இஸ்லாம் அமைதி மார்கமா? இஸ்லாம் இனிய மார்கமா? இஸ்லாம் உண்மையான மார்கமா?

ஆன்சரிங் இஸ்லாம்

பல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்

சத்தியவான் தளம் செல்ல

Monday, July 27, 2009

இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகள் உண்டா?

 

இயேசுவின் சில கட்டளைகள்



இன்ஜீலில் பதிவு செய்யப்பட்ட அதிகாரபூர்வமான கட்டளைகள்


தொகுத்தவர்: தாவுத் ஜபால்


இஸ்லாமிய நண்பர்கள் இப்படியாக கூறுவார்கள், அதாவது "இயேசு ஒரு நபியாக இருந்தார் மற்றும் அவர் இறைவனின் செய்தியையும் கட்டளைகளையும் கொடுத்தார். இன்ஜிலில் இருந்த இயேசுவின் போதனைகள் கட்டளைக‌ள் அனைத்தின் சாராம்சம், அவருக்கு 600 ஆண்டுகளுக்கு பிறகு வந்த குர்‍ஆனில் சுருக்கமாக சொல்லப்பட்டுள்ளது, எனவே குர்‍ஆனை நாங்கள் படித்தால் போதும் என்பார்கள். பைபிளில் உள்ள‌ இன்ஜிலில் சொல்லப்பட்ட‌ இயேசுவின் கட்டளைகளை படிக்கும் போது, அவைகளின் மேன்மை "இயேசுவின் கட்டளைகள் உள்ளன" என்றுச் சொல்லும் வேறு எந்த புத்தகத்திலும் இல்லை என்பதை அறியலாம்.


இயேசுவை ஒரு நபி என்றுச் சொல்லும் எல்லா இஸ்லாமியர்களும் அவரது வார்த்தைகளை படிக்கவேண்டும். இயேசுவின் வசனங்களை நாம் ஒவ்வொருவரும் பின்பற்றினால், இந்த உலகம் வாழுவதற்கு மிகவும் இனிதான இடமாக மாறும். சில இஸ்லாமியர்கள் இயேசு எப்படி தொழுதுக்கொண்டாரோ அதன் படி தொழுதுக்கொள்ள நாங்கள் கடமைப்பட்டவர்கள் என்று கூறுகிறார்கள். இதனை கீழ் கண்ட பகுதிகளில் 6:5-8 மற்றும் 6:9-13ல் காணலாம்.


கீழே தரப்பட்டுள்ள கட்டளைகள் அனைத்தும் மத்தேயு எழுதின சுவிசேஷமாகிய இன்ஜிலிலிருந்து எடுக்கப்பட்டது, அவைகளுக்கு அதிகார மற்றும் வசன எண்களும் தரப்பட்டுள்ளது. சில நேரங்களில் இயேசு தன்னை பின்பற்றும் சில சீடர்களுக்கு மட்டுமல்லாமல், அதிகமான பொது ஜனங்களுக்கு கொடுத்த கட்டளைகளும் தரப்பட்டுள்ளது, அவைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.


  • என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள்பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள்; சந்தோஷப்பட்டு, களிகூருங்கள்; பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்; உங்களுக்கு முன்னிருந்த தீர்க்கதரிசிகளையும் அப்படியே துன்பப்படுத்தினார்களே. (5:11-12)

  • நியாயப்பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக் கொள்ளாதேயுங்கள்; அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கே வந்தேன். (5:17)

  • இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது. (5:16)

  • ஆகையால், நீ பலிபீடத்தினிடத்தில் உன் காணிக்கையைச் செலுத்த வந்து, உன்பேரில் உன் சகோதரனுக்குக் குறைஉண்டென்று அங்கே நினைவுகூருவாயாகில், அங்கேதானே பலிபீடத்தின் முன் உன் காணிக்கையை வைத்துவிட்டுப்போய், முன்பு உன் சகோதரனோடே ஒப்புரவாகி, பின்பு வந்து உன் காணிக்கையைச் செலுத்து. (5:23-24)

  • நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; பரிச்சேதம் சத்தியம்பண்ணவேண்டாம்; வானத்தின்பேரில் சத்தியம்பண்ணவேண்டாம், …... பூமியின் பேரிலும் சத்தியம்பண்ணவேண்டாம், ….; எருசலேமின்பேரிலும் சத்தியம் பண்ணவேண்டாம், …... உன் சிரசின்பேரிலும் சத்தியம்பண்ணவேண்டாம், ….உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்லதென்றும் சொல்லுங்கள்; இதற்கு மிஞ்சினது தீமையினால் உண்டாயிருக்கும். (5-34-37)

  • நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தீமையோடு எதிர்த்து நிற்கவேண்டாம்; ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறுகன்னத்தையும் திருப்பிக்கொடு. (5:39)

  • உன்னிடத்தில் கேட்கிறவனுக்குக் கொடு, உன்னிடத்தில் கடன்வாங்க விரும்புகிறவனுக்கு முகங்கோணாதே. (5:42)

  • நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களைச் ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள். (5:44).

  • ஆகையால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா பூரண சற்குணராயிருக்கிறது போல,நீங்களும் பூரண சற்குணராயிருக்கக்கடவீர்கள். (5:48)

  • மனுஷர் காணவேண்டுமென்று அவர்களுக்கு முன்பாக உங்கள் தர்மத்தைச் செய்யாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; செய்தால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவினிடத்தில் உங்களுக்குப் பலனில்லை. நீயோ தர்மஞ்செய்யும்போது, உன் தர்மம் அந்தரங்கமாயிருப்பதற்கு, உன் வலதுகை செய்கிறதை உன் இடதுகை அறியாதிருக்கக்கடவது.(6:1,3)

  • அன்றியும் நீ ஜெபம்பண்ணும்போது மாயக்காரரைப்போலிருக்க வேண்டாம்; மனுஷர் காணும்படியாக அவர்கள் ஜெப ஆலயங்களிலும் வீதிகளின் சந்திகளிலும் நின்று ஜெபம் பண்ண விரும்புகிறார்கள்; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். நீயோ ஜெபம்பண்ணும்போது, உன் அறைவீட்டிற்குள் பிரவேசித்து, உன் கதவைப் பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு; அப்பொழுது, அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப் பலனளிப்பார். அன்றியும் நீங்கள் ஜெபம்பண்ணும்போது, அஞ்ஞானிகளைப்போல வீண்வார்த்தைகளை அலப்பாதேயுங்கள்; அவர்கள், அதிக வசனிப்பினால் தங்கள் ஜெபம் கேட்கப்படுமென்று நினைக்கிறார்கள். அவர்களைப்போல நீங்கள் செய்யாதிருங்கள்; உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக் கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார். (6:5-8)

  • நீங்கள் ஜெபம்பண்ணவேண்டிய விதமாவது: பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக. உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோலப் பூமியிலேயும் செய்யப்படுவதாக. எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும். எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும். எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும், ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே, ஆமென், என்பதே. (6:9-13)

  • நீங்கள் உபவாசிக்கும்போது, மாயக்காரரைப்போல முகவாடலாய் இராதேயுங்கள்; அவர்கள் உபவாசிக்கிறதை மனுஷர் காணும்பொருட்டாக, தங்கள் முகங்களை வாடப்பண்ணுகிறார்கள்; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். நீயோ உபவாசிக்கும்போது, அந்த உபவாசம் மனுஷர்களுக்குக் காணப்படாமல், அந்தரங்கத்தில் இருக்கிற உன் பிதாவுக்கே காணப்படும்படியாக, உன் தலைக்கு எண்ணெய் பூசி, உன் முகத்தைக் கழுவு. அப்பொழுது, அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா உனக்கு வெளியரங்கமாய்ப் பலனளிப்பார். (6:16-18)

  • பூமியிலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கவேண்டாம்; இங்கே பூச்சியும் துருவும் அவைகளைக் கெடுக்கும்; இங்கே திருடரும் கன்னமிட்டுத் திருடுவார்கள்: பரலோகத்திலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவையுங்கள்; அங்கே பூச்சியாவது துருவாவது கெடுக்கிறதும் இல்லை; அங்கே திருடர் கன்னமிட்டுத் திருடுகிறதும் இல்லை. உங்கள் பொக்கிஷம் எங்கேயிருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும். (6:19-21)

  • ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும்; என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள் என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஆகாரத்தைப்பார்க்கிலும் ஜீவனும், உடையைப்பார்க்கிலும் சரீரமும் விசேஷித்தவைகள் அல்லவா? (6:25)

  • முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும். ஆகையால், நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடுபோதும். (6:33-34)

  • நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள். ஏனெனில், நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள்; நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும். (7:1-2)

  • கேளுங்கள், … தேடுங்கள், … தட்டுங்கள், … உங்களில் எந்த மனுஷனானாலும் தன்னிடத்தில் அப்பத்தைக் கேட்கிற தன் மகனுக்குக் கல்லைக் கொடுப்பானா? மீனைக் கேட்டால் அவனுக்குப் பாம்பைக் கொடுப்பானா? ஆகையால், பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா? (7:7:11)

  • ஆதலால், மனுஷர் உங்களுக்கு எவைகளைச் செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்; இதுவே நியாயப்பிரமாணமும் தீர்க்க தரிசனங்களுமாம். (7:12)

  • இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர். ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர். (7:13-14)

  • கள்ளத் தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள்; உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள். அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்; முட்செடிகளில் திராட்சப்பழங்களையும், முட்பூண்டுகளில் அத்திப் பழங்களையும் பறிக்கிறார்களா? … பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை … ஆகையால், நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு. இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுவேன். … நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக்கேட்டு, இவைகளின்படி செய்யாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டை மணலின்மேல் கட்டின புத்தியில்லாத மனுஷனுக்கு ஒப்பிடப்படுவான். பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதினபோது அது விழுந்தது; விழுந்து முழுவதும் அழிந்தது என்றார். (7:15-27)

  • அதற்கு இயேசு: மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம் பண்ணட்டும், நீ என்னைப் பின்பற்றி வா என்றார். (8:21)

  • பலியையல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று போய்க் கற்றுக்கொள்ளுங்கள்;… (9:13)

  • ஆதலால், அறுப்புக்கு எஜமான் தமது அறுப்புக்கு வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள் என்றார்.(9:38)

  • வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். (11:28)

  • நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். என் நுகம் மெதுவாயும், என் சுமை இலகுவாயும் இருக்கிறது என்றார். (11:29-30)

  • ஆகையால் விதைக்கிறவனைப்பற்றிய உவமையைக் கேளுங்கள். ஒருவன், ராஜ்யத்தின் வசனத்தைக் கேட்டும் உணராதிருக்கும்போது, பொல்லாங்கன் வந்து, அவன் இருதயத்தில் விதைக்கப்பட்டதைப் பறித்துக்கொள்ளுகிறான்; அவனே வழியருகே விதைக்கப்பட்டவன்.. …. நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவனோ, வசனத்தைக் கேட்கிறவனும் உணருகிறவனுமாயிருந்து, நூறாகவும் அறுபதாகவும் முப்பதாகவும் பலன் தருவான் என்றார். (13:18-23)

  • வேண்டாம், களைகளைப் பிடுங்கும்போது நீங்கள் கோதுமையையுங்கூட வேரோடே பிடுங்காதபடிக்கு, இரண்டையும் அறுப்புமட்டும் வளரவிடுங்கள். அறுப்புக்காலத்தில் நான் அறுக்கிறவர்களை நோக்கி: முதலாவது, களைகளைப் பிடுங்கி, அவைகளைச் சுட்டெரிக்கிறதற்குக் கட்டுகளாகக் கட்டுங்கள்; கோதுமையையோ என் களஞ்சியத்தில் சேர்த்துவையுங்கள் என்பேன் என்று சொன்னான் என்றார். (13:24-30)

  • …ஆண்டவரே, என் சகோதரன் எனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்து வந்தால், நான் எத்தனைதரம் மன்னிக்கவேண்டும்? ஏழுதரமட்டுமோ என்று கேட்டான். அதற்கு இயேசு: ஏழுதரமாத்திரம் அல்ல, ஏழெழுபதுதரமட்டும் என்று உனக்குச் சொல்லுகிறேன். (18:21-22)

  • இயோசுவோ: சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்; அவர்களைத் தடைபண்ணாதிருங்கள்; பரலோகராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது என்று சொல்லி, அவர்கள் மேல் கைகளை வைத்து, பின்பு அவ்விடம்விட்டுப் புறப்பட்டுப் போனார். (19:14-15)

  • …அதற்கு அவர்: அப்படியானால், இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதைத் தேவனுக்கும் செலுத்துங்கள் என்றார். (22:15-21)

  • இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவனும் உங்களை வஞ்சியாத படிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில், அநேகர் வந்து, என் நாமத்தைத் தரித்துக்கொண்டு: நானே கிறிஸ்து என்று சொல்லி, அநேகரை வஞ்சிப்பார்கள். (24:4-5)

  • யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படுவீர்கள்; கலங்காதபடி எச்சரிக்கையாயிருங்கள்; இவைகளெல்லாம் சம்பவிக்கவேண்டியதே; ஆனாலும், முடிவு உடனே வராது. (24:6)

  • ஆகையால்: அதோ, வனாந்தரத்தில் இருக்கிறார் என்று சொல்வார்களானால், புறப்படாதிருங்கள்; இதோ, அறைவீட்டிற்குள் இருக்கிறார் என்று சொல்வார்களானால் நம்பாதிருங்கள். மின்னல் கிழக்கிலிருந்து தோன்றி மேற்குவரைக்கும் பிரகாசிக்கிறது போல, மனுஷகுமாரனுடைய வருகையும் இருக்கும். (24:26-27)

  • உங்கள் ஆண்டவர் இன்ன நாழிகையிலே வருவாரென்று நீங்கள் அறியாதிருக்கிறபடியினால் விழித்திருங்கள். திருடன் இன்ன ஜாமத்தில் வருவானென்று வீட்டெஜமான் அறிந்திருந்தால், அவன் விழித்திருந்து, தன் வீட்டைக் கன்னமிடவொட்டானென்று அறிவீர்கள். நீங்கள் நினையாத நாழிகையிலே மனுஷகுமாரன் வருவார்; ஆதலால், நீங்களும் ஆயத்தமாயிருங்கள். (24:42-44)

ஆங்கில மூலம்: Some of the Commands of Jesus, the Prophet Authoritatively recorded in the Injil



© Answering Islam, 1999 - 2009. All rights reserved.


Tamil Source:  http://www.answering-islam.org/tamil/authors/dawud/commands.html

 
 

Friday, July 24, 2009

பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை

 

 



ஒரு கிறிஸ்தவ பார்வை



செப்டம்பர் 11ம் தேதியன்று நடந்த சம்பவத்திற்கு பிறகு, வன்முறை மற்றும் மதம் பற்றிய கருத்து பரிமாற்றங்கள் விவாதங்கள் சூடு பிடித்துள்ளன. இஸ்லாமின் பெயரில் நடக்கும் வன்முறைகளை இஸ்லாமியர்கள் நியாயப்படுத்துகிறார்கள். இறைவனின் பெயரில் நடக்கும் இப்படிப்பட்ட வன்முறைகளை குர்‍ஆனையும், முஹம்மதுவின் வாழ்க்கை சம்பவங்களைக் காட்டி இஸ்லாமியர்கள் நியாயப்படுத்த முயற்சிக்கிறார்கள். இதனை கிறிஸ்தவர்களும் மற்றும் சமுதாயத்தின் நன்மைக்காக பாடுபடும் சிலரும் கண்டிக்கும் போது, உடனே இஸ்லாமியர்கள் "பைபிளில் வன்முறை உள்ளது, முக்கியமாக பழைய ஏற்பாட்டில் உள்ளது , சபையின் சரித்திரங்களில் கூட வன்முறை இருக்கிறது, எனவே பைபிளை விட்டுவிட்டு குர்‍ஆனின் வன்முறையை மட்டும் அதிகப்படுத்திக் காட்டுவது சரியானது அல்ல என்று கூறுகிறார்கள்.



ஒரு எடுத்துக்காட்டு சொல்லவேண்டுமானால், பரீத் ஜகரியா என்பவர், நியூஸ் வீக் (News Week) என்ற பத்திரிக்கையில் "அவர்கள் நம்மை ஏன் எதிர்க்கின்றனர், இஸ்லாமிய வன்முறையின் வேர் எது? இதைக் குறித்து நாம் என்ன செய்யவேண்டும்" என்ற தலைப்பிட்ட கட்டுரையில் கீழ் கண்ட விதமாக எழுதுகிறார்.


"சரித்திர ஆசிரியர் பால் ஜான்சன் என்பவர், 'இஸ்லாம் ஒரு கொடூரமான தீவிர வன்முறையைக் கொண்ட மற்றும் சகிப்புத் தன்மையற்ற மதமாக உள்ளது' என கூறுகிறார். ஆனால், இதர அறிஞர்கள் இதனை மறுத்து, 'இஸ்லாம் பாமர மக்கள் கொல்லப்படுவதை எதிர்க்கிறது மற்றும் தற்கொலை செய்துக்கொள்வதற்கு தடைவிதிக்கிறது' என்றுச் சொல்கிறார்கள். இப்போது "உண்மையான இஸ்லாம்" எது என்று தேடுவதினாலேயோ அல்லது குர்‍ஆனிலிருந்து அனேக வசனங்களை மேற்கோள் காட்டுவதினாலேயோ எந்தப் பிரச்சனையும் தீரப்போவதில்லை. குர்‍ஆன் என்பது பெரிய புத்தகம், குழப்பம் தரக்கூடிய கவிதை நடையில் உள்ள புத்தகம் மற்றும் பல முரண்பாடுகளைக் கொண்ட (பைபிளைப் போல) ஒரு புத்தகமாகும்". குர்‍ஆனில் நீங்கள் யுத்தங்களை எதிர்க்கக்கூடிய வசனங்களை காணமுடியும், மற்றும் சண்டைப்போடுவதை தூண்டும் வசனங்களையும் காணமுடியும். இன்னும் சகிப்புத்தன்மை பற்றிய அழகான வசனங்களையும் காணமுடியும், அதே நேரத்தில் இஸ்லாமியரல்லாதவர்களை தாக்கும் பற்றி கடுமையான வசனங்களையும் காணமுடியும்.


குர்‍ஆனிலிருந்து மேற்கோள் காட்டப்படும் வசனங்களை வைத்து, இஸ்லாமை அல்ல, இதற்கு பதிலாக,இந்த வசனங்களை மேற்கோள் காட்டக்கூடிய நபரைப் பற்றி அதிகமாக அறிந்துக்கொள்ளலாம். ஒவ்வொரு மதமும் அனேக நல்ல விஷயங்களை தன்னிடம் கொண்டுள்ளது, அதே போல, மனித இனத்திற்கு எதிரான விவரங்களையும் கொண்டுள்ளது. கிறிஸ்தவ சபையின் மிக நீண்ட சரித்திர பின்னணியைக் கண்டால், அதில் யூதர்களுக்கு எதிரான சண்டைகளை அது ஆதரித்துள்ளது, பல அடக்குமுறையை அது ஆதரித்துள்ளது, அதே நேரத்தில் மனித உரிமைகளையும், சமுதாயத்திற்கு நன்மை செய்வதையும் அது ஆதரித்துள்ளது."



மேலே கூறப்பட்ட விமர்சனத்திற்கு கிறிஸ்தவர்கள் என்ன பதில் கூறப்போகிறார்கள்? இறைவனின் பெயரில் வன்முறையில் ஈடுபட்டு தங்கள் எதிரிகள் அழிய வேண்டும் என்று விரும்பும் இஸ்லாமிய தீவிரவாதிகள்/இதர தீவிரவாதிகள் பின்பற்றும் வேதத்திற்கும் கிறிஸ்தவர்களின் வேதத்திற்கும் வித்தியாசமே இல்லையா? நம்முடைய சபையின் இருண்ட சரித்திரத்தைப் பற்றியும், பழைய ஏற்பாட்டில் சில உவமைகளாகவும் படங்களாகவும் சொல்லப்பட்ட கருத்துக்களுக்கு நாம் எப்படி பதில் தரப்போகிறோம்? நம்முடைய பாரம்பரிய சபை சரித்திரம் அதிக வெளிச்சத்தில் இல்லாமல் காணப்படுகிறதே! இதற்கு நம்முடைய பதில் என்ன? இப்படிப்பட்ட கேள்விகளின் விளைவு தான் இந்த கட்டுரையாகும். நேரமின்மையால் நான் ஒவ்வொரு தலைப்பையும் அதிகமாக விவரிக்கப்போவதில்லை, ஆனால், மேலே கண்ட பிரச்சனைகளை நாம் புரிந்துக்கொள்ள இந்த விவரங்கள் நமக்கு உதவியளிக்கும் என்று நான் நம்புகிறேன்.



1. கிறிஸ்துவின் பெயரை முன்னிலைப்படுத்தி அனேக கிறிஸ்தவர்கள் ஒரு காலத்தில் வெட்கப்படக்கூடிய காரியங்களை செய்துள்ளார்கள் என்பதை அறியும் போது கிறிஸ்தவர்களாகிய நமக்கு வேதனையாக உள்ளது, ஆனால் பிரச்சனை என்ன தெரியுமா: "இயேசுக் கிறிஸ்துவின் பெயரை பயன்படுத்தி தங்கள் எதிரிகளை அழித்த கிறிஸ்தவர்கள், தங்கள் செயல்களை நியாயப்படுத்த ஆதாரமாக இயேசுக் கிறிஸ்துவை உதாரணம் காட்டமுடியாது, இவர்களுக்கு இயேசுவின் வாழ்க்கை, செயல்கள் மற்றும் புதிய ஏற்பாட்டின் போதனைகளிலிருந்து வன்முறையில் ஈடுபடலாம் என்பதற்கு ஒரு ஆதாரமும் கிடைக்காது". ஆனால், இஸ்லாமை எதிர்ப்பவர்களை அழிக்கும் இஸ்லாமியர்களுக்கும், வன்முறையில் ஈடுபடும் இஸ்லாமியர்களுக்கும், தங்கள் வன்முறை செயல்களை நியாயப்படுத்த‌ குர்‍ஆனிலிருந்தும், அவர்களின் நபியாகிய‌ முஹம்மதுவின் போதனைகள், செயல்கள் என்றுச் சொல்லப்படும் ஹதீஸ்களிலிருந்தும் தேவையான அளவிற்கு ஆதாரங்கள் கிடைக்கும். குர்‍ஆனிலிருந்தும், ஹதீஸ்களிலிருந்தும் மற்றும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறுகளிலிருந்தும் வன்முறை வசனங்களை இக்கட்டுரையில் மேற்கோள்களாக காட்டுவது இக்கட்டுரையின் வரைமுறைக்கு அப்பாற்பட்டது (இந்த விவரங்கள் தேவை என்றுச் சொல்லும் வாசகர்கள் இந்த தொடுப்புக்களில் சென்று படித்துப்பார்த்துக் கொள்ளவும், 1. முஹம்மதுவும் அவரது எதிரிகளும் 2. இஸ்லாமும் மற்றும் தீவிரவாதமும்).


ஆனால், சந்தேகத்திற்கு இடமில்லாமல், இது மட்டும் உண்மையாகும், அதாவது, இஸ்லாமிய நபியாகிய முஹம்மது "எதிரிகளை கொல்வதையும் அவர்களை கொடுமைப் படுத்துவதையும் உற்சாகப்படுத்தினார்", இஸ்லாமியர்கள் சொல்வது போல, "அவர் தற்காப்பிற்காக அப்படி செய்தார்" என்ற ஒரு காரணத்திற்காக மாத்திரமல்ல‌, அல்லாஹ்வின் பெயரிலும் இஸ்லாமை பரப்பவேண்டும் என்பதற்காகவும் அவர் வன்முறையையும் கொடுமைப்படுத்துவதையும் கையாண்டுள்ளார். இஸ்லாமிய இறைத்தூதராகிய முஹம்மதுவின் செயல்கள் அனைத்தும் இயேசுக் கிறிஸ்துவின் மற்றும் அவரது சிடர்களின் செயல்களுக்கும் நேரடி எதிர்மறை என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை.


இதனால், கிறிஸ்தவர்கள் வன்முறையில் மற்றும் இதர செயல்களில் ஈடுபடவில்லை என்று இதன் அர்த்தமில்லை. கிறிஸ்தவர்கள் பல பயங்கரமான செயல்களில் ஈடுபட்டுள்ளனர், ஆனால், அவர்கள் இப்படிப்பட்ட செயல்களைச் செய்யும் போது, அவர்கள் யாரை பின் பற்றுகிறார்களோ (இயேசுவை) அவரின் முதுகில் குத்தியுள்ளார்கள், அவரை காயப்படுத்தியுள்ளார்கள், நம்பிக்கை துரோகம் செய்துள்ளார்கள். ஆனால், இதே போல செயல்களை இஸ்லாமியர்கள் செய்யும் போது, தங்கள் நபியின் வாழ்க்கையை உதாரணத்தை நாங்கள் பின்பற்றுகிறோம் என்று அவர்கள் சொல்கிறார்கள், நாங்கள் அல்லாஹ்வின் விருப்பத்தை நிறைவேற்றுகிறோம் மற்றும் அல்லாஹ்விற்காக செய்கிறோம் என்றுச் சொல்கிறார்கள். இது தான் உண்மையிலேயே இரண்டிற்கும் இடையே உள்ள மிகப்பெரிய வித்தியாசமாகும்!



2. இப்போது நாம் பழைய ஏற்பாட்டின் யோசுவா புத்தகத்திலுள்ள வசனங்களைக் குறித்து கவனிப்போம். கானானியர்களை துரத்தியடித்த போர்களைக் குறித்து நாம் அனேக வசனங்களை காணலாம். இப்படி இருந்தும் யோசுவாவின் நிகழ்ச்சிகளுக்கும் இஸ்லாமின் ஆரம்ப கால நிகழ்ச்சிகளுக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருப்பதை நாம் காணலாம். யோசுவா புத்தகத்தின் நிகழ்ச்சிகளின் பின்னணி, "தேவனின் பரிசுத்தம் பற்றியதாகும்". கானானை ஆக்கிரமிப்பதற்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே, தேவன் ஆபிரகாமிடம் கூறினார், அதாவது கானானியர்களின் பாவம் இன்னும் உச்சக்கட்டம் அடையவில்லை, அதாவது என்னிடம் வந்தடையவில்லை, அது முழுமையடையவில்லை, அவர்கள் தேசத்தை தங்கள் பாவங்களால் நிரப்பி பாழாக்கும் போது, தேசம் அவர்களை புறந்தள்ளிப்போடும் என்றுச் சொன்னார். இதே போல, தேவன் இஸ்ரவேல் தேசத்திற்கும் இப்படியே கூறினார், அதாவது "உங்களுக்கு முன்பாக இருந்த மக்களைப்போல பாவம் செய்வீர்களானால், உங்களையும் தேசம் புறந்தள்ளிப்போடும்" என்று எச்சரிக்கை செய்தார். ஆகையால், தேசத்தில் அக்கிரமம் பெருகி பாவம் பெருகியபோது, இஸ்ரவேல் மக்களைக்கொண்டு கானானியர் மீது தன் நியாயத்தீர்ப்பை தேவன் கொண்டு வந்தார். பிறகு, இதே போல அசீரியர்களைக் கொண்டும், பாபிலோனியர்களைக் கொண்டும், இஸ்ரவேல் மக்களின் பாவங்களுக்காக அவர்கள் மீது நியாயத்தீர்ப்பைக் கொண்டு வந்து இஸ்ரவேலர்களை அழித்தார்.


ஆனால், முஹம்மதுவின் வழிப்பறி கொள்ளைகளையும், போர்களையும் இஸ்லாமிய ஆரம்ப கால நிகழ்ச்சிகளையும் ஒருவர் படிப்பாரானால், மக்களின் பாவங்கள் பெருகினதினாலே, இறைவன் த‌ன் நியாயத்தீர்ப்பை முஹம்மது மூலமாக கொண்டுவந்தார் என்ற ஒரு மையக்கருத்தை நாம் காணமுடியாது. இதற்கு பதிலாக, முஹம்மது ஈடுபட்ட அனைத்து போர்களின் முக்கிய நோக்கம், எதிரிகளை கொல்வது, அவர்களது பொருட்களை அபகரிப்பது, சொர்க்கத்தை அடையவேண்டும் என்ற நோக்கத்தோடு போரிடுதல், எதிரி நாடுகளை பிடித்தல், மற்றும் இஸ்லாமிய நபியின் ஆட்சியை பரவச்செய்தல் போன்றவைகளாகத் தான் இருந்தது. இஸ்லாமுக்கு எதிராக யாரோ சொன்ன விவரங்களை நான் இப்போது கிளிப்பிள்ளையைப் போல சொல்லவில்லை. இப்போது தான் நான் மிகவும் பழமைவாய்ந்த இஸ்லாமிய காலத்தின் இரண்டாம் நூற்றாண்டின் முஹம்மதுவின் சரிதையை படித்து முடித்துள்ளேன் (translated by A. Guillaume and published by Oxford University Press in 1955). நீங்கள் இஸ்லாமியராக இருந்தாலும், அல்லது இஸ்லாமியரல்லாதவராக இருந்தாலும் இந்த புத்தகத்தை படிக்கவேண்டும் என்று நான் உங்களை உற்சாகப்படுத்துகிறேன், ஏனென்றால், முஹம்மதுவின் நடத்தைகளில் உள்ள வன்முறையையும், அவரது ஆரம்பகால சஹாபாக்களின் நடக்கையில் உள்ள வன்முறையை நீங்களே படித்து தெரிந்துக்கொள்ளலாம்.



3. இன்னொரு முக்கியமான விவரத்தை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும், அது என்னவென்றால், கானானிய சில பட்டணங்களை அழிக்கும் படி தேவன் கொடுத்த கட்டளையானது, ஒரு குறிப்பிட்ட மக்களுக்கும், ஒரு குறிப்பிட்ட நேரத்திலும் மற்றும் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கும் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக மட்டுமே கொடுக்கப்பட்டது. பழைய ஏற்பாட்டில் வேறு எங்கும் தேவன் இஸ்ரவேல் நாடானது, மற்ற நாடுகள் மீது தானாகச் சென்று போர் தொடுக்கவேண்டும் என்று சொல்லவில்லை. அதாவது, தற்காப்பிற்காகவோ, அல்லது வானத்தையும் பூமியையும் உண்டாக்கிய இஸ்ரவேலின் தேவன் பற்றிய நம்பிக்கையை பரப்புவதற்காகவோ கூட தேவன் இப்படி மற்றவர்களின் நாடுகளின் மீது வலியச் சென்று சண்டையிடுங்கள் என்றுச் சொல்லவில்லை. ஆனால், குர்‍ஆனில் பல பொதுவான வசனங்களை நாம் காணலாம், அதாவது இஸ்லாமின் எதிரிகளை எல்லா காலங்களிலும் எல்லா இடங்களிலும் எல்லா மக்களையும் கொல்லும் படியான வசனங்கள் குர்‍ஆனில் உண்டு. முஹம்மதுவின் மரணத்திற்குப் பிறகு அவரை பின்பற்றினவர்கள் தனித்தனியாக பிரிந்துச் சென்று ஒருவரை ஒருவர் சண்டையிட்டு ஒருவரையொருவர் கொன்றுபோட்டதும், கொலைகள் செய்துக்கொண்டதும் சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிருபனமாகிறது. இஸ்லாமிய சரித்திரத்தில், அன்று முதன் இன்றுவரை தங்கள் எதிரிகளை அழித்து கொல்லும் இஸ்லாமியர்கள் தங்களின் இந்த வன்முறைகளுக்கு ஆதரவாக இஸ்லாமிய வசனங்களையே ஆதாரமாக காட்டி வருகின்றனர்.



4. இந்த சிறிய கட்டுரையை இஸ்லாமியர்கள் "உண்மை என்று நம்பும் தங்கள் கோட்பாட்டை" சொல்லி நிறைவு செய்யலாம் என்று விரும்புகிறேன். இஸ்லாமியர்களை பொருத்தமட்டில், இஸ்லாம் மட்டுமே கடைசியான ஓர் இறைக்கொள்கையுடைய மார்க்கமாகும், இதனால், இஸ்லாம் யூத மற்றும் கிறிஸ்தவத்தை விட உயர்ந்தது என்று நம்புகிறார்கள். மத்திய கிழக்கு நாட்டில் வாழ்ந்துக்கொண்டு இருப்பதாலும், இஸ்லாமிய நாட்டில் நான் வளர்ந்தவன் என்பதாலும், எங்களுக்கு அடிக்கடி கீழ் கண்டவிதமாக கூறுவார்கள். அதாவது, யூத மார்க்கம் என்பது ஒரு ஆரம்ப பள்ளியைப் போன்றது, கிறிஸ்தவ மார்க்கம் என்பது மேல்நிலைப்பள்ளியைப் போன்றது, மற்றும் இஸ்லாம் என்பது பல்கலைக் கழகத்தைப் போன்றது என்று கூறுவார்கள். இந்த எல்லா மார்க்கமும் இறைவனிடமிருந்து வந்தது, ஆனால், ஒவ்வொரு மார்க்கமும் தனக்கு முன்பு இருந்த மார்க்கத்தைவிட சிறந்ததாக விளங்கியது என்று கூறுவார்கள். ஆனால், இப்போது நாம் கேட்கவேண்டிய கேள்வி என்னவென்றால், புதிய ஏற்பாட்டின் கோட்பாடுகள் கட்டளைகளை விட எந்த விதத்தில் இஸ்லாம் சிறந்த நற்குணங்களை, கட்டளைகளை கொண்டு விளங்குகிறது? அதாவது இஸ்லாம் வன்முறையை பின்பற்றுகிறது, இது ஒரு வகையில் யூத பாரம்பரியங்களில் காணப்பட்டது போல இருக்கின்றதே! எப்படி இஸ்லாம் கிறிஸ்தவத்தை விட சிறந்ததாக இருக்கமுடியும்? இஸ்லாம் இயேசுக் கிறிஸ்துவின் மற்றும் புதிய ஏற்பாட்டின் போதனைகளுக்கு மேலாக இன்னும் சிறந்த மார்க்கமாக இல்லாமல் போனதுமட்டுமல்ல, இந்த நன்னடத்தையில் இஸ்லாம் இன்னும் கிறிஸ்தவத்திற்கு முன்னால் அனேக நூற்றாண்டுகள் பின் தங்கியுள்ளது.



தற்காலத்தில் குர்‍ஆன் மற்றும் பைபிளில் காணப்படும் வன்முறையைப் பற்றி ஒரு சில சந்தேகங்களுக்கு இந்த சிறிய கட்டுரை உதவி செய்யும் என்று நான் நம்புகிறேன். கிறிஸ்தவர்களாகிய நாம் இந்த உலகையும், பைபிளையும் மற்றும் எதையானாலும் காணக்கூடிய கண்ணாடியாக இயேசுக் கிறிஸ்துவின் சிலுவையுள்ளது. கடைசியாக, இந்த சிலுவைத் தான் இறைவன் யார் என்று நமக்கு காட்டுகிறது, அவர் எப்படி இருப்பார் என்று காட்டுகிறது, அவர் எப்படி நம்மை இவ்வுலகத்திலிருந்து மீட்டெடுத்தார் என்பதை இதே சிலுவைத்தான் நமக்கு காட்டுகிறது.


ஆங்கில மூலம்: Violence in the Bible and the Qur'an - A Christian Perspective



இந்த தலைப்பு சம்மந்தப்பட்ட இதர கட்டுரையை படிக்கவும்: The Goodness of God


© Answering Islam, 1999 - 2009. All rights reserved.

Tamil Source: http://www.answering-islam.org/tamil/terrorism/violence.html

 

 
 

இஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்

முன் பக்கம் செல்ல

HOME PAGE

தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்

1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1

2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2

3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3

4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4

பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்

1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1

2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2

பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்

1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்

2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்