இஸ்லாம் அமைதி மார்கமா? இஸ்லாம் இனிய மார்கமா? இஸ்லாம் உண்மையான மார்கமா?

ஆன்சரிங் இஸ்லாம்

பல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்

சத்தியவான் தளம் செல்ல

Thursday, March 6, 2008

காபாவிற்குள் கள்ள(அநியாய) வியாபாரம் செய்ய அனுமதியுண்டா?

Answering Islamkalvi : காபாவிற்குள் கள்ள(அநியாய) வியாபாரம் செய்ய அனுமதியுண்டா?

இஸ்லாம் கல்விக்கு(எம்.எம். அக்பர் அவர்களுக்கு) ஈஸா குர்‍ஆன் மறுப்பு


என்ன கேள்வி இது? மக்காவில் உள்ள காபாவில் மட்டுமல்ல, உலகத்தில் எந்த நாட்டிலும் சரி, கள்ள வியாபாரம், அநியாய வியாபாரத்தை செய்ய இஸ்லாம் அனுமதிப்பதில்லை என்று நீங்கள் சொல்வீர்கள். நீங்கள் சொல்வது உண்மை தான் இதை மனதில் வைத்துக்கொண்டு மேலும் படியுங்கள்.

காபாவில் ஹஜ் சமயத்தில் கீழ் கண்டவாறு கள்ள(அநியாய) வியாபாரம் நடந்தால்?

இஸ்லாமியர்கள் புனித நகரம் என்றும், புனித ஸ்தலம் என்றும் சொல்லும் மக்காவில் ஹஜ் செய்வதற்கு உலக நாடுகளிலிருந்து அதிக பணம் செலவு செய்து மக்கள் குவிந்துள்ளனர். ஹஜ் செய்ய வந்த ஒவ்வொருவருடைய உள்ளத்திலும் மட்டில்லா மகிழ்ச்சி, பல பாடுகள் பட்டு, கஷ்டப்பட்டு வந்தாலும் மக்காவில் கால் வைத்தவுடன், எல்லா கஷ்டங்களும் மறந்துவிட்டது போல ஒரு உள்ளுணர்வு. இஸ்லாமின் ஐந்தாவது கடமையை நிறைவேற்ற தனக்கு கிடைத்த வாய்ப்பை நினைத்து அல்லாவிற்கு நன்றி சொல்லிக்கொண்டு மக்காவில் வந்து இறங்கினார்கள். ஹஜ் செய்ய வந்தவர்கள் ஒரு மிருகத்தை(ஆடு, மாடு ..) பலியிடுவார்கள் என்று சொல்லப்படுகிறது, அந்த ஆடானது எந்த குறைபாடும் அற்றதாக இருக்கவேண்டும் என்றும் சொல்லப்படுகிறது.

இனி நாம் மேற்கொண்டு படிக்கப்போவது ஒரு கற்பனை என்று நினைத்துக்கொள்ளுங்கள்.

பல நாடுகளிலிருந்து வந்தவர்கள் இப்படி ஆடுகளை வாங்க வரும் போது:

1) மக்காவில் உள்ள அதிகாரிகள், யாத்திரை வந்தவர்களிடம் அநியாயமாக‌ பணம் கேட்டு வாங்கி, ஆடுகளை விற்றால்?

2) மக்கள் கொண்டு வரும் ஆடுகளில் வேண்டுமென்றே குறை உள்ளது என்று சொல்லி காபாவை கவனித்துக்கொள்ளும் அதிகாரிகள் , "தங்களிடம் ஆடுகளை வாங்கினால் தான் அது செல்லுபடியாகும், அவைகளைத் தான் அல்லாவிற்கு பலியிடவேண்டும்" என்று சொன்னால்?

3) ஒரு எடுத்துக்காட்டுக்காக, இந்திய ரூபாயின்படி 4000 மதிப்புள்ள ஒரு ஆட்டை அநியாய லாபம் வைத்து 8000 ரூபாய் என்றுச் சொல்லி விற்று அதை தங்கள் பைகளில் போட்டுக்கொண்டால்?

4) தங்களிடம் அதிக பணம் இல்லாமல்,பல ஆயிர மைல்களிலிருந்து வந்த ஏழை முஸ்லீம்களின் நிலை பற்றி காபாவின் அதிகாரிகள் கவலைப்படாமல் அவர்களை ஏமாற்றிக்கொண்டு இருந்தால்?

5) கடைசியாக, காபாவைச் சுற்றிலும் தொழுதுக்கொள்ள இருக்கும் இடத்திலும் வியாபார கடைகளை வைத்து, மக்கள் தொழுதுக்கொள்ள தடைவிதித்து இதே போல இஸ்லாமுக்கு ஏற்காத பல‌ செயல்களை செய்தால்?

இப்படியெல்லாம் நடந்தால், ஒரு முஸ்லீமாக இதை படிக்கும் நீங்கள் என்ன செய்வீர்கள்?

ஒரு வேளை இப்படி முகமதுவின்(முகமது மக்காவை ஆக்கிரமித்த பிறகு) காலத்தில் நடந்து இருந்தால்? அவர் என்ன செய்து இருப்பார்?

இப்போது தமிழ் நாட்டில் உள்ள இஸ்லாமிய அறிஞர்கள், இமாம்கள் இப்படி நடக்கிறது என்று அவர்களுக்குத் தெரிந்தால் ? என்ன செய்வார்கள்?

இப்படி அநியாயமாக வியாபாரம் செய்பவர்களை துரத்துவீர்கள் அல்லவா! காபாவை ஒரு வியாபார சந்தையாக மாற்ற அனுமதிக்கமாட்டீர்கள் அல்லவா!, ஆனால், இஸ்லாம் கல்வியில் வெளியான கட்டுரை சொல்கிறது, எம். எம். அக்பர் என்ற இஸ்லாமிய அறிஞரும், அக்கட்டுரையை தமிழாக்கம் செய்த‌ முனீப் அவர்கள் கீழ் கண்டவாறு சொல்கிறார்கள்:


1) இப்படி இறைவனுடைய இடத்தில் இப்படி அநியாயம் நடந்தால், இஸ்லாமிய நபிகள் ஒன்றும் செய்யமாட்டார்கள், செய்யக்கூடாது.

2) அந்த வியாபாரிகளை துரத்தமாட்டார்கள்

3) அவர்கள் மீது கோபம் கொள்ளமாட்டார்கள். ஏனென்றால்,

4) அல்லாவின் நபிகள்(தீர்க்கதரிசிகள்) முன்கோபம் கொள்ளமாட்டார்கள்.


அப்படி முன்கோபம் கொள்வது "நபிகள் தீமைக‌ள், பாவங்கள் புரிந்ததிற்கு சமம்", குர்‍ஆன் இதை எப்போதும் அங்கீகரிக்காது. என்று கேரள இஸ்லாமிய அறிஞர் தன் கட்டுரையில் எழுதுகிறார், இதை தேங்கை முனீப் அவர்கள் தமிழாக்கம் செய்ய‌, இஸ்லாம் கல்வி அதை வெளியிட்டுள்ளது.

இல்லையே, இஸ்லாமிய அறிஞர் எம். எம். அக்பர் இப்படி எழுதியிருக்கமாட்டரே என்று சொல்கிறீர்களா? மேற்கொண்டு அவர் என்ன எழுதினார் என்று கீழே படியுங்கள்:


இஸ்லாம் கல்வி(எம்.எம்.அக்பர்/தேங்கை முனீப் அவர்கள்) எழுதியது:

தீர்க்கதரிசிகளே தீமை புரிந்தனரா?

3. இறைத்தூதர்களின் வரலாற்றைக் கூறுமிடத்து புரோகித வர்க்கத்தின் கற்பனையில் உருவான பல அபத்தமான கருத்துக்கள் பைபிளில் நிறைந்து காணப்படுகின்றன. தங்கள் மன இச்சைகளுக்கேற்ப அவர்களின் வரலாற்றைத் திரித்து, வெளியில் சொல்வதற்கே வெட்கக் கேடான பல தீமைகளையும் தீர்க்கதரிசிகள் எனப்படுவோர் புரிந்ததாக பைபிளைத் தொகுத்தவர்கள் கதை கட்டியுள்ளனர். ...

...

6. இஸ்ரவேலரின் இரட்சகர் என பைபிள் கூறும் இயேசு கிறிஸ்து தாயை மதிக்காதவராகவும் (யோவான்: 2:5, 19:26) சகிப்புத்தன்மை இல்லாதவராகவும் (மத்தேயு 12:34, 12:39, யோவான் 8:44) முன்கோபம் உடையவராகவும் (யோவான் 2:13-17, மத்தேயு 21:19) திருமண விருந்தில் தண்ணீரை மதுவாக மாற்றி மக்களுக்குக் கொடுத்து அவர்களுக்குப் போதையூட்டியவராகவும் (யோவான் 2:1-11) அறிமுகப்படுத்துகின்றது.


Source : http://www.islamkalvi.com/religions/quran_bible_compare2.htm Formats mine



மேலே படித்த பகுதியில், "இயேசு முன்கோபம் உடையவர் என்று" எம். எம். அக்பர் சொல்கிறார்.

இதற்கு அவ‌ர் முன்வைக்கும் ஆதார வசனங்கள் இவைகள்: யோவான் 2:13-17, மத்தேயு 21:19. இந்த இரண்டு ஆதாரங்களில், முதலாவது ஆதாரமாக அவர்கள் முன்வைத்த யோவான் 2:13-17ம் வசனங்களை நான் இக்கட்டுரையில் விளக்குகிறேன். அடுத்த ஆதாரத்தை வேறு ஒரு பதிலில் தருகிறேன்.



[ நபிகள் என்பவர்கள் முன்கோபம் கொள்ளமாட்டார்கள் என்பது இவர்களின் கருத்து, "எனக்காக இந்த பெண்ணை, இந்த ஆணை யார் ஒரு கைபார்க்கப்போகிறார்கள்(கொலை செய்யப்போகிறார்கள்)?" என்று யார் சொன்னார்கள் என்று இவர்களுக்குத் தெரியும், இருந்தாலும் இப்படி அடிப்படை இல்லாத வாதங்களை முன்வைக்கிறார்கள். (இயேசு தன் தாயாகிய மரியாளை மதிக்கவில்லை என்ற இவர்களது குற்றச்சாட்டிற்கு என் பதிலை இங்கு காணலாம் : Answering IslamKalvi: இயேசு தன் தாயை அவமதித்தாரா?) இஸ்லாமிய அறிஞர்கள் எவ்வளவு அறியாமையில் இருக்கிறார்கள் என்பது இதிலிருந்து நமக்கு தெளிவாக தெரிந்துவிடும். இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், முகமது பற்றி மற்றவர்களுக்கு தெரியாது என்றே இவர்கள் நினைத்து எழுதுகிறார்கள், பேசுகிறார்கள்.]

1. வசனங்கள் யோவான் 2:13-17 என்ன சொல்கின்றன:

காபாவில் கள்ள வியாபாரம் செய்ததாக கற்பனை செய்ததிற்கும், இயேசு முன்கோபம் உடையவர் என்று எம். எம். அக்பர் அவர்கள் சொல்வதற்கும் என்ன சம்மந்தம் உள்ளது என்று குழப்பமாக உள்ளதா? முதலாவது அவர் மேற்கோள் காட்டிய பைபிள் வசனம் யோவான் 2:13-17 வரை படித்துப்பார்ப்போம். இஸ்லாமியர்கள் மக்கா மதினாவிற்கு அடுத்து "மூன்றாவது புனிதஸ்தலமாக" கருதும், எருசலேம் தேவாலயத்தில் இயேசு கோபப்பட்டது தவறு என்றும், அதுவும் இப்படிப்பட்ட தவறு ஒரு "தீர்க்கதரிசி" என்பவர் செய்ய மாட்டார் என்றும் எம். எம். அக்பர் அவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.


யோவான் 2:13. பின்பு யூதருடைய பஸ்காபண்டிகை சமீபமாயிருந்தது; அப்பொழுது இயேசு எருசலேமுக்குப் போய், 14. தேவாலயத்திலே ஆடுகள் மாடுகள் புறாக்களாகிய இவைகளை விற்கிறவர்களையும், காசுக்காரர்உட்கார்ந்திருக்கிறதையும் கண்டு, 15. கயிற்றினால் ஒரு சவுக்கையுண்டுபண்ணி, அவர்கள் யாவரையும் ஆடுமாடுகளையும் தேவாலயத்துக்குப் புறம்பே துரத்திவிட்டு,காசுக்காரருடைய காசுகளைக் கொட்டி, பலகைகளைக்கவிழ்த்துப்போட்டு, 16. புறாவிற்கிறவர்களை நோக்கி, இவைகளை இவ்விடத்திலிருந்து எடுத்துக்கொண்டுபோங்கள்; என்பிதாவின் வீட்டை வியாபார வீடாக்காதிருங்கள் என்றார். 17. அப்பொழுது, உம்முடைய வீட்டைக்குறித்து உண்டான பக்திவைராக்கியம் என்னைப் பட்சித்ததுஎன்று எழுதியிருக்கிறதை அவருடைய சீஷர்கள் நினைவுகூர்ந்தார்கள்.



இந்த வசனங்களில், நான் மேலே சொல்லப்பட்டது போலவே, பஸ்கா என்ற பண்டிகையன்று மக்கள் எருசலேம் ஆலயத்தில் கூடி தேவனுக்கு பலியிட்டு, அவரை தொழுதுக்கொள்ள வந்துள்ளார்கள். ஆனால், ஆலயத்திற்குள் யூத ஆசாரியர்கள்(ஆலயத்தை பராமரிப்பவர்கள்) ஆடுகளை, புறாக்களை விற்க ஆலயத்திற்குள் அனுமதி அளித்து, அநியாயமாக மக்களிடம் பணம் வசூலித்தார்கள், இதைக் கண்டு இயேசு கோபமுற்று வியாபாரம் செய்யும் மனிதர்களை துரத்தி, தேவனுடைய ஆலயம் என்பது தேவனுடன் உறவாடும் இடம், ஜெபிக்கும் இடம் அதை வியாபார வீடாக்காதீர்கள் என்று சொல்லி எல்லாரையும் துரத்துகிறார், இதை எம். எம். அக்பர் அவர்கள், "இயேசு முன்கோபம் உடையவர்" என்றுச் சொல்கிறார். இயேசு தேவனுக்கு பலியிடுடக்கூடாது என்று சொல்லவில்லை, ஆனால், பல மைல்கள் கடந்து தேவனை தொழுதுக்கொள்ள வரும் பிரயாணிகளிடம் அதிக பணம் வசூலிப்பதைத் தான் அவர் விரும்பவில்லை. மட்டுமல்ல, ரோம அரசாங்க நாணயத்தில் ஒரு பக்கம் ரோம அரசரின் உருவமும், அடுத்த பக்கம் ரோம கடவுளின் உருவம் இருப்பதால், யூதர்கள் ஆலய காணிக்கைக்காக தனி "நாணயம்" வைத்து இருந்தனர், ஆலயத்தில் காணிக்கை கொடுக்க விரும்புகிறவர்கள், ரோம அரசாங்க நாணயத்திற்கு பதிலாக, யூத நாணயமாக மாற்றிக்கொண்டு அதைத் தான் காணிக்கையாக சமர்பிக்கமுடியும். இப்படி நாணய மாற்றம் செய்வதற்கும் அதிக கட்டணத்த(கமிஷன்) யூத ஆசாரியர்கள் வசூலித்துள்ளனர், எனவே தான் இயேசு "காசுக்காரர்களையும்" துரத்திவிட்டார். தேவனுடைய ஆலயத்தை "வியாபார வீடாக்காதீர்கள்" என்றார்.

2. பஸ்கா பண்டிகையின் முக்கியத்துவம்: (யூதர்களைவிட முஸ்லீம்களுக்கு அதிக உரிமையாம் முகமது சொல்கிறார்)

இஸ்ரவேல் மக்கள் பல நூற்றாண்டுகள் எகிப்தில் அடிமைகளாக வாழ்ந்த போது, பல அற்புதங்கள் செய்து தேவன், மோசேயின் தலைமையின் கீழ் அவர்களை எகிப்திலிருது அழைந்துவந்தார், எகிப்திலிருந்து புறப்பட்ட நாளை நினைவு கூறும்படியாக "பஸ்காவை திருவிழாவாக, பரம்பரை பரம்பரையாக தொடர்ந்து செய்யுங்கள்" என்று தேவன் கட்டளையிட்டார். தேவாலயம் கட்டின பிற்பாடு இந்த நாளன்று பல ஊர்களிலிருந்தும், நாடுகளிலிருந்தும் யுத மக்கள் நூற்றுக்கணக்கான மைல்கள் நடந்து வந்து தேவனை எருசலேம் ஆல‌யத்தில் தொழுதுக்கொள்ள வருவார்கள்.

இப்படிப்பட்ட மக்களை ஏமாற்றி அவர்களிடம் பணம் பறிக்கும் வேலையை "தேவனுடைய சந்நிதானத்திலேயே" ஆலயத்தை பராமரிப்பவர்கள் செய்ததால், இயேசு கோபமுற்றார், இது தவறா?

1. காபாவில் இதே போல சூழ்நிலை நடந்தேறினால், நீங்கள் கோபப்படாமல் இருப்பீர்களா?

2. உங்கள் முகமது கோபப்படமாட்டாரா?

3. இஸ்லாமிய அறிஞர்கள், இமாம்கள் என்ன செய்வார்கள், அப்படி செய்யட்டும் என்று விட்டுவிடுவார்களா?

4. முக்கியமாக, எம். எம். அக்பர் அவர்கள் என்ன செய்வார்? இஸ்லாம் கல்வி தளம் நிர்வாகிகள் என்ன செய்வார்கள்? தேங்கை முனிப் அவர்கள் என்ன செய்வார்கள்? மக்காவில், காபாவில் எது நடந்தால் எனக்கென்ன என்று அப்படியே விட்டுவிடுவார்களா?


இஸ்லாமியகர்களுக்கு எப்படி பக்ரீத் பண்டிகை முக்கியமோ, அதே போல, யுத மக்களுக்கும் "பஸ்கா பண்டிகை" முக்கியம், உண்மையைச் சொன்னால், முஸ்லீம்களுக்கும் இந்த பண்டிகை முக்கியம் தான்.


பஸ்கா நாளன்று நொம்பு(உபவாசம்) இருந்த முகமது:

யூதர்கள் "தங்களை மோசே மூலமாக எகிப்திலுருந்து விடுதலையாக்கிய நாளாகிய பஸ்கா அன்று நோம்பு(உபவாசம்) இருந்தார்கள், இதைக் கண்டு யூதர்களைவிட இஸ்லாமியர்களுக்குத் தான் இந்த பஸ்கா நாளில் உபவாசம் இருப்பதற்கு அதிக உரிமை இருப்பதாகச் சொல்லி, முகமதுவும் நோம்பு இருந்தார், அதே போல தன் தோழர்களையும் நோம்பு நோற்கச் சொன்னார். பின்னர், ரம்ஜான் மாத நோம்பு கட்டளை வந்தபின்னர், இதை விட்டுவிட்டார். ஆக, பஸ்கா பண்டிகையில் முகமது நோம்பு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3397

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் மதீனா நகருக்கு வந்தபோது யூதர்கள் ஒரு நாளில் நோன்பு நோற்பதைக் கண்டார்கள் அதாவது ஆபீ _ராவுடைய (முஹர்ரம் 10வது) நாளில் (யூதர்கள்) நோன்பு நோற்று வந்ததை இப்னு அப்பாஸ்(ரலி) குறிப்பிடுகிறார்கள் - யூதர்கள், 'இது மாபெரும் நாள். மூஸா(அலை) அவர்களை இந்த நாளில் தான் அல்லாஹ் காப்பாற்றினான்; ஃபிர்அவ்னின் கூட்டத்தாரை (கடலில்) மூழ்கடித்தான். எனவே, மூஸா(அலை) அவர்கள் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் விதத்தில் நோன்பு நோற்றார்கள்" என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், 'நான் அவர்களை விட மூஸா அவர்களுக்கு, மிக நெருக்கமானவன்" என்று கூறிவிட்டு, அந்த நாளில் தாமும் நோன்பு நோற்று, தம் தோழர்களுக்கும் (உபரியான) நோன்பு நோற்கும்படி ஆணையிட்டார்கள்.

பாகம் 4, அத்தியாயம் 63, எண் 3942

அபூ மூஸா(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் மதீனா நகருக்குள் நுழைந்தார்கள். அப்போது யூதர்களில் சிலர் (முஹர்ரம் மாதம் 10ஆம் நாளான) ஆபீ _ரா நாளைக் கண்ணியப்படுத்தி அதில் நோன்பு நோற்றுவந்தார்கள். எனவே, நபி(ஸல்) அவர்கள், 'அந்த நாளில் நோன்பு நோற்க நாமே அதிக உரிமையுடையவர்கள்" என்று சொல்லி அந்த நாளில் நோன்பு நோற்கும் படி (முஸ்லிம்களுக்கு) உத்தரவிட்டார்கள்.

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4680

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்


நபி(ஸல்) அவர்கள் (மக்காவைத் துறந்து) மதீனாவுக்கு வந்தார்கள். (அங்கு) ஒதர்கள் 'ஆபீ _ரா' (முஹர்ரம் 10ஆம் நாள்) நோன்பு நோற்குக் கொண்டிருந்தார்கள். அன்றி அவர்கள், 'இது மூஸா(அலை) அவர்கள் ஃபிர்அவ்னை வெற்றிகொண்ட நாள்' என்று கூறினார்கள்.

அதற்கு நபி(ஸல்) அவர்கள் தம்தோழர்களிடம், '(ஒதர்களான) இவர்களைவிட மூஸா(அலை) அவர்களுக்கு நீங்கள்தாம் அதிக உரிமையுடையவர்கள்; எனவே, (அந்நாளில்) நீங்கள் நோன்பு நோற்பீர்களாக!' என்று கூறினார்கள். 3



நாமும் இன்று பஸ்கா கொண்டாடவேண்டும் என்று நான் சொல்லவில்லை, ஆனால், இஸ்லாமியர்களுக்கும் இந்த பண்டிகையை கொண்டாடிய உரிமை இருப்பதாக முகமது சொன்னதை முன்வைத்தேன் அவ்வளவு தான்.


3. எருசலேம் ஆலயமும்(இஸ்லாமியர்களின் கருத்துப்படி மூன்றாவது புனிதஸ்தலம் எருசலேம் ஆலயமும்) காபாவும்:

காபாவை முஸ்லீம்கள் புனிதம் என்று கருதினால், யூதர்களுக்கு எருசலேமில் உள்ள ஆலயம் புனிதம். காபாவை ஆதாம், ஆபிரகாம், இஸ்மவேல் இப்படி பலரால் கட்டப்பட்டது என்று எந்த ஆதாரமும் இல்லாமல் இஸ்லாமியர்கள் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். குர்‍ஆன் ஹதீஸ்களின் விவரங்கள் தவர ஆதாமோ, ஆபிரகாமோ காபாவை கட்டியதாக எந்த ஆதாரத்தையும் இஸ்லாமியர்கள் காட்டமுடியாது. ஆனால், எருசலேம் ஆலயம் சாலோமோனால் கட்டப்பட்டது என்று பல ஆதாரங்கள் உள்ளன. இதை குர்‍ஆனும் ஏற்றுக்கொள்கிறது.

முகமது மதினாவிற்கு செல்லும் வரை கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு அதிகமாக தினமும் தொழும் போது, தன் முகத்தை எருசலேம் ஆலயத்திற்கு நேராக (கிப்லா) வைத்தே நமாஜ் செய்தார், மற்றவர்களும் அப்படியே செய்தார்கள். காபா விக்கிரகங்களின் கொட்டகையாக இருந்தது, அப்படி விக்கிரகங்கள் காபாவில் இருக்கும் போதே முகமதுவும், மற்றவர்களும் அதற்கு நேராக நின்றே பல ஆண்டுகள் தொழுதுள்ளனர். மக்காவை முகமது ஆக்கிரமித்த பிறகு தான் காபாவில் உள்ள விக்கிரகங்களை நீக்கினார். அதாவது இஸ்லாமிய ஆரம்ப வருடங்களில் முதல் பாதியை(10 - 12 வருடங்கள்) எருசலேமை நோக்கியே முஸ்லீம்கள், முகமதுவோடு சேர்ந்து நமாஜ் செய்தனர். அடுத்த பாதியை 360 விக்கிரகங்கள் இருக்கும் காபாவை நோக்கியே நமாஜ் செய்தனர்.

ஆக, காபாவை விட அதிக மேன்மை எருசலேம் ஆலயத்திற்கு இருக்கிறது. இப்படிப்பட்ட இடத்தை யூத ஆசாரியர்கள் வியாபார இடமாக மாற்றியதை இயேசு விரும்பவில்லை. தேவனுடைய ஆலயம்(உங்களுக்கு புரியும் படி சொல்லவேண்டுமானால், சாலோமோனால் அல்லாவிற்கு கட்டிய ஆலயம்) இப்படி வியாபார சந்தையாக மாற்றப்பட்டு இருக்கும் போது, "இயேசு சும்மா பார்த்துக்கொண்டு இருப்பாரா?"

[இப்படி இயேசு செய்தார் என்றுச் சொல்லி, இஸ்லாமின் ஜிஹாதிற்கு பரிந்துப்பேசாதீர்கள், இயேசு கையில் கத்தி எடுக்கவில்லை, அவதூறு வார்த்தைகளை பேசவில்லை, சண்டை போடவில்லை, தன் சீடர்களுக்கு இவர்களை எனக்காக கொன்று வாருங்கள் என்று கட்டளையிடவில்லை]

காபாவை வியாபார சந்தையாக மாற்றினால் நீங்கள் சும்மா இருப்பீர்களா?

அதுவும் ஹஜ் செய்யப்படும் போது, இறைவன் சம்மந்தப்பட்ட பொருட்களை அநியாய விலைக்கு விற்க அனுமதி உண்டா? சிந்தித்துப்பாருங்கள்.


ஏதோ அறைகுறையாக படித்தோமா, எழுதினோமா என்று இல்லாமல், ஏன் எப்படி எதற்கு இயேசு இப்படி செயல்பட்டார் என்று சிந்தித்துப்பாருங்கள்.


4. கோபமே படக்கூடாது என்று பைபிள் சொல்கிறதா?

கோபம் படக்கூடாது என்று பைபிள் சொல்லவில்லை, கோபம் வரும் போது, பாவம் செய்யாமல் இருங்கள் என்று தான் சொல்கிறது.


எபேசியர்: 4:26. நீங்கள் கோபங்கொண்டாலும் பாவஞ்செய்யாதிருங்கள், சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னாக உங்கள் எரிச்சல் தணியக்கடவது;



கோபப்படுவது தவறில்லை, ஆனால், அதை சரியான விதத்தில் கையாள வேண்டும். கோபத்தில் எடுக்கும் முடிவுகள் நம் வாழ்க்கையை சில நேரங்களில் அழித்துவிடுகிறது, அதை சரியாக கையாளவேண்டும் என்று தான் இந்த வேத வசனம் சொல்கிறது.

இந்த நேரத்தில் அரிஸ்டாட்டில் சொன்ன ஒரு வாக்கியத்தை கவனிப்பது நல்லது.


"எல்லாருக்கும் கோபம் வரும், இது சுலபம் தான். ஆனால், சரியான நபரிடம், சரியான நேரத்தில், சரியான காரணத்திற்காக, சரியான விதத்தில் நம் கோபத்தை வெளிப்படுத்துவது தான் மிகவும் கடினமானது மற்றும் அது நம் சக்திக்கு அப்பாற்பட்டது" அரிஸ்டாட்டில்

Aristotle: "Anyone can become angry - that is easy, but to be angry with the right person at the right time, and for the right purpose and in the right way - that is not within everyone's power and that is not easy." Source: http://thinkexist.com/quotation/anyone_can_become_angry-that_is_easy-but_to_be/12809.html


இயேசு ஏன் கோபப்பட்டார்? என்பதற்காக காரணத்தை இன்னும் தெளிவாக அறிந்துக்கொள்ள GodQuestions.org என்ற தளத்தில் கொடுக்கப்பட்ட பதிலை கிழே கொடுக்கின்றேன்.

1) His anger had the proper motivation . In other words, He was angry for the right reasons. Jesus' anger did not arise from petty arguments or personal slights against Him. There was no selfishness involved.

2) His anger had the proper focus. He was not angry at God or at the "weaknesses" of others. His anger targeted sinful behavior and true injustice.

3) His anger had the proper supplement. Mark 3:5 says that His anger was attended by grief over the Pharisees' lack of faith. Jesus' anger stemmed from love for the Pharisees and concern for their spiritual condition. It had nothing to do with hatred or ill will.

4) His anger had the proper control . Jesus was never "out of control," even in His wrath. The temple leaders did not like His cleansing of the temple (Luke 19:47), but He had done nothing amiss. He controlled His emotions; His emotions did not control Him.

5) His anger had the proper duration. He did not allow His anger to turn into bitterness; He did not hold grudges. He dealt with each situation properly, and He handled anger in good time.

6) His anger had the proper result . Jesus' anger had the inevitable consequence of godly action. Jesus' anger, as with all His emotions, was held in check by the Word of God; thus, Jesus' response was always to accomplish God's will.

Source: http://www.gotquestions.org/Jesus-angry.html

இயேசு தன் கோபத்தை சரியான நேரத்தில்(பஸ்கா பண்டிகை),
சரியான நபர்கள் மீது( அநியாயம் செய்யும் வியாபாரிகள் மீது),
சரியான காரணத்திற்காக( தேவாலயத்தை வியாபார இடமாக மாற்றியதால்) மற்றும்
சரியான விதத்தில்(ஒரு சாட்டையை உண்டுபண்ணி,வியாபாரிகளை துரத்திவிட்டார், கத்தி எடுத்துக்கொண்டு அவர்களை தாக்க முயலவில்லை )
வெளிப்படுத்தினார்.


5. முகமது கோபப்பட்டதாக உள்ள விவரங்கள்:

சரியான காரணத்திற்கு இயேசு கோபப்பட்டதற்கு "அவர் முன்கோபமுள்ளவர்" என்று பைபிள் சொல்கிறது என்று எழுதும் இஸ்லாமிய அறிஞர்களே:

a) உங்கள் முகமது கோபப்படமாட்டாரா?

b) கோபம் கொள்ளாமலா கொலைகள், கொள்ளைகள், யுத்தங்கள் செய்தார் முகமது?

c) எனனவோ, உலகத்திலேயே முகமது தான் "சமாதானப் புறா" என்பது போல எழுதுகிறீர்கள்?


இதோ தன்னை "எதிர்த்தவர்களின் இரத்தம் யார் குடிப்பார்கள்?" என்று கேட்ட முகமதுவின் உண்மை நிலை: கோபப்படாமலா இந்த வார்ததைகளை அவர் சொல்லியிருப்பார்? இது உங்களுக்கு எப்படி தோன்றுகிறது, சிந்தித்துப்பாருங்கள்:

1.முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்(MUHAMMAD'S USE OF TORTURE)


2. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்

"எனக்காக இந்த முட்டாளை யார் ஒரு கைபார்க்கப்போகிறீர்கள்?" என்று நபி கேட்டார். இதைக்கேட்டு, சலிம் பி. உமர் சென்று அபு அபக்கை கொன்றுவிட்டு வந்தான்.

அந்த பெண் சொன்னதை நபி கேள்விப்பட்டவுடனே, "எனக்காக இந்த மர்வானின் மகளை யார் பூமியிலிருந்து நீக்கப்போகிறார்கள்?" என்று கேட்டார். அப்போது "உமர் பி. அதிய அல்கத்மி" என்பவர் நபியோடு இருந்ததால், நபி சொன்னதை கேட்டுக்கொண்டு இருந்தார், மற்றும் அன்று இரவே, அந்த பெண்ணின் வீட்டிற்குச் சொன்று, அவளை கொன்றுவிட்டார். மறுநாள் காலை அவர் நபியிடம் வந்து, அவர் என்ன செய்தார் என்றுச் சொன்னார். அதற்கு நபி "ஓ உமர், நீ இறைவனுக்கும் அவரது நபிக்கும் உதவி புரிந்தாய்!" என்றார்.



முகமது கோபப்பட்டதாக இஸ்லாமிய தளங்களில்(ஹதீஸ்களில்) உள்ள சில ஆதாரங்கள்:

கீழே கொடுக்கப்பட்ட விவரங்களை படித்துப்பாருங்கள், முகமது ஏன் கோபப்பட்டார் என்று இஸ்லாமிய தளம் ஒன்று சொல்லியுள்ளது, ஹதீஸ்களும் சொல்கின்றன. இந்த விவரத்தை நான் ஏன் இங்கு குறிப்பிடுகிறேன் என்றால், "நியாயமான காரியங்களில் இயேசு கோபப்பட்டதை பெரிது படுத்தி, அது தவறு என்றுச் சொல்லும் இஸ்லாமியர்கள், முகமது எந்த காரணங்களுக்காக கோபப்பட்டுள்ளார் என்றுப் பாருங்கள்."

நீங்கள் சொல்லலாம், கீழே உள்ள ஹதீஸ்கள் படி முகமது கோபப்பட்டது நியாயமான காரணங்கள் என்று, அதைத் தான் நானும் சொல்கின்றேன், முகமது கோபப்பட்ட காரணங்களை விட இயேசு கோபப்பட்ட காரணம் இன்னும் வலியது என்பதை நான் உங்கள் எல்லாருக்கும், இஸ்லாம் கல்வி தளத்திற்கும், எம். எம். அக்பர், தேங்கை முனீப் அவர்களுக்கும் தெரிவிக்க விரும்புகிறேன். இந்த ஹதீஸ்கள் பற்றியும், முகமது கோபப்பட்ட நிகழ்ச்சிகளில் உள்ள நியாயத்தை பற்றியும் வேறு ஒரு கட்டுரையில் காணலாம்.


பாகம் 6, அத்தியாயம் 78, எண் 6110

அபூ மஸ்ஊத் உக்பா இப்னு ஆமிர்(ரலி) அறிவித்தார்.

ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து. 'இறைத்தூதர் அவர்களே!) இன்ன மனிதர் எங்களுக்குத் தொழுகையை நீட்டுவதால் நான் அதிகாலை(க் கூட்டு)த் தொழுகைக்கு (ஃபஜ்ருடைய ஜமாஅத்திற்கு)ச் செல்வதில்லை' என்று கூறினார். இதைக் கேட்டதும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஆற்றிய உரையின்போது முன் எப்போதும் இல்லாத அளவுக்குக் கடிமையாகக் கோபம் கொண்டதை கண்டேன். அப்போது அவர்கள், 'மக்களே! (வணக்க வழிபாடுகளில்) வெறுப்பை ஏற்படுத்துகிறவர்களும் உங்களில் உள்ளனர். உங்களில் யாரேனும் மக்களுக்கு (தலைமையேற்றுத்) தொழுகை நடத்தினால் அவர் சுருக்கமாகத் தொழுகை நடத்தட்டும். ஏனெனில், மக்களில் நோயாளிகளும் முதியோரும் அலுவல் உடையோரும் இருக்கின்றனர்' என்று கூறினார்கள்.

The Prophet as a Man — 36: Things That Made the Prophet Angry

http://www.islamawareness.net/Anger/prophet_angry.html

Zayd ibn Thabit reports: "The Prophet chose a place where he went out at night to pray. Some men saw him doing that and they prayed with him. They came every night to do that. One night, the Prophet did not come out to join them. They started to make some noises, like little coughs, and then they raised their voices, and even threw pebbles at his door. He came out to them angry and said: "Look you people! You continued doing what you did until I thought it might be made obligatory for you. Pray in your own home,because the best prayer a person can offer is that he offers at home, except for obligatory prayers." (Related by Al-Bukhari, Abu Dawood and Al-Nassaie).

The Prophet might get angry at something said or done by one of his companions, which suggests the violation of God's law. Zayd ibn Khalid reports: "A man asked the Prophet about what one might find in the street, without knowing its owner. What to do with it. The Prophet said to him: 'Publicize it for a year, and then make sure to know its description and spend it. Should its owner come up, give it back to him.' The man said: 'What about a lost sheep?' The Prophet said: 'It belongs to you, your brother or the wolf.' The man further asked: 'What about a lost camel?' The Prophet's face was reddened with anger at this question, then he said to the man: 'What do you want with it? It has its own hoofs and drink until its owner finds it.'" (Related by Al-Bukhari, Muslim, Abu Dawood, Al-Tirmidhi and Ibn Majah).



6. எம். எம். அக்பர் "இயேசுவிற்கு முன்கோபம்" என்றுச் சொல்கிறார், அது உண்மையா?


எம்.எம்.அக்பர் அவர்கள் "இயேசு முன்கோபமுள்ளவர் என்றுச் சொல்கிறார்கள்", அதாவது முன்கோபமென்றால், ஒரு நிகழ்ச்சியை கண்டமாத்திரத்தில், முன் பின் யோசிக்காமல் கோபப்படுவது என்று பொருள். எம். எம். அக்பர் அவர்கள் கவனிக்க தவறிய ஒரு விவரம் என்னவென்றால், "இயேசு அந்த எருசலேம் ஆலத்தைச் சுற்றியே" தன் முப்பது வருடங்கள் "நாசரேத்து" என்னும் ஊரில் வாழ்ந்துள்ளார். நாசரேத்துக்கும் எருசலேமுக்கும் இடையே 80-90 மைல்கள் தூரம் உள்ளது என்று கணக்கிடப்படுகிறது.

ஒவ்வொரு யூத ஆண் மகனும் ஒரு வருடத்தில் 3 முறை எருசலேம் தேவாலயத்திற்கு வரவேண்டும் என்பது தேவனிடம் கட்டளை.


யாத்திராகமம் 34:23 வருஷத்தில் மூன்றுதரம் உங்கள் ஆண்மக்கள் எல்லாரும் இஸ்ரவேலின் தேவனாயிருக்கிற கர்த்தராகிய ஆண்டவரின் சந்நிதியில் வரக்கடவர்கள்.



இதன் படி பார்த்தால், 33 வருடங்களில் 99 முறை எருசலேமுக்கு வந்து இருந்திருப்பார், இயேசு மோசேயின் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்ற வந்தேன் என்று சொல்லியுள்ளார்(மத்தேயு 5:17). மட்டுமல்ல, முதல் ஆண் குழந்தையை கர்த்தருக்காக ஒப்புக்கொடுக்க, மரியாளும் யோசேப்பும் இயேசு குழந்தையாக இருக்கும் போது, ஒரு முறை எருசலேமுக்கு வந்துள்ளார்கள், மொத்தம் குறைந்தபட்சம் 100 முறையாவது, இயேசு நாசரேத்து ஊரிலிருந்து எருசலேமுக்கு வந்து தேவாலத்தில் கால் வைத்து இருக்கவேண்டும். (குழந்தையாக இருக்கும் போது எருசலேம் வந்து என்ன பயன் என்று கேட்காதீர்கள், ஒரு யுதனுக்கும், எருசலேமுக்கும் உள்ள முக்கியத்துவத்தை கூறவந்தேன். மட்டுமல்ல, இயேசுவிற்கு 18 வயதிற்கு பின்பு 33 வயதுவரை கணக்கு எடுத்துக்கொண்டாலும், 15 ஆண்டுகளில் 45 முறை அவர் எருசலேம் தேவாலயத்தில் கால் வைத்து இருந்திருப்பார்.)

லூக்கா 2:23 முதற்பேறான எந்த ஆண்பிள்ளையும் கர்த்தருக்குப் பரிசுத்தமானதென்னப்படும் என்று கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடி அவரைக் கர்த்தருக்கென்று ஒப்புக்கொடுக்கவும், 2:24 கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தில் சொல்லியிருக்கிறபடி, ஒரு ஜோடு காட்டுப்புறாவையாவது இரண்டு புறாக்குஞ்சுகளையாவது பலியாகச் செலுத்தவும், அவரை எருசலேமுக்குக் கொண்டுபோனார்கள்.



பணம் படைத்தவர்கள் பலியாக ஆடுகளை கொடுக்கலாம், பாவம் ஏழை யோசேப்பு என்ன செய்வார், இரண்டு ஜோடி காட்டுப்புறாவையே அவரால் இயேசுவிற்காக கொடுக்கமுடிந்தது.

ஒவ்வொரு வருடமும் பஸ்காவை கொண்டாட எருசலேம் வந்த இயேசு:

இயேசு குழந்தையாக இருந்த போதிலிருந்தே, மோசேயின் பிரமாணத்தின்படி ஒவ்வொரு ஆண்டும், தன் பெற்றோரோடு எருசலேம் ஆலயத்திற்கு வந்துள்ளார்.

லூக்கா 2:41 அவருடைய தாய் தகப்பன்மார் வருஷந்தோறும் பஸ்கா பண்டிகையில் எருசலேமுக்குப் போவார்கள். 2:42 அவருக்குப் பன்னிரண்டு வயதானபோது, அவர்கள் அந்தப் பண்டிகை முறைமையின்படி எருசலேமுக்குப் போய், 2:43 பண்டிகைநாட்கள் முடிந்து, திரும்பிவருகிறபோது, பிள்ளையாகிய இயேசு எருசலேமிலே இருந்துவிட்டார்; இது அவருடைய தாயாருக்கும் யோசேப்புக்கும் தெரியாதிருந்தது.



நான் ஏன் இவ்வளவு ஆதாரங்களை கொடுக்கிறேன் என்றால், எம். எம். அக்பர் அவர்கள் சொல்வது பொய் என்பதை நிருபிக்கத்தான். அதாவது, இயேசு ஒரு முன்கோபி அல்ல. முப்பது ஆண்டுகளாக எருசலேம் ஆலயத்திற்கு வருடத்திற்கு குறைந்தபட்சம் மூன்று முறை ஒவ்வொரு ஆணும் வரவேண்டும் என்ற பிரமாணத்தின்படி வந்து, ஆலயத்தில் நடக்கும் எல்லா விவரங்களையும் தெரிந்துக்கொண்டவர். முப்பது ஆண்டுகள் ஒன்றும் செய்யாமல், தன் ஊழியம் ஆரம்பித்த பிறகு சரியான நேரம் பார்த்து அவர்களை கடிந்துக்கொள்கிறார்.

எனக்கு என்ன ஆச்சரியம் என்றால், தான் ஒரு மேசியாவாக இருந்தும்(மஸிஹா என்றால் என்ன என்றே தெரிந்துக்கொள்ளாமல், இயேசுவை குறிப்பிடும்போதெல்லாம் குர்‍ஆன் ஈஸா மஸீஹா என்று சொல்கிறது), உலகத்தில் மீது ஆதிக்கம் படைத்தவராக இருந்தும், 30 ஆண்டுகள், ஒன்றும் கடிந்துக்கொள்ளாமல் எப்படி அவரால் இருக்கமுடிந்தது என்பது தான்? [மோசேயின் பிரமாணத்தின் படி 30 ஆண்டுகள் நிரம்பியவர்கள் தான் தேவனுடைய ஆசாரியராக ஊழியம் செய்யவேண்டும் (எண் 4:3)]


ஆக, பல ஆண்டுகள் கண்டு, கேட்டுத் தான் கடைசியாக இயேசு இந்த தேவாலயத்திற்குள் உள்ள வியாபாரிகளை துரத்தினார், எம். எம். அக்பர் அவர்கள் சொன்னது மிகவும் ஒரு தவறான செய்தியாகும்.

முடிவுரை: எனக்கு அருமையான இஸ்லாமிய அறிஞர்களே, உங்களை நீங்களே கேட்டுப்பாருங்கள், மக்காவிலும் காபாவையும் "கள்ளர் குகையாக்கினால்" நீங்கள் சும்மா இருப்பீர்களோ? உங்கள் முகமது சும்மா இருந்துவிட்டு இருப்பாரோ? மக்காவை ஆக்கிரமித்தவுடன் "காபாவில்" உள்ள அனைத்துவிக்கிரகங்களையும் அவர் அகற்றினாரே, அது ஏன்? காபாவின் மீது அவருக்குள்ள நம்பிக்கை அல்லவா?

அது போலத்தான், இயேசுவிற்கும் தன் வீடு இப்படி கள்ளர் குகை ஆவதை அவர் விரும்பவில்லை, அதற்காக அவர் கையில் கத்தியை எடுக்கவில்லை, வியாபாரிகளை துரத்தினார், ஆசாரியர்களை கடிந்துக்கொண்டார், விழாவிற்கு வந்திருந்த எல்லா நாட்டு மக்களுக்கும் தேவாலயத்தின் மீதுள்ள பற்றை அதிகரிக்கச்செய்தார். தன் தேவாலயத்தின் மீதுள்ள பக்திவைராக்கியத்தால் எரிக்கப்பட்டு இருந்தார் (சங்கீதம் 69:9). எனவே, நியாயத்திற்காக கோபப்படுவது தவறல்ல, முகமதுவைப் போல அவர் மற்றவர்களை கொல்ல கோபப்படவில்லை, தன்னை கொடுமைப்படுத்தியவர்களை பற்றி பேசும் போது கூட "பிதாவே,இவர்களை மன்னியும், இவர்கள் அறியாமையில் இருக்கிறார்கள்" என்பது அவர் சித்தாந்தம். தன் கடைசி வார்த்தைகளே, தன்னை குத்தினவர்களுக்காக வேண்டிக்கொள்வது தான் என்பதிலிருந்து புரிந்துக்கொள்ளுங்கள், கிறிஸ்தவம் என்றால் எப்படி இருக்கவேண்டும் என்று அவர் விரும்புகிறார் என்பதை. தாயைப் போல பிள்ளை, நூலைப்போல சேலை என்ற பழமொழி எப்படி கிறிஸ்துவிற்கும், கிறிஸ்தவர்களுக்கும் பொருந்துகிறது என்றும், முகமதுவிற்கும், இன்றுள்ள முஸ்லீம்களுக்கும் அது அப்படியே பொருந்துகிறது என்பது சிந்தித்துப்பாருங்கள்.

[இந்த இடத்தில் இயேசு கற்களால் பிரமாண்டமாக கட்டப்பட்ட ஆலயத்தைப் பற்றி அக்கரை கொள்ளவில்லை, மாறாக மக்கள் தேவனை தொழுதுக்கொள்ளும் இடமாக அவர் அதை பார்க்கிறார், இயேசுவின் காலத்தில் இருந்த ஆலயத்தை ஏரோது புதுப்பித்துக்கொண்டு இருந்தார், பிரமாண்டமான அந்த ஆலயத்தை காட்டி ஒரு முறை சீடர்கள், ஆச்சரியப்படும் போது, இவைகள் இடிக்கப்படும், ஒரு கல்லின் மீது இன்னொரு கல் இருக்காது என்றார், அப்படியே கி.பி. 70ல் அந்த ஆலயம் அழிக்கப்பட்டது. முகமதுவின் காலத்தில் இந்த ஆலயமே எருசலேமில் இல்லை, ஆனால், முகமது ஒரு நாள் இரவு சென்று அதை பார்த்ததாகவும், இயேசுவை கண்டு பேசியதாகவும் கதை விடுகிறார்]

கடந்த நூற்றாண்டு முதல் இந்த 21ம் நூற்றாண்டு வரையிலும், உலக சமாதானத்திற்கு பங்கம் விளைவித்துக்கொண்டு இருக்கின்ற எருசலேமிலுள்ள தேவாலயத்தில், அதாவது, யூதர்களின் முதல் மற்றும் கடைசி புனித ஸ்தலமான எருசலேமிலுள்ள தேவாலயத்தில், இஸ்லாமியர்களின் மூன்றாவது புனித ஸ்தலம் என்று கருதப்படுகின்ற எருசலேமிலுள்ள தேவாலயத்தில், உலக கிறிஸ்தவர்கள் மிகவும் அதிகமாக சுற்றுலா செல்ல விரும்பக்கூடிய இடமான எருசலேமின் தேவாலயத்தில் இயேசு கோபப்பட்டு வியாபாரிகளை ஆலயத்திலுருந்து துரத்தியது தவறில்லை, மட்டுமல்ல "நபிகள்" கோபம் அல்லது முன்கோபம் கொள்ளமாட்டார்கள் என்று உங்களுடைய வாதம் மிகவும் தவறானது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.உங்களுடைய இந்த வாதம் "முகமதுவிற்கே" ஏற்றதாக இருக்காது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

முகமது தன் வாழ்நாளில் கோபப்பட்ட நிகழ்ச்சிகளை தொகுத்தோமானால், அவரது செயல்களை தொகுத்தோமானால், அவரை ஒரு "தீர்க்கதரிசி" என்று சொல்ல முஸ்லீம்கள் தயங்குவீர்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். எனவே, பைபிள் பற்றியும்,இயேசுவைப் பற்றியும் எழுதும் போது மிகவும் நேர்மையாக எழுதும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

கர்த்தருக்கு சித்தமானால், அடுத்த பதிலில் சந்திக்கும் வரை, கர்த்தரின் கிருபை உங்கள் அனைவரோடும் இருப்பதாக.ஆமென்.




1. இஸ்லாம் கல்விக்கு ஈஸா குர்ஆனின் இதர பதில்கள் :

1. எம். எம் அக்பருக்கு (இஸ்லாம் கல்விக்கு) பதில்: குர்ஆனில் குலறுபடிகள்

2. இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில் (குப்பை சடங்குகளை குப்பையில் போடச்சொன்ன இயேசு)

3. இஸ்லாம் கல்வி தள கட்டுரையும் 1 தீமோத்தேயு 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்

4. இஸ்லாம் கல்விக்கு பதில்: இயேசு த‌ன் தாயை (மரியாளை) அவமதித்தாரா?

4.1 இந்த கட்டுரைக்கு பதில் அளித்த "ஏகத்துவம்" தளத்திற்கு, உமரின் மறுமொழியை இங்கு படிக்கலாம்.


2. பி.ஜைனுல் ஆபீதீன் அவர்களுக்கு ஈஸா குர்ஆனின் பதில்கள்

3. நேசமுடன் தளத்திற்கு ஈஸா குர்ஆனின் பதில்கள்

4. டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈஸா குர்ஆனின் பதில்கள்

5. இது தான் இஸ்லாம் தளத்திற்கு ஈஸா குர்ஆனின் பதில்கள்



Isa Koran Home PageBack - Islam Kalvi Rebuttals Index Page
setstats1

இஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்

முன் பக்கம் செல்ல

HOME PAGE

தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்

1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1

2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2

3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3

4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4

பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்

1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1

2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2

பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்

1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்

2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்