இஸ்லாம் அமைதி மார்கமா? இஸ்லாம் இனிய மார்கமா? இஸ்லாம் உண்மையான மார்கமா?

ஆன்சரிங் இஸ்லாம்

பல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்

சத்தியவான் தளம் செல்ல

Wednesday, April 28, 2010

அவர்கள் இருவரும் வாலிபர்களா?

 

Two young men?

யோசேப்பின் வாழ்க்கையைப் பற்றியும், அஜீஜ் என்பவரின் மனைவியினால் அவர் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டது பற்றியும் குர்ஆன் கூறுகிறது.

அவருடன் இரண்டு வாலிபர்களும் சிறையில் புகுந்தனர்; அவ்விருவரில் ஒருவன், "நான் திராட்சை மது பிழிவதாக நிச்சயமாக ஒரு கனவு கண்டேன்" என்று கூறினான். மற்றவன், "நான் என் தலைமீது ரொட்டி சுமப்பதாகவும், அதிலிருந்து பறவைகள் தின்பதாகவும் கனவு கண்டேன்" என்று கூறினான். (பின் இருவரும் "யூஸுஃபே!) எங்களுக்கு இவற்றின் விளக்கத்தை அறிவிவப்பீராக மெய்யாக நாங்கள் உம்மை (ஞானமுள்ள முஹ்ஸின்களில்) - நன்மை செய்பவர்களில் ஒருவராகக் காண்கிறோன்" (என்று கூறினார்கள்). (குர்‍ஆன் 12:36)

And there entered with him two young men in the prison. One of them said: "Verily, I saw myself (in a dream) pressing wine." The other said: "Verily, I saw myself (in a dream) carrying bread on my head and birds were eating thereof." (They said): "Inform us of the interpretation of this. Verily, we think you are one of the Muhsinûn (doers of good)." [Hilali/Khan Translation] (Surah 12:36)

ஆதியாகமம் 40ம் அதிகாரத்தில் இந்த நிகழ்ச்சி விவரமாக கூறப்பட்டுள்ளது. அந்த இரண்டு நபர்களில் ஒருவர், பார்வோன் இராஜாவின் பானங்களை சுமப்பவர்களுக்கு தலைவராக இருப்பதாகவும், இன்னொருவர் பார்வோன் இராஜாவிற்கு உணவு தயாரிப்பவராக இருப்பதாகவும் நாம் காண்கிறோம்.

மேலே படித்த குர்ஆன் வசனத்தில் இரண்டு தவறுகள் உள்ளது. முதலாவதாக, குர்ஆன் தோராவிற்கு முரண்பட்டதாக உள்ளது, அதாவது ஆதியாகமம் 39:19 லிருந்து 40:3 வரையிலுள்ள வசனங்களின் படி, அந்த இரண்டு மனிதர்கள் யோசேப்பு அடைக்கப்பட்ட அதே சிறைச்சாலைக்கு வருவதற்கு முன்பதாகவே யோசேப்பு சிறைச்சாலையில் இருந்தார். இதற்கு முரண்பட்ட விதமாக, அவர்கள் இருவரும் யோசேப்போடு கூட ஒரே சமயத்தில் சிறைச்சாலையில் சென்றார்கள் என்று குர்ஆன் கூறுகிறது.

இரண்டாவதாக, அந்த இருவரின் வயது பைபிளில் குறிப்பிடவில்லையானாலும், பார்வோன் இராஜ்யத்தில் இந்த இரண்டு நபர்கள் அப்படிப்பட்ட உயர்ந்த பதவியில் இருக்கிறார்கள் (இராஜாவிற்கு பானங்களை சுமப்பவர்களின் தலைவராக, மற்றும் உணவு தயாரிப்பவர்களுக்கு தலைவராக இருக்கிறார்கள்) என்பதை கவனிக்கும் போது, குர்ஆன் சொல்வது போல இவர்கள் வாலிபர்களாக இருக்கமுடியாது என்பதை அறியலாம்.

ஆங்கில மூலம்: Two young men?

இதர குர்‍ஆன் முரண்பாடுகளை படிக்கவும்


source:http://www.answering-islam.org/tamil/quran/contra/qb015.html

இஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்

முன் பக்கம் செல்ல

HOME PAGE

தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்

1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1

2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2

3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3

4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4

பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்

1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1

2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2

பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்

1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்

2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்