இஸ்லாம் அமைதி மார்கமா? இஸ்லாம் இனிய மார்கமா? இஸ்லாம் உண்மையான மார்கமா?

ஆன்சரிங் இஸ்லாம்

பல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்

சத்தியவான் தளம் செல்ல

Showing posts with label காபிர். Show all posts
Showing posts with label காபிர். Show all posts

Tuesday, March 25, 2008

முஸ்லீம்கள் ஏன் இஸ்லாமியர்-‍அல்லாத நாடுகளில் கஷ்டப்படுகிறார்கள்?



முஸ்லீம்கள் ஏன் இஸ்லாமியர்-‍அல்லாத நாடுகளில் கஷ்டப்படுகிறார்கள்?
ஆசிரியர்: Fox ( http://www.news.faithfreedom.org )

Why Muslims suffer in non-Muslim countries?
Mr. Sina அவர்களுக்கு,

என் பெயர் XXX நான் ஒரு முஸ்லீமாக இருந்தேன். என் நண்பர்களில் ஒருவன் உங்கள் தளத்தைப்பற்றிச் சொன்னான், நான் ஐந்து நாட்கள் உங்கள் தளத்தின் கட்டுரைகளை படித்துவுடன், இஸ்லாமை விட்டு வெளியேறிவிட்டேன். என்னுடைய இந்த கடிதத்தை உங்கள் தளத்தில் பதிவு செய்யுங்கள். இந்த கடிதத்தை அலட்சியப்படுத்தவேண்டாம், எனக்கு ஆங்கிலம் எழுதுவதில் பிரச்சனை உள்ளது, மற்றும் எனக்கு உதவி செய்வார் யாரும் இல்லை. நான் உங்கள் தளத்தின் என்ற பெயரில் உறுப்பினனாக உள்ளேன்.

நான் ஒரு முஸ்லீம் குடும்பத்தில் பிறந்தேன். என் படிப்பு 10வது வரை என் சொந்த மொழியில் முடித்தேன். நேற்று இந்த தளத்தின் நிர்வாகிகள்(Editors) உங்களுக்கு வந்த ஒரு கடிதத்தை பிரசுரம் செய்து இருந்தார்கள். அந்த கடிதத்தை எழுதியவர் , "இந்தியாவில் ஒரு முஸ்லீமின் வாழ்க்கை ஒரு நரகம் என்று சொல்லியிருந்தார்". இந்தியாவில் மட்டுமல்ல, மற்ற இஸ்லாமியர் ‍அல்லாத நாடுகளில் ஏன் ஒரு முஸ்லீமின் வாழ்க்கை நரகம் என்று நான் விவரிக்கிறேன்.

முக்கியமாக, ஒரு முஸ்லீமுக்கு மதம் தான் எல்லாவற்றிற்கும் மேலாக முக்கியத்துவம் பெறும். அதாவது, நாடு, நண்பர்கள், குடும்பம், அன்பு என்று எல்லாவற்றையும் விட‌ மதம் தான் ஒரு முஸ்லீமுக்கு அதிக முக்கியத்துவம். மீது உள்ளதெல்லாம் அவனுக்கு இரண்டாவது தான். உதாரணத்திற்கு, சில தீவிரவாதிகளை இந்தியாவில் கைது செய்தார்கள். இது ஒன்றும் அதிக முக்கியத்துவம் வாய்ந்த செய்தி அல்ல, இருந்தாலும் இந்த தீவிரவாதிகள் கைதான செய்தியில் முக்கியமாக கவனிக்கவேண்டியது என்னவென்றால், இந்த தீவிரவாதிகள் அனைவரும் பொறியாளர்கள் மற்றும் கம்ப்யூட்டர் பொறியாளர்கள்(Engineers and Software Professionals). எல்லாரும் இந்தியர்கள், இவர்கள் இந்தியாவில் தீவிர வாத செயல்களை செய்வதற்காக திட்டம் தீட்டிக்கொண்டு இருந்தவர்கள்.

ஏன் அவர்கள் தீவிரவாதிகளாக ஆனார்கள்? நீங்கள் ஒருவேளை இந்தியாவில் இருந்தீர்களானால், இந்தியாவில் கம்ப்யூட்டர் பொறியாளர்கள் எவ்வளவு சம்பாதித்துக்கொண்டு இருக்கிறார்கள் என்று உங்களுக்கு தெரிந்து இருக்கும். அதாவது மாதம் 30 லிருந்து 40 ஆயிரம் ரூபாய் வரைக்கும் சம்பாதிக்கிறார்கள், இது உண்மையிலேயே மிகவும் நல்ல சம்பளம் தான். இந்த நபர்கள் தீவிரவாதகளாக மாறுவதற்கு "ஏழ்மையும்  பசியும்" காரணம் இல்லை என்பது மிகவும் தெளிவாக புரிந்துவிடும். இவர்கள் படிப்பறிவில்லாத பாமர மக்களும் அல்ல. இவர்கள் அனைவரும் பல்கலைக்கழக பட்டதாரிகள். இவர்கள் தீவிரவாதிகளாக மாறியதற்கு காரணம் என்னவென்றால், அது மதம் தான் முக்கியமாக "இஸ்லாம்".

அப்படியானால், ஏன் முஸ்லீம்களின் வாழ்க்கை இந்தியா போன்ற இஸ்லாம் அல்லாத நாடுகளில் மிகவும் கடினமாக உள்ளது? ஏனென்றால், இந்தியா ஒரு மத சார்பற்ற நாடு. இந்த நாட்டில் எல்லா மதத்தினரையும் நாம் காணமுடியும். இருந்த போதிலும் எந்த மதமும் தன் ஆதிக்கத்தில், கட்டுப்பாட்டில் இந்தியாவை வைத்துக்கொள்ளவேண்டும் என்று நினைத்ததில்லை, இஸ்லாம் தவிர. எல்லா மக்களும் இஸ்லாமுக்கு மாறவேண்டும் என்று முஸ்லீம்கள் விரும்புகிறார்கள். ஆனால், மக்கள் அப்படி இஸ்லாமுக்கு மாறுவதில்லை, இது இஸ்லாமியர்களை அதிகமாக பாதிக்கிறது. அவர்களுடைய திட்டத்தை நிறைவேற்ற தீவிரவாத செயல்களில் இவர்கள் ஈடுபடுகிறார்கள்.

முஸ்லீம்களை நம்பமுடியாது. இதை மற்றவர்கள் கண்காணிக்கிறார்கள், மற்றும் இவர்களை நம்புவது இல்லை. நான் ஒரு எடுத்துக்காட்டைச் சொல்லட்டும். நான் என் பிளஸ் டூ படிப்பை ஒரு பட்டணத்தில் முடிக்க விரும்பினேன். ஆனால், எனக்கு ஒரு வாடகை வீடு கிடைக்கவில்லை. ஏன்? ஏனென்றால், நான் ஒரு முஸ்லீம் மற்றும் நான் தீவிரவாத செயலில் ஈடுபடவாய்ப்பு உள்ளது என்று அவர்கள் அஞ்சியதால் தான். கடைசியாக ஒரு முஸ்லீம் வீட்டிலேயே எனக்கு ஒரு வீடு வாடகைக்கு கிடைத்தது. முதல் நாளிலேயே அந்த வீட்டின் முதலாளி என் அறைக்கு வந்தார், மற்றும் ஜிஹாத் பற்றி எனக்கு சொல்ல ஆரம்பித்தார். மக்களை கொல்வது தவறு என்று நான் சொல்லும் போது, என் மீது எரிந்து விழுந்தார். நான் ஹானர் கிள்ளிங்(Honour Killing) பற்றியும் கல்லால் எரிந்துக் கொள்ளுதல்(Stoning) பற்றியும் அவரிடம் வினவினபோது,  என் பெட்டி படுக்கையை வெளியே விசிரி விட்டார்.  நான் மற்ற பட்டணத்திற்கு போக முடியாது, ஏனென்றால், என்னிடம் அவ்வளவு பணம் இல்லை.  இது என் சொந்த வாழ்க்கையின் அனுபவம் ஆகும்.ஒரு முஸ்லீமாக நான் மிகவும் கஷ்டப்பட்டேன், இது யாருடைய தவறு.  நாம் இஸ்லாம் அல்லாத மக்கள் நம்மை (முஸ்லீம்களை) நம்பவில்லை என்று அவர்கள் மீது குற்றம் சுமத்தமுடியுமா?  நாம் தான் அவர்களை எப்படி கொல்லவேண்டும் மற்றும் நம் மதத்தை அவர்கள் கழுத்துகளிடம் எப்படி கொண்டுப்போகவேண்டும் என்று நினைக்கிறோமே?

சில நாட்களுக்கு முன்பு, கிரிக்கெட் விளையாட்டில், இந்தியாவை பாகிஸ்தான் வென்றுவிட்டது. இந்திய முஸ்லீம்கள் வெடிகளை வெடித்து விழாப்போல கொண்டாடினார்கள். இதன் பொருள் என்ன? இந்த முஸ்லீம்களின் "நம்பகத்தன்மை" எங்கு இருக்கிறது?  இது எல்லாம் இஸ்லாம் என்ற மதத்தினால் தான் நடக்கிறது. இப்பொது எனக்குச் சொல்லுங்கள், ஒரு முஸ்லீமில்லாதவன் எப்படி ஒரு முஸ்லீமை நேசிப்பான்?  எல்லா நாடுகளும் இதே பிரச்சனையை சந்திக்கிறது. முஸ்லீம்கள் இஸ்லாம் அல்லாத நாடுகளில் வாழ்ந்தால், அந்த நாட்டு பற்று உடையவர்களாக அவர்கள்இருக்கமாட்டார்கள்.

கடந்த காலத்தை பார்க்கும் போது, இந்துத்துவத்தில் பல தீய போதனைகள் இருந்தன அதாவது, சிறுவயது திருமணம், சதி என்ற விதவைகளை கணவனோடு எரித்தல், போன்றவை இருந்தன. இன்று இந்துக்கள், விதவை மறுவாழ்வையும்,பெண்களின் கல்வியையும் ஆதரிக்கின்றனர். இதே போல, கடந்த காலத்தில் கிறிஸ்தவ சர்சானது மந்திரக்காரர்களையும், மாற்று மதத்தவர்களையும் எரித்தனர். இப்போது அந்த பழக்கம் ஒரு முடிவிற்கு வந்துவிட்டது. நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால், ஒவ்வொரு மதமும் மாற்றம் அடைந்துள்ளது, அம்மதத்தின்  தீய பழக்கங்கள் இன்று சரித்திரமாக உள்ளது. ஆனால், இஸ்லாம் மாறவில்லை, இன்னும் அப்படியே இருக்கும். கல்லெரிந்து கொல்லுதல், சிறுமிகள் திருமணம், மனைவியை கொடுமைப்படுத்துதல், பலதார மணம், இஸ்லாமை விட்டு வெளியேறுபவர்களை கொல்லுதல், போன்ற பழக்கங்கள் இன்னும் இஸ்லாமில் இருக்கின்றன இன்னும் இஸ்லாமில் அவைகள் எப்போதும் அப்படியே இருக்கும்.

அலி சீனா நான் சொல்ல விரும்பியது அவ்வளவு தான். என்னுடைய இந்த கடிதத்தை பிரசுரம் செய்யுங்கள். நான் எழுதிய ஆங்கில வரிகளில் தவறு இருந்தால் திருத்தவும், ஆனால், அதை பிரசுரம் கண்டிப்பாக செய்யவும். இந்தியாவின் முஸ்லீம்கள் இந்தியாவில் வாழ்வது ஏன் கடினமாக உள்ளது என்பதை சிந்திக்கவேண்டும்.  இதன் காரணம் அவர்களின் நம்பிக்கைத் தானே தவிர இந்தியா அவர்களை இப்படி தவறாக நடத்துவதில்லை. முஸ்லீம்கள் எப்போதும் ஒரு முஸ்லீமல்லாத நாட்டில் சந்தோஷமான வாழ்க்கையை வாழப்போவது இல்லை, அந்த நாடு இஸ்லாமிய மயமானால் தவிர.

இப்படிக்கு

Fox

Source : http://www.news.faithfreedom.org/index.php?name=News&file=article&sid=1812

 

 

Monday, October 8, 2007

பைபிளைக் குறை கூறும் இஸ்லாம்

பைபிளைக் குறை கூறும் இஸ்லாம்

மூலம்;http://www.geocities.com/mistertoronto/blame.htm

பைபிளில் பல தவறுகள் என்று குறை கூறுகிறார்கள் இஸ்லாமியர். ஏன்? இவ்வாறாக அவர்களுடைய வேதம் கூறுகிறதாம்! அது மட்டுமல்ல, அதற்குச் சான்றாக பல பைபிளின் பல பகுதிகளையும் எடுத்துக் காட்டுவார்கள். இஸ்லாமியராகட்டும், அல்லது கிறிஸ்தவராகட்டும், நாம் உண்மையை உணர வேண்டும். பைபிளை இயேசு எழுதவில்லை. அதே போல குரானையும் முகம்மது எழுதவில்லை.

பைபிளின் முதல் பாதியான பழைய ஏற்பாடு, யூத மார்க்கத்தின் வேத புத்தகமாகும். அதை அப்படியே கிறிஸ்தவர்கள் ஏற்றுக் கொண்டு விட்டிருக்கின்றனர். அதன் இரண்டாம் பகுதியான புதிய ஏற்பாடு இயேசுவின் சீஷர்களாலும், பின்னர் மதம் மாறிய புனித பவுல் அடிகளாராலும், இயேசு மரித்து உயிர்த்தெழுந்த பின் தொகுக்கப் பட்டதாகும்.

நடந்து போன விஷயங்களை சில ஆண்டுகள் கழித்து எழுதும் போது அவற்றில் சில பிழைகள் இருக்க வாய்ப்பு உண்டு. ஆனால் அவை பைபிளின் மையக்கருத்தான, மனிதன் பாவம் செய்தான்- பாவ பரிகாரத்திற்காக இறைவன் பலி முறைகளை நியமித்தார்- பின்னர் இந்த பலிகளுக்கும், ரத்தம் சிந்துதலுக்கும் நிரந்தரமாக முடிவு கட்ட தனது சொந்த மகனான இயேசுவை உலகத்தில் மனிதனாகப் பிறக்கச்செய்து, அவரை இம்மனுக்குலத்தின் பாவங்களுக்கெல்லாம் பரிகாரமாக சிலுவை மரத்தில் பலியாக ஈந்தார் - இந்தத் தியாகத்தை ஒப்புக்கொள்ளும் ஒவ்வொரு மனிதனுக்கும் இயேசுவின் நிமித்தம், அவன் தனது ஆதி தந்தை ஆதாமின் கீழ்ப்படியாமையால் இழந்து போயிருந்த நித்திய ஜீவனை இலவசமாகத் தந்து, அவனைத் தன்னுடன் சேர்த்துக் கொள்கிறார்- இவ்வாறாக மனிதன் மேல் இறைவன் கொண்டுள்ள அபரிமிதமான அன்பு வெளிப்பட்டது எனும் செய்தியை ஒருக்காலும் மாற்றி அமைத்து விடவில்லை!

மேலும் பைபிளின் பரிமாணத்தைப் பார்த்தால், அது குரானைக் காட்டிலும் பல மடங்கு பெரியது, பல பல விபரங்கள் கொண்டது என்பது தெரிய வரும். உண்மையில், பைபிளின் 66 புத்தகங்களில் ஒன்றான சங்கீதப் புத்தகம் மட்டுமே குரானைக் காட்டிலும் அதிக பக்கங்கள் உடையது என்பது பல இஸ்லாமியருக்குத் தெரியாத விஷயம்!

இப்போது, குரான் யாரால், எங்கே, எப்படி, எப்போது தொகுக்கப்பட்டது எனக் காண்போம்...

முகமதுவினுடைய காலத்தில் குர்-ஆனின் பல பகுதிகள் எழுதப்பட்டதாக கூறப்பட்டாலும் அது புத்தக வடிவில் இன்னமும் தொகுக்கப் பட்டிருக்கவில்லை. மேலும் முகமதுவின் சுற்றத்தார் பலர் குர்-ஆனை மனப்பாடம் செய்ததாகவும் கூறப்படுகிறது. கி.பி 634 அளவில் யமாமா எனும் போரில் முகமதுவின் வார்த்தைகளை நேரிடையாகக் கேட்ட அநேகர் கொல்லப்பட்டுவிட்டதனால் உமர் பின் அல் கதாப், அபூபக்கரிடம் குரான் ஒரு புத்தகமாக தொகுக்கப்பட்டு பாதுகாக்கப் படவேண்டும் எனக்கூறினார். அபூபக்கர், சையத் பின் தபீத் என்பவரை நியமித்து குரானின் வாக்கியங்களை தொகுக்க கட்டளையிட்டார். சையத், மனப்பாடம் செய்யப்பட்டிருந்த குரானின் பகுதிகளையும், எழுதப்பட்ட பகுதிகளையும் தொகுத்து குரானை ஒரு புத்தகமாக்கினார். இந்தப் பிரதி முகம்மதுவின் மனைவியும் உமரின் மகளுமான ஹபிஸாவின் இல்லத்தில் வைக்கப்பட்டது.

காலிப் உத்மான், இவ்வாறாக தொகுக்கப்பட்ட அதிகாரப்பூர்வமான குர்-ஆனை ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் அனுப்பி அதற்கு முன்னர் கொடுக்கப்பட்ட, எந்த குர்-ஆன் வசனங்களையும், எழுத்துக்களின் முழு கையெழுத்துப்பிரதிகளையும், துண்டுப்பகுதிகளையும் எரித்து விட வேண்டுமென்று கட்டளையிட்டார். (ஆதாரம்: அல் புகாரி 6:479)

இப்படித்தான் குர்-ஆன் உருவாகியது. ஆனால், அதிலும் சுட்டிக்காட்டும் வண்ணம் சில பிழைகள் இல்லாமல் இல்லை! ஆனால் அவற்றைக் குறித்த சர்ச்சைகளில் ஈடுபடுவது அழகாகாது என எண்ணி அவற்றை நான் இங்கே விட்டு விடுகிறேன்.

மக்கள் தங்கள் மதங்களைப் பற்றியும், நாத்திகவாதி தனது கொள்கையைப் பற்றியும், அறிவாளி தனது தத்துவங்களைப் பற்றியும், விஞ்ஞானி தன் பேரறிவைப் பற்றியும் மார் தட்டிப் பேசுவது ஒரு எளிய காரியம். ஆனால் அதே நபர்கள் மரணப்படுக்கையில் வீழும் போது அது முற்றிலும் வேறு பட்ட ஒரு பந்து விளையாட்டு! பயம் அவர்களைப் பீடித்து விடுகிறது. இயேசுவின் மேல் விசுவாசம் வைத்து, அவர் இலவசமாக வழங்கும் நித்திய ஜீவனைக் கேட்டுப் பெற்றவர்களுக்கு அந்தப் பயம் இல்லை! ஏனென்றால், "குமாரனிடத்தில் (இயேசுவிடம்) விசுவாசமாயிருக்கிறவன் நித்திய ஜீவனை (சுவர்க்க வாழ்வை) உடையவனாய் இருக்கிறான்" என்கிறார் இயேசு.

இங்கே செல்வந்தரான ஒரு இஸ்லாமிய இளைஞர் தனது மரணப்படுக்கையில் அனுபவித்த பாடுகளைக் குறித்த விடியோ ஒன்றை காணத் தந்துள்ளேன். இயேசுவை உங்கள் வாழ்வின் சொந்த ரட்சகராக ஏற்றுக் கொள்ள உங்களை வேண்டுகிறேன். விடியோவைக்காண கீழே "க்ளிக்" செய்யுங்கள்...







பிராத்தனை: அன்புள்ள இயேசுவே, எனது பாவங்கள் தீர, உம்மையே நீர் சிலுவையில் பலியாக ஈந்த அன்பிற்காக உமக்கு நன்றி. இன்று நீர் என் இதயத்தில் வாரும். என் பாவங்கள் யாவையும் மன்னியும். நீர் இலவசமாய் அருளும் நித்திய ஜீவனை எனக்குத்தாரும். என்னை உமது பரிசுத்த ஆவியினால் நிரப்பி, தன்னைப்போல் பிறனையும் நேசிக்கும் உமது மகா அன்பை எனக்குத்தாரும். ஆமென்.

இஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்

முன் பக்கம் செல்ல

HOME PAGE

தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்

1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1

2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2

3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3

4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4

பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்

1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1

2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2

பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்

1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்

2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்