இஸ்லாம் அமைதி மார்கமா? இஸ்லாம் இனிய மார்கமா? இஸ்லாம் உண்மையான மார்கமா?

ஆன்சரிங் இஸ்லாம்

பல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்

சத்தியவான் தளம் செல்ல

Saturday, April 12, 2008

இயேசுவின் வம்ச வரலாறு குழப்பமா?

மத்தேயுவில் காணப்படும் "தலைமுறை பட்டியல்" விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டது என்றும், இயேசுவின் பரிசுத்த தன்மைக்கு பங்கம் விளைவிப்பதாகவும், கால அளவு கோளாறுகள் உள்ளதாக, அடைகுறிக்குள் சொல்லியிருக்கிறார். அது என்ன என்று விவரமாக சொல்லியிருந்தால் நன்றாக இருந்துயிருக்கும். ஆனால் சொல்லவில்லை. இருந்தாலும், எனக்கு தெரிந்த சில விவரங்களை தரலாம் என்று எண்ணுகிறேன்.

நான்கு சுவிசேஷங்களும், நான்கு வகையான பிரிவினருக்காக எழுதப்பட்டது என்று வேதபண்டிதர்கள் சொல்கிறார்கள்.

1. மத்தேயு : இஸ்ரவேல் மக்களுக்காக எழுதப்பட்டது. எனவே தான் யூதர்களின் இலக்கிய மொழியாகிய எபிரேய மொழியில் எழுதப்பட்டது.

2. மாற்கு : ரோமர்களுக்காக ஏழுதப்பட்டது.

3. லூக்கா : கிரேக்க மக்களுக்காக அதாவது எல்லாவற்றையும் ஆராய்ந்து, ஞானத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் மக்களுக்காக எழுதப்பட்டது.

4. யோவான் : விசுவாசிகளுக்காவும், மற்றும் சாதாரண மக்களுக்காகவும் எழுதப்பட்டது.

1. வம்ச பட்டியலின் நோக்கம்:

மத்தேயு சுவிசேஷம் இயேசுவை "யூதர்களின் இராஜா ( The King of Jews)" என்று காட்டுவதற்கும், தாவிதின் (தாவுத்) சிம்மாசனத்தில் இராஜாவாக உட்கார வந்தவர் என்பதை யூதர்களுக்கு தெரிவிக்கவும் எழுதப்பட்டது. ஆனால், லூக்கா சுவிசேஷம் இயேசுவை ஒரு "தேவகுமாரன் (The Son of God)" என்பதை தெரிவிக்கிறது. எனவே, லூக்காவில் வரும் வம்சாவழி பட்டியல், ஆதாம், மற்றும் தேவன் வரை நீட்டுபோகிறது. மத்தேயுவில் ஆபிரகாம் வரை மட்டும் தான் கொடுக்கப்பட்டுள்ளது. மத்தேயு வம்ச பட்டியல், இயேசுவின் வளர்ப்பு தந்தையாகிய "யோசேப்புவின்" வழியாக தாவிது, ஆபிரகாம் வரை வம்ச தலைவர்களின் பெயர்களைச் சொல்கிறது. ஆனால், லூக்கா வம்ச பட்டியல், இயேசுவின் தாயாகிய "மரியாளின்" வழியாக, தாவிது, ஆபிரகாம், ஆதாம், மற்றும் தேவன் வரை சொல்லப்பட்டுள்ளது.

2. மத்தேயு வம்ச பட்டியலில் கால அளவு கோளாறுகள் உள்ளதா?

நிஜாமுத்தீன் அவர்கள் சொல்வது போல, கால அளவு கோளாறு இப்பட்டியலில் இல்லை.

2.1 மத்தேயுவின் பட்டியல் ஒரு சுருக்கப்பட்ட(Abridged) பட்டியல்:

மத்தேயு பட்டியலை சுருக்கி தந்துள்ளார். மற்றும் இதை மூன்று விதமாக பிரித்துள்ளார்.

அ) ஆபிரகாமிலிருந்து தாவிது இராஜா வரை ( மத்தேயு 1:2-6)

ஆ) தாவிது இராஜா முதல், பாபிலோனுக்கு அடிமைகளாக கொண்டுபோகும்வரை (மத்தேயு 1:6-11)

இ) அங்கிருந்து விடுதலையாகி, இயேசுவின் பிறப்புவரை (மத்தேயு 1:12-16)


உண்மையில் ஆபிரகாம் முதல் இயேசு கிறிஸ்து வரை, ஒவ்வொரு பிரிவிற்கும் 14 தலைமுறை மட்டும் இல்லை, இன்னும் அதிகமாகவே உள்ளது, இதை நாம் லூக்காவின் வம்ச பட்டியல் மற்றும் பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்ட பட்டியலைப் பார்த்து தெரிந்துக்கொள்ளலாம். மத்தேயு இதை வேண்டுமென்றே சுருக்கி தந்துள்ளார். மூன்று காரணங்களுக்காக இப்படி சுருக்கியிருக்கலாம என்று வேத அறிஞர்கள் கூறுகின்றனர்.

1) மனப்பாடம் செய்வதற்கு சுலபமாக இருக்கும் என்று இப்படி சுருக்கியிருக்கலாம்.

2) யூதர்களின் வழக்கப்படி, ஒவ்வொரு எண்ணிற்கும் ஒரு பொருள் உண்டு. எண் 7 என்பது முழுமையைக் குறிக்கும். எனவே 14 (7*2) பெயர்களை மட்டும் தான் அவர் தெரிந்தெடுத்தார் என்று வேறு சில அறிஞர்கள் கூறுகின்றனர்.

3) சில அறிஞர்களின் கருத்து வேறு மாதிரியாக உள்ளது. இயேசு தாவிதின் குமாரன் என்று காட்டுவதற்காக எபிரேய மொழியில் DAVID என்ற பெயரில் உள்ள மெய் எழுத்துக்களின் (DVD)கூட்டுத்தொகை 14 என்றுவருவதால், மத்தேயு இப்படி 14 வம்சங்களின் பெயர்களை மட்டும் தான் தேர்ந்தெடுத்தார் என்று கருதுகின்றனர்.எபிரேய மொழியில் மெய்யெழுத்து இல்லை. D என்பது எபிரேய மொழியில் 4 வது எழுத்து, V என்பது 6 வது எழுத்து. மொத்த கூட்டுத்தொகை 14 என்று வருவதால், மத்தேயு 14 வம்சங்களின் பெயர்களை மட்டும் தன் பயன்படுத்தினார்.

D = 4
V = 6
D = 4
------------------
Total = 14
------------------


எபிரேய எழுத்துக்களை இங்கு காணலாம்.
http://en.wikipedia.org/wiki/Hebrew_alphabet

மத்தேயு ஏன் இப்படி சுருக்கவேண்டும்(சில பெயர்களை விட்டுவிட வேண்டும்), இதற்கு அனுமதி உண்டா என்று கேட்டால்? உண்டு. பழைய ஏற்பாட்டின் எஸ்றா 7:3 மற்றும் 1 நாளாகமம் 6:7-10 வரை உள்ள வசனங்களை ஒப்பிட்டுப் பார்க்கவும்

2.2 இரண்டாவது பிரிவில் 13 பெயர்கள் மட்டும் உள்ளது , அது ஏன்?

உண்மையில் இந்த பிரிவிலும் 14 பெயர்கள் உள்ளது. காரணம், வசனம் 1:6ஐ நாம் பார்த்தால், "தாவிது இராஜாவின் பெயர் முதல் பிரிவிலும் வரும், இரண்டாவது பிரிவிலும் வரும். எனவே, இரண்டாவது பிரிவிலும் 14 பெயர்கள் உள்ளது.


List 1 - ஆபிரகாமிலிருந்து தாவிது ( மத்தேயு 1:2-6)
List 2 - தாவிது - அடிமைகளாக கொண்டுபோகும்வரை (மத்தேயு 1:6-11)
List 3 - விடுதலையாகி, இயேசுவின் பிறப்புவரை (மத்தேயு 1:12-16)
-------------------------------------------------------------------------------
|எண்|----List -1-----| |----List 2----| |-----List 3----|
-------------------------------------------------------------------------------
1 ஆபிரகாம் ------------- தாவீது ------------- எகோனியா
2 ஈசாக்கு----------------சாலோமோன்----- சலாத்தியேல்
3 யாக்கோபு-------------ரெகொபெயாம்------சொரொபாபேல்
4 யூதா------------------அபியா------------- அபியூத்
5 பாரேஸ்---------------ஆசா-------------- எலியாக்கீம்
6 எஸ்ரோம்-------------யோசபாத்----------ஆசோர்
7 ஆராம்-----------------யோராம்-----------சாதோக்கு
8 அம்மினதாப் ----------உசியா-------------ஆகீம்
9 நகசோன்---------------யோதாம்---------- எலியூத்
10 சல்மோன் -----------ஆகாஸ்----------- எலெயாசார்
11 போவாஸ்------------எசேக்கியா--------- மாத்தான்
12 ஓபேத்----------------மனாசே----------- யாக்கோபு
13 ஈசாய்----------------ஆமோன்----------- யோசேப்பு
14 தாவீது---------------யோசியா---------இயேசு கிறிஸ்து
-------------------------------------------------------------------------------

2.3 மத்தேயு பட்டியல் சரியானது தான் என்பதற்கு ஆதாரம்:

யூதர்கள் தங்கள் வம்ச பட்டியலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தனர். எனவே தான், பழைய ஏற்பாட்டிலும் ஆங்காங்கே வம்ச பட்டியல் வருவதை காணலாம். இவைகளை அவர்கள் தங்கள் சொத்துக்களை விட அதிகமாக பாதுகாத்தனர். மட்டுமில்லாது, இயேசுவின் காலத்தில் வம்ச பட்டியல் அரசாங்க அலுவலகத்தில் இல்லாமல், அதை தேவாலயத்தில் வைத்துயிருந்தனர். சாதாரண மக்கள் கூட தேவாலய ஆசாரியர்களின் அனுமதி பெற்று, அதை பார்க்க முடியும். இயேசுவை வெறுத்த ஆசாரியர்கள், இயேசுவின் தெய்வீகத்தன்மையை மறுத்தனர், மற்றும் கேள்வி கேட்டனர். ஆனால், அவர் மரியாளின் மகன் என்பதும், தாவிது வம்சத்தில் வந்தவர் என்பதில் அவர்கள் சந்தேகம் எழுப்பவில்லை. பார்க்க மாற்கு: 6: 1-3

மாற்கு: 6: 1-3
1. அவர் அவ்விடம் விட்டுப் புறப்பட்டு, தாம் வளர்ந்த ஊருக்கு வந்தார்;அவருடைய சீஷரும் அவரோடேகூட வந்தார்கள்.
2. ஓய்வுநாளானபோது, ஜெபஆலயத்தில் உபதேசம்பண்ணத்தொடங்கினார்.அநேகர் கேட்டு, ஆச்சரியப்பட்டு, இவைகள் இவனுக்கு எங்கே இருந்துவந்தது? இவன் கைகளினால் இப்படிபட்ட பலத்தசெய்கைகள் நடக்கும்படிஇவனுக்குக் கொடுக்கப்பட்ட ஞானம் எப்படிப்பட்டது?
3. இவன் தச்சன் அல்லவா? மரியாளுடைய குமாரன் அல்லவா? யாக்கோபுயோசே யூதா சீமோன் என்பவர்களுக்குச் சகோதரன் அல்லவா? இவன்சகோதரிகளும், இங்கே நம்மிடத்தில் இருக்கிறார்கள் அல்லவா? என்றுசொல்லி, அவரைக் குறித்து இடறலடைந்தார்கள்

முதல் நூற்றாண்டு யூதர்களின் அமைதி:

முதல் நூற்றாண்டு யூதர்கள் படித்தவர்கள், அவர்கள் தங்களின் வம்ச பட்டியலை நன்கு அறிந்துயிருந்தனர், மட்டுமில்லாது எந்த எதிர்ப்பும் இல்லாமால் அவைகளை ஆராயும் வாய்ப்பும் அவர்களுக்கு இருந்தது. சுவிசேஷங்கள் மற்றும் புதிய ஏற்பாட்டு எல்லா புத்தகங்கள், முதல் நூற்றாண்டு 90க்குள் எழுதியாகிவிட்டது. ஒருவேளை இந்த பட்டியல் தவறாக இருந்துயிருக்குமானால், யூத ஆசாரியர்கள், கிறிஸ்தவர்களின் விரோதிகள், தங்களிடம் உள்ள பட்டியலோடு, சுவிசேஷ பட்டியலை சரி பார்த்துயிருப்பார்கள். தவறாக இருந்துயிருக்குமானால், பெரிய எதிர்ப்பு, மற்றும், இதனால் பல பிரச்சனைகள் கிளப்பியிருக்கும். ஆனால், முதல் நூற்றாண்டு எல்லா கிறிஸ்தவ எதிர்ப்பும், இயேசு தெய்வமில்லை, சீடர்கள் பொய் சொல்கிறார்கள், என்றுச் சொல்லி அவர்களை சிறையில் அடைத்தார்களே தவிர, வம்ச பட்டியலில் தவறு உள்ளது என்று யாரும் குறைகூறைல்லை. எனவே, இப்பட்டியல் சரியானது என்று நாம் உறுதியாகக் கூறலாம்.

3. இயேசுவின் பரிசுத்ததன்மைய கேள்விக்குறியாக்கும் விவரம் :


இயேசுவின் பரிசுத்ததன்மைய கேள்விக்குறியாக்கும் விவரம் மத்தேயுவில் உள்ளது என்று நிஜாமுத்தீன் அவர்கள் சொல்கிறார். அது என்னவாக இருக்கும் என்று நாம் பார்க்கலாம்.

சாதாரணமாக, யூதர்கள், தங்கள் வம்சாவழி பட்டியலில், பெண்களின் பெயர்களை சேர்க்கமாட்டார்கள். ஆனால், மத்தேயு சுவிசேஷத்தில் 5 பெண்களின் பெயர்கள் உள்ளது. இவர்கள் ஐவரும் வித்தியாசமான பின்னணியை உடையவர்கள்.

1. தாமார் (ஆதியாகமம்: 38:6-30)

2. ராகாப் (யோசுவா: 2:1-24)

3. ரூத் (ரூத் 1:1-4:22 )

4. பெத்செபாள் (2 சாமுவேல் 11:1-27 )

5. மரியாள் (மத்தேயு 1:18-25, லூக்கா1:26-56 )


இவர்களில் தாமார், ராகாப், ரூத் என்பவர்கள் மூவரும், யூதர்கள் இல்லை. இவர்கள் புற இன மக்கள்.

----------------------------------------************************---------------------------------

"ஆபிரகாம், ஈசாக்கு, தாவீது போன்றோர் விசுவாச வீரர்கள் என்றால், கறைபட்ட வாழ்க்கைப் பின்னணியைக் கொண்டவர்கள் ராகாப், மற்றும் தாமார் ஆகியோர். பாரேஸ், ஆராம், நாகசோன், ஆகீம் ஆகியோர் வெறும் சாதாரண மனிதர்கள் என்றால்,கீழ்மக்களாக(கெட்டவர்களாக) வாழ்ந்தோர் அபியாவும், மனாசேயும். மனித தோல்விகளோ, பாவங்களோ வரலாற்றில் செயலாற்றும் தேவனை தடுத்துவிடவில்லை. அனைத்து தரப்பு மக்களையும், தமது குமாரனை உலகிற்கு அனுப்பும் பாதையில் தேவன் பயன்படுத்திக்கொண்டார். அதில் யூதன், புறஜாதி, என்ற வேறுபாட்டையும் பார்க்கவில்லை." (தானியேல் ரெஃபரன்ஸ் வேதாகமம் ).

----------------------------------------************************---------------------------------

இயேசு தேவகுமாரன் என்றுச் சொன்னால், ஏன் அவர் வம்ச வழியில் உள்ளவர்கள் சிலர் கறைபட்டுள்ளவர்கள் இருக்கிறார்கள் என்று கேட்கிறீர்களா? உலகத்தில் பிறந்த எல்லா மனிதனும் பாவி தான். தேவனுக்கு முன்பாக எல்லாருடைய நீதி, நியாயங்கள், எல்லாம் கந்தை துணி போன்றது தான். இயேசு யூதர்களுக்கு மட்டுமல்ல, புறஜாதிகளுக்கும்(எல்லாருக்கும்), பாவிகளுக்கும் வெளிச்சம் கொடுக்க வந்தார், என்பது அவருடைய வம்ச வரலாறில் வரும் வித்தியாசமான பின்னணிகள் உடைய மனிதர்களே சாட்சிகள்.

இயேசுவின் தாய் எப்படிப்பட்டவர்கள் என்று பாருங்கள், அவருடைய பக்தியையும், நம்பிக்கைத் தன்மையையும் பாருங்கள், அது போதும்.

ஒரு வேளை, நம் ஒவ்வொருவருடைய மன எண்ணங்களை இறைவன், படம் பிடித்து, நமது பெற்றோருக்கும், சகோதரர்களுக்கும், சகோதரிகளுக்கும் காட்டினால், எப்படியிருக்கும் என்று நினைத்துப்பாருங்கள்? நாம் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்கமுடியாது. வெட்கத்தால், தலைகுனியவேண்டிவரும். நம்முடைய எண்ணங்கள் ஒரு வேசியினுடைய பாவத்தைவிட மிக மோசமாக இருக்கும். ஆனால், இறைவன் மிகவும் அன்புள்ளவர் என்பதால், இந்த நாள் வரை நாம் உயிரோடு இருக்கிறோம். பைபிளில் பழையஏற்பாட்டில் வரும் நபர்களின் நீதியான வாழ்க்கை மட்டுமில்லை, அவர்களின் மோசமான வாழ்க்கையை கூட தேவன் நமக்கு தெரிவிக்கிறார். காரணம் அவர்களும் நம்மைப் போன்ற மனிதர்களே அல்லாமல் வேறுயில்லை என்பதை நமக்கு காட்டுவதற்கு.

தேவனுக்கு சித்தமானால், மத்தேயுவில், லூக்காவில் வரும் பட்டியலைப் பற்றி ஒரு கட்டுரையை இன்னும் பல விமர்சனங்களுக்கு பதில் தரும்படியாக விவரமாக காணலாம்.
 

இஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்

முன் பக்கம் செல்ல

HOME PAGE

தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்

1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1

2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2

3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3

4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4

பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்

1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1

2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2

பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்

1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்

2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்