இஸ்லாம் அமைதி மார்கமா? இஸ்லாம் இனிய மார்கமா? இஸ்லாம் உண்மையான மார்கமா?

ஆன்சரிங் இஸ்லாம்

பல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்

சத்தியவான் தளம் செல்ல

Thursday, July 31, 2008

இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி...

இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி

(அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
 
 
 
முன்னுரை: இஸ்லாம் வாளால் பரப்பப்படவில்லை என்று முஸ்லீம்கள் ஏகமாக சொல்கிறார்கள். ஆனால், முகமது மற்ற நாட்டு மன்னர்களுக்கு எழுதிய கடிதங்களே போதும், நமக்கு இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது என்பதை அறிந்துக்கொள்வதற்கு. மற்ற நாட்டு மன்னர்களுக்கு முகமது கடிதங்கள் மூலம் அழைப்பு விடுத்தார், அபுமுஹை அவர்கள் அக்கடிதங்களின் தமிழ் மொழியாக்கத்தை பதித்துள்ளார். இக்கடிதங்களை ரஹீக் என்ற புத்தகத்திலிருந்து பதித்ததாக, அபுமுஹை அவர்கள் குறிப்பு எழுதியுள்ளார்கள்.

இக்கட்டுரையில் நாம் கீழ் கண்ட இரண்டு விவரங்களைக் காணப்போகிறோம்.

1) தமிழில் மொழிபெயர்க்கும் போது, வேண்டுமென்றே சில வார்த்தைகளை மறைத்து, "இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம்" என்பதை காட்ட‌ முயற்சி செய்த தமிழ் இஸ்லாமிய அறிஞர்கள்.

2) இக்கடிதங்கள் நமக்கு எதை போதிக்கின்றன, இஸ்லாம் அமைதி மார்க்கமா அல்லது மற்றவர்களை பயப்படவைத்து, வாளால் பரவிய மார்க்கமா?





1) தமிழில் மொழிபெயர்க்கும் போது, வேண்டுமென்றே சில வார்த்தைகளை மறைத்து, "இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம்" என்பதை காட்ட‌ முயற்சி செய்த தமிழ் இஸ்லாமிய அறிஞர்கள்


முகமது எட்டு அரசர்களுக்கு கடிதம் மூலம் இஸ்லாமை தழுவும் படி அழைப்பு விடுத்ததாக அபூமுஹை அவர்கள் கட்டுரைகளை எழுதியுள்ளார்கள். இக்கடிதங்கள் ஆங்கிலத்தில் முஹம்மத் டாட் நெட் என்ற தளத்தில் பதிக்கப்பட்டுள்ளது. பஹ்ரைன் நாட்டு மன்னருக்கு முகமது அனுப்பிய முதலாவது கடிதம் கிடைக்காததால், அதை நான் இக்கட்டுரைக்கு எடுத்துக்கொள்ளவில்லை, அக்கட்டுரையை படிக்க இங்கே சொடுக்கவும்.

இந்த கட்டுரைகளில் சிலவற்றில், எங்கெல்லாம் இஸ்லாமைக் கொண்டு முகமது மற்றவர்களை பயப்பட வைத்தாரோ, அங்கெல்லாம் நம் தமிழ் இஸ்லாமிய அறிஞர்கள் அவ்வார்த்தைகளை மறைத்து, "இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம் போல" காட்சி அளிக்கும் படி மொழிபெயர்த்துள்ளார்கள்.

அவைகளைப் பற்றிய விவரங்களை கீழே காணலாம்:

ஒப்பிட்டுப் பார்ப்பதற்கு நமக்கு உபயோகமாக இருக்கும் என்பதால், இக்கடிதங்களை ஆங்கிலத்தில் நான் கீழே பதித்து, அதன் பக்கத்தில் நம் தமிழ் இஸ்லாமிய அறிஞர்கள் தமிழில் மொழிபெயர்த்த விவரஙகளைத் தருகிறேன். முழு கடிதங்களைப் படிக்க கொடுக்கப்பட்ட தமிழ் அல்லது ஆங்கில தொடுப்புக்களை சொடுக்கவும்.

வரிசை எண் எந்த நாட்டு அரசனுக்கு இக்கடிதம் அனுப்பப்பட்டது தமிழில்(அபூமுஹை த‌ள‌ம் எழுதிய‌து) இக்கடிதம் ஆங்கில‌த்தில்
1. அபிசீனியா மன்னர் நஜ்ஜாஷிக்கு ….. நான் உமக்கு இஸ்லாமிய அழைப்பை விடுக்கிறேன். நிச்சயமாக நான் இஸ்லாமியத் தூதராவேன். நீ இஸ்லாத்தை ஏற்றுக்கொள், ஈடேற்றம் பெறுவாய். .......

Source: http://abumuhai.blogspot.com/2008/07/1.html
…. I call you unto the fold of Islam; if you embrace Islam, you will find safety, ….

Source:
A Deputation to Abyssinia (Ethiopia)
2. எகிப்து மன்னருக்கு நான் உங்களுக்கு இஸ்லாமிய அழைப்பை விடுக்கிறேன். இஸ்லாமை ஏற்றுக்கொள்க. ஈடேற்றம் அடைவீர்.

Source: http://abumuhai.blogspot.com/2008/07/2.html
… I invite you to accept Islam. Therefore, if you want security, accept Islam.

Source:
Letter to the Vicegerent of Egypt, called Muqawqas
3. பாரசீக மன்னருக்கு நீங்கள் இஸ்லாமை ஏற்றுக் கொள்ளுங்கள் ஈடேற்றம் பெறுவீர்கள்.

Source: http://abumuhai.blogspot.com/2008/07/3.html
…… Accept Islam as your religion so that you may live in security,….

Source: A Letter to Chosroes, Emperor of Persia
4. ரோம் நாட்டு மன்னருக்கு ….நேர்வழியை பின்பற்றியவருக்கு ஈடேற்றம் உண்டாகட்டும்! இஸ்லாமை ஏற்றுக்கொள் ஈடேற்றம் அடைவாய்….

Source: http://abumuhai.blogspot.com/2008/07/4.html
……I invite you to embrace Islam so that you may live in security.

Source:
The Envoy to Caesar, King of Rome
5. யமாமா நாட்டு அரசருக்கு ….குதிரையும் ஒட்டகமும் எதுவரை செல்ல முடியுமோ அதுவரை எனது மார்க்கம் வெற்றி பெரும். இஸ்லாமை ஏற்றுக் கொள்ளுங்கள். ஈடேற்றம் பெறுவீர்கள். உங்களுக்குக் கீழ் உள்ள பகுதிகளையெல்லாம் உங்களுக்கே தந்துவிடுகிறேன்.

Source: http://abumuhai.blogspot.com/2008/07/67.html
… Be informed that my religion shall prevail everywhere. You should accept Islam, and whatever under your command shall remain yours."

Source:
A Letter to Haudha bin 'Ali, Governor of Yamama
6. சிரியா நாட்டு மன்னருக்கு அல்லாஹ்வின் தூதர் முஹம்மது, ஹாரிஸ் இப்னு அபூ ஷமீருக்கு எழுதியது. நேர்வழியைப் பின்பற்றி, அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டு, அவனை உண்மையாக ஏற்றுக் கொண்டவருக்கு ஈடேற்றம் உண்டாகட்டும்! தனக்கு இணை துணை இல்லாத ஏகனான அல்லாஹ் ஒருவனையே நீர் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்று நான் உங்களை அழைக்கிறேன். அப்படி செய்தால் உங்கள் ஆட்சி உங்களிடமே நிலைத்திருக்கும்.''

அஸத் இப்னு குஸைமா கிளையைச் சேர்ந்த ஷுஜா இப்னு வஹப் இக்கடிதத்தை எடுத்துச் சென்றார்.
இவர் ஹாரிஸிடம் கடிதத்தை ஒப்படைத்த போது, அதைத் தூக்கி எறிந்துவிட்டு''என்னிடமிருந்து எனது ஆட்சியை யாரால் பிடுங்க முடியும். இதோ நான் அவரிடம் புறப்படுகிறேன்'' என்று கர்ஜித்தான். இவன் இஸ்லாமை ஏற்றுக் கொள்ளவில்லை.

Source: http://abumuhai.blogspot.com/2008/07/67.html
From Muhammad, Messenger of Allâh to Al-Harith bin Abi Shamir. Peace be upon him who follows true guidance, believes in it and regards it as true. I invite you to believe in Allâh Alone with no associate, thenceafter your kingdom will remain yours."

Shuja' bin Wahab had the honour of taking the letter to Harith, who upon hearing the letter read in his audience, was madly infuriated and uttered:
"Who dares to disposs me of my country, I'll fight him (the Prophet)," and arrogantly rejected the Prophet's invitation to the fold of Islam.

Source:
A Letter to Harith bin Abi Shamir Al-Ghassani, King of Damascus
7. ஓமன் நாட்டு அரசருக்கு நீங்கள் இருவரும் இஸ்லாமை ஏற்றுக் கொண்டால் உங்களையே நான் ஆட்சியாளர்களாக ஆக்கி விடுவேன். நீங்கள் இருவரும் இஸ்லாமை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டால் நிச்சயம் உங்களின் ஆட்சி கவிழ்ந்துவிடும் என்பதில் சந்தேகமேயில்லை. எனது வீரர்கள் உங்களது நாட்டிற்கு வெகு விரைவில் வந்திறங்குவார்கள். எனது நபித்துவம் உங்களது ஆட்சியை வெல்லும்.'

Source: http://abumuhai.blogspot.com/2008/07/8.html
If you two accept Islam, you will remain in command of your country; but if you refuse my Call, you've got to remember that all your possessions are perishable. My horsemen will appropriate your land, and my Prophethood will assume preponderance over your kingship."

Source:
Letter to the King of 'Oman, Jaifer, and his Brother 'Abd Al-Jalandi


2) இக்கடிதங்கள் நமக்கு எதை போதிக்கின்றன, இஸ்லாம் அமைதி மார்க்கமா அல்லது மற்றவர்களை பயப்படவைத்து, வாளால் பரவிய மார்க்கமா?

மேலே உள்ள சில கட்டுரைகளில்,

ஆங்கிலத்தில் "
if you embrace Islam, you will find safety" என்று உள்ளதை

தமிழில் "
நீ இஸ்லாத்தை ஏற்றுக்கொள், ஈடேற்றம் பெறுவாய்" என்று மொழிபெயர்த்துள்ளார்கள்.

ஆங்கிலத்தில் உள்ள வரிகளில் "ஒரு நிபந்தனை" இருப்பதை காணமுடியும், அதாவது, "நீங்கள் இஸ்லாமை ஏற்றுக்கொண்டால், பாதுகாப்பாக இருப்பீர்கள்" என்று உள்ளது. இதன் உள் அர்த்தம் என்ன? "நீங்கள் இஸ்லாமை ஏற்றுக்கொள்ளவில்லையானால், பாதுகாப்பாக இருக்கமாட்டீர்கள், அதாவது நான் வந்து போர் புரிந்து, உங்கள் மீது வெற்றிக்கொள்வேன்" என்று பொருள். இந்த விவரத்தை மிகவும் தெளிவாக, முகமது ஓமன் நாட்டு மன்னருக்கு எழுதிய கடிதத்தில் விவரித்துள்ளார்.


ஓமன் நாட்டுக்கு முகமதுவின் கடிதம்:

...நீங்கள் இருவரும் இஸ்லாமை ஏற்றுக் கொண்டால் உங்களையே நான் ஆட்சியாளர்களாக ஆக்கி விடுவேன். நீங்கள் இருவரும் இஸ்லாமை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டால் நிச்சயம் உங்களின் ஆட்சி கவிழ்ந்துவிடும் என்பதில் சந்தேகமேயில்லை. எனது வீரர்கள் உங்களது நாட்டிற்கு வெகு விரைவில் வந்திறங்குவார்கள். எனது நபித்துவம் உங்களது ஆட்சியை வெல்லும்.'


...If you two accept Islam, you will remain in command of your country; but if you refuse my Call, you've got to remember that all your possessions are perishable. My horsemen will appropriate your land, and my Prophethood will assume preponderance over your kingship."

மேலே உள்ள கடிதத்தில் முகமது சொல்வதை கவனியுங்கள். ஓமன் நாட்டு அரசர் இஸ்லாமை ஏற்றுக்கொண்டால், தன் நாட்டை தானே ஆட்சி செய்யலாமாம். யார் யாருக்கு ஆட்சிப் பொறுப்பை தருவது? நான் ஆட்சி செய்யும் நாட்டில், எனக்கு யாரோ ஒருவர் கடிதம் அனுப்பி, இஸ்லாமை ஏற்றுகொள், அப்போது நீயே உன் நாட்டை ஆட்சி செய்யலாம் என்று சொன்னால், நான் என்ன காதில் பூவைத்து இருப்பேனா? ஒருவேளை எனக்கு இராணுவ பலம் குறைவாக இருந்தால், தோற்றுப்போவேன் என்ற பயத்துடன் இஸ்லாமை ஏற்றுக்கொள்ளமுடியும் [அப்படி தோற்றுப்போவேன் என்ற பயத்துடன் இஸ்லாமை ஏற்றுக்கொண்டால், இதனால் அல்லாவிற்கும், இஸ்லாமுக்கும் என்ன மேன்மை சொல்லுங்கள்?]. எனக்கு இராணுவ பலம் அதிகமாக இருந்தால், முகமதுவோடு போர் புரிவேன். எது எப்படியானாலும், இது தான் அல்லாவின் தீனை பரப்பும் விதமா? சிந்தியுங்கள்.

ஒரு வேளை முஸ்லீம்கள் இக்கடிதங்களுக்கு "அப்படி அர்த்தம் இல்லை, கிறிஸ்தவர்கள் பொய் சொல்கிறார்கள்" என்று சொல்லக்கூடும். ஆனால், சிரியா அரசன், இக்கடிதம் படித்து என்ன சொன்னார் என்பதை சிறிது படித்துப்பார்த்தால் புரியும், இஸ்லாமை முகமது எப்படி பரப்பினார் என்பதை. அந்த அரசன் "என்னிடத்திலிருந்து என் ஆட்சியை யார் பிடுங்க முடியும்?" என்றுச் சொல்கிறான், அப்படியானால், அக்கடிதத்தில் என்ன எழுதியிருக்கும் என்று தெரிந்துக்கொள்ள ஆராய்ச்சி செய்யவேண்டிய அவசியமில்லை.


அஸத் இப்னு குஸைமா கிளையைச் சேர்ந்த ஷுஜா இப்னு வஹப் இக்கடிதத்தை எடுத்துச் சென்றார். இவர் ஹாரிஸிடம் கடிதத்தை ஒப்படைத்த போது, அதைத் தூக்கி எறிந்துவிட்டு''என்னிடமிருந்து எனது ஆட்சியை யாரால் பிடுங்க முடியும். இதோ நான் அவரிடம் புறப்படுகிறேன்'' என்று கர்ஜித்தான். இவன் இஸ்லாமை ஏற்றுக் கொள்ளவில்லை.


Shuja' bin Wahab had the honour of taking the letter to Harith, who upon hearing the letter read in his audience, was madly infuriated and uttered: "Who dares to disposs me of my country, I'll fight him (the Prophet)," and arrogantly rejected the Prophet's invitation to the fold of Islam.


சிலர் சொல்லக்கூடும், முகமதுவின் இக்கடிதங்களுக்கு பலர் ஆமோதம் அளித்தார்கள், இஸ்லாமியர்களாக மாறினார்கள் என்று. உண்மை தான் பலர் அமோதம் அளித்தார்கள், சிலர் எதிர்த்தார்கள். இங்கு பிரச்சனை "இஸ்லாமின் கோட்பாடுகள், கட்டளைகள்" மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளும்படி இருந்ததா இல்லையா என்பதல்ல? முகமது இஸ்லாமை பரப்பிய விதம் சரியா? உடனே, முகமதுவை விட்டுவிட்டு மற்ற அரசர்களின் பெயர்களை குறிப்பிட்டு, இந்த நாட்டில் இப்படி அமைதியான முறையில் இஸ்லாம் பரவியது என்று சொல்லவேண்டாம், இப்போது கேள்வி, முகமது இஸ்லாமை எப்படி பரப்பினார்? என்பது தான். முகமதுவின் கடிதங்களில் உள்ள உண்மை என்ன? என்பதைப் பற்றியது தான்.



முகமது இஸ்லாமை வாளால் தான் பரப்பினார்:

இஸ்லாம் வாளால் பரப்பப்படவில்லை என்பதை காட்ட முஸ்லீம்கள், பல நாடுகளின் சரித்திரத்தைப் பற்றிப் பேசுவார்கள். ஆனால், முகமது எப்படி பரப்பினார் என்பதை இக்கடிதங்கள் படம் பிடித்துக்காட்டுகின்றன. இதற்கு முஸ்லீம்கள் என்ன பதில் சொல்லப்போகிறார்கள்? நான் ஒரு கேள்வியை கேட்கட்டும், அதாவது உலகத்தில் பல இஸ்லாமிய நாடுகள் உள்ளன. அப்படிப்பட்ட ஒரு நாட்டிற்கு, இந்திய அரசாங்கம் அல்லது வேறு ஒரு மேற்கத்திய நாடு அல்லது இராணுபலம் அதிகமாக உள்ள நாடு, கீழ் கண்டவாறு கடிதம் எழுதி அனுப்பினால், எப்படி இருக்கும்.


மான்புமிகு சூடான்/பாகிஸ்தான்/சௌதி அரேபியா etc... நாட்டு அதிபருக்கு, இந்தியாவின்/சைனாவின்/அமெரிக்காவின்/ஜெர்மனியின் etc... நாட்டு அதிபர் எழுதிக்கொள்வது. உங்களுக்கு சாந்தி உண்டாகட்டும்.

நாங்கள் a/b/c/x/y/z etc.. என்ற இறைவனை வணங்குகிறோம், மற்றும் இத்தெய்வமே உண்மையானவர். எனவே, உங்கள் அல்லாவை தொழுவதை இனி விட்டுவிடுங்கள். நீங்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டுமானால், இந்துத்துவத்தை / கிறிஸ்தவத்தை / புத்தமதத்தை / etc... ஏற்றுக்கொள்ளுங்கள், அப்போது பாதுகாப்பாக இருப்பீர்கள். நீங்க‌ள் இஸ்லாமை விட்டு விட்டு எங்கள் தெய்வ‌ங்க‌ளை ஏற்றுக்கொள்ள‌வில்லையானால், எங்க‌ள் இராணுவ‌ம் உங்க‌ள் நாட்டில் வ‌ந்து இற‌ங்கும், எங்க‌ள் வ‌லிமையை உங்க‌ளுக்கு காட்டுவோம். எங்க‌ள் மார்க்க‌த்தை ஏற்று, உங்க‌ள் இஸ்லாமை விட்டு விடுங்க‌ள் என்று உங்க‌ளுக்கு அழைப்பு விடுக்கிறோம். அப்ப‌டி நீங்க‌ள் மாற‌வில்லையானால், அல்லாவை வ‌ண‌ங்கும் மூஸ்லீம்க‌ளின் பாவ‌ங்க‌ள் எல்லாம் உங்க‌ள் மேல் சும‌ரும் என்ப‌தை தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த மேலே உள்ள கடிதத்திற்கும், முகமது அனுப்பின கடிதங்களுக்கும் என்ன வித்தியாசம் என்று நினைக்கிறீர்கள். இதை படித்தவுடன் கோபம் வரவில்லையா உங்களுக்கு? அப்படித்தான், முகமதுவும் தன் தெய்வமாகிய அல்லாவை பரப்ப, ஆயுதத்தையும், போரையும், சர்வாதிகாரத்தையும் பயன்படுத்தினார். அதற்கு இக்கடிதங்களே சாட்சிகள். இக்கடிதங்களையும், அவைகளில் உள்ள செய்திகளையும், உலகத்தில் உள்ள மக்களுக்கு எப்படி விளக்குவீர்கள்? என்ன நியாயத்தை கற்பிப்பீர்கள்? சாதாரணமாக, கடவுள் நம்பிக்கையை பயன்படுத்தாமல், பொன்னுக்கும் மண்ணுக்கும் ஆசைப்பட்டு பல அரசர்கள் பக்கத்து நாட்டு அரசர்கள் மீது போர் தொடுப்பார்கள். ஆனால், தன்னை ஒரு இறைவனின் தூதன் என்றுச் சொல்லிக்கொண்டு, உலகத்திற்கு அமைதியை கொடுப்பேன் என்றுச் சொல்லிக்கொண்டு, இரத்தம் சிந்தியது சரிதானா என்று சிந்தித்துப் பாருங்கள். இப்படியும் ஒரு மதத்தை பரப்பனுமா? என்று உங்களை நீங்களே கேள்வியை கேட்டுப்பாருங்கள்.

முகமதுவை விட மற்ற இஸ்லாமிய அரசர்கள் நல்லவர்கள் என்று சொல்லும் இஸ்லாமியர்கள்:

இஸ்லாமை பரப்ப இஸ்லாமிய அரசர்கள் வாளைப்பயன் படுத்தவில்லை, அவர்கள் தங்கள் நல்ல நடத்தையினால் தான் பரப்பினார்கள் என்றுச் சொல்லி, இஸ்லாமுக்காக பரிந்துப்பேசும் இஸ்லாமியர்கள் ஒன்றை கவனத்தில் வைக்கவேண்டும். இப்படி நீங்கள் செய்வதினால், நீங்கள் மேற்கோள் காட்டும் இஸ்லாமிய அரசர்கள், "முகமதுவை விட நல்லவர்களாக இருந்தார்கள்" என்பதை மறைமுகமாக நீங்கள் சொல்கிறீர்கள் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். உங்கள் முகமது கடிதங்களை அனுப்பி, அரசர்களை இஸ்லாமுக்கு அழைத்து, வரவில்லையானால் தொலைத்துவிடுவேன் என்று பயமுறுத்தி இஸ்லாமை பரப்பினார், ஆனால், அவரை பின்பற்றியவர்கள் அப்படி செய்யவில்லை என்று நீங்கள் சொல்வதினால், என்ன தவறு செய்துள்ளீர்கள் என்று சிந்தித்துப்பாருங்கள்.

முடிவுரை: இஸ்லாமிய நண்பர் அபூமுஹை அவர்களுக்கு, நீங்கள் எழுதிய கட்டுரைகள் ஒரு குறிப்பிட்ட புத்தகத்திலிருந்து எடுத்து எழுதினீர்கள் என்று சொல்லியுள்ளீர்கள். நான் கேட்க விரும்பும் கேள்வி: அப்புத்தகத்திலே இப்படி உண்மையை மறைத்து இஸ்லாம் ஒரு அமைதி மதம் போல காட்டித் தான் எழுதியிருந்ததா? அல்லது நீங்கள் அதனை மறைத்து எழுதினீர்களா?

எது எப்படியானால், அப்புத்தகம் எழுதியவரும் ஒரு முஸ்லீம் தானே, இக்கடிதங்களில் உள்ள பொருளை எங்களுக்கு விளக்கும் படி கேட்டுக்கொள்கிறேன். மட்டுமல்ல, உங்கள் நபி அன்று செய்தது இன்று கூட மக்கள் அல்லது நாடுகள் பின்பற்ற தகுந்தது என்றுச் சொல்லும் முஸ்லீம்கள், இப்படி இன்றுள்ள உலகில் கடிதம் மூலமாக பயமுறுத்தி மதத்தை பரப்ப நீங்கள் அனுமதிப்பீர்களா? அல்லது பாகிஸ்தானுக்கு, ஈரானுக்கு அல்லது சௌதி அரேபியாவிற்கு ஒரு கடிதம் அனுப்பினால், அவர்கள் என்ன பதில் தருவார்கள்? அக்கடிதம் அனுப்பியவர்களோடு போர் செய்வார்களா அல்லது இஸ்லாமை விட்டுவிட்டு வேறு மார்க்கத்திற்கு மாறிவிடுவார்களா?

காதுள்ளவன் கேட்கக்கடவன்
 
 



--
Posted By Isa Koran to ஈஸா குர்-ஆன் at 7/31/2008 01:00:00 AM

Saturday, July 26, 2008

குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)





குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2


குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
 


முன்னுரை: இயேசுவின் பிறப்பு சம்மந்தப்பட்ட குர்‍ஆனின் வசனங்கள் பற்றி நாம் சிந்தித்துக்கொண்டு வந்துக்கொண்டு இருக்கிறோம். குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 1ஐ தொடர்ந்து, இப்போது இரண்டாம் பாகமாக, அல்லா செய்த ஒரு சரித்திர தவறை காணப்போகிறோம்.


குர்‍ஆன் 19:7ல் அல்லா சொல்கிறார்:


 
குர்‍ஆன் 19:7


'ஜகரிய்யாவே! யஹ்யா என்ற பெயர் கொண்ட ஒரு புதல்வனை(த் தருவது) பற்றி நிச்சயமாக நாம் உமக்கு நற்செய்தி கூறுகிறோம். இதற்கு முன்னர் இப்பெயர் கொண்டவரை நாம் ஆக்கவில்லை" (என்று இறைவன் கூறினான்).


யஹ்யா ( யோவான் or John ) என்ற பெயர் கொண்ட நபர்களை அல்லா, யோவான் ஸ்நானனுக்கு முன்பு ஒருவரையும் உருவாக்கவில்லையாம். அதாவது, யோவான் என்ற பெயர் கொண்ட ஒருவரும் யோவானுக்கு முன்பு வாழவில்லையாம். இப்படி அல்லா சொல்வதினால், அவருக்கு சரித்திரம் பற்றிய‌ விவரம் தெரியவில்லை என்று புலனாகிறது. சரித்திரத்தை நாம் புரட்டிப்பார்த்தாலும், மற்றும் பைபிளின் பழையை ஏற்பாட்டை புரட்டிப்பார்த்தாலும், யோவான் (John) என்ற பெயர் கொண்டவர்கள் அனேகர் இருப்பதாக நாம் கண்டுக்கொள்ளமுடியும். குர்‍ஆனில் உள்ள பல பிழைகளில் இதுவும் ஒன்று.

சரித்திரத்தில் யோவான்(JOHN) பெயர்களைக் கொண்ட நபர்கள்


1) ஜான் ஹிர்கானஸ் John Hyrcanus (Yohanan Girhan):

இவர் கி.மு. 2ம் நூற்றாண்டில் வாழ்ந்த "ஹாஸ்மொனியன்" நாட்டு அரச‌னாவார். ஆட்சிகாலம் கி.மு. 134 - 104, மரித்த ஆண்டு : கி.மு. 104. மேலும் விவரங்களுக்கு : பார்க்க John Hyrcanus - Wikipedia | John Hyrcanus-Brittanica | John Hyrcanus - Jewish Encyclopedia

2) "ஜான்" எஸ்ஸன் - John Essenes:

ஒரு கலகம் செய்த குழுவிற்கு தலைவராக இருந்த "ஜான்" எஸ்ஸன் என்வரைப்பற்றி ஜொஸெபாஸ் சொல்கிறார். "ஜான்" எஸ்ஸன் கி.மு. வில் வாழ்ந்தவர். பார்க்க: "ஜான்" எஸ்ஸன் - John Essenes

3) 1 மக்காபீஸ் 2:1

மக்காபீஸ் என்ற நூல் ( கி.மு 100) சொல்கிறது. மத்ததியாஸ் "ஜானின்" மகன், ஜான் சிமியோனின் மகன். மற்றும் அதிகாரம் 2 வசனம் 2 சொல்கிறது, மத்ததியாஸுக்கு "ஜான்" என்ற பெயரில் ஒரு மகன் இருந்தான் என்று. பார்க்க : 1 மக்காபீஸ் 2:1 :
மற்றும் 1 மக்காபீஸ் 16:19 ல் கூட ஒரு முறை "ஜான்" என்ற ஒருவரைப்பற்றி சொல்கிறது. பார்க்க : 1 மக்காபீஸ் 16:19

மேல் சொல்லப்பட்ட எல்லா "ஜான்" களும் , பைபிளின் யோவான் ஸ்நானகனுக்கு முன் வாழ்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.



யோவானுக்கு முன்பு யோவான் என்ற பெயர் கொண்ட பழைய ஏற்பாட்டு நபர்கள்:

இந்தப்பெயர் "யோகனான்"(எபிரேய மொழியில்-"யோகனான்") என்று பல முறை (27 க்கு அதிகமாக) பழைய ஏற்பாட்டில் வருகிறது. ( பார்க்க 2 இராஜா 25:23, 1 நாளா 3:15,24, 6:9,10, 12:4, 12:12, 26:3, 2 நாளா 17:15, 23:1, 28:12, எஸ்றா 8:12, 10:6, 10:28, நெகே 6:18, 12:13, 12:22,23,42, எரே 40:8 இன்னும் பல இடங்களில்.)

பல இஸ்லாமிய அறிஞர்களின் குர்-ஆன் மொழிபெயர்ப்பும். நாம் மேலே சொன்னது போல கருத்துள்ளது.

தமிழாக்கம்: டாக்டர். முஹம்மது ஜான், ஜான் டிரஸ்ட் நிறுவனம்,

19:7 'ஜகரிய்யாவே! யஹ்யா என்ற பெயர் கொண்ட ஒரு புதல்வனை(த் தருவது) பற்றி நிச்சயமாக நாம் உமக்கு நற்செய்தி கூறுகிறோம்.
இதற்கு முன்னர் இப்பெயர் கொண்டவரை நாம் ஆக்கவில்லை" (என்று இறைவன் கூறினான்).

தமிழாக்கம்: தமிழாக்கம்: பி.ஜைனுல் ஆபிதீன்

19:7 "ஸக்கரிய்யாவே! ஒரு புதல்வன் பற்றி உமக்கு நாம் நற்செய்தி கூறுகிறோம். அவரது பெயர்
யஹ்யா. இப்பெயரிடப்பட்டவரை இவருக்கு முன் நாம் ஏற்படுத்தியதில்லை" (என இறைவன் கூறினான்)

ஆங்கில மொழி பெயர்ப்புக்கள்


Translation: Pickthall

(It was said unto him): O Zachariah! Lo! We bring thee tidings of a son whose name is John; we have given the same name to none before (him).

Translation: Arberry

'O Zachariah, We give thee good tidings of a boy, whose name is John. No namesake have We given him aforetime.'

Translation: Palmer

'O Zachariah! verily, we, give thee glad tidings of a son, whose name shall be John. We never made a namesake of his before.'

Translation: Rodwell

"O Zachariah! verily we announce to thee a son, - his name John: That name We have given to none before him."

Translation: Sale

[And the angel answered him], o Zacharias, verily we bring thee tidings of a son, whose name [shall be] John; we have not caused any to bear the same name before him.

Translation: Yusuf Ali

(His prayer was answered): "O Zakariya! We give thee good news of a son: His name shall be Yahya: on none by that name have We conferred distinction before."

யூசுப் அலி மட்டும் சிறிது மாற்றிச் சொல்கிறார். அவருக்கு இவ்வசனம் சரித்திரப்படி தவறானது என்று தெரிந்திருக்குமோ! குர்-ஆனை தான் நினைத்தபடி மொழிபெயர்த்துள்ளார்.

ஜலால் இவ்வசனத்திற்கு கீழ்கண்டவாறு பொருள் கூறுகிறார்(tafsir).

God, exalted be He, in responding to his request for a son that will be the incarnation of His mercy, says: 'O Zachariah! Indeed We give you good tidings of a boy, who will inherit in the way that you have requested - whose name is John. Never before have We made anyone his namesake', that is, [never has there been] anyone with the name 'John'.
Source- Tafsir al-Jalalayn


இந்த தவறைப் பற்றி இஸ்லாமியர்களின் கேள்வியும் மற்றும் பதிலும் இங்கு காணலாம்.
Question 1  Answer 1 (Historical)  Answer 2 (Scriptural)
Question 2  Answer 1  Answer 2






மேலும் படிக்க:

1) குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் - பாகம் 1 - இஸ்லாம் கல்விக்கு பதில்: பைபிளில் இல்லாத குழந்தை அற்புதம் முகமது "காப்பி" அடித்தது தான்.

2) குர்‍ஆனின் சரித்திர தவறு: "எஸ்றா அல்லாவின் குமாரனா?" யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது

3) சாத்தானின் வசனங்களும் குர்-ஆனும்

4) குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா? - ஆசிரியர்: Khaled



 
 

Thursday, July 24, 2008

"கிறிஸ்தவன் பார்வை" என்ற தள பதிவு பற்றிய ஒரு "கிறிஸ்தவனி(உமரி)ன் பார்வை"




"கிறிஸ்தவன் பார்வை" என்ற தள பதிவு பற்றிய "ஒரு கிறிஸ்தவனின் பார்வை"

முன்னுரை: கிறிஸ்டியன்ஸ் பார்வை   என்ற தளத்தில், என்னைப் பற்றி ஒரு சில வரிகள் எழுதப்பட்டு இருந்தது, அதற்கான என் பதிலை இந்த பதிவில் காணலாம். என் கட்டுரைக்கு பின்னூட்டமிட்டிருந்த ஒரு அனானிமஸ்ஸுக்கு பதில் அளித்து இருந்தேன், அதைப் பற்றி, விமர்சனத்திற்கு என் பதிலை இந்த பதிவில் காணலாம்.


ChristianPaarvai said:
//

Source: http://christianpaarvai.blogspot.com/2008/07/1_21.html

முஸ்லிம்களின் போற்றுதற்குரிய தலைவரான உமர் (ரழி) அவர்களின் பெயரில் ஒளிந்து கொண்டு ஒரு கிறிஸ்தவர் இப்போது இஸ்லாத்தை விமர்சித்து வருகிறார். அன்று உமர் (ரழி) அவர்களின் வாழ்வில் ஒளி விளக்காய் அமைந்த குர்ஆன் மீது சேறு வாரி இறைக்கின்றார்! முஸ்லிம்களிடம் குர்ஆன் உள்ளவரை அவர்களை அசைக்க முடியாது என்று அறிந்து கொண்ட மிஷினரிகளின் விலை குறைந்த தந்திரம் இது.//

Umar said:

நீங்கள் பைபிளை விமர்சிப்பதில்லையா? பைபிளை விமர்சிப்பதை உங்கள் நபி 7ம் நூற்றாண்டிலேயே ஆரம்பித்துவிட்டாரே?

முஸ்லீம்களுக்கு ஒரு நியாயம் மற்றவர்களுக்கு ஒரு நியாயமா? சொல்லுங்கள்.

உங்கள் குர்‍ஆன் சொல்வதை, உங்கள் நபி சொல்வதை நம்புவதற்கு உங்களுக்கு உரிமை உண்டு என்பதை நான் அறிவேன், அதே நேரத்தில் எங்கள் வேதம் சொல்வதை நம்புவதற்கு எங்களுக்கு உரிமை உண்டு என்பதை நீங்கள் அறியவேண்டும்.

எங்கள் வேதம் பற்றி நீங்கள் விமர்சிக்கும் போது, அதற்கு பதில் தருவதும் எங்கள் கடமை, அதே நேரத்தில் பைபிளை நீங்கள் விமர்சிப்பதால், உங்கள் குர்‍ஆன் பற்றியும் நாங்கள் சில சந்தேகங்கள், உண்மைகளை நாங்கள் சொல்கிறோம், அவ்வளவு தான், இதில் விரோதிப்பதற்கு ஒன்றுமில்லை.

//குர்ஆன் மீது சேறு வாரி இறைக்கின்றார்//

7ம் நூற்றாண்டில் வந்து பைபிள் மீது சேறு வாரி இறைத்தது யார்?
உங்கள் முகமது அன்று ஆரம்பித்த வேலையை இன்றும் செய்துக்கொண்டு இருப்பவர்கள் யார்?
நீங்கள் மட்டும் பைபிள் மீது சேறுவாரி இறைப்பது சரியாகுமா?

நீங்கள் எது சொன்னாலும், கிறிஸ்தவர்கள் சும்மா இருக்கவேண்டும் அதைத் தானே நீங்கள் எதிர்ப்பார்ப்பது? உங்களுக்கு பதில் அளிக்கக்கூடாது, அதே நேரத்தில் கேள்வியும் கேட்கக்கூடாது?  கேள்வி கேட்டால், சேறு வாரி இறைக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு வேறு? இது என்ன நியாயம் என்றுச் சொல்லுங்கள்?


ChristianPaarvai said:
// முஸ்லிம் பெயரை வைத்துக் கொண்டு எதையேனும் சொன்னால் முஸ்லிம்களை ஏமாற்றி விடலாம் என்று நினைக்கின்றனர். //


Umar said:

மன்னிக்கனும் நண்பரே மன்னிக்கனும். என்னைப் பொருத்தவரையில், நான் உமர் என்ற பெயர் வைத்துக்கொண்டு யாரையும் ஏமாற்றவில்லை.

1) என் கட்டுரைகளின் தலைப்பிலேயே, என் செய்தியை பெரும்பான்மையாக சொல்லி விடுவேன். "இஸ்லாமுக்கு பதில்/மறுப்பு" என்று தெளிவாக சொல்லிவிடுவேன். என் கட்டுரைகளை படிப்பதற்கு முன்பாகவே, இது ஒரு இஸ்லாமுக்கு பதில் சொல்லும் கட்டுரை என்ற எண்ணத்தை என் கட்டுரையை வாசிப்பவர்களின் உள்ளத்தில்  கொடுத்துவிடுகிறேன்.உங்களைப்போல, மூல தொடுப்புக்களை கொடுக்காமல், வாசகர்களை வஞ்சிக்கமாட்டேன்.

2)  பெரும்பான்மையாக என் கட்டுரைகளின் முதல் பத்தியிலேயே "முன்னுரை/குறிப்பு" என்று எழுதி, அந்தக் கட்டுரையில் எதைப்பற்றி விவாதிக்கப்போகிறேன் என்று விவரமாக எழுதிவிடுவேன். என் கட்டுரைகளை படிப்பவர்கள் முதல் பத்தியிலேயே இது ஒரு கிறிஸ்தவ கட்டுரை என்பதை அறிந்துக்கொள்வார்கள். பின் அவர்களுக்கு விருப்பம் இருந்தால், மேலே படிப்பார்கள், வேண்டாமென்றால் விட்டுவிடுவார்கள்.

3) இஸ்லாமியர்கள் சிலர் செய்வது போல, தங்களை கிறிஸ்தவர்களாக காட்டிக்கொண்டு, எனக்கு அறிவுரை சொல்வது போல,  என்னை ஒரு முஸ்லீமாக காட்டிக்கொண்டு, யாருக்கும் தெரியாமல் மற்ற முஸ்லீம்களுக்கு அறிவுரை சொல்வது போல சொல்லமாட்டேன்.  உதாரணத்திற்கு, ஒரு இஸ்லாமியர் தன்னை கிறிஸ்தவரைப் போல காட்டிக்கொண்டு எனக்கு பின்னூட்டம் இட்டுள்ளார். இப்படியெல்லாம் நான் செய்வதில்லை.

4) எல்லா கட்டுரைகளிலேயும் என்னை ஒரு கிறிஸ்தவன் என்று தான் காட்டியுள்ளேனே ஒழிய, ஒரு முஸ்லீமாக நான் காட்டிக்கொள்வதில்லை.

 

ChristianPaarvai said:
//ஏற்கெனவே தங்களது இணைய தளத்துக்கு ஈஸா குர்ஆன் என்று வைத்து வம்பில் மாட்டியுள்ளனர். இதற்கு முன் அனானிமசுக்கு பதிலளிக்கையில் இந்த உண்மையை உளறி விட்டனர். பெயர் வைத்ததற்காக வருத்தப் படுவதாகவும் வைத்து விட்டதால் எடுக்க முடியவில்லை என்ற வாசகத்தை மட்டும் தந்திரமாக நீக்கி விட்டனர். //

 
Umar said:
 
என் தளத்திற்கு "ஈஸா குர்‍ஆன்" என்று வைத்து என்ன வம்பில் மாட்டிக்கொண்டேன் சொல்லுங்கள் பார்க்கலாம்? யாராவது காபிரைட் வழக்கு தொடர்ந்தார்களா?  இந்த உளறும் வேலை என்னுடையது கிடையாது, அதனால், தான் நான் எப்போதும் சொல்வதுண்டு, முஸ்லீம்களை பேசவிடுங்கள், அப்போது தான் உண்மை வெளிப்படும் என்று.

என் தளத்திற்கு ஏன் இந்த பெயர் வைத்தேன் என்று போன வருடமே (செப்டெம்பர் 2007)  நான் ஒரு கட்டுரையை எழுதி அதற்கு பதில் அளித்துள்ளேன்.
பார்க்க:

-----------------

1. உங்கள் தளத்தின் நோக்கம் என்ன? உங்கள் தளத்திற்கு "ஈஸா குர்-ஆன்" என்ற பெயர் வைத்ததற்கான காரணம் என்ன?

என் தளத்தின் நோக்கம், இயேசுவைப் பற்றியும், பைபிளைப் பற்றியும் இஸ்லாமியர்கள் பறப்பிக்கொண்டு வரும் சில தவறாக கோட்பாடுகள் தவறு என்று தகுந்த ஆதாரங்களோடு எடுத்துச் சொல்வதாகும். பைபிளின் "தேவன்" குர்-ஆனின் "அல்லா" இல்லை என்பதை உலகிற்கு முக்கியமாக தமிழ் மக்களுக்குச் சொல்வதாகும்.

இயேசுவை தேவனின் வார்த்தை என்று பைபிள் சொல்கிறது, அது போல "குர்-ஆனை" இஸ்லாமியர்கள் இறைவனின் வார்த்தை என்றுச் சொல்கிறார்கள். எனவே தான் "ஈஸா குர்-ஆன்" என்று பெயர் வைத்தேன்.

Sources:
http://isakoran.blogspot.com/2007/09/1.html
http://www.geocities.com/isa_koran/tamilpages/QandA/QandAUmar/UmarQandA-1.htm
http://tamilchristians.com/modules.php?file=viewtopic&name=Forums&p=5710


நான் என்னவோ, "குர்‍ஆன்" என்ற பெயரையும், "உமர்" என்ற பெயரையும் வைத்துக்கொண்டு, உலகத்தையே சூரையாடிவிட்டதாக சொல்கிறீர்கள்.

உங்கள் நபி, பைபிளோடு தன்னை சம்மந்தப்படுத்திக்கொண்டு, தீர்க்கதரிசிகளில் தான் கடைசியானவர் என்று தன்னை காட்டிக்கொண்டு, இறைவசனம் என்றுச் சொல்லி, முந்தைய வேதங்களில் உள்ளவற்றை ஆங்காங்கே சில விவரங்களைச் சொல்ல அவருக்கு உரிமை இருக்கும் போது, வெறும் "குர்‍ஆன்" என்ற பெயரும், "உமர்" என்ற பெயரையும் வைத்துக்கொள்ள எனக்கு உரிமையில்லையா?

இப்படி பைபிளின் தீர்க்கதரிசிகளின் பெயர்களை சொந்தம் கொண்டாடியது உங்கள் முகமது என்பதை மறக்கவேண்டாம்.

எனவே, 7ம் நூற்றாண்டில் திடீரென்று ஒருவர் வந்து, நானும் ஒரு நபி தான், என்னை இறைவன் அனுப்பினார் என்றுச் சொல்லி, பைபிளோடு தன்னை சம்மந்தப்படுத்த உரிமை உங்கள் நபிக்கு இருக்கும் போது, என் தளத்திற்கு "ஈஸா குர்‍ஆன்" என்ற பெயர் வைத்தால், என்ன குடிமுழுகிவிடும் சொல்லுங்கள்.
---------

ChristianPaarvai said:
// கிறித்தவ சபையினரே! கிறித்தவர்களாகிய உங்களுக்கு முஸ்லிம் பெயர் எதற்கு? உங்கள் புரட்டுகளைப் பற்றி நாங்கள் எழுதும் போது நாங்கள் கிறித்தவ பெயரைப் பயன் படுத்துதில்லை. //

Umar Said:

இஸ்லாமியர்களே, உங்கள் நபிக்கு பைபிளோடு சம்மந்தமெதற்கு?  யூதர்களின் மற்றும் கிறிஸ்தவர்களின் விவரங்களின் அவசியமெதற்கு? சொல்லுங்கள்.

என்னவோ, இஸ்லாமிய பெயர் வைத்தால், உடனே முஸ்லீம்கள் கிறிஸ்தவர்களாக மாறிவிடுவது போல கவலைப்படுகிறீர்கள்?

உங்கள் புரட்டுக்களைப் பற்றி எங்களுக்குத் தெரியாதா என்ன? பொய்களை அள்ளிவீசுவதில், தில்லு முல்லு செய்வதில் உங்களை யார் ஜெயிக்கமுடியும் சொல்லுங்கள்?

உங்கள் முகமது, தன்னை ஒரு தீர்க்கதரிசி என்றுச் சொல்லி, உண்மையான தேவனின் தீர்க்கதரிசிகளாகிய மோசே, எலியா, யோவான் பட்டியலில் தன்னை இணைத்துக்கொண்டாரே, இதை விடவா ஒரு புரட்டு இருக்கமுடியும்?

முகமது தன்னை ஒரு நபி என்றுச் சொல்லட்டும், அதை நீங்கள் நம்புங்கள், இதில் தவறில்லை, ஆனால், பைபிளைப் பற்றி விமர்சிக்க அவருக்கு என்ன அதிகாரம் உண்டு? அவரை மற்றவர்கள் நம்பவேண்ட அவசியமென்ன?

உங்கள் தளத்தின் பெயர் "கிறிஸ்டியன் பார்வை" என்று வைத்துள்ளீர்கள்.

யாராவது முதலாவது உங்கள் தள பெயரைப் பார்த்தால்,  ஏதோ ஒரு கிறிஸ்தவன் தளம் என்று நினைக்கத்தோன்றும். இருந்தாலும், ஏன் வைத்தீர்கள் என்று நான் கேட்கமாட்டேன், ஏனென்றால் பெயரில் ஒன்றுமில்லை, சொல்லும் செய்தியில் தான் எல்லா விவரங்களும் உள்ளன. ஏன் "கிறிஸ்தவன்(ம்)" என்ற வார்த்தையை பயன்படுத்தினீர்கள் என்று உங்களை எந்த கிறிஸ்தவனும்  கேட்கமாட்டான், காரணம், "கிறிஸ்தவம்" என்ற பெயர் வைத்த மாத்திரத்தில், எல்லா கிறிஸ்தவனும் முஸ்லீமாக மாறிவிடப்போவதில்லை.

ChristianPaarvai said:
//உங்கள் பெயரை வைத்து எழுத வேண்டிய அவலநிலை எங்களுக்கு இல்லை. காரணம் உங்கள் புரட்டு வாதங்களுடன் மோதுவதற்கு எங்களுக்கு எந்தக் குறுக்கு வழியும் தேவையில்லை. //

Umar said:

எங்கள் பெயரை வைத்துக்கொண்டு எழுதவேண்டிய அவல நிலை உங்கள் நபிக்கு உண்டு. யூதர்களின் மற்றும் கிறிஸ்தவர்களின் விவரங்களை பயன்படுத்தி, தன்னை ஒரு நபியாக, உண்மையான இறைவன் தன்னை தெரிந்துக்கொண்டார் என்றுச் சொல்லி தன் விருப்பத்திற்கு ஏற்றார்  போல தீர்க்கதரிசனங்கள் என்ற பெயரில் வசனங்களைச் சொல்லி வாழ்ந்தவர் உங்கள் நபி.  இல்லை இல்லை, முகமது அவர்கள் சொன்னது உண்மையான தீர்க்கதரிசனங்களே என்று நீங்கள் சொல்வீர்கள். நல்லது அது உங்கள் நம்பிக்கை, இதில் தவறு இல்லை. ஆனால், கிறிஸ்தவர்களை விமர்சிக்க அவருக்கு ஏது அதிகாரம்?

எங்களுக்கு குறுக்குவழி தேவையில்லை நண்பரே, உங்களுக்குத்தான் குறுக்குவழி தேவையாக உள்ளது.

இஸ்லாமிய நாடுகளில் ஒரு முஸ்லீம் கிறிஸ்தவனாக மாறினால், அவனை கொள்ளவேண்டும் என்றுச் சொல்லி, சட்டத்தை இயற்றி இஸ்லாமை தக்கவைத்துக்கொள்வது ஒரு குறுக்கு வழி இல்லையா? விமர்சிப்பவர்களை கொன்றுவிட்டால், எதிரியே இருக்கமாட்டான் என்று கொல்வது குறுக்கவழி இல்லையா?

ஒருவன் இஸ்லாமை விட்டு போனால் போகட்டும், குர்‍ஆனுக்கு மனிதர்களை தன்னிடம் இழுத்துக்கொள்ளும் தன்மை உண்டு, உண்மை உண்டு,  எனவே, இஸ்லாமை விட்டு வெளியேறுபவனை கொல்லவேண்டாம் என்று இஸ்லாமிய நாடுகளில் சட்டமியற்ற முடியுமா?


நான் இன்று இஸ்லாமுக்கு ஒரு சவால் விடுகிறேன், உலகத்தில் இஸ்லாமை விமர்சிப்பவர்களை ஒன்றும் செய்யமாட்டோம் என்றுச் சொல்லி சட்டத்தை இயற்றி வாழ்ந்துப் பாருங்கள், இஸ்லாமை விமர்சிப்பவர்களுக்கு தீங்கை இழக்காமல் இருந்துக் காட்டுங்கள். அப்போது, உங்கள் இஸ்லாமின் நிலை என்னவாகும் என்று கற்பனை செய்துபார்க்க முடியுமா?

என் கட்டுரைகளில் யார் எழுதுகிறார்கள் என்பதை விட, என்ன எழுதுகிறேன் என்பதைத் தான் வாசகர்கள் அறிய வேண்டும் என்று விரும்புகிறேன்.

ChristianPaarvai said:
// எங்களிடம் இறைவேதம் என்ற பலமான ஆயுதம் உள்ளது. வாருங்கள்! ஒளிந்து கொண்டு கூக்குரலிடாதீர்கள்! உங்களின் கோமாளிக் கூத்தை விட்டு விட்டு இணையப் பேரவை சகோதரர்களின் அழைப்புக்கு பதிலளித்து பகிரங்கமாக வெளியே வாருங்கள். எப்போது வருகிறீர்கள்?

அனானிமசுக்கு பதில்

இப்போதெல்லாம் பதிவெழுத நேரமில்லாததாலோ என்னவோ அனானிமசுகளுக்கு அளித்த பதிலை மறு பதிவு செய்து வருகிறார்கள். எது எவ்வாறாயினும் அனானிமஸ் கேட்டுள்ள கேள்விகளுக்கு பதிலளித்ததிலும் பல மழுப்பல்கள். சில விமர்சனங்கள். அவை ஒவ்வொன்றாகப் பார்ப்போம். அனானிமசின் கேள்விகளும் உமர் (என்ற பெயரில் ஒளிந்துள்ள கிறித்தவனி)ன் மழுப்பல்களும் தெளிவான விளக்கங்களும். அடுத்தடுத்த பகுதிகளில் இன்ஷா அல்லாஹ்.

Source: http://christianpaarvai.blogspot.com/2008/07/1_21.html

//

Umar Said:

நீங்கள் அமைதியானவர்களாக இருந்தால், உங்கள் முன் வந்து விவாதிக்க நாங்கள் தயார்? ஆனால், உங்களை யார் நம்புவார்கள்? 

மேடையில் விவாதம் என்றுச் சொல்லி, மேடையில் நீங்கள் பேசிக்கொண்டு இருப்பீர்கள், ஆனால், யாரோ ஒரு முஸ்லீம் எங்கள் மீது கல்லெரிவார், இது எங்களுக்கு வேண்டுமா? உங்களை நம்பலாம், ஆனால், எல்லா இஸ்லாமியர்களை நம்பமுடியாது?

இப்படி எங்களுக்கு தீங்கிழைப்பது நியாயமா என்று நாங்கள் கேட்டால், "அவர்களுக்கு மார்க்க அறிவு கிடையாது, இஸ்லாம் என்றால் அமைதி என்று பொருள்" என்று சொன்ன வேதாந்தமே மறுபடியும் சொல்வீர்கள், ஆனால், நஷ்டமடைவது யார்? நாங்கள் தான்.

உங்களால் மேடையில் தான் பேசமுடியுமா? எழுத்து மூலம் விவாதிக்க முடியாதா?  வீரர்களாக இருந்தால், எழுத்து விவாதத்திற்கு வாருங்கள்.

நாங்கள் கோழைகள் தான், வாளுக்கு, அடிகளுக்கு நாங்கள்(மன்னிக்கனும் முக்கியமாக நான்) பயப்படுகின்றோம். ஐந்தறிவு படைத்த மிருகங்கள் இருக்கும்  காட்டில் யாராவது பாதுகாப்பு இல்லாமல் நுழைய முடியுமா?
 அதுபோலத் தான், நாங்கள் பாதுகாப்பை கருதி மறைந்து எழுதுகிறோம். 

நீங்கள் தான் வீரர்கள் என்றுச் சொல்கிறீர்களே, எழுத்து விவாதத்திற்கு வருவது தானே? முகமதுவின் வாழ்க்கையை உலக மக்கள் அறிய விவாதிப்பது தானே?

உங்களிடம் தான் உண்மை சத்தியம் உண்டே, அப்படியானால், ஏன் எழுத்து விவாதத்திற்கு பயப்படுகிறீர்கள்?

யார் கோழை / யார் வீரன்:
----------------------------------------------

ஒரு சில இஸ்லாமிய தளம் தவிர மற்ற அனைத்து இஸ்லாமிய தளங்களும், வீராவேசத்தொடு பதில் எழுதுவார்கள், ஆனால், எந்த கட்டுரைக்கு பதில் எழுதுகிறார்கள் அதன் தொடுப்பு என்ன? என்று பதிக்கமாட்டார்கள் ஏன்? பயம், எங்கள் கட்டுரைகளை படித்து, உண்மையை முஸ்லீம்கள் தெரிந்துக்கொள்வார்கள் என்ற பயம்.  அவர்கள் சொல்வது பொய் என்பதை சாதாரண முஸ்லீம்கள் அறிந்துக்கொள்வார்கள் என்ற பயம். வீரம் என்பது வெறும் கட்டுரைகளையும், பதில்களையும் எழுதுவது அல்ல, அதற்கு பதிலாக யாருக்கு பதில் எழுதுகின்றோம் என்பதை தொடுப்புடன் எழுதினால், அதைத்தான் வீரம் எனலாம், அதைவிட்டுவிட்டு, நாங்கள் பதில் தருகிறோம் என்று அனானிமஸ்ஸாக எழுதுவதில்லை.


ஆனால், நாங்கள் அப்படி அல்ல, யாருக்கு பதில் எழுதுகிறோம் என்று முஸ்லீம் தளத்தின் தொடுப்பையும் கொடுப்போம், ஏன் தெரியுமா? இஸ்லாமை ஒருவன் அறிய அறிய, அதன் உண்மையை புரிந்துக்கோள்வான், மற்றும் இஸ்லாம் பற்றி சிந்திப்பவன், உண்மையாகவே, அதை விட்டு வெளியே வந்துவிடுவான். அதனால், தான் அமெரிக்காவில் இஸ்லாமுக்கு மாறுபவன் சில ஆண்டுகளிலேயே 75% பேர், இஸ்லாமை விட்டு வெளியேறி விடுகின்றனர்.

அதனால், தான் நாங்கள் எந்த இஸ்லாமிய தொடுப்பையும் கொடுக்க தயங்குவதில்லை. நாங்கள் எங்கள் கட்டுரைகளை படிக்கும் கிறிஸ்தவர்களை உங்கள் இஸ்லாமிய கட்டுரைகளை படிக்க உட்சாகப்படுத்துகிறோம், அதனால், தான் இஸ்லாமிய தள தொடுப்புக்களைக் கொடுக்கிறோம்.

உதாரணத்திற்கு, என் தளத்திலோ, அல்லது தமிழ் கிறிஸ்டியன்ஸ் தளத்திலோ, சென்று பாருங்கள், எத்தனை கட்டுரைகளில் இஸ்லாமிய தள தொடுப்புக்கள் இருக்கின்றன என்று. அதே போல, உங்கள் இஸ்லாமிய தளங்களில் எத்தனை தளங்களில் எங்கள் தள கட்டுரைகளின் தொடுப்பை கொடுத்துள்ளீர்கள். இதுவே போதும், நீங்கள் பயந்துக்கொண்டு இருக்கிறீர்கள் என்பதற்கு, உங்களுக்கு உங்கள் பலமான இறைவேதம் மீது எவ்வளவு நம்பிக்கை இருக்கின்றது என்று?

எங்கள் நம்பிக்கை என்னவென்றால், இயேசுவின் போதனைகளை படிக்கும் ஒரு கிறிஸ்தவன், பெரும்பான்மையாக முகமதுவின் போதனைகளால் எந்த காலத்திலும் மயங்க மாட்டான் என்ற நம்பிக்கைத் தான். இப்படிப்பட்ட நம்பிக்கை உங்களுக்கு உண்டா? அப்படி இருக்குமானால், எங்கள் தள தொடுப்புக்களை தைரியமாக தாருங்கள்.

இன்னும் சிலர் இருக்கிறார்கள்,  பல ஆயிர‌ கிறிஸ்தவர்கள் இஸ்லாமை தழுவினார்கள் என்று எழுதுவார்கள், ஆனால், எந்த ஒரு ஆதாரத்தையும் தரமாட்டார்கள்.

இன்னொரு குழு உள்ளது, அவர்கள், ஈஸா குர்‍ஆன் என்ற பெயரையும் எழுத பயப்படுவார்கள், உமர் என்ற என் பெயரையும் பயன்படுத்த பயப்படுவார்கள். "ஒரு கிறிஸ்தவர் எழுதுகிறார்" என்பார்கள், ஆனால், பெயரை குறிப்பிடமாட்டார்கள். இப்படி பயந்துப்போய் கட்டுரையை எழுதுபவர்கள் நீங்கள்.

ஆனால், உங்களிடம்(கிறிஸ்தவ பார்வை தளத்திடம்) நான் எதிர்ப்பார்ப்பது, (நான் பதில் எழுதும் ஒவ்வொரு தளத்திற்கும் இந்த வேண்டுதலை வைத்துள்ளேன், ஆனால், செவிடன் காதில் ஊதிய சங்கு தான்)

உங்கள் இஸ்லாம் மீது உங்களுக்கு நம்பிக்கை இருந்தால்?

உங்கள் நபி உண்மையிலேயே ஒரு நபி என்ற நம்பிக்கை உங்களுக்கு இருந்தால்?
குர்‍ஆனை யார் குற்றப்படுத்தினாலும், அது செல்லுபடியாகாது, குர்‍ஆன் தான் கடைசியில் ஜெயிக்கும் என்ற நம்பிக்கை இருந்தால்?
எங்கள் கட்டுரைகளைப் படித்தால், முஸ்லீம்கள் இஸ்லாமின் மீது சந்தேகம் கொள்ளமாட்டார்கள் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருந்தால்?

எங்களுக்கு பதில் அளிக்கும் போது, எங்கள் தள கட்டுரைகளின் தொடுப்புக்களை வெளியிடுங்கள், பெயர்களை வெளியிடுங்கள். நீங்களும் இப்படி வெளியிடவில்லையானால், உங்களையும் அந்த பட்டியலில் இணைய நண்பர்கள் சேர்த்துவிடுவார்கள், மட்டுமல்ல, இஸ்லாம் ஒரு போலி என்பதை உலகம் இதன் மூலம் அறிய‌ நீங்கள் உதவி  செய்கிறவர்களாக இருப்பீர்கள்.

கர்த்தருக்கு சித்தமானால், அடுத்த பதிலில் சந்திக்கலாம்.
 
 

Tuesday, July 22, 2008

முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?



An Answering-Islam.org Article

முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
How Muhammad's Contemporaries Really Viewed Him –
An Analysis of the witness of the Quran concerning The opinions of the Disbelievers regarding the prophet of Islam

இஸ்லாமிய நபியாகிய முகமது பற்றி, அவர் காலத்து மக்களின்(முஸ்லீமல்லாதவர்களின்) கருத்து என்ன? என்று குர்‍ஆன் சொல்லும் சாட்சியைப் பற்றிய ஓர் அலசல்.

இக்கட்டுரை "Muhammad as Al-Amin (the Trustworthy) How His Enemies Really Viewed Him" என்ற கட்டுரைக்கு மேலதிக விவரங்களுக்காக இணைக்கப்படுகிறது.

முகமது அவர்கள் நபித்துவம் பெறுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே, தன் ஊர் மக்களிடம் ஒரு நேர்மையான மனிதராகவும், குற்றமில்லாத மனிதராகவும் பெயர் பெற்று இருந்தார் என்று இஸ்லாமிய தாவா செய்யும் அறிஞர்கள் கூறுவது வழக்கம். இஸ்லாமிய பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள், முகமது ஒரு நேர்மையானவர் என்றும், குற்றம் குறை இல்லாதவர் என்றும் தன் சமகாலத்து மக்கள் அறிந்து இருந்தார்கள் என்று கூறுவதை நாம் கண்டுயிருப்போம். இன்னும் சொல்லப்போனால், முகமது காலத்தவர்கள் முகமதுவிற்கு "அல்-அமீன் (Al-Amin)" அல்லது "நேர்மையானவர்-(Trustworthy)" என்றும் பெயர் சூட்டி இருந்தனர் என்றும் கூறுவார்கள், இப்படி பலவிதமாக கூறுவார்கள்.

முஸ்லீம்கள் இப்படியெல்லாம் சொல்வதில் உள்ள பிரச்சனை என்னவென்றால், இவர்களின் இந்த கூற்று, கண்களால் கண்டு சாட்சி சொன்னவர்களின் கூற்றின் மீது ஆதாரப்பட்டு இருக்கவில்லை, அதற்கு மாறாக முகமதுவின் மரணத்திற்கு பின்பு ஒரு சில நூற்றாண்டுகள் கழித்து எழுதப்பட்டவைகளாகும். இன்னும் சொல்லப்போனால், இவைகள் அனைத்தும் முஸ்லீம்களின் கை மற்றவர்களின் மீது ஓங்கி இருக்கும் போது(இஸ்லாமிய அரசர்கள்/கலிபாக்கள் ஆட்சி செய்தபோது) எழுதப்பட்டவைகளாகும், மற்றும் அவர்கள் சரித்திரத்தை தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப திரும்ப எழுதினார்கள். அந்த கால்த்தில் முஸ்லீம்கள் தாங்கள் எந்த கண்ணோட்டத்தில் முகமதுவின் வாழ்க்கையை படிக்கவிரும்பினார்களோ அந்த நம்பிக்கையின் படி எழுத ஆரம்பித்தார்கள்(The Muslims were pretty much free to read back into the life of Muhammad their specific theological views and beliefs concerning their prophet.)

முக்கியமாகச் சொல்லவேண்டுமானால், முஸ்லீம்கள் முகமதுவிற்கு கொடுக்கும் இந்த புகழாரங்களுக்கு எதிராக‌ அவர்களின் வேதமே எதிர் சாட்சியாக அமைந்துள்ளது. நாம் குர்‍ஆனை ஆராய்ந்துப் பார்த்தால், முகமது ஒரு உண்மையின் களங்கரை விளக்காகவோ அல்லது ஒரு முழுமையான‌ நேர்மையான மனிதராகவோ இருந்தார் என்று அவரைச் சுற்றியிருந்த மக்கள் கருதவில்லை அல்லது நம்பிக்கை கொள்ளவில்லை என்பதை நாம் அறியலாம். அம்மக்களின் சாட்சி முகஸ்துதி செய்வதாக கூட இருக்கவில்லை, குறைந்தபட்சம் சொல்லவேண்டுமானால், முகமதுவிற்கு பிறகு சேகரிக்கப்பட்ட விவரங்களாகிய‌ , முகமதுவை அவரது எதிரிகள் புகழ்வதாக உள்ள விவரங்கள் அனைத்தும் வெறும் கட்டுக்கதைகளாகவும், மாயையாகவும் இருக்கிறது.

முகமதுவின் சமகாலத்து மக்கள் அவருக்கு சூட்டிய பெயர்கள், குர்‍ஆன் ஆதாரங்களின் படி:

1. முகமது ஒரு பொய்யர்(A Liar):

(நபியே!) அவர்கள் (உம்மைப் பொய்யரெனக்) கூறுவது நிச்சயமாக உம்மைக் கவலையில் ஆழ்த்துகிறது என்பதை நாம் அறிவோம்; அவர்கள் உம்மைப் பொய்யாக்கவில்லை ஆனால் இந்த அநியாயக்காரர்கள் அல்லாஹ்வின் வசனங்களையல்லலவா மறுத்துக் கொண்டிருக்கிறார்கள். (குர்‍ஆன் 6:33)

உம்மை அவர்கள் பொய்ப்படுத்தினால் எனது செயல் எனக்கு; உங்கள் செயல் உங்களுக்கு. நான் செய்வதை விட்டும் நீங்கள் விலகியவர்கள்; நீங்கள் செய்வதை விட்டும் நான் விலகியவன் என்று கூறுவீராக. (குர்‍ஆன் 10:41)

இன்னும், (நபியே!) அவர்கள் உங்களைப் பொய்ப்பிப்பார்களானால் (வருந்தாதீர்), இவ்வாறே உமக்கு முன் வந்த தூதர்களையும் திட்டமாக பொய்ப்பித்தனர் - அல்லாஹ்விடமே எல்லாக் காரியங்களும் மீட்டப்படும். (குர்‍ஆன் 35:4)

2. முகமது கதைகளை இட்டுக்கட்டி சொல்பவர்/கட்டுக்கதைகளைச் சொல்பவர்(A Forger/Plagiarizer):

"உங்களுடைய இறைவன் எதை இறக்கி வைத்தான்?" என்று (குர்ஆனை குறிப்பிட்டு) அவர்களிடம் கேட்கப்பட்டால், "முன்னோர்களின் கட்டுக்கதைகள்" என்று அவர்கள் (பதில்) கூறுகிறார்கள். (குர்‍ஆன் 16:24)

(நபியே!) நாம் ஒரு வசனத்தை மற்றொரு வசனத்தின் இடத்தில் மாற்றினால், (உம்மிடம்)
"நிச்சயமாக நீர் இட்டுக்கட்டுபவராக இருக்கின்றீர்" என்று அவர்கள் கூறுகிறார்கள்; எ(ந்த நேரத்தில், எ)தை இறக்க வேண்டுமென்பதை அல்லாஹ்வே நன்கறிந்தவன், எனினும் அவர்களில் பெரும்பாலோர் (இவ்வுண்மையை) அறிய மாட்டார்கள். (குர்‍ஆன் 16:101)

அப்படியல்ல!
"இவை கலப்படமான கனவுகள்" இல்லை, "அதனை இவரே கற்பனை செய்து கொண்டார்" இல்லை, "இவர் ஒரு கவிஞர்தாம்" (என்று காஃபிர்கள் பலவாறாகக் குழம்பிக் கூறுவதுடன்) முந்தைய (நபிமார்களுக்கு) அனுப்பப்பட்டது போல் இவரும் ஓர் அத்தாட்சியை நம்மிடம் கொண்டு வரட்டும்" என்றும் கூறுகின்றனர். (குர்‍ஆன் 21:5)

"இன்னும்; இது (அல் குர்ஆன்)
பொய்யேயன்றி வேறு இல்லை இதை இவரே இட்டுக்கட்டிக் கொண்டார் இன்னும் மற்ற மக்கள் கூட்டத்தாரும் இதில் அவருக்கு உதவிபுரிந்துள்ளார்கள்" என்றும் நிராகரிப்பவர்கள் கூறுகின்றனர் ஆனால் (இப்படிக் கூறுவதன் மூலம்) திடனாக அவர்களே ஓர் அநியாயத்தையும், பொய்யையும் கொண்டு வந்துள்ளார்கள். (குர்‍ஆன் 25:4)

இன்னும் அவர்கள் கூறுகிறார்கள்; "இன்னும்
அவை முன்னோர்களின் கட்டுக் கதைகளே அவற்றை இவரே எழுதுவித்துக் கொண்டிருக்கிறார் - ஆகவே அவை அவர் முன்னே காலையிலும் மாலையிலும் ஓதிக் காண்பிக்கப்படுகின்றன." (குர்‍ஆன் 25:5)

(நபியே!) "வானங்களிலும், பூமியிலுமுள்ள இரகசியங்களை அறிந்தவன் எவனோ அவனே அதை இறக்கி வைத்தான்; நிச்சயமாக அவன் மிக மன்னிப்பவனாகவும், மிக்க கிருபை செய்வோனாகவும் இருக்கின்றான்" என்று கூறுவீராக! (குர்‍ஆன் 25:6)

3. முகமது ஒரு சூனியக்காரர் (A Sorcerer/Magician):

மனிதர்களை அச்சமூட்டி எச்சரிப்பதற்காகவும், ஈமான் கொண்டவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடம் நிச்சயமாகப் பெரும் பதவி கிடைக்கும் என்று நன்மாராயம் கூறுவதற்காகவும், அவர்களிலிருந்தே நாம் ஒரு மனிதருக்கு வஹீ அருள்கிறோம் என்பதில் மக்களுக்கு ஆச்சரியம் ஏற்பட்டு விட்டதா? காஃபிர்களோ, "நிச்சயமாக இவர் பகிரங்கமான சூனியக்காரரே" என்று கூறுகின்றனர்.(குர்‍ஆன் 10:2)

நம்முடைய தெளிவான வசனங்கள் அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டால், அவர்கள்; "இவர் (ஒரு சாதாரண) மனிதரே அன்றி வேறில்லை உங்கள் மூதாதையவர்கள் வணங்கிக் கொண்டிருந்தவற்றை விட்டும் உங்களைத் தடுத்து விடவே இவர் விரும்புகிறார்" என்று கூறுகிறார்கள்; இன்னும் அவர்கள்
"இது இட்டுக் கட்டப்பட்ட பொய்யேயன்றி வேறில்லை" என்றும் கூறுகின்றனர். மேலும், அல் ஹக்கு (சத்தியம்; திருக் குர்ஆன்) அவர்களிடத்தில் வந்தபோது, "இது வெளிப்படையான சூனியமேயன்றி வேறில்லை" என்றும் நிராகரிப்பவர்கள் கூறுகிறார்கள்.(குர்‍ஆன் 34:43)

அன்றியும் தங்களிடமிருந்தே அச்சமூட்டி எச்சரிப்பவர் தங்களிடம் வந்ததைப் பற்றி ஆச்சரியமடைந்தனர்
"இவர் ஒரு சூனியக்காரப் பொய்யர்!" என்றும் காஃபிர்கள் கூறினர்.(குர்‍ஆன் 38:4)

4. முகமது ஒரு குறிசொல்பவர்/புலவர்(A Soothsayer and Poet):

"ஒரு பைத்தியக்காரப் புலவருக்காக நாங்கள் மெய்யாக எங்கள் தெய்வங்களைக் கைவிட்டு விடுகிறவர்களா?" என்றும் அவர்கள் கூறுகிறார்கள். (குர்‍ஆன் 37:36)

எனவே, (நபியே! நீர் மக்களுக்கு நல்லுபதேசத்தால்) நினைவுறுத்திக் கொண்டிருப்பீராக! உம்முடைய இறைவனின் அருளால்,
நீர் குறிகாரரும் அல்லர், பைத்தியக்காரருமல்லர்.(குர்‍ஆன் 52:29)

(இது)
ஒரு குறிகாரனின் சொல்லுமன்று (எனினும்) நீங்கள் சொற்பமாகவே (இதை நினைந்து) நல்லறிவு பெறுகிறீர்கள்.(குர்‍ஆன் 69:42)

5. முகமது ஒரு பைத்தியக்காரர்/"ஜின்"னால் பீடிக்கப்பட்டவர்(A Madman - Majnun – lit., "jinn-possessed")

(நினைவூட்டும்) வேதம் அருளப் பட்ட(தாகக் கூறுப)வரே! நிச்சயமாக நீர் பைத்தியக்காரர்தான் என்றும் கூறுகின்றனர்.(குர்‍ஆன் 15:6)

அல்லது, "
அவருக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறது" என்று அவர்கள் கூறுகிறார்களா? இல்லை அவர் உண்மையைக் கொண்டே அவர்களிடம் வந்துள்ளார், எனினும் அவர்களில் பெரும்பாலோர் அந்த உண்மையையே வெறுக்கிறார்கள்.(குர்‍ஆன் 23:70)

அவர்கள் அவதை விட்டுப் பின் வாங்கிக் கொண்டு (மற்றவர்களால் இவர்) "கற்றுக் கொடுக்கப்பட்டவர்;
பைத்தியக்காரர்" எனக் கூறினர்.(குர்‍ஆன் 44:14)

முகமதுவின் சம காலத்து மக்கள் அவரை எப்படிப்பட்டவராக கண்டார்கள் என்று குர்‍ஆன் சொல்லும் சாட்சியை சுருக்கமாகச் சொன்னால்:

முகமது ஒரு பொய்யர்( A Liar )

முகமது கதைகளை இட்டுக்கட்டி சொல்பவர்/கட்டுக்கதைகளைச் சொல்பவர்(A forger and plagiarizer)

முகமது ஒரு சூனியக்காரர் (A sorcerer and a magician)

முகமது ஒரு குறிசொல்பவர்/புலவர் (A soothsayer and poet)

முகமது ஒரு பைத்தியக்காரர் / ஜின் என்ற ஆவியினால் பீடிக்கப்பட்டதால், இப்படி பைத்தியமாகி இருக்கலாம், அதாவது பிசாசு பிடித்தவர் (A madman, perhaps as a result of being possessed by jinn, i.e. demon-possessed. )

குர்‍ஆன் என்பது முகமதுவின் வாழ்நாட்களில் சிறிது சிறிதாக இறக்கப்பட்டது என்றும், அதில் சம காலத்து நிகழ்வுகளைப் பற்றிய விவரங்கள் உண்டென்றும் முஸ்லீம்கள் நம்புகின்றனர். மக்காவில் வாழ்ந்த மக்கள் முகமதுவை ஒரு நல்ல நேர்மையான, நம்பத்தகுந்த நபர் என்றுச் சொன்னார்கள் என்று இஸ்லாமிய ஹதீஸ்கள் சொல்லும் விவரங்களுக்கு எதிராக இந்த குர்‍ஆனின் சாட்சி உள்ளது. முஸ்லீம்களின் வேதமாகிய குர்‍ஆன், முஸ்லீம்கள் சொல்வதற்கு எதிராகச் சொல்கிறது, அதாவது முகமதுவின் சமகாலத்து மக்கள் முகமதுவை

ஒரு பொய்யராகக் கண்டனர்,

அவர் ஒரு ஏமாற்றுக்காரராகக் கண்டனர்,

கட்டுக்கதைகளை இட்டுக்கட்டுபவராகக் கண்டனர்.

மற்றும் புராண கட்டுக் கதைகளை இறைவனிடமிருந்து வந்த வெளிப்பாடுகளாக சொல்பவராகக் கண்டனர் என்று குர்‍ஆன் சாட்சி பகருகிறது. இறைவன் என்னோடு பேசினார்(வெளிப்படுத்தினார்) என்று முகமது சொல்லும் போது ஏன் மக்கள் இவரை நம்பவில்லை என்பதற்கான காரணங்கள் இவைகள் ஆகும். முகமது பழைய கற்பனைக் கட்டுக்கதைகளையும், மாயையாக கதைகளையும் சொல்கிறார் என்று அவர்கள் கண்டனர். முகமது தன்னை மக்கள் மிகவும் முக்கியமானவராக கருதவேண்டும் என்றும், தான் சொல்வதை மக்கள் கவனிக்கவேண்டும் என்றும், தன் விருப்பம் நிறைவேறவேண்டும் மற்றும் மக்கள் தன் செய்திக்கு கீழ் படியவேண்டும் என்றும் இவர் எண்ணுகின்றார் என்று அம்மக்கள் கருதினர்.

இதுமட்டுமல்ல, இஸ்லாமிய தாவா ஊழியம் செய்யும் அறிஞர்கள், இந்த இஸ்லாமியரல்லாத மக்களின் குற்றச்சாட்டுகளை புறக்கணிக்கமுடியாது. அதாவது, முகமது மீது மக்கள் வேண்டுமென்றே தவறாக குற்றம் சாட்டினார்கள் என்றுச் சொல்லமுடியாது. காரணம், அப்படி இவர்கள் சொல்வார்களானால், "இஸ்லாமில் நம்பிக்கையற்றவர்கள் முகமதுவை ஒரு நேர்மையானவராகக் கண்டனர்" என்று இவர்கள் முன்வைக்கும் வாதம் பொய் என்று தெளிவாகிவிடும், மற்றும் இவர்களின் வாதங்களில் உள்ள முரண்பாட்டை மக்கள் தெளிவாக கண்டுக்கொள்வார்கள். ஒன்றை மட்டும் எல்லாரும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள், அதாவது "முகமது ஒரு நேர்மையானவர் என்று அவர் எதிரிகள்(இஸ்லாமியரல்லாதவர்கள்) நற்சாட்சி சொன்னார்கள்" என்றுச் சொல்லி, முகமதுவின் நபித்துவததை நிருபிக்க பாடுபடுவது இந்த இஸ்லாமிய அறிஞர்களே என்பதை மறக்கக்கூடாது.

இஸ்லாமிய சகோதரரோ அல்லது சகோதரியோ, நம்பிக்கையில்லாத மக்கள் முகமதுவின் நடத்தைப் பற்றி சொல்லும் குற்றச்சாட்டை தள்ளிவிடமுடியாது அல்லது புறக்கணித்துவிடமுடியாது. குறைந்த‌ப‌ட்ச‌மாக‌, இஸ்லாமிய‌ர‌ல்லாத‌ ம‌க்கா ம‌க்கள்(எதிரிகள்) முக‌ம‌துவின் ந‌ட‌த்தைப் ப‌ற்றிச் சொன்ன ந‌ற்சாட்சியை ந‌ம்ப‌வேண்டும் என்றுச் சொல்லும் இஸ்லாமிய‌ர்க‌ள், அதே எதிரிக‌ள், முக‌ம‌துவின் ந‌ட‌த்தைப் ப‌ற்றிச் சொல்லும் இந்த‌ குற்ற‌ச்சாட்டுக‌ளையும் நாம் நம்பி, முகமது ஒரு நல்ல நடத்தையுள்ளவர் அல்ல என்று நம்பலாம் அல்லவா? இஸ்லாமியர்கள் ஏதாவது ஒன்றைத் தான் தெரிந்தெடுத்துக்கொள்ளமுடியும், கூழும் குடிக்கனும், மீசையிலும் ஒட்டக்கூடாது என்றால் அது நடக்காது.( S/he cannot therefore simply discredit the claims of the unbelievers when they are unflattering to the character of Muhammad. After all, if their testimony is reliable enough to support of Muhammad's integrity then by the same token the unbelievers' claims are also good enough to call his character into question. The Muslims cannot have their cake and eat it too.)

மூலம்: http://www.answering-islam.org/Shamoun/mhd_amin2.htm


setstats1
"மூலம்: http://www.answering-islam.org/tamil/authors/sam-shamoun/mhd_amin2.html

Monday, July 21, 2008

எங்கும் ஆபாசம் எதிலும் ஆபாசம்

 
 
ஒரு முஸ்லீம் உமரிடம் கேட்ட கேள்விகள் மற்றும் பதில்கள்

உண்மையடியான் தளத்தில் பதிக்கப்பட்டு இருந்த "இஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்துவடிவ விவாதம்" என்ற கட்டுரைக்கு ஒரு இஸ்லாமியர் கேட்ட கேள்விகள் மற்றும் அதற்கு நான் கொடுத்த பதில்களை இங்கே தருகிறேன்.

இதை ஏன் தனி பதிவாக தருகிறேனென்றால், இவர் பல கேள்விகள் கேட்டு இருக்கிறார், பைபிளின் மூல மொழி என்ன? ஏன் பைபிள் நாட்டுக்கு நாடு மாறுபடுகிறது, மற்றும் இவர் கேட்ட முக்கியமான கேள்வி: 2 சாமுவேல் 11ம் மற்றும் 12ம் அதிகாரத்தை குடும்பத்துடன் படிக்கமுடியுமா? என்றார். இவைகள் அனைத்திற்கும் என் பதில் இக்கட்டுரையில் இருக்கிறது.

கிறிஸ்தவத்திற்கு எதிராக, இஸ்லாமிய இமாம்கள், அறிஞர்கள் எப்படி பொய்களைச் சொல்லி முஸ்லீம்களின் மனதிலே சந்தேகத்தை விதைக்கிறார்கள் என்பதற்கு இச்சகோதரரின் வரிகள் ஒரு நல்ல எடுத்துக்காட்டாகும், எவ்வளவு அறியாமையாக இச்சகோதரர் கேள்விகளை கேட்கிறார் என்பதை பாருங்கள்.


-----------------------------


 
Quote:
Anonymous Said:

//கிருஸ்தவ அருமை நன்பர்கலெ!
நான் என்னுடைய சந்தெகங்கலை உங்கலிடம் சமர்பிக்கின்ரென் இதர்கு உங்கலிடம் பதில் கோருகிரென்!
//


Umar Said:
அன்புள்ள அனானிமஸ் அவர்களே, உங்களுக்கு என் வணக்கங்கள். உங்க‌ள் ச‌ந்தேகங்க‌ளை கேளுங்க‌ள் ப‌தில் த‌ருகிறோம்.




 
Quote:
Anonymous Said:
//நீங்கல் இரைவெதமாக மதிக்கும் பைபில் எம்மொழியில் இரக்கப்பட்டது? அம்மொழியில் தர்பொது பைபில் உல்லதா? அம் மொழி தர்பொது வலக்கதில் உல்லதா அல்லது வலகொடிந்து விட்டதா?//


Umar Said:
பைபிள் இரண்டு பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது, அவைகள் பழைய ஏற்பாடு மற்றும் புதிய ஏற்பாடு.

பழைய ஏற்பாடு எபிரேய மொழியிலும், புதிய ஏற்பாடு கிரேக்க மொழியில் எழுதப்பட்டுள்ளது.

இந்த இரண்டு மொழிகளிலும் பைபிள் உள்ளது. உங்களுக்கு எபிரேய மற்றும் கிரேக்க மொழியில் தேவையானால், இணையத்தில் தேடுங்கள், உங்களுக்கு கிடைக்கும், மற்றும் ஏதாவது கிறிஸ்தவ புத்தக கடையில் சென்று கேளுங்கள் உங்களுக்கு கிடைக்கும்.

எபிரேய மற்றும் கிரேக்க மொழிகள் இப்போது வழக்கத்தில் இல்லை. ஆனால், இவைகளை கற்றுக்கொள்ள அனேக கல்லூரிகள், புத்தகங்கள் நூற்றுக்கணக்கான எண்ணிக்கையில் உள்ளன.



 
Quote:
Anonymous Said:
//நீங்கல் இரைவெதமாக மதிக்கும் பைபில் இரைவனால் இரக்கப்பட்டதா//


Umar said:

குர்‍ஆன் இறைவனால் இறக்கப்பட்டது என்று நீங்கள் குர்‍ஆனுக்குச் சொல்லும் ஆதாரங்களை விட, பைபிளுக்கு அதிகமாக ஆதாரங்கள் உள்ளன.



 
Quote:
Anonymous Said:

// அப்படி இருப்பின் நாட்டுக்கு நாடு மாநிலதுக்கு மாநிலம் ஊருக்கு ஊர் தனி தனியாக வித விதமாக இரக்கபட்டதா உங்கல் பைபிலில் எலுதப்பட்ட வசன்ங்கல் ஒரு நாட்டில் ஒரு பைபிலில் இருந்தால் மற்றொன்றில் இல்லயெ ஏன்? //


Umar said:

யாரோ சொன்னதைக் கேட்டு, அப்படியே கேட்கவேண்டாம்.

நீங்கள் பைபிளை ஒரு முறையாவது பார்த்துள்ளீர்களா?
தமிழ் மொழியிலோ அல்லது ஆங்கிலத்திலோ பைபிளை பார்த்து இருக்கிறீர்களா?

இன்னொரு கேள்வி, நீங்கள் குர்‍ஆனை தமிழில் பார்த்து இருக்கிறீர்களா? அப்படி பார்த்து இருந்தால், குர்‍ஆனை ஒருமுறையாவது முழுவதுமாக தமிழில் படித்து இருக்கிறீர்களா? நான் இப்படி கேட்பது, கொஞ்சம் அதிகமாக தோன்றலாம், ஆனால், உண்மை இது தானே, நீங்கள் குர்‍ஆனை அரபியில் படிக்கத்தானே அதிகமாக ஊக்குவிக்கப்படுகிறீர்கள். ஒருவேளை, நீங்கள் நேர்மையானவர்களாக இருந்து, நான் குர்‍ஆனை இதுவரை தமிழில் படிக்கவில்லை என்று சொல்வீர்களானால், உங்களை நான் உட்சாகப்படுத்துகிறேன், முதலாவது, நீங்கள் உங்கள் குர்‍‍ஆனை தமிழில் படியுங்கள், அல்லாவின் வார்த்தைகளை நீங்கள் புரிந்துக்கொள்ளும் மொழியில் படியுங்கள், அரபியில் படிப்பதினால், ஒரு நன்மையும் இல்லை. வேண்டுமானால், நான் குர்‍ஆனை அரபியில் முழுவதுமாக படித்துவிட்டேன் என்று மற்றவர்களுக்கு பெருமையாகச் சொல்லிக்கொள்ளலாமே ஒழிய, அறிவு சார்ப்பாக எந்த பிரயோஜனமும் இல்லை, அதாவது, அல்லா குர்‍ஆனில் என்ன சொல்லியுள்ளார் என்று தமிழில் படித்து புரிந்துக்கொள்ளாமல், இருப்பதினால் என்ன நன்மை சொல்லுங்கள்.


 
Quote:
Anonymous Said:
// பலய ஏர்பாடு புதிய ஏர்பாடு என்ரால் என்ன?பலய ஏர்பாட்டில் உல்லவசன்ம் புதியதில் இல்லயெ ஏன்? //


Umar Said:

பழைய ஏற்பாடு என்பது, இயேசுவிற்கு முன்பு வாழ்ந்த தீர்க்கதரிசனங்களின் தொகுப்பாகும். அதாவது, இப்ராஹிம், மூசா, தாவூத் போன்றவர்களுக்கு அல்லா இறக்கினான் என்றுச் சொல்வார்களே அந்த தொகுப்பாகும்.

புதிய ஏற்பாடு என்பது, இஞ்ஜில் என்றுச் சொல்லும் இயேசுவின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் புத்தகங்கள், இயேசுவின் சீடர்கள் எப்படி ஊழியம் செய்தார்கள், அவர்கள் மூலமாக செய்யப்பட்ட அற்புதங்கள் என்ன? மற்றும் திருச்சபை எப்படி வளர்ச்சி அடைந்தது? போன்ற விவரங்கள் அடங்கிய தொகுப்பாகும்.

"பழைய ஏற்பாட்டில் இருக்கும் வசனம் புதிய ஏற்பாட்டில் இல்லையே" என்று நீங்கள் கேட்டது மிகவும் தவறான கேள்வியாகும். பழைய ஏற்பாட்டில் இயேசுவிற்கு முன்பு வாழ்ந்த தீர்க்கதரிசிகளின் வாழ்க்கை வரலாறுகள், அவர்களைக்கொண்டு தேவன் என்னென்ன அற்புதங்களைச் செய்தார்? போன்ற விவரஙக்ளை அறியலாம். அது போல, இயேசுவின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவரது சொற்பொழிவுகளை புதிய ஏற்பாட்டில் அறியலாம். என்வே, பழைய ஏற்பாட்டில் இருக்கும் வசனம் ஏன் புதிய ஏற்பாட்டில் இல்லை என்பது ஒரு தவறான கேள்வியாகும்.


 
Quote:
Anonymous Said:
// நாட்டுக்கு நாடு வருடதுக்கு வருடம் பக்கங்கல் குரைகின்ற்தெ ஏன்? //



Umar Said:

எது சொல்லவேண்டுமானாலும், ஆதாரத்துடன் சொல்லவேண்டும், இப்படி யாரோ உங்களிடம் சொன்ன பொய்களை(இந்த பொய்களை முக்கியமாக நீங்கள் தினமும் நமாஜுக்குச் செல்லும், இமாம் கூட சொல்லியிருக்கலாம்), அப்படியே எழுதக்கூடாது.

உங்களால் ஏதாவது ஆதாரம் காட்டமுடியுமா? முதலில் நீங்கள் பைபிளை பார்த்து இருக்கிறீர்களா?

உங்களின் இந்த வரிகளைக்கண்டு நான் அறிந்துக்கொண்ட ஒரு விவரம், உங்களுக்கு குர்‍ஆனை அரபியில் பார்த்த அனுபவம் மட்டுமே உண்டு என்பதும், குர்‍ஆனை தமிழில் படித்த அனுபவம் இல்லை என்பதும் தெரிகின்றது. மற்றும் அதே போல, பைபிளையும் நீங்கள் படிக்கவில்லை என்பதும் நிச்சயம். ஆனால், நீங்கள் எழுதுவதோ, எல்லாம் தெரிந்தவர் போல எழுதுகின்றீர்கள். எனவே, உங்கள் அறியாமையை போக்கிக்கொள்ளுங்கள். குர்‍ஆனை தமிழில் படியுங்கள், உங்களுக்கு உங்கள் இஸ்லாம் மீது நம்பிக்கை இருந்தால், பைபிளையும் படித்துப்பாருங்கள்.


 
Quote:
Anonymous Said:

// நீங்கல் இரைவெதமாக மதிக்கும் பைபிலை அதில் உல்ல சாமுவெல் பகுதி 2வசனம் 11,12 உங்களுடைய குடும்பதுடன் குழந்தைகலுடன் கூடி படிக்க முடிக்கிரதா? சவ்த் ஆப்ரிக்காவில் ஏன் இந்த(இதைபொன்ர) பொன்ற வசனதிர்கு தடைவிதிக்கபட்டதெ ஏன்? இதில் கூறிய பல வசனங்கல் தர்பொது தமிழகதில் தவளும் பைபிலில் இல்லையெ ஏன்? //



Umar Said:

அருமையான அனானிமஸ் அவர்களே,

நீங்கள் குறிப்பிட்ட பகுதியை நீங்கள் பைபிளிலிருந்து படித்து பார்த்ததுண்டா?

அந்தப் பகுதியில் யாரைப்பற்றிய விவரங்கள் சொல்லப்பட்டுள்ளது என்று தெரியுமா?

அந்த 2 சாமுவேல் 11ம் மற்றும் 12ம் அதிகாரங்களில் உள்ள சம்பவம் பற்றி குர்‍ஆனும், இஸ்லாமும் என்ன சொல்கிறது என்று தெரியுமா?

இந்த 2 சாமுவேல் 11ம் & 12ம் அதிகாரத்தில் தாவூத் அதாவது தாவீது என்ற நபரைப் பற்றி சொல்லப்பட்டுள்ளது.

1. தாவீது, உரியா என்ற நபரின் மனைவியின் மீது ஆசைக்கொண்டு, விபச்சாரம் செய்து, உரியாவைக் கொன்று, அப்பெண்ணை திருமணம் செய்துக்கொண்டார் என்று பைபிள் சொல்கிறது.

ஆனால், முஸ்லீம்களோ இது தவறு, தாவீது என்ற தீர்க்கதரிசி இப்படி செய்யவில்லை என்றுச் சொல்கிறார்கள். அதற்காக பல பொய்யான தகவல்களை பரப்பிக்கொண்டு இருக்கிறார்கள்.

உரியாவின் மனைவியாகிய பெத்செபாளுக்கும் தாவீதுக்கும் பிறந்தவர் தான் சாலொமோன் என்று பைபிள் கூறுகிறது. ஆனால், இதற்கு உயர் மட்ட இஸ்லாமிய அறிஞர்கள் முதற்கொண்டு, சராசரி சாதாரண முஸ்லீம் வரை அனைவரும் பைபிளை இந்த விஷயத்தில் குற்றம் சாட்டுகின்றனர்.


ஆனால்:

1. தாவீது உரியாவின் மனைவி மீது மோகம் கொண்டார் என்றும்,

2. தாவீது உரியாவை திட்டமிட்டு கொன்றார் என்றும்,

3. தாவீதின் பாவத்தை அல்லா அவருக்கு உணர்த்தினார் என்றும்,

4. பிறகு தாவீது தன் பாவத்திற்காக அல்லாவிடம் பாவ மன்னிப்பு கோரினார் என்றும்


குர்‍ஆனின் வசனங்களும், இஸ்லாமிய பாரம்பரியமாகிய ஹதீஸ்களும், ஆரம்ப கால இஸ்லாமிய அறிஞர்களும், குர்‍ஆனுக்கு உரை எழுதிய இஸ்லாமிய அறிஞர்களும் ஏக மனதாக ஏற்றுக்கொண்டு இருக்கிறார்கள் என்பதை மட்டும் நம் தமிழ் முஸ்லீம்கள் மறைக்கிறார்கள் அல்லது இவர்களுக்கு இதைப் பற்றிய விவரங்கள் தெரியவில்லை.

இந்த நிகழ்ச்சியைப் பற்றி குர்‍ஆன் பல வசனங்களில் சொல்கிறது.



 
Quote:

-----------------
தாவீதை சந்தித்த இரண்டு வழக்காளிகள் பற்றி குர்‍ஆன் வசனங்கள் - குர்‍ஆன் 38:21-24,30

அந்த வழக்காளிகளின் செய்தி உமக்கு வந்ததா? அவர்கள் (தாவூது இறைவணக்கத்திற்காக அமைத்திருந்த) மிஹ்ராபின் சுவரைத் தாண்டி - (38:21 )

தாவூதிடம் நுழைந்த போது அவர்; அவர்களைக் கண்டு திடுக்குற்றார்; அப்போது அவர்கள் கூறினார்கள்; "பயப்படாதீர்! நாங்களிருவரும் வழக்காளிகள்; எங்களில் ஒருவர் மற்றவர் மீது அநீதம் செய்திருக்கிறார்;; எங்களிருவருக்கிடையில் நீதத்தைக் கொண்டு தீர்ப்பளிப்பீராக! (அதில்) தவறிழைத்து விடாதீர்! எங்களைச் செவ்வையான பாதைக்கு நேர்வழி காட்டுவீராக!" (38:22 )

(அவர்களில் ஒருவர் கூறினார்; ) "நிச்சயமாக இவர் என்னுடைய சகோதரர்; இவரிடம் தொண்ணூற்றொன்பது ஆடுகள் இருக்கின்றன் ஆனால் என்னிடம் ஒரே ஓர் ஆடுதான் இருக்கிறது அவர் அதனையும் தனக்குக் கொடுத்துவிட வேண்டுமெனச் சொல்லி, வாதத்தில் என்னை மிகைத்து விட்டார்." (38:23 )

(அதற்கு தாவூது; ) "உமமுடைய ஆட்டை அவர் தம்முடைய ஆடுகளுடன் சேர்த்து விடும்படிக் கேட்டது கொண்டு நிச்யசமாக அவர் உம்மீது அநியாயம் செய்து விட்டார்; நிச்சயமாகக் கூட்டாளிகளில் பெரும்பாலோர் - அவர்களில் சிலர் சிலரை மோசம் செய்து விடுகின்றனர்; ஈமான் கொண்டு (ஸாலிஹான) நல்லமல்கள் செய்பவர்களைத் தவிர இத்தகையவர் சிலரே" என்று கூறினார்; இதற்குள்; "நிச்சயமாக நாமே அவரைச் சோதித்து விட்டோம்" என்று தாவூது எண்ணித் தம்முடைய இறைவனிடம் மன்னிப்பு கோரிக்குனிந்து விழுந்தவராக இறைவனை நோக்கினார். (38:24)

இன்னும் தாவூதுக்கு(ப் புதல்வராக) ஸுலைமானை வழங்கினோம்; சிறப்பான (நம்) நல்லடியார், நிச்சயமாக அவர் (எதிலும் நம்மையே) நோக்குபவர். (38:30 )
---------------



தான் செய்த பாவத்திற்காக அல்லாவிடம் தாவீது மன்னிப்பை கோரினார் என்று குர்‍ஆன் சொல்கிறது.

இந்த நிகழ்ச்சியைப் பற்றி விவரமாக அறிய வேண்டுமானால், கீழ் கண்ட கட்டுரையை படிக்கவும்:

இஸ்லாமிய நபிகளும், பாவங்களும் - 2 - பைபிள் மீது முஸ்லீம்களின் குற்றச்சாட்டு அம்பளம் (தாவீதை மனம் திரும்பச் செய்ய முயற்சி எடுத்த அல்லா)



அருமையான அனானிமஸ் அவர்களே, நான் மேலே குறிப்பிட்ட குர்‍ஆன் வசனங்களின் உண்மை பொருள் என்ன என்று, பல இஸ்லாமிய அறிஞர்கள் சொன்ன விவரங்களை இந்த கட்டுரையில் நீங்கள் படிக்கலாம்.


எனவே, யாரோ ஏதோ சொன்னார்கள் என்று, நீங்கள் சுயமாக சோதித்துப் பார்க்காமல் இப்படி கேள்வியை கேட்காதீர்கள்.


என்னிடம் ஒரு பைபிள் பகுதியை காட்டி, இதை குடும்பத்துடன் படிக்கமுடியுமா என்று கேட்டீர்கள், நான் அதற்கு பதில் அளித்தேன். ஆனால், நான் கேட்கிறேன், கீழ் கண்ட வசனங்களை, விவரங்களை உங்கள் குடும்பத்துடன் நீங்கள் படிக்கமுடியுமா? என்று சோதித்துப்பாருங்கள்.


3. இஸ்லாமில் ஆபாசம் அல்லது குர்‍ஆன் வசனங்களின் ஆபாசம்

இஸ்லாமியர்கள் ஒரு விஷயத்தை மறந்துப்போய் எப்போதும் கட்டுரைகளை எழுதிக்கொண்டு இருக்கிறார்கள், அதாவது பைபிளில் இந்த குறை உள்ளது என்று குறை கூறுவதற்கு முன்பு, தங்கள் குர்‍ஆனில் தங்கள் ஹதீஸ்களில், தங்கள் முகமதுவின் வாழ்க்கையை சிறிது நினைவிற்கு கொண்டு வருவார்களானால், ஒரு கட்டுரையும் எழுதமாட்டார்கள். ஆனால், இவர்கள் இப்படி செய்வதில்லை. இந்த கட்டுரையில் இவர்களின் நிலையை ஒரு சில வரிகளை விவரித்துவிட்டு, என் அடுத்த பதிலில் இன்னும் விவரமாக இஸ்லாமின் நிலையையும், முகமதுவின் தனிப்பட்ட திருமண தாம்பத்திய வாழ்க்கையைப்பற்றியும், விவரமாக அலசுவோம். இஸ்லாம் செக்ஸ் பற்றி என்ன சொல்கிறது, முகமதுவின் அபிப்பிராயங்கள் என்ன என்பதை விவரமாக காணலாம்.

[இந்த பகுதியில் வரும் சில வார்த்தைகள் வாசகர்களை சஞ்சலப்படுத்தலாம், விருப்பமில்லையானால் இப்போதே இதை படிக்காமல் இப்பக்கத்தைவிட்டு சென்றுவிடும் படி, கேட்டுக்கொள்கிறேன்]


குர்‍ஆனும் பெண்களும்:

அல்லா முஸ்லீம் ஆண்களுக்கு கீழ் கண்டவற்றை கொடுக்கிறாராம்:



 
Quote:
தோட்டங்களும், திராட்சைப் பழங்களும். (78:32) ஒரே வயதுள்ள கன்னிகளும். (78:33) பானம் நிறைந்த கிண்ணங்களும், (இருக்கின்றன). (78:34)



வசனம் 78:33ஐ கவனியுங்கள், தமிழில் அழகாக "ஒரே வயதுடைய கன்னிகள்" என்று மொழிபெயர்த்துள்ளார்கள். ஆனால், இந்த கீழ் கண்ட மொழிபெயர்ப்பை பாருங்கள்:


 
Quote:
Surely for the godfearing awaits a place of security, gardens and vineyards and maidens with swelling breasts, like of age, and a cup overflowing.

http://arthursclassicnovels.com/arthurs/koran/koran-arberry10.html

Enclosed gardens and vineyards;

And damsels with swelling breasts, their peers in age,

And a full cup:

http://www.sacred-texts.com/isl/qr/078.htm



குர்‍ஆனில் இந்த வசனங்களில் அல்லா சொல்கிறார், முஸ்லீம்களுக்கு அவர் சொர்க்கத்தில் "திடமான மார்பகங்கள்( SWELLING BREAST) உள்ள" பெண்களை தருவாராம். இதை இஸ்லாமிய மொழிபெயர்ப்பாளர்கள், சிறிது மறைத்து எழுதுகிறார்கள்.

இல்லை, இல்லை இது தவறான மொழிபெயர்ப்பு, அரபியில் அப்படி இல்லை, என்று சொல்வீர்களானால், இஸ்லாமிய காமண்டரி இபின் கதிர் என்ன சொல்கிறார் என்றுப்பாருங்கள். அவர் சொல்வதை ஏற்றுக்கொள்வீர்கள் அல்லவா?

" Kawa`ib" என்ற அரபி வார்த்தைக்கு அவர் குறிப்பிடும் பொருள் என்னவென்றுப்பாருங்கள்: கீழே ஆங்கிலத்தில் இபின் கதிரின் காமண்டரி சொல்வதை நான் தமிழில் எழுதவேண்டிய அவசியம் இல்லை என்று எண்ணுகின்றேன்.



 
Quote:
(And vineyards, and Kawa`ib Atrab,) meaning, wide-eyed maidens with fully developed breasts. Ibn `Abbas, Mujahid and others have said,

(Kawa`ib) "This means round breasts. They meant by this that the breasts of these girls will be fully rounded and not sagging, because they will be virgins, equal in age. This means that they will only have one age.'' The explanation of this has already been mentioned in Surat Al-Waqi`ah. Concerning Allah's statement,

Source: http://www.qtafsir.com/index.php?option=com_content&task=view&id=1404&Itemid=134


.......
எங்கும் ஆபாசம் எதிலும் ஆபாசம், அது தான் இஸ்லாம்:

முகமது சொல்கிறாராம், சொர்கத்தில் மனைவி இல்லாமல் ஒருவரும் இருக்கமாட்டார்களாம், மற்றும் உலகத்தில் அவரது இரண்டு மனைவிகள் அவருக்கு கொடுக்கப்படுமாம். இபின் கதிர் சொல்லும் போது, இந்த உலக மனைவிகள் இரண்டு பேரோடு, இன்னும் 70 மனைவிகளை அல்லா கொடுப்பாராம். மொத்தம் 72 மனைவிகள். ஒவ்வொரு ஆணுக்கும் 100 ஆண்களின் சக்தியை அல்லா கொடுப்பானாம், எதற்காக சமுதாயத்திற்கு சேவை செய்வதற்காக என்று நினைத்தீர்களா? இல்லை, இல்லை, சொர்க்கத்தில் பெண்களோடு உறவு கொள்வதற்காம். ஏன் அல்லாவிற்கு இதை விட்டால் வேறு வேலை சொர்க்கத்தில் இல்லையா?

ஒரு முறை உறவு கொண்டவுடன், அப்பெண்களை மறுபடியும் அல்லா "கன்னிகளாக" மாற்றிவிடுவானாம். என்ன இஸ்லாமியர்களே, இது தேவையா அல்லாவிற்கு... அப்படி பெண்களை கன்னிகளாக மாற்றும் வேலையை இந்த உலகத்திலாவது செய்தால், கற்பழிக்கபப்ட்டவர்களுக்கு ஒரு புது வாழ்வு கொடுத்தவராக அல்லா இருப்பார், கோர்ட்டு வழக்கு என்றுச் சொல்லி பாதிக்கப்பட்ட பெண்ணின் வாழ்க்கை நாசனமாகாமல் இருக்குமில்லையா? இன்னும் முஸ்லீம்கள் பல ஆண்டுகள் தங்கள் மனைவிகளோடு வாழ்ந்து விவாகரத்து செய்துவிடும் போது, அந்தப்பெண்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பார்கள், இப்படிப்பட்டவர்களை கன்னிகளாக அல்லா மாற்றினால், மற்ற முஸ்லீம்களாவது அவர்களை திருமணம் செய்துக்கொள்ள இது உதவியாக இருக்குமல்லவா? அந்தப்பெண்கள் மறுபடியும் கன்னிகளாக மாற்றப்பட்டதால், அவர்களுக்கும் நல்ல கணவர்கள் கிடைக்க வாய்ப்பு இருக்குமல்லவா?

இதையெல்லாம் உங்கள் பிள்ளைகளுக்கு எங்கும் எல்லாருக்கும் முன்பு உட்கார்ந்து உங்கள் பெற்றோருக்கும் முன்புன் உட்கார்ந்து, உங்கள் நபி இப்படிச் சொன்னார், அல்லா இப்படி செய்வார் என்று செய்திகளை பரிமாறிக்கொள்வீர்களா? சொல்லுங்கள்.



 
Quote:
The idea of having sexual relations in Paradise has led some Muslims to interpret these passages metaphorically. This in turn has prompted the assumption that the description is merely a poetic attempt to describe that which is indescribable.

Unfortunately for these scholars, Muhammad will not allow for such an interpretation. In Sahih Muslim, no. 6793 and 6794, we are told:

"In Paradise... every person would have two wives (so beautiful) that the marrow of their shanks would glimmer beneath the flesh and there would be none without a wife in Paradise."

According to Ibn Kathir's commentary on S. 56:35-37, a Muslim will be given seventy specially created females with two of his earthly wives, for a total of seventy-two maidens in Paradise.

In Mishkat Al-Masabih, Muhammad indicates:

"The believer will be given such and such strength in Paradise for sexual intercourse. It was questioned: O prophet of Allah! Can he do that? He said: 'He will be given the strength of one hundred persons.'" (Bk. IV, chp. XLII, Hadith no. 24; transmitted by Tirmizi who classified this Hadith as sound)

Even more amazing is this statement from Muhammad:

"The Prophet was asked: 'Do we have sex in Paradise?' He answered: 'Yes, by him who holds my soul in his hand, and it will be done dahman, dahman. And when it is finished she will return pure and virgin again.'" (Ibn Kathir's commentary on S. 56:35-37)

An editorial footnote to Ibn Kathir's translation indicates that the word dahman means intercourse done with such "shove and disturbance." (Ibid.)

Source: http://www.answering-islam.org/Shamoun/shabir-d.htm And

Wikipedia: http://en.wikipedia.org/wiki/Houri


Source: http://www.geocities.com/isa_koran/tamilpages/Rebuttals/egaththuvam/Egathuvam-1.html



முடிவாக, அன்பாக சகோதரரே, உங்களை நான் குர்‍ஆன் படிக்க, பைபிளைப் படிக்க உட்சாகப்படுத்துகிறேன்.


உங்களுக்கு இயேசுவின் வாழ்க்கையை படிக்க இந்த தொடுப்பு உதவியாக இருக்கும் என்று எண்ணுகின்றேன்: லூக்கா சுவிசேஷம்
=============
 
 

 

Saturday, July 19, 2008

அனானிமஸ்ஸுக்கு உமரின் பதில்:

அனானிமஸ்ஸுக்கு உமரின் பதில்:
=============================

அன்புள்ள அனானிமஸ் அவர்களே,

உங்கள் பின்னூட்டத்திற்காக நன்றி.

Anonymous  Said:
// இயேசு கிருஷ்து ராஜாவிற்கு முழு நேர ஊழியம் செய்கிறேன் பேர்வழி என்று கூறிவிட்டு தினமும் குர்ஆனை தமிழில் படித்து வருவதும் அதன் தொடர்ச்சியான உங்களின் இஸ்லாத்தை நோக்கிய உங்களின் பயணம் கவலை அளிப்பதாக உள்ளது.//

Umar Said:

நான் முழுநேர ஊழியன் என்று உங்களுக்கு யார் சொன்னது? நான் இஸ்லாமியர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் போது, உங்களுக்கு ஏன் கோபம் வருகிறது? ஒகோ, நீங்களும் ஒரு முஸ்லீமா?

Anonymous Said:

//"...Seeing they see not
and hearing they hear not,
neither do they understand(Holy Bible Mathew 13:13)" //

 

Umar Said:
அருமையான வசனத்தை எடுத்துக்கூறியுள்ளீர்கள். மிக்க நன்றி.

மத்தேயு 13:13 அவர்கள் கண்டும் காணாதவர்களாயும், கேட்டும் கேளாதவர்களாயும், உணர்ந்துகொள்ளாதவர்களாயும் இருக்கிறபடியினால், நான் உவமைகளாக அவர்களோடே பேசுகிறேன்.

நீங்கள் குறிப்பிட்ட வசனத்தில் இயேசு அவர்களுடன் உவமைகளைக் கொண்டு அதிகமாக பேசினார், அது போல, நானும் சில கதைகள் மூலமாக விளக்குகிறேன், அவ்வளவு தான்.

Anonymous Said:
கடவுளை நம்புகிற எவரும் சாதாரணமாக பதில் கூறும் அளவிற்கு உள்ள உங்களின் இந்த கதை முட்டாள் தனமானது. கடவுள் நம்பிக்கைக்கு எதிரானது. பைபிளின் மீதே உங்கள் குற்றச்சாட்டு உள்ளது. பைபிள் திரித்து எழுதியிருப்பதாக கூறுவது போன்றுள்ளது.

Umar Said:
அப்படியா! உங்களுக்கு கடவுள் நம்பிக்கை உள்ளது அல்லவா? அப்படியானால், பதில் சொல்லுங்கள். இக்கட்டுரையில் நான் சொன்ன கேள்விகளுக்கு உங்கள் பதில் என்ன?
என் கதையில் எந்த பகுதி முட்டாள் தனமானது?

முட்டாள் தனமான விவரம் ஒன்று என் கதையில் இருக்குமானால், அது அந்த அரசன் அதிகமாக சக்தியுள்ளவனாக இருந்தும் தன்னிடம் உள்ளவற்றை பாதுகாக்காமல் போனது தான், மட்டுமல்ல, அதைப்பற்றி மக்களுக்கு வெட்கமில்லாமல், என் புத்தகத்தை ஒரு ஏழை அழித்துவிட்டான் என்றுச் சொன்னது தான். 

உங்கள் கருத்துப்படி, எது முட்டாள் தனமானது என்றுச் சொல்லுங்கள்?

Anonymous Said:

நீங்கள் ஊழியம் செய்வதற்கு அருகதையற்றவர். அது தொடர்பாக முழுமையாக எனது கண்டனத்தை திருச்சபைக்கு அனுப்ப இருக்கிறேன்.
--கிருஸ்து அடிமை

Umar Said:

என் தகுதியைப் பற்றி, அருகதையைப் பற்றி, நீங்கள் ஒன்றும் கவலைப்படவேண்டாம்.

உங்கள் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறீர்களா? தெரிவித்துக்கொள்ளுங்கள். யாரும் கவலைப்படப்போவதில்லை.

எந்த திருச்சபைக்கும் தெரிவித்துக்கொள்ளுங்கள், எவ்வளவு கண்டனம் வேண்டுமானாலும் தெரிவித்துக்கொள்ளுங்கள்.

ஆனால், ஒரு சின்ன வேண்டுகோள், அது என்னவென்றால்,  "பைபிள் கற்பனை என்று இஸ்லாமியர்கள்  சொல்கிறார்கள், இயேசு தேவகுமாரன் இல்லை என்று இஸ்லாமியர்கள் சொல்கிறார்கள், அல்லாவை நம்பவில்லையானால் கிறிஸ்தவர்கள் அனைவரும் நரகத்தில் அல்லா தள்ளுவார் என்று இஸ்லாமியர்கள் சொல்கிறார்கள், இந்த கேள்விகளுக்கு இந்த நபர் பதில் சொல்கிறார், இது தவறானது, ஆகையால் என் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று உங்கள் கண்டனத்தை எந்த திருச்சபைக்கும் தெரிவித்துக்கொள்ளுங்கள், நான் கவலைப்படப்போவதில்லை.  ஒரு வேளை, உங்கள் கண்டனத்தை அவர்கள் ஏற்றுக்கொண்டு, நீங்கள் சொல்வது சரி தான் என்றுச் சொல்லக்கூடும். முயற்சி எடுத்துப்பாருங்கள்.

உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.
 
Umar

இஸ்லாம்-கிறிஸ்தவம் நேரடி விவாதம்









Link

Friday, July 18, 2008

அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்-கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா

 

அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்

கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா

பாகம் - 3


[அப்துல்லாவும் அப்ரஹாமும் நெருங்கிய நண்பர்கள், இவர்கள் அடிக்கடி தங்கள் மார்க்க விவரங்களைப் பற்றி பேசுக்கொள்வதுண்டு. இப்படி இவர்கள் பேசிய ஒரு உரையாடலே இந்தக் கட்டுரை. அப்துல்லா தன் நண்பன் அப்ரஹாமுக்கு இரவு 9 மணிக்கு போன் செய்து பேசுகிறார்.]

அப்துல்லா: ஹலோ, அப்ரஹாம் எப்படி இருக்கே?

அப்ரஹாம்: ஹலோ, அப்துல்லாவா, நல்லா இருக்கேன், நீ எப்படி இருக்கே, என்ன இந்த சமயத்திலே போன் செய்யரே?

அப்துல்லா: ஒன்னுமில்லே, ஒரு கட்டுரையை படிச்சேன், அதைப் பற்றி உன் கருத்து என்ன என்று கேட்கலாம் என்று தான் போன் செய்தேன்.

அப்ரஹாம்: அப்படியா, சொல்லுடா, என்ன கட்டுரை, எதைப் பற்றியது?

அப்துல்லா: நீ அந்த கட்டுரையில் எழுதியிருப்பதை படித்தால், அவ்வளவு தான் ஆடிப்போயிடுவே.

அப்ரஹாம்: அப்படி என்னடா, அந்த கட்டுரையில் எழுதியிருக்கு, சீக்கிரம் சொல்லுடா, சஸ்பண்ஸ் வேண்டாம்.

அப்துல்லா: சரி, சொல்றேன் கேளு, கட்டுரையின் பெயர், திருக்குர்ஆன் மற்றும் பைபிளில் காணப்படும் வரலாற்றுத் தகவல்கள் - ஓர் ஒப்பீடு". இஸ்லாம் கல்வி என்ற தளம் அதை வெளியிட்டு இருக்கு, உனக்கு நான் நாளைக்கு அதை அனுப்புறேன், அதை படிச்சு, உன் பதில் என்ன என்று நீ சொல்லனும்.

அப்ரஹாம்: ஓஹோ, அந்தக் கட்டுரையா, நான் ஏற்கனவே, அதை படிச்சுட்டேனே. நேரம் கிடைக்கும் போது, உன்னோடு பேசலாம் என்று நினைத்தேன், நீயே கேட்டுட்டே.

அப்துல்லா: நல்லதாப் போச்சு, சரி சொல்லு, உன் கருத்து என்ன? அந்தக் கட்டுரையில் பல குற்றச்சாட்டுக்கள் சொல்லப்பட்டுள்ளது, மனிதர்கள் பைபிளின் வசனங்களை மாற்றியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது? அல்லா யூதர்களுக்கு இறக்கிய வேதத்தை அவர்கள் மாற்றிவிட்டதாக சொல்லப்பட்டுள்ளது, அதைப்பற்றி நீ என்ன சொல்றே? உன்னால், இப்போதைக்கு ஏதாவது பதில் சொல்ல முடியுமா? இல்லே உனக்கு இன்னும் அவகாசம் தேவையா? சொல்லுடா சொல்லு பார்க்கலாம்.

அப்ரஹாம்: அப்போ, நான் பதில் சொல்லித்தான் ஆகனும் அப்படித்தானே?

அப்துல்லா: உன்னால் முடிந்தால்! பதில் சொல்லுடா பார்க்கலாம்.
அப்ரஹாம்: சரி, நான் பதில் சொல்கிறேன், அதற்கு முன்பு ஒரு கதை சொல்றேன் கேளு, பிறகு அந்த கதையின் அடிப்படையில் நான் சில கேள்விகளை நான் கேட்பேன், நீ பதில் சொல்லு, அந்த பதிலில் தான், இந்த கட்டுரைக்கு என் பதில் அடங்கியிருக்கு. என்ன கதையை ஆரம்பிக்கட்டுமா?
அப்துல்லா: என்னடா எப்போ பாத்தாலும், கதை, எடுத்துக்காட்டு என்று சொல்றே. சரி, சொல்லு கேட்கிறேன்.

அப்ரஹாம்: கவனமாக கேட்கனும், கடைசியில் நான் கேள்வி கேட்பேன். ஒரு ஊரிலே ஒரு இராஜா இருந்தான், அவன் மிகவும் அறிவாளி, அவனைப்போல உலகத்தில் வேறு யாரும் அவ்வளவு அறிவாளி கிடையாது. அவருக்கு பல இலட்ச போர் வீரர்கள் இருக்கிறார்கள். அவன் தன் கோட்டையைச் சுற்றி தண்ணீர் விட்டு, முதலைகளை அதில் விட்டுவைப்பான், யார் வந்தாலும் சரி, முதலைகள் திண்றுவிடும். அந்த கோட்டைக்குள்ளே போகனும் என்றால், ஒரே வாசல் தான், அந்த வாசலின் முன்பும், பின்பும் பல நூறு காவலாளிகள் 24 மணி நேரமும் காவல் காப்பார்கள்.

அப்துல்லா: சரிடா, சீக்கிரமாக விஷயத்துக்கு வாடா

அப்ரஹாம்: இதோ வரேன்.அந்த இராஜாவிற்கு உள்ள ஒரு வினோத சக்தி என்னவென்றால், தன்னை யார் எதிர்க்க வந்தாலும், அதை அவர் தன் சக்தியால் கண்டுபிடித்துவிடுவார். தன்னுடைய கோட்டைக்குள் எந்த ஒரு மனிதன் வரவேண்டுமானாலும், பல பரிசோதனைகள் செய்துவிட்டுத் தான் வரவேண்டும். மட்டுமல்ல, இராஜாவை எதிர்க்க, அல்லது கொல்லவதற்காக ஒரு வேளை யாராவது நல்லவர்கள் போல நடித்து உள்ளே வரமுடியாது, ஏனென்றால், மனதில் உள்ளதை அறியும் சக்தியும் அவருக்கு உள்ளது.

அப்துல்லா: ரொம்ப நல்லா இருக்கே, கண்டினியூ பண்ணு.

அப்ரஹாம்: அதாவது, எப்படி இறைவனுக்கு முன்பாக எதுவும் மறைக்கமுடியாதோ, இறைவனை தோற்கடிக்கமுடியாதோ அது போல, இந்த இராஜாவும். இந்த இராஜா ஒரு புத்தகத்தை எழுதினார், அதில் தன் சட்டங்களை எழுதிக்கொண்டு இருக்கிறார். மற்றும் அந்த சட்டப்புத்தகம், தன் அரண்மனையிலேயே தன்னிடமே வைத்துக்கொண்டு இருக்கிறார். மட்டுமல்ல, அந்த புத்தகத்தில் உள்ள விவரங்களை, மக்களுக்குச் சொல்லி, இவர் பெருமைப்பட்டுக்கொண்டு இருப்பார், மக்களும் இவரின் ஞானத்தை மெச்சிக்கொள்வார்கள். இன்னுமொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த புத்தகத்தை இந்த இராஜா தவிர மற்ற யார் தொட்டாலும், உடனே, அம்மனிதர், கல்லாக மாறிவிடுவார். இராஜாவின் அனுமதி இல்லாமல், யாரும் கோட்டைக்குள் வரமுடியாது, மற்றும் அப்புத்தகத்தை தொடவும் முடியாது. இராஜா அனுமதி கொடுத்தால், அப்புத்தகத்தை தொடலாம், படிக்கலாம்.

அப்துல்லா: அடேங்கப்பா! ரொம்ப வினோதமாக உள்ளதே. சரி, மேலே சொல்லு.

அப்ரஹாம்: இப்படி இருக்கும்போது, அந்த ஊரிலே இருக்கும், ஒரு ஏழை விவசாயிக்கு இந்த இராஜா மீது பொறாமை வந்தது. எப்படியாவது, அந்த கோட்டைக்குள் நிழைந்து, அவர் எழுதிய புத்தகத்தை கிழித்துவிட்டு வரவேண்டும் என்று இவரது ஆசை. இதற்காக, சமயம் பார்த்துக்கொண்டு இருக்கிறான், இந்த ஏழை விவசாயி.

அப்துல்லா: அப்படியானால், இந்த திட்டத்தை அந்த இராஜா தெரிந்துக்கொண்டு இருப்பாரே?

அப்ரஹாம்: கண்டிப்பாக, இந்த விஷயம் இராஜாவிற்கு தெரியும், ஏனென்றால், இப்படிப்பட்ட வினோத சக்தி அந்த இராஜாவிற்கு இருக்கிறதே

அப்துல்லா: சரி, பிறகு என்ன ஆச்சு, அந்த ஏழை விவசாயி, எப்படி பலத்த பாதுகாப்பு உள்ள கோட்டைக்குள் நிழைந்தார், இராஜாவின் சட்ட புத்தகத்தை கிழித்தாரா இல்லையா? சொல்லடா? சஸ்பண்ஸ் வேண்டாம், சீக்கிரம் சொல்லு.

அப்ரஹாம்: திடீரென்று ஒரு நாள், அந்த இராஜா ஒரு அறிக்கையிட்டார், அது என்னவென்றால், தன்னிடம் உள்ள புத்தகத்தை யாரோ ஒரு மனிதர் கிழித்துவிட்டு சென்று விட்டதாக சொன்னார். மக்கள் எல்லாம் அதிர்ந்துப்போனார்கள், ஆச்சரியப்பட்டார்கள்.

அப்துல்லா: நிறுத்துடா, அது எப்படி சாத்தியமாகும்? இந்த இராஜாவிற்கு தான் சகல அதிகாரமும், சக்தியும் பாதுகாப்பும் உண்டே, பின் எப்படி ஒரு மனிதன் நிழைந்து இராஜாவிற்கு தெரியாமல் அப்புத்தகத்தை கிழிக்கமுடியும், மட்டுமல்ல, இராஜாவின் அனுமதி இல்லாமல் அதை தொடுபவன் கல்லாக மாறிவிடுவானே? இது எப்படி முடியும்?

அப்ரஹாம்: ஆனால், அந்த இராஜா மிகவும் நம்பிக்கையாகச் சொல்கிறார், தன்னிடம் உள்ள சட்டபுத்தகம் கிழிக்கப்பட்டதாம். ஒரு மனிதன் கோட்டைக்குள் நுழைந்து இதைச் செய்தானாம். இன்னொரு விஷயம் என்னவென்றால், இந்த இராஜா பொய் கூட சொல்வதில்லை. எனவே, எல்லாருக்கும் ஆச்சரியமாக உள்ளது. இப்படி இருக்கும் போது, இது எப்படி சாத்தியம் சொல்லு?

அப்துல்லா: வாய்ப்பே இல்லை, NO CHANCE.

அப்ரஹாம்: என்னை பொருத்தவரையில் இதற்கு வாய்ப்பு உள்ளது. இது சாத்தியம் என்று நான் நினைக்கிறேன்.

அப்துல்லா: முட்டாள்தனமாக பேசாதேடா! இவ்வளவு திறமையுள்ள அரசனை ஏமாற்றி, கோட்டைக்குள் நிழைந்து செல்வது என்பது முடியாத காரியம். சரி, சொல்லு, என்ன வாய்ப்பு இருக்கு?

அப்ரஹாம்: நான் சொல்வதை கவனமாக கேளு. இதற்கு இரண்டு வாய்ப்புக்கள் உள்ளதாக நான் நினைக்கிறேன்.

1) ஒரு ஏழை அல்லது தன்னைவிட பலவீனமானவன் தன் கோட்டைக்குள் நிழையும் போது, அதை அறிந்து இராஜாவே, அம்மனிதனை உள்ளே வர அனுமதி அளித்தால், அந்த மனிதன் உள்ளே வர வாய்ப்பு இருக்குமல்லவா? மற்றும் அந்த புத்தகத்தை தொட்டால் அம்மனிதன் கல்லாக மாறிவிடுவான், எனவே, இராஜாவே அந்த ஏழைமனிதனுக்கு தன் சட்டபுத்தகத்தை கிழிக்க அனுமதி அளித்தால், அந்த ஏழை அதை கிழிக்கலாம் அல்லவா?

ஆக, முதலாம் வாய்ப்பாக நான் சொல்லவருவது, அந்த இராஜாவே தன் சுயவிருப்பத்தின் படி தன் சட்டபுத்தகத்தை அந்த ஏழை விவசாயி கிழிக்க அனுமதி வழங்கி விட்டுக்கொடுப்பது தான். இப்படி விட்டுக்கொடுக்க வில்லையானால், காவலாளிகள் அவனை கோட்டையின் கதவுக்கு முன்பே அவனை கொன்று இருப்பார்கள், அப்படியே அவன் உள்ளே வந்தாலும், அப்புத்தகத்தை தொட்ட மாத்திரத்தில் கல்லாக மாறியிருப்பான்.

அப்துல்லா: இதை நான் ஏற்றுக்கொள்கிறேன். அதாவது, தன் சக்தியை பிரயோகம் செய்யவில்லையானால், தான் அந்த பலவீனமான ஏழை விவசாயி இப்படிப்பட்ட செயலை செய்யமுடியும். சரி, இரண்டாவது வாய்ப்பு என்ன?

அப்ரஹாம்: இரண்டாவது வாய்ப்பு என்னவென்றால், அந்த ஏழை விவசாயி, அந்த இராஜாவை விட சக்தியுள்ளவனாக இருக்கவேண்டும், அதாவது, கோட்டைக்கு முன்பாக உள்ள பல நூறு பேரை கொன்றுப்போடும் சக்தி உடையவனாக அவன் இருக்கவேண்டும். மற்றும் உள்ளே செல்லும் வரையில் வரும் அனேக எதிர்ப்புக்களை சமாளித்து வெற்றியுள்ளவனாக அவன் இருக்கவேண்டும்.

இன்னும் அந்த புத்தகத்தை தொட்டால் கல்லாக மாறவேண்டும் என்ற இராஜாவின் சக்தியை மிஞ்சி, அப்படி நடக்காமல் பார்த்துக்கொண்டு ஒரு புது சக்தியை பயன்படுத்தி அந்த சட்டபுத்தகத்தை கிழிக்கவேண்டும். அதாவது, இராஜாவின் சக்தியைவிட இந்த ஏழை விவசாயி சக்தியுள்ளவனாக இருக்கவேண்டும்.


அப்துல்லா: இதுவும் சரியாகத் தான் தோன்றுகிறது.

அப்ரஹாம்: அதாவது, இராஜாவிற்கு நான் சொன்ன தகுதிகள், சக்திகள் இருப்பது உண்மையானால், அந்த இராஜா, தன் புத்தகத்தை யாரோ கிழித்துவிட்டார்கள், என்றுச் சொன்னதும் உண்மையானால், இந்த இரண்டு வாய்ப்புக்கள் தவிர வேறு எந்த செயலாலும், இக்காரியத்தை செய்யமுடியாது? நீ என்ன நினைக்கிறே?

1) இராஜாவே தன் சுய விருப்பத்தின்படி தன் சட்டப்புத்தகம் கிழிக்கப்பட விட்டுக்கொடுக்கவேண்டும்

அல்லது

2) அந்த ஏழை இந்த இராஜாவை விட சக்தியுள்ளவனாக, பலசாளியாக இருக்கவேண்டும்.


அப்துல்லா: சரி, இதை நான் அங்கீகரிக்கிறேன், இப்போ இந்த கதைக்கும், யூதர்களுக்கு அல்லா இறக்கிய வேதங்களை மனிதர்கள் மாற்றினார்கள் என்று நாங்கள் சொல்வதற்கும் என்ன சம்மந்தம்? கொஞ்சம் விவரமாகச் சொல்லுடா?

அப்ரஹாம்: சில கேள்விகள் கேட்கிறேன், அதற்கு பதில் சொல்லு. குர்‍ஆனை இறக்கியது யாரு?

அப்துல்லா: அல்லா தான் குர்‍ஆனை இறக்கினார்.

அப்ரஹாம்: குர்‍ஆனை யாராவது மாற்ற முடியுமா?

அப்துல்லா: முடியவே, முடியாது, குர்‍ஆனை பாதுகாப்பதாக அல்லாவே சொல்லியுள்ளார், அவரே பொருப்பேற்று உள்ளார், எனவே, மனிதனால் எந்த ஆபத்தும் வராது?

அப்ரஹாம்: ஏன் மனிதனால் முடியாது?

அப்துல்லா: ஏனென்றால், மனிதனை விட அல்லா மிகவும் சக்தியானவர், மனிதன் ஒன்றும் செய்யமுடியாது

அப்ரஹாம்: சரி அடுத்த கேள்விக்கு வருகிறேன். முந்தைய வேதங்கள் என்று குர்‍ஆன் சொல்லும் வேதங்களை யார் இறக்கியது?

அப்துல்லா: முந்தைய வேதங்களை இறக்கியது அல்லா தான்.

குர்-ஆன் 3:84 "அல்லாஹ்வையும், எங்கள் மீது அருளப்பட்ட (வேதத்)தையும்,
இன்னும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப், அவர்களின் சந்ததியர் ஆகியோர் மீது அருள் செய்யப்பட்டவற்றையும், இன்னும் மூஸா, ஈஸா இன்னும் மற்ற நபிமார்களுக்கு அவர்களுடைய இறைவனிடமிருந்து அருளப்பட்டவற்றையும் நாங்கள் விசவாசங் கொள்கிறோம். அவர்களில் எவரொருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டமாட்டோம்;. நாங்கள் அவனுக்கே (முற்றிலும் சரணடையும்) முஸ்லிம்கள் ஆவோம்" என்று (நபியே!) நீர் கூறுவீராக.
(இன்னும் பார்க்க‌ குர்-ஆன் 2:4, 2:285)


அப்ரஹாம்: அல்லா இறக்கிய முந்தைய வேதங்களில் அல்லா என்ன சொல்லியிருந்தார்?

அப்துல்லா: முந்தைய வேதங்களில் நேர் வழியும், ஒளியும், நல்லுபதேசங்களும் இருந்தன மற்றும் அது நேர் வழிகாட்டியாகவும் இருந்தது. இதில் எந்த சந்தேகமுமில்லை.

குர்-ஆன் 5:44 நிச்சயமாக
நாம்தாம் 'தவ்ராத்'தை யும் இறக்கி வைத்தோம்;. அதில் நேர்வழியும் பேரொளியும் இருந்தன. …

குர்-ஆன் 21:105 நிச்சயமாக
நாம் ஜபூர் வேதத்தில், (முந்திய வேதத்தைப் பற்றி) நினைவூட்டிய பின்; "நிச்சயமாக பூமியை (ஸாலிஹான) என்னுடைய நல்லடியார்கள் வாரிசாக அடைவார்கள் என்று எழுதியிருக்கிறோம்.

குர்-ஆன் 5:46 இன்னும் (முன்னிருந்த) நபிமார்களுடைய அடிச்சுவடுகளிலேயே மர்யமின் குமாரராகிய ஈஸாவை, அவருக்கு முன் இருந்த தவ்ராத்தை உண்மைப்படுத்துபவராக நாம் தொடரச் செய்தோம்;
அவருக்கு நாம் இன்ஜீலையும் கொடுத்தோம்;. அதில் நேர்வழியும் ஒளியும் இருந்தன. அது தனக்கு முன்னிருக்கும் தவ்ராத்தை உண்மைப்படுத்துவதாக இருந்தது. அது பயபக்தியுடையவர்களுக்கு நேர் வழிகாட்டியாகவும் நல்லுபதேசமாகவும் உள்ளது.
(குர்-ஆன் 5:44, 21:105, & 5:46 )

அப்ரஹாம்: சரி, ரொம்ப சந்தோஷம், அல்லா இறக்கிய முந்தைய வேதங்கள் இப்போது அப்படியே உள்ளதா? அல்லது மனிதர்களால் மாற்றப்பட்டதா?

அப்துல்லா: முந்தைய வேதங்களின் வசனங்களை யூதர்கள், கிறிஸ்தவர்கள் மாற்றிவிட்டதாக அல்லா தெள்ளத்தெளிவாகச் சொல்கிறான். இதோ அந்த வசனம், குர்-ஆன் 5:41.

குர்-ஆன் 5:41 தூதரே! எவர்கள் தங்கள் வாய்களினால் 'நம்பிக்கை கொண்டோம்' என்று கூறி அவர்களுடைய இருதயங்கள் ஈமான் கொள்ளவில்லையோ அவர்களைக் குறித்தும் யூதர்களைக் குறித்தும், யார் நிராகரிப்பின் (குஃப்ரின்) பக்கம் விரைந்து சென்று கொண்டிருக்கிறார்களோ அவர்களைப் பற்றியும் நீர் கவலை கொள்ள வேண்டாம். அவர்கள் பொய்யானவற்றையே மிகுதம் கேட்கின்றனர். உம்மிடம் (இதுவரை) வராத மற்றொரு கூட்டத்தினருக்(கு உம் பேச்சுகளை அறிவிப்பதற்)காகவும் கேட்கின்றனர்.
மேலும் அவர்கள் (வேத) வசனங்களை அவற்றுக்கு உரிய இடங்களிலிருந்து மாற்றி 'இன்ன சட்டம் உங்களுக்குக் கொடுக்கப் பட்டால் அதை ஏற்றுக் கொள்ளுங்கள்;. அவை உங்களுக்கு கொடுக்கப்படா விட்டால் அதை தவிர்த்துக் கொள்ளுங்கள்' என்று கூறுகிறார்கள்;. மேலும் அல்லாஹ் எவரைச் சோதிக்க நாடுகிறானோ, அவருக்காக அல்லாஹ்விடமிருந்து (எதையும் தடுக்க) நீர் ஒரு போதும் அதிகாரம் பெறமாட்டீர். இத்தகையோருடைய இருதயங்களைப் பரிசுத்தமாக்க அல்லாஹ் விரும்பவில்லை, இவர்களுக்கு இவ்வுலகிலே இழிவும் மறுமையில், கடுமையான வேதனையும் உண்டு. ( இந்த வசனங்களையும் பார்க்கவும்: குர்-ஆன் 3:78, 2:79, 4:46 5:13)


அப்ரஹாம்: ஆக, அல்லா இறக்கிய வேதத்தை மனிதர்கள் மாற்றினார்கள், அப்படித்தானே?

அப்துல்லா: அப்படித்தான், இதில் துளியளவும் சந்தேகமில்லை.

அப்ரஹாம்: குர்‍ஆனில் சொல்லப்பட்டதை அப்படியே முஸ்லீம்கள் நம்புகிறீர்களா? அதாவது, குர்‍ஆன் வசனம் சொல்வது உண்மைத் தான் என்று நீங்கள் நம்புகிறீர்களா?

அப்துல்லா: 100 சதவிகிதம் நம்புகிறோம், குர்‍ஆனின் வசனங்கள் உண்மை, அதில் சொல்லப்பட்ட விவரங்களும் உண்மைத் தான்.

அப்ரஹாம்: இப்போது, நான் உனக்கு இதற்கு முன்னால் சொன்ன அந்த இராஜாவின் கதையோடு இந்த விவரங்களை சம்மந்தப்படுத்தி சில கேள்விகள் கேட்கிறேன். அல்லா சக்தியுள்ளவரா?

அப்துல்லா: ஆமாம்.

அப்ரஹாம்: அப்படியானால், அந்த இராஜாவைப் போல அல்லாவும் சக்தியுள்ளவர், அதாவது அந்த இராஜாவை விட வல்லமையுள்ளவர்.
இப்பொழுது நான் சொன்ன கதைக்கும், அல்லாவின் அறிக்கைக்கும் உள்ள சம்மந்தத்தைச் சொல்கிறேன் கேள்.

நான் இந்த கதையில் சொன்ன இராஜா தான் "அல்லா".
அந்த இராஜாவின் சட்டபுத்தகமே அல்லா இறக்கிய‌ முந்தைய வேதங்கள்.
அந்த ஏழை விவசாயி தான், யூதர்களும், கிறிஸ்தவர்களும்.

அந்த இராஜா சொன்னது போலவே, அல்லாவும் குர்‍ஆனில், என் முந்தைய வேதங்களை யூதர்களும், கிறிஸ்தவர்களும் மாற்றிவிட்டார்கள் என்றுச் சொல்கிறார்.

இப்போது என் கேள்விகள் என்னவென்றால்,

அல்லாவின் வேதங்களை மண்ணுக்கு சமமான மனிதர்கள் திருத்தவேண்டுமானால், அதற்கு இரண்டு காரணங்கள் இருக்கவேண்டும்.

முதலாவதாக, யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் அல்லாவை விட சக்தியுள்ளவர்களாக இருக்கவேண்டும். அப்போது தான் அல்லாவே இறக்கிய வேதத்தை அவர்கள் திருத்தமுடியும். ஒரு பலவானை கட்டி அவனை செயலிழக்க செய்யாமல் எப்படி ஒரு பலவினமானவன் அந்த பலவானுடைய வீட்டில் உள்ள பொருளை திருடமுடியும்?

இரண்டாவதாக‌, மனிதர்கள் தன் வேதத்தை திருத்த தானே அனுமதி அளித்து இருந்திருக்க வேண்டும், ஏனென்றால், குர்‍ஆனை எப்படி அல்லா பாதுகாத்தாரோ அப்படி முந்தைய வேதங்களை அல்லா பாதுகாக்கவில்லை.


என்ன அப்துல்லா கேட்டுக்கொண்டு இருக்கிறாயா?


அப்துல்லா: சொல்லுடா, கேட்டுக்கொண்டு இருக்கிறேன்.

அப்ரஹாம்: ஆகா, முந்தைய வேதங்கள் திருத்தப்பட்டது என்று குர்‍ஆன் சொல்வதால், இரண்டு குற்றச்சாட்டை நான் அல்லாவின் மீது வைக்கிறேன்.

a) அல்லா மிகவும் பலவீனமானவர், அதாவது சக்தியில்லாதவர், தன் படைப்பின் மீது வல்லமை இல்லாதவர், அதனால், தான் மனிதர்கள் திருத்தும் போது, தடுக்க திராணியில்லாமல், கையாளாகாதவராக இருந்துவிட்டார்.

b) அப்படி இலலை, இதனை நாங்கள் ஏற்கமாட்டோம், அல்லாவிற்கு சக்தி இருக்கிறது என்று முஸ்லீம்கள் சொன்னால், அல்லா வேண்டுமென்றே மக்கள் தன் வேதத்தை திருத்த அனுமதி அளித்துள்ளார்? மட்டுமல்ல, தன் முந்தைய வேத்ததை மனிதர்கள் கெடுக்க அனுமதி அளிக்கும் போது, குர்‍ஆனை மனிதர்கள் கெடுக்க அனுமதி அளித்து இருக்கமாட்டார் என்று எப்படி நம்புவது?

நண்பா, அப்துல்லாவே, உனக்கு நான் இரண்டு தெரிவுகளை தருகிறேன், நீ ஏதாவது ஒன்றை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்.

1) முதலாவது, அல்லா பலவீனமானவர், சக்தியற்றவர். ம‌ற்றும் யூத‌ர்க‌ளும் கிறிஸ்த‌வ‌ர்க‌ளும் அல்லாவை விட‌ ச‌க்தியுள்ள‌வ‌ர்க‌ள்.

அல்ல‌து

2) அல்லா ஒரு அநீதிக்கார‌ர், அநியாய‌க்கார‌ர், அவ‌ரிட‌ம் நீதி நியாய‌ம் இல்லை, த‌ன் முந்தைய‌ வேத‌த்தை அழிக்க‌விட்டு, பிந்தைய‌ வேத‌த்தை பாதுகாக்கிறார்.


இதில் நீ எதை தெரிந்தெடுத்தாலும், கிறிஸ்த‌வ‌ர்க‌ளுக்கு எந்த‌ பிர‌ச்சனையும் இல்லை.

ஒரு வேளை, இரண்டாவது தெரிவை நீ தெரிந்தெடுத்தால், இன்னும் ஒரு பிரச்சனை முளைக்கும், அதாவது, தன் முந்தைய வேதம் அழிக்க அனுமதி அளித்த ஒரு இறைவனிடம், அதாவது அல்லாவிடம் எப்படி நாம் நியாயம் நீதியை எதிர்ப்பார்ப்பது, அதே நேரத்தில், குர்‍ஆனை அவர் பாதுகாத்தார் என்று எப்படி நம்பமுடியும்? இதையும் அவர் திருத்தப்பட அனுமதி அளித்து இருக்கலாம் அல்லவா?

அந்த இராஜாவின் கதைக்கும் அல்லாவின் கதைக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. இரண்டும் ஒன்று தான்.
உன் பதில் என்ன சொல்லு?



அப்துல்லா: ....

அப்ரஹாம்: என்ன சத்தத்தை காணோம்

அப்துல்லா: இல்லேடா, இது ஒரு யோசிக்க வேண்டிய விஷயம் தான். யோசிச்சிக்கிட்டு இருக்கேன்.

அப்ரஹாம்: நீ யோசித்து முடிவு சொல்லு பரவாயில்லை. ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம் அப்துல்லா, அது என்னவென்றால், உன்னைப்போல யார் யாரெல்லாம் முந்தைய வேதங்களை மனிதர்கள் மாற்றிவிட்டார்கள் என்று பொய்யான தகவலைச் சொல்வார்களோ, அவர்கள் முதலாவது இந்த இரண்டு கேள்விகளுக்கு பதில் சொல்லட்டும்.

அல்லாவிற்கு சக்தியில்லையா அல்லது அவர் ஒரு அநியாயக்காரரா? சொல்லுங்கள்.

அவரே அனுமதி அளித்துவிட்டு, அவரே இப்போது மனிதர்கள் மீது குற்றப்படுத்தினால், நாங்கள் என்ன காதில் காலிப்பிளவர் பூவா வைத்துள்ளோம். அவர் சொல்வதையெல்லாம் கேட்டு தலை ஆட்டுவதற்கு?

முதல்லே, இறைவன் கொடுத்துள்ள மூளையை பயன்படுத்தி கொஞ்சம் யோசித்துப் பாரு. அந்த இராஜாவின் செயல்களைப் பார்த்தால், உனக்கு என்ன தோனுது, அவன் ஒரு பொய்யன் அல்லது அநியாயக்காரன். அது போல, குர்‍ஆன் வசனங்களின் படி அல்லா ஒரு பொய்யான் அல்லது அநியாயக்காரன். ஏன் பொய்யன் என்றுச் சொல்கிறேன், தனக்கு சக்தி இல்லாதிருந்தும், தான் ஒரு பலசாளி என்று சொல்லிக்கொண்டான் அல்லவா அந்த இராஜா, அப்படியானால், அந்த இராஜா(அல்லா) பொய்யன் தானே. இதை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன் என்பாயானால், அவர் ஒரு அநியாயக்காரர், தானே அழிக்கவிட்டு, தானே இப்போது ஒப்பாரி வைத்தால் என்ன அர்த்தம்.

அப்துல்லா: அல்லா பொய்யனும் இல்லை மற்றும் அநியாயக்காரரும் இல்லை. அவர் மிகவும் சக்தி வாய்ந்தவர்.

அப்ரஹாம்: அப்படியில்லையானால், இந்த அல்லாவின் பிரச்சனையை எப்படி சமாளிக்கப்போகிறீர்கள் நீங்கள்.

அப்துல்லா: சரிடா, நான் உனக்கு நாளைக்கு போன் பண்றேன். இப்போ குட் நைட்.

அப்ரஹாம்: குட் நைட், பாய்.




 

இஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்

முன் பக்கம் செல்ல

HOME PAGE

தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்

1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1

2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2

3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3

4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4

பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்

1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1

2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2

பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்

1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்

2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்