இஸ்லாம் அமைதி மார்கமா? இஸ்லாம் இனிய மார்கமா? இஸ்லாம் உண்மையான மார்கமா?

ஆன்சரிங் இஸ்லாம்

பல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்

சத்தியவான் தளம் செல்ல

Saturday, December 13, 2008

இஸ்லாமின் எதிரி நம்பர் 1க்கு உலக தானியேல் பரிசு 2008:

 
Islam's Public Enemy #1, Got WORLD's 2008 Daniel of the Year

தந்தை ஜகரியா பூட்ரோஸ்


(என் அகராதியில் "பயம்" என்ற வார்த்தை இருக்காது, நான் இஸ்லாமியர்களை எவ்வளவு நேசிக்கிறேனோ, அவ்வளவு அதிகமாக இஸ்லாமை வெறுக்கிறேன்)




Coptic Priest Fr. Zakariya Boutrus
(My dictionary does not contain the word "Fear")




இஸ்லாமின் பகிரங்க எதிரி என்று அரபி செய்தித்தாள்களால் அழைக்கப்பட்ட "தந்தை ஜகரியா பூட்ரோஸ்"க்கு "WORLD 2008, Daniel of the Year" என்ற கவுரவ பட்டத்தைக் கொடுத்து "WORLD MAGAZINE" என்ற கிறிஸ்தவ பத்திரிக்கை சிறப்பித்துள்ளது.

["Times Magazine" என்ற பத்திரிக்கை, "Man of the Year" என்ற பட்டம் கொடுத்து எப்படி கவுரப்படுத்துகிறதோ அது போல கிறிஸ்தவ உலகில் "World Magazine" என்ற பத்திரிக்கை "Daniel of the Year 2008" என்ற பட்டம் கொடுத்து கவுரப்படுத்துகிறது.]

படிக்கவும்: http://www.worldmag.com/articles/14763

இந்த விவரத்தைப் பற்றி வாசகர்களின் பின்னூட்டங்களை இங்கு காணலாம். http://www.jihadwatch.org/archives/023804.php


ஏன் இவரை "இஸ்லாமின் பகிரங்க எதிரி நம்பர் 1" என்று இஸ்லாமியர்கள் கருதுகிறார்கள்?

இக்கேள்விக்கு பதில் தெரியவேண்டுமானால், கீழ் கண்ட விவரங்களைப் படியுங்கள்.

இவர் எகிப்திய‌ காப்டிக் கிறிஸ்தவ பாதிரியார். இவருக்கு யாரைக்கண்டும் பயமில்லை. [இஸ்லாமிய ஜிஹாதிகளைக் கண்டு பயப்படாதவர் என்றுச் சொன்னால் பார்த்துக் கொள்ளுங்கள் இவரது தைரியத்தை].

தன் அகராதியில் பயம் என்ற வார்த்தை இருக்காது என்றுச் சொல்கிறார். நான் இஸ்லாமியர்களை எவ்வளவு நேசிக்கிறேனோ, அவ்வளவு அதிகமாக இஸ்லாமை வெறுக்கிறேன் என்கிறார்.


இஸ்லாமியர்களுக்கு 10 கோரிக்கைகள்: குர்‍ஆன் வசனங்களை எடுத்துவிடுங்கள்..... இஸ்லாமிய அரசுகள் கிறிஸ்தவர்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும்....

Coptic Priest Zakaria Boutrus: Verses Must be Struck from the Koran; I Demand an Official Apology from Muslim Governments to Christians

இவரது தைரியத்திற்கு ஒரு நிதர்சனம், இவர் இஸ்லாமியர்களிடம் முன்வைத்த 10 கோரிக்கைகளாகும். இஸ்லாமிய நாடுகளில் அதிக சூட்டை உருவாக்கிய அந்த 10 கோரிக்கைகள் என்ன? மேலும் படிக்கவும்....

இவரது இந்த 10 கோரிக்கைகளை இவர் அரபியில் சொல்ல, ஆங்கிலத்தில் வீடியோவின் அடியில் காட்டப்பட்ட இந்த வீடியோவை காணவும்.

http://www.youtube.com/watch?v=4HXX2fO8pM4

இந்த வீடியோவின் ஆங்கில மொழிபெயர்ப்பை இங்கு படிக்கலாம்: http://memri.org/bin/articles.cgi?Page=archives&Area=sd&ID=SP94305



இந்த 10 கோரிக்கைகளை தமிழிலும் ஆங்கிலத்திலும் கீழே படிக்கவும்:

நேர்க்காணல் காண்பவர்: நீங்கள் இப்படி இஸ்லாம் பற்றி விமர்சிப்பதை நிறுத்தவேண்டுமானால், இஸ்லாமியர்கள் என்ன செய்யவேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்?

தந்தை ஜகரியா: என் கோரிக்கைகள் 10 பிரச்சனைகளை உள்ளடக்கியது. இவைகளை நாம் 10 தேவைகள் (10 Demands) என்று கூட அழைக்கலாம். இவைகளை நான் கேட்பது எனக்காக அல்ல, சத்தியத்திற்காகவும், எங்கள் நம்பிக்கைக்காகவும், இயேவிற்காகவும் கேட்கிறேன்.

கோரிக்கை 1: முதலாம் கோரிக்கை இது தான், அதாவது இயேசுவின் தெய்வீகத்தன்மையை மறுக்கும் எல்லா குர்‍ஆன் வசனங்களையும் குர்‍ஆனிலிருந்து எடுத்துவிடுங்கள்.

First, striking out all the Koranic verses that deny the divinity of Jesus and the revelation of God in him.

கோரிக்கை 2: இரண்டாவதாக, இயேசுவே இறைவனின் வார்த்தை என்றும், இறைவனின் ஆவி என்றும் அங்கீகரியுங்கள். இதை மறைக்காமல் ஏற்றுக்கொள்ளுங்கள்.

Second, acknowledging that Jesus is the spirit and word of God, as they truly believe, without hiding this fact.

கோரிக்கை 3: கிறிஸ்தவர்களை கொள்ளுங்கள் என்று வரும் குர்‍ஆன் வசனங்களையும், ஹதீஸ்களையும் எடுத்துவிடுங்கள். உதாரணத்திற்கு குர்‍ஆன் அல்-தவ்பா வசனம் 29 போன்ற வசனங்களை எடுத்துவிடுங்கள்.

வேதம் அருளப் பெற்றவர்களில் எவர்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஈமான் கொள்ளாமலும், அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் ஹராம் ஆக்கியவற்றை ஹராம் எனக் கருதாமலும், உண்மை மார்க்கத்தை ஒப்புக் கொள்ளாமலும் இருக்கிறார்களோ. அவர்கள் (தம்) கையால் கீழ்ப்படிதலுடன் ஜிஸ்யா (என்னும் கப்பம்) கட்டும் வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள். (குர்‍ஆன் 9:29)


Third, striking out the Koranic verses and hadiths that incite to kill Christians, like in the Al-Tawba chapter, v.29: 'Fight those who do not believe in Allah, nor in Judgment Day, nor do they prohibit what Allah and His messenger have prohibited, nor do they follow the religion of truth' – that is, Islam. Among whom? 'Among the People of the Book.'

நேர்க்காணல் காண்பவர்: இவ்வசனத்தில் "வேதம் அருளப்பெற்றவர்கள்" என்றால் யார்? "Who are..."

தந்தை ஜகரியா: கிறிஸ்தவர்களும் யூதர்களும் தான். "ஜிஸ்யா (என்னும் கப்பம்) கட்டும் வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள்" என்பது கொலைக்கு சமமாகும்.

"The Christians and Jews. 'Until they pay the Jizya poll tax in submission.' This is murder.



கோரிக்கை 4: நான்காவதாக, குர்‍ஆனிலும் ஹதீஸ்களிலும், தீவிரவாததிற்கும் இதற்கு இணையாக உள்ள அடக்கியாளுதல் பற்றியுள்ள அனைத்து வசனங்களையும் நீக்கி விடுங்கள்.

Number four, striking out the Koranic verses and Hadiths that incite to terrorism and oppression in all their forms."


நேர்க்காணல் காண்பவர்: தீவிரவாதம் மற்றும் அடக்கியாளுதல் என்றால் என்ன?
"What do you mean by terrorism and oppression?"


தந்தை ஜகரியா: நம்பிக்கையாளர்கள் சண்டையிடவேண்டும் என்றுச் சொல்வது தீவிரவாதமாகும், இன்னும் ஒரு ஹதீஸில் "அல்லாவைத் த‌விர‌ தொழுதுக் கொள்வ‌த‌ற்கு வேறு யாருமில்லை என்று ம‌க்க‌ள் சொல்லும் வ‌ரை அவ‌ர்க‌ளோடு போரிட‌ நான் க‌ட்ட‌ளையிட‌ப்ப‌ட்டுள்ளேன்" என்று கூறப்பட்டுள்ளது. இதைத் தான் தீவிரவாத‌ம் என்ப‌து, கொலை செய்த‌ல் என்ப‌து.

"Terrorism – 'Urge the believers to fight,' and the hadith: 'I was commanded to fight people until they say: There is no God but Allah.' All this is terrorism and murder.

கோரிக்கை 5: தேவனின் இரட்சிப்பின் திட்டமாகிய இயேசுவின் சிலுவை பற்றிய அனைத்து வசனங்களையும், குர்‍ஆனிலிருந்து நீக்கவேண்டும்.

Deleting all the quran verses that are aspersing in the crucifixion of the Christ, and scepticizing in the great God's plan for the redemption


கோரிக்கை 6: ஆறாவதாக, இஸ்லாமியர்களின் மசூதிகளும், இதர ஊடகங்கள் மூலமும் இயேசுவையும், எங்கள் பரிசுத்த வேதாகமத்தையும், தாக்குவதை நிறுத்திக்கொள்ளுங்கள்.

Number six:Stopping the attack on Jesus and the Holy Book in mosques and in all the media.

கோரிக்கை 7: ஏழாவதாக, எல்லா மக்களுக்கும், முக்கியமாக இஸ்லாமியர்களுக்கும் மத சுதந்திரத்தை தரவேண்டும். நீங்கள் கேட்கலாம், இஸ்லாமியர்கள் பற்றி எனக்கு என்ன கவலை என்று? இல்லை, இஸ்லாமியர்களுக்கும் தங்களுக்கு விருப்பமான மார்க்கத்தை பின்பற்ற மற்றும் தன் நம்பிக்கையை வெளிப்படுத்த அவர்களுக்கு சுதந்திரம் தரவேண்டும்.

Number seven: Giving people and Muslims the freedom of... You may ask what do I care about the Muslims? No! They must have the freedom to choose their religion and the freedom to express their belief.


கோரிக்கை 8: இஸ்லாமை விட்டு வெளியேறுகிறவர்களை கொல்லும் தண்டனையை இரத்து செய்யவேண்டும். கிறிஸ்தவத்திற்கு மாறினால் அவர்களை கொடுமைப்படுத்துவதை நிறுத்தவேண்டும், அவர்களை சிறைகளில் அடைப்பதை நிறுத்தவேண்டும், மட்டுமல்ல அவர்களை கொல்வதை நிறுத்த வேண்டும்.

Number eight:To abolish the punishment for apostasy, to stop torturing people who convert to Christianity, and to stop imprisoning or even killing them.

கோரிக்கை 9: இஸ்லாமியர்களால் ஆக்கிரமித்து அங்கிருந்த கிறிஸ்தவர்களைக் கொன்ற காரணத்தினால், அரபி நாடுகள் அனைத்தும், கிறிஸ்தவர்களிடம் "அதிகார பூர்வமாக" பொது மன்னிப்பை கேட்கவேண்டும்.

Number nine:Formal apologies must be made by leaders throughout the Arab world for the murder of Christians in countries invaded by Islam.

கோரிக்கை 10: இஸ்லாமிய ஆரம்ப கால முதல் இன்று வரை இஸ்லாமிய‌ சரித்திரம் அனைத்திலும், கிறிஸ்தவ நம்பிக்கைக்கு எதிராக செய்த அனைத்து அவதூறுகளுக்காக, இஸ்லாமிய அரப் நாடுகளில் உள்ள அனைத்து தலைவர்கள் எங்களிடம் பொது மன்னிப்பை அல்லது மன வருத்தத்தை கோரவேண்டும்.

Number ten: Leaders throughout the Arab world should make formal apologies for the insults directed against our faith throughout Islamic history.

இந்த பாதிரியாருக்கு என்ன பைத்தியமா பிடித்துள்ளது?


இந்நிகழ்ச்சியை காண்பவர்கள் என்னிடம் கேட்கலாம்: "இந்த பாதிரியாருக்கு என்ன பைத்தியமா பிடித்துள்ளது?" அல்லது "இந்த கோரிக்கைகளை ஒரு பத்தியக்காரனால் மட்டுமேயா கேட்கமுடியும்!" "குர்‍ஆன் வ‌ச‌ன‌ங்க‌ளை நீக்கிவிடுங்க‌ள்" என்ற‌ வாசக‌த்தில் என்ன‌ அர்த்த‌ம் உள்ள‌து என்று கேட்கிறீர்க‌ளா? இப்ப‌டியெல்லாம் கேட்டு இவ‌ர் என்ன‌ செய்ய‌ப்போகிறார் என்று என்னிட‌ம் கேட்கிறீர்க‌ளா?

ச‌ரி, உங்க‌ளால் உங்க‌ள் குர்‍ஆனில் உள்ள‌ வ‌ச‌ன‌ங்க‌ளை நீக்கமுடியாது என்றுச் சொல்வீர்களானால்? எங்களிடம் ஏன் எங்கள் நம்பிக்கையை மாற்றிக் கொள்ளுங்கள் என்று கேட்கிறீர்கள்? நீங்கள் சொல்வதையே நாங்களும் சொல்லவேண்டும் என்று எங்களிடம் ஏன் கேட்கிறீர்கள்? அப்படி நாங்கள் மாற்றிக்கொள்ளவில்லையானால், ஏன் வாளை காட்டுகிறீர்கள்?

The viewers may say: 'Is this priest crazy, or what? These demands could only be made by an insane man... To strike out Koranic verses... Does this make any sense? What is he going on about?' OK, if you cannot change (the Koran), why are you asking us to change our beliefs? Why do you demand that we say what you say, or else - the sword?


தமிழாக்க குறிப்பு: மற்றும் கீழ் கண்ட விவரங்களைக் ஆங்கிலத்தில் படியுங்கள், வீடியோவில் அவர் பேசியதை நீங்களே கேளுங்கள். ஒரு பெண் முஹம்மதுவிற்கு தேவையானால், அதை மற்றவர்கள் கொடுக்கவேண்டுமாம்....

"(Al-Halabi) says: ' If the Prophet wanted an available woman...' – in other words, an unmarried woman, a widow, or a single woman – '...he was allowed to enter her...' I don't like to use the word i-n-t-e-r-c-o-u-r-s-e. '...without her guardian and without witnesses...' Without witnesses. '...and against her will.' Against her will. 'If he desired a married woman, her husband had to divorce her for him. And if he desired a servant-girl, her master had to give her to him. He can even marry off the woman to whoever he wants, against her will.'"

நேர்க்காணல் காண்பவர்: "நமக்கு தெரியும் அல்லவா? அதாவது இவைகள் மற்ற சாதாரண மனிதர்களுக்கு அனுமதிக்கப்படாதது, ஆனால், நபிக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டது"

Interviewer: "We know that the Prophet is allowed what others are not."

தந்தை ஜகரியா: "ஏன் இப்படி?". உலகத்தில் உள்ள மற்ற மனித வர்க்கம் படைக்கப்பட்ட விதமாக அல்லாமல் வேறு விதமாக இவர் படைக்கப்பட்டு இருக்கிறாரா?

Boutrus: "Why? Is he made of different stuff than the rest of mankind?"

தந்தை ஜகரியாவின் "10 கோரிக்கை" நேர்ககாணலின் தமிழாக்கம் முற்றிற்று


இந்த கட்டுரையை வாசிக்கும் வாசகர்கள் இப்போது புரிந்துக்கொண்டு இருப்பார்கள் "ஏன் இஸ்லாமியர்கள் இவரை இஸ்லாமின் பகிரங்க எதிரி நம்பர் 1" என்று அழைக்கிறார்கள் என்று!





தந்தை ஜகரியா அவர்களின் தளம் பற்றிய அறிமுகம்:

இவர் இஸ்லாமியர்களுக்கு பதிலை மிகவும் காரசாரமாக அளிக்கிறார். ஆதரத்தோடும் அளிக்கிறார். இவரது தளத்தில் அனேக பதில்களை Word and PDF Formatல் காணலாம். இவைகளை நம் தளங்களில் பயன்படுத்திக்கொள்ள அனுமதியும் கொடுத்துள்ளார். அடி மேல் அடி போட்டால் அம்மியும் நகரும் என்றுச் சொல்வார்கள், அதே போல, இவர் தன் பதில்களை இணையம் மற்றும் தொலைத் தொடர்பு என்று அனேக வழிகளில் "சத்தியத்தை" பரப்புகிறார், பொய்யின் அடித்தளத்தை அசைக்கிறார்.

இன்று இஸ்லாமியர்களின் [பொய்) வாதங்கள் வேகமாக பரவுவதற்கு காரணம், இஸ்லாம் பற்றிய உண்மையை நாம் அறியாததினால் தான். அவர்கள் நமக்கு உண்மையைச் சொல்லமாட்டார்கள், நாம் தான் அவைகளை படித்து தெரிந்துக்கொள்ள வேண்டும், மற்றவர்களுக்கும் தெரிவிக்க வேண்டும். மயிலே மயிலே இறகு தா என்று கேட்டால், அது கொடுக்காது, நாம் தான் சென்று அதனிடமிருந்து எடுத்துக் கொள்ளவேண்டும்.

அவரின் தளத்திலிருந்து(http://www.fatherzakaria.net/) சில கட்டுரைகளை இங்கு தருகிறேன்.

இந்த பத்து கோரிக்கைகள் பற்றிய அவரது கட்டுரை (PDF)

The ten petitions : http://www.fatherzakaria.net/books/qaf/pdf/81-Episode.pdf

இந்த புத்தகங்கள் அனைத்தும் ஆங்கிலத்தில் (Word / PDF Format ல்) உள்ளன.

இவரது தள புத்தகங்கள்/கட்டுரைகள்/கேள்வி பதில்கள்:
Link : http://www.fatherzakaria.net/books.htm



Spiritual Books 8 புத்தகங்கள்
Questions About Faith 90 புத்தகங்கள்
Books About Islam 15 புத்தகங்கள்


இவர் பேசிய வீடியோக்கள் மற்றும் கேள்வி பதில் நிகழ்ச்சிகளின் "YouTube" வீடியோக்களை இந்த தொடுப்பை சொடுக்கி பார்க்கலாம்.

http://www.youtube.com/results?search_query=father+zakaria

ஏன் இவருக்கு "WORLD MAGAZINE" என்ற பத்திரிக்கை "தானியேல்" என்ற பழைய ஏற்பாட்டு நபரில் பட்டம் அளித்து கவுரவித்தது என்பதை இன்னும் கிறிஸ்தவர்கள் புரிந்துக் கொள்ளாமல் இருக்க வாய்ப்பு இல்லை.





தானியேல் 6:10 தானியேலோவென்றால், அந்தப் பத்திரத்துக்குக் கையெழுத்து வைக்கப்பட்டதென்று அறிந்தபோதிலும், தன் வீட்டுக்குள்ளேபோய், தன் மேல் அறையிலே எருசலேமுக்கு நேராகப் பலகணிகள் திறந்திருக்க, அங்கே தான் முன் செய்து வந்த படியே, தினம் மூன்று வேளையும் தன் தேவனுக்கு முன்பாக முழங்காற்படியிட்டு ஜெபம்பண்ணி, ஸ்தோத்திரம் செலுத்தினான்.

இராஜாவின் கட்டளையானாலும் பயப்படுவதில்லை, தேவனைத் தவிர இராஜாவிடம் வேண்டிக்கொள்வதில்லை. மனுஷனுக்கு கீழ் படிவதைப் பார்க்கிலும் இறைவனுக்கு கீழ்படிவது மேன்மை. சிங்கத்தின் கெபியில் அடைக்கப்பட்டாலும் சரி, பயபடப்போவதில்லை என்ற எண்ணி செயல்பட்ட மாவீரனாம் தானியேலின் பெயரில் "தந்தை ஜகரியாவை" கவுரவித்ததில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.

இவ்வாண்டு 2008, கிறிஸ்தவர்கள் தைரியமாக சத்தியத்தை வெளிப்படுத்தும் ஆண்டு.

வாழ்க இயேசு
வாழ்க தானியேல்
2008ம் ஆண்டின் தானியேலே நீ வாழ்க
வாழ்க தந்தை ஜகரியா பூட்ரோஸ்



மேலும் விவரங்களுக்கு (ZAKARIA BOTROS )
Meet Zakaria Botros, WORLD's 2008 Daniel of the Year.

Islam's Public Enemy #1 — Coptic priest Zakaria Botros fights fire with fire
 

இஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்

முன் பக்கம் செல்ல

HOME PAGE

தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்

1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1

2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2

3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3

4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4

பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்

1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1

2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2

பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்

1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்

2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்