இஸ்லாம் அமைதி மார்கமா? இஸ்லாம் இனிய மார்கமா? இஸ்லாம் உண்மையான மார்கமா?

ஆன்சரிங் இஸ்லாம்

பல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்

சத்தியவான் தளம் செல்ல

Showing posts with label கிறிஸ்தவர்கள். Show all posts
Showing posts with label கிறிஸ்தவர்கள். Show all posts

Tuesday, January 27, 2009

Mail Debate: அப்துல் மஜீத் மற்றும் உமர் - பாகம் 2



 

ஈஸா குர்‍ஆனும் மெயில் விவாதங்களும்

அப்துல் மஜீத்

 
முன்னுரை: அப்துல் மஜீத் என்ற இஸ்லாமிய சகோதரர் எனக்கு ஒரு மெயில் அனுப்பினார். அதற்கு எனது பதிலை அவருக்கு அனுப்பினேன். ஆனால், என் முதல் பதில் தனக்கு வந்து சேரவில்லை என்றுச் சொன்னார். எனவே, முதல் பாகத்தை பதித்தேன், அதனை இங்கு(அப்துல் மஜீத் மற்றும் உமர் பாகம் 1) படிக்கவும். இரண்டாம் பாகத்தை இக்கட்டுரையில் காணலாம்.
 

 
அப்துல் மஜீத் மற்றும் உமர் - பாகம் 2

 
சகோதரர் அப்துல் மஜீத் அவர்களுக்கு உமரின் இரண்டாம் பதில்



நான் ஏற்கனவே, என் முதல் பதிலை உங்களுக்கு அனுப்பினேன், ஆனால், அது உங்களுக்கு வந்தடையவில்லை என்றுச் சொல்கிறீர்கள். இது என் இரண்டாம் பதில்.

 
 
அப்துல் மஜீத் அவர்கள் எழுதியது:

ந‌ண்பரே, கீழே கொடுக்க‌ப்ப‌ட்டுள்ளவை அனைத்தும் த‌ங்க‌ளூடைய‌ குற்றச்சாட்டுக்க‌ள். இத‌ற்கான‌ ப‌திலை கீழே பார்க்கவும்.

2. கிறிஸ்தவர்கள் உண்மை மார்க்கம் இஸ்லாம் என்று தெரிந்தே நிராகரிக்கின்றனரா?
3. "மார்க்கம் வேண்டாம்" என்றுச் சொல்பவனை இஸ்லாம் போல கிறிஸ்தவம் கொல்வதில்லை, அல்லது மனிதனை கொல்லச்சொல்லும் ஷரியா சட்டம் எங்களுக்கு இல்லை:
4. இஸ்லாம், "பொய் மார்க்கம்" என்று எல்லா கிறிஸ்தவர்களுக்கும் தெரியும்:
a) இன்னொரு வேதம், இன்னொரு நபி கிறிஸ்தவர்களுக்குத் தேவையில்லை:

என் ப‌தில்:

இஸ்லாம் தோன்றிய‌து கி.பி.6 ஆம் நூற்றாண்டில்,ஸ்தாபிக்க‌ப்ப‌ட்ட‌ உட‌னே அது உல‌கின் ப‌ல‌ மூலைக‌ளூக்கும் ப‌ர‌விய‌து இல்லையா? அப்ப‌டியானால் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட‌வ‌ர்க‌ள் யார்?அன்றைக்கு கிறிஸ்த‌வ‌ம் ப‌ர‌ப்ப‌ட்டிருந்த நாடுக‌ளில் இருந்த ம‌க்க‌ளில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட‌வ‌ர்க‌ள் யார்? எனவே வீம்புக்காக‌வும், சுய‌லாப‌த்திற்காக‌வும் வாழ்கின்ற கிறிஸ்த‌வ‌ர்க‌ளை த‌விர‌ ம‌ற்ற கிறிஸ்த‌வ‌ர்க‌ள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்க‌ள் என்ப‌து புலனாகிறது அல்ல‌வா?
 
Umar:

ஆறாம் நூற்றாண்டில் இஸ்லாம் ஸ்தாபிக்கப்பட்ட பிறகு இஸ்லாம் எப்படி பரவியது? அமைதியான முறையில் பரவியது என்று நீங்கள் நினைத்துக்கொண்டு இருக்கிறீர்கள், இப்படித்தான் உங்கள் இஸ்லாமிய அறிஞர்கள் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள், ஆனால், இஸ்லாமிய ஆதாரங்கள், அதிகார பூரவமான ஹதீஸ்கள் அப்படி சொல்லவில்லை.
 
• உங்கள் முஹம்மது உயிரோடு இருக்கும் கால கட்டத்திலேயே அவர் அனேக நாடுகளுக்கு "இஸ்லாமை தழுவும்படி" கடிதங்கள் எழுதினார்.

• இஸ்லாமை ஏற்கிறீர்களா அல்லது போருக்கு தயாரா என்று கேட்டார்.( அஸ்லிம் தஸ்லம் என்றால் என்ன என்று தெரிந்துக்கொள்ளுங்கள்)

• இஸ்லாமை ஏற்கவில்லையானால், உங்கள் நாட்டில் எங்கள் வீரர்கள் வந்திறங்குவார்கள், உங்கள் நாடுகள் எங்களுக்கு சொந்தமாகும் என்றுச் சொன்னார்.

• இப்படி அவர் எழுதிய கடிதங்கள் இன்னும் இஸ்லாமிய நாடுகளில் உள்ளன.
 
 
இந்த தலைப்பைப் பற்றி எனக்கும் சகோதரர் அபூமுஹை அவர்களுக்கும் இடையே நடைபெற்ற அனைத்து உரையாடல் கட்டுரைகளையும் இங்கே படிக்கலாம். சகோதரர் அபூ முஹை அவர்கள் பதித்த அனைத்து கடிதங்களையும் நீங்கள் தமிழில் படிக்கலாம். அவைகளை படித்துப்பார்த்து, இஸ்லாம் அமைதியான முறையில் தான் பரப்ப உங்கள் நபி அவர்கள் விரும்பினாரா? என்பதை நீங்களே அறிந்துக்கொள்ளுங்கள்.
 
 
முஹம்மதுவின் மறைவிற்கு பிறகு, இஸ்லாமை விட்டு வெளியேறிய நாடுகள்:
(The Wars Of Al-Riddah, i.e. 'the wars against the apostates')


உங்கள் நபி மறைந்த பிறகு அனேக நாடுகள், இஸ்லாமுக்கு தாங்களாகவே மாறினார்கள் என்று நீங்கள் பெருமைப்பட்டுக்கொண்டு இருந்த நாடுகள், இஸ்லாமின் உன்னத கோட்பாடுகளை கண்டு ஆச்சரியப்பட்டு இஸ்லாமை தழுவிய நாடுகள் என்று நீங்கள் நினைத்துக்கொண்டு இருக்கும் நாடுகள், இஸ்லாமைவிட்டு வெளியேறின. ஏன்?

ஏனென்றால், அவர்கள் முஹம்மதுவின் இராணுவ பலத்தைக் கண்டு, பயத்தில் மாறியவர்கள். ஆகையால், தலைவர் போய்விட்டார் இனி நமக்கு என்ன நடக்கும், நாம் இனி இஸ்லாமில் இருக்கவேண்டியதில்லை என்றுச் சொல்லி மாறினார்கள்.

பிறகு இவர்களை வழிக்கு கொண்டுவர, இஸ்லாமின் கட்டுப்பாட்டில் கொண்டு வர "அபூ பக்கர்" அவர்கள் இரண்டாண்டுகள் சண்டையிட்டு, போரிட்டார். இதனை நீங்கள் அறியமாட்டீர்களா? "The Wars Of Al-Riddah" என்றால் என்ன என்று கேள்விப்பட்டதில்லையோ?
 
Ridda wars

From Wikipedia, the free encyclopedia

The Ridda wars (Arabic: حروب الردة), also known as the Wars of Apostasy) were a set of military campaigns against the rebellion of several Arabic tribes against the Caliph Abu Bakr during 632 and 633 AD, following the death of Muhammad. The revolts, in Islamic Historiography later interpreted as religious, were in reality mainly political.[1][2]

Source: http://en.wikipedia.org/wiki/Ridda_wars
 
ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் கட்டுரையிலிருந்து ஒரு பகுதி:
 
அதாவது, இஸ்லாம் அன்று வன்முறையை பின் பற்றாமல் இருந்திருக்குமானால், இஸ்லாம் நிலைத்திருந்திருக்காது அல்லது இன்று இந்த நாள் வரை உயிரோடு இருந்திருக்காது. இதைப் பற்றி ஒரு நல்ல எடுத்துக்காட்டுக்களை சொல்லவேண்டுமானால், "இஸ்லாமை விட்டு வெளியேறுபவர்களுக்கு எதிரான போர்" என்ற விவரங்களைச் சொல்லலாம் (The Wars Of Al-Riddah, i.e. 'the wars against the apostates'). அதாவது, இந்த "இஸ்லாமை விட்டு வெளியேறுபவர்களுக்கு எதிரான போர்" என்பது முகமது அவர்களின் மரணத்திற்கு பின்பு உடனே ஆரம்பிக்கப்பட்டது. அதிகமாக பயப்படவைத்த தலைவராக இருந்த முகமது அவர்களின் மறைவிற்கு பிறகு, கட்டாயத்தின் பெயரில் இஸ்லாமை தழுவிய அந்த இன(Tribe) மக்கள், நிம்மதி பெருமூச்சு விட்டனர். இஸ்லாமுக்கு எதிராக புரட்சி அல்லது கிளர்ச்சி ஆரம்பமானது, ஒவ்வொரு தலைவராக இஸ்லாமை விட்டு வெளியேற‌ ஆரம்பித்தனர், மற்றும் முகமதுவின் அரசாங்கம் விதித்த வரியை கட்ட மறுத்துவிட்டனர். இந்த புரட்சிக்கு பதில் கொடுக்கும் விதமாக, முதல் காலிஃபா, அபூ பக்கர் அவர்கள், இஸ்லாமை விட்டு வெளியேறும் இவர்களோடு சண்டையிடும் படி தன் இராணுவத்திற்கு கட்டளை பிற‌ப்பித்தார்கள். இஸ்லாமை விட்டு வெளியேற முயற்சி செய்த அந்த மக்கள் அனைவரையும் மறுபடியும் இஸ்லாமின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கு இரண்டு வருடங்கள் பிடித்தன. இந்த போர்கள் செய்யும் படி முதல் காலிஃபா மட்டும் கட்டளையிடவில்லை, இதனை அல்லாவும் அவனது தூதரும் கட்டளையிட்டுள்ளனர்.

 
அருமை நண்பரே, சுயலாபத்திற்காக, உயிருக்கு பயந்து அன்று இஸ்லாமை தழுவியவர்கள் அனேகர். இன்றும் அப்படித்தான், இஸ்லாமிய நாடுகளில் வாழும் இஸ்லாமியர்கள், தாங்கள் வேறு ஒரு மார்க்கம் நல்லது என்று கண்டு, அதற்கு மாற நினைக்கும் போது, அவர்களுக்கு மரண தண்டனை என்றுச் சொல்லி,பயப்படவைத்து, கேவலமாக‌ வாழ்ந்துக்கொண்டு இருக்கிறது, "உங்கள் இஸ்லாம்".

இஸ்லாமிய நாடுகளில், இஸ்லாமை விட்டு வெளியேறுகிறவர்களை நாங்கள் கொல்வதில்லை என்று சட்டம் கொண்டுவரச் சொல்லுங்கள், அப்படி வந்தால், அதனை சரியாக நியாயமான முறையில் பின்பற்றினால், இஸ்லாம் எத்தனை ஆண்டுகள் தாக்குபிடிக்கும் என்பதை நாமே நம் கண்களால் காணமுடியும். எனவே, இஸ்லாமை அமைதியான முறையில் முஹம்மது பரப்பினார் என்ற பழைய கதையையே இன்னும் சொல்லிக்கொண்டு இருக்காதீர்கள்.
 
அப்துல் மஜீத் அவர்கள் எழுதியது:

மேலும் க‌ட‌ந்த சில‌ நூற்றாண்டுக‌ளில் உல‌க‌த்தையே கல‌க்கிய‌ த‌த்துவ‌மான‌ க‌ம்யூனிச‌த்தை ம‌ன‌ப்பூர்வ‌மாக‌ ஏற்றுக்கொண்ட‌ நாடுக‌ள் கிறிஸ்த‌வ‌ நாடுக‌ளா? இஸ்லாமிய‌ நாடுக‌ளா? நாங்க‌ள் க‌ம்யூனிச‌த்தை ச‌ரி என்று சொல்ல‌ வ‌ர‌வில்லை ஆனால் ஏன் கிறிஸ்த‌வ‌ சித்தாந்தங்க‌ள் அவ‌ர்க‌ளை த‌டுக்க‌வில்லை? இன்னும் உண்மையை சொல்வ‌தென்றால் நாத்திக‌ர்க‌ள் அதிக‌ம் இருப்ப‌து கிறிஸ்த‌வ‌ மார்க்க‌த்தில் தான்.
 
Umar:

கிறிஸ்தம் இஸ்லாமைப் போல அடாவடிச் செய்து, அதை நம்பிக்கொண்டு இருக்கிறவர்களை பயப்படவைத்து, வேறு மார்க்கத்திற்கு(நாத்தீகாமானாலும் சரி, கம்யூனிசமானாலும் சரி, இஸ்லாமானாலும் சரி...) மாறினால் சட்டங்கள் போட்டு தண்டிக்காது. கிறிஸ்த‌வ‌ம் ஒரு ம‌னித‌னின் ம‌ன‌தில் மாற்ற‌ம் ஏற்ப‌ட‌வேண்டும், அவ‌ன் இறைவ‌னுக்கு விருப்ப‌மான‌ செய‌ல்க‌ளை செய்ய‌வேண்டும் என்று எதிர்பார்க்கிற‌து.

 
மனிதனுக்கு சுயமாக முடிவு எடுக்கும் உரிமையை கிறிஸ்தவம் அளிக்கிறது. ஒரு வேளை ஒரு கிறிஸ்தவன் இஸ்லாமுக்கு மாறினால், கிறிஸ்தவ பெரியோர்கள் ஓரிரு முறை அறிவுரைச் சொல்வார்கள், கேட்கவில்லையானால், விட்டுவிடுவார்கள். அதை விட்டுவிட்டு, இஸ்லாமைப் போல‌, ப‌ய‌ப்ப‌ட‌வைத்து, அவ‌னை துன்ப‌ப்ப‌டுத்தி, ப‌டாத‌பாடு ப‌டுத்த‌மாட்டோம். இஸ்லாமை போல‌ உயிரை எடுக்க‌மாட்டோம், ப‌த்வாக்க‌ள் போட‌மாட்டோம்.

ஏன் கிறிஸ்தவ சித்தாந்தங்கள், கிறிஸ்தவத்தை விட்டு வெளியேறுகிறவர்களை தடுக்கவில்லை என்று கேட்கிறீர்கள், நான் ஒரு கேள்வியை கேட்கிறேன், ஏன் முஹம்மது மரித்ததும் அனேக நாடுகள் இஸ்லாமை விட்டு வெளியேறின? ஏன் இஸ்லாமின் கோட்பாடுகள் அவர்களை தடுக்கவில்லை. உங்கள் முதலாம் காலிபா போர் செய்துதான் அவர்களை கட்டுப்பட்டிற்குள் கொண்டு வந்தார். அடுத்தவரின் இரத்தத்தில் வாழ்வதற்கு கிறிஸ்தவம் ஒன்றும் இஸ்லாம் இல்லையே.

இவ்வுலகத்தில் மனிதன் எடுக்கும் முடிவு, அவனது அடுத்த உலகத்தை பாதிக்கும் என்று எல்லா மார்க்கமும் சொல்கின்றன. ஆனால், நீங்கள் ஒரு படி மேலே சென்று, நீ உன் முடிவை மாற்றிக் கொள்ளவில்லையானால், கொன்றுவிடுவோம் என்று பயப்படுத்துகிறீர்கள்.

உங்களைப்போல அராஜகம் செய்து, பயப்படவைத்து வெளியேறுகிறவர்களை தக்கவைக்கும் கேவலமான நிலை எங்களுக்கு வேண்டாம்.

// Abdul Majeeth Said:

இன்னும் உண்மையை சொல்வ‌தென்றால் நாத்திக‌ர்க‌ள் அதிக‌ம் இருப்ப‌து கிறிஸ்த‌வ‌ மார்க்க‌த்தில் தான்.//

 
நண்பரே கொஞ்சம் சரியாகச் சொல்லுங்கள். ஒருவன் நாத்தீகனாக மாறினால், அவன் மறுபடியும் கிறிஸ்தவன் என்றுச் சொல்லமாட்டான், அதே போல ஒருவன் இஸ்லாமிலிருந்து நாத்தீகனாக மாறினால், இஸ்லாமியன் என்றுச் சொல்லமாட்டான், "முன்னால் கிறிஸ்தவன், முன்னால் இஸ்லாமியன்" என்றுச் சொல்லிக்கொள்வான்.

ஒரு விவரத்தைச் சொல்கிறேன், கேளுங்கள், தற்காலத்தில் இஸ்லாமின் உண்மை முகம் கண்டுக்கொண்ட அனேக இஸ்லாமியர்கள் நாத்தீகர்களாக மாறிக்கொண்டு இருக்கிறார்கள்.
 
அப்துல் மஜீத் அவர்கள் எழுதியது:

என‌வே உலக‌ வ‌ர‌லாற்றை புர‌ட்டி பாருங்க‌ள் நண்ப‌ரே. வரலாறு நெடுக‌ யூத‌ர்க‌ளை கொன்று குவித்து வெறியாட்ட‌ம் போட்ட‌ கிறிஸ்த‌வ‌ர்க‌ளை எண்ணி பாருங்ள். சிலுவை போர்க‌ள்(CRUSADE) என்ற பெய‌ரில் ம‌னித குல‌த்துக்கே பெரும் அபாயமாக செய‌ல்ப‌ட்ட‌து யார்? உங்க‌ளூடைய‌ திருச்ச‌பைக‌ள் அல்ல‌வா? அன்பை போதித்த‌ இயேசுவின் பெய‌ரால் அக்கிர‌ம‌ம் செய்த‌து யார்? மேலும் உண்மையை சொல்வ‌தென்றால் வாளாலும், துப்பாக்கிக‌ளாலும், பீர‌ங்கிக‌ளாலும், மிர‌ட்ட‌ல்க‌ளாலும், பொய்க‌ளாலும்,த‌ந்திர‌த்தாலும் முக்கிய‌மாக‌ பணத்தாலும் ம‌த‌மாற்றம் செய்(வ‌)த‌து யார்? சிந்தியுங்க‌ள் ச‌கோதர‌ரே தெளிவு பிறக்கும்.
 
ஆமாம், ஒரு காலத்தில் கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொண்ட சிலர் வெறியாட்டம் போட்டனர், சிலுவைப் போர் என்றுச் சொல்லி, இயேசு சொல்லாததை செய்தனர். இதைப் பற்றி கிறிஸ்தவர்களாகிய நாங்கள் வேதனை அடைகிறோம்.

ஆனால், உங்கள் முஹம்மது சொன்னதும், செய்ததும் வெறியாட்டம் தானே, கொலையும், கற்பழிப்பும், குடியும் கும்மாளமும் போட்டு ஒரு ஆன்மீக தலைவரைப்போலவே அவர் நடந்துக் கொள்ளவில்லையே. நீங்கள் குற்றம் சாட்டினால், கிறிஸ்தவர்கள் மீது சாட்டலாம், ஆனால் ,கிறிஸ்து மீது சாட்டமுடியாது.

தன் மார்க்கம் தான் சரியானது என்ற எண்ணத்தை மற்றவர்கள் மீது திணித்து, அவர்கள் அடிபணியவில்லையானால் இரத்த ஆறு ஓடும் என்றுச் சொல்லி, தன் "அமைதியான" மார்க்கத்தை பரப்பியவர் தானே உங்கள் நபி அவர்கள். இதில் வேறு, இன்று உலகில் உள்ள அனைத்து இஸ்லாமியர்களும் ஒரே மூச்சாக "இஸ்லாம் என்றால் அமைதி" என்ற பொய்யை ஓயாமல் சொல்லிக்கொண்டு இருக்கிறீர்கள், எத்தனை நாட்கள் தான் இப்படி செய்வீர்கள்?

சரி போர்கள் தான் புரிந்தார், அப்பெண்களையாவது விட்டுவிடலாம் அல்லவா? அடிமைப்பெண்களை கற்பழிக்கலாம் என்ற கட்டளையே குர்‍ஆனில் புகுத்திவிட்டாரே? "உங்கள் முஹம்மதுவை விட நீங்கள் நல்லவராக இருப்பீர்கள்". ஜுவரிய்யா, ரிஹானா மற்றும் சுபியா (Juwairiya, Safiyah & Rayhanah) என்ற மூன்று பெண்களோடு முஹம்மதுவிற்கு என்ன உறவு இருந்தது என்று உங்கள் இஸ்லாமிய அறிஞர்களை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள், ஹதீஸ்களையும், முஹம்மதுவின் வாழ்க்கை சரித்திரத்தையும் (இபின் இஷாக்) படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்.
 
இந்த கட்டுரைகளை படித்துப்பாருங்கள்,


 
அப்துல் மஜீத் அவர்கள் எழுதியது:

த‌ங்க‌ளின் ம‌ற்றொரு குற்றச்சாட்டு:

b) ஆட்டுத்தோலை போர்த்துக்கொண்ட ஓநாய்கள் வருவார்கள் என்றும் இயேசு எச்சரித்துள்ளார்:

கள்ளத் தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள்; உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள் (மத்தேயு 7:15)


இந்த‌ வ‌ச‌ன‌த்தை கொஞ்ச‌ம் நிதான‌மாக‌ மீண்டும்,மீண்டும்

ப‌டித்து பாருங்க‌ள்.திரு.ப‌வுல் அவ‌ர்க‌ளுக்கும் க‌ன‌க‌ச்சித‌மாக‌ பொருந்துகிறது அல்ல‌வா? உண்மையில் இன்றைய‌ கிறிஸ்த‌வ‌த்தை உருவாக்கிய‌வ‌ர், இயேசுவை நேரில் க‌ண்ட‌து கிடையாது,கிறிஸ்த‌வ‌ர்க‌ள் மீது வ‌ன்முறையை க‌ட்ட‌விழ்த்து விட்ட‌வ‌ர்,த‌ன்னுடைய‌ ம‌த‌த்தை ப‌ர‌ப்ப‌ இயேசுவின் நாம‌த்தை துஷ்பிர‌யோகாப்பாடுத்திக்கொண்ட‌வ‌ர்,த‌ன்னுடைய‌ ம‌த‌த்தை ப‌ர‌ப்ப‌ பொய் சொல்ல‌லாம்,த‌ந்திர‌ யுக்திக‌ளை கையால‌ளாம் இன்னும் எண்ணற்ற தான் தோன்றி கோட்பாடுக‌ளை உண்டாக்கிய‌ திரு.ப‌வுல் அவ‌ர்க‌ளையும் கள்ளத் தீர்க்கதரிசி என்று சொல்ல‌ முடியுமே.நான் ஏன் இந்த குற்றச்சாட்டுக‌ளை வைக்கின்றேன் என்றால் திரு.ப‌வுல் அவ‌ர்க‌ளின் அங்கீகார‌ம் என்ன‌ என்ப‌துதான் என் கேள்வீ?
 
 
Umar:

அனேக கொலைகள் செய்தவர், கற்பழித்தவர், தனக்கு 50 வயதாக இருக்கும் போது பேத்தி வயதுள்ள ஒரு சிறுமியை திருமணம் செய்துக்கொண்டவர், தன் வளர்ப்பு மகன் தன் மனைவியை விவாகரத்து செய்தபிறகு அப்பெண்ணை திருமணம் செய்துக்கொண்டவர், தன் மார்க்கத்தை பரப்ப வன்முறை கடிதங்களை அனுப்பி பயப்படவைத்தவர், போரில் கிடைத்த பெண்களை வைத்துக்கொண்டவர், கற்பழித்தவர், இப்படிப்பட்டவர் "எனக்கு ஒரு தூதன் காணப்பட்டு குர்‍ஆனை இறக்கினார்" என்றுச் சொன்னால் நம்புவீர்கள். ஆனால், இந்த கீழ்தரமான எந்த செயலையும் செய்யாத அப்போஸ்தலர் பவுல் உங்களுக்கு பொய்யராக தெரிகிறார். என்ன செய்ய, காலம் கெட்டுகிடக்கு.

உங்கள் முஹம்மதுவிற்கே நீங்கள் அங்கீகாரம் கொடுக்க வெட்கப்படாத போது, இயேசுவிற்காக தன் வாழ்க்கையை கொடுத்தவரை நாங்கள் அங்கீகரிப்பதில் எந்த தவறும் இல்லை, என் அருமை இஸ்லாமிய சகோதரரே!
 
அப்துல் மஜீத் அவர்கள் எழுதியது:

?நீங்க‌ள் மேற்கோள் காட்டிய‌ அதே மத்தேயு 7 அதிகார‌ம் 21,22,23,24 வ‌ச‌ன‌ங்க‌ளை திரும்ப‌,திரும்ப‌ வாசித்து பாருங்க‌ள். எத்த‌னை தெளிவாக‌ இயேசு திரு.ப‌வுல் அவ‌ர்க‌ளின் க‌ள்ளதீர்க்க‌த‌ரிச‌ன‌ம் பற்றி உரைத்துவிட்டு போயிருக்கிறார் என்ப‌து புரியும்.முஹ‌ம்ம‌த் ந‌பியின் தூதுத்துவ‌த்தை ப‌ற்றி இவ்வ‌ளவு ஆராய்ச்சி செய்யும் நீங்க‌ள், ப‌வுல் அடிக‌ளாருக்கு ஏன் வேறோர் அள‌வுகோலை தேர்வு செய்கிறீர்க‌ள்.

எல்லாம் வ‌ல்ல‌ க‌ர்த்தர் ந‌ம‌க்கு நேர் வ‌ழி காட்டி அருள்வாராக‌.

இது என்னுடைய‌ 2 வ‌து க‌டித‌ம், முத‌ல் க‌டித‌த்திற்கு இதுவ‌ரை ப‌தில் இல்லை. இப்படிக்கு,

அப்துல் ம‌ஜீத்.
 
அருமை நண்பரே, நீங்கள் குறிப்பிட்ட மத்தேயு 7: 21 லிருந்து 24 வரை படித்தேன், நண்பரே. என்ன தான் அற்புதங்கள் செய்திருந்தாலும், தான் சொல்லிய வசனங்களை பின்பற்றாமல் வாழ்பவர்களுக்கு "உங்களை நான் அறியவில்லை என்று இயேசு சொல்லிவிடுவார்". இன்று உலகில் முஸ்லீம்களாகிய உங்களில் சிலர், இயேசு சொன்ன அமைதி மார்க்கத்தை விட்டுவிட்டு, உங்கள் நபி சொன்ன மார்க்கத்தை பின்பற்றுகிறீர்கள், உன் சத்துருக்களை நேசியுங்கள் என்றுச் சொன்ன இயேசுவின் வார்த்தைகளை விட்டுவிட்டு, சொந்த நாட்டுக்காரனையும் கொல்கிறீர்கள். உங்களைப் பார்த்து இயேசு சொல்வார், அக்கிரம செய்கைக்காரர்களை என்னை விட்டு அகன்றுப்போங்கள்.

ஒன்றைச் சொல்லட்டுமா? முஹம்மதுவிற்கும் அப்போஸ்தலர் பவுலுக்கும் இடையே எவ்வளவு பெரிய ஏணியை வைத்தாலும் எட்டாது சகோதரரே. அவ்வளவு கேவலமான வாழ்க்கையை உங்கள் நபி வாழ்ந்துவிட்டு சென்றுள்ளார். இயேசு, "அவர்கள் கனிகளால் அவர்களை அறியுங்கள் என்றார்". முஹம்மதுவின் கனிகள் என்ன வெறுப்புக் காட்டுதல், கொலை செய்தல், கற்பழித்தல், கொள்ளையடித்தல், அடிமைகளோடு உடலுறவு கொள்ளுதல், இது தானே உங்கள் நபியின் கனிகள்.

சமுதாயத்தில் ஒரு சாதாரண சராசரி மனிதனின் அளவுகோலோடும் உங்கள் முஹம்மதுவை அளக்கமுடியாது நண்பரே. இப்படிப்பட்டவரை நாங்கள் ஒரு போதும் நபியாக ஏற்கமுடியாது, அவரை பின்பற்றுகிறவர்களாகிய இன்றைய தீவிர பற்றுள்ள இஸ்லாமியர்களின் செய்கைகளையும் நாங்கள் கண்டுக்கொண்டு தான் இருக்கிறோம், புலிக்கு பிறந்தது பூனையாகுமா? தாயைப்போல பிள்ளை.

உங்கள் முஹம்மதுவினுடைய வாழ்க்கையை முழுவதுமாக மக்களின் முன்பாக வைக்க நீங்கள் தயாராக இருக்கிறீர்களா? அதே போல இயேசுவின் வாழ்க்கையையும், மற்ற அனைத்து சீடர்களின் வாழ்க்கையையும் நாங்கள் முன்வைக்கிறோம். பிறகு மக்கள் அல்லது நம் விவரங்களை படிக்கும் வாசகர்கள் முடிவு எடுக்கட்டும், ஒரு நபி எப்படி இருக்கவேண்டும், ஒரு ஆன்மீக தலைவர் எப்படி இருக்கவேண்டும் என்று வாசகர்களே முடிவு எடுக்கட்டும்.


நான் மேலே சொன்ன விவரங்கள் அனைத்தும் ஏதோ இஸ்லாமியர் அல்லாதவர்களின் புத்தகங்களிலிருந்து எடுத்துச் சொன்னதாக நினைக்கவேண்டாம், அவைகள் அனைத்தும் குர்‍ஆன், ஹதீஸ்கள், முஹம்மதுவின் ஆரம்ப கால சரித்திர ஆசிரியர்கள் எழுதிய சரிதைகள், இஸ்லாமிய உரைகள் (தஃப்ஸீர்கள்)எழுதியவர்களின் போன்றவைகளிலிருந்து எடுத்தது. உங்களுக்கு விவரம் தேவையானால், கேளுங்கள் தருகிறேன்.



 

 

Saturday, April 12, 2008

ஏகத்துவத்திற்கு பதில்: கிறிஸ்தவர்கள் விஷம் அருந்த தயாரா? விஷம் சாப்பிட்ட நபி மரித்தும்போனார்.



The Challenge of Mark 16

மாற்கு 16ன் சவால்

Sam Shamoun


அஹமத் தீதத் மற்றும் ஜாகிர் நாயக் போன்ற இஸ்லாமிய அறிஞர்கள், கிறிஸ்தவத்திற்கு எதிராக வாதம் புரியும் போது, பொதுவாக அவர்கள் பயன்படுத்தும் ஒரு யுக்தி என்னவென்றால், மாற்கு 16ம் அதிகாரம் வசனங்கள் 14 லிருந்து 18 வரை குறிப்பிட்டு கிறிஸ்தவர்களுக்கு சவால் விடுவார்கள். முக்கியமாக, இயேசு தன்னை நம்புகிறவர்களுக்கு உறுதி அளிக்கும் வண்ணமாக, "தன்னை நம்புகிறவர்களுக்கு எந்த சேதமும் வராது, அதாவது விஷத்தை குடித்தாலும் உங்களை அது ஒன்றும் செய்யாது" என்றுச் சொன்ன வசனங்களை இஸ்லாமிய அறிஞர்கள் மேற்கோள் காட்டுவார்கள்.

அதன்பின்பு பதினொருவரும் போஜனபந்தியிலிருக்கையில் அவர்களுக்கு அவர் தரிசனமாகி, உயிர்த்தெழுந்திருந்த தம்மைக் கண்டவர்களை அவர்கள் நம்பாமற்போனதினிமித்தம் அவர்களுடைய அவிசுவாசத்தைக்குறித்தும் இருதய கடினத்தைக்குறித்தும் அவர்களைக் கடிந்துகொண்டார். பின்பு, அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள். விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்; விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான். விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள்; நவமான பாஷைகளைப் பேசுவார்கள்; சர்ப்பங்களை எடுப்பார்கள்; சாவுக்கேதுவான யாதொன்றைக் குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது; வியாதிஸ்தர்மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள் என்றார். (மாற்கு 16:14-18)

இந்த சவாலை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று ஒரு கிறிஸ்தவன் சொன்னால், உடனே, இந்த கிறிஸ்தவருக்கு இயேசுவின் மீது உண்மையான நம்பிக்கை இல்லை என்று இஸ்லாமிய அறிஞர்கள் சொல்லிவிடுவார்கள்.

இயேசு இந்த வசனங்களில் சொன்ன அர்த்தத்தை மாற்றி இஸ்லாமியர்கள் வேறு விதமாக பொருள் கூறுகிறார்கள். அதாவது, ஒரு வேத வசனத்திற்கு சரியான பொருள் கூறவேண்டுமானால், மற்ற வசனங்களின் வெளிச்சத்தில் அதற்கு பொருள் கூறவேண்டும். இதை நாம் செய்தோமானால், இயேசு சொன்ன வசனங்களுக்கு உண்மையான பொருளை நாம் கண்டுக்கொள்ள முடியும்:

அப்பொழுது அவன் அவரை எருசலேமுக்குக் கொண்டுபோய், தேவாலயத்து உப்பரிகையின்மேல் அவரை நிறுத்தி: நீர் தேவனுடைய குமாரனேயானால், இங்கேயிருந்து தாழக்குதியும். ஏனெனில், உம்மைக் காக்கும்படிக்குத் தம்முடைய தூதர்களுக்கு உம்மைக்குறித்துக் கட்டளையிடுவார் என்றும், உமது பாதம் கல்லில் இடறாதபடிக்கு, அவர்கள் உம்மைக் கைகளில் ஏந்திக்கொண்டுபோவார்கள் என்றும், எழுதியிருக்கிறது என்று சொன்னான். அதற்கு இயேசு: உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக என்று சொல்லியிருக்கிறதே என்றார். (லூக்கா 4:19-12)

இந்த வசனங்களில், இயேசு தன்னை பின்பற்றுகிறவர்களை அழைத்து, நீங்கள் போய் எங்கெல்லாம் பாம்புகள் இருக்கின்றனவோ அவைகளை உங்கள் கைகளால் எடுங்கள், மற்றும் விஷமிருந்தால் அதையும் குடியுங்கள் என்றுச் சொல்லவில்லை. இந்த இடத்தில் இயேசு சொன்ன செய்தி, "எதிரியானவன் எந்த வழிமுறைகளில் விசுவாசிகளின் முயற்சிகளை தடை செய்யவேண்டும் என்று நினைத்து செயல்பட்டாலும், அது ஒரு பொருட்டல்ல, அவன் வெற்றி பெறவே முடியாது" என்பதாகும் (Christ's point was that no matter what the enemy tries to do in thwarting the efforts of the believers, he will never succeed.) இது முழுக்க முழுக்க இயேசு அளித்த உறுதியாகும், மற்றும் அவருடைய சித்தம் நம்முடைய வாழ்க்கையில் நடைபெறுவதற்கு, அவர் கொடுத்த இந்த அதிகாரம் எல்லா விசுவாசிகள் மீதும் உள்ளது.(This is based solely on the promises of Christ that his authority rests upon all true believers to accomplish his will in our lives: )

பின்பு அந்த எழுபதுபேரும் சந்தோஷத்தோடே திரும்பிவந்து: ஆண்டவரே, உம்முடைய நாமத்தினாலே பிசாசுகளும் எங்களுக்குக் கீழ்ப்படிகிறது என்றார்கள். அவர்களை அவர் நோக்கி: சாத்தான் மின்னலைப்போல வானத்திலிருந்து விழுகிறதைக் கண்டேன். இதோ, சர்ப்பங்களையும் தோள்களையும் மிதிக்கவும், சத்துருவினுடைய சகல வல்லமையையும் மேற்கொள்ளவும் உங்களுக்கு அதிகாரங்கொடுக்கிறேன்; ஒன்றும் உங்களைச் சேதப்படுத்தமாட்டாது. ஆகிலும் ஆவிகள் உங்களுக்குக் கீழ்ப்படிகிறதற்காக நீங்கள் சந்தோஷப்படாமல், உங்கள் நாமங்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறதற்காகச் சந்தோஷப்படுங்கள் என்றார். (லூக்கா 10:17-20)

அதே போல, பரிசுத்த வேதாகமம், இயேசு மாற்கு 16ம் அதிகாரத்தில் சொன்ன உறுதிமொழி எப்படி உண்மையான விசுவாசிகளின் வாழ்க்கையில் நிறைவேறியது என்றும் சாட்சி பகருகிறது:

பெந்தெகொஸ்தே என்னும் நாள் வந்தபோது, அவர்களெல்லாரும் ஒருமனப்பட்டு ஓரிடத்திலே வந்திருந்தார்கள். அப்பொழுது பலத்த காற்று அடிக்கிற முழக்கம்போல, வானத்திலிருந்து சடிதியாய் ஒரு முழக்கமுண்டாகி, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று. அல்லாமலும் அக்கினிமயமான நாவுகள்போலப் பிரிந்திருக்கும் நாவுகள் அவர்களுக்குக் காணப்பட்டு, அவர்கள் ஒவ்வொருவர் மேலும் வந்து அமர்ந்தது. அவர்களெல்லாரும் பரிசுத்தஆவியினாலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளிலே பேசத்தொடங்கினார்கள். வானத்தின்கீழிருக்கிற சகல தேசத்தாரிலுமிருந்துவந்த தேவபக்தியுள்ள யூதர்கள் அப்பொழுது எருசலேமிலே வாசம்பண்ணினார்கள். அந்தச் சத்தம் உண்டானபோது, திரளான ஜனங்கள் கூடிவந்து, தங்கள் தங்கள் பாஷையிலே அவர்கள் பேசுகிறதை அவரவர்கள் கேட்டபடியினாலே கலக்கமடைந்தார்கள். எல்லாரும் பிரமித்து ஆச்சரியப்பட்டு, ஒருவரையொருவர் பார்த்து: இதோ, பேசுகிற இவர்களெல்லாரும் கலிலேயரல்லவா? அப்படியிருக்க, நம்மில் அவரவர்களுடைய ஜென்மபாஷைகளிலே இவர்கள் பேசக் கேட்கிறோமே, இதெப்படி? பார்த்தரும், மேதரும், எலாமீத்தரும், மெசொப்பொத்தாமியா, யூதேயா, கப்பத்தோக்கியா, பொந்து, ஆசியா, பிரிகியா, பம்பிலியா, எகிப்து என்னும் தேசத்தார்களும், சிரேனேபட்டணத்தைச் சுற்றியிருக்கிற லீபியாவின் திசைகளிலே குடியிருக்கிறவர்களும், இங்கே சஞ்சரிக்கிற ரோமாபுரியாரும், யூதரும், யூதமார்க்கதமைந்தவர்களும், கிரேத்தரும், அரபியருமாகிய நாம் நம்முடைய பாஷைகளிலே இவர்கள் தேவனுடைய மகத்துவங்களைப் பேசக்கேட்கிறோமே என்றார்கள். எல்லாரும் பிரமித்துச் சந்தேகப்பட்டு, இதென்னமாய் முடியுமோ என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள். (அப்போஸ்தலர் 2:1-12)
அப்போஸ்தலருடைய கைகளினாலே அநேக அடையாளங்களும் அற்புதங்களும் ஜனங்களுக்குள்ளே செய்யப்பட்டது. எல்லாரும் ஒருமனப்பட்டுச் சாலோமோனுடைய மண்டபத்தில் இருந்தார்கள். மற்றவர்களில் ஒருவரும் அவர்களுடனே சேரத் துணியவில்லை. ஆகிலும் ஜனங்கள் அவர்களை மேன்மைப்படுத்தினார்கள். திரளான புருஷர்களும் ஸ்திரீகளும் விசுவாசமுள்ளவர்களாகிக் கர்த்தரிடமாக அதிகமதிகமாய்ச் சேர்க்கப்பட்டார்கள். பிணியாளிகளைப் படுக்கைகளின் மேலும் கட்டில்களின்மேலும் கிடத்தி, பேதுரு நடந்துபோகையில் அவனுடைய நிழலாகிலும் அவர்களில் சிலர்மேல் படும்படிக்கு, அவர்களை வெளியே வீதிகளில் கொண்டுவந்து வைத்தார்கள். சுற்றுப்பட்டணங்களிலுமிருந்து திரளான ஜனங்கள் பிணியாளிகளையும் அசுத்த ஆவிகளால் வாதிக்கப்பட்டவர்களையும் எருசலேமுக்குக் கொண்டுவந்தார்கள்; அவர்களெல்லாரும் குணமாக்கப்பட்டார்கள். (அப்போஸ்தலர் 5:12-16)
பவுலின் கைகளினாலே தேவன் விசேஷித்த அற்புதங்களைச் செய்தருளினார்.அவனுடைய சரீரத்திலிருந்து உறுமால்களையும் கச்சைகளையும் கொண்டு வந்து, வியாதிக்காரர்மேல் போட வியாதிகள் அவர்களைவிட்டு நீங்கிப்போயின; பொல்லாத ஆவிகளும் அவர்களை விட்டுப் புறப்பட்டன. அப்பொழுது தேசாந்தரிகளாய்த்திரிகிற மந்திரவாதிகளாகிய யூதரில் சிலர் பொல்லாத ஆவிகள் பிடித்திருந்தவர்கள்மேல் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தைச் சொல்லத் துணிந்து: பவுல் பிரசங்கிக்கிற இயேசுவின்பேரில் ஆணையிட்டு உங்களுக்குக் கட்டளையிடுகிறோம் என்றார்கள். பிரதான ஆசாரினாகிய ஸ்கேவா என்னும் ஓர் யூதனுடைய குமாரர் ஏழுபேர் இப்படிச் செய்தார்கள். பொல்லாத ஆவி அவர்களை நோக்கி: இயேசுவை அறிவேன், பவுலையும் அறிவேன், நீங்கள் யார் என்று சொல்லி, பொல்லாத ஆவியையுடைய மனுஷன் அவர்கள்மேல் பாய்ந்து, பலாத்காரம்பண்ணி, அவர்களை மேற்கொள்ள, அவர்கள் நிருவாணிகளும் காயப்பட்டவர்களுமாகி அந்த வீட்டை விட்டு ஓடிப்போனார்கள். இது எபேசுவிலே குடியிருந்த யூதர் கிரேக்கர் அனைவருக்கும் தெரியவந்தபோது, அவர்களெல்லாரும் பயமடைந்தார்கள்; கர்த்தராகிய இயேசுவின் நாமம் மகிமைப்பட்டது. (அப்போஸ்தலர் 19:11-17)
பவுல் சில விறகுகளை வாரி அந்த நெருப்பின்மேல் போடுகையில், ஒரு விரியன்பாம்பு அனலுறைத்துப் புறப்பட்டு அவனுடைய கையைக் கவ்விக்கொண்டது. விஷப்பூச்சி அவன் கையிலே தொங்குகிறதை அந்நியராகிய அந்தத் தீவார் கண்டபோது, இந்த மனுஷன் கொலைபாதகன், இதற்குச் சந்தேகமில்லை; இவன் சமுத்திரத்துக்குத் தப்பிவந்தும், பழியானது இவனைப் பிழைக்கவொட்டவில்லையென்று தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள். அவன் அந்தப் பூச்சியைத் தீயிலே உதறிப்போட்டு, ஒரு தீங்கும் அடையாதிருந்தான். அவனுக்கு வீக்கங்கண்டு, அல்லது அவன் சடிதியாய் விழுந்து சாவானென்று அவர்கள் பார்த்துக்கொண்டிருந்தார்கள்; நெடுநேரமாய்ப் பார்த்துக்கொண்டிருந்தும், ஒரு சேதமும் அவனுக்கு வராததைக் கண்டபோது, வேறு சிந்தையாகி, இவன் தேவனென்று சொல்லிக்கொண்டார்கள். தீவுக்கு முதலாளியாகிய புபிலியு என்னும் பேர்கொண்டவனுடைய நிலங்கள் அந்த இடத்திற்குச் சமீபமாயிருந்தது; அவன் எங்களை ஏற்றுக்கொண்டு, மூன்று நாள் பட்சமாய் விசாரித்தான். புபிலியுவினுடைய தகப்பன் ஜுரத்தினாலும் இரத்தபேதியினாலும் வருத்தப்பட்டுக் கிடந்தான்; பவுல் அவனிடத்திற்குப் போய் ஜெபம்பண்ணி, அவன் மேல் கைகளை வைத்து, அவனைக் குணமாக்கினான். இது நடந்தபின்பு, தீவிலே இருந்த மற்ற வியாதிக்காரரும் வந்து, குணமாக்கப்பட்டார்கள். (அப்போஸ்தலர் 28:3-9)

இதுமட்டுமல்லாமல், விஷம் பற்றியும், சேதமடையாமல் இருப்பது பற்றியும் ஒரு ஆவிக்குரிய பொருள் கூட உள்ளது. "பொல்லாத மனுஷனுடைய நாக்கு விஷமுள்ள பாம்பு போல உள்ளது என்றும், இப்படிப்பட்டவன் தன்னுடைய பொய்யினாலும், ஏமாற்று வார்த்தைகளினாலும், நல்ல விசுவாசிகளை அழிக்க முயற்சி செய்கிறான்" என்று பரிசுத்த வேதாகமம் சொல்கிறது:

கர்த்தாவே, பொல்லாத மனுஷனுக்கு என்னைத் தப்புவியும்; கொடுமையுள்ளவனுக்கு என்னை விலக்கி இரட்சியும். அவர்கள் தங்கள் இருதயத்தில் பொல்லாப்புகளைச் சிந்தித்து, யுத்தஞ்செய்ய நாள்தோறும் கூட்டங்கூடுகிறார்கள். சர்ப்பத்தைப்போல் தங்கள் நாவைக் கூர்மையாக்குகிறார்கள்; அவர்கள் உதடுகளின்கீழ் விரியன் பாம்பின்விஷம் இருக்கிறது. கர்த்தாவே, துன்மார்க்கனுடைய கைகளுக்கு என்னை நீங்கலாக்கி, கொடியவனுக்கு என்னை விலக்கி இரட்சியும்; அவர்கள் என் நடைகளைக் கவிழ்க்கப்பார்க்கிறார்கள். (சங்கீதம் 140:1-4)

அவர்கள் தொண்டை திறக்கப்பட்ட பிரேதக்குழி, தங்கள் நாவுகளால் வஞ்சனைசெய்கிறார்கள்; அவர்களுடைய உதடுகளின் கீழே பாம்பின் விஷம் இருக்கிறது; (ரோமர் 3:13)

நாவை அடக்க ஒரு மனுஷனாலும் கூடாது; அது அடங்காத பொல்லாங்குள்ளதும் சாவுக்கேதுவான விஷம்நிறைந்ததுமாயிருக்கிறது. (யாக்கோபு 3:8)

இயேசு வைத்த பரிட்சையில் முகமது தோற்றுப்போனார்

கடைசியாக, இயேசு வைத்த பரிட்சையில் முகமது தோற்றுப்போனார். அதாவது, யாரோ செய்த செய்வினை என்றுச் சொல்லக்கூடிய பில்லிசூன்யத்தால் முகமது பீடிக்கப்பட்டதுமல்லாமல், அவர் சாப்பிட்ட ஒரு விஷத்தால் மரித்தும் போனார்!


பாகம் 3, அத்தியாயம் 58, எண் 3175

ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்களுக்கு (ஒரு குறுகிய காலத்திற்கு) சூனியம் வைக்கப்பட்டது. அதன் வாயிலாக, தாம் செய்யாத ஒரு செயலைத் தாம் செய்திருப்பதாக அவர்கள் எண்ணிக் கொள்ளும்படி அவர்களுக்கு பிரமையூட்டப்பட்டது.
(அல்-புகாரி)


பாகம் 3, அத்தியாயம் 59, எண் 3268

ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டது. எந்த அளவிற்கென்றால் அவர்கள் ஒரு செயலைச் செய்யாமலிருக்க, அதைச் செய்தது போன்று அவர்களுக்கு பிரமையூட்டப்பட்டது. இறுதியில் ஒரு நாள், அவர்கள் பிரார்த்தனை செய்த வண்ணமிருந்தார்கள். பிறகு சொன்னார்கள்; 'என் (மீது செய்யப்பட்டுள்ள சூனியத்திற்கான) நிவாரணம் எதில் உள்ளதோ அதை எனக்கு அல்லாஹ் அறிவித்துவிட்டதை நீ அறிவாயாக? என்னிடம் (கனவில்) இரண்டு பேர் (இரண்டு வானவர்களான ஜிப்ரீலும், மீக்காயிலும்) வந்தனர். அவர்களில் ஒருவர் (ஜிப்ரீல்) என் தலைமாட்டில் அமர்ந்தார். மற்றொருவர் (மீக்காயில்) என்னுடைய கால்மாட்டில் அமர்ந்தார். ஒருவர் மற்றொருவரிடம் (மீக்hயில் ஜிப்ரீலிடம்), 'இந்த மனிதரைப் பீடித்துள்ள நோய் என்ன?' என்று கேட்டார். மற்றொருவர் (ஜிப்ரீல்), 'இவருக்கு சூனியம் வைக்கப்பட்டுள்ளது" என்று பதிலளித்தார். அதற்கு அவர், 'இவருக்கு சூனியம் வைத்தது யார்?' என்று கேட்க, (ஜிப்ரீல்) அவர்கள், 'லபீத் இப்னு அஃஸம் (என்னும் யூதன்)" என்று பதிலளித்தார். '(அவன் சூனியம் வைத்தது) எதில்?' என்று அவர் (மீக்காயில்) கேட்க அதற்கு, 'சீப்பிலும், (இவரின்) முடியிலும், ஆண் (பேரீச்சம்) பாளையின் உறையிலும்" என்று (ஜிப்ரீல்) பதிலளித்தார். அதற்கு அவர், 'அது எங்கே இருக்கிறது" என்று கேட்க, '(பனூ ஸுரைக் குலத்தாரின் தோட்டத்திலுள்ள) 'தர்வான்' எனும் கிணற்றில்" என்று பதிலளித்தார்கள்.

(இதைச் சொல்லி முடித்த) பிறகு, நபி(ஸல்) அவர்கள் அந்தக் கிணற்றை நோக்கிப் புறப்பட்டார்கள்; பிறகு திரும்பி வந்தார்கள். திரும்பி வந்தபோது என்னிடம், 'அந்தக் கிணற்றிலிருக்கும் பேரீச்ச மரங்கள் ஷைத்தான்களின் தலைகளைப் போல் உள்ளன" என்று கூறினார்கள். நான், 'அதைத் தாங்கள் வெளியே எடுத்தீர்களா" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'இல்லை. என்னை அல்லாஹ் குணப்படுத்திவிட்டான். (அதை வெளியே எடுத்தால்) அது மக்களிடையே (சூனியக் கலை பரவக் காரணமாம்) குழப்பத்தைக் கிளப்பி விடும் என்று நான் அஞ்சினேன்" என்று பதிலளித்தார்கள். பிறகு, அந்தக் கிணறு தூர்க்கப்பட்டுவிட்டது.
(அல்-புகாரி)


பாகம் 6, அத்தியாயம் 76, எண் 5763

ஆயிஷா(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு 'பன}ஸுரைக்' குலத்தைச் சேர்ந்த லபீத் இப்னு அஃஸம் என்பான் சூனியம் செய்தான். இதையடுத்து இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தாம் செய்திராத ஒன்றைத் தாம் செய்து கொண்டிருந்ததாகப் பிரமையூட்டப்பட்டார்கள். இறுதியில், அவர்கள் 'ஒரு நாள்' அல்லது 'ஓரிரவு' என்னிடம் வந்தார்கள். ஆயினும், அவர்கள் (என் மீது கவனம் செலுத்தாமல்) தொடர்ந்து பிரார்த்தனை செய்து கொண்டேயிருந்தார்கள்.

பிறகு (என்னிடம் கூறினார்கள்:) ஆயிஷா! (விஷயம்) தெரியுமா? எந்த(ச் சூனியம்) விஷயத்தில் தெளிவைத் தரும்படி இறைவனிடம் நான் கேட்டுக் கொண்டிருந்தேனோ அந்த விஷயத்தில் அவன் எனக்குத் தெளிவை அளித்துவிட்டான். (கனவில்) என்னிடம் (வானவர்) இரண்டு பேர் வந்தனர். அவ்விருவரில் ஒருவர் என் தலைமாட்டிலும் இன்னொருவர் என் கால்மாட்டிலும் அமர்ந்து கொண்டனர். அவ்விருவரில் ஒருவர் தம் தோழரிடம், 'இந்த மனிதரின் நோய் என்ன?' என்று கேட்டார். அத்தோழர், 'இவருக்குச் சூனியம் வைக்கப்பட்டுள்ளது' என்று சொல்ல, முதலாமவர் 'இவருக்குச் சூனியம் வைத்தவர் யார்?' என்று கேட்டார். தோழர், 'லபீத் இப்னு அஃஸம் (எனும் யூதன்)' என்று பதிலளித்தார். அவர், 'எதில் வைத்திருக்கிறான்?' என்று கேட்க, சீப்பிலும், சிக்கு முடியிலும், ஆண் பேரீச்சம் பாளையின் உறையிலும்' என்று பதிலளித்தார். அவர், 'அது எங்கே இருக்கிறது?' என்று கேட்க, மற்றவர், '(பன} ஸுரைக் குலத்தாரின் தோட்டத்திலுள்ள) 'தர்வான்' எனும் கிணற்றில்' என்று பதிலளித்தார். இதைச் சொல்லி முடித்த இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் தோழர்கள் சிலருடன் அந்தக் கிணற்றுக்குச் சென்று (பாளை உறையை வெளியே எடுத்துவிட்டுத் திரும்பி) வந்து, 'ஆயிஷா! அதன் தண்ணீர் மருதாணிச் சாற்றைப் போல் உள்ளது; அதன் பேரீச்ச மரங்களின் தலைகள் ஷைத்தானின் தலைகளைப் போன்று உள்ளன' என்று கூறினார்கள்.

நான், 'இறைத்தூதர் அவர்களே! அ(ந்தப் பாளை உறைக்குள் இருப்ப)தைத் தாங்கள் வெளியே எடுக்கவில்லையா?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'அல்லாஹ் எனக்கு (அதன் பாதிப்பிலிருந்து) குணமளித்துக் காப்பாற்றிவிட்டான். அதை வெளியே எடுப்பதன் மூலம் மக்களிடையே (சூனியக் கலை பரவக் காரணமாம்) குழப்பத்தைக் கிளப்பிவிடுவதை நான் வெறுத்தேன் (எனவேதான் அதை நான் வெளியே எடுக்கவில்லை)' என்று கூறினார்கள். பிறகு அந்தக் கிணற்றைக் தூர்த்துவிடும்படி அவர்கள் கட்டளையிட அவ்வாறே அது தூர்க்கப்பட்டது. (அல்-புகாரி)


பாகம் 6, அத்தியாயம் 80, எண் 6391

ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது. இதையடுத்து தாம் செய்யாத ஒன்றைத் தாம் செய்துவிட்டதாக இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்குப் பிரமையூட்டப்பட்டது.

நபி(ஸல்) அவர்கள் (ஒரு நாள்) தம் இறைவனிடம் பிரார்த்தித்த பிறகு (என்னிடம்), '(ஆயிஷா!) தெரியுமா? எந்த விஷயத்தில் தெளிவைத் தரும்படி நான் இறைவனிடம் கேட்டுக் கொண்டிருந்தேனோ அந்த விஷயத்தில் அவன் எனக்குத் தெளிவை அளித்துவிட்டான்' என்று கூறினார்கள். அதற்கு நான், 'அது என்ன? இறைத்தூதர் அவர்களே!' என்று கேட்டேன். அப்போது (பின்வருமாறு) கூறினார்கள்.

(கனவில்) என்னிடம் (வானவர்கள்) இரண்டு பேர் வந்தனர். அவர்களில் ஒருவர் என் தலைமாட்டிலும் மற்றொருவர் என் கால்மாட்டிலும் அமர்ந்து கொண்டனர். அவர்களில் ஒருவர் தம் தோழரிடம், 'இந்த மனிதரின் நோய் என்ன? என்று கேட்டதற்கு அவரின் தோழர், 'இவருக்குச் சூனியம் வைக்கப்பட்டுள்ளது' என்று பதிலளிக்க முதலாமவர், 'இவருக்குச் சூனியம் வைத்தது யார்?' என்று வினவியதற்கு 'லபீத் இப்னு அஃஸம்' என்று தோழர் பதிலளித்தார். 'அவன் எதில் (சூனியம் வைத்தான்)? என்று கேட்க, 'சீப்பிலும் சிக்கு முடியிலும், பேரீச்சம் பாளையின் உறையிலும்' என்று பதிலளித்தார். அவர், 'அது எங்கே உள்ளது?' என்று கேட்க, மற்றவர், 'தர்வானில் உள்ளது' என்றார். 'தர்வான்' என்பது பன}ஸுரைக் குலத்தாரிடையேயிருந்த ஒரு கிணறாகும்.

பிறகு அங்கு சென்று (பார்வையிட்டு)விட்டு என்னிடம் வந்த இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வின் மீதாணையாக! அக்கிணற்றின் தண்ணீர் மருதாணிச் சாற்றைப் போன்றுள்ளது. அதன் பேரீச்சம் மரங்கள் சாத்தானின் தலையைப் போன்று இருந்தன' என்று குறிப்பிட்டார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் வந்து என்னிடம் அக்கிணற்றைப் பற்றித் தெரிவித்தபோது நான், 'இறைத்தூதர் அவர்களே! அ(ந்தப் பாளை உறைக்குள்ள இருப்ப)தைத் தாங்கள் வெளியில் எடுக்கவில்லையா?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள்'எனக்கோ அல்லாஹ் (அதன் பாதிப்பிலிருந்து) நிவாரணமளித்துவிட்டான். (அதை வெளியே எடுப்பதன் மூலம்) மக்களிடையே (சூனியக் கலை பரவக் காரணமாம்) குழப்பத்தைக் கிளப்பிவிடுவதை நான் வெறுத்தேன் (எனவேதான் அதை வெளியே எடுக்கவில்லை)' என்றார்கள்.

ஆயிஷா(ரலி) அவர்களிடமிருந்து உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அவர்கள் வழியாக வரும் ஓர் அறிவிப்பில், 'நபி(ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டது. நபி(ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள்; பிரார்த்தித்தார்கள். (திரும்பத் திரும்பப் பிரார்த்தித்தார்கள்)' என்று கூடுதலாக இடம் பெற்றுள்ளது. (அல்-புகாரி)



விஷம் தோய்க்கப்பட்ட உணவை சிறிது உண்ட முகமது



பாகம் 3, அத்தியாயம் 51, எண் 2617

அனஸ்(ரலி) அறிவித்தார்.

யூதப் பெண் ஒருத்தி நபி(ஸல்) அவர்களிடம் விஷம் தோய்க்கப்பட்ட ஓர் ஆட்டை அன்பளிப்பாகக் கொண்டு வந்தாள். நபி(ஸல்) அவர்கள் அதிலிருந்து (சிறிது) உண்டார்கள். 'அவளைக் கொன்று விடுவோமா?' என்று நபி(ஸல்) அவர்களிடம்) கேட்கப்பட்டது. அவர்கள், 'வேண்டாம்" என்று கூறிவிட்டார்கள். நபி(ஸல்) அவர்களின் தொண்டைச் சதையில் அந்த விஷத்தின் பாதிப்பை நான் தொடர்ந்து பார்த்து வந்தேன். (அல்-புகாரி)

இபின் சௌத் தொகுத்த சரிதை " the Kitab al-Tabaqat al-Kabir (Book of the Major Classes), Volume 2, p. 249:" லிருந்து

ஒரு யூதப்பெண் விஷம் தோய்க்கப்பட்ட‌ ஒரு பெண் ஆட்டின் தொடையை நபி(ஸல்) அவர்களுக்கு அன்பளிப்பாக கொடுத்தாள். அதிலிருந்து ஒரு சிறிய துண்டை அவர் எடுத்துக்கொண்டார், தன் வாயில் போட்டுக்கொண்டார், அதை மென்று மறுபடியும் அதை துப்பிவிட்டார். பிறகு தன் தோழர்களுக்கு இவ்விதமாகச் சொன்னார்: "நிறுத்துங்கள், உண்மையாகவே இந்த ஆட்டுத்தொடையில் விஷம் உள்ளது என்று இது என்னிடம் சொல்லியது". பின்பு, அந்த யூதப்பெண்ணை அழைத்துவரச்சொல்லி, அவளிடம்: "இந்த வேலையை செய்வதற்கு உன்னை தூண்டியது எது?" என்று கேட்டார். அவள் பதில் அளித்தாள்: " நீங்கள் உண்மையானவரா என்பதை தெரிந்துக்கொள்ளத் தான் நான் இப்படி செய்தேன், நீங்கள் உண்மையானவராக இருப்பீரானால், அல்லா அதை உங்களுக்கு தெரிவிப்பார், மற்றும் நீங்கள் ஒரு பொய்யராக இருப்பீரானால், நான் என் மக்களை உங்கள் கைகளிலிருந்து தப்புவித்துக்கொள்வேன்"

மற்றும்

அல்லாவின் ரஸூலும் அவரது தோழர்களும் அதிலிருந்து சாப்பிட்டார்கள். அந்த ஆடு : "நான் விஷமூட்டப்பட்டுள்ளேன்" என்று சொல்லியது. அவர்(முஹம்மத்) தன் தோழர்களிடம் "உங்கள் கைகளை அப்படியே வையுங்கள், இதில் விஷமுள்ளது என்று எனக்கு தெரிவிக்கப்பட்டது!" என்றார். அவர்கள் சாப்பிடுவதை நிறுத்திவிட்டார்கள், ஆனால், பிஷர் இபின் அல்-பரா(but Bishr Ibn al-Bara expired) என்பவர் மரித்துவிட்டார். அல்லாவின் தூதர் அந்த யூதப்பெண்ணை அழைத்துவரச்சொல்லி, அவளிடம்: "இந்த வேலையை செய்வதற்கு உன்னை தூண்டியது எது?" என்று கேட்டார். . அவள் பதில் அளித்தாள்: " நீங்கள் உண்மையான நபியா என்பதை தெரிந்துக்கொள்ளத் தான் நான் இப்படி செய்தேன், நீங்கள் உண்மையான நபியாக இருப்பீர்களானால் இது உம்மை பாதிக்காது இருப்பீரானால், மற்றும் நீங்கள் ஒரு அரசராக இருப்பீரானால், நான் என் மக்களை உங்கள் கைகளிலிருந்து தப்புவித்துக்கொள்வேன்". அவளை கொல்லும் படி அவர் கட்டளையிட்டார், அந்த பெண் கொல்லப்பட்டாள்.

அல்-ட‌பரியின் சரித்திர தொகுப்பிலிருந்து (From al-Tabari's History, Volume 8, p. 124: )

அல்லாவின் தூதர் வியாதிப்பட்டு அதனால் மரித்துப்போனார், அப்படி வியாதிப்பட்ட கால கட்டத்தில், பிஷருடைய தாயார் அவரை பார்க்க வந்தார்கள், அவர்களிடம் ரஸுல் இப்படியாகச் சொன்னார்: "பிஷரின் தாயே, உங்கள் மகன் பிஷரோடு கெய்பர் என்ற இடத்தில் நான் உண்ட அந்த உணவினால், இப்போது கூட என் தொண்டை அறுந்துவிடும் போல வலியை உணருகிறேன்".

இதுவரை நாம் கண்ட விவரங்களின் வெளிச்சத்தில், நாம் கீழ்கண்ட‌ முடிவுக்குத் தான் வரமுடியும்.

தன்னுடைய தீர்க்கதரிசியை பில்லிசூன்யத்திலிருந்தும் மற்றும் விஷத்திலிருந்தும் காப்பாற்ற அல்லாவிற்கு சக்தியில்லாமல் இருந்தது, இதனால், இயேசு அல்லாவைவிட அதிக சக்தியுள்ளவர் என்றும், மற்றும் அல்லாவை விட உயர்ந்தவர் என்றும் நாம் முடிவு செய்யலாம். அல்லது முகமது இறைவனின் உண்மையான தீர்க்கதரிசி(நபி) அல்ல என்பதை முடிவு செய்யலாம்.

இதில் எது சரி என்பதை இந்த கட்டுரையை படிக்கும் வாசகர்களே முடிவு செய்யட்டும்.

மூலகட்டுரை:
http://www.answering-islam.org/Responses/Naik/mk16challenge.htm


டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களுக்கு மறுப்பு:

1.
டாக்டர் ஜாகிர் நாயக் மற்றும் யோவான் 1:1 (டாக்டர் ஜாகீர் நாயக் அவர்களும் கிரேக்க மொழியும்:)

2.
ஆதரவிற்கு ஏமாற்றுதல் ஒரு ஆயுதம்: டாக்டர் ஜாகிர் நாயக்கின் சாயம் வெளுத்தது

3. டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஆன்சரிங் இஸ்லாம் தள மறுப்புக் கட்டுரைகள்(ஆங்கிலம்)

மேலும் படிப்பதற்கு:


4. Examining A Muslim's Defense of Muhammad's Bewitchment : Part 1

5.
Examining A Muslim's Defense of Muhammad's Bewitchment : Part 2

6.
More on Muhammad and Poison:(Examining Abdullah Smith's War on Islam As Well as His Continuous Intellectual Suicide Mission)
 
 

Thursday, December 27, 2007

இரத்தசாட்சியான பாலஸ்தீனக் கிறிஸ்தவர்கள்(படம் சொல்லும் செய்தி)

இரத்தசாட்சியான

பாலஸ்தீனக் கிறிஸ்தவரின் அடக்க ஆராதனையில் இயேசு மகிமைப்பட்டார் .

காஜா

நகரத்திலுள்ள உரிமையாளர் 32 வயதான ரமி அய்யத் அக்டோபர் 6ம் தேதி கடத்தப்பட்டு ,மறுநாள் கொலை செய்யப்பட்டு கிடந்தார் .அவருக்கு 2 பிள்ளைகள் இருப்பதுடன் அவர் மனைவி இப்பொழுது கர்பிணியாக இருக்கிறார்.ரமியின் பாலஸ்தீன பைபிள் சொசைட்டி புத்தக சாலையில் குண்டு வீசப்பட்டு சேதமடைந்ததுடன் ,தொடர்ந்து அவருக்குக் கொலை மிரட்டல்கள் வந்துகொண்டிருந்த 6 மாதங்கள் கழித்து இக்கொலை நடந்துள்ளது.

அய்யதின்

மரண ஊர்வலம் துப்பாக்கி ஏந்திய ஹமாஸ் படை வீரர்களின் அணிவகுப்பின் நடுவே காஜா நகரில் நடத்தப்பட்ட அரிய காரியமாகும்.அவரது சடலம் வைக்கப்பட்டிருந்த வாகனத்தின் முன் பகுதியில் கிறிஸ்தவர் ஒருவர் பெரிய சிலுவையைப் பிடித்துக்கொண்டு நகரத்தின் தெருக்களனைத்தும் சுற்றிவந்தனர்.தெருக்களின் இரு பக்கங்களிலுமிருந்தவர்கள் என்றுமே கண்டிராத அந்த அரியக்காட்சியைக் கண்டுள்ளனர்.

தேவனுடைய

மகிமை அந்த அடக்க ஆராதனை ஊர்வலத்தில் வெளிப்பட்டதுடன் ,அய்யதை அறிந்திருந்த அநேக இஸ்லாமிஅயரும் அடக்க ஆராதனையில் கலந்துகொண்டதாகவும் அஹமத் என்பவர் தெரிவித்திருக்கிறார் .

ஹமாஸ்

அதிகாரிகள் கொலை செய்தவர்களைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டதகவும், இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யாரென்பதை அவர்கள் அறிந்திருந்தும் காரியத்தை திசைதிருப்புகின்றனர் என்றும் சகோதரர் அஹமத் கருதுகிறார்.முன்பு அராபத் தற்கொலைப்படைத் தாக்குதல்காரர்களை இவ்விதமாகவே கண்டுகொள்ளாமல் வளர விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில்

,ஜனங்கள் மத்தியில் பதற்றமான நிலை ஏற்பட்டு உள்ளது .காஜா நகரக் கிறிஸ்தவர்கள் மிக மோசமான நிலையில் இருப்பதாக அஹமத் கூறுகிறார்.இங்குள்ள சகோதர ,சகோதரிகள் கடும் உபத்திரவங்களில் அகப்பட்டிருப்பதினால் அவர்கள் ஜெபத்தில் தாங்கப்படவேண்டியது அவசியமாக இருக்கிறது.யாராவது ஹமாஸ் குழுவினர் அல்லது போலிசாருக்கு எதிராகவோ அல்லது சமதானம் மற்றும் ஜானநாயகத்தைக் குறித்தோ பேசினால் அவர்கள் காணாமற்போய்விடுவார்கள்.

அப்பகுதிகளில் சுமார்

2500 பாலஸ்தீனக் கிறிஸ்தவர்கள் இருக்கிறபோதிலும் ,பாதகமான சூழ்நிலகள் நிமித்தம் பலர் அவ்விடத்தைவிட்டு வெளிஏற விரும்புகின்றனர்.இஸ்லாமிலிருந்து கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட அநேகர் இரகசியக் கிறிஸ்தவர்களாக இருப்பதாக அஹமத் தெரிவிக்கிறார் .அது போன்றவர்களில் ஒருவர் தனது கனவில் இயேசுவைப் பார்த்து இரட்சிக்கப்பட்டுள்ளார்.இஸ்லாமியரிடையே வசிக்கும் இச்சகோதர ,சகோதரிகளுக்காகக் கிறிஸ்தவ விசுவாசிகள் இடைவிடாமல் ஜெபிப்பீர்களென்று நம்புகிறேன்.




Wednesday, August 29, 2007

முஸ்லீம்கள் மற்றும் கிறிஸ்தவர்களும் மதம் மாறலாம்!

முஸ்லீம்கள்,கிரிஸ்தவர்கள் மதம் மாற நார்வே இஸ்லாமிய,மற்றும் கிறிச்தவ கவுன்ஸில்கள்  அனுமதி அளித்திருக்கிறது  

 

மதத்தில் இருப்பதும் மதத்திலிருந்து வெளியேறுவதும் வேறொரு மதத்தில் இணைவதும் ஒரு தனி நபரின் உரிமை என்று கிறிஸ்துவ கவுன்ஸிலும் இஸ்லாமிய கவுன்ஸிலும் இணை அறிவிப்பை செய்திருக்கின்றன.


Religion: Joint declaration on the right to conversion

The Islamic Council of Norway and the Church of Norway Council on Ecumenical and International Relations have presented a joint declaration on the freedom of religion and the right to conversion.
/ np
23.08.2007 07:49





The decleration states that everyone is free to adopt the religious faith of their choice.
- We denounce, and are committed to counteracting all violence, discrimination and harassment inflicted in reaction to a person's conversion, or desire to convert, from one religion to another, be it in Norway or abroad, the declaration says.

- Freedom of religion is a fundamental principle which must be reflected in attitudes toward people of another faith. The right to change one's religious faith is central to freedom of religion, says Olav Fykse Tveit, General Secretary for the Church of Norway Council on Ecumenical and International Relations.

- By issuing this declaration we hope to contribute to the international process on this important matter, he says.

(NRK/Church of Norway)

Rolleiv Solholm

Tuesday, July 24, 2007

கிறிஸ்துவர்களது பெண்களை முஸ்லீம் இளைஞர்கள் துன்புறுத்தால்

லெபனானில் கிறிஸ்துவர் முஸ்லீம் கலவரத்தில் 5 பேர் காயம் ஒருவர் பலி

ஷியா பிரிவு முஸ்லீம்களும் கிறிஸ்துவர்களும் லெபனானில் மோதிக்கொண்டதில் ஐந்து பேர் காயமடைந்தனர். ஒரு போலீஸ்காரர் பலியானார்.

கிறிஸ்துவர்களது பெண்களை ஷியா முஸ்லீம் இளைஞர்கள் துன்புறுத்தியதால், கிறிஸ்துவர்கள் புகார் செய்ய சென்றது கலவரமாக வெடித்தது.

Police officer killed, five men wounded in Muslim-Christian clash in south LebanonThe Associated PressPublished: July 22, 2007BEIRUT, Lebanon: A police officer died and five men were injured Sunday in a sectarian clash between Christian villagers and their Shiite Muslim neighbors in southern Lebanon, security officials said.The fight erupted when residents in the Christian locality of Tanbourit argued with Shiite youths from the nearby town of Ghaziyeh, blaming them of having harassed some women as they cruised around the village in their car, the officials said.The two groups quickly scuffled and then hurled rocks at each other before shooting broke out, the officials said, speaking on conditions of anonymity because they were not authorized to talk to the media.Four Tanbourit villagers were wounded in the brawl, and a fifth was hit in the head by a bullet when gunshots erupted, they said.Elias Samir Haj, 22, a member Lebanon's security services and a village resident, was later killed by the gunmen as he drove the critically injured villager to hospital in the nearby coastal town of Sidon, the officials said.The Shiite youths were suspected of having fired all of the shots, officials said.They said the army had arrested 10 men for questioning over the incident, which threatened to inflame sectarian tensions at a time when Lebanon is facing its worst political crisis since the end of the 1975-90 civil war that tore the country apart along mostly sectarian lines.Many Lebanese have kept weapons since the war, and the youths suspected in the shooting were not thought to belong to the Shiite Hezbollah or any other guerrilla group, the officials said.Southern Lebanon is predominantly Shiite, but has a patchwork of communities that often congregate by religion and live in separate villages .Lebanese troops and policemen deployed in Tanbourit to prevent renewed friction between Christians and Muslims from the two localities, which lie a few hundred meters (yards) from each other. Soldiers also raided a number of houses and hideouts in Ghaziyeh and seized the car used by the youths, officials said.Ghaziyeh's mayor, Mohammed Samieh Ghadar, denounced the clash and vowed it would not hurt the "brotherly" ties between the two communities."This is an isolated incident, it will not affect our relations," Ghadar said.The bloodshed came as Lebanon is facing its most serious political crisis since the end of the 1975-90 civil war, with the Western-backed government and the Hezbollah-led opposition locked in a fierce power struggle.The crisis has taken on an increasingly sectarian tone and led to Sunni-Shiite street clashes between pro- and anti-government factions, killing 11 people in recent months.


http://ezhila.blogspot.com/2007/07/5_24.html

இஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்

முன் பக்கம் செல்ல

HOME PAGE

தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்

1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1

2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2

3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3

4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4

பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்

1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1

2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2

பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்

1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்

2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்