இஸ்லாம் அமைதி மார்கமா? இஸ்லாம் இனிய மார்கமா? இஸ்லாம் உண்மையான மார்கமா?

ஆன்சரிங் இஸ்லாம்

பல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்

சத்தியவான் தளம் செல்ல

Showing posts with label ஈசா குரான். Show all posts
Showing posts with label ஈசா குரான். Show all posts

Tuesday, October 23, 2007

Dr.zakirnayak அவர்களுக்கு பதில் அளிக்க ஈசா குரான் புதிய கலக்கல் வலைபூ ஆரம்பித்து உள்ளது

Dr Naik At Test (ஈஸா குர்-ஆன் 2)
http://tamilchristians.com/modules.php?name=Forums&file=viewtopic&p=5371#5371
நாம் இதுவரை டாக்டர் நாயக் அவர்களின் கட்டுரைகளுக்கு இரண்டு பதிலை கொடுத்துள்ளோம்.


1. ஆதரவிற்கு ஏமாற்றுதல் ஒரு ஆயுதம்: டாக்டர் ஜாகிர் நாயக்கின் சாயம் வெளுத்தது

2. டாக்டர் ஜாகிர் நாயக் மற்றும் யோவான் 1:1



இவருக்கு பதில் தருவதற்கு தனி தளம் ஆரம்பிக்கலாம் என்று ஒரு மாதத்திற்கு முன்பு ஒரு தளத்தை ஆரம்பித்தேன், ஆனால் இன்று தான் கட்டுரையை அதில் பதித்தேன்.

தளத்தின் பெயர்: Dr Naik At Test or Dr Naik Attest

( http://drnaikattest.blogspot.com/ )


இவருக்கு நாம் தரும் பதில் இத்தளத்திலும் பதியப்படும்.

இவருக்காக இஸ்லாமியர்கள் ஆரம்பித்த புதிய தளம்:

http://drzakirnayek.blogspot.com/

இவருடைய கட்டுரைகளை தமிழில் மொழி பெயர்த்து பதில் எழுதுவது என்றால் மிகவும் கடினம். ஆகையால் நான் தாமதித்தேன். ஆனால், நம் இஸ்லாமிய நண்பர்கள் இவருடைய கட்டுரைகளை தமிழில் மொழிபெயர்த்து இத்தளத்தில் பதித்துள்ளார்கள். இதனால், நம்முடைய வேலை சுலபமாகியது.

Tuesday, September 25, 2007

கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமியர்கள் கேள்விகளுக்கு ஈசாகுரான் ஆதாரபூர்வமாக பதில் அளிக்கிறது

கிறிஸ்தவர்கள்,இஸ்லாமியர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ஈசாகுரான் ஆதாரபூர்வமாக பதில் அளித்து வருகிறது.கிறிஸ்தவத்தின் மேல் சந்தேகமுள்ள இஸ்லாமியர்களும்,இஸ்லாமை பற்றி அற்றிந்து கொள்ள விரும்புகிறவர்களும் கேள்விக்களை கேட்கலாம்

http://www.geocities.com/isa_koran/tamilpages/QandA/QandAUmar/UmarQandA-1.htm

கேள்வியும் நானே, பதிலும் நானே - 1

    

கேள்வியும் நானே, பதிலும் நானே - 1


நம் தளத்தில் இஸ்லாம் பற்றிய கட்டுரைகள் வருகின்றன. சில கிறிஸ்தவர்களுக்கு இது தர்மசங்கடமாக இருக்கலாம். அதாவது, இப்படி நேரடியாக கட்டுரை எழுதாமல், அவர்களுக்காக ஜெபிக்கலாம் அல்லவா என்ற சந்தேகம், இன்னும் பல கேள்விகள் இருக்க வாய்ப்பு உள்ளது. எனவே, இந்த பதிவில் சில விவரங்களை கொடுக்கலாம் என்று நினைத்து, நானே கேள்விகளையும், பதிலையும் எழுதுகிறேன். நமக்கு கேள்விகள் மெயில் மூலமாக வந்தது என்றுச் பொய் சொல்லி நம்மால் கட்டுரைகள் எழுதமுடியாது. எனவே, தான் தலைப்பு : கேள்வியும் நானே, பதிலும் நானே என்று வைத்தேன். என் மெயில் விலாசம்: isa.koran@gmail.com or isa_koran@yahoo.co.in


1. உங்கள் தளத்தின் நோக்கம் என்ன? உங்கள் தளத்திற்கு "ஈஸா குர்-ஆன்" என்ற பெயர் வைத்ததற்கான காரணம் என்ன ?


என் தளத்தின் நோக்கம், இயேசுவைப் பற்றியும், பைபிளைப் பற்றியும் இஸ்லாமியர்கள் பறப்பிக்கொண்டு வரும் சில தவறாக கோட்பாடுகள் தவறு என்று தகுந்த ஆதாரங்களோடு எடுத்துச் சொல்வதாகும். பைபிளின் "தேவன்" குர்-ஆனின் "அல்லா" இல்லை என்பதை உலகிற்கு முக்கியமாக தமிழ் மக்களுக்குச் சொல்வதாகும்.

இயேசுவை தேவனின் வார்த்தை என்று பைபிள் சொல்கிறது, அது போல "குர்-ஆனை" இஸ்லாமியர்கள் இறைவனின் வார்த்தை என்றுச் சொல்கிறார்கள். எனவே தான் "ஈஸா குர்-ஆன்" என்று பெயர் வைத்தேன்
.


2. உங்கள் கட்டுரைகள் இஸ்லாமியர்களின் நம்பிக்கையை புண்படுத்தும் என்று நினைக்கிறேன். நான் நினைக்கிறது சரியா?


முதன் முதலில் 7ம் நூற்றாண்டில் முகமது "யூதர்களின் மற்றும் கிறிஸ்தவர்களின் நம்பிக்கைகள் தவறு", என்று சொன்னார். மக்கா மக்களின் வணக்க வழிபாடு தவறு என்றுச்சொன்னார். அப்போது அவர்கள் மனது புண்பட்டது. முகமது "உண்மை" என்று நம்பின தன் செய்தியைச் சொல்லும் போது, சிலருக்கு அது வேதனையை கொடுக்குமே என்பதற்காக, தன் செய்தியை சொல்லாமல் இருந்துவிட்டாரா! இல்லையே?

இயேசு தேவனின் குமாரன் இல்லை என்று சொன்னார்? கிறிஸ்தவர்கள் புண்பட்டார்கள். இப்போதும் இஸ்லாமியர்கள் அதையே செய்கின்றனர்.

இதில் புண்படுவதற்கு ஒன்றுமில்லை, சொல்லும் செய்தி உண்மையா இல்லையா என்று அவரவர் மனதிற்கு தெரியும். உண்மையென்று உங்கள் மனது சொன்னால், நம்புங்கள். இல்லையென்றால் விட்டுத்தள்ளுங்கள்.

இதைத் தான் நான் கிறிஸ்தவர்களுக்கு சொல்வேன். யாராவது இயேசுவைப் பற்றி விமர்சித்தால், உங்களுக்கு பதில் சொல்லமுடிந்தால் சொல்லுங்கள், இல்லையானால் விட்டுவிடுங்கள். விமர்சிப்பவர்கள் மீது அவதூறான வார்த்தைகளைச் சொல்லாதீர்கள்.

காயத்திற்கு மருந்து போடும் போது வலிக்கத்தான் செய்யும், அதற்காக நாம் மருந்துக்களே பயன்படுத்தாமல் இருக்கமுடியுமா? வியாதி போவது எப்படி?

இருந்தாலும், என் கட்டுரைகளில் பெரும்பான்மையாக வசன ஆதாரம் இல்லாமல் எதையும் முன்வைக்க மாட்டேன். மற்றும் "தறுதலைகள்", "காரி உமிழ்வார்கள்" என்று "இஸ்லாம் இணைய பேரவை" சொல்வதைப் போல நான் எழுதமாட்டேன், விமர்சிப்பவர்களை திட்டமாட்டேன்.

ஒரு வேளை நான் சொன்ன ஆதாரம் அல்லது செய்தி தவறாக இருக்கிறது என்று நிருபிக்கப்பட்டால், உடனே நான் அதை என் கட்டுரையிலிருந்து எடுத்துவிடுவேன், அல்லது ஒரு குறிப்பு செய்தியை அதைப் பற்றி தெரிவிப்பேன்.

எல்லாரையும் நேசிக்கும்படி என் வேதம் சொல்கிறது. எனவே, இஸ்லாமியர்களின் மனதை புண்படுத்துவது என் நோக்கமல்ல? எனக்கு தெரிந்த சில உண்மைகளைச் சொல்வது தான் என் நோக்கம்.

யாருடைய மனதாவது புண்பட்டு இருக்குமானால், என்னை மன்னிக்கும்படி வேண்டுகிறேன். அதற்காக நான் கட்டுரை எழுதுவதை நிறுத்தமுடியாது.

லூக்கா 8:16 ஒருவனும் விளக்கைக் கொளுத்தி, அதை ஒரு பாத்திரத்தினாலே மூடவுமாட்டான், கட்டிலின்கீழே வைக்கவுமாட்டான்; உள்ளே பிரவேசிக்கிறவர்கள் அதின் வெளிச்சத்தைக் காணும்படிக்கு அதை விளக்குத்தண்டின்மேல் வைப்பான்.


3. இஸ்லாமைப் பற்றி விமர்சிக்க கிறிஸ்தவத்தில் அனுமதியுண்டா? பைபிளிலிருந்து ஏதாவது ஒரு வசனத்தை ஆதாரமாக காட்டமுடியுமா ?

என் கட்டுரைகள் "இஸ்லாமை விமர்சிக்கின்றன" என்றுச் சொல்வதை விட "என் நம்பிக்கையைப் பற்றிய இஸ்லாமிய கேள்விகளுக்கு" அவைகள் பதிலாக அமைகின்றன எனலாம். இருந்தாலும், என்னை பொருத்தமட்டில், ஆரோக்கியமான விமர்சனம் நல்லது.

கிறிஸ்தவத்தில், ஒரு தேவனுடையை ஊழியக்காரன் எதிர் பேசுகிறவர்களுக்கும், மற்றவர்களுக்கும் சாந்தமாக பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளான்.


2 தீமோத்தேயு: 2:24. கர்த்தருடைய ஊழியக்காரன் சண்டைபண்ணுகிறவனாயிராமல், எல்லாரிடத்திலும் சாந்தமுள்ளவனும், போதகசமர்த்தனும், தீமையைச் சகிக்கிறவனுமாயிருக்கவேண்டும்.25. எதிர்பேசுகிறவர்கள் சத்தியத்தை அறியும்படி தேவன் அவர்களுக்கு மனந்திரும்புதலை அருளத்தக்கதாகவும்,26. பிசாசானவனுடைய இச்சையின்படி செய்ய அவனால் பிடிபட்டிருக்கிற அவர்கள் மறுபடியும் மயக்கந்தெளிந்து அவன் கண்ணிக்கு நீங்கத்தக்கதாகவும், சாந்தமாய் அவர்களுக்கு உபதேசிக்கவேண்டும்.


ஒரு தேவனுடைய ஊழியக்காரன் "கிறிஸ்தவர்களுக்கு கட்டுக்கதைகள்" சொல்லி அவர்களை சத்தியத்திலிருந்து சிலர் விலகச் செய்வதை காணும் போது, அவர்களுக்கு புத்திச் சொல்லவேண்டும், கண்டனம் செய்யவேண்டும்.

2 தீமோத்தேயு: 4:1. நான் தேவனுக்கு முன்பாகவும் உயிரோடிருக்கிறவர்களையும் மரித்தவர்களையும் நியாயந்தீர்க்கப்போகிற கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கு முன்பாகவும், அவருடைய பிரசன்னமாகுதலையும் அவருடைய ராஜ்யத்தையும் சாட்சியாக வைத்துக் கட்டளையிடுகிறதாவது,2. சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதையாய்த் திருவசனத்தைப் பிரசங்கம்பண்ணு; எல்லா நீடிய சாந்தத்தோடும் உபதேசத்தோடும் கண்டனம் பண்ணி, கடிந்துகொண்டு, புத்திசொல்லு.3. ஏனென்றால், அவர்கள் ஆரோக்கியமான உபதேசத்தைப் பொறுக்கமனதில்லாமல், செவித்தினவுள்ளவர்களாகி, தங்கள் சுய இச்சைகளுக்கேற்ற போதகர்களைத் தங்களுக்குத் திரளாகச் சேர்த்துக்கொண்டு,4. சத்தியத்துக்குச் செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்துபோகுங்காலம் வரும்.5. நீயோ எல்லாவற்றிலும் மனத்தெளிவுள்ளவனாயிரு, தீங்கநுபவி, சுவிசேஷகனுடைய வேலையைச் செய், உன் ஊழியத்தை நிறைவேற்று.

சில நேரங்களில் கடிந்துக்கொள்ளவேண்டிய அவசரம் வரலாம். இதைத் தான் தமிழ் கிறிஸ்டியன்ஸ் தளமும் செய்துக்கொண்டு இருக்கிறது.


தீத்து: 1:13. இந்தச் சாட்சி உண்மையாயிருக்கிறது; இது முகாந்தரமாக, அவர்கள் யூதருடைய கட்டுக்கதைகளுக்கும், சத்தியத்தை விட்டு விலகுகிற மனுஷருடைய கற்பனைகளுக்கும் செவிகொடாமல்,14. விசுவாசத்திலே ஆரோக்கியமுள்ளவர்களாயிருக்கும்படி, நீ அவர்களைக் கண்டிப்பாய்க் கடிந்துகொள்.


இப்படி இஸ்லாமியர்களுக்கு பதில் சொல்வதும், கிறிஸ்தவர்களுக்கு எச்சரிக்கை செய்வதும் ஒரு ஊழியக்காரனின் கடமையாகும். ஒவ்வொரு விசுவாசியும் தேவனுடைய ஊழியக்காரனே.


4. உங்கள் கட்டுரைகளைப் படிக்கும் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களை தவறாக புரிந்துக்கொள்ள வாய்ப்பு உள்ளது என்று நினைக்கிறேன் .


கிறிஸ்தவர்கள் அப்படி தவறாக புரிந்துக்கொள்ள வாய்ப்புக்கள் மிக மிக குறைவு, காரணம்:

1. கிறிஸ்தவர்கள் பைபிளை படிக்கிறார்கள்(படிக்கனும்), எனவே, எது சரி எது தவறு என்று சரியாக நிதானிக்க அவர்களால் முடியும்.

2. ஆலயத்திற்குச் செல்லும் கிறிஸ்தவன் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமைகளில் தன்னைத் தான் சோதித்து அறிவான், போதகரின் போதகத்தைக் கேட்கிறான். எனவே, அவன் எல்லாரையும் நேசிக்கவேண்டும் என்ற இயேசுவின் கட்டளையை பின்பற்ற வேண்டும்.

3. பைபிளில் இல்லாத வார்த்தைகளை நாம் அவர்களுக்குச் சொன்னால் அவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அல்லா குர்-ஆனில் சொன்னது போல "யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் நண்பர்களாக" ஏற்றுக்கொள்ளவேண்டாம் என்று, பைபிள் சொல்வதில்லை. முஸ்லீம்களையும் மற்ற மார்க்கத்தை பின்பற்றுபவர்களை நண்பர்களாக ஏற்றுக்கொள்ளவேண்டாம் என்று நான் சொன்னால், எந்த ஒரு கிறிஸ்தவனும் ஏற்றுக்கொள்ளமாட்டான்.

4. இன்னும் சொல்லப்போனால், ஒரு கிறிஸ்தவன் இஸ்லாமை அதிகமாக அறியும் போது, அவன் முஸ்லீம்களுக்காக அதிகமாக தேவனிடம் வேண்டுதல் செய்வான், அதற்கு பதிலாக விரோதிக்கமாட்டான்(விரோதிக்கக்கூடாது).

5. தமிழ் கிறிஸ்டியன்ஸ் தளத்தில் இஸ்லாமிய கட்டுரைகள், செய்திகளை எல்லாரும் படிக்கிறார்கள், பதிவுசெய்கிறார்கள். இருந்தாலும், அதை படிக்கும் வாசகர்கள் என்ன பதில்(பின்னூடல்) எழுதுகிறார்கள் என்று பாருங்கள். முஸ்லீம்களுக்காக ஜெபிப்போம், காத்திருப்போம் தேவன் உதவிசெய்வார் என்று எழுதுகிறார்களே தவிர, அவர்கள் அழிக்கப்படவேண்டும் என்று யாரும் எழுதுவதில்லை. அது தான் கிறிஸ்துவம், இதைத் தான் இயேசு போதித்தார்.

எனவே, கிறிஸ்தவர்கள் தவறாக புரிந்துக்கொள்ளமாட்டார்கள். அப்படி நினைப்பவர்கள் கிறிஸ்தவர்கள் அல்ல.


5. உங்களின் இந்த முயற்சி நல்ல பலனைத் தரும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா ?


கட்டாயமாக பலன் தரும். முக்கியமாக இஸ்லாமியர்களுக்கு பதில் சொல்வது, ஆங்கிலத்தில் பல ஆண்டுகளுக்கு முன்புலிருந்து நடந்துவருகிறது. ஆனால், இந்தியாவில் அது குறைவு, சொல்லப்போனால் இல்லை என்றே சொல்லலாம்.

இப்போது சிலர் எழுத ஆரம்பித்துள்ளார்கள், முக்கியமாக தமிழ் கிறிஸ்தவ தள வாசகர்கள் "மைகோவை", " தேவன்", "ரமேஷ்பிஸ்", மற்றும் தனி தளம் மூலம் கட்டுரைகளை பதிக்கும் "உண்மையடியான்" என்றுச் சொல்லி பலர் எழும்பியுள்ளனர். இன்னும் சில ஆண்டுகளில் பலர் எழுத ஆரம்பிப்பார்கள். எத்தனையோ பேருக்கு எழுதவேண்டும் என்ற ஆவல் இருக்கிறது, ஆனால், இப்போது தான் அதற்கு வாய்ப்பு "தமிழ் கிறிஸ்டியன்ஸ்" தளம் மூலமாக உருவாகியுள்ளது.

முக்கியமாக ஆங்கிலத்தில் அனேக கட்டுரைகள் இணையத்தில் கிடைக்கிறது. அதாவது இவைகளை மொழிபெயர்த்தாலே போதும், இஸ்லாமியர்கள் முன்வைக்கும் எல்லா கேள்விகளுக்கும் பதில் கிடைத்துவிடும். நாம் ஒன்றும் தனியாக கட்டுரைகளை எழுதவேண்டியதில்லை.

கிறிஸ்தவர்களுக்கு இஸ்லாமைப் பற்றிச் சொல்வதும், இஸ்லாமியர்களுக்கு இயேசுவைப் பற்றிச் சொல்வதுமே என் தளத்தின் முக்கிய நோக்கமாகும்.


6. ஒருவேளை உங்கள் முயற்சியினால், ஒரு நன்மையும் விளையவில்லை என்று வைத்துக்கொள்வோம்? அப்போது உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?


இது என் வேலை இல்லை. இது தேவனின் வேலை. எனக்கு கிடைக்கும் ஒரு சில மணித்துளிகளை பயன்படுத்தி சில கட்டுரைகளை எழுதுகிறேன், அவ்வளவு தான். எங்களுடைய வேலை விதையை விதைப்பது(தூவுவது), நீர் பாய்ச்சுவது அவ்வளவு தான், விளையச் செய்து தேவன் தான்.

இன்றைக்கு செடி நடுகிறோம், அது உடனே பலன் தருவதில்லை. அதற்கு பல ஆண்டுகள் ஆகும், அப்போது தான் அதன் கனிகளை நம் கண்களில் காணமுடியும். அது வரையில் நாம் அவசரப்படுவதில் அர்த்தமில்லை.

சங்கீதம் 126:6 அள்ளித்தூவும் விதையைச் சுமக்கிறவன் அழுதுகொண்டு போகிறான்; ஆனாலும் தான் அறுத்த அரிகளைச் சுமந்துகொண்டு கெம்பீரத்தோடே திரும்பிவருவான்.

எனவே, பலன் உண்டா இல்லையா என்பது இப்போது கேள்வியில்லை.

பலன் விளையவில்லை என்று சொல்லமுடியாது. ஏற்கனவே பலன் விளைந்துவிட்டது. அதாவது தமிழிலே பல இஸ்லாமிய தளங்கள் உருவாகியுள்ளன. கேள்விகள் கேட்டு பதில் கொடுத்தால் தானே விவரங்கள் புரியும். அனேக இஸ்லாமிய சகோதரர்கள் பைபிள் சம்மந்தப்பட்ட கட்டுரைகளை எழுதுகிறார்கள்.

தமிழ் முஸ்லீம், இது தான் இஸ்லாம் தளமும் தொடர்ந்து கிறிஸ்தவ தலைப்பில் கட்டுரைகளை எழுதுகிறார்கள். அவைகளுக்கு பதில்கள் தரப்படுகின்றன. பல ஆயிரம் பேர் படித்துக்கொண்டு இருக்கிறார்கள். எத்தனையோ கிறிஸ்தவர்களுக்கு இஸ்லாம் பற்றிய அறிவு பெருகிக்கொண்டு இருக்கிறது. மற்றும் பல இஸ்லாமியர்களுக்கும் உண்மை கிறிஸ்தவம் என்னவென்று புரிந்து இருக்கும். எனவே காத்திருப்போம், ஜெபிப்போம், ஜெயம் பெருவோம்.


7. கிறிஸ்தவர்கள் முதல் முதலில் எப்போது இப்படி இஸ்லாமுக்கு பதில்கள், மறுப்புக்கள் எழுதினார்கள்?


முதன் முதலில் என்று சொல்லவேண்டுமானால், முகமதுவின் காலத்திலேயே கிறிஸ்தவர்களும், யூதர்களும் நேரடியாக அவரிடமே சில கேள்விகளை கேட்டுயிருப்பதை சொல்லமுடியும். ஆனால், எனக்கு தெரிந்த ஒரு விவரத்தை சொல்லவிரும்புகிறேன்.

அதாவது முஸ்லீம் காலிஃபா "அல்-மாமுன் (கி.பி. 813 to 833)" என்பவரின் அரச சபையில் இப்படி ஒரு "கேள்வி பதில்" நிகழ்ச்சி நடந்ததாக ஒரு புத்தகம் உள்ளது.

இந்த கருத்து பரிமாற்றம் கிறிஸ்தவரான அல்-கின்டி(Al-Kindy) மற்றும் முஸ்லீமான ஹாஷிமி(Al-Hashimi ) என்பவருக்கும் இடையே நடந்ததாக சொல்லப்படுகிறது. இந்த பரிமாற்றம் பாதுகாப்பை கருதி, அரச சபையில் நடத்தப்படாமல், தனியே நடந்ததாக சொல்லபடுகிறது.

இந்த புத்தகத்தில் முதலாவது, கிறிஸ்தவரகளை இஸ்லாமுக்கு வரும்படி அழைப்பு விடுக்கப்படுகிறாதாம், அதனை கிறிஸ்தவர் மறுத்து, இஸ்லாமியர்களை கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொள்ளும்படி அழைப்பு விடுப்பதாக உள்ளதாம். இந்த புத்தகத்தில் கிறிஸ்தவர் கொடுக்கும் பதில் சுமாராக புத்தகத்தின் மொத்த அளவில் ஏழில் ஆறு பாகம் உள்ளதாம். நான் சில பக்கங்களை மட்டுமே படித்தூள்ளேன்.

இந்த புத்தகத்தை 1880ல் வில்லியம் முர் என்பவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்தார்.


1. Apology_of_al-Kindy ஆங்கிலத்தில் இங்கு படிக்கலாம்

2.
Download Apology_of_al-Kindy in PDF format

3. Download Apology_of_al-Kindy zip format

4. About Abd_al-Masih_ibn_Ishaq_al-Kindi in Wikipedia

5. About Apology_of_al-Kindy_(book) in Wikipedia


Quote:
Reference: William Muir, The Apology of Al Kindy, Written at the Court of Mâmûm (Circa A.H. 215; A.D. 830), In Defence Of Christianity Against Islam, Society For Promoting Christian Knowledge, London, England, Second Edition, 1887, pp. 122.

Background: Abd al-Masih ibn Ishaq al-Kindi wrote an apology of the Christian faith to al-Hashimi while serving in the court of the Caliph Al-Mamun in approximately the year A.H. 215 (A.D. 830). This edition of the text was originally prepared by Sir William Muir and first published in 1887. Muir gives the historical setting of the dialogue between al-Kindi and al-Hashimi and includes extensive quotations from this ancient work.


Source:
http://en.wikipedia.org/wiki/Apology_of_al-Kindy_(book)

The Apology (or Risāla) purports to be a record of a dialogue between a Muslim and a Christian. In fact, the book contains two apologies: The Muslim first invites the Christian to embrace Islam. The Christian declines this and in turn invites the Muslim to embrace Christianity. The Christian's answer comprises some six sevenths of the text.

The two participants are referred to by pseudonyms, according to the text to secure their safety. [4]. The Muslim participant, called "Abd-Allah ibn Ismail al-Hashimy" (which translates as "Servant of Allah, son of Ishmael, from the clan Banu Hashim), is described as a cousin of the unnamed Caliph, living in the Caliph's castle and being well versed in Christian theology. He is also described as having a close and trusted Christian friend called "Abd al-Masih ibn Ishaq al-Kindi" (which translates as "Servant of the Messiah, son of Isaac, from the clan Banu Kindah").

In his preface, Muir identifies the Caliph, who remains unnamed in the epistles, as Al-Ma'mun, who reigned from 813 to 833, arguing that


http://en.wikipedia.org/wiki/Abd_al-Masih_ibn_Ishaq_al-Kindi

Abd al-Masih ibn Ishaq al-Kindi (Arabic,عبد المسيح ابن اسحاق الكندي )(English: servant of Messiah, son of Isaac, from the clan of Kindah) is the alias of a Christian character in the medieval theological work Apology of al-Kindy. The book was translated into Latin by a team working for Peter the Venerable, and into English by Sir William Muir. Abd al-Masih ibn Ishaq al-Kindi lived in the 9th century.


இவைகள் ஒரு சில விவரங்கள் மட்டுமே, முழுவிவரத்திற்கு கொடுக்கப்பட்ட தொடுப்புக்களில் சென்று பார்க்கவும். இன்னும் பலர் இப்படி பல காலங்களில் பதில் கொடுத்துள்ளார்கள். இப்புத்தகத்தை படிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.


8. உங்கள் கட்டுரைகளில், முஸ்லீம்களுக்கு "குர்-ஆனை", "ஹதீஸ்களை", "முகமதுவின் சரிதைகளை" படிக்கும் படி சொல்கிறீர்களே, இது கொஞ்சம் அதிமாக படவில்லை உங்களுக்கு? கிறிஸ்தவர்களைப் பார்த்து நீங்கள் பைபிள் படியுங்கள் என்று ஒரு இஸ்லாமியர் சொன்னால் எப்படி இருக்கும் ?


முதலாவது ஒன்றை நாம் புரிந்துக்கொள்ளவேண்டும், அது என்னவென்றால், இஸ்லாமியர்கள் முதலாவது குர்-ஆனை படிக்க ஆரம்பிப்பது அரபியில் தான். தங்கள் தாய் மொழியில் இல்லை. இஸ்லாமிய அறிஞர்கள் சொல்லும் சில நல்ல வசனங்கள், ஹதிஸ்கள் மட்டும் தான் அவர்களுக்கு தெரியும், அதாவது நான் சொல்வது ஒரு சராசரி சாதாரண முஸ்லீமைப்பற்றி. அதனால், தான் நான் அவர்களை குர்-ஆனை படிக்கும் படி சொல்கிறேன். ஹதீஸ்களை படிக்கும்படி சொல்கிறேன். குர்-ஆனை அரபியில் படிக்க உட்சாகப்படுத்தும் அளவிற்கு, தங்கள் தாய்மொழியில் படிக்க இஸ்லாமியர்கள் உட்சாகப்படுத்துவதில்லை. நான் சொல்வது இந்திய முஸ்லீம்களைப் பற்றி. அவர்கள் அப்படி தாய் மொழியில் படித்தால், சில உண்மைகள் அவர்களுக்கு புரியும் என்பது என் கருத்து.

ஆனால், கிறிஸ்தவர்களின் நிலை அப்படி இல்லை. எல்லாரும் தங்களுக்கு தெரிந்த மொழியில் அதுவும் பல மொழிகளில் படிக்கிறார்கள். ஆகையினால், கிறிஸ்தவர்களைப் பார்த்து பைபிளை படி என்றுச் சொன்னால், அவர்கள் அமோதிப்பார்கள்.

1. முகமதுவும் அவருடைய தோழர்களும் 10 ஆண்டுகளுக்கு மேலாக "எருசலேமில் உள்ள தேவலயத்தை" நோக்கியே தொழுதார்கள் என்றும், பிறகு தான் அதை "விக்கிரகங்கள் இருக்கும்" காபாவிற்கு முகமது மாற்றினார் என்று எத்தனை முஸ்லீம்களுக்குத் தெரியும்?

2. முகமதுவிற்கு முந்தைய வேதம் அல்லது நபிகள் பற்றி சந்தேகம் வந்தால், அதை தீர்த்துக்கொள்ள யூதர்களையும் அல்லது கிறிஸ்தவர்களை கேட்டு தெரிந்துக்கொள் என்று அல்லா அவருக்கு கட்டளை கொடுத்துள்ளது எத்தனை முஸ்லீம்களுக்குத் தெரியும்?


3. முகமது எத்தனை போர்கள் புரிந்தார் என்று எத்தனை முஸ்லீம்களுக்குத் தெரியும்?

4. முஸ்லீம்களுக்கு தங்கள் மனைவிகளை அடிக்க அல்லா அனுமதி கொடுத்த வசனம் குர்-ஆனில் இருப்பது எத்தனை பேருக்குத் தெரியும்?

5. முகமதுவிற்கு எத்தனை மனைவிகள் என்று எத்தனை முஸ்லீம்களுக்கு தெரியும்?



இப்படி சொல்லிக்கொண்டு போகலாம், அதனால் தான் முதலாவது அவர்கள் மார்க்கம் பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள் என்றுச் சொல்கிறேன்.

கிறிஸ்தவம் என்னவென்று தெரிந்துக்கொள்ளவேண்டுமா - இயேசுவின் வாழ்க்கையைப் படி.
இஸ்லாம் என்னவென்று தெரிந்துக்கொள்ளவேண்டுமா - முகமதுவின் வாழ்க்கையைப் படி.


மட்டுமல்ல, கிறிஸ்தவர்களுக்கும் நான் குர்-ஆன் படியுங்கள், ஹதீஸ் படியுங்கள் என்று சொல்கிறேன். இப்படி ஒரு முஸ்லீம் தளத்தில் " இஸ்லாமியர்களே நீங்கள் பைபிள் படியுங்கள், படித்து தெரிந்துக்கொள்ளுங்கள்" என்று இஸ்லாமிய அறிஞர்கள் தங்கள் வாசகர்களுக்கு சொல்லமுடியுமா?


9. இப்படி கட்டுரைகளை எழுதுவதற்கு பதிலாக பல இஸ்லாமிய அறிஞர்கள் நடத்தும் இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம், டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களின் கேள்வி பதில் நிகழ்ச்சிகள் போன்ற நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று அங்கு கேள்விகள் கேட்கலாம் அல்லவா? உங்களுக்கு இன்னும் உதவியாக இருக்கும் அல்லவா ?


இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளில் அனேகமாக நாம் கேள்வி கேட்கத்தான் அனுமதிக்கப்படுகிறோமே ஒழிய பதில் சொல்ல அல்ல. அது மட்டுமல்லாமல், நமக்கு கொடுக்கப்படும் சில மணித்துளிகளில் நாம் என்ன சொல்லவருகிறோம் என்று சொல்வதற்கு முடிவதில்லை. எனவே, இவைகளில் எனக்கு நம்பிக்கை இல்லை.

ஆனால், இப்படி இணையத்தில் கட்டுரைகள், கேள்வி பதில்கள் எழுதுவதினால், நிறைய விவரங்களை ஆதாரங்களை நாம் சொல்லமுடியும். எனவே, நான் கிறிஸ்தவர்களை கேட்டுக்கொள்வேன், இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கு பெருங்கள், ஆனால், கேள்விகள் எதுவும் கேட்கவேண்டாம். அதனால், ஒரு நன்மையும் நமக்கு உண்டாகப்போவதில்லை. ஏதாவது சொல்லவேண்டுமென்றால், இணையத்தில் எழுதுங்கள் இதனால் அதிக நன்மைகள் விளையும்.
10. நீங்கள் கிறிஸ்தவர்களுக்கு ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?

இன்றைய காலகட்டத்தில் அனேக இஸ்லாமிய நிகழ்ச்சிகள் நடக்கிறது. அவைகளில் பல கிறிஸ்தவ கேள்விகளுக்கும் அவர்கள் குர்-ஆன் அடிப்படையில் பதில் சொல்கிறார்கள். இந்நிகழ்ச்சிகளில் பங்கு பெருங்கள்.

குர்-ஆனையும், ஹதீஸ்களையும் படியுங்கள், அப்போது தான் பைபிள் சொல்லும் செய்திக்கும், குர்-ஆன் சொல்லும் செய்திக்கும் இடையே உள்ள வித்தியாசங்கள் புரியும்.

இஸ்லாமிய அறிஞர்கள் சொல்லும் செய்தியை மட்டும் கேட்டுவிட்டு இது தான் இஸ்லாம் என்று நினைக்கவேண்டாம். அது மிகப்பெரிய தவறு. இஸ்லாமில் உள்ள சில நல்ல விவரங்களை மட்டும் தான் அவர்கள் முன்வைப்பார்கள், எனவே நீங்களாகவே குர்-ஆனை, ஹதீஸ்களை படியுங்கள். அப்போது தான் உண்மை விளங்கும்.

உதாரணத்திற்கு, ஒருவன் இஸ்லாமில் சேர்ந்துவிட்ட பிறகு அதிலிருந்து வெளியே வந்துவிட்டால், அவனுக்கு இஸ்லாமில் மரண தண்டனை உண்டு. பல இஸ்லாமிய நாடுகளில் இப்படி ஷரியா சட்டம் உண்டு. அதை இஸ்லாமியர்கள் முதலில் உங்களுக்கு சொல்லமாட்டார்கள். டாக்டர் ஜாகிர் நாயக் கூட சொல்லியிருக்கிறார், இஸ்லாமிய நாடுகளில் ஒரு முஸ்லீம் வேறு மதத்திற்கு மாறினால், அவனுக்கு மரணதண்டனை என்று. தெரியாமல் உள்ளே நிழைந்துவிட்டீர்கள், பிறகு எக்காரணத்தைக் கொண்டும் வெளியே வரமுடியாது.

இந்தியாவில் அப்படி சட்டம் இல்லை என்றுச் சொல்லலாம், ஆனால், இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சி நடக்கவில்லை என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். ஒரு வேளை இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சி நடக்குமானால், ஷரியா சட்டம் கொண்டுவந்தால், நிச்சயமாக இதே ஜைனுல் ஆபிதீன் அவர்கள், ஜாகிர் நாயக் அவர்கள் இதற்கு அனுமதி அளிப்பார்கள்.

எனவே, எச்சரிக்கையாக இருக்கவேண்டுகிறேன்.

மத்தேயு: 7:15. கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள்; உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள். 16. அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்; முட்செடிகளில் திராட்சப்பழங்களையும், முட்பூண்டுகளில் அத்திப்பழங்களையும் பறிக்கிறார்களா? 17. அப்படியே நல்ல மரமெல்லாம் நல்ல கனிகளைக் கொடுக்கும்; கெட்ட மரமோ கெட்ட கனிகளைக் கொடுக்கும். 18. நல்ல மரம் கெட்ட கனிகளைக் கொடுக்கமாட்டாது; கெட்ட மரம் நல்ல கனிகளைக் கொடுக்கமாட்டாது. 19. நல்ல கனி கொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும். 20. ஆதலால், அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்.


கர்த்தருக்கு சித்தமானால் தொடரும்...
 

Wednesday, September 19, 2007

"இயேசுவிற்கு நேர்ந்ததென்ன? - 6" கட்டுரைக்கு ஈஸா குர்-ஆன் இணையம் பதில்

                      
இது தான் இஸ்லாம் இணையத்தின் இயேசுவின் பிற‌ப்பு க‌ட்டுரை 6க்கு ஈசா குரான் இணைய‌ம் ப‌தில்

http://www.geocities.com/isa_koran/tamilpages/Rebuttals/jesushistory-6.htm

முன்னுரை:

இது தான் இஸ்லாம் தளம் ஒரு திருத்தப்பட்ட ஜிமெயில் படத்தை வெளியிட்டது. அவர்களின் நேர்மையை நிருபிப்பதற்கு, என்னை குற்றப்படுத்துவதற்கு வெளியிடப்பட்ட படம் பொய்யானது என்று தகுந்த ஆதாரத்துடன் நான் ஒரு கட்டுரையை எழுதினேன். இதுவரை அவர்கள் அதற்கு பதில் தரவில்லை. இதற்கு தகுந்த பதில் தரும்வரை என் எல்லா மறுப்புக்களில் இதை நான் தெரிவித்துக்கொண்டு இருப்பேன். அவர்களின் இந்த மௌனம் தங்கள் நேர்மையின்மையை காட்டுகிறது. அவர்கள் செய்தது தவறு தான் என்பது நிருபிக்கிறது. இருந்தாலும் அவர்களிடமிருந்து நான் பதிலை எதிர்பார்க்கிறேன்.

இது தான் இஸ்லாம் மற்றும் தமிழ் முஸ்லீம் தளம் தயாரித்த "போலி படத்தையும்" அதைப் பற்றிய என் கட்டுரையும் இங்கு படிக்கவும்.

Other Links:
1. இதர மறுப்புக்கட்டுரைகள்      2. Isa Koran Blog



"இயேசுவிற்கு நேர்ந்ததென்ன? - 6" கட்டுரைக்கு ஈஸா குர்-ஆன் பதில்

இது வரை "இது தான் இஸ்லாம்" எழுதிய "இயேசுவின் வரலாறு" 5 தொடர்களுக்கு பதில் தரப்பட்டுள்ளது, அவைகளை இங்கு படிக்கலாம் . இப்போது "இயேசுவிற்கு நேர்ந்ததென்ன?" தொடர் 6க்கு பதிலை பார்க்கலாம்.

ஜி.நிஜாமுத்தீன்

Thursday, August 30, 2007

இயேசுவுக்கு நேர்ந்ததென்ன..? - 6

இயேசு சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்பட்டார் என்று கிறிஸ்த்தவர்கள் நம்பினால், ஈஸா சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்படவில்லை. அவர் இயற்கையாகவே மரணித்து விட்டார். அவர் இடத்தைப் பூர்த்தி செய்ய, கிறிஸ்த்தவர்களுக்கு வழிகாட்ட கர்த்தர் என்னை தேர்ந்தெடுத்துள்ளார் என்றக் கொள்கையுடன் ஒருவர் வெளிபட்டார்.

......................................................................................................................

தொடர் - 6 (பரங்கிப்பேட்டை.ஜி.நிஜாமுத்தீன்)

இயேசு அற்புதமான முறையில் பிறந்து பிறந்தவுடன் தன் தாயின் கற்புக்கு கொடுத்த உத்திரவாதம், இயேசுவின் அற்புத பிறப்பில் பொதிந்துள்ள விஞ்ஞான உண்மை - அத்தாட்சிப் போன்றவற்றை கடந்த தொடர்களில் கண்டோம். (குறிப்பாக தொடர் - 4) இத்தொடரில் இயேசுவின் முதல் பேச்சில் பொதிந்துள்ள ஆழத்தையும், கிறிஸ்த்தவர்கள் பெற வேண்டிய பாடத்தையும், முஸ்லிம்களிடம் இருக்கக் கூடிய சந்தேகங்கள் அதற்கான பதில்கள் இவைகளைப் பார்ப்போம்.



ஈஸா குர்-ஆன்:

இயேசுவின் சிலுவை மரணத்தைக் குறித்து குர்-ஆன் சொல்லும் நிகழ்ச்சிப் பற்றிய ஒரு கட்டுரையை மொழிபெயர்த்துள்ளேன். இக்கட்டுரையை படிப்பவர்கள் இயேசு சிலுவையில் அறையப்பட்டாரா இல்லையா என்பதை! மிகவும் தெளிவாக புரிந்துக்கொள்வார்கள்.

கட்டுரையின் தலைப்பு: ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸீஹா
(அறியாமையினால் அல்லா ஆரம்பித்த கிறிஸ்தவம் – Allah Starts Christianity … By Accident )

கட்டுரையின் சுருக்கம்:


1. குர்-ஆன் படி, இயேசு ஒரு இஸ்லாமிய நபி.
2. பிறந்ததிலிருந்து இஸ்லாமிய கோட்பாட்டை இஸ்ரவேல் மக்களுக்கு போதித்தார்.
3. அவரை சிலுவையில் அறையச் செல்லும் போது, அல்லா "எல்லாரையும் ஏமாற்றி" இயேசுவை தன் அளவில் எடுத்துக்கொண்டார்.
4. யூதர்கள் "நாங்கள் இயேசுவை சிலுவையில் அறைந்து கொன்றுவிட்டோம்" என்று நினைத்தார்கள்.

அல்லாவின் இந்த ஏமாற்றுச் செயல் எப்படி கிறிஸ்தவம் (இஸ்லாம் படி ஒரு பொய் மதம்) உருவானது என்றும், இந்த ஏமாற்றுச் செயலால் இன்று கிட்டத்தட்ட இரண்டு பில்லியன் கிறிஸ்தவர்கள் கிறிஸ்தவத்தை பின்பற்றவும், கிறிஸ்தவம் ஒரு மிகப்பெரிய மதமாக மாறவும் எப்படி அல்லா காரணமானார் என்றும் இக்கட்டுரை அலசுகிறது.

இனி "இயேசுவிற்கு நேர்ந்ததென்ன தொடர் 6" கட்டுரையைப் பற்றி சிந்திப்போம்.

நான் என் முந்தைய பதில்களில் பல கேள்விகள் முன்வைத்துள்ளேன். அதாவது ,


1. இயேசுவின் தாய் தூர இடத்திற்குச் சென்றது எப்படி ஊரில் உள்ளவர்களுக்கு தெரியாமல் போனது?
2. யோசேப்பு தன் மனைவி ஆகப்போகிறவள் எங்கே? என்று கேட்டு இருந்தால்? சகரியாவின் பதில் என்னவாக இருந்திருக்கும்?
3. மரியாளை மௌனவிரதம் இருக்கச் சொல்லி, அல்லா மரியாளை பேசச் சொல்கிறார்? இது எப்படி சாத்தியம்?
4. தன் உயிர் போகும் அளவிற்கு மரியாள் பிள்ளைபெறும் போது துடிக்கும் போது! அல்லா உணவிற்கு வழி காட்டுகிறார், அதுவும் அந்த நேரத்திலும் பழங்களுக்காக மரத்தை உலுக்கவேண்டுமாம் ?
5. குர்-ஆன் சொல்கிறதைப் பார்த்தால், மரியாளுக்கு மூன்று மாதம் ஆவதற்கு முன்பு தூர இடத்திற்கு சென்று இருக்கவேண்டும், இது உண்மையானால், அதன் பிறகு 6 மாதமாக ஒருவரும், அதாவது யோசேப்பும் கூடவா? மரியாள் எங்கே என்று தேடவில்லை?

ஆனால், இந்த எந்த கேள்விக்கும் அல்லாவிடமும் பதில் இல்லை, குர்-ஆனிலும் இல்லை. இப்படி நடைமுறைக்கு ஏற்காத விதத்தில் குர்-ஆனில் பைபிளின் நிகழ்ச்சிகள் திருத்தப்பட்டு சொல்லப்பட்டுள்ளது. நான் "இது தான் இஸ்லாம் மற்றும் தமிழ்முஸ்லீம்" தள நண்பர்களிடம் கேட்கிறேன், நீங்களாகவது குர்-ஆன் சொல்லும் நிகழ்ச்சியை கற்பனையில் கொண்டுவந்து இதற்கு பதில் சொல்லுங்கள்.


1. மரியாள் அவ்வளவு தூரம்(மைல்கள்) சகரியாவின் வீட்டைவிட்டு சென்று இருப்பார்கள்?
2. எத்தனை மாதம் அப்படி தூரமாக இருந்துஇருப்பார்கள்?
3. மரியாள் சகரியாவின் வீட்டில் இல்லாத இந்த சில மாதங்கள், சகரியாவின், யோசேப்பின், மற்றும் ஊர் மக்களின் நிலை என்ன? அவர்கள் என்ன நினைத்து இருப்பார்கள்? அவர்கள் என்ன செய்து இருப்பார்கள்?
4. அல்லா, வலியால் துடிக்கும் மரியாளைப் பார்த்து ஏன் மரத்தை உளுக்கச்சொல்கிறார்?
5. யோசேப்பு பற்றி ஏன் ஒரு விவரமும் அல்லா சொல்லவில்லை?
6. மரியாள் யோசேப்பிற்கு நிச்சயமாக பிறகு, இயேசுவின் செய்திப் பற்றி தூதன் சொல்கிறாரா? அல்லது அதற்கு முன்பா? அல்லது யோசேப்பு என்ற ஒரு நபரே மரியாளின் வாழ்வில் இல்லையா?

 

குர்-ஆன் இதைப் பற்றி சொல்லாததால், இப்படி நடந்து இருக்க வாய்ப்பு உள்ளது என்று ஒரு கற்பனை செய்துச் சொல்லுங்கள். நீங்கள் சொல்வது நடைமுறைக்கு ஏற்றதாக இருக்கிறதா என்றும், பைபிள் சொல்லும் விவரங்கள் நடைமுறைக்கு ஏற்றதாக இருக்கிறதா என்றும் இக்கட்டுரைகளை படிக்கும் வாசகர்கள் தெரிந்துக்கொள்ளட்டும்.


ஜி.நிஜாமுத்தீன்

ஈஸா - இயேசு முதல் முதலில் வாய்திறந்தவுடன் சொன்ன வார்த்தை அவரது அடிமைத்தனத்தை வெளிபடுத்துகின்றது.

'இன்னி அப்தல்லாஹ்' நிச்சயமாக நான் கர்த்தரின் அடிமையாவேன். இறைவனுக்கு முன், அவனது பணியில் தனது அடிமைத்தனத்தை வெளிபடுத்துவதற்கு எந்தத் தீர்க்கதரிசியும் தயங்கியதே இல்லை.

மஸீஹ் (என்ற ஈஸாவும்) இறைவனுக்கு நெருக்கமான வானவர்களும் அவனுக்கு அடிமையாக இருப்பதில் ஒரு போதும் இருமாப்புக் கொள்ள மாட்டார்கள் என்று இறைவன் திருக்குர்ஆனில் சொல்லிக் காட்டுகிறான். (அல் குர்ஆன் 4:172)

அடியாராகப் பிறந்து அடியாராகவே இறைப் பணி செய்து, அடியாராகவே இன்றுவரை வாழ்ந்துக் கொண்டிருக்கும் ஈஸா பிற்காலத்தில் ஞானமில்லாத சிலரால் தேவக்குமாரனாக்கப்படுவார் என்பதையும் அது மிகப்பெரிய தவறு என்பதையும் உணர்த்தும் விதமாகவே அவர் முதன் முதலில் பேசிய பேச்சிலேயே 'நான் இறைவனின் அடிமைத்தான்' என்பதை தெளிவுபடுத்தி விடுகின்றார்.

நான் இறைவனின் அடிமைத்தான். ஆனால் இறைவன் என்னை அழைப்புப் பணிக்காக நியமித்துள்ளான். எனக்கு வேதத்தையும் வழங்கியுள்ளான் என்பதை அடுத்துக் கூறுகிறார். ஆதானியல் கிதாப வஜஅலனி நபிய்யா.

தீர்க்க தரிசனம் உரைப்பவராக இறைவனின் தூதராகத்தான் அவர் வந்துள்ளாரேத் தவிர இறைமகனாக அவர் வரவில்லை.



ஈஸா குர்-ஆன்:

ஆமாம், பிற்காலத்தில் ஞானமில்லாத சிலர் சிலரை தீர்க்கதரிசி என்று நம்புவார்கள், அவர்களைப் போல ஏமாறவேண்டாம் என்று இயேசு தன் சீடர்களுக்கு எச்சரிக்கை கொடுத்துள்ளார். இதே கட்டளை இயேசுவின் சீடர்கள் மூலமாகவும் மற்றவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

மத்தேயு 7:15 கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள் ; அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள்; உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள்.

மத்தேயு 24:11 அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, அநேகரை வஞ்சிப்பார்கள் .

மத்தேயு 24:24 ஏனெனில், கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள்.

2 பேதுரு 2:1 கள்ளத்தீர்க்கதரிசிகளும் ஜனங்களுக்குள்ளே இருந்தார்கள், அப்படியே உங்களுக்குள்ளும் கள்ளப்போதகர்கள் இருப்பார்கள்; அவர்கள் கேட்டுக்கேதுவான வேதப்புரட்டுகளைத் தந்திரமாய் நுழையப்பண்ணி , தங்களைக் கிரயத்துக்குக்கொண்ட ஆண்டவரை மறுதலித்து, தங்களுக்குத் தீவிரமான அழிவை வருவித்துக்கொள்ளுவார்கள்.


மேலே சொல்லப்பட்ட வசனங்களின் படி கிறிஸ்தவர்கள் கள்ள போதகர்களையும் கள்ள தீர்க்கதரிசிகளையும் நம்பக்கூடாது. நாம் இப்போது செய்திகளில் காண்பது போல, சில கிறிஸ்தவர்கள் கள்ள தீர்க்கதரிசிகளை நம்பிவிடுகின்றனர்.

ஜி.நிஜாமுத்தீன்

ஈஸாவிற்கு வேதம் கொடுக்கப்பட்டது. அந்த வேதத்தின் பெயர் இன்ஜில் என்று குர்ஆனில் குறிப்பிடப்படுகின்றது. இறைத்தூதர்களுக்கு வேதங்கள் வழங்கப்பட்டன. வேதமில்லாமல் யாரும் இறைத்தூதராக வரவில்லை. அப்படியே வந்தாலும் கடைசியாகவும், அவர்களுக்கு முந்தியதாகவும் வந்த வேதத்தை பாதுகாக்கும் பொறுப்பிலேயே அவர்கள் வந்துள்ளார்கள்.



ஈஸா குர்-ஆன்:

குர்-ஆன் படி எல்லா நாடுகளுக்கும், எல்லா சமுதாய மக்களுக்கும் அல்லா தூதர்களை அனுப்பியதாக சொல்கிறது.


ஒவ்வொரு சமூகத்தாருக்கும் (நாமனுப்பிய இறை) தூதர் உண்டு ; அவர்களுடைய தூதர் (அவர்களிடம்) வரும்போது அவர்களுக்கிடையில் நியாயத்துடனேயே தீர்ப்பளிக்கப்படும் - அவர்கள் (ஒரு சிறிதும்) அநியாயம் செய்யப்படமாட்டார்கள். 10:47

நிச்சயமாக நாம் உம்மை உண்மையைக் கொண்டு, நன்மாராயங் கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிப்பவராகவுமே அனுப்பியுள்ளோம்; அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர் வராத எந்த சமுதாயத்தவரும் (பூமியில்) இல்லை . 35:24



விஷயம் இப்படி இருக்க, ஏன் குர்-ஆனில் யூதர்கள் வழி வேதம், மற்றும் யூதர் வழி தூதர்கள் பெயர்கள் மட்டும் சொல்லப்பட்டுள்ளது. இப்ராஹீம், ஈசாக்கு, தாவீது என்று சொல்லப்பட்ட எல்லா நபிகளும் இஸ்ரவேல் நாட்டிற்கு சம்மந்தப்பட்ட தூதர்களாகவே இருக்கிறார்களே? ஏன் வேறு நாடுகளுக்கு அனுப்பிய தூதர்கள் பெயர்கள் இல்லை?

இன்னும் பல நாடுகள் இருக்கிறது, முக்கியமாக இந்தியா இருக்கிறது, இங்கு கூட அல்லாவின் தூதர்கள் வந்திருந்தால், அவர்களிடம் இருந்த வேதம் என்ன ஆனது?

1. குர்-ஆனில் சொல்லப்பட்ட எல்லா நபிகளும், பைபிளில் சொல்லப்பட்டவர்களே, வேறு நாட்டில் அல்லது அவர்கள் வேதத்தில் வரும் நபிகள் பெயர் இல்லை, அது ஏன்?
2. குர்-ஆனில் சொல்லப்பட்ட நிகழ்ச்சிகள் அனைத்தும் பைபிள் சம்மந்தப்பட்ட மற்றும் அதைச் சுற்றியுள்ள கதைகள் சம்மந்தப்பட்டது? ஏன் இந்தியாவில், எகிப்தில் (யோசேப்பு அல்லாத), பிற நாடுகளில் உள்ள நபிகள் பற்றி ஒரு நிகழ்ச்சியும் இல்லை?
3. வேறு நாடுகளில் தோன்றிய நபிகள் கூட "இறைவனை" "அல்லா" என்று தான் அழைத்தார்களா?
4. ஏக இறைவன் கோட்பாடு எல்லா நாடுகளிலும் உண்டு, ஆனால், அவர்கள் புத்தகங்களில் "அல்லா" என்று இறைவன் பெயர் வருமா? இந்த இஸ்லாமிய கோட்பாடுகள் இருக்குமா? (திருடாதே, பொய் சொல்லாதே என்பதல்ல, இப்படிப்பட்ட கட்டளைகள் எல்லா மதத்திலும் உண்டு)
5. அப்படி மற்ற நாடுகளில் வந்த எல்லா நபிகளும் "மக்காவைப் பற்றியும்", "காபாவைப் பற்றியும்" சொல்லியிருப்பார்களா?


எல்லா நாடுகளுக்கும் நபிகள் வந்திருந்தால், எல்லாருக்கும் வேதம் கொடுக்கப்பட்டிருந்தால், ஏன் சில இஸ்லாமியர்கள் இப்படி நம்புகிறார்கள், அதாவது "அல்லா இறக்கியது 104 வேதங்கள்(புத்தகங்கள்) மட்டும் தான்". Source : http://wiki.cotch.net/index.php/Islam

ஆதாம் – 10 புத்தகங்கள்
சேத் - 50 புத்தகங்கள்
ஏனோக் – 30 புத்தகங்கள்
அப்ரஹாம் – 10 புத்தகங்கள்
மோசே – தோரா
தாவீது – ஜபூர்
இயேசு – இஞ்ஜில்
முகமது - குர்-ஆன்


Source : http://answering-islam.org/Books/Zwemer/God/preface.htm


இங்கு பெயர் குறிப்பிடப்பட்டவர்கள் அனைவரும் பைபிளில் வரும் நபர்களே தவிர, வேறு நாட்டுக்காரர்கள் அதாவது இந்தியா போன்ற நாட்டில் அல்லா அனுப்பியவர்கள் இல்லை, மற்றும் இவர்களுக்கு கொடுக்கப்பட்ட வேதங்கள் என்னவென்றும் அல்லா சொல்லவில்லையே? சிறிது விளக்குகிறீர்களா, (தனி கட்டுரையாக இருந்தாலும் சரி).



ஜி.நிஜாமுத்தீன்

ஈஸாவிற்கு வேதம் வழங்கப்பட்டது. இன்றைக்கு அரபு மொழி பேசும் கிறிஸ்த்தவர்கள் தங்களிடம் உள்ள பைபிளை 'இன்ஜில்' என்றே குறிப்பிடுகிறார்கள். அவர்கள் அதை இன்ஜில் என்று குறிப்பிட்டாலும் இறைவன் ஈஸாவிற்கு வழங்கிய இன்ஜிலுக்கும் இன்றைக்கு இவர்களிடம் இருக்கும் பைபிளுக்கும் சம்மந்தம் எதவுமில்லை. கேள்விப்பட்டதையும் - மனதில் தோன்றியதையும் எழுதி வைத்துக் கொண்டு இதுதான் இன்ஜில் என்று கிறிஸ்த்தவர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இது குர்ஆனில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.



ஈஸா குர்-ஆன்:

அரபி பேசும் கிறிஸ்தவர்கள் "இஞ்ஜில் – Good News" என்றுச் சொல்வது சரியாக பொருந்தும், ஏனென்றால், கிரேக்க மொழி வார்த்தையிலிருந்து தான், "இஞ்ஜில்" என்ற வார்த்தை வந்தது. அதற்கு நற்செய்தி என்றுப் பொருள்.  கிறிஸ்தவர்களுக்கு வேதம் கொடுக்கப்பட்ட மொழி முக்கியமல்ல, அதன் பொருள் தான் முக்கியம்.

ஆனால், குர்-ஆனில் ஏன் "இஞ்ஜில்" என்ற கிரேக்க பதம், அதுவும் அரபியில் "இஞ்ஜில்" என்றால் "நற்செய்தி" என்று பொருள் இல்லை, முக்கியமாக அரபியில் "இஞ்ஜில்" என்றால், எந்த பொருளும் இல்லை . அப்படி இருக்க, அரபியில் இறக்கிய குர்-ஆனில் "ஏன் கிரேக்க மொழி" வார்த்தை இஞ்ஜில்? அரபியிலே "நற்செய்தி – Good News" என்று பொருள் வரும் "பஷரஹ- 'Basharah' " என்று அல்லா சொல்லவேண்டியது தானே?

Source:http://www.understanding-islam.com/related/text.asp?type=article&aid=77

// கேள்விப்பட்டதையும் - மனதில் தோன்றியதையும் எழுதி வைத்துக் கொண்டு இதுதான் இன்ஜில் என்று கிறிஸ்த்தவர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இது குர்ஆனில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.//

இதில் "கேள்விப்பட்டதையும் - மனதில் தோன்றியதையும் எழுதிக்கொண்டு" என்று சொல்கிறீரே,

யார் எழுதினார்கள்?

எப்போது எழுதினார்கள்?

உங்கள் இஸ்லாமிய இயேசுவுக்கு அல்லா இறக்கிய "இஞ்ஜில்" எப்படி இருந்தது?

அதை யார் மாற்றினார்கள்?

ஏதாவது ஒரு தகவல் தரமுடியுமா?

நான் பலமுறை சொல்லிவிட்டேன், ஆதாரம் இல்லாமல் ஒரே விஷயத்தை அடிக்கடி சொல்லவேண்டாம் என்று? ஆனால், கேட்கமாட்டேன் என்றுச் சொல்கிறீர்கள்.

இனி நான் குர்-ஆன் பற்றிய சில விவரங்களை சொல்லியாகவேண்டுமே (இதைத்தானே எதிர்பார்த்தீர்கள்)

1. முகமதுவின் மரணத்திற்கு பிறகு, உதமான் ஏன் குர்-ஆனை தொகுக்க வேண்டும் என்று முற்பட்டார்?

2. அதன் அவசியமென்ன?

3. அதாவது, முகமது மரிப்பதற்கு முன்பு , "உத்மான் தொகுத்தது போல" ஒரு முழு குர்-ஆனை, முகமது தொகுத்து தனக்கு அடுத்து உள்ளவரிடம் கொடுத்து போகவில்லை! அப்படித்தானே?

4. சிலர் மனப்பாடம் செய்து இருந்தார்கள், சில அதிகாரங்கள் எழுதப்பட்டு இருந்தது. ஆனால், யாரிடமும் ஒரு முழு குர்-ஆன் (இப்போது நம்மிடம் உள்ளதே) அது போல இல்லை, சரிதானே?

5. ஒரு பிரதியை தொகுத்த பிறகு மற்ற குர்-ஆன்களை ஏன் எரித்தார்?

6. அதாவது, எரிக்கப்பட்ட குர்-ஆன்களில் தவறுகள், பிழைகள், இருந்தது, அப்படித்தானே?



இந்த விவரங்களை கீழ்கண்ட ஹதீஸ் மூலமாக தெரிந்துக்கொள்ளலாம்.

Volume 6, Book 61, Number 510:
Narrated Anas bin Malik:
Hudhaifa bin Al-Yaman came to Uthman at the time when the people of Sham and the people of Iraq were Waging war to conquer Arminya and Adharbijan. Hudhaifa was afraid of their (the people of Sham and Iraq) differences in the recitation of the Qur'an, so he said to 'Uthman, "O chief of the Believers! Save this nation before they differ about the Book (Quran) as Jews and the Christians did before." So 'Uthman sent a message to Hafsa saying, "Send us the manuscripts of the Qur'an so that we may compile the Qur'anic materials in perfect copies and return the manuscripts to you." Hafsa sent it to 'Uthman. 'Uthman then ordered Zaid bin Thabit, 'Abdullah bin AzZubair, Said bin Al-As and 'AbdurRahman bin Harith bin Hisham to rewrite the manuscripts in perfect copies. 'Uthman said to the three Quraishi men, "In case you disagree with Zaid bin Thabit on any point in the Qur'an, then write it in the dialect of Quraish, the Qur'an was revealed in their tongue." They did so, and when they had written many copies, 'Uthman returned the original manuscripts to Hafsa. 'Uthman sent to every Muslim province one copy of what they had copied, and ordered that all the other Qur'anic materials, whether written in fragmentary manuscripts or whole copies, be burnt . Said bin Thabit added, "A Verse from Surat Ahzab was missed by me when we copied the Qur'an and I used to hear Allah's Apostle reciting it. So we searched for it and found it with Khuzaima bin Thabit Al-Ansari. (That Verse was): 'Among the Believers are men who have been true in their covenant with Allah.' (33.23)

Source: http://www.usc.edu/dept/MSA/fundamentals/hadithsunnah/bukhari/061.sbt.html#006.061.510



இந்த கருத்துக்கள் இக்கட்டுரைக்கு(இயேசுவின் வரலாறு) சம்மந்தமில்லாமல் இருந்தாலும், ஏன் சில விவரங்களைச் சொன்னேன் என்றால், எப்போது பார்த்தாலும், பைபிள் ஒரு கற்பனை அதை மாற்றிவிட்டார்கள் என்று ஒரு ஆதாரமும் காட்டாமல், நம் இஸ்லாமிய நண்பர் சொல்வதினால், குர்-ஆன் பற்றிய ஒரு சில விவரங்கள் மட்டுமே கொடுத்தேன்.

நம் இஸ்லாம் நண்பர் அடிக்கடி, "கற்பனைக் கதைகள்" என்று குற்றம் சாட்டுகிறாரே, எத்தனை கதைகளை முகமது மற்ற புத்தகங்களிலிருந்து எடுத்து குர்-ஆனில் எப்படி புகுத்தியுள்ளார் என்பதை கீழெ உள்ள தொடுப்பில் படிக்கவும்.

MUHAMMAD THE BORROWER


ஜி.நிஜாமுத்தீன்

இஸ்ராயீலின் சந்ததியிடம் கர்த்தர் செய்துக் கொண்ட உடன்படிக்கையை அவர்கள் மாற்றிக் கொண்ட விபரங்கள், வேதவசனங்களில் பலவற்றை மறந்து மறைத்து விட்ட விபரங்கள் பற்றிய அறிவிப்பு அல்குர்ஆன் 5:12,13,14 வசனங்களில் கூறப்பட்டுள்ளது. (இதபற்றி நமக்கும் கிறிஸ்த்தவர்களுக்கும் மத்தியில் நடக்கும் கருத்துப் பரிமாற்றத்தில் நாம் விரிவாக பார்க்கலாம் இன்ஷா அல்லாஹ்)

ஈஸாவிற்கு வேதம் வழங்கப்பட்டு அதை வைத்து அந்த மாபெரும் இறைத்தூதர் இஸ்ரவேலர்களை இறைவனின் பக்கம் அழைத்துள்ளார். யுதர்களுக்கு வழிகாட்டியுள்ளார். ஆனால் இறைவன் அவரைக் கைப்பற்றிய பிறகு அனேகக் காரணங்களால் அந்த வேதம் மாற்றத்திற்குள்ளாக்கப்பட்டது. (இயேசுவையே ஒழித்து விட வேண்டும் என்று கொலை வெறிப்பிடித்தலைந்தவர்கள் அவரது போதனைகளை விட்டு வைப்பார்களா.. வேதமாற்றங்களுக்கு இதுவும் காரணமாக அமைந்திருக்க வேண்டும். இயேசுவுக்கு பிறகு அவரை விசுவாசித்தோம் என்று சொன்னவர்களில் சிலரும் வேத மாற்றங்களை சந்தோஷமாக செய்துள்ளார்கள்).





ஈஸா குர்-ஆன்:

"அல்லா இயேசுவை கைபற்றிக்கொண்ட பிறகு" என்றுச் சொல்கிறீர்கள். இப்படி எல்லாரையும் ஏமாற்றி அல்லா இயேசுவை எடுத்துக்கொண்ட நிகழ்ச்சி எப்படி "கிறிஸ்தவம்" உருவாவதற்கு காரணமாகியது என்பதை கீழ் உள்ள கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளது.

ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸீஹா (அறியாமையினால் அல்லா ஆரம்பித்த கிறிஸ்தவம் – Allah Starts Christianity … By Accident)   

//இயேசுவுக்கு பிறகு அவரை விசுவாசித்தோம் என்று சொன்னவர்களில் சிலரும் வேத மாற்றங்களை சந்தோஷமாக செய்துள்ளார்கள்//

பைபிளில் மாற்றம் செய்தார்கள் என்று சொல்ல, நீங்கள் 2000 ஆண்டுகள் வரை முன்னுக்கு செல்கிறீர்கள்.

ஆனால், நம்முடைய கண்களுக்கு முன்பாகவே, குர்-ஆனை மாற்றி சில வசனங்களை எடுத்துவிட்டு, மாற்றப்பட்ட குர்-ஆனை அல்-கைதா இமாம்கள் குவைத்திலும், கத்தர் நாட்டிலும் வெளியிட்டதாக, அதை அரசாங்கம் கண்டுபிடித்து, இனி அரசாங்க முத்திரை உள்ள குர்-ஆன்களை மட்டுமே பயன்படுத்தவேண்டும் என்று அரசாங்கம் சொல்லியது என்று செய்திகளில் வாசிக்கிறோம்.

Al Qaida clerics distributing revised editions of Koran

இவர்கள் குர்-ஆன் வசனத்தை குர்-ஆனிலிருந்து எடுத்துவிட்டு, குர்-ஆனை அச்சடிக்கும் போது அல்லா தடுக்கவில்லையோ? பின் எப்படி அல்லா பாதுகாப்பதாகச் சொல்கிறார்? இதற்கு பண உதவி செய்தவர்கள் என்ன யூதர்களா? அச்சடித்து ஏற்றுமதி செய்தவர்கள் என்ன கிறிஸ்தவர்களா? யார் சந்தோஷமாக தங்கள் வேதங்களை மாற்றுகிறவர்கள்? இஸ்லாமியர்களா அல்லது கிறிஸ்தவர்களா?

முகமதுவிற்கு பிறகு அவர் சொன்னதை விசுவாசிக்கிறோம் என்று சொன்னவர்களில் சிலரும் வேத(குர்-ஆன்) மாற்றங்களை சந்தோஷமாக செய்துள்ளனர், செய்துக்கொண்டு இருக்கின்றனர்.

நீர் எழுதிய அதே வரிகள் தான், ஆனால் ஆதாரத்தோடு.

இதோ பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் குர்-ஆன் மொழிபெயர்ப்பில் "குர்-ஆன் தொகுக்கப்பட்ட வரலாறு - எழுத்து பிழைகள் " என்ற தலைப்பில் கீழ்கண்ட வாறு "குர்-ஆனில் எழுத்துபிழை உள்ளது" என்றுச்சொல்கிறார்.

//ஏனெனில் பிழையாக எழுதப்பட்ட பிரதிகள் ஒருவரிடம் இருந்து சரி செய்யப்பட்ட பிரதிகள் வேறொருவரிடம் இருந்தால் குர்-ஆனில் முரண்பாடு இருப்பது போன்ற ஒரு தோற்றத்தை அது ஏற்படுத்தும் என்பதால் அந்த மூலப் பிரதியில் ஏற்பட்ட பிழைகளை அப்படியே இன்றளவும் தக்க வைத்து வருகின்றனர்.

குர்-ஆனைப் பாதுகாப்பதற்கு இது அவசியமான ஏற்பாடு என்பதில் சந்தேகம் இல்லை. நெடிலைக் குறிப்பதற்காக அரபு மொழியில் அலிஃப் என்ற எழுத்தைச் சேர்க்கவேண்டும். இந்த எழுத்துப் பிழைகள் பெரும்பாலும் இந்த அலிஃப் என்ற எழுத்தைச் சுற்றியே அமைந்துள்ளது.

உதாரணமாக  'காஃப்' என்ற எழுத்தில் அலிஃபைச் சேர்த்தால் 'காஆ" என்று அது நெடிலாக மாறும். இப்படி நெடிலாக மாறுவதற்காகச் சேர்க்கப்பட வேண்டிய அலிஃபை கவனக் குறைவாக நெடிலாக சேர்க்கத் தேவையில்லாத இடங்களில் சேர்த்துள்ளனர்.

அது போல நெடிலுக்காக ஒரு அலிஃபை எழுதுவதற்குப் பதிலாக இரண்டு அலிஃபை எழுதியுள்ளனர் . அந்த இடங்கள் யாவை என்பதும் வரையறுக்கப்பட்டிருக்கிறது.

அத்தகைய சொற்களும், அவை இடம் பெற்ற அத்தியாயங்களும் வசன எண்களும் தனியாக பெட்டிச் செய்தியில் இடம் பெற்றுள்ளது.//

இப்படிப்பட்ட அந்த 22 வசனங்கள் என்ன என்பதை அரபியில் கீழ் கண்ட படத்தில் காணலாம் - http://www.onlinepj.com/qvaralaru/vralar5.jpg வசன எண்களை இங்கு பார்க்கலாம் -  http://www.onlinepj.com/qvaralaru/vralar6.gif

Source : http://www.onlinepj.com/

     Emphasis mine


மேலே சொல்லப்பட்ட தவறுகள், மனிதர்கள் புதிதாக சேர்த்த(அலிஃப்) எழுத்துபிழைகள் ஆகும். அதுபோல ஒரு எழுத்திற்குப் பதிலாக வேறு எழுத்தை மாற்றி எழுதியுள்ளார்கள் என்று பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் சொல்கிறார்கள். இந்த எழுத்துபிழைகள் இன்றுள்ள குர்-ஆனிலும் அப்படியே உள்ளது.

//இது தவிர இரண்டு இடங்களில் எழுத்தே மாற்றி எழுதப்பட்டிருப்பதைக் காண்கிறோம். 2:245வது வசனத்தில் என்று எழுதுவதற்கு பதிலாக என்று எழுதியுள்ளனர். 'ஸீன்' என்ற எழுத்தை எழுதுவதற்குப் பதிலாக 'ஸாத்' என்ற எழுத்தை எழுதியுள்ளனர். ஸாத் இடம் பெற்றால் அதற்கு அர்த்தம் வராது. எனவே அந்தத் தவறை அப்படியே அழுதி ஸாத் என்ற எழுத்தின் மீது ஒரு சிறிய அளவில் ஸீனை எழுதி அடையாளம் காட்டியுள்ளனர்.

அதே போல 7வது அத்தியாயத்தின் 69வது வசனத்தில் என்று எழுதுவதற்குப் பதிலாக என்று எழுதியுள்ளனர். 'ஸீன்' எழுதுவதற்கு பதிலாக 'ஸாத்' எழுதி விட்டார்கள். இரண்டும் ஏறக்குறைய நெருக்கமான அச்சரிப்பைக் கொண்ட எழுத்துக்களாக இருப்பதால் இந்த தவறு நேர்ந்திருக்கலாம் .//



இந்த எழுத்துபிழைகள்(Scribal Errors) ஒன்றும் பெரிய தவறு இல்லை. ஆனால், இப்படிப்பட்ட பிழைகள் இருப்பது யாருக்கும் தெரியாது, மொழிபெயர்ப்பாளர்களுக்கும், இஸ்லாமிய அறிஞர்களுக்கும் தான் தெரியும். ஆனாலும், இதை வெளியே சொல்லமாட்டார்கள். ஆனால், பி.ஜைனுல் ஆபிதீன் அவர்களின் இந்த தைரியம்(குர்-ஆன் எழுத்துப் பிழைகள் பற்றி தன் மொழிபெயர்ப்பில் சொல்வது) வேறு யாருக்கும் வராது(அதனால், தான் என்னவோ, அவரைக் கண்டால் சிலருக்கு பிடிக்காது.) உள்ளதை உள்ளதென்று ஏற்றுக்கொண்டு முன்னேறிச் செல்வது ஒரு வகையான வெற்றி.

நான் இந்த எழுத்து பிழைகளுக்காக, ஆங்கில கட்டுரையிலிருந்து மேற்கோள் காட்டியிருப்பேன், ஆனால், தமிழிலேயே அதற்கு வாய்ப்பு இருக்கும் பொது, ஏன் ஆங்கில கட்டுரைக்கு போகவேண்டுமென்று ஆங்கிலத்திற்குச் செல்லவில்லை. கர்த்தருக்கு சித்தமானால், இன்னும் பல விவரங்களோடு ஒரு கட்டுரையைப் பார்க்கலாம்.

எழுத்துபிழைகள் என்பது ஒரு பிரதியைப்பார்த்து வேறு பிரதியை எழுதும் போது, ஏற்படும் பிழைகள், இது எந்தவகையிலும், உண்மை செய்தியை மாற்றாது. நாம் பல பிரதிகளை ஒப்பிட்டுப் பார்த்து இப்படிப்பட்ட பிழைகளை சுலபமாக கண்டுபிடித்துவிடலாம். இன்னும் குர்-ஆனில் இலக்கண பிழைகளும், சரித்திர முரண்பாடுகளும் பல உள்ளன, அவைகளைப்பற்றி தனி கட்டுரையில் காணலாம்.

நான் ஏன் இக்கட்டுரையில் இவ்விவரத்தைச் சொன்னேன் என்றால், பல இஸ்லாமியர்களுக்கு இதைப்பற்றித் தெரியாது. மட்டுமல்ல, ஜி. நிஜாமுத்தீன் அவர்கள் அடிக்கடி ஆதாரம் இல்லாமல் குற்றம் சாட்டுவதால், சில விவரத்தை சொல்லவேண்டி வந்தது. இவர் இயேசுவின் வரலாறு பற்றி மட்டும் எழுதினால், நானும் அதைப்பற்றியே எழுதுவேன்.

ஜி.நிஜாமுத்தீன்

முஸ்லிம்களைப் பொருத்தவரை முந்தைய இறைத்தூதர்களுக்கு வேதம் வழங்கப்பட்டுள்ளது என்பதை நம்புவார்கள். ஆனால் இன்றைக்குள்ள வேதங்கள் தான் அவை என்று கூறினால் அந்தப் பொய்யை நம்ப மாட்டார்கள்.



ஈஸா குர்-ஆன்:

கிறிஸ்தவர்களைப் பொருத்தமட்டில், பைபிள் வேதம் என்பதை நம்புவார்கள், ஆனால், குர்-ஆன் வேதம் என்றுச் சொன்னால் அந்த பொய்யை நம்பமாட்டார்கள்.


ஜி.நிஜாமுத்தீன்

இறைவன் எனக்கு வேதத்தைக் கொடுத்து என்னை தூதராகவும் ஆக்கியுள்ளான் என்ற ஈஸாவின் அடுத்த பேச்சு அவர் கொண்டு வந்த தூதுத்தவத்தின் ஆழத்தை உணர்த்துகின்றது.



ஈஸா குர்-ஆன்:

இஸ்லாமில் உள்ள மிகப்பெரிய ஒரு குழப்பம் என்னவென்றால், யார் தூதராக வந்தாலும் அவருக்கு ஒரு வேதம் அல்லது புத்தகம் அல்லது "செய்தி" அல்லா கொடுத்ததாக சொல்வது.

ஆபிரகாமுக்கு வேதம் கொடுக்கப்பட்டது என்று இஸ்லாம் சொல்கிறது. ஆனால், அவர் யாரையும் பார்த்து முகமதுவைப் போல "நீங்கள் என் இறைவனை நம்புங்கள், இல்லையானால் அவர் உங்களை அழித்துவிடுவார்" என்றுச் சொல்லவில்லை. அவர் யாருக்கும் எந்த நாட்டு மக்களுக்கு தூதுவராக அனுப்பப்படவில்லை. அவர் ஒரு நாடோடியாக வாழ்ந்தார், தான் இருக்கும் இடத்தில் பஞ்சம் ஏற்பட்ட போது, எகிப்திற்கு ஓடிச் சென்றார், தன் மனைவியை தன் சகோதரி என்றுச் சொன்னார்.

இயேசு வாழ்ந்த காலத்தில், அவர் சொன்ன வசனங்கள் எல்லாம் அவர் இருக்கும் போதே, அவர் அச்செய்திகளை ஒரு புத்தகமாக அல்லது புத்தக சுருலாக எழுதி வைத்திருந்தார் என்று உங்களால் சொல்லமுடியுமா? இல்லை, அவர் இருக்கும் போது அப்படி செய்யவில்லை என்றுச்சொல்வீர்களானால், பின் எப்படி அவர் "அல்லா எனக்கு வேதத்தை கொடுத்தார்" என்றுச் சொல்கிறார்.

அல்லா இயேசுவிற்கு கொடுத்த புத்தகத்தை(வேதம் அல்லது செய்தி) ஒரு தொகுப்பாக மாற்றி ஏன் இயேசு தன் சீடர்களிடம் கொடுத்து, "இதோ பாருங்கள், இது தான் இறைவன் எனக்கு கொடுத்த வேதம், இதன்படி செய்யுங்கள்" என்று சொல்லிவிட்டுச் செல்லவில்லை. (ஓகோ, திடீரென்று எதிர்பாராத நேரத்தில், இயேசுவை அல்லா எடுத்துக்கொண்டதால், இதற்கு வாய்ப்பில்லாமல் போனதோ)

புதிய ஏற்பாட்டின் சுவிசேஷங்கள் அனைத்தும் இயேசுவின் "சரிதையாகும்". அவரோடு இருந்த சீடர்கள் அவர்கள் கண்களால் கண்டதும், காதால் கேட்டதும், அவரை தொட்டுப் பார்த்ததும், போன்ற பல விவரங்களை தேவனின் உதவியோடு எழுதிவைத்தார்கள்.



ஜி.நிஜாமுத்தீன்

வஜஅலனி முஃபாரகன் ஐனமாகுன்து.

நான் எங்கிருந்தாலும் அவன் என்னை பாக்கியம் பொருந்தியவனாக ஆக்கியுள்ளான்.

இந்த வார்த்தைகளும் ஆழ்ந்த சிந்தனைக்குரியதாகும். கிறிஸ்த்தவத்தின் அநேக நம்பிக்கைகளுக்கு பதில் சொல்லும் வசனம் இது.

பாக்கியம் பொருந்தியவனாக ஆக்கியுள்ளான் என்ற வார்த்தை சிலுவை சம்பவத்திற்கு எதிரானதாகும். தலையில் முள் கிரிடம் சூட்டி, சுமக்க முடியாத பெரும் துன்பத்துடன் சிலுவையை சுமந்து, சாட்டையால் அடிக்கப்பட்டு தெரு முழுதும் இழுத்துச் செல்லப்பட்டு அனேக இழிநிலைக்கு இயேசு ஆளானார் என்ற மொத்த நம்பிக்கைக்கும் மறுப்பு இந்த வார்த்தையில் உள்ளது.

மனிதர்களின் பார்வையில் இத்தகைய இழிநிலைக்கு ஆளானவர்களை பாக்கியம் பொருந்தியவன் என்று யாரும் கூறமாட்டார்கள். கர்த்தரின் பாதையில் உழைக்கும் பொது ஏற்படும் இழப்புக்கு கர்த்தர் சிறந்த கூலி கொடுப்பார். என்பது வேறு விஷயம். துன்பத்திற்கு ஆளாகாமல் சுவர்க்கம் என்ற பெரு வாழ்வு கிடைக்காது என்பதால் இறை நம்பிக்கையாளர்களைப் பொருத்தவரை துன்பங்களும் பாக்கியம் தான்.

ஆனால் இயேசு விஷயத்தில் (குறிப்பாக இந்த வசனத்தில் சொல்லப்பட்டுள்ள வார்த்தைக்கு) அந்தப் பொருள் கொடுக்க முடியாது.

ஏனெனில் அந்த வசனத்தில் 'நான் எங்கிருந்தாலும்' என்ற சொல்லை அவர் பயன்படுத்துகின்றார். இயேசுவை முடிந்த அளவு இழிவுபடுத்திக் கொல்ல வேண்டும் என்ற யூதர்களின் (ஆட்சியாளர்களின்) திட்டம் மொத்தமாக பொய்ப்பிக்கப்பட்டு விட்டது. இயேசுவின் கண்ணியம் கொஞ்சமும் பாதிக்கப்படாமல் கர்த்தர் இயேசுவை பாதுகாத்து தன்னளவில் உயர்த்திக் கொண்டான்.

'நான் எங்கிருந்தாலும்' என்ற அந்த வார்த்தையை ஈஸா அவர்கள் பயன்படுத்தியதின் மூலம் சிலுவை சம்பவம் கேள்விக்குறியாக்கப்பட்டு விடுகின்றது.

இயேசு தன் தாய் வயிற்றில் உருவாகும் போது எப்படி பாக்கியம் பொருந்தியவராக .இருந்தாரோ, பிறந்தவுடன் எப்படி பாக்கியம் பொருந்தியவராக இருந்தாரோ, தனது உலக வாழ்வில் பிரச்சாரத்தில் எப்படிப் பாக்கியம் பொருந்தியவராக இருந்தாரோ, இன்றைக்கும் அதே நிலையில் பாக்கியம் பொருந்தியவராக இருக்கிறார். இனி வரக் கூடிய இறுதிக் காலத்திலும் அவர் பாக்கியம் பொருந்தியவராக இருப்பார். 'நான் எங்கிருந்தாலும்' என்ற வார்த்தை அவர் விஷயத்தில் எத்துனை தெளிவாக இருக்கின்றது. என்பதை எண்ணிப் பார்க்கும் போது சிலிர்ப்பு ஏற்படவே செய்யும்.



ஈஸா குர்-ஆன்:

//ஏனெனில் அந்த வசனத்தில் 'நான் எங்கிருந்தாலும்' என்ற சொல்லை அவர் பயன்படுத்துகின்றார். இயேசுவை முடிந்த அளவு இழிவுபடுத்திக் கொல்ல வேண்டும் என்ற யூதர்களின் (ஆட்சியாளர்களின்) திட்டம் மொத்தமாக பொய்ப்பிக்கப்பட்டு விட்டது. இயேசுவின் கண்ணியம் கொஞ்சமும் பாதிக்கப்படாமல் கர்த்தர் இயேசுவை பாதுகாத்து தன்னளவில் உயர்த்திக் கொண்டான்//

இயேசுவிற்கு கண்ணியத்தைத் தருகிறேன் என்றுச் சொல்லி, அல்லா இயேசுவின் சிலுவையில் அறையப்படுதலில் செய்த குழப்பம், ஒரு பொய்யான மதம்(இஸ்லாம் படி) உருவாக காரணமாகியது.

மட்டுமல்ல, அது இப்போது அல்லாவின் உண்மை மதமான இஸ்லாமுக்கு எதிராக  ஒரு மிகப்பெரிய சிம்ம சொப்பனமாகவே உள்ளது. அதுவும் உலகின் மிகப்பெரிய மதமாக இஸ்லாமியர்களின் கண்களில் உருத்திக்கொண்டே இருக்கிறது.

அல்லா செய்த அறியாமைச் செயல் என்ன? எப்படி கிறிஸ்தவம் இயேசுவின் சீடர்களால் பரப்பப்பட்டது, அதற்கு அல்லா எப்படி உதவியாக இருந்தார் என்ற விவரங்களை இங்கு படிக்கவும் -   அறியாமையினால் அல்லா ஆரம்பித்த கிறிஸ்தவம்

ஜி.நிஜாமுத்தீன்

அடுத்து,

வ அவ்ஸானி பிஸ்ஸலாத்தி, வஸ்ஸகாத்தி மாதும்து ஹைய்ய(ன்)வ் வ பர்ரம் பி வாலிததி.

நான் உயிரோடு இருக்கும் காலம் மேலும் தாயராருக்கு பணிவிடை செய்யும் பொழுதுகளில் தொழுது வருமாறும் ஸக்காத் கொடுத்து வருமாறும் ஏவப்பட்டுள்ளேன்.

அழைப்புப்பணிக்கல்லாமல் அவரது சொந்த வணக்கங்கள் பற்றியும் அவர் தனது ஆரம்ப பேச்சில் தெளிவு படுத்தியுள்ளார்.

இந்த இடம் சற்று ஆழமாக அணுக வேண்டிய இடமாகும். காரணம் இந்த இடத்தைப் புரிந்துக் கொள்வதில் ஏற்பட்ட தடுமாற்றத்தால் ஒரு குழப்பமான நிலைக்கு ஒரு சாரார் தள்ளப்பட்டு விட்டனர். புதிய நபிக் கொள்கை உருவாக்கப்பட்டு ஒரு சாரார் அதை நம்பும் நிலைக்கு ஆளாகினர்.

முதலில் இங்கு இவர்களுக்கு ஏற்பட்ட தடுமாற்றம் என்னவென்பதைப் புரிந்துக் கொண்டு தொடர்வோம்.

இயேசு சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்பட்டார் என்று கிறிஸ்த்தவர்கள் நம்பினால், ஈஸா சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்படவில்லை. அவர் இயற்கையாகவே மரணித்து விட்டார். அவர் இடத்தைப் பூர்த்தி செய்ய, கிறிஸ்த்தவர்களுக்கு வழிகாட்ட கர்த்தர் என்னை தேர்ந்தெடுத்துள்ளார் என்றக் கொள்கையுடன் ஒருவர் வெளிபட்டார். (இது பற்றி நாம் இங்கு விவாதிக்கப் போவதில்லை). அவர் தன்னை ஈஸாவின் இடத்தில் வைத்து பார்ப்பதற்கு ஆதாரமாக்கியவற்றில் இந்த வசனமும் ஒன்று.



ஈஸா குர்-ஆன்:

அந்த "ஒரு சாரார்" யார்? நீர் சொல்லும் "புதிய நபிக்கொள்கை" என்ன ? யார் இப்படிச் சொன்னார்கள் என்று ஒரு விவரமும் சொல்லாமல், நீர் அதற்கு பதில் சொல்ல ஆரம்பித்துவிட்டீர். நீங்கள் யாரைப் பற்றி எழுதுகிறீர்கள் என்று குறைந்தபட்சம் "அவர் பெயரையாது" சொல்லிவிட்டு பதில் எழுதியிருக்கலாம்.

அதாவது, கலிஃபா ரஷீத் பற்றி எழுதுகிறீரோ, ஷியா முஸ்லீமகள் எதிர்பார்க்கும் "மஹந்தி" பற்றி எழுதுகிறீரோ, அல்லது "பஹாய் " என்றுச் சொல்லக்கூடிய ஒருவரைப்பற்றி எழுதுகிறீரோ அல்லது இன்னும் யாராவது இருக்கிறார்களா? தெரியவில்லை. அல்லது இயேசுவின் சீடர்களில் இப்படி யாராவது சொன்னார்களா? ஏதாவது சொன்னால் தானே புரியும்.

குர்-ஆனும் அல்லாவும் தான் குழப்புகிறார்கள் என்றால், நீங்களுமா ?


ஜி.நிஜாமுத்தீன்

இந்த வசனத்திற்கு அவர் - பிற அனேக மொழிப்பெயர்ப்பாளர்கள் - கொண்ட பொருள்.

'நான் உயிரோடு இருக்கும் காலமெல்லாம் தொழுது வருமாறும், ஸக்காத் கொடுத்து வருமாறும் ஏவப்பட்டுள்ளேன்' என்பதாகும். இவ்வாறு பொருள் கொண்ட அவர் 'ஈஸா இப்போது உயிரோடு இருந்தால் அவர் எப்படித் தொழுவார்? எப்படி ஸக்காத் கொடுப்பார்? என்ற கேள்வியை வைத்து அவர் இப்போது உயிரோடு இருந்தால் கட்டாயம் தொழ வேண்டும் ஸக்காத் கொடுத்தாக வேண்டும் ஆனால் இப்போது அவரால் தொழவோ ஸக்காத் கொடுக்கவோ முடியாது என்பதால் அவர் உயிரோடு இல்லை என்பது அவரது வாதம் .

மொழி ரீதியாக இப்படிப் பொருள் கொள்ள இடமிருந்தாலும் இன்னொரு விதமாகவும் பொருள் கொள்ள அந்த வசனம் இடங்கொடுக்கின்றது. ஈஸா அவர்களின் முழு வாழ்க்கையையும் நாம் கருத்தில் எடுத்துக் கொண்டு பார்க்கும் போது இன்னொரு பொருளே அங்கு பொருத்தமாக உள்ளது. எவ்வித குழப்பத்திற்கும் இடங்கொடுக்காமல் அந்த பொருள் பொருந்திப் போகின்றது. அந்தப் பொருள் என்ன?'நான் உயிரோடு இருக்கும் காலமெல்லாம் தொழுது வருமாறும்.... என்பதில் உயிரோடு இருக்கும் காலத்திற்கு பக்கத்தில் தாயாருக்கு பணிவிடை செய்யும் பொழுதுகளில் என்பதையும் சேர்த்து பொருள் கொள்வது.

நான் உயிரோடு இருந்து தாயாருக்கு பணிவிடை செய்யும் காலமெல்லாம் தொழுது வருமாறும், ஸக்காத் (பொருளாதாரப் பங்கீடல்) கொடுத்து வருமாறும் ஏவப்பட்டுள்ளேன் என்பது அந்த வசனத்தில் பொருள்.

குர்ஆன் வசனத்தின் அரபு வார்த்தை இப்படிப் பொருள் கொள்ளும் விதமாகவும் அமைந்துள்ளது. இப்படிப் பொருள் கொள்ளும் போது ஈஸாவின் மீது தொழுகை மற்றும் ஸக்காத் கடமையாவதற்கு இரண்டு நிபந்தனைகள் - சூழ்நிலைகள் அமைந்திருக்க வேண்டும்.

1) அவர் உயிரோடு இருக்க வேண்டும். 2) தாயாருக்கு பணிவிடை செய்யும் நிலையில் இருக்க வேண்டும். இந்த இரு நிபந்தனைகள் இருக்கும் போது மட்டுமே ஈஸாவின் மீது தொழுகை ஸக்காத் ஆகியவை கடமையாகும். இன்றைக்கு ஈஸா அவர்கள் உயிரோடு இருந்தாலும் தாயாருக்கு பணிவிடை செய்யும் சூழல் அவருக்கு இல்லை என்பதால் இன்றைக்கு அவர் மீது எந்தக் கடமையும் இல்லை.

ஈஸாவின் வாழ்க்கை அனேக அற்புதங்களைக் கொண்டதாகும். தனித்துவம் வாய்ந்த அந்த அற்புதங்களோடு இந்த விளக்கத்தை ஒப்பிட்டுப் பார்க்கும் போது இதுவே சரியான விளக்கமாகப் படுகின்றது.

இப்படிப் பொருள் கொள்ளும் போது புதிய நபித்துவக் கொள்கையில் தடுமாற்றம் ஏற்பட்டு விடும் .

அடுத்த சந்தேகத்திலிருந்தும் தெளிவாகுவோம்.

இப்படிப் பொருள் எடுத்தால் இனி ஈஸா அவர்கள் அடுத்த முறை வரும் போது அவர்கள் உயிரோடு இருப்பார்கள் ஆனால் அப்போதும் தாயாருக்கு பணிவிடை செய்ய முடியாது அப்படியானால் அப்போதும் அவர்கள் மீது தொழுகை - ஸக்காத் கடமையில்லையா என்ற கேள்வி எழுந்தால், இனி வரும் போது அவர்கள் இறைத்தூதராக வரமாட்டார்கள். மாறாக குர்ஆனை விசுவாசித்து இறைப் பணி செய்யும் ஒரு நம்பிக்கையாளராகவே வருவார்கள் என்பதே பதிலாகும். அவர்களின் இரண்டாவது வருகை இறைத்தூதர் அந்தஸ்த்தில் இருக்காது என்பதால் (இரண்டாவது வருகை குறித்து பிறகு வரும் இன்ஷா அல்லாஹ்) இறைத்தூதராக இருந்த போது அவர்களுக்கு இருந்த சட்டம் இப்போது பொருந்தாது என்பதை கவனத்தில் கொண்டால் சந்தேகம் தீர்ந்து விடும்.

மேற்கண்ட வசனத்திற்கு இன்னொரு விதமாகவும் பொருள் கொள்ளலாம்.

'நான் உயிரோடு இருக்கும் காலமெல்லாம்' என்று ஈஸா அவர்கள் சொல்லும் போது உயிரோடு பச்சிலங்குழந்தையாக இருக்கிறார்கள். அதாவது தன் மீது தொழுகைக் கடமை என்று அவர்கள் சொல்லும் போது உயிரோடு இருக்கிறார். ஆனாலும் குழந்தை. குனிந்து நிமிர்ந்து வணங்கும் நிலையில் அவர் அன்றைக்கு இல்லை என்றாலும் அந்தக் குழந்தையின் வார்த்தைகள் அனைத்தும் வணக்கமாகவே இருந்தது. அதுபோன்ற ஒரு நிலையைக் கூட உயர்த்தப்பட்டப் பிறகு இறைவன் அவருக்கு ஏற்படுத்தி இருக்கலாம்.

இந்த இரண்டு வித்தில் எப்படிப் பொருள் கொண்டாலும் அங்கே புதிய நபிக் கொள்கைக்கு இடமில்லாமல் போய்விடுகின்றது.

என்னைத் துர்பாக்கியசாலியாகவோ, பெருமைக்காரனாவோ அவன் ஆக்கவில்லை.

இன்னும் நான் பிறந்த நாளிலும், நான் இறக்கும் நாளிலும், மீண்டும் நான் எழுப்பப்படும் (தீர்ப்பு) நாளிலும் என்மீது சாந்தி நிலவும் (என்று ஈஸாவாகிய அந்தக் குழந்தைக்) கூறிற்று.

நான் மரணிக்கும் நாளில் என் மீது சாந்தி நிலவும் என்ற இயேசுவின் கூற்று மீண்டும் ஒரு முறை சிலுவை சம்பவத்தைப் பொய் படுத்துகின்றது இந்த இடத்தில்.

ஏனெனில் சிலுவையில் அறையப்பட்டதாக நம்பப்படும் அந்த நபர் 'ஏலி ஏலி லாமா சபக்தனி' என்று கூக்குரலிடுகிறார் இதற்கு 'என் என் தேவனே ! என்னை ஏன் கை விட்டீர்' என்று அர்த்தமாம் என பைபிள் கூறுகின்றது. இந்த அவலக்குரல் சாந்தியான மரணத்தின் அடையாளமல்ல. ஆனால் ஈஸாவின் மரணம் நிச்சயம் சாந்தியோடு நிகழும் என்பதில் ஐயமில்லை. அவரது இரண்டாவது வருகைக்கு பின் நிகழப்போகும் இறைப் பணிகளுக்குப் பிறகு அவர் மரணிப்பார். அப்போது அவர் மீது சாந்தி நிலவும் அந்த சாந்தி, அவர் மீது சுமத்தப்பட்ட இறைமகன் என்ற அவதூறு - சிலுவை அவதூறு போன்றவை துடைக்கப்பட்டு விட்டதாக இருப்பதால் உலகறியும் சாந்தியாக இருக்கும்.

இயேசுவைப் பற்றி நாம் அறியும் இந்த விபரங்கள் அனைத்தும் இயேசுவின் தாயார் மரியாள் (மரியம்) என்ற பெயரில் இடம்பெறும் குர்ஆனின் 19 வது அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்த சம்பவங்களைத் தொடர்ந்து கர்த்தர் இவ்வாறு கூறுகிறார்,

இதுவே அவர்கள் சந்தேகித்துக் கொண்டிருந்த மரியமின் புதல்வர் ஈஸா பற்றிய உண்மைச் செய்தியாகும். எந்த ஒரு பிள்ளையையும் ஏற்படுத்திக் கொள்வது கர்த்தருக்கு தகுமானதல்ல. கர்த்தர் தூயவர். (அல்குர்ஆன் 19:29-35)

இயேசுவின் வாழ்நாள் முழுமைக்கும் முன்னுரையாக அமைந்த இந்த தொட்டில் குழந்தைப் பேச்சு பைபிளில் எங்கும் இடம்பெறவில்லை. அல்லது ஒரு சாராரின் கருத்துப்படி இது (வழக்கமான பாணியில்) பைபிளிலிருந்து ஆரம்பத்திலேயே நீக்கப்பட்டு விட்டது.

தேவன் நாடட்டும் தொடர்வோம்

source: http://idhuthaanislam.blogspot.com/2007/08/6.html

Emphasis mine



ஈஸா குர்-ஆன்:

மேலே உள்ளதை படித்தால், ஒன்று மட்டும் புரிகிறது, நீங்கள் கிறிஸ்தவர்களுக்கு மட்டும் இக்கட்டுரையை எழுதவில்லை. வேறு யாருக்காகவோ எழுதியிருக்கிறீர்.

அதாவது, குர்-ஆனில் நீங்கள் மேற்கோள் காட்டிய வசனத்தை வைத்துக்கொண்டு, தன்னை ஒரு நபி என்று சொல்லிக்கொண்ட மற்றும், அவரை நீங்கள்(முஸ்லீம்கள்) நபி என்று நம்பாத ஒருவரைப்பற்றி நீர் எழுதுகிறீர்.

நீங்கள் சொல்தற்கும், இயேசு சிலுவையில் மரித்தார் என்று நம்பும் கிறிஸ்தவர்களின் நம்பிக்கைக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.

இயேசு ஜகாத் கொடுத்தார் என்ற குர்-ஆன் வசனத்திற்கு என் பதில்:

1. நான் ஏற்கனவே என் முந்தைய மறுப்புக்களில்(இயேசுவின் வரலாறு - 5ல்) தெரிவித்தபடி, "இயேசு ஜகாத்" கொடுப்பேன் என்றுச் சொன்ன வசனம் ஒரு "சரித்திர தவறாகும்".

2. இயேசுவின் வரலாறு - 5ல் ஜகாத் பற்றி நான் எழுதிய பகுதியை மறுபடியும் ஒரு முறை நியாபகப்படுத்துகிறேன்.

1. ஜகாத் என்ற பொருளாதார பங்கிடு:

ஜகாத் என்பது ஒவ்வொரு முஸ்லீம் சகோதரர்களும் கொடுக்கும் பணம், ஜகாத் என்பது இயேசுவின் காலத்தில் இல்லை. இது முகமது உருவாக்கியது. இயேசுவிற்கு பின்பு 500 வருடங்களுக்கு பிறகு முகமது உருவாக்கிய "ஜகாத்" பற்றி இயேசு பேசுவது ஒரு குர்-ஆனின் வெளிப்படையான சரித்திர பிழையாகும்.

"ஜகாத்" பற்றி தமிழ்முஸ்லீம் தளம் என்ன சொல்கிறது என்றுப்பாருங்கள்.

source: http://tamilmuslim.blogspot.com/2005/05/blog- post_28.html

//ஒரு முஸ்லிம், ஓராண்டில் தன் கையிருப்பில் உள்ள பணம், நகை உள்ளிட்டவற்றில் 2.5% ஜகாத்தாக கொடுக்க வேண்டும். யாருக்கு கொடுக்க வேண்டும்? குர் ஆனிடமே கேட்போம்.(ஜகாத் என்னும்) தானங்கள் தரித்திரர்களுக்கும், ஏழைகளுக்கும், தானத்தை வசூல் செய்பவர்களுக்கும், இஸ்லாத்தின் பால் அவர்கள் உள்ளங்கள் ஈர்க்கப்படுவதற்காகவும், அடிமைகளை விடுதலை செய்வதற்காகவும், கடன்பட்டிருப்பவர்களுக்கும், அல்லாஹ்வின் பாதையில் (போர் புரிபவர்களுக்கும்), வழிப்போக்கருக்குமே உரியவை. (இது) அல்லாஹ் விதித்த கடமையாகும் - அல்லாஹ் (யாவும்) அறிபவன், மிக்க ஞானமுடையோன். (9:60) //

2. யூதர்கள் கொடுப்பது "ஜகாத்" அல்ல, அது "தசம பாகம்":

சில இஸ்லாமியர்கள் சொல்லலாம், யூதர்களும் ஜகாத் கொடுத்தார்கள் என்று. யூதர்கள் கொடுத்தது "ஜகாத்" அல்ல, அது "தசம பாகம்". யூதர்கள் கொடுத்த "தசம பாகமும்", இஸ்லாம் சொல்லும் "ஜகாத்தும்" ஒன்றல்ல, இவைகள் வெவ்வேறானவை. இதில் கூட குர்-ஆன் அல்லது முகமது ஒரு முரண்பாட்டை செய்துள்ளார்.

"ஜகாத்திற்கும்" "தசமபாகத்திற்கும்" உள்ள வித்தியாசங்கள்:

1. ஜகாத் என்பது வருடத்திற்கு ஒரு முறை கொடுப்பது. தசம பாகம் என்பது நம் வருமானத்தில் அது ஒரு நாள் சம்பளமாகவோ, வார சம்பளமாகவோ அல்லது மாதசம்பளமாகவோ இருக்கலாம். அதிலிருந்து கொடுப்பது.

2. ஜகாத் 2.5%, தசமபாகம் 10%.

3. ஜகாத் ஏழை எளிய மக்களுக்கு, இன்னும் இதர தர்மங்களுக்கு, தசம பாகம் சபைக்கு அல்லது சர்ச்சிற்குத் அதன் தேவைகளை சந்திப்பதற்காகத் தருவது. கிறிஸ்தவத்தில் தானதருமங்கள் வேறு தசமபாகம் வேறு.



இயேசுவின் காலத்தோடு சம்மந்தப்படுத்தி "ஜகாத்" நான் கொடுப்பேன் என்று இயேசு சொன்னார் என்பது ஒரு வெளிப்படையான குர்-ஆன் முரண்பாடாகும்.
Source : http://www.geocities.com/isa_koran/tamilpages/Rebuttals/JesusBirth-part5.html

//இயேசுவின் வாழ்நாள் முழுமைக்கும் முன்னுரையாக அமைந்த இந்த தொட்டில் குழந்தைப் பேச்சு பைபிளில் எங்கும் இடம்பெறவில்லை. அல்லது ஒரு சாராரின் கருத்துப்படி இது (வழக்கமான பாணியில்) பைபிளிலிருந்து ஆரம்பத்திலேயே நீக்கப்பட்டு விட்டது.//

நான் ஏற்கனவே என் முந்தைய மறுப்புக்களில்(இயேசுவின் வரலாறு மறுப்பு - 4 ) சொல்லிவிட்டேன், அதாவது முகமது சில தள்ளுபடி புத்தகங்களிலிருந்து சில கதைகளை அல்லா சொன்னதாக சொன்னார் என்று, அதற்கு ஆதாரமும் காட்டிவிட்டேன்.

The Encyclopedia Britannica comments: "The Gospel was known to him chiefly through apocryphal and heretical sources."

குர்-ஆன் சொல்லுகின்ற, " இயேசு குழந்தையாக இருக்கும் போது செய்த அற்புதம்", எகிப்து தேசத்தில் தோன்றிய அரபி தள்ளுபடி ஆகமமான "The first Gospel of the Infancy of Christ" என்ற புத்தகத்திலிருந்து எடுத்தது.

 Infancy Gospel of Jesus


இந்த தள்ளுபடி புத்தகம், இயேசுவின் சீடர்களால் எழுதப்பட்டதல்ல. இது 2ம் அல்லது 3ம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. ஆனால், புதிய ஏற்பாட்டின் சுவிசேஷங்கள் எல்லாம், முதல் நூற்றாண்டிலேயே எழுதி முடிக்கப்பட்டது.

Wikipedia Encyclopedia says about Gospel of the Infancy of Christ

The Infancy Gospel of Thomas is a non-canonical text that was part of a popular genre, aretalogy, of the 2nd and 3rd centuries

The text describes the life of the child Jesus, with fanciful, and sometimes malevolent, supernatural events, comparable to the trickster nature of the god-child in many a Greek myth. One of the episodes involves Jesus making clay birds, which he then proceeds to bring to life,
an act also attributed to Jesus in the Qur'an, thus indicating the text may have had substantial influence on Arabic tradition by the 7th century. Source :  http://en.wikipedia.org/wiki/Infancy_Gospel_of_Thomas



Britannica Encyclopedia Says about Gospel of the Infancy of Christ

...of Mark, and Gospel of Philip) preserve some legends and myths found in the early Christian centres of Edessa, Alexandria, and Asia Minor. The First Gospel of the Infancy of Jesus ( known also as the Arabic Infancy Gospel ), for example, recounts that, one day, Jesus and his playmates were playing on a rooftop and one fell down and... Source:    http://www.britannica.com/eb/topic-208181/First- Gospel-of-the-Infancy-of-Jesus



//அல்லது ஒரு சாராரின் கருத்துப்படி இது (வழக்கமான பாணியில்) பைபிளிலிருந்து ஆரம்பத்திலேயே நீக்கப்பட்டு விட்டது.//

பைபிளிலிருந்து இந்த குழந்தை அற்புதம் ஆரம்பித்திலிருந்தே நீக்கிவிட்டார்கள் என்று நம்புகின்ற நீர்,
ஏன் நீக்கினார்கள் என்று சிந்தித்து பார்க்கவில்லையா?
இது உண்மையாகவே நடந்து இருந்தால், அதை எழுதுவதில் இயேசுவின் சீடர்களுக்கு என்ன தொந்தரவு?
இது இயேசுவின் பெருமையை இன்னும் அதிகரித்து இருக்குமே?
தாங்கள் நம்புகின்ற இயேசு குழந்தையாக இருக்கும் போது கூட அற்புதம் செய்தார் அல்லது அற்புதமாக பேசினார் என்று அவர்கள் அதிகமாக சந்தோஷப்பட்டு இருப்பார்களே? பின் ஏன் நீக்கினார்கள்?


ஆதாரம் இல்லாமல் எதையாவது சொல்வது தான் உங்கள் வழக்கமா? நீங்கள் சொன்ன வரிகளுக்கு ஒரு ஆதாரத்தை காட்டுங்கள் பார்க்கலாம்? உம்மால் முடியாது? கடந்த மூன்று மாதங்களாக இயேசுவின் வரலாறு மறுப்புகள் 5ம் அப்படியே இருக்கின்றது? இது வரையில் பதில் இல்லை.இன்னும் ஆபிரகாம், இஸ்மவேல் வரலாறிலிருந்து வெளியே வரவில்லை. இருந்தும் பாடிய பல்லவியே மறுபடியும் மறுபடியும் பாடுகிறீர்கள்.

ஆனால், நம் கண்களுக்கு முன்பாக, குவைத்திலும், கத்தரிலும், சில வசனங்கள் நீக்கப்பட்ட குர்-ஆன்கள் இறக்குமதி செய்யப்பட்டு உள்ளது என்று செய்திகளில் படிக்கிறோம்.

இந்த இயேசுவின் குழந்தை அற்புதம் கதை, இரண்டாம், மூன்றாம் நூற்றாண்டில் தான் முதலாவது எழுதப்பட்டது என்று விகிபீடியா, ப்ரிட்டானிகா என்று பல ஆராய்ச்சி கட்டுரைகள் சொல்கின்றன. ஆனால், இவைகள் பைபிளில் ஏற்கனவே இருந்தது என்றும், பிறகு நீக்கப்பட்டது என்றும், நீர் முதல் நூற்றாண்டில் வாழ்ந்தது போல சொல்கிறீர்கள்.

நீங்கள் சொல்லும் அந்த "ஒரு சாரார்" என்பவர்கள் பெரிய ஆராய்ச்சியாளர்களோ? தொல்பொருள் நிபுனர்களோ? இல்லை இஸ்லாமிய அறிஞர்களா?

கர்த்தருக்கு சித்தமானால், அடுத்த கட்டுரையில் சந்திப்போம். அதுவரையில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை நம் எல்லாரோடும் இருப்பதாக.

Monday, July 16, 2007

இது தான் இஸ்லாம் வெப்சைட்டுக்கு ஈசா குர்ஆன் வெப்சைட் பதில்

அன்பான சகோதர சகோதரிகளே இது தான் இஸ்லாம் என்ற வெப்சைட்டில் அருமை இஸ்லாமிய சகோதரர்கள் இயேசுவுக்கு நேர்ந்ததென்ன என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டு இருந்ததை அனைவரும் அறிவோம்.
அந்தக் கட்டுரைக்கு ஈசா குர் ஆன் என்ற வெப்சைட் பதில் எழுதியது.அதன் பதிவை இதுதான் இஸ்லாம் வெளியிடாதபடியினால் தனியாக ஒரு blog கை உருவாக்கி (http://isakoran.blogspot.com/) அதில் தனது மறுப்பை அந்த நிர்வாகி வெளியிட்டார்.

இது வெப்சைட் மக்கள் அனைவருக்கும் செல்லும் விதமாக அநேக வலைப்பூக்களில் பதியப்பட்டது.

அந்தக் கட்டுரைக்கு பதில் தர வேண்டிய இது தான் இஸ்லாம் இப்பொழுது இந்த கட்டுரைக்கு சம்மந்தம் இல்லாத தமிழ் கிறிஸ்தவ வெப்சைட்டை விவாதத்துக்கு அழைக்கிறது.

பதியப்பட்டுள்ள கட்டுரைக்கு பதில் அளிக்க வேண்டிய கடமை இது தான் இஸ்லாம் தளத்துக்கு உண்டு.அந்த கட்டுரைக்காண பொறுப்பை ஈசா குர் ஆன் வெப்சைட் எடுத்துக்கொண்டுள்ளது.அதற்காண பதிவை அந்த வெப்சைட் வெளியிட்டு உள்ளது அதை காண்போம்.

http://isakoran.blogspot.com/

இது தான் இஸ்லாம் தளத்திற்கு பதில்.

அன்பு இஸ்லாமிய நண்பர்களுக்கு,
நான் (உமர்) தமிழ் கிறிஸ்டியன்ஸ் என்ற தளத்தில் ஒரு உறுப்பினன். மற்றும் என் கட்டுரைகள் முதலாவது இடம் பெற்றது என் தளமாகிய www.geocities.com/isa_koran என்ற தளத்தில் தான்.

தமிழ் கிறிஸ்டியன்ஸ் (www.tamilchristians.com) என்ற தளம் உள்ளதை தெரிந்துக்கொண்ட உடன், உறுப்பினனாகி என் கட்டுரைகளை அங்கும் வைத்தேன். நான் எழுதும் கட்டுரைகளுக்கு, மறுப்புக்களுக்கு அத்தள நிர்வாகத்திடம் நான் கேட்க மாட்டேன். அந்த தளம் கிறிஸ்தவர்களுடைய கருத்துக்களை பரிமாரிக்கொள்ள வைத்துள்ளார்கள்.

நான் என் முதல் "இயேசு வரலாறு -1 மறுப்புக் கட்டுரையை" உங்கள் (iduthaanislam.blogspot.com) தளத்தில் Comment டாக பதித்தேன், அதை பிரசுரிக்கவில்லை. எனவே தான் நான் ஒரு புதிய தளத்தை உருவாக்கவேண்டி வந்தது ( http://isakoran.blogspot.com).

கடைசியாக நான் சொல்லவிரும்புவது இது தான்:

1. எனக்கும் தமிழ் கிறிஸ்டியன்ஸ் தளத்திற்கும் எந்த நிர்வாக சம்மந்தமுமில்லை. நான் ஒரு உறுப்பினன் மட்டும் தான்.

2. என் பிரதானமான தளம் : www.geocities.com/isa_koran மற்றும் http://isakoran.blogspot.com

3. உங்களுக்கு விருப்பமானால் என் "மறுப்பு கட்டுரைகளுக்கு" மறுப்பை எழுதுங்கள், அல்லது விட்டுவிடுங்கள். அது உங்கள் விருப்பம். நீங்கள் பதில் தரவேண்டுமானால், "ஒரு நிர்வாகம் தன் ஒப்புதலை தரவேண்டும்" என்று நீங்கள் நினைத்தால், அது முடியாது.

4. என் கட்டுரைகளுக்கு மறுப்பு தெரிவித்தால், தெரிவியுங்கள், இல்லையானால், விட்டுவிடுங்கள். உங்கள் கருத்துக்களை நீங்கள் சொல்ல உங்களுக்கு உரிமை உண்டு என்று நீங்கள் எண்ணும் போது, நானும் என் கருத்துக்களை தெரிவிக்க எனக்கும் உரிமை உண்டு என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என்று நம்புகின்றேன்.

5. ஒரு தளம் பொறுப்பேற்றால் தான் பதில் தருவேன் என்றால், அது உங்கள் விருப்பம். நான் ஒன்றும் கட்டாயப்படுத்தவில்லை.

இஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்

முன் பக்கம் செல்ல

HOME PAGE

தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்

1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1

2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2

3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3

4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4

பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்

1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1

2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2

பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்

1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்

2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்