இஸ்லாம் அமைதி மார்கமா? இஸ்லாம் இனிய மார்கமா? இஸ்லாம் உண்மையான மார்கமா?

ஆன்சரிங் இஸ்லாம்

பல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்

சத்தியவான் தளம் செல்ல

Sunday, January 17, 2010

ஆன்லைன் பீஜே தள நேரடி விவாத அழைப்பும், உமரின் பதிலும் - 1

 
ஆன்லைன் பீஜே தள நேரடி விவாத அழைப்பும், உமரின் பதிலும்
 
 
முன்னுரை: என் பெயர் உமர் (புனைப் பெயர்), நான் ஈஸா குர்ஆன் என்ற பிளாக்கரில் இஸ்லாமிய கிறிஸ்தவ கட்டுரைகளை மறுப்புக்களை எழுதிக்கொண்டு வருகிறேன். 2008ம் ஆண்டிலிருந்து இதர நண்பர்களின் உதவி கொண்டு ஆன்சரிங் இஸ்லாம் தளத்தில் ஆங்கில கட்டுரைகளை தமிழாக்கம் செய்து பதித்துக்கொண்டு இருக்கிறேன். தமிழ் கிறிஸ்தவர்கள் என்ற தளத்திலும் கட்டுரைகள் பதிக்கப்படுகின்றன. எழுத்து விவாதத்திற்கு இஸ்லாமியர்கள் விரும்பினால், அதற்கு தயார் என்றுச் சொல்லி, 2007ம் ஆண்டில் தமிழ் கிறிஸ்டியன்ஸ் தளத்தில் நடந்த ஒரு உரையாடலில் பதித்தேன் (அவ்வுரையாடலை இங்கு காணலாம்).


கடந்த வாரம் (ஜனவரி 7ம் தேதி) அர்ஷத் ரஹ்மான் என்ற பெயரிலிருந்து ஒரு மெயில் வந்தது, அதாவது பீஜே அவர்களுடன் நேரடி விவாதத்திற்கு தயாரா? என்று கேள்வி கேட்டு வந்தது, மற்றும் ஆன்லைன் பீஜே தளத்திலும் இக்கேள்வியைக் கேட்டு பீஜே அவர்கள் அழைப்பு விடுத்து இருந்தார்கள்.

முதலில் எனக்கு மெயில் அனுப்பிய சகோதரருக்கு பதிலை கொடுத்துவிட்டு, பிறகு பீஜே அவர்கள் எழுதியவைகளுக்கு பதிலை தருகிறேன்.

எனக்கு மெயில் அனுப்பிய அர்ஷத் ரஹ்மான் அவர்களுக்கு பதில்:
 
அர்ஷத் ரஹ்மான் எழுதியது:

\\ஈசா குரான் உமர் அவர்களுக்கு! உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக!//
 
உமர் எழுதியது:

அன்பான சகோதரர் அர்ஷத் ரஹ்மான் அவர்களுக்கு, உங்கள் மீதும் இறைவனின் சாந்தி சமாதானம் உண்டாவதாக.
 
அர்ஷத் ரஹ்மான் எழுதியது:

//இஸ்லாத்தை விமர்சனம் செய்யும் நீங்கள் உங்கள் கொள்கையில் உண்மையாளராக இருந்தால் முஸ்லிம்களுடன் நேரடி விவாதத்துக்கு வர வேண்டும்.//
 
உமர் எழுதியது:

இதைத் தான் நானும் கேட்கிறேன், இஸ்லாம் மீதும் அதன் கொள்கைகள் மீதும் உண்மையிலேயே உங்களுக்கு நம்பிக்கை இருந்தால், ஏன் நீங்கள் எழுத்து விவாதத்திற்கு வரக்கூடாது?

நேரடி விவாதம் செய்தால் தான், ஒருவரின் நம்பிக்கை உண்மையானது என்று நிருபிக்கப்படும் என்பது சரியான வாதமல்ல, அதற்கு பதிலாக எழுத்து வடிவத்தில் எடுத்துவைக்கும் விவரங்கள் உண்மையானதாகவும், ஆதாரபூர்வமானதாகவும் இருக்கின்றதா என்பதைத் தான் கவனிக்கவேண்டும், இதனை எல்லாரும் ஒப்புக்கொள்வார்கள் என்று நம்புகிறேன்.
 
அர்ஷத் ரஹ்மான் எழுதியது:

//அதை விடுத்து எழுத்து விவாதத்துக்கு மட்டும் தான் நான் வருவேன் என்று நீங்கள் கூறுவது கோழைத்தனமானது.//
 
உமர் எழுதியது:

நேரடி விவாதத்தை மட்டும் தான் நாங்கள் ஒப்புக்கொள்வோம் என்றுச் சொல்வதும் கோழைத்தனம் தானே! உங்கள் மார்க்கம் மீது உங்களுக்கு இருக்கும் நம்பிக்கையின்மை தானே! வீரர்களுக்கு புல்லும் ஆயுதம் என்ற சொற்றடருக்கு இணங்க, நீங்கள் வீரர்களாக உங்களை கருதிக்கொண்டால், கிறிஸ்தவர்களுடன் எழுத்து விவாதத்தையும் செய்யலாமே!
 
அர்ஷத் ரஹ்மான் எழுதியது:

//மக்கள் மத்தியில் விவாதம் செய்வதுதான் அதிக மக்களுக்கு சத்தியத்தை கொண்டு செல்ல உதவும். எழுத்து வடிவ விவாதத்தின் மூலம் பாமர மக்களை சென்றடைய முடியாது.//
 
உமர் எழுதியது:

உங்களின் இந்த வாதத்தை முழுவதுமாக நான் அங்கீகரிக்க முடியாது. நேரடி விவாதத்திற்கும் எழுத்து விவாதத்திற்கும் அதற்குரிய நன்மைகள் உண்டு. ஏனென்றால், ஒரு சமயத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நடத்தப்படும் விவாதத்தை ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையுள்ளவர்கள் தான் காணமுடியும், மற்றும் மற்றவர்கள் அந்த நிகழ்ச்சியை மறுபடியும் காணவேண்டுமானால், அதன் வீடியோக்களை டவுன்லோட் செய்து பார்க்கவேண்டும், இதற்கு அதிகபடியான நேரம் எடுத்துக்கொள்ளும். அல்லது சீடிக்களை வாங்கி பார்க்கவேண்டும் இதே எழுத்து விவாதமென்றால், இணையத்தில் பதித்தால் அதனை ஒரு சில நிமிடங்களில் டவுன்லோட் செய்து படிக்கமுடியும். ஒரு நபர் ஒரு எழுத்துவிவாத கட்டுரையை பிரிண்ட் எடுத்து அனேகருக்கு தரலாம், அதனை படிக்க சாதாரண மக்களுக்கு கணினியோ, வீடியோ பிளேயரோ தேவையில்லை. பேருந்தில் பிரயாணம் செய்யும் போதும், வீட்டில் மின்சாரம் இல்லாத நேரத்திலும் பகலின் வெளிச்சத்திலும் படித்துக்கொள்ளமுடியும். அதாவது, மனது இருந்தால் மார்க்கமுண்டு. இரண்டு வகையான விவாத முறையிலும் அதற்குரிய பயன்பாடுகள் உண்டு. எனவே, ஒருவகை தான் சரியானது என்பது ஏற்க முடியாது.
 
அர்ஷத் ரஹ்மான் எழுதியது:

//கிருஸ்தவ மதமானது அதிக மக்கள் கடைபிடிக்கும் ஓன்று. எனவே எழுத்து விவாதம் என்பது இந்த உலகளாவிய சர்ச்சைக்கு பெரிய தீர்வாக அமையாது.//
 
உமர் எழுதியது:

தீர்வு உங்கள் கையில், என் கையில் இல்லை. இந்தியாவில் எத்தனை சதவிகித கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள்? அவர்கள் எத்தனை சதவிகித மக்களுக்கு தமிழ் தெரியும், இவர்களில் எத்தனை சதவிகித மக்கள் நேரடி விவாதத்தை பார்ப்பார்கள்? இவர்களில் எத்தனை சதவிகிதம் பேர் வீடியோக்களை டவுன்லோட் செய்து பார்ப்பார்கள்? ஆக, அதிக மக்கள் தொகை இருப்பதால் நேரடி விவாதம் தான் சரியானது என்பதும் ஏற்பதற்கில்லை.
 
அர்ஷத் ரஹ்மான் எழுதியது:

//பீ.ஜைனுலாபிதீன் அவர்கள் உங்களை போன்று ஒளிந்து கொண்டு இஸ்லாத்தை விமர்சனம் செய்பவர்களுக்கு தன்னுடைய இணையதளத்தில் பகிரங்க விவாத அழைப்பு விடுத்துள்ளார் (www.onlinepj.com).//
 
 
உமர் எழுதியது:

 
ஒளிந்துக்கொள்ளாமல் பகிரங்கமாக பொய்களையும், தங்கள் சொந்த யூகங்களையும் முன்வைத்து ஆதாரமில்லாமல் கட்டுரைகளை புத்தகங்களை எழுதும் எல்லா இஸ்லாமிய அறிஞர்களுக்கும் 2007ம் ஆண்டே, நானும் எழுத்து விவாதத்திற்கு அழைப்பு விடுத்துள்ளேன். விரும்புகிறவர்கள் என் கட்டுரைகளுக்கு பதில்களை எழுதலாம், எழுத்து விவாதத்தில் ஈடுபடலாம். பீஜே அவர்களின் விவாத அழைப்பிற்கு இக்கட்டுரையில் பதிலை நான் கீழே கொடுத்துள்ளேன்.
 
அர்ஷத் ரஹ்மான் எழுதியது:

//உங்களுக்கு உண்மையில் உங்கள் கொள்கையில் உறுதி இருந்தால்,கிருஸ்தவத்தின் மீது எள் முனையளவாவது ஈடுபாடு இருந்தால்,சத்தியத்தை நீருபிக்க திராணி இருந்தால் இந்த விவாத அழைப்பை ஏற்று விவாதத்துக்கு வருமாறு உங்களை அழைக்கிறோம்.பிரச்சினை வரும் என்றெல்லாம் போலி சாக்குகளை கூறி நழுவாதீர்கள். காவல்துறையின் பாதுகாப்பை வேண்டுமானாலும் நாடலாம்.\\
 
உமர் எழுதியது:

அப்படியானால், எழுத்து விவாதத்திற்கு வரமாட்டீர்கள், இஸ்லாமிய அறிஞர்கள் எழுத்து விவாதத்திற்கு பயப்படுகிறார்கள் என்று மக்கள் கருதலாமா? இஸ்லாமிய அறிஞர்கள் நேரடி விவாதத்திற்கு வீரர்கள், எழுத்து விவாதத்திற்கு கோழைகள் என்று மக்கள் கருதிக்கொள்ளலாமா?

எங்களிடம் உண்மை இருக்கிறது என்பதால் தான் கடந்த மூன்று ஆண்டுகளாக, தொடர்ந்து பதில்களை கொடுத்துக்கொண்டு கேள்விகளை தொடுத்துக்கொண்டு இருக்கிறோம்.

உங்களுக்கும் இஸ்லாம் மீது அணு அளவாவது நம்பிக்கை இருந்தால், எழுத்து விவாதத்திற்கு வாருங்கள், அப்படி வரவில்லையானாலும் சரி, நான் தொடர்ந்து எழுதுவதை நிறுத்தப் போவதில்லை. காவல் துறைப்பற்றி சொல்லிய விஷயம் பற்றி பீஜே அவர்களின் பதிலில் எழுதுவேன்.

முடிவாக, அர்ஷத் அவர்களே, எழுத்து விவாதம் என்றால் தான் என்னால் வரமுடியும், நேரடி விவாதம் என்றால் முடியாது.

இணையத்தில் எழுதினால் என்ன, ஒளிந்துகொண்டு எழுதினால் என்ன? சொல்லப்படும் செய்தி உண்மையா? ஆதாரமுண்டா? என்று பார்க்கவேண்டுமே தவிர, இவன் (உமர்) நேரடி விவாதத்திற்கு வரமாட்டான் என்பதை தெரிந்துக்கொண்டே "இஸ்லாமிய அறிஞர்கள் விவாதத்திற்கு அழைத்தால், உமர் வரவில்லை" இதனால், இஸ்லாம் தான் உண்மையானது என்ற கிளிப்பிள்ளைப் பேச்சை சொல்வதை நிறுத்திக்கொண்டு, என் கட்டுரைகளுக்கு உங்களால் இயன்ற பதிலை எழுதி, என் கட்டுரையின் தொடுப்பையும் கொடுத்து (உங்களுக்கு பயமில்லையென்றால்) உங்கள் தளத்தில் பதித்தால், படிக்கும் வாசகர்களுக்கு உண்மை புரியும். இது என் தாழ்மையான வேண்டுகோள். இதைச் செய்வீர்களா?

 
 
இப்போது, ஆன்லைன் பீஜே தளத்தில் பீஜே அவர்களின் வரிகளுக்கு என் பதிலைத் தருகிறேன்
(http://onlinepj.com/vimarsanangal/vivathakalam/).
 
பீஜே அவர்கள் எழுதியவை:

//கிறித்தவர்களின் அழைப்பு

இயேசு இறைமகனா? தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தலவர் பி.ஜைனூல் ஆபிதீன் புத்தகத்திற்கு பதில் 1 தமிழ் உலகின் இஸ்லாமிய அறிஞர்கள் அனைவருக்கும் ஈசா குரான் உமர் எழுத்து வடிவ விவாததுக்கு பகிரங்க அழைப்பு

என்று ஈஸா குரான் உமர் என்பவர் அழைப்பு விடுகிறார். இதற்கு என்ன பதில் என்று ஒரு சகோதரர் கேடிருந்தார்.

அதற்கு நாம் அளித்த பதில்

விவாதம் என்றால் நேருக்கு நேராக இருக்க வேண்டும். அது குறித்து ஒப்பந்தம் செய்ய வேண்டும். அப்போது தான் யார் கூறுவது தவறு என்று மக்களுக்குத் தெரியும்.//
 
உமர் எழுதியது

கட்டுரைகளில் அல்லது எழுத்துக்களில் பதில்களைச் சொன்னாலோ அல்லது கேள்விகளை கேட்டாலோ அது விவாதமாக இருக்காதா? ஒப்பந்தம் என்பது இன்ன இன்ன தலைப்புக்களில் எழுதலாம், கேள்விகளை கேட்கலாம் என்று கூட போட்டுக்கொள்ளலாமே.

பீஜே அவர்களே! யார் சொல்வது தவறு என்று மக்கள் தெரிந்துக்கொள்ள வேண்டுமானால், சொல்லப்பட்ட விவரத்திற்கு ஆதாரமாக வசனங்களையோ, ஹதீஸ்களையோ கொடுத்தார்களா? என்று மக்கள் கவனித்தால் போதுமே! அதை விட்டுவிட்டு, நேரடி விவாதம் செய்தால் தான் யார் சொன்னது தவறு, சரி என்று மக்கள் தெரிந்துக் கொள்வார்கள் என்பது ஒரு வரட்டு வாதமாகும். உங்களைப் போல நிலையில் இருக்கும் ஒரு பெரிய இஸ்லாமிய அறிஞர் இப்படிப்பட்டவைகளைச் சொல்வது உங்கள் தகுதிக்கு சரியானதல்ல என்பது என் கருத்து.

உதாரணத்திற்கு, உங்களின் ஆன்லைன் பீஜே தளத்தில் வெறும் விவாதம் புரிந்த வீடியோக்களை மட்டுமா நீங்கள் பதிக்கிறீர்கள்? எழுத்து வடிவில் கட்டுரைகள் பதிக்கவில்லையா? எழுத்து வடியில் உங்கள் பதில்கள் இல்லையா? சொல்லப்பட்ட செய்திக்கு ஆதாரமாக விவரங்களை எழுத்துவடிவில் கொடுத்தாலே போதுமே...படிக்கும் வாசகர்கள் அவைகள் சரியானவையா என்பதை சோதித்துப் பார்த்து தெரிந்துக்கொள்வார்கள். அவ்வளவு ஏன், இன்னும் சில முக்கியமான விடியோ விவாதங்கள் அதிகபடியான மக்களை சென்று அடையவேண்டும் என்பதற்காக, மாதாந்திர பத்திரிக்கையில் எழுத்துவடிவில் பதிப்பதில்லையா? அவைகளை எழுத்துவடியில் மாற்றி கட்டுரைகளாக தளங்களில் பதிப்பதில்லையா? எனவே, நேரடி விவாதம் புரிந்தால் தான் மக்களுக்கு சத்தியம் சென்று அடையும் என்பது பொருந்தாத விஷயம். இவைகள் எழுத்து விவாதத்திற்கு ஒப்புக்கொள்ளக்கூடாது என்று பயப்படும் இஸ்லாமிய அறிஞர்களின் வார்த்தைகளாகும். (ஏன் ஒட்டுமொத்த இஸ்லாமிய தமிழ் அறிஞர்கள் அனைவரும் பீஜே உட்பட எழுத்து விவாதத்திற்கு தயங்குகிறார்கள் என்பதை ஒருமுறை குர்‍ஆனையும், ஹதீஸ்களையும் முஹம்மதுவின் வாழ்க்கை சரித்திரத்தையும் தனக்கு புரியும் மொழியில் படிக்கும் சராசரி மனிதன் புரிந்துகொள்வான்).
 
பீஜே அவர்கள் எழுதியவை:

மேலும் இயேசு இறை மகனா என்ற் தலைப்பில் நாம் எடுத்து வைக்கவுள்ள வாதங்கள் அனைத்தும் நூல் வடிவில் அவர்களிடம் உள்ளது. எனவே நாத்திகர்களுடன் நடந்தது போல், ஜெபமனி என்ற கிறித்தவ பாதிரியாருடன் நடந்தது போல் அவர்கள் விவாதத்துக்கு தயாரா என்று கேட்டு எழுதுங்கள். நான் தயாராக இருக்கிறேன்.
 
உமர் எழுதியது:

எங்களிடம் இயேசு இறைமகனா என்ற உங்களின் புத்தகம் உள்ளது என்பதை தெரிந்து வைத்திருக்கும் நீங்கள், அப்புத்தகத்திற்கு நாங்கள் கொடுத்த ஒரு சில பதில் கட்டுரைகளை படித்து இருப்பீர்கள் என்று நம்புகிறேன். அக்கட்டுரைகளுக்கு ஏதாவது பதிலை நீங்கள் (பீஜே அவர்கள்) கொடுத்துள்ளீர்களா? மட்டுமல்ல, இவ்வாண்டு முக்கியமாக உங்களின் ஒவ்வொரு கிறிஸ்தவ விமர்சனத்திற்கும் பதிலை தர நான் விரும்புகிறேன்.

நேரடி விவாதத்திற்கு வரமுடியாது, எழுத்துவிவாதத்திற்கு பீஜே அவர்கள் தயார் என்றால் நானும் தயார்.
 
பீஜே அவர்கள் எழுதியவை:

ஏதாவது அசம்பாவிதம் ஏற்படும் என்று பொருந்தாக் காரணம் சொல்வார்களானால் அதனால் ஏற்படும் எந்த விளைவுக்கும் நான் பொறுப்பு என்று எழுதித் தருகிறேன், தேவைப்பட்டால் காவல் துறை பாதுகாப்பையும் பெறுவோம்.
 
உமர் எழுதியது:

எழுத்து விவாதத்தில் ஈடுபட்டால், இஸ்லாமியர்களுக்கு என்ன அசம்பாவிதம் நடந்துவிடும்? ஏன் நீங்கள் எழுத்து விவாதத்திற்கு வரக்கூடாது?

காவல் துறையின் பாதுகாப்பை நாடலாம் என்று நீங்கள் சொல்வது மிகவும் வேடிக்கையானது. நான் இங்கு காவல் துறையை அவமதிக்கவில்லை, ஆனால் நடைமுறையில் என்ன நடக்கிறது என்பதைச் சொல்கிறேன். இந்தியாவில் இலட்சக்கணக்கில் பாதுகாவலர்கள் இருக்கிறார்கள், கோடிக்கணக்கான பணம் இராணுவத்திற்கும், புலனாய்வு துறைக்கும் செலவிடப்படுகிறது. இப்படி இருந்தும், இஸ்லாமிய தீவிரவாதிகளின் கைவரிசை தொடர்ந்து காட்டப்பட்டுக்கொண்டே இருக்கிறது, மும்பை தாக்குதல், இதற்கு ஒரு உதாரணம். மதபாகுபாடு இன்றி திருட்டு, கொள்ளை, கற்பழிப்பு என்று அனைத்து வித சமுதாய கேடுகளும் அவ்வப்போது ஆங்காங்கே நடக்கின்றன. பாதுகாப்பு துறையில் நாங்கள் தான் முன்னிலையில் இருக்கிறோம் என்று நம்பிக்கொண்டு இருந்த அமெரிக்காவிலேயே அனேக இஸ்லாமிய தீவிரவாத செயல்கள் நடந்துள்ளன. நான் சொல்ல வருவது என்னவென்றால், கோடிக்கணக்கான மக்கள் உள்ள நாட்டில், பாதுகாவலர்கள் என்ன தான் பாதுகாப்பு அளித்தாலும் எல்லாருக்கும், எல்லா நேரத்திலும் பாதுகாப்பு அளிக்கமுடியுமா? அது முடியாத காரியம். ஏதோ ஒரு நாட்டில் யாரோ ஒருவர் கார்ட்டூன் வரைந்தான் என்பதற்காக, வேறு நாட்டில் வாழும் ஒரு முஸ்லீம் சம்மந்தமே இல்லாத மக்களை கொல்லும் கொடூரம் நடந்துக்கொண்டு இருக்கும் போது, பாதுகாப்பு பற்றி அதுவும் இஸ்லாமியர்களிடமிருந்து பாதுகாப்பு வேண்டும் என்பது பற்றி பேசுவது வேடிக்கையானது. எப்போது தனி மனிதன் குற்றம் இழைக்கமாட்டேன் என்று முடிவு எடுத்து வாழ்வானோ அன்று தான் குற்றங்கள் முழுவதுமாக குறையுமே தவிர, இந்தியா போன்ற ஜனத்தொகை உள்ள நாட்டில் பாதுகாலவர்களினால் 100% குற்றங்களை குறைக்கமுடியாது.

நான் பீஜே அவர்களிடம் சொல்ல விரும்புவது, நீங்கள் எழுத்துவிவாதத்திற்கு தயார் என்றால், நானும் தயார்.
 
பீஜே அவர்கள் எழுதியவை:

பொருளாதாரச் செலவு குறித்து அவர்களுக்குத் தயக்கம் என்றால் அதையும் நாம் ஏற்றுக் கொள்வோம் என்று கூறி பகிரங்க விவாதத்துக்கு தொடர்ந்து அழைப்பு கொடுங்கள்.
 
உமர் எழுதியது

பொருளாதார செலவு ஒரு பிரச்சனை இல்லை.
 
பீஜே அவர்கள் எழுதியவை:

இந்த அழைப்பை அனைவருக்கும் தெரியும் வகையில் பரவலாக்குங்கள். அவர்கள் ஒப்புக் கொண்டால் எங்கே தொடர்பு கொள்ள வேண்டும் என்று தெரிவித்தால் நான் சென்று விவாத ஒப்பந்தம் செய்யத் தயார். இதை அவர்களுக்குத் தெரிவித்து வலியுறுத்துங்கள். கிறித்தவ நண்பர்கள் உங்களுக்கு இருந்தால் அவர்கள் மூலமாகவும் நெருக்கடியை ஏற்படுத்துங்கள்.
 
உமர் எழுதியது:

2007ம் ஆண்டிலிருந்து என் எழுத்து விவாத அழைப்பு பரவலாக இணையத்தில் இருக்கிறது, உங்களுக்கு எவ்வளவு நெருக்கடியை எங்கள் கட்டுரைகள் உருவாக்கியிருக்கிறது என்பதை என்னால் உணரமுடிகிறது.

நாங்கள் ஒரு குழுவாக ஒரு சில நண்பர்கள் சேர்ந்து இந்த மொழியாக்க வேலையைச் செய்கிறோம். நாங்கள் ஒரு சங்கத்தை ஸ்தாபனத்தை அமைத்து செயல்படவில்லை.

தமிழ் கிற்ஸ்தவர்கள் இஸ்லாமிய அறிஞர்களின் விமர்சனங்களை படித்துள்ளார்கள், அதுபோல கிறிஸ்தவ பதில்களையும் படித்துக்கொண்டு இருக்கிறார்கள், இஸ்லாம் பற்றி ஓரளவிற்கு அவர்களுக்கு புரிந்துவிட்டது, எனவே, யாரும் எங்களுக்கு நெருக்கடி கொடுக்கமுடியாது.

எழுத்துவிவாதத்திற்கு வந்தால், நாங்கள் ஒப்புக்கொள்வோம். நேரடி விவாதத்திற்கு மட்டும் வரமுடியாது. இது தான் எங்கள் பதில்.
 
 
நான் நேரடி விவாதத்திற்கு வர மறுத்துவிட்டேன், இனி பீஜே அவர்கள் ஈஸா குர்ஆன் கட்டுரைகள் பற்றி என்ன முடிவு எடுக்கப்போகிறீரக்ள்?

பீஜே அவர்களே, எழுத்து மூலமாகவும் இஸ்லாம் பதிலைத் தரும் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருக்குமானால், இதுவரை நாங்கள் (ஈஸா குர்ஆன், மற்றும் ஆன்சரிங் இஸ்லாம் தமிழ்) பதித்த தமிழ் கட்டுரைகளை உங்கள் தளத்தில் குறிப்பிட்டு, அவற்றிற்கு பதிலைக் கொடுப்பீர்களானால், தமிழ் பேசும் மக்கள் இஸ்லாம் பற்றி ஒரு நல்ல முடிவிற்கு வருவார்கள். இப்படி செய்யாமல், வெறும் சொல்லிய விஷயத்தை கிளிப்பிள்ளையைப் போல சொல்லிக்கொண்டு இருந்தால், "இஸ்லாமியர்கள் மேடையில் தான் பேசுவார்கள், எழுத்துக்களில் இவர்களால் பதிலைத் தரமுடியவில்லை" என்று மக்கள் நினைத்துக்கொள்வார்கள்.

நேரடி விவாதத்திற்கு ஒப்புக்கொள்பவர்களிடம் நேரடியாக விவாதம் புரியுங்கள், எழுத்து மூலம் விவாதம் புரிபவர்களிடம் எழுத்து மூலமாக விவாதம் புரியுங்கள்.

நீங்கள் எங்கள் தள தொடுப்புக்களை கொடுப்பீர்களோ இல்லையோ, நாங்கள் மட்டும் உங்கள் விமர்சனங்களை எழுதி அதற்கு பதிலை கொடுத்துக்கொண்டே இருப்போம்.

இன்னும் அனேக இஸ்லாமிய சகோதரர்கள் பீஜே அவர்களின் விவாதத்திற்கு வரமுடியுமா என்று கேட்டு மெயில்களை தொடர்ந்து அனுப்பிக்கொண்டு இருக்கிறார்கள், அவர்களில் ஒருவர் "ரிமைன்டர் 1" என்று ரிமைன்டரும் அனுப்பிக்கொண்டு இருக்கிறார், அவரிடம் நான் கேட்கிறேன், 2007ம் ஆண்டிலிருந்து எத்தனை ரிமைன்டர்களை நீங்கள் பீஜே அவர்களுக்கு அனுப்பியிருக்கிறீரக்ள்? எழுத்துவிவாதத்திற்கு ஏன் ஒப்புக்கொள்ளும் படி அவருக்கு நெருக்கடியை கொடுத்திருக்கிறீர்களா? இனியாவது கொடுங்கள், எழுத்துவிவாதத்திற்கு ஒப்புக்கொள்ளுங்கள் என்று அவருக்கு சொல்லுங்கள்.
 
 
Umar


-- 

Monday, January 4, 2010

இஸ்லாம் கல்விக்கு பதில் - மோசேயும் சமாரியனும் (ஸாமிரியும்) - 1

 

இஸ்லாம் கல்விக்கு பதில்

மோசேயும் சமாரியனும் (ஸாமிரியும்)

(குர்‍ஆனின் சரித்திர தவறு)

Moses and the Samaritan

முன்னுரை: இஸ்லாம் கல்வி தளத்தின் வாயிலாக, தேங்கை முனீஃப் என்ற இஸ்லாமியர் "திருக்குர்ஆனில் சரித்திர தவறா? (பகுதி – 2) " என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை பதித்தார், அதற்கான பதிலை இரண்டு பகுதிகளாக காண்போம்.

பாகம் 1: குர்ஆனும் சரித்திர தவறும் மோசேயின் காலத்தில் சமாரியனும் (ஸாமிரி)

பாகம் 2: இஸ்லாம் கல்வி தளத்தின் கட்டுரைக்கு மறுப்பு

குர்ஆன் எப்படி மோசேயின் காலத்தில் சமாரியர்களைப் பற்றிச் சொல்லி ஒரு சரித்திர பிழையை செய்துள்ளது என்பதை இந்த முதல் பாகத்தில் காணலாம். இரண்டாம் பாகத்தில் இஸ்லாம் கல்வி தளம் கொடுத்த பதிலைக் குறித்து மறுப்பைக் காணலாம்.

பாகம் 1: குர்ஆனும் சரித்திர தவறும் மோசேயின் காலத்தில் சமாரியனும் (ஸாமிரி)

இஸ்லாம் கல்வி தளம் "கிறிஸ்தவர் விமர்சித்தார்" என்றுச் சொல்லி ஒரு பத்தியை பதித்துள்ளது.

தேங்கை முனீஃப்

கிறிஸ்தவர்களின் விமர்சனம்:

//மோசேயினுடைய காலத்தில் சமாரியர்கள் இருந்ததாக "எந்தவொரு" சரித்திரமும் கூறவில்லை. மாறாக கி. மு 722 ஆண்டுகளில் தான்சமாரியர்களைப்பற்றி சரித்திரம் கூறுகின்றது. அதற்கு முதல் சமாரியர்கள் இருந்தததுமில்லை. மோசேயின் காலம் கி.மு 1400. இப்படியிருக்கையில் குர்-ஆன் சமாரியனைப்பற்றி அறிவில்லாமல் கூறி மீண்டும் சரித்திரத்தில் தவறு செய்துவிட்டது.//

குர்ஆன் மீது இப்படி ஒரு விமர்சனத்தை கிறிஸ்தவர் ஒருவர் தனது இணைய தளத்தில் பதிவு செய்துள்ளார். அதைப் பின்பற்றி சில கிறிஸ்தவர்களும் இதனைப் பரப்பி வருகின்றனர். Source: "திருக்குர்ஆனில் சரித்திர தவறா? (பகுதி – 2)"

ஆனால், இந்த குர்ஆன் சரித்திர தவறு பற்றிய முழு விவரத்தை இப்போது நாம் காண்போம்..

காளைக் கன்றுப் பற்றிய நிகழ்ச்சியை குர்‍ஆனில் கீழ்கண்ட விதமாக நாம் படிக்கிறோம்:

"நிச்சயமாக, (நீர் இங்கு வந்த) பின்னர் உம்முடைய சமூகத்தாரைச் சோதித்தோம்; இன்னும் அவர்களை 'ஸாமிரி' வழிகெடுத்து விட்டான்" என்று (அல்லாஹ்) கூறினான்.

ஆகவே, மூஸா கோபமும் விசனமும் கொண்டவராய்த் தம் சமூகத்தாரிடம் திரும்பி வந்து . . .

". . . நாங்கள் சமூகத்தாரின் அலங்கார (ஆபரண)ங் களிலிருந்து சில சுமைகள் (கொண்டு) சுமத்தப்பட்டோம்; பிறகு, நாங்கள் அவற்றை(க் கழற்றி நெருப்பில்) எறிந்தோம்; அவ்வாறே
ஸாமிரியும் எறிந்தான்" என்று அவர்கள் கூறினார்கள்.

பின்னர் அவன் அவர்களுக்காக ஒரு காளைக்கன்றை (உருவாக்கி) வெளிப்படுத்தினான்; அதற்கு மாட்டின் சப்தமும் இருந்தது. (இதைக் கண்ட) சிலர் "இது தான் உங்களுடைய நாயன்; இன்னும் (இதுவே) மூஸாவின் நாயனுமாகும்; ஆனால் அவர் இதை மறந்து விட்டார்" என்று சொன்னார்கள்.

...
"ஸாமிரிய்யே! உன் விஷயமென்ன?" என்று மூஸா அவனிடம் கேட்டார். (குர்‍ஆன் 20:85-88, 20:95)
He [Allah] said, "We have tempted thy people since thou didst leave them. 'The Samaritan has led them into error." Then Moses returned ... ... and we cast them [(gold) ornaments], "as the Samaritan" also threw them, into the fire." (Then he brought out for them a Calf, a mere body that lowed; and they said, "This is your god, and the god of Moses, whom he has forgotten.") ... Moses said, "And thou, 'Samaritan," what was thy business?" ... -- Sura 20:85-88, 95

சமாரியா பட்டணம் உம்ரி இராஜாவினால் கி.மு. 870ல் ஸ்தாபிக்கப்பட்டது (பார்க்க 1 இராஜாக்கள் 16:24), ஆனால்,அதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பு அதாவது கி.மு. 1400 காலக் கட்டத்தில் வாழ்ந்த மோசேயின் காலத்தில் இஸ்ரவேல் மக்களை எப்படி ஒரு சமாரியன் வழிகெடுத்து இருப்பான்? "சமாரியர்கள்" என்ற தனிப்பட்ட பிரிவு வட இஸ்ரவேல் மக்கள் நாடு கடத்தப்பட்ட பிறகு தான் அடையாளம் காணப்பட்டார்கள். அந்த நிலப்பரப்பில் கி.மு. 722ல் சர்கான் II என்ற அரசன் காலத்தில் இவர்கள் இஸ்ரவேலரல்லாதவர்களோடு ஒன்றர கலந்து வாழலானாரகள். இவர்கள் யூத மற்றும் இதர பல மத கோட்பாடுகளை பின்பற்றலானார்கள். ஆக, ஒரு சமாரியன் இஸ்ரவேல் மக்களை மோசேயின் காலத்தில் விக்கிர ஆராதனை என்ற வழிகேட்டுக்கு வழி நடத்தினான் என்பது சரித்திரத்தின் படி நடக்கமுடியாத ஒரு விஷயமாகும். மோசே மற்றும் சமாரியர்களின் கால கட்டம் குறைந்த பட்சம் 500 லிருந்து 700 ஆண்டுகள் கால வித்தியாசம் கொண்டது.

இந்த "சமாரியன்" என்ற வார்த்தையை யூசுப் அலி அவர்கள் தன் குர்ஆன் மொழியாக்கத்தில்
"ஸாமிரி - Samiri" என்று மொழியாக்கம் செய்தார்,

பிக்தால் (Pickthall) தன் மொழியாக்கத்தில்
"அஸ் ஸாமிரீ - As Samirii" என்றும் மொழியாக்கம் செய்துள்ளார்.

ஆர்பெர்ரி (Arberry) ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யும் போதும், கஸிமிர்ஸ்கி (Kasimirski) என்பவர் பிரென்சு மொழியில் மொழியாக்கம் செய்யும் போதும் இவ்வார்த்தையை
"ஸமாரியன் - Samaritan" என்று சரியாக மொழியாக்கம் செய்துள்ளார்கள்.

யூசுப் அலி தன் பின் குறிப்பில், இவ்வார்த்தைக்கு பொருள் கூறுகிறார், அதாவது இந்த பெயர்
"ஷெமர் - Shemer" என்பதாகும் இதற்கு "அறிமுகமில்லாதவர்" என்று பொருள், அல்லது "ஷோமெர் - Shomer" என்பதாகும் இதற்கு "காவல் காப்பவர்" என்று பொருள் என்கிறார். இதற்கு நிகரான அரபி வார்த்தை "ஸமரா - Samara" என்பதால் அவர் இப்படி வார்த்தைகளுக்கு பொருள் கூறியுள்ளார். இந்த வார்த்தைக்கு இதர பொருள்களை கொடுக்க யூசுப் அலி அவர்களின் முயற்சிக்கு அரபி மொழி ஒத்துழைக்கவில்லை. ஆர்பெர்ரியும், கஸிமிர்ஸ்கி அவர்களும் மொழியாக்கம் செய்தது போல, அரபி வார்த்தைகளுக்கு நிகரான மொழியாக்கத்தை யூசுப் அலி அவர்கள் செய்திருக்க வேண்டும்.

தாமஸ் பாட்ரிக் ஹக்ஸ் தன் "டிக்ஷ்னரி ஆப் இஸ்லாம் - Dictionary of Islam" , பக்கம் 564ல் "அல் பைதாவி [அஸ் ஸாமிரி குறித்து] கூறும் போது, அவருடைய பெயர் மூஸா இபின் ஜாபர், இவர் சமாரிய குலத்தை சேர்ந்தவர் என்று கூறியுள்ளார்".

இந்த குழப்பம் முஹம்மதுவிற்கு எப்படி வந்தது? பரிசுத்த வேதாகமத்தில் இரண்டு இடத்தில் கன்றுக்குட்டி விக்கிரகம் பற்றிய விவரங்கள் வருகின்றன.

சலொமோன் ஆட்சி காலத்திற்கு பின்பு, இஸ்ரவேல் மக்களின் நாடு இரண்டு பாகங்களாக பிரிந்துப்போனது, அதாவது தென் பகுதி யூதா என்றும் வட பகுதி இஸ்ரேல் என்றும் பிரிந்தது. ஆனால், தேவனை ஆராதனை செய்யக்கூடிய இடம் மட்டும் இன்னும் எருசலேமில் மட்டுமே இருந்தது. தன்னுடைய ஆட்சிக்கு ஒரு ஆதாரமாக இருக்கவேண்டுமென்பதற்காக, முதலாம் யெரோபெயாம், இரண்டு இடங்களை தெரிந்துக்கொண்டு அவைகளில் பொன் கன்றுக்குட்டி விக்கிரகங்களை செய்வித்து வைத்தான்(1 இராஜாக்கள் 12:26-33). ஆனால், இப்படிப்பட்ட அருவருப்பு கூடாது என்று தேவன் தன் தீர்க்கதரிசிகள் மூலமாக திட்டவட்டமாக எச்சரித்துள்ளார். (1 இராஜாக்கள் 12:30, 2 இராஜாக்கள் 10:29; 17:16; 2 நாளாகமம் 13:8). அதன் பிறகு சமாரியா பட்டணம் இந்த வட இஸ்ரேல் பாகத்திற்கு தலை நகரமாக மாறியது.

பொன் கன்றுக்குட்டி வணக்கம் பற்றி இரண்டு நிகழ்ச்சிகளை பைபிள் சொல்கிறது. முதலாவது மோசேயின் காலத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சி, இரண்டாவது சமாரியாவை தலை நகரமாக கொண்ட வட இஸ்ரேலில் நடந்த நிகழ்ச்சியாகும். இந்த இரண்டு நிகழ்ச்சிகளை சரியாக புரிந்துக்கொள்ளாமல் தான் முஹம்மது குழம்பியிருக்கவேண்டும். ஓசியா தீர்க்கதரிசன புத்தகத்தில் இதைப் பற்றிய வசனம் தெளிவாக கூறப்பட்டுள்ளது.

சமாரியாவே, உன் கன்றுக்குட்டி உன்னை வெறுத்துவிடுகிறது; என் கோபம் அவர்கள்மேல் மூண்டது; எதுவரைக்கும் சுத்தாங்கம் அடையமாட்டாதிருப்பார்கள்? அதுவும் இஸ்ரவேலருடைய செய்கையே; தட்டான் அதைச் செய்தான், ஆதலால் அது தேவன் அல்லவே, சமாரியாவின் கன்றுக்குட்டி துண்டுதுண்டாய்ப் போகும். (ஓசியா 8:5-6)

.குர்‍ஆன் 20:97ல் அந்த கன்றுக்குட்டியைப் பற்றி தொடர்ந்துச் சொல்கிறது..

"நீ இங்கிருந்து போய் விடு நிச்சயமாக இந்த வாழ்க்கையில் (எவரைக் கண்டாலும், என்னைத்) "தீண்டாதீர்கள்" என்று சொல்(லித் திரி)வது தான் உனக்குள்ளது, (மறுமையில்) நிச்சயமாக உனக்கு வாக்களிக்கப்பட்ட வேதனையும் உண்டு அதை விட்டும் நீ தப்பமாட்டாய்; மேலும்; நீ தரிபட்டு ஆராதனை செய்து கொண்டிருந்தாயே அந்த "நாயனைப்" பார்; நிச்சயமாக அதனைச் சுட்டெரித்துப் பின்னர் (சாம்பலாக்கி) அதைக் கடலில் பரத்திவிடுவோம்" என்றார்.

(Moses) said [to the Samaritan]: "Get thee gone! But thy (punishment) will be that thou wilt say, 'Touch me not'; ... Now look at thy god, of whom you hast become a devoted worshipper: We will certainly burn it in blazing fire and scatter it broadcast in the sea!"
இந்த இரண்டு நிகழ்ச்சிகளுக்கு இடையே இருக்கும் தொடர்பைப் பாருங்கள். ஓசியா தீர்க்கதரிசி கூறிய அந்த "சமாரியாவின் கன்றுக்குட்டியைப் பற்றி தான்", குர்ஆன் சொல்லுகின்ற "ஆராதனை செய்துக்கொண்டு இருந்த கன்றுக்குட்டி". இந்த இரண்டு விவரங்களிலும் இறைவன் அதை (கன்றுக்குட்டி விக்கிரகத்தை) அழித்துவிடுவதாக கூறுகிறார். பைபிளில் கூறப்பட்ட சமாரிய வசனத்திற்கும், குர்ஆனில் சொல்லப்பட்ட ஸாமிரி/ஸமாரியன் நிகழ்ச்சிக்கும் இடையே இன்னொரு ஒற்றுமையும் உண்டு. சமாரியர்களுக்கு உண்டாகும் தண்டனை என்னவென்றால், அது "தீண்டத்தகாதவர்கள்" என்பதாகும். தீண்டத்தகாதவர்கள் என்றால் சுத்தமில்லாதவர்கள், அதாவது விக்கிர ஆராதனை செய்ததால் இப்படி கூறப்பட்டார்கள். இது எஸ்றா கால முதல் இன்றுவரையும் யூதர்கள் சமாரியர்களை தீண்டத்தகாதவர்களாக கண்டதும் இந்த விக்கிரத்தை ஆராதத்தினால் தான். இந்த இரண்டு நிகழ்ச்சிகளுக்கும் இடையே இருக்கும் ஒற்றுமையானது தெளிவாக தெரிகிறது. அது மட்டுமல்லாமல், மோசேக்கு பிறகு 700 ஆண்டுகள் வரை சமாரியர்கள் என்பவர்கள் இல்லை. முஹம்மது மத்திய கிழக்கு நாடுகளுக்கு பிரயாணம் செய்துள்ளார், அங்கு அவர் சமாரியர்கள் பற்றி அறிந்திருப்பார், மட்டுமல்ல, விக்கிர ஆராதனை செய்ததால் தான் யூதர்கள் சமாரியர்களை தீண்டத்தகாதவர்கள் என்று கருதுகிறார்கள் என்பதையும் அவர் அறிந்திருக்கக்கூடும். யூதர்களுக்கும் சமாரியர்களுக்கும் இடையே இருக்கும் இந்த விவரத்தைச் சொல்ல வந்த முஹம்மது அறியாமையால் மோசே காலத்து "பொன் கன்றுக்குட்டியோடு" சம்மந்தப்படுத்தி தவறாக‌ பேசிவிட்டார்.

சிந்திக்கத் தூண்டும் ஒரு கேள்வி என்னவென்றால், "அஸ் ஸாமிரி" என்ற வார்த்தைக்கு பொருள் "ஸமாரியன்" அல்ல என்று இஸ்லாமியர்கள் சொன்னால், "ஸமாரியன்" என்ற வார்த்தையை அரபியில் எப்படி கூறுவீர்கள்? இன்றளவும் ஒரு சிறு பிரிவினராக ஸமாரியர்கள் மத்திய கிழக்கு நாடுகளில் இருக்கிறார்கள். இவர்களை அரபியர்கள் அரபியில் எப்படி அழைப்பாரகள்? (மூலம்: http://www.answering-islam.org/tamil/quran/contra/qbhc01.html

முடிவுரை:

பொன் கன்றுக்குட்டிகளை வணங்கிய இரண்டு நிகழ்ச்சிகளைப் பற்றி பைபிள் குறிப்பிடுகிறது. முதலாவது மோசேயின் காலத்தில் நடந்தது, இரண்டாவது நிகழ்ச்சி பல நூற்றாண்டுகளுக்கு பிறகு சமாரியர்களின் காலத்தில் நடந்தது. தங்கள் வம்சமாக இருந்தும் இப்படி விக்கிர ஆராதனை செய்ததால், சமாரியர்களை யூதர்கள் தீண்டத்தகாதவர்களாக கருதினார்கள். யூதர்களுக்கும் சமாரியர்களுக்கும் இடையே இருந்த வெறுப்புணர்ச்சியை நாம் புதிய ஏற்பாட்டிலும் காணலாம். இதனை சரியாக புரிந்துக்கொள்ளாமல் சமாரியர்களை மோசேயின் காலத்தில் வாழ்ந்ததாக முஹம்மது கருதி அதனை குர்‍ஆனிலும் சேர்த்துவிட்டார் முஹம்மது.

இக்கட்டுரையின் தொடர்ச்சியாக இரண்டாம் பாகத்தில், இஸ்லாம் கல்வி தளம் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலைக் காண்போம். சமாரியர்கள் மோசேயின் காலத்திற்கு முன்பே அல்லது அந்த காலத்திலிருந்தே சமாரிகள் என்று அழைக்கப்பட்டார்களா? அல்லது இது முஹம்மதுவின் இன்னொரு சரித்திர தவறா என்பதை நாம் அடுத்த பாகத்தில் காணலாம்.

இந்த குர்ஆன் சரித்திர தவறு பற்றி இஸ்லாமிக் அவார்னஸ் தளத்திற்கு கொடுத்த பதிலை இங்கு படிக்கலாம்.
 


 

இஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்

முன் பக்கம் செல்ல

HOME PAGE

தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்

1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1

2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2

3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3

4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4

பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்

1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1

2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2

பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்

1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்

2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்