இஸ்லாம் அமைதி மார்கமா? இஸ்லாம் இனிய மார்கமா? இஸ்லாம் உண்மையான மார்கமா?

ஆன்சரிங் இஸ்லாம்

பல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்

சத்தியவான் தளம் செல்ல

Saturday, October 15, 2011

பீஜேவிற்கு கேள்வி: குர்‍ஆன் எழுத்துக்கு எழுத்து பாதுகாக்கப்பட்டுள்ளதா? வீட்டு மிருகமும் குர்‍ஆனின் தொலைந்த வசனங்களும் - பாகம் 2

 
  

பீஜேவிற்கு கேள்வி: குர்‍ஆன் எழுத்துக்கு எழுத்து பாதுகாக்கப்பட்டுள்ளதா?


வீட்டு மிருகமும் குர்‍ஆனின் தொலைந்த வசனங்களும் - பாகம் 2


(குர்ஆன் வசனத்தை தின்றுவிட்ட வீட்டு மிருகம்)

இஸ்லாமிய அறிஞர்கள் கூறுவதுபோல, குர்‍ஆன் வசனத்திற்கு வசனம், எழுத்துக்கு எழுத்து பாதுகாக்கப்பட்டவில்லை. அனேக வசனங்கள் தொலைந்துவிட்டன. தொலைந்த வசனங்கள் எவ்வளவு இருக்கும்? ஒரு வசனமா? ஐந்து வசனங்களா? பத்து வசனங்களா? அல்லது நூற்றுக்கும் அதிகமான வசனங்களா? உமர், ஆயிஷா மற்றும் உபை போன்றவர்களின் சாட்சி என்ன என்பதை நீங்களே படியுங்களேன். இதனை அறிந்துக்கொள்ள இஸ்லாமிய நூல்களிலிருந்து சில குறிப்புக்களை காண்போம்.

பாகம் 1ஐ படிக்கவும்: ஸுயூதியும் குர்‍ஆனின் தொலைந்த வசனங்களும் - பாகம் 1


வீட்டு மிருகமும் குர்‍ஆனின் தொலைந்த வசனங்களும் - பாகம் 2

இப்னு ஹஜ்ம் (Ibn Hazm) தம்முடைய புத்தகத்தில் தொகுப்பு 8, பாகம் 2, பக்கங்கள் 235 மற்றும் 236ல் கீழ்கண்ட விவரத்தை கூறுகிறார்:

"கல்லெரிந்து கொல்லுதல் குர்‍ஆன் வசனமும், மார்பக பாலூட்டுதல் வசனமும் ஆயிஷா அவர்களிடம் இருந்த குர்‍ஆன் பிரதியில் இருந்தது. முஹம்மது மரித்த சமயத்தில், மக்கள் அவருடைய அடக்கத்திற்காக ஆயத்தங்கள் செய்துக்கொண்டு இருக்கும் நேரத்தில், ஒரு வீட்டு மிருகம் வீட்டில் நுழைந்து அந்த குர்‍ஆன் வசனங்களை தின்றுவிட்டது ".

"The verses of stoning and breast feeding were in the possession of A'isha in a (Qur'anic) copy. When Muhammad died and people became busy in the burial preparations, a domesticated animal entered in and ate it ."

ஆயிஷா அவர்களும் தம்முடைய வசத்தில் இருந்த வசனங்கள் எவைகள் என்பதை அறிந்திருந்தார்கள். ஜமக் ஷாரி(Zamakh-Shari) என்பவரின் "al-Kash-shaf" என்ற புத்தகத்தை, பரிசீலித்து சீர்படுத்திய "முஸ்தபா ஹுசைன்" என்பவரும் இந்த விவரத்தை தம்முடைய புத்தகத்தின் பாகம் 3, பக்கம் 518ல் குறிப்பிட்டுள்ளார். அவர் கூறும் போது, "ஒரு வீட்டு மிருகம் குர்‍ஆன் வசனங்களை தின்றுவிட்ட நிகழ்ச்சியை அறிவித்தவர்கள் நம்பகமானவர்கள்" என்றும் அவர்களில் "அப்துல்லாஹ் இப்னு அபூ பக்கர் ம‌ற்றும் ஆயிஷா" அவர்களும் இருக்கிறார்கள் என்று கூறியுள்ளார். இதே நிகழ்ச்சியை "Dar-al-Qutni", "al-Bazzar" மற்றும் "al Tabarani" போன்றவர்கள் முஹம்மது இப்னு இஷாக் என்பவரிடமிருந்து கேட்டதாக கூறியுள்ளார்கள். மேலும் முஹம்மது இப்னு இஷாக் என்பவர் இந்நிகழ்ச்சியை அப்துல்லாஹ்விடமிருந்து கேட்டதாகவும், அப்துல்லாஹ் இதனை ஆயிஷாவிடமிருந்து கேட்டதாகவும் கூறியுள்ளார்.

மேலும், பேராசிரியர் முஸ்தபா "இந்த குர்‍ஆன் வசனங்களை வீட்டு மிருகம் சாப்பிட்ட நிகழ்ச்சிக்கு முன்பே இவ்வசனங்கள் இரத்து செய்யப்பட்டு இருக்ககூடும்" என்று குறிப்பிடுகிறார்.

மேற்கண்ட விவரங்களை நாம் படிக்கும்போது, சில கேள்விகள் நமக்கு எழுகின்றன:

1) "அந்த கல்லெரிந்து கொல்லுதல் குர்‍ஆன் வசனம் ஏற்கனவே இரத்து செய்யப்பட்டு இருந்திருந்தால், ஏன் உமர் அவர்கள் அதனை குர்‍ஆனில் சேர்க்கவேண்டும் என்று மறுபடியும் கொண்டுவருகிறார்?" (முதல் பாகத்தை இங்கு படிக்கவும்: ஸுயூதியும் குர்‍ஆனின் தொலைந்த வசனங்களும் - பாகம் 1).

2) இவ்வசனங்கள் இரத்து செய்யப்பட்டு இருந்திருந்தால், முஹம்மது மரித்துவிட்ட பிறகும் மக்கள் ஏன் "மார்பக பாலூட்டுதல் குர்‍ஆன் வசனங்களை தொடர்ந்து ஓதிக்கொண்டு இருந்தார்கள்"?

3) இந்த பாலூட்டுதல் வசனங்களை மக்கள் குர்‍ஆனின் ஒரு பாகமாக ஓதிக்கொண்டே இருக்கும் போது முஹம்மது மரித்துவிட்டதால், அவரது மரணத்திற்கு பின்பு இவ்வசனங்களை "அதிகார பூர்வமாக இரத்து செய்தவர்கள் யார்?". ஒருவேளை அந்த வீட்டு மிருகம் அவ்வசனங்களை இரத்து செய்துவிட்டதா?

இந்த நிகழ்ச்சி நடந்தது என்பதற்கு, முஹம்மதுவின் தோழர்கள் சாட்சிகளாக இருக்கிறார்கள் மற்றும் இஸ்லாமிய அறிஞர்கள் மற்றும் ஆயிஷா அவர்களே சாட்சிகளாக இருக்கிறார்கள்.

முடிவுரை: முதல் பாகத்தில் நாம் கண்டது போல, நூற்றுக்கும் அதிகமான குர்‍ஆன் வசனங்கள் தொலைந்துவிட்டன. இந்த இரண்டாம் பாகத்தில் நாம் கண்டோம், ஒரு வீட்டு மிருகம் குர்‍ஆன் வசனங்களை தின்றுவிட்டது. குர்‍ஆன் எழுத்துக்கு எழுத்து மாறாமல் அல்லாஹ் முஹம்மதுவிற்கு வெளிப்படுத்திய வசனங்கள் அப்படியே நம்மிடம் உள்ளது என்று தற்கால இஸ்லாமிய அறிஞர்கள் கூறுவது பொய். முஹம்மதுவின் தோழர்கள், மற்றும் அவரின் பிரியமான மனைவியாகிய ஆயிஷா மற்றும் ஆரம்ப கால இஸ்லாமிய அறிஞர்களின் சாட்சியின் படி நம்மிடம் உள்ள குர்‍ஆன் "பாதுகாக்கப்பட்ட ஒரு வேதமல்ல" என்பது தெளிவாக புரிகிறது.

இப்னு உமர் அல்கத்தாப்பின் கூற்றுப்படி, எந்த ஒரு இஸ்லாமியரும் "தன்னிடம் முழு குர்‍ஆன் உள்ளது என்று கூறக்கூடாது", ஏனென்றால், மூல குர்‍ஆனில் உள்ள அனேக வசனங்கள் காணாமல் போய் உள்ளன.

இன்னும் "தொலைந்த குர்‍ஆன் வசனங்கள்" தொடரும்....

ஆங்கில மூலம்: Chapter Twelve - The Perversion of Qur'an and the Loss of Many Parts of It.





--
10/06/2011 10:30:00 AM அன்று ஈஸா குர்-ஆன் - Isa Koran இல் Isa Koran ஆல் இடுகையிடப்பட்டது


இஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்

முன் பக்கம் செல்ல

HOME PAGE

தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்

1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1

2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2

3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3

4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4

பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்

1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1

2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2

பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்

1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்

2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்