இஸ்லாம் அமைதி மார்கமா? இஸ்லாம் இனிய மார்கமா? இஸ்லாம் உண்மையான மார்கமா?

ஆன்சரிங் இஸ்லாம்

பல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்

சத்தியவான் தளம் செல்ல

Thursday, August 4, 2011

இஸ்லாமை முதல்முறையாக ருசி பார்த்த முன்னால் கிறிஸ்தவர்

 

இஸ்லாமை முதல்முறையாக ருசி பார்த்த முன்னால் கிறிஸ்தவர்

ஆஸ்திரேலியாவில் சமீப காலத்தில் இஸ்லாமியராக மாறிய ஒரு கிறிஸ்தவர், தன் நண்பர்களுடன் மது அருந்தியதற்காக, நான்கு நல்ல இஸ்லாமியர்கள் அவரது வீட்டில் இரவு நேரத்தில் நுழைந்தனர். மூன்று பேர் அந்த நபர் படுத்திருந்த கட்டிலில் அவரை அப்படியே கை கால்களை அழுத்தி பிடித்தார்கள். நான்காவது இஸ்லாமியர் ஒரு மின்சார வைரைக் கொண்டு, (எலெக்ட்ரிக் வைர்)  நாற்பது முறை அவரை அடித்தார். இந்த நான்கு பேரையும் ஆஸ்திரேலிய காவல் துறை கைது செய்து விசாரித்து வருகிறது, மேலும் அறிய இந்த தொடுப்பை படிக்கவும்: http://www.heraldsun.com.au/news/intruders-whip-silverwater-man-31-for-drinking/story-e6frf7jo-1226097080261
  
இந்த சிறிய செய்தி எதனை நமக்கு தெரிவிக்கிறது, இதனால் இஸ்லாமியரல்லாதவர்கள் எடுக்கவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன‌?

1)  நல்ல (கெட்ட) இஸ்லாமியர்களும் கெட்ட(நல்ல) இஸ்லாமியர்களும்:

இஸ்லாமின் பெயரில் உலகில் எங்கு வன்முறை நடந்தாலும், நம்முடன் வசிக்கும் (நல்ல) இஸ்லாமியர்கள் வன்முறையில் ஈடுபட்ட (கெட்ட) இஸ்லாமியர்களை கண்டிப்பார்கள். அவர்கள் செய்வது தவறு என்பார்கள், தனி மனிதன் சட்டத்தை கையில் எடுப்பது தவறு என்றுச் சொல்வார்கள். இஸ்லாம் இப்படியெல்லாம் வன்முறையில் ஈடுபடும்படி சொல்லவில்லை என்றுச் சொல்வார்கள். இஸ்லாமியர்களின் வாயிலிருந்து இப்படிப்பட்டவைகளை கேட்பதற்கு மிகவும் நன்றாக இருக்கும்.   இவர் சொல்வது சரி என்று நாம் நினைத்து இருந்தால், இன்னும் சில நாட்களில் இன்னொரு வன்முறை (கெட்ட) இஸ்லாமியர்களால் அழகாக நடந்தேறும். இந்த முறையும் நம்முடைய நண்பர்களாகிய நல்ல இஸ்லாமியர்கள் அதே வசனத்தை வார்த்தை மாறாமல் அப்படி நம்மிடம் ஒப்புவிப்பார்கள். நாமும் கேட்டுக்கொண்டு இருப்போம்.  அதன் பிறகு சில நாட்களுக்கு பின்பு... அதே கதை, அதே கதா நாயகன், அதே வசனம், அதே "சுபம்".

2) உள்ளே வெளியே:

இஸ்லாமின் ஒரு தனித்தன்மை என்னவென்றால், இஸ்லாமுக்கு வெளியே இருப்பவர்களிடம் மட்டும் இஸ்லாம் கடுமையாக இருக்காது, தனக்குள் இருப்பவர்களையும் தாக்கும், தகிக்கும். இது ஆச்சரியப்படவேண்டிய விஷயமல்ல, இதுதான் இஸ்லாமின் அடிப்படை அஸ்திபாரம்.

மேலே நாம் படித்த செய்தியின் படி, ஒரு கிறிஸ்தவர் இஸ்லாமியராக மாறினார். (பெற்றோர்கள் கிறிஸ்தவர்கள் என்பதால் அவர்களுக்கு பிறக்கும் பிள்ளைகளும் கிறிஸ்தவர்கள் தானே... அந்த வகையில் இவர் கிறிஸ்தவரா அல்லது உண்மையாகவே இயேசுவை சுயமாக பின்பற்றும் கிறிஸ்தவராக இருந்தாரா நமக்குத் தெரியாது). வாழுவதோ ஒரு ஜனநாயக நாட்டில், அதாவது ஆஸ்திரேலியாவில்.  இஸ்லாமியர்கள் மது அருந்தினால், அவர்களுக்கு இஸ்லாமின் ஷரியா சட்டத்தின் படி 40 சவுக்கு அடிகள் கிடைக்கும் என்று இவருக்கு சொன்னார்களோ இல்லையோ நமக்குத் தெரியாது. இவரோ இஸ்லாமியராக மாறிவிட்டார். ஆனால், இவர் தன் நண்பர்களுடன் போதை ஏற்றிக்கொண்டு வந்து வீட்டில் படுத்து இருக்கும் போது, நான்கு இஸ்லாமியர்கள் வந்து, அந்த போதையை  40 அடிகள் கொடுத்து இறக்கிவிட்டார்கள்.

ஒரு முஸ்லிம்  இஸ்லாமிய ஆட்சி நடக்காத‌ நாட்டிலும் இஸ்லாமிய சட்டத்தை தன் கையில் எடுத்துக்கொள்வான் என்பதற்கு இந்த நிகழ்ச்சி ஒரு சான்று.


3) இஸ்லாமியர்களின் உள்ளக்குமுறலும், இஸ்லாமியரல்லாதவர்களின் உள்ளார்ந்த வடுக்களும்:

யாரோ சில இஸ்லாமியர்கள் தங்கள் கையில் இஸ்லாமிய சட்டத்தை எடுத்துக்கொண்டார்கள் என்பதற்காக இப்படி எல்லாரையும் குற்றப்படுத்துவது நியாயமா? தர்மமா என்று கேட்பார்கள்.   இந்த வசனங்களை நாங்கள் ஆண்டாண்டு காலமாக கேட்டுக்கொண்டு தான் இருக்கிறோம், நீங்களும் சொல்லிக்கொண்டு தான் இருக்கிறீர்கள். அடி வாங்கியவனும் வாங்கிக்கொண்டு தான் இருக்கிறான்,  நீங்கள் சொல்வது போல "ஒரு சில இஸ்லாமியர்களால்" உலகம் அவஸ்தை பட்டுக்கொண்டுத் தான் இருக்கிறது.

ஏதோ ஒரு முலையில் நின்றுக்கொண்டு நீங்கள் போடும் சத்தத்தை  உங்களின் அந்த ஒருசில இஸ்லாமியர்கள் கேட்டு தங்கள் வன்முறையை விட்டுவிடப்போவதில்லை, மனிதர்களை நிம்மதியாக வாழவிடப்போவதில்லை.  இப்போது சில வார்த்தைகளை கொட்டிவிட்ட நீங்கள், நாட்கள் கடந்துச் செல்லும் போது மறந்துவிடுவீர்கள், ஆனால் இஸ்லாமியர்களால் நாங்கள் எங்கள் உடல்களில் சுமந்துக்கொண்டு இருக்கும் வடுக்கள் இன்னும் காயாமல் அப்படியே இருக்கிறது. 

உலக சட்டங்களினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே, 
ஷரியாவினால் சுட்டவடு.
(ஹிஜ்ரிக்கு பின்பு வள்ளுவர் வாழ்ந்திருந்தால் இப்படி எழுதியிருப்பாரோ)


ஆகையால், இஸ்லாமியரல்லாதவர்களை எச்சரிக்கை செய்வதும், அவர்களை தட்டி எழுப்புவதும் நம்முடைய கடமையாக உள்ளது. முக்கியமாக கிறிஸ்தவ பெற்றோர்களையும், சபைகளின் போதகர்களையும் எச்சரிக்கை செய்வது நல்லது என்று நான் எண்ணுகின்றேன்.

4)   மருந்தில்லா வியாதிகளும், மன்னிப்பில்லா இஸ்லாமும்

அருமையான கிறிஸ்தவ பெற்றோர்களே, கிறிஸ்தவ சபை போதகர்களே, உங்கள் குழந்தைகள் தெரிந்தோ தெரியாமலோ நெருப்பை தொட்டால் ஆபத்து என்று அறிந்து அவர்களை எச்சரிக்கை செய்கிறீர்கள். ஆபத்தான பொருட்களை குழந்தைகளின் கைகளுக்கு எட்டாத தூரத்தில் வைக்கிறீர்கள்.  அதே குழந்தைகள் வாலிபர்களான உடனே, அவர்களுக்கு மென்மையாக  அறிவுரை கூறுகிறீர்கள். வேகமாக இருசக்கர வண்டியை ஓட்டுவதிலிருந்து,  எயிட்ஸ் நோய்க்கு தப்பித்துகொள்வதற்கான எல்லா எச்சரிக்கைகளையும் கொடுக்கிறீர்கள்.  ஆனால், நாம் மேலே கண்ட செய்தியைப் போல ஒரு செய்தி உங்கள் பிள்ளைகள் பற்றி கூறப்படுமானால் உங்கள் உள்ளம் எப்படி துடிக்கும். ஒரு நபர் தூங்கிக்கொண்டு இருக்கும் போது, வீட்டை உடைத்து, கட்டிலில் கை கால்களை  இறுக்க பிடித்து, 40 சவுக்கு அடிகள் ஒருவர் எதிர்பார்க்காத போது அடிக்கப்படுமானால் அதனை எப்படி சகித்துக்கொள்ளமுடியும்? (இயேசு ஒன்று குறைய நாற்பது சவுக்கு அடிகள் வாங்கினார், இந்த நபரோ, ஏன் அந்த ஒன்று குறையவேண்டும் என்பதற்காக நாற்பது அடிகளையும் வாங்கிவிட்டார். அன்பான நண்பரே உனக்கு இது வேண்டுமா?)

எனவே, இஸ்லாமை பற்றி எச்சரிக்கையாக இருக்கும்படி உங்கள் சபை விசுவாசிகளுக்கு போதகர்களாகிய நீங்கள் எச்சரிக்கை விடுக்கமாட்டீர்களா?

"என் பையன் முஸ்லிமாக மாறிவிட்டானா.. பரவாயில்லை.. அவன் விருப்பப்படி வாழட்டும் நல்லா இருக்கட்டும்" என்று சொல்கிறீர்களா? உங்கள் உள்ளத்தின் இந்த வார்த்தைகளுக்காக நான் உங்களை வாழ்த்துகிறேன். ஆனால், உங்க பையன் இஸ்லாமியனாக மாறிவிட்ட பிறகு நல்லா இருப்பானா? என்பது தான் கேள்வி.    அவன் தெரிந்தோ தெரியாமலோ தவறுகள் செய்யும்போது, நீங்கள் மன்னிப்பீர்கள், திருந்துவதற்கு  இன்னொரு வாய்ப்பை தருவீர்கள்.. ஆனால் இஸ்லாம் தராதே.. ஷரியா சட்டம் இரக்கமாக இருக்காதே.. ஒரு சில இஸ்லாமியர்களின் கைகள் சும்மா இருக்காதே..


5) இஸ்லாமியர்கள் கேட்கும் சில கேள்விகளையும், அதற்கான என் பதில்களையும் இப்போது பார்ப்போம்.

அ) ஒரு சில இஸ்லாமியர்கள் செய்யும் குற்றத்திற்கு, இஸ்லாமை குற்றப்படுத்துவது நியாயமா?

பதில்: ஆனால், எனக்கு இருக்கும் ஒரே மகன், அந்த ஒரு சில இஸ்லாமியர்களால் கொலை செய்யப்பட்டுவிட்டால், அவனை உங்கள் இஸ்லாமினால் திருப்பி தரமுடியுமா? உங்களால் தரமுடியுமா?


ஆ) இஸ்லாமிய ஆட்சி நடக்கும் நாடுகளில் தானே சில இஸ்லாமியர்கள் இப்படி சட்டத்தை கையில் எடுத்துக்கொள்கிறார்கள்? மற்ற நாடுகளில் இப்படி இல்லையே?

பதில்: அப்படியெல்லாம் ஒன்றுமில்லை, ஜனநாயக நாட்டில் இஸ்லாமியர்கள் கொன்றது ஆயிரம், இஸ்லாமிய நாட்டில் இஸ்லாமியர்கள் கொல்வது பதினாயிரம். சதவிகிதத்தில் வித்தியாசமே ஒழிய, இஸ்லாமிய சட்டத்தில் இல்லை.

ஆஸ்திரேலியா ஒரு இஸ்லாமிய நாடு இல்லை, இந்தியா ஒரு இஸ்லாமிய நாடு இல்லை, இங்கிலாந்து ஒரு இஸ்லாமிய நாடு இல்லை, இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இந்த எல்லா நாடுகளிலும் ஒரு சில இஸ்லாமியர்கள் வன்முறையில் ஈடுபடுவது சகஜமாகிவிட்டது.

இ) நாங்கள் இஸ்லாம் பற்றி மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லும் போது, அவர்கள் முஸ்லிம்களாகிவிட்டால் அவர்களை தண்டிக்கவேண்டும் என்பதற்காக அப்படி செய்வதில்லையே?

பதில்: நீங்கள் அப்படி செய்யமாட்டீர்கள், ஆனால், நீங்கள் செல்லும் மசூதியில் உங்களோடு அல்லாஹ்வை தொழுதுக்கொள்ளும் இதர நபர்கள் இப்படி செய்யமாட்டார்கள் என்று உங்களால் உறுதி மொழி கொடுக்கமுடியுமா?  நீங்கள் செல்லும் மசூதியின் இமாம் (தலைவர் தொழுகை நடத்துபவர்) தன் மசூதியில் இருக்கும் இதர மக்களை இப்படி சட்டத்தை கையில் எடுத்துக்கொள்ளவேண்டும் என்று அறிவுரை கூறமாட்டார் என்று உங்களால் உறுதி அளிக்கமுடியுமா?

நாம் மேலே படித்த செய்தியின்படி, புதிதாக இஸ்லாமியராக மாறிய அந்த நபர் மது அருந்தினார் என்று, வேறு இஸ்லாமிய நாட்டிலிருந்து வந்து இஸ்லாமியர்கள் தாக்கவில்லை. தன்னுடைய இஸ்லாமிய நண்பர்களே தாக்கினார்கள், தான் சென்று அல்லாஹ்வை தொழுதுக்கொள்ளும் அதே மசூதியின் அங்கத்தினர்களே அப்படிசெய்துள்ளார்கள்.  ஆயிரம் மைல்களுக்கு அப்பாலிலிருந்து ஒருவருக்கு ஆபத்துவராது,  தன் தோளில் கைபோட்டு மகிழந்த அதே முஸ்லிமினால் ஆபத்து வரும். இப்படித் தான்  அந்த நபருக்கு ஆபத்து வந்துள்ளது.

ஆக, இஸ்லாமியராக மாறுவது ஒரு துப்பாக்கியில் தானே தோட்டாக்களை போட்டு, அதனை தன் சக இஸ்லாமியரிடம் கொடுத்து, நான் எப்போதாவது இஸ்லாமிய சட்டத்தின்படி நடக்க தவறினால், இந்த துப்பாக்கியால் என்னை சுட்டுவிடு என்று சொல்வதற்கு சமமாகும்.

இஸ்லாமிய ஆட்சி நடக்காத நாட்டிலேயே இந்த கதி என்றால், இன்னும் அல்லாஹ்வின் ஆட்சி புரியும் நாட்டில் எவ்வளவு கொடுமைகள் இஸ்லாமியரல்லாதவருக்கு நடக்கும்?


6)  முன்னால் கிறிஸ்தவரின் பின்னால் வாழ்க்கை முஸ்லிமாக இருந்தால் நல்லது:

இப்போது இஸ்லாமை ஒரு விரலினால் ஊருகாயை தொட்டு நக்குவதைப் போல லேசாக ருசி பார்த்த அந்த நபர் என்ன தீர்மானம் எடுப்பார்?

இஸ்லாமுக்குள் இருந்துக்கொண்டே, ஜனநாயக நாட்டில் இருந்துக்கொண்டே மது அருந்தியதற்காக ஷரியாவின் சட்டத்தின் படி சவுக்கடி வாங்கியவர். இனி எனக்கு இஸ்லாம் வேண்டாம் என்று வெளிப்படையாக அறிக்கையிட்டால் என்ன நடக்கும்? மரண தண்டனை தான்.  இஸ்லாமின் படி ஒருவர் இஸ்லாமை விட்டு வெளியே சென்றால், அதனை வெளிப்படையாக கூறினால் மரணம் தான் முடிவு.  "இப்படியெல்லாம் இல்லை" என்று அறிக்கை கொடுப்பவர்கள் ஆயிரம் முஸ்லிம்கள் இருக்கிறார்கள், ஆனால், அரிவாளை எடுக்கும் ஒரு முஸ்லிம் போதுமே...கதையை முடிக்க!

எனவே, இவர் தன்னுடைய மனதில் இஸ்லாம் பற்றி எதை நினைத்து இருந்தாலும், வெளிப்படையாக கூறும் போது, இஸ்லாமை புகழ்ந்துக் கூறி, தான் இஸ்லாமிலேயே தொடருவதாக கூறினால் உயிர் தப்பலாம். அப்படி இல்லாமல் மனதில் உள்ளதை உள்ளது போல கூறினால், வேறு சில நான்கு இஸ்லாமியர்கள் இல்லாமலா போய்விடுவார்கள்?  அவர்களுக்கும் கட்டைகள், மின்சார வைர்கள், கத்திகள் துப்பாக்கிகள் கிடைக்காமலா போய்விடும்? ஒரு சில இஸ்லாமியர்கள் சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு, இப்படி கொன்றுவிட்டார்கள், இதற்காக இஸ்லாமை ஏன் குற்றப்படுத்துகிறீர்கள் என்றுச் சொல்லும் இஸ்லாமியர்கள் நம் பக்கத்துவிட்டில், அலுவலகத்தில் இல்லாமலா போய்விடுவார்கள்?

ஆஸ்திரெலியாவின் அந்த அடிவாங்கியவருக்கு திருமணமாகி இருந்து, மனைவி பிள்ளைகளோடு அவர் படுத்துயிருந்திருந்தால், தன் பிஞ்சு குழைந்தைகளின் கண்களுக்கு முன்னால், மனைவிக்கு முன்னால் அந்த நபர் அடிவாங்க வேண்டி இருந்திருக்கும். இந்த காட்டுமிராண்டித்தனத்தை எத்தனை நாட்கள் தான் உலகம் சகிக்குமோ? 

மது அருந்துவதை நான் ஆதரிக்கவில்லை, ஆனால், இஸ்லாமியர்கள் சட்டத்தை கையில் எடுப்பதை எப்போது நிறுத்தப்போகிறார்கள்? என்ற கேள்வியை இஸ்லாமியர்களுக்கு முன்பாக வைக்கிறேன்.



முடிவுரை: ஆகையால், கிறிஸ்தவ பெற்றோர்களே, கிறிஸ்தவ சபை போதகர்களே, இதர மார்க்கத்தவர்களே, தூங்கிகொண்டு இருந்தது போதும், எழுந்திருங்கள். இஸ்லாம் பற்றி கற்றுக்கொள்ளுங்கள், இந்த விழிப்புணர்வை பரப்புங்கள். இன்று நாம் சோம்பலாக இருந்தால், நாளைக்கு நம் பிள்ளைகளின் சாம்பலையும் நாம் காணமுடியாது.


--
7/22/2011 12:18:00 PM அன்று ஈஸா குர்-ஆன் - Isa Koran இல் Isa Koran ஆல் இடுகையிடப்பட்டது


இஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்

முன் பக்கம் செல்ல

HOME PAGE

தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்

1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1

2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2

3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3

4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4

பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்

1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1

2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2

பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்

1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்

2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்