இஸ்லாம் அமைதி மார்கமா? இஸ்லாம் இனிய மார்கமா? இஸ்லாம் உண்மையான மார்கமா?

ஆன்சரிங் இஸ்லாம்

பல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்

சத்தியவான் தளம் செல்ல

Friday, June 5, 2009

தினத்தந்தி பத்திரிக்கையின் தவறான நிதானிப்பு


 

நேற்றைய தினத்தந்தி பத்திரிக்கை கீழ்கண்ட தலைப்பில் ஒரு செய்தி வெளியிட்டு இருந்தது.
 
என்பது தான் அந்த செய்தி.இதில் தவறு என்ன என்று கேட்டால் "பாக்கிஸ்தான் தீவிரவாதிகள் அட்டூழியம்" என்று தன்னுடைய ஆதங்கத்தை கொட்டியிருந்தது.
ஆனால் குரானை பற்றி நன்கு  அறிந்தவர்களுக்கு இது பாக்கிஸ்தான் தீவிரவாதிகளின் அட்டூழியமாக தெரியாது.ஏன் என்றால் "எய்தவன் இருக்க அம்பை நோகாதே" என்ற பழமொழிக்கு ஏற்ப இவர்கள் இந்த மாதிரி நடக்க காரணமான அல்லாவும் அவருடைய தூதரையுமே குறை சொல்ல வேண்டும்.ஏன் என்றால் குரானை உண்மையாக பின்பற்றும் ஒரு முஸ்லீம் தன்னுடைய நாட்டில் மற்ற மதத்தவர்களிடம் ஜிஸ்யா என்ற மார்க்க வரியை வாங்கின பிறகுதான் அவர்களின் மத சடங்குகள் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும்.
 
ஆதாரமான குரான் வசனம்.
 

9:29

வேதம் அருளப்பெற்றவர்களில் எவர்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஈமான் கெள;ளாமலும், அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் ஹராம் ஆக்கியவற்றை ஹராம் எனக் கருதாமலும், உண்மை மார்க்கத்தை ஒப்புக் கொள்ளாமலும் இருக்கிறார்களோ. அவர்கள் (தம்) கையால் கீழ்ப்படிதலுடன் ஜிஸ்யா (என்னும் கப்பம்) கட்டும் வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள்.

 
இப்பொழுது சொல்லுங்கள் நான் சொல்லுவது சரிதானே?
 
 தினத்தந்தியின் முழு செய்தியை கீழே படிக்கலாம்

இஸ்லாமாபாத், ஜுன்.4-

பாகிஸ்தானில் இஸ்லாமியர்கள் அல்லாதவர்களிடம் தலீபான்கள் மதவரி என்ற பெயரால் கட்டாய வரி வசூல் செய்து வருகிறார்கள். இதுபோல அந்த நாட்டில் உள்ள இன்னொரு தீவிரவாத இயக்கமான லஸ்கர்-இ-இஸ்லாம் என்ற அமைப்பு பிற மதத்தினரிடம் கட்டாய வரி வசூல் செய்கிறது.

கைபர் கணவாய் பகுதியில் பழங்குடி இன மக்கள் வசிக்கும் இடத்தில் இந்த அமைப்பு செல்வாக்குடன் திகழ்கிறது. இந்த அமைப்பை கடந்த ஆண்டு அரசாங்கம் தடை செய்து உள்ளது. இந்த அமைப்பு பிற மதத்தினரிடம் மதவரியாக ஆண்டுக்கு ரூ.1000 வசூலித்து வருகிறது.

இந்துக்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள் ஆகிய சமூகத்தினர் இந்த மதவரியை செலுத்துவதற்கு சம்மதித்து உள்ளனர். இந்த அமைப்பின் தலைவர் மங்கள் பாக் கை சந்தித்த சீக்கிய தூதுக்குழு இந்த வரியை செலுத்த சம்மதித்து உள்ளது. வரி செலுத்தினால், அவர்களின் பாதுகாப்புக்கு நாங்கள் பொறுப்பு ஏற்கிறோம் என்று மங்கள் பாக் உறுதி அளித்தார். பெண்கள், குழந்தைகள், ஊனமுற்றோர் ஆகியோருக்கு இந்த வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.
 
http://www.dailythanthi.com/article.asp?NewsID=491944&disdate=6/4/2009

சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்

 

சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்

 
குர்‍ஆனின் சவாலை ஜின்னும் மனிதனும் எப்படி சந்தித்துள்ளார்கள் என்பதை இந்த கட்டுரை TESTING THE TRUTHFULNESS OF THE Quran - THE CHALLENGE OFFERED BY THE Quran விவரமாக‌ விளக்குகிறது.

 
நீங்கள் படிப்பதற்காக, குர்‍ஆனின் அல்-ஜின் சூராவின் ஒரு பகுதியை இங்கு கொடுக்கிறோம் (முஹம்மது ஜான் குர்‍ஆன் தமிழாக்கம்). இந்த சூராவில் ஜின் பேசியதாக உள்ள வசனங்களை பச்சை வண்ணத்தில் தருகிறோம்.
 
72:1 நிச்சயமாக, ஜின்களில் சில (திருக் குர்ஆனை) செவிமடுத்து(த் தம் இனத்தாரிடம் கூறினர்) "நிச்சயமாக நாங்கள், மிகவும் ஆச்சரியமான ஒரு குர்ஆனை கேட்டோம்" என்று கூறினர், என எனக்கு வஹீ அறிவிக்கப்பட்டதென்று (நபியே!) நீர் கூறுவீராக.

72:2 "அது நேர்மையின் பால் வழிகாட்டுகிறது, ஆகவே அதைக் கொண்டு நாங்கள் ஈமான் கொண்டோம்; அன்றியும் எங்கள் இறைவனுக்கு ஒருவனையும் நாங்கள் இணையாக்கமாட்டோம்" (என்று அந்த ஜின் கூறலாயிற்று).

72:3 "மேலும் எங்கள் இறைவனுடைய மகிமை நிச்சயமாக மிக்க மேலானது, அவன் (எவரையும் தன்) மனைவியாகவோ மகனாகவோ எடுத்துக் கொள்ளவில்லை.

72:4 "ஆனால் நம்மில் மூடராகிவிட்ட (சிலர்) அல்லாஹ்வின் மீது தகாத வார்த்தைகளை சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.

72:5 மேலும் "மனிதர்களும் ஜின்களும் அல்லாஹ்வின் மீது பொய் கூறவே மாட்டார்கள்" என்று நிச்சயமாக நாம் எண்ணிக் கொண்டிருந்தோம்.

72:6 "ஆனால், நிச்சயமாக மனிதர்களிலுள்ள ஆடவர்களில் சிலர் ஜின்களிலுள்ள ஆடவர்கள் சிலரிடம் காவல் தேடிக் கொண்டிருந்தனர், இதனால் அவர்கள், (ஜின்களிலுள்ள அவ்வாடவர்களின்) மமதையை பெருக்கிவிட்டனர்.

72:7 "இன்னும், நிச்சயமாக அவர்களும் நீங்கள் எண்ணியதைப் போலவே, அல்லாஹ் ஒருவரையும் (மறுமையில் உயிர்ப்பித்து) எழுப்பமாட்டான் என்று எண்ணிக் கொண்டு இருந்தனர்.

72:8 "நிச்சயமாக நாம் வானத்தைத் தொட்டுப் பார்த்தோம். அது கடுமையான காவலாளிகளாலும், தீப்பந்தங்களாலும் நிரப்பப்பட்டிருப்பதை, நாங்கள் கண்டோம்.

72:9 "(முன்னர் வானில் பேசப்படுவதைச்) செவிமடுப்பதற்காக (அதற்குள்ள சில) இடங்களில் நாங்கள் அமர்ந்திருப்போம்; ஆனால் இப்பொழுதோ எவன் அவ்வாறு செவிமடுக்க முயல்கிறானோ, அவன் தனக்காகக் காத்திருக்கும் தீப்பந்தத்தையே கண்பான்.

72:10 "அன்றியும், பூமியிலிருப்பவர்களுக்குத் தீங்கு நாடப்பட்டிருக்கிறதா, அல்லது அவர்களுடைய இறைவன் அவர்களுக்கு நன்மையை நாடி இருக்கிறானா என்பதையும் நாங்கள் நிச்சயமாக அறிய மாட்டோம்.

72:11 "மேலும், நிச்சயமாக நம்மில் நல்லோரும் இருக்கின்றனர், அப்படியல்லாதவர்களும் நம்மில் இருக்கின்றனர், நாம் பல்வேறு வழிகளையுடையவர்களாகவும் இருந்தோம்.

72:12 "அன்றியும், நிச்சயமாக நாம் பூமியில் அல்லாஹ்வை இயலாமலாக்க முடியாது என்பதையும், அவனை விட்டு ஓடி (ஒளிந்து ) கொள்வதாலும் அவனை (எங்கேயும்) இயலாமலாக்க முடியாதென்பதையும், நாம் அறிந்து கொண்டோம்.

72:13 "இன்னும், நிச்சயமாக நாம் நேர்வழியை (குர்ஆனை) செவிமடுத்த போது, நாம் அதன் மீது ஈமான் கொண்டோம்." எனவே எவன் தன் இறைவன் மீது ஈமான் கொள்கிறானோ, அவன் இழப்பைப் பற்றியும், அநீதியைப் பற்றியும் பயப்படமாட்டான்.

72:14 "இன்னும், நிச்சயமாக, நம்மில் முஸ்லிம்களும் இருக்கின்றனர். நம்மில் அக்கிரமக்காரர்களும் இருக்கின்றனர் - எவர்கள் முஸ்லிம்களாகி (வழிப்பட்டார்களோ) அவர்கள் தாம் நேர்வழியைத் தேடிக் கொண்டனர்.

72:15 "அக்கிரமக்காரர்களோ நரகத்திற்கு எரி விறகாய் விட்டனர்" (என்று அந்த ஜின் கூறிற்று).

72:16 "(மானிடர்களோ, ஜின்களோ) அவர்கள் (நேர்) வழியின் மீது, உறுதியுடன் நிலைத்து நின்றால், நிச்சயமாக நாம் அவர்களுக்கு மிக அதிகமாகத் தண்ணீர் புகட்டுவோம்.
 
 
இந்த அதிகாரத்தில் பதினான்கரை வசனங்களை (1b - 15) ஜின்கள் பேசினார்கள், அதுவும் குர்‍ஆனின் இலக்கிய நடையிலேயே பேசினார்கள். இந்த பேச்சும் குர்‍ஆனின் ஒரு பாகமாக உள்ளது. இந்த சூராவில் உள்ள அரபி இலக்கிய நடைக்கும், இதர சூராவில் உள்ள அரபி இலக்கிய நடைக்கும் ஏதாவது வித்தியாசம் உங்களுக்குத் தெரிகிறதா?

 
ஆங்கில மூலம்: Surat al-Jinn

 
இதர கட்டுரைகளை படிக்கவும்: குர்‍ஆன் ஒரு அற்புதமா?

© Answering Islam, 1999 - 2009. All rights reserved.
 


 
 

இஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்

முன் பக்கம் செல்ல

HOME PAGE

தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்

1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1

2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2

3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3

4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4

பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்

1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1

2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2

பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்

1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்

2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்