இஸ்லாம் அமைதி மார்கமா? இஸ்லாம் இனிய மார்கமா? இஸ்லாம் உண்மையான மார்கமா?

ஆன்சரிங் இஸ்லாம்

பல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்

சத்தியவான் தளம் செல்ல

Tuesday, July 23, 2013

Fwd: அல்லாஹ் & முஹம்மது உரையாடல் - முஹம்மதுவின் பரிசுத்தம்

 அல்லாஹ் & முஹம்மது உரையாடல் - முஹம்மதுவின் பரிசுத்தம் 
 
கீழ்கண்ட கட்டுரையில், அல்லாஹ்வும் முஹம்மதுவும், முஹம்மதுவின் பரிசுத்தம் பற்றி ஆலோசித்து உரையாடிய வரிகளை தனியாக தந்துள்ளேன்.


 

------------------------ 
ஈஸா குர்-ஆன் உமர்:
 
ஒருவர் இறைவனிடம் வேண்டும் போது "நான் ஒரு பாவி என் பாவங்களை மன்னியும்" என்று வேண்டிக்கொண்டால், அவரை பாவி என்றுச் சொல்லாமல் "பரிசுத்தர் என்றுச் சொல்வார்களா என்ன?".
 
திரு ஜியா அவர்களே, நீங்கள் சொல்வது எப்படி உள்ளது தெரியுமா? கீழ்கண்ட உரையாடல் அல்லாஹ்விற்கும் முஹம்மதுவிற்கும் இடையே நடந்தது போல இருக்கிறது, பொறுமையோடு படித்துப் பார்த்து சிந்தியுங்கள். இந்த உரையாடலில் அல்லாஹ் கொடுத்த அறிவுரையைப்போல நடந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால், சரித்திரத்தில் அப்படி நடக்கவில்லையே (உரையாடலின் கடைசி பகுதியை படிக்க மறக்கவேண்டாம்)
 
முஹம்மது: அல்லாஹ்வே, நான் ஒன்றை கேட்கிறேன்.
 
அல்லாஹ்: சொல், நான் கேட்டுக்கொண்டு இருக்கிறேன்.
 
முஹம்மது: நான் ஒரு பரிசுத்தன், உங்களைப்போல, நான் ஒரு பாவமும் இதுவரை செய்யவில்லை, மரணிக்கும் வரைக்கும் இனிமேலும் செய்யப்போவதில்லை.
 
அல்லாஹ்: உண்மை தான், இப்போது அதற்கு என்ன?
 
முஹம்மது: நான் எல்லாருக்கும் பாவமன்னிப்பு வேண்டுதலை கற்றுக்கொடுப்பேன்.
 
அல்லாஹ்: சரி, நல்லது தான்.
 
முஹம்மது: நானும் என் தனிப்பட்ட வேண்டுதல்களில் "நான் ஒரு பாவி, என் பாவங்களை மன்னியும் என்று உங்களிடம் வேண்டுவேன்".
 
அல்லாஹ்: நீ தான் பாவம் செய்யவில்லையே, பின்பு ஏன் பாவங்களை மன்னியுங்கள் என்று என்னிடம் வேண்டுகிறாய்?
 
முஹம்மது: அது அப்படித் தான், நீங்களும் ஒன்று செய்யுங்கள், "முஹம்மதுவே உன் பாவங்களுக்காக மன்னிப்பு கோரு" என்று வசனங்களையும் இறக்குங்கள்.
 
அல்லாஹ்: குழப்பமாக இருக்கின்றதே! நீ பாவம் செய்யவில்லை. நான் உன்னை மன்னிக்கத்தேவையில்லை. இப்படி இருக்க, "நீ பாவங்களுக்காக மன்னிப்பு கோரு" என்று நான் ஏன் வசனங்களை இறக்கவேண்டும். மேலும் நீ ஏன் "என் பாவங்களை மன்னியுங்கள்" என்று வேண்டிக்கொள்ளவேண்டும்?
 
சரி, நீ என்ன சொல்லவருகிறாய்? எனக்கு ஒன்றுமே புரியவில்லையே!
 
முஹம்மது: நான் பாவம் செய்யாதவர் என்று இஸ்லாமியர்கள் மற்றும் உலகம் நம்பவேண்டும். இது தான் என் வேண்டுதல்.
 
அல்லாஹ்: இவ்வளவு தானா! இதற்கு ஏன் நாம் சுற்றி வளைத்து வரவேண்டும். இதற்கு சுலபாமான நேரான வழி ஒன்று இருக்கிறது.
அதாவது, மேற்கண்ட இரண்டையும் நாம் செய்யக்கூடாது.
 
முதலாவதாக, "உன் பாவங்களுக்காக மன்னிப்பு கோரு, உன் முந்தைய பிந்தைய பாவங்களை நான் மன்னித்தேன்" போன்ற வசனங்களை நான் குர்-ஆனில் இறக்கமாட்டேன். அதற்கு பதிலாக, முஹம்மது ஒரு பாவமும் செய்யாதவர் என்று அனேக வசனங்களை நான் குர்-ஆனில் இறக்குவேன். இதன் மூலம் மக்கள் அனைவரும் "நீ பரிசுத்தர்" என்று அறிந்துக்கொள்வார்கள். மேலும் குர்-ஆனே "நீ பரிசுத்தவான்" என்று சாட்சி சொன்னால் இன்னும் உன் மதிப்பு உயரும்.
 
இரண்டாவதாக, நீயும், என் பாவங்களை மன்னியுங்கள் என்று என்னிடம் வேண்டிக்கொள்ளவேண்டாம். ஆனால், மற்றவர்களுக்கு மட்டும் அவர்கள் பாவங்களை மன்னிக்கும் படி நீ கற்றுக்கொடுத்தால் மட்டும் போதுமானது.
 
இந்த இரண்டையும் செய்தால் போதும், நீர் பரிசுத்தமானவர் என்று மக்கள் அறிந்துக்கொள்வார்கள், மேலும் குர்-ஆனிலும் நீர் பரிசுத்தர், பாவம் செய்யாதவர் என்று நான் வசனங்களை இறக்குவதினால், மக்களுக்கு அதிக அதிகார பூர்வ ஆதாரமாக இருக்கும்.
 
முஹம்மது: இந்த ஆலோசனை ரொம்பவும் நன்றாக இருக்கிறதே. இப்படியே செய்வோம்.
 
[இதுவரை நடந்த உரையாடல் மிகவும் சீரியஸானது. அதாவது முஹம்மது ஒரு பாவமும் செய்யாத பரிசுத்தமானவர் என்பதை நிலைநாட்ட மேலே அல்லாஹ் கூறிய ஆலோசனை தான் சரியானது. இது போல இருந்திருந்தால், மற்றவர்களின் குற்றச்சாட்டுகளை ஓரளவிற்கு இஸ்லாமியர்கள் சமாளித்து இருந்திருக்கலாம்.]
 
கட்டுரை மிகவும் சீரியஸாக போகிறது என்பதற்காக கொஞ்சம் நகைச்சுவையை சேர்த்துள்ளோம். அதனை இப்போது படியுங்கள்.
 
[இந்த உரையாடல் நடந்துக்கொண்டு இருக்கும் போது, கதவை யாரோ தட்டினார்கள், உடனே முஹம்மது எழுந்துச் சென்று கதவை திறந்தார்]
 
முஹம்மது: ஓ ஜிப்ராயீல் தூதரா… வாங்க வாங்க…
 
ஜிப்ராயீல் தூதன்: நான் வந்து சில நிமிடங்கள் ஆனது. உங்கள் இருவரின் உடையாடலை கேட்டுக்கொண்டு இருந்தேன்.
 
முஹம்மது: ஓ அப்படியா?
 
அல்லாஹ்: எனக்கு ஏற்கனவே தெரியும். அனைத்தையும் அறிந்தவன் நான். சரி, ஜிப்ராயீலே, நீ ஏன் ஆரம்பத்திலேயே கதவை தட்டியிருக்கக்கூடாது?
 
ஜிப்ராயீல்: நீங்கள் அதி முக்கியமான விஷயத்தை பேசுகிறீர்கள் என்பதை அறிந்து, உங்களை தொந்தரவு செய்யக்கூடாது என்பதினால் சும்மா கேட்டுக்கொண்டு இருந்தேன்.
 
அல்லாஹ்: சரி, நாங்கள் பேசியதைப் பற்றி உன் அபிப்பிராயம் என்ன?
 
ஜிப்ராயீல்: மன்னிக்கவேண்டும், அல்லாஹ். நீங்கள் பேசியது போல நடக்க வாய்ப்பு இல்லை.
 
முஹம்மதுவும் அல்லாஹ்வும் ஒரே மூச்சில்: ஏன், ஏன் நடக்க வாய்ப்பு இல்லை.
 
ஜிப்ராயீல்: அல்லாஹ்வே, நீங்கள் மறந்துவிட்டீர்கள் போலும். நாளைக்கு நீங்கள் முஹம்மதுவின் உயிரை கைப்பற்றப் போகிறீர்கள். முதல் குர்-ஆன் வசனம் இறக்கப்பட்டு கிட்டத்தட்ட இன்றோடு 23 ஆண்டுகள் ஆகிறது.
 
உங்களின் ஆலோசனையின் படி நான் குர்-ஆன் 40:55, 48:2 மேலும் 47:19ம் வசனங்களை ஏற்கனவே முஹம்மதுவிற்கு வெளிப்படுத்திவிட்டேன். அவரும் அவைகளை தன் மக்களுக்கு அறிவித்துவிட்டார். மேலும் அவரும் தன் தனிப்பட்ட வேண்டுதல்களில் தன் பாவங்களுக்காக உம்மிடம் பாவமன்னிப்பு கோரிவிட்டார். இன்னும் அனேக ஆண்டுகளுக்கு பிறகு புகாரி, முஸ்லிம் போன்றவர்களால் இந்த விவரங்கள் ஹதீஸ்களாக தொக்குக்கப்படப்போகிறது. இந்த ஆலோசனையை நீங்கள் இருவரும் 23 ஆண்டுகளுக்கு முன்பு செய்து இருந்திருந்தால், பிரயோஜனமாக இருந்திருக்கும். இப்போது என்ன செய்வது?
 
முஹம்மது: கவலையை விடுங்கள். என் தோழர்கள் என்னை பின்பற்றுபவர்கள் இதனை சமாளித்துக் கொள்வார்கள் (திரு ஜியா போன்றவர்களைத் தான் முஹம்மது இங்கு குறிப்பிடுகிறார்)
 
அல்லாஹ்: ஆம், என் அடியார்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார்கள். என் பங்கை நான் முடித்தேன், முஹம்மது தன் பங்கை முடித்தார். இதோ என் அடியார்கள் இருக்கிறார்கள், உலக முடிவு வரை அவர்கள் மீதமுள்ளதை பார்த்துக்கொள்வார்கள்.
 
[உரையாடல் முடிவு பெறுகிறது]
 
ஆக, திரு ஜியா அவர்களே, உங்களை துக்கப்படுத்த நான் மேற்கண்ட கற்பனை உரையாடலை எழுதவில்லை. குர்-ஆனும், ஹதீஸ்களும் தெளிவாக சொல்லும் ஒரு விஷயத்தை மறுத்து, என்னத்தை சாதிக்கப்போகிறீர்கள்? இது தான் என் வேதனையும், வேண்டுதலும்.
 
 
 

இஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்

முன் பக்கம் செல்ல

HOME PAGE

தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்

1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1

2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2

3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3

4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4

பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்

1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1

2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2

பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்

1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்

2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்