இஸ்லாம் அமைதி மார்கமா? இஸ்லாம் இனிய மார்கமா? இஸ்லாம் உண்மையான மார்கமா?

ஆன்சரிங் இஸ்லாம்

பல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்

சத்தியவான் தளம் செல்ல

Saturday, February 18, 2012

இஸ்லாமியர்களின் குற்றச்சாட்டுகளுக்கு கிறிஸ்தவனின் பதில் :யோவான் 8:40

 


இஸ்லாமியர்களின் குற்றச்சாட்டுகளுக்கு கிறிஸ்தவனின் பதில்

இஸ்லாமியர்களின் குற்றச்சாட்டுகளுக்கு கிறிஸ்தவனின் பதில்

சாம் ஷமான்

இயேசு கிறிஸ்துவின் தெய்வீகத்தன்மையை மறுக்கவேண்டும் என்று எண்ணி இஸ்லாமியர்கள் முன்வைக்கும் அனேக வாதங்களில் ஒரு சில வாதங்களுக்கு இந்த ஆய்வில் பதில்களைக் காண்போம்.

இஸ்லாமியர்களின் ஒவ்வொரு கேள்விக்கும் நாம் ஒரு கோர்வையாக பதில்களைக் காண்போம், மற்றும் வேத வசனங்களை ஆதாரமாகக் கொண்டு, வசனங்களை விவரித்து பதில்களைத் தருவோம், இதன் மூலமாக கர்த்தரின் நாமத்திற்கு மகிமை உண்டாகட்டும். கிறிஸ்துவின் தெய்வீகத்தன்மையை புரிந்துக்கொள்ளாமல், தவறாக வேத வசனங்களுக்கு இஸ்லாமியர்கள் பொருள் கூறுகிறார்கள். இப்படிப்பட்ட கேள்விகள் அது எப்படிப்பட்டதாக இருந்தாலும், அவர்கள் கேள்வி எழுப்பும் வசனத்தைச் சுற்றியுள்ள இதர வசன ஆதாரங்களின் அடிப்படையிலும், பின்னணியின் அடிப்படையிலும் நாம் வாசித்து ஆய்வு செய்வோமானால், இஸ்லாமியர்களின் எல்லா கேள்விகளுக்கும் பதில் சுலபமாக கிடைத்துவிடும். இந்த தொடர் பதில்களை படிக்கும் வாசகர்கள் இதனை புரிந்துக்கொள்ளலாம். இயேசுவின் தெய்வீகத்தன்மையைக் குறித்து இஸ்லாமியர்கள் முன்வைக்கும் முதல் குற்றச்சாட்டுக்கு பதில் என்ன என்பதை இப்போது பார்ப்போம்:

இஸ்லாமியர்களின் குற்றச்சாட்டு 1

யோவான் 8:40ம் வசனத்தில், யூதர்களிடம் இயேசு இவ்விதமாக கூறுகிறார்: " தேவனிடத்தில் கேட்டிருக்கிற சத்தியத்தை உங்களுக்குச் சொன்ன மனுஷனாகிய என்னைக் கொல்லத் தேடுகிறீர்கள், ஆபிரகாம் இப்படிச் செய்யவில்லையே.".

மனுஷன் என்ற வார்த்தை கிரேக்க மொழியில் "ஆந்திரபோஸ் (anthropos) " என்பதாகும், இதன் பொருள் மனிதன் என்பதாகும், இந்த வார்த்தை இறைவன் மற்றும் மிருகங்களுக்கு பயன்படுத்தும் வார்த்தையல்ல. இதன் முடிவு என்னவென்றால், இயேசுவின் தெய்வீகத்தன்மையை இந்த வசனம் நீக்கிவிடுகிறது, அவர் வெறும் சாதாரண மனிதன் என்பதை இது காட்டுகிறது.

இஸ்லாமியர்களின் குற்றச்சாட்டிற்கு பதில்:

ஆந்திரபோஸ் என்ற வார்த்தை இயேசுவின் தெய்வீகத்தன்மையை நீக்கவில்லை, ஏனென்றால், அதே யோவான் மிகவும் தெளிவாக "இயேசுக் கிறிஸ்து என்பவர் தேவனின் வார்த்தையாக இருக்கிறார், அவர் மனிதனாக வந்தார் " என்று ஆணித்தரமாக உறுதிப்படுத்துகிறார், அதனை இப்போது படிப்போம்:

ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அவர் ஆதியிலே தேவனோடிருந்தார். சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை. அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது. அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம் பண்ணினார் ; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரேபேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது. (யோவான் 1:1-4, 14)

1 In the beginning was the Word, and the Word was with God, and the Word was God. 2 He was with God in the beginning. 3 Through him all things were made; without him nothing was made that has been made. 4 In him was life, and that life was the light of all mankind. 5 The light shines in the darkness, and the darkness has not overcome it. 14 The Word became flesh and made his dwelling among us . We have seen his glory, the glory of the one and only Son, who came from the Father, full of grace and truth. (NIV) (John 1:1-4, 14)

இந்த கேள்வியைக் கேட்ட இஸ்லாமியர், அதே யோவான் நற்செய்தி நூலை இன்னும் தொடர்ந்து படித்து இருந்திருப்பாரானால், அப்போது இயேசு தாம் ஆதிமுதலாய், நித்திய நித்தியமாக இருக்கிறார் என்று சொன்ன வசனத்தை கண்டுபிடித்து இருந்திருக்கலாம். அவ்வசனங்களை இப்போது நாம் பார்ப்போம்:

அவர் அவர்களை நோக்கி: நீங்கள் தாழ்விலிருந்துண்டானவர்கள், நான் உயர்விலிருந்துண்டானவன்; நீங்கள் இந்த உலகத்திலிருந்துண்டானவர்கள், நான் இந்த உலகத்திலிருந்துண்டானவனல்ல. ஆகையால் நீங்கள் உங்கள் பாவங்களில் சாவீர்கள் என்று உங்களுக்குச் சொன்னேன்; நானே அவர் என்று நீங்கள் விசுவாசியாவிட்டால் உங்கள் பாவங்களிலே சாவீர்கள் என்றார். (யோவான் 8:23-24)

ஆதலால் இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் மனுஷகுமாரனை உயர்த்தின பின்பு, நானே அவரென்றும் , நான் என் சுயமாய் ஒன்றும் செய்யாமல், என் பிதா எனக்குப் போதித்தபடியே இவைகளைச் சொன்னேன் என்றும் அறிவீர்கள். (யோவான் 8:28)

இயேசு அவர்களை நோக்கி: தேவன் உங்கள் பிதாவாயிருந்தால் என்னிடத்தில் அன்பாயிருப்பீர்கள். ஏனெனில் நான் தேவனிடத்திலிருந்து வந்திருக்கிறேன் ; நான் சுயமாய் வரவில்லை, அவரே என்னை அனுப்பினார். (யோவான் 8:42)

உங்கள் பிதாவாகிய ஆபிரகாம் என்னுடைய நாளைக் காண ஆசையாயிருந்தான்; கண்டு களிகூர்ந்தான் என்றார். அப்பொழுது யூதர்கள் அவரை நோக்கி: உனக்கு இன்னும் ஐம்பது வயதாகவில்லையே, நீ ஆபிரகாமைக் கண்டாயோ என்றார்கள். அதற்கு இயேசு: ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார் . அப்பொழுது அவர்மேல் எறியும்படி கல்லுகளை எடுத்துக்கொண்டார்கள். இயேசு மறைந்து, அவர்கள் நடுவே கடந்து, தேவாலயத்தை விட்டுப்போனார். (யோவான் 8:56-59)

மேலே கண்ட வசனங்கள் அனைத்தும் கிறிஸ்து ஆபிரகாமுக்கு முன்பாகவே இருந்தார் என்பதையும், அவர் பிதாவின் பிரசன்னத்திலிருந்து பரலோகத்திலிருந்து இறங்கிவந்தார் என்பதையும் காட்டுகிறது. மட்டுமல்ல, நித்திய தேவனாகிய யெகோவாவிற்கு இருக்கிற "நான் இருக்கிறேன்" (I AM) என்ற பெயர் தனக்கு இருப்பதாக இயேசு கூறுகிறார். (பார்க்க உபாகமம் 32:39, ஏசாயா 43:10-11; 44:6, 48:12)

ஆக, யோவான் கூறும் கிறிஸ்துவின் தெய்வீகத்தன்மையை, ஆந்திரபோஸ் என்ற வார்த்தை நீக்கிவிடவில்லை, அதற்கு பதிலாக, இயேசுக் கிறிஸ்து முழு தேவனாகவும், முழு மனிதனாகவும் இருக்கிறார் என்பதைக் காட்டுகிறது. அதாவது, இயேசுவிற்குள் இந்த இரண்டு நிலையும் இருந்தது. இயேசு இறைவனாக இருந்தார், அதே போல, இறைவன் விரும்பும் மனிதன் எப்படி வாழ்வானோ அப்படி மனிதனாக வாழ்ந்தும் சென்றார்.

ஆங்கில மூலம்: Christian Answers to Muslim Charges

இஸ்லாமியர்களின் குற்றச்சாட்டுகளுக்கு கிறிஸ்தவனின் பதில்கள்


© Answering Islam, 1999 - 2012. All rights reserved.

Source: http://www.answering-islam.org/tamil/authors/sam-shamoun/charges/john840.html


இஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்

முன் பக்கம் செல்ல

HOME PAGE

தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்

1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1

2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2

3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3

4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4

பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்

1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1

2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2

பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்

1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்

2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்