இஸ்லாம் அமைதி மார்கமா? இஸ்லாம் இனிய மார்கமா? இஸ்லாம் உண்மையான மார்கமா?

ஆன்சரிங் இஸ்லாம்

பல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்

சத்தியவான் தளம் செல்ல

Thursday, September 10, 2009

Answering Mist: இந்தியாவிலும் இஸ்லாமிய நாடுகளிலும் அபோஸ்டசி



 

 
Answering Mist: இந்தியாவிலும் இஸ்லாமிய நாடுகளிலும் அபோஸ்டசி
(இஸ்லாமை விட்டு வெளியேறுதல்)
 
 
முன்னுரை: ஈஸா குர்‍ஆனின் "யார் ஏமாற்றுக்காரர்? Dr. நாயக் அவர்களா? (அ) பின்னூட்டமிட்டவர்களா?" என்ற கட்டுரைக்கு மிஸ்ட் என்ற இஸ்லாமிய சகோதரர் இரண்டு பின்னூட்டங்கள் கொடுத்திருந்தார். அவரின் முதல் பின்னூட்டத்திற்கான பதிலை இங்கு (Answer Mist: தூதன் போல வேஷம் போடும் சாத்தான் Vs சாத்தானாக மாறும் தூதன்) படிக்கலாம். இப்போது இரண்டாம் பின்னூட்டத்திற்கான பதிலைக் காண்போம்.
 
 
Mist Said:

தொடர்ச்சி:

// umar quoted:

3) உண்மையாக இஸ்லாம் பற்றி அறிந்துகொள்ளும் எந்த ஒரு சராசரி மனிதனும் அதில் நிலைத்து இருப்பதில்லை, அதனால் தான் இஸ்லாமிய நாடுகளில் இஸ்லாமை விட்டு வெளியேறுபவனை கொன்று, மக்களை பயப்படவைத்து கேவலமான நிலையில் இஸ்லாம் வாழ்ந்துக்கொண்டு இருக்கிறது. இஸ்லாமை விட்டு வெளியெறுபவனை நாங்கள் தாக்குவதில்லை,என்றுச் சொல்லி, இஸ்லாமிய நாடுகளில் சட்டம்கொண்டு வந்து அதை சரியாக பின்பற்றட்டும், விரல்விட்டு எண்ணும் ஆண்டுகளில், இஸ்லாமின் நிலை அம்போ கதி தான்.

Mist Said:

எதுக்கு வேற எங்கயாவது போகணும் இந்தியாவில் முஸ்லிம்கள் தொகை கூடுதா, குறையுதா? இங்க ஒரு முஸ்லிம் மதம் மாறினால் யாரும் அவனை ஒன்னும் பண்ண முடியாது. இங்கே இருக்கும் முஸ்லிம்கள் அனைவரும் இஸ்லாமிய மதம் சரியில்லையின்னு மாற வேண்டியதுதானே? ஆனால் மாற்றமாக நல்ல பல இஸ்லாமிய அறிஞர்கள் இங்கிருந்துதனே தோன்றி கொண்டிருக்கிறார்கள்.
 
Umar's Reply:

மிஸ்ட் அவர்களே, நான் கேட்ட கேள்வி என்ன? இந்தியாவில் மதம் மாறினால் கொல்கிறார்கள் என்றுச் சொன்னேனா? இல்லையே!

[இங்கே அப்படி கொன்றால், கொல்கிறவர்களை முட்டிக்குமுட்டி தட்டி, லாக்கப்பில் வைத்து ஏறியிருக்கும் போதையை எல்லாம் இறக்கிவிடுவார்கள் நம் காவல் துறையினர்]

நான் கேட்டது, உங்கள் இஸ்லாமிய சட்டம் நடக்கும் பொற்கால அரசு நடக்கும் இஸ்லாமிய நாடுகளின் நிலையைச் சொன்னேன், அதைப் பற்றி விட்டுவிட்டு ஏன் ஜனநாயக நாட்டின் இஸ்லாம் பற்றி பேசுகிறீர்கள். இந்தியாவில் அப்படி கொல்வதில்லையே என்று பெருமையாக பேச உங்களுக்கு உரிமை இல்லை. இது ஜனநாயக நாடு. இங்கும் இஸ்லாமிய ஆட்சி நடந்தால் தானே உண்மை இஸ்லாம் வெளிப்படும்,

இந்தியாவின் பின்பற்றப்படும் இஸ்லாம் "மக்காவின் இஸ்லாம்", இந்தியாவில் இஸ்லாமியர்கள் வெளிக்காட்டும் இஸ்லாம் "அமைதி இஸ்லாம்", ஆனால், உண்மை இஸ்லாமை இங்கு பார்க்கமுடியாது, அதற்கு பாகிஸ்தானுக்கோ, ஆப்கானிஸ்தானுக்கோ, சௌதி அரேபியாவிற்கோ... செல்லவேண்டும்.

[மக்காவின் இஸ்லாம் என்றால், இஸ்லாமிய ஆட்சி நடக்காத இடத்தில் பின்பற்றப்படும் இஸ்லாமாகும், இஸ்லாமியர்கள் குறைவாக இருக்கும் இடங்களில் பின்பற்றப்படும் இஸ்லாமாகும். இங்கு இஸ்லாமின் உண்மை நாடி தெரிவதில்லை, இங்கு எல்லாரும் தூதர்களைப் போல அமைதியாளர்களாக காட்ட முயற்சி எடுப்பார்கள்.]
 
//Mist said:

இங்க ஒரு முஸ்லிம் மதம் மாறினால் யாரும் அவனை ஒன்னும் பண்ண முடியாது//
 
Umar's Reply

உண்மையாகச் சொன்னீர்கள் மிஸ்ட் அவர்களே, உண்மையைச் சொன்னீர்கள் "யாரும் அவனை ஒன்னும் பண்ண முடியாது" என்று உண்மையைச் சொன்னீர்கள். அதாவது "இந்தியச் சட்டம் இஸ்லாமியர்கள் மதம் மாறுபவர்களைக் கொல்ல அனுமதிக்கவில்லை, அதனால், உங்களால் அவர்களை ஒன்றும் பண்ணமுடியாது" என்றுச் சொல்கிறீர்கள்.

ஆனால், "ஒரு வேளை சட்டம் அனுமதித்தால்... இரத்த ஆறு ஓடும்... மண்டை ஓடுகள் தெருக்களில் கிடக்கும்.... கைகள் துண்டிக்கப்படும்... வெள்ளிக்கிழமை மதிய தொழுகை முடிந்ததும் நடு ரோட்டில் எல்லாரும் பார்க்கும் படி, தூக்கிலிடப்படுவான்.... இப்படி உங்கள் அமைதி இஸ்லாமின் கோர முகம் வெளிப்படும்... ".

ஆக, இங்கு உங்களால் முடியவில்லை, அதற்கு அனுமதி இல்லை, அதற்காக உங்களால் ஒன்னும் பண்ணமுடியாது.... இது தானே நீங்கள் சொல்ல வந்தது...!?!

என்னுடைய கேள்வியும் அது தான், இஸ்லாம் அமைதி மார்க்கம் என்றால், "அது அமைதி மார்க்கம் என்பதை ஜனநாயக நாட்டில் மட்டுமே காட்ட ஏன் முயற்சி எடுக்கிறீர்கள்? பாகிஸ்தானில் இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம் என்று காட்டவேண்டியது தானே! சௌதியில் இஸ்லாம் அமைதி மார்க்கம் என்று காட்ட முயற்சி எடுக்கவேண்டியது தானே!....".

நாளைக்கு ஒருவேளை இந்தியா ஒரு இஸ்லாமிய நாடாக மாறினால் (இஸ்லாமிய நாடாக மாறும் துர்பாக்கிய நிலை எந்த நாட்டிற்கும் வரக்கூடாது), இஸ்லாமை விட்டு வெளியேறுபவர்களை கல்லெரிந்து கொல்லச் சொல்லும் போது, முதல் கல்லை நீங்கள் ("மிஸ்ட்") எறிவீர்கள் என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை. ஆனால், இப்போது அதற்கு வாய்ப்பு இல்லை, பாட் லக்.
 
Mist said:

இங்கே இருக்கும் முஸ்லிம்கள் அனைவரும் இஸ்லாமிய மதம் சரியில்லையின்னு மாற வேண்டியதுதானே?
 
Umar's Reply:

கண்டிப்பாக இஸ்லாமை விட்டு வெளியேறுவார்கள், ஆனால், அதற்கு ஒரு நிபந்தனை உண்டு. அது என்ன நிபந்தனை என்று கேட்டால், "அவர்களுக்கு முதலில் முழு இஸ்லாமும் தெரியவரவேண்டும், முஹம்மது பற்றிய முழு வாழ்க்கை வரலாறும் தெரியவரவேண்டும்". இது தெரியாதவரையில், அவர்களுக்கு "இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம்" என்ற பொய்யை உங்கள் இஸ்லாமிய அறிஞர்கள் பசுமரத்தாணி போல அடித்து, அவர்களின் மூளையை சலவை செய்துக்கொண்டு இருக்கும் வரையில் இது நடக்க அதிக சத்தியக்கூறுகள் இல்லை.

அதனால், இஸ்லாமுக்கு முலாம் பூசி நீங்கள் இஸ்லாமியர்களை மூளைச் சலவை செய்துக்கொண்டு இருக்கின்ற இந்த காலத்தில், முலாம் பூசாத உண்மை இஸ்லாமை நாங்கள் சொல்ல முன் வந்துள்ளோம். எனவே, இன்னும் சில காலம் பிடிக்கும்.

நான் எழுதிய பின்னூட்ட வரிகளை சிறிது பாருங்கள் அவற்றில் "உண்மையாக இஸ்லாமை அறிந்துக்கொள்ளும்" என்ற சொற்கள் மிகவும் முக்கியமானவைகள்.

//Umar quoted:

உண்மையாக இஸ்லாம் பற்றி அறிந்துகொள்ளும் எந்த ஒரு சராசரி மனிதனும் அதில் நிலைத்து இருப்பதில்லை,//

முலாம் பூசப்பட்ட இஸ்லாமை அறிந்துக்கொள்ளும் இஸ்லாமியர்கள் இஸ்லாமில் நிலைத்து இருப்பார்கள். இதைத் தான் இயேசு "சத்தியத்தை அறிவீர்கள், அந்த சத்தியமே உங்களை விடுதலையாக்கும்" என்றார், அதாவது, இஸ்லாம் பற்றிய சத்தியத்தை அறிந்தால், அந்த முஸ்லீம் அடிமைத் தனத்திலிருந்து விடுதலையாவான்.
 
//Mist said:

ஆனால் மாற்றமாக நல்ல பல இஸ்லாமிய அறிஞர்கள் இங்கிருந்துதனே தோன்றி கொண்டிருக்கிறார்கள்//
 
Umar's Reply:

மிஸ்ட் அவர்களே, "நல்ல" என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்று தெரிவியுங்கள். ஏனென்றால், இஸ்லாமிய நாடுகளிலும், இஸ்லாமிய ஜிஹாத் புரியும் நபர்களையும் "இஸ்லாமிய உலகம்" நல்லவர்கள் என்றே சொல்கிறது... அவர்களுக்கு புகழாரங்கள் சூட்டுகிறது. எனவே, உங்களின் அகராதியின் படி, தற்கொலை செய்துக்கொண்டு மற்றவர்களை கொல்பவனும் நல்லவனே, தீவிரவாத செயல்களில் ஈடுபடுபவனும் நல்லவனே, தன் சொந்த சகோதரியை கொலை செய்து நான் குடும்ப கௌரவத்தை காப்பாற்றினேன் என்றுச் சொல்பவனும் நல்லவனே. உங்களைப் பொருத்த மட்டில், உலகத்திற்கு எப்படி இருந்தாலும், உலகம் எப்படி நினைத்தாலும், "முஹம்மதுவின் வழியில் நடப்பவன், இஸ்லாமிய சட்டத்தின்படி நடப்பவன்" நல்லவன் தான். ஆனால், உலகம், "நல்லவன்" என்பதற்கு இந்த உங்களின் நிபந்தனையை தருவதில்லை.

உங்களுக்கு நேரமிருந்தால் "இஸ்லாமிய சட்டத்தின் படி நடப்பவன், முஹம்மதுவின் வழியில் நடப்பவன் எந்த வகையில் சமுதாயத்திற்கு நல்லவனாக இருக்கின்றான்" என்பதைப் பற்றி எங்களுக்கும், உலகத்திற்கும் விளக்கினால், நலமாக இருக்கும்.

உலகத்தில் "நல்ல" என்பதற்கும் "கெட்ட" என்பதற்கும் ஒவ்வொருவரும் வித்தியாசமாக பொருள் தருவார்கள். இதில் நீங்கள் உங்கள் இஸ்லாமிய அறிஞர்கள் எந்த வகையில் நல்லவர்களாக உங்கள் கண்களுக்குத் தெரிகிறார்கள் என்று எழுதினால் நன்றாக இருக்கும். இஸ்லாமிய அறிஞர்களின் நற்செயல்களைப் பற்றி உலகத்திற்கு தெரிவிக்க இது ஒரு நல்ல வாய்ப்பு, பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
 
Mist said:

உங்க ஆளுங்கே மாதிரி காசு பணம் கொடுத்தெல்லாம் எந்த முஸ்லிம் மிஷநரியும் மதம் மாற்றுவதும் கிடையாது, மேலும் இஸ்லாமியர்களுக்கு இந்தியாவில் மிகப்பெரும் எதிரிகளான RSS ம் துணைக்கு இருக்கும் போது, இந்தியாவில் அல்லவா அதிகமான மக்கள் இஸ்லாத்திலிருந்து வெளியேற வேண்டும்..
 
 
Umar's Reply:

நான் தான் சொன்னேனே, முஹம்மதுவைப் போல சில மி(வி)ஷநரிகள் இருக்கத் தான் செய்கிறார்கள், இவர்கள் பணத்தை வைத்து எல்லாவற்றையும் செய்வார்கள். ஆனாலும் எல்லாரும் அப்படி இல்லையே.

பணத்தைக் கொடுத்தும் வன்முறையை பயன்படுத்தியும், பொய்யாக இஸ்லாம் அமைதி மார்க்கம் என்றுச் சொல்லியும் வாங்கும் கிறிஸ்தவர்களானாலும் சரி, முஸ்லிம்களானாலும் சரி, அதிக நாட்கள் தாக்கு பிடிப்பதில்லை. அதனால் தான் இஸ்லாமை ஏற்கும் அனேகர் இஸ்லாமியராக மாறின சில ஆண்டுகளிலேயே அந்த அடிமையிலிருந்து வெளிப்பட்டு விடுகின்றனர். முஹம்மது மரித்த பிறகும், இதே நிலை தான் இருந்தது, ஒரு பெரிய ரௌடி மரித்தவுடன் அந்த ஊர்க்காரர்கள் சந்தோஷப்படுவது போல, முஹம்மது மரித்தபிறகு அனேக நாடுகள் இஸ்லாமுக்கு தங்கள் முகத்தை அல்ல, தங்கள் முதுகை காட்டின, பிறகு இவர்களை வழிக்கு (இஸ்லாமிய வழிக்கு) கொண்டுவர முதல் காலிபா அவர்கள் ரொம்ப கஷ்டப்பட்டாராம்.

எனவே, பணம் கொடுத்து வாங்கும் "கிறிஸ்தவர்களுக்கும் ஒரு முடிவு தேதி (Expiry Date) கண்டிப்பாக இருக்கும்".
 
Mist said:

உங்களை மாதிரி பல எதிர்கள் இஸ்லாத்தை அழிக்க என்னென்ன முயற்சிகளை எல்லாம் எடுத்தார்கள் என்பது நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியது இல்லை.
 
Umar's Reply:

இஸ்லாமிய ஏதிரிகள் உங்களை அழித்ததை விட, இஸ்லாம் தன் எதிரிகளை அழித்தது தான் அதிகம். என்னவோ, இஸ்லாம் அமைதியான மார்க்கமாகவும், யார் எதிர்த்தாலும் அமைதியான முறையில் ஒன்றுமே செய்யாத மார்க்கமாக இருந்ததாகவும் பெருமையாக பேசுகிறீர்கள். தன்னை எதிர்த்தவர் யாராக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் சரி, அவளின் இரத்தம் மண்ணில் சிந்தப்பட்டு அல்லவா உங்கள் முஹம்மது மதினாவில் நிலைத்து இருந்தார்? என்ன மிஸ்ட் அவர்களே, இஸ்லாமுக்கு எதிரிகள் இருந்தார்கள், அவர்கள் எதிர்த்தும் ஒன்றும் நடக்கவில்லை என்றுச் சொன்னால், மூளைச் சலவை செய்யப்பட்ட முஸ்லீம்களில் சிலர் வேண்டுமானாலும் ஏற்கலாம்... மற்றவர்கள் இதற்கெல்லாம் மசிய மாட்டார்கள்.

எனக்கு இஸ்லாம் மீது அதிக நம்பிக்கையுண்டு, அதாவது "இஸ்லாமை ஒருவர் தனியாக வந்து அழிக்கவேண்டியதில்லை, அது தானாகவே அழிந்துவிடும்... இஸ்லாமின் கொள்கைகள் அடி தடி என்று இருப்பதால், ஒரு இஸ்லாமிய குழு இன்னொரு இஸ்லாமிய குழுவை அழிக்கும்... இதனை ஷியா மசூதிகளில் வெடிக்கும் வெடிகுண்டுகளும், சுன்னி இஸ்லாமிய மசூதிகளில் வெடிக்கும் வெடிகுண்டுகளும் சாட்சிச் சொல்லும்". இஸ்லாம் நிலைத்து இருக்கிறது என்று பெருமைப்பட்டுக்கொள்ளாதீர்கள், ஏதோ இஸ்லாமிய நாடுகளில் "சட்டத்தை பயன்படுத்தி" பயப்படவைத்து, இஸ்லாம் வாழ்ந்துக்கொண்டு இருக்கிறது. இந்தியா போன்ற நாடுகளில் "இஸ்லாமின் உண்மை முகத்தைக் காட்டாமல், பொய்யான முகத்தைக் காட்டி, அதாவது மக்காவின் இஸ்லாமை காட்டி வாழ்ந்துக்கொண்டு இருக்கிறது".

நான் இஸ்லாமை அழிக்க வரவில்லை, நான் சத்தியத்தைச் சொல்லவந்தேன், இஸ்லாமைப் பற்றிய உண்மைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்லவந்தேன்.. அவ்வளவு தான், ஒளி வந்ததும் இருள் தானாக அகலும்.. அது போல, உண்மையை அறியும் ஒவ்வொருவரும் இருளை விட்டு வெளியே வருவார்கள்.
 
Mist said:

நல்லது ஒன்னு இருந்தால் கெட்டதுன்னு ஒன்னு இருக்கணும்பாங்க அது மாதிரி நீங்களும் இருந்து விட்டு போங்க என்ன செய்வது.
 
 
Umar's Reply:

ஆமாம், நல்லது என்று ஒன்று இருந்தால், "இஸ்லாம் என்று" அதற்கு எதிரானது இருக்கத் தானே செய்யும், நீங்கள் சொல்வது சரியானது தான்.
 
Mist said:

எனவே உமரண்ணா வேலைக்கு ஆகாத இந்த வாதத்தை இனிமேலும் சொல்லிக்கிட்டு திரியாதீங்க என்ன.
 
Umar's Reply:

வேலைக்கு ஆகாத வார்த்தைகளை நான் பேசவில்லை, இந்த பின்னூட்டத்தை கொடுத்து "நீங்கள் தான் வேலைக்கு ஆகாத வார்த்தைகளை பேசியுள்ளீர்கள், அதாவது, ஜாகிர் நாயக் அவர்களின் புள்ளிவிவரங்களுக்கு ஆதாரங்களை கொடுங்கள் என்று கேட்டால், அதற்கு பதில் சொல்வதை விட்டுவிட்டு, என் மீது பாய்ந்தால் என்ன அர்த்தம்? கேட்ட கேள்விக்கு பதிலைச் சொல்லாமல், இப்படி வேலைக்கு ஆகாத வார்த்தைகளை பேசுவது நீங்கள் தான் என்பதை என் கட்டுரையையும், அதற்கான உங்கள் பின்னூட்டத்தையும் படிப்பவர்களுக்கு புரியும்".

உங்கள் இஸ்லாமிய அறிஞர் சொன்ன பொய்யை தமிழ் உலகம் அறியச் செய்வது "ஆகாத வேலையா?", நீங்கள் சொன்ன விவரங்களுக்கு புள்ளிவிவரங்களுக்கு ஆதாரங்களை தாருங்கள் என்று கேட்பது, ஆகாத வேலையா? நல்லா இருக்கு கதை..
 
Mist said:

முடிந்தால் உங்க மிஷநரி களையெல்லாம் கூட்டிகிட்டு இஸ்லாத்திற்கெதிராக பிரச்சாரம் செய்து ஒரு 10 வருஷத்தில் இந்தியாவில் இஸ்லாமை இல்லாமல் ஆக்குங்களேன் பார்க்கலாம். இங்கே உங்களை யாரும் ஒன்னும் பண்ண முடியாது இல்லையா, வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் போது செய்து காட்டுங்களேன் உமரண்ணா.
 
Umar's Reply:

நல்ல ஐடியா தான், ஆனால், உங்களை நம்பமுடியாதே,.... ஜனநாயக நாட்டில் உங்களால் வெளிப்படையாக எதுவும் செய்யமுடியாது என்பது உண்மை தான்... ஆனால், இஸ்லாமியர்களில் சிலர் மறைவில் அமர்ந்துக் கொண்டு எல்லாம் செய்வார்களே....

இஸ்லாம் பற்றி உண்மைகளை வெளிப்படையாகச் சொன்னால் விடுவீர்களா?

யாரோ கார்ட்டூன் வரைத்தான் ஏதோ ஒரு நாட்டில் வரைந்தான் என்றுச் சொல்லி, வேறு ஒரு நாட்டில் கொலை செய்வது.. யார்? உங்களைப் போல இஸ்லாமியர்கள் தானே!

யாருக்குத் தெரியும், இஸ்லாம் பற்றி உண்மைகளை வெளிப்படியாக சொன்னால் (முஹம்மது கொள்ளையடித்தார், கற்பழித்தார், அனேக மனைவிகளை திருமணம் செய்தார், தன் மருமகளையும் திருமணம் செய்துக்கொண்டார் என்று போஸ்டர்கள் அடித்து ஒட்டினால்) , நீங்கள் தீவிரவாதிகளுக்கு அழைப்பு கொடுத்து, இந்தியாவில் உங்களுக்கு வேலை அதிகம் இருக்கிறது என்றுச் சொல்லி அவர்களை அழைத்தனுப்பி அவர்களை செயல்களில் ஈடுபடவைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

இப்போதே காஷ்மீர் பிரச்சனை, பாபர் மசூதி பிரச்சனை என்றுச் சொல்லி, அனேக தீவிரவாத செயல்கள் இந்தியாவில் அரங்கேற்றிக்கொண்டு இருக்கிறது... இதில் கிறிஸ்தவர்கள் வேறு இன்னும் தீவிரவாத செயல்கள் செய்பவர்களை உற்சாகப்படுத்த வேண்டுமா சொல்லுங்கள்?

எனவே, எங்கள் வேலை சத்தியத்தைச் சொல்வது, அதுவும் மென்மையான முறையில் சொல்வது, மீதமுள்ளதை அவரின் கையில் கொடுத்துவிடுகிறோம்.

இங்கு இந்த சவால்கள் கொடுத்து பயன் இல்லை மிஸ்ட் அவர்களே, இஸ்லாமிய நாடுகளில் முதலாவது இப்படிப்பட்ட சட்டத்தைக் கொண்டுவாருங்கள், அங்கு இஸ்லாமை விட்டு வெளியேறாதவர்களை கொலை செய்வதை தடுத்து நிறுத்துங்கள், பிறகு தெரியும்...?
 
Mist said:

Umar quoted

4) கிறிஸ்தவம் தான் சரியான மார்க்கம், அதற்கு எதிர் மறையான மார்க்கம் தான் இஸ்லாம். இஸ்லாமிய நாடுகளில் இன்னும் எவ்வளவு தான் நீங்கள் கொடுமைப்படுத்தினாலும், கிறிஸ்தவம் இன்னும் வளரும் (கிறிஸ்தவர்கள் ஒன்றுக்கு நான்கு மனைவிகளை திருமணம் செய்துக்கொண்டு கணக்கில்லாமல் பிள்ளைகள் பெற்று கிறிஸ்தவத்தை வளர்க்க விரும்புவதில்லை, படுக்கை அறையில் கிறிஸ்தவத்தை வளர்க்கவேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை.)

Mist said :

ஏன் உமரண்ணா அப்போ என்ன படுக்கையறை ஜெபம் பண்ணுவதற்கா? ஏன் உங்களுடைய காழ்ப்புணர்ச்சியை இந்த மாதிரி மட்டமான விமர்சனங்களின் மூலம் நிரூபிக்கிறீர்.
 
Umar's Reply:

இதை நான் வேண்டுமென்றுச் சொல்லவில்லை, சௌதியிலிருந்து இந்தியாவிற்கு வந்தவர்களை நான் விசாரித்ததில், "ஏன் இத்தனை பிள்ளைகள் என்று கேட்டால்?" இஸ்லாமை வளர்க்கிறோம் என்று சொல்கிறார்களாம். எனவே, என்னுடைய காழ்ப்புணர்ச்சி இல்லை, இது தான் உண்மை. மட்டமாக நான் விமர்சிக்க வில்லை, மட்டமான சட்டங்களைப் பற்றிச் சொல்கிறேன், மட்டமான கோட்பாடுகளைப் பற்றிச் சொல்கிறேன், அவ்வளவு தான்.
 
Mist said:

படுக்கை அறையில் வளர்ப்பதை விட கேவலமானது அதாவது கூட்டி கொடுப்பதற்கு சமமானது பணம் கொடுத்து ஆசை வார்த்தை காட்டி ஒருத்தனுடைய இயலாமையை பயன்படுத்தி மதம் மாற்றுவது.
 
Umar's Reply:

அதாவது முஸ்லீம்கள் படுக்கை அறையில் இஸ்லாமை வளர்க்கிறார்கள் என்பதை ஒப்புக்கொண்டதற்காக நன்றி.

இப்போது "கூட்டிக் கொடுப்பது" என்று நீங்கள் சொல்லும் விவரம் பற்றி காண்போம். அதாவது, பணத்தைக் காட்டி, ஆசைக் காட்டி ஒருவரை ஒரு மார்க்கத்திற்குள் வரவழைப்பதென்பது ரொம்ப நாட்கள் தாக்குபிடிக்காது, கிறிஸ்தவர்களிலும் இப்படி சிலர் இருப்பது வருத்தப்படத்தக்கதே என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்.

பணம் கொடுத்து, ஆசைக் காட்டி மதமாற்றம் செய்யும் நபர்களை "கூட்டிக் கொடுக்கிறவர்கள்" என்று குற்றம் சாட்டுகிறீர்கள். இதே கருத்தில் நீங்கள் நிலைத்து இருக்கவேண்டும், சில உண்மைகள் தெரிந்த பிறகு "உங்கள் கருத்தை மாற்றிக்கொள்ளக்கூடாது?".

உங்களின் இந்த கருத்தின் படி "உங்கள் முஹம்மது அதாவது இஸ்லாமிய நபி அவர்கள் கூட‌ ஒரு கூட்டிக்கொடுப்பவர்" என்று அர்த்தமாகிறது. இதை நான் சொல்லவில்லை, உங்களின் கருத்துப்படி, அவரும் அந்த வகையிலேயே வருகிறார்.

என்னது? பணம் கொடுத்து, பொருட்கள் கொடுத்து முஹம்மது இஸ்லாமுக்கு அழைத்தாரா?
இல்லவே இல்லை!
இப்படி நடக்க வாய்ப்பே இல்லை!
இது இஸ்லாம் மீது நீங்கள் சொல்லும் குற்றச்சாட்டு என்று சொல்வீர்கள்.

இப்படி சொல்லும் இஸ்லாமியர்கள் முதலில் குர்‍ஆன் 9:60ம் வசனத்தை படிக்கவேண்டும் மற்றும் கீழ் கண்ட இரண்டு கட்டுரைகளை படிக்கவேண்டும்:
 
(ஜகாத் என்னும்) தானங்கள் தரித்திரர்களுக்கும், ஏழைகளுக்கும், தானத்தை வசூல் செய்யும் ஊழியர்களுக்கும், இஸ்லாத்தின் பால் அவர்கள் உள்ளங்கள் ஈர்க்கப்படுவதற்காகவும், அடிமைகளை விடுதலை செய்வதற்காகவும், கடன் பட்டிருப்பவர்களுக்கும், அல்லாஹ்வின் பாதையில் (போர் புரிவோருக்கும்), வழிப்போக்கர்களுக்குமே உரியவை. (இது) அல்லாஹ் விதித்த கடமையாகும் - அல்லாஹ் (யாவும்) அறிபவன், மிக்க ஞானமுடையோன். (9:60)
 
இந்த வசனம் பற்றியும், அதன் விரிவுரைப் பற்றியும், இன்னும் புகாரி, முஸ்லீம் ஹதீஸ்களின்படியும் "முஹம்மது பணத்தைக் கொடுத்து, இஸ்லாமுக்கு அனேகரை அழைத்துள்ளார், அப்படி சிலர் இஸ்லாமியராகவும் ஆகி இருக்கிறார்கள்". இதனை விளக்கும் இரண்டு தமிழ் கட்டுரைகள்.

1) Answering Mist: இஸ்லாமியராக மாற பணம் கொடுத்த முஹம்மது (குர்‍ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பகிர்ந்தளிப்பு)

2) Answering Islam: பணமும் இஸ்லாமுக்கு மாறியவர்களும் ( http://isakoran.blogspot.com/2009/08/blog-post.html )

இந்த இரண்டு கட்டுரைகளை படித்து, குர்‍ஆன், மற்றும் ஹதீஸ்களின் ஆதாரங்களை கண்ட நீங்கள், மிஸ்ட் அவர்களின் கருத்துப்படி, "முஹம்மதுவை நாம் என்னவென்று அழைக்க முடியும்?" இதற்கு பதில் மிஸ்ட் அவர்கள் கொடுத்த பின்னூட்டத்தில் உண்டா?
 
Mist said:

முதலில் உங்க ஆளுங்களை இந்த மாதிரி மட்டமான வேலையை நிறுத்த சொல்லுங்க, பவுலிஸ்தவம் காணாமல் போய்விடும்.
 
Umar's Reply:

போலி கிறிஸ்தவர்களில் சிலர் செய்யும் மட்டமான வேலையை நிறுத்தச் சொல்லி நான் போலி கிறிஸ்தவர்களை கேட்டுக்கொள்கிறேன். ஆனால், உங்கள் முஹம்மது செய்த மட்டமான வேலையைப் பற்றி யார் தீர்ப்பு கூறப்போகிறார்கள்? மேலே படித்த இரண்டு கட்டுரைகளின் படி, பணம் கொடுத்து முஹம்மது பலரின் மனதை மாற்றியுள்ளார் (மட்டகரமான வேலையை செய்துள்ளார்). இவரை யார் இப்போது குற்றப்படுத்தப் போகிறார்கள், மிஸ்ட் அவர்களின் வார்த்தைகளே முஹம்மதுவை குற்றப்படுத்துகிறது.
 
Mist said:

உமரண்ணா உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால், இந்தியாவில் மக்கள் தொகை சம விகிதத்தில்தான் வளர்கிறது, முஸ்லிம் மக்கள் தொகை மட்டும் தனியாக வளர வில்லை, போன தலைமுறையில் பிள்ளைபேறு அதிகமாகத்தான் இருந்தது எல்லா மதத்திலும். மக்களுடைய மன மாற்றமும், அரசின் பிரசாரமும் மக்கள் தொகை வளர்ச்சியை ஓரளவுக்கு கட்டு படுத்தியுள்ளதை அறிவுள்ள யாவரும் ஒத்துக்கொள்வர். உண்மையான மனமாற்றத்தை ஏற்றுக்கொள்ளாத உங்கள் மனம் பணமாற்றத்தை மட்டும் ஏற்றுக்கொள்வது ஏனோ?

Bye

Mist.
 
Umar's Reply:

இந்திய அரசாங்கத்தின் சட்டதிட்டங்களும் பிரச்சாரங்களும் ஜனத்தொகை பெருக்கத்தை சிறிது குறைத்துள்ளது என்பது உண்மை தான், ஆனால், இப்படிப்பட்ட சட்டமில்லாத நாடுகளில், இஸ்லாமிய நாடுகளில் எப்படி ஜனத்தொகை வளருகிறது? இப்படி ஒன்றுக்கு நான்கு மனைவிகளை கட்டிக்கொண்டு, கணக்கில்லாமல் பிள்ளை பெற்றுக்கொண்டு இருந்து விட்டு, "உலகத்தில் இஸ்லாம் வேகமாக வளருகிற மார்க்கம்" என்று மார்த்தட்டுவது எந்த வகையில் நியாயம்? ஆம், இஸ்லாமியர்களின் வளர்ச்சி படுக்கை அறையிலிருந்து ஆரம்பிக்கிறது என்பதை மட்டும் வேண்டுமானால் ஏற்றுக் கொள்ளலாம்.

உங்களை அடுத்த பின்னூட்ட பதிலில் சந்திக்கும் வரை...
 
 

இஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்

முன் பக்கம் செல்ல

HOME PAGE

தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்

1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1

2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2

3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3

4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4

பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்

1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1

2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2

பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்

1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்

2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்