் ( முகமது மரித்தபிறகு நடந்தது), அவள் சொல்கிறாள், தான் ஒரு உத்தமி என்று, ஆனால், உத்மான் ஒப்புக்கொள்ளவில்லை, அவளை கல்லெரிந்து கொல்லும்படி கட்டளையிடுகிறார். இதை அறிந்த அலி, உத்மானை சந்தித்து, இது தவறு. குர்-ஆன் சொல்கிறது 30 மாதங்களில் 24 மாதங்கள் பாலூட்ட கழித்துவிட்டால், மீதி 6 அல்லவா. இதைத் தான் அல்லா குர்-ஆன் 46:15ல் உள்ளது என்றுச் சொல்ல, உத்மான் பிறகு அப்பெண்ணை
அழைத்து அனுப்புகிறார், ஆனால், அவளை அப்போதைக்கே கொன்று விடுகின்றனர்.


Quote:
This is a strong and valid conclusion, and it was approved by `Uthman and a number of the Companions. Muhammad bin Ishaq bin Yasar narrated from Ba`jah bin `Abdullah

Al-Juhani that a man from his tribe (Juhaynah) married a woman from Juhaynah. She delivered a baby after six months. So her husband went to `Uthman, may Allah be

pleased with him, and told him about that. Thus, `Uthman summoned her. When she was getting dressed, her sister started crying. She asked her: "Why do you cry By Allah, no one has ever approached me (for sexual relations) of Allah's creation except him (my husband). So let Allah decree (for me) as He wills.'' When she was brought before `Uthman, he commanded that she be stoned to death (for adultery). `Ali heard of this, came to `Uthman, and said: "What are you doing'' He (`Uthman) said: " She delivered after six months! Can this ever happen'' `Ali, may Allah be pleased with him, said: "Don't you read the Qur'an'' He said: "Yes, of course!'' He (`Ali) then said: `Haven't you heard Allah's saying, (and his gestation and weaning is thirty months), and;( two complete years) (2:233) (Subtracting the two numbers) we are only left with six months.'' `Uthman, may Allah be

pleased with him, said: "By Allah, I did not see that! Bring the woman back.'' But they found that she had already been killed. Ba`jah continued: "By Allah, no two crows and no two eggs are more similar than that child turned out to be to his father! When his father saw that he said, `By Allah! This is my son without any doubt.' Later on, Allah afflicted him with a skin abscess in his face (because of his false accusation to his wife). It kept eating him up until he died.'' Ibn Abi Hatim related from his father that Farwah bin Abi Al-Maghra' told them that `Ali bin Mushir narrated to them from Dawud bin Abi Hind, who narrated from `Ikrimah that Ibn `Abbas, may Allah be pleased with him, said, "When a woman delivers after nine months, the baby will only need twenty-one months of suckling. When she delivers after seven months, the baby will need twenty-three months of suckling. When she delivers after six months, the baby will need two full years of suckling, because Allah says, (and his gestation and weaning is thirty months, till when he attains full strength).'' meaning, he becomes strong, youthful, and attains full ability.


திருமணமான ஒரு தம்பதியார்களில் தன் மனைவி ஏற்கனவே தன் வயிற்றில் பிள்ளையோடு இருக்கிறாள் என்று அறிய, 6 மாதம் கழித்து குழந்தை பிறந்த உடன் ஆராய்ச்சி செய்யவேண்டுவதில்லை. திருமணம் ஆகும் போது 3 மாதங்கள் கர்ப்பம் என்றால், அடுத்த மாதமே அல்லது அதற்கு அடுத்த மாதத்திலேயே அவள் வயிற்று பாகம் அல்லது அவளது கர்ப்பம் வெளியே தெரிய ஆரம்பத்துவிடும். எனவே, கணவன் திருமணம் ஆன 2வது மாதத்திலேயே தெரிந்துக்கொள்ளலாம்.

இப்படிப்பட்ட தீர்ப்பு கொடுத்தால், ஒருவேளை உண்மையிலேயே ஒரு பெண் திருமணம் ஆகும் போது 3 மாதங்கள் கர்ப்பம் இருந்து பிறகு 6 மாதத்தில் பிள்ளை பெற்றால், இந்த ஹதீஸை காட்டி தப்பித்துக்கொள்ளலாமே.

இந்த ஹதீஸை மேற்கோள் காட்டும் இஸ்லாமியர்களுக்கு ஒரு கேள்வி:
இந்த காலத்தில் இந்த ஹதீஸில் சொல்லப்பட்டது போல ஒரு நிகழ்ச்சி உங்கள் வாழ்வில் நிகழ்ந்தால் (ஒரு பேச்சிற்கு வைத்துக்கொள்வோம்), இந்த ஹதீஸ் காட்டி சும்மா இருந்துவிடுவீர்களா?
அல்லது இப்போது உள்ள பல விஞ்ஞான கருவிகள் மூலம் கண்டரிந்து செயல்படுவீர்களா?



மற்றும் இந்த ஹதீஸில் சொல்லப்பட்டது போல 9 மாதத்தில் பிறந்தால் - 21 மாதங்கள் பாலூட்டவேண்டும், 8 மாதத்தில் பிறந்தால் 22 மாதங்கள் பாலூட்டவேண்டும் என்று கணக்கு போடுவது, குர்-ஆனில் வசங்கள் 31:14 மற்றும் 2:233 போன்றவைகளுக்கு விரோதமானது.

ஒன்று மட்டும் நிச்சயம், அல்லா தன் குர்-ஆனில் சொன்ன வசனங்கள் தெளிவானைகள் அல்ல, மட்டும் அவைகளில் அனேக முரண்பாடுகள் உள்ளது.


-------------------------------------------------------------------------------------


2. வாலிபனாக வளர்ந்த ஒரு மனிதனுக்கு, பெண் பால் கொடுக்கச் சொன்ன முகமது, அதனால் வந்த சமீபத்திய ஃபத்வா மற்றும் ஒரு பேராசியரின் தற்காலிக வேலைநீக்கம்.

ஒரு இஸ்லாமிய பெண், ஒரு ஆணுக்கு பாலூட்டி, அந்த ஆணுடன் ஒரு அறையில் தனியாக இருப்பது, இஸ்லாமில் அனுமதிக்கப்பட்டுள்ளதா? இக்கேள்விக்கு சிலரின் பதில் "ஆம்", மற்றும் சிலரின் பதில் "இல்லை".

சமீபகாலத்தில், அல்-அஜர் பல்கலைக்கழகத்தின் ஹதீஸ் பிரிவின் தலைவர் மற்றும் பேராசிரியர் டாக்டர் இஜ்ஜத் அத்யா (Dr. Izzat Attya,) ஒரு ஃபத்வா Fatwa வெளியிட்டார்.

இதன் படி, பல கம்பனிகளில் வேலை செய்யும் இஸ்லாமிய பெண்கள், தனி அறைகளில் ஆண்களோடு வேலை செய்யவேண்டிய அவசியம் உள்ளது. ஆனால், குர்-ஆன் இதை அனுமதிப்பதில்லை. தந்தை, அண்ணன், தம்பி போன்றவர்களோடு மட்டும் தான் தனியாக ஒரு அறையில் இருக்கலாமே ஒழிய, மற்றவர்களோடு ( கூட வேலை செய்பவர்களோடு) இருக்கக்கூடாது. அப்படி இருந்தால் அது "குல்வா" என்ற பாவம் செய்ததாகும்.


முகமது காட்டிய வழி:
---------------------------

இந்த பாவம் செய்யாமல் இருக்கவேண்டுமானால், தன்னோடு வேலை செய்பவர்களோடு தனி அறையில் இருந்து வேலை செய்யவேண்டும் என்றால், முகமது சொல்லித்தந்த முறையில் "அவர்களுக்கு பாலூட்டவேண்டும்".

அப்படி பாலூட்டிவிட்டால், அந்த பாலை உண்கின்ற ஆண்கள் ( தன்னோடு கூட கம்பனியில் வேலை செய்யும் நபர்கள்), அந்த பெண்ணின் பாலை உண்பதினால், அவர்கள் அவளுக்கு தாய், மற்றும் பிள்ளை போன்ற உறவு முறையில் ஆகிவிடுகின்றனர். எனவே, இப்போது, அவர்களோடு தனி அறையில் இருந்து வேலை செய்வது, கூட்டத்தில் பேசுவது, கம்பனியின் நிற்வாக விவரங்களைப்பற்றி ஆராய்வது பாவம் ஆகது. இது தான் அந்த "ஃபத்வா".

முகமது கதைக்கு வருவோம்:
முகமது தன் வளர்ப்பு மகனின் மனைவியை திருமணம் செய்துக்கொள்கிறார். அல்லா இதை அங்கீகரிக்கிறார். முகமது ஒரு முறை தன் வளர்ப்பு மகனின் வீட்டிற்குச் செல்கிறார், மகன் அங்கில்லை, தன் மருமகளை பார்க்க கூடாததை பார்த்துவிடுகிறார். அதனால், ஆசை கொள்கிறார். இதை அறிந்த அந்த அருமை மகன், தன் மனைவியை முகமதுக்காக விவாகரத்து செய்கிறார். அல்லா வசனங்களை இறக்கி இது தான் அங்கீகரிப்பதாகச் சொல்கிறார். வளர்ப்பு மகன் முறையையும் முகமது இரத்துசெய்துவிடுகிறார்.

தான் செய்த இதே வேலையை மற்றவர்கள் செய்யக்கூடாது என்பதற்காக, ஒரு பெண், தந்தை, அண்ணன், தம்பி போன்ற உறவுமுறை இல்லாதவரோடு தனியாக ஒரு அறையில் எக்காரணத்தைக்கொண்டும் இருக்ககூடாது என்று கட்டளை கொடுக்கிறார் முகமது ( அல்லா ). ஆனால், இப்போது தான் பிரச்சனை அதிகமாகிறது.

அபு ஹுதாபா மற்றும் ஸஹ்லா என்ற தம்பதியருக்கு ஒரு வளர்ப்பு மகன் "சலீம்" இருக்கிறான்( விடுவிக்கப்பட்ட அடிமை). அவன் அந்த பெண்ணோடு ( ஸஹ்லா) கணவன் வீட்டில் இல்லாதபோதும், வீட்டு வேலைகளில் உதவி செய்துக்கொண்டு இருப்பான். இது சாதாரண ஒரு விஷயம்.

முகமது, வளர்ப்பு மகன் முறையை இரத்து செய்ததால், இந்த வளர்ப்பு மகன் "சலீம்". அந்த பெண்மணிக்கு அன்னியான் ஆகிவிட்டான், எனவே, அவள் முகமதுவிடம் சென்று, இவ்விவரத்தைச் சொல்கிறார். நான் எப்படி சலீமின் உதவியோடு(அன்னியனோடு) வேலைகளை கவனிப்பது என்று கேட்கிறாள். முகமது உடனே சொல்கிறார், "அவனுக்கு நீ உன் பாலூட்டிவிடு, அப்போது அவன் உன் பிள்ளை அல்லது ஒரு தாய் பிள்ளை உறவுமுறைக்கு வந்துவிடுவான்", இப்போது அவன் அன்னியன் இல்லை என்றுச் சொல்கிறார்.

அவள் உடனே, அவன் ஒரு பெரிய மனிதன், வாலிபன், அவனுக்கு "தாடி" கூட உள்ளது என்று சொல்கிறாள்.

அதற்கு முகமது, "அது எனக்குத் தெரியும்", இருந்தாலும் நீ அவனுக்கு பாலூட்டு என்கிறார். அவளும் அப்படியேச் செய்கிறார். இதன் பிறகு, ஆயிஷா (முகமதுவின் 3வது இளவயது மனைவி) இக்கருத்தை ஆமோதித்ததாகவும் ஆதாரங்கள் உண்டு, மற்ற மனைவிகள் இதனை விரும்பவில்லையாம்.


ஸஹி முஸ்லீம் என்ற ஹதீசிலிருந்து ஆதாரங்கள்:


Sahih Muslim
A woman can suckle a grown up bearded man so that she becomes haram for him (i.e. she cannot get married to him)…8.3424, 8.3425, 8.3426, 8.3427 , 8.3428

http://www.usc.edu/dept/MSA/fundamentals/hadithsunnah/muslim/008.smt.html

Chapter 28: SUCKLING OF A YOUNG (BOY)

Quote:
Book 008, Number 3424:
' A'isha (Allah be pleased with her) reported that Sahla bint Suhail came to Allah's Apostle (may peace be eupon him) and said: Messengerof Allah, I see on the face of Abu Hudhaifa (signs of disgust) on entering of Salim (who is an ally) into (our house), whereupon Allah's Apostle (may peace be upon him) said: Suckle him. She said: How can I suckle him as he is a grown-up man? Allah's Messenger (may peace be upon him) smiled and said: I already know that he is a young man 'Amr has made this addition in his narration that he participated in the Battle of Badr and in the narration of Ibn 'Umar (the words are): Allah's Messenger (may peace be upon him) laughed.

Book 008, Number 3425:
'A'isha (Allah be pleased with her) reported that Salim, the freed slave of Abu Hadhaifa, lived with him and his family in their house. She (i. e. the daughter of Suhail came to Allah's Apostle (may peace be upon him) and said: Salim has attained (purbety) as men attain, and he understands what they understand, and he enters our house freely, I, however, perceive that something (rankles) in the heart of Abu Hudhaifa, whereupon Allah's Apostle (may peace be upon him) said to her: Suckle him and you would become unlawful for him, and (the rankling) which Abu Hudhaifa feels in his heart will disappear. She returned and said: So I suckled him, and what (was there) in the heart of Abu Hudhaifa disappeared.

Book 008, Number 3426:
Ibn Abu Mulaika reported that al-Qasim b. Muhammad b. Abu Bakr had narrated to him that 'A'isha (Allah be pleased with her) reported that Sahla bint Suhail b. 'Amr came to Allah's Apostle (may peace be upon him) and said: Messenger of Allah, Salim (the freed slave of Abu Hudhaifa) is living with us in our house, and he has attained (puberty) as men attain it and has acquired knowledge (of the sex problems) as men acquire, whereupon he said: Suckle him so that he may become unlawful (in regard to marriage) for you He (Ibn Abu Mulaika) said: I refrained from (narrating this hadith) for a year or so on account of fear. I then met al-Qasim and said to him: You narrated to me a hadith which I did not narrate (to anyone) afterwards. He said: What is that? I informed him, whereupon he said: Narrate it on my authority that 'A'isha (Allah be pleased with her) had narrated that to me.

Book 008, Number 3427:
Umm Salama said to 'A'isha (Allah be pleased with her): A young boy who is at the threshold of puberty comes to you. I, however, do not like that he should come to me, whereupon 'A'isha (Allah be pleased with her) said: Don't you see in Allah's Messenger (may peace be upon him) a model for you? She also said: The wife of Abu Hudhaifa said: Messenger of Allah, Salim comes to me and now he is a (grown-up) person, and there is something that (rankles) in the mind of Abu Hudhaifa about him, whereupon Allah's Messenger (may peace be upon him) said: Suckle him (so that he may become your foster-child), and thus he may be able to come to you (freely).

Book 008, Number 3428:
Zainab daughter of Abu Salama reported: I heard Umm Salama, the wife of Allah's Apostle (may peace be upon himy, saying to 'A'isha: By Allah, I do not like to be seen by a young boy who has passed the period of fosterage, whereupon she ('A'isha) said: Why is it so? Sahla daughter of Suhail came to Allah's Messenger (may peace be upon him) and said: Allah's Messenger, I swear by Allah that I see in the face of Abu Hudhaifa (the signs of disgust) on account of entering of Salim (in the house), whereupon Allah's Messenger (may peace be upon him) said: Suckle him. She (Sahla bint Suhail) said: He has a heard. But he (again) said: Suckle him, and it would remove what is there (expression of disgust) on the face of Abu Hudhaifa. She said: (I did that) and, by Allah, I did not see (any sign of disgust) on the face of Abu Hadhaifa .


ஃபத்வா விவரங்கள் செய்திகளில்:
Yahoo News: http://news.yahoo.com/s/nm/20070522/od_nm/egypt_fatwa_dc

Jerusalem Post news:
http://www.jpost.com/servlet/Satellite?pagename=JPost/JPArticle/ShowFull&cid=1178708655924

Quote:
In BBC News:
http://news.bbc.co.uk/1/hi/world/middle_east/6681511.stm

Breastfeeding fatwa causes stir
One of Sunni Islam's most prestigious institutions is to discipline a cleric after he issued a decree allowing women to breastfeed their male colleagues.


Good Article for this Fatwa at FFI : with Muslim Comments
http://www.news.faithfreedom.org/index.php?name=News&file=article&sid=1309

--------------------------------------------------------------------------------------
3. குழந்தைக்கு பால் கொடுத்துக்கொண்டு தூங்கிக்கொண்டு இருந்த ஒரு தாயில் வயிற்றில் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம், செய்யத்தூண்டிய மற்றும் சபாஷ் என்றுச் சொன்ன முகமது.

அபு எஃபக் என்பவரை முகமது கொலை செய்தார். எனவே, அஸ்மா என்ற பெண் இவரைப்பற்றி விமர்சித்து கவிதை எழுதினார். அந்த பெண்ணிற்கு 5 மகன்கள். ஒரு மகனோ பால் குடிக்கும் வயது உடையவன்.

அந்த கவிதை வரிகளை கேட்டவுடனே, முகமது சொன்னார், இந்த பெண்ணை எனக்காக யார் அழிப்பது? உமர் முன்னுக்கு வந்தார். அன்று இரவு அப்பெண்ணின் வீட்டிற்குச் சொன்றார். எல்லாரும் தூங்கிக்கொண்டு இருந்தனர். ஒரு குழந்தை தன் தாயிடம் பால் குடித்துக்கொண்டு இருந்தது. அக்குழந்தையை வேறுபடுத்தி, அப்பெண்ணின் வயிற்றில் தான் கொண்டு வந்த வாள் எடுத்து குத்தினான்.


முடிந்தது அப்பெண்ணின் கதை. மறுநாள் முகமதுவிற்கு தெரிவித்தான். முகமது சொன்னார், " நீ அல்லாவிற்கும், அவர் தூதருக்கும் ( முகமது) உதவி செய்தாய்"!

கொலை செய்தவனுக்கு, குற்ற உணர்ச்சி உண்டானது, முகமதுவிடம் சொல்கிறான், "அவளுக்கு 5 பிள்ளைகள் உண்டு, நான் ஏதாவது தவறு செய்தேனோ?.." முகமது சொல்கிறார் "இல்லை", நீ தவறு செய்யவில்லை.


Ishaq: 676 "'You obey a stranger who encourages you to murder for booty. You are greedy men. Is there no honor among you?' Upon hearing those lines Muhammad said, 'Will no one rid me of this woman? ' Umayr, a zealous Muslim, decided to execute the Prophet's wishes. That very night he crept into the writer's home while she lay sleeping surrounded by her young children. There was one at her breast. Umayr removed the suckling babe and then plunged his sword into the poet.

The next morning in the mosque, Muhammad, who was aware of the assassination, said, ' You have helped Allah and His Apostle.'

Umayr said, 'She had five sons; should I feel guilty?'

'No,' the Prophet answered. 'Killing her was as meaningless as two goats butting heads .'"

இக்கொலை பற்றி இஸ்லாமியர்களின் மறுப்பும், அதற்கான பதிலும் இங்கு காணலாம்.

http://www.answering-islam.de/Main/Silas/asma.htm


முதலில் பார்த்த முரண்பாடு பற்றி நான் அதிகமாக எழுதினேன், மற்ற இரண்டு விவரங்கள் பற்றி படிக்கும் நீங்களே முடிவு செய்யுங்கள். இஸ்லாம் என்றால் என்னவென்று? "இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் என்றுச் சொல்லும்" அறிஞர்கள் இவைகளைப்பற்றி மேடைகளில் பேசுவார்களா?.....
 
 
 

இஸ்லாம்; குர்-ஆனும், விஞ்ஞானமும்-1:ஒட்டக சிறுநீர் உடலுக்கு ஆரோக்கியம்

விஞ்ஞானிகள் உலகத்தில் எத்தனையோ கண்டுபிடிப்புகள், மருந்துகள் கண்டுபிடித்துள்ளனர். ஆனால், 1400 ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு அருமையான கண்டுபிடிப்பை "முகமது" அவர்கள் சொன்னார்கள், என்ன அது?

உடல் ஆரோக்கியத்திற்கு "ஒட்டக மூத்திரம்(சிறுநீர்)" குடிக்கவேண்டும்.

Volume: 4, Book: 52. Fighting for the Cause of Allah (Jihaad), Number: 261
Narrated by Anas bin Malik:


A group of eight men from the tribe of 'Ukil came to the Prophet and then they found the climate of Medina unsuitable for them. So, they said, "O Allah's Apostle! Provide us with some milk." Allah's Apostle said, "I recommend that you should join the herd of camels." So they went and drank the urine and the milk of the camels (as a medicine) till they became healthy and fat. Then they killed the shepherd and drove away the camels, and they became unbelievers after whey were Muslims. When the Prophet was informed by a shouter for help, he sent some men in their pursuit, and before the sun rose high, they were brought, and he had their hands and feet cut off. Then he ordered for nails which were heated and passed over their eyes, and whey were left in the Harra ( i.e. rocky land in Medina). They asked for water, and nobody provided them with water till they died (Abu Qilaba, a sub-narrator said, "They committed murder and theft and fought against Allah and His Apostle, and spread evil in the land.")


Volume: 7, Book: 71. Medicine, Number: 623
Narrated by Anas bin Malik:


Some people from the tribes of 'Ukl and 'Uraina came to Allah's Apostle and embraced Islam and said, "O Allah's Apostle! We are owners of livestock and have never been farmers," and they found the climate of Medina unsuitable for them. So Allah's Apostle ordered that they be given some camels and a shepherd, and ordered them to go out with those camels and drink their milk and urine . So they set out, but when they reached a place called Al-Harra, they reverted to disbelief after their conversion to Islam, killed the shepherd and drove away the camels. When this news reached the Prophet he sent in their pursuit (and they were caught and brought). The Prophet ordered that their eyes be branded with heated iron bars and their hands be cut off, and they were left at Al-Harra till they died in that state.

Volume: 8, Book: 82. Punishment of Disbelievers at War with Allah and His Apostle, Number: 794
Narrated by Anas:


Some people from the tribe of 'Ukl came to the Prophet and embraced Islam. The climate of Medina did not suit them, so the Prophet ordered them to go to the (herd of milch) camels of charity and to drink, their milk and urine (as a medicine). They did so, and after they had recovered from their ailment (became healthy) they turned renegades (reverted from Islam) and killed the shepherd of the camels and took the camels away. The Prophet sent (some people) in their pursuit and so they were (caught and) brought, and the Prophets ordered that their hands and legs should be cut off and that their eyes should be branded with heated pieces of iron, and that their cut hands and legs should not be cauterized, till they die.



மைகோவை உங்களுக்காகவே தான் இந்த பதிவு..(யாரும் தவறாக நினைக்கவேண்டாம், அவர் குர்-ஆன் விஞ்ஞானத்தைப்பற்றி கேட்டிருந்தார்)

இன்னும் குர்-ஆன் விஞ்ஞானம் தொடரும்...
 
 

இஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்

முன் பக்கம் செல்ல

HOME PAGE

தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்

1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1

2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2

3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3

4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4

பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்

1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1

2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2

பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்

1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்

2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்