இஸ்லாம் அமைதி மார்கமா? இஸ்லாம் இனிய மார்கமா? இஸ்லாம் உண்மையான மார்கமா?

ஆன்சரிங் இஸ்லாம்

பல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்

சத்தியவான் தளம் செல்ல

Showing posts with label இந்து. Show all posts
Showing posts with label இந்து. Show all posts

Friday, October 24, 2008

நான், மாறியவன் , என்னுடைய மாற்றம் ஒரு மதமாற்றம் இல்லை, ஒரு இதய மாற்றம்

ஆனந்த் மகாதேவனின்
        கருத்து

                           நான், மாறியவன்

             என்னுடைய மாற்றம் ஒரு மதமாற்றம் இல்லை, ஒரு இதய மாற்றம்

Illustration by Sorit
நான் ஒரு பிராமணணாக பிறந்தேன். நான் ஒரு புரோகிதரின் பேரனாக இருந்தேன் அவரை மிகவும் நேசித்தேன். நான் நன்றாக படித்தவன். என்னுடைய தற்போதைய பணி நான் எப்படி அறிவுள்ளவன் என்பதை குறிக்கிறது. நான் போதுமான வசதியுடையவன்  என்னுடைய வருமானம் என்னை சமுதாயத்தின் உயர் நடுத்தர மக்கள் வகையில் வைத்துள்ளது. அது என்னை உயர்ந்த ஜாதியான பணக்காரனாக மாற்றும் என்று அநுமானிக்கிறேன். வேறு விதத்தில் சொல்ல வேண்டுமென்றால் நான் ஏதோ தாழ்த்தப்பட்ட பழங்குடியோ அல்லது வறுமையில் வாடும் பரிதாபமான ஏழையோ இல்லை. இருந்த போதிலும் நான் இயேசு கிறிஸ்துவை பின்பற்றுவதை தெரிந்து கொண்டேன்.

 உலகம் என்னை நான் கிறிஸ்தவத்திற்கு மதம்மாறியவன் என்று சொல்லும். ஆனால் எனக்கு அதில் எந்த பிரச்சினையும் கிடையாது. இயேசு கிறிஸ்து மூலமாக கடவுள் மீதான என்னுடைய நம்பிக்கையை ஒரு மதம் என்பதை விட ஒரு உறவாகத்தான் பார்க்கிறேன். என்னை யாரும் பணம் கொடுத்தோ அல்லது கட்டாயமாகவோ அல்லது ஏமாற்றியோ மதம் மாற்றவில்லை என்று பதிவுகளுக்காக நான் தைரியமாக கூறமுடியும்.

  நான் ஒரு இந்தியன் என்று சொல்லும் தேசிய அடையாளத்தினிமித்தம் நான் மிகவும் பெருமைப் படுகிறேன். மேலும் என்னுடைய கலாச்சாரத்தின் படி நான் ஒரு இந்துவாக அடையாளம் காட்டப்டுவதில் மிகுந்த சமாதானம் உடையவனாக இருக்கிறேன்.  என்னுடைய பெற்றோர்கள் எனக்கு வைத்த பெயரையுடையவனாகத் தான் இருக்கிறேன். என்னுடைய நம்பிக்கையில் பங்கு வைக்கும் என் மனைவியும் தன்னுடைய இந்து பெயரோடு தான் இருக்கிறார்கள். எனக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள் அவர்கள் இருவருக்கும் நல்ல அருமையான் இந்து பெயர்களைத் தான் வைத்துள்ளோம். ஒரு வேளை இந்த பகுதியை வாசிக்கும் என்னுடைய சக பணியாளர்கள் மற்றும் மிகவும் பழக்கமானவர்களுக்கு  இது கொஞ்சம் ஆச்சரியமாக இருக்கலாம். அவர்களுக்கு என்னுடைய நம்பிக்கைப் பற்றி அறிகுறிகள் கிடையாது பொதுவாக நான் யாரிடம் அதை அறிவிக்கப் போகிறதில்லை. ஆனால் ஒரு வேளை யாராவது என்னிடம் என் வாழ்க்கையில் எப்போதும் நிரம்பியிருக்கும் மகிழ்ச்சிக்கும் நம்பிக்கைக்கும் என்ன காரணம் என்று கேட்டால் நான் மிகவும் சந்தோஷத்தோடு அவர்களிடம் அதை பகிhந்து கொள்ளுவேன்.
 
 நான் இந்த பகுதியை எழுதுவது ஒரு முக்கியமான குறிப்பை வலியுறுத்துவதற்குத்தான் - என்னுடைய மாற்றம் என்பது மதத்தை மாற்றியது அல்ல ஆனால் ஒரு இதய மாற்றம் என்பதாகும். இதை தெளிவாக விளக்குவதற்கு நான் மற்ற பிரமாண சிறுவர்களைப் போல் சென்னையில் சிறுவனாக இருந்த நாட்களுக்கு செல்ல வேண்டும்.  ஒரு சிறந்த புரோகிதராக இருந்த என்னுடைய தாத்தா என்னை எப்பொழுதும் கவரக் கூடியவராக இருந்தார். நான் அவர் மீது முழு அன்பு கொண்டாடினேன் நடக்கப் பழகுபவனாக எப்பொழுதும் அவருடன் ஒட்டியிருந்தேன். அவரும் என்னை வெகுவாக நேசித்தார். என்னுடைய எந்த விருப்பத்தையும் அவர் நிறைவேற்றாமலிருந்ததில்லை. ஆனால் என்னுடைய ஆரம்ப காலங்களில் அவர் தீவிதமாக ஈடுபட்ட வந்த மதத்தோடுகூட என்னை தொடர்புபடுத்திக் கொள்ள முடியவில்லை. பிறகு, என்னுடைய பள்ளி நாட்களில் நான் அவரோடு கூட என்னுடைய கோடை விடுமுறை செலவிட்டேன். அவருடன் காவேரியில் இறங்கி ஆசாரங்களை அனுசரித்து வந்தது போன்ற பல நினைவுகள் இன்றும் என் மனதில் மறையாமல் இருக்கிறது. நான் அநேக ஸ்லோகங்களை கற்றேன் இன்றும் அவற்றில் சில எனக்கு ஞாபகம் இருக்கிறது. ஆனால் அவற்றில் எதையும் நான் புரிந்து கொள்ளவில்லை எதுவும் என்னை கடவோளோடு இணைக்கவில்லை.

 நான் 19 வயதாக இருந்தபோது, நான் சேர்ந்து கிரிக்கெட் விளையாடும் என்னுடைய கிறிஸ்தவ நண்பன் அவனது வீட்டில் நடக்கும் ஜெபத்திற்கு அழைத்தான். ஒரு வேளை அவன் வீட்டின் ஏதாவது பார்ட்டிக்கு அல்லது  நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தாலும் நான் போயிருப்பேன். அவனது வீட்டில் அவனும் அவன் சகோதரியும் எனக்காக ஜெபித்தார்கள். அது ஒரு எளிய ஆனால் மகிழ்ச்சியான உரையாடல் கடவுளுடன்,  ஐந்து நிமிடம் தான் நீடித்தது. அதன் முழுவரிகளும் எனக்கு நினைவிலில்லை ஆனால் அவர்கள் என்னுடைய வாழ்க்கை, எதிர்காலம், தொழில் மற்றும் குடும்பத்திற்காக ஜெபித்தார்கள். அது ஒரு சாதாரண நிகழ்வுதான்- எந்த அற்புதமோ தேவ தூதர்களோ வரவில்லை. அவர்கள் செய்ததெல்லாம் தங்களுடைய ஊக்கமான கண்ணீரின் ஜெபத்தை சர்வ வல்லமையுள்ள இறைவனிடமும் அவருடைய குமாரன் இயேசு கிறிஸ்துவிடம் ஏறெடுத்தார்கள். அவர்கள் ஆமென் என்று சொன்னபோது, இயேசுவை பின்பற்ற வேண்டும் என்ற ஆவல் என் உள்ளத்தில் ஏற்பட்டதை உணர்ந்தேன்.

 இது கடவுளடனான ஒரு விசுவாச சந்திப்பு இதை புரிந்து கொள்வதற்கோ, காரணப்படுத்துவதற்கோ அல்லது விவரிப்பதற்கோ நான் முயற்சி செய்வதில்லை. நான் இதை அப்படியே ஏற்றுக்கொண்டேன் இது என்னுடைய விசுவாசம் நான் நம்புவதற்காக தெரிந்து கொண்டேன். அந்த மாலை வேளையில் நான் என்னுடைய மதத்தை மாற்றவில்லை, அதற்கு பின்னும் இல்லை. இந்து என்னுடைய அடையாளம் ஆகும் மதம் இல்லை, இன்று வரை அப்படித்தான்.

 அந்த மாலை வேளையில் நான் பெற்றுக் கொண்ட கிறிஸ்தவம் ஒரு மதம் அல்ல. மாறாக அது இயேசுவுடனான ஒரு தீவிர உறவாகும். கடந்த 15 வருடங்களாக நான் இந்த இயேசுவை இன்னும் நெருக்கமாக அறிந்து கொண்டேன். அவர் தான் பாவமற்ற பரிசுத்த தேவ குமாரன் என்பதை அறிவேன். என்னுடைய தொழில், வாழ்க்கை, கனவுகள், வெற்றி தோல்விகள் இன்னும் என் உறவுகளைப் பற்றி ஒவ்வொரு நாளும் நான் பேசக்கூடிய ஜெபிக்ககூடிய என்னுடை மிகச் சிறந்த நண்பர் என்று அறிவேன்.

 ஒரு வேளை நான் ஒரு நல்ல புத்தகத்தை படித்தாலோ, நல்ல ஒரு சினிமாவைப் பார்த்தாலோ, அல்லது ஒரு நல்ல ஹோட்டலில் சுவையான உணவை உண்டாலோ என் எல்லா நண்பர்களுக்கும் அதைப் பற்றிச் சொல்லுவேன். இயேசுவில் நான் ஒரு மிகச் சிறந்த ஆச்சரியமான நண்பனை, வழிநடத்துபவரை, தலைவரை, இரட்சகரை மற்றும் தெய்வத்தை கண்டிருக்கிறேன். நான் எப்படி அவரைப் பற்றி என்னுடைய எல்லா நண்பர்களுக்கும் சொல்லாமல் இருக்கமுடியும்? ஒரு வேளை யாராவது கவனித்து, இயேசுவில் விசுவாசம் வைக்க கடந்து வந்தால் நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன். உலகம் இதை மதமாற்றம் என்று சொல்லும் ஆனால் நான் என்னுடையதைப் போல இதை ஒரு இதய மாற்றம் என்றுதான் கூறுவேன்.

 ஆனால் நான் சொல்லுவதையெல்லாம் கேட்கும் படி யாரையும் நான் கட்டாயப்படுத்தவோ நிர்பந்திக்கவோமாட்டேன். அப்படி செய்வது என்னுடைய விசுவாசத்திற்கு அர்த்தமற்றதாகும். ஆனால்  எந்த வஞ்சனையும், கட்டாயமும், லஞ்சமும் இல்லாமல் என்னுடைய விசுவாசத்தை பிரசங்கிப்பதற்கும்,  கடைபிடிப்பதற்கும் எனக்கு சட்டப் பூர்வமாக அதிகாரமுண்டு. இப்படிப்பட்ட அடிப்படை மனித உரிமைகள் கூட ஒவ்வொரு நாளும் மிக கொடுமையான முறையில் இந்த சிறந்த இந்திய நாட்டில் மீறப்படுவதென்பது மிகவும் வேதனையளிக்ககூடியதாயுள்ளது.

 (ஆனந்த் மகாதேவன் பதிப்பாசிரியர், அவுட் லுக்) 
 
 
 
Illustration by Sorit
OPINION
I, The Convert
My conversion was not a change of religion; it was a change of heart
Anand Mahadevan
e-mail | one page format | feedback: send - read |
I was born a Brahmin and am the grandson of a priest whom I dearly loved. I am educated and my current professional standing indicates that I am reasonably intelligent. I am also affluent and my income would put me distinctly in the upper middle class bracket. I guess that would make me high-caste, rich and smart. In other words, I am not a tribal, or poor or dim-witted. And yet, I chose to become a follower of Jesus Christ.

The world would call me a convert to Christianity. I have no problems with that, though I see my faith more as a relationship with God through Jesus Christ than as a religion. And for the record, I can truthfully claim that no one financially induced or threatened or deceived me into converting to Christianity.

I am fiercely proud of my national identity as an Indian and I am completely at peace with my cultural identity as a Hindu. I retain the name my parents gave me. My wife, who also shares my faith, continues to go by her Hindu name. We have two children and we have given both distinctly Hindu names. In fact, many of my colleagues and acquaintances who may happen to read this column are likely to be surprised. They have no inkling about my faith, for I generally don't go about announcing it. But if someone does ask me the reason behind the joy and hope that is everpresent in my life, I am always delighted to share it with them.

I write this piece to make one point—that my conversion was not a change of religion but a change of heart. To explain this, I need to go back to my childhood in Chennai, similar to that of so many other Tamil Brahmin boys like me. My grandfather, every bit the virtuous priest, had enormous influence over me. I absolutely adored him and as a toddler, always clung to him. He too loved me to a fault. There was no wish of mine that he would not rush to fulfil. But even in my early, formative years I was unable to relate to the religion he fervently practiced. Later, in my school days, I once spent my summer holidays with him in Trichy. Memories of dawn walks with him, for the ritualistic dip in the Cauvery river, cow in tow, are still fresh in my memory. I learnt many shlokas, some of which I still remember. But I never understood any of it and none of it helped me connect with God.

When I was 19, a Christian friend with whom I used to play cricket invited me to his house for prayer. If he had invited me to a pub, or party, I would have gone too. At his home, he and his sister prayed for me. It was a simple yet delightful conversation with God that lasted all of five minutes. I don't remember it verbatim, but they articulated a prayer of blessing on my life, future, career and family. It was a simple affair—no miracles, no angels visiting. All they did was utter a deep human cry out to the creator God and His only son Jesus Christ. When they said Amen, I felt in my heart a desire to follow Jesus.

It was a faith encounter with God that I shall not even attempt to understand, rationalise or explain. I simply accept it. It is my faith. It is what I choose to believe. That evening I did not change my religion, for in reality I had none. Hinduism was my identity, not my religion. It still is.

The Christianity I acquired that evening is not a religion. On the contrary, it is an intensely intimate relationship with Jesus. Over the past fifteen years, I have come to know this Jesus even closer. I know Him as the pure and sinless Son of a Holy God. And I know Him as a dear friend to whom I pray and talk to every day—about my career, my dreams, successes, failures, finances and even my sexuality.

If I read a good book, watch a good movie (Rock On is terrific, mate), or eat a good meal at a new restaurant, I would naturally tell my friends about it.In Jesus, I have discovered a truly amazing friend, guide, leader, saviour and God. How can I not tell all my friends about Him? And if anyone does listen and he too comes to believe in Jesus, I am delighted. The world would call it a conversion; I call it a change of heart, like mine.

But I would never force anyone to listen to me, leave alone financially induce, coerce or con him into believing. That to me is pointless and against the very grain of my faith. But I do have a constitutional right to practice my faith and to preach it without deception, force or bribery. It pains to see such basic rights of mankind being cruelly violated every day in this great Hindu nation.

God bless India.


(Anand Mahadevan is the editor of Outlook Business.)

 

english source:http://outlookindia.com/full.asp?fodname=20081027&fname=Conversions+%28F%29&sid=5

Thursday, October 23, 2008

மதமாறுவது எனபது ஆழ்ந்த தனிப்பட்ட விருப்பமாகும்.

 
 
 
சல்மாஅலி தனது இரட்சகரை கண்டு கொண்டதாக கூறுகிறார்.

மதமாறுவது எனபது ஆழ்ந்த தனிப்பட்ட விருப்பமாகும்.  

பொதுவாக ஒருவர் அறிவது ஏதோ ஒரு தாழ்ந்த இனத்தவர்கள் அல்லது தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் தான் கிறிஸ்தவர்களால் வசீகரிக்கப்படுகிறார்கள். அவர்களுடைய எண்ணமெல்லாம் மதம் மாறுவதன்  மூலம் அவர்களுக்கு ஹிந்து மதத்தின் ஜாதிக் கொடுமையிலிருந்து விடுதலையாகமுடியும் மற்றும் ஒரு நல்ல வாழ்க்கை அமைத்துக் கொள்ள முடியும் என்பது தான்.  ஆனால் இயேசுவின் பக்கமாக இழுக்கப்படுபவர்கள் ஏதோ ஒதுக்கப்பட்ட ஜாதியைச் சேர்ந்தவர்கள் அல்ல. நல்ல படித்த மற்றும் உயர்ந்த பதிவியிலுள்ள இந்துக்கள் மற்றும் முஸ்லீம்கள் கூட தங்கள் குடும்பங்கள் மற்றும் உறவினர்களை விட்டு விட்டு முழுவதுமாக மதம் மாறிவருகின்றனர், இதனால் ஏற்படும் நிந்தைகளையும் கண்டனங்களையும் ஏற்றுக்கொள்ளவும் தயாராகிவிடுகின்றனர்.


அவர்கள் மதம் மாறுவதற்கு அவர்கள் ஒவ்வொருவருக்கும் காரணங்கள் உண்டு.  ஜெசுயிட் சமூகவியலர் ரூடால்ஃப் சி. ஹெரடியா என்பவர் தனது புத்தகமான கடவுளரை மாற்றும் இந்தியாவில் மதமாற்றம் ஒரு மறுபரிசீலனை என்ற தனது புத்தகத்தில்:  'மதம்மாறுவது என்பது ஒரு தனிப்பட்ட விருப்பத்தின் கேள்வியாகும், இது ஒருவித விருப்பு வெருப்பு, மாற்றங்கள் அல்லது ஒருவருடைய அடையாளத்தை தத்து எடுத்துக் கொள்வது போன்றதாகும்.  சில மனநிலைகள் உருவாக்கப்படுகிறது. மாற்றம் என்பது ஒரு தனிப்பட்ட வேட்கையாகும் இது மதம் மற்றும் ஆண்மீகத்துக்கும் மேலானதாகும். நேர்மறையாக இது சுதந்திரமாக அநுபவிக்கப்படுகிறது, எதிர்மறையாக இது தப்பிக்கொள்ளும் ஒரு வழியாகும்."  
 
  எனவே ஒரு கடவுளை மாற்றி இன்னொன்றை ஏற்றுக்கொள்வது என்பது என்ன? அவுட் லுக் மதம் மாறிய சிலருடன் கண்ட பேட்டி இது.

 
சயீத் அயினுல் ஹதீத் 38 
 
 படத்தயாரிப்பாளர் 

நான் புனேவில் ஒரு செல்வ செழிப்பான முஸ்லீம் குடும்பத்தில் பிறந்தேன். எனது குடும்பம் பரம்பரையாக பக்தி மார்க்கத்தில் ஊறியிருந்த குடும்பம். எனக்கு நான்கு வயதாக இருந்த போது என் பெற்றோர் பிரிந்து விட்டனர். நானும் என் அம்மாவும் எங்கள் அத்தையுடன் ஹைதராபாத்தில் குடி புகுந்தோம்.  என்னுடைய சிறுவயதிலிருந்தே நான இஸ்லாமிய பாரம்பரியங்கள் கற்றுக்கொடுக்கப்பட்டேன். குரானை அரபி மொழியில் படிக்க கற்றுக் கொண்டேன்.  ஆனால் கிறிஸ்தவர்களால் நடத்தப்பட்ட ஒரு பள்ளியில் பயின்று வந்தேன் படிப்பிலும், விளையாட்டிலும் சிறந்து விளங்கினேன். நான் ஆறாவது வகுப்பு படிக்கும் போது நானும் என் அம்மாவும் மும்பை;க்கு இடம்பெயர்ந்தோம்.


'இந்த நேரத்தில் நான் மிகவும் கவனமாக குரானை படிக்க ஆரம்பித்தேன், ஆனால் அதனுடைய  போதனைகயை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. ஆனால் கடவுள் இருக்கிறார் என்பதை நான் விசுவாசித்தேன். அது 1980ன் இறுதிப் பகுதியாக இருந்தது. என்னுடைய டீன் ஏஜ் மற்றும் இளமை பருவத்தின் தொடக்கம் மிகவும் கடினமான நாட்களாக இருந்தது. உறவு முறிவுகள், பண நெருக்கடி மற்றும் என் தந்தையின் மரணம் இவையெல்லாம் என்னை மிகவும் சிடு சிடுப்பாக மாற்றியது. ஒரு சந்தர்ப்பத்தில் நான் மெர்க்குரியை உட்கொண்டு என்னை நானே மாய்த்துக் கொள்ளவும் முடிவு செய்தேன் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தேன்.


' அது முற்றிலும் விநோதமாக இருந்தது, நான் ஒரு கையில் தற்கொலைக்கு முயற்சி செய்து கொண்டிருக்கும்போது என் சரீரத்தில் ஏதோ வித்தியாசமாக நடந்து கொண்டிருந்தது. என் ஆவி என்னை நான் படித்த பள்ளியின்- இயேசுவின் பாதத்துக்கு கொண்டு சென்றது. நான் அவருடைய பிரசன்னத்தை உணர ஆரம்பித்தேன். ஒரு வருடம் கழித்து நான் அந்தப் பள்ளிக்கு சென்றேன் அங்கே இயேசுவின் சிலை வைக்கப்பட்டிருந்த பீடத்தில் இவ்வாறாக பொறிக்கப்பட்டிருந்தது, 'நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்" என்று. அது இன்று வரை அங்கேயிருக்கிறது. பரிசுத்த ஆவியானவர் தான் என்னை இயேசு கிறிஸ்துவிடம் வழிநடத்தினார் என்று விசுவாசிக்கிறேன். இன்றுவரை கடவுள் எனக்கு அளித்த வரங்களின் படி நான் அவருடைய பணியை செய்து வருகிறேன்.       
 இயற்கையாக என்னுடைய நண்பர்கள் நான் என்னுடைய இஸ்லாமிய நம்பிக்கயை விட்டுவிட்டதை ஏற்றுக் கொள்ளவில்லை. மத குருக்கள் என்னிடம் மாறியதைக் குறித்து கேள்வி கேட்க ஆரம்பித்தனர். இவையெல்லாம் என்னை அதிகமாக தைரியப்படுத்தியது நான் மேலும் அதிகமாக குரான், ஹதீஸ் மற்றும் பைபிளை படிக்க தூண்டியது. இறுதியாக கிறிஸ்தவம்தான் என்னுடைய அழைப்பு என்று புரிந்து கொண்டேன்.


Rajeev Menon, 42
CEO, N-Able Solutions

'தகவல் தொழில் நுட்ப கம்பெனிகள் ஒரு வலிமையான செய்முறையை கடைபிடிக்கவேண்டும் இல்லாவிட்டால் டெலிவரி மோசமாக இருக்கும். அநேக உறுதிபடுத்தப்பட்ட வளர்ச்சி செய்முறைகள் உண்டு கம்பெனிகள் அவைகளை கையாண்டு தங்கள் கம்பெனிகளை தரமுள்ளதாக்கவேண்டும்"
'இது வாழ்க்கையிலும் உண்iமாயக இருக்கிறது. நான் என்னுடைய 20 களில் இருந்தபோது எனக்கு சமாதானமே இல்லாமல் நான் மிகவும் குழம்பி போயிருந்தேன். அந்த நேரத்தில் யாரோ ஒருவர் எனக்கு இயேசுவைப் பற்றிய புத்தகத்தை கொடுத்தார்கள். அது என்னுடைய வாழ்க்கையை முற்றிலும் மாற்றியது.  என்னுடைய வாழ்க்கையின் மாற்றத்தை என் பெற்றோர்கள் கண்டார்கள் எனக்கு விருப்பமான நம்பிக்கையை தேர்ந்தெடுத்துக்கொள்ளும் படி விட்டு விட்டார்கள். நான் ஜெபக்கூட்டங்களுக்கு தொடர்ந்து போய்க்கொண்டிருக்கிறேன். எல்லா விதமான விக்கிரக வணக்கத்தையும் விட்டு விட்டேன்.

Salma Ali, 33
Advertising and Public Relations consultant

'என்னுடைய தாய் ஒரு கத்தோலிக்க கிறிஸ்தவர் ஆனால் என் தந்தையை மணந்தபோது அவர் இஸ்லாமுக்கு மதம் மாறிவிட்டார். நாங்கள் தவறாமல் நமாஸ் செய்து வந்தோம். நான் தொடர்ந்து குரானைப் படித்து வந்தேன். ஆனால், கடினமான பெண்களுக்கு அளிக்கப்படும் கூட்டுத் தண்டனைகளைப் பற்றி படித்தபோது என் விசுவாசம் சிதறியது.  நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன்,  இது பெரியவர்களுடைய வார்த்தையை கேட்காத குழந்தையை திட்டுவது போலத்தான் என்று யார் என்னிடம் கூறினார்கள் என்று என் தகப்பனாரிடம் கேட்டேன்.

'என் பெற்றோர்கள் பிரிந்தவுடன் நான் என் தாயாருடன் சென்று விட்டேன். அவர்கள் பிறகு வெகு சீக்கிரம் கோபப்படும் முன்கோபியைப் போல் ஆனார்கள். ஆனால் மீண்டும் சர்ச்சுக்கு போக ஆரம்பித்தார்கள். அவர்கள் போன கூடுகைகளுக்கு நானும் போக ஆரம்பித்தேன். அங்கு நான் இஸ்லாத்தில் கேள்விப்பட்டிராதபடி மக்கள் பாடி நடனம் ஆடினார்கள்.  அப்போதிலிருந்து நான் பைபிளை படிக்க ஆரம்பித்தேன். கிறிஸ்தவம் என்னை அதிக விடுதலையாக்கும் மதமாக இருந்தது. என்னுடைய வாழ்க்கை ஒரு நிலைத்தன்மையை அடைய ஆரம்பித்தது. என்னுடைய படிப்பில் சிறப்பாக செயல்பட முடிந்தது. அன்றிலிருந்து நான் தொடர்ந்து சர்ச்சுக்கு சென்று வருகிறேன்.

Jaya Ramamurthy, 42
V-P (learning & development) with a business process outsourcing firm
 

நான் தமிழ்நாட்டில் ஒரு பிராமணக் குடும்பத்தில் பிறந்தேன். மிகவும் பக்தி நிறைந்த சூழலில் வளர்க்கப்பட்டேன். நாங்கள் எண்ணற்ற தெய்வங்களை வழிபட்டும், பல்வேறு சம்பிரதாயங்களை ஆசரித்தும் வந்தோம். ஒவ்வொரு வியாழக்கிழமையும் நாங்கள் சாயிபாபாவுக்கு சிறப்பு பூஜை செய்வோம், சுமார் 150 பக்தர்கள் வரை எங்களுடைய வீடுகளில் அந்த பூஜைக்காக கூடுவார்கள். ஆனால் இந்த ஆசாரங்கள் மூலம் என்னால் உணரமுடியவில்லை, நான் பேசும் போது எனக்கு செவிகொடுக்கும் கடவுளுடனான எந்த உறவையும் என்னால் ஏற்படுத்திக் கொள்ள முடியவில்லை.

அந்த நேரத்தில் நான் சிரங்கு வியாதியால் பாதிக்கப்பட்டேன். இயேசுவிடம் போனால் ஒரு வேளை சுகமாகிவிடுவேன் என்ற குருட்டு நம்பிக்கையில் நான் போனேன். ஆச்சரியப்படும் விதத்தில் என்னுடைய வியாதியிலிருந்து நான் சுகமானேன். வருடங்கள் பல கழித்து நான் 27 வயதாக இருக்கும் போது பைபிளை எடுத்து வாசிக்க தீர்மானித்தேன் என்னுடைய அம்மா அதை பிடுங்கி ஜன்னல் வழியாக வெளியே வீசினார்கள்.   ஆனால் நான் விட்டு விடவில்லை, என்னோடு பேசக் கூடிய ஒரு தெய்வத்தை நான் அதில் கண்டேன். அன்றிலிருந்த நான் மற்றவர்களோடு இணக்கமாக மாறிவிட்டேன், தேவ அன்பு என் வாழ்க்கையை முற்றிலும் மாற்றி விட்டது. இன்றைக்கு நான் பேசும் போது, கடவுள் என்னோடு பேசுகிறார். சர்வ வல்லமையுள்ள கடவுளுடனான என்னுடைய உறவு என் எண்ணங்கள முற்றிலும் மாற்றிவிட்டது. இப்போது மற்றவர்கள் மீது எனக்கு நல்ல மரியாதை உண்டாயிருக்கிறது.

Prabhu Guptara, 58
Executive Director (organisational development), with Wolfsberg, a UBS subsidiary

'என்னுடைய தந்தையை நான் இழந்தபோது எனக்கு 14 வயதாயிருந்தது, அப்போது ஒவ்வொன்றாக இழந்து கொண்டிருந்தோம், அது ஒரு செல்வ செழிப்பான நிலையிலிருந்து தரித்திரத்திற்கு தள்ளப்பட்ட ஒரு கொடிய நேரமாயிருந்தது அந்த வயதில் என்னால் அதை சரியாக புரிந்து கொள்ள முடியவில்லை. கடவுள் என்று ஒருவர் உயிரோடு இருந்தால் ஏன் இவ்வளவு பிரச்சினைகள் எங்களுக்கு வருகிறது என்று என்னல் புரிந்து கொள்ள முடியவில்லை.  எப்படி கடவுள் மக்கள் தீமைகளினால் நிறைந்து போவதை அனுமதிப்பார்? ஒரு இளைஞனுடன் ஏற்பட்ட சந்திப்பு என்னை இயேசுவின் பக்கமாக திருப்பியது. நான் புதிய ஏற்பாட்டை கவனமாக வாசிக்க ஆரம்பித்தேன. அப்போது, தீமை என்பது மனிதன் இறைவனை நேசிக்காததினால் ஏற்பட்ட விளைவு என்று கண்டு கொண்டேன். இயேசு ஒவ்வொரு தனி மனிதனுக்கும் சவால் விடுகிறார், அவனுடைய இயலாமையை ஒப்புக்கொள்ளும் படி. கடந்த போன வருடங்களில் நான் சுயநலவாதத்திலிருந்து மற்றவர்களுடைய தேவைகளை உணரக்கூடியவனாக பெரிய மாற்றத்திற்குள் வந்திருப்பதை உணருகிறேன்."
 
Yours, Faithfully


Salma Ali says she's found her saviour

When change of religion was all about a deeply personal choice


If one goes by popular perception, it's only people belonging to the Scheduled Castes and Scheduled Tribes who are lured by Christianity. The notion is that they give up their religion to break free from the Hindu caste system and nurture the hope that a better life awaits them after they convert. But it's not just the oppressed classes who are drawn to Jesus. Highly educated and well-placed upper-caste Hindus and Muslims have also risked censure from their immediate family and community to take the crucial plunge.

They all have their own reasons for giving up one religion for another. As Jesuit sociologist Rudolf C. Heredia puts it in his book, Changing Gods, Rethinking Conversion in India: "Conversion is a question of personal choice, it involves a rejection, a change or an adaptation of one's identity. A complex set of motivations are involved. The change is the result of a personal quest, which may be more than a religious or spiritual one. Positively, this is experienced as a liberation; negatively, it could be an escape."

So what is it like to switch from one god to another? Outlook spoke to some unlikely converts:



Syed Ainul Hadeed, 38
Filmmaker



was born in a rich Muslim family of Pune. My parents belonged to families with a rich religious heritage. When I was barely four, my parents separated. My mother and I moved in with my aunt in Hyderabad. From an early age I was taught Islamic traditions and I also learnt to read the Quran in Arabic. However, I went to schools run by the Jesuits and did well both in studies and sports. My mother and I shifted to Mumbai when I was in the sixth standard.

"It was during this period that I began carefully studying the Quran. However, I found I could not digest the teachings. Yet I did not stop believing in God's existence. This was in the late 1980s. My teenage years and early adult life were difficult—failed relationships, financial hardships and my father's death made me morose. At one point I even decided to end my life by consuming mercury. Luckily, I survived.

"It was all very strange. On the one hand I was attempting suicide, but at another level, I had an out-of-body experience. I felt my spirit drift to my old school—to the feet of Jesus Christ. I could feel his presence. After a year, I visited the school and saw the following words engraved on the pedestal on which a statue of Jesus stands to this day: 'I am the resurrection and the Life.' I believe the Holy Spirit had led me to Christ. Today, I am serving the Lord through the gifts that he has endowed me with.

"Naturally, some Muslim friends did not approve of my giving up Islam. The clerics questioned my change of faith. However, this only strengthened my resolve to study the Bible, the Quran, and the Hadiths. Finally, I realised that Christianity was my true calling."

Rajeev Menon, 42
CEO, N-Able Solutions

"Information technology companies require a strong process, otherwise there will be a delivery failure. There are proven processes of development and it is for the company to adapt them and standardise them.

"This also holds true in life. I was in my twenties and my life was a total mess.I had no peace of mind. I was going through a personal crisis. It was then that somebody gave me a book on Jesus. It slowly transformed me. My parents saw the change in me but allowed me to choose my faith. I go for prayer meetings regularly and I have renounced all forms of idol worship."

Salma Ali, 33
Advertising and Public Relations consultant

"My mother was a Catholic who converted to Islam when she married my father. We performed namaaz regularly. But my faith was shattered when I came across a verse in the Quran that prescribed corporal punishment for stubborn women. I was shocked. I asked my father, who told me that it was like chiding a child for not listening to elders.

"After my parents separated, I moved in with my mother, who had become extremely short-tempered and abusive. At the same time, she started attending church. I used to attend the congregations she went to, at which people danced and sang, something unheard of in Islam. It was then that I started reading the Bible. I found Christianity a far more liberating religion. My life became stable, and I started doing well in my studies. I have been praying every day ever since."

Jaya Ramamurthy, 42
V-P (learning & development) with a business process outsourcing firm


"Born into a Tamil Brahmin family, I was brought up in an orthodox religious environment. We worshipped numerous gods and observed various rituals. Every Thursday, we also prayed to Sai Baba. At least 150 devotees would turn up at our house for the prayer sessions. Frankly, I could not make any sense of the rituals and yearned for a relationship with a god I could talk to, a god who would listen to me when I spoke to him.

"It was around this time that I was afflicted with scabies. I decided to go for a blind date with Jesus in the hope that I would be cured. To my surprise I was rid of my ailment. Years later, at 27, I decided to read the Bible. My mother threw it out of the window. But I did not give up and discovered a god I could talk to. Ever since, I have become far more friendly, and the love of god has changed my life. Today, when I speak, God speaks to me. My relationship with the Almighty has changed my perspective. I have become more respectful towards others."

Prabhu Guptara, 58
Executive Director (organisational development), with Wolfsberg, a UBS subsidiary

"I was 14 when I lost my father and our family lost everything in the process. From prosperity to penury—it was difficult to comprehend at that age. I could not understand how there could be so much suffering if god actually existed. How could he allow people to get away with evil acts? A chance encounter with a young man turned me to Jesus. I read the New Testament carefully and realised that evil is the consequence of man not loving god. Jesus presents a challenge to every individual, asking him to acknowledge his own inadequacies. Over the years, I have found myself moving away from being a selfish person to being more sensitive (to the needs of others)."
 

Thursday, June 12, 2008

விபச்சாரத்தை ஆதரிக்கும் முஸ்லீம்கள்

விபச்சாரத்தை ஆதரிக்கும் முஸ்லீம்கள் என்ற தலைப்பை பார்த்தவுடன் எங்கே கிறிஸ்தவர்களும்,இந்துக்களும்,யூதர்களும் கூட்டு சதி செய்து எங்கள் மதத்தை வாயால் ஊதி அணைக்கப்பார்க்கிறார்கள்.ஆனால் அனைக்கவே முடியாது.என்றெல்லாம் சூழுரைத்து ஒரு கூட்டம் எழும்பக்கூடும்.

ஆனால் அவர்களுக்கு நாங்கள் சொல்லுவதெல்லாம் இது தான்.உங்களை ஊதி அணைக்க மாற்று மதத்தவர்கள் தேவையே இல்லை.உங்கள் இஸ்லாமை நீங்களே அழித்து விடுவிர்கள்.

அதைத்தான் கீழே உள்ள வீடியைவில் பார்க்கப்போகிறோம்.

தமிழகத்தில் ஏன் இந்தியாவில் உள்ள பெரும்பகுதி முஸ்லீம்கள் மதஹபுக்கள் என்னும் புத்த்கங்களை பின்பற்றுகிறவர்கள்.ஆனால் இன்றைக்கு சுமார் 25 வருடங்களுக்குள் தோன்றிய தவ்ஹீத் என்கிற பிரச்சாரகவாதிகள் அவர்கள் முன்பு பின்பற்றிய மதஹபுக்களை குப்பை என்று சொல்லி தூற்றுவதை காணலாம்.

இதை விட ஒரு படி மேலே போய் இந்த இரண்டு கூட்டத்தாரும் அடுத்தக் கூட்டத்தார் விபச்சாரத்தை ஆதரிக்கிறவர்கள் என்ற உண்மையை உலகுக்கு உணர்த்துகின்றனர்.அதைத்தான் இந்த வீடியோவில் பார்க்கப் போகிறோம்



Friday, June 6, 2008

இந்த சமுதாயத்தின் முதலைக் கண்ணீரும்,ஜெய்பூரில் சிதறிய உயிகளும்

 
 
 
ஒரு மாமியார் மருமகளின் கொடுமை தாங்காமல் கிணற்றில் விழப்போனாளாம்.  அதைக்கண்ட மருமகள் ஓடி வந்து "அத்தை, அப்படியே விழுந்துடாதீங்க. உங்க புடவையை கழட்டி வெச்சிட்டு குதிங்க.  உங்க நினைவா அந்த பட்டுப்புடவை இருக்கட்டும்.  இல்ல, அதை புடவை வீணாயிடும்!" என்று சொன்னாளாம்.

 

இந்த பழைய ஜோக் இந்த நேரத்தில் நினைவு வருகிறது.

 

துயர நேரத்தில் இந்த ஜோக்கா!  மும்பை தொடர் குண்டுவெடிப்புக்கு பல ஆண்டுகளுக்குப் பின்னால் இந்தியாவில் இப்படி ஒரு பேரிழப்புடன் ஜெய்ப்பூர் குண்டுவெடிப்பு.   அதில் சிதறிய மனித உடல் காட்சிகளும்,  எழுந்த ஓலங்களும் நம் நெஞ்சத்தில் நெருப்பாய் சுடுகின்றன.

 

இந்த அவலம் ஏன் தொடர்கிறது? இந்த அராஜகம் ஏன் நடக்கிறது? இதற்கு தீர்வுதான் என்ன என்று ஒவ்வொரு இந்தியனும் கேள்வி எழுப்புகிறான்.  ஒவ்வொரு இந்தியனும் தன்னையும் எல்லோரையும் கேட்கும் கேள்வி இதுதான்.

 

ஆனால், இந்த குண்டுவெடிப்பிற்கான நம் சகோதர முஸ்லிம்களின் எதிர்வினையைப் பார்க்கும்போது ஆத்திரமாய் இருக்கிறது.   இவர்களின் பசப்பலிலும்,  பாசாங்கிலும் இவர்களின் உண்மை மனநிலை வெளிப்படுகிறது.

 

இவர்கள் என்ன செய்ய வேண்டும்?  தொடரும் இந்த குண்டுவெடிப்புகள்,  இஸ்லாத்தின் பேரால் நடக்கும் தீவிரவாத செயல்கள்,  மானாவாரியாக மடியும் மனித உயிர்கள் இவற்றின் அடிப்படை காரணிகளை ஆராய்ந்து அதற்கான தீர்வுகளை பரிந்துரைந்திருக்க வேண்டாமா?  ஆனால், இதை எதிர்பார்த்தால் நமக்கு பெருத்த ஏமாற்றமே கிடைக்கிறது.

 

இஸ்லாமிய சமுதாயத்தின் மிகப்பெரும் இழுக்காக மாறிக்கொண்டிருக்கும் இந்த ஜிகாதி சக்திகளை முறியடிக்கும் ஒரு சமுதாய ஆர்வமும், அறைகூவலும், சுய-பரிசோதனையும் நான் இஸ்லாமிய சமுதாயத்திடம் அறவே காணவில்லை.

 

மாறாக, இந்திய இஸ்லாமியர்கள் இந்த ஈன நிலையை இல்லை என்று மறுக்கப் பார்க்கிறார்கள்.

 

இந்தியர்கள் எக்கேடு கெட்டாலும் போதும், நாம் இதில் மாட்டாமல் இருக்க வேண்டும் என்பதே இவர்களின் தலையாய கவலையாய் தெரிகிறது.  இஸ்லாமியர்கள் என்ற பேருக்கு களங்கம் வரக்கூடாதே என்றுதான் இவர்களின் முழு முயற்சியாகவும் இருக்கிறது.

 

அதனால், தொடரும் குண்டு வெடிப்புகள் அனைத்திலும் தவராமல் தென்படும் இஸ்லாமிய ஜிகாதி அமைப்புகளின் தொடர்புகள் என்னும் முழு பூசணியை கவளம் சோத்தில் மறைக்க பெரும்பாடு படுகிறார்கள்.

 

இந்த முயற்சிகள் குண்டுவெடிப்புக்கு உடனேயே ஆரம்பித்தன.  குண்டுவெடிப்பு துயர சம்பவம் நிகழ்ந்ததும் ராஜஸ்தான் இஸ்லாமிய போரம் "இறந்தவர்களில் முஸ்லிம்களும் உண்டு" என்று அறிக்கை வெளியிட்டு சதவீத கணக்கு போட்டார்கள்.

 

எதில்தான் இட ஒதுக்கீடு கணக்கு போடுவது என்று ஒரு மனசாட்சி வேண்டாமா?

 

பொது இடங்களில் நடக்கும் தீவிரவாத செயல்களில் எல்லா இனங்களும் பாகுபாடின்றி இந்தியர்கள் என்ற முறையில் பாதிக்கப்படுகிறார்கள்.  இதில் இஸ்லாமிய சதவீதத்தை தலைப்பு செய்தியாக இவர்கள் பிரகடன படுத்துவதன் உள்நோக்கம் இந்த தீவிரவாத சக்திகள் இஸ்லாமியர்களுக்கு கூட எதிரானவை என்று சாதிக்க முயலுவதுதான்.

 

ஆனால், உண்மையில் இந்த ஜெய்ப்பூர் குண்டுவெடிப்பு திட்டத்தில் முஸ்லிம்கள் பெருவாரியாக பழகும் இடங்கள் தவிர்க்கப்பட்டுள்ளதாகவே துப்பறியும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

மாறாக பொது இடங்களில் கணிசமான வியாபார அமைப்புகள் இஸ்லாமியர்கள் கையில் இருக்கின்றன.  புகழ்பெற்ற சுற்றுலா தலமான ஹவா மகல் இடத்தில் 50% கடைகள் இஸ்லாமியர்களுடையவை.  ஜொகான் பஜாரில் 35% வியாபார தளங்கள் இஸ்லாமியர்களுடையவை.  இப்படி இருக்கும்போது இஸ்லாமியர்களும் இந்த குண்டுவெடிப்பில் மடிவதில் என்ன வியப்பு இருக்க முடியும்?  இப்படி இஸ்லாமியர்களை பாதிக்கப்பட்டவர்களாக சித்தரிக்கப்படுவதன் முக்கிய நோக்கம் இந்த குண்டுவெடிப்புக்கு அந்த சமுதாயத்தின் பொறுப்பை கை கழுவுவதைத் தவிர வேறு எதுவாக இருக்க முடியும்?

 

இந்த குண்டுவெடிப்பின் நோக்கமாக இந்திய முஜாஹிதின் அமைப்பு விடுத்திருக்கும் செய்திகள் இந்த குண்டுவெடிப்பின் நோக்கமே ஒரு இஸ்லாமிய ஜிகாத் என்பது தெளிவாகிறது.

 

இந்த குண்டுவெடிப்பின் நோக்கம் "இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் இந்தியாவில் காப்பது" என்று அந்த ஜிகாதி அமைப்பு பிரகணப்படுத்தி உள்ளது.  அந்த அமைப்பு குறிப்பிடும் பிரச்சனைகளும் (குஜராத் முதலியன) இந்திய சார்புள்ளவை. இதனால், இந்த குண்டு வெடிப்பில் இந்திய இஸ்லாமிய சமுதாயத்தினர் சிலர் பங்கு இருக்கலாம் என்று விசாரிக்கப்படும் என்பது எல்லோருக்கும் தெரிகிறது.

 

இதனால் இஸ்லாமியர்கள் அவமானப்படுகிறார்கள்.  குர்ஆன் பெயரைச்சொல்லி நடந்த குண்டுவெடிப்பால் இவர்கள் அவமானப்படவில்லை. (அந்த ஜிகாதி அமைப்பு தங்கள் நடவடிக்கைக்கு குர்ஆன், ஹதீத், முகம்மது நபி அவர்களின் ஆதாரங்களைக் குறித்துள்ளது)  ஆனால்,  விசாரணைக்காக சில இஸ்லாமியர்களை அணுகினால் அது இவர்களுக்கு அவமானமாக இருக்கிறதாம்

 

இது குறித்து இஸ்லாமியர்கள் அவமானப்பட்டு அதை உண்மையில் தவிர்க்க வேண்டுமானால் அவர்கள் தங்கள் சமுதாய கட்டமைப்புகளில் ஊடுருவிய இந்த ஜிகாதி சக்திகளை எப்படி அடையாளம் கண்டு வேரறுப்பது என்பது குறித்து ஆலோசிக்கவேண்டும்.  இந்த ஜிகாதி சக்திகளுக்கு மறைமுகமாக ஆதரவு கொடுக்கும் பெரும்பான்மை இஸ்லாமிய சமுதாயத்தை எப்படி மேம்படுத்துவது என்று ஆலோசிக்க வேண்டும்.  ஆனால், வருத்தம்படும் விதமாக, இது குறித்து இஸ்லாமியர்களின் ஒரு கட்டுரை, பேச்சு, பரிந்துரை என்று எதையும் நாம் காணவில்லை.

 

மாறாக,  எல்லா குண்டுவெடிப்புகளிலும் எடுத்த அதே வழிமுறையாக, இந்த முறையும் இஸ்லாமியர்கள், குண்டுவெடிப்புக்கு உடனே, "விசாரணையில் இஸ்லாமிய சமுதாயத்தை இழுக்க கூடாது" என்று எதிர்ப்பு தெரிவித்து கூச்சல் போட ஆரம்பித்துவிட்டார்கள்.

 

 

இதனால் தடை இல்லாத விசாரணை நடம்பெறாமல் போனாலோ, விசாரணை தடம் திரும்பினாலோ,  உண்மையான தீவிரவாதிகள் தப்பினாலோ அதனால் இவர்களுக்கு சிறிதும் கவலை இல்லை!

 

ஜமாத்-ஏ-இஸ்லாமி-ஹிந்த் (JIH) கைதான முஸ்லிம் இளைஞர்கள் அப்பாவிகள் என்று இப்போதே தீர்ப்பு சொல்லி விட்டது. அதற்கான ஆதாரம் அவர்கள் இஸ்லாமியர்கள் என்பது மட்டும்தான்!  இஸ்லாமியர் என்ற ஒரே காரணத்துக்காக அவர்கள் அப்பாவிகள், தொடமுடியாதவர்கள் என்பது இவர்கள் வாதம்.

 

இதற்கு முந்தைய பல தீவிரவாத குண்டுவெடிப்பு சம்பவங்களிலும் இஸ்லாமிய அமைப்புகள் கோரசாக அய்யோ, முஸ்லிம்களை விசாரிக்கிறார்களே என்று கூச்சல் போட்டார்கள்.   பிரதமர் மன்மோகன்சிங் கிடம் முறையிட்டார்கள்.  மலேகான் முதலான குண்டுவெடிப்புகளில் மனித உரிமை அமைப்புகள் வாயிலாகவும் பல தடைகளை ஏற்படுத்தினார்கள். ஊடகங்களிலும் தடங்கல் இல்லாத விசாரணைக்கு தங்களின் எதிர்ப்பை இடை விடாமல் சொல்லிக்கொண்டே இருந்தார்கள்.

 

இதைத்தான் நான் முதலில் சொன்ன கதையோடு ஒப்பிடுகிறேன்.  மாமியார் செத்தாலும் பட்டுப்புடவை கெடாமல் இருந்தால் சரி என்கிற மருமகள் போல,  எத்தனை இந்தியர்கள் மடிந்தாலும் என் பேர் மட்டும் மாட்டாமல் இருந்தால் சரி என்ற ஒரு தேச விரோத, ஏன் மனித விரோத,  அணுகுமுறை இந்திய இஸ்லாமியர்களிடம் இருக்கிறது.

 

இதோடு நம் இந்திய இஸ்லாமியர்கள் நின்ற பாடில்லை!

 

இதற்கு ஒரு படி மேலே போய் இந்த குண்டு வெடிப்புக்கு காரணங்களையும்,  காரணமானவர்களையும் அவர்கள் தங்கள் கற்பனையில் கண்டுபிடித்து அறிவித்து விட்டார்கள்.

 

இவ்வளவு சுலபமாக இவர்கள் இந்த வழக்கை தீர்த்து விட்டது குறித்து மகிழ்ச்சி அடையாதீர்கள்.   ஏனென்றால்,  எல்லா இஸ்லாமிய தீவிரவாதத்திற்கும் இதே தீர்ப்புதான் இவர்களிடத்தில்.

 

அகில இந்திய இஸ்லாமிய தனிச்சட்ட அமைப்பின் தலைவர் இல்யாஸ் இந்த குண்டுவெடிப்பு அகில உலக சதி என்று தீர்ப்பு சொல்லி விட்டார்.  அவர் "உலகளாவிய   இஸ்லாமிய விரோத சக்திகள் முஸ்லிம்களின் பேரைக்கெடுக்க இந்துத் தீவிரவாதிகளுடன் சேர்ந்து இந்த குண்டுவெடிப்பு செய்தார்கள்" என்கிறார்.

 

"It seems some international agencies hell-bent on tarnishing the image of Islam and Muslims are conniving with Hindu extremist groups to carry out such attacks so that the entire community could be put in the dock."

 

 

"இஸ்லாமிய தீவிரவாதம்" என்கிற வரிகளை சொல்லக்கூடாது, பேசக்கூடாது என்று தீவிரமாக எதிர்க்கும் இந்த இஸ்லாமியர்கள் அதே சமயம் "இந்து தீவிரவாதம்" என்ற வரிகளை கூசாமல் பேசுவதும், எழுதுவதும் எப்படிப்பட்ட இரட்டை வேடம் என்பது ஒரு புறம் இருக்கட்டும்.  

 

விசாரணையைத் திசை திருப்பும் முயற்சிகளில் இதைவிட அபத்தமான ஒரு வழியை நான் அறிந்ததில்லை!

 

உலகெங்கிலும் நடக்கும் இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு அந்தெந்த ஊருக்கு ஏற்றாற்போல அமெரிக்கா, இஸ்ரயில் என்று காரணம் சொல்லி இந்த பிரச்சனையை பைசல் செய்துவிடும் இஸ்லாமிய அமைப்புகள், இந்தியாவில்  தீவிரவாதத்துக்கு அம்மாதிரி காரணிகள் ஏதும் இல்லாததால் இந்து-தீவிரவாதிகள் இதைச்செய்து இவர்கள் பெயரைக் கெடுக்கிறார்கள் என்கிறார்கள்.

 

மாறாக, இந்த குண்டுவெடிப்புக்கு காரணம் ஏற்ற இந்திய முஜாஹிதின் அமைப்பு விடுத்த அறிக்கையே இவர்களின் திசை திருப்பலை பொய் என்று தெளிவாக்குகிறது. முஜாஹிதின் விடுத்த ஈ-மெயில் செய்தி இந்த குண்டுவெடிப்புக்கான காரணத்தை தெளிவாக சொல்கிறது.  குர்ஆனின் வரிகளை ஆதாரமாக்கி இவர்கள் இந்த குண்டுவெடிப்பை நடத்தி இருப்பது வெளிப்படை.

 

இஸ்லாமிய தீவிரவாதம் இல்லை என்று சொல்லும் மற்ற திம்மி முஸ்லிம்களை இந்த ஜிகாதி அமைப்பே நாய்கள் என்று இழிவுபடுத்துகிறது.

 

இதனால், இந்த தீவிரவாதத்தின் அடிப்படை ஊற்று எங்கு இருக்கிறது என்று தெளிவாகிறது.

 

இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக நம் தமிழ்நாட்டில் தமுமுக ஏமாற்று அறிக்கையே வெளியிட்டிருக்கிறது.

 

இந்த குண்டுவெடிப்பின் எதிரொலியாக தமுமுக விடுத்த அறிக்கையில் இந்த தீவிரவாதிகளை தூக்கில் போடவேண்டும் என்று பரிந்துரைத்திருக்கிறார்கள்.  

 

 அடாடா, என்ன நியாயமான குமுறல் என்று ஒரு கணம் மகிழ்ந்து விடாதீர்கள்.  இதே தமுமுக தான் முகம்மது அப்ஸலின் தூக்குதண்டனையை ரத்து செய்ய தீவிரமாக போராடியது.  இந்தியாவில் அனைத்து இஸ்லாமிய அமைப்புகளும் அப்ஸலின் தூக்கு தண்டனையை எதிர்த்தன.

 

சுப்ரீம் கோர்ட்டால் "சமுதாயத்திற்கு களங்கம் மற்றும் அச்சுறுத்தல்" என்று அறிவிக்கப்பட்டு தண்டனை விதிக்கப்பட்ட ஒரு தீவிரவாதியின் தூக்கு தண்டனையை அவன் இஸ்லாமியன் என்ற ஒரே காரணத்திற்காக எதிர்த்து விட்டு (அதன் பின்னர் வந்த மற்ற தூக்கு தண்டனைகளை நிறுத்த இவர்கள் போராடவில்லை!),  இப்போது இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் இந்தியர்களின் உள்ளம் பதறிக்கொண்டிருக்கும்போது "தூக்கில் போடு" என்று அறிக்கை விடுவது கடைந்தெடுத்த இரட்டை வேடம்.

 

முதலில் ஒடும் திருடன் பின்னால் தன்னை பிடிக்க துரத்துவர்களிடமிருந்து தப்பிக்க "திருடன் பிடி பிடி" என்று கத்திக்கொண்டு ஓடுவான் இல்லையா அதுதான் இவர்களின் அறிக்கை.

 

அப்படி தீவிரவாதத்தை கண்டிப்பதாக அறிக்கை விடும் இந்திய இஸ்லாமிய அமைப்புகள் எல்லாம் அதே அறிக்கைகளில் தீவிரவாதத்துக்கு நியாயம் கற்பிக்கும் வரிகளை தவறாமல் சேர்ப்பது வழக்கம்.  இதனால் இந்த அறிக்கைகள் தீவிரவாதத்திற்கு சப்பைகட்டாகவே முடியும். 

 

அதுபோலவே,  தமுமுகவும் இதுவரை நடந்த குண்டுவெடிப்பில் கைதானவர்கள் அப்பாவிகள் என்றும் அவர்களை விடுதலை செய்து உண்மையான குற்றவாளிகளை கைது செய்திருந்தால் இப்படி குண்டுகள் வெடிக்காது என்றும் கண்டுபிடித்து அந்த அறிக்கையில் சொல்லியிருக்கிறது.   அதாவது, 'இந்து தீவிரவாதிகளை' கண்டுபிடித்து தூக்கில் போட வேண்டும்.  அப்போது குண்டுவெடிக்காது.  அப்படியே வெடித்தாலும்,  மீதமுள்ள இந்துக்களையும் தூக்கில் போடவேண்டும்.  அதாவது,  இந்தியாவில் இந்துக்கள் இருக்கும்வரை குண்டுவெடிக்கும்.  இதுதான் இவர்கள் சொல்ல வருவது.

 

இந்த ஜெய்ப்பூர் குண்டுவெடிப்பின் காரணம் வெளிப்படை.   அதை அந்த குண்டுவெடித்த அமைப்பே தெளிவுபடுத்தியிருக்கிறது.  ஆனால், இந்த உண்மையை உணர மறுத்து முக்காடு போட்டு கண்ணை மூடி முதலைக்கண்ணீர் விடும் நம் இஸ்லாமிய சகோதரர்கள் திருந்தினால் தீவிரவாதம் மடியும், இஸ்லாமிய சமுதாயம் தழைக்கும்.  மாறாக, உண்மையை உணர மறுத்தால் தீவிரவாதம் மடியும் மற்றும் இஸ்லாமிய சமுதாயமும் தனிமைப்படுத்தப்பட்டு மடியும்.

 
 

Saturday, May 24, 2008

அபூமுஹை அவர்களுக்கு உமர் பதில்: பாதை மாறிய பயணங்கள்





அபூமுஹை அவர்களுக்கு பதில்: பாதை மாறிய பயணங்கள்

மருத்துவர் ஜாகிர் நாயக் அவர்கள் ஒரு நேர்க்காணலில் "இஸ்லாமை விட்டு வெளியேறி, வேறு மதத்தை பரப்புகிறவனை, இஸ்லாம் சட்டப்படி  கொல்லவேண்டும்" என்று அவர் சொன்ன கருத்து சரியானதா என்று கேட்டு ஒரு கட்டுரை எழுதியிருந்தேன் ( Dr. ஜாகிர் நாயக் அவர்களுக்கு கேள்வி:யார் தேசத் துரோகி?)  இதற்கு அபூ முஹை அவர்கள், ஜாகிர் நாயக் அவர்கள் சொல்வது சரியானது தான் இஸ்லாமில் இப்படித்தான் சட்டம் என்று ஒரு கட்டுரையை எழுதினார் ( மதம் மாறினால் மரண தண்டனை-1) . இதற்கு நான் மறுபடியும் ஒரு மறு உத்தரவு எழுதினேன். அபூ முஹை அவர்களுக்கு உமர் பதில்: * Conditions Apply (* நிபந்தனைகளுக்கு உட்பட்டது) .

நான் சொல்லாத விவரத்தைச் சொன்னதாக, அபூமுஹை அவர்கள் கற்பனை செய்துக்கொண்டு சில விவரத்தைச் சொல்லியுள்ளார்.

இந்த கட்டுரையில் அவர் சொல்லும் குற்றச்சாட்டு:

அரசியல், ஆட்சி, இராணுவம் போன்ற நாட்டை ஆளும் சட்டம் எல்லாம் காபிர்(Non-Islam) நாடுகள் தான் உருவாக்கின, இஸ்லாம் அதை சொல்லவில்லை என்று நான் சொன்னதாக அவர் சொல்கிறார். இதை அவர் எங்கேயிருந்து எடுத்தார் என்பதை அவரிடம் தான் கேட்கவேண்டும்.

இனி அவர் என்ன எழுதினார் என்பதை கவனிப்போம்.

 

அபூமுஹை அவர்கள் எழுதியது:

மதம் மாறினால் மரண தண்டனை-3
Source:
http://abumuhai.blogspot.com/2008/05/3_12.html 

முஸ்லிம்கள் இஸ்லாம் மார்க்கத்தின் சட்டங்களைக் கூறும் போது, அது இஸ்லாத்தின் சட்டமில்லை காஃபிர்களின் சட்டம் என்று சில பிற மத நண்பர்கள் கூறுகின்றனர். இவர்களைப் பொறுத்தவரை அரசியல், ஆட்சி, இராணும் இன்னும் இவை போன்ற நாட்டைக் கட்டுப்பாட்டில் வைப்பதற்கான சட்டங்கள் அனைத்தும் இஸ்லாத்தில் சொல்லப்படவில்லை. காஃபிர்களே இச்சட்டங்களை வகுத்திருக்கின்றனர், இவையெல்லாம் காஃபிர் சட்டங்கள் என்பதால் இவற்றிலிருந்து முஸ்லிம்கள் உதாரணம் சொல்லக்கூடாது என்பது இஸ்லாத்தை விமர்சிக்கும் சிலரின் கூற்று.


அருமையான நண்பர் அபூ முஹை அவர்களே, நீங்கள் சொன்ன விவரங்கள் என் கட்டுரையில் எந்த இடத்தில் உள்ளது சிறிது விளக்குங்கள்.

காபிர் நாடுகள் தான் முதல் முதலில் அரசியல், ஆட்சி, இராணுவம்  போன்ற சட்டத்தை உருவாக்கின என்று நான் சொல்லியுள்ளேனா?

இஸ்லாம் இப்படிப்பட்ட சட்டத்தை உருவாக்கவில்லை அல்லது சொல்லவில்லை என்று நான் எங்கு சொல்லியுள்ளேன்?

ஏன் உங்கள் கட்டுரைகளை படிக்கும் அப்பாவி மக்களை (முஸ்லீம்களை) திசைத்திருப்புகிறீர்கள்.


 
அபூமுஹை அவர்கள் எழுதியது:

இவர்கள் எங்கிருந்து இவ்வாறு புரிந்து கொண்டார்கள்! அதனால் கீழ்கண்டவாறு விமர்சனத்தை எழுப்புகிறார்கள்.


11. காபிர்களின் (Non-Islam) சட்டத்தோடு, இஸ்லாம் சட்டம் சம்மந்தம் கலந்தது எப்படி?

பொதுவாக, இஸ்லாமியர்களின் ஒரு அசைக்கமுடியாத நம்பிக்கை என்னவென்றால், உலகத்தில் உள்ள அனைத்து அரசியல் சாசன மற்றும் இதர சட்டங்களை விட இஸ்லாமிய சட்டமே மேலானது, இதில் மட்டுமே மனிதர்களை நல்வழிப்படுத்தும் சட்டங்கள் உண்டு.

ஆனால், எப்போதெல்லாம், இஸ்லாமின் ஒரு சில கொடுமையான சட்டத்தை நியாயப்படுத்த இஸ்லாமிய அறிஞர்கள் விரும்புவார்களோ, அப்போதெல்லாம், தயக்கமே இல்லாமல் "காபிர்களின்" சட்டத்தை மேற்கோள் காட்டவோ அதைப்பற்றி பேசவோ தயங்க மாட்டார்கள். அது மட்டுமல்ல, இஸ்லாமிய சட்டத்தோடு சம்மந்தம் இல்லாத காபிர் சட்டத்தை ஒப்பிடுவார்கள். அப்படிப்பட்ட ஒரு ஒப்பிடுதலைத் தான் --- அவர்கள் செய்துள்ளார்கள்.

நான் மேலே சொன்ன தலைப்பே மிகவும் தெளிவாகச் சொல்கிறது. அதாவது, காபிர்களின் சட்டத்தோடு இஸ்லாமிய சட்டம் எப்படி சம்மந்தம் கலந்தது என்றேன்.காபிர்களின் சட்டம் தான் முதல், இஸ்லாமிய சட்டம் தான் அடுத்தது என்று நான் சொன்னேனா? மறுபடியும் ஒருமுறை படித்துப்பாருங்கள்.

அதாவது, காபிர்களின் சட்டம் குறைபாடுள்ளது, இஸ்லாமிய சட்டம் தான் உயர்ந்தது என்று ஓயாமல் சொல்லிக்கொள்ளும் நீங்கள், எப்படி இப்போது மட்டும் அவசியம் ஏற்படும்போது திடீரென்று இஸ்லாமிய சட்டத்தோடு, காபிர்களின் சட்டத்தை சம்மந்தப்படுத்தி பேசுகிறீர்கள் என்ற பொருளில் சொன்னேனே தவிர, நீங்கள் நினைப்பது போல் அல்ல.

 


அபூமுஹை அவர்கள் எழுதியது:

தேசத் துரோகம்

அதாவது, இராணுவ இரகசியங்களை வெளிப்படுத்துவதும், இராணுவ இரகசியங்களை எதிரி நாட்டுக்கு விற்பதும் தேசத் துரோகம். என்ற சட்டம் காஃபிர்களால் இயற்றப்பட்டது. அதனால் முஸ்லிம்கள் இதை உதாரணம் காட்டிப் பேசுவது சந்தர்ப்பவாதம் என்று இஸ்லாத்தை விமர்சிக்கும் பிற மத நண்பர்கள் சொல்கின்றனர். இவர்களின் வாதம் தவறானது. இராணுவ இரகசியங்களை அம்பலப்படுத்தக்கூடாது, இராணுவ இரகசியங்களை எதிரிகளுக்குத் தெரிவிக்கக்கூடாது என மறைமுகமாக அல்ல, நேரடியாகவே இஸ்லாமும் கண்டிக்கிறது.

இஸ்லாம் இராணுவ சட்டத்தை இயற்றவில்லை என்று நான் சொல்லவே இல்லையே, உங்களுக்கு மட்டும் இப்படி புதுமையாக தெரிகின்றது.

என் கட்டுரையை சரியாக படித்துப்பாருங்கள், எதை நான் சந்தர்ப்பவாதம் என்று சொல்கிறேன் என்று புரியும். அதாவது, மதத்தை மாறுபவனுக்கு மரண தண்டனை இஸ்லாமில் உள்ளதால், காபிர்களின் சட்டத்தை உதாரணம் காட்டும் நீங்கள், மற்ற இஸ்லாமிய சட்டத்தோடு காபிர்களின் கட்டத்தை ஒப்பிட்டுப்பேச தயாரா? என்று கேட்டேன் அவ்வளவு தான்.

 

அபூமுஹை அவர்கள் எழுதியது:

இதைப் பார்ப்பதற்கு முன்,

உலகில் எல்லா நாடுகளும் தன் நாட்டின் தகுதிக்கேற்றவாறு இராணுவம் வைத்திருக்கும். இதற்கு முஸ்லிம் நாடுகள், காஃபிர் நாடுகள் என்ற விதிவிலக்கு எதுவுமில்லை. எதிரி நாட்டுடன் சண்டையிட நேர்ந்தால் நட்பு நாட்டின் இராணுவ உதவியை நாடுவதுண்டு. இதற்கும் காஃபிர் நாடுகள், முஸ்லிம் நாடுகள் என்ற வேற்றுமை இல்லை!

இராணுவத்தில் பணியாற்றும் ஒரு சாதாரண போராளியும், வெளிப்படுத்தக்கூடாத இராணுவ இரகசியங்களை வெளிப்படுத்தினால் அது தேசத்துக்கே ஊறு விளைவிக்கும் தேசத் துரோகம் என்பதில் எந்த நாட்டின் இராணுவச் சட்டத்திலும் மாற்றுக் கருத்து இல்லை. அது காஃபிர் நாடாகவோ, முஸ்லிம் நாடாகவோ இருந்தாலும் சரியே, இராணுவ இரகசியங்களை வெளிப்படுத்துவது தேசத் துரோகம் என்றே இஸ்லாமும் கூறுகிறது.
.....
.....
.....


தேசத்துரோகத்திற்கு மரண தண்டனை கொடுப்பது தவறு என்று நான் எழுதவில்லை, தேசத்துரோகத்திற்கு இஸ்லாமிய சட்டமோ, அல்லது காபிர் நாடுகளின் சட்டமோ, மரண தண்டனை விதிப்பது தவறானது என்று கூட‌ நான் எழுதவில்லை.

ஒரு மனிதன் மதத்தை மாற்றிக்கொள்ளும்போது, அவனுக்கு மரண தண்டனை சரியா? என்பது தான் என் கேள்வி. மற்றும் மதத்தை மாற்றுபவனுக்கும், தேசத்துரோகம் செய்பனையும் ஏன் சம்மந்தப்படுத்துகிறார், ஜாகிர் நாயக் அவர்கள் என்பது தான் என் கேள்வி, அவ்வளவே.

 

அபூமுஹை அவர்கள் எழுதியது:

மேலும், இராணுவச் சட்டங்கள் காஃபிர்கள் இயற்றியது என்று தவறாக வாதமெழுப்பும் பிற மத நண்பர்களின் கவனத்திற்கு,


இராணுவம் மற்றும் தேசத்துரோகம் சம்மந்தப்பட்ட சட்டங்கள் காபிர் நாடுகள் தான் இயற்றினார்கள் என்று எங்கே நான் சொல்லியுள்ளேன்? ஏன் நான் எழுதிய கட்டுரையின் "பாதையை மாற்றி பயணத்தை" திசை திருப்ப பார்க்கிறீர்கள்?


அபூமுஹை அவர்கள் எழுதியது:

இராணுவ இரகசியங்களை எதிரிகளுக்குத் தெரியப்படுத்துவது தேசத் துரோகம் மட்டுமல்ல, இஸ்லாமிய ஆட்சியின் இராணுவப் போர் நடவடிக்கைகளை எதிரிகளுக்குத் தெரியப்படுத்துபவர் இஸ்லாத்திலிருந்து வெளியேறி வேறு மதத்தைத் தழுவி விட்டாரோ என்ற எண்ணத்தையும் ஏற்படுத்திவிடும் என்பதை ஹாத்திப் (ரலி) அவர்களின் வாக்கு மூலத்திலிருந்து அறிந்து கொள்ளலாம்.

எனவே, இஸ்லாமிய ஆட்சி என்று அறிவித்துக்கொண்ட முஸ்லிம் நாடுகளிலும் இராணுவம் உண்டு. அந்த இராணுவத்திற்கும் இஸ்லாமிய சட்டத் திட்டங்களைக் கடைபிடிக்கும் விதிகள் உண்டு. அதனால் காஃபிர்களின் சட்டத்தோடு இஸ்லாமிய சட்டம் கலந்ததாகச் சொல்வது வெறும் கற்பனை.

(தேசத் துரோகம் என்பதற்கு வேறு சில அளவுகோலையும் வைத்துள்ளனர் அவற்றையும் அடுத்துப் பார்ப்போம்)

நன்றி!

அன்புடன்,
அபூ முஹை
 

இஸ்லாமிய நாடுகளுக்கு தனியான இராணுவம் இருக்காது என்று நான் சொல்லவில்லை, அப்படி இருக்கும் இராணுவத்திற்கு தனியான இஸ்லாமிய சட்டங்கள் இருக்காது என்று கூட நான் சொல்லவில்லை.

நான் எழுதிய கட்டுரையின் பயணமெல்லாம், ஒரு மார்க்கத்தில் ஒரு குற்றத்திற்கு கொடுக்கும் தண்டனையை மற்ற மார்கத்தோடு அல்லது நாடுகளின் சட்டத்தோடு சம்மந்தப்படுத்திப் பேசும் போது, அதே குற்றத்தை ஒப்பிடவேண்டுமே ஒழிய, தலைக்கும் காலுக்கும் முடி போடக்கூடாது.

இஸ்லாமில் திருட்டிற்கு உள்ள தண்டனையை நியாயப்படுத்த நாம் முயற்சி எடுக்கும் போது, நாம் என்ன செய்யவேண்டும்? மற்ற காபிர்களின் சட்டத்தில் திருட்டிற்கு என்ன தண்டனை உண்டு என்று பார்த்து அதோடு ஒப்பிட்டால், மக்களுக்கு நன்றாக புரியும். ஒரே குற்றத்திற்கு இரண்டு மார்க்கங்களில் உள்ள தண்டனைகளை ஒப்பிட்டு பார்த்தால், நியாயமானதாக இருக்கும்.

அது போல, இஸ்லாமில் "மத மாற்றத்திற்கு" கொடுக்கும் தண்டனையை நியாயப்படுத்த விரும்பினால், மற்ற நாடுகளில் "மத மாற்றத்திற்கு" என்ன தண்டனை உண்டு என்பதை கண்டுபிடித்து ஒப்பிடவேண்டும். அதை விட்டுவிட்டு, காபிர் நாடுகளில் "எந்த குற்றத்திற்கு மரண தண்டனை" உண்டு என்று கண்டுபிடித்து அதோடு ஒப்பிட்டால் அது எப்படி சரியாக இருக்கும் என்று தான் நான் கேட்டேன்.

உடன்கட்டை ஏறுதலும், இஸ்லாமிய மத மாற்ற தண்டனையும்:

ஒரு உதாரணத்தைச் சொல்கிறேன், இந்தியாவில் பல ஆண்டுகளுக்கு முன்பு இருந்த "உடன்கட்டை ஏறுதல்" என்ற பழக்கம் ஒரு சட்டமாக இந்தியாவில் இன்று அமுலில் உள்ளது என்று கற்பனை செய்துக்கொள்ளுங்கள்.

உடன் கட்டை ஏறுதல் என்ற சட்டம் சரியானதா? கணவன் மரித்துவிட்டால் அப்பெண்ணுக்கு மறுமனத்திற்கு வாய்ப்பு அளிக்கவேண்டுமே ஒழிய, இப்படி சாகடிக்கலாமா? என்று நீங்கள் கேட்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.

இதற்கு ஒரு இந்து அறிஞர் கீழ்கண்டவாறு பதில் சொல்கிறார் என்று கற்பனை செய்துக்கொள்ளுங்கள்:

பெரும்பான்மையான இஸ்லாமிய நாடுகளில் "ஒரு மனிதன் இஸ்லாமைவிட்டு வெளியேறினால், அவனுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது, அதுபோல, ஒரு பெண்ணுக்கு தன் கணவன் மறித்துவிட்டால், அவளுக்கு இந்து தர்மப்படி மரண தண்டனை தரவேண்டும், அதாவது கணவனோடு அவளையும் எரித்து கொன்றுவிடவேண்டும். தன் கணவன் மரித்துவிட்டால் அப்பெண் வேறு ஒரு ஆணை மறு திருமணம் செய்துக்கொண்டால் அது மரித்த கணவனுக்கு செய்யும் துரோகம் ஆகும், எனவே, இது நியாயமான தண்டனைத் தான்."

இதை படித்தவுடன் உங்களுக்கு சிரிப்பு வந்து இருக்கும், உடன் கட்டை ஏறுதலுக்கும், மதமாற்றத்திற்கும் என்ன சம்மந்தம் என்று கேட்கத்தோன்றும். இந்த உதாரணத்தில் குற்றம் ஒப்பிடப்படவில்லை, ஆனால், தண்டனை ஒப்பிடப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால், கணவன் மரித்துவிடுவது என்பது குற்றமே இல்லை. அது போல, மதத்தை மாற்றிக்கொள்வது குற்றமே இல்லை.  இந்த உதாரணம் போலத்தான் ஜாகிர் நாயக் அவர்களும் உதாரணத்தைச் சொன்னார் என்று நான் குறிப்பிட்டேன்.
 
எனவே, அருமை நண்பர் அபூமுஹை அவர்களே, முதலில் நான் சொன்னதை முழுவதும் படித்து  புரிந்துக்கொண்டு எழுதுங்கள்.

யாருக்கு பதில் அல்லது யாருடைய கட்டுரைக்கு பதில் எழுதுகிறீர்கள், அபூ முஹை அவர்களே:

என் கட்டுரையைப் பற்றி பதிலோ விமர்சனமோ எழுதினால், அதன் தொடுப்பு தரவேண்டுமென்று, நான் ஏற்கனவே என் முதல் கட்டுரையில் சொல்லியுள்ளேன்.

நீங்கள் ஒன்றும் என்னைப்போல நேற்று பொழிந்த மழையில் முளைத்த காலான் அல்ல. உங்களுக்கு இணையத்தில் எப்படி கட்டுரையை எழுதவேண்டும் என்ற எல்லா விவரங்களும் தெரியும், இப்படி தெரிந்து இருந்தும், ஏன் என் வரிகளுக்கு பதில் அளிக்கும் போது, என் கட்டுரையின் தொடுப்பை தருவதில்லை.

எங்கள் கட்டுரைகளை படித்தால், இஸ்லாமியர்கள் இஸ்லாமை விட்டு வெளியேறிவிடுவார்கள் என்ற பயமா? அப்படி பயம் இல்லையானால் ஏன் தொடுப்புக்களை தருவதில்லை? எனக்கு பதில் அளிக்கும் போது, என் வரிகளை விமர்சிக்கும் போது, என் கட்டுரை வெளியாகும் ஒரு தளத்தின் தொடுப்பையும் கொடுக்காமல் பதில் எழுதுவது என்ன நாகரீகம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

இனி என் எல்லா பதில்களில் இந்த வரிகள் தொடரும் என்று சொல்லிக்கொள்கிறேன்.

முடிவுரை: நான் எந்த இடத்தில் "காபிர்கள் தான் அரசியல், ஆட்சி, இராணுவம் பற்றிய சட்டங்களை இயற்றினார்கள், இஸ்லாமில் இப்படிப்பட்ட சட்டமில்லை, அல்லது இஸ்லாமோடு இப்படி ஒப்பிடக்கூடாது என்றுச் சொன்னேன்" என்பதை தயவு செய்து தெரிவியுங்கள்.

ஒரே குற்றத்தை(தண்டனைகளை அல்ல) இரண்டு மார்க்கங்களிலும் ஒப்பிட நீங்கள் தயாரா? உங்கள் ஷரியா சட்டம் மற்ற காபிர்கள் சட்டத்தைவிட எவ்விதத்தில் உயர்ந்தது, சமுதாயத்திற்கு ஏற்றது என்று ஒப்பிட்டு கட்டுரை எழுதுவீர்களானால், மக்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

Wednesday, May 14, 2008

இஸ்லாமும், நபிகளின் பாவங்களும் : பாகம் -1 (Islam and the Sins of the Prophets)




இஸ்லாமும், நபிகளின் பாவங்களும் பாகம் 1


முன்னுரை: சமீபகாலமாக கிறிஸ்தவர்களை விட முஸ்லீம்கள் பைபிளை அதிகமாக படிக்கிறார்கள் என்றுச் சொல்லத்தோன்றுகிறது. முஸ்லீம்கள் பைபிளின் பழைய ஏற்பாட்டில் உள்ள சில நிகழ்ச்சிகளை எடுத்துக்காட்டி, ஒரு தீர்க்கதரிசி என்பவர் இப்படிப்பட்ட தீய மற்றும் கீழ்தரமான செயல்களை செய்யமாட்டார். தீர்க்கதரிசிகள் பரிசுத்தமானவர்கள், எனவே தான் குர்‍ஆன் தீர்க்கதரிசிகளைப்பற்றிச் சொல்லும் போது, அவர்கள் இவ்வுலக தீய செயல்களுக்கு அப்பாற்பட்டவர்கள் என்றுச் சொல்கிறது என்று முஸ்லீம்கள் சொல்கின்றனர். பைபிளில் உள்ள இந்த நிகழ்ச்சிகள் தவறானவையாகும், அதனால், தான் பைபிள் வேதம் இல்லை என்று நாங்கள் சொல்கிறோம் என்று தங்கள் வாதத்தை முன்வைக்கின்றனர்.

ஆனால், குர்‍ஆனும், இஸ்லாமிய பாரம்பரிய நூல்களாகிய ஹதீஸ்களும் தீர்க்கதரிசிகளைப் பற்றி தரம்குறைவாக சொல்கிறது என்பதை மட்டும் வெளியே சொல்லமாட்டார்கள். பைபிளில் சொல்லப்பட்ட அதே கதை குர்‍ஆனில் இருந்தாலும் அதைப்பற்றி மூச்சு விடமாட்டர்கள் முஸ்லீம்கள். தாவீது விபச்சாரம் செய்தார் என்று பைபிள் சொல்வது தவறானது என்றுச் சொல்லி கட்டுரை எழுதினார்கள் இஸ்லாமியர்கள். ஆனால், இதே நிகழ்ச்சியைப் பற்றி குர்‍ஆனும், ஹதீஸ்களும், இஸ்லாமிய சரித்திர நுல்களும் சொல்கிறது என்பதை இவர்கள் மறைக்கிறார்கள்.

இஸ்லாமும் நபிகளின் பாவங்களும் பாகம் 1, பாகம் 2 என்று இரண்டு கட்டுரைகளில் இஸ்லாமியர்கள் சொல்வது பொய்யான தகவல் என்பதை நாம் பார்க்கப்போகிறோம். முதல் பாகமாகிய இந்த கட்டுரையில், ஆபிரகாம், லோத்து, யோசேப்பு பற்றி குர்‍ஆன் என்ன சொல்கிறது என்பதையும், இரண்டாம் பாகத்தில் "தாவீது விபச்சாரம் செய்த நிகழ்ச்சிப் பற்றி" இஸ்லாம் என்ன சொல்கிறது என்பதை காண்போம், கர்த்தருக்கு சித்தமானால்.

இஸ்லாமும், நபிகளின் பாவங்களும் பாகம் 1

Islam and the Sins of the Prophets

ஆசிரியர்: Sam Shamoun

தீர்க்கதரிசிகளின் வாழ்க்கையை எதிர்மறையான நிலையில் பைபிள் காட்டுகின்றது என்றுச் சொல்லி, முஸ்லீம்கள் அடிக்கடி பைபிளை தாக்குவார்கள். நோவா அதிகமாக திராட்சை ரசத்தை குடித்த நிகழ்ச்சியும், லோத்து தன் மகள்களோடு சயனித்ததும், தாவீது விபச்சாரம் செய்ததும் இன்னுமுள்ள நிகழ்ச்சிகள் அனைத்தும் உண்மையான இறைவனின் தீர்க்கதரிசிகளின் தரத்தை குறைப்பதாக இருக்கிறது, என்று முஸ்லீம்கள் வாதிக்கிறார்கள். இப்படிப்பட்ட வெட்கப்படக்கூடிய செயல்களுக்கு தீர்க்கதரிசிகள் தூரமானவர்கள் என்று முஸ்லீம்கள் சொல்லுவார்கள். இந்த நிகழ்ச்சிகளை ஆதாரமாக வைத்துக்கொண்டு பைபிள் திருத்தப்பட்டது என்று முஸ்லீம்கள் சொல்லுவார்கள்.

இப்படிப்பட்ட கேள்விகள் பலவற்றிற்கு ஏற்கனவே பதில்கள் அளிக்கப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு கீழ் கண்ட கட்டுரைகளை பார்க்கவும்.

http://answering-islam.org/Gilchrist/texthistory.html#nine
http://answering-islam.org/Responses/alcohol.html
http://answering-islam.org/BibleCom/gen19-28.html

குர்‍ஆனும் இஸ்லாமிய பாரம்பரிய நூல்களும் தீர்க்கதரிசிகளைப் பற்றிச் சொல்லும் போது அவர்கள் நூறு சதவிகிதம் ப‌ரிசுத்தவான்களாக காட்டாமல் சிறிது குறைவாகவே காட்டுகின்றது என்பதை இந்த கட்டுரையில் உங்களுக்கு காட்டவிரும்புகிறோம். இஸ்லாமிய‌ ஆர‌ம்ப‌ கால‌ நூல்க‌ள் கூட தாவீது செய்த விபச்சார செயலோடு கூட‌ சேர்த்து, இப்ப‌டிப்ப‌ட்ட‌ நிக‌ழ்ச்சிக‌ளை அங்கீக‌ரிக்கின்ற‌து என்ப‌தை அறியும் போது இதை ப‌டிக்கின்ற‌ உங்க‌ளுக்கு ஆச்ச‌ரிய‌மாக‌ இருக்கும்.

1. இஸ்லாமும் ஆபிரகாம் பொய் சொல்லுதலும்:


உதாரணத்திற்கு, குர்‍ஆனும், ஹதீஸ்களும் ஆபிரகாம் பொய் சொன்னார் என்று அங்கீகரிகின்றன.


 

பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3358

'இப்ராஹீம்(அலை) அவர்கள் மூன்று பொய்களைத் தவிர வேறு பொய் எதுவும் பேசியதில்லை. அவற்றில் இரண்டு அல்லாஹ்வின் (மார்க்கத்தின் நலன் காக்கும்) விஷயத்தில் சொன்னவையாகும். அவை: 1. (அவரை இணைவைக்கும் திருவிழாவிற்கு மக்கள் அழைத்தபோது,) 'நான் நோயுற்றிருக்கிறேன்" என்று (அதில் கலந்து கொள்ளாமல் தவிர்ப்பதற்காகக்) கூறியதும். 2. (சிலைகளை உடைத்துப் பெரிய சிலையின் தோளில் கோடரியை மாட்டிவிட்டு மக்கள், 'இப்படிச் செய்தது யார்?' என்று கேட்டபோது, 'ஆயினும், இவர்களில் பெரியதான இந்தச் சிலை தான் இதைச் செய்தது" என்று கூறியதுமாகும். . (மூன்றாவது முறையாகப் பொய் சொன்ன சூழ்நிலை வருமாறு:) ஒரு நாள் இப்ராஹீம்(அலை) அவர்களும் (அவர்களின் துணைவியார்) சாரா(அலை) அவர்களும் கொடுங்கோல் மன்னர்களில் ஒருவனுடைய வழியாகச் சென்றார்கள். அப்போது அந்த மன்னனிடம் (அவர்களைக் குறித்து) 'இங்கு ஒருவர் வந்திருக்கிறார்: அவருடன் அவரின் அழகான மனைவியும் இருக்கிறாள்" என்று கூறப்பட்டது. உடனே, இப்ராஹீம்(அலை) அவர்களை அழைத்து வரச் சொல்லி அந்த மன்னன் சாரா(அலை) அவர்களைக் கூப்பிட்டு அனுப்பினான். சாரா(அலை) அவர்கள் அவனிடம் சென்றபோது அவன் அவரைத் தன் கையால் அள்ள முயன்றான். உடனே, அவன் (வலிப்பு நோயால்) தண்டிக்கப்பட்டான். அவன் (சாரா(அலை) அவர்களிடம்), 'அல்லாஹ்விடம் எனக்காக (என் கைகளை குணப்படுத்தும்படி) பிரார்த்தனை செய். நான் உனக்குக் தீங்கு செய்ய மாட்டேன்" என்று சொன்னான். உடனே, சாரா(அலை) அவர்கள் அல்லாஹ் விடம் பிரார்த்திக்க, அவன் (வலிப்பிலிருந்து) விடுவிக்கப்பட்டான். பிறகு, இரண்டாவது முறையாக அவர்கள் அணைக்க முயன்றான். முன்பு போன்றே மீண்டும் தண்டிக்கப்பட்டான். அல்லது அதை விடக் கடுமையாகத் தண்டிக்கப்பட்டான். அப்போதும், 'எனக்காக (என் கைகளை குணப்படுத்தும்படி) அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய். நான் உனக்குத் தீங்கு செய்ய மாட்டேன்" என்று சொன்னான். அவ்வாறே அவர் பிரார்த்திக்க, அவன் (வலிப்பிலிருந்து) விடுவிக்கப்பட்டான். பிறகு, தன் காவலன் ஒருவனை அழைத்து, 'நீங்கள் என்னிடம் ஒரு மனிதரைக் கொண்டு வரவில்லை; ஒரு ஷைத்தானைத் தான் கொண்டு வந்துள்ளீர்கள்" என்று சொன்னான். பிறகு, ஹாஜர் அவர்களை, சாரா(அலை) அவர்களுக்குப் பணியாளாகக் கொடுத்தான். சாரா(அலை) அவர்கள், இப்ராஹீம்(அலை) அவர்களிடம் அவர்கள் தொழுது கொண்டிருக்கும்போது வந்தார்கள். இப்ராஹீம்(அலை) அவர்கள் கைகளால் சைகை செய்து, 'என்ன நடந்தது?' என்று கேட்டார்கள். அவர், 'அல்லாஹ் நிராகரிப்பாளனின்.. அல்லது தீயவனின்... சூழ்ச்சியை முறியடித்து, அவன் மீதே திருப்பிவிட்டான். ஹாஜிராவைப் பணிப்பெண்ணாக அளித்தான் என்று கூறினார்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

(அபூ ஹுரைரா(ரலி) கூறினார்:) வான் மழை (பிரதேச) மக்களே! அவர் (ஹாஜிரா)தான் உங்களின் தாயார்.

 
 
2. ஆபிரகாம் அல்லாவை சந்தேகித்தார் என்று கூட ஒரு ஹதீஸ் சொல்கிறது:


 

பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4694

என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'

(இறைத்தூதர்) 'லூத்' (அலை) அவர்களுக்கு அல்லாஹ் கருணைகாட்டுவானாக! அன்னார் வலுவான ஓர் ஆதவாளனிடமே தஞ்சம் புகுபவர்களாக இருந்தார்கள். ஒசுஃப் (அலை) அவர்கள் கழித்த காலம் அளவிற்கு நான் சிறையில் காலம் கழித்திருந்தால் (என்னைச் சிறையிலிருந்து விடுதலை செய்ய) அழைப்பு விடுத்தவரை ஏற்று (விடுதலை பெற்று)க் கொண்டிருப்பேன். இப்ராஹீம் (அலை) அவர்களைவிட நாமே (இறைவனின் படைப்பாற்றலைக் கண்கூடாகக் கண்டு உறுதி பெற) அதிகத் தகுதியுடையவர்கள் ஆவோம். அல்லாஹ், "நீங்கள் நம்பிக்கை கொள்ளவில்லையா?' என்று கேட்டபோது அவர்கள், ஆம்; (நம்பிக்கை இருக்கத்தான் செய்கிறது) ஆயினும், என் நெஞ்சம் நிம்மதியடைவதற்காகத்தான் (இறந்ததை உயிர்ப்பித்துக் காட்டும்படி) கேட்டேன்' என்று பதிலளித்தார்கள்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

 
 
3. நாம் ஏற்றுக்கொள்ளக்கூடாத அளவிற்கு குர்‍ஆனால் எதிர்மறையாக சொல்லப்பட்டவர் இன்னொருவர் இருக்கிறார், அவர் தான் யோசேப்பு:


 

குர்‍ஆன் 12:23,24

அவர் எந்தப் பெண்ணின் வீட்டில் இருந்தாரோ, அவள் அவர்மீது விருப்பங்கொண்டு, கதவுகளைத் தாழிட்டுக் கொண்டு (தன் விருப்பதிற்கு இணங்குமாறு) "வாரும்" என்று அழைத்தாள் - (அதற்கு அவர் மறுத்து,) "அல்லாஹ் (இத்தீய செயலிலிருந்து) என்னைக் காத்தருள்வானாக் நிச்சயமாக (உன் கணவர்) என் எஜமானர், என் இடத்தை அழகாக (கண்ணியமாக) வைத்திருக்கிறார் - அநியாயம் செய்பவர்கள் நிச்சயமாக வெற்றி பெற மாட்டார்கள்" என்று சொன்னார். (குர்‍ஆன் 12:23)

ஆனால் அவளோ அவரைத் திடமாக விரும்பினாள்; அவரும் தம் இறைவனின் ஆதாரத்தைக் கண்டிராவிட்டால் அவள் மீது விருப்பம் கொண்டே இருப்பார்; இவ்வாறு நாம் அவரைவிட்டுத் தீமையையும் மானக்கேடான செயல்களையும் திருப்பிவிட்டோம் - ஏனெனில் நிச்சயமாக அவர் நம் தூய்மையான அடியார்களில் ஒருவராக இருந்தார். (குர்‍ஆன் 12:24)

And she, in whose house he was, asked of him an evil act. She bolted the doors and said: Come! He said: I seek refuge in Allah! Lo! he is my lord, who hath treated me honourably. Lo! wrong-doers never prosper. She verily desired him, and he would have desired her if it had not been that he saw the argument of his Lord. Thus it was, that We might ward off from him evil and lewdness. Lo! he was of Our chosen slaves. (S. 12:23-24 Pickthall)

 
 
"யோசேப்பு அந்த போத்திபாரின் மனைவி மீது விருப்பம் கொண்டே இருப்பார்" என்று குர்‍ஆன் சொல்கிறது, அதாவது, அந்த போத்திபாரின் மனைவியோடு அவர் விபச்சாரம் செய்ய விருப்பம் கொண்டே இருப்பார் என்று சொல்கிறது. ஆனால், பரிசுத்த பைபிள், குர்‍ஆனின் இந்த கருத்தை மறுத்துச் சொல்கிறது, அதாவது, இந்த தீய செயலை செய்ய யோசேப்பு திடமாக மறுத்தார் என்றுச் சொல்கிறது.
 
 

ஆதியாகமம் 39:6-10

ஆகையால், அவன் தனக்கு உண்டானதையெல்லாம் யோசேப்பின் கையிலே ஒப்புக்கொடுத்துவிட்டு, தான் புசிக்கிற போஜனம்தவிர தன்னிடத்திலிருந்த மற்றொன்றைக்குறித்தும் விசாரியாதிருந்தான். யோசேப்பு அழகான ரூபமும் சௌந்தரிய முகமும் உள்ளவனாயிருந்தான். சிலநாள் சென்றபின், அவனுடைய எஜமானின் மனைவி யோசேப்பின்மேல் கண்போட்டு, என்னோடே சயனி என்றாள். அவனோ தன் எஜமானுடைய மனைவியின் சொல்லுக்கு இணங்காமல், அவளை நோக்கி: இதோ, வீட்டிலே என்னிடத்தில் இருக்கிறவைகளில் யாதொன்றைக்குறித்தும் என் ஆண்டவன் விசாரியாமல், தமக்கு உண்டான எல்லாவற்றையும் என் கையில் ஒப்பித்திருக்கிறார். இந்த வீட்டிலே என்னிலும் பெரியவன் இல்லை; நீ அவருடைய மனைவியாயிருக்கிறபடியால் உன்னைத் தவிர வேறொன்றையும் அவர் எனக்கு விலக்கி வைக்கவில்லை; இப்படியிருக்க, நான் இத்தனை பெரிய பொல்லாங்குக்கு உடன்பட்டு, தேவனுக்கு விரோதமாய்ப் பாவம் செய்வது எப்படி என்றான். அவள் நித்தம் நித்தம் யோசேப்போடே இப்படிப் பேசிக்கொண்டு வந்தும், அவன் அவளுடனே சயனிக்கவும் அவளுடனே இருக்கவும் சம்மதிக்கவில்லை.

 
 
4. தன் மகள்களை கற்பழிக்க தீய மக்களிடம் ஒப்புக்கொடுத்த இஸ்லாமிய நபி லோத்து:


லோத்து தன்னிடம் வந்த விருந்தாளிகளை காப்பாற்றவேண்டி, தன் ஊரின் மக்களிடம் தன் மகள்களை ஒப்படைத்துவிடுகிறேன் என்றும், தன் விருந்தாளிகளை ஒன்றும் செய்யாமல் விட்டுவிடுங்கள் என்றும் சொன்னார் என்று குர்‍ஆன், பைபிள் சொல்வது போலவே அப்படியே சொல்லியுள்ளது.
 
 

குர்‍ஆன் 11:77 - 79

நம் தூதர்கள் (வானவர்கள்) லுத்திடம் வந்தபோது, (தம்) மக்களுக்கு அவர் பெரிதும் விசனமடைந்தார்; (அதன் காரணமாக) உள்ளம் சரங்கியவராக் "இது நெருக்கடி மிக்க நாளாகும்" என்று கூறினார். (11:77)

அவருடைய சமூகத்தார் அவரிடம் விரைந்தோடி வந்தார்கள்; இன்னும் முன்னிருந்தே அவர்கள் தீய செயல்களே செய்து கொண்டிருந்தார்கள். (அவர்களை நோக்கி லூத்) "என் சமூகத்தார்களே! இதோ இவர்கள் என் புதல்விகள்; இவர்கள் உங்களுக்கு(த் திருமணத்திற்கு)ப் பரிசத்தமானவர்கள்; எனவே நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சங்கள்; இன்னும் என் விருந்தினர் விஷயத்தில் என்னை நீங்கள் அவமானப் படுத்தாதீர்கள்; நல்ல மனிதர் ஒருவர் (கூட) உங்களில் இல்லையா?" என்று கூறினார்.( 11:78)

(அதற்கு) அவர்கள் "உம்முடைய புதல்வியரில் எங்களுக்கு எந்த பாத்தியதையுமில்லை என்பதைத் திடமாக நீர் அறிந்திருக்கிறீர்; நிச்சயமாக நாங்கள் விரும்புவது என்ன என்பதையும் நீர் அறிவீர்" என்று கூறினார்கள்.(11:79)

And when Our messengers came unto Lot, he was distressed and knew not how to protect them. He said: This is a distressful day. And his people came unto him, running towards him - and before then they used to commit abominations - He said: O my people! Here are my daughters! They are purer for you. Beware of Allah, and degrade me not in (the person of) my guests. Is there not among you any upright man? They said: Well thou knowest that we have no right to thy daughters, and well thou knowest what we want. (S. 11:77-79 Pickthall )

 


 

குர்‍ஆன் 15:67-71

(லூத்தின் விருந்தினர்களாக வாலிபர்கள் வந்திருப்பதையறிந்து) அந் நகரத்து மக்கள் மிக்க மகிழ்ச்சியுடன் வந்து சேர்ந்தார்கள். (15:67) (லூத் வந்தவர்களை நோக்கி;) "நிச்சயமாக இவர்கள் என்னுடைய விருந்தினர்கள். ஆகவே, (அவர்கள் முன்) என்னை நீங்கள் அவமானப்படுத்தி விடாதீர்கள்;" (15:68) "அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். என்னைக் கேவலப்படுத்தி விடாதீர்கள்" என்றும் கூறினார். (15:69) அதற்கவர்கள், "உலக மக்களைப் பற்றியெல்லாம் (எங்களிடம் பேசுவதை விட்டும்) நாங்கள் உம்மைத் தடுக்கவில்லையா?" என்று கேட்டார்கள். (15:70)

அதற்கவர், "இதோ! என் புதல்வியர் இருக்கிறார்கள். நீங்கள் (ஏதும்) செய்தே தீர வேண்டுமெனக் கருதினால் (இவர்களை திருமணம்) செய்து கொள்ளலாம்" என்று கூறினார். (15:71)

And the people of the city came, rejoicing at the news (of new arrivals). He said: Lo! they are my guests. Affront me not! And keep your duty to Allah, and shame me not! They said; Have we not forbidden you from (entertaining) anyone? He said: Here are my daughters, if ye must be doing (so). (S. 15:67-71 Pickthall)

 
 
தன் பிள்ளைகளின் ஆரோக்கியம், வாழ்க்கை மற்றும் குடும்ப கௌரவத்தைக் காப்பாற்றுவது ஒரு தந்தையின் கடமை இல்லையா? அவசரம் ஏற்பட்டால், தன் உயிரையும் கொடுத்து காப்பாற்றுவது ஒரு தந்தையின் கடமையில்லையா? இப்படி இருந்தும், இங்கு லோத்து என்பவர் தன் மகள்களாகிய கன்னிப்பெண்களை தீயமக்கள் கற்பழிக்க ஒப்புக்கொடுப்பதை காண்கிறோம். இதில் ஒரு முக்கியமான விவரம் என்னவென்றால், இதே கதையை பைபிளும் சொல்கிறது (பார்க்க ஆதியாகமம் 19:1- 9). இன்னும் ஒரு ஆச்சரியம் என்னவென்றால் முஸ்லீம்கள் இந்த கதைப் பற்றி ஒன்றுமே சொல்வதில்லை. இந்த கதைப் பற்றி ஏன் முஸ்லீம்கள் மூச்சுவிடுவதில்லை என்பதைப் பற்றிய காரணம் மிகவும் தெளிவாக உள்ளது, அது என்னவென்றால், இதே கதை தங்கள் புத்தகத்திலும் இருப்பதால் தான்! இது நமக்கு எதை காட்டுகிறது என்றால், பைபிளுக்கு எதிராக முஸ்லீம்களின் விமர்சனங்கள் அனைத்தும் புகையால் தங்கள் குர்‍ஆன் நிகழ்ச்சிகளை மறைக்கும் செயல்களுக்குச் சமமாகும். அதாவது பைபிளில் உள்ள அதே நிகழ்ச்சி அல்லது கதை குர்‍ஆனிலும் இருந்தால், அதை எந்த காரணத்தைக் கொண்டும் முஸ்லீம்கள் ஒரு பிரச்சனையாக வெளியே கொண்டுவரமாட்டார்கள்.

இது பரிசுத்த பைபிளைத் தாக்கும் முஸ்லீம்களின் கபடவேஷத்தை அப்படியே காட்டுகிறது. இப்படிப்பட்ட கதைகள் பைபிளில் சொல்லப்பட்டதால், அது இறைவனின் வேதம் இல்லை என்றுச் சொல்லும் அதே முஸ்லீம்கள், அதே கதை குர்‍ஆனில் இருப்பதால், குர்‍ஆன் இறைவனிடமிருந்து வந்த வேதம் என்றுச் சொல்லும் தகுதியை இழக்கிறது என்பதை ஒப்புக்கொள்ளமாட்டார்கள்.

 
 
பின் குறிப்பு: குர்‍ஆனை மொழிபெயர்க்கும் போது மொழிபெயர்ப்பாளர்கள், சில வார்த்தைகளை தங்களுக்கு சாதகமாக அடைப்பு குறிக்குள் இடுவார்கள், அது போல, லோத்து சம்மந்தப்பட்ட வசனத்தில் (திருமணம்) என்ற வார்த்தையை இட்டுள்ளார்கள். இதனால், சிலர் "லோத்து" தன் மகள்களை தன் ஊர் மக்களுக்கு திருமணம் செய்துக்கொள்ளும்படித் தான் சொன்னாரே தவிர, வேறு வகையில் அல்ல என்றுச் சொல்வார்கள். இப்படி நம் தமிழ் முஸ்லீம்கள் இந்த என் மொழிபெயர்ப்பு கட்டுரைக்கு பதில் எழுதினால், இதற்கான பதிலை நான் எழுதுவேன்.

உண்மையிலேயே லோத்து இப்படி சொன்னாரா? அவ்வூர் மக்களின் குண நலன்கள் என்ன என்று குர்‍ஆன் சொல்கிறது? ஒரு நபி இப்படி தன் இரண்டு மகள்களை, தீய ஊர் மக்கள் திருமணம் செய்துக்கொள்ள கொடுப்பேன் என்றுச் சொல்வது சரியானதா? திருமணம் என்ற பொருள் படும்படி அந்த நிகழ்ச்சி நடந்ததா? அவ்வூர் மக்களின் மனநிலை "அந்த சூழ்நிலையில்" என்னவாக இருந்தது என்று குர்‍ஆன் சொல்கிறது போன்றவற்றை நாம் சிந்திப்போம். லோத்து ஒரு நீதிமான் என்று தான் பைபிள் சொல்கிறது, ஆனால், குர்‍ஆன் அவரை ஒரு "தீர்க்கதரிசி" என்றுச் சொல்கிறது, இதைப்பற்றியும் சிந்திப்போம்.

Source: http://www.geocities.com/isa_koran/tamilpages/Authors/shamoun/SinsOfProphets-1.html

Monday, May 12, 2008

உலக தமிழ் மக்களுக்கு ஓர் அறிவிப்பு-ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தள‌ம் ஆரம்பம்

ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தள‌ம் ஆரம்பம்

www.answering-islam.org/tamil.html

கர்த்தரின் கிருபையால், ஆன்சரிங் இஸ்லாம் தளத்தில் தமிழ் பகுதி ஆரம்பிக்கப்பட்டுள்ளது (www.answering-islam.org/tamil.html)

ஆன்சரிங் இஸ்லாம் தளம் ஓர் அறிமுகம்:

முஸ்லீம்கள் கேட்கும் கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் சரியான விதத்தில் பதில்கள், மறுப்புக்கள் தரும் தளம், ஆன்சரிங் இஸ்லாம் தளமாகும். முஸ்லீம்களுக்கு பதில் தருவதில் இத்தளம் முதலிடம் வகிக்கிறது என்றுச் சொன்னால், அது மிகையல்ல.

இந்த தளத்தில் நான் பல ஆண்டுகளாக கட்டுரைகளை படித்துக்கொண்டு வந்துக்கொண்டு இருக்கிறேன். நான் தமிழில் "ஈஸா குர்‍ஆன்" தளம் ஆரம்பிக்க என்னை உட்சாகப்படுத்தியது இந்த தளத்தின் கட்டுரைகள் தான். இத்தளத்தில் கட்டுரைகள் சரியான ஆதாரங்களோடும், வசனங்களோடும் ஆராய்ச்சி செய்து எழுதப்படுகின்றன. இத்தளத்தின் ஆசிரியர்களோடு நான் தொடர்பு கொண்டு தங்கள் கட்டுரைகளை தமிழில் மொழிபெயர்க்க அனுமதி கேட்டபோது, அவர்கள் அனுமதி அளித்தார்கள். சில கட்டுரைகளை நான் தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டுள்ளேன்.

மூன்று மாதங்களுக்கு முன்பு, இத்தளத்தின் நிர்வாகிக்கு மெயில் அனுப்பும்படி எனக்கு ஒரு ஆசிரியர் அறிவுரை கூறியபோது, அப்படியே நானும் அனுப்பினேன். இத்தளத்தின் நிர்வாகி தன் தளத்தின் எல்லா கட்டுரைகளை தமிழில் மொழிபெயர்க்க அனுமதி அளித்ததுமல்லாமல், தங்கள் தளத்தில் தமிழில் ஒரு பகுதியை ஆரம்பிக்க விருப்பமா என்று கேட்டார்? (கரும்பு திண்ண கூலி யாராவது கேட்பார்களா? ) நான் உடனே சரி என்று ஒப்புக்கொண்டேன். கடந்த மூன்று மாதங்களாக நான் இதுவரை மொழிபெயர்த்துள்ள அவர்களது கட்டுரைகளை அவர்கள் தளத்தில் பதிக்க முயற்சி எடுத்துக்கொண்டு இருந்தேன். நேற்றோடு அந்த வேலை முடிந்துவிட்டது, இன்று 11ம் நாள் மே மாதம் 2008 நாளன்று "ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் - www.answering-islam.org/tamil.html" ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

உலகமனைத்து முஸ்லீம் அறிஞர்களுக்கு பதில் அளிக்கும் தளங்களில் முதலிடம் வகிக்கும் தளத்தில், தமிழ் பகுதியை ஆரம்பிக்க கர்த்தர் கொடுத்த கிருபைக்காக அவருக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.



ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தளத்தின் முகப்புப் பக்கம்:
( Home page of www.answering-islam.org/tamil)



Source : http://www.geocities.com/isa_koran/images/AITamilHome.JPG

ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் பகுதியில் கீழ் கண்ட கட்டுரைகள் சேர்க்கப்பட்டுள்ளது.
(Source : http://www.answering-islam.org/tamil/newarticles.html )

தேதி: 11th May 2008

இன்று ஆன்சரிங் இஸ்லாம் தளத்தில் தமிழ் பகுதி ஆரம்பிக்கப்படுகிறது. எங்கள் தமிழ் பகுதியை கீழ் கண்ட கட்டுரைகளோடு ஆரம்பிக்கிறோம்.

* குர்ஆனை அல்லா பாதுகாத்தான் என்றுச் சொல்லும் இஸ்லாமியர்களின் வாதம் சரியானது அல்ல என்பதை ஆணித்தரமாக சொல்கிறது இந்த கட்டுரை: குர்‍ஆன் பாதுகாக்கப்பட்டதா?

* முகமதுவை ஒரு தீர்க்கதரிசி என்று நிருபிக்க முஸ்லீம்கள் பயன்படுத்தும் உபாகமம் 18ம் அதிகாரத்தைக் கொண்டே "முகமது ஒரு கள்ள தீர்க்கதரிசி" என்று நிருபிக்கும் ஆதாரபூர்வமான கட்டுரை இது: உபாகமத்தின் உண்மை: முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள் (THE DEUTERONOMY DEDUCTIONS: Two Short, Sound, Simple Proofs that Muhammad Was a False Prophet ) .

* இயேசுவின் சிலுவை மற்றும் உயிர்த்தெழுதலை மறுத்து அல்லா செய்த குளறுபடியையும், அல்லாவின் அறியாமையையும் கேள்விக்குறியாக்கும் கட்டுரை: ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸீஹா (Deceptive God, Incompetent Messiah and Allah Starts Christianity ... by Accident).

* மாற்கு 16ம் அதிகாரத்திலிருந்து கிறிஸ்தவர்களுக்கு சவாலை முன்வைத்த, டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களுக்கு மறுப்புக் கட்டுரை : மாற்கு 16ம் அதிகாரத்தின் சவால்.

* முகமது செய்த கொலைகள் பற்றிய ஒரு சிறு ஆய்வுக்கட்டுரை: முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல் (திய வான் கோவின் கொலை)

* முகமது எப்படி மக்களை கொடுமைப்படுத்த அனுமதித்தார் என்பதை ஆதாரத்துடன் விளக்கும் ஒரு ஆய்வுக்கட்டுரை: முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும் (MUHAMMAD'S USE OF TORTURE)

* பைபிளையும் குர்‍ஆனையும் எப்படி ஒப்பிடுவது? பைபிளோடு குர்‍ஆனை மட்டும் ஒப்பிடுவது சரியா? போன்ற கேள்விகளுக்கு இந்த கட்டுரை பதில் அளிக்கிறது: பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?

* பைபிள் திருத்தப்பட்டது என்று குற்றம் சாட்டும் முஸ்லீம்கள், தங்கள் வாதங்களுக்கு ஆதாரங்களை முன்வைக்க முடியுமா? படியுங்கள்: முஸ்லீம்களின் யார்-எப்போது-எங்கே-எப்படி-என்ன-ஏன் என்ற பல பிரச்சனைகள்.

© Answering Islam, 1999 - 2008. All rights reserved.

Answering Islam Tamil Site :http://www.answering-islam.org/tamil

setstats1 http://www.geocities.com/isa_koran/tamilpages/Authors/Jochan/IntroduceAIT.html

Thursday, May 8, 2008

ஓடுங்கள் முஸ்லீம்களே ஓடுங்கள் : இஸ்லாமை விட்டு வேகமாக ஓடுங்கள்




ஓடுங்கள் முஸ்லீம்களே ஓடுங்கள் : இஸ்லாமை விட்டு வேகமாக ஓடுங்கள்



குர்‍ஆனிலிருந்தும் ஹதீஸ்களிலிருந்தும் முஸ்லீம்களுக்கு சில வசனங்களை மேற்கோள் காட்டப்படும் போது, உடனே அவர்கள் அதற்கு சாக்கு போக்கு சொல்ல ஆரம்பிப்பார்கள். அதாவது, குர்‍ஆனின் மற்றும் ஹதீஸ்களின் சில குறிப்பிட்ட வசனங்களின் உண்மையான பொருளை முன்னால் முஸ்லீம்கள் அல்லது முஸ்லீமல்லாதவர்கள் சரியாக புரிந்துக்கொள்ள தவறுகிறார்கள் என்று அடிக்கடிச் சொல்வார்கள். இந்த முறை நான் இஸ்லாமிய போதனையின் வசனங்களுக்கு பொருள் சொல்லப்போவதில்லை, அதற்கு பதிலாக, முஸ்லீம்களின் புனித புத்தகங்களிலிருந்து சில வசனங்களை மேற் கோள் காட்டி, அந்த வசனங்களுக்கு முஸ்லீம்களின் ஆதாரபூர்வமான அறிஞர்கள் என்ன பொருள் கூறியிருக்கிறார்கள் என்றுச் சொல்லப்போகிறேன்.


முடிவிலே, அவர்களிடம் ஒரே ஒரு சுலபமான கேள்வியை மட்டும் கேட்க விரும்புவேன்.


 
Quote:
4:24 இன்னும் (போரில் பிடிபட்டு உங்கள் ஆதரவிலிருக்கும்) அடிமைப் பெண்களைத் தவிர, கணவனுள்ள பெண்களை நீங்கள் மணமுடிப்பது விலக்கப்பட்டுள்ளது. (இவையனைத்தும்) அல்லாஹ் உங்கள் மீது விதியாக்கியவையாகும். இவர்களைத் தவிர, மற்றப் பெண்களை, தவறான முறையில் இன்பம் அனுபவிக்காமல், அவர்களுக்கு உங்கள் செல்வங்களிலிருந்து (மஹராக) கொடுத்துத் (திருமணம் செய்யத்) தேடிக் கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே இவ்வாறு (சட்டப்பூர்வமாக மணந்து கொண்ட) பெண்களிடமிருந்து நீங்கள் சுகம் அனுபவிப்பதால் அவர்களுக்காக (விதிக்கப்பட்ட மஹர்)தொகையைக் கடமையாக கொடுத்து விடுங்கள். எனினும் மஹரை பேசி முடித்தபின் அதை(க் கூட்டவோ அல்லது குறைக்கவோ) இருவரும் சம்மதித்துக் கொண்டால் உங்கள் மேல் குற்றமாகாது - நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தோனும், ஞானமுடையோனுமாக இருக்கிறான்.


YUSUFALI மொழிபெயர்ப்பு: Quran 004.024 Also (prohibited are) women already married, except those whom your right hands possess: Thus hath Allah ordained (Prohibitions) against you: Except for these, all others are lawful, provided ye seek (them in marriage) with gifts from your property,- desiring chastity, not lust, seeing that ye derive benefit from them, give them their dowers (at least) as prescribed; but if, after a dower is prescribed, agree Mutually (to vary it), there is no blame on you, and Allah is All-knowing, All-wise.


PICKTHAL மொழிபெயர்ப்பு: And all married women (are forbidden unto you) save those (captives) whom your right hands possess. It is a decree of Allah for you. Lawful unto you are all beyond those mentioned, so that ye seek them with your wealth in honest wedlock, not debauchery. And those of whom ye seek content (by marrying them), give unto them their portions as a duty. And there is no sin for you in what ye do by mutual agreement after the duty (hath been done). Lo! Allah is ever Knower, Wise.


SHAKIR மொழிபெயர்ப்பு: And all married women except those whom your right hands possess (this is) Allah's ordinance to you, and lawful for you are (all women) besides those, provided that you seek (them) with your property, taking (them) in marriage not committing fornication. Then as to those whom you profit by, give them their dowries as appointed; and there is no blame on you about what you mutually agree after what is appointed; surely Allah is Knowing, Wise.


Dr. MUHAMMAD TAQI-UD-DIN AL-HILALI and Dr. MUHAMMAD MUHSIN KHAN மொழிபெயர்ப்பு :Also (forbidden are) women already married, except those (captives and slaves) whom your right hands possess. Thus has Allâh ordained for you. All others are lawful, provided you seek (them in marriage) with Mahr (bridal money given by the husband to his wife at the time of marriage) from your property, desiring chastity, not committing illegal sexual intercourse, so with those of whom you have enjoyed sexual relations, give them their Mahr as prescribed; but if after a Mahr is prescribed, you agree mutually (to give more), there is no sin on you. Surely, Allâh is Ever AllKnowing, AllWise.


-----Tafsir Ibn Kathir Starts -------


இபின் கதீர் அவர்களின் தஃப்சீர்(உரை):

அல்லா சொன்னான்:

 

 
Quote:
(இன்னும் (போரில் பிடிபட்டு உங்கள் ஆதரவிலிருக்கும்) அடிமைப் பெண்களைத் தவிர, கணவனுள்ள பெண்களை நீங்கள் மணமுடிப்பது விலக்கப்பட்டுள்ளது.)


 
இந்த வசனத்தின் பொருள் என்னவென்றால், ஏற்கனவே திருமணமான பெண்களை நீங்கள் திருமணம் செய்வது விலக்கப்பட்டுள்ளது.

 
 
Quote:
(இன்னும் (போரில் பிடிபட்டு உங்கள் ஆதரவிலிருக்கும்) அடிமைப் பெண்களைத் தவிர,)


 
போரில் பிடிப்பட்டு உங்கள் ஆதரவில் இருக்கும் கர்ப்பமாக‌ இல்லாத பெண்களைத் தவிர, என்று பொருள் ஆகும்.


அபு சையத் அல் குட்ரி சொன்னதாக, இமாம் அஹமத் பதித்த ஹதீஸ்:

"ஏற்கனவே திருமணமான சில பெண்களை நாங்கள் ஔடாஸ் என்ற இடத்தில் பிடித்தோம், நாங்கள் அவர்களோடு உடலுறவு கொள்ள விரும்பவில்லை, காரணம் அவர்கள் ஏற்கனவே திருமணமானவர்கள் ஆனதால். எனவே, இதைப் பற்றி நபி அவர்களிடம் நாங்கள் கேட்டோம், அப்போது இந்த வசனம் இறங்கியது. "இன்னும் (போரில் பிடிபட்டு உங்கள் ஆதரவிலிருக்கும்) அடிமைப் பெண்களைத் தவிர, கணவனுள்ள பெண்களை நீங்கள் மணமுடிப்பது விலக்கப்பட்டுள்ளது."

 
Quote:
Imam Ahmad recorded that Abu Sa`id Al-Khudri said, "We captured some women from the area of Awtas who were already married, and we disliked having sexual relations with them because they already had husbands. So, we asked the Prophet about this matter, and this Ayah was revealed,
(Also (forbidden are) women already married, except those whom your right hands possess).


 
இந்த வசனத்தின் அடிப்படையில் நாங்கள் அந்த பெண்களோடு உடலுறவு கொண்டோம். இந்த ஹதீஸ் அல்‍திர்மிதி, அன் நசய், இபின் ஜரிர் மற்றும் முஸ்லீம் போன்றவர்களால் தொகுக்கப்பட்டது.


மேலும் அல்லாவின் வசனம் சொல்கிறது:

 
Quote:
(இவையனைத்தும்) அல்லாஹ் உங்கள் மீது விதியாக்கியவையாகும்.


 
இதன் பொருள் என்னவென்றால், இந்த நியதி அல்லாவினால் உங்களுக்காக உண்டானது. எனவே, அல்லாவின் புத்தகத்திற்கு கீழ்படியுங்கள், அவர் விதித்த வரம்பை மீறாதீர்கள், மற்றும் அவரது சட்டத்திற்கு கீழ்படியுங்கள்.


Source: Tafsir Ibn Kathir, Abridged by a group of scholars under the supervision of Shaykh Saifur-Rahman Al-Mubarakpuri, Published by Darussalam, Riyadh, Saudia Arabia.

-----Tafsir Ibn Kathir Ends -------

சஹி முஸ்லீம் ஹதீஸ் ஆதாரம்:

 
Quote:
அபு ஸையத் அல்குத்ரி சொன்னார்: ஹுனைன் யுத்தத்தின் போது, அல்லாவின் தூதர், அடஸ் என்ற இடத்திற்கு இராணுவத்தை அனுப்பி எதிரிகளோடு சண்டையிட்டார். அந்த எதிரிகளை போரில் தோற்கடித்து அவர்களை அடிமைகளாக பிடித்துக்கொண்டனர். அல்லாவின் தூதரின் தோழர்கள் பிடிக்கப்பட்ட பெண்களோடு உடலுறவு கொள்ள விரும்பவில்லை, ஏனென்றால், அப்பெண்களின் கணவர்கள் ப‌ல தெய்வங்களை வணங்குபவர்களாக இருந்ததால். அப்போது அல்லா மிகவும் உயர்ந்தவர், இந்த வசனத்தை வெளிப்படுத்தினார்: உங்கள் வலதுகை சொந்தமாக்கப்பட்ட பெண்களைத் தவிர, திருமணமான பெண்கள் உங்களுக்கு விலக்கப்பட்டுள்ளது (அப்பெண்களின் "இத்தா" காலம் முடிந்தபிறகு அவர்களோடு நீங்கள் உறவுகொள்ளலாம்) (குர்‍ஆன் 4:24)



Quote:
Sahih Muslim: Book of Marriage: "Abu Said Al-khudri narrated that at the Battle of Hunain, the Mesenger of Allah sent an army to Autas and encountered the enemy and fought with them. Having overcome them and taken them as captives, the Companions of the Messenger of Allah seemed to refrain from having intercourse with captive women because of their husbands being polytheists. Then Allah, the most High, revealed: "And women already married, except those whom your right hands possess..." (i.e., they were lawful for them when their Iddah period came to an end.)"(Quran 4:24)

Source: Sahih Muslim, compiled by Al-Hafiz Zakiuddin Abdul-Azim Al-Mundhiri, published by Darrussalam Publishers, Riyadh, Saudi Arabia


 
இந்த மேலே சொல்லப்பட்ட வசனங்கள் இஸ்லாம் அல்லாத வேறு ஒரு மதத்தின் போதனைகள் என்று நினைத்துக்கொள்ளுங்கள். மற்றும் நீங்கள் ஒரு முஸ்லீமாக 7ம் நூற்றாண்டில் வாழ்ந்துக்கொண்டு இருக்கிறீர்கள் என்று கற்பனை செய்துக்கொள்ளுங்கள். உங்களையும், உங்கள் குடும்பத்தையும் போரில் அவர்கள் (இஸ்லாமியர் அல்லாத மதத்தவர்கள்) பிடித்துக்கொண்டு சென்றுள்ளார்கள் என்று நினைத்துக்கொள்ளுங்கள்:


உங்களை அவர்கள் சங்கிலிகளால் கட்டி, உங்கள் கண்களுக்கு முன்பாக உங்கள் மனைவியையும், சகோதரியையும் அல்லது உங்கள் தாயையும் அந்த மக்கள் கற்பழித்துக்கொண்டு இருப்பதை நீங்கள் பார்த்துக்கொண்டு ரசிப்பீர்களா?


இந்த கேள்விக்கான பதில் "ஆம்" என்று இருக்குமானால், உண்மையாகவே நீங்கள் தான் உண்மையான முஸ்லீம்.

ஒருவேளை உங்கள் பதில் "இல்லை" என்று இருக்குமானால்...

ஓடுங்கள்! முஸ்லீம்களே ஓடுங்கள்!

உங்களால் எவ்வளவு வேகமாக ஓடமுடியுமோ அவ்வளவு வேகமாக இஸ்லாமை விட்டு ஓடுங்கள்
.


 
Quote:
Would you enjoy watching your wife, sister or mother being raped by her captors, while you are shackled with a chain nearby?

If an answer to the question is yes, you surely are a perfect Muslim.

However, if your answer is no:

Run! Muslims, Run!!

Run away from Islam as fast as you can.

Source: http://www.news.faithfreedom.org/index.php?name=News&file=article&sid=1878

 

 

இஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்

முன் பக்கம் செல்ல

HOME PAGE

தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்

1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1

2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2

3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3

4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4

பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்

1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1

2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2

பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்

1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்

2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்